Wednesday, September 30, 2015

மான்சியின் மவுனம் - அத்தியாயம் - 10

சத்யன் வெளியேறிய சிறிதுநேரத்தில் விஸ்வா தனது பெட்டியை எடுத்து வர கடைப்பையன் மான்சியின் பேக்கை எடுத்துவந்தான், கட்டிலுக்கடியில் பெட்டியை வைத்துவிட்டு நிமிர்ந்த விஸ்வாவின் மொபைல் ஒருமுறை அடித்துவிட்டு நின்றுபோக, அவசரமாக மொபைலை எடுத்து நம்பரைப் பார்த்துவிட்டு அறையிலிருந்து வெளியேறி ஹாலை அடுத்து இருந்த வராண்டாவுக்கு போனான் விஸ்வா

அவனின் அவசர நடை மான்சிக்கு சந்தேகத்தை கிளப்ப, குறும்புடன் சிரித்தபடி மெதுவாக அவன் பின்னால் போனாள்

வராண்டா சுவற்றில் சாய்ந்தபடி மான்சிக்கு முதுகுகாட்டி மும்முரமாக பேசிக்கொண்டிருந்தான் விஸ்வா “ என்னடா சாப்பிட்டயா?”



“............................”

“ என்ன சாப்பாடு”

“..........................”

“ ஏன் சரியாவே பேசமாட்டேங்குற? அப்படியென்ன பயம் உனக்கு? ”

“...................................”

“ ஏய் மஞ்சு அமேரிக்கா போய்ட்டு வந்தவன் காதலிக்கக் கூடாதுன்னு ஏதாவது சட்டமிருக்கா?”

“......................................”

“ நீ படிக்கலைன்னா என்ன?, பரவாயில்லை விடு, அதான் நான் படிச்சிருக்கேன்ல அது போதும்டா,, அதோட என்னை கல்யாணம் பண்ணி என்னை புள்ளைகள பெத்துக்க படிப்பு ஒன்னும் அவசியமில்லை, நீ பொம்பளை, நான் ஆம்பளை, அதுவே போதும்”

“...............................................”

“ ஏய்,, சொன்னதையே திரும்ப திரும்ப சொல்லாத, நம்மோட மனசை தெரிஞ்சுக்க ஒரு நிமிஷம் போதும், பார்த்ததுமே உன்னை எனக்கு பிடிச்சு போச்சு, அதான் லவ் பண்றேன், உனக்கு என்னை பிடிச்சிருக்கா அதை மட்டும் சொல்லு?”

“....................................................”

“ இதோ பார் மஞ்சு பணம், அந்தஸ்து, படிப்பு, எலலாமே என்கிட்ட இருக்கு, நான் தேடியது எனக்கு ஒரு நல்ல காதல் மனைவியை மட்டும் தான், அது நீதான்னு உன்னைப் பார்த்ததும் பட்சி சொல்லுச்சு, அதனால என் முடிவில் எந்த மாற்றமும் இல்லை, மான்சிகிட்டயும் எல்லாத்தையும் சொல்லிட்டேன், அவளுக்கு இதுல ரொம்ப சந்தோஷம், இனிமேல் நடக்கவேண்டியதை மான்சி பார்த்துக்குவா, நீ எதை பத்தையும் கவலைப்படாம நம்ம கல்யாணத்தை பத்தி கனவு காணும் வழியைப்பாரு” என்று விஸ்வா மெல்லிய குரலில் கோபமாக கூறியதை கேட்டதும், அவன் பின்னால் நின்ற மான்சிக்கு விஸ்வாவின் உறுதியை எண்ணி வியப்பாக இருந்தது

“ மஞ்சு இன்னும் கொஞ்சம் சத்தமாத்தான் பேசேன் ப்ளீஸ் ”

“.........................................”

“ ம்ம் இது ஓகே,, நீ சும்மா இருக்கும்போது இதே மாதிரி மிஸ்கால் பண்ணு உடனே நான் கால் பண்றேன்,, சொன்னது ஞாபகம் இருக்குள்ள ஒன்னாவது நம்பரை ரெண்டுமுறை அழுத்தினா எனக்கு கால் வரும், உடனே ரெட் பட்டனை அமுக்கி கட் பண்ணிடு சரியா?” என்று விஸ்வா மஞ்சுவுக்கு கிளாஸ் எடுக்க, மான்சியால் சிரிப்பை அடக்கமுடியாமல் வாய்விட்டு சிரித்துவிட்டாள்,


திகைப்புடன் திரும்பிய விஸ்வா மான்சியை பார்த்ததும் அசடு வழிய,, ம்ம் நடத்து என்பது போல் கையசைத்தாள் மான்சி

விஸ்வா கூச்சத்துடன் சிரித்து “ ஒன்மினிட் மான்சி” என்று கூறிவிட்டு மறுபடியும் மொபைலை காதில் வைத்து “ மான்சிதான் வந்துட்டா மஞ்சு” என்றான்

“.......................................”

“ ஏய் ஏய் ஏன் இப்படி பயப்படுற, அதான் மான்சிக்கு தெரியும்னு சொன்னேன்ல”

“.............................”

“ ம்ம்,, சரி, “ நாலு நாள்ல வர்றேன்,, “சரி வச்சுடு, ஆனா தைரியமா இரு மஞ்சு ப்ளீஸ்”

மொபைலை தன் பாக்கெட்டில் போட்டுக்கொண்டு திரும்பியவன் “ ரொம்பபயப்படுறா மான்சி” என்றான் வருத்தமாக ,

“ அதெல்லாம் போகப்போக சரியாயிடும், நானும் அவகிட்ட பேசுறேன்” என்ற மான்சி குறும்புடன் தலைசாய்த்து “ ஆமா அவளுக்கு ஏது விஸ்வா செல்போன்?” என்று கேட்க

சிறு சிரிப்புடன் அவளை ஏறிட்ட விஸ்வா “ அதுவந்து நான் ரெண்டு மொபைல் வச்சிருந்தேன்ல அதிலே ஒன்னை மஞ்சுகிட்ட குடுத்துட்டு வந்தேன்,, ஆனா மான்சி அவ கால்ல விழுந்து கெஞ்சாத குறையா கெஞ்சி மொபைலை கொடுத்துட்டு வந்தேன்” என்றான் விஸ்வா

அப்போது பேச்சி மான்சியை கூப்பிட, இருவரும் ஹாலுக்கு வந்தனர்
“ சாப்பாடு ஆக்கிட்டேன் மான்சிம்மா, ரெண்டுபேரும் கைகழுவிட்டு வாங்க சாப்பிடலாம்” என்று பேச்சி அழைக்க

ஹாலை அடுத்து இருந்த சமையலறையில் கைகழுவிவிட்டு வந்த மான்சி “ சத்யன் சாப்பிட வரலையா அத்தை?” என்று கேட்க

அவர்கள் இருவருக்கும் சாப்பிட தட்டு வைத்த பேச்சி “ இல்லம்மா அவன் கடையில் கணக்கு முடிச்சிட்டு கடையை அடைச்சிட்டுதான் வருவான், நீங்க சாப்பிடுங்க என்று பேச்சி சொல்ல,

“ இல்ல அத்த விஸ்வா சாப்பிடட்டும், நான் சத்யன் கூட சாப்பிடுறேன்,, நீங்களும் சாப்பிடுங்க” என்றதோடு மட்டுமல்லாது வம்பாக பேச்சியை அமரவைத்து, சாப்பாட்டை பரிமாறினாள் மான்சி

பேச்சியின் காய்ந்து போன நெஞ்சில் மான்சியின் இந்த மாற்றமும், பேச்சும் நீர்வார்க்க, சந்தோஷத்துடன் சாப்பிட ஆரம்பித்தாள்

விஸ்வா சாப்பிட்டு முடித்துவிட்டு, ரொம்ப தூரம் கார் ஓட்டியது டயர்டாக இருப்பதாக கூறி பேச்சி கொடுத்த பாயை ஹாலில் விரித்து படுத்துவிட்டான்,

பேச்சி மகனுக்காக அமர்ந்திருக்க “ அத்தை நீங்களும் படுங்க, நானும் சத்யாவும் சாப்பிட்டுக்கிறோம்” என்று மான்சி சொன்னதும்,, இந்த வார்த்தைக்காக பலகாலமாக காத்திருந்தது போல, ஹாலின் மற்றொரு மூலையில் பாயைப் போட்டு படுத்துக்கொண்டாள் பேச்சி

மான்சி மாற்றுடை எடுத்துக்கொண்டு பாத்ரூம் போய் குளித்துவிட்டு எடுத்துச்சென்ற உடையை அணிந்துகொண்டு கழுத்துக்கு கீழே ஒரு டவலைப் போட்டுக்கொண்டு ஹாலுக்கு வந்தாள், ஹாலில் விஸ்வா பேச்சி இருவரும் நன்றாக தூங்க, கழுத்தடியில் கிடந்த டவலை எடுத்து தூர வீசிவிட்டு கடைக்கு செல்லும் படியில் இறங்கி கடைக்குப் போனாள் 


கடையின் வெளிக்கதவு பாதியளவு மூடியிருக்க, சத்யன் அன்றைய வியாபாரத்தை கம்பியூட்டரில் அமர்ந்து கணக்கு பார்த்துக்கொண்டு இருந்தான், பக்கத்தில் இருந்த பையன் ஏதோ அவனுக்கு விளக்கிக்கொண்டிருந்தான்

மான்சி வருவதை கவனித்ததும் சத்யன் நிமிர்ந்து அவளைப் பார்த்துவிட்டு அதிர்ச்சியுடன் விழித்தான், அவன் அதிர்ச்சிக்கு காரணம் மான்சியின் உடைதான், வெள்ளைநிறத்தில் இருந்த அந்த உடை முட்டியை தொடுவது போல் கீழே ஸ்கர்ட்டும், மேலே பா நெக் வைத்து முற்றிலும் லேஸ் வேலைபாடுகள் கொண்ட டாப்ஸ்ம் இருந்தது, அந்த உடையைத் தயாரித்தவன் பெரும் ரசனையானவனாக இருக்கவேண்டும், கீழே இருந்த ஸ்கர்ட்டுக்கு உள்ளே துணிவைத்து தைத்து ஏதும் தெரியாமல் மறைத்தவன், மேலே எதுவும் இல்லாமல் வெறும் எம்பிராய்டரி லேஸ் மட்டுமே வைத்து அப்படியே விட்டிருந்தான், மான்சி உள்ளே அணிந்திருந்த கருப்பு நிற ப்ரா அப்படியே தனது பிம்பத்தை காட்ட,, இன்னும் உற்றுப்பாத்தால் அவளின் தொப்புள், மற்றும் குழிவான இடுப்பு, அதில் தெரிந்த சிறு மடிப்பு, அதன் பால் வெண்மை என எல்லாவற்றையுமே படம்போட்டு காட்டியது,

சிலநிமிடங்கள் அவள் உடையையும் அதற்க்குள் மறைந்து கிடந்த பொக்கிஷங்களையும் பார்த்தவன் பிறகு சுதாரிப்புடன் நிமிர்ந்து “ வேலு நீ கிளம்பு மிச்ச கணக்கை நான் பார்த்துக்கிறேன்” என்று அவசரமாக கடைப்பையனை கிளப்பி அனுப்பினான்,

கடைப்பையன் இருக்கும் வரை கடையை சுற்றிப் பார்ப்பது போல் பார்த்த மான்சி, அவன் போனதும், சத்யன் இருந்த கம்பியூட்டர் டேபிளில் இருந்த சொர்ப்ப இடத்தில் ஏறி அமர்ந்தாள்

இப்போது சத்யனின் கண்ணெதிரே மான்சி இடுப்பு மடிப்பும் குழிந்த தொப்புளும் தெரிந்தது, அவன் விரல்களை கீபோர்டில் தப்புத்தப்பாக அடிக்க, இருமடங்கு லாபமாக பொய் கணக்கு காட்டியது மானிட்டர்,,

மான்சி டேபிளில் ஒரு கையூன்றி முன்பக்கமாக எக்கிப் பார்த்து “ என்ன சத்யா உனக்கு கம்பியூட்டர்ல ஒர்க்பண்ண தெரியுமா?” என்று குழைவான குரலில் கேட்க..

அவளின் குரலும் உடலில் வந்த வாசமும் சத்யனை பெரிதும் இம்சிக்க, பல்லை கடித்து தன்னை கட்டுப்படுத்திக்கொண்டு “ ம்ம் MLA கிட்ட வேலை செய்யும்போது அவர் வீட்டுல கம்பியூட்டர் இருந்தது, கணக்குபார்க்க மட்டும் கத்துக்கிட்டேன், அது இப்போ யூஸ் ஆகுது” என்றான்

மானிட்டரை பார்க்கும் சாக்கில் அதன் பக்கத்தில் இருந்த சிறு பள்ளத்தாக்கை போன்ற தொப்புளைப் பார்த்து ‘ ஸ் யப்பா எவ்வளவு ஆழம், என் சுண்டு விரலே உள்ள போகும் போலருக்கு’ என்று எண்ணியபடி பெருமூச்சை இழுத்து விட

இப்போது இரண்டு கைகளையும் ஊன்றி முற்றிலும் கவிழ்ந்து “ கணக்கு எப்ப முடியும்? நீ சாப்பிடும் போது சாப்பிடலாம்னு நானும் சாப்பிடலை சத்யா” என்றாள் மான்சி

அவள் சொன்னதும் பட்டென்று நிமிர்ந்த சத்யன், நிமிர்ந்த வேகத்தில் தலையை குனிந்து கொண்டான், அவள் கைகளை ஊன்று குனிந்து இருந்ததால் இரண்டு மார்புகளும் நெருங்கி ஒன்றொடொன்று முட்டிமோதிக்கொண்டு திமிறி மேலே பிதுங்கியிருந்தது, சத்யன் மூச்சுக்காற்று சூடாக 




“ நீ போய் சாப்பிட்டு படு, நான் வர நேரமாகும்” என்றவன், அவள் முன்னால் தனது உடலும் மனமும் தன்னைமீறி பலவீனமடைவது போலிருக்க, அந்த இயலாமையை அவளிடமே காட்ட எண்ணி ஒரு நிமிர்வுடன் அவளைப்பார்த்து “ ஆனா இதென்ன மான்சி உன் நடிப்பு புதுசா இருக்கே?, என்னால ஏத்துக்க முடியாத நடிப்பு” என்று ஏளனமாய் சொன்னான்

மேலும் வளைந்து அவன் முகத்தருகே குனிந்து “எதை சத்யா நடிப்புன்னு சொல்ற, உன்கூட சாப்பிடனும்னு சொன்னதா?” என்று கூர்மையாக மான்சி கேட்க

தப்பான கணக்கை சரிசெய்தபடி “ ஆமாம், கொஞ்சம்கூட நம்புறமாதிரி இல்லை” என்றான்

“ விஸ்வா கார் ஓட்டிக்கிட்டு வந்ததால ரொம்ப டயர்டா இருக்குன்னு சாப்பிட்டு தூங்கிட்டாரு, அத்தையும் சாப்பிட்டு தூங்கிட்டாங்க, எனக்கு அப்போ பசியில்லை, அதனால உன்கூட சாப்பிடனும்னு சொன்னேன், இதுல எதை நடிப்புன்னு சொல்ற சத்யா” என்று மான்சி கேட்க

உண்மையாகவே அப்படித்தானோ, நாமதான் அவளைத் தப்பாக நெனைச்சிட்டமா?’ என்று நினைத்த சத்யன் தனது அலுவலை முடித்துக்கொண்டு எழுந்து “ சரி நீ போ நான் வர்றேன்” என்றவன் கடையின் வெளியே போய் செட்டரை இழுத்து பூட்டிவிட்டு பக்கவாட்டில் இருந்த படியில் ஏறி படிக்கான கேட்டையும் மூடிவிட்டு திரும்ப, கடையில் இருந்து வரும் படியில் மான்சி சாய்ந்து நின்றுகொண்டிருந்தாள்,

“ நீ இன்னும் மேல போகலையா” என்றபடி சத்யன் படியேற..

“ நீ எப்படி லாக் பண்றேன்னு பார்த்தேன்” என்றபடி அவளும் அவனுடன் சேர்ந்து படியேற, ஒரேநேரத்தில் இருவரும் மேல்படியில் கால்வைக்க, மான்சி தடுமாறி சத்யனின் தோளில் சாய்ந்தாள், அவளின் பஞ்சுபொதியில் ஒன்று சத்யனின் வலது தோளில் மோத, அவன் உலகமே ஒருகணம் இயங்காமல் நின்றுபோனது, சத்யன் அப்படியே கண்களை மூடி உடல் விறைக்க நின்றுவிட்டான் ,,

அவன் தன்னை தாங்கி தூக்கி அணைத்துக்கொள்வான் என்று எதிர்பார்த்த மான்சிக்கு பலத்த ஏமாற்றமே, சிறிதுநேரம் அவன் தாங்குவான் என்று எதிர்பார்த்து நின்றவள், அது பொயாய் போனதும் தானாகவே நிமிர்ந்து நின்று “ ஸாரி சத்யா” என்று சொல்லிவிட்டு வேகமாக படிகளில் ஏறினாள்

சத்யன் அமைதியா டவலை எடுத்துக்கொண்டு பாத்ரூமுக்குள் போய்விட, மான்சி சமையலறை சுவற்றில் சாய்ந்து, அவன் மீது மோதிய ஒருபக்கத்து மார்பை விரலால் வருடினாள், சத்யனைத் தொட்ட மார்புகள் மான்சியின் ஏக்கப்பெருமூச்சில் வேகமாக ஏறி இறங்கியது,

ஆனால் அவன் விறைத்துப் போய் நின்றது அவளுக்கு பெரிதும் உறுத்தியது, உண்மையாவே என்மேல இவனுக்கு எந்த பீலிங்க்ஸ்ம் இல்லையா?, இதை நினைத்தவுடனேயே மான்சிக்கு கண்ணீர் முட்டிக்கொண்டு வந்தது, ஏன் சத்யா என்னை உனக்குப் பிடிக்காம போச்சு? என்று மனசுக்குள் கேட்டுக்கொண்டாள்,


உன்னோட நிர்வாணம் என்னை பாதிக்காது’, என்ற சத்யனின் ஏளன வார்த்தை மெய்யாகிப் போனால் என்ன செய்வது? என்ற கேள்வி மனதில் எழ, தேங்கியிருந்த கண்ணீர் அவளின் கன்னங்களில் வழிந்தது,

அவன் வாயாலேயே ‘ நீ இல்லாமல் எனக்கு எதுவும் இல்லை மான்சி’ என்று சொல்ல வைக்க மான்சி எடுத்துக்கொண்ட சபதம் இந்த ஒரேநாளில் ஆட்டம் கண்டுவிட்டது போல இருந்தது மான்சிக்கு

ஆனால் எத்தனை நாளானாலும் எப்படியாவது அவனை எனக்குள் அடக்கி காட்டுவேன்,, நானே சகமும் என்று என்னை சுற்றிவர வைப்பேன், அதன்பிறகுதான் நான் அவன் காலடியில் வீழ்வதும் வாழ்வதும், என்று மறுபடியும் வைராக்கியத்துடன் நிமிர்ந்தாள் மான்சி

பாத்ரூமுக்குள் நுழைந்த சத்யன், தரையில் கால்களை நீட்டி பொத்தென்று அமர்ந்தான், இரண்டு கையாளும் தலையைத் தாங்கிக்கொண்டான், மான்சியின் அருகாமை அவனுக்கு எவ்வளவு சித்ரவதை என்று இன்றுதான் உணர்ந்துகொண்டான், அந்த அழகான தொப்புளும், குழைந்து நெளிந்து வளைந்த இடுப்பும், தன்மீது மெத்தென்று மோதிய மார்புகளும் அவன் நினைவில் மறுபடியும் மறுபடியும் வந்து வாட்டியது

தனது வலது தோளைத் தொட்டு தடவினான், போட்டிருந்த சட்டையை கழட்டி வலது தோள் பகுதியை சுருட்டி மூக்கில் வைத்து முகர்ந்து பார்த்தான், ஒரு மளிகைக்கடைக்காரன் சட்டையில் வரும் கலவையான வாசனையையும் மீறி மான்சியின் பர்ப்யூம் வாசனை அவன் நாசியில் ஏறி மயக்கியது, மூக்கில் இருந்து நகர்த்தி உதட்டுக்கு கொண்டு வந்து அழுத்தமாய் முத்தமிட்டான்,

அப்போது பாத்ரூம் மூலையில் கிடந்த மான்சியின் உடைகள் அவன் கண்ணில் பட்டது

வேகமாய் நகர்ந்து அவளின் மொத்த உடைகளையும் சுருட்டி அள்ளி தன் நெஞ்சோடு வைத்து அழுத்தி கண்களை மூடிக்கொண்டான், “ என்னை ஏன் மான்சி உனக்கு பிடிக்கலை?, அந்த ரங்கேஷை விட, இந்த விஸ்வாவை விட நான் எந்தவிதத்தில் குறைஞ்சவன் மான்சி? ஒரு பர்ஸன்ட் கூட உன்னை கவரலைன்னு சொல்லிட்டு மறுபடியும் ஏன் இங்க வந்த? என்னை நடைப்பிணமாய் மாற்றவா?” என்று அவன் வாய்விட்டு மெதுவாக புலம்பினான்,,

விஸ்வாவை திருமணம் செய்து கொள்வதாக அவள் கூறியது அவனை நெருப்பில் போட்டு எரித்தது, கல்யாணம் பண்ணிக்கிறவ அங்கேயே பண்ணிகிட்டு எங்கயாவது போகவேண்டியது தான, இங்கவந்து என்னை ஏன் சித்ரவதை பண்ணனும் என்று ஆத்திரமாய் வந்தது,,

‘ எனக்கு தெரியும்டி அவனையும் உன்னையும் பார்த்து நான் பொறாமையில வெந்து சாகனும்னு தானே இங்கே கூட்டிட்டு வந்திருக்க, நான் இதுக்கெல்லாம் அசைய மாட்டேன்டி’ என்று சத்யனின் மனதுக்குள் சவால் விடும்போதே, சற்றுமுன் மான்சியின் உடைகளை வைத்துக்கொண்டு புலம்பியது ஞாபகத்தில் வந்து ஏளனம் செய்ய, “ ச்சே” என்று அவள் உடைகளில் தன் முகத்தை வைத்து அழுத்திக்கொண்டான்


அப்போது “ சத்யா என்னப் பண்ற? எவ்வளவு நேரமா உள்ளவே இருப்ப?” என்ற மான்சியின் குரலும் அதைத் தொடர்ந்து கதவைத்தட்டும் ஒலியும் கேட்க
உடனே பதறி எழுந்த சத்யன் “ ம்ம் இதோ வர்றேன்” என்று கூறிவிட்டு மான்சியின் உடைகளுடன் தனது அழுக்கு சட்டையையும் சேர்த்து அங்கிருந்த பிளாஸ்டிக் பக்கெட்டில் போட்டுவிட்டு ஷவரை திறந்து விட்டு குளித்தான்

மான்சி சாப்பாட்டை எடுத்துவந்து முதலில் ஹாலில் வைத்தவள், அங்கே உறங்கிய விஸ்வா, பேச்சியைப் பார்த்துவிட்டு மறுபடியும் சமையலறைக்கே எடுத்துச்சென்று கீழே வைத்தாள், தட்டு தண்ணீர் எல்லாவற்றையும் தயாராக எடுத்துவைத்தாள், அவளுக்கு உடலெல்லாம் சிலுசிலுவென சிலிர்த்தது, முதன்முறையாக சத்யனுக்கு உணவு பரிமாறி அவனுடன் அமர்ந்து சாப்பிடப் போகிறாளே, அந்த நினைவே சுகமாக இருக்க, சத்யனுக்காக காத்திருந்தாள்

குளித்துவிட்டு இடுப்பில் கைலியோடு டவலால் தலையை துவட்டியபடி வந்த சத்யன் சமையலறையில் எட்டிப்பார்த்து “ என்ன இங்கயே சாப்பாடு எடுத்து வச்சிட்ட?, எங்கம்மா ஹால்லதான் சாப்பாடு போடுவாங்க? ” என்றபடி தட்டை எடுத்து வைத்துக்கொண்டு சாப்பிட அமர்ந்தான்

“ அங்க தூங்குறாங்களே அவங்களுக்கு டிஸ்டர்ப்பா இருக்கும்னு தான் இங்கயே எடுத்து வச்சேன்” என்ற மான்சி சாதத்தை அள்ளி அவன் தட்டில் போடும்போதே கையை நீட்டி தடுத்த சத்யன், அவனாகவே போட்டுக்கொண்டு குழம்பை ஊற்றி பிசைய, மான்சிக்கு யாரோ முகத்தில் அறைந்தது போல் இருந்தது

உன் கையால் உணவு வேண்டாம் என்று சொல்லாமல் சொல்கிறானா? என்று அவள் மனம் வெதும்ப,

சோற்றை அள்ளி வாயில் வைத்தபடி நிமிர்ந்து “ என்ன நீ சாப்பிடலையா மான்சி?” என்றான் சத்யன்

கலங்கிய கண்களை தலைகவிழ்ந்து மறைத்து “ ம்ம்” என்று தனது தட்டில் சாப்பாட்டை போட்டு கொண்டாள், குனிந்து சாதத்தை பிசைந்தபடி எதிரில் இருந்த சத்யனை கவனித்தாள்

இடுப்பில் வெறும் கைலி மட்டும் இருக்க, குளித்த நீர் முத்து முத்தாக அவன் நெஞ்சில் இருந்த முடிகளில் தேங்கி வைரங்களாக மின்னியது, அவனுடைய வெற்று மார்பை இப்போதுதான் மான்சி பார்க்கிறாள், யப்பாடி எவ்வளவு முடி, ஷோல்டர் எவ்வளவு அகலமா இருக்கு, என்று வியப்பில் விரிந்தது மான்சியின் விழிகள்

‘எதிரில் இருந்த சோற்றுத் தட்டை தள்ளிவிட்டு வேகமாய் அவன் நெஞ்சில் போய் விழுந்து அந்த நீர்த் துளிகளை உதடு குவித்து உறிஞ்ச வேண்டும் என்ற ஆசை ஆவேசமாக எழ, அந்த ஆவேசத்தில் மான்சியே திகைத்துப்போனாள், அய்யோ அத்தோட என்னை எவ்வளவு கேவலமா நெனைப்பான், ச்சீ போ நாயேன்னு பிடிச்சு தள்ளிட்டு எழுந்து போயிடுவானே?, என்று கலங்கிய மான்சி தன்னை வெகுவாக சிரமப்பட்டு அடக்கியபடி பார்வையை வேறுபுறம் திருப்பிக்கொண்டு சாப்பிட்டாள் 


குழம்பை எடுக்க கையை நீட்டிய சத்யனின் கண்களில் பட்டது மான்சியின் கால்கள், அவள் போட்டிருந்தது ஸ்கர்ட் என்பதால், சம்மணம்மிட்டு அமராமல் கால்களை மடக்கி மண்டியிட்டு வாறு அமர்ந்து சாப்பிட்டாள், ஒரு மாசுமறுவின்றி வெளேரென்ற கால்கள் சாப்பிடுவதை விட்டுவிட்டு எங்களை வந்து தடவிப்பாறேன் என்று அழைத்தது சத்யனை, சில்க் துணியை போல வளவளவென்றுதான் இருக்கவேண்டும் அவள் கால்கள் என்று தடவிப்பார்க்காமலேயே சான்றிதல் கொடுத்தன சத்யனின் கண்கள்,

நகச்சாயம் பூசாமல் பளபளவென்று மின்னிய கால் விரல்களின் நகங்கள், ஒவ்வொரு விரலாய் முத்தமிடவேண்டும் என்று ஆவலை தூண்டும் அழகான விரல்கள், சிறு அழுக்குகூட இல்லாத உள்ளங்கால்களை எடுத்து நெஞ்சில் வைத்துக்கொள்ள வேண்டும் போல் இருந்தது சத்யனுக்கு

சோற்றை சாப்பிட்டபடி சத்யனின் பார்வை மெல்ல உயர்ந்தது, கால்களை மடக்கி ஒருக்களித்த வாறு சாப்பிட்டதால் மான்சி அணிந்திருந்த சட்டை சற்று மேலேறி அவளின் தந்தநிற இடுப்பு பளிச்சிட, சத்யன் மூச்சுவிட மறந்தான், அந்த வெள்ளை சதையை உதடுகளால் பற்றி இழுத்து சப்பி சுவைக்க வேண்டும் என்ற ஆவலைத் தூண்டும் அழகான இடுப்பு, எதிராளியை வீழ்த்த அந்த சிறு இடைவெளியே போதும் என்று நினைத்தான் சத்யன்

அப்போது விஸ்வா தூக்கத்தில் தொண்டையை செருமும் சத்தம் கேட்க சத்யனை அதுவரை பற்றியிருந்த மாயக்கயிறு பட்டென்று அறுந்துவிழ உடல் விறைக்க நிமிர்ந்து அமர்ந்தான்,

என் எதிரே இருக்கும் இவள் என்னைப் பிடிக்கவில்லை என்று உதாசீனப்படுத்திவிட்டு வேறு ஒருவனை மணக்கப்போகிறவள், என்ற எண்ணம் அவன் முகத்தில் அறைய சத்யன் துடித்துப்போனான், அதற்கு மேல் உணவு ஒரு பருக்கை கூட உள்ளே இறங்கவில்லை, தட்டிலேயே கையை கழுவிவிட்டு எழுந்துவிட்டான்,

மான்சியின் முகத்தை கூட பார்க்காமல், வேகமாக தனது அறைக்குப் போய் ஒரு தலையணை பெட்சீட்டை எடுத்துக்கொண்டு வராண்டாவில் போய் படுத்துக்கொண்டான்

அவன் அப்படி சாப்பாட்டில் கைகழுவியதன் காரணத்தை அறியாத மான்சி ‘ ச்சே சாப்படை அப்படியே வச்சிருந்தா நானாவது சாப்பிட்டுருப்பேனே” என்று அவன் எச்சில் சோற்றுக்காக ஏங்கினாள்

அன்று இரவு நான்கு விழிகள் உறங்காமல் விழித்தே கிடந்தது, இரண்டு உடல்கள் விரகத்தில் வெந்து சாம்பலாகிக்கொண்டிருந்தது, இருவரின் எண்ணமும் ஒன்றேதான், ஆனால் பூனைக்கு யார் முதலில் மணிக்கட்டுவது என்றுதான் அவர்களுக்குள் போட்டி,, இருக்கும் இடத்தில் இருந்து இருவரில் ஒருவர் அடுத்த அடியெடுத்து வைத்தாலும் இருவருக்குமே சொர்க்கத்தின் சுகத்தை அறியலாம், ஆனால் யார் அந்த முதல் அடியை எடுத்துவைப்பது என்றுதான் போட்டியே, இப்போது ஒவ்வொரு இரவின் இழப்பும் இருவருக்கும் தானே என்று ஏன் புரியவில்லை இருவருக்கும்?

மறுநாள் காலை சத்யன் எழுந்திருக்கவே தாமதமானது, பேச்சி வந்து எழுப்பியதும் அவசரமாக எழுந்தவன் பல்லை விலக்கிவிட்டு கடைக்கு ஓடினான், அதற்குள் வேலு பேச்சியிடம் சாவியை வாங்கி கடயைவ திறந்து வியாபாரத்தை கவனித்துக் கொண்டு இருக்க, சத்யன் மெல்லிய குற்றவுணர்வுடன் போய் கல்லாவில் அமர்ந்தான் 


போட்டுக்கொண்டிருந்த பேச்சியின் இடுப்பை கட்டிக்கொண்டு தோளில் தன் தாடையை வைத்துக்கொண்டு “ அத்தை இன்னிக்கு நானு விஸ்வா காரையார் டேம்க்கு போகலாம்னு இருக்கோம், மலையில விஸ்வாவுக்கு கார் ஓட்டி பழக்கமில்லை, அதனால சத்யாவையும் கூட அனுப்புங்க அத்தை, நான் கூப்பிட்டா வராது, நீங்க சொன்னா வரும்,, ப்ளீஸ் அத்தை” என்று மான்சி செல்லமாய் கொஞ்ச...

“ அதுக்கென்னடா செல்லம் நான் கடையை பார்த்துக்கிறேன், நீங்கல்லாம் போய்ட்டு வாங்க, நான் போய் சத்யன் கிட்ட சொல்லி அனுப்புறேன் ” என்றாள் பேச்சி,, அவளுக்கு என்னவென்றால் இப்படியாவது சத்யனும் மான்சியும் மறுபடியும் இணைய மாட்டார்களா என்ற எண்ணம்தான்

காபியை டம்ளரில் ஊற்றி மான்சிக்கும் விஸ்வாக்கும் கொடுத்துவிட்டு, சத்யனுக்கு ஒரு டம்ளரை எடுத்துக்கொண்டு கீழே போனாள் பேச்சி
சற்றுநேரம் கழித்து மேலே வந்த சத்யன் விஸ்வாவிடம் “ காரையார் டேம் போகனும்னு சொன்னீங்களாமே?, சீக்கிரமா ரெடியாகுங்க போகலாம்” என்று கூறிவிட்டு தனது அறைக்குள் போனான் சத்யன்

அங்கே மான்சி இடுப்பில் டவலைக் கட்டிக்கொண்டு ஜீன்ஸ் பேன்ட்டை மாட்டிக்கொண்டு இருந்தாள், சத்யன் உள்ளே வருவதை கண்ணாடியில் பார்த்துவிட்டு சட்டென்று இடுப்பில் இருந்த டவலின் முடிச்சை அவிழ்க்க, அது நழுவி கீழே விழுந்தது பேன்ட் முட்டிவரை தான் ஏற்றி இருந்தாள், அங்கே யாருமே இல்லாதது போல் கேஷுவலாக திரும்ப, அவளையே பார்த்துக்கொண்டிருந்த சத்யன் விதிர்த்துப் போனான்

மான்சியின் இடுப்பில் வெறும் ரோஸ் நிற ஜட்டி மட்டுமே இருக்க, பேன்ட் இன்னும் ஏற்றப்படாமல் முட்டியோடு நின்றது, மான்சி அவனை கவனிக்காதது போல ரொம்ப ரொம்ப நிதானமாக பேன்ட்டை மாட்டி ஜிப்பை போட்டுவிட்டு நிமிர்ந்தாள்

வியப்பில் விழிவிரித்து அவள் இடுப்புக்கு கீழேயே பார்த்துக்கொண்டிருந்த சத்யனுக்குள் இருந்த ஏதோவொன்று புஸ்ஸென்று காற்றுப்போன பலூனாக அமுங்கிப்போக, பார்வையை அந்த இடத்தில் இருந்து அகற்றாமல் விவஸ்தையில்லாமல் பார்த்துக்கொண்டிருந்தான்

அந்த உள்ளாடைக்குள் இருந்த அழகு அவனை பிடித்து நிறுத்த, அது எப்படியிருக்கும்?, அதன் நிறம் என்னவாக இருக்கும்?, அதன் வாசனை என்ன?, அதன் வளர்ச்சி எப்படியிருக்கும்?, தொட்டால் மென்மையாக இருக்குமா? அல்லது திண்மையாக இருக்குமா? அது சூரியனாய் சுடுமா? அல்லது ஈர நிலவாய் மின்னுமா?, இப்படி ஆயிரத்தெட்டுக் கேள்விகள் அந்த சில நிமிடங்களில் தோன்றி மறைய, அந்த சிதம்பர ரகசியத்தை தெரிந்துகொள்ளும் ஆர்வத்தில் விழிகள் மின்ன அங்கேயே பார்வையை நிலைக்கவிட்டான்

மான்சி ஜிப்பை போட்டு முற்றிலும் மூடியதும் ஏமாற்றத்துடன் நிமிர்ந்தவன், மான்சி முகத்தைப் பார்க்காமல் அங்கிருந்த அலமாரியை திறந்து தனது துணிகளை எடுப்பது போல நின்றுகொண்டான்

அவனுடைய ஏமாற்றம் நிறைந்த முகத்தை பார்த்துவிட்ட மான்சிக்கு உற்சாகம் பிய்த்துக்கொண்டது ‘ வாடி மாப்ளே உன்னை கவுத்து உன்முதுகுல நான் சவாரி செய்யல, நான் சத்யன் பொண்டாட்டி மான்சி இல்லடி’ என்று எண்ணிக்கொண்டு சிரித்தபடி வெளியே வந்தாள்


அவள் முகத்தை கவனித்துவிட்டு “ என்ன மான்சி சார் பிளாட் ஆயிட்டாரா?” என்று விஸ்வா கேலியாக கேட்க..

“ ம்ஹூம்” என்று உதட்டை பிதுக்கி காதில் இருந்த தொங்கல்கள் ஆட தலையை ஆட்டினாள்

“ ம்ம் பார்க்கலாம் யாரு மொதல்ல பிளாட் ஆகுறீங்கன்னு,, ஆனா எனக்கென்னவோ நீதான் மொதல்ல விழுவேன்னு தோணுது மான்சி கரெக்ட்டா?” என்று விஸ்வா குறும்புடன் கேட்க

மான்சி எதுவும் பேசாமல் கட்டைவிரலை உயர்த்தி கான்பித்துவிட்டு மறுபடியும் அறைக்குள் போனாள், சத்யன் தனக்கு தேவையானவற்றை எடுத்துக்கொண்டு அவளைப் பார்க்காமலேயே “ சீக்கிரமா வாங்க கீழே வெயிட் பண்றேன்” என்று கூறிவிட்டு கிளம்பினான்

மூவரும் காரையார் டேம் கிளம்பி காரில் ஏறினார்கள், விஸ்வா சத்யனிடம் கார் சாவியை கொடுத்துவிட்டு அவனுக்கு பக்கத்தில் அமர்ந்துகொள்ள,, மான்சி பின்சீட்டில் அமர்ந்துகொண்டாள்,

சத்யன் காரை ஸ்டார்ட் செய்து கிளம்பும்போது அவன் தலைக்கு மேல் இருந்த கண்ணாடியில் அவன் முகத்தை பார்க்க ஆரம்பித்தவள், அதன்பிறகு பார்வையை வேறெங்கும் திருப்பவில்லை,

விஸ்வா இயல்பாக பேசிக்கொண்டு வர, முதலில் முரண்டிய சத்யன் பிறகு விஸ்வாவுடன் இயல்பாக உரையாடினான்,, அவனது பேசில் இருந்த கம்பீரத்தையும், ஒரு கையால் ஸ்டேரிங்கை பிடித்துக்கொண்டு மறுகையில் சிகரெட்டை வைத்துக்கொண்டு அவன் கார் ஓட்டும் ஸ்டைலையும் ரசித்துக்கொண்டே வந்தாள் மான்சி,

காரையார் டேம் வந்ததும் காரை பார்க் செய்துவிட்டு இறங்கினார்கள், மான்சி காருக்குள்ளேயே போட்டிருந்த ஜீன்ஸை அவிழ்த்து விட்டு, போட்டிருந்த நீலநிற சட்டைக்கு மேட்ச்சாக ஒரு லாங் மிடியை எடுத்து போட்டுக்கொண்டாள்,

மாற்றுடைகள் அடங்கிய பையை எடுத்துக்கொண்டு மூவரும் டிக்கெட் வாங்கிக்கொண்டு படகில் ஏறினார்கள், கடல்போல் பறந்து கிடந்த டேம் நீரில் மோட்டார் படகில் பயணம் செய்வது மான்சிக்கு படு திரிலிங்காக இருந்தது,

நிறைய படகுகளில் ஆண்களும் பெண்களுமாக பயணம் செய்ய, எல்லோரும் சிரிப்பும் கும்மாளமுமாக பயணம் செய்தனர், இவர்களின் படகு எதிர் கரையை தொட்டதும் ஒவ்வொருவராக இறங்க, விஸ்வா முதலில் இறங்கி முன்னால் போய்விட, சத்யன் அடத்ததாக இறங்கிவிட்டு மான்சியை திரும்பி பார்க்க, மான்சி அவனிடம் கையை நீட்டினாள், சத்யன் மறுக்கவில்லை அவள் கண்களைப் பார்த்தபடியே கையைப்பிடித்து இறக்கிவிட்டான்

அதன்பிறகு சத்யனின் கையை விடவேயில்லை மான்சி, இரண்டு மூன்று முறை விஸ்வா திரும்பி பார்ப்பதை உணர்ந்து மெதுவாக கையை விடுத்துக்கொள்ள சத்யன் முயல, மான்சி அழுத்தமாக பற்றிக்கொண்டாள், சிலஇடங்களில் ஏறும் இடம் நெட்டாக இருக்க சத்யன் இரண்டு கையையும் கொடுத்து மான்சியை தூக்கவேண்டியதாக இருந்தது

மலையில் ஏறிப் போகப்போக இருவரின் இடைவெளியும் குறைந்துகொண்டே போனது, விஸ்வா இவர்களை விட பத்தடி முன்னால் போக, மான்சி சத்யனை உரசியபடியே நடந்தாள்

ஒரு இடத்தில் மூச்சுவாங்க தரையில் மண்டியிட்டவள் “ யப்பா சாமி இனிமேல் என்னால முடியாது, நீங்க ரெண்டுபேரும் போங்க நான் இங்கயே இருக்கேன்” என்றாள் மான்சி 


விஸ்வா போனில் பேசியபடி முன்னால் போய்விட,, அவளருகே குனிந்த சத்யன் “ இன்னும் கொஞ்ச தூரம் தான் வா மான்சி” என்றான் மெல்லிய குரலில்,
அவனிடமிருந்து தண்ணீர் வாங்கி குடித்துவிட்டு “ ம் கொஞ்சம் இரு வர்றேன் “ என்று மான்சி சுற்றுமுற்றும் பார்க்க,

அவள் முகத்தில் இருந்த சிரமத்தை பார்த்துவிட்டு “ என்ன வேனும் மான்சி" என்று சத்யன் கேட்க

மான்சி தலையை பக்கவாட்டில் சாய்த்து அவனிடம் சுண்டு விரலை உயர்த்தி காட்டி கூச்சத்துடன் சிரிக்க

சத்யன் அவளின் அந்த போஸில் மயங்கித்தான் போனான், அவனும் லேசாக சிரித்தபடி " என்கூட வா" என்று பக்கவாட்டில் சென்ற ஒற்றையடிப்பாதையில் அழைத்துச்சென்றான்

சுற்றிலும் மரங்கள் அடர்ந்து மறைவாக இருந்த ஒரு இடத்தில் நின்று " ம்ம் இங்க போ மான்சி" என்று கூறிவிட்டு சத்யன் அங்கிருந்து நகர

" அய்யய்யோ நீ எங்கயும் போகத, எனக்கு பயமாயிருக்கு" என்று மான்சி அலறிக்கொண்டு அவன் பின்னாலேயே ஓடி வர

இப்பவும் சத்யனால் மறுக்க முடியவில்லை " சரி சரி இருக்கேன்,, சீக்கிரமா போய்ட்டு வா, விஸ்வா நம்மளை தேடப்போறார்" என்ற சத்யன் பார்வையை அங்கிருந்த மரம் செடிகொடிகள் என பார்வை செலுத்தினான்

மான்சி போட்டிருந்த மிடியை சுருட்டியபடி உள்ளே கைவிட்டு ஜட்டியை அவிழ்க்க, சத்யனால் மனதை கட்டுப்படுத்த முடியாமல், பார்வையை அவள் பக்கம் திருப்பினான், " அய்யய்யோ அதே ரோஸ் நிற ஜட்டி" ம்ஹூம்" என்று கண்களை கப்பென்று மூடிக்கொண்டான்

சற்று நேரங்களித்து அவனருகே வந்து உதடு குவித்து அவன் நெற்றியில் ஊதிய மான்சி " முடிஞ்சது கண்ணைத்திறந்து பாரு" என்று சொல்லிவிட்டு முன்னால் நடக்க, அவள் ஊதியபோது வந்த வாசனையை ரசித்தபடி அவள் பின்னால் போனான் சத்யன்

அருவியை நெருங்கியதும் குளிர் உடலை வாட்ட, சத்யனை ஒட்டினாள் மான்சி, அவனுக்கும் அது வேண்டும் என்பதுபோல் நெருங்கினான்,, எப்போதுமே அங்கே அருவியின் வேகம் அதிகமாக இருக்கும் என்பதால் பெண்கள் குளிக்கமாட்டார்கள் , ஆண்கள் மட்டும் ஒரு ஓரமாக நின்று குளிப்பார்கள்

இவர்கள் இருவரும் போகும்முன் விஸ்வா போட்டிருந்த உடையுடன் அருவிக்கு கீழே நின்றுகொண்டு இவர்களை பார்த்து உற்சாகமாய் கையசைத்தான்,,

மான்சியும் பதிலுக்கு கையசைத்துவிட்டு " வா சத்யா நாமலும் போகலாம்" என்று அழைக்க

" ம்ஹூம் இங்கே லேடிஸ் குளிக்க மாட்டாங்க மான்சி,, போகும்போது கீழே அகத்தியர் பால்ஸ்ல குளிக்கலாம்" என்று சத்யன் சொல்ல, மான்சி முகத்தை உர்ரென்று வைத்துக்கொண்டு திரும்பினாள்



அப்போது அங்கே நீர் சொட்டச்சொட்ட வந்த விஸ்வா " சத்யா பையை நான் பார்த்துக்கிறேன் நீங்க போய் குளிச்சிட்டு வாங்க, மான்சியை கூட்டிப்போய் ஓரமா சாரல்ல நிக்க வைங்க, அதோ ரெண்டு லேடிஸ் நிக்கிறாங்க பாருங்க அங்கதான்" என்றதும் மான்சி குதித்துக்கொண்டு ஓடினாள்

சத்யனும் வேறு வழியில்லாது அவள் பின்னால் போய், அருவியின் சாரலில் அவளை நிற்க்க வைத்துவிட்டு, இவன் அருவிக்குள் போய் நிற்க்க, சற்றுநேரம் கழித்து மான்சியும் அங்கே வருவதாக ஜாடை செய்ய, சரி வா, என்று சத்யன் தலையசைக்க, மான்சி நகர்ந்து அவனுக்கு அருகே போய் நின்றுகொண்டாள்,

தண்ணீர் விழும் வேகத்தில் மான்சி முன்னே போகாமல் இருக்க, சத்யன் அவளை தன் கைகளால் சுற்றிக்கொண்டு அவளை தன் வயிற்றோடு சேர்த்து பிடித்துக்கொள்ள, மான்சி அவன் நெஞ்சில் சாய்ந்தபடி அருவியில் குளித்தாள்

சத்யன் மேலும் மேலும் மான்சியை தன் வயிற்றோடு இறுக்கினான், அவன் விரலில் ஒன்று அவள் தொப்புளுக்குள் இறங்கியது, முகத்தை சற்று வளைத்து அவள் தோளில் வைத்துக்கொண்டு நீரில் நனைந்தான்,

அந்த நிமிடங்களில் சத்யனின் உணர்வுகளை வடிக்க வார்த்தைகள் இல்லை,



மான்சியின் மவுனம் - அத்தியாயம் - 9

இரவானதால் கோயிலில் இருந்த கூட்டம் கொஞ்சம் கொஞ்சமாக குறைய,,, வெகுநேரம் ஆகியும் இருவரையும் காணவில்லையே என்று சுற்றிலும் பார்வையை ஓடவிட்டவள், கண்ணாடி பெட்டிக்குள் சிறு வடிவமாக கோயிலின் அனைத்து இடங்களையும் வைத்திருந்த இடத்தில் விஸ்வாவும் மஞ்சுவும் நின்று அதை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தனர்

இப்போது அவர்களின் நெருக்கம் மான்சியின் கண்களை உறுத்தியது,, விஸ்வா நிமிர்ந்து மஞ்சுவின் தலையில் இருந்த பூவை சரி செய்வது இங்கிருந்து நன்றாக தெரிந்தது, மஞ்சு அவனை திரும்பிப் பார்த்து ஏதோ சொல்ல, அதற்கு விஸ்வா அவள் நெற்றியில் விழுந்த கூந்தலை காதோரம் ஒதுக்கிவிட்டு கனிவுடன் அவளிடம் ஏதோ சொன்னான், உடனே பதட்டமாக விலகிப்போன மஞ்சுவின் கையைப் பிடித்து விஸ்வா ஏதோ வருத்தமாக சொல்வதும் தெரிந்தது, மஞ்சுவின் கண்களை விஸ்வா துடைப்பதில் இருந்து அவள் கண்ணீர் விடுகிறாள் என்று புரிந்தது,

பிறகு அவளை தன் தோளோடு அணைத்தபடி விஸ்வா அவளை அழைத்துக்கொண்டு வந்தான்,, அவர்களின் அந்த நெருக்கத்தில் விரசமில்லை, உண்மையான காதல் மட்டுமே தெரிந்தது,

மான்சிக்கு அவர்களின் மாற்றமும், விஸ்வாவின் மனசும் புரிய, இன்று காலை தானே வீட்டுக்கு வந்தான், அதற்குள் மஞ்சுவின் மீது எப்படி காதல் வந்திருக்கும்?’ பார்த்த ஒரே நாளில் காதல் வருமா?’ என்ற மான்சியின் கேள்விக்கு வரும் என்றது அவர்களின் நெருக்கம்,

அப்போ ஒரு வருஷமா சத்யன் எங்கள் வீட்டில் இருந்தான், மூன்று மாசமா என் புருஷனா ஒரே ரூம்ல இருந்தான், அப்பல்லாம் எங்களுக்குள் ஏன் காதல் வரவில்லை?, என்று மான்சியின் மனது ஏங்கியது, விவாகரத்து பத்திரத்தில் கையெழுத்திட்ட பிறகு இப்போது வந்த இந்த காதல் அப்பவே வந்திருந்தா நான் என் சத்யனை பிரிஞ்சிருக்க மாட்டேனே? என்று தவித்தாள் மான்சி,

மான்சிக்கு கண்ணீர் முட்டிக்கொண்டு வந்தது, அய்யோ அவனை நான் ரொம்ப கேவலப்படுத்திட்டேனே இப்போ என் சத்யன் என்னை ஏத்துக்குவானா? என்று ஏக்கத்துடன் புலம்பியது மான்சியின் மனம்,,

நெருங்கி நடந்து வந்த இருவரையும் பார்த்து மான்சிக்கு பொறாமையாக இருந்தது, ஆனால் மஞ்சுவுக்கு விஸ்வா மூலமாக ஒரு நல்வாழ்வு அமைந்தால் மான்சிதான் அதிகமாக சந்தோஷப்படுவாள், இப்போதைய மான்சியின் மனம் கோயிலில் ஜோடியாக செல்லும் அனைவரின் மீதும் பொறாமை கொண்டது, நானும் என் சத்யனும் இதுபோல ஜோடியாக போகும் நாள் வருமா? என்ற கேள்வி ஒவ்வொரு ஜோடியை பார்க்கும்போதும் எழுந்தது

குளத்தை நெருங்கியதும் விஸ்வா விட்டு மஞ்சு விலகி நடந்து வர,, மான்சி அவசரமாக தன் பார்வையைத் திருப்பிக்கொண்டாள், விஸ்வா வந்து குளத்தின் படியில் மான்சியை விட்டு சற்று தள்ளி அமர, மஞ்சு நின்றுகொண்டே இருந்தாள்

“ உட்காரு மஞ்சு” என்று விஸ்வா சொல்ல.. மஞ்சு உட்காரவே இல்லை,
மான்சியை பார்த்து “ அக்கா வாங்க வீட்டுக்குப் போகலாம்,, அம்மா எதிர்பார்த்துக்கிட்டு இருப்பாங்க” என்று மெல்லிய குரலில் மான்சியை அழைத்தாள்,, அவளின் பார்வையில் மட்டுமல்ல பேச்சிலும் மிரட்சி வெளிப்பட்டது

மான்சியால் மஞ்சுவை புரிந்துகொள்ள முடிந்தது, எதிலும் அனுபவமில்லாத சிறுபெண் அல்லவா? படிப்பு, பணம், அந்தஸ்து, ஜாதி, என எந்த வகையிலும் பொருத்தமில்லாத அவளால் விஸ்வாவின் இந்த அனுகுமுறையை எண்ணி மிரளத்தான் முடியும்

முதலில் விஸ்வாவிடம் இதுபற்றி பேசவேண்டும், அவன் சும்மாதான் இதெல்லாம் என்றால் மஞ்சுவால் தாங்கமுடியாது, நேரம்பார்த்து பேசவேண்டும் என்ற முடிவுடன் “ ம் சரி போகலாம்,, வாங்க விஸ்வா நேரமாச்சு” என்று மான்சி எழுந்துகொள்ள, விஸ்வாவும் ஏமாற்றத்துடன் எழுந்துகொண்டான்

மூவரும் வீட்டுக்கு வந்து சாப்பிட்டுவிட்டு அவரவர் இடத்திற்கு வெவ்வேறு மனநிலையோடு தூங்கச் சென்றனர்,


மறுநாள் காலை எழுந்தவுடன் மான்சி விஸ்வாவின் நம்பருக்கு கால்செய்து தனது அறைக்கு வருமாறு அழைக்க, அடுத்த சில நிமிடங்களில் மான்சியின் அறையில் இருந்தான் விஸ்வா

அவனை பெரும் தயக்கத்துடன் ஏறிட்ட மான்சி “ விஸ்வா நீங்க என் ஃபேரன்ஸ் கிட்ட பாபநாசத்திற்கும் அதை சுத்தி இருக்கிற இடங்களை பார்க்கனும் மான்சியை என்கூட அனுப்புங்கன்னு கேட்கனும், அவங்க ஒத்துக்கலைன்னா கூட ரிக்வெஸ்ட் பண்ணி கேட்கனும் விஸ்வா ப்ளீஸ்” என்று கெஞ்சுதலாக மான்சி கூற

அவளை குழப்பமாக ஏறிட்ட விஸ்வா “ கண்டிப்பா கேட்கிறேன் மான்சி, ஆனா குறிப்பா பாபநாசம் மட்டும் ஏன் மான்சி?” என்று கேட்க

மான்சி அவனுக்கு பதில் சொல்லமுடியாமல் தடுமாறி தலைகுனிந்தாள்,,

“ சொல்லு மான்சி சம்திங் சீரியஸ்,, பாபநாசத்தில் அப்படியென்ன விஷேசம்?” என்று வார்த்தைகளை மாற்றிப்போட்டு கேட்டான் விஸ்வா

இதற்கு மேல் மவுனம் சரி வராது என்றுணர்ந்த மான்சி மெதுவாக நிமிர்ந்து பார்வையை வேறுபக்கம் திருப்பி “ அங்கேதான் சத்யன் இருக்கார் விஸ்வா” என்றவள் இப்போது விஸ்வாவை பார்த்து ஒரு நிமிர்வுடன் “ என்னோட புருஷன் சத்யமூர்த்தி அங்கேதான் இருக்கார் விஸ்வா” என்று கூற

அவளை ஆச்சர்யமாக நோக்கிய விஸ்வா “ மான்சி நீ சத்யனை விரும்புறயா? இஸ் வெரி இன்ட்ரஸ்டிங் மான்சி” என்று குரலில் வியப்பு காட்ட

“ ஆமாம் விஸ்வா என் சத்யனை ரொம்ப ரொம்ப விரும்புறேன், என்னோட ஈகோவால என் கையில கிடைச்ச பொக்கிஷத்தை இழந்துட்டு இப்போ ஒவ்வொரு நிமிஷமும் அவருக்காக ஏங்குறேன் விஸ்வா, அவர் என் பக்கத்தில் இருக்கும்போது அலட்சியப்படுத்தி ஒதுக்குனேன், இப்போ அவரில்லாமல் எனக்கு எதுவுமே இல்லைன்னு தவிக்கிறேன் விஸ்வா,, நான் அவரைப்பார்க்க ஹெல்ப் பண்ணுங்க விஸ்வா ப்ளீஸ்” என்று கண்களில் வழியும் கண்ணீருடன் மான்சி விஸ்வாவிடம் கெஞ்சினாள்

அவள் கண்ணீரைக் கண்டு பதட்டமான விஸ்வா “ அய்யோ ப்ளீஸ் அழறதை நிறுத்து, கண்டிப்பா நாம சத்யனைத் தேடி போகலாம், ஆனா இதை நீயே அங்கிள் ஆன்ட்டிகிட்ட சொன்னா அவங்களே உன்னை சந்தோஷமா அனுப்பி வைப்பாங்களே, இதுல ரகசியம் ஏன் மான்சி? ” என்று விஸ்வா குழப்பமாக கேட்க

கண்களை துடைத்துக்கொண்டு விஸ்வாவின் எதிர் சோபாவில் அமர்ந்த மான்சி “ இல்ல விஸ்வா சத்யன் கிட்ட டைவர்ஸ் வாங்கனும்ங்குற ஆத்திரத்தில் அப்பா அம்மாகிட்ட ரொம்ப மோசமா நடந்துக்கிட்டேன், அதனால அவங்ககிட்ட இப்போ போய் நிக்க அவமானமா இருக்கு,, அதோட சத்யன் மனசுல நான் இருக்கேனான் எனக்கு தெரியாது விஸ்வா, அவரோட மனசு தெரியாம நான் என்னை பெத்தவங்க கிட்ட பேசமுடியாது விஸ்வா,, ஏன்னா எங்களுக்குள்ள அவ்வளவு பிரச்சனை நடந்திருக்கு விஸ்வா,, என்னைப்பற்றி சத்யன் என்ன நெனைக்கிறார்னு நான் முதல்ல தெரிஞ்சுக்கனும், அதுக்குத்தான் உங்களோட நான் பாபநாசம் போறது, அவருக்கும் எனக்கும் ஒரு கணக்கு இருக்கு அந்த கணக்கு நேராயிட்டா அப்புறம் என் வாழ்வு சத்யனோடுதான் விஸ்வா, சத்யன் மனசுல எனக்கான இடம் எதுன்னு தெரிஞ்ச பிறகுதான் இதைப்பற்றி என் அப்பா அம்மாவிடம் சொல்வேன் விஸ்வா,, அதுக்கு எனக்கு நீங்கதான் எனக்கு ஹெல்ப் பண்ணனும்” என்று மான்சி மெல்லிய குரலில் கூறிவிட்டு விஸ்வாவை பார்க்க...

“ ம்ம் இப்போ எல்லாம் புரியுது மான்சி, நான் எப்படியாவது அங்கிள் ஆன்ட்டிக்கிட்ட பேசி சம்மதம் வாங்குறேன்,, நீ கிளம்ப ரெடியா இரு, ஆனா நாம ரெண்டு பேர் மட்டும் தானா?” என்ற கேள்வியில் விஸ்வாவின் ஏக்கம் தெரிய..


“ புரியாம என்ன விஸ்வா? ஆனா மஞ்சு சின்னப் பொண்ணு, இப்பத்தான் பதினெட்டு கம்ப்ளீட் ஆயிருக்கு, ஏமாற்றத்தை தாங்கமாட்டா, இருவருக்கும் உள்ள தகுதி வித்தியாசத்தை யோசிச்சு முடிவு பண்ணுங்க விஸ்வா, உங்க வீட்டுலயும் ஒத்துக்கனும், விளையாட்டுத்தனமானது இல்லை இது ” என்று மான்சி நடுநிலையாக பேசியதும்

விஸ்வா நிமிர்ந்து அவளைப் பார்த்து “ உனக்கும் சத்யனுக்கும் வந்திருக்கிற லவ் எந்த தகுதியின் அடிப்படையில் வந்திருக்கு மான்சி?, தகுதிப் பார்த்து வர்றதில்லை காதல், உன்னோட லவ் எவ்வளவு ட்ரூவோ அதேபோல்தான் என்னோட லவ்வும், மஞ்சுவுக்காக நான் எதையும் தாங்குவேன் யாரையும் எதிர்ப்பேன், என் வீட்டைப் பொருத்தவரையில் என்னோட விருப்பம் தான் பர்ஸ்ட், நீ சொல்ற மத்ததெல்லாம் நெக்ஸ்ட்” என்று விஸ்வா உறுதியாக கூறினான்

“ கேட்கவே ரொம்ப சந்தோஷமா இருக்கு விஸ்வா,, மஞ்சு என்னோட தங்கை மாதிரி அவளுக்கு தேவையான எல்லாத்தையும் நான் செய்வேன்,, ஆனா இப்போ நம்ம கூட பாபநாசத்திற்கு மஞ்சு வேண்டாம் விஸ்வா, அவ வந்தா உங்களோட கவனம் அவமேல தான் இருக்கும், அப்புறம் நான் நெனைச்ச மாதிரி எதுவும் நடக்காம போக வாய்ப்பிருக்கு,, நான் சொல்றது உங்களுக்கு புரியும்னு நெனைக்கிறேன் விஸ்வா” என்று மான்சி சங்கடத்துடன் கேட்க

“ ம்ம் இதுகூட புரியாம போனா நான் அமேரிக்கா ரிட்டர்ன்னு சொல்லிக்கவே முடியாதே” என்று குறும்பு பேசிய விஸ்வா, “ சரி நீ ரெடியாக மான்சி நான் போய் அங்கிள், ஆன்ட்டிகிட்ட பேசுறேன், அப்படியே என் பியான்ஸி கிட்டயும் தகவல் சொல்லிர்றேன், ஆனா மான்சி என்னைய பார்ததாலே மஞ்சுவுக்கு கண்ணு கலங்குது, அதை மொதல்ல சரி பண்ணனும்” என்று கூறியபடியே எழுந்து கதவை திறந்துகொண்டு வெளியே போனான்

மஞ்சுளாவிற்கு ஒரு நல்வாழ்வு அமைந்ததில் மான்சிக்கு சந்தோஷமாக இருந்தது, விஸ்வாவை நினைத்து ரொம்பவே பெருமையாக இருந்தது,, இவர்கள் இருவரின் வாழ்க்கையும் நன்றாக இருக்கவேண்டும் என்று மனதார வேண்டிக்கொண்டாள்

விஸ்வா எப்படியும் அனுமதி வாங்கிவிடுவான் என்ற நம்பிக்கையில் மான்சி பாபநாசம் செல்ல தேவையான உடைகளை எடுத்துவைத்துக் கொண்டாள், எடுத்து வைத்த உடைகளில் முக்கால்வாசி மான்சியே வேண்டாம் என்று ஒதுக்கிய கவர்ச்சியான உடைகள், அவைகளை எடுத்துவைக்க மான்சிக்கே சங்கடமாக இருந்தாலும், இவற்றைப் போட்டுக்கொண்டு சத்யனின் முன்பு நின்றால் அவன் முகம் எப்படிப் போகும் என்ற நினைப்பில் அவள் இதழ்கள் தானாக மலர்ந்தது,

எல்லாவற்றையும் எடுத்துவைத்துவிட்டு மான்சி கீழே வந்தபோது, ஆராவமுதன் பேக்டரிக்கு போயிருக்க ஹாலில் சாந்தா மட்டும் முகத்தை உர்ரென்று வைத்துக்கொண்டு அமர்ந்திருந்தாள்

மான்சி விஸ்வாவை தேடவில்லை, அவன் தோட்டத்தில் மஞ்சுவிடம் பேசிக்கொண்டு இருப்பான் என்று தெரியுமாதலால், சாந்தாவின் அருகில் போய் அமர்ந்தாள்

வெடுக்கென்று மான்சியை நிமிர்ந்துப்பார்த்த சாந்தா “ என்ன மான்சி விஸ்வா பாபநாசம் போறானாம் நீயும் கூட வரனும்னு கேட்டான், அப்பா முடியாதுன்னு சொன்னதுக்கு,, நான் மான்சிகிட்ட பேசிட்டேன், அவளுக்கு என்கூட வர்றதுக்கு பூரண சம்மதம்னு சொல்றான், உண்மையா மான்சி” என்று கோபத்தை அடக்கிய குரலில் கேட்க




“ ஆமாம்மா போகத்தான் போறேன்,, எனக்கும் மனசுக்கு கொஞ்சம் ரிலாக்ஸ்டா இருக்கும்னு தான் ஓகே சொன்னேன், அப்பா என்ன சொன்னளரும்மா?” என்று கேட்க

சோபாவில் இருந்து எழுந்து கிச்சனை நோக்கி போன சாந்தா “ உனக்கு விருப்பம்னா போகச்சொன்னார்” என்று வேண்டாவெறுப்பாக சொல்லிவிட்டு போனாள்

தாயின் அலட்சியமான வார்த்தைகள் மான்சியின் ரணமாக்கினாலும், அந்த ரணத்திற்கான மருந்து பாபநாசத்தில் இருக்கிறது என்ற சந்தோஷத்தில் உற்சாகமாக கிளம்பினாள் மான்சி

காலை சுமார் பத்து மணிக்கு விஸ்வா மான்சி இருவரும் காரில் பாபநாசம் நோக்கி கிளம்பினார்கள், மான்சி டிரைவர் வேண்டாம் என்று கூறிவிட்டதால் விஸ்வாவே காரை ஓட்டினான், வழிநெடுகிலும் மஞ்சுவைப் பற்றியே அதிகம் பேசினான், அவளை திருமணம் செய்தபிறகு யூஸ்எஸ்க்கு போகப்போவதில்லை, சொந்தமாக பிஸினஸ் தொடங்கப்போவதாக கூறினான்

பார்த்த ஒரே நாளில் விஸ்வா இவ்வளவு முன்னேறி விட்டானே என்று மான்சிக்கு பொறாமையாக இருந்தது, இருங்க இருங்க என் சத்யன் என்கிட்ட வந்ததும் உங்களை பீட்ப் பண்ணி காட்டுறேன், என்று மனதுக்குள் விஸ்வா மஞ்சுவிடம் சவால் விட்டுக்கொண்டாள்

கார் பாபநாசம் சென்றடைந்ததும், பேச்சியின் வீட்டுக்கு மான்சி வழி சொல்ல விஸ்வா காரை செலுத்தினான், சரியாக வீட்டைக் கண்டுபிடித்து காரை நிறுத்திவிட்டு இருவரும் இறங்கி சத்யனின் வீட்டையும் கடையையும் பார்த்தார்கள்

கடை பெரிதாகி, வீடு இரண்டடுக்காக மாறியிருக்க , ‘ ம்ம் யாரு, என்னோட சத்யனாச்சே என்று பெருமையாக நினைத்துக்கொண்டாள் மான்சி,,

அருவிக்கு செல்லும் யாரோ ஏதோ பொருட்கள் வாங்க வந்திருக்கிறார்கள் என்ற எண்ணத்தில் கடையில் பில் போட்டபடி வெளியே எட்டிப்பார்த்த சத்யன், மான்சியை கண்டதும் உச்சபட்ச அதிர்ச்சியில் வாயை திறந்தபடி எழுந்து நின்றுவிட்டான்

அவன் முகத்தில் தெரிந்த அதிர்ச்சி மான்சிக்கு திருப்தியாக இருக்க, பக்கத்தில் நின்ற விஸ்வாவைப் பார்த்து சிரித்தபடி கையை நீட்ட, அவனுக்கும் ஏதோ புரிந்து மான்சியின் கையைப் பற்ற, இருவரும் சத்யனின் கடையை நோக்கி போனார்கள்

கடையில் அதிக கூட்டமில்லாமல் இருக்க, வெளியே நின்றபடி “ என்ன சத்யா, வந்தவங்களை வாங்கன்னு கூப்பிட மாட்டீங்களா?” என்று மான்சி கேட்க

சட்டென்று சுதாரித்த சத்யன் அப்போதுதான் மான்சியின் கையைப் பற்றியபடியிருந்த விஸ்வாவை கவனத்தான், இவன் யாரென்ற கேள்வியுடன் விஸ்வாவை பார்த்தான்,, விஸ்வாவும் நேசத்துடன் சத்யனை பார்த்து புன்னகைக்க,

அதற்கு மேல் தாமதித்தால் நாகரீகமல்ல என்று சத்யனுக்கு புரிய “ வாங்க வீடு மாடியில் இருக்கு” என்று அவர்களிடம் கூறிவிட்டு “ மணி கொஞ்சநேரம் கல்லாவில் உக்காரு நான் இதோ வர்றேன் ” என்று கூறிவிட்டு முன்னால் செல்ல, விஸ்வா மான்சி இருவரும் அவன் பின்னால் போனார்கள்

கடையின் பக்கவாட்டில் மாடிக்கு வழியிருந்தது, வீட்டுக்குள் நுழைந்ததும் அங்கிருந்த பிரம்பு சோபாவை காட்டி “ உட்காருங்க அம்மா உள்ள இருக்காங்க” என்றவன் உடனே உள்ளே போய்விட

விஸ்வா மான்சியைப் பார்த்து சிரிப்புடன் “ என்ன மான்சி மாப்ள அப்படியே பம்முறாரு” என்று மெல்லிய குரலில் கேட்டான்


மான்சி ஏதோ சொல்ல வாயைத் திறக்க, அப்போது பேச்சி உள்ளேயிருந்து வேகமாக வருவதைப் பார்த்துவிட்டு “ அத்தை” என்று ஓடிச்சென்று பேச்சியை கட்டிக்கொண்டாள் மான்சி

இவ எதுக்கு எவனையோ கூட்டிக்கிட்டு இங்க வந்திருக்கா, என்று ஆத்திரத்துடன் வந்த பேச்சிக்கு, சிற வயதில் அத்தை என்று ஓடிவந்து கட்டிக்கொள்ளும் மான்சியை நினைவுப்படுத்துவது போல இப்போது மான்சியின் செயல் இருக்கவும், என்ன சொல்வது என்று புரியாமல் சற்றுநேரம் கழித்து மான்சியின் முதுகை வருடி “ எப்படிம்மா இருக்க?” என்றாள் பேச்சி

சலுகையாய் பேச்சியின் தோளில் சாய்ந்துகொண்டு “ உங்களையெல்லாம் பார்க்காம நான் நல்லாவே இல்லை அத்தை, நீங்கதான் என்கிட்ட போன்ல கூட பேசறதில்லையே” என்று மான்சி குழந்தையாய் கொஞ்சினாள்

பேச்சி ஒன்றும் புரியாமல் சத்யனைப் பார்க்க, அவன் முகத்திலும் ஏகப்பட்ட குழப்ப ரேகைகள் தாறுமாறாக ஓடியது, “ நான் போய் கூல்டிரிங்ஸ் எடுத்துட்டு வர்றேன்மா” என்று சாக்கு சொல்லிவிட்டு கீழே ஓடிவிட்டான் சத்யன்

மான்சி பேச்சியின் தோளில் சாய்ந்தபடியே நடந்து வந்து பெரிய சோபாவில் அமர்ந்து பேச்சியின் மடியில் தலைசாய்த்து படுத்துக்கொண்டாள், இப்படி சலுகையாய் கொஞ்சுபவளை என்னவென்று கேட்பது என பேச்சிக்கு புரியவில்லை,

எதிரே அமர்ந்திருந்த விஸ்வாவை பார்த்து “ நீங்க யாரு தம்பி மான்சியோட பிரண்ட்டா?” என்று பேச்சி கேட்டதும், என்ன சொல்வது என்று விஸ்வா யோசிக்கும் போதே,

மான்சி எழுந்து அமர்ந்து “ அத்தை இவர் பேரு விஸ்வநாதன், அட்சயா அண்ணியோட பெரியப்பா மகன், அமெரிக்கால இருந்து போன வாரம்தான் வந்துருக்காரு, நம்ம ஊரையெல்லாம் சுத்திப் பார்க்கனும்னு சொன்னாரு அதான் கூட்டிட்டு வந்தேன் ” என்று மான்சி சொல்ல,

அப்போது கையில் கூல்டிரிங்ஸ் பாட்டிலுடன் வந்த சத்யன் விஸ்வாவிடம் ஒன்றை கொடுத்துவிட்டு, மான்சியிடம் மற்றொன்றை கொடுத்தான், பிறகு மற்றொரு சோபாவில் அமர்ந்து விஸ்வாவைப் பார்த்து “ இங்கே சுற்றிப்பார்க்க நிறைய இடங்கள் இருக்கு, ஆனா எல்லாத்துக்கும் மையமா இருக்கிற திருநெல்வேலியில் தங்கினால் தான் எல்லா இடத்துக்கும் போக தோது படும், திருநெல்வேலியிலேயே நல்ல ஹோட்டல்கள் இருக்கு அதனால அங்கேயே விசாரிச்சு உங்களுக்கு தங்க ஏற்பாடு பண்ணவா?” என்று கேட்க..

விஸ்வா மான்சியைப் பார்த்தான், மான்சி சத்யனைப் பார்த்து “ சத்யா எதுக்கு ஹோட்டல்ல தங்கனும், இந்த வீடு நல்லா பெரிசாத்தானே இருக்கு, இங்கயே தங்கிக்கிறோம், நீங்க என்ன அத்தை சொல்றீங்க?” என்று பேச்சியிடம் கேட்டாள்

“ உனக்கு இங்க வசதியா இருந்தா இங்கயே தங்கும்மா, இந்த கூடமும் அதோ அந்த ரூமும் மட்டும்தான் இருக்கு” என்று பேச்சி சொன்னதும்

“ இது போதும் ஆன்ட்டி நாங்க அட்ஜஸ்ட் பண்ணிக்கிறோம்” என்றான் விஸ்வா,
அதன்பிறகு பேச்சி இரவு உணவு தயார் செய்ய உள்ளே போய்விட, விஸ்வா காரிலிருந்து பெட்டிகளை எடுத்துவர கீழே போனான்,

சத்யன் தனது அறையின் கதவை திறந்துவிட, மான்சி அவனை உரசியபடி உள்ளேபோனாள், அந்த அறையில் இருந்த கட்டிலில் அமர்ந்து கால்மேல் கால் போட்டபடி சத்யனை பார்த்து “ என்கூட வந்திருக்கறது யார் தெரியுமா சத்யா, அட்சயா அண்ணியோட அண்ணன், என்னை கல்யாணம் பண்ணிக்கறதுக்காக அமெரிக்காலேருந்து வந்திருக்கான், கொஞ்சநாள் ரெண்டுபேரும் பேசிப் பழகி பிடிச்சிருந்தா மேரேஜ் பண்ணிக்கலாம்னு இருக்கோம் ” என்று மான்சி சொன்னதும்,

சத்யனின் முகம் சட்டென்று நரசிம்ம அவதாரமெடுத்தது ஆனால் அடுத்த நிமிடமே அது பொய்யோ எனும்படி பழைய நிலைக்கு மாறியது, ஒருவித அலட்சியத்துடன் தோள்களை குலுக்கிக்கொண்டு அறையிலிருந்து வெளியே போய்விட்டான்




" உலகிலேயே அழகான விஷயம் எது?"

" ஒருவனைக் கேட்டால் ... பூ என்பான்,,

" பூக்காரியை கேட்டால்.. பூ அவளுக்கு காசு!

" இன்னொருவனை கேட்டால்... நிலா என்பான்,,

" விஞ்ஞானியைக் கேட்டால்... நிலா அவனுக்கு கல்!

" ஒருவனைக் கேட்டால்... வீணை என்பான்,,

" தச்சனைக் கேட்டால்... வீணை அவனுக்கு மரம்!

" உலகிலேயே அழகான விஷயம் எதுவென்றால்...

" ஒவ்வொருவனுக்குள்ளும் இருக்கும் தேடல்! 



மான்சியின் மவுனம் - அத்தியாயம் - 8



அதன்பிறகு வந்த இரண்டு நாட்களும் மான்சியின் கால்கள் தரையில் நிற்க்கவில்லை, உதடுகள் எப்போதுமே காதல் பாடல்களை முனுமுனுத்தபடி இருந்தது, தோட்டத்து மரங்கள், செடிகொடிகள், பூக்கள், பூக்களில் அமரும் பட்டாம்பூச்சியில் இருந்து, மரங்களில் கூடுகட்டி வாழும் பறவைகள் வரை அத்தனையிடமும் புரியாத பாசையில் பேசினாள்,

“ அக்கா இன்னிக்கு நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க” என்ற மஞ்சுவை கட்டிப்பிடித்து முத்தமிட்டு அவளை அழகாக வெட்கப்படவைத்தாள், தனது உடைகளை மஞ்சுவுக்கு அணிவித்து அவளை ஒயிலாக கேட்வாக் செய்யவிட்டு கைகொட்டி சிரித்து ரசித்தாள்



மகளின் இந்த மாற்றங்கள் பெற்றவர்களுக்கு ரசிக்கவில்லை, இவற்றுக்கெல்லாம் காரணம் அமேரிக்க மாப்பிள்ளையின் வருகைதான் என்று அவர்களின் உள்ளம் குமுறியது,

ஆராவமுதனுக்கு இருந்த ஆத்திரத்தில் வரும் அமேரிக்காக்காரனை துப்பாக்கியில் சுட்டுவிடுவார் போல் இருந்தது, மான்சி சம்மதிக்கமாட்டாள் என்ற தைரியத்தில் தான் அட்சயாவிடம் மான்சியை கேட்டு முடிவு சொல்வதாக சொன்னது,

ஆனால் மான்சியைப் பார்த்தால், இதில் அவளுக்கு முழு சம்மதம் என்பது போல் தோன்றுகிறதே என்று அவருக்கு ஆத்திரமாக வந்தது, “ என் வகைறாவுல ஆம்பளைங்க கூட ரெண்டாவது கல்யாணம் பண்ணதில்லை, ஆனா உன் மக இப்படியொரு முடிவு பண்ணிருக்காளே?” என்று சாந்தாவிடம் கூறி ஆத்திரப்பட்டார்

“ எனக்கும் என்ன சொல்றதுன்னு புரியலைங்க,, நம்ம சத்யன் கல்லாட்டம் இருக்குறப்ப இவளுக்கு புத்தி போற போக்கை பாருங்க, அமேரிக்கா மோகம் தலைக்கேறி போச்சு போலருக்கு ” என்று அவளும் பதிலுக்கு தனது கோபத்தை கொட்டினாள்

இருவரும் மான்சியிடம் இதைப்பற்றி எதுவுமே கேட்கவில்லை, அந்த விஸ்வா வரட்டும் என்று காத்திருந்தார்கள்

விஸ்வாவும் வந்தான், சத்யன் அளவுக்கு உயரமாக இல்லாவிட்டாலும், அதிக சதைப்பற்று இல்லாமல் நல்ல சிவந்த நிறத்தில் மீசை இல்லாமல் மொழுமொழுவென இருந்தான், கண்களில் ஒரு வசீகரம் இருந்தது, அதேசமயம் பார்வையில் வக்கிரம் இல்லை, ரொம்ப இயல்பாக இருந்தான், பாரம்பரியத்தை மறக்காது வீட்டுக்குள் நுழைந்ததும் ஆராவமுதன் சாந்தா காலில் விழுந்து “ என்னை ப்ளஸ் பண்ணுங்க அங்கிள் ஆன்ட்டி” என்றதும் அவர்களுக்கு அவன்மீது இருந்த கோபம் குறைந்து மனதார ஆசிர்வதித்தார்கள்

மான்சிக்காக வாங்கி வந்த பொருட்களை அவளிடம் கொடுத்தபோது மான்சி வேகமாக தலையாட்டி மறுக்க “ கமான் மான்சி நான் ஜஸ்ட் ப்ரண்ட்ஸா தான் நெனைச்சு வாங்கிட்டு வந்தேன், மற்ற எதைப்பத்தியும் யோசிக்கவேயில்லை, அதனால நீ கண்டிப்பா வாங்கிக்கனும்” என்று அவளிடம் பொருட்களை கொடுக்க, சிறு சங்கடத்துடன் மான்சி வாங்கிக்கொண்டாள்,

விஸ்வா கொடுத்த பையில், ஒரு விலையுயர்ந்த மொபைல் போனும், ஒரு சைபர்சாட் கேமிராவும், சில சாக்லேட் பெட்டிகளும் இருந்தன, வக்கிர எண்ணத்தில் கொடுக்கும் பொருட்களாக அவை இல்லை என்றதும் பெற்றவர்களுக்கு சற்று நிம்மதியாக இருந்தது,


அப்போது விஸ்வாவுக்கு காபி எடுத்துக்கொ வந்த மஞ்சு, அவனின் தோற்றத்தை பார்த்து வாயைப் பிளந்தபடி காபியை நீட்ட..

மஞ்சு கொடுத்த காபியை வாங்கியபடி “ அடடா இந்த வீட்டுல இந்தமாதிரி இன்னொரு க்யூட் கேர்ள் இருப்பான்னு எனக்குத் தெரியாம போச்சே, ஸாரி உனக்கு எதுவுமே வாங்கிட்டு வரலை” என்று வருத்தமாக கூறிவிட்டு, மான்சியிடம் திரும்பி “ மான்சி அந்த சாக்லேட் பாக்ஸ்ல ஒன்னை எனக்கு திருப்பி தரமுடியுமா?” என்று கேட்க

“ ஓ ஷ்யூர் விஸ்வா” என்று கூறிவிட்டு தன்னிடமுள்ள பையிலிருந்து ஒரு சாக்லேட் பெட்டியை எடுத்து விஸ்வாவிடம் கொடுத்தாள் மான்சி

அதை வாங்கி மஞ்சுவிடம் நீட்டி தனது இடைவரை குனிந்து “ இந்த க்யூட் பேபிக்கு என்னோட சின்ன கிப்ட்” என்று கூற

அவன் அப்படி செய்ததில் மஞ்சுவுக்கு பயங்கர வெட்கம் வந்தது, ஒருமாதிரியாக நெளிந்தபடி சுற்றிலும் இருந்தவர்களை ஒரு பார்வை பார்த்துவிட்டு “ வேனாங்க சார்’’ என்றாள் சங்கடமாக கூறினாள்

அவள் சங்கடத்தை புரிந்துகொண்டு “ வாங்கிக்க மஞ்சு” என்றாள் சாந்தா
“ ஓ மஞ்சுவா உன் பெயர், ரொம்ப நல்லாருக்கு” என்ற விஸ்வா இன்னும் சாக்லேட்டை நீட்டியபடியே இருக்க, மஞ்சு சங்கடத்துடனேயே அதை வாங்கிக்கொண்டு ஓடிவிட்டாள்

விலையுயர்ந்த பேனா ஒன்றை ஆராவமுதனுக்கு கொடுத்தவன், அழகான வேலைபாடுகள் நிறைந்த ஒரு சால்வையை சாந்தாவுக்கு கொடுத்தான், அவனின் நாகரீகமான அனுகுமுறை அனைவருக்குமே பிடித்துப்போனது

அன்று மதியம் சாந்தாவும் மஞ்சுவும் செய்த காரசாரமான அசைவ உணவுகளை நாக்கில் நீர் வழியவழிய கலங்கிய கண்களைத் துடைத்துக்கொண்டு ஆவலுடன் சாப்பிட்டான்

சாயங்காலமாக மான்சியின் அறைக்கதவை நாகரீகமாக தட்டிவிட்டு பதில் வந்ததும் உள்ளே போனான், சோபாவில் அமர்ந்திருந்த மான்சி அவனைப் பார்த்ததும் அவசரமாக எழுந்து நிற்க..

அவளெதிரில் இருந்த சோபாவில் கேஷுவலாக அமர்ந்த விஸ்வா, “ ரிலாக்ஸ் மான்சி, நாம இப்போ ஜஸ்ட் பிரண்ட்ஸ் மட்டும்தான் ஓகேயா? என்னைப்பார்த்து நீ சங்கடப்பட வேண்டிய அவசியமில்லை” என்று புன்னகையுடன் கூற

மான்சியின் முகத்திலும் மெல்லிய புன்னகையோடு “ இல்ல உங்களை எதிர்பார்க்கலை விஸ்வா அவ்வளவுதான்” என்று சூழ்நிலையை இயல்பாக்கினாள்

“ ஆனா நான் ஒரு எதிர்பார்போடு தான் வந்திருக்கேன்மான்சி,, அட்சயா உன்னைப்பத்தி சொன்னப்ப உடனே நானும் சம்மதிக்கலை, ஏன்னா வாழ்க்கையை இழந்த பொண்ணுக்கு வாழ்க்கை குடுக்குற அளவுக்கு நான் ரொம்ப பெரிய தியாகி எல்லாம் கிடையாது மான்சி,, கிட்டத்தட்ட ஐந்து வருஷமா வெளிநாட்டில் வாழ்ந்தாலும் நம்ம கலாச்சாரத்தை மறக்காத அக்மார்க் தமிழ் பையன் நான்,, எனக்கு என் மனைவி எப்படியிருக்கனும் சில டிரீம்ஸ் இருக்கு மான்சி, உன்னோட பேசிப் பழகி பார்த்த பிறகுதான் என்னோட சம்மதத்தை சொல்வேன்னு அட்சயா கிட்ட சொல்லிட்டு தான் இங்கே வந்திருக்கேன்,, அப்புறம் அட்சயாவோட கேரக்டரை வச்சு என்னை எடைபோடாதே, ஏன்னா எனக்கு சிஸ்டர் முறை என்றாலும் எனக்கே சிலவிஷயங்களில் அட்சயாவை பிடிக்காது ” என்று விஸ்வா விளக்கமாக மான்சியிடம் கூற .


மான்சிக்கு அவனது பேச்சில் நேர்மையும், வெளிப்படையான குணமும் ரொம்பவே பிடித்துப்போனது “ உங்களுடைய பொய் கலப்படமில்லாத வார்த்தைகள் எனக்கு ரொம்ப பிடிக்குது விஸ்வா” என்று மனம்விட்டு பாராட்டினாள் மான்சி

உடனே விஸ்வாவின் முகத்தில் என்னவென்று புரியாத ஒரு பாவனை வந்து போக, தனது கைவிரல்களை ஒன்றோடொன்று பின்னி நெறித்தபடி “ அப்போ நான் உனக்கு ஓகேன்னு சொல்றியா மான்சி? ” என்று விஸ்வா நேரடியாக கேட்டான்

இதற்கு என்ன பதில் சொல்வது என்று மான்சி ஒரு நிமிடம் திகைத்து திணறித்தான் போனாள், கழுத்தில் இருக்கும் தாலியை எடுத்து காட்டி ‘ இல்ல இல்ல நான் எப்பவுமே சத்யனோட மனைவிதான்’ என்று சொன்னால் மேற்கொண்டு வற்புறுத்தாமல் நாகரீகமாக ஒதுங்கிப் போககூடியவன் விஸ்வா, ஆனால் அதன்பிறகு யாரை வைத்து சத்யனை அசைக்கமுடியும், நிச்சயமாய் அதற்காக ஒருத்தனை தேடி அழைத்துச்செல்லும், அளவிற்கு மான்சிக்கு பொறுமையோ, திறமையோ இல்லை,

அதனால் ஒரு முடிவுடன் நிமிர்ந்து விஸ்வாவை பார்த்து “ இல்லை விஸ்வா நீங்க சொன்னமாதிரி ஒரு நல்ல பிரண்ட்டா உங்களைப் பார்த்ததுமே எனக்கு பிடித்து போச்சு, மத்தபடி நானும் உங்களோட பேசி பழகிய பிறகுதான் எதையுமே முழுசா சொல்லமுடியும், இந்த ஒரேநாளில் என்னால எந்த முடிவுக்கும் வரமுடியாது விஸ்வா” திக்கித்திணறி மெதுவாக சொல்லிமுடிக்க..

பட்டென்று ஒரு பளிச் புன்னகை வந்து விஸ்வா முகத்தில் வந்து ஒட்டிக்கொள்ள “ ஓகே நான் இங்கே இன்னும் ஒரு வீக் இருக்கப்போறேன் அதனால போகப்போக பார்த்துக்கலாம்,, இப்போ நீ என் கூட வந்து மதுரை மீனாக்ஷி அம்மன் கோயிலை சுற்றி காட்டி கைட் பண்ற ஓகேயா, சீக்கிரமா கிளம்பி வா மான்சி” என்று கூறிவிட்டு விஸ்வா உற்சாகமாக எழுந்து வெளியே போக, மான்சி போகும் அவன் முதுகையே வெறித்தாள்

இது தவிர்க்க முடியாத ஒன்று, வேறு வழியில்லை போய்த்தான் ஆகவேண்டும், விஸ்வாவை ஒரு நண்பனாக நினைத்து போகத்தான் வேண்டும், என்று எண்ணியபடி எழுந்து கோவிலுக்கு போக ரெடியானாள்

மான்சி குளித்துவிட்டு அடர்த்தியற்ற ஆரஞ்சு வண்ணத்தில் மைசூர் கிரேப் சேலையணிந்து, தலைவாறி ஒற்றை ஜடையாக பின்னலிட்டு, உடலில் ஆங்காங்கே சிறு சிறு நகைகளுடன் ஒரு தேவதையாக கீழே வந்தபோது, ஹாலில் விஸ்வா சாந்தாவுடன் பேசிக்கொண்டு இருந்தான்,

மான்சியை பார்த்ததும் “ வாவ்......... வாட் எ பியூட்டி?”என்று உற்சாகமாய் கூவ,

மகளை நிமிர்ந்து பார்த்த சாந்தாவுக்கு எரிச்சல் பற்றிக்கொண்டு வந்தது, ‘சத்யன் இங்கே இருக்கும்போது ஒரு நாளாவது புடவை கட்டியிருப்பாளா? இப்போ பாரு எப்படியிருக்கான்னு, யார் ரசிக்க இவ்வளவு அழகோ தெரியலை?’ என்று எரிச்சலுடன் எண்ணியபடி எழுந்து தனது அறைக்கு போய்விட்டாள்

அப்போது தொடுத்து வைத்த மல்லிகை சரத்துடன் வந்த மஞ்சு “ அக்கா இந்த பூவை வச்சிக்கிட்டு போங்களேன்” என்று சொன்னதோடு அல்லாமல் மான்சியின் கூந்தலில் தானே பூவை வைத்தாள்





மஞ்சுவையே பார்த்த விஸ்வா “ மான்சி உனக்கு அப்ஜெக்ஷன் இல்லேன்னா மஞ்சுவும் நம்மகூட கோயிலுக்கு வரட்டுமே, நமக்கு ஒரு பேச்சுத் துணையா இருக்கும்” என்று சொல்ல..

“ ம்ஹூம் நான் வரலை இங்க வீட்டுல வேலையிருக்கு” என்று மிரட்சியுடன் பின்வாங்கினாள் மஞ்சு

“ பரவாயில்லை வா, வேலையை இருக்கிறவங்க பார்த்துக்குவாங்க” என்று விஸ்வா வற்புறுத்தி கூப்பிட்டான், ஒரு பேச்சில் ஒரு உரிமையான தொனி இருந்தது

அவர்களின் வாதம் சாந்தாவின் அறையை எட்டியிருக்க வேண்டும், ஏற்கனவே மான்சியை விஸ்வாவுடன் தனியாக அனுப்ப சங்கடப்பட்டவளுக்கு, விஸ்வா மஞ்சுவையும் உடன் அழைக்கவும் ஒரு நிம்மதி பெருமூச்சுடன் மறுபடியும் வெளியே வந்து “ தம்பிதான் கூப்பிடுதே, நீ கிளம்பி போய்ட்டு வா மஞ்சு, வேலையை இருக்குறவங்களை வச்சு நான் பார்த்துக்கிறேன்” என்று சாந்தா அமைதியாக கூறி அனுமதிக்க.. விஸ்வாவின் முகத்தில் பளிச்சென்று தவுசண்ட் வாட்ஸ் பல்பு எறிந்தது

“ இதோ கிளம்பி வர்றேன்” என்று மஞ்சு தோட்டத்து பக்கமாக ஓடினாள்,, மஞ்சுவின் உற்சாகம் அவளது துள்ளலான நடையில் தெரிந்தது,

மான்சி சோபாவில் அமர்ந்து மஞ்சுவுக்காக காத்திருக்க, சற்றுநேரம் அவளுடன் டிவியை பார்த்த விஸ்வா தோட்டத்து பக்கமாக மெதுவாக நகர்ந்தான், அவன் மஞ்சுவைத் தேடி போனபோது, அவளே எதிரில் வந்தாள், மான்சியின் திருமணத்திற்கு எடுத்துக்கொடுத்த பாவாடை தாவணியில் வந்தவள் எதிரே வந்த விஸ்வாவை பார்த்ததும் வெட்கமாக நெளிய

குனிந்து நின்ற அவளை தலைமுதல் கால் வரை அளவிட்ட விஸ்வா “ நீ பூ வச்சுக்கலையா மஞ்சு?” என்று கேட்டான்

வாயில் எதையோ குதப்பிய படி நிமிர்ந்த மஞ்சு “ ம்ஹூம் இல்லையே இருந்த பூவை மான்சி அக்காவோட தலையில வச்சிட்டேனே” என்று ஏமாற்றத்துடன் கையை விரிக்க

“ ம்ம் சரி விடு பரவாயில்லை, கோயில்ல பூ வித்தா வாங்கிக்கலாம், ஆமா வாயில என்ன வச்சிருக்க” என்று விஸ்வா கேட்டதும்..

மேலும் வெட்கத்துடன் தலையை குனிந்து கொண்ட மஞ்சு “ அது நீங்க குடுத்த சாக்லேட் தான், எனக்கு சாக்லேட்னா ரொம்ப புடிக்கும்” என்றவள் தன் கையில் இருந்த சாக்லேட் சுற்றியிருந்த ஜரிகை பேப்பரை காட்டிவிட்டு, “மான்சியக்கா வெளிய கடைக்கு போனா எனக்கு சாக்லேட் வாங்கிட்டு வந்து குடுப்பாங்க” என்று கூறிவிட்டு விஸ்வாவின் பக்கவாட்டில் நகர,

அவளின் கையைப் பற்றி அந்த பேப்பரை எடுத்து கசக்கி எறிந்துவிட்டு “ சரி வா போகலாம், நேரமாகுது” என்று விஸ்வா முன்னால் செல்ல..

மஞ்சு ஓடிப்போய் அந்த பேப்பரை எடுத்து அதன் சுருக்கங்களை நீக்கிவிட்டு மடித்து மறுபடியும் கைக்குள் வைத்துக்கொண்டாள்

அதை கவனித்த விஸ்வா “ ஏய் அதையேன் எடுக்குற?” என்று கேட்க

“ இல்ல அந்த பேப்பர் நல்லாருக்கு அதான்” என்று அசட்டுத்தனமாக கூறிவிட்டு மஞ்சு நெளிந்தாள்

விஸ்வா சற்றுநேரம் அவள் முகத்தையே பார்த்தான் பிறகு “ சரி வா” என்று கூறிவிட்டு வீட்டுக்குள் போனான்

மூவரும் வேகன் ஆரில் கிளம்பினார்கள், விஸ்வா முன்புறம் டிரைவருக்குப் பக்கத்தில் அமர, மான்சியும், மஞ்சுவும், பின் சீட்டில் அமர்ந்தனர்

கார் கோயிலை அடைந்ததும் விஸ்வா முதலில் பூக்கடைக்குத் தான் போனான், பெண்கள் இருவரும்காருக்கு அருகிலேயே நிற்க்க, விஸ்வா பூவை வாங்கிக்கொண்டு தன் பாக்கெட்டில் இருந்து பணத்தை எடுத்து கொடுத்துவிட்டு வந்தான்

வாங்கி வந்த பூவை மஞ்சுவிடம் கொடுக்க, அவள் மறுபடியும் மிரண்டுபோய் மான்சியைப் பார்த்தாள்

“ ஏன்டி ச்சும்மா ச்சும்மா என்னையே பார்க்கிற, வாங்கி தலையில வச்சுக்க” என்று மான்சி அன்புடன் கூறியதும், முகம் பட்டென்று மலர பூவை வாங்கி தலையில் வைத்துக்கொண்டாள் மஞ்சு

விஸ்வாவின் முகத்தில் ஒரு பளிச் புன்னகை மின்னலாய் வந்து மறைந்தது, ஆனால் விஸ்வாவின் நடவடிக்கைகள் எதுவும் மான்சியின் கவனத்தை கவரவில்லை, அவள் சிந்தனைகளின் ஓட்டம் எங்கோ ஓடிக்கொண்டிருந்தது..

மூவரும் அர்ச்சனை தட்டு வாங்கிக்கொண்டு கோயிலுக்குள் போனார்கள், நேராக அம்மன் சன்னதி போய் அர்ச்சனை செய்துவிட்டு, பிறகு சாமி சன்னதிக்கு வந்து சாமி கும்பிட்டுவிட்டு சுற்றிவந்தனர்,, கோவிலின் சில இடங்களை பற்றி விஸ்வா கேட்டபோது மான்சி கவனத்தை எங்கோ வைத்துவிட்டு அரைகுறையாக பதில் சொல்ல,, மஞ்சுதான் அவனுக்கு விரிவாக விளக்கினாள்

மான்சி நிறைவாய் சாமி கும்பிட்ட பிறகு மனம் வேறெதிலும் ஒன்றாது போக, சங்கடத்துடன் விஸ்வாவை ஏறிட்டு “ விஸ்வா எனக்கு கொஞ்சம் தலைவலியா இருக்கு, நான் குளத்து படிகட்டில் உக்காந்திருக்கேன் நீங்க மஞ்சு கூட போய் கோயில் முழுக்க சுற்றிவிட்டு வாங்க, என்னைவிட அவ எல்லாத்தையும் டீடெய்லா சொல்லுவா அவளுக்கு இந்த கோயில் முழுக்க ரொம்ப பரிச்சயம் விஸ்வா, தப்பா நெனைக்காதீங்க” என்று மான்சி கூற..

விஸ்வா சந்தோஷமாக இருந்தாலும் “ ரொம்ப தலைவலியா இருந்தா வீட்டுக்கு போயிடலாமே மான்சி?” என்று வருத்தமாக கேட்க..

“ அதெல்லாம் ரொம்ப தலைவலி இல்லை விஸ்வா, நீங்க போய்ட்டு வாங்க, நான் வெயிட் பண்றேன்” என்று கூறிவிட்டு குளத்து படிகளில் இறங்கி மூன்றாவது படியில் அமர்ந்து கொண்டாள்,

விஸ்வாவும் மஞ்சுவும் கோயிலின் வெளிப்பிரகாரத்தை சுற்றிவர கிளம்பினார்கள்

மான்சியின் நிலை அவளுக்கே சங்கடமாக இருந்தது, என்ன சொல்லி விஸ்வாவை பாபநாசத்திற்கு அழைத்து செல்வது, இப்போ அங்கே நல்ல சீசன் தான், ஆனால் விஸ்வாவுடன் சத்யன் இருக்குமிடத்திற்கு போக அப்பா அம்மாவிடம் அனுமதி கிடைக்குமா? என்றுதான் பெரும் குழப்பமாக இருந்தது,



ஆனால் விஸ்வாவை அழைத்துக்கொண்டு போய்த்தான் ஆகவேண்டும், ஏனென்றால் சத்யனின் மனதில் என்ன இருக்கிறது என்று தெரிந்துகொள்வது ரொம்ப அவசியம், என்று மான்சி எண்ணும்போதே ‘ முன்பு போலவே அவன் அலட்சியம் காட்டினால்? உன்னை எனக்கு பிடிக்கவில்லை என்று சொல்லிவிட்டாள்? என்ன செய்வது என்ற கேள்விகளும் கூடவே எழுந்தது,

அப்படியொரு சூழ்நிலையை மான்சியால் நினைத்துக்கூட பார்க்கமுடியவில்லை அய்யோ தலையை கைகளால் தாங்கி கவிழ்ந்து கொண்டாள்,, பிறகு நிமிர்ந்தவள் கம்பீரமாக நின்ற கோபுரத்தை பார்த்து கையெடுத்துக்கும்பிட்டு ‘ மீனாக்ஷி தாயே அப்படியொரு சூழ்நிலையில் என்னை விட்டுறாதே, எனக்கு என் சத்யன் வேனும், சத்யன் இல்லாம என்னால வாழவே முடியாது, அவன் மனசு மாறி என்னை ஏத்துகனும், என்று மனமுருகி வேண்டிக்கொண்டாள் 


Tuesday, September 29, 2015

மான்சியின் மவுனம் - அத்தியாயம் - 7


“ அம்மா அதெல்லாம் வேனாம், மொதல்ல முன்னுக்கு வர்ற வழியப் பார்க்கனும், அப்புறமாதான் மத்ததை பத்தி யோசிக்கனும், அதுவரைக்கும் எதையும் பேசாதே, இப்போ கடையைத் திறந்து ஏவாரத்தை பாரு , நான் கொஞ்சநேரம் தூங்குறேன் ” என்று பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்தான் சத்யன்

மறுநாள் காலை சீக்கிரமாகவே எழுந்த சத்யன் குளித்துவிட்டு கடையை திறந்து வியாபாரத்தை அவன் பார்த்தான், பேச்சி மகனுக்காக சமையல் செய்துகொண்டு இருந்தாள்,, ஆனால் பொருட்கள் வாங்க வரும் ஆட்கள் கேட்டதில் முக்கால்வாசி பொருட்கள் கடையில் இல்லை என்றதும் வீட்டுக்குள் போய் “ என்னம்மா கடையில ஒன்னுமே சரக்கு இல்லை, வர்றவங்க எல்லாம் சும்மாவே திரும்பி போறாங்க, ஏன்மா சரக்கு வாங்கிப் போட பணம் இல்லையா?” என்று கேட்டான்

குழம்பை தாளித்துக்கொண்டிருந்த பேச்சி “ பணம் இல்லாம இல்ல சத்தி, ஆனா டவுனுக்குப் போய் சரக்கு எடுத்துட்டு வரதான் ஆள் இல்லை, என்னால அடிக்கடி போகமுடியலை சத்தி, அதான் சும்மா இருக்குறதை வச்சு ஓட்டிக்கிட்டு இருக்கேன்” என்று சலிப்புடன் கூறியதும்..

சத்யனுக்கு அந்த யோசனை வந்தது, பக்கத்தில் எந்த கடைகளும் இல்லாத பட்சத்தில் நிச்சயம் வியாபாரம் நன்றாக நடக்கும், வெளியே வேலை தேடி போவதை விட, இருக்கும் பணத்தில் இன்னும் பொருட்களை வாங்கி கடையில் ஏத்தி வியாபாரத்தை கவனித்தால் என்ன என்ற யோசனை வர, அதை உடனே பேச்சியிடம் சொன்னான்,



ஏற்கனவே மகன் கடையை பார்த்துக்கொள்ள மாட்டானா என்று பலநாட்கள் தவித்த பேச்சிக்கு சத்யனின் வார்த்தைகள் காதில் தேனாக வந்து பாய்ந்தது, தனது சேமிப்புப் பணத்தை எல்லாம் திரட்டி மகனிடம் கொடுக்க, சத்யன் டவுனுக்குப் போய் தேவையானப் பொருட்களை வாங்கிக்கொண்டு ஒரு டெம்போவில் வந்து இறங்கினான்,

சத்யனின் முதல் யோசனை வெற்றிகரமாக அவனை ஜெயிக்க வைத்தது, அதன்பிறகு அவனுக்கு தோல்வி என்பதே இல்லாமல் படிப்படியாக முன்னேற்றம் தான் வந்தது,, ஏழை என்ற நிலை மாறவேண்டும் என்ற அவனது வைராக்கியம் முன்னேற்றப் பாதையில் அழைத்துச்சென்றது

அவனது பழைய நண்பர்கள் சிலர் அவனுக்குப் பெரிதும் உதவினார்கள், ஏளனமாகப் பார்த்தவர்களை சத்யனே ஒதுக்கி தள்ளினான்,

அவனது எண்ணமெல்லாம் மான்சியின் கண்முன் வாழ்க்கையில் ஜெயித்துக் காட்டவேண்டும் என்பதுதான், அவனுடைய பழக்கவழக்கங்களை கூட மாற்றிக்கொண்டான், ஞாயிறு அன்று கடையை மூடிவிட்டு அன்றுமட்டும் நண்பர்களுடன் ஜாலியாக ஊர் சுற்றினான்,

வியாபாரத்தை விரிவாக்கிய அடுத்த மாதமே வீட்டு ஹாலுக்கும் கடைக்கும் இடையே இருந்த சுவற்றை இடித்து கடையை பெரிதாக்கினான், பூஜையறையும் சமையலறையும் மட்டும் கீழே இருக்க, தங்கவும் படுத்துக்கொள்ளவும் வீட்டின் மாடியில் ஒரு அறையைக் கட்டிக்கொண்டான்,, நண்பர்களில் இருவரை வேலைக்கு வைத்துக்கொண்டான், கம்பியூட்டர் வைத்து பில் போடும் அளவிற்கு கடையின் முன்னேற்றம் இருந்தது,

இதற்கான முதலீடு பேச்சியின் சொற்ப நகைகளும், சத்யனின் திருமணத்திற்கு என்று சிறுகச்சிறுக சேர்த்த பணமும் தான்,

புதிய சிம்கார்டின் நம்பரை வேல்முருகனுக்கு மட்டுமே கொடுத்தான், எப்போதாவது கடையில் இருக்கும் ஒரு ரூபாய் காய்ன் போனுக்கு சாந்தா பேசுவாள், சத்யன் இரண்டொரு வார்த்தைகள் மட்டும் பேசிவிட்டு, பேச்சியிடம் போனை கொடுத்துவிடுவான், நாளடைவில் பேச்சிகூட பேசுவதை தவிர்த்தாள், தன் மகனை பிடிக்கவில்லை என்ற மான்சியின் மீது இருந்த கோபமே இதற்கு காரணம்

அவனுடைய முன்னேற்றத்திற்கு பெரிதும் உதவியது மான்சி அவனைப் பற்றி கூறிய வார்த்தைகள் தான், மான்சி இன்னேரம் தனக்கு பொருத்தமான வேறு யாரையாவது திருமணம் செய்துகொள்ள முடிவு செய்திருப்பாளோ? என்ற எண்ணம் மனதில் வரும்போதெல்லாம் அவனையே அவன் வெறுத்தான்,

“ எனது குறைகளை கண்டுபிடித்து,,

“ நீ ஏளனம் செய்தபிறகு தான்,,

“ என் முன்னேற்றத்தின் பாதையையே,,

“ நானே கண்டுகொண்டேன்”

“ இதைத்தான் சொன்னார்களோ,,

“ ஆணின் வளர்ச்சிக்கு பின்னால்,,

“ பெண் இருக்கிறாள் என்று! 

சத்யன் கையெழுத்துப் போட்டுவிட்டு வெளியே போனதும், சாந்தா முந்தானையை எடுத்து வாயில் அடைத்து விம்மலை கட்டுப்படுத்திக்கொண்டு அறையை விட்டு வெளியேற, ஆராவமுதன் தன் வேதனையை அழுகையாக காட்டாமல் தனது இயலாமையை அமைதியில் காட்டினார்

இருவரையும் கண்டுகொள்ளாமல் சத்யன் கையெழுத்துப் போட்ட பத்திரங்களையும், அதற்காக தனக்கு உதவிய விஷத்தையும் எடுத்துக்கொண்டு அறையை விட்டு வெளியேறி தனது அறைக்குப் போனாள்

பத்திரத்தை பத்திரமாக வைத்துவிட்டு, பாத்ரூமுக்கு போய் பாய்ஸ்ன் பாட்டிலை திறந்து டாய்லெட்டில் கொட்டிவிட்டு பாட்டிலை குப்பை கூடையில் போட்டுவிட்டு வெளியே வந்தாள், தனது மொபைல எடுத்து தனது தோழிக்கு போன் செய்தாள் ,

அவள் உடனே எடுக்க “ ஏய் சரண் எல்லாம் முடிஞ்சு போச்சுடி” என்று மான்சி சொன்னதும்,,

எதிர்முனையில் இருந்த சரண்யாவுக்கு மான்சியின் இந்த வார்த்தை பெரும் உற்ச்சாகத்தை கொடுத்தது, “ கங்ராட்ஸ் மான்சி,, ஒழுங்கா கையெழுத்துப் போட்டானா? இல்ல பணம் சொத்து இப்படி ஏதாவது கொடுத்தால்தான் கையெழுத்துப் போடுவேன்னு மிரட்டினானா?” என்று கேட்க

“ இல்லடி அதெல்லாம் எதுவும் கேட்கலை, எனக்கும் இதுல சம்மதம்னு, சொல்லிட்டு கையெழுத்துப் போட்டுட்டு உடனே போயிட்டான்” என்று மான்சி சொன்னாள், அவள் குரலில் இருந்த வெறுமை அவளுக்கே உறுத்தியது,

“ நெஜமாவா சொல்ற?,, பணமும் சொத்தும் கேட்கவே இல்லையா? இப்பத்தான் நீ இன்னும் ஜாக்கிரதையா இருக்கனும், அவன்மேல பரிதாபத்தை வரவழைக்க கூட இந்தமாதிரி ஒரு சீன் போட்டிருக்கலாம்,” என்று ஆச்சர்யமான குரலில் சரண்யா சொல்ல..

“ இல்ல அந்தமாதிரி எனக்குத் தோணலை, இனிமேல் வரமாட்டான்னு தான் நெனைக்கிறேன் ” என்று மான்சி கூறியதும்

“ சரி சரி எதுவோ சனியன் ஒளிஞ்சுதுன்னு விடுடி,, ஆனா நீ அவன் நம்மளையெல்லாம் நடுரோட்டுல விட்டுட்டு போனப்பவே அவனை விரட்டியிருந்தா இப்போ உன் வாழ்க்கையிலயே குறுக்கே வந்திருக்க மாட்டான்,, ஆனாலும் அவனுக்கு எவ்வளவு கர்வம்டி மான்சி, உன் அழகைப் பார்த்து அவனவன் ஜொள்ளான ஜொள்ளு ஊத்துறான், இவன் என்னடான்னா அசால்ட்டா நடுரோட்டுல விட்டுப்போய்ட்டான், எனக்கு அப்பயிருந்துதான் அவனை சுத்தமா புடிக்கலை, கடைசில அவனே உனக்கு மாப்பிள்ளையாயிட்டான் நான் அப்பவே சொன்னேன் ஏதாவது பிளான் பண்ணி அவனை விரட்டுன்னு,, நீதான் எங்கப்பா, எங்கம்மா, எங்க அத்தைன்னு ஏதேதோ சொல்லி மழுப்பிட்ட ” என்று சரண்யா மான்சியின் மீதே குற்றம் சுமத்த..

அவளை தனது அவசரகுரலால் தடுத்த மான்சி “ ஏய் எனக்கு இவனைத்தான் பிடிக்காது, எங்க அத்தையை ரொம்ப பிடிக்கும், அதனாலதான் இவனை அப்பவே விரட்டலை, அத்தோட அவனே ஏதாவது ஒரு விஷயத்துல மாட்டுவான்னு வெயிட் பண்ணேன், அப்படி எதுவும் நடக்கலை, கடைசில் என் வாழ்க்கைக்குள்ளயே நுழைஞ்சுட்டான், இப்போ இந்தமாதிரி எல்லாம் பண்ணவேண்டியதா போச்சு” என்று மான்சி சலித்துக்கொண்டாள் 

“ சரி எல்லாம் நல்லபடியா முடிஞ்சுதா? அது போதும்,, இன்னிக்கு ஈவினிங் எங்க எல்லாருக்கும் ட்ரீட் குடுக்கனும், அதுவும் எனக்கு ஸ்பெஷல் ட்ரீட் வேனும், ஏன்னா உனக்கு கல்யாணம் ஆன மறுநாளில் இருந்தே நான்தான் இதுக்கெல்லாம் ஏற்பாடு பண்ணேன், சரியா?” என்று சரண்யா சொல்ல

“ ம் சரி சரண், நான் இன்னிக்கு காலேஜ் வரலை, ஈவினிங் வந்து வாக்கர்ஸ் பார்க் கிட்ட வெயிட் பண்றேன், நீ எல்லா ப்ரண்ட்ஸ்க்கும் சொல்லி கூட்டிட்டு வந்துடு” என்று கூறிவிட்டு இணைப்பை துண்டித்து படுக்கையில் விழுந்தாள்

தலையணையில் முகத்தை புதைத்துக்கொண்டு அமைதியாக கவிழ்ந்து கிடந்தாள் மான்சி, ஆனால் அவள் மனம் அமைதியாக இல்லை, நேற்று சத்யன் இவளை நேருக்குநேர் பார்த்துக் கேட்ட கேள்விகள் எல்லாம் மனதில் படமாக ஓடியது, எவ்வளவு திமிர் அவனுக்கு குடிச்சிட்டு வந்ததுக்கு மன்னிப்பு கூட கேட்காம, என்னையவே கேவலப்படுத்தி பேசிட்டானே, என்று குமுறிய மனதை அடக்கமுடியாமல் படுக்கையில் புரண்டு மல்லாந்து படுத்தாள்,

முதல் நாள் இரவு நடந்தது நினைவுக்கு வந்தது, மழையில் நனைந்தபடி வந்தவன், என்கிட்ட பர்மிஷன் கேட்டுட்டுத் தானே ரூமுக்குள்ள படுக்கனும், அதவிட்டுட்டு என்னமோ ரொம்ப நல்லவன் மாதிரி கேஷுவலா பாயைப் போட்டு படுக்குறானே, அதான் நைட்டு முழுக்க குளிரில் நடுங்க விட்டேன், என்னைய ரொம்ப லேசா நெனைச்சிட்டான் போலருக்கு, ஆனால் அந்த குளிரில் சத்யன் எப்படி தூங்குவான் என்று அன்று இரவு வெகுநேரம் விழித்திருந்தது இப்போது நினைவில் வர, அதை கஷ்டப்பட்டு ஒதுக்கினாள், அவனுக்கு சரியான பனிஷ்மெண்ட் தான் அது என்று தனக்குத்தானே தோள்தட்டிக் கொண்டாள்,

ஆனா அவன் முன்னாடி நான் நிர்வாணமா வந்தாகூட என்னை திரும்பி பார்க்கமாட்டேன்னு சொல்றானே, நான் என்ன அவ்வளவு கேவலமாவா இருக்கேன்? நான் ஒருமுறை திரும்பி பார்த்து சிரிக்கமாட்டேனான்னு என் காலேஜ்ல எவ்வளவு பசங்க ஏங்கி இருக்காங்க, இவன் என்னடான்னா என் நிர்வாணம் கூட அவனை அசைக்காதுன்னு சவால் விடுறானே?, இவன் என்ன ரிஷியா?, மான்சிக்கு இதை நினைக்கும்போதே உடம்பெல்லாம் பற்றி எரிவது போல் இருந்தது, நான் அவ்வளவு அசிங்கமாவா இருக்கேன் என்று இரவெல்லாம் கேட்ட கேள்வியை இப்போதும் தன்னையே கேட்டுக்கொண்டாள்

ஏதோ நினைத்துக்கொண்டு கட்டிலில் இருந்து வேகமாக தாவி எழுந்து டிரசிங் டேபிள் கண்ணாடி முன்பு நின்று தனது உடலை வளைத்து நெளித்து நின்று பார்த்தாள், ‘நல்லா தானே இருக்கேன்?, அப்புறமா ஏன் அப்படி சொன்னான்? உண்மையாவே அவன் கண்ணுக்கு நான் அழகா தெரியலையா? ச்சே அவன்தான் பொறுக்கின்னு அவன் வாயாலேயே ஒத்துக்கிட்டானே? அப்புறம் என்னோட அழகு அவன் கண்ணுக்கு எப்படி தெரியும்? இவ்வளவு பொறுக்கியா இருந்தவன் எப்படி இந்த ரூம்ல என் முகத்தை கூட பார்க்காம இருந்தான்?

' வெட்கமில்லாம என்கிட்டயே சொல்றானே? நான் பொண்ணுங்க சுகத்தை அறியாதவன் இல்லைன்னு,, ராஸ்கல் அப்படியே அவன் கன்னத்துல அறையாம விட்டேனே அதுதான் தப்பு ,, பொறுக்கி ராஸ்கல் என்னை பார்க்க பிடிக்கலைன்னு சொன்ன முதல் ஆள் இவன்தான்,, சத்யனின் நினைப்பிலேயே மான்சியின் கண்கள் சிவந்தது 

 நாமதான் ரொம்ப அழகுன்னு கர்வம் அவனுக்கு, உயரமா அழகா இருந்தா மட்டும் போதுமா? கொஞ்சம் கூட அறிவே இல்லாதவன், என்று மான்சி குமுறும் போதே ரங்கேஷின் நோஞ்சான் உடம்புக்கும் சத்யனின் கம்பீரத்திற்கும் ஒப்பிட்டுப்பார்த்தது அவள் மனது, ச்சே இவனப் போய் அப்பா ஏன் செலக்ட் பண்ணாரு?, முதல் மாப்பிள்ளையை விட நாமதான் கம்பீரமா இருக்கோம்னு திமிர், அதனால்தான் என்னையே புடிக்கலைன்னு முதல்நாள் நைட்டே நாயோட ஒப்பிட்டு பேசி என்னை அவமானப்படுத்தினான்,,

நானா இவன் கால்ல விழுவேன்னு எதிர்பார்த்தான் போல,, ஆனா நான் யாரு? மான்சி, இவனோட திமிர், கர்வம், அலட்சியம், கோபம், எல்லாம் என்கிட்ட செல்லாது, அதான் ஓரேடியா எல்லாத்தையும் முடிச்சுக்கிட்டேன், இப்போ எல்லாம் போச்சேன்னு அழுதுகிட்டே போவான், என்று அவள் மனம் கொக்கரிக்கும் போதே... நீயும் தேவையில்லை உன் பணமும் தேவையில்லை என்று சொல்லாமல் சொல்லிவிட்டு, ஒரு நிமிர்வுடன் கையெழுத்தைப் போட்டுவிட்டு தனது உடைமைகளோடு கம்பீரமாக வெளியேறிய சத்யன் அவள் கண்முன் வந்தான், ச்சே என்று தலையை உதறினாள்

வேகமாக போய் அவன் துணிகள் வைத்திருந்த கபோர்டை திறந்து பார்த்தாள், திருமணத்திற்கென சாந்தா வாங்கிக்கொடுத்த உடைகளும், சத்யன் தாலி கட்டியதும் சாந்தா வற்புறுத்தி கொடுத்து மான்சி அவன் கையில் அணிவித்த மோதிரமும் இருந்தது, மான்சி அந்த மோதிரத்தை எடுத்துப்பார்த்தாள், முட்டை வடிவில் இருந்த மோதிரத்தின் நடுவே இதயம் செதுக்கப்பட்டு அதில் பொடிப்பொடியாக சிவப்பு நிற கற்கள் பதிக்கப்பட்டு மிக நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டிருந்தது

சிறிதுநேரம் அந்த மோதிரத்தையே பார்த்தவள், இதை எப்போ கழட்டி வச்சிருப்பான்? கல்யாணம் ஆனா மறாவது நாளேவா? அல்லது இன்னிக்கு காலையில கிளம்பும்போதா? பெரிய இவரு மாதிரி மோதிரத்தை வச்சுட்டு போய்டான், போயேன்டா நான் உனக்கு போட்ட மோதிரம் என்கிட்டயே வந்துருச்சு, என்று எண்ணியபடி அந்த மோதிரத்தை தனது விரலில் மாட்டினாள் எந்த விரலுக்கும் சரியில்லாமல் லூசாக இருந்தது, பின்ன அவன் விரல் எருமை மாடு மாதிரி இருக்குமே அவன் மோதிரம் எனக்கெப்படி சரியாயிருக்கும் என்று நினைக்கும்போதே அந்த மோதிரம் ரங்கேஷ்க்காக செய்தது என்று ஞாபகம் வர, ‘அந்த நோஞ்சான் பயலுக்கும் இது லொட லொடன்னு தான் இருந்திருக்கும்’ என்று நினைத்து புன்னகையில் அவள் இதழ்கள் விரிந்தது

கட்டிலில் போய் அமர்ந்து இன்டர்காமில் மஞ்சுவை அழைத்தாள், அடுத்த சில நிமிடங்களில் மஞ்சு அவளெதிரில் நிற்க்க, “ கீழே நூல் ஏதாவதுஇருந்தா எடுத்துட்டு வா மஞ்சு” என்றாள்

மஞ்சு போய் சில விநாடிகளில் நூலுடன் வந்தாள், மான்சி வாங்கிக்கொண்டு “ சரி நீ போ” என்றாள்

நூலை மோதிரத்தில் சுற்றினாள், எவ்வளவு நூல் சுற்றியும் மோதிரம் அவளின் வெண்டைபிஞ்சு விரலுக்கு லூசாகவே இருந்தது, ச்சே என்று என்ன இது? என்று எரிச்சலுடன் கட்டிலில் கவிழ்ந்து விழுந்தாள்,

அவளுக்கென்று அவ்வளவு நகைகளும் மோதிரங்களும் இருக்கும் போது, இந்த மோதிரத்தை மட்டும் போட்டே ஆகவேண்டும் என்று ஏன் நினைக்கிறோம் என்று அவளுக்குப் புரியவே இல்லை, அவள் நினைப்பில் இருந்தது அவன் அலட்சியமாக கழட்டி எறிந்ததால் அந்த மோதிரம் தன்னிடம் முக்கியத்துவம் பெற்றுவிட்டதாக எண்ணினாள் 



சட்டென்று ஒரு யோசனை தோன்ற, எழுந்து அமர்ந்து தன் கழுத்தில் இருந்த மெல்லிய செயினை வெளியே எடுத்தாள், அதன் கொக்கியை கழட்டி அதில் அந்த மோதிரத்தில் நூலை பிரித்துவிட்டு செயினில் கோர்த்து மறுபடியும் கழுத்தில் மாட்டிக்கொண்டாள், ஸ் யப்பா என்று மோதிரம் பிரச்சனைக்கு தீர்வு கண்ட நிம்மதியுடன் குனிந்து செயினை பார்த்தாள், அப்போதுதான் அந்த செயினோடு வெளியே வந்து கிடந்த தாலிச்செயின் கண்ணில் பட்டது, தாலியை கையில் எடுத்து அதையே பார்த்தாள்,

‘ அவனுக்கும் எனக்கும் தான் எல்லாம் முடிஞ்சு போச்சே, இப்போ இதை என்னப் பண்றது? கழட்டி வைக்கனுமா? என்று நினைத்தவள், அடிவயிற்றில் சில்லென்று ஏதோவொன்று உருவாகி ரத்தத்தில் கலக்க, குப்பென்று அவள் உடல் சிலிர்க்க தாலியை உள்ளங்கையில் வைத்து அழுத்திப் பற்றிக்கொண்டு கட்டிலில் கவிழ்ந்து படுத்துக்கொண்டாள்

அந்த தாலியில் இருந்த அம்மையப்பனின் உருவம் அவளது உள்ளங்கையில் பதியும் அளவிற்கு இறுக்கமாய்ப் பற்றியிருந்தாள், ஏன் இதைபோய் கழட்டனும் அது உள்ளதானே இருக்கப் போகுது’ என்று அப்படியே கண்ணை மூடியவள் தூங்கிப் போனாள்

இப்பவும் அது தீராத பந்தம் என்று அவளின் பகைகொண்ட மனதுக்கு புரியவில்லை, அவளைப் பொருத்தவரையில் சத்யன் அவளை ஒவ்வொருமுறையும் செய்த அலட்சியமும் பேசிய பேச்சும் மட்டுமே எல்லாவற்றுக்கும் காரணம் என்று நினைத்தாள், ஆனால் இருவரின் விரோதத்திற்கும் பின்னனி என்ன என்று இருவரும் ஒரு நிமிடம் யோசித்திருந்தாலும் பிரச்சனைக்கு தீர்வு கண்டிருக்கலாம்,

இவ்வளவு நேரம் அவளது சிந்தனையில் ஓடிய சம்பவங்களை சற்றேனும் சீர்தூக்கிப் பார்த்திருந்தாள் கூட தனக்கு இப்போது என்ன தேவையென்று புரிந்திருக்கும், இது திருமண பந்தத்தால் ஏற்பட்ட உரிமையா? அல்லது அவன் தனக்கே தனக்கு மட்டும் என்ற பொறாமையா? என்று மான்சிக்கு இப்போது கூட புரியாதது அவளின் துரதிர்ஷ்டம்தான் , அவளுக்கு அவளே போட்டுக்கொண்ட மாயவேலி இப்போது அவளையே சிறைவைத்து விட்டது என்று இன்னமும் புரியாமல், சத்யனை நிரந்தரமாக அனுப்பிவிட்ட நிம்மதியில் உறங்கினாள்

நன்றாக உறங்கியவளை மாலை ஐந்து மணிவாக்கில் மஞ்சுதான் வந்துதான் எழுப்பினாள், எழுந்திருக்கும் போதே பசி வயிற்றைக் கிள்ள, “ ஏன்டி மஞ்சு மதிய சாப்பாட்டுக்கு கூட எழுப்பலை, பசி உயிர் போகுது” என்று கூறியபடி கட்டிலில் இருந்து இறங்கினாள்

“ இல்ல சின்னம்மா, மதியம் சாப்பாடே செய்யலை, அம்மா அவங்க ரூம்ல அழுதுகிட்டே இருந்தாங்க, சமையல்காரம்மா போய் என்ன சாப்பாடு செய்யனும்னு கேட்டப்ப, எதுவுமே செய்யவேண்டாம்னு சொல்லிட்டாங்க, அய்யாவும் ரூம்ல இருந்து வெளியவே வரலை, நாங்கல்லாம் கூட சாப்பிடவே இல்லை, அய்யாவுக்கு மட்டும் ஜுஸ் கலந்து குடுக்கச்சொல்லி அம்மா சொன்னாங்க, இப்பத்தான் எடுத்துட்டுப் போய் குடுத்தேன், அய்யா குடிச்சுட்டாரு, ஆனா அம்மா குடிக்கலை, உங்களுக்கு ஜுஸ் வேனுமா? காபி வேனுமா?” என்று வீட்டு நிலவரத்தை மஞ்சு விளக்கமாக சொல்ல,

பதறிப்போன மான்சி “ ஏய் ரெண்டுபேரும் காலையிலேர்ந்தே சாப்பிடலையா?” என்று கேட்டுக்கொண்டே அறையைவிட்டு வெளியே வந்த கீழே ஓடினாள், காலையில் சத்யன் போனபிறகு மான்சி மட்டும் சாப்பிட்டு விட்டாள், அதை இப்போது நினைக்கும் போது காலையில் தின்றது நஞ்சாய் கசந்தது


வேகமாக கட்டிலை நெருங்கிய மான்சி சாந்தாவின் மறுபக்கத்தில் அமர்ந்து “ அம்மா காலையிலேர்ந்து சாப்பிடலையா? இப்போ என்ன நடந்துச்சுன்னு நீ இப்படி இருக்க? உன்னால அப்பாவும் சாப்பிடாம இருக்காரு, எழுந்து வாம்மா சாப்பிடலாம்” என்று மான்சி அழைக்க...

தன் தோளில் இருந்த மான்சியின் கையை தட்டிவிட்ட சாந்தா “ சாப்பாடும் வேனாம் ஒரு எளவும் வேனாம், போய் நீயே போய் கொட்டிக்க, நீ வாங்கி வச்சிருந்தயே அந்த விஷம் அதை எடுத்துட்டு வந்து என் வாயில ஊத்து, உன் கையாலேயே செத்து தொலைக்கிறேன், இப்படியொரு பொண்ணைப் பெத்ததுக்கு நான் மொதல்ல செத்து ஒழியுறேன்” என்ற சாந்தாவின் வார்த்தைகளில் கனல் வீசியது

மான்சி திகைப்புடன் கட்டிலில் இருந்து எழுந்துவிட்டாள்,, இதுநாள்வரை சாந்தா இதுபோன்று மான்சியிடம் பேசியதேயில்லை, மான்சிக்கு கண்ணீர் முட்டிக்கொண்டு வந்தது., “ என்னம்மா இப்படில்லாம் பேசுற, நான் அப்படியென்ன தப்பு பண்ணேன், அவனை எனக்கு சுத்தமா புடிக்கலையேம்மா” என்று கூறிவிட்டு மான்சி ஓவென்று அழ,,

இதுவரை மகள் அழுது பார்க்காத அமுதனுக்கும் சாந்தாவுக்கும் தொண்டையை அடைத்தது, மகளின் கண்ணீர் அவர்களை உருக்கியது, சாந்தாதான் முதலில் எழுந்து வந்து மகளை அணைத்துக்கொண்டாள், அவளுக்கும் கண்ணீர் வர இருவரும் கட்டிக்கொண்டு கண்ணீர் விட்டனர், தனது கண்ணீரை மறைக்க ஆராவமுதன் தலையை கவிழ்ந்து கொண்டார்

ஆனால் மான்சி இவ்வளவு அழுதது பெற்றவர்கள் சாப்பிடவில்லையே என்ற வருத்தம் மட்டும்தான் காரணமா? என்று அவளுக்கே புரியவில்லை, ஆனால் தனக்கு பிடித்த பொருளை ஒழித்துவிட்டு காணாமல் அழும் குழந்தையை போல் வெகுநேரம் வரை அவளது கண்ணீர் நிற்கவில்லை, பெற்றவர்களை சமாதானம் செய்ய அவள் வந்து, இப்போது அவர்கள் இருவரும் மான்சியை சமாதானம் செய்து சாப்பிட அழைத்துச்செல்லும் படி ஆனது

மூவரும் டேபிளில் வந்து அமர்ந்ததும் இருந்த உணவை அவசரமாக எடுத்துவந்து பரிமாறினார்கள் வேலைக்காரர்கள்,

சாப்பிடும்போது மான்சியின் மொபைல் ஒலிக்க எடுத்துப் பார்த்தாள், சரண்யா தான் போன் செய்திருந்தாள், ஏனோ மான்சிக்கு திடீரென்று எரிச்சலாக வர செல்லை ஆன்செய்து காதில் வைத்து “ என்ன சரண்யா?” என்றாள்

“ என்னவா? அடியேய் மான்சி உனக்காக நாங்க வெயிட் பண்ணிக்கிட்டு இருக்கோம் நீ இன்னும் வரலையா?” என்று சரண்யா கோபமாக கேட்க
அவர்கள் எதற்காக காத்திருக்கிறார்கள் என்று புரிய மான்சிக்கு எரிச்சல் மேலும் அதிகமானது, அவர்களை காத்திருக்க சொன்னது தான்தான் என்று எண்ணியதும் எரிச்சல் ஆத்திரமாக மாறியது “ சரண்யா எனக்கு பயங்கர தலைவலி, என்னால எங்கயும் வரமுடியாது, எனக்காக யாரும் வெயிட் பண்ணாம வீட்டுக்குப் போய் சேருங்க” என்று படபடவென பொரிந்துவிட்டு போனை கட் செய்தவள், ‘வந்துட்டாளுக ஓசில கொட்டிகிறதுக்கு’ என்று வெளியே கேட்காமல் முனங்கியவாறு’அத்தோடு விடாமல் சுவிட்ச் ஆப் செய்து வைத்தாள்

மூவரும் இருந்ததை பகிர்ந்து சாப்பிட்டுவிட்டு வந்து ஹாலில் அமர்ந்ததும், மான்சி அம்மாவின் மடியில் தலைசாய்த்து, அப்பாவின் மடியில் கால்களை நீட்டிக்கொண்டு சோபாவில் படுத்துக்கொண்டாள்

சாந்தா மகளின் தலையை வருடிவிட, ஆராவமுதன் மான்சியின் கால் விரல்களை இதமாக நீவினார், மூவருமே எதுவும் பேசிக்கொள்ளவில்லை, ஏதாவது பேசினால் இப்போதைய சூழ்நிலை மாறிவிடுமோ என்று பயந்தது போல் அப்படியே இருந்தனர்

மான்சியின் அன்றைய கதறலுக்கு பிறகு சாந்தா, ஆராவமுதன் இருவரும் அவளிடம் எதுவும் கேட்பதில்லை, மான்சியும் அமைதியாக கல்லூரிக்கு போவதும், வீட்டுக்கு வந்தால் சலுகையாக அப்பா அம்மா மடியில் தலைசாய்த்து கொள்வதுமாக துள்ளல் எல்லாம் அடங்கி முதல்நாள் மலர்ந்து இன்றைய காற்றில் உதிர்ந்த மலர்போல் இருந்தாள்

கல்லூரியில் முக்கியமாக சரண்யாவை சுத்தமாக ஒதுக்கினாள், அவளை பார்க்கும்போதெல்லாம் ஆத்திரமாய் வந்தது, ஏன் என்று யோசித்துப் பார்த்து அதற்காக மான்சி தனக்கு கூறிக்கொண்ட காரணம் ‘ சரண்யாவலதான் எல்லாமே சீக்கிரம் முடிஞ்சு போச்சு, அதனால்தான் அம்மா அப்பா ரொம்ப வேதனைப்படுறாங்க, இல்லேன்னா இன்னும் கொஞ்சநாள் கழிச்சு நானே எல்லாத்தையும் சமாளிச்சிருப்பேன்’ என்று தனது நடவடிக்கைகளுக்கு பொய் வேஷமிட்டாள் மான்சி

மாமியார் வீட்டிலிருந்த படியே ஆஸ்ட்ரேலியாவுக்கு கிளம்பிய பாலாவும் அவன் மனைவியும், போய் கிட்டத்தட்ட இரண்டு மாதம் கழித்து மான்சிக்கு போன் செய்து “ சத்யன் கிட்ட டைவர்ஸ் பேப்பர்ஸ்ல சைன் வாங்கிட்டு விரட்டிட்டயாமே, மான்சி இப்பத்தான் நீ நல்ல முடிவு எடுத்திருக்க” என்று இருவரும் மாற்றி மாற்றி அதையே கூறியதும், ஓவென்று அலற துடித்த மனதை கட்டுப்படுத்திக் கொண்டு “ம்ம்” என்று மட்டும் சொல்லிவிட்டு போனை வைத்துவிட்டாள்

சத்யன் அங்கிருந்து சென்ற ஒரு வாரம் கழித்து மான்சி தனது அறையில் அமர்ந்து கல்லூரியில் அன்று நடந்தவைகளை ஒரு நோட்டில் குறிப்பெடுத்துக்கொண்டிருந்தபோது அவளுக்கு காபி எடுத்து வந்த மஞ்சு, காபியை மான்சியிடம் கொடுத்துவிட்டு, சத்யனின் படுக்கை இருந்த கப்போர்டை திறந்து சத்யன் உபயோகித்த பாய் தலையணை பெட்சீட் எல்லாவற்றையும் சுருட்டி எடுத்துக்கொண்டு அறை கதவை நெருங்க...

நிதானமாக காபியை குடித்தபடி படிப்பில் கவனமாக இருந்த மான்சி மஞ்சுவின் நடவடிக்கைகளை கவனித்துவிட்டு பதட்டத்துடன் “ ஏய் ஏய் மஞ்சு, அதையெல்லாம் ஏன் எடுத்துட்டு போற?” என்று கேட்க..

அவள் அதட்டலில் திரும்ப வந்த மஞ்சு “ அம்மாதான் எடுத்துட்டு வரச்சொன்னாங்க? ” என்றாள்

“ அதெல்லாம் வேனாம் அதை எடுத்த இடத்துலயே வச்சிட்டு போ, இங்கேயே இருக்கட்டும் ” என்றாள் மான்சி, தன் வார்ததையின் அர்த்தம் ஓரளவுக்கு புரிந்ததாலோ என்னவோ தலையை குனிந்தபடியே இதை சொன்னாள் மான்சி
மஞ்சு மான்சியை குழப்பமாக பார்த்தபடியே எடுத்தவைகளை அதே இடத்தில் வைத்துவிட்டு கீழே போய்விட்டாள்,

மான்சி எழுந்துபோய் சத்யன் உபயோகித்த தலையணையை வருடினாள், அவன் உபயோகித்த பெட்சீட்டை எடுத்துவந்து தனது கட்டிலில் போட்டுவிட்டு அதன்மீது முகத்தை வைத்துக்கொண்டு படுத்தாள், சத்யனின் வியர்வை கலந்த ஆண்மை வாசனை அவள் மூக்கில் ஏறி நெஞ்சை நிறைத்தது

மான்சிக்கு ஏனோ அழுகை வரும்போல் இருந்தது, உதட்டை கடித்து அடக்கியபடி “ நெசமாவே என்னைய உனக்கு பிடிக்கவே இல்லையாடா? நீ பார்த்த பொண்ணுங்க மாதிரி நான் இல்லையாடா? நான் நல்லாத்தானே இருக்கேன்? ஒருநாள் கூட என் முகத்தை நிமிர்ந்து பார்க்கலையே? ஏன்டா எதுனால என்னைய அவ்வளவு அலட்சியமா நடத்தின? நான் உனக்கு எப்பவுமே வேனாமா? என்று அந்த போர்வையுடன் பேசி, எவ்வளவு கட்டுப்படுத்தியும் முடியாமல் இறுதியாக அழுகை வெடித்தது

ஆனால் சிறிதுநேரத்தில் அழுகையை அடக்கிக்கொண்டு நிமிர்ந்துஎழுந்தவள் ‘ தன்னை அசிங்கமாக பேசி அவமானப்படுத்திவிட்டு போனவனுக்காக அழுவது தன்னுடைய தன்மானத்துக்கே கேவலம் என்று எண்ணி வீம்பாக எழுந்தாள்
இது நடந்து சிலநாட்கள் கழித்து மான்சி தனது அறையில் குளித்துவிட்டு வந்து டிரஸிங்டேபிள் முன்னால் அமர்ந்து கல்லூரிக்கு கிளம்ப தலையை வாறிக்கொண்டு இருந்தவள், மஞ்சு தனக்கு பின்னால் நிற்பதை கண்ணாடியில் கவனித்து, திரும்பாமல் கண்ணாடியைப் பார்த்து “ என்ன மஞ்சு?” என்று கேட்டாள்

“ உங்க துணியெல்லாம் அயர்ன் பண்ணி கொண்டு வந்தேன் சின்னம்மா” என்றாள்

“ சரி வச்சுட்டு போ” என்றாள் மான்சி

“ இல்லம்மா உங்ககிட்ட ஒரு விஷயம் சொல்லனும்” என்று மஞ்சு தயங்கி நிற்க
கண்ணாடியில் பார்க்காமல் திரும்பி மஞ்சுவின் முகத்தை பார்த்த மான்சி “ என்ன விஷயம் மஞ்சு?” என்று கேட்டாள்

“ அதும்மா நம்ம வீட்டுல இருந்தாரே சத்யா சார், அவரு இப்போ சொந்தமா மளிகைக்கடை வச்சு நல்லா ஏவாரம் பாத்து நிறைய சம்பாதிக்கிறாராம், வீட்டையே இடிச்சிட்டு கடையை பெரிசா கட்டி ஏவாரம் பார்க்குறாராம், அம்மா, அய்யாகிட்ட பேசும்போது கேட்டான்மா, அதான் உங்ககிட்ட சொன்னேன்” என்று மஞ்சு நீட்டி முழக்கி சொல்ல

தனது முகத்தில் தெரியும் உணர்ச்சியை மஞ்சு பார்க்காதவாறு பக்கவாட்டில் திரும்பிக்கொண்டு “ இதையெல்லாம் ஏன் என்கிட்ட வந்து சொல்ற, உன் வேலையை பாரு போ போ” என்று கோபமாக அதட்டினாள் மான்சி

மஞ்சு சங்கடத்துடன் வெளியே போக கதவை நெருங்கும் போது “ ஏய் மஞ்சு இங்கே வா?” என்று மான்சி அழைத்தாள்

“ என்னம்மா” என்று அழைத்தபடி வந்தாள் மஞ்சு

“ நேத்து சாப்பிடும்போது இந்த க்ளிப் நல்லாருக்குன்னு சொன்னியே,, இந்தா இதை நீயே வச்சுக்க” என்று டேபிளில் இருந்த விலையுயர்ந்த தலை க்ளிப் ஒன்றை எடுத்து மஞ்சுவிடம் கொடுத்தாள் மான்சி

கண்கள் வியப்பில் பளபளக்க “ அக்கா எனக்கா இது?” என்றாள் மஞ்சு

“ ம்ம் உனக்குத்தான் வாங்கிக்க ” என்று மான்சி சொன்னதும் முகம் முழுவதும் புன்னகையோடு வாங்கிக்கொண்டாள் மஞ்சு

அதன்பிறகு கல்லூரியில் நடக்கும் தேர்வுக்காக படிக்கவே மான்சிக்கு நேரம் சரியாக இருந்தது, அவ்வப்போது மஞ்சுவின் மூலமாக அவள் காதில் விழுந்த சத்யனைப் பற்றிய விஷயங்கள் அவள் முகத்தில் ரகசியப் புன்னகையை மலரச்செய்தது

ஏதோ தோன்ற ஒருநாள் இரவு சத்யனின் பாயையும் தலையணையையும் பால்கனியில் போட்டு சத்யனின் பெட்சீட்டை போர்த்திக்கொண்டு படுத்துப் பார்த்தாள், எலும்பை ஊடுருவும் குளிரில் பழக்கமற்ற படுக்கையில் இரவுமுழுவதும் தூக்கமே வரவில்லை, ச்சே இங்க எப்படித்தான் தூங்கினானோ?’ என்று முதன்முறையாக சத்யன் மீது பரிதாபம் வந்தது

‘ இவனை நானா இங்கயே படுக்கச் சொன்னேன், மான்சி நானும் உள்ளவே படுத்துக்கிறேன்னு வாயைத்திறந்து சொல்லிட்டு வந்து படுக்க வேண்டியதுதானே?’ என்று வீம்பு பேசியது மனது, ஆனாலும் அங்கிருந்து எழாமல் சத்யனின் போர்வையை தனது உடலில் படரவிட்டு அவன் வாசனையை நுகர்ந்தபடி படுத்திருந்தாள்

இப்போது மான்சி தன் மனதை ஓரளவு கண்டுகொண்டாள் தான், ஆனால் சத்யன் கூறிய ஒவ்வொரு வார்த்தையும் அவள் கண்டுகொண்ட விஷயத்தை ஏற்கவிடாமல் தடுத்தது, எனது நிர்வாணம் கூட பாதிக்காதுன்னு சொன்னவனை,, ஒரு வேசியின் அளவுக்கு கூட நான் அவனை கவரவில்லைன்னு சொன்னவனை,, நான் இனிமேல் என் வாழ்நாளில் சந்திக்கவே மாட்டேன், என்று பிடிவாதமாக முரண்டுபிடித்தாள்

ஆனால் அவளின் புதிதாக நேசம் கொண்ட மனது, இவளின் வாதத்திற்கு செவிமடுக்காமல் சத்யன் மீதான தனது நேசத்தை உயர்த்திக்கொண்டே போனது,
அந்த நேசத்தை நேசிக்கும் மனசுக்கும், அந்த நேசத்தை வெறுக்கும் புத்திக்கும் பெரும் போராட்டமே நடந்தது, சத்யனை மான்சி நடத்தியவிதத்தை இடித்துரைத்தது அவள் மனம்,, அவனது அலட்சியத்துக்கு பதிலடிதான் தனது நடத்தை என்றது புத்தி, இரண்டும் நடத்திய போராட்டத்தில் மான்சிதான் பெரிதும் துவண்டு போனாள்,

முன்பெல்லாம் இரண்டு இட்லியை சாப்பிட அவள் எடுத்துக்கொண்ட நேரம் இரண்டு மடங்கானது ,, பலநாட்கள் ஒன்றுக்கொன்று சம்மந்தமில்லாமல் உடையணிந்து மஞ்சுவின் எச்சரிக்கைக்குப் பிறகு மறுபடியும் மாற்றிக்கொண்டாள், தோட்டத்தில் அமர்ந்து மணிக்கணக்கில் வெட்டவெளியில் பார்வையை நிலைக்கவிட்டாள், எழுதிய தேர்வில் சொற்பமான மார்க்கில் தேறிவிட்டு தோழிகள் முன்பு சங்கடமாக நெளிந்தாள், அவளின் நடவடிக்கை அவளுக்கே வித்தியாசமாக இருந்தது

அடிக்கடி கண்ணாடி முன்பு நின்று தன்னைத்தானே சுற்றிக்கொண்டாள், இரவில் போய் குளிரக்குளிர குளித்துவிட்டு ஏஸியை உச்சத்தில் வைத்துக்கொண்டு சத்யனின் போர்வையால் நன்றாக மூடிக்கொண்டு உறங்காமல் விடியவிடிய விழித்திருந்தாள்

இதுவரை சத்யனுக்கும் இவளுக்கும் இல்லாத ஒற்றுமைகளை தேடித்தேடி கண்டுபிடித்து தனக்குள் பூரித்துக்கொண்டாள்

எங்கோ மூலையில் கிடந்த திருமண ஆல்பத்தை எடுத்து சத்யனின் கம்பீர உருவத்தை பார்த்து பார்த்து ரசித்தாள்,, சில படங்களில் சத்யனின் முகம் உர்ரென்று இருக்க ‘ போடா உம்னா மூஞ்சி, என்று போட்டோவில் அவன் கன்னத்தில் வலிக்காமல் அடித்தாள்

இவற்றுக்கெல்லாம் அர்த்தம் என்ன என்று ஏதுமறியா தோட்டத்து பூக்களிடம் கேள்விகேட்டாள் 

தன்னை அவமானப்படுத்திய சத்யன் மீது எப்படி காதல் வரும்? என்று தன்னைத்தானே கேள்வி கேட்டுக்கொண்டாள்

மூன்றுமாதமாக ஒரே அறைக்குள் வாழ்ந்தபோது வராத காதல், அவனை பிரிந்த இந்த ஒருமாதத்தில் எப்படி வந்தது?

அவன் பணத்தையும் தன்னையும் துச்சமாக மதித்துவிட்டு போனதால்தான் இந்த காதல் வந்ததா?

என்னுடைய அலட்சியத்தையும் ஒதுக்கத்தையும் தாங்கிக்கொண்டு, என்னைத் தொடாமல் ஒதுங்கி வாழ்ந்தானே அந்த நல்லகுணம் என்னை ஈர்த்துவிட்டதா?

அல்லது சரண்யா சொன்னது போல் இப்படியெல்லாம் அவன் நடந்துகொண்டதால் அவன்மீது பரிதாபம் வந்து அது காதலாய் மாறிவிட்டதோ?

இப்படி மான்சியின் மனதில் ஏகப்பட்ட கேள்விகள் இடியாப்பச்சிக்கலாய் பின்னிக்கொண்டு அவளை வதைக்க, அந்த நேரத்தில் அவள் அண்ணி அட்சயாவிடமிருந்து மான்சிக்கு போன் வந்தது

“ எப்படியிருக்க மான்சி,, என்றவள் அதற்கான பதிலை மான்சி சொல்லும் முன் தனது பேச்சை அவளே தொடர்ந்தாள் “ மான்சி என்னோட பெரியம்மா பையன் விஸ்வநாதனை உனக்கு தெரியுமே, அவன் இன்னும் மூனு நாள்ல யூஎஸ்ல இருந்து இந்தியா வர்றான், அவனுக்கு உன் போட்டோவை மெயில் பண்ணி உன்னைப்பத்தி எல்லா விஷயத்தையும் சொல்லிருக்காரு உன் அண்ணன், விஸ்வா இப்போ இந்தியா வந்ததும் நேரா நம்ம வீட்டுக்குத்தான் வர்றான், அவனைத்தான் உனக்கு மேரேஜ் பண்ணலாம்னு நெனைச்சிருக்கோம், மாமாகிட்ட நேத்தே பேசிட்டேன், பையன் வரட்டும், மான்சிக்கு பிடிச்சிருந்தா மேற்கொண்டு பேசலாம்னு சொன்னாரு, விஸ்வா வந்ததும் ரெண்டு பேரும் நல்லா பேசிப் பழகிப்பாருங்க பிடிச்சிருந்தா முடிக்கலாம்” என்ற அட்சயா மான்சியிடம் பதிலேதும் இல்லை என்றதும் “ என்ன மான்சி கேட்கிறியா?” என்றாள்

“ ம்ம்” என்று மட்டும் மான்சி கூற

“ விஸ்வா ரொம்ப நல்லவன் மான்சி, உனக்கு எல்லாவிதத்திலும் பொருத்தமானவன், எனக்கும் உன் அண்ணனுக்கும் அவனை ரொம்ப பிடிச்சிருக்கு, மதுரைக்கு வந்ததும் நிறைய இடங்கள் பார்க்கனும்னு சொன்னான், எல்லா இடங்களுக்கும் கூட்டிட்டுப் போ, நல்லா மனசுவிட்டு பேசுங்க, பேசி ஒரு முடிவு பண்ணுங்க, என்ன மான்சி சொல்ற? உனக்கு ஓகே தான? ” என்று அட்சயா கேட்க

சற்றுநேரம் பெரிய பெரிய மூச்சுக்களாக விட்டு கொந்தளித்த மனதை அடக்கிய மான்சி, அட்சயாவிடம் மறுத்து சொல்ல வாயெடுத்தபோது சட்டென்று மூளைக்குள் மின்னலடிக்க “ ம்ம் சரி அண்ணி விஸ்வா வரட்டும் நாங்க பேசிட்டு அப்புறமா முடிவு சொல்றேன்” என்று முடித்தாள் மான்சி



“ சரி மான்சி நான் விஸ்வா வர்ற அன்னிக்கு மறுபடியும் கால் பண்றேன்” என்று கூறிவிட்டு இணைப்பை துண்டித்தாள் அட்சயா

கட்டிலில் வந்து விழுந்த மான்சிக்கு மனம் முழுவதும் கொண்டாட்டத்தில் குதித்தது, சத்யனின் போட்டோவை எடுத்துவைத்துக்கொண்டு “ஓய் கறுப்பா,, என்னையாடா புடிக்கலைன்னு சொன்ன? இருடி மச்சான் இனிமேல்தான் உனக்கு இருக்கு கச்சேரி,, வர்றேன்,, உன் இடத்துக்கே வந்து உன்னை அசைச்சு காட்டுறேன்” என்று வாய்விட்டு சத்தமாக பேசி சபதம் செய்தாள் 




மான்சியின் மவுனம் - அத்தியாயம் - 6

கழட்டிய பேன்ட் சட்டையை ஓரமாக காலால் தள்ளியவன் கைலியை இடுப்பில் கட்டிக்கொண்டு அவளை நிதானமாக ஏறிட்டவன் “ போகமுடியாது, ஏன்டி உன் மனசுல என்னதான் நெனைச்சுக்கிட்டு இருக்க, நேத்து என்னைய அவ்வளவு கேவலமா நெனைச்சு அப்படி நடந்துக்கிட்டயே, என்னிக்காவது ஒருநாள் உன்னைய தவறா ஒரு பார்வை பார்த்திருப்பேனா?, வக்கிரமா ஒரு வார்த்தை பேசியிருப்பேனா? ஆனா நேத்து நீ என்னைய அவ்வளவு கேவலமா நெனைச்சிட்டியே மான்சி, உனக்கு ஒரு விஷயம் தெரியுமா? நான் பொண்ணு சுகத்தையே அறியாத உத்தமன் இல்லை, பொண்ணுங்க உடம்பை ரசிக்கத் தெரியாதவனும் இல்லை, ஆனா பணம் வாங்கிகிட்டு படுக்க வர்ற வேசியா இருந்தாக்கூட அவளோட சம்மதம் இல்லாம அவளைத் தொடக்கூடாதுன்னு நெனைக்கிறவன் நான், அப்படிப்பட்ட நான் உன்மேல பாய்ஞ்சுடுவேன்னு நெனைச்சுத்தானே நேத்து அந்தமாதிரி நடந்துக்கிட்ட?, இன்னிக்கு ஒரு உண்மையை சொல்றேன் கேட்டுக்க,, நமக்கு கல்யாணம் ஆன இந்த மூனு மாசத்துல நீ என் பொண்டாட்டி என்கிற நெனைப்பு ஒருநாளும் எனக்கு வரலை, இன்னும் சொல்லப்போனா உன் அழகை ஜாடைமாடையாக் கூட ரசிக்க பிடிக்கலை, ரோட்டுல போகும்போது எதிரில் வர்ற பொண்ணோட அழகை ரசிச்ச அளவுகூட உன்னை எனக்கு பிடிக்கலை, இவ்வளவு ஏன் நீ என் முன்னாடி நிர்வாணமா வந்து நின்னாகூட நான் உன்னை ஏறெடுத்தும் பார்க்கமாட்டேன்,

மொத்தத்தில் நீ எந்தவிதத்திலும் என்னை கவரலை மான்சி,, அதனால நீ என்னை நெனைச்சு பயப்படவேண்டியது இல்லை தைரியமா இரு” என்று கூறிவிட்டு படுக்கையை எடுத்துக்கொண்டு பால்கனிக்குப் போய்விட்டான்

விதிர்த்துப் போய் அமர்ந்திருந்தாள் மான்சி, அவனின் வார்த்தைகள் ஒவ்வொன்றும் கூர் அம்புகளாக அவளை இதயத்தை குத்தி கிழித்தது, இவனுக்கு எவ்வளவு கர்வம், என்று அவள் மனம் தீயாய் கொதித்தது, ஒரு வேசியோட என்னை ஒப்பிட்டு பேசிட்டானே என்ற கோபம் கனலாய் கொந்தளித்தது, அவன் வார்த்தைகள் மறுபடியும் மறுபடியும் அவள் காதுகளில் ஒலித்து அவளை இறுதி முடிவுக்கு தூண்டியது,

பேசிய சத்யன் போதையில் போய் படுத்து தூங்கிவிட,, மான்சி கொஞ்சம் கூட தூக்கமின்றி தவித்தாள், அவளின் கணக்குக்கு இன்னும் இரண்டு நாட்களே இருக்கும் நிலையில், இன்னும் இரண்டு நாள் கழித்து எடுக்கவேண்டிய முடிவை இப்போதே எடுக்க தூண்டியது அவன் பேச்சு,,

அன்று காலை சத்யன் விழித்து எழுந்து வெளியே போகும் முன் எழுந்த மான்சி படுக்கை வைத்துவிட்டு நிமிர்ந்தவனை எதிர்கொண்டு “ உன்கூட பேசனும், அப்பாவோட ரூம்ல வெயிட் பண்ணு நான் கொஞ்சநேரத்தில் வர்றேன்” என்றவள் அவசரமாக பாத்ரூமுக்குள் நுழைந்தாள்

நேற்று இரவு குடித்துவிட்டு பேசியது சத்யனுக்கு ஞாபகத்தில் இருந்தது, அதற்காகத்தான் அப்பாவிடம் பஞ்சாயத்து பேச கூப்பிடுகிறாள் என்று நினைத்த சத்யன், தோட்டத்து பாத்ரூமில் குளித்துவிட்டு வந்து சாந்தா கொடுத்த காபியை வாங்கி குடித்துக்கொண்டே மான்சி அவள் அப்பா அறையில் காத்திருக்கச் சொன்ன தகவலை சொன்னான்,

சாந்தாவுக்கும் குழப்பமாகத்தான் இருந்தது,, எதற்காக இவ்வளவு காலையில அப்பாவோட ரூம்ல இருக்கச்சொன்னா என்று யோசித்த வாறு தன் கணவரின் அறைக்கு சத்யனுடன் போனாள்

செய்திதாள் படித்துக்கொண்டு இருந்தவரிடம் மான்சி சொன்னதை சொல்லிவிட்டு இருவரும் அவருக்கு எதிரேயுள்ள சோபாவில் அமர, மான்சி கையில் ஒரு லெதர் பையுடன் அறைக்குள் வந்தாள்

சாந்தாவை ஏறிட்டுப் பார்த்துவிட்டு “ நீயும் இங்கதான் இருக்கியாம்மா, நல்லதாப்போச்சு” என்றவள் அமராமல் நின்றபடி அந்த லெதர் பேக்கின் ஜிப்பை திறந்து ஒரு பாய்ஸன் பாட்டிலையும், ஒரு கணமான கவரையும் எடுத்து டீபாயின் மீது வைத்தாள்,

ஆராவமுதன் புருவங்கள் முடிச்சிட “ மான்சி என்ன இது?” என்றார்


மார்புக்கு குறுக்கே கைகட்டிய மான்சி நிமிர்ந்து நின்று “ ஒன்னு டைவர்ஸ் பேப்பர்ஸ் இருக்குற கவர்,, இன்னொன்னு குடிச்ச அஞ்சே நிமிஷத்தில் உயிரை எடுக்கும் பாய்ஸன், அன்னிக்கு எனக்கும் இவனுக்கும் கல்யாணத்தை நடத்த நீங்க சொன்னீங்களே,, இந்த கல்யாணம் நடக்கலைன்னா என்னை யாரும் உயிரோட பார்க்கமுடியாதுன்னு,, அதே டயலாக்கை தான் நான் இப்போ சொல்லப்போறேன் டாடி, அதாவது என்னோட டைவர்ஸ் பேப்பரில் இவன் கையெழுத்து போடலைன்னா நான் இந்த பாய்சனை குடிச்சிட்டு செத்து போயிடுவேன்,, இந்த ஒரு பாட்டிலை நீங்க எடுத்து உடைச்சிட்டாலும் என்கிட்ட இன்னும் நாலு பாட்டில் இருக்கு,, அதனால தடுத்து பேசாம எனக்கு இவன்கிட்ட இருந்து விவாகரத்து வாங்கி குடுக்குறதை பாருங்க” என்று மான்சி ஒரு நிமிர்வுடன் சொல்ல..

மற்ற மூவரும் அதிர்ந்தாலும், என்றாவது ஒரு நாள் இப்படியொரு நிலைமை வரும் என்று எதிர்பார்த்திருந்த சத்யனுக்கு அதிர்ச்சி சற்று குறைவுதான்

ஆராவமுதன் ஒரு நெடிய மூச்சுடன் நிமிர்ந்து “ மான்சி இது வாழ்க்கை, இப்படி விளையாட்டுத்தனமா முடிவெடுக்க கூடாதும்மா, சத்யனுக்கு என்ன குறை மான்சி?” என்று கேட்க

“ டாடி இதே வாழ்க்கை பந்தத்தைதான் நீங்க விளையாட்டுத்தனமா அன்னிக்கு ரெண்டே நிமிஷத்தில் முடிவு பண்ணீங்க,, ஆனா நான் உங்களை மாதிரி இல்லை டாடி, கல்யாணம் ஆகி என்பத்தெட்டு நாள் கழிச்சுதான் இந்த முடிவுக்கு வந்திருக்கேன், இந்த தொன்னூரு நாளில் என் மனசு மாறி இவனோட வாழமுடிமான்னு யோசிக்கத்தான் இத்தனை நாள் டைம் எடுத்துக்கிட்டேன், ஆனா ஒரு பர்ஸன்ட் கூட இவனை எனக்கு பிடிக்கலை டாடி, இப்போ உங்களுக்கு ரெண்டே சாய்ஸ், ஒன்னு எனக்கும் இவனுக்கும் டைவர்ஸ்,, இல்லேன்னா என்னோட அகால மரணம்,, எது பெஸ்ட்டுன்னு நீங்களே சூஸ் பண்ணுங்க டாடி” என்று மான்சி தீர்க்கமாக கூற

சாந்தா தலையில் அடித்துக்கொண்டு அழ ஆரம்பித்தாள், ஆராவமுதன் என்ன செய்வதென்றே புரியாமல் சத்யனை பார்த்தார்

அமைதியாக தலைகவிழ்ந்திருந்த சத்யன் ஒரு முடிவுடன் எழுந்து “ மாமா மான்சி சொல்றமாதிரி எனக்கும் இந்த வாழ்க்கையில் ஈடுபாடு இல்லை,, நீங்க ஏற்படுத்தி வச்ச பந்தம் பொய்த்துப் போகக்கூடாதுன்னு இத்தனைநாளா பொறுத்திருந்தேன்,, இனிமேல் அது தேவையில்லை மாமா, இனி எந்த பசை போட்டாலும் இந்த கல்யாண பந்தம் ஒட்டாது, எனக்கும் இதுல முழு சம்மதமே” என்றவன் அந்த கவரை எடுத்து பிரித்து அதிலிருந்த பேப்பர்களை எடுத்து மார்க் செய்திருந்த இடங்களில் தனது கையெழுத்தை பதித்தான்

கையெழுத்தை போட்டுவிட்டு நிமிர்ந்த சத்யன்,, “ இப்பவாவது புரிஞ்சுக்க நான் உன்னோட அழகுக்கோ, பணத்துக்கோ ஆசைப்பட்டு இந்த கல்யாணத்துக்கு சம்மதிக்கலை, மாமாவோட கௌரவத்துக்காகத்தான் கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டேன், அதுக்காகத்தான் இத்தனை நாளா இங்கே இருந்தேன், இனிமேல் எனக்கும் இந்த வீட்டுக்கும் எந்தவொரு சம்மந்தமும் இல்லை மான்சி, நான் கிளம்புறேன்” என்றவன் வேகமாக அந்த அறையைவிட்டு வெளியேறினான்,

மாடிக்குப் போய் தனது உடைமைகளை ஒரு பேக்கில் எடுத்துப்போட்டுக்கொண்டு மறுபடியும் கீழே வந்தான், ஆராவமுதனின் அறைக்குள் நுழைந்து “ நான் கிளம்புறேன் அத்தை, ஊருக்குத்தான் போறேன், இனிமே மதுரையிலயே இருந்தா அது ரெண்டு பேருக்குமே சங்கடம், அதனால பாபநாசத்துக்கே போயிர்றேன்” என்று கூறிவிட்டு வெளியே வந்தவன்,, அடுத்த ஒரு மணிநேரத்தில் திருநெல்வேலி செல்லும் பேருந்தில் பயணமானான்

ஆனால் எல்லாவற்றையும் அலசி ஆராய்ந்த இருவருமே தங்களின் ஆழ்மனதில் என்ன இருக்கிறது என்பதை அலசி ஆராய மறந்து நிரந்தர பிரிவு எனும் முடிவை தேர்தெடுத்திருந்தார்கள்

இத்தனை நாட்களாக இருவருக்குள்ளும் அமைதியாகவும் ஆவேசமாகவும் நடந்த போராட்டம் இன்று ஒரு முடிவுக்கு வந்தது,

" இந்த பூவுலகே,, பூவையான உன் அழகை கண்டு "

" இமைக்க மறந்து போனது!

" ஆனால் நான் மட்டுமே அறிவேன்"

" நீ பூவையல்ல,,

"முட்களால் நெய்யப்பட்ட படுக்கை என்று!

" நான் மட்டுமே அறிவேன்,,

" இப்புறம் துளைத்து அப்புறம் வரும்,,

" இருபக்கமும் கூர்மையான ஆயுதம்,

" உன் பார்வை என்று !

" நான் மட்டுமே அறிவேன்,,

" உனது வார்த்தைகள் அனைத்தும்,,

" கொடிய விஷம் தடவிய,,

" கூர் அம்புகள் என்று!

" நான் மட்டுமே அறிவேன்,,




பஸ்ஸில் ஏறியமர்ந்த சத்யனின் மனதில் சொல்லமுடியாத வேதனை பந்தாக அடைத்தது, நேற்று இரவு குடித்துவிட்டு வந்தது எவ்வளவு தவறு என்று இப்போது புரிந்தது, மான்சியை தனது வார்த்தைகள் ரொம்பவே காயப்படுத்தியிருக்கும் அதனால்தான் விடிந்ததும் இப்படியொரு முடிவை தேர்தெடுத்துவிட்டாள் என நினைத்தவன்,

சட்டென்று மூளையில் பொறித்தட்ட நேற்றைய வாக்குவாதம் மட்டுமே அவளுடைய விவாகரத்து முடிவுக்கு காரணம் என்றால், இரவோடிரவாக விவாகரத்துப் பத்திரங்கள் எப்படி வந்திருக்கும்,, ஆக இந்த பேப்பர்கள் ஏற்கனவே தயார் செய்து வைக்கப்பட்டதாகத்தான் இருக்கும், யார் கண்டது கல்யாணம் முடிந்த மறாவது நாளே கூட விவாகரத்துப் பத்திரங்களை ரெடி செய்திருக்கலாம், என்ற எண்ணம் மனதை பாரமாக அழுத்தியது

பகல் வெளிச்சம் கண்ணை கூசச்செய்ய, கண்ணாடியை இழுத்து மூடிவிட்டு அதிலேயே தலைசாய்த்து கண்களை மூடினான்,, மான்சி ஒவ்வொரு வார்த்தைகளும் இதயத்தை ஊசியாக குத்தியது, இந்த மூன்று மாதத்தில் என்மேல எந்தவிதமான அபிப்பிராயமும் வரவில்லை என்று சொல்லிவிட்டாளே ராட்சசி, என்று எண்ணும்போதே அதே வார்த்தைகளை நேற்று இரவு இவன் அவளிடம் சொன்னது ஞாபகம் வந்தது, அதே வாக்கியங்களை வார்த்தைகளை மாற்றிப்போட்டு நாகரீகமாக மான்சி காலையில் சொல்லிவிட்டாள், ஆகமொத்தம் அவளுக்கு கோடிட்டுக் காட்டியது நாம்தான் என்று சத்யனுக்கு உறைக்க “ச்சே” என்று வலது கையால் நெற்றியில் அடித்துக்கொண்டான், நல்லவேளையாக அவனுக்குப் பக்கத்தில் யாருமேயில்லை

நிர்வாணமாக வந்து நின்னாக்கூட ஏறெடுத்தும்ப் பார்க்கமாட்டேன் என்று வீம்பாக சொன்னது சத்யனுக்கு ஞாபகம் வந்தது, ம்ஹும் அப்படி அவ வந்து நின்னா தன்நிலைமை எப்படியிருக்கும் என்று சத்யன் கண்மூடி யோசித்தான், அவனையும் அறியாமல் ஒரு நீண்ட பெருமூச்சு சூடாக வந்தது,

அவள் அழகு தன்னை பாதிக்கக்கூடாது என்றுதான் சத்யன் இரவில் வேன் ஓட்டும் வேலையை தேர்ந்தெடுத்தது , இது அவனுக்கு மட்டுமே தெரிந்த உண்மை, திருமணம் நடந்த சில நொடிகளிலேயே மான்சியின் அலட்சியமும் அவனைப் பார்த்த அருவருப்பான பார்வையும் தான் சத்யன் அவளிடத்தில் பெரிதும் ஒதுங்க காரணம், மான்சியைப் பற்றி அவன் மனதில் நாளுக்குநாள் துளிர்விடும் ஆசையையும் அவ்வப்போது கிள்ளியெறிந்தான், தன்னைப் பிடிக்காதவளை என்னவென்று சொல்லி தன்னிடம் சேர்ப்பது என்ற தெளிவான சிந்தனையே அவளை விலக்கி, விலகி இருக்க காரணமாயிருந்தது, ஒவ்வொரு நிமிடமும் மான்சியை விட்டு பிரியவேண்டும் என்பதை சொல்லிச்சொல்லி மனதை தயார்படுத்தினான்,

ஆனால் எவ்வளவுதான் மனதை கட்டுப்படுத்திக்கொண்டு மவுனமாக இருந்தாலும், அவளது அலட்சியத்தையும் அருவருப்பான பார்வையையும் சத்யனால் தாங்கமுடியாமல் தான் அவளுக்கு பதிலுக்கு பதில் வார்த்தையாடியது, அதுவே அவள் மனதில் மேலும் மேலும் வன்மம் வளர நாமே உதவுகிறோம் என்றும் கூட சத்யனுக்கு தெரியும், இருந்தாலும் அவளிடம் தன்மானத்தை மட்டும் விட்டுக்கொடுக்க இறுதிவரை மனமே வரவில்லை
இனிமேல் யோசித்து பயனில்லை என்று சத்யனுக்குத் தெரிந்தாலும், மனது திரும்பத்திரும்ப மான்சி கூறிய வார்த்தைகளையே சுற்றிவந்தது, என்னை அவளுக்கு பிடிக்காதுன்னு தெரியும், ஆனா ஒரு பர்ஸன்ட் கூட அவளுக்கு என்னை பிடிக்காம போச்சே, என்று குமைந்தான் சத்யன்,

மான்சி பிரிவுக்காக சாவைத் தேர்ந்தெடுப்பாள் என்பதை சத்யன் எதிர்பார்க்கவே இல்லை, அந்த பாய்ஸன் பாட்டிலை நினைத்த மாத்திரத்தில் இப்போதும் சத்யனின் அடிவயிறு உதறியது, கண்களை இறுகமூடி தகுதியில்லாத நான் அவளுக்கு தேவையில்லை, அவ வேற தகுதியானவன கல்யாணம் பண்ணிகிட்டு எப்பவும் நல்லாருக்கட்டும் என்று நினைத்தான்

மான்சி தன்னை வெறுக்க காரணம் தனது ஏழ்மையும், கறுத்த நிறமும் தான், என்று நினைத்தவன், முதன்முறையாக தனது ஏழ்மையை வெறுத்தான்,, ஆனா என்னோட நிறத்தை மாத்தமுடியாது, ஆனா என்னோட தரத்தை மாத்தலாம், ஊருக்குப்போனதும் ஏதாவது தொழில் செய்து பணம் சம்பாதித்து முன்னேறும் வழியைப் பார்க்கவேண்டும் என்று தீர்மானித்தான்

இனிமேல் அவளுக்கும் எனக்கும் எந்தவொரு உறவுமில்லை, அதனால அவளை நினைச்சு பார்க்கிறதே தேவையில்லாத விஷயம், என்று சத்யன் தன்னை சமாதானப் படுத்திக்கொள்ளும் போதே அவன் மொபைல் அழைத்தது

எடுத்துப்பார்த்தான் மான்சியின் வீட்டு நம்பர்தான், கட்செய்து விடலாமா என்று யோசித்தவன் மனம் வராமல் ஆன்செய்து காதில் வைத்து “ ஹலோ” என்றான்

“ சத்தி நான் அத்தைடா” என்ற சாந்தாவின் குரல் விம்மலும் கேவலுமாக வெடிக்க அடுத்து பேச வார்த்தைகள் இல்லாது சந்தாவின் அழுகை மட்டுமே சிறிதுநேரம் ஒலித்தது,

சத்யனுக்கும் நெஞ்சை அடைத்தது, குரல் கம்ம “ அத்தை தயவுசெஞ்சு அழாதீங்க” என்று சத்யன் சொல்லும்போதே, அவனுக்கும் கழிவிரக்கத்தில் கண்ணீர் வழிந்தது, அவசரமாக சுற்றும்முற்றும் பார்த்துவிட்டு கண்ணீரை துடைத்தவன், குரலை நிதானத்துக்கு கொண்டு வந்து “ என்ன விஷயமா போன் பண்ணீங்க சொல்லுங்க?” என்றான்

சாந்தாவின் அழுகையும் சற்று ஓய்ந்தது அல்லது கண்ணீர் வற்றிக்கூட இருக்கலாம் “ சத்தி நான் என்னனமோ கற்பனை பண்ணேனே எல்லாமே மண்ணா போச்சேடா” என்றுவிட்டு மீண்டும் அழுகையை ஆரம்பிக்க..

“ அதுக்கென்ன அத்த பண்றது விதியை மாத்த யாராலும் முடியாது, ஆனா மான்சியோட கல்யாணம் நின்ன அந்த சமயத்துல மாமாவோட மானத்தை சபையில என்னால காப்பாத்த முடிஞ்சதே அதுவே போதும், மான்சிக்கு நான் எந்தவிதத்திலும் பொருத்தம் இல்லாதவன் அத்த, அதனால்தான் எங்களை சேர்த்து வச்ச விதியே இப்போ பிரிச்சு வச்சுருச்சு, இதுலே எனக்கு எந்த வருத்தமும் இல்லை, அதனால என்னைய நெனைச்சு நீங்க வருத்தப்படாம நிம்மதியா இருங்க, நான் வீட்டுக்கு போனதும் போன் பண்றேன்” என்று கூறிவிட்டு சாந்தாவின் பதிலை எதிர்பார்க்காமல் மொபைலை அனைத்து பாக்கெட்டில் போட்டுக்கொண்டான்

சிறிதுநேரம் கண்மூடி சாய்ந்திருந்தவனை மறுபடியும் அழைத்தது மொபைல், இந்தமுறை வேல்முருகன், ஒரு பெருமூச்சுடன் ஆன்செய்தவன் “ சொல்லுங்கண்ணே?” என்றான்

“ என்னா சத்யா இன்னிக்கு வேலைக்கு வரலையா? மார்க்கெட்ல தேடினேன் ஆளையே காணோமேன்னு போன் பண்ணேன் சத்யா” என்று கேட்டார்
சிறிதுநேரம் கண்மூடி அமைதியாக இருந்தவன் பிறகு மடைதிறந்த வெள்ளமாக நடந்தவற்றை மெல்லிய குரலில் அவரிடம் கூறினான், “ அவ ரொம்ப பிடிவாதக்காரி அண்ணே, அதான் அவளோட சாவுக்கு நான் காரணமா இருக்கக்கூடாதுன்னு எல்லாத்துலயும் கையெழுத்துப் போட்டு குடுத்துட்டேன்,, மத்தபடி இனி எதுவுமில்லை அண்ணே எல்லாமே முடிஞ்சுபோச்சு” என்று சத்யன் முடிக்க..

வேல்முருகனின் திகைப்பு அவரின் அமைதியில் தெரிந்தது, சில விநாடிகளுக்கு பிறகு “ இப்போ நீ எங்க இருக்க சத்யா?” என்றார்

“ நான் பஸ்ஸில் பாபநாசம் போய்கிட்டு இருக்கேன்,, இனிமேல் மதுரையில என்னால இருக்கமுடியாதுண்ணே, உங்ககிட்ட சொல்லாம வந்துட்டேன், அந்த நேரத்துல எனக்கு வேற எதுவுமே தோணலை அண்ணே, முதலாளிகிட்ட சொல்லிடுங்கண்ணே, ரெண்டுநாள் சம்பளம் வரவேண்டியிருக்கு, அத வாங்கி உங்க மகனுக்கு நான் குடுத்ததா சொல்லி வீடியோகேம் வாங்கிக் குடுங்கண்ணே, போனவாரமே என்கிட்ட கேட்டான்,, அப்புறம் இனிமேல் இந்த நம்பருக்கு போன் பண்ணாதீங்க, ஊருக்குப் போய் வேற நம்பர் வாங்கியதும் நானே உங்களுக்கு போன் பண்றேன்” என்று சத்யன் விரக்தியாக சொல்ல..

“ சரி சத்யா ஊருக்குப் போனதும் போன் பண்ணுப்பா” என்று கூறிவிட்டு இணைப்பை துண்டித்தார்


பஸ் சங்கரன்கோவிலை தாண்டி திருநெல்வேலியை நோக்கி போய்க்கொண்டிருந்தது, சத்யன் சிந்தனைகளின் பிடியிலிருந்து விடுபடுவதற்காக கண்களைமூடி தூங்க முயன்றான், வெகுநேர போராட்டத்திற்கு பிறகு தூக்கம் அவன் கண்களை தழுவிய கொஞ்சநேரத்திலேயே திருநெல்வேலி வந்துவிட்டது,, பஸ்ஸில் இருந்து இறங்கி பாபநாசம் செல்லும் பஸ்ஸில் ஏறினான்

சத்யன் வீட்டுக்கு வர மாலை மணி ஐந்தானது,, கடையில் அமர்ந்து சில்லறை வியாபாரம் செய்துகொண்டிருந்த பேச்சி சத்யனைப் பார்த்து திகைப்புடன் “ என்னா ராசு திடீர்னு வந்துருக்க?” என்று கேட்டபடி கடையை விட்டுவிட்டு வெளியே ஓடிவந்தாள்

தாயின் பதட்டத்தை கண்டு சங்கடப்பட்ட சத்யன் “ ஒன்னுமில்லம்மா , சும்மாதான் வந்தேன், நீ ஏவாரத்தைப் பார்த்துட்டு வா” என்று வீட்டுக்குள் போனான்

சத்யனின் வீடு சிறு மாடிவீடு, நுழையும்போதே வலதுபக்கம் கடையும், இடதுபக்கம் பெரிய திண்ணையுடன் கூடிய வராண்டாவும், கதவை திறந்து உள்ளே போனால் ஒரு கூடம் அதன் இடதுபுறம் ஒரு சிறிய பூஜை அறை, ஹாலை அடுத்து சிறு சமையலறை, அதன்பின்னால் தோட்டம், கிணறு, பாத்ரூம், டாய்லெட், எல்லாமே இருக்கும், தனியாக படுக்கையறை இல்லாத வீடு, மகனுக்கு திருமணம் ஆவதற்குள் தனியா ஒரு அறை கட்டவேண்டும் என்ற பேச்சியின் ஆசை இன்னும் நிறைவேறவில்லை, சத்யனின் கல்யாணமே அவசரக் கல்யாணமானதால் இன்னும் பேச்சியின் ஆசை நிறைவேறவில்லை

சத்யன் பூஜையறைக்குள் தனது பையை கொண்டுபோய் வைத்துவிட்டு, தோட்டத்து கதவைத் திறந்து கிணற்றடியில் முகம் கழுவிவிட்டு பாக்கெட்டில் இருந்து தனது மொபைலை எடுத்து அதிலிருந்த சிம்கார்டை உருவி கிணற்றுக்குள் போட்டான், பாபநாசம் பஸ்ஸ்டாண்டில் வாங்கிய வேறு சிம்மை மொபைலில் போட்டுக்கொண்டான், பிறகு வீட்டுக்குள் வந்தான்

போட்டிருந்த பேன்ட் சர்ட்டை கழட்டி கைலிக்கு மாறியவன், காலையிலிருந்து எதுவுமே சாப்பிடாததால் பசி வயிற்றை கிள்ள சமையலறைக்குப் போய் என்ன இருக்கிறது என்று பார்த்தான், வெறும் சாதமும் தயிரும் மட்டுமே இருந்தது, அவசரமாக தட்டில் சாதத்தைப் போட்டு தயிரை ஊற்றி பிசைந்து ஊறுகாயை தொட்டுக்கொண்டு சாப்பிட்டான்,

கடையை தற்காலிகமாக மூடிவிட்டு வந்த பேச்சி சத்யன் அரக்கப்பரக்க சாப்பிடுவதைப் பார்த்து கண்கலங்கி “ ராசு நீ வர்றேன்னு ஒரு போன் பண்ணிருந்தா நல்ல குழம்பா வச்சிருப்பேனே, எனக்கு மட்டும் வெறும் தயிர் போதும்னு இருந்தேன் இப்போ இப்படி திடீர்னு வந்துட்டயே என்னப் பண்ணுவேன்” என்று கவலையோடு புலம்பினாள்

“ பரவாயில்லைம்மா காலையிலேர்ந்து தண்ணிகூட குடிக்கலை, பயங்கர பசி அதான் வந்ததும் சாப்பிட உக்காந்துட்டேன்” என்று சாப்பிட்டுக்கொண்டே பேசினான்

சத்யன் சாப்பிட்டுவிட்டு கூடத்துக்கு வந்து தரையில் கால்களை நீட்டி அமர, பேச்சி எதிரில் வந்து அமர்ந்து “ என்ன சத்தி திடீர்னு கெளம்பி வந்துருக்க?” என்று ஆரம்பிக்க..

தலையை கவிழ்ந்து அமர்ந்திருந்த சத்யன் எதையும் மறைக்காமல் நடந்தவற்றை தனது அம்மாவிடம் சொன்னான்,




அதிர்ச்சியுடன் அமர்ந்திருந்த பேச்சி “ அடிப்பாவி அவளை நல்ல புள்ளைன்னு நெனைச்சேனே?,, இவ்வளவு பெரிய சதிகாரியா இருப்பான்னு நெனைக்கவே இல்லையே?” என்று புலம்ப

பட்டென்று நிமிர்ந்த சத்யன் “ அம்மா அவ எந்த சதியும் பண்ணலை,, அவளுக்கும் எனக்கும் எந்த பொருத்தமும் இல்ல, அதனால என்னை அவளுக்குப் பிடிக்கலை அவ்வளவுதான், பிடிக்காத வாழ்க்கையை ஒப்புக்கு வாழுறதைவிட, பிரிஞ்சு தனித்தனியா வாழுறதே நல்லது, இதுல அவளை குறை சொல்ல ஒன்னுமே இல்லைம்மா ” என்று சத்யன் தன் தாய்க்கு பதில் சொல்ல

சத்யன் மான்சியை விட்டுக்கொடுக்காமல் பேசியதும் பேச்சிக்கு கோபம் வந்தது “ அவ என்ன ரம்பை ஊர்வசி உன்னை புடிக்காம போறதுக்கு, டேய் மவனே அவளை விடுடா நீ ஆம்பளை, இன்னும் ஒரு வாரத்துல உனக்கு அவளவிட அழகான பொண்ணைப் பார்த்து கல்யாணம் பண்ணி வைக்கிறேன்” என்று பேச்சி வீராப்பு பேசினாள்