Saturday, October 31, 2015

வாழ்ந்தால் உன்னோடுதான் மான்சி - அத்தியாயம் - 3

அடுத்த மூன்று நிமிடங்களில் சத்யன் அருகில் பைக்கை நிறுத்திய அருண் முதலில் பாக்கெட்டில் இருந்து பணத்தை எடுத்து கொடுத்தான் “ அண்ணா,, அம்மா மூனாயிரம் வச்சிருந்தாங்க, பாகி அவளோட சேமிப்பு இரண்டாயிரம் சேர்த்து குடுத்தா, மொத்தம் ஐஞ்சாயிரம் எடுத்துட்டு வந்தேன்” என்று பணத்துக்கான காரணத்தை கேட்காமல் கொடுத்தான்

சத்யன் பணத்தை வாங்கி தன் பாக்கெட்டில் போட்டுக்கொண்டு அருண் கொடுத்த கவரில் இருந்த டீசர்ட்டை எடுத்துக்கொண்டு போட்டிருந்த சட்டையை கழட்டி மடித்து கவரில் வைத்துவிட்டு டீசர்ட்டை அணிந்துகொண்டான், சால்வை கையில் எடுத்துக்கொண்டு கவரை அருணிடம் கொடுத்தான்
சத்யனின் முகவாட்டம் அருணுக்கு என்ன கதை சொன்னதோ “ அண்ணா என்ன ரொம்ப டல்லா இருக்க?,, ஏதாவது ப்ராப்ளமா அண்ணா?” என்று அக்கரையுடன் கேட்டான்



அருணுக்கு என்ன பதில் சொல்வது என்று சிலநிமிடங்கள் குழம்பி, பிறகு நிதானித்து “ இல்ல அருண் செத்தவன் சிறுவயசு ஆள் அதான் மனசுக்கு ஒரு மாதிரியா இருந்தது” என்றான்

“ அட விடுண்ணா அவனுக்கு விதி அவ்வளவுதான்,, சரிண்ணா நீ ஏதாவது சாப்பிட்டயா? , பக்கத்துல ஓட்டல் இருக்கு ஏதாவது வாங்கிட்டு வரவா?” என்று அருண் கேட்க

“ அதெல்லாம் எதுவும் வேண்டாம் அருண், நீ வீட்டுக்கு கிளம்பு, அப்பா வேற இன்னும் வரலை அம்மாவும் பாகியும் தனியா இருக்காங்க, நான் காலையில வீட்டுக்கு வர முடியாது, ஏதாவதுன்னு கால் பண்ணு அருண்,, நீ கிளம்பு” என்று தம்பியை சமாதானம் செய்து அனுப்பிவிட்டு மருத்துவமணைக்கு உள்ளே வந்து மான்சியின் அருகே முழங்கால்களை கட்டிக்கொண்டு அமர்ந்தான்,

அவன் நினைத்தால் தனது போலீஸ் பவரை வைத்து அந்த மருத்துவமனையின் மருத்துவர் அறையில் கூட ஒய்வெடுக்கலாம், ஆனால் மான்சியை இந்த நிலையில் விட்டுவிட்டு விலகிப்போக மனமின்றி அங்கேயே அமர்ந்திருந்தான், அவள் அழும் ஒலி விட்டு விட்டு கேட்டது,, முகுந்தனுடன் வாழ்ந்த நாட்களை எண்ணி அழுகிறாளோ? அந்தளவுக்கு அவனை ரொம்பவும் காதலித்தாளா? அல்லது அவன் செய்த கொடுமைகளை எண்ணிப்பார்த்து அழுகிறாளோ? சத்யனுக்குள் புதிதாய் சில கேள்விகள்,, விடைதான் தெரியவில்லை,,

நடுநிசியை தாண்டும்போது மான்சி குளிரால் நடுங்குவது போல் இருக்க கையில் இருந்த சால்வையை அவள்மீது மூடினான், மான்சிக்கும் முகுந்தனுக்கும் எப்படி பொருத்தமே இல்லையோ அதேபோல் அவனுக்காக அவள் விடும் கண்ணீரும் பொருந்தாதது போல் தோன்றியது, இவள் இவ்வளவு விடும் கண்ணீருக்கு அவன் அவ்வளவு தகுதியானவனா? என்ற எரிச்சலான கேள்வியும் சத்யன் மனதில் எழுந்தது, இப்படியே விடாமல் அழுதுகொண்டே இருந்தால் இவள் நிலை என்னாவது? என அடிப்படை இல்லாத அன்பின் மேலீட்டால் மான்சியின் மீது கோபம்கூட உண்டானது, ஆனால் புருஷனுக்காக அழதே என்று சொல்ல தனக்கு எந்த உரிமையும் இல்லை என்பது சத்யனுக்கு தெளிவாக புரிந்ததால் அவளின் கண்ணீரை மனதுக்குள் ஏற்ப்பட்ட மவுனக் குமுறலுடன் வேடிக்கைப் பார்க்கத்தான் முடிந்தது

மணி மூன்றை நெருங்கும் போது சூசைட் கேஸ் போஸ்ட்மார்ட்டம் முடிந்து பாடி வெளியே வர அங்கிருந்த கூட்டம் மொத்தமும் கதறிக்கொண்டு அந்த உடலிடம் ஓடியது, அவர்கள் போட்ட சத்தத்தில் திகைப்புடன் எழுந்து அமர்ந்து மிரள மிரள விழித்தவளைப் பார்த்ததும் பதறி அருகில் சென்று “ ஒன்னுமில்ல அவங்க கேஸ் எல்லாம் முடிஞ்சு வெளியே வந்திருச்சு, அதான் இப்படி கத்துறாங்க, நீங்க பயப்படாதீங்க ” என்று சத்யன் ஆறுதலாய் கூற.....


ஆனாலும் அவர்கள் அழுவதைப் பார்த்து மான்சியும் அழுதாள், சற்றுநேரத்தில் அந்த உடல் ஒரு கறுப்பு வேனில் ஏற்றப்பட்டு கிளம்ப அங்கிருந்த கூட்டம் கொஞ்சம் கொஞ்சமாக கலைந்தது, மான்சியின் கண்ணீரும் வற்றிப்போய் கால்களை நீட்டி சுவற்றோடு சாய்ந்துகொண்டாள்

முகுந்தனின் உடல் உள்ளே எடுத்துச்சொல்லப் பட்டிருந்தது, குளிர் உடலை ஊடுருவ சத்யன் எழுந்து வெளியே போய் டீ குடித்துவிட்டு, மான்சிக்கும் ஒரு கப்பில் வாங்கி வந்தான்

டீயை மான்சியிடம் கொடுத்து “ ரொம்ப குளிருது கொஞ்சம் டீ குடிங்க தெம்பா இருக்கும்” என்று சத்யன் கூற...

வேண்டாம் என்று தலையசைத்து மறுத்தவள், “ என்னால உங்களுக்கு எவ்வளவு கஷ்டம்,, யாருமேயில்லாத இந்த அனாதைக்கு உதவ உங்களுக்காவது மனசு வந்ததே,, ஆனா இவரு செத்துட்டாருன்னு என்னால நம்பவே முடியலை, என்னைய எவ்வளவோ கொடுமை பண்ணப்ப எல்லாம் இவர் சாகனும்னு நான் ஒருநாளும் நினைக்கலை,, திருந்தி நானும் இவரும் எல்லா புருஷன் பொண்டாட்டி மாதிரி நல்லா வாழனும்னு தான் சாமிய வேண்டுவேன்,, என்னிக்காவது ஒருநாள் ரெண்டுபேரும் ஒருத்தரையொருத்தர் மனசார விரும்பி ஒத்துமையா வாழ்வோம்னு நினைச்சேன்,, இப்படி பாதியில என் வாழ்க்கை முடியும்னு நான் நெனைக்கலையே,, கூட்டிட்டு வந்த என்னை அனாதையா விட்டுட்டு ஓடிப்போகாம ஒரு தாலிய கட்டி பாதுகாப்பு குடுத்தாரு, இல்லேன்னா அந்த மெட்ராஸ்லயே நான் சீரழிஞ்சு போயிருப்பேன், என்னை அடிச்சு எவ்வளவோ சித்ரவதை பண்ணும்போதெல்லாம் ஒரு குழந்தை பொறந்தா திருந்தி நல்லாயிடுவாருன்னு பொருத்து போனேன், இப்போ என் வயித்துல இருக்குற பிள்ளைக்கு அப்பான்னு அடையாளம் காட்டக்கூட ஆள் இல்லாம போய்ட்டாரே,, இனி எனக்கும் என் பிள்ளைக்கும் யார் இருக்கா? ” என்ற மான்சி முகத்தை மூடிக்கொண்டு மறுபடியும் கதற ஆரம்பிக்க.....

சத்யன் செயலற்று அதை வேடிக்கைப் பார்த்தான்,, மான்சியை முகுந்தன் நிறைய கொடுமைகள் செய்தான் என்று தகவல் அவனுக்குள் சிறு நெருப்பையே மூட்டியிருந்தது, இப்படி தேவதை மாதிரியான ஒரு பெண்ணை கொடுமை செய்ய இவனுக்கு எப்படி மனசு வந்திருக்கும்? முகுந்தன் இப்போது உயிருடன்இருந்திருந்தால் சத்யன் கையால் உயிரை விட்டிருப்பான் எனுமளவுக்கு சத்யனின் கோபம் கொந்தளித்தது

“ இவ்வளவு கொடுமை பண்ணவனுக்காக இப்படி கதறும் உங்களைப் பார்த்து ஆத்திரப்படுறதா? ஆச்சர்யப்படுறதான்னு எனக்கு புரியலை? ஆனா இந்த கண்ணீருக்கு முகுந்தன் தகுதியற்றவன்,, இதை மட்டும் என்னால் உறுதியா சொல்லமுடியும்” என்று சத்யன் ஒரு மாதிரி அடக்கிவைத்த குரலில் கூறியதும்.......

அவன் குரலில் இருந்த வித்தியாசம் உணர்ந்து பட்டென்று அவனை நிமிர்ந்துப் பார்த்த மான்சியின் விழிகளில் வியப்பு ... முதன்முதலாக தன்மீது உண்மையான அக்கரையுடன் பேசும் ஒருவனை கண்ட வியப்பு,, “ என்னோட கண்ணீர் அவரோட தகுதிக்காக இல்லை சார்,, அந்தளவுக்கு நானும் அவரும் வாழவும் இல்லை,, ஒருத்தரையொருத்தர் காதலிக்கவும் இல்லை,, ஆனா இதெல்லாம் என்னிக்காவது ஒருநாள் நடக்கும்னு நான் காத்திருந்தது பொய்யாய்ப் போச்சே,, இந்த உலகத்தில் எனக்குன்னு இருந்த ஒரு அடையாளமும் தொலைஞ்சு போச்சே,, என் கழுத்துல தாலி இருக்கும்போதே என்னை துகிலுரித்துப் பார்க்கும் வக்கிரங்கள் முன்னாடி இனி எப்படி வாழுறதுன்னு புரியமா அழுவுறேன் சார், இவர் எனக்கு நல்ல புருஷனா இல்லேன்னாலும் கூட, இவரு கட்டுன தாலி எனக்கு இவ்வளவு நாளா ஒரு பாதுகாப்பா இருந்துச்சு... இனிமேல்?” என்ற கேள்வியுடன் நிறுத்திவிட்டு கன்னத்தில் வழிந்த கண்ணீரை முந்தானையால் துடைத்த மான்சி,, 


சத்யனை நிமிர்ந்து நேராகப் பார்த்து... “ சார் நானும் இவரும் காதலிச்சு ஊரைவிட்டு ஓடி வரலை,, நீ ரொம்ப அழகா இருக்க சென்னைக்கு வந்து சினிமால சேர்ந்தா நிறைய பணம் வரும்,, கார் பங்களான்னு வசதியா வாழலாம்னு சொன்னாரு,, நானும் பணம் வந்தா வசதியா வாழலாம் என்ற ஆசையில் அவர்கூட வந்தேன், வந்ததும் தான் சினிமா எப்படின்னு புரிஞ்சது, அவர் எவ்வளவோ வற்புறுத்தியும் நான் முடியாதுன்னு மறுத்ததும் வேற வழியில்லாம ராணிப்பேட்டை வந்தோம், தனித்தனி ஆளா இருந்தா தங்க வீடு கிடைக்காது நாம கல்யாணம் பண்ணிக்கலாம்னு அவரு சொன்னப்ப எனக்கும் வேற வழி தெரியலை, நாங்க அப்போ ஊரைவிட்டு வந்து கிட்டத்தட்ட ஒருமாசம் ஆயிருந்தது, இந்த நாட்களில் கல்யாணம் எவ்வளவு அவசியம்னு எனக்கு நல்லா புரிஞ்சதால சரின்னு சம்மதிச்சேன்,

நூறு ரூபாய் செலவுல எங்க கல்யாணம் நடந்தது, யாரையோ பிடிச்சு ஒரு ரூமை வாடைகைக்கு எடுத்து தங்கினோம், கடமைக்காக நடந்த கல்யாணம் என்றாலும் நான் நல்ல மனைவியா வாழ முயற்சி பண்ணேன், ஆனா அவருக்கு நான் சினிமாவுக்கு வர மறுத்த ஆத்திரம் மனசுக்குள்ள இருந்தது, அடிக்கடி என்னை அடிச்சு போட்டுட்டு வெளிய போயிட்டு நாலஞ்சு நாள் கழிச்சு வருவாரு, அவருக்கு பணத்து மேலயும் போதை மேலயும் இருந்த ஆர்வமும் ஆசையும் கடைசி வரைக்கும் என்மேல வரவேயில்லை, எத்தனையோ பேரை திரும்பி பார்க்க வச்ச என் அழகு அவரை துளிகூட பாதிக்காதது என் துரதிர்ஷ்டம் தான்,, இந்த நாலு வருஷத்துல நாங்க சேர்ந்து வாழ்ந்த நாட்களை எண்ணி சொல்லலாம், இந்த குழந்தை என் வயித்துல வந்ததே பெரிய அதிசயம் தான்,, அவரு விட்டுட்டு போனதும் எத்தனை நாளைக்கு பசி பட்டினி கிடக்குறது, அக்கம்பக்கம் இருக்கிற பெண்கள் ஷூ கம்பெனிக்கு வேலைக்கு போனாங்க, அவங்ககூட நானும் வேலைக்கு போய் என் பிழைப்பைப் பார்த்துக்கிட்டேன், ஆனா எங்க சுத்துனாலும் என்னிக்காவது ஒருநாள் வந்துருவார்ன் ஒரு நம்பிக்கையில இத்தனை நாளா வாழ்ந்தேன், இனிமேல் என் வாழ்க்கை எப்படின்னு தெரியலை, இது வரைக்கும் என்னைப் பத்தி யார்கிட்டயுமே சொல்லி அனுதாபத்தை தேடிக்க விரும்பமாட்டேன், நீங்க காட்டுற அன்பும் அக்கரையும் உதவியும் என்னை வெளிப்படையா எல்லாத்தையும் சொல்ல வச்சிருச்சு,, தப்பாயிருந்தா மன்னிச்சிடுங்க சார் ” என்று மான்சி தன்னைப்பற்றிய முழுக்கதையையும் சொல்லி முடிக்க...

சத்யன் கையில் ஆறிப்போன டீகப்புடன் அவளையேப் பார்த்துக்கொண்டு அமர்ந்திருந்தான்.. இவ்வளவு நேரம் அவனுக்குள் பாரமாய் அழுத்திக்கொண்டு இருந்த ஏதோவொன்று அவனிடமிருந்து விடை பெற்றது போன்ற உணர்வு , மான்சி கூறிய ஒவ்வொரு வார்த்தையும் அவன் மூளையில் அழுத்தமாக பதிவானது,

ஒருவனின் மரணத்தில் மற்றொருவன் சந்தோஷப்பட்டால் அது மனிதாபிமானமற்ற செயல் என்று எண்ணும் சத்யனின் நெஞ்சுக்குள் முதன்முறையாக முகுந்தனின் மரணம் நிம்மதி கலந்த சந்தோஷத்தை அவனுக்கும் தெரியாமல் சிறு துளியாக விதைத்தது, தனக்குள் நிகழும் மாற்றங்களை இனம் காண முடியவில்லை அதற்காக சத்யன் முயற்சிக்கவும் இல்லை

“ஹும்’ என்ற பெருமூச்சுடன் எழுந்தவன் “ இந்த டீ ஆறிபோச்சு , வேற வாங்கிட்டு வர்றேன்” என்று அவள் பதிலை எதிர்பார்க்காமல் வெளிய போனான்


சற்றுநேரத்தில் சூடான டீயுடன் வந்து “ தயவுசெய்து இந்த டீயை கொஞ்சூண்டு குடிங்க, நீங்க எழுந்து நடமாடுற அளவுக்கு தைரியமா இருந்தாதானே நான் முகுந்தனோட காரியங்களை கவனிக்க முடியும், இல்லேன்னா நீங்க எப்போ மயக்கம் போட்டு விழுவீங்களோன்னு பயத்துல உங்கப் பின்னாடியேதான் இருக்கனும்” என்று சத்யன் கரிசனத்தோடு கூறியதும்..

அவன் வார்த்தைகளின் நியாயம் மூளையில் உரைக்க மறுக்காமல் டீயை கையில் வாங்கிய மான்சி “ என்னால உங்களுக்கு ரொம்ப சிரமம்,, கடவுளாப் பார்த்துதான் உங்களை உதவிக்கு அனுப்பியிருக்காரு” என்று கலங்கிய கண்களுடன் நன்றி கூறிவிட்டு டீயை குடித்தாள்

ஆனால் குடித்த சில விநாடியில் ஒரு பெரிய ஓங்கரிப்புடன் வாயைப் பொத்திக்கொண்டு பக்கத்தில் இருந்த குப்பை மேட்டில் போய் வாந்தியெடுத்தாள், இரவு குடித்த கூல்டிரிங்க்ஸ்ம், இப்போது குடித்த டீயும் கலந்து வந்து கொட்டியது, அவள் பின்னாலேயே பதறி ஓடி வந்த சத்யன் அவள் நெற்றியைப் பிடித்துக்கொண்டான், சற்றுநேரத்தில் வாந்தி நின்று முந்தானையால் வாயைத் துடைத்தபடி நிமிர்ந்தவளிடம் தண்ணீர் பாட்டிலை சத்யன் கொடுக்க, தண்ணீரால் வாயை கொப்புளித்துவிட்டு முகத்தை கழுவிக்கொண்டு வந்து பழைய இடத்தில் அமர்ந்தாள்

சிறு குற்ற உணர்வுடன் சத்யனை நிமிர்ந்துப் பார்த்து “ ஸாரிங்க நான் டீ குடிக்க மாட்டேன், அதுவும் காலி வயிற்றில் குடிச்சதும் வாந்தி வந்திருச்சு” என்று கூறிவிட்டு தலையை கவிழ்ந்தாள்,

“ டீ குடிக்க மாட்டீங்கன்னா சொல்ல வேண்டியது தானே,, வேற ஏதாவது வாங்கிட்டு வந்திருப்பேனே” என்று சத்யன் ஆதங்கத்துடன் கேட்க....

“ நீங்க வாங்கிட்டு வந்த பிறகு சொல்றது வேஸ்ட்ன்னு குடிச்சிட்டேன்” என்றாள் மான்சி

சத்யனுக்கு ஆச்சர்யமாக இருந்தது, இவளால் யாரையுமே மனம் நோகச் செய்யமுடியாது, உண்மையில் வித்தியாசமானவள்,, அவன் மான்சியைப் பற்றி சிந்திக்கும் போதே மார்ச்சுவரி ஊழியர் சத்யனை கையசைத்து “ PC சார் இங்க வாங்க” என்று அழைக்க, சத்யன் எழுந்து அங்கே ஓடினான்

சிறிதுநேரம் அவரிடம் பேசிவிட்டு ஒருசில பேப்பர்களுடன் மறுபடியும் மான்சியிடம் வந்தவன் அவள் முன்பு மண்டியிட்டு “ இந்த பேப்பர்ல இன்ட்டூ மார்க் பண்ணிருக்க இடத்தில் எல்லாம் கையெழுத்துப் போடுங்க” என்றான்,,

மான்சி அவன் குறிபிட்ட இடங்களில் கையெழுத்துப் போட்டுவிட்டு கண்ணீருடன் நிமிர்ந்து “ எல்லாம் முடிஞ்சு போச்சா? ” என்றாள் ,

ஆமாம் என்று தலையசைத்தவன் “ இதோபாருங்க இன்னும் கொஞ்ச நேரத்துக்கு எனக்கு சில வேலைகள் இருக்கு, நான் முகுந்தன் பாடியை எடுத்துகிட்டு வர்ற வரைக்கும் நீங்க அழாம உட்கார்ந்திருக்கனும், உங்களை இப்படி தனியா விட்டுட்டு போகவே மனசுக்கு கஷ்டமா இருக்கு, ப்ளீஸ் தைரியமா தெளிவா இப்படியே உட்கார்ந்திருங்க” என்று கெஞ்சலாக கூறிவிட்டு அங்கிருந்து நகர்ந்தான் சத்யன்

மான்சி கையெழுத்துப் போட்ட பேப்பர்களை ஊழியரிடம் கொடுக்க, அதை வாங்கிக்கொண்டு “ கேட்டுக்கு பக்கத்துல இருக்கு கடையில வெள்ளை காடாத்துணி விப்பாங்க அதுல அஞ்சு மீட்டர் வாங்கிட்டு வாங்க சார்” என்றான்




சத்யன் மறுபடியும் வெளியே ஓடி டீக்கடையில் விசாரித்து காடாத்துணியை வாங்கிக்கொண்டு உள்ளே வந்து திரும்பி மான்சியைப் பார்த்தான், அவளும் அந்தநேரத்தில் அவனைதான் பார்த்துக்கொண்டு இருந்தாள், ‘ நான் அழவில்லை தைரியமாகத்தான் இருக்கிறேன்’ என்று அவனுக்கு உணர்த்துவது போல முடிந்தளவு நிமிர்ந்து அமர்ந்திருந்தாள்

சத்யன் நிம்மதியாக மற்ற வேலைகளை கவனித்தான்,, குஞ்சுகளுக்கு இரைதேடும் பட்சிகளின் ஓசையுடன் பொழுது பளிச்சென்று விடிந்தது,, அதற்குள் இன்னும் இரண்டு உடல்கள் மார்ச்சுவரிக்கு வந்துவிட அந்த உயிரற்ற உடலின் உறவினர்கள் பெரும் கூச்சலுடன் தரையில் உருண்டு புரண்டு அழ, சத்தம்கேட்டு வெளியே வந்த சத்யன் இந்த கூச்சலில் மான்சி எங்கே மறுபடியும் மிரண்டு விடுவாளோ என்று அச்சத்துடன் அவளை அடைந்தபோது,, மான்சியுடன் ஐந்தாறு பேர் நின்றிருந்தனர்

மான்சி அழுதபடி ஒரு இளம் பெண்ணின் தோளில் சாய்ந்திருந்தாள், சத்யன் குழப்பத்துடன் மான்சியின் முகத்தைப் பார்க்க,, மான்சி அங்கிருந்தவர்களிடம் “ இவருதான் அந்த சார்” என்று சொல்லிவிட்டு மறுபடியும் தனது அழும் பணியை தொடர்ந்தாள்

அங்கிருந்தவர்களில் ஒல்லியான ஒரு இளைஞன் சத்யனை நெருங்கி அவன் கைகளைப் பற்றிக்கொண்டு “ சார் போலீஸ்னாலே கொடும்பாவி ரேஞ்சுக்கு பேசுற இந்த காலத்தில் உங்களைப்போன்ற மனிதாபிமானம் உள்ள சிலரால தான் சார் அந்த டிப்பார்ட்மெண்ட் பேரை காப்பாத்த முடியுது, நாங்கல்லாம் மான்சி கூட வேலை செய்றவங்க, மிட்நைட் சிப்ட் முடிஞ்சு வீட்டுக்கு வர்றப்பதான் எங்களுக்கு விஷயம் தெரியும், மான்சி தனியா இருந்து என்னபண்ணுதோன்னு காலையில முதல் பஸ்ஸுக்கு கிளம்பி ஓடிவந்தோம் சார், வந்ததும் மான்சி சொல்லுச்சு நீங்கதான் நேத்துலேருந்து உதவி பண்றீங்கன்னு, நீங்க தெய்வம் மாதிரி சார் ” என்று அந்த இளைஞன் கண்கலங்க உணர்ச்சிகரமாக பேசினான்

அந்த இளைஞனின் கையை தட்டிய சத்யன் “ நானும் மனுஷன்தான், எனக்கும் அம்மா அப்பா தங்கை தம்பின்னு ஒரு குடும்பம் இருக்கு, எப்படியும் டிப்பார்ட்மெண்ட்ல இருந்து இவங்ககூட ஒரு PC அனுப்புவாங்க, அவங்க சும்மா ஒப்புக்கு வந்துட்டு உடனே வீட்டுக்குப் போயிருப்பாங்க, எனக்கு இவங்க ஏற்கனவே சிறையில் அறிமுகம் ஆனவங்கங்கறதால கூடவே இருந்து உதவனும்னு தோனுச்சு, அதோடு இவங்களோட இந்த நிலைமையும் என்னை நகரவிடாமல் பண்ணிருச்சு, அவ்வளவுதான் , இதுக்குப் போய் ஏன் தெய்வம் அது இதுன்னு பெரிய வார்த்தை எல்லாம் சொல்றீங்க” என்று அந்த இளைஞனை சமாதானம் செய்தான் சத்யன்

அந்த இளைஞன் கண்களை துடைத்துக்கொண்டு “ எல்லாம் முடிஞ்சதா சார்? எப்போ குடுப்பாங்க?” என்று கேட்க

“ ம்ம் ஓரளவுக்கு முடிஞ்சது,, இப்பதான் காடா வாங்கிட்டுப் போய் குடுத்தேன் பாடியை கவர்ப் பண்ணிக்கிட்டு இருக்காங்க” என்றான் சத்யன்

“ எதுனால சார் இப்படி திடீர்னு இறந்துட்டாரு?, என்னப் ப்ரச்சனை?” என்று மறுபடியும் அந்த இளைஞன் கேட்க

திரும்பி மான்சியைப் பார்த்த சத்யன், பிறகு மறுபடியும் அந்த இளைஞனிடம் திரும்பி “ போஸ்ட்மார்ட்டம் பண்ண டாக்டர் கிட்ட நான் விசாரிச்ச வரைக்கும், முகுந்தன் மரணம் நிச்சயிக்கப்பட்டது தான்னு சொல்றாரு, அதிகமான போதை பழக்கம் அவனோட உள்ளுறுப்புகள் மொத்தத்தையும் டேமேஜ் பண்ணிருச்சாம், இத்தனைநாள் இருந்தததே ஆச்சர்யம்னு சொல்றாரு” என்றவன் மறுபடியும் அழுதுகொண்டிருந்த மான்சியைப் பார்த்துவிட்டு “ ஆகமொத்தத்தில் எல்லாரும் கதறியழுது வேதனைப்படும் அளவுக்கு முகுந்தனின் மரணம் அப்படியொன்றும் பரிதாபமானது இல்லை” என்று கூறிவிட்டு அங்கிருந்து நகர்ந்தான்


முகுந்தனின் உடல் சத்யனிடம் ஒப்படைக்கப்படும் போது காலை மணி பத்தாகிவிட்டது, இரண்டு ஊழியர்கள் முகுந்தனின் உடல் ஸ்ட்ரெச்சரில் வைத்து தள்ளிவந்து வெளியே விட, சத்யன் அவர்களிடம் சில நூறுரூபாய்களை கொடுத்துவிட்டு, ஸ்ட்ரெச்சரை ஓரமாக இழுத்து நிறுத்திவிட்டு மான்சியிடம் வந்தான்

அதற்குள் எல்லோரும் மான்சியை அழைத்துக்கொண்டு முகுந்தன் உடலருகே வந்தனர், முகுந்தனின் தலையில் கட்டப்பட்டிருந்த துணியில் உள்ளிருந்து ரத்தம் கசிந்து வழிந்து வெள்ளைத்துணியில் உடனடியாக பரவியது, சத்யன் அதை கவனித்து மான்சியை ஒதுக்குவதற்குள் அவள் அதை கவனித்துவிட்டாள், அடுத்த நிமிடம் “ அய்யோ” என்ற பெரும் அலறலுடன் மயங்கி சரிந்தாள்

பட்டென்று நெற்றியில் தட்டிக்கொண்ட சத்யன் “ அவங்க இதையெல்லம் பார்த்தா தாங்குவாங்களா? ஏன்பா அதுக்குள்ள இங்க கூட்டி வந்தீங்க?” என்று அழைத்து வந்தவர்களைப் பார்த்து கடிந்து கொண்டான்

“ ஸாரி சார்” என்றவர்கள் மான்சியை அழைத்துக்கொண்டு அங்கிருந்து தள்ளிப் போய் நின்றார்கள்,

அந்த ஒல்லியான இளைஞன் சத்யன் அருகே வந்து “ சார் என் பேர் அரவிந்த்” என்று முதன் முறையாக தன் பெயர் சொல்லி அறிமுகம் செய்துகொண்டு “ ஏதாவது வண்டி ரெடி பண்ணி எடுத்திட்டு போயிடலாம் சார்” என்றான்

“ ஆமா அரவிந்த் ஆஸ்பிட்டல் இலவச பிண வண்டி வெளியே போயிருக்காம் வேற வண்டி தான் ஏற்பாடு பண்ணனும்” என்று கூறிவிட்டு சத்யன் மான்சியின் அருகே வந்த போது, அவள் மயக்கம் தெளிந்து தோழி ஒருத்தியின் தோளில் சாய்ந்து அழுது கொண்டிருந்தாள்

அப்போது சத்யன் அருகே வந்த புதிய நபர் ஒருவர் “ சார் நான் மான்சி குடியிருக்கும் வீட்டு ஓனர்” என்று தன்னை அறிமுகம் செய்து கொண்டார்
மான்சி ஏற்கனவே அந்தாளைப்பற்றி சத்யனுக்கு சொல்லியிருந்ததால், நீயெல்லாம் ஒரு மனுஷனாடா? என்ற அருவருத்த பார்வையுடன் “ சொல்லுங்க சார், இப்படித்தான் ஒரு பொண்ணை சிறையில அனாதரவா விட்டுட்டுப் போவீங்களா?” என்று கோபமாக கேட்டான்

“ நான் என்ன சார் பண்ண முடியும், எனக்கும் குடும்பம் இருக்கு, நாளைக்கு ஏதாவது ஒரு பிரச்சினைன்னா யாரு அவஸ்தை படுறது இந்த பொண்ணைப் பத்தி தெரிஞ்சு தங்க வீடு குடுத்ததே பெரிய விஷயம் ” என்று குரலை உயர்த்தி பேசியவன் “ அதுமட்டுமில்ல சார் என்னோட மகளுக்கு கல்யாணம் நிச்சயம் பண்ணிருக்கேன் இந்த நேரத்துல பிணத்தை வீட்டுக்கு கொண்டு வந்து போட்டு அழுதா நல்லாருக்காதுன்னு என் வீட்டுல அபிப்ராயப்படுறாங்க, பாடியை என் வீட்டுக்கு எடுத்திட்டு வராம வேற எங்கயாவது கொண்டு போயிடுங்க சார், அப்புறம் கல்யாணத்துக்கு வர்றவங்க தங்க வீடு வேனும், அதனால இன்னும் ஒரு வாரத்துல வீட்டை காலிப் பண்ணிட்டு இந்த பொண்ணோட சாமான்களை எல்லாம் எடுத்துக்க சொல்லுங்க” என்று மனிதாபிமானம் இன்றி அந்த மனிதமிருகம் பேச சத்யனுக்கு ஆத்திரமாய் வந்தது

“ நீயெல்லாம் ஒரு மனுஷனாய்யா” என்று அவன் சட்டையை கொத்தாக பற்றி உலுக்கினான், கூடியிருந்தவர்கள் சத்யனை விலக்கிவிட,, சட்டையை சரி செய்தபடி முனங்கிக் கொண்டு அங்கிருந்து கிளம்பினான் அந்தாள்


இப்போது முகுந்தன் உடலை எங்கு எடுத்துச்செல்வது என்ற குழப்பத்துடன் சத்யன் மான்சியைப் பார்க்க,, அவள் அவனை பார்த்து கண்ணீருடன் கையெடுத்துக்கும்பிட்டு “ ஏதாவது செய்யுங்களேன்” என்று கதறினாள்

சத்யன் அருகே வந்த அரவிந்த் “ சார் மான்சிக்குன்னு எந்த சொந்தமும் இல்லை, அப்படியிருக்க நொந்துபோன பாடியை ஏன் இன்னும் காக்க வைக்கனும், நேரா சுடலைக்கே எடுத்துட்டுப் போய் எல்லா காரியங்கங்களையும் முறையா செஞ்சு அடக்கம் பண்ணிடலாம், நீங்க என்ன சார் சொல்றீங்க?” என்று சத்யனிடம் கேட்க...

சத்யனுக்கும் அவன் சொல்லும் யோசனைதான் சரியென்று பட்டது, மான்சி ஏதாவது சொல்வாள் என்று அவள் முகத்தைப் பார்த்தான், அவள் கண்கள் வற்றிய நிலையில் நிலையற்ற எதையோ வெறித்தபடி நின்றிருந்தாள்

“ சரி அரவிந்த் மான்சி மத்தவங்க எல்லாரையும் ஒரு ஆட்டோவில் ஏத்தி சுடலைக்குப் போய் வெயிட் பண்ணச்சொல்லலாம்,, நாம ரெண்டு பேரும் பாடியை ஏதாவது வண்டில எடுத்துகிட்டு போகலாம்” என்று சத்யன் சொல்ல, எல்லோரும் அதுதான் சரியென்று முடிவு செய்து ஒரு ஆட்டோவில் மான்சியை அழைத்துக்கொண்டு சுடுகாட்டிற்கு கிளம்பினார்கள்

சத்யன் நூறுரூபாயை அரவிந்தனிடம் கொடுத்து “ நீங்க போய் மாலை ஒன்னு வாங்கிட்டு வாங்க, நான் வெளிய நிக்கிற வேன்கள்ல ஏதாவது பேசி ஏற்பாடு பண்றேன்” என்றான்,

அரவிந்த் உடனே வெளியே ஓட, அவன் மாலையுடன் வருவதற்குள் சத்யன் ஒரு மாருதி வேனில் முகுந்தனின் உடலை ஏற்றிவிட்டு காத்திருந்தான், அரவிந்தன் மாலையுடன் வந்ததும் அதை வாங்கி முகுந்தனின் உடலின் மீது சத்யன் போட்டான், இந்த பொல்லாத உலகில் மான்சி சீரழிந்துவிடாமல் ஒரு சமூக அந்தஸ்தை கொடுத்தவனுக்காக சத்யன் மரியாதை செய்தான், அரவிந்தன் தான் வாங்கி வந்த மாலையை முகுந்தன் உடலில் போட்டான், வேன் சுடலையை நோக்கி கிளம்பியது, நேரம் பதினொன்றை கடந்திருந்தது

வேன் சுடுகாட்டில் நின்றதும், சத்யன் வேனிலிருந்து இறங்கி அங்கிருந்த மயான ஊழியரிடம் மருத்துவமனை சான்றிதழ்களை யும், தனது ஐடென்ட்டி கார்டையும் காட்டிவிட்டு நிலைமையைக் கூறி கொஞ்சம் பணத்தை கொடுக்க, அவர் சில பொருட்களை வாங்கி வரச்சொன்னார்,

அரவிந்தன் அந்தபக்கம் வந்த ஆட்டோவில் ஏறிச்சென்று அவர் கூறிய பொருட்களை வாங்கி வர, வேனில் இருந்து இறக்கி கீழே வைக்கப்பட்ட முகுந்தனின் உடலில் இருந்த பழைய மாலைகளை எடுத்துவிட்டு வாங்கி வந்த புது வேட்டியை போட்டு போர்த்தி பன்னீர் தெளித்து, புதிதாக வாங்கிய மாலையைப் போட்டு தலைமாட்டில் தேங்காய் உடைத்து கற்பூரம் ஏற்றிவிட்டு மான்சியை அருகில் அழைத்து முகுந்தனின் கால் பகுதியில் விழுந்து வணங்கிச் சொன்னார் அந்த சுடலை ஊழியர்

கண்ணீர் இன்றி வரண்ட விழிகளுடன் இயந்திரமாக விழுந்து எழுந்தவளைப் பார்த்து “ஏன்மா ரெண்டு பேருக்கும் யாரும் சொந்தக்காரங்க இல்லைன்னு சொல்றீங்க, உனக்கு பண்ண வேண்டிய சடங்கு எல்லாம் இனிமே யாரும்மா செய்வாங்க, பேசாம வளையலையும் கழுத்துல இருக்குற கயிறையும் அவிழ்த்து செத்தவன் மடியிலயே போடு, அவனோட அதுவும் போய் சேரட்டும்” என்று அந்த ஊழியர் ஒரு நிதர்சனத்தை அலட்சியமாக கூறினார் 


அவ்வளவு நேரம் கண்ணீர் வற்றிப் போய் நின்றிருந்த மான்சி முகத்தை மூடிக்கொண்டு ஓவென்று கதறி கண்ணீர் விட ஆரம்பித்தாள், அவளின் நிலையைப் பார்த்து அங்கிருந்தவர்கள் அனைவரும் அழுதனர், முதன்முறையாக சத்யனுக்கும் கண்கள் குளமானது யாரும் பார்க்கா வண்ணம் கண்ணீரை மறைத்தவன் மெதுவாக நடந்து மான்சியை நெருங்கினான்

முகத்தை மூடிக்கொண்டு கதறியவள் சத்யன் தன்னை நெருங்கியதை உணர்ந்து முகத்தில் இருந்து கைகளை விலக்கினாள், கண்ணீர் நிறம்பிய கண்களால் அவனைப்பார்த்தாள்

“ மான்சி ” ஒரு ஈரமான இரவில் ரசனையுடன் தான் எழுதிய கவிதை வாசிப்பவன் போல அவளை சந்தித்த இத்தனை நாட்களில் முதன்முறையாக அவளை பெயர் சொல்லி அழைத்தான் சத்யன் “அவர் சொல்றது ரொம்ப சரி, இந்த சடங்குகள் எல்லாம் செய்யும் நிலையில் நாம இல்லை, அதற்கான சந்தர்ப்பமும் இல்லை, அதனால அவர் சொன்ன மாதிரி செய்துடுங்க மான்சி” என்றான் இறைஞ்சுதலாக...

சிறிதுநேர தயக்கத்திற்க்குப் பிறகு மான்சி இயந்திரமாய் தலையசைத்து தனது கழுத்தில் இருந்த மஞ்சள் கயிறை வெளியே எடுத்து தலைவழியாக கழட்டி கண்ணீரால் அதை கழுவி முகுந்தனின் உடலில் வயிற்றுப்பகுதியில் வைத்துவிட்டு மறுபடியும் அவன் காலடியில் விழுந்து எழுந்தாள், அந்த தாலியில் கூட தங்கம் இல்லை, வெறும் மஞ்சள் முடிந்திருந்தது அந்த கயிற்றில் ,,

மான்சி தன் கைகளில் இருந்த வளையல்களை கழட்ட முயன்றாள்,, சத்யனுக்கு மனசுக்குள் சுருக்கென்றது,, கடந்த நான்கு மாதங்களாக அவனிடம் மனு கொடுக்கும் வளையல் அணிந்த கைகள் இனிமேல் வளையல் இல்லாமலா? “ ம்ஹூம் வளையல் கழட்ட வேண்டாம் மான்சி” என்று அவசரமாய் தடுத்துவிட்டான்

மான்சியின் உடனிருந்த பெண்களும் “ வேண்டாம்மா, புள்ளைத்தாச்சி வளையல கழட்டாத” என்றார்கள்

விறகுகள் அடுக்கப்பட்டு முகுந்தனின் உடல் அதன் மீது வைக்கப்பட்டது, “ யாருப்பா கொல்லி வைக்கப் போறது ” என்று அந்த மனிதன் உரக்க குரல் கொடுக்க,, அத்தனைபேரும் தடுமாறி விழித்தனர்,

“ அந்தப் பொண்ணு புள்ளத்தாச்சியா இருக்குறதால அது கொல்லி வைக்க கூடாது, வேற யாராவது ஆம்பளை அந்த கொழாவுல குளிச்சுட்டு புது வேட்டியை கட்டிக்கிட்டு கொல்லி வைங்கப்பா” என்று அந்த நபர் மீண்டும் உரக்க குரல் கொடுக்க



சத்யன் மான்சியை திரும்பி பார்த்தான்,, அவள் கண்களில் கண்ணீர் நின்றபாடில்லை ‘ என்ன விலை கொடுத்தால் இவளின் கண்ணீர் நிற்கும்’ என்று தன் மனதிடமே கேள்வி கேட்டான்

சில விநாடிகள் தான் சிந்தித்தான் சத்யன், அதற்கு மேல் அவனை சிந்திக்க விடவில்லை மான்சியின் கண்ணீர், சரசரவென தனது டீசர்ட்டை கழட்டி அரவிந்தனிடம் கொடுத்தான், பேன்ட் பாக்கெட்டில் மிச்சமிருந்த பணத்தையும் செல் போனையும் எடுத்து கொடுத்தான், வேகமாக நடந்து சற்று தள்ளியிருந்த குழாயின் கீழ் அமர்ந்து தலை முழுகினான், பிறகு அங்கிருந்த வெள்ளை வேட்டியை பேன்ட்க்கு மேலேயே இடுப்பில் முடிந்துகொண்டு தோட்டியிடம் கொல்லி வைக்க விறகுக்காக கைநீட்டினான், எல்லாமே நிமிடநேரத்தில் நடந்தது

யாரோ ஒரு முகுந்தனுக்கு, ஒரு சகோதரனாக, தகப்பனாக, மகனாக.. சத்யனே இருந்து கொல்லி வைத்தான், நெருப்பு திகுதிகுவென்று எறிய கதறிய மான்சியை அணைத்தபடி சுடுகாட்டின் வெளியே அழைத்து போனார்கள் பெண்கள்


வாழ்ந்தால் உன்னோடுதான் மான்சி - அத்தியாயம் - 2

சத்யன் உடை மாற்றி வருவதற்குள் அவன் அம்மா சாந்தி வந்துவிட, மூளையில் கிடந்த கணவனைக் கூட கவனியாது மகனை நெருங்கியவள் “ சத்யா இன்னிக்கு கோயில்ல ஒரு அம்மாவை பார்த்தேன், அவங்க திருவள்ளூர்ல ஒர வரன் இருக்குறதா சொன்னாங்க, பையன் கூட்டுறவு பேங்க்ல க்ளார்க்கா இருக்காராம், இந்தம்மாவுக்கு தங்கை மகனாம் இவங்க சொல்லை தட்டமாட்டாங்களாம், ஒரு நல்லநாள் பார்த்து மாப்பிள்ளையை கூட்டிக்கிட்டு வர்றேன்னு சொன்னாங்க... நான் உன் செல்போன் நம்பர் குடுத்துருக்கேன, அந்தம்மா பேரு ராஜம்மா,, போன் பண்ணா என்னா ஏதுன்னு தகவல் கேட்டு சொல்லு சத்யா” என்று உற்ச்சாகமாய் பேசும் அம்மாவையேப் பார்த்தான் சத்யன்

‘ அடபோம்மா இப்போ வர்றவனும் பஜ்ஜி சொஜ்ஜின்னு தின்னுட்டு வரதட்சணை பத்தாதுன்னு சொல்லிட்டு போகப்போறான்’ என்று வாய்வரை வந்த வார்த்தைகளை விழுங்கிவிட்டு தற்சமயம் சந்தோஷமே உருவாக நிற்கும் அம்மாவின் மனநிலையை கெடுக்க மனமின்றி “ சரிம்மா கால் பண்ணா என்ன விஷயம்னு கேட்டு உனக்கு சொல்றேன்” என்று கூறிவிட்டு ரிமோட்டை எடுத்து டிவியை ஆன் செய்துவிட்டு தரையில் அமர்ந்தான்



சற்றுநேரத்தில் அந்த வீட்டின் கடைக்குட்டி அருணும் வந்துவிட, பாக்யாவிற்கு திருமணமே நிச்சயமாகிவிட்டது போன்ற உற்சாகத்துடன் அனைவரும் பேசிச் சிரித்தபடி உணவை முடித்துக்கொண்டு படுத்துவிட்டனர், இடியே விழுந்தாலும் எழுந்திருக்க மாட்டேன் என்ற பிடிவாதத்துடன் மூர்த்தி தூங்கினார்

அடுத்த இரண்டு நாட்கள் எந்தவிதமான மாற்றங்களும் இன்றி இயல்பாக போக, வியாழன் அன்று மனுக்கள் சரிபார்க்கப்பட்டு பார்வையாளர்கள் வரிசையில் நின்றிருந்த மான்சியைப் பார்த்து சினேகமாய் புன்னகை செய்துவிட்டு வரிசையை ஒழுங்குபடுத்த போய்விட்டான் சத்யன்

வரிசையில் நின்ற மான்சி அடிக்கடி இவனைப் பார்ப்பதுபோல் இருக்க சத்யன் அவளை நெருங்கி என்ன என்பதுபோல் பார்வையால் வினாவினான் ,...

பெரும் தயக்கத்திற்குப் பிறகு தனது கையில் இருந்த பையைப் பிரித்து அதில் இருந்து இரண்டு பிடி கட்டுகளை எடுத்து முந்தானை மறைவில் ரகசியமாக அவனிடம் காட்டி “சார் இதை உள்ள எடுத்துட்டுப் போக அனுமதிங்க சார், இது இல்லாம பார்க்க வராதேன்னு சொல்லிட்டாரு சார்” என்று மான்சி சத்யனிடம் கெஞ்சினாள்.... விட்டால் அழுதுவிடுவாள் போல இருந்தது

‘ ஓ அன்னிக்கு இதுக்குத்தான் இந்தப் பொண்ணை அழ வச்சான் போலருக்கு’ என்று மனதுக்குள் எண்ணியபடி “ ம்ம் மறைச்சு எடுத்துப்போய், யாரும் பார்க்காம மறைவா குடுங்க” என்ற சத்யன் முதன்முறையாக மான்சிக்காக தனது நடத்தை விதியை மீறினான், இன்றும் இந்த ஏழை கர்ப்பிணிப் பெண் அழக்கூடாது என்ற எண்ணத்தில் தான் மீறினான்

அவன் சம்மதம் சொன்னதும் அவள் முகத்தில் பட்டென்று ஒரு சந்தோஷம் மின்னலாய் புறப்பட்டு உடனே மறைந்தது,

அத்தோடு சில வாரங்கள் சத்யனுக்கு ஜெயிலுக்குள் காவல் இருக்கவேண்டும் என்று பணி மாற்றப்பட மான்சியை பார்க்கும் வாய்ப்பு பெரிதும் குறைந்து போனது,

அதற்கேற்றார்போல் பாக்யாவை பார்க்க வந்த மாப்பிள்ளை ராமசந்திரனுக்கு அவளை பிடித்துவிட, அதிக பேரமின்றி திருமணம் பேசி முடிவானது, எந்தவிதமான வரதட்சணையையும் எதிர்பார்க்காத மாப்பிள்ளை வீட்டார், ஒரு கோரிக்கையை மட்டும் முன் வைத்து அதில் பிடிவாதமாகவும் இருந்தனர்..


மாப்பிள்ளை ராமுவின் தங்கை அனுசுயாவை சத்யன் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்ற ஒரேயொரு கோரிக்கை சத்யன் முன்பு வைக்கப்பட்டது,, திருமணமே நடந்துவிட்டது போல பூரித்திருந்த தங்கையைப் பார்த்த சத்யனுக்கு அவர்களின் கோரிக்கையை நிராகரிக்க மனமில்லை, ராமுவின் தங்கை முகத்தை பார்க்காமலேயே நிபந்தனைக்கு ஒத்துக்கொண்டான்,

ஆனால் முதலில் தங்கைக்கு நிச்சயதார்த்தம் நடக்கட்டும் பிறகு தனக்கு வைத்துக்கொள்ளலாம் என்று சத்யன் முடிவாக சத்யன் கூறிவிட எல்லோரும் ஒத்துக்கொண்டனர்

பாக்யாவின் நிச்சயதார்த்த வேலையில் சத்யன் வேலையில் மான்சியையும் முகுந்தனையும் சத்யன் மறந்தே போனான்,, பகல்நேரத்தில் நிச்சயதார்த்த வேலைகள் இருந்ததால் இரவுநேர பணிக்கு அனுமதி வாங்கி தொடர்ந்து நான்கு நாட்கள் இரவு பணி செய்தான்,

ஜந்தாவது நாள் இரவு எட்டு மணிக்கு சாப்பிட்டுவிட்டு வீட்டிலிருந்து கிளம்பி சிறைச்சாலையின் சிறு வாயில் வழியாக உள்ளே வந்து, கையெழுத்துப் போட்டுவிட்டு உள் வளாகத்தின் படிகளில் ஏறியவன் ஏதோவொரு உந்துதலில் பட்டென்று நின்று திரும்பிப் பார்த்தான்

அவன் யூகம் தப்பவில்லை, அழுது வடியும் சோடியம் விளக்கின் வெளிச்சத்தில் சற்று தொலைவில் இருந்த மரத்தடி சிமிண்ட் மேடையில் மான்சி அமர்ந்திருப்பது தெரிந்தது..

சட்டென்று உடல் பதறினான் சத்யன், இந்த நேரத்தில் இவள் இங்கே என்னப் பண்றா? என்று கேள்விக்கு விடை காணும் ஆவலில் மான்சியை நோக்கி ஓடினான்

அவன் நெருங்கும்போதே மான்சி முந்தானையை வாயில் வைத்தபடி அழுதுகொண்டிருப்பது தெரிய சத்யனின் பதட்டம் அதிகமானது, “ என்னாச்சுங்க? இந்த நேரத்தில் இங்க என்ன பண்றீங்க?” என்று சத்யன் பதட்டமாக கேட்க
அவன் குரல் கேட்டதும் விலுக்கென்று நிமிர்ந்தவள், சத்யன் முகத்தைப் பார்த்ததும் அழுகை குமுறி வெடிக்க தலையிலடித்துக்கொண்டு ஓவென்று கதறினாள் மான்சி

சத்யனுக்கு ஒன்றும் புரியவில்லை, ஆனால் அவள் அழுகை அவன் நெஞ்சை பிளந்தது, சட்டெனக் குனிந்து தலையில் அடித்துக்கொண்ட கைகளைப் பற்றி தடுத்து “ என்னம்மா ஆச்சு? இந்த நிலையில இப்படி அழலாமா? முகுந்தனுக்கு உடம்புக்கு ஏதாவதுன்னு தகவல் சொன்னாங்களா?” என்று சத்யன் மறுபடியும் கேட்க

ஒரு நீண்ட கதறலுக்குப் பிறகு “ அவரு செத்துபோயிட்டாராம்,, நெஞ்சுவலின்னு சொன்னாராம் கொஞ்சநேரத்தில செத்துட்டாராம், மதியானம் மூனு மணிக்கு தகவல் சொன்னாங்க, அப்பவே வந்து இங்க காத்து கெடக்கேன், அவர் உடம்பை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு போயிட்டாகளாம், அவரை வாங்க ஒரு போலீஸ்காரரை அனுப்புறேன்னு சொன்னாங்க ஆனா இன்னும் யாரும் வரலை” என்றவளுக்கு இயலாமையால் மீண்டும் கண்ணீர் வெடித்தது


அவள் கூறியதை கேட்ட சத்யனுக்கு திக்கென்றது, மதியத்தில் இருந்து ஒரு கர்ப்பிணியை இப்படி கதற வைக்கும் டிப்பார்ட்மெண்ட்டை நினைத்து ஆத்திரமாக வந்தது, மான்சிக்கு ஏதாவது செய்ய அவன் இதயம் துடித்தது

“ கொஞ்சநேரம் அழாம இங்கேயே இருங்க, நான் உள்ள போய் பர்மிஷன் வாங்கிட்டு வந்திர்றேன், நானே உங்ககூட ஆஸ்பத்திரிக்கு வர்றேன்” என்றவன் அவள் பதிலை எதிர்பாராமல் ஜெயிலரின் அறைக்கு ஓடினான்

ஜெயிலரை சந்தித்து மான்சியுடன் செல்ல அனுமதி வாங்கிய சத்யன், உடனடியாக வெளியே வந்து மான்சி இருக்குமிடம் வந்து “ வாங்க கிளம்பலாம், உங்க கூட வர்றதுக்கு எனக்கு பர்மிஷன் குடுத்திருக்காங்க ” என்று கூற

மான்சி அழுகையை அடக்க முயன்று தோற்றபடி எழுந்து சத்யனுடன் சிறையிலிருந்து வெளியே வந்தாள்

ஒரு ஆட்டோ பிடித்து அதில் மான்சியை ஏற்றிவிட்டு, தனது பைக்கில் பின்தொடர்ந்தான் சத்யன், அடுக்கம் பாறை அரசு மருத்துவமனைக்கு அவர்கள் இருவரும் செல்லும் போது இரவு பத்து மணி ஆகியிருந்தது

முகுந்தனின் உடல் இன்னும் பிரேத பரிசோதனை செய்யப்படாமல், மார்ச்சுவரியின் வராண்டாவில் இருந்த ஸ்டெர்ச்சரில் அனாதையாக கிடந்தது, அந்த உடலைப் பார்த்ததும் அய்யோ என்று கதறியபடி மயங்கி சரிந்தவளை சத்யன் தன் கைகளில் தாங்கி மார்ச்சுவரியின் வெளியே தரையில் கிடத்தினான்,

கர்ப்பிணியான அவளை பார்க்கவே சத்யனின் வயிறு கலங்கியது, பாவம் என்னேரம் சாப்பிட்டாள் என்று தெரியவில என சத்யனின் நெஞ்சம் கசிந்தது ,, உப்பிய வயிற்றுடன் கிழிந்த நாராய் துவண்டு கிடந்தவளைப் பார்த்து ஏதும் செய்ய இயலாமல் தவித்து நின்றான்

முதலில் அவளுக்கு மூர்ச்சை தெளிவிக்க வேண்டும் என்று தோன்ற, வேறு ஓரு உடலுக்காக காத்திருந்த சிலரிடம் அவளைப்பார்த்து கொள்ளும் படி கூறிவிட்டு மருத்துவமனைக்கு வெளியே வந்து தண்ணீர் பாட்டிலும் ஒரு கூல்டிரிங்க் பாட்டிலும் வாங்கிக்கொண்டு அவசரமாக உள்ளே ஓடி வந்து தண்ணீரை மான்சியின் முகத்தில் தெளித்து மயக்கம் தெளிவித்தான்

கண்விழித்து அவன் முகத்தைப் பார்த்து மறுபடியும் கதறியவளின் முகத்தை அவனையுமறியாது அவன் கைகள் தன் நெஞ்சோடு அணைத்தது




" கனவுகள் காற்றாய் கலைந்ததால்..

" உடைபட்டு போனது மான்சியின் இதயம்!

" ஆனால் ஒரு சிப்பி வதைக்கப்பட்டு..

" திறக்கப்படும் போதுதான்..

" ஒரு முத்து மின்னுகிறது!

" நெருப்பு என்பது வெப்பத்தின் வெளிப்பாடு மட்டுமல்ல...

" குளிர்ச்சியின் குறீயீடும் அதுவே!

" மான்சி வெப்பத்தின் வெளிப்பாடா?

" குளிர்ச்சியின் குறீயீடா?



மான்சியின் முகத்தை தன் நெஞ்சோடு வைத்து அழுத்திக்கொண்ட சத்யனுக்கும் கண்களில் நீர் திரண்டது, மூச்சை அடக்கி கண்ணீரை வெளிவராமல் தடுத்த சத்யன், யூனிபார்முடன் ஒரு பெண்ணை அணைத்து ஆறுதல் சொல்வது பார்பவர்கள் கண்களுக்கு வித்தியாசமாக தெரியக்கூடும் என்று உணர்ந்து மான்சியை விலக்கி அமர வைத்து கூல்டிரிங்ஸ் பாட்டிலை திறந்து அவள் முன்பு நீட்டி “ கொஞ்சம் குடிங்க” என்று சத்யன் வற்புறுத்தினான்

அவன் எவ்வளவு வற்புறுத்தியும் மான்சி தண்ணீரைக் கூட குடிக்க மறுத்தாள், நிறைமாத வயிற்றுடன் அரைநாள் பட்டினியால் மிகவும் சோர்ந்து காணப்பட்ட மான்சியின நிலைமை சத்யனுக்கு கவலையாக இருந்தது, சற்று துணிந்து மறுபடியும் பாட்டிலை அவள் வாயருகே எடுத்துச்சென்று “ இதோ பாருங்க நீங்க வெறும் ஆளா இருந்தா பட்டினி கிடங்கன்னு விட்டுடுவேன், ஆனா உங்க வயித்துல ஒரு ஒரு ஜீவன் இருக்கு அதை நினைச்சுப் பாருங்க... ப்ளீஸ் கொஞ்சூண்டு மட்டும் குடிங்க கொஞ்சம் தைரியம் வரும்” என்று சத்யன் மான்சியிடம் கெஞ்சினான்

சத்யன் மன்றாடுவதை கவனித்த அவர்களின் அருகில் இருந்த ஒரு பெண்மணி எழுந்து மான்சியின் மறுபக்கம் அமர்ந்து “ யம்மா அந்த தம்பியும் எம்புட்டு நேரமா கெஞ்சுது, கொஞ்சம் குடியம்மா... நாம பட்டினிக் கிடந்தா போன உசுரு திரும்ப வந்திடுமா தாயி,, வயத்துப் புள்ளக்காரி இப்படி இருக்ககூடாது” என்று மான்சியிடம் அன்பாக கூறிவிட்டு “ இப்புடி குடு தம்பி நான் குடுப்பாட்டுறேன்” என்று சத்யனிடமிருந்து பாட்டிலை வாங்கி மான்சியின் தலைய பிடித்துக்கொண்டு வாயில் ஊற்றி குடிக்க வைத்தாள் அந்த பெண்

எப்படியே அரை பாட்டில் வரை குடித்துவிட்டாள் மான்சி, சத்யன் அந்த பெண்ணுக்கு நன்றி சொல்ல... “ செத்துப்போனவரு உன் சம்சாரத்துக்கு என்ன உறவு தம்பி?” என்று அந்த பெண்மணி கேட்க..

மான்சி திகைப்புடன் நிமிர்ந்து சத்யனைப் பார்த்துவிட்டு தலையை குனிந்துகொண்டாள்..... சத்யன் ஒரு நிமிடம் கண்களை மூடித் திறந்தான்,, அவன காதுகளில் மறுபடியும் பாரதியாரின் அந்த பாடல் வரிகள் ஒலித்தது, கலங்கிய கண்களை அந்த பெண்ணுக்கு மறைத்து “ செத்துப்போனவர்தான் இவங்க புருஷன் அம்மா.... நான் செத்துப்போனவருக்கு நண்பன்” என்று சூழ்நிலையை சுமுகமாக்கினான் சத்யன்,, அவனுக்குத் தெரியும்..... மான்சியின் நண்பன் என்று சொன்னால் அதை உலகம் ஏற்றுக்கொள்ளாது என்று... அதனால்தான் இறந்துபோன முகுந்தனை நண்பனாக்கிக் கொண்டான்

“ அய்யோ கடவுளே....... இதென்ன கொடுமை வயித்துப் புள்ளயோட இப்படி நடுத்தெருவுல விட்டுட்டுப் போயிட்டானே ” என்று அங்கலாய்த்தபடி எழுந்த அந்த பெண் அவள் உறவினர்கள் இருந்த இடத்தில் சென்று அமர்ந்தாள்

சத்யன் எழுந்து மார்ச்சுவரி அறைக்குள் சென்று பார்த்தான்,, அப்போதுதான் ஒரு உடலை பேக் செய்து முடித்து வெள்ளை காடாத் துணியில் சுற்றிக்கொண்டு இருந்தனர், அங்கிருந்த ஊழியரிடம் “ ஏம்ப்பா வெளிய இருக்குற கைதியோட பாடி ஆரம்பிக்க இன்னும் எவ்வளவு நேரம் ஆகும்? சொந்தக்காரங்க யாருமில்லபா,, ஒரேயொரு லேடி மட்டும் தான் வெயிட் பண்றாங்க,, கொஞ்சம் சீக்கிரமா முடிச்சு குடுங்கப்பா” என்று சத்யன் கேட்க

“ இன்னா சார் நீயும் எங்க நெலமை புரியாம பேசுற,, இன்னிக்கு நிறைய பாடி வந்திருக்கு சார்,, இன்னிக்கு காலையிலேர்ந்து ஒன்னு ஒன்னா அறுத்து தைச்சு அனுப்பிக்கிட்டு தான் இருக்கோம் இன்னும் முடிஞ்ச பாடில்லை,, இன்னும் ஒரு சூசைட் கேஸ் இருக்கு அது முடிஞ்சதும் உங்க கேஸ்தான் சார்,, நீங்க வூட்டுக்குப் போய் தூங்கி எழுந்து காலையில ஆறு ஏழு மணிவாக்கில் வாங்க அதுக்குள்ள ரெடியாயிரும்” என்று மார்ச்சுவரி ஊழியர் சொல்ல

சத்யன் தலையசைத்து விட்டு வெளியே வந்தான், வீட்டுக்குப் போய் தூங்கிவிட்டு வருவதாமே,, இவளை இந்த நிலையில் விட்டுவிட்டா போகமுடியும்? என்று தனக்குள் விவாதித்துக்கொண்டு மான்சியைப் பார்த்தான்

இரவுநேர குளிர் உடலை வாட்ட உடலை குறுக்கிக்கொண்டு முந்தானையால் இழுத்து மூடியபடி வெறும் தரையில் சுருண்டு கிடந்தாள்...

சத்யன் சற்று ஒதுக்குப்புறமாக சென்று தனது மொபைலை எடுத்து வீட்டு செல்லுக்கு கால் செய்தான்,, சற்றுநேரத்தில் பாக்யாதான் எடுத்து “ சொல்லுண்ணா?” என்றாள்

“ அப்பா வீட்டுக்கு வந்துட்டாரா பாகி? ” என்று சத்யன் கேட்க

“ இன்னும் இல்லண்ணா,, மணி பனிரெண்டாகப் போகுது எங்க குடிச்சிட்டு விழுந்து கிடக்காரோ” என்று கவலையுடன் பாக்யா கூற

“ சரிம்மா தெளிஞ்சதும் வருவாரு,, அருண் இருந்தா கூப்பிடு கொஞ்சம் அர்ஜண்ட்” என்று சத்யன் சொன்னதும்...

“ சரிண்ணா படிச்சுகிட்டு இருக்கான் இதோ கூப்பிடுறேன்” என்றவள் அருணை அழைப்பது சத்யனுக்கு கேட்டது

சற்றுநேரத்தில் “ அண்ணா சொல்லுங்க” என்று அருணின் குரல் கேட்டது

“ அருண் நான் இப்போ அடுக்கம் பாறை ஜிஹெச்ல இருக்கேன், ஜெயில்ல ஒரு அக்யூஸ்ட் இறந்துட்டான், அந்த பாடியை உடையவங்க கிட்ட ஒப்படைக்க வந்திருக்கேன், நீ எனக்கு ஒரு டீசர்ட்டும், சால்வை ஒன்னும் எடுத்துக்கிட்டு, எனக்கு பணம் கொஞ்சம் தேவைப்படுது, அதனால அம்மாகிட்ட பணம் இருந்தா ஒரு நாலாயிரம் வாங்கிட்டு வா,, பக்கத்து வீட்டு குமார் கிட்ட பைக் கேட்டு அதுல வந்துடு அருண்” என்று சத்யன் விளக்கமாக கூற ..

“ சரியண்ணா இன்னும் கொஞ்சநேரத்தில் அங்கே இருப்பேன்” என்ற அருண் இணைப்பை துண்டித்தான்

சத்யன் செல்லை ஆப் செய்து பாக்கெட்டில் போட்டுக்கொண்டு மான்சியின் அருகே வந்தான், படர கிளையில்லாமல் துவளும் கொடியாக கிடந்தாள், எங்கோ பிறந்து எங்கோ வளர்ந்து, இங்கே வந்து இப்படியொரு சூழ்நிலையில் இருப்போம் என்று அவளே எதிர்பார்த்திருக்க மாட்டாள்

அவளுக்கு பக்கத்தில் இருந்த கல்லில் அமர்ந்த சத்யன் “ ஏங்க தகவல் தெரிஞ்சதும் உங்ககூட யாருமே வரலையா? நீங்க வேலை செய்ற இடத்தில் இருந்து? குடியிருக்குற இடத்தில் இருந்து? யாருமேவா துணைக்கு வரலை? ” என்று சத்யன் மெதுவாக கேட்க

சேர்ந்து கிடந்தவள் மெதுவாக அவனை நிமிர்ந்து பார்த்து “ காலையிலேருந்தே உடம்புக்கு சரியில்லைன்னு நான் இன்னிக்கு வேலைக்கு போகலைங்க, அதனால கம்பெனியில யாருக்குமே தெரியாது, நான் இருக்குற ஹவுஸ் ஓனர் தகவல் தெரிஞ்சதும் வந்தார், ஜெயில்ல கையெழுத்து கேட்டதும், நீ போட்டுட்டு இங்கேயே இரும்மா நான் வீட்டுக்குப் போய்ட்டு வர்றேன்னு சொல்லிட்டு போனவர் இப்ப வரைக்கும் வரலை” என்று குரலில் சோகம் கொப்புளிக்க மான்சி பேசப்பேச சத்யனுக்கு உள்ளுக்குள் கொதித்தது



பிரச்சனைகளுக்கு பயந்து உள்ளுக்குள் அடங்கும் மனிதர்கள் இருக்க இருக்க இதுபோன்ற அபலைகளின் கதி இதுதான், அதற்கு மேல் சத்யன் எதுவும் பேசவில்லை அங்கேயே சிறிதுநேரம் நின்றுவிட்டு, மருத்துவமனை வாசலை நோக்கி நடந்தான் சத்யன், கேட்டுக்கு வெளியே இருந்த சுவற்றில் சாய்ந்து நின்று ‘ இனி இந்த பெண்ணின் கதியென்ன’ என்று குழம்பினான்

அப்போது அவன் செல் ஒலிக்க எடுத்துப் பார்த்தான் ,, அருண்தான் “ சொல்லு அருண்?” என்றான் சத்யன்

“ அண்ணா நான் ஆஸ்பிட்டல் கிட்ட வந்துட்டேன், நீ எங்கருக்க?” என்று அருண் கேட்க

“ ஆஸ்பிட்டல் பின்புறம் மார்ச்சுவரிக்கு வர்ற வழியிருக்கு, அங்கே ஒரு என்ட்ரன்ஸ் இருக்கும் அங்க வா அருண்” என சத்யன் அடையாளம் சொன்னான்


வாழ்ந்தால் உன்னோடுதான் மான்சி - அத்தியாயம் - 1

வானம் தங்கநதியாய் பொங்கி வழியும் காலைப்பொழுது.... திரைப்படத்திற்கு போவதை திருவிழாவைப் போல கொண்டாடும் நடுத்தரவர்க்கத்து பெண்களைப்போல் மேகங்கள் கண்கூசும் ஜொலிப்புடன் ஆங்காங்கே மிதந்துக்கொண்டிருந்தன

தமிழ்நாட்டில் சூரியனின் பார்வையில் எப்போதும் செல்லப்பிள்ளையாக வலம்வரும் வேலூர்மாவட்டம்... ஒருகாலத்தில் பொன்னையாறும் பாலாறும் கரைபுரண்டு ஓடிய மாவட்டத்தில், இன்று இந்த இரு ஆறுகளும் மக்களின் தாகத்தை தணிக்கமுடியாத சோகத்தில் வரண்டுபோன நிலையில் பரிதாபமாக காட்சியளித்தது

பல புரதான அடையாளங்களை கொண்ட வேலூர் மாவட்டத்தை தற்போது நினைத்த மாத்திரத்தில் ஞாபகத்திற்கு வருவது வேலூர் மத்திய சிறைச்சாலைதான்... அகலமான சாலையின் இருபுறங்களிலும் மரங்கள் வரிசையாய் அலங்கரிக்க... கிட்டத்தட்ட பத்து கிலோமீட்டர் தூரத்திற்கு பதினான்கடி உயர காம்பவுண்ட் சுவற்றின் மேல் பகுதியில் மின்வேலி சுற்றப்பட்டு கம்பீரமாக காட்சி தந்து... பல நூற்றாண்டுகளாக வினோபா, காமராசர், அண்ணா, போன்ற லட்சியவாதிகளையும், ஆட்டோ சங்கர், பிரேமானந்தா, இன்னும் சில அரசியல் துரோகிகள் என பல கொடுங்கோலன்களையும், தனக்குள் வைத்திருந்த.. வைத்திருக்கும் மத்திய சிறைச்சாலை..



கியரை முறுக்கிய கையை திருப்பி மணியைப் பார்த்துவிட்டு அன்றும் பணிக்கு தாமதமாக செல்லும் அவசரத்தில் தனது பாக்ஸர் ஏடி யில் பறந்துகொண்டிருந்தான் சத்யன்...

சத்யன் இருபத்தியாறு வயது இளைஞன்.. மத்தியச் சிறையில் கான்ஸ்டபிளாக கடந்த ஒன்பது மாதமாக பணியில் இருக்கிறான், எஸ்ஜ ஆகவேண்டும் என்று தனது கனவுக்கு அரசாங்கத்தின் மறைமுக விலை அதிகம் என்பதால், பணத்தகுதி இல்லாமல் உடல்தகுதியை முன்நிறுத்தி சாதாரண கான்ஸ்டபிளாக பணியமர்த்தப் பட்டான்.. அவனுடைய ஆறடி உயரமும் நாற்பத்தி இரண்டு இஞ்ச் மார்பு சுற்றளவும், பள்ளி கல்லூரியில் பல்வேறு விளையாட்டுகளுக்காக வாங்கிய பட்டயங்களும் அவனுக்கு பெற்றுத்தந்தது சாதாரண கான்ஸ்டபிள் வேலையைதான்

எஸ்ஜ ஆகி நேர்மையான போலீஸ் அதிகாரி என்ற பெயர் வாங்கவேண்டும் கனவை தனது தலையணையில் புதைத்துவிட்டு, வயது வந்து பலவருடங்களாக துணைத்தேடி காத்திருக்கும் தங்கைக்கு கல்யாணம், ப்ளஸ்டூ படிக்கும் தம்பியை அடுத்த வருடம் கல்லூரியில் சேர்க்கவேண்டும், அம்மாவுக்கு தங்கத்தில் ஏதாவது ஒரு நகை வாங்கி தர வேண்டும், குடிகார அப்பனை ஏதாவது மறுவாழ்வு மையத்தில் சேர்த்து திருத்த வேண்டும், அடிப்படை சம்பளம் ஆறாயிரம் மட்டுமே வரும்போது இப்படி வருவாயை மீறிய கடமைகளை எப்படி சமாளிப்பது என்ற கவலையை தன் தோளில் சுமந்தபடி தினமும் சிறைச்சாலைக்கு சென்றுவரும் ஒரு குடும்ப கைதி சத்யன்

சிறைச்சாலையின் எதிரே இருந்த சிறை ஊழியர்களுக்கான பார்க்கிங் பகுதியில் தனது எட்டாயிரம் ரூபாய் மதிப்புள்ள பாக்ஸரை பாதுகாப்பாக பார்க் செய்து, பிறகு லாக் செய்துவிட்டு சிறையின் பெரிய இரும்பு கதவுக்கு பக்கத்தில் இருந்த சிறிய கதவை காவலர் ஒருவர் திறந்துவிட கதவருகே இருந்த கூண்டில் மேசையில் இருந்த கையெழுத்து பேரேட்டில் கையெழுத்துப் போட்டுவிட்டு “ ஸாரி அண்ணே இன்னிக்கும் லேட்டாயிருச்சு” என்று ஒரு அசட்டு சிரிப்பை உதிர்த்துவிட்டு உள்ளே போனான்


அவனது பணி வழக்கம் போல கைதிகளை பார்க்க வரும் பார்வையாளர்களை முறைப்படுத்தி அனுப்புவதுதான், காலை ஒன்பது மணியிலிருந்து மாலை நான்கு மணிவரை கைதிகளை சந்திக்கலாம்.. ஒரு கைதியை தலா மூன்றுபேர் வரை சந்திக்கலாம் என்பதால் விடுமுறை நாட்களைத் தவிர எப்போதும் கூட்ட நெரிசல் இருந்து கொண்டே இருக்கும்,

பார்வையாளர்கள் கொடுத்திருந்த மனுக்களை அள்ளிக்கொண்டு மேசையில் அமர்ந்து ஒவ்வொன்றாக செக் பண்ணி, சிறையின் சட்டதிட்டங்களுக்கு ஒத்துப்போகும் மனுக்களை ஒருபக்கமாக அடுக்கி கையில் எடுத்துக்கொண்டு தவறாக பூர்த்தி செய்யப்பட்ட மனுக்களை அள்ளி வேறு ஒரு கான்ஸ்டபிளிடம் கொடுத்து “ மனு கொடுத்தவங்க பேரை கூப்பிட்டு அவங்ககிட்ட மனுவை ரிட்டன் குடுங்க துரை அண்ணே ,, நான் இந்த மனுவை எல்லாம் ஜெயிலர் கிட்ட காட்டி கையெழுத்து வாங்கிட்டு வர்றேன்” என்று கூறிவிட்டு துரையின் பதிலை எதிர் பார்க்காமல் சிறை வளாகத்தில் ஓடினான்

பார்வையாளர்கள் கைதிகளை பார்ப்பதில் இன்று தன்னால் ஒரு மணிநேரம் தாமதம் என்ற குற்ற உணர்வில் சத்யன் ஜெயிலர் அறையை நோக்கி ஓடினான், உள்ளே நுழைந்து விரைப்பாக ஒரு சல்யூட்டை வைத்துவிட்டு மனுக்களை அவர் மேசையில் வைக்க மேலோட்டமாக பார்வையிட்ட ஜெயிலர் அத்தனை மனுவிலும் தனது கையெழுத்தை அவசரமாக பதித்துவிட்டு “ காத்தமுத்துவை போய் கைதிகளுக்கு தகவல் சொல்ல சொல்லிட்டு நீ போய் விசிட்டர்ஸ் வர்ற பக்கம் பாதுகாப்பை செக்ப் பண்ணு” என்று ஜெயிலர் சொல்ல

“ எஸ் சார்” என்றவன் மறுபடியும் விரைப்பாக ஒரு சல்யூட் வைத்துவிட்டு அறையிலிருந்து வெளியேவந்து, கான்ஸ்டபிள் காத்தமுத்து எங்கே என்று தேடி கண்டுபிடித்து அவரிடம் மனுக்களை கொடுத்துவிட்டு பார்வையாளர்கள் பாதுகாப்பை கவனிக்க சிறையின் வெளிப்புறமாக சென்றான்

சவுக்கு மர கொம்புகள் கட்டப்பட்டு வரிசையாக செல்ல பாதை அமைக்கப்பட்டிருக்க, அந்த வரிசைகளில் வயது வித்தியாசமின்றி ஏகப்பட்ட மக்கள் வெயிலை பொருட்படுத்தாது காத்திருந்தனர்,

நிராகரிக்கப்பட்ட மனுக்களை தங்கள் கையில் வைத்துக்கொண்டு என்னவென்று காரணம் புரியாமல் சோகமாக நின்றிருந்த மக்களை பார்க்க சத்யனுக்கு பரிதாபமாக இருந்தது, ஒரு மரத்தடியில் நின்று அவர்களை நோக்கி கையசைத்து அழைத்து, ஒவ்வொருவரின் மனுவையும் வாங்கி அதிலிருக்கும் தவறுகளை சுட்டிக்காட்டி, வேறு மனு எழுதி கொடுத்துவிட்டு நாளை வந்து கைதிகளை பார்க்கும்படி சொல்லிக்கொண்டு இருந்தவன் முன்பு பிளாஸ்டிக் வளையல் அணிந்த கை ஒன்று ஒரு மனுவை நீட்டியது


வளையல் அணிந்த இந்த கை சத்யனுக்கு பரிச்சயமானது தான்... கிட்டத்தட்ட நான்கு மாதங்களாக பரிச்சயமான அழகான கை... குனிந்து மனுவை பார்த்துக்கொண்டு இருந்த சத்யன் அந்த கைக்கு சொந்தக்காரியை பார்க்கும் நோக்கில் நிமிர அடுத்து அவன் பார்வையில் பட்டது அந்த பெண்ணின் உப்பிய கர்ப்பிணி வயிறு, அவளின் மெல்லிய இடை முதுகோடு வளையும் அளவிற்கு அவளின் வயிற்றுச் சுமை வளர்ந்திருந்தது,

சத்யன் மெதுவாக நிமிர்ந்து அவள் முகத்தைப் பார்த்தான், அவளேதான்.... நான்கு மாதங்களாக வளர்ந்து வரும் வயிற்றுடன் ..... ஆட்டோவில் கஞ்சா கடத்திய குற்றத்திற்காக சிறையில் இருக்கும் தன் கணவனை காண வாரம் இருமுறை சிறைச்சாலைக்கு வரும் வடநாட்டுப் பெண்... ஆனால் தமிழ்நாட்டு அடக்கம்,... கட்டியிருந்த அரக்கு நிற கைத்தறி சேலையை தோளோடு போர்த்தியிருந்தாள், அதையும் மீறி கழுத்தில் தெரிந்த மஞ்சள் கயிறு மஞ்சள் இல்லாமல் வெளுத்திருந்தது, அடர்ந்த கூந்தலை கொண்டையாக அள்ளி முடிந்திருந்தாள், அழகான மஞ்சள் முகத்தில் வகிட்டில் குங்குமமும், செயற்கையாக அல்லாமல் இயற்கையாகவே வளைந்திருந்த புருவ மத்தியில் சிவப்பு பொட்டும், அகன்ற விழியில் நிரந்தரமாக தேங்கிய சோகமும், கூர் நாசியின் இடதுபுறத்தில் சிறு பொட்டாக முத்து மூக்குத்தியும், செம்பருத்தி மடலாய் விரிந்து மடங்கிய காதுகளில் சிறியதாய் ஒரு தோடு என,, தனது அபரிமிதமான அழகை மலிவான ஆடைக்குள் அடக்கி வைத்த அழகானப் பெண்

கையில் இருந்த மனுவை அவனிடம் நீட்டியபடி “ என்ன மிஸ்டேக்னு தெரியலை.. ரிஜக்ட் பண்ணிட்டாங்க சார்” என்று பரிதாபமாக கூறியவளை பார்க்கவே அய்யோ என்றிருந்தது,

இவள் மனு எப்பவுமே சரியாகத்தானே இருக்கும், பாவம் இப்போது இவள் ஏன் நிராகரித்தோம் என்று வருத்தத்துடன் எண்ணியபடி மனுவை வாங்கி பிரித்துப் படித்துப்பார்த்தான் சத்யன்,, எல்லாம் சரியாக இருந்தது, ஒன்றைத்தவிர.. மனுதாரரின் பெயர் குறிப்பிடப் படவில்லை, சத்யன் அவளிடம் அதை குறிப்பிட்டு காட்டினான்

“ மறந்துட்டேன் போலருக்கு சார் மன்னிச்சிடுங்கோ” என்றவள் கையொப்பமிட பேனாவுக்காக சுற்றுமுற்றும் தேடினாள்,

சத்யன் தன் பாக்கெட்டில் இருந்து பேனாவை எடுத்து கொடுத்து “ இன்னேரம் எல்லா கைதிக்கும் சொல்லி முடிஞ்சிருக்கும், மறுபடியும் நாளைக்குதான் சொல்லுவாங்க, ஆனா நான் முடிஞ்சவரைக்கும் ட்ரைப் பண்ணி உங்க வீட்டுக்காரரை வரவழைக்கிறேன், நீங்க கையெழுத்துப் போட்டு குடுத்துட்டு அந்த மரத்தடியில போய் உட்காருங்க, க்யூ கொஞ்சம் நகர்ந்ததும் உங்களை கூப்பிடுறேன்” என்று சத்யன் கருணையுடன் சொல்ல

கலங்கிய கண்களுடன் கையெடுத்துக்கும்பிட்டு விட்டு கையெழுத்துப் போட்டாள் அந்தபெண்,, ஆங்கிலத்தில் அழகான கையெழுத்தில் மான்சி முகுந்தன் என்று எழுதிவிட்டு பேப்பரை மடித்து சத்யனிடம் கொடுத்து “ ரொம்ப நன்றிங்க சார், இனிமேல் இந்த மாதிரி தவறு நேராமல் பார்த்துக்கொள்கிறேன்” என்றாள் தனது கொஞ்சும் தமிழில்


அவளை வாரம் இருமுறை பார்த்தாலும் அவள் குரலை கேட்பது இதுதான் முதல்முறை, பிற மொழிகளின் கலப்பு இல்லாமல் நல்ல தமிழில் அவள் பேசியது சத்யனுக்கு ஆச்சர்யமாக இருந்தது, ஏதோ கேட்பதற்கு வாயெடுத்துவிட்டு, பிறகு சூழ்நிலை உணர்ந்து, அமைதியாக தலையசைத்து அங்கிருந்து நகர்ந்தான்
சத்யன் சிறைக்குள் சென்று ஏழாம் நம்பர் செல்லில் இருந்த முகுந்தனின் பெயர் சொல்லி அழைக்க, சற்றுநேரத்தில் கம்பிகளுக்குப் பின்னால் இருந்து “ இன்னா சார் என்ற திமிரான குரல் கேட்க,

கையில் இருந்த மனுவில் மான்சி போட்ட கையெழுத்தைப் பார்த்துக்கொண்டிருந்தவனை நிமிர வைத்தது அந்த திமிரான குரல்,, இவனை எப்படி அந்த பெண்ணின் கணவனாக ஒத்துக்கொள்வது என்று பார்ப்பவரை பெரும் குழப்பத்துக்குள்ளாக்கும் மனிதன் முகுந்தன், மான்சியையும் முகுந்தனையும் சேர்த்துப் பார்க்கும் போதெல்லாம் சத்யனுக்கும் இந்த குழப்பம் வருவதுண்டு

மனுவில் குறிபிட்டிருந்த வயது என்னவோ முப்பதுதான், ஆனால் நாற்பது என கூறும் தோற்றம், இடுங்கிய கண்கள், காஞ்சாவின் உதவியால் பழுப்பேறிய கன்னங்கள், கறுத்துப் போன உதடுகள், ரத்தசோகையால் வெளுத்த உடம்பு, சராசரி உயரமும் அந்த உயரத்திற்கேற்ற உடல்வாகு இல்லாமல் ரொம்பவே மெலிந்து இருந்தான், அவன் மூன்று வருட தண்டனை குற்றவாளி என்பதால் கட்டம்போட்ட சீருடையில் இருந்தான்

“ இன்னா சார் என் சம்சாரம் வந்திருக்காளா? அந்த கஸ்மாலத்தை நேத்தே வரச்சொன்னேன், இன்னிக்குதா வந்திருக்காளா? ” என்று கர்ப்பிணி மனைவி என்ற பரிதாபம் இல்லாமல் தெனாவட்டாக கேட்டவனை இழுத்து நாலு அறை விட துடித்து கையை அடக்கிக்கொண்டு “ திமிர் பேசாம ஒழுங்கா வாடா” என்று கூறிவிட்டு சத்யன் முன்னால் போக முகுந்தன் பின்னால் வந்தான்

கொஞ்சநேர நடைக்கே மூச்சு வாங்க “ இந்த லூசுக் ** மவள பார்க்குறதுக்கு நடக்குறதுக்குள்ள நான் போய் சேர்ந்திருவேன் போலருக்கு” என்று அசிங்கமாக பேசியபடி வந்தவனை சத்யன் திரும்பிப்பார்த்து முறைக்க .

“ இன்னா சார் முறைக்கிற, இனிமேல ஒரு அடி என் உடம்புல விழுந்தாலும் தாங்கமா்டேன்னு ஜெயில் டாக்டரு சொல்லிட்டாரு, அதனால இனிமே ஐயாவை யாரும் அசைக்கமுடியாது” என்று திமிர் பேசி நெஞ்சை நிமிர்த்திய முகுந்தனைப் பார்க்க சத்யனுக்கு பரிதாபமாகத்தான் இருந்தது

எதுவும் சொல்லாமல் பார்வையாளர்களை சந்திக்கும் அறைக்கு அருகே இருந்த பெஞ்சில் முகுந்தனை உட்கார வைத்துவிட்டு, அங்கிருந்த காவலரிடம் “ அண்ணே இந்த பய இங்கயே உட்கார்ந்திருக்கட்டும், நான் சொல்லும்போது அனுப்புங்க” என்று சொல்லிவிட்டு மறுபடியும் வெளியே வந்தான்




காத்திருந்த பார்வையாளர்களை ஆறு ஆறு பேராக உள்ளே அனுப்பிக்கொண்டிருந்தார்கள், சத்யனின் கண்கள் அந்த சோக பதுமையை தேடியது, சற்று தொலைவில் ஒதுக்குப்புறமாக இருந்த ஒரு மரத்தடியின் சிமின்ட் திடலில் கால்நீட்டி அமர்ந்து வேறொரு வயதான பெண்ணிடம் ஏதோ பேசிக்கொண்டிருந்தாள்

சத்யன் தொலைவில் நின்று சிறிதுநேரம் அந்த மவுன அழகை ரசித்தான், பிறகு அவள் இருக்கும் இடம் நோக்கி நடந்தான், நெருங்கும் போதே “ இது எட்டாவது மாசம் அம்மா” என்று மான்சி அந்த பெண்ணிடம் கூறுவது கேட்டது

மான்சி அவனைப் பார்த்ததும் அவசரமாக எழுந்திருக்க முயற்சிக்க..... “ வேனாம் எழுந்திருக்க வேனாம்,, உட்காருங்க,, இன்னும் ஒரு மணிநேரம் ஆகும்... கூட்டம் கொஞ்சம் குறையட்டும்” என்று சத்யன் சொன்னதும் ...

சரியென்று தலையசைத்துவிட்டு மறுபடியும் அமர்ந்துகொண்டாள்... “ சரி கண்ணு நான் கெளம்புறேன், துணைக்கு யாரும் இல்லைன்னு சொல்ற உசாரா இரும்மா” என்று கூறிவிட்டு அந்தப் பெண் அங்கிருந்து நகர்ந்துவிட்டாள்
சத்யன் அமைதியாக அவள் முகத்தைப் பார்த்தபடியே நின்றான், நெற்றியில் உற்பத்தியான வியர்வை மூக்கில் வழிந்தது, அடிக்கடி முந்தானையால் முகத்தை துடைத்துக்கொண்டாள்... “ ஏதாவது குடிக்கிறீங்களா?” என்று சத்யன் கேட்டான்... இதற்கு முன்புகூட ஒருமுறை வரிசையில் நிற்கும்போது தண்ணீர் கொடுத்திருக்கிறான்,

“ இலல வேனாம் சார், பாட்டில்ல கொண்டு வந்திருக்கேன்” என்று தன் பக்கத்தில் இருந்த அரைலிட்டர் மிரண்டா பாட்டிலை எடுத்து காட்டினாள்... அந்த பாட்டிலின் அடியில் சிறிதளவே தண்ணீர் இருக்க சத்யன் அந்த பாட்டிலை அவளிடமிருந்து வாங்கி சற்று தொலைவில் இருந்த குடிநீர் குழாயில் தண்ணீர் பிடித்து எடுத்துவந்து கொடுத்தான்

நன்றி சொல்லிவிட்டு வாங்கிக்கொண்டவள் . “இன்னும் எவ்வளவு நேரம் ஆகும் அவரைப்பார்க்க” என்று தலைகுனிந்தபடி கேட்டாள்

“ முகுந்தனை செல்லில் இருந்து கூட்டி வந்தாச்சு, ஆனா கொஞ்சம் கூட்டம் குறையட்டும்னு பார்க்கிறேன்” என்று கூறிய சத்யன், சற்றுநேர அமைதிக்கு பிறகு “ யாராவது வக்கீலைப் பார்த்து முகுந்தனுக்கு ஜாமீனுக்கு ஏற்பாடு பண்ணலாம்ல?” என்று கேட்க

அவனை நிமிர்ந்துப் பார்த்த மான்சி “ கஞ்சா கேஸ் என்பதால அவ்வளவு சீக்கிரம் ஜாமீன் கிடைக்காதாம், பணமும் நிறைய செலவு ஆகுமாம், அதுக்கெல்லாம் வசதி இல்லீங்க” என்றவள் தலைகுனிந்து “ எங்களுக்கு சொந்தக்காரங்கன்னு யாருமே இல்லைங்க” என்றாள் வேதனையுடன்


அமைதியாக நின்றிருந்தவன் பிறகு “அப்போ நீங்க சாப்பாட்டுக்கு என்ன பண்றீங்க, ஏதாவது வேலை செய்றீங்களா?” என்று அவளைப்பற்றி அறிந்துகொள்ளும் ஆர்வத்துடன் கேட்டான்

“ நான் ராணிப்பேட்டையில ஒரு ஷூ கம்பெனியில வேலை செய்றேனுங்க, மாசம் நாலாயிரம் சம்பளம் வருது, முத்துக்கடையில ஒரு சின்ன ரும் வாடகைக்கு எடுத்து தங்கியிருக்கேன், இவரு ஆரம்பத்துலேருந்தே சரியில்லைங்க, எதுவும் வேலையில்லாமல் சும்மா சுத்திகிட்டு இருந்தாரு, அப்புறம் ஆறு மாசம் ஆட்டோ ஓட்டுனாரு, அதுலதான் கஞ்சாவை கடத்தினாருன்னு போலீஸ் பிடிச்சிட்டாங்க, இப்போ இவரை பார்க்க வாரம் ரெண்டு வாட்டி வர்றேன், இந்த உடம்பை வச்சிகிட்டு வெயில்ல அலைய முடியலைங்க” என்று தனது சோகத்தை சுருக்கமாக சொல்லிவிட்டு முந்தானையால் முகத்தை துடைப்பது போல வழிந்தவிருந்த கண்ணீரை சேர்த்து துடைத்துக்கொண்டாள்

கேட்கலாமா? வேண்டாமா? என்ற பெரும் தயக்கத்திற்கு பிறகு கேட்டுவிடுவது என்ற முடிவுடன் “ முகுந்தன் உங்களுக்கு சொந்தமா? எப்படி இவரைப் போய்? என்கிட்ட சொல்லனும்னா சொல்லுங்க, இல்லேன்னா வேனாம் ” என்று சத்யன் தயக்கமாக கேட்க

அவளும் சில நிமிடங்கள் தயக்கத்திற்குப் பிறகு மெதுவாக ஆரம்பித்தாள் “ சொந்தமெல்லாம் இல்லீங்க, நான் ராஜஸ்தான் பக்கத்துல ஒரு கிராமம்ங்க, நான் டென்த் படிச்சிருக்கேன், அப்பா இல்லை இவரு அங்க கட்டிட வேலைக்கு வந்திருந்தாரு, நானும் எங்கம்மா அக்கா எல்லாரும் சித்தாள் வேலைக்கு போவோம் அப்பதான் பழக்கமாச்சு, நல்லா சிரிக்க சிரிக்க பேசுவாரு, என்னையே சுத்தி சுத்தி வருவாரு, நீ ரொம்ப அழகா இருக்க மெட்ராஸுக்கு வந்தா சினிமாகாரங்க கொத்திக்கிட்டுப் போயிருவாங்கன்னு ஆசை காமிச்சாரு, நானும் இவரு பேச்சை நம்பி ஒருநாள் நைட்டு கிளம்பி இவருகூட மெட்ராஸுக்கு வந்தேன், அப்ப எனக்கு பதினாறு வயசுதான், இங்கே வந்ததும்தான் சினிமா எவ்வளவு கேவலம்னு புரிஞ்சுது, அதில் நுழைய நிறைய விளை கொடுக்கனும்னு தெரிஞ்சதும் அருவருப்புல எனக்கு சினிமாவே வேண்டாம்னு மறுத்துட்டேன், இவரு எவ்வளவோ வற்புறுத்திப் பார்த்துட்டு அப்புறம் ராணிப்பேட்டைக்கு கூட்டிவந்தாரு, ஒரு கோயில்ல வச்சு தாலி கட்டினாரு, அப்புறம் இந்த நாலு வருஷமா நான் வேலைக்குப் போய்தான் ஜீவனம் நடக்குது, இவ்வளவு நாளா குழந்தையில்லாம இருந்து இப்பதான் இது வயித்துல தங்குச்சு, இது தங்குன நேரம் அப்பனை ஜெயிலுக்கு அனுப்பிருச்சு” என்று முடித்தவள் பாட்டிலை திறந்து தண்ணீரை குடித்துவிட்டு மூச்சு வாங்க மரத்தில் சாய்ந்து கொண்டாள்

“ அவன் கஞ்சா கடத்தி உள்ள வந்ததுக்கு பாவம் குழந்தை மேல ஏன் பழி போடுறீங்க” என்றவன் வேறு எதுவும் சொல்லாமல் அங்கிருந்து நகர்ந்து வரிசைப் பகுதிக்கு வந்தான்,

“ என்னா சத்யா அந்த பொண்ணு கூட அவ்வளவு நேரம் பேசிகிட்டு இருந்த? பொண்ணைப் பார்த்தா ரொம்ப பாவமா இருக்குள்ள, அந்த சப்பை பயலுக்கு இப்படி ஒரு அழகான பொண்டாட்டி பாருப்பா?’ என்று வரிசையை ஒழுங்குபடுத்திய காவலர் ஒருவர் கூற... சத்யன் எதுவும் சொல்லாமல் தலையை மட்டும் அசைத்துவிட்டு கூட்டத்தை ஒழுங்கு படுத்தினான்


கூட்டம் சற்று குறைந்திருக்க அங்கிருந்தபடியே மான்சியை நோக்கி கையசைத்தான், இவன் எப்போது அழைப்பான் என்று காத்திருந்தது போல, உடனே எழுந்து வந்தவளை அவள் கையில் இருந்த பையை பரிசோதித்து விட்டு உள்ளே போக அனுமதித்தான்

முகுந்தனுடன் அவள் பேசுவது ஊமைப் படமாக சத்யனுக்கு தெரிந்தது, முகுந்தன் முகத்தை கடுமையாக வைத்துக்கொண்டு ஏதோ திட்ட, மான்சி முந்தானையால் கண்களை துடைப்பதும் தெரிந்தது, சத்யனுக்கு ஆத்திரமாய் வந்தது முகுந்தன் கையில் கிடைத்தால் இரண்டு விளாசவேண்டும் போல் இருந்தது

சிறிதுநேரம் மான்சி அவனிடம் மன்றாடினாள், பையிலிருந்த பொட்டலங்களை எடுத்துக் கொடுத்து அவனிடம் கெஞ்சினாள், அவன் அதை வாங்காமல் அலட்சியமாய் தலையை சிலுப்பிக் கொண்டு போனான், மான்சி கம்பிகளுக்கு அப்பால் போகும் அவனையே பரிதாபமாக பார்த்தாள், பிறகு சோக பதுமையாக வெளியே போனாள்

அவளைப் பார்த்ததும் சத்யனுக்கு “ நல்லதோர் வீணை செய்து அதை நலங்கெட புழுதியில் எறிவதுண்டோ... சொல்லடி சிவசக்தி” என்ற பாரதியாரின் பாடல் வரிகள் தான் ஞாபகத்திற்கு வந்தது

மான்சி போய்விட, அன்று வீட்டுக்கு போகும் வரை முகுந்தன் என்ன கேட்டான், மான்சி எதற்காக மன்றாடினாள் என்று குழப்பத்துடனேயே போனான், வீட்டுக்குப் போனதும் வழக்கம் போல எல்லாமே மறந்து போக முட்டமுட்ட குடித்துவிட்டு இடுப்பு வேட்டி அவிழ்ந்து கிடக்க வாசப்படியில் மல்லாந்திருந்த அப்பனைப் பார்த்ததும் குடும்ப நிலவரம் முகத்தில் அறைய மான்சியும் முகுந்தனும் மறைந்து போனார்கள், வாசற்படியில் ஏறாமல் அப்படியே நின்று கீழே கிடந்த அப்பா மூர்த்தியை வெறித்தான்

“ அண்ணா இன்னிக்கு மத்தியானம் ரெண்டு மணிக்கு வந்து விழுந்தாருண்ணா .... இன்னும் எழுந்திருக்கலை, உள்ள இழுத்துட்டுப் போகலாம்னு பார்த்தா அருணையும் இன்னும் காணோம், நீயாவது ஒரு கை பிடி உள்ள தூக்கிட்டுப் போய் போடலாம்” என்று தங்கை பாக்கியலட்சுமி கூற



“ ம் வா பாகி” என்றவன் குனிந்து மூர்த்தியின் வேட்டியை ஒதுக்கி சரி செய்துவிட்டு காலை பிடித்து தூக்க... பாக்யா அப்பாவின் இரண்டு தோள்களையும் பற்றி தூக்கிக்கொண்டு வீட்டுக்குள் போய் சிறிய ஹாலின் ஒரு மூளையில் மூர்த்தியை கிடத்தினார்கள்

சத்யன் யூனிபார்மை மாற்ற பக்கவாட்டில் இருந்த அறைக்குள் நுழைந்தபடி “ பாகி அம்மாவை எங்க காணோம்?” என்று கேட்க..

“ இன்னிக்கு செவ்வாயக்கிழமைல .. ராகுகாலத்தில் துர்கை அம்மனுக்கு விளக்குப் போடனும், நான் கோயிலுக்கு போககூடாதுன்னு அம்மா விளக்குப் போட போயிருக்காங்க அண்ணா, இப்போ வர் நேரம்தான்” என்றவள் சத்யனுக்கு காபி எடுத்துவர கிச்சனுக்குள் நுழைந்தாள் ..

சத்யன், பாக்கியலட்சுமி, அருண், என்ற இந்த மூன்று ரத்தினங்களை குடிகாரனுடன் வாழ்ந்து பெற்றெடுத்தவள் தான் சாந்தி,, பெயரைப் போலவே அமைதியானவள்,, மூர்த்தியிடம் அடி உதை என்று பொழுது போனாலும், பொழுது விடிவது தன் பிள்ளைகளுக்காக என்று எண்ணி வாழ்பவள், இருபத்திமூன்று வயது மகளுக்கு இன்னும் திருமணம் கூடவில்லையே என்ற கவலை மனதை அரிக்கும் நடுத்தரவர்க்க பெண்மணி



Friday, October 30, 2015

அதிரடிக்காரன் மச்சான் - அத்தியாயம் 13

மாலை ஆறு மணி செய்தியில் 'நிப்பு நிரஞ்சனை பற்றி சரியானதகவல் தெரியவில்லை' என்று தெரிவிக்க,பைத்தியம் பிடித்தது போல் ஆனாள் ஷிவானி.

"அம்மா இனிமேல் என்னால பொறுக்க முடியாது. நான் அங்கே போறேன். நீ வந்தா வா, இல்லைனா எனக்கு தனியா போய்க்க தெரியும்."

"இருடி, நானும் வரேன்"

இரவு ட்ரெயினில் விஐபி கோட்டாவில் இருவரும் கிளம்ப, நள்ளிரவு 1 மணிக்கு வாரங்கல் ரயில் நிலையம் வந்து சேர்ந்தனர்.



இறங்கிய இருவரும் என்ன செய்வது என்று யோசித்து, 'சரி கார் ஒன்றை வாடகைக்கு எடுக்கலாம்' என்று நினைக்க, ஷிவானி தோளில் கை விழுந்தது.

யார் என்று பார்க்க ஒரு முப்பத்தி ஐந்து வயது பெண் சிரிப்போடு நின்று கொண்டு இருந்தாள். 

"நீங்க ஷிவானி தானே, நிப்பு சார் மனைவிதானே" என்று கேட்க, "ஆமா நீங்க யாரு, என்னை எப்படி தெரியும்" என்று கேட்க, "அம்மா என் பெயரு ராஜம்மா, இன்ஸ்பெக்டரா இருக்கேன். நிப்பு சார் உங்களை பத்தி சொல்லி இருந்தாரு. நீங்க வருவீங்கன்னு எதிர்பார்த்து என்னை இங்கே வெயிட் பண்ண சொன்னாரு."

'அப்பாடி'ஷிவானி மனதில் சந்தோஷம். "பாத்தியாம்மா எனக்கு நிருவை பத்தி நல்லா தெரியும். அம்மா இவங்க கூட போகலாம்ப்ளீஸ்"என்று சொல்ல, பத்மா "வேண்டாம் ஷிவானி, தெரியாதவங்க கூட போறது தவறு."

"அம்மா, யாரை பார்த்தாலும் சந்தேகபட கூடாது. இவங்கதான் எல்லா விபரத்தையும் சொல்லுறாங்களே. கூட போகலாம்மா.இல்லைனா நான் அவங்க கூட போய்டுவேன்" என்று கோபத்தோடு சொல்ல, "சரி நானும் வரேன்" என்று பத்மா கிளம்ப மூவரும் ரயில்வே ஸ்டேஷன் வாசலில் இருந்த இண்டிகா காரில் கிளம்பினர்.

டிரைவர் வேகமாகஓட்ட மூன்று மணி நேரத்தில் காட்டுக்குள் கார் நுழைந்தது.

அதே நேரத்தில் காட்டுக்குள்

"வீர ராஜு, கேஷவ் ராவ், ராமையா ரெண்டு பேர் கூட இருந்த அந்த இருவது பேர் தப்பிசுட்டாங்க, இப்போ என்ன செய்றது" நிரஞ்சன் உடம்பு முழுக்க சிறு காயங்கள்.


அருகில் இருந்த வீர ராஜு "சார் இருவது பேரையும் தீத்து கட்டலைனா, அவங்க வெளியே போய் எல்லோரையும் கெடுத்து, நாசம் பண்ணிடுவாங்க"

"நீங்க சொல்றது உண்மைதான் வீர ராஜு", கண்களை சுருக்கி சிந்தனையில் ஆழ்ந்து போக, வீர ராஜு அமைதியாக காத்து இருந்தார். நிப்பு யோசித்தால், எதிரிக்கு கட்டாயம் ஆப்புதான்.

சிந்தனையில் இருந்து விடுத்து எழுந்த நிரஞ்சன் கடகடவென்று ஆணைகளை பிறப்பித்தான்.கூட இருந்த அந்த இருபது பேர் கொண்ட போலிஸ் கூட்டம் கவனமாக கேட்க ஆரம்பித்தது.

நீங்க உங்க கைல இருக்கிற மரபெட்டிகளை பிரித்து உள்ளே இருக்கிற கண்ணி வெடிகளை ஒவ்வொரு பத்தடிக்கும் இடைல புதைச்சுட்டு அப்படியே கிளம்புங்க. நாம யாரும் இந்த இடத்தில இருக்க கூடாது"வீர ராஜு "அங்கே பாருங்க" என்று தூரத்தில் கை காட்ட, காளி கோவில் அருகில் இருந்த மரங்களை கண்ட நிரஞ்சன் கண்கள் அப்படியே நின்று போயின. 

"சார் அதுதான் அந்த படுகொலை நடந்த இடம்"வீர ராஜு சொல்வதை புரிந்து கொண்ட நிரஞ்சன் முகம் இறுகி போனது. கையில் டார்ச்லைட் உடன் மெதுவாக அனைவரும் முன்னேறி செல்ல, பின்னால் வந்த போலிஸ் கூட்டம் கண்ணி வெடிகளை பூமியில் புதைத்து கொண்டே முன்னேறியது.எதிரிகள் நடமாட்டம் இருப்பது போல் தெரிய,நிரஞ்சன் மூளை மின்னல் வேகத்தில் ஈடுபட்டது.

"வீர ராஜு நான் முன்னால போறேன். நீங்க நம்ம ஆட்களோட என்ன நடக்குதுன்னு மரத்துக்கு பின்னால ஒளிஞ்சு நின்னு பாருங்க. நான் பயர் சொன்னா மட்டும் சுட்டா போதும். அதுவரை அவசரபட வேண்டாம்."

"இல்லை சார் நானும் வரேன்."

"வேணாம் சொன்னா கேளுங்க"முன்னோக்கி நடந்த நிரஞ்சன் திரும்பி வந்தான்."ஒரு வேளை எனக்கு ஏதாவது ஆச்சுன்னா, ஷிவானியை வேற யாரையாவது கல்யாணம் பண்ணிக்க சொல்லுங்க, இது என்னோட கடைசி ஆசை." பதிலுக்கு காத்திராமல் முன்னேறி சென்று விட்டான். 

'என்ன சொல்வது' என்று புரியாமல் உறைந்து போய் நின்றார்.

இருட்டுக்கு நடுவே இரவு முழுக்க திரிந்து கொண்டு இருப்பதால் கண்கள் பழக்கமாகி இருக்க தனது Pen டார்ச்லைட்டை அணைத்து விட்டு முன்னேற, அங்கே அவன் கண்ட காட்சி நடுங்க வைத்தது.


இரண்டு மரங்களிலும் ஷிவானி மற்றும் பத்மா கட்டப்பட்டு இருக்க,அருகில் ராமையா, கேஷவ் ராவ், லக்ஷ்மி நிற்க, சுற்றி ஐம்பது நக்சலைட்கள் கையில்துப்பாக்கி உடன் நின்றனர்.

"வாடா புது மாப்பிள்ளை, என்னடா கல்யாணம் பண்ணி ஹனி மூன் கொண்டாட போவான்னு பார்த்தா இங்கே வந்தா எங்களை கொல்ல பார்க்கிற" என்று ராமையா உரும, பின்னாலே கேஷவ் ராவ், 

"டேய் உன்னையை அன்னைக்கே கொன்னு போட்டு இருக்கணும். தப்பிச்சு போய்ட்ட. அது மட்டும் இல்லாம ஐநூறு பேர் இருந்த எங்க கூட்டத்தை வெறும் ஐம்பது பேராசுருக்கிட்ட.உன்னைய மட்டும் போட்டு தள்ளனும்னு பார்த்தா, உன் பொண்டாட்டியும் மாமியாரும் தானே வந்து விழறாங்க.

இன்னைக்கு எங்களோட இருக்கிற எல்லாரையும் அடித்து நொறுக்கிட்டடா. ஆனால் என்ன பாரு நீ யும் உன் புது பொண்டாட்டியும், உன் மாமியாரும் இங்கே தான் சாக போறீங்க"உரக்க சிரித்து கொண்டே "என்னடா முழிக்கிற. லக்ஷ்மி இங்கே வா. வந்து இவனுக்கு புரியுற மாதிரி சொல்லு".

"உன் பொண்டாட்டி, உன்னோட மாமியார் ரெண்டு பேரையும் ஏமாத்தி கொண்டு வந்தது நான்தாண்டா. எனக்கு எப்படி தெரியும்னு பாத்தியா. உங்க போலிஸ் தலைமை அலுவலகத்தில இருக்கிற எங்க கை ஆளுதான் நீ திரும்பி வந்ததாய்சொன்னான். அவன் மூலம் உன் பொண்டாட்டி போட்டோவும் கிடைச்சது."

"நீரு வந்துட்டிங்களா" என்று ஷிவானி கதற, கண்களால் அவளை பார்த்து பயப்படாதே என்று சைகை செய்தான்.

"டேய் இவனை அடிங்கடா. நான் கொஞ்ச நேரம் அதை வேடிக்கை பார்க்கிறேன்" என்று கேஷவ் சொல்ல, துப்பாக்கியை கீழே போட்டு விட்டு இரண்டு பேர் எகிறி அடிக்க, கீழே விழுந்தான் நிரஞ்சன்.

கேஷவ் சிரித்தான். "டேய் இவன் பேரு நெருப்பாம். இவனை முதல்ல கொளுத்துங்கடா. இவன் கண் முன்னாலே இவனோட பொண்டாட்டி, மாமியாரை அப்படியே சுட்டு கொன்னுட்டா, மேல போய் பொண்டாட்டி கூட குடும்பம் நடத்துவான்."

கீழே விழுந்து கிடந்த நிரஞ்சன், உருண்டு எழுந்த போது அவன் இரண்டு கைகளிலும் துப்பாக்கி முளைத்து இருந்தது. ஐ பி எஸ் பயிற்சியில் துப்பாக்கி சுடும் போட்டியில் முதல் பரிசு பெற்ற அந்த நினைவுகள் திரும்ப வர, 'பயர்' என்று சத்தம் போட்டு கொண்டே,தனது இரண்டு கைகளில் இருந்த துப்பாக்கி மூலம் மாறி மாறி சுட, முதல் குண்டு லக்ஷ்மி காலில், இரண்டாவது குண்டு ராமையா கழுத்தில், மூன்றாவது குண்டு கேஷவ் நெஞ்சில் வெடிக்க மூவரும்
சுருண்டனர்.

கூடவே இருவது துப்பாக்கிகள் முழங்கும் ஓசை கேட்டு நக்சலைட் தீவிரவாதிகள் சிதறி ஓடஅதற்குள் சத்யநாராயணா, மோகன் பாபு தலைமையில் போலிஸ் அதிகாரிகள் வந்து சேர்ந்து அவர்களும் சுட ஆரம்பித்தனர்.

ஓட தொடங்கிய பலரும் கண்ணிவெடியில் கால் வைக்க, வெடித்து சிதறி உயிர் விட்டனர்.காடு மரங்கள் பற்றி எரிய அந்த இடமே போர்க்கோலம் பூண்டது.




அதற்குள் சுதாரித்து கொண்டு ஓடிய நிரஞ்சன், ஷிவானி, பத்மாவை விடுவித்து இருவரையும் மரத்துக்கு பின்னேஒளிந்து கொள்ள சொல்லி விட்டு திரும்ப அதற்குள் தோளை உரசி கொண்டு ஒரு துப்பாக்கி குண்டு.

லக்ஷ்மி கையில் துப்பாக்கி உடன் நிற்க, "ஒரு பெண்ணை கொல்ல கூடாதுன்னு தான் உன்னை கால்ல சுட்டேன். உனக்கு இவ்வளவு திமிரா?" என்று கர்ஜனை செய்ய அடுத்த இரண்டு குண்டுகள் அவள் கழுத்து மார்பில் பாய சுருண்டு விழுந்தாள்.

அதற்குள் காட்டின் சில பகுதிகள் எரிய தொடங்க இருட்டு விலகி அதிகாலை வெளிச்சம் பரவ ஆரம்பித்தது.

செய்தி கிடைத்த டிஜிபி முதல் அமைச்சருடன் ஹெலி காப்டரில் வந்து இறங்க தொலைகாட்சிகள் போட்டோ எடுத்து தள்ள, அந்த நாளின் தலைப்பு செய்து ஆனது. 

நூற்றுக்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் கொல்லப்பட்டு இருக்க, இது வரை நடந்த தீவிரவாத ஒழிப்புகளில் இது தான் சிறந்தது என்று பாராட்டப்பட்டது. 

முதல் அமைச்சருக்கு நிரஞ்சனை சந்தித்த மகிழ்ச்சி. பாராட்டி பேசி கொண்டு இருக்க, அருகில் ஷிவானி, வீர ராஜு, பத்மா கண்ணீர் மழையில்.

'கும்பகோணம் வந்தாச்சு இன்னும் அரை மணி நேரத்தில தஞ்சாவூர் வந்துடும்' என்று டிடிஇ சொல்ல, நிரஞ்சன் உறங்கி கொண்டு இருந்த ஷிவானியை எழுப்பினான். 

எழுந்த ஷிவானி, முகம் கழுவி விட்டு வர அவளுக்கு வாரங்கல் காட்டில் நடந்த பேச்சு வார்த்தை நினைவுக்கு வந்தது

பாராட்டு மழையில் நனைந்த நிரஞ்சனை, பத்திரிக்கைகள் பேட்டி எடுக்க, மெதுவாக நடந்து வெளியில் வந்தாள் ஷிவானி. முதல் அமைச்சர் தனியே டிஜிபியுடன் பேசி கொண்டு இருக்க, அவர்களின் அருகில் வந்தாள்.

"யார் இது" என்று முதல் அமைச்சர் டி ஜி பி யிடம் கேட்க, அவரோ "இது நிப்புவின் மனைவி ஷிவானி" என்று சொன்னார்.

அவள் வணக்கம் தெரிவித்து கோரிக்கை ஒன்றை விடுத்தாள்."சார், நீங்க எதிர்பார்த்த மாதிரி நக்சல் ஆபரேஷன் எல்லாம் முடிஞ்சுது.ஆனால் எவ்வளவு நாள்தான் நாம சண்டை போட்டு கொண்டே இருப்பது. இதுக்கு ஒரு நிரந்தர தீர்வு வேணும்.

அவங்க எல்லாருமே மோசமானவங்க இல்லை. நிறைய பேரு வேற வழி இல்லாம இந்த இயக்கத்தில சேர்ந்து இருக்காங்க. இவங்களோட மறு வாழ்வுக்கு உதவி செஞ்சா யாரும் பழைய பாதைக்கு திரும்பி போக மாட்டங்க. அதுக்கு என்னோட புருஷன் மாற்றி இருக்கும் நூற்றுகணக்கான தீவிரவாதிகளே சாட்சி. 

அவருக்கு நீங்க கொடுத்த பணி முடிந்தது. ஆனால் இனிமேலும் அவர் இங்கே இருந்தால் அவருக்கு ஆபத்து. அவருக்கு ஒண்ணு ஆனால் என்னால தாங்க முடியாது.

அதனால அவரை வேற டிபார்ட்மென்ட் மாத்துங்க. முடிஞ்சா அவரை வேற மாநிலம் மாத்தினா கூட சரிதான். ப்ளீஸ் எனக்காக இது செய்ய முடியுமா?" என்று கெஞ்சி கேட்க முதல் அமைச்சர் அவள் பேச்சில் இருந்த அக்கறையை உணர்ந்தார்.


"ஓகே தினேஷ். எனக்கு ஓகே. எந்த ஸ்டேட் கொடுத்தா சரியா இருக்கும்."

"சார் இவரை எந்த ஸ்டேட்டுக்கு கொடுத்தாலும் ஓடி வந்து வரவேற்பார்கள். ஆனால் எனக்கு இவரை தமிழ் நாட்டுக்கு அனுப்பினா சரியா இருக்கும்னு தோணுது. நான் தமிழ் நாடு டிஜிபிகிட்ட பேசி ஏற்ப்பாடு பண்ணுறேன்."

"என்னம்மா உனக்கு சந்தோஷமா" என்று கேட்க, கண்களில் கண்ணீர் வழிய கை கூப்பினாள்.

முதல் அமைச்சர்"ஷிவானி உன்னை பார்த்தா என்னோட பொண்ணு மாதிரி இருக்கு. உங்களோட கல்யாணத்துக்கு என்னால வர முடியலை. என்னோட கல்யாண பரிசா இதை நினைச்சுக்க."


"நிரு, இன்னும் எவ்வளவு நேரம் ஆகும்டா."

"இன்னும் பத்து நிமிஷம்தான்."

அவளை இடுப்போடு வலதுகையால் வளைத்து கொள்ள, தஞ்சாவூர் ரயில் நிலையத்துக்குள் ட்ரெயின் நுழைந்தது.

இருவரும் இறங்க, அவன் ட்ராலியை யாரோ பிடித்து பின்னால்இழுக்க, யாரென்று திரும்பி பார்த்தால், "டேய் ராதா கிருஷ்ணா என்னடா திடீர்னு" சந்தோசத்தோடு கூவினான் நிரஞ்சன்.

"ஷிவானி, இவன் என்னோட ஸ்கூல் பிரெண்ட். நம்மோட வீடு, நிலங்கள் எல்லாம் இவன்தான் பாத்துக்கிறான்."

ஷிவானி வணக்கம் சொல்ல"தங்கச்சி நீ வாம்மா, இவன் கிடக்கிறான்" என்று சொல்லி விட்டு இருவரின் பெட்டியை தூக்கி கொண்டு முன்னே செல்ல, இருவரும் இறங்கி தயாராக இருந்த காரில் ஏறி திருவையாறு ரோட்டில் இருந்த நிரஞ்சனின் பரம்பரை வீட்டுக்கு சென்றனர்.

வீடு பழைய வீடாக இருந்த போதும், பெரிய வீடாக இருந்தது. வீட்டுள்ளே மாடி. சுற்றி பார்த்து களைத்து போனாள் ஷிவானி.

"நிரு, உங்களுக்கு இந்த வீடு மட்டும் தானா, வேற வீடு இருக்கா."

"தஞ்சாவூர் புது பஸ் ஸ்டாண்ட் பக்கத்தில ஒரு பெரிய வீடு வாடகைக்கு இருக்கு. திருவையாரை ஒட்டி நூறு ஏக்கர் நிலம் இருக்கு."

"ஓ அப்படியா. இவ்வளவு சொத்து இருந்தும் ஏன் போலிஸ் வேலைபார்க்கிறீங்க" என்று கண்ணடித்து கேட்க, "ஏய் உனக்கு தெரியாதா?" என்றான் நிரஞ்சன்.


அனுகிட்ட பேசணும் போல இருக்கு. அவளோட திருமண வாழ்க்கை நல்லபடியா போய்கிட்டு இருக்கும்னு நினைக்கிறேன்."

"அனுவுக்கு நல்ல மனசு. இல்லைனா அண்ணாமலையை கல்யாணம் பண்ணிக்க ஒத்துக்குவாளா. உண்மைலே உன்னை காதலிக்கலைனா அனுவைதான் கல்யாணம் பண்ணி இருப்பேன்."

"அப்படி ஒரு ஆசை இருக்கா"காதை பிடித்து திருக, "ஆ" என்று பொய் வலியோடு கத்தினான் நிரஞ்சன்.

"இப்பவே அவளை கூப்பிட்டு சொல்றேன்".

போனை எடுத்து அனுவின் நம்பரை அடிக்க அண்ணாமலை எடுத்தான்

"ஹாய் எப்படி இருக்கீங்க. அனு இருக்காளா". 
....................

"வெளியே போய் இருக்காளா. சரி உங்க பிரெண்ட்கிட்ட பேசுங்க."

நிரஞ்சன் பேசி விட்டு போனை ஷிவானியிடம் கொடுக்க, அனு வந்தால் கூப்பிட சொல்லி போனை வைத்தாள்.

ராதா கிருஷ்ணன் பிடிவாதம் செய்து அழைத்து செல்ல, வேறு வழி இல்லாமல் அருகில் இருந்த பெரியப்பா வீடு, சித்தப்பா, மாமா வீட்டுக்கு போய் விட்டு, பரம்பரை சொத்தான நூறு ஏக்கர் நிலத்தையும் சுற்றி பார்த்து விட்டு வந்து களைப்பாகி வீட்டுக்கு திரும்பஇரவு ஏழு மணி ஆனது.

வீட்டில் இருந்த தூரத்து சொந்த பாட்டி இட்டு வைத்து இருந்த இட்லி, கும்பகோணம் டிகிரி காபி குடித்து விட்டு மொட்டை மாடிக்கு சென்றனர்.

மொட்டைமாடி என்று சொன்னாலும், அங்கே ஒரு சிறிய படுக்கை அறை இருந்தது.இருவரும் உள்ளே சென்று பார்த்தனர்.

"நான் படிக்கும் போது எனக்கு தனி அறை வேணும்னு அப்பாதான் இந்த ரூமை எனக்கு கொடுத்தார்". முகம் வாடி போனது. "இப்போ அப்பா, அம்மாவை நினைச்சா.........", கண்கள் கலங்க கஷ்டப்பட்டு உதட்டை கடித்து கண்ணீரை அடக்கி கொண்டான்.

என்ன சொல்வது என்று தெரியாமல் கலங்கி நின்ற ஷிவானி, அவனை கட்டி அணைத்து சமாதானபடுத்த"சரி நாம இங்கே வெளியில படுத்துக்கலாம்" என்று சொல்ல, 

"நல்ல யோசனை நான் கூட வெயில் காலத்தில இங்கேதான் படுப்பேன். கண்ணம்மா."

"ஆமா என் கிட்ட நீங்க ட்ரான்ஸ்பர் வந்ததுன்னு சொன்னீங்க. ஆனால் என்ன வேலைன்னு சொல்லலை".


"அதுவா, ஒரு நிமிஷம்", தனது ஓவர் கோட் எடுத்து அதில் இருந்த அப்பாயின்மென்ட் கடிதத்தை கொடுக்க, அதை பிரித்து பார்த்த ஷிவானி "ஏய் நீ இனிமே திருச்சி சிட்டி போலிஸ் கமிஷனரா. ஏன்டா என்கிட்டே இன்னும் சொல்லலைகைகளை மடக்கி வயிற்றில் குத்த வர, அவளின் இரண்டு கைகளை பின்னால் மடக்கி உதடுகளை கவ்வி கொண்டான்.

மெல்ல கைகளை விடுவிக்க அவள் இரு கைகளையும் அவன் தலைக்கு பின்னே வைத்து அழுத்தி கொண்டாள்.

அவளை அப்படியே தூக்கி கட்டிலில் போட்டு மேல படுத்து கொண்டு இரு கைகளையும் தனது கைகளால் சிறை பிடிக்க செல் போன் அலறியது. எடுத்து பார்த்தால் யு எஸ் கால். 

"சொல்லு அக்கா"

"என்னடா தம்பி. காலைல இருந்து உன்னோட போன் ட்ரை பண்ணுனேன் கிடைக்கலை."

"சாரி அக்கா, சார்ஜ் போட மறந்துட்டேன். இப்போது சாயந்தரம் தான் போட்டேன்".

தனசேகர் பேசினார்"மச்சான். முதல்ல என் தங்கை கிட்ட கொடு".

"ஷிவானி எப்படிமா இருக்க."

"நல்லா இருக்கேன்னா"

"என்னம்மா மூச்சு ஒரு மாதிரியா வருது. என்ன பண்ணுறான் என்னோட மச்சான். பிரச்சனை பண்ணுனா சொல்லு, நான் மிரட்டி வைக்கிறேன்.

"

"நீங்க வேற அண்ணா. அவரு அதுக்கு எல்லாம் கவலைபட மாட்டாரு. இப்போ கூட பாருங்க அவர் ஏதோ அதிரடியா தொல்லை பண்ணிக்கிட்டு இருக்காரு."

தனசேகருக்கு புரிந்தது. "சரிம்மா நான் காலைல கூப்பிடுறேன்". போனை கட் செய்ய, அருகில் இருந்த கீதா "என்னங்க என்ன சொல்லுறான் என் தம்பி".

"அவனா, அவனை பத்தி ஒரு வார்த்தைல சொல்லணும்னா. அதிரடிக்கார மச்சான் மச்சான் மச்சான்டி"

இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து அர்த்தத்தோடு சிரித்து கொண்டனர்.

முற்றும்



அதிரடிக்காரன் மச்சான் - அத்தியாயம் 12

"ஆமா என்னை, பெயர் சொல்லி,அப்புறம் வாடா, போடான்னு கூப்பிடுவியே இப்போ கூப்பிட மாட்டியா?".

கோபம் குறைந்து திருப்பி உட்கார்ந்து அவன் முகத்தை பார்த்து கொண்டே"நிரு கண்ணா. தனிமைல உன்னை நான் எப்படி வேனாம்னாலும் கூப்பிடுவேன். ஆனால் வெளியே மத்தவங்க முன்னால உன்னை விட்டு கொடுக்க மாட்டேன்.இந்த டீல் ஓகேவா".

"ஓகே தான். ஆனால் தனிமையில் இருக்கும் போது கொஞ்சம் ஓவரா போகாம பாத்துக்கம்மா தாயே"என்று கெஞ்சுவது போல் கேட்க பக்பகவென்று சிரிக்க ஆரம்பித்தாள்.

"ப்ரொபசர் சார் எனக்கு நீங்கதான் காதல் படத்தை சொல்லி கொடுக்கணும்" என்று கிண்டலோடு கேட்க,"காதல் பாடத்தில் நான் இன்னும் மாணவன் தான். ரெண்டு பேரும் சேர்ந்து கத்து கொள்ளலாமா?"

"உம்", என்று பதில் சொன்ன ஷிவானியை தோளை பிடித்து அமர்த்தி தாடையை தனது வலது கையால் உயர்த்தி கண்களை ஊடுருவி பார்க்க மெய்சிலிர்த்து போனாள். 

மெதுவாக தனது தலையை குனிந்து நெற்றியில் முத்தமிட, தொடர்ந்து இரண்டு கண்கள், காதுகள், உதடு, கழுத்து என்று முத்திரை பதிக்க, இன்ப வேதனையில் தவிக்க ஆரம்பித்தாள். 

தனது சட்டையை கழட்ட, ஓரக்கண்ணால் அந்த கட்டழகனை கண்களால் பருகினாள். அவளை இரு கைகளையும் நீட்டி அழைக்க,ஓடி வந்து தஞ்சம் புகுந்தாள். 

மெதுவாக ஒவ்வொரு உடையாக அவளிடம் இருந்து கழட்டி நிரஞ்சன் விடை கொடுக்க, வெட்கத்தால் அவனை கட்டி தழுவி கொண்டாள். இரு கைகளால் அவளை தூக்கி கட்டிலில் கிடத்தி தனது வேட்டியை கழட்டி, அவள் மீது படர, தவித்து போனாள். 

கொஞ்சம் கொஞ்சமாக அந்த அழகு ஓவியத்தை அவன் ஆக்ரமிக்க, காம பாடத்தில் மாணவர்களான இருவரும் ஒருவரை ஒருவர் வெற்றி கொள்ள தவித்தார்கள்.இடுப்பில் இருந்த உள்ளாடைக்கு அவன் விடுப்பு கொடுக்க, மெதுவாக தனது ஆண்மையை அழுத்தி உள்ளே அனுப்ப, அவள் பெண்மை பெட்டகத்தில் செல்ல முடியாமல் தவித்தது.

நிரஞ்சனின் தவிப்பை உணர்ந்த அவள் 'பாவம் உதவி செய்யலாம்' என்று காலை விரித்து கொடுக்க ஒரு வழியாக உள்ளே நுழைந்தது.

மெதுவாக உள்ளே செல்ல செல்ல, அவளுக்கு சொல்ல முடியாத அளவுக்கு இன்ப வேதனை. உதடுகளை கடித்து கொண்டு முனக,நிரஞ்சன் "வலிக்குதா கண்ணா. நான் வேணா எடுக்கட்டுமா" என்று கரிசனத்தோடு கேட்க, "எடுக்கவேண்டாம். ஆனால் மெதுவாக பண்ணுங்க என்று அன்பு கட்டளை இட, உள்ளே வெளியே என்று தனது ஆட்டத்தை தொடர்ந்தான்.



ஒரு வழியாக முழுக்க நுழைத்து வெற்றி கொடி நாட்ட,ஷிவானி கண்களில் கண்ணீர். 

அவனை இறுக்க கட்டி கொண்டு, "தேங்க்ஸ் நிரு. எனக்கு இப்போதான் நிம்மதி. எனக்கு உன்னை மாதிரி ஒரு குழந்தைதான் வேண்டும்.சீக்கிரம் பெத்துக்கணும். சரியா?" என்று அன்போடு கேட்க, 'சரி' என்று சொல்லி கொண்டே தனது ஆட்டத்தை தொடர்ந்தான். 

இருவரும் தொடர்ந்த அந்த காம களியாட்டம் முடியும்போது மணி இரவு ஒன்று. 

இருவரும் களைப்போடு உறங்கி விட, காலையில் முதலில் எழுந்த ஷிவானி, அவன் விழித்த போது முத்த மழை பொழிய திணறி போனான்."ஏய் ஏய் என்னடா, எப்போ எழுந்துறிச்ச."

"ஒரு அரை மணி நேரத்துக்கு முன்னால எழுந்தேன். நீங்க முழிக்கிற வரைக்கும் வெயிட் பண்ணிக்கிட்டு இருந்தேன்.தேங்க்ஸ் நிரு டியர்".

"எதுக்கு "

"எல்லாத்துக்கும்தான்" என்று அழுத்தி சொல்ல, நிரஞ்சனுக்கு புரிந்தது.

"எழுந்துறி நிரு. டைம் எட்டு ஆச்சு. எனக்கு பசிக்குது கீழே போய் சாப்பிடலாம், ப்ளீஸ்டா"அவன் கன்னத்தில் முத்தமிட்டு கெஞ்ச, மெல்ல படுக்கையில் இருந்து எழுந்தான்.

இருவரும் சேர்ந்து குளித்து விட்டு சாப்பிட ரிசப்சன் அருகில் இருந்த ரெஸ்டாரன்ட் வர, அங்கே வந்த "குணசேகர் என்ன மச்சான். நேத்து ராத்திரியம்மாவா" என்று கேட்க, "இல்லை மச்சான் ஒரே அதிரடிதான்" என்று சொல்லி விட்டு சிரிக்க 'அவர்கள் என்ன பேசுகிறார்கள்'என்று தெரியாமல் பாவமாக விழித்தாள் ஷிவானி. 

அருகில் இருந்த கீதா "என்ன ரெண்டு பேரும் சேர்ந்து சின்ன பொண்ணை கிண்டல் பண்ணுறீங்களா தொலைச்சு புடுவேன் ஆமா" என்று கண்ணடித்து விட்டு "வாடா கண்ணு" என்று அன்போடு ஷிவானியை அணைத்து கொண்டாள்.

கிண்டல் பேச்சோடு அவர்கள் பேசி கொண்டு சாப்பிட்டு முடிக்கஒன்பது மணி அளவில் வீர ராஜு, பத்மா இருவரும் வந்தனர்.

பத்மா ஷிவானி முகத்தில் தெரிந்த சந்தோசக்களை கண்டு எல்லாம் நல்லபடியாக முடிந்தது என்று புரிந்து கொண்டாள்.

அக்கா, அத்தான், பையன்ரிஷி அனைவரும் மதியம் ட்ரெயினில் ஹைதராபாத் போய், நள்ளிரவு பிளைட்டில் யுஎஸ் செல்ல முடிவு செய்தனர். 

"தம்பி நீ தஞ்சாவூர் ஒரு தடவையாவது போய் நம்ம சொந்தக்காரங்களை பார்த்துட்டு வந்துடு" என்று சொல்ல மெளனமாக தலை அசைத்தான்.

ஷிவானியை தனியே அழைத்து, "இவன் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்னு சொன்னான். நீ தான் இவன் மனசை மாத்தின. உனக்கு நன்றிம்மா".


"எதுக்கு அண்ணி எனக்கு போய் எதுக்கு இதல்லாம் சொல்லிட்டு. எனக்கு கூச்சமா இருக்கு."

"நீ அவனோட தஞ்சாவூர் ஒரு தடவையாவது போயிட்டு வா. அது உன்னோட புகுந்த வீடு. உனக்கும் ரொம்ப பிடிக்கும்."

தனசேகர், நிரஞ்சனை கிண்டல் செய்தார். "மச்சான் நீ என்னோட தங்கச்சியை ஒழுங்கா பாத்துக்கோ. இல்லைனா நான் பிரச்சனை பண்ணிடுவேன். என்னம்மா ஷிவானி, சட்டு புட்டுன்னு எங்க ரிஷிக்கு ஒரு நல்ல பெண்ணை பெத்து கொடுங்க. நாங்க காத்து இருப்போம். சரியா" என்று சொல்லி விட்டு, நிரஞ்சனை பார்த்து "நீ கலக்கு மச்சான்" என்று கண்ணடித்தார்.

அடுத்த மூன்று நாட்களும் அமராவதி கோவில், நரசிம்ஹா கோவில், வைசாக் சிம்மாசலம் கோவில், பீச் என்று காதல் பறவைகளாக இருவரும் திரிந்து வந்தனர்.

எப்போது டிஜிபி யிடம் இருந்து நிரஞ்சனுக்கு அழைப்பு வருமோ என்று மனதுக்குள் நடுங்கி கொண்டு இருந்தாள் ஷிவானி.
'என்னதான் உன்னோடு ஒரு நாள் வாழ்ந்தாலும் போதும்' என்று காதல் வசனம் பேசி திருமணம் செய்து செய்து கொண்டாலும் இந்த நான்கு நாட்கள் நிரஞ்சனிடம் பழக பழக அவன் பரந்த மனது புரிந்து போனது. யார் மீதும் அவ்வளவு சீக்கிரத்தில் கோபம் கொள்வதில்லை. 'ஆனால் எனக்கோ எதுக்கு எடுத்தாலும் கோபம் வருகிறது. எப்படி உன்னால மட்டும் இப்படி இருக்க முடியுது நிரு'என்று கேட்டால் சிரிப்புதான் பதிலாக வரும்.

வரவே கூடாது என்று அவள் வேண்டிக் கொண்டு இருந்த அந்த போன் கால் கடைசில் வந்து விட்டது.

பேசியது டி ஜி பி தினேஷ் ரெட்டி
"சொல்லுங்க சார்."
........"இப்போ விசாகபட்டினத்தில இருக்கேன்."
........"ஓகே சார்"
........"நீங்க சொன்ன மாதிரி பண்ணிடலாம்."
........"ஷி இஸ் பைன்"
........"ஓகே சார், கேட்டதா சொல்றேன்."


போனை வைத்து தன் முகத்தையே பார்த்து கொண்டு இருந்த ஷிவானியை பார்த்து, டிஜிபி தான் லைன்ல வந்தார்.

"தெரியும். என்ன சொன்னார்."குரலில் சுரத்தை இல்லை.

"நாளைக்கு ஹைதராபாத் கிளம்பிவர சொன்னாரு."

"புதன் கிழமை (28ம் தேதி) Operation Nippu-2 ஆரம்பிக்கனும்னு சொல்லி இருக்காரு. அப்புறம்உன்னை விசாரிச்சார்."

"ஓ அப்படியா."

"சரி நாம கிளம்பலாம்"மாலை கிளம்பிய விசாகா எக்ஸ்பிரஸ் ட்ரெயினில் கிளம்பி விஜயவாடா வந்தபோது நள்ளிரவு ஒரு மணி.

வீட்டில் ஷிவானியின் அறையிலே தங்கி இருக்க முடிவு செய்தார்கள்.பயண களைப்பு இருந்தாலும், ஷிவானிக்கு தூக்கம் வரவில்லை.அப்பா சொன்ன கடந்த கால சம்பவங்கள் அவள் மனதில் ஓடின.

போன தடவை காட்டுக்குள் நடந்த Operation Fire வேட்டையில் நிரஞ்சன் பெற்றோர் இருவரும் கொல்லப்பட்டது நினைவுக்கு வந்தது.அந்த படுகொலைக்கு பழி வாங்க சமயம் வந்து விட்டது. இப்போது தடுத்தால் அது பாவம் மட்டும் இல்லை, அரசாங்கத்துக்கு எதிரான நடவடிக்கையும் கூட. 

'ஒரு வேளை என்னோட நிருவுக்கு ஏதாவது ஆகி விட்டால், அய்யய்யோ'அந்த நினைப்பே அவளுக்கு மனதில் பயத்தை வரவழைத்தது.தான் ஒரு வீரனின் மனைவி பயப்படக்கூடாது என்று தன்னை தானே சமாதான படுத்தி கொண்டாள்.

"என்ன ஷிவானி தூங்கலையா?" என்று கேட்டபடி படுக்கையில் அவள் அருகில் படுத்து கிடந்த நிரஞ்சன் கேட்க, "ஒண்ணும் இல்லை தூக்கம் வரலை"என்று தடுமாறி பதில் சொல்ல, அவளை கட்டி கொண்டே கொஞ்ச நேரத்தில் உறங்கி விட்டான்.

தூங்காமல் இரவு முழுக்க விழித்து இருந்தாள் ஷிவானி.




காலை ட்ரெயினில் நிரஞ்சன், வீரராஜு இருவரும் கிளம்ப ஷிவானி, பத்மா அவர்களை வழி அனுப்பி வைத்தனர். ட்ரெயின் போகும் வழியில் டி ஜி பி யிடம் இருந்து போன் வந்தது.

ஹைதராபாத் போகாமல் வழியில்வாரங்கல் ரயில் நிலையத்தில் இறங்க சொல்ல, மதியம் பனிரெண்டு மணி அளவில் வாரங்கல் ரயில் நிலையம் வர ஏற்கனவே காத்து இருந்த ஜீப்பில் இருவரும் கிளம்பினர்.

கடுமையான வெயில் வாட்டி எடுக்கவரும் வழியில் சாப்பிட்டு விட்டு காட்டு பகுதியை அடையும் போது இருட்ட தொடங்கி விட்டது.

ஏற்கனவே இருநூறு பேர் கொண்ட போலிஸ் படை துப்பாக்கி மற்றும் ஆயுதங்களுடன் காத்து இருக்க, தங்கள் தலைவனை கண்டவுடன் மகிழ்ச்சியில் சூழ்ந்து கொண்டனர். அதில் இருந்த பல பேர் ஏற்கனவே நிரஞ்சனுடன் சேர்ந்து (Operation Fire) பணி ஆற்றியவர்கள்.ஆதலால் அவனை நிப்பு நிப்பு என்று அன்போடு அழைக்க, அவர்கள் அன்பில் கண் கலங்கி போனான்.

ஷிவானிக்கு போன் செய்து விபரத்தை சொல்லி விட்டு தாக்குதல் முடிந்தவுடன் கூப்பிடுவதாக சொல்லி விட்டு போனை வைத்தான்.ஷிவானி குரலில் இருந்த கலக்கம் அவனுக்கு ஏதோ செய்தியை சொன்னது.

கூட்டத்தை மூன்றாக பிரித்து ஒவ்வொருவரும் ஒரு திசைக்கு செல்ல வேண்டும் என்றும் எல்லோரும் சந்திக்க வேண்டிய இடம்இதுதான் என்று தனது கையில் இருந்த அந்த காட்டின் மேப்பை பார்த்து, ஒரு இடத்தை காண்பிக்க அந்த இடம் தான் போன தடவை நிரஞ்சன் பெற்றோர்கள் கொலை செய்யப்பட்ட இடம் என்று அருகில் இருந்த வீர ராஜு புரிந்து கொண்டார்.

'சரியான இடத்தை தான் குறித்து இருக்கிறான் நிப்பு'மனதுக்குள் சபாஷ் சொல்லி கொண்டார்.

'அந்த இடம் தீவிரவாத குழுவின் கூடாரங்கள் இருக்கும் இடம். அந்த இடத்தில் தாக்குதல் நடத்த வேண்டும் என்று திட்டத்தை விளக்க அனைவரும் கவனமாக கேட்டு கொண்டனர். குழுவில் இந்த இரண்டு டிஎஸ்பிகள் சத்யநாராயணா, மோகன் பாபு இருவரும் இரு குழுவுக்கு தலை தாங்க, மூன்றாம் குழுவுக்கு தானே தலைவனாக நிரஞ்சன் வீர ராஜு உடன் கிளம்பினான். 

வளர்பிறை சந்திரன் ஓரளவுக்கு வெளிச்சம் தர, அனைவரும் ஒவ்வொரு திசையில் பயணம் செய்ய தொடங்கினர்.

விஜயவாடாவில். 

"என்ன அம்மா, இந்த நிரு, தாக்குதல் முடிஞ்ச உடனே கூப்பிடுறேன்னு சொல்றாரு.எனக்கு அவரை அனுப்ப மனசே வரலைமா. ஆனால் அவருக்கு கடமைகள் இருக்கே." முதல்ல என்று புலம்பி கொண்டு இருந்தாள்.

'சரி அனுவை பார்த்து விட்டு வரலாம்' என்று போன் செய்ய, அனுவோ 'நான் உன்னை பார்க்கலாம்னு அங்கே வந்து கிட்டே இருக்கேன்'என்று பதில் சொல்ல "சரி வாடி நான் வெயிட் பண்ணுறேன்."


அனு அடுத்த பத்து நிமிடத்தில் வந்து சேர, "என்னடி ஷிவானி, என்ன போர் அடிக்குதா. நிப்பு சார் உன்னை விட்டுட்டு ஹனிமூன் கொண்டாட காட்டுக்கு போய்ட்டாரா" என்று கிண்டலோடு கேட்கஷிவானி முகம் சிறுத்து போனது.

"என்னடி என்னை ரொம்ப கிண்டல் பண்ணுற. கல்யாணம் ஆகி நாலு நாள்தான் ஆச்சு. அதுக்குள்ள அவரை கூட்டி போய்ட்டாங்க. என்ன பிழைப்போஇது. அவர் இதை முடிச்சு வந்த உடனே, இந்த போலிஸ் வேலை வேணாம்னு விட்டுட சொல்லுடுவேன்."

அதை கேட்டு அனு மீண்டும் சிரிக்க தொடங்க, முகம் வாடி போனது, "எதுக்குடி சிரிக்கிற"

"இங்கே பாத்தியா. உன்னோட அப்பா ஒரு போலிஸ்காரர். இத்தனை வருஷத்திலஉன்னோட அம்மா ஒரு தடவையாவது இப்படி பேசி இருப்பாங்களா. நீ ஒரு போலிஸ்காரர் மகளா இருந்து கொண்டே இப்படி பேசுறது சரியில்லை. அதுமட்டும் இல்லை, நிப்பு போல ஒரு போலிஸ் ஆபீசர் கிடைக்க நம்ம ஆந்திர போலிஸ் புண்ணியம் பண்ணி இருக்கனும். ஞாபகம் வச்சுக்கோ."

அவள் வார்த்தைகளில் இருந்த உண்மையை உணர்ந்த ஷிவானி, 'சாரிடி' என்று தலை குனிந்தாள்.

அவளை இறுக்க அணைத்து கொண்ட அனு, "உன்னை மாதிரி ஒரு பொசசிவ் ஆனபொண்டாட்டி கிடைக்க நிப்பு சார் கொடுத்து வச்சு இருக்கணும்"என்று கிண்டல் செய்தாள்.

அதற்குள் அனுவுக்கு போன் வர, எடுத்து பேச ஆரம்பித்தாள்.

"சொல்லுங்க சார்"
.........."ஓகே சார்"
........."கட்டாயம், உங்களுக்காக இது கூட செய்ய மாட்டேனா."
........"நான் விசாரிச்சுட்டு திரும்ப கூப்பிடுறேன்."

"யாருடி போன்ல" என்று ஷிவானி கேட்க

"அவர்தாண்டி நிப்புவோட பிரெண்ட்"

"அண்ணாமலை சாரா"


"அவரே தான். கல்யாணத்தில பார்த்தோம்ல. அவரோட தங்கை ஹைதராபாத்ல தான் ஜூனியர் காலேஜ் படிக்கிறா. அவளுக்கு நாராயணா மெடிக்கல் காலேஜ்ல அப்ளிகேசன் வாங்கி அனுப்ப முடியுமான்னு கேட்டாரு. அதைத்தான் பேசினேன். 

நல்ல மனுசன்டி அவர். உன்னோட கல்யாணத்துக்கு வந்த அவர், 'எனக்கு மட்டும் கால் சரியா இருந்தா நானும் நிரஞ்சன் கூட போவேன். ஆனா என்ன பண்ணுறது, என்னோட ஒரு கால் எனக்கு உதவாம போச்சேன்'னு சொன்ன போது எனக்கு மனசு வலிச்சதுடி."

"ஏய், அவரை நீ டாவடிக்கிரியா". 

"ஐயோ அதல்லாம் கிடையாது. நான் எங்க அப்பா பார்க்கிற மாப்பிள்ளையைதான் கல்யாணம் பண்ணிக்கிவேன்."

"சரிடி, எல்லாரும் முதல்ல அப்படிதான் சொல்லுவாங்க. அப்புறம் பின்னாடிதான் உண்மை தெரியும்."

அனு ஒன்றும் பதில் சொல்லவில்லை. தொடர்ந்து இரு தோழிகளும் சிரித்து பேசி கொண்டு இருந்தார்கள்.

அடுத்த நாள் மதியம்வரை எந்த தகவலும் வராததால் கொஞ்சம் தவித்து போனாள் ஷிவானி. 

"போலிஸ் வேலைல இருந்தாலே இப்படி தான். நானும் கல்யாணம் ஆன புதுசில இப்படிதான் பயந்து போனேன். நாளாக அதுவே பழகி போச்சு" என்று சொல்லி விட்டு, பத்மா டிவியை ஆன் செய்தாள்.

ஒவ்வொரு சேனலாக மாற்றி கொண்டே வந்தபோது, டி வி 9 நியூஸ் சானல் வந்தபோது நிரஞ்சனின் போட்டோ காண்பிக்கப்பட்டது.

"அம்மா மாத்தாதே" என்று கத்திய ஷிவானி, கலவரத்தோடு செய்தியை பார்த்தாள்.



"சற்று முன் கிடைத்த தகவல் இன்று விடிகாலையில் நிப்பு நிரஞ்சன் தலைமையில் நடைபெற்ற தாக்குதலில் நூற்றுக்கும் மேற்பட்ட நக்சலைட்கள் காயமடைந்தனர். ஏற்கனவே இருந்த இருநூறு போலிஸ் அதிகாரிகளுடன், மேலும் முன்னூறு போலிஸ் அதிகாரிகள் இந்த தாக்குதலில் இப்போது இறக்கப்பட்டு இருக்கிறார்கள் என்று டிஜிபி தினேஷ் ரெட்டி தெரிவித்தார். இந்த தாக்குதல் காலை ஐந்து மணிக்கு ஆரம்பித்து இன்னும் நடந்தது கொண்டு இருப்பதாக தெரிகிறது."

"அம்மா எனக்கு பயமா இருக்குமா, நாம வேணா அங்கே போகலாமா."

"புரியாம பேசாதே ஷிவானி. அங்கே பெரிய சண்டை நடந்துகிட்டு இருக்கு, நாம வேற போனா இன்னும் பெரிய குழப்பம் ஆய்டும்"."சரி அம்மா", என்று நகத்தை கடித்தபடி, பயமாய் டிவி யை பார்த்து கொண்டு இருந்தாள்.