Wednesday, May 6, 2015

அக்னி சாட்சி - அத்தியாயம் - 31



இடம்: அதே கட்டிடத்தின் கீழ் தளத்தில் இருந்த சிவா பணியாற்றும் உணவகம்
நேரம்: பகல் 1:15 மணி

ப்ரீதி வந்து ஆனந்துக்கு அருகே அமர,

ஆனந்த், "அஞ்சு நிமிஷம்ன்னு சொன்னே?"

ப்ரீதி, "ஒரு மாட்யூலை அவனுக்கு எக்ஸ்ப்ளெயின் பண்ணிண்டு இருந்தேன். கொஞ்சம் நாழியாயிடுத்து. அப்பறம் அவன் தன் சொந்தக் கதையை சொல்ல ஆரம்பிச்சுட்டான். ஒரு இன்டரெஸ்டிங்க் நியூஸ்"



ஆனந்த், "என்ன?"

ப்ரீதி, "விக்ரம் ஷா எங்கே தங்கிட்டு இருக்கார் தெரியுமா?"

ஆனந்த், "அதான் இந்த பில்டிங்க்கின் பின்னாடி விங்கில் இருக்கும் அப்பார்ட்மெண்ட் ஒண்ணில் இருப்பார்ன்னு நேத்து கெஸ் பண்ணினோமே? Are we right about it"

ப்ரீதி, "Quite right. அது சுகுமாரோட த்ரீ பெட் ரூம் ஃப்ளாட். அவன் வொய்ஃப் பிரசவத்துக்கு ஊருக்குப் போயிருக்கா. ஆறு மாசத்துக்கு முன்னாடிதான் சுகுமார் அங்கே குடி போயிருக்கான். விக்ரம் ஷாதான் அவனுக்கு அந்த ஃப்ளாட்டை அரேஞ்ச் பண்ணிக் கொடுத்து இருக்கார். கம்பெனி வாடகை கொடுக்குது. விக்ரம் ஷாவும் நந்தகுமாரும் அடிக்கடி தனியா பேசிக்கறாங்களாம். இவன் வந்த உடனே பேசறதை நிறுத்திடறாங்களாம். அவனும் விக்ரம் ஷா மேல ரொம்ப சந்தேகப் படறான்"

ஆனந்த், "அவனும் உன்னை மாதிரியே இன்னொரு கம்பெனிக்கு எம்.டி. இல்லையா?"

ப்ரீதி, "ஆமா. எதாவுது தெரிஞ்சுக்கலாம்ன்னு அந்தப் பேச்சை எடுத்தேன். அவன் எதுவும் சொல்லலை. அவனுக்கும் ஏதோ தெரிஞ்சு இருக்கும் போல இருக்கு"

ஆனந்த், "அவனையும் இங்கே கூட்டிட்டு வந்து இருக்கலாமே. நானும் கொஞ்சம் அவன் வாயைக் கிளறி இருப்பேன்"

ப்ரீதி, "இன்-ஃபாக்ட் இன்வைட் பண்ணினேன். விக்ரம் ஷா அவனை ஃப்ளாட்டுக்குப் போய் எதோ டாக்யுமென்ட்ஸ் எடுத்துட்டு வரச் சொன்னாராம். அவன் ஃப்ளாட்டுக்குப் போய் இருக்கான்"

ஆனந்த், "ஸம் திங்க் ஃபிஷ்ஷி. கூட நந்தகுமார் இருக்கும் போது சுகுமாரை எதுக்கு டாக்யுமென்ட்ஸ் எடுத்துட்டு வரச் சொல்லணும்?"

ப்ரீதி, "ஒன் மோர் திங்க்! அந்த ஆடிட்டர்ஸ் ரெண்டு பேரும் நான் வெளியில் வரச்சே என் பின்னாடி வந்து அவாளும் லிஃப்டில் ஏறினா. கீழே வந்துண்டு இருக்கச்சே அதில் ஒருத்தர் டைம் வேஸ்ட், இன்னும் டிலே ஆகப் போறது அப்படின்னு அலுத்துண்டர். அடுத்தவர் கண் ஜாடை காண்பிச்சதும் பேசறதை நிறுத்திட்டார்"

ஆனந்த், "ஸோ, விக்ரம் ஷாவுக்கு ரெய்ட் வரப் போற விஷயம் தெரிஞ்சாச்சு"

ப்ரீதி, "என்ன செய்யலாம்?"

ஆனந்த் ஆர்டர் செய்து இருந்தவை வந்தது ...

ஆனந்த், "நாம் செய்யறதுக்கு இப்போ ஒண்ணும் இல்லை. Let's eat and enjoy our lunch"

ப்ரீதி, "எப்படித்தான் நீ இப்படி கூலா இருக்கியோ. எனக்கு பக் பக்குன்னு அடிச்சுண்டு இருக்கு"

ஆனந்த், "என்ன அடிச்சுண்டு இருக்கு"

ப்ரீதி, "நெஞ்சு"

ஆனந்த், "நெஞ்சுன்னா .. அது ரெண்டுமா"

அவனை முறைத்த ப்ரீதி, "You pervert! நோக்கு எப்பவும் அந்த நினைப்புதான் ... "

ஆனந்த் சிரித்த படி சாப்பிடத் தொடங்கினான்.


இடம்: விக்ரம் ஷாவின் கேபின், ஷா ஸிஸ்டம்ஸ் அலுவலகம்
நேரம்: பகல் 1:30 மணி

நந்தகுமார், "என்ன பாஸ்? நாம் என்னென்னவோ ப்ளான் பண்ணிட்டு இருந்தோம். இப்போ ரெய்ட் வந்தா பிரச்சனை இல்லையா? தப்பிச்சுப் போயிடலாம் பாஸ்"

விக்ரம் ஷா, "மடையா! இப்போ அப்படியே விட்டுட்டுப் போனா. இந்தக் கம்பெனியை விக்கற வேலை என்ன ஆகறது? இதை இந்த அளவுக்குக் கொண்டு வர எவ்வளவு உழைச்சு இருப்பேன் தெரியுமா?"

நந்தகுமார், "அதான் அதே அளவுக்கு வேற மேட்டர்ல சம்பாதிச்சுட்டீங்களே பாஸ்"

விக்ரம் ஷா, "டேய், வெளியில் போகும் போது நம்ம மேல எந்த சந்தேகமும் வரக் கூடாது"

நந்தகுமார், "அப்படின்னா இப்போ இன்னா செய்யறது?"

விக்ரம் ஷா, "மொதல்ல இன்கம்டாக்ஸ் டிபார்ட்மெண்ட் கண்ணில் படக்கூடாத பேப்பர்ஸ் எல்லாத்தையும் டிஸ்போஸ் பண்ணனும். அதுக்கு அப்பறம் நாம் காலையில் போட்ட ப்ளானில் கொஞ்ச மாற்றம். இப்போ எல்லா ஸ்டாஃபையும் எதாவுது காரணத்தைச் சொல்லி வீட்டுக்குப் போகச் சொல்லப் போறோம். ப்ரீதியும் ஆனந்தும் லஞ்ச் முடிச்சுட்டு வரும் போது அவங்க ரெண்டு பேரையும் கொண்டு போய் அந்த ஃப்ளாட்டில் கட்டிப் போட்டுட்டு திரும்ப இங்கே ஆஃபீஸுக்கு வரப் போறோம். ரெய்ட் வரும்போது அவங்களுக்கு தேவையான தகவல் எல்லாத்தையும் கொடுக்கப் போறோம். ஷா ஸிஸ்டம்ஸ் அக்கௌன்ட்ஸில் ப்ளாக்கில் நாம் எதுவும் செய்யலை. எல்லாம் PSV Systems அப்பறம் SVS Systems கணக்கில் தான். அந்தக் கம்பெனிங்க கணக்கைக் கேட்டா அது நம்ம கிட்டே இல்லை. ப்ரீதியையும் சுகுமாரையும் கேட்கணும்ன்னு சொல்லப் போறோம். அந்த ரெண்டு கம்பெனிகளும் ஷா ஸிஸ்டம்ஸுக்கு ஆர்டர் வாங்கறதுக்காக தொடங்கினது. அதுக்குப் பிறகு அவங்க ரெண்டு பேர் சாலரியையும் அந்த கம்பெனிக் கணக்கில் கொடுத்தோம்ன்னு சொல்லப் போறோம். அதைத் தவிற அந்த ரெண்டு கம்பெனிகளுக்கும் எனக்கும் எந்த வித மான சம்மந்தமும் இல்லைன்னு சொல்லப் போறோம். அவங்க எங்கேன்னு கேட்டா எல்லோரோட அவங்களும் வீட்டுக்குப் போயிட்டாங்கன்னு சொல்லப் போறோம்"

நந்தகுமார், "சுகுமார் ஃப்ளாட்டுக்கு அவங்க போனா?"



விக்ரம் ஷா, "உடனே போக மாட்டாங்க. ஏன்னா இந்த ஆஃபீஸ் அட்ரெஸ்ஸைத்தான் அந்த ரெண்டு கம்பெனிகளுக்கும் ரிஜிஸ்டர்ட் ஆஃபீஸ்ஸா உபயோகிச்சு இருக்கேன். அந்த ஃப்ளாட் சுகுமார் பேரில் இல்லை. ரெக்கார்ட் படி அது ஷா ஸிஸ்டம்ஸ்ஸின் கெஸ்ட் ஹவுஸ். நம்ம ஹெச்.ஆர்ல அவங்களோட பர்மனெண்ட் அட்ரெஸ்தான் இருக்கு. லோகல் அட்ரெஸ் அப்டேட் செய்யலை. தெரியாதுன்னு சொல்லப் போறோம். . சுகுமாரின் பர்மனெண்ட் அட்ரெஸ் சேலத்தில் இருக்கு. ப்ரீதியின் பர்மனெண்ட் அட்ரெஸ் குன்னூரில். அவங்க விசாரிச்சுக் கண்டு பிடிக்கறதுக்குள்ளே நாம் ஹாங்க் காங்க்கில் இருப்போம்"

நந்தகுமார், "ஒண்ணும் ப்ராப்ளம் வராது இல்லை பாஸ்?"

நந்தகுமார் விக்ரம் ஷாவின் லாப்டாப் பழுதுபட்ட பிறகு காலையில் விக்ரம் ஷா செய்யச் சொன்ன இரு பணப் பரிமாற்றங்களை வேறு கணிணியை உபயோகித்து செய்ய மறந்து இருந்தான்!

விக்ரம் ஷா, "ஒரு ப்ராப்ளமும் வராது. முதல்ல இந்த ஃபைலிங்க் கேபினெட்டில் PSV Systems அப்பறம் SVS Systems சம்மந்தப் பட்ட பேப்பர்ஸ் எல்லாத்தையும் எடுத்து ஒரு டஸ்ட் பின்னில் போடு"

நந்தகுமார், "கிழிச்சுட்டு போட வேண்டாமா பாஸ்?"

விக்ரம் ஷா, "எந்த விதமான தடயமும் இந்த ஆஃபீஸில் இருக்கக் கூடாது. எல்லா பேப்பர்ஸையும் கீழே பேஸ்மெண்டுக்குக் கொண்டு போய் அங்கே இருக்கும் இன்ஸினரேட்டருக்குப் பக்கத்தில் இருக்கும் ட்ரம்மில் வெச்சு பெட்ரோல் ஊத்திக் கொளுத்தணும். சுத்தமா சாம்பல் ஆகற வரைக்கும் பாத்துட்டு வரணும்"

நந்தகுமார், "ஓ.கே பாஸ். அதுக்கு அப்பறம்?"

விக்ரம் ஷா, "ப்ரீதியும் ஆனந்தும் லஞ்சுக்குப் போயிருக்காங்க. அவங்க திரும்பி வரும் போது எல்லோரும் வெளியே போயிட்டு இருப்பாங்க. அவங்க ரெண்டு பேரையும் ஃப்ளாட்டுக்குப் கூட்டிட்டு போய் காரியத்தை முடிச்சுட்டு இங்கே வந்துடப் போறோம்"

நந்தகுமார், "இந்நேரம் சுகுமாரை கட்டிப் போட்டு இருப்பாங்க. அவங்களையும் துணைக்குக் கூப்பிடலாமா சார்?"

விக்ரம் ஷா, "வேண்டாம் ஆள் நடமாட்டம் அதிகம் இருக்கக் கூடாது"

அடுத்த சில நிமிடங்களில் நந்தகுமார் ஒரு பெரிய குப்பைக் கூடையுடன் பேஸ்மெண்டுக்குச் சென்றான்.




அக்னி சாட்சி - அத்தியாயம் - 30

இடம்: ஆனந்தின் கேபின், ஷா ஸிஸ்டம்ஸ்
நேரம்: காலை 9:45


ப்ரீதி சென்ற பிறகு தன் இருக்கையில் அமர்ந்து தன் லாப்டாப்பை இயக்கினான் ...

அடுத்த நிமிஷம் ஆனந்தின் கைபேசி மறுபடி ஒலித்தது முன்பின் தெரியாத ஒரு எண்ணில் இருந்து அந்த அழைப்பு வந்து இருந்தது ...

ஆனந்த், "ஹெல்லோ ஆனந்த் ஹியர்"

எதிர்முனையில் வந்தனா, "மிஸ்டர் ஆனந்த். This is Vandhana Rathod-Shakithivel from R&AW"

ஆனந்த், "ஹெல்லோ மிஸஸ் ராத்தோட்-சக்திவேல். You have an interesting surname. Please tell me what can I do for you"

எதிர்முனையில் ... அவர்கள் அமர்ந்து இருந்த கார் தேசிய நெடுஞ்சாலை NH-47இல் கோவையை நோக்கிப் பறந்து கொண்டு இருக்க, அவன் குறும்புப் பேச்சை ரஸித்துப் புன்னகைத்த வந்தனாவை சக்தி குறு குறுப்புடன் பார்த்தபடி தன் கைபேசியில் வந்தனாவின் எண்ணை அழைத்துக் கொண்டு இருந்தான் ...

வந்தனா, "அங்கே இருக்கும் சிச்சுவேஷனைப் பத்தி தெரிஞ்சுக்கணும். இருங்க என் ஹப்பியையும் கான்ஃபெரென்ஸ் மோடில் இணைக்கறேன்"

ஆனந்த், "இங்கே இருக்கும் சிச்சுவேஷனுக்கும் உங்க ஹப்பிக்கும் என்ன சம்மந்தம்"



வந்தனா, "ஓ! ஐ ஆம் சாரி. என் ஹப்பி மிஸ்டர் ஷக்திவேல் முத்துசாமி R&AW ஸைபர் க்ரீம் ப்ரிவில் ஸீனியர் அனலிஸ்ட். அந்த அரெஸ்டுக்கு அவரும் என்னுடன் வருவார். அவர்தான் நீங்க கொடுக்கும் ஆதாரங்களை வெரிஃபை பண்ணப் போறார்"

சக்தி, "ஹெல்லோ மிஸ்டர் ஆனந்த்"

ஆனந்த் (தமிழில்), "சொல்லுங்க மிஸ்டர் சக்திவேல். உங்களை சக்தின்னு கூப்பிடலாமா?"

சக்தி, "ஓ! நீங்களும் தமிழ்தானா"

ஆனந்த், "ஆமாம். ஆனா உங்க வைஃப் தமிழ் இல்லைன்னு நினைக்கறேன். சரியா?"

வந்தனாவும் தமிழில், "எப்படி சொல்லறீங்க மிஸ்டர் ஆனந்த்"

ஆனந்த், "சாரி, You floored me"

சக்தி, "நீங்க சொன்னது ஒரு அளவுக்கு சரிதான். என்னை கல்யாணம் செஞ்சதுக்கு அப்பறம் தமிழ் கத்துட்டா"

வந்தனா, "ஹல்லோ! அதுக்கு முன்னாடியே"

ஆனந்த், "மிஸ்டர் சக்திவேல். உங்க பேருடன் தனக்கு ஒரு ஃப்ரெண்ட் இருப்பதா என் ஃப்ரெண்ட் சொல்லி இருக்கார்"

சக்தி, "சே! அவ்வளவு காமனான பேர்ன்னு தெரிஞ்சு இருந்தா எங்க அப்பாகிட்டே வேற பேர் வெக்கச் சொல்லி இருப்பேன்"

வந்தனா, "ஒண்ணும் வேண்டாம். எனக்கு ஷக்திதான் பிடிச்சு இருக்கு"

சக்தி, "சோ ஆனந்த், ஆயுசுக்கும் எனக்கு இந்தப் பேர்தான் விடுங்க"

மூவரும் சிரித்த பிறகு சக்தி, "ஆனந்த், நேரா விஷயத்துக்கு வர்றேன். நமக்கு கிடைச்ச ஆதாரங்களுக்கு எல்லாம் முக்கியமான லிங்க் அந்த லாப்டாப் ஹார்ட் டிஸ்க்தான். அது இன்னும் உபயோகத்தில் இருக்கா? நமக்குத் தேவையான விவரங்களை அவன் இன்னமும் அழிக்காம விட்டு வெச்சு இருக்கானா?"

ஆனந்த், "நான் இப்போதான் ஆஃபீஸுக்கு வந்தேன். பதினஞ்சு நிமிஷத்துக்கு முன்னாடிதான் விக்ரம் ஷா ஆஃபீஸுக்கு வந்து இருக்கார். லாப்டாப் உபயோகத்தில் இருக்கான்னு உடனே என்னால் சொல்ல முடியும். ஒரு நிமிஷம்"

சக்தி, "பிங்க் பண்ணிப் பாக்கப் போறீங்களா? "

ஆனந்த், "எஸ் ... இன்னும் உபயோகத்தில் தான் இருக்கு. ஆஃபீஸ் LANஇல் கனெக்ட் பண்ணி இருக்கார். இன்னமும் அதே ஐ.பி அட்ரெஸ்தான். மாறலை. ஆனா தகவல்களை அழிக்காம விட்டு வெச்சு இருக்காரான்னு என்னால் சொல்ல முடியாது. ரிமோட் ஆக்ஸஸ் பர்மிஷன் அந்த லாப்டாப்பில் செட் பண்ணலை"

சக்தி, "தகவலை அழிச்சு இருந்தாலும் பரவால்லை. லாப்டாப் ஹார்ட் டிஸ்க் உபயோகிக்கும் படி இருந்தா போதும். இல்லையா"

ஆன்ந்த, "எஸ். மேக் அட்ரெஸ்ஸை வெச்சு நாம் நிரூபிச்சுடலாம்"

சக்தி, "அவருக்கு ரெய்ட் நடக்கப் போறது தெரிஞ்சா லாப்டாப்பையே உபயோகப் படுத்த முடியாதபடி பண்ண வாய்ப்பு இருக்கு. இல்லையா?"

ஆனந்த், "இன்கம்டாக்ஸ் டிபார்ட்மெண்ட் ரெய்டுக்காக அவர் லாப்டாப்பை அழிப்பார்ன்னு தோணலை. அவர் செஞ்ச கருப்புப் பண கொடுக்கல் வாங்கலுக்கு நிச்சயம் அதில் எந்த ரெக்கார்டும் இருக்காது. மற்ற சில டாக்யுமென்ட்ஸ் இருக்கலாம். அதைத்தான் அழிக்கப் பார்ப்பார்"

சக்தி, "ஐ.டி டிபார்ட்மெண்டில்லும் போலீஸிலும் அவருக்கு தெரிஞ்ச ஆளுங்க இருப்பாங்க இல்லையா?"

ஆனந்த், "நிச்சயமா இருப்பாங்க. ஆனா, எனக்கு வந்த தகவல் படி போலீஸில் டாப் லெவலில் இருக்கும் ஒரு ஐ.ஜி கிட்டேதான் கம்ப்ளெயிண்ட் கொடுத்து இருக்கு. அவருக்கு கீழே அந்த கம்ப்ளெயிண்ட் விஷயம் போறதுக்கு உள்ளே உங்க சீஃப் அவங்களை எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டாம்ன்னு சொல்லிட்டாராம். இருந்தாலும், அவர் போலீஸைப் பத்தி கவலைப் படமாட்டார்ன்னு தோணுது. ஏன்னா, அவர் மேல கொடுக்கப் பட்ட புகார் ஸைபர் க்ரைம் சம்மந்தப் பட்டது இல்லை. காசு கொடுத்து ஜாமீனில் வந்துடுலாம்ன்னு இருப்பார்"

சக்தி, "இன்னைக்கு போலீஸுக்கு பதிலா எஃப்.பி.ஐயின் சார்பில் R&AW கூட CRPFஐ கூட்டிட்டு வரப் போகுதுன்னு தெரிய வந்தா?"

வந்தனா, "உங்களுக்கு ஏற்கனவே தெரிஞ்சு இருக்கும். முதலில் லோகல் போலீஸும் வருவதாத்தான் இருந்தது. லோகல் போலீஸ் அரெஸ்ட் பண்ணினா சுலபமா ஜாமீன் கொடுக்க வாய்ப்பு இருக்குன்னு எங்க சீஃப் அவங்களை வர வேண்டாம்ன்னு சொல்லி இருக்கார். நாங்க மட்டும்தான் ஐ.டி டிபார்ட்மெண்ட் கூட வரப் போறோம். இந்த விஷயம் அவருக்கு தெரியவந்தா உடனே அவருக்கு சந்தேகம் வரும். லாப்டாப்பை எங்கேயாவுது ஒளிச்சு வெக்க பார்க்கலாம். அட்லீஸ்ட் லாப்டாப்பை உபயோகப் படுத்த முடியாத படி செய்யலாம் இல்லையா?"

ஆனந்த், "ஓ மை காட்! நாங்க யாரும் அந்தக் கோணத்தில் யோசிக்கலை. இப்போ என்ன செய்யலாம்?"

சக்தி, "ரெய்ட் வரும் விஷயம் அவருக்கு எப்ப தெரிய வரும்? Any idea?"

ஆனந்த், "போலீஸைப் பத்தி எனக்கு தெரியலை. ஐ.டி டிபார்ட்மெண்டில் அவருக்கு தெரிஞ்ச ஆள் எந்த பிரிவில் இருக்காங்கறதைப் பொருத்து இப்போ இருந்து மத்தியானத்துக்குள்ளே எப்போ வேணும்ன்னாலும் அவருக்கு தெரிய வரலாம்"

சக்தி, "அப்படின்னா நாம் உடனே செயலில் இறங்கணும். நான் ஒரு ஐ.பி அட்ரெஸ் சொல்றேன் நோட் பண்ணிக்குங்க" என்றபடி ஒரு இணைய விலாசத்தை சொன்னான்.

ஆனந்த், "ம்ம்ம் ... என்ன செய்யணும்?"

சக்தி, "ப்ரௌஸர்ல அந்த ஐ.பி அட்ரெஸ்ஸை ஓபன் பண்ணினா ஒரு வெப் பேஜில் Download அப்படின்னு ஒரு ஹைபர் லிங்க் மட்டும் இருக்கும். அந்த ஹைப்பர்லிங்க்கை க்ளிக் பண்ணினா ஒரு ஃஜிப் ஃபைல் டவுன் லோட் ஆகும். அதை அன்-ஃஜிப் பண்ணுங்க. ஒரு sn1874.exe அப்படின்னு ஒரு ஃபைல் ஸேவ் ஆகும். அதை ரன் பண்ணுங்க. அதற்குப் பிறகு விக்ரம் ஷா லாப்டாப் ஐ.பி அட்ரெஸ், உங்க ஐ.பி அட்ரெஸ், கூட உங்க கேட்வே ஐபி அட்ரெஸ் இது மூணையும் எனக்கு எஸ்.எம்.எஸ் பண்ணுங்க. Don't waste time. Do these immediately. நான் உங்களை ஒரு மணி நேரத்தில் கூப்பிடறேன்" என துரிதப் படுத்தியபடி விடைபெற்றான்

அடுத்த சில நிமிடங்களில் ஆனந்த் சக்தி சொன்னவற்றை செய்து முடித்து இருந்தான் ... 


இடம்: தேசிய நெடுஞ்சாலை NH-47 அவினாசியை நெருங்கிக் கொண்டு இருந்த கார்
நேரம்: காலை 10:00 மணி


தொலைபேசிப் பேச்சை முடிந்தவுடன் வந்தனா, "What is that all about? என்ன செய்யப் போறே?"

சக்தி, "அதான் சொன்னேனே அந்த விக்ரம் ஷாவின் லாப்டாப்பை திருடப் போறோம்"

வந்தனா, "எப்படி? Besides that is not legal"

சக்தி, "ரெய்ட் வரும் விஷயம் தெரிஞ்சதும் அவன் என்ன செய்யக் கூடும்?"

வந்தனா, "எவ்வளவு தடவை தான் அதைப் பத்தி பேசறது?" என்று அலுத்துக் கொண்டு "முதலில் அதில் இருக்கும் விவரங்களை அழிப்பான். நாம் மாக் அட்ரெஸ்ஸை வெச்சு அடையாளம் கண்டு பிடிப்போம்ன்னு யோசிச்சான்னா லாப்டாப்பையே உபயோகப் படுத்த முடியாமல் செய்யப் பார்ப்பான். போட்டு உடைச்சாலும் உடைக்கலாம்"

சக்தி, "நாமே அதை உபயோகப் படுத்த முடியாத படி செஞ்சுட்டா?"

வந்தனா, "அது நமக்கு டேஞ்சர்தானே?"

சக்தி, "பார்க்கறவங்க கண்ணுக்கு உபயோகப் படுத்த முடியாதபடி செஞ்சுட்டா?"

வியப்பு கலந்த சிரிப்புடன், "யூ மீன்? .... You scoundrel!"

குறும்புச் சிரிப்புடன் சக்தி, "எஸ் ஹனி! மாங்க்ஸ் பாட் நெட்டுக்கு இப்படியும் ஒரு உபயோகம் இருக்கும்ன்னு நான் நினைச்சுக்கூடப் பார்க்கலை."

வந்தனா, "But that is tampering with the evidence"

சக்தி, "உன் கைக்கு உன் எவிடன்ஸ் வந்ததும் அது முன்னாடி இருந்த மாதிரி இருக்கும். கவலைப் படாதே"

வந்தனா, "பட் .. "

சக்தி, "நோ பட்ஸ். முரளி சார் இதுக்கு ஒண்ணும் சொல்ல மாட்டார். Neither will Shawn Henry. ஸோ டோண்ட் வொர்ரி. நீ வொர்ரி பண்ணினா அது உன் வயித்தில் இருக்கும் குட்டிப் பாப்பாவுக்கு நல்லது இல்லை. ஆனந்த் லாப்டாப்பில் இருந்து இன்னும் அரை மணி நேரத்தில் அந்த ஆஃபீஸில் இருக்கும் எல்லா ஸிஸ்டத்திலும் பரவிடும். இவர் ஓட்டற வேகத்தைப் பார்த்தா கோவைக்கு பத்தரை மணிக்கு போய் சேர்ந்துடுவோம்ன்னு நினைக்கறேன். நீ லக்கேஜஸை போர்ட்டர் வெச்சு செக்-இன் பண்ணி போர்டிங்க் பாஸ் எடுத்துட்டு வா. ஏர்போர்டில் எங்கேயாவுது உக்காந்து நான் என் கைவரிசையை காட்டறேன்"


இடம்: கோவை விமான நிலையம்
நேரம்: காலை 10:30 மணி


அங்கு இருந்த காஃபி ஷாப்பில் ஒரு மேசையில் சக்தி சென்று அமர, வந்தனா அவனுக்கு காஃபியும் தனக்கு ஒரு ஜூஸும் வாங்கிக் கொண்டு வந்தாள். சக்தி லாப்டாப்பை இயக்கி தனது வயர்லஸ் ப்ராட்பாண்ட் மூலம் இணையத்தில் இணைத்தான். பிறகு கைபேசியில் ஆனந்தை அழைத்தான்,

சக்தி, "ஆனந்த், நான் சொன்னதை செஞ்சுட்டீங்களா?"

ஆனந்த், "எஸ்! ஆமா? நீங்க என்ன அனுப்பினீங்க? I find some changes in my laptop. எதோ புது ப்ராஸஸ் ரன் ஆகத் தொடங்கிட்டு இருக்கு?"

சக்தி, "அதை நான் அப்பறம் விளக்கறேன். இன்னும் ஒரு முறை விக்ரம் ஷாவின் லாப் டாப் வேலை செஞ்சுட்டு இருக்கான்னு பார்த்துச் சொல்லறீங்களா"

சில நிமிடங்களுக்குப் பிறகு ..

ஆனந்த், "எஸ்! இன்னும் LANனில் கனெக்ட் ஆகித்தான் இருக்கு. ஒரு மாற்றமும் இல்லை"

சக்தி, "சரி, கிவ் மீ டென் மினிட்ஸ்" என்று விடைபெற்றான்.

அருகில் அமர்ந்த வந்தனா, "எனக்கு சொல்லித் தரியா?" எனக் கொஞ்ச ..

சக்தி, "Sorry ... this is not for police officers. besides we don't have time. என்ன பண்ணறேன்னு பாரு"

சக்தி தன் லாப்டாப்பில் ஒரு மென்பொருளை இயக்கத் தொடங்கினான். பல நிமிடங்களுக்குப் பிறகு கைபேசியில் ஆனந்தை அழைத்தான்,

சக்தி, "ஆனந்த், இப்போ விக்ரம் ஷாவின் லாப்டாப்பை பிங்க் பண்ணிப் பாருங்க"

அனந்த், "கிவ் மி அ மினிட்" சில நிமிடங்களுக்குப் பிறகு தொடர்ந்து, "Its not there! லாப்டாப்பை நெட்டில் இருந்து டிஸ்கனெக்ட் செஞ்சுட்ட மாதிரி இருக்கு"

சக்தி, "இல்லை. க்ரேஷ் ஆயிடுச்சு"

ஆனந்த், "ஓ மை காட்! என்ன செஞ்சீங்க?"

சக்தி, "டோண்ட் வொர்ரி, அந்த லாப்டாப்பின் ஹார்ட் டிஸ்கை எடுத்து வேற லாப்டாப்பில் பொருத்தினா சரியா வேலை செய்யும். இப்போதைக்கு அந்த லாப்டாப் அந்த ஹார்ட் டிஸ்கை ஏத்துக்காத மாதிரி செஞ்சு இருக்கேன். விக்ரம் ஷாவால் அதை உபயோகப் படுத்த முடியாது. "

ஆனந்த், "யாராவுது ஹார்ட்வேர் எஞ்சினியர் வந்து செக் பண்ணினா?"

சக்தி, "டிஸ்க் க்ரேஷ் ஆகி இருக்குன்னு சொல்லுவாங்க. ஃபார்மேட் பண்ணி மறுபடி விண்டோஸ் லோட் பண்ணனும்ன்னு சொல்லுவாங்க. அதெல்லாம் செய்ய அரை நாளுக்கு மேல் ஆகும். இப்போதைக்கு அவர் அதை செய்ய மாட்டார். யாராவுது லாப்டாப்பை வெளியில் எடுத்துட்டுப் போறாங்களான்னு மட்டும் பாத்துக்குங்க. நாங்க ரெய்ட் பண்ணும் போது மறுபடி அதை வேலை செய்ய வெச்சுடறோம்"

ஆனந்த், "அமேஸிங்க் ... நீங்க ஒரு ஜீனியஸ் சக்தி. என்னதான் செஞ்சீங்க?"

சக்தி, "சாரி, அது எங்க ட்ரேட் சீக்ரட் I can't share it with you. இன்னொரு விஷயம். அந்த மடையன், நமக்கு தேவையான் டாக்யுமெண்ட்ஸ் எல்லாம் இன்னும் அப்படியே டிலீட் பண்ணாம விட்டு வெச்சு இருக்கான். அதையும் வெரிஃபை பண்ணிட்டேன்" என்றவன் ஃப்ளைட்டுக்கு இன்னும் நேரம் இருப்பதைப் உணர்ந்து, "இந்த இன்கம்டாக்ஸ் ரெய்டைப் பத்தி கொஞ்சம் விளக்கம் கொடுங்க"

ஆனந்த், "அது என் ஃபியான்ஸே சம்மந்தப் பட்டது" எனத் தொடங்கி ப்ரீதியைப் பற்றியும் தன் காதலைப் பற்றியும் ஆதியோடு அந்தம் சொல்லி முடித்தான்.

சக்தி, "சோ! இந்த ரெய்டு முக்கியமா உங்க ஃபியான்ஸே எந்த தில்லு முல்லிலும் ஈடுபடலைன்னு நிரூபிக்கறதுக்காக இல்லையா?"

ஆனந்த், "ஆமா சக்தி. அங்கே எங்க அம்மா எப்படா கல்யாணம்ன்னு குதிச்சுட்டு இருக்காங்க. இங்கே இவ என்னடான்னா தன் பேரில் எந்த விதமான கம்ப்ளெயிண்டும் இருக்கக் கூடாதுன்னு ப்ரூவ் ஆனாத்தான் கல்யாணம்ன்னு இருக்கா. ரெண்டு பேருக்கும் நடுவில் மாட்டிட்டு முழிச்சுட்டு இருக்கேன்"

வாய்விட்டு சிரித்த சக்தி, "Let us hope all goes well. சோ! இந்த ரெய்ட் முடிஞ்சு விக்ரம் ஷா அரெஸ்ட் ஆன உடனே உங்க கல்யாணம்ன்னு சொல்லுங்க"

ஆனந்த், "எங்க அப்பாவும் அம்மாவும் ஆல்ரெடி யூ.எஸ்ல இருந்து புறப்பட்டாச்சு. ஒரு சர்ப்ரைஸ்ஸா இருக்கட்டும்ன்னு இன்னும் அவகிட்டே சொல்லாம இருக்கேன். இன்னும் ரென்டு மூணு நாளில் கல்யாணம். அடுத்த ரெண்டு மூணு நாளில் நான் அவளை கூட்டிட்டு ஹனிமூனுக்கு கிளம்பறதா இருக்கேன்"

சக்தி, "ஹனி மூனுக்கு எங்கே போறதா ப்ளான் பண்ணி இருக்கீங்க?"

ஆனந்த், "எங்க பிரச்சனைகளுக்கு நடுவில் நான் எதுவும் ப்ளான் பண்ணலை. எனக்கும் குன்னூரில் பிறந்து வளர்ந்த என் ஃபியான்ஸே ப்ரீதிக்கும் பீச்சுன்னா ரொம்ப பிடிக்கும். அநேகமா எதாவுது ஒரு பீச் ரிஸார்ட். தங்கறதுக்கு இடம் கிடைக்கற, கடற்கரை இருக்கும் எதோ ஒரு ஊர்"

சக்தி, "பஹாமாஸ்ல இருக்கும் நம்ம ஃப்ரெண்டை கேட்டுப் பாருங்களேன்"

ஆனந்த், "ஓ! உங்களுக்கு ஜாஷ்வாவை தெரியுமா?"

சக்தி, "ரொம்ப நல்லா தெரியும் சஞ்சனா எனக்கு உடன் பிறவா தங்கை. நாலு மாசத்துக்கு முன்னாடி நாங்க எல்லாம் போய் அவளுக்கு வளைகாப்பு சீமந்தம் பண்ணிட்டு வந்தோம். குழந்தை பிறந்தப்ப என் அம்மாவும் தங்கையும் அங்கே போய் அவளுக்கு உதவியா இருந்துட்டு வந்தாங்க"

சற்று நேர மௌனத்துக்குப் பிறகு, ஆனந்த், "ஓ! மை காட்!! Don't tell me that you just installed and used Monks Bot Net!!!"

சக்தி, "சீ யூ லேட்டர். இப்போ நான் ஃப்ளைட்டை காட்ச் பண்ணனும்" என விடைபெற்றான்

எதிர்முனையில் வியப்பில் மூழ்கி இருந்த ஆனந்துக்கு அதிலிருந்து விடுபட சில நிமிடங்கள் ஆனது ... 



இடம்: ஷா ஸிஸ்டம்ஸ் அலுவலகம்
நேரம்: காலை 11:30 மணி


காலையில் இருந்து ஷா ஸிஸ்டத்தின் அக்கௌண்ட்ஸ் விவரங்களிலும் கம்பெனியின் நிதி நிலைமையை பறைசாற்றி விக்ரம் ஷா தயாரித்துக் கொடுத்து இருந்த அறிக்கைகளிலும், கம்பெனிக் கணக்குகளிலும் மூழ்கி அவைகளை ஆடிட்டர்களுடன் விவாதித்துக் கொண்டு இருந்த விக்ரம் ஷா, அவர்கள் கேட்ட ஒரு விளக்கத்துக்கு ஷா ஸிஸ்டத்தின் அக்கௌண்டண்ட் பதிலளித்துக் கொண்டு இருக்கும் போது ...

விக்ரம் ஷா, "அந்த ட்ரான்ஸாக்ஷனைப் பத்தின விவரம் என் லாப் டாப்பில் இருக்கு. கொஞ்சம் இருங்க" என்று தன் லாப்டாப்பை இயக்க அது ஸ்தம்பித்து நின்று இருந்தது. அவர் கொடுத்த ஆணைகள் எதற்கும் அது இணங்க மறுத்து பல எர்ரர் மெஸ்ஸேஜ்களை காட்டியவாறு இருந்தது. பொறுமை இழந்து லாப்டாப்பை பவர் ஆஃப் செய்து மறுபடி ஆன் செய்தார். ஸோனி வையோவின் லோகோவைக் காட்டிய பிறகு அப்படியே உறைந்து நின்றது

விக்ரம் ஷா, "என்ன நந்தகுமார் லாப்டாப் ஹாங்க் ஆகி இருக்கு? நீ எதாவுது செஞ்சியா"

நந்தகுமார், "நான் எதுவும் செய்யலை சார் ... "

விக்ரம் ஷா, "சரி, நம் இன்டர்னல் ஐ.டி எஞ்சினியர் கார்திக்கைக் கூப்பிடு"

சில நிமிடங்களில் அங்கு வந்த அந்த ஹார்ட்வேர் எஞ்சினியர் லாப்டாப்பை இயக்க முயற்சித்தான். ஹார்ட் வேர் பூட்-ஸ்ட்ராப் பகுதிக்குச் சென்று அந்த லாப்டாப்பின் வன்பொருள்களின் இயக்கத்தை சரி பார்க்க, அந்த லாப்டாப் தன்னிடம் ஒரு ஹார்ட் டிஸ்க் இருப்பதையே அறியாமல் திணறிக் கொண்டு இருந்தது ... அதில் இணைக்கப் பட்டு இருந்த ஹார்ட் டிஸ்கில் இருந்த விண்டோஸ் லோட் ஆகாமல் இருந்தது ... "

கார்திக், "ஹார்ட் டிஸ்க் க்ரேஷ் ஆகி இருக்கு சார். இதில் இருக்கும் இன்ஃபர்மேஷன் எல்லாம் அவுட்."

விக்ரம் ஷா, "அதனால் பரவால்லை. நேத்து நைட்டுதான் ஒரு டிஸ்க் இமேஜ் எடுத்து நெட்டில் இருந்த ஒரு ஸ்டோரேஜ் சர்வரில் காப்பி பண்ணினேன். இப்போதைக்கு இந்த லாப்டாப் உபயோகப் படுத்தும் நிலையில் இல்லைன்னா பரவால்லை. நீ எடுத்துட்டுப் போய் ஃபார்மேட் பண்ணி விண்டோஸ் லோட் பண்ணி எடுத்துட்டு வா"

கார்திக், "நீங்களும் இருக்கணும் சார். அப்போதான் ஃபிங்கர் ப்ரிண்ட் செக்யூரிட்டி செட்-அப் பண்ண முடியும்"

விக்ரம் ஷா, "அப்ப விடு. அப்பறம் பார்க்கலாம்"

கார்திக் விடைபெற்று தன் இருக்கைக்குச் செல்லும் போது ஆனந்த் எதிரில் வந்தான் ...

ஆனந்த், "ஹெல்லோ கார்திக். என்ன ஷா சார் ரூம்ல எதாவுது ஹார்ட்வேர் ப்ராப்ளமா?"

கார்திக், "ஆமாம் மிஸ்டர் ஆனந்த். அவரோட லாப்-டாப் ஹார்ட் டிஸ்க் க்ரேஷ் ஆயிட்டு இருக்கு. ரீ-ஃபார்மேட் பண்ணனும்"

ஆனந்த், "ஓ மை காட்! ரீ-ஃபார்மேட் செஞ்சுட்டீங்களா?"

கார்திக், "இல்லை ஆனந்த். ரி-ஃபார்மேட் பண்ணி விண்டோஸ் லோட் பண்ணும் போது ஃபிங்கர் ப்ரிண்ட் செட்-அப் பண்ண அவரும் இருக்கணும். இப்போ அவர் எதோ அவசர வேலையா இருக்காராம். அப்பறமா செஞ்சுக்கலாம்ன்னு சொல்லிட்டார்"

ஆனந்த், "அப்ப ஹார்ட் டிஸ்கில் இருந்ததெல்லாம் அவுட்டா?"

கார்திக், "இல்லை. நல்ல வேளையா நேத்து நைட்டுதான் ஒரு டிஸ்க் இமேஜ் எடுத்து எதோ ஸ்டோரேஜ் சர்வரில் பேக்-அப் பண்ணினேன்னு சொன்னார். ஆனா. எனக்கு தெரிஞ்சு இங்கே இருக்கும் சர்வர் எதிலும் அவர் பேக்-அப் பண்ணினதா ஞாபகம் இல்லை"

ஆனந்த், "வெளியில் இருக்கும் சர்வர் எதிலாவுது பேக்-அப் பண்ணி இருப்பார்"

கார்திக், "மே பி" என விடைபெற்றுச் சென்ற மறுகணம் ஆனந்த் தன் அறைக்கு விரைந்து தன் லாப்-டாப்பில் பிரபாகர் கொடுத்த இருந்த மென் பொருளை உபயோகித்து இணையத்தில் அமைந்து இருந்த அந்த சர்வரை அணுகினான். முன்பு அவன் அதில் இருந்து எடுத்து இருந்த வீடியோக்களை தவிற VS-LT-Back என்ற பெயரில் ஒரு புது ஃபோல்டர் உருவாகி இருந்தது. அந்த ஃபோல்டரை அப்படியே தன் லாப்-டாப்பில் நகல் எடுக்க ஆணை பிறப்பித்தான்.

நேரம்: பகல் 1:00
இணையத்தில் இருந்த சர்வரில் இருந்தவை அனைத்தும் ஆனந்த்தின் லாப்-டாப்பில் நகல் எடுக்கப் பட்டு இருந்தன. ப்ரீதியை இன்டர்காமில் அழைத்தான் ...

ஆனந்த், "ப்ரீதி, லஞ்சுக்குப் போலாமா?"

ப்ரீதி, "அஞ்சு நிமிஷம் ஆனந்த். சுகுமார்கூட பேசிட்டி இருக்கேன். வந்துடறேன்"

ஆனந்த், "சரி. லஞ்சுக்கு எங்கே போலாம்?"

ப்ரீதி, "எதுன்னாலும் எனக்கு ஓ.கே. நீ டிஸைட் பண்ணு"

ஆனந்த், "கீழே சிவா வொர்க் பண்ணற ரெஸ்டாரண்டுக்குப் போலாமா?"

ப்ரீதி, "ஓ.கே. ஆனா 
சிவா வந்து இருக்க மாட்டார் இல்லையா?"

ஆனந்த், "அதுக்காக இல்லை. அங்கே போனா ஆஃபீஸ் கட்டிடத்துக்கு முன்னாடி எதாவுது நடமாட்டம் இருந்தா கவனிக்க வசதியா இருக்கும். சீக்கரமா இங்கே வர முடியும். அதான் சொன்னேன். சரி, நீ என்ன சாப்படறே?"

ப்ரீதி, "ஸம் பாஸ்டா டிஷ்?"

ஆனந்த், "சரி, நான் முன்னாடி போய் ஆர்டர் பண்ணறேன். நீ பேசிட்டு வா"

ப்ரீதி, "ஓ.கே" என விடை கொடுத்தாள்.




இடம்: அதே கட்டிடத்தின் கீழ் தளத்தில் இருந்த சிவா பணியாற்றும் உணவகம்
நேரம்: பகல் 1:15 மணி


ப்ரீதி வந்து ஆனந்துக்கு அருகே அமர,

ஆனந்த், "அஞ்சு நிமிஷம்ன்னு சொன்னே?"

ப்ரீதி, "ஒரு மாட்யூலை அவனுக்கு எக்ஸ்ப்ளெயின் பண்ணிண்டு இருந்தேன். கொஞ்சம் நாழியாயிடுத்து. அப்பறம் அவன் தன் சொந்தக் கதையை சொல்ல ஆரம்பிச்சுட்டான். ஒரு இன்டரெஸ்டிங்க் நியூஸ்"

ஆனந்த், "என்ன?"

ப்ரீதி, "விக்ரம் ஷா எங்கே தங்கிட்டு இருக்கார் தெரியுமா?"

ஆனந்த், "அதான் இந்த பில்டிங்க்கின் பின்னாடி விங்கில் இருக்கும் அப்பார்ட்மெண்ட் ஒண்ணில் இருப்பார்ன்னு நேத்து கெஸ் பண்ணினோமே? Are we right about it"

ப்ரீதி, "Quite right. அது சுகுமாரோட த்ரீ பெட் ரூம் ஃப்ளாட். அவன் வொய்ஃப் பிரசவத்துக்கு ஊருக்குப் போயிருக்கா. ஆறு மாசத்துக்கு முன்னாடிதான் சுகுமார் அங்கே குடி போயிருக்கான். விக்ரம் ஷாதான் அவனுக்கு அந்த ஃப்ளாட்டை அரேஞ்ச் பண்ணிக் கொடுத்து இருக்கார். கம்பெனி வாடகை கொடுக்குது. விக்ரம் ஷாவும் நந்தகுமாரும் அடிக்கடி தனியா பேசிக்கறாங்களாம். இவன் வந்த உடனே பேசறதை நிறுத்திடறாங்களாம். அவனும் விக்ரம் ஷா மேல ரொம்ப சந்தேகப் படறான்"

ஆனந்த், "அவனும் உன்னை மாதிரியே இன்னொரு கம்பெனிக்கு எம்.டி. இல்லையா?"

ப்ரீதி, "ஆமா. எதாவுது தெரிஞ்சுக்கலாம்ன்னு அந்தப் பேச்சை எடுத்தேன். அவன் எதுவும் சொல்லலை. அவனுக்கும் ஏதோ தெரிஞ்சு இருக்கும் போல இருக்கு"

ஆனந்த், "அவனையும் இங்கே கூட்டிட்டு வந்து இருக்கலாமே. நானும் கொஞ்சம் அவன் வாயைக் கிளறி இருப்பேன்"

ப்ரீதி, "இன்-ஃபாக்ட் இன்வைட் பண்ணினேன். விக்ரம் ஷா அவனை ஃப்ளாட்டுக்குப் போய் எதோ டாக்யுமென்ட்ஸ் எடுத்துட்டு வரச் சொன்னாராம். அவன் ஃப்ளாட்டுக்குப் போய் இருக்கான்"

ஆனந்த், "ஸம் திங்க் ஃபிஷ்ஷி. கூட நந்தகுமார் இருக்கும் போது சுகுமாரை எதுக்கு டாக்யுமென்ட்ஸ் எடுத்துட்டு வரச் சொல்லணும்?"

ப்ரீதி, "ஒன் மோர் திங்க்! அந்த ஆடிட்டர்ஸ் ரெண்டு பேரும் நான் வெளியில் வரச்சே என் பின்னாடி வந்து அவாளும் லிஃப்டில் ஏறினா. கீழே வந்துண்டு இருக்கச்சே அதில் ஒருத்தர் டைம் வேஸ்ட், இன்னும் டிலே ஆகப் போறது அப்படின்னு அலுத்துண்டர். அடுத்தவர் கண் ஜாடை காண்பிச்சதும் பேசறதை நிறுத்திட்டார்"

ஆனந்த், "ஸோ, விக்ரம் ஷாவுக்கு ரெய்ட் வரப் போற விஷயம் தெரிஞ்சாச்சு"

ப்ரீதி, "என்ன செய்யலாம்?"

ஆனந்த் ஆர்டர் செய்து இருந்தவை வந்தது ...

ஆனந்த், "நாம் செய்யறதுக்கு இப்போ ஒண்ணும் இல்லை. Let's eat and enjoy our lunch"

ப்ரீதி, "எப்படித்தான் நீ இப்படி கூலா இருக்கியோ. எனக்கு பக் பக்குன்னு அடிச்சுண்டு இருக்கு"

ஆனந்த், "என்ன அடிச்சுண்டு இருக்கு"

ப்ரீதி, "நெஞ்சு"

ஆனந்த், "நெஞ்சுன்னா .. அது ரெண்டுமா"

அவனை முறைத்த ப்ரீதி, "You pervert! நோக்கு எப்பவும் அந்த நினைப்புதான் ... "

ஆனந்த் சிரித்த படி சாப்பிடத் தொடங்கினான்.


இடம்: விக்ரம் ஷாவின் கேபின், ஷா ஸிஸ்டம்ஸ் அலுவலகம்
நேரம்: பகல் 1:30 மணி


நந்தகுமார், "என்ன பாஸ்? நாம் என்னென்னவோ ப்ளான் பண்ணிட்டு இருந்தோம். இப்போ ரெய்ட் வந்தா பிரச்சனை இல்லையா? தப்பிச்சுப் போயிடலாம் பாஸ்"

விக்ரம் ஷா, "மடையா! இப்போ அப்படியே விட்டுட்டுப் போனா. இந்தக் கம்பெனியை விக்கற வேலை என்ன ஆகறது? இதை இந்த அளவுக்குக் கொண்டு வர எவ்வளவு உழைச்சு இருப்பேன் தெரியுமா?"

நந்தகுமார், "அதான் அதே அளவுக்கு வேற மேட்டர்ல சம்பாதிச்சுட்டீங்களே பாஸ்"

விக்ரம் ஷா, "டேய், வெளியில் போகும் போது நம்ம மேல எந்த சந்தேகமும் வரக் கூடாது"

நந்தகுமார், "அப்படின்னா இப்போ இன்னா செய்யறது?"

விக்ரம் ஷா, "மொதல்ல இன்கம்டாக்ஸ் டிபார்ட்மெண்ட் கண்ணில் படக்கூடாத பேப்பர்ஸ் எல்லாத்தையும் டிஸ்போஸ் பண்ணனும். அதுக்கு அப்பறம் நாம் காலையில் போட்ட ப்ளானில் கொஞ்ச மாற்றம். இப்போ எல்லா ஸ்டாஃபையும் எதாவுது காரணத்தைச் சொல்லி வீட்டுக்குப் போகச் சொல்லப் போறோம். ப்ரீதியும் ஆனந்தும் லஞ்ச் முடிச்சுட்டு வரும் போது அவங்க ரெண்டு பேரையும் கொண்டு போய் அந்த ஃப்ளாட்டில் கட்டிப் போட்டுட்டு திரும்ப இங்கே ஆஃபீஸுக்கு வரப் போறோம். ரெய்ட் வரும்போது அவங்களுக்கு தேவையான தகவல் எல்லாத்தையும் கொடுக்கப் போறோம். ஷா ஸிஸ்டம்ஸ் அக்கௌன்ட்ஸில் ப்ளாக்கில் நாம் எதுவும் செய்யலை. எல்லாம் PSV Systems அப்பறம் SVS Systems கணக்கில் தான். அந்தக் கம்பெனிங்க கணக்கைக் கேட்டா அது நம்ம கிட்டே இல்லை. ப்ரீதியையும் சுகுமாரையும் கேட்கணும்ன்னு சொல்லப் போறோம். அந்த ரெண்டு கம்பெனிகளும் ஷா ஸிஸ்டம்ஸுக்கு ஆர்டர் வாங்கறதுக்காக தொடங்கினது. அதுக்குப் பிறகு அவங்க ரெண்டு பேர் சாலரியையும் அந்த கம்பெனிக் கணக்கில் கொடுத்தோம்ன்னு சொல்லப் போறோம். அதைத் தவிற அந்த ரெண்டு கம்பெனிகளுக்கும் எனக்கும் எந்த வித மான சம்மந்தமும் இல்லைன்னு சொல்லப் போறோம். அவங்க எங்கேன்னு கேட்டா எல்லோரோட அவங்களும் வீட்டுக்குப் போயிட்டாங்கன்னு சொல்லப் போறோம்"

நந்தகுமார், "சுகுமார் ஃப்ளாட்டுக்கு அவங்க போனா?"

விக்ரம் ஷா, "உடனே போக மாட்டாங்க. ஏன்னா இந்த ஆஃபீஸ் அட்ரெஸ்ஸைத்தான் அந்த ரெண்டு கம்பெனிகளுக்கும் ரிஜிஸ்டர்ட் ஆஃபீஸ்ஸா உபயோகிச்சு இருக்கேன். அந்த ஃப்ளாட் சுகுமார் பேரில் இல்லை. ரெக்கார்ட் படி அது ஷா ஸிஸ்டம்ஸ்ஸின் கெஸ்ட் ஹவுஸ். நம்ம ஹெச்.ஆர்ல அவங்களோட பர்மனெண்ட் அட்ரெஸ்தான் இருக்கு. லோகல் அட்ரெஸ் அப்டேட் செய்யலை. தெரியாதுன்னு சொல்லப் போறோம். . சுகுமாரின் பர்மனெண்ட் அட்ரெஸ் சேலத்தில் இருக்கு. ப்ரீதியின் பர்மனெண்ட் அட்ரெஸ் குன்னூரில். அவங்க விசாரிச்சுக் கண்டு பிடிக்கறதுக்குள்ளே நாம் ஹாங்க் காங்க்கில் இருப்போம்"

நந்தகுமார், "ஒண்ணும் ப்ராப்ளம் வராது இல்லை பாஸ்?"



நந்தகுமார் விக்ரம் ஷாவின் லாப்டாப் பழுதுபட்ட பிறகு காலையில் விக்ரம் ஷா செய்யச் சொன்ன இரு பணப் பரிமாற்றங்களை வேறு கணிணியை உபயோகித்து செய்ய மறந்து இருந்தான்!

விக்ரம் ஷா, "ஒரு ப்ராப்ளமும் வராது. முதல்ல இந்த ஃபைலிங்க் கேபினெட்டில் PSV Systems அப்பறம் SVS Systems சம்மந்தப் பட்ட பேப்பர்ஸ் எல்லாத்தையும் எடுத்து ஒரு டஸ்ட் பின்னில் போடு"

நந்தகுமார், "கிழிச்சுட்டு போட வேண்டாமா பாஸ்?"

விக்ரம் ஷா, "எந்த விதமான தடயமும் இந்த ஆஃபீஸில் இருக்கக் கூடாது. எல்லா பேப்பர்ஸையும் கீழே பேஸ்மெண்டுக்குக் கொண்டு போய் அங்கே இருக்கும் இன்ஸினரேட்டருக்குப் பக்கத்தில் இருக்கும் ட்ரம்மில் வெச்சு பெட்ரோல் ஊத்திக் கொளுத்தணும். சுத்தமா சாம்பல் ஆகற வரைக்கும் பாத்துட்டு வரணும்"

நந்தகுமார், "ஓ.கே பாஸ். அதுக்கு அப்பறம்?"

விக்ரம் ஷா, "ப்ரீதியும் ஆனந்தும் லஞ்சுக்குப் போயிருக்காங்க. அவங்க திரும்பி வரும் போது எல்லோரும் வெளியே போயிட்டு இருப்பாங்க. அவங்க ரெண்டு பேரையும் ஃப்ளாட்டுக்குப் கூட்டிட்டு போய் காரியத்தை முடிச்சுட்டு இங்கே வந்துடப் போறோம்"

நந்தகுமார், "இந்நேரம் சுகுமாரை கட்டிப் போட்டு இருப்பாங்க. அவங்களையும் துணைக்குக் கூப்பிடலாமா சார்?"

விக்ரம் ஷா, "வேண்டாம் ஆள் நடமாட்டம் அதிகம் இருக்கக் கூடாது"

அடுத்த சில நிமிடங்களில் நந்தகுமார் ஒரு பெரிய குப்பைக் கூடையுடன் பேஸ்மெண்டுக்குச் சென்றான்.


அக்னி சாட்சி - அத்தியாயம் - 29

இடம்: ப்ரொஃபெஸ்ஸர் மனோகரியின் இல்லம், ஈரோடு
நேரம்: காலை 8:45

ப்ரொஃபெஸ்ஸர் மனோகரி, "என்னடா எல்லாம் எடுத்து வெச்சுட்டீங்களா?"

சக்தி, "ஓ எஸ்"

அவன் நெத்தியில் இடுவதற்கு கையில் விபூதியை எடுத்து வந்த மனோகரி, "கொஞ்சம் குனிடா" என்றவாறு அவனுக்கு இட்டுவிட்டு வந்தனாவுக்கும் நெத்தியில் ஒரு சின்னக் கீற்றாக விபூதி இட்டாள்.

சக்தி, "I don't like this partiality. எனக்கு மட்டும் சாமியார் கணக்கா வெச்சுட்டு அவளுக்கு ஸ்டைலா வெச்சு இருக்கீங்க"

மனோகரி, "ஆமாண்டா. ஒரு ஐ.பி.எஸ் ஆஃபீஸர் தன் மதத்தை தம்பட்டம் அடிச்சுக்கக் கூடாது"

வந்தனா தன் மாமியார் அவளது அறிவாற்றலால் தன்னை வியப்பில் ஆழ்த்துவதை ஒரு வழக்காமாகக் கொண்டு இருப்பதை எண்ணி ஒரு பெருமிதப் புன்னகை உதிர்க்க,

மனோகரி தொடர்ந்து, "அதுவும் இல்லாம இப்படி வெச்சாத்தான் அவ முகத்துக்கு அழகா இருக்கு"

சக்தி, "ஓ! அப்படின்னா என் மூஞ்சிக்கு இது போதும். ம்ம்ம் ... நான் என் மதத்தை தம்பட்டம் அடிச்சுட்டா பரவால்லை. அப்படித்தானே?"

மனோகரி, "நீ ஆம்பளை. உன் முகத்துக்கு என்ன?. Besides, உனக்கு அவளை மாதிரி பொறுப்பு இல்லை. அதான் உனக்கு எப்பவும் நான் வெச்சு விடற மாதிரி வெச்சு விட்டேன்"



வந்தனா, "இனி தினமும் காலைல ஆஃபீஸ் கிளம்பும்போது இதே மாதிரி அவருக்கு வெச்சு விடறேன் அத்தை"

சக்திவேலில் முறைப்புக்கு மகளிர் மூவரின் சிரிப்பே அவனுக்கு பதிலாகக் கிடைத்தது.

டைனிங்க் டேபிளில் நால்வரும் அமர்ந்து பேசிக் கொண்டு இருந்தபோது .. வாசலில் ஹாரன் ஒலிக்க எழுந்து சென்று வாசலை நோக்கிய சாந்தி தன் குறலை சற்றி உயர்த்தி, "அண்ணா, அண்ணி உங்க கார் வந்தாச்சு ... "

மனோகரி, "ம்ம்ம் .. வண்டி வந்துருச்சு. புறப்படுங்க"

கணவன் மனைவி இருவரும் அவள் காலில் விழுந்து ஆசீர்வாதம் பெற்றபிறகு ...

மனோகரி, "வந்தனா, பெங்களூரில் அந்த அரெஸ்ட் வேலை முடிஞ்சதும் ஃபோன் பண்ணு"

சக்தி, "நைட்டு கூப்படறேம்மா. நித்தினும் தீபாவும் கூட இருப்பாங்க நீங்க எல்லாரோடையும் பேசலாம்"

மனோகரி, "நைட்டு வரைக்கும் என்னை காக்க வைக்காதே"

வந்தனா, "அத்தை. பயப் படற மாதிரி ஒண்ணும் இல்லை. கூட உங்க மகனும் இருக்கப் போறார்"

சக்தி, "ஏம்மா இப்படி பயப் படறீங்க?" என அலுத்துக் கொள்ள ...

மனோகரி, "நீ என்ன வேணும்ன்னாலும் சொல்லிக்கோ. இன்னும் மூணு மாசம் கழிச்சு இவளை கௌரி கையில் ஒப்படைக்கறவரைக்கும் எந்த ஒரு சின்ன விஷயமா இருந்தாலும் நான் பயப்படத்தான் செய்வேன். நீயும் அப்படித்தான் அவளை கவனிச்சுக்கணும்"

சக்தி, "சரி. அங்கே வேலை முடிஞ்சதும் ஃபோன் பண்ணறோம். ஓ.கே?"

மனோகரி, "சரி, பத்திரமா போயிட்டு வாங்க. லேட் ஆகுது. ஃப்ளைட்டை மிஸ் பண்ணிடப் போறீங்க"

வந்தனா, "டைம் இருக்கு அத்தை எப்படியும் டெலி செக்-இன்னுக்கு ஏற்பாடு செய்யச் சொல்லி இருக்கோம். நேரா போய் போர்டிங்க் பாஸ் வாங்கிட்டு ஃப்ளைட் ஏற வேண்டியதுதான்"

மனோகரி, "சஞ்சனா பிரசவத்துக்குப் போய் இருந்துட்டு திரும்பி வந்தப்ப இப்படித்தான் ஜாஷ்வா சொன்னான். நாங்களும் கூலா மெதுவா வீட்டில் இருந்து கிளம்பினோம். நாஸ்ஸோ ஏர்போர்டில் டெலி செக்-இன் செஞ்சவுங்களுக்கான கவுன்டர் எதுன்னு கண்டு பிடிக்க ரொம்ப நேரம் ஆயிடுச்சு. ஃப்ளைட்டை எங்கே மிஸ் பண்ணிடுவோமோன்னு ஆயிடுச்சு. ஒரு வழியா தேடிப் பிடிச்சு லக்கேஜ் செக்-இன் பண்ணிட்டு புறப்படற சமயத்தில் ஜாஷ்வா 'தயவு செஞ்சு இப்படி ப்ராப்ளம் ஆனதை சஞ்சனாவுக்கு சொல்லிடாதீங்க. எக்கச் சக்கமா எனக்கு திட்டு விழும்'ன்னு சொல்லி எங்களை வழி அனுப்பி வெச்சான்"

ஜாஷ்வா எட்வர்ட்ஸ் ஒரு புகழ் பெற்ற ஹாக்கர். மாங்க்ஸ் பாட் நெட்டின் இயக்கத்தில் இந்திய நண்பர்கள் இருவருடன் பங்கேற்றவன். நியூ யார்க்கின் பிறந்து வளர்ந்துவன். இப்போது அவனும் அவனது அன்பு மனைவி சஞ்சனா எட்வர்ட்ஸும் பஹாமாஸ் தீவின் தலை நகரான நாஸ்ஸோ நகரத்தில் குடியிருக்கிறார்கள். சஞ்சனா சக்திவேலுக்கு உடன் பிறவா சகோதரி. மனோகரிக்கு அவள் இன்னும் ஒரு மகளை போல. அவளது பிரசவத்துக்கு உதவ மனோகரி மகள் சாந்தியுடன் அங்கு சென்று இருந்தாள்.

நால்வரும் சிரித்த படி இருக்க சக்தி, "தெரியும். அப்படியும் அவனுக்கு திட்டு விழுந்தது. ஜாஷ்வா எங்ககிட்டே சொன்னதை தீபா சஞ்சனாகிட்டே போட்டுக் கொடுத்துட்டா"

மனோகரி, "அடப் பாவமே!"

கார் புறப்பட்ட பிறகு சற்று நேரம் இருவரும் மௌனமாக வெளியில் பார்த்தபடி இருந்தனர். இருவரின் கண்களும் பனித்து இருந்தன.

வந்தனா, "சக்தி, குட்டிப் பாப்பா பிறந்ததுக்கு அப்பறம் நான் வேலையை ரிஸைன் பண்ணப் போறேன்"

சக்தி, "பண்ணிட்டு?"

வந்தனா, "நான் வீட்டில் இருக்கப் போறேன். ஆண்டி, சாந்தி எல்லாம் நம்ம கூட வந்து இருக்கட்டும். We are not in need of money. எங்க அப்பா சேத்து வெச்சுருக்கறதை விட நீயும் உன் மாங்க்ஸ் பாட் நெட் மூலம் சம்பாதிச்சு வெச்சு இருக்கே"

சக்தி, "ம்ம்ம் .. நீ ரிஸைன் பண்ணறதா இருந்தா என்னை எதுக்கு மூணு வருஷ கான்ட்ராக்டில் உங்க R&AWவில் மாட்டி விட்டே?"

வந்தனா, "எனக்கு உன்கூட வொர்க் பண்ணனும்ன்னு இருந்தது. நீ வேண்டாம்ன்னு சொல்லி இருக்கலாம் இல்லை?"

சக்தி, "விடு. இப்போ ஏன் திடீர்ன்னு"

வந்தனா, "திடீர்ன்னு இல்லை. ஒன்ஸ் ப்ரெக்னெண்ட் ஆனதுக்கு அப்பறம்தான் அத்தையை, எங்க அம்மாவை எல்லாம் க்ளோஸா வாட்ச் பண்ண ஆரம்பிச்சேன். ஒரு அம்மாவா இருக்கறதை விட வேற எதுவும் முக்கியம் இல்லைன்னு தெரிஞ்சுது .. and I want to enjoy my motherhood to the hilt"

சக்தி, "பட் ... வீட்டில் சும்மா உக்காந்தேன்னா மூளை துருப்பிடுச்சுப் போயிடும்"

வந்தனா, "இல்லையே என் கூட குட்டிப் பாப்பா இருப்பாளே?"

சக்தி, "எவ்வளவு நாள் அவ குட்டிப் பாப்பாவாவே இருக்கப் போறா?"

வந்தனா முகத்தில் குறும்பு தவழ, "அவ ஸ்கூலுக்குப் போக ஆரம்பிக்கும் போது அடுத்த குழந்தைக்கு நீ என்னை தயார் பண்ணு"

வாய்விட்டுச் சிரித்த சக்தி, "மேடம் எத்தனை குழந்தைகள் பெத்துக்கறதா உத்தேசம்?"

வந்தனா, "சஞ்சனா ஜாஷ்வாகிட்ட சொன்ன மாதிரித்தான். நீ டையர்ட் ஆகற வரைக்கும். இல்லைன்னா அதுக்கு மேல் என்னால் பெத்துக்க முடியாதுன்னு ஆகற வரைக்கும்"

சற்று வயதான கார் ட்ரைவர் ஓரக்கண்ணால் பார்த்துச் சிரிப்பதை பொருட்படுத்தாமல் அவன் தோளில் சாய்ந்தாள்.

சக்தி, "சரி, அதை அப்பறமா யோசிப்போம்" என்றவன் தொடர்ந்து, "இப்போ இந்த கேஸை பத்தி கொஞ்சம் விளக்கமா சொல்லறையா?"

வந்தனா, "எல்லா டீடெயிலும் ஒரு மெயிலில் அனுப்பி இருக்கார்"

சக்தி, "சரி, உன் லாப்டாப்பை எடு பார்க்கலாம்"

வந்தனா தன் மடிக் கணிணியைத் இயக்க அவன் நகர்ந்து அவள் தோளில் கை போட்டபடி படிக்கத் தொடங்கினான்.


இடம்: தேசிய நெடுஞ்சாலை NH-47 கோவையை நோக்கிச் செல்லும் வழியில்
நேரம்: காலை 9:15

பல நிமிடங்களுக்குப் பிறகு சக்தி, "ஸோ! விக்ரம் ஷாதான் அந்தத் தகவல்களைத் திருடி இருக்கான். அதுக்கு முக்கிய ஆதாரம் அவன் லாப்டாப் ஹார்ட் டிஸ்க் ... கொஞ்சம் ரிஸ்கிதான்"

வந்தனா, "ஏன்?"

சக்தி, "நான் அவன் இடத்தில் இருந்தேன்னா நீ அரெஸ்ட் வாரண்டை நீட்டின அடுத்த நிமிஷம் லாப்டாப் ஹார்ட் டிஸ்கை க்ரேஷ் பண்ணிடுவேன்"

குறும்புச் சிரிப்புடன் வந்தனா, "அதான் உன்னை வெளியே விடாமே R&AWவில் வேலைக்கு சேத்தி விட்டு இருக்கேன்"

சக்தி, "You know very well that I won't involve myself in such petty stuff. சரி, நான் சொன்னதுக்கு என்ன பதில்?"

வந்தனா, "இது வரைக்கும் அவன் அப்படி செய்யலை. தவிற, அந்த லாப்டாப்பில் அவனுக்குத் தேவையான பல முக்கிய விவரங்களை ஸ்டோர் செஞ்சு வெச்சு இருக்கானாம். அந்த லாப்டாப்பை அழிச்சா அவனுக்குத்தான் பிரச்சனைன்னு நம்பறாங்க"

சக்தி, "ம்ம்ம்ஹூம் ... நிச்சயம் பேக்-அப் எடுத்து வெச்சு இருப்பான். ஸ்டில் .. சுத்த மடையனா இருப்பான் போல இருக்கு. எப்படி திருடணும்ன்னு தெரியாம திருடி இருக்கான்"

வந்தனா, "எஃப்.பி.ஐ அனுப்பின அந்த ஆனந்த் டெய்லி செக் பண்ணிட்டுத்தான் இருக்கான். லாப்டாப் இன்னும் உபயோகத்தில்தான் இருக்கு. அதே ஹார்ட் டிஸ்க்தான் அதில் இன்னும் இருக்கு"

சக்தி, "இந்த ஆனந்த் படு ஸ்மார்ட்டா இருப்பான் போல இருக்கு"

வந்தனா, "That's my opinion too. And you know something? ஆனந்துக்கு ஜாஷ்வாவை தெரியுமாம். காலேஜில் ஜாஷுக்கு அவன் ஜூனியர். அவனும் எம்.ஐ.டில படிச்சுட்டு பெரிய கம்பெனி எதிலும் சேராம சொந்த கன்ஸல்டிங்க் சர்வீஸ் கம்பெனி ஸ்டார்ட் பண்ணி கான்ட்ராக்ட் வொர்க் எடுத்து பண்ணிட்டு இருக்கானாம். யூ.எஸ்ல ஜாஷ் வொர்க் பண்ணிட்டு இருந்த பேங்கிலும் அவன் கொஞ்சம் கான்ட்ராக்ட் வொர்க் பண்ணி இருக்கானாம்"

சக்தி, "வாவ்! இதெல்லாம் உனக்கு எப்படி தெரியவந்தது?"

வந்தனா, "நீ R&AWவுக்கு கன்ஸல்டண்ட்டா இருக்கற மாதிரி ஜாஷ்வா எஃப்.பி.ஐக்கு கன்ஸல்டண்ட். மறந்துடுச்சா?"

சக்தி, "ஸோ, ஜாஷ் சிபாரிசு செஞ்சுதான் ஆனந்த் இந்தக் கேஸில் இன்வால்வ் ஆகி இருக்கானா?"

வந்தனா, "இல்லை. எஃப்.பி.ஐயின் தகவல் திருட்டுக் கேஸில் ஆனந்தும் ஒரு அக்யூஸ்ட். தகவல் திருட்டுப் போன கம்பெனியில் ஆனந்த் ஒரு கான்ட்ராக்ட் எடுத்து விக்ரம் ஷாவுக்கு சப்-கான்ட்ராக்ட் கொடுத்து இருக்கான். ஆனந்துக்கு கொடுக்கப் பட்ட லாகின் ஐ.டி மூலம்தான் விக்ரம் ஷா தகவல்களை திருடி இருக்கான். ஆனா எஃப்.பி.ஐக்கு விக்ரம் ஷாதான் திருடி இருக்கான்னு ஆதார பூர்வமா தெரியலை. லாகின் ஐ.டி கொடுக்கப் பட்டது ஆனந்துக்கு என்பதால ஆனந்தை அரெஸ்ட் பண்ணி இருக்காங்க. ஆனந்தோட அப்பா ரொம்ப பெரிய ஆளாம். அவர்கிட்டே இருந்தும் அவருக்கு தெரிஞ்ச முக்கிய நபர்கள்கிட்டே இருந்தும் ஆனந்தை விடுவிக்க சிபாரிசு வந்து இருக்கு. ஆனந்த்தின் ரெஸ்யூமெவைப் பாத்துட்டு ஜாஷ்வாகிட்டே அவனைப் பத்தி விசாரிச்சு இருக்காங்க. ஜாஷ்வாவும் அவனைப் பத்தி நல்ல விதமா சொன்னதால ஆனந்தை தற்காலிகமா 
விடுவிச்சு மேலும் ஆதாரம் சேகரிச்சுக் கொடுக்க இந்தியாவுக்கு அனுப்பி இருக்காங்க"

சக்தி, "Its really a small world. சரி, இன்னொரு டவுட். ஏன் இந்த அரெஸ்ட்டும் இன்கம்டாக்ஸ் டிபார்ட்மெண்ட் ரெய்டும் ஒரே சமயத்தில் நடக்கணும்?"

வந்தனா, "விக்ரம் ஷா தன் எம்ப்ளாயி ஒருத்தியை பினாமியா உபயோகிச்சு ஏதோ தில்லு முல்லு பண்ணி இருக்கார். அந்த எம்ப்ளாயி தனக்கும் அந்தத் தில்லு முல்லுகளுக்கும் எந்த விதமான சம்மந்தமும் இல்லைன்னு போலீஸில் புகார் கொடுத்து இருக்கா. கூடவே இன்கம்டாக்ஸ் டிபார்ட்மெண்டுக்கும் தகவல் சேகரிச்சுக் கொடுத்து இருக்கா. அதிலும் அவளுக்கு ஆனந்த் ஹெல்ப் பண்ணி இருக்கான். ஆக்சுவலா லோகல் போலீஸும் இன்கம்டாக்ஸ் டிபார்ட்மெண்ட் ரெய்ட் செய்யும் சமயத்தில் அங்கே போறதா இருந்தாங்க. முரளி சார் லோகல் போலீஸைப் போக வேண்டாம்ன்னு சொல்லி இருக்கார்"

சக்தி, "நான் ஒண்ணு கேக்கறேன். பதில் சொல்லு"

வந்தனா, "என்ன?

சக்தி, "இந்த மாதிரி இன்டர்நேஷனல் லெவலில் தகவல் திருட்டு நடத்தினவனுக்கு லோகல் இன்கம்டாக்ஸ் டிபார்ட்மெண்டிலும் காண்டாக்ட் இருக்காதா"

வந்தனா, "நிச்சயமா இருக்கும்"

சக்தி, "ஐ.டி ரெய்ட் வரப் போறாங்கன்னு தெரிஞ்ச அடுத்த நிமிஷம் அவன் ஆதாரங்களை அழிக்கத் தொடங்குவான். Including his laptop hard disk"

வந்தனா, "ஹார்ட் டிஸ்கில் இருப்பதை அழிக்கப் பார்க்கலாம். ஆனா அந்த ஹார்ட் டிஸ்க் ஒழுங்க வொர்க் பண்ணினா போதும்ன்னு எதுக்கு முரளி சார் சொன்னார்?"

சக்தி, "அந்த லாப்டாப்பில் ஃபிங்கர் ப்ரிண்ட் செக்யூரிட்டி எனேபிள் ஆகி இருக்கு. விக்ரம் ஷாவும் அவருக்கு ரொம்ப க்ளோஸா இருப்பவங்களும் மட்டும்தான் அதை யூஸ் பண்ண முடியும். அவரோட ஃபிங்கர் ப்ரிண்ட்டின் டிஜிடல் இமேஜ் அந்த ஹார்ட் டிஸ்கில் ஸ்டோர் ஆகி இருக்கும். அவர் செஞ்ச திருட்டு அந்த லாப்டாப் மூலம் தான் செய்யப் பட்டு இருக்குன்னு சொல்றதுக்கு ஆதாரம் அதோட ஐ.பி அட்ரெஸ் அப்பறம் மேக் அட்ரெஸ். இதெல்லாம் உபயோகிக்கறவங்க அழிக்க முடியாத வகையில் விண்டோஸ் ஸ்டோர் பண்ணி வெச்சு இருக்கும். அதே லாப்டாப்பில் அந்த ஹார்ட் டிஸ்க்கை மறுபடி ஃபார்மேட் செஞ்சாலும் மேக் அட்ரெஸ் அப்படியே தான் இருக்கும். அதனால் தான் அப்படி சொல்லி இருப்பார்"

வந்தனா, "ஓ! பட் அவர் லாப்டாப்பையே போட்டு உடைச்சார்ன்னா இல்லை ஹார்ட் டிஸ்க்கை ஃபிஸிகலா டேமேஜ் பண்ணினா ப்ராப்ளம் இல்லையா?"



சக்தி, "அவனுக்கு இவ்வளவு நுணுக்கங்கள் தெரிஞ்சு இருக்குமான்னு தெரியலை. அப்படி தெரிஞ்சு இருந்தா இவ்வளவு ஈஸியா கண்டு பிடிக்கற மாதிரி திருடி இருக்க மாட்டான். இருந்தாலும் ரிஸ்கிதான்"

வந்தனா, "ஆமா. என்ன செய்யலாம்?"

சக்தி, "அவனுக்கு இந்த ரெய்ட் விஷயம் தெரியறதுக்கு முன்னாடி நாம் போனா என்ன? அல்லது ஐ.டி டிபார்ட்மெண்டை எந்த ஆக்ஷனும் எடுக்க வேண்டாம்ன்னு சொல்லிட்டு நாம் முதலில் போய் அந்த லாப்டாப்பை ஸீஸ் பண்ணினா?"

வந்தனா, "நோ வே! இன்னைக்கு மத்தியானம் நாலு மணிக்கு ரெய்ட் செய்யப் போறாங்கன்னா காலையிலே அதுக்கான ஆர்டர் தயாரிக்க ஆரம்பிச்சுடுவாங்க. விக்ரம் ஷாவுக்கு ரெய்ட் வருவதை முன்கூட்டியே தெரிவிக்கக் கூடியவங்க ஐ.டி டிபார்ட்மெண்டில் இருந்தா ஆர்டர் கொடுத்த அடுத்த சில நிமிஷங்களில் அவனுக்கு சொல்லிடுவாங்க. இப்போ அல்ரெடி ஒன்பதரை ஆகப் போகுது. We don't have time. We only have to assume Vikram Shah will not destroy his hard disk. ஐ.டி ரெய்ட் வருதுங்கற காரணத்துக்காக அவர் ஹார்ட் டிஸ்கை அழிக்க மாட்டார்"

சக்தி, "ஹனி, நமக்கு இருக்கும் முக்கிய ஆதாரம் அந்த லாப்டாப் ஹார்ட் டிஸ்க். அதை வெச்சுத்தான் அவனை அரெஸ்ட் பண்ண முடியும். அப்படி இருக்கும் போது அதிகக் கூட்டம் இருக்கக் கூடாது. இது என் அபிப்பராயம். அரெஸ்ட் பண்ண R&AW வந்து இருக்குன்னு தெரிஞ்ச உடனே .. He will try to cover his tracks ... லாப்டாப்பை தூக்கி ஜன்னலில் வீசினாலும் வீசலாம் இல்லையா? அப்பறம் எதை வெச்சு அரெஸ்ட் பண்ணுவே?"

வந்தனா, "நீ சொல்றதும் சரிதான். என்ன செய்யலாம்?"

சக்தி, "அவன் லாப்டாப் இன்னும் உபயோகத்தில் இருக்கான்னு நமக்கு தெரிஞ்சாகணும். உடனே அந்த ஆனந்தை காண்டாக்ட் பண்ணனும். முடிஞ்சா ரெய்ட் நடப்பதற்கு முன்னால் அவனை நேரில் மீட் பண்ணனும்"

வந்தனா, "நாம் அவனை மீட் பண்ணறது விக்ரம் ஷாவுக்கு தெரிஞ்சா? ரிஸ்க் இல்லையா?"

சக்தி, "உள்ளே என்ன நடக்குதுன்னு தெரியாம கூட்டமா விக்ரம் ஷாவைப் போய் பார்க்கறதை விட இது ரிஸ்க் கம்மி"

வந்தனா, "ம்ம்ம் ... நீ சொல்றதும் சரி. நான் நேரடியா ஷானைக் கூப்பிட்டுக் கேட்கறேன்"

சக்தி, "யாரு ஷான் ஹென்ரியா? அவர் எங்கே இதில?"

வந்தனா, "எஃப்.பி.ஐயில் அவர் தான் இந்தக் கேஸை ஹாண்டில் செஞ்சுட்டு இருக்கார்" என்றபடி ஷானின் கைபேசியில் அழைத்தாள், "ஹெல்லோ ஷான். நான் கூப்பிட்டது ரொம்ப லேட் இல்லையே? எப்படி இருக்கீங்க?"

....

வாய்விட்டுச் சிரித்த வந்தனா, "ம்ம்ம் ... பக்கத்தில் தான் இருக்கார். இவரோட நேடிவ் டவுனுக்கு வந்து இருந்தோம். டெல்லிக்கு திரும்பறதுக்கு முன்னாடி பெங்களூரில் ரெண்டு நாள் ஜாலியா இருக்க ப்ளான் பண்ணி இருந்தோம். முரளி சார் கூப்பிட்டு அந்த அரெஸ்டை ஹாண்டில் பண்ணச் சொன்னார். சோ முதலில் அந்தக் காரியத்தை செய்யப் போயிட்டு இருக்கோம்"

...

வந்தனா, "பின்னே? நான் தீபா இல்லாம இருந்தாலும் இவர் நித்தின் இல்லாம இருக்க மாட்டார். அவளும் நித்தினும் ஹைதராபாத்தில் இருந்து இன்னைக்கு சாயங்காலம் பெங்களூர் வராங்க"

.......

மறுபடியும் சிரித்து சிறிது முகம் சிவந்த வந்தனா, "Don't worry. I am quite careful ... ம்ம்ம் .. இப்போ நாலாவுது மாசம். ஒரு பிரச்சனையும் இல்லை. Anyhow, once I am back in Delhi I will be fully grounded by my boss, my hubby, my folks and his mom"

....

வந்தனா, "உங்ககிட்டே ஒரு விஷயம் கேட்கணும்ன்னு ஃபோன் பண்ணினேன். அரெஸ்ட்டைப் பத்தி தெரிய வந்தா விக்ரம் ஷா லாப்டாப்பை டெஸ்ட்ராய் பண்ண வாய்ப்பு இருக்கு இல்லையா?"

...

வந்தனா, "ம்ம்ம் .. சரி, அந்த அரெஸ்ட்டுக்கு முன்னாடி நாங்க ஆனந்த் கிட்டே பேசணும். ஓ.கேவா?"

...

வந்தனா, "சரி, அவன் ஸெல் நம்பரை டெக்ஸ்ட் பண்ணறீங்களா?" என்றபடி இணைப்பைத் துண்டித்த பிறகு சக்தியிடம், "அவருக்கும் அதே பயம்தான். ஆனந்த்கிட்டே என்ன பேசப் போறோம்?"

சக்தி, "இன்னும் விக்ரம் ஷாவின் லாப்டாப் உபயோகத்தில் இருக்கான்னு தெரிஞ்சுக்கப் போறோம். மாக் அட்ரெஸ்ஸை அவரால மாத்த முடியாது. இருந்தாலும் அதையும் வெரிஃபை பண்ணிக்கப் போறோம்"

வந்தனா, "எனக்கு என்னமோ லாப்டாப் இன்னும் உபயோகத்தில் தான் இருக்கும்ன்னு தோணுது. ரெய்ட் வரப் போகுதுன்னு தெரிஞ்சதுக்கு அப்பறம்தான் எதாவுது செய்வார். அதை எப்படி தடுப்பது"

சக்தி, "அந்த லாப்டாப்பை மட்டும் யாரையாவுது அனுப்பி உடனடியா கைப்பற்றிட்டா?"

வந்தனா, "என்ன சொல்லி கைப் பற்ற முடியும் சக்தி? என்னதான் R&AWவுக்கு ஃபுல் பவர் இருக்குன்னாலும் ஆதாரம் இல்லாம ஒரு இந்தியக் குடிமகனின் தனி வாழ்வில் குறுக்கிடக் கூடாது. அதுக்கு யாருக்கும் அதிகாரம் இல்லை. அதிகாரபூர்வமா ஒண்ணும் செய்ய முடியாது"

சக்தி குறும்புச் சிரிப்புடன், "அப்ப அந்த லாப்டாப்பை திருடறதை தவிற வேற வழி இல்லை"

வந்தனா முகத்தில் கேள்விக் குறியுடன் பார்த்துக் கொண்டு இருக்க, சக்தி தன் கைபேசியில் ஒரு ஸ்பீட் டயல் எண்ணை அழைத்தான் ..

சக்தி, "டேய் நித்தின், லாஸ்ட் ரிலீஸ் இன்னும் அதே சர்வரில் தானே இருக்கு?"

...

சக்தி, "நீ டெஸ்ட் பண்ணினப்ப எல்லாம் சரியா இருந்ததா?"

...

சக்தி, "நீ வேற எந்த சேஞ்சஸும் பண்ணலையே?"

...

சக்தி, "அப்ப அந்த வெர்ஷனை லைவ் யூஸ்ஸுக்கு அனுப்பலாமா?"

...

சக்தி, "ரிலீஸ் ப்ளானில் எந்த சேஞ்சும் இல்லை. இது வேற ஒரு பர்பஸ்ஸுக்கு. நான் அப்பறமா சொல்லறேன்"

வந்தனாவின் கைபேசியில் ஒரு குறுஞ்செய்தி மூலம் ஷான் அனுப்பிய ஆனந்த்தின் கைபேசி எண் வந்தது ..

வந்தனா, "என்ன? எனக்கு ஒண்ணும் புரியலை"

சக்தி, "நான் அப்பறமா விளக்கிச் சொல்லறேன். முதலில் ஆனந்தை உன் ஸெல்லில் கூப்பிடு. கூப்பிட்டதுக்கு அப்பறம் என்னையும் கான்ஃபரென்ஸில் கனெக்ட் பண்ணு"

வந்தனா ஆனந்தின் கைபேசியை அழைத்தாள் ... 


இடம்: ஷா ஸிஸ்டம்ஸ் அலுவகலகம்
நேரம்: காலை 9:30 மணி

அலுவலகத்துக்குள் நுழைந்த ஆனந்த் தன் கேபினுக்குச் செல்லுமுன் விக்ரம் ஷாவின் அறைக்குச் செல்கிறான். அந்த அறை வாசலுக்கு அருகே இருந்த இருக்கையில் அமர்ந்து இருந்த விக்ரம் ஷாவின் காரியதரிசியைப் பார்த்து ...

ஆனந்த், "ஹாய், உன் ஆத்துக்காரர் ஆஃபீஸுக்கு போனப்பறம் நீ ட்ரெஸ் பண்ணிண்டு புறப்பட்டு வந்தியா?"

காரியதரிசி, "ஆமா. ஏன் கேட்கறே?"

ஆனந்த், "இந்த புடவையில் உன்னைப் பார்த்து இருந்தார்ன்னா ஆஃபீஸுக்குப் போக விட்டு இருக்க மாட்டார்"

காரியதரிசி, "ஏன்? நன்னா இல்லையா?"

ஆனந்த், "ஐய்யோ, ரொம்ப நன்னா இருக்கு. உன் ஆத்துக்காரர் பார்த்து இருந்தா நேரா பெட் ரூமுக்குக் அழைச்சுண்டு போயிருப்பார்ன்னு சொல்ல வந்தேன்"

காரியதரிசி, "சே! நீ ரொம்ப மோசம்" என்றபடி அவனை ஏக்கத்துடன் பார்த்துப் பெருமூச்செரிய ...

ஆனந்த், "விக்ரம் ஷா வந்தாச்சா?"

காரியதரிசி, "ம்ம்ம் ... அஞ்சு நிமிஷத்துக்கு முன்னாடிதான் வந்தார். நேத்து வந்தாளே அந்த ஆடிட்டர்ஸ்? அவாளோடதான் டிஸ்கஸ் பண்ணிண்டு இருக்கார்"

ஆனந்த், "ம்ம்ம் ... குட் .. அவா போனப்பறம் நேக்கு சொல்லறியா?"



காரியதரிசி, "ம்ம்ம் .. சொல்லறேன். எதாவுது டிஸ்கஸ் பண்ணனுமா?"

ஆனந்த், "ஆமா. என் ரிலீவலைப் பத்தி"

காரியதரிசி, "சரி. சொல்லறேன். உன் கேபின்ல தானே இருப்பே?"

ஆனந்த், "ஆமா ... சீ யூ" என்று திரும்ப,

எதிரில் ப்ரீதி முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்க நின்று கொண்டு இருந்தாள்

ஆனந்த் அவளது கோபத்தின் காரணத்தைப் புரிந்து கொண்டு எதுவும் பேசாமல் அவள் கையைப் பிடித்துக் தன் அறைக்கு அழைத்துச் சென்றான். அறைக்குள் நுழைந்த மறுகணம் கதவைச் சாத்தியபடி அவனிடம் இருந்து திமிறி நகர முற்பட்டவளை அணைத்து முத்தமிட்டான்.

ப்ரீதி, "ம்ம்ம் ... ஒண்ணும் வேணாம் போ ... இதெல்லாம் அந்த செக்ரட்டரிட்டே வெச்சுக்கோ"

ஆனந்த், "அசடே! நமக்கு அவகிட்டே கொஞ்சம் காரியம் ஆகணும். மிட்டில் ஏஜ் பொம்மனாட்டிங்களை அவாளோட ஹஸ்பண்ட்ஸ் they take them for granted. அதிகமா கண்டுக்க மாட்டா. அவாளுக்கு ஹஸ்பண்ட்ஸ்கிட்டே கிடைக்காத அப்ரிஸியேஷன் வேற யார் கொடுத்தாலும் அப்படி அப்ரிஷியேட் பண்ணறவாளுக்கு எது வேணும்னாலும் செய்வா. இதனாலயே யூ.எஸ்ல நிறைய டைவர்ஸ் கேஸஸ்."

ப்ரீதி, "ம்ம்ம் .. அதுக்காக அப்படி வழியறே?"

ஆனந்த், "அதான் சொன்னேனோல்லியோ? நமக்கு காரியம் ஆகணும். இன்னை சாயங்காலம் நாலறை மணி வாக்கில் ரெய்ட் நடக்கப் போறது. விக்ரம் ஷாவின் மூவ்மெண்ட்ஸை தொடர்ந்து கவனிக்கறதுக்கு அவளை விட்டா வேற யார் இருக்கா?"

ப்ரீதி, "என்னவோ போ. இன்னைக்கு நிச்சயம் வரப் போறாதானே?"

ஆனந்த், "எஸ் மை டார்லிங்க். Everything is going on as planned"

ப்ரீதி, "சரி. நேக்கு வேலை இருக்கு அப்பறம் பார்க்கலாம்" என விடைபெற்றுச் சென்றாள்.



அக்னி சாட்சி - அத்தியாயம் - 28

Tuesday, 23 February 2010 - செவ்வாய், ஃபெப்ரவரி 23, 2010

இடம்: ப்ரொஃபெஸ்ஸர் மனோகரியின் இல்லம், திரு நகர் காலனி, ஈரோடு
நேரம் : காலை 7:00

R&AWவின் ஸைபர் க்ரைமில் பணியாற்றும் வந்தனா ராத்தோட்-சக்திவேல் I.P.S வியர்த்து விருவிருக்க சைக்கிள் ஓட்டி வந்து கொண்டு இருக்க,

உலகத்தையே வியக்க வைத்த மாங்க்ஸ் பாட் நெட்டை கண்டுபிடித்த இருவரில் ஒருவனும், தன் மனைவியின் விருப்பத்தை ஏற்று அவள் பணி புரியும் அதே பிரிவில் கன்ஸல்டண்ட் ஸீனியர் அனலிஸ்ட்டாக பணி புரிபவனுமான சக்தி என்று அழைக்கப் படும் அவளது கணவன் சக்திவேல் முத்துசாமி கவுண்டர் உடன் ஓடி வந்து கொண்டு இருந்தான்

வீட்டை அடைந்ததும் வந்தனா இறங்கி நடக்க அவளிடம் இருந்து வாங்கிய சைக்கிளை தூக்கிக் கொண்டு அவளுடன் சக்தி வீட்டுக்குள் நுழைந்தான்.

கோபத்தில் இறுகிய முகத்துடன் சக்திவேலின் தாய் ப்ரொஃபெஸ்ஸர் மனோகரி வாசலில் நின்று இருக்க, அவளுக்கு சற்று பின்னால் முகத்தில் நமட்டுச் சிரிப்புடன் அவளது செல்ல மகளும் சக்திவேலின் தங்கையுமான சாந்தி நின்று கொண்டு இருந்தாள் ...

மனோகரி, "ஏம்மா, இந்த மடையனுக்குத்தான் அறிவு இல்லாம் கூட சைக்கிளில் வான்னு சொன்னா நீயும் இப்படி போறதா? ஒண்ணு கெடக்க ஒண்ணு ஆச்சுன்னா வீரு அண்ணனுக்கும் கௌரிக்கு யாரு பதில் சொல்லறது?"



மனோகரி வீரு அண்ணன் என்று அன்புடன் அழைத்தது வந்தனாவின் தந்தை வீரேந்தர் ராத்தோட். கௌரி அவரது அன்பு மனைவி. (இவர்கள் வரலாற்றை அறிய படியுங்கள் "செக்மேட்")

சக்தி, "அம்மா, இப்ப என்ன ஆயிடுச்சுன்னு இப்படி கோவப் படறீங்க. எங்க கல்யாணம் ஆன நாளில் இருந்து காலைல நான் ஜாகிங்க பண்ணும் போது இவ கூட சைக்கிள் ஓட்டிட்டு வருவான்னு உங்களுக்குத் தெரியாதா?"

வந்தனா முகத்தில் குற்ற உணர்வு ததும்ப பார்த்துக் கொண்டு இருக்க தாய்க்கும் மகனுக்கும் இடையே விவாதம் தொடர்ந்தது ...

மனோகரி, "டேய், பொறுப்பு இல்லாம பேசாதே. வாயும் வயிறுமா இருக்கறவளை இப்படித்தான் ரிஸ்க் எடுக்க வெப்பயா"

சக்தி, "அம்மா, ஒன்பதாவது மாசம் வரைக்கும் ஆக்டிவா இருக்கணும்ன்னு கோமதி ஆண்டி போன மாசம் ஹைதராபாத்தில் உங்க முன்னாடிதானே சொன்னாங்க? besides cycling is a non-impact excercise. அல்மோஸ்ட் ஸ்விம் பண்ணற மாதிரி"

மனோகரி, "வீட்டில் ஒரு எக்ஸர்ஸைஸ் பைக்கில் அவளை ஒரு மணி நேரம் செய்ய வெச்சு இருந்தா நான் ஒண்ணும் சொல்லி இருக்க மாட்டேன். இங்க ரோட் எல்லாம் உங்க டெல்லி டிஃபென்ஸ் காலனி மாதிரி அகலமான ப்ளாட்ஃபார்ம் இருக்கற மாதிரியா இருக்கு? போற வழியில் எவனாவுது குறுக்கே வந்து இடிச்சு கீழ விழுந்தா?"

சக்தி, "ஏம்மா அவ்வளவு கேர்லஸ்ஸா இருப்பேனா?" என்று பரிதாபமாகக் கேட்க ..

அவர்கள் சென்ற வழி நெடுக, 'நீ இந்தப் பக்கம் வா நான் அந்தப் பக்கமா ஓடி வரேன்', 'ஸ்லோ டவுன், இந்த க்ராஸில் நான் கொஞ்சம் முன்னாடி போறேன் நீ பின்னாடி வா' என்றெல்லாம் சொல்லிக் கொண்டு வந்ததும், ஒரு இடத்தில் அவள் 'சக்தி அந்தப் பஸ் அவ்வளவு தூரத்தில் வந்துட்டு இருக்கு அது வரதுக்குள்ள நாம் மூணு தடவை க்ராஸ் பண்ணிடலாம்' என்று தான் அலுத்துக் கொண்டதற்கு 'சும்மா இரு. This is not like Delhi. The traffic is rather un-ruly here' என்று அவன் கடிந்து கொண்டதும் வந்தனாவுக்கு நினைவு வர சற்றே தலை குனிந்து தன் நாத்தனாருடன் நமட்டுச் சிரிப்பை பகிர்ந்து கொண்டபடி கணவன் தாயிடம் திட்டு வாங்குவதை சற்று நேரம் ரசித்த பிறகு .. .

வந்தனா, "இல்லை அத்தை. கொஞ்ச தூரம் தான் ட்ராஃபிக் இருக்கும் ரோடில் போனோம். அதுக்கு அப்பறம் ஒரு பார்க்கை சுத்திட்டு இருந்தோம். யூஷுவலா போற தூரத்தில் இன்னைக்கு பாதி தூரம் தான் போயிருப்போம்" என தன் கணவனுக்கு வக்காலத்து வாங்கினாள்.

மனோகரி, "சரி, சரி, போய் குளிச்சுட்டு வாங்க"

இருவரும் உள்ளே செல்ல எத்தனித்த போது மனோகரி, "வந்தனா, காலைல போறதுக்கு முன்னாடி எதாவுது சாப்பிட்டுட்டுப் போனியா?"

வந்தனா குற்ற உணர்வு முகத்தில் வடிய, "இல்லை ... " என்று இழுக்க

மனோகரி, "டேய், வாயும் வயிறுமா இருக்கறவளை கூட்டிட்டுப் போறதுதான் போறே எதாவுது அவளுக்கு சாப்பிடக் கொடுத்து கூட்டிட்டுப் போயிருக்கணும் இல்லை?" என்றபடி சமையல் அறைக்குச் சென்றாள்

சக்தி, "நான் சொன்னேம்மா அவதான் வயித்தைக் கொமட்டும் வேண்டாம்னா"

மனோகரி, "போடா போய் குளிச்சுட்டு வா. வந்தனா, வெறும் பாலில் டீ போட்டு வெச்சு இருக்கேன். குடிச்சுட்டுப் போய் குளி. காலைல ரொம்ப நேரம் வெறும் வயித்தில் இருக்கக் கூடாதுன்னு எத்தனை தடவை சொல்லி இருக்கேன்"

உள்ளே வந்த பிறகு சக்திவேல் குளிக்கச் செல்ல கையில் டீக் கோப்பையுடன் மாமியாரின் அருகே அமர்ந்த வந்தனா, "அத்தை, எங்க ப்ரோக்ராமில் ஒரு சின்ன சேஞ்ச். மத்தியானத்துக்கு பதிலா காலையிலேயே புறப்படணும்"

மனோகரி, "ஏன் என்ன விஷயம்?"

வந்தனா, "பெங்களூரில் ஒரு இன்டர்நேஷனல் ஸைபர் க்ரைம் க்ரிமினலை அரெஸ்ட் பண்ணனும். இது எஃப்.பி.ஐயோட கேஸ். எங்க உதவியை கேட்டு இருக்காங்க. ஒரு ரெண்டு மணி நேர வேலை"

மனோகரி, "ஏம்மா, இதுக்கெல்லாம் பெங்களூரில் இருக்கும் போலீஸ் ஃபோர்ஸை R&AW யூஸ் பண்ணாதா?"

வந்தனா, "லோகல் போலீஸ் ஃபோர்ஸை உபயோகிக்கணும்ன்னா அதிகார பூர்வமான ஆணை எங்க மேலிடத்தில் இருந்து கர்நாடகா போலீஸுக்கு கொடுக்கணும். அதுக்கு அப்பறம் தான் அவங்க ஆக்ஷன் எடுப்பாங்க. அதுக்கெல்லாம் ரெண்டு மூணு நாள் ஆகலாம். உடனே அரெஸ்ட் பண்ணலைன்னா அவன் வேற நாட்டுக்கு தப்பிச்சுப் போக வாய்ப்பு இருக்கு"

மனோகரி, "இப்படிப் பட்ட க்ரூஷியலான தருணம் வரைக்கும் எஃப்.பி.ஐ உங்களுக்கு ஏன் தெரியப் படுத்தலை?"

வந்தனா, "இது வரைக்கும் இந்தக் கேஸ்ஸை நாங்க ஹாண்டில் பண்ணவே இல்லை. வெளி ஆளுங்களை உபயோகிச்சா அந்த க்ரிமினல் சந்தேகப் பட்டு தடயத்தை அழிச்சுடுவான்னு அவனோட கம்பெனிக்கு உள்ளேயே ஒரு ஆளை வெச்சு எஃப்.பி.ஐ இன்வெஸ்டிகேட் பண்ணிட்டு இருந்து இருக்கு. இப்போ தேவையான ஆதாரங்கள் அவங்களுக்கு கிடைச்சாச்சாம்"

மனோகரி, "நீ மட்டும் தனியாவா போய் அரெஸ்ட் பண்ணப் போறே?"

சாந்தி, "அதான் பாடி கார்ட் மாதிரி கூட அண்ணன் இருக்கு இல்லைம்மா?" என்று சிரிக்க ..

மனோகரி, "ஏய், நீ சும்மா இருடீ"

வந்தனா, "இல்லை அத்தை. பெங்களூர் CRPF யூனிட்டில் இருந்து ஒரு சின்ன டீம் எங்க கூட வரும். R&AWவின் பிரதிநிதியா ஒரு போலீஸ் ஆஃபீஸர்தான் இந்த அரெஸ்ட்டை செய்யணும். நாங்க எல்லாம் இன்னும் ரெண்டு நாள் பெங்களூரில் இருக்கறதா ப்ளான் பண்ணி இருந்ததை முரளி சார்கிட்டே சொல்லி இருந்தேன். அதனால்தான் முரளி சார் இந்த வேலையை செய்யறையான்னு ரிக்வஸ்ட் பண்ணினார்"

மனோகரி, "நித்தினும் தீபாவும் எப்போ வரப் போறாங்க"

நித்தின் தேஷ்பாண்டே சக்திவேலின் உயிர் நண்பன். மாங்க்ஸ் பாட் நெட்டை உருவாக்கியவர்களில் ஒருவன். தீபா தேஷ்பாண்டே அவனது மனைவி. வந்தனாவின் உயிர்த்தோழி. நித்தினின் மனைவி. நித்தினும் தீபாவும் தீபாவின் சொந்த ஊரான ஹைதராபாத்துக்குச் சென்று இருந்தனர். அங்கு இருந்து அவர்களும் சக்தியும் நித்தினும் முன்பு பணியாற்றிய பெங்களூருக்கு வந்து புது தில்லி திரும்புமுன் சில நாட்கள் கொட்டம் அடிக்கத் திட்டமிட்டு இருந்தனர்.

வந்தனா, "அவங்க ரெண்டு பேரும் இன்னைக்கு சாயங்காலம் தான் பெங்களூர் வருவாங்க. அதுக்குள்ளே எங்க வேலை முடிஞ்சுடும்"

மனோகரி, "இதில் சக்தி என்ன செய்யப் போறான்?"

வந்தனா, "என்னதான் ஆதாரம் இருப்பதா சொன்னாலும் அதை எல்லாம் வெரிஃபை பண்ணாம ஒரு இந்தியக் குடிமகனை எஃப்.பி.ஐ சொல்றதுக்காக அரெஸ்ட் பண்ண முடியாது. ஆதாரங்களை சரி பார்க்கணும். எல்லாம் ஸைபர் க்ரைம் சம்மந்தப் பட்ட ஆதாரங்கள். என்னை விட சக்திக்கு இந்த மாதிரி கேஸைப் பத்தி நிறைய தெரியும். சீக்கிரம் வெரிஃபை பண்ணிடுவார். அரெஸ்டுக்கான பேப்பர் வொர்க் மட்டும் நான் செஞ்சேன்னா வேலை சீக்கிரம் முடியும்"

மனோகரி, "ரிஸ்க் எதுவும் இருக்காது தானே?"

வந்தனா, "ஒரு ரிஸ்கும் இருக்காது அத்தே. அப்படி ரிஸ்க் இருந்து இருந்தா முரளி சார் என்னை செய்யச் சொல்லி இருக்க மாட்டார்"

மனோகரி, "சரி, எப்ப கிளம்பணும்"

வந்தனா, "கோவைல பதினோறு மணிக்கு ஃப்ளைட். ஒன்பது மணிக்கு இங்கே பிக் அப் பண்ணறதுக்கு ஒரு கார் வரும்"

மனோகரி, "சரி, சீக்கிரம் நீயும் போய் குளிச்சு ரெடி ஆயிட்டு வா. உனக்குப் பிடிச்ச ஆப்பம் பண்ணப் போறேன். நிதானமா சாப்பிட்டுட்டு புறப்படுங்க"


இடம்: ஷா ஸிஸ்டம்ஸ் அலுவலகம் இருந்த கட்டிடத்தில் பின் பகுதியில் இருந்த அப்பார்ட்மெண்ட்களில் ஒன்று
நேரம்: காலை 7:30

தூக்கக் கலக்கத்துடன் நந்தகுமார் ஒரு அறையில் இருந்து வந்தான். ஹாலில் விக்ரம் ஷா பேப்பர் படித்துக் கொண்டு இருந்தார்.

நந்தகுமார், "குட் மார்னிங்க் பாஸ். சுகுமார் எங்கே? வாக்கிங்க் போயிருக்கானா?"

விக்ரம் ஷா, "எனக்கு பணிவிடை செய்யறேன்னு நின்னான். நான்தான் வற்புறுத்தி அனுப்பி வெச்சேன். நம்ம பேசணும்"

நந்தகுமார், "சொல்லுங்க பாஸ். எல்லாம் ப்ளான் பண்ணினபடி தானே? எதாவுது சேஞ்ச் இருக்கா?"

விக்ரம் ஷா, "ஒரே ஒரு சேஞ்ச். ப்ரீதியையும் ஆனந்தையும் ஆஃபீஸில் இருந்து இங்கே கூட்டிட்டு வர நம்ம அடியாளுங்களை யூஸ் பண்ணக் கூடாது"

நந்தகுமார், "அப்பறம் எப்படி பாஸ்? அவன் கொஞ்சம் ஸ்ட்ராங்கான பேர்வழி. கராத்தே குங்க்ஃபூ மாதிரி எதாவுது தெரிஞ்சு வெச்சு இருப்பான் போல இருக்கு. நம்ம ரெண்டு பேரும் எப்படி சமாளிக்கப் போறோம்?"

விக்ரம் ஷா, "நாம் என்ன சொல்லப் போறோம்? உன் ப்ராஜெக்ட் முடிஞ்சுது. நானும் கம்பெனியை விக்கப் போறேன். ஒரு சின்ன ட்ரீட் அப்படின்னுதானே கூட்டிட்டு வரப் போறோம்? அப்படி அவன் மொடங்கு பண்ணினா சமாளிக்க இன்னும் ஒரு கன்னுக்கு ஏற்பாடு பண்ணி இருக்கேன். அமெரிக்காவில் பொறந்து வளந்த எவனும் துப்பாக்கியை காமிச்சா அடங்கிடுவாங்க. முக்கியமா நான் ப்ரீதியை கன் பாயிண்டில் நிறுத்தினா அவன் ஒண்ணும் செய்ய மாட்டான்"
நந்தகுமார், "அப்ப சுகுமார்?"

விக்ரம் ஷா, "அதுக்கு முன்னாடியே அவனை இங்கே வந்து சில டாக்யுமெண்ட்ஸை எடுத்துட்டு வரச் சொல்லப் போறேன். அவனுக்காக இங்கே நம்ம ஆளுங்க வெயிட் பண்ணிட்டு இருப்பாங்க"
நந்தகுமார், "நாம் ப்ரீதியையும் ஆனந்தையும் இங்கே கூட்டிட்டு வந்ததுக்கு அப்பறம் ப்ரீதையையும் ஆனந்தையும் ஷூட் பண்ணிட்டு கன்னில் சுகுமார் கைரேகை படிய வெச்சுட்டு. அவனை தூக்கு மாட்டி விடப் போறோம். இல்லையா?"

விக்ரம் ஷா, "ஆமா. காலைல போன உடனே செய்ய வேண்டிய வேலைங்க என்ன சொன்னேன் ஞாபகம் இருக்கா?"
நந்தகுமார், "இருக்கு சார். காலைல அந்த சைனா கம்பெனியில் இருந்து அவங்க பேரில் இருக்கும் கம்பெனிகளுக்கு ரெண்டு ரெண்டு குட்டி மனி ட்ரான்ஸ்ஃபர் வரும். நீங்க டிஸ்கஷனில் இருக்கும் போதே அவங்க லாகின் ஐடி உபயோகிச்சு அவங்க செஞ்ச மாதிரி அந்த பணத்தை அவங்களோட சொந்த அக்கௌண்டுக்கு ட்ரான்ஸ்ஃபர் பண்ணனும். அவ்வளவுதானே?"

விக்ரம் ஷா, "ஆமா. சொதப்பிடாதே"
நந்தகுமார், "நோ ப்ராப்ளம் சார். அந்த ப்ரீதி மேட்டர் .... நம்ம ஆளுங்களும் கேட்டாங்க .. " என இழுக்க

விக்ரம் ஷா, "டேய்! உனக்கு என்ன சொன்னேன்? போலீஸ் இன்வெஸ்டிகேஷன் வரும் போது ஷூட் பண்ணறதுக்கு முன்னாடி ப்ரீதி ரேப் செய்யப் பட்டு இருந்தான்னு தெரிஞ்சா ரொம்ப பிரச்சனை வரும். வேண்டாம். ஹாங்க் காங்க் போனதும் உனக்கு தேவையான குட்டிங்க வகை வகையா கிடைப்பாளுங்க"
நந்தகுமார், "சே! என்ன பாஸ் அவளை மாதிரி கிடைக்க மாட்டாளுங்க. சரி ... என்ன செய்யறது விடுங்க. ஆளுங்ககிட்டே சொல்லிடறேன்"

காலிங்க் பெல் ஒலித்தது ...

விக்ரம் ஷா, "சரி, சரி, சுகுமார் வர்றான். குளிச்சுட்டுப் புறப்படு"




இடம்: ஆனந்த் தங்கி இருந்த ஃப்ளாட்
நேரம்: காலை 8:00

ஆனந்தின் கைபேசி ஒலித்தது ...

ஆனந்த், "ஹெல்லோ மாமா. நான் ஆஃபீஸுக்கு கிளம்பிட்டு இருக்கேன். சொல்லுங்க"

எதிர்முனையில் சுதர்சனம், "ஐ.டி டிபார்ட்மெண்டில் விக்ரம் ஷாவுக்கு தெரிஞ்சவங்க நிச்சயமா இருப்பாங்கன்னு லாயர் நினைக்கறார். கமிஷனர் ஆஃபீஸில் காசு வாங்கிட்டு ரெய்ட் வர்றதுக்கு முன்னாடியே சொல்றதுக்குன்னே நாலஞ்சு பேர் வெவ்வேற பிரிவுகளில் இருக்காங்களாம். முக்கியமா ஆர்டர் கொடுக்கும் கமிஷனர் ஆஃபீஸிலேயே ஒருத்தன் இருக்கானாம். விக்ரம் ஷா இவங்களில் யாருக்காவுது நிச்சயம் பணம் கொடுத்து வெச்சு இருப்பார். முன்கூட்டியே தெரியலைன்னாலும் கமிஷனர் ரெய்டுக்கான ஆர்டர் சைன் பண்ணி ரிலீஸ் பண்ணின உடனே விக்ரம் ஷாவுக்கு தெரிஞ்சுடும் போல இருக்கு. ராமின் ஃப்ரெண்ட் ஒன்பது மணிக்கு ஆர்டர் தயாரிக்க ரிக்வெஸ்ட் கொடுக்கப் போறார். அனேகமா மத்தியானம் ரெண்டு மணியளவில் கமிஷனர் ஆர்டரில் சைன் பண்ணி ரிலீஸ் பண்ணுவார். நாலு, நாலரை மணி வாக்கில் ரெய்ட் நடக்கும்"

ஆனந்த், "அவ்வளவு லேட் ஆகுமா?"

சுதர்சனம், "டேய், ஆர்டர் ரிலீஸ் பண்ணின ரெண்டு மணி நேரத்தில் ரெய்ட் நடக்கறது அபூர்வம். ராம் இன்ஃப்லுவன்ஸ் பண்ணினதால இவ்வளவு சீக்கரம் நடக்கப் போறது. ரெய்டுக்குத் தேவையான ஆட்களை எல்லாம் திறட்டிட்டு மத்த ஏற்பாடுகளை செஞ்சுட்டு வர கொஞ்சம் டைம் ஆகும். நீ எஃப்.பி.ஐ காரங்களை மூவ் பண்ணச் சொன்னது என்ன ஆச்சு?"

ஆனந்த், "என் எஃப்.பி.ஐ காண்டாக்ட் ஷான் ஹென்ரி கூட நைட்டு பேசினேன். இண்டியாவில் சர்வதேச சைபர் க்ரைம் எல்லாம் ஹாண்டில் செய்ய R&AWவில் சைபர் க்ரைம் ஸெல் (Cyber Crime Cell) அப்படின்னு ஒரு ஸெல் இருக்கு. என் எஃப்.பி.ஐ காண்டாக்ட் ஷான் ஹென்ரிக்கு அந்த ஸெல்லின் சீஃப் ஜே.சி.பி முரளீதரனை நல்லா தெரியுமாம். நைட்டுன்னும் பாக்காம அவரை காண்டாக்ட் செஞ்சார். அவருக்கு கீழே வொர்க் செய்யும் ஆஃபீஸர்ஸ்களில் ஒருத்தர், ஒரு லேடி ஐ.பி.எஸ் ஆஃபீஸர் வந்தனா ராத்தோட்-சக்திவேல், CRPFஇல் இருந்து ஒரு போலீஸ் டீமை கூட்டிட்டு ஐ.டி ரெய்ட் செய்யும் அதே நேரத்தில் அங்கு வந்துடுவாங்கன்னு சொன்னாங்க"

சுதர்சனம், "ஏன் CRPF? R&AWவுக்கு ஆள் பலம் இல்லையா?"

ஆனந்த், "அது ஒரு சூப்பர் பவர் மாதிரி அவங்க கேட்டா இந்தியாவில் இருக்கும் எந்த போலீஸ் ஃபோர்ஸும் அவங்களுக்குத் தேவையான ஆள் பலத்தை கொடுப்பாங்களாம். தவிற அவங்களுக்குன்னு தனியா போலீஸ் படை எதுவும் இருக்காதாம். Besides, லோகல் போலீஸ்ஸை வர வேண்டாம்ன்னு முரளீதரன் சொல்லிட்டாராம். ப்ரீதி கொடுத்த போலீஸ் கம்ப்ளெயிண்டையும் R&AWவே ஹாண்டில் பண்ணும்ன்னு சொன்னாராம்"

சுதர்சனம், "சோ! ப்ரீதிக்கு விடுதலை கிடைக்கும் அதே சமயத்தில் நோக்கும் கிடைக்கப் போறது. சாயங்காலம் ஆத்துக்கு ரெண்டு பேரும் வாங்கோ"

ஆனந்த், "ம்ம்ம் .. எங்கேயும் போலைன்னா வரோம்"

சுதர்சனம், "டேய், காரியம் ஆன உடனே கழட்டி விடப் பாக்கறையா?"

ஆனந்த், "ஐய்யோ! மாமா!! ப்ரீதி என்னை எதாவுது கோவிலுக்குக் கூட்டிட்டுப் போகச் சொல்லுவா"

சுதர்சனம், "நோக்கு அந்த மாதிரி ஒருத்தி தேவைதான். குட் லக். அப்பறமா அப்டேட் கொடு" என விடை பெற்றார்






Tuesday, May 5, 2015

அக்னி சாட்சி - அத்தியாயம் - 27

Monday, 22 February 2010 - திங்கள், ஃபிப்ரவரி 22

திங்கள் காலை ஒன்பது மணிக்கே அலுவலகத்தை அடைந்த ஆனந்த் அடிக்கடி விக்ரம் ஷாவின் கேபினுக்கு வந்து அவரது காரியதரிசியிடம் அவர் வந்து விட்டாரா என விசாரித்த படி இருந்தான்.

பத்தரை மணியளவில் அவரது அறையில் ஆள் நடமாட்டத்தைக் கண்டவன் காரியதரியைக் கேட்காமல் கதவைத் திறக்க, உள்ளே அமர்ந்து இருந்த அவன் இதற்கு முன் பார்த்திராத இரு நபர்களில் ஒருவர், "ஏஸ், கேன் ஐ ஹெல்ப் யூ"

ஆனந்த், "ஐ அம் லுக்கிங்க் ஃபார் மிஸ்டர் ஷா"

அந்த நபர், "நாங்களும் அவருக்குத்தான் வெய்ட் பண்ணிட்டு இருக்கோம்"

ஆனந்த், "ஓ சாரி ஃபார் டிஸ்டர்பிங்க்" என்ற படி வெளியில் வந்த காரியதரிசியிடம், "சாரி, உன் கிட்டே கேட்காம உள்ளே போயிட்டேன். எனக்கு அவசரமா விக்ரம் ஷாவைப் பார்க்கணும் அதனாலதான்"



காரியதரிசி, "இன்னும் ஹாஃப் அவர்ல வரதா சொல்லி இருக்கார்"

ஆனந்த், "உள்ளே இருக்கறது யாரு?"

காரியதரிசி ஒரு பிரபலமான ஆடிட்டிங்க் நிருவனத்தின் பெயரைச் சொல்லி அதில் இருந்து அவர்கள் வந்து இருப்பதாக சொன்னாள். ராம்பத்ர ராவ் சொன்னது சரி என ஆனந்த் உணர்ந்தான். சற்று நேரத்துக்குப் பிறகு சிவா அவனை ஸெல்ஃபோனில் அழைத்தான்.

சிவா, "ஆனந்த், விக்ரம் ராவ் நந்தகுமார் ரெண்டு பேரும் ஆஃபீஸுக்கு வந்து இருக்காங்களா?"

ஆனந்த், "இல்லை சிவா. உங்க அப்பாவோட ஆளுங்க தேடிட்டு இருக்காங்கன்னு சொன்னீங்களே?"

சிவா, "உங்க பில்டிங்குக்கு வெளியில் நின்னு நோட்டம் விட்டுட்டு இருக்காங்க. ஆனா அவங்க கண்ணுக்கு இதுவரைக்கு அகப் படலை"

ஆனந்த், "வந்தார்ன்னா சொல்லறேன்" என பொய் சொல்லி விடைபெற்றான்

சற்று நேரத்தில் விக்ரம் ராவ் அலுவலகத்தின் பின் புறத்தில் இருந்து தன் கேபினைக் கடந்து அவரது அறையை நோக்கிச் செல்வதைக் கண்டான். சில கணங்களில் ப்ரீதி அவனை இன்டர்காமில் அழைத்தாள்

ப்ரீதி, "ஆனந்த், இவ்வளவு நாளும் பூட்டி இருந்துச்சே அந்த கான்ஃபரன்ஸ் ரூம்? அதுக்கு உள்ளே இருந்து விக்ரம் ஷா வந்தார். பார்த்தியா?"

ஆனந்த், "அவர் அந்த ரூமில் இருந்து வர்றதைப் பார்க்கலை. பட் என் கேபினை தாண்டிப் போறதைப் பார்த்தேன்"

ப்ரீதி, "நெட்டில் கனெக்ட் பண்ணறாரான்னு பார்க்கறையா?"

ஆனந்த், "இல்லை. அவர் கொஞ்சம் செட்டில் ஆகட்டும். நான் கொஞ்ச அந்த கான்ஃபரென்ஸ் ரூமை செக் பண்ணறேன். என்னைப் பார்த்தாலும் நீ கண்டுக்காம இரு"

ப்ரீதி, "ஆனந்த், ஜாக்கரதை .. நேக்கு பயமா இருக்கு"

ஆனந்த், "டோண்ட் வொர்ரி ஹனி. நான் உன்னை அப்பறமா கூப்படறேன்"

ஆனந்த் யாரும் கவனிக்காத வண்ணம் அந்த கான்ஃபரென்ஸ் ரூமை அடைந்து அதன் கதவைத் திறக்க முயன்றான். அது மறுபடி பூட்டப் படாமல் இருக்க உள்ளே நுழைந்தான். சுவற்றில் முன்பு பொருத்தி இருந்த வீடியோ கேமராக்கள் அகற்றப் பட்டு ஆங்காங்கே சுவற்றில் ஓட்டைகள் இருந்தன. ஒரு மூலையில் இன்னும் ஒரு கதவு இருந்தது. அந்தக் கதவைத் திறந்து பார்க்க அந்த அலுவலகத்துக்கு பின் புறம் இருந்த ஒரு காரிடோரில் தான் இருப்பதை உணர்ந்தான். அருகே பின் புறம் இருந்த லிஃப்ட் வாசல் இருந்தது. அந்த காரிடோரின் இரு மூலைகளில் ஆள் நடமாட்டம் அதிகம் இல்லாத இரு அலுவலகங்கள் இருந்தன. எங்கு இருந்து விக்ரம் ஷா வந்து இருக்க முடியும் என யோசித்தபடி மறுபடி வந்த வழியே திரும்பச் சென்று தன் இருக்கையை அடைந்தான். அவனது இன் டர்காம் சிணுங்கிக் கொண்டு இருப்பதைக் கண்டான்.

எடுத்து "ஆனந்த் ஹியர்" என பதிலளிக்க ..

விக்ரம் ஷா, "என்ன ஆனந்த்? என் கேபினுக்கு வந்து இருந்தியாமே?"

ஆனந்த், "ஆமா சார். வெள்ளிக் கிழமை டீம் டின்னரப்போ சுகுமார் என் அசைன்மெண்ட் முடியப் போகுதுன்னு சொன்னார். அதைப் பத்தி கேட்கலாம்ன்னு வந்தேன்"

விக்ரம் ஷா, "என்ன ஆனந்த்? நீ லாஸ்ட் டைம் என் கிட்டே எப்படா முடியும்ன்னு இருக்குன்னு சொன்னே?"

ஆனந்த், "ஆமா சார். என்னைக்கு ரிலீவ் பண்ணுவீங்கன்னு தெரிஞ்சா .. "

விக்ரம் ஷா, "நான் இன்னும் மெயிலை செக் பண்ணலை. ஆக்சுவலா உன்னை அனுப்பிய கம்பெனிக்கு அதைப் பத்தி மெயில் பண்ணி இருந்தேன். வந்ததில் இருந்து விசிட்டர்ஸ் கூட இருந்தேன். கொஞ்சம் டைம் கொடு மெயில் செக் பண்ணிட்டு சொல்லறேன்"

ஆனந்த், "மெயில் பண்ணுங்க சார் போதும்"

விக்ரம் ஷா, "டன்" என விடைபெற்றார்

அவர் நெட்வொர்க்கில் தன் லாப்டாப்பை இணைக்கப் போகிறார் என்பதை உணர்ந்தான். சற்று நேரத்தில் அவன் எதிர்பார்த்த படி விக்ரம் ஷா நெட்வொர்க்கில் இணைந்ததை அவனது மெஸ்ஸஞ்சர் மென்பொருள் அறிவித்தது. முதலில் அவரது ஐ.பி அட்ரெஸ்ஸை சரி பார்த்தான். அவர் அதில் மாற்றம் எதுவும் செய்து இருக்கவில்லை. உடனே ஸெல்ஃபோன் மூலம் ராம்பத்ர ராவுக்கு அதை தெரிவித்தான்.


அடுத்த அரை மணி நேரத்தில் ரிஸப்ஷனில் இருந்து அவனுக்கு இன்டர்காம் மூலம் அழைப்பு வந்தது

ரிஸப்ஷனிஸ்ட், "ஆனந்த், உங்களுக்கு ஒரு விசிட்டர். இங்கே வர்றீங்களா?"

ஆனந்த், "ரீடா, அவரை உள்ளே அனுப்பறையா?"

ரீடா, "இல்லை ஆனந்த். நோ விசிட்டர்ஸ் அலவ்ட்ன்னு பாஸ் சொல்லி இருக்கார்"

ஆனந்த், "சரி, நான் அங்கே வரேன்" என்ற பிறகு எழுந்து விக்ரம் ஷாவின் அறைக்குச் சென்றான். அறை வாசலில் இருந்த காரியதரிசியிடம், "ஒரே ஒரு நிமிஷம் அவர்கிட்டே ஒண்ணு கேட்கணும்"

காரியதரிசி, "தெரியலை ஆனந்த். யாரும் டிஸ்டர்ப் பண்ணாக்கூடாதுன்னு சொன்னார்"

ஆனந்த், "Hey come on! என்னை அவருக்கு ரொம்பப் பிடிக்கும். ஒண்ணும் சொல்ல மாட்டார். ஒண்ணு செய். நீ ரெண்டு நிமிஷம் பாத்ரூமுக்குப் போயிட்டு வா. நீ உன் சீட்டில் இல்லாதப்ப நான் உள்ளே போறேன். உன்னை ஒண்ணும் சொல்ல முடியாது. Please dear" எனக் கொஞ்சினான்

முன் முப்பதுகளில் இருந்த அந்தக் காரியதரிசி நாணப் புன்முறுவலுடன் தன் முந்தானையை ஒதுக்கியபடி, "நீ என்னை வம்பில் மாட்டி விடப் போறே" என்றபடி எழுந்து சென்றாள். அவள் சென்றபிறகு அறைக்கதவை இரு முறை விரலால் தட்டிய பிறகு உள்ளே தலையை மட்டும் நுழைத்தான்.

ஆழ்ந்த உரையாடலில் இருந்த விக்ரம் ஷா எறிச்சலுடன் தலை நிமிர்த்த ஆனந்த், "வெரி சாரி மிஸ்டர் ஷா. உங்க செக்கரட்டரி சீட்டில் இல்லை அதான் பர்மிஷன் இல்லாம கதவைத் தட்டினேன். சாரி. என் அப்பாவோட ஃப்ரெண்ட் ஒருத்தர். ரொம்ப பெரிய மனுஷர். ரிடையர்ட் ஜட்ஜ். சில டாக்யுமெண்ட்ஸில் அவர்கிட்டே எங்க அப்பா சைன் வாங்கச் சொன்னார். நான் அவரைப் பார்க்கப் போயிருந்தப்போ அவர் ஊரில் இல்லை. மறுபடி வெளியூர் போறதா இருக்கார். இந்தப் பக்கம் வந்து இருப்பதால அவரே வந்து சைன் போட்டுட்டு போறதா சொன்னார். ரிஸப்ஷனில் உக்கார வெச்சுப் பேசிட்டு அனுப்பினா எங்க அப்பாகிட்டே இருந்து எனக்கு ஒதை விழும். நீங்க நோ விஸிட்டர்ஸ் அலவ்டுன்னு சொன்னீங்களாம். ப்ளீஸ் நான் அவரை என் கேபினுக்குக் கூட்டிட்டுப் போய் கொஞ்ச நேரத்தில் அனுப்பிடறேன். அலவ் பண்ணறீங்களா?" என்று அவரை தர்மசங்கடத்தில் ஆழ்த்தினான்.

விக்ரம் ஷா, "ஒரு முக்கியமான டிஸ்கஷன் நடந்துட்டு இருக்கு. வெளி நியூஸ் போகக் கூடாதுன்னுதான் அந்த ஏற்பாடு. உன் கேபினுக்குக் கூட்டிட்டுப் போய் சீக்கரம் பேசிட்டு அனுப்பிடு. நான் ரீடாவைக் கூப்பிட்டு சொல்லறேன்"

ஆனந்த், "தாங்கஸ் அ லாட் சார்" என விடைபெற்று ரிஸப்ஷனை அடைய ராம்பத்ர ராவ் விவரித்தது போல ஒரு முதியவர் அங்கு காத்து இருந்தார்

ஆனந்த், "ஹல்லோ அங்கிள். சாரி உங்களை வெய்ட் பண்ண வெச்சுட்டாங்க. உங்களை உள்ளே கூட்டிட்டுப் போறதுக்கு எம்.டி கிட்டே போய் பர்மிஷன் வாங்கிட்டு வந்தேன். அதான் கொஞ்சம் லேட்"

மூர்த்தி, "அதனால என்ன பரவால்லை ஆனந்த்"

ஆனந்த், "ரீடா, மிஸ்டர் ஷா உனக்கு சொல்லறேன்னு சொன்னார் .. " என இழுக்க

ரீடா, "சொன்னார் ஆனந்த், சீக்கரம் அவரை ... "

ஆனந்த, "நோ ப்ராப்ளம் ரீடா" என்ற படி அவரை அழைத்துக் கொண்டு தன் கேபினுக்குச் சென்றான். செல்லும் வழியிலேயே தன் இருக்கையில் ப்ரிண்டர் இல்லாததை உணர்ந்தான்.

ப்ரீதியை செல்ஃபோனில் அழைத்தான்

ஆனந்த், "ப்ரீதி, உனக்குத் தனிப் பிரிண்டர் இருக்கா?"

ப்ரீதி, "ஓ காட்! நேத்து அதைப் பத்தி யோசிக்கவே இல்லை. இந்த ஆஃபீஸில் தனி ப்ரிண்டர் விக்ரம் ஷாவுக்கு மட்டும்தான். எல்லாரும் நெட்வொர்கில் கனெக்ட் ஆயிருக்கும் பெரிய ப்ரிண்டரைத்தான் யூஸ் பண்ணனும்"

ஆனந்த், "சரி, இன்னும் ரெண்டு நிமிஷத்தில் நான் ப்ரிண்ட் கமாண்ட் கொடுப்பேன். நீ ப்ரிண்டருக்குப் பக்கத்திலேயே வெய்ட் பண்ணிட்டு இருக்கு. ப்ரிண்ட் ஆன உடனே என் கேபினுக்கு எடுத்துட்டு வா. இன்னொரு விஷயம் நான் ரெண்டு காப்பி ப்ரிண்ட் பண்ண கமாண்ட் கொடுக்கப் போறேன். ரெண்டையும் எடுத்துட்டு வா"

உடன் அவனது இருக்கையை அடைந்த மூர்த்தி, "எனி ப்ராப்ளம்?" என கிசு கிசுத்தார்

ஆனந்த், "இல்லை சார். ரெண்டு நிமிஷம்" என்ற படி தேவையான் ஆணைகளைப் பிறப்பித்தான் ...

ஆனந்த், "சாரி சார். இதை நான் முன்னாடியே எதிர்பார்த்து இருக்கணும்"

மூர்த்தி, "இட்ஸ் ஆல்ரைட். பயப்படாதே. நிதானமா செய்வோம்"

ஆனந்த், "மிஸ்டர் ராவ் உங்களுக்கு எங்க விஷயத்தைப் பத்தி ... "

மூர்த்தி, "எல்லாம் விவரமா சொல்லி இருக்கார். மேற்கொண்டு எதுவும் பேச வேண்டாம்"

சில நிமிடங்களில் ப்ரீதி ஒரு ப்ரிண்ட் அவுட் உடன் வந்தாள்.

ஆனந்த், "சார், இது என் ஃபியான்ஸே ப்ரீதி. ப்ரீதி திஸ் இஸ் மிஸ்டர் மூர்த்தி"

அறிமுகங்களுக்குப் பிறகு நேரம் கடத்தாமல் மிஸ்டர் மூர்த்தி ப்ரீதி கொண்டு வந்து இருந்த ப்ரிண்ட் அவுட் இரண்டிலும் ராம்பத்ர ராவ் சொன்னது போல் தன் கைப்பட எழுதி கையொப்பம் இட்டார். உடன் கொண்டு வந்து இருந்த தனது ரப்பர் ஸ்டாம்ப் முத்திரையை பதித்தார். இரு நகல்களில் ஒன்றை எடுத்து மடித்து தன்னுடன் எடுத்துக் கொண்டு எழுந்தார் ...

மூர்த்தி, "ஒரு காப்பி நான் எடுத்துட்டுப் போறேன். ராம் கொண்டு வரச் சொன்னார்"

ஆனந்த், "ஓகே சார். ரொம்ப தேங்க்ஸ்"

மூர்த்தி, "ஓ ப்ளீஸ் டோண்ட் பாதர். ப்ரீதி மாதிரி ஒரு நல்ல பொண்ணுக்கு ஹெல்ப் பண்ணறதில் எனக்கு ரொம்ப சந்தோஷம். பை ப்ரீதி" என அவளிடம் இருந்து விடைபெற்றார்.

திரும்ப அவரை அழைத்துக் கொண்டு அலுவலக வாசல் வரை வந்து வழியனுப்பி விட்டு தன் இருக்கையை அடைய இன்னும் ப்ரீதி அங்கேயே இருப்பதைக் கண்டான். அவன் இருக்கைக்கு எதிரில் இருந்த நாற்காலியில் அவன் அறையில் நுழையும் போது அவனுக்கு முதுகு காட்டி அமர்ந்து இருந்த ப்ரீதியை பின் புறம் வந்து இருந்து அவள் தோள்களைப் பற்றிய ஆனந்த் குனிந்து அவள் கன்னத்தில் முத்தமிட்டான் ...

பதட்டத்தில் எழ முயன்று தோற்ற ப்ரீதி, "ஏய் என்னது இது ஆஃபீஸ்ல .. "

ஆனந்த், "சாரி ஹனி. உன்னை நான் ரொம்ப ஹர்ட் பண்ணிட்டேன் இல்லை?"

ப்ரீதி, "ம்ம்ம் ... பரவால்லை. நானும் உன்னண்டே அப்படி கோச்சுண்டு இருக்கக் கூடாது. சரி, நமக்குத் தேவையான் .." என்றவளை சைகை காட்டி

ஆனந்த், "இட்ஸ் ஓகே ஹனி. சரி உன் சீட்டுக்குப் போ. லஞ்ச் டைமில் பேசலாம்"

அலுவகலத்தில் இருவரும் சேர்ந்து இருப்பதை ஆனந்த் தவிற்ப்பதை உணர்ந்த ப்ரீதி அவனுக்கு பதிலுக்குத் தலையசைத்த படி விடைபெற்றுச் சென்றாள்




மதிய உணவுக்கு அவளை முதன் முதலில் அழைத்துச் சென்ற உணவகத்துக்கு அழைத்துச் சென்றான் ..

ஆனந்த், "இந்த ரெஸ்டாரண்ட் ஞாபகம் இருக்கா?"

ப்ரீதி, "ம்ம்ம் ... அன்னைக்குத் தானே நீ நேக்கு பர்ஸனல் ஃபன் அட்வைஸரா அப்பாயிண்ட் ஆனே?"

ஆனந்த், "Did I do a satisfactory job?"

ப்ரீதி, "பேசாதே. எப்படி ஜாலியா இருக்கறதுன்னு சொல்லித் தரேன்னுட்டு என்னல்லாம் பண்ண வெச்சுட்டே"

ஆனந்த், "பட், ஜாலியா இருந்தியா இல்லையா?"

ப்ரீதி, "ஜாலியாத்தான் இருந்துச்சு. ஆனா மனசை உறுத்தறது ஆனந்த்"

ஆனந்த், "டியர், I understand completely. நேத்து நைட்டு உன்னை ட்ராப் பண்ணிட்டு என் ஃப்ளாட்டுக்குப் போனதுக்கு அப்பறம் ரொம்ப நேரம் தூக்கம் வரலை. யோசிச்சுட்டு இருந்தேன். எனக்காக நீ உன் வேல்யூஸ்ஸை விட்டுக் கொடுத்ததை நினைச்சேன். உண்மையை சொல்லறேன் டியர். எனக்கே ரொம்ப வெக்கமா இருந்தது"

ப்ரீதி, "பரவால்லை. நானும் சேந்துதானே என்ஜாய் பண்ணினேன். அதுக்காக நீ கவலைப் பட்டுண்டு இருக்காதே. பட், ஆனந்த் நம்ம அப்படி இருந்த விஷயம் உங்க அப்பா அம்மாவுக்குத் தெரிஞ்சா என்னை தப்பா நினைக்க மாட்டாளா?"

ஆனந்த், "கவலையே படாதே. இன்னேரம் எங்க அப்பா கெஸ் பண்ணி இருப்பார். தெரிஞ்சாலும் அம்மாவுக்கு சொல்ல மாட்டார். அப்படி தெரிய வந்தா அம்மா நிச்சயம் சந்தோஷப் பட மாட்டாங்க. ஆனா ரொம்ப வருத்தப் படவும் மாட்டாங்கன்னு நம்பறேன். என்னை அவங்களுக்கு நல்லா தெரியும். If at all they come to know I will take the complete blame. Ok?"

ப்ரீதி, "ஐ லவ் யூ ஆனந்த்"

ஆனந்த், "ஐ லவ் யூ மச் மோர் ஹனி"

உணவு அருந்தும் போது ...

ப்ரீதி, "ஆனந்த், அந்த கான்ஃபெரன்ஸ் ரூமுக்குப் போனியே என்ன பாத்தே?"

ஆனந்த், "சீக்கரம் சாப்பிடு. போய் ஒரு விஷயம் வெரிஃபை பண்ணனு்ம்"

சாப்பிட்டு முடித்து அலுவலகத்துக்குச் சென்ற போது ...

ஆனந்த், "ப்ரீதி, நீ விக்ரம் ஷா கேபினில் இருக்காரா. லஞ்சுக்குப் போயிருக்காரான்னு பாத்துட்டு வா. நான் வெளியில் நிக்கறேன்"

சில நிமிடங்களுக்குப் பிறகு வந்த ப்ரீதி, "அவர் இன்னும் கேபினில் தான் இருக்கார். வெளியில் இருந்து லஞ்ச் கொண்டு வந்து இருக்காங்க. அவர் கேபில் இருக்கும் கான்ஃபரென்ஸ் டேபிளில் அவரும் அந்த ரெண்டு விஸிட்டர்ஸும் சாப்பிட்டுட்டு இருக்காங்க. இன்னொரு விஷயம். இட் ஸீம்ஸ் நந்தகுமார் கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி வந்தானாம். அவனும் அவங்ககூடத்தான் இருக்கான்"

ஆனந்த், "குட். என் கூட வா" என்று அவளை அழைத்துக் கொண்டு அந்தத் தளத்தின் அவர்களது அலுவலகத்துக்குப் பின் புறம் இருக்கும் காரிடோரை அடைந்தான். அந்த காரிடோரை அடைய முன்பு கான்ஃபரென்ஸ் ரூமில் இருக்கும் கதவுக்கு அருகே வந்த பிறகு ...

ஆனந்த், "This door directly leads to that conference room"

ப்ரீதி, "அப்படின்னா பின்னாடி இருந்து எங்க ஆஃபீஸுக்கு உள்ளே வரதுக்கு வழி இருக்கா? எதுக்கு?"

ஆனந்த், "எதுக்குன்னு அப்பறம் பார்க்கலாம். இன்னைக்கு காலைல விக்ரம் ஷா எப்படி ஆஃபீஸுக்கு உள்ளே வந்தார்ன்னு முதல்ல பார்க்கலாம்"

ப்ரீதி, "It is obvious இந்த வழியா வந்து இருப்பார்"

ஆனந்த், "What is not obvious is ... ஆஃபீஸ் வாசலை மிஸ்டர் ரெட்டியின் ஆளுங்க தொடர்ந்து நோட்டம் விட்டுட்டு இருக்காங்க. அவர் ஆஃபீஸ் முன் வாசல் வழியா வரலை. ஸோ எப்படி வந்து இருப்பார்?"

இருவரும் அந்தக் காரிடோரின் ஒரு கோடியில் இருந்து மறு கோடி வரை நடந்த சென்று பார்த்தனர். அந்தக் காரிடோரில் இருந்து கட்டிடத்தின் முன் பகுதியில் இருந்து அங்கு வருவதற்க்கான வழிகள் மட்டுமே அவர்களுக்குப் புலப்பட்டன.

ப்ரீதி, "ஒரு வழியா இந்த லிஃப்டில் வந்து இருப்பாரோ?"

ஆனந்த், "நிச்சயம் லிஃப்டில் தான் வந்து இருக்கணும். அவர் கால்நடையா ஆறு மாடி ஏறி வந்து இருக்க மாட்டார். பட் மை டியர். க்ரவுண்ட் ஃப்ளோரில் இந்த லிஃப்டுக்கு வரதுக்கும் பில்டிங்க் வாசல் வழியாத்தான வரணும். இல்லையா?"

ப்ரீதி, "நான் அதைச் சொல்லலை. அவர் மேல் ஃப்ளோரில் இருந்து வந்து இருந்தா?"

ஆனந்த், "என்ன சொல்லறே?"

ப்ரீதி, "ஐ மீன் மொட்டை மாடியில் இருந்து. இந்த பில்டிங்கின் முன்னாடி விங்க் எல்லாம் ஆஃபீஸ். பின்னாடி விங்கில் அப்பார்ட்மெண்ட்ஸ். பின்னாடி விங்கில் இருந்து இங்கே வரதுக்கு மொட்டை மாடியில் மட்டும்தான் வழி இருக்கு. இல்லைன்னா கீழே க்ரவுண்ட் ஃப்ளோர் போய் பில்டிங்கை சுத்திட்டு வரணும்"

ஆனந்த், "காட்! விக்ரம் ஷா பின்னாடி விங்கில் இருக்கும் ஒரு அப்பார்ட்மெண்டில் தங்கி இருக்கணும். அதான் அவர் ரெட்டியின் ஆளுங்க கண்ணில் படலை"

ப்ரீதி, "மொதல்ல மிஸ்டர் ராவ்கிட்டே ஃபோனில் சொல்லு. ரெய்ட் வரச்சே அவர் இந்த வழியா தப்பிப் போயிடப் போறார்"

ஆனந்த், "சொல்றேன். ஆனா, ரெய்ட் வரச்சே தப்பிப் போக மாட்டார். அப்படிப் போனா அவர் எந்த ஊருக்குப் போனாலும் மாட்டிப்பார். இந்தக் கம்பெனியை இன்னும் அவர் வித்து முடிக்கலை. எப்படியும் ஒண்ணு ரெண்டு மில்லியனாவுது எதிர்பார்த்துட்டு இருப்பார். அவ்வளவு பணத்தை விட்டுட்டுப் போக மாட்டார்"

~~~~~~~~~~~~~~
மாலை ....

ப்ரீதி, "என்ன இன்னும் பிஸியா வொர்க் பண்ணிண்டு இருக்கே?"

ஆனந்த், "ம்ம்ம் ... சொல்ல மறந்துட்டேனே. இன்னைக்கு காலைல விக்ரம் ஷாகிட்டே எப்போ ரிலீவ் பண்ணப் போறீங்கன்னு கேட்டேன். அவர் க்ளையண்டுக்கு மெயில் பண்ணி இருக்கேன் பதில் வந்தா சொல்லறதா சொன்னார். மனுஷன் சொன்ன மாதிரி அத்தனை வேலைக்கும் நடுவில் மெயில் அனுப்பி இருக்கார். நான் எப்போ ரிலீவ ஆனாலும் ஓ.கேன்னு க்ளையண்ட்கிட்டே இருந்து பதில் வந்து இருக்கு. இதுக்கு நடுவில் அந்த மெயில் இன்டர்ஸெப்ட் ஆகி எஃப்.பி.ஐக்கு ஆடோமேட்டிக்கா ஒரு காப்பி போயிருக்கு. என்னை இங்கே அனுப்ப ஏற்பாடு செஞ்ச எஃப்.பி.ஐ ஏஜண்ட் ஷான் ஹென்றி நட்ட நடு ராத்திரின்னும் பாக்காம உடனே என்னை ஃபோனில் கூப்பிட்டார். ஒரு சின்ன அப்டேட் கொடுத்தேன். நாளைக்கே எஃப்.பி.ஐயும் விக்ரம் ஷா மேல ஆக்ஷன் எடுக்கச் சொல்லி இண்டியன் கவர்ன்மெண்ட் ஏஜன்ஸியான RAWவை அணுகப் போறாங்களாம். அந்த ஏஜன்ஸியில் NTRO அப்படின்னு ஒரு பிரிவு இருக்காம். அந்த பிரிவும் அடுத்த ஒண்ணு ரெண்டு நாளில் விக்ரம் ஷாவைத் தேடி வரும்"

ப்ரீதி, "ஆனந்த், நேக்கு ரொம்ப பயம்மா இருக்கு"



ஆனந்த், "உனக்கு எதுக்கு பயம்?"

ப்ரீதி, "என்னவோ தெரியலை. I can't explain"

ஆனந்த், "ம்ம்ம் ... Woman's intuition .. "

ப்ரீதி, "கோவிலுக்குப் போலாமா?"

ஆனந்த், "சரி வா"

கோவிலுக்கு சென்று வந்த பிறகு ப்ரீதியை அவளது விடுதியில் விட்டு தன் ஃப்ளாட்டுக்குச் சென்றான்.

அடுத்த நாளை இருவரும் ஆதங்கத்துடனும் ஆவலுடனும் எதிர்பார்த்த படி இறவைக் கழித்தனர்.

அந்த நகரின் மற்ற ஒரு மூலையில் ரெட்டியின் வீட்டில் எல்லோரும் உறங்கி இருக்க ஒரு மூலையில் அமர்ந்து இருந்த 
செல்வி சிவா இருவர் மனத்திலும் ஆதங்கம் நிறைந்து இருந்தது .... 



அக்னி சாட்சி - அத்தியாயம் - 26

மாலை சுதர்சனத்தின் இல்லத்தில் ..

சுதர்சனம், "வாடா தடியா. வாம்மா ப்ரீதி" என வரவேற்றார்.

உடன் நின்று வரவேற்ற சுதர்சனத்தின் மனைவி சித்ரா, "ஏன்னா, இனி இந்த மாதிரி உரிமை எடுத்துக்கப் படாது. பாருங்கோ நீங்க தடியான்னு சொன்னதும் ப்ரீதி முகத்துல எள்ளும் கொள்ளும் வெடிக்கறதை" எனக் கிண்டலடிக்க ப்ரீதி வெட்கத்தில் முகம் சிவக்க அவள் எதுவும் சொல்வதற்கு முன் ...

ஆனந்த், "கவலையே படாதீங்கோ மாமா. நீங்க என்னை என்ன வேணும்ன்னாலும் சொல்லிக் கூப்படலாம். நேத்துத்தான் அவளே என்னை எருமை மாடுன்னு கூப்பிட்டா. அட்லீஸ்ட் நீங்க என்னை மனுஷனாவாவுது பார்க்கறேளே"

சித்ரா போலியாக ப்ரீதியைப் பார்த்து, "என்னம்மா இது?"

பிரபாகரின் மரணத்தை எண்ணி முகம் வாடி இருந்த ப்ரீதி மேலும் முகம் சிறுக்க, "ஆனந்த், I didn't mean to hurt you" எனப் பரிதாபமாகப் பார்க்க

ஆனந்த், "I know my dear சும்மா ஒரு கிண்டலுக்கு சொன்னா இப்படி முகம் சுருங்கிடுது?"



சித்ரா, "கூப்படறோத நிறுத்தி இருக்கியேன்னுதான் நான் ஆச்சர்யப் பட்டேன்"

ஆனந்த், "ஏன்? மேல என்ன செஞ்சு இருக்கணும்"

சித்ரா, "உன்னை ஒழுங்கா மிறட்டி வெக்கலை. இல்லைன்னா இந்த மாதிரி இப்படி சபைல அவ சொன்னதை சொல்லுவியா? உங்க மாமாவைப் பாரு எப்படி பேசாம இருக்கார்"

சுதர்சனம், "டேய், இந்தப் பொம்மனாட்டிக சாவகாசமே ரொம்ப டேஞ்சரானது. ஆமா, ப்ரீதி முகம் ஏன் இப்படி வாடி இருக்கு?"

ஆனந்த், "something sad happened ...P.K.Reddy's son Prabhakar has been murdered. கார்த்தாலே அங்கேதான் போயிருந்தோம்"

சுதர்சனம், "ஓ மை காட்! எப்படி? Don't tell me Vikram Shah has something to do with it"

ஆனந்த், "விக்ரம் ஷாவோட ரைட் ஹாண்ட் மேன். நந்தகுமார்ன்னு பேர் அவன் நிச்சயம் இன்வால்வ் ஆகி இருக்கான். விக்ரம் ஷாவோட சப்போர்ட் இல்லாம அவன் இதை செஞ்சு இருக்க முடியாது. ஸோ! விக்ரம் ஷாவும் இதுக்கு உடந்தை"

சுதர்சனம், "போலீஸ் கிட்டே அதைச் சொன்னாங்களா?"

ஆனந்த், "ம்ம்ஹூம். Mister Reddy wants to settle the score differently"

சுதர்சனம், "ம்ம்ம் .. நினைச்சேன். முடிச்சுட்டாரா?"

ஆனந்த், "இல்லை அவரோட ஆளுங்க தேடிட்டு இருக்காங்க. ரெண்டு பேரும் தலை மறைவா இருக்காங்க. பட் இன்னும் ஒரு ட்ரப்ளிங்க் நியூஸ். எந்த அளவுக்கு அது ப்ரீதி விஷயத்தில் நம்மை பாதிக்கும்ன்னு தெரியலை"

சுதர்சனம், "என்ன?"

ஆனந்த், "இட் ஸீம்ஸ். விக்ரம் ஷா தன் ஃபேமிலியை அல்ரெடி ஊரை விட்டு அனுப்பிட்டாராம். இன்னும் ரெண்டு நாளில் அவரும் நாட்டை விட்டு போயிடுவார் போல இருக்கு"

சுதர்சனம், "எப்படி இவ்வளவு ஷுயரா சொல்லறே?"

ஆனந்த், "Based on two things. முந்தாநேத்து டீம் டின்னரும் போது கேள்விப் பட்ட காஸிப். Looks like Vikram Shah is talking to someone for selling the company. அப்படி இருந்தா நிச்சயம் எனக்கு நாளைக்குத் தெரிய வரும். இன்னொரு லீட் என்னன்னா அந்த நந்தகுமார்கிட்டே இருந்து ஒரு மிறட்டல் ஃபோன் கால் செல்விக்கு வந்தது. இன்னைக்கு காலைல. இன்னும் ரெண்டு நாளில் ஹாங்க் காங்க் போறதாவும் அங்கே போனதும் அவளோட வீடியோவை நெட்டில் போடப் போறதா சொல்லி இருக்கான். It seems he knows that Prabakar was sent to erase their recording"

சுதர்சனம், "எது அந்த விக்ரம் ஷா எடுத்து இருப்பான்னு நீ நினைச்ச வீடியோவை எல்லாமா?"

ஆனந்த், "இல்லை. அந்த செல்வியை எடுத்த வீடியோ. விக்ரம் ஷா ரெக்கார்ட் செஞ்ச வீடியோ எல்லாம் நம்ம கைக்கு வந்தாச்சு."

சுதர்சனம், "எப்படி?"

ஆனந்த், "பிரபாகர் எங்கிட்டே அவங்க இன்டென்நெட்டில் ஸ்டோர் செய்யும் சர்வரை எப்படி ஆக்ஸஸ் பண்ணறதுன்னு சொல்லி இருந்தான். நான் வெள்ளிக் கிழமை அன்னைக்கே அந்த சர்வரில் இருந்ததை எல்லாம் டவுன் லோட் செஞ்சுட்டேன்"

சுதர்சனம், "குட். சோ உன் ரூட் இப்போ completely cleared இல்லையா?"

ஆனந்த், "Looks like. Nevertheless அன்னைக்கு என்னால என்னோட எஃப்.பி.ஐ காண்டாக்ட்கூட பேச முடியலை. உங்க லாயர் ஃப்ரெண்ட்கிட்டே அந்த விஷயத்தைப் பத்தியும் ஒரு டவுட் கேட்கணும். எப்போ வரப் போறார்?"

சுதர்சனம், "He will be here any moment ... அதுக்கு முன்னாடி நீ கொண்டு வந்து இருக்கும் டாக்யூமென்ட்ஸைக் கொடு. பார்க்கலாம். எப்படியும் டின்னருக்கு இன்னும் நாழி இருக்கு. என்ன சாப்படறே?"

ஆனந்த், "உங்க ஆத்தல வேற என்னத்தைக் கேட்க முடியும். காஃபி கொடுங்கோ மாமி?"

சித்ரா, "ஆனந்த், உங்க மாமாவை என் மாமனார் மாதிரின்னு நினைச்சியா?"

ஆனந்த், "தெரியும் மாமி. உங்க முன்னாடி அவர் எதுவும் செய்ய மாட்டார்"

சுதர்சனம், "டேய் படவா. என் தயவு நோக்கு இன்னும் தேவையா இருக்கு. மறந்துடாதே"

ஆனந்த், "அதுவும் தெரியும் மாமா. இந்த பிரச்சனை எல்லாம் முடிஞ்சதும் உங்களை தனியா அழைச்சுண்டு போய் ஸ்பெஷலா ட்ரீட் கொடுக்கலாம்ன்னு இருந்தேன். இப்போ மாமி முன்னாடியே சொல்ல வெச்சுட்டேளே?" என்றதும் சித்ரா முறைக்க

சுதர்சனம், "அம்மா ப்ரீதி, இந்தப் பயலுக்கு நீ கொஞ்சம் கடிவாளம் போட்டு வெக்கணும். விட்டா நேக்கு டைவர்ஸ் வாங்கிக் கொடுத்துடுவான்"

கல கலப்பு அடங்கியதும் ஆடவர் இருவரும் ஹாலில் அமர ப்ரீதி அவர்களுடன் அமராமல் சித்ராவுடன் செல்ல எத்தனிக்க சித்ரா, "உன் விஷயமாத்தானே பேசப் போறா? நீ என்னோட வர்றே?"

ப்ரீதி, "இல்லை. உங்களுக்கு ஒத்தாசையா" என்று இழுக்க

சித்ரா, "அதெல்லாம் நான் பாத்துக்கறேன். நீ அவாளோட உக்காரு"

ஆனந்த் கொடுத்தவற்றை வாங்கிப் பார்த்து முடித்த சுதர்சனம், "சூப்பர்டா கண்ணா. ப்ரீதி, இதெல்லாம் மட்டுமே போறும். உன்னை யாரும் ஒண்ணும் அசைச்சுக்க முடியாது. Anyway let my friend also take a look at it" என்று அவர் சொல்லிக் கொண்டு இருக்கும் போது வழக்கறிஞர் ராம்பத்ர ராவ் அங்கு வந்து சேர்ந்தார்.


சுதர்சனம், "ஹல்லோ ராம், திஸ் இஸ் ஆனந்த் மை நெஃப்யூ. திஸ் இஸ் ஹிஸ் ஃபியான்ஸே"

ராம்பத்ர ராவ், "ஹெல்லோ ஆனந்த். ஹெல்லோ ப்ரீதி" என்றவாறு அவரும் அவர்களுடன் அமர்ந்தார்.

அடுத்து ஆங்கிலத்தில் தொடர்ந்த அவர்களது உரையாடலின் தமிழாக்கம் ...

சுதர்சனம், "ராம் நமக்கு ஒரு ரொம்ப நல்ல ஆதாரம் கிடைச்சு இருக்குன்னு நினைக்கறேன். அதுக்கு முன்னாடி, நான் இதுவரைக்கும் உங்களுக்கு கொடுத்த டீடெயில்ஸை வெச்சுண்டு நீங்க பார்த்தவரை உங்க ஒப்பீனியன் என்ன?"

ராம்பத்ர ராவ், "க்ளோஸா பார்த்தாத்தான் ப்ரீதியை ஒரு டம்மியா அவன் உபயோகிச்சு இருக்கான்னு சொல்ல முடியும். ஆனா விக்ரம் ஷா மேல போலீஸ் அல்லது இன்கம் டாக்ஸ் டிபார்ட்மெண்ட் ஆக்ஷன் எடுத்தா நிச்சயம் அவங்க ப்ரீதியையும் விக்ரம் ஷாவுக்கு உடந்தைன்னு சொல்லுவாங்க. அப்படி அவ பேரை இன்க்ளூட் பண்ணினப்பறம் கோர்டில் ஈஸியா ப்ரீதியை நிரபராதின்னு நிரூபிச்சுட முடியும். ஆனா, அவ பேர் போலீஸ் அண்ட் இன்கம் டாக்ஸ் ரெக்கார்ட்ஸில் வரும். கேஸ்ன்னு வந்தப்பறம் கொஞ்சம் நாள் இழுக்கும். கேஸ் முடியற வரைக்கும் அவ ஊரை விட்டு போக முடியாது. யூ.எஸ் விசா கிடைப்பதிலும் சில சிரமங்கள் இருக்கலாம்"

ப்ரீதியின் முகம் பேயறைந்தது போல் ஆக ஆனந்த் முகத்தில் கவலை ரேகைகள் படரத் தொடங்கின ...

ராம்பத்ர ராவ், "நான் இன்னும் முடிக்கலை ஆனந்த். நான் என்ன சொல்ல வந்தேன்னா, அப்படி போலீஸ் ஆக்ஷன் எடுக்கும் போது அல்லது அதுக்கு எடுக்கறதுக்கு முன்னாடி நாம் தகுந்த ஆதாரத்தோட அவங்களை அப்ரோச் பண்ணணும். அதுக்கு இப்போ இருக்கும் ஆதாரங்கள் போதாது"

சுதர்சனம், "இந்த டாக்யூமென்ட்ஸை பாருங்கோ" என்றவர் "அதுக்கு முன்னாடி. இன்னும் ஒரு நியூ டெவலப்மெண்ட் ... " எனத் தொடங்கி பிரபாகரின் மரணத்தைப் பற்றியும் ஆனந்த் கேள்விப் பட்டவைகளையும் சொல்லி முடித்தார்.

ராம்பத்ர ராவ், "யூ.எஸ்ல இருக்கறவங்க யாராவுது மூலம் எஃப்.பி.ஐக்கு தன் மேல சந்தேகம் வந்து இருக்குன்னு அவருக்கு நிச்சயம் இந்நேரம் தெரிஞ்சு இருக்கும். அதனாலதான் அவர் ஊரைவிட்டு புறப்பட தயாராகி இருக்கார்"

சுதர்சனம், "ஐ.டி ரெய்டைப் பத்தி அவருக்கு யாராவுது லீக் அவுட் பண்ணி இருப்பாங்களா?"

ராம்பத்ர ராவ், "அதுக்கு வாய்ப்பு இல்லை. ஐ.டி டிபார்மெண்டின் சந்தேக லிஸ்டில் விக்ரம் ஷாவின் பேர் இல்லை. நாம் தயாரிச்சுக் கொடுக்கும் ஆதாரங்களை வெச்சுத்தான் கமிஷனர் ஆணை பிறப்பிப்பார். நம்ம ஃப்ரெண்ட் நம்மிடம் இருந்து தேவையான ஆதாரங்களுக்காக காத்துட்டு இருக்கார். அவர் ஒருத்தரைத் தவிற டிபார்ட்மெண்டில் யாருக்கும் தெரிஞ்சு இருக்க வாய்ப்பு இல்லை. ஏன்னா இன்னும் விக்ரம் ஷாவின் கேஸ் ஃபைலுக்கான ரிக்வெஸ்ட் அவர் அனுப்பலை. ரிக்வெஸ்ட் அனுப்பும் போதுதான் எதுக்கு கேஸ் ஃபைலைக் கேட்கறீங்கன்னு கேள்வி வரும். அவர் பதில் சொல்ல வேண்டி இருக்கும் அவர் இன்னும் கேட்காம இருக்கார்"

சுதர்சனம், "சரி, நீங்க டாக்யுமெண்ட்ஸைப் பாருங்க"

சுதர்சனம் கொடுத்தவற்றில் சில நிமிடங்கள் செலவிட்ட பிறகு அவர் தொடர்ந்து, "ம்ம்ம் .. இது அடிஷனல் எவிடன்ஸ். ஆனா இந்த டீல்ஸ் முழுக்க ப்ரீதியின் இன்ஸ்ட்ரக்ஷனில் விக்ரம் ஷா செஞ்சான்னும் சொல்லக் கூடும் இல்லையா? விக்ரம் ஷாவுக்கு தேவையான பவர் ஆஃப் அட்டார்னி ப்ரீதி கொடுத்து இருக்கா. கம்பெனியை உபயோகிச்சு என்ன திருட்டுத்தனம் செஞ்சு இருந்தாலும் ப்ரீதியையும் அதுக்கு உடந்தைன்னுதான் அர்த்தம். ஏன்னா ப்ரீதி P.S.V Systemsஓட எம்.டி. ஒரு எம்.டி தன் கம்பெனியின் நடவடிக்கைகளில் தனக்கு சம்மந்தம் இல்லைன்னு சொல்ல முடியாது"

ஆனந்த், "அவ பேர்ல எந்த விதமான கம்ப்ளெயிண்டும் வராம எப்படி தடுக்கறது?"

ராம்பத்ர ராவ், "We need that final piece of evidence that will pin Vikram Shah down. இந்தக் கம்பெனியின் எல்லா கொடுக்கல் வாங்கல்களையும் அவர்தான் செஞ்சார் அப்படிங்கறதுக்கான ஆதாரம் வேணும்"

ஆனந்த், "அப்படின்னா, பேங்க் ஸ்டேட்மெண்ட் எல்லாம் அவர் லாப்டாப்பில் இருந்துதான் எடுக்கப் பட்டதுன்னு நிரூபிச்சா போதும் இல்லையா?"

ராம்பத்ர ராவ், "அதை எப்படி நிரூபிக்கப் போறே?"

ஆனந்த், "HDFC பேங்கில் மாமாவுக்கு தெரிஞ்சவர் மூலம் எந்த ஐ.பி அட்ரெஸ்ல (இணைய விலாசத்தில்) இருந்து பேங்க் ஸ்டேட்மெண்ட் எடுக்கப் பட்டு இருக்குன்னு ஒரு லிஸ்ட் வாங்கப் போறார். அந்த லிஸ்டில் இருக்கும் ஐ.பி அட்ரெஸ் விக்ரம் ஷாவின் லாப்டாப்போடது"

ராம்பத்ர ராவ், "ரெய்ட் செய்யும் சமயத்தில் அவன் தன் லாப்டாப்பின் ஐ.பி அட்ரெஸ்ஸை மாத்தி இருந்தான்னா?" என தன் கணிப்பொறியியல் ஞானத்தால் ஆனந்தை வியக்க வைத்தார்.

சற்று மலைத்து வாயடைத்துப் போன ஆனந்த், "பட், அந்த லாப் டாப்பில் ஃபிங்கர் ப்ரிண்ட் வெரிஃபிகேஷன் இருக்கே. அவரால மட்டும் தானே அதை ஆபரேட் பண்ண முடியும்?"

ராம்பத்ர ராவ், "சோ?"

ஆனந்த், "அந்த லாப் டாப்பில் அந்த பேங்க் ஸ்டேட்மெண்ட்ஸ் இருந்தா அந்த ஸ்டேட்மென்ட்ஸ்ஸை விக்ரம் ஷாதான் எடுத்தார்ன்னு நிரூபிக்கலாம் இல்லையா?"

ராம்பத்ர ராவ், "லாப் டாப்பின் ஐ.பி அட்ரெஸ்ஸை மாத்தறவன் அந்த ஸ்டேட்மெண்டை எல்லாம் விட்டு வெச்சு இருப்பானா?" என்று அனைவரையும் அதிர வைத்தார்




ஆனந்த் ஆழ்ந்த யோசனையில் இருக்க ...

முகம் பிரகாசித்த ப்ரீதி, "சார், நேக்கு என்னமோ அவர் இன்னும் தன் லாப்டாப்பின் ஐ.பி அட்ரெஸ்ஸை இன்னும் மாத்தி இருக்க மாட்டார்ன்னு தோணறது. நெக்ஸ் டைம் ஆஃபீஸ் வரச்சே விக்ரம் ஷா ஆஃபீஸ் நெட்வொர்க்கில் கனெக்ட் செஞ்சார்ன்னா அந்த ஐ.பி அட்ரெஸ் அவரோட கம்பியூட்டரோடதுன்னு சொல்றதுக்கான ஆதாரத்தை எடுத்தடலாம்"

ஆனந்த், "எப்படி சொல்றே?"

ப்ரீதி, "அவர் கனெக்ட் பண்ணி இருக்கச்சே நம் ஸிஸ்டத்தில் இருந்து அட்ரெஸ் ரெஸல்யூஷன் கமாண்ட் (MSDOS ARP Command) கொடுத்தா அவரோட லாப்டாப்பின் நெட்வொர்க் கார்ட் ஃபிஸிகல் அட்ரெஸ் கிடைக்கும்"

ஆனந்த், "வாவ், ஹனி! பிச்சுட்டே"

ராம்பத்ர ராவ், "அது என்ன் ஃபிஸிகல் அட்ரெஸ்"

ஆனந்த், "சார், பி.ஸில நெட்வொர்க் கார்ட் அப்படின்னு ஒண்ணு இருக்கு. இதும்மூலமே ஒரு பி.ஸி நெட்டில் கனெக்ட் ஆகுது. ஒவ்வொரு நெட்வொர்க் கார்டுக்கும் ஒரு யுனீக் ஐ.டி (Unique ID) இருக்கும். இது நெட்வொர்க் கார்ட் தயாரிக்கும் போது ஃபேக்டரில அதன் மெமரில அழிக்க முடியாத மாதிரி ஸ்டோர் பண்ணுவாங்க. இதை நெட்வொர்க் ஃபிஸிகல் அட்ரெஸ் அல்லது மேக் அட்ரெஸ் (MAC Address) அப்படின்னு சொல்லுவாங்க. இது ஒரு நெட்வொர்க்கில் இருக்கும் கம்பியூட்டரின் கை ரேகைன்னு எடுத்துக்கலாம்"

ராம்பத்ர ராவ், "ஓ! இஸ் இட்? எனக்குத் தெரியாது. எப்படி அந்த கமாண்ட் வொர்க் பண்ணும் சொல்லு?"

ப்ரீதி, "அவர் லாப்டாப் ஆஃபீஸ் நெட்வொர்கில் கனெக்ட் ஆகி இருக்கச்சே நெட்வொர்க்கில் இருக்கும் பி.ஸி எதில் இருந்தாவுது கமாண்ட் ப்ராம்ப்ட் விண்டோவை ஓபன் பண்ணி பிங்க் (ping) கமாண்டை அவரோட ஐ.பி அட்ரெஸ்ஸை சேத்து கொடுத்தா அவரோட லாப்டாப்பின் ஃபிஸிகல் அட்ரெஸ் நம் பி.ஸில ஸ்டோர் ஆயிடும். அதுக்கு அப்பறம் ARP -a அப்படிங்கற கமாண்டை கொடுத்தா பி.ஸில ஸ்டோர் ஆன ஐ.பி அட்ரெஸ்ஸஸ் எல்லத்தையும் அதோட ஃபிஸிகல் அட்ரெஸ்ஸையும் சேத்து லிஸ்ட் பண்ணும். ஃபிஸிகல் அட்ரெஸ் ஒரு ஃபிங்கர் ப்ரிண்ட் மாதிரி. ரெய்ட் வரச்சே அவர் லாப்டாப்பை அவா ஸீஸ் பண்ணும் போது வெரிஃபை பண்ணிக்கலாம்."

ராம்பத்ர ராவ், "அவர் ஆஃபீஸ் நெட்வொர்க்கில் கனெக்ட் பண்ணும் போது அந்த கமாண்டை நாம் இங்கே இருந்து கொடுத்தா வொர்க் ஆகுமா?"

ப்ரீதி, "ம்ம்ஹூம். அவர் கனெக்ட் செய்யும் லோகல் ஏரியா நெட்வொர்க்கில் கனெக்ட் ஆனாத்தான் வொர்க் ஆகும்"

ஆனந்த், "அதாவுது அந்த ஆஃபீஸ் லான் (LAN)இல் இருக்கும் வேற ஒரு கம்பியூட்டர்ல இருந்து மட்டும்தான் வொர்க் ஆகும்" என்று மேலும் விவரித்தான்.

ராம்பத்ர ராவ், "இந்த கமாண்ட் அவுட்புட் எப்படி இருக்கும்?" என்று கேட்க ...

ஆனந்த், "இருங்க சார் டெமான்ஸ்ட்ரேட் பண்ணி காமிக்கறேன்" என்ற பிறகு தொடர்ந்து, "மாமா உங்க ஆத்தில் வொய்.ஃபை (WiFi) ஆன் ஆகி இருக்கா?"

சுதர்சனம், "அது 24 ஹவர்ஸ் ஆன்லதான் இருக்கும்"

ஆனந்த், "உங்க லாப்டாப்பை கனெக்ட் செய்யறேளா?"

சுதர்சனம் தன் அலுவலக அறையில் இருந்து லாப்டாப்பை எடுத்து வந்தார்

ஆனந்த், "ப்ரீதி, அவரோட ஐ.பி அட்ரெஸ் என்னன்னு பாத்து சொல்லு" என்றபடி தன் லாப்டாப்பை இயக்கினான்

ப்ரீதி அவரது லாப்டாப்பில் கமாண்ட் ப்ராம்ப்ட் விண்டோவை திறந்து IPCONFIG என்ற ஆணையைப் பிறப்பித்த பிறகு, "192.168.1.3" என்றாள்

ஆனந்த் தன் லாப்டாப்பில் கமாண்ட் ப்ராம்ப்ட் விண்டோவை திறந்து PING 192.168.1.3 என்ற ஆணையைப் பிறப்பிக்க கீழ்கண்டவாறு அந்த ஆணைக்கு பதில் வந்தது

Pinging 192.168.1.3 with 32 bytes of data:

Reply from 192.168.1.3: bytes=32 time=4ms TTL=128
Reply from 192.168.1.3: bytes=32 time=1ms TTL=128
Reply from 192.168.1.3: bytes=32 time=1ms TTL=128
Reply from 192.168.1.3: bytes=32 time=1ms TTL=128

Ping statistics for 192.168.1.3:
Packets: Sent = 4, Received = 4, Lost = 0 (0% loss),
Approximate round trip times in milli-seconds:
Minimum = 1ms, Maximum = 4ms, Average = 1ms

அடுத்து ARP -A என்ற ஆணையைக் கொடுக்க அதற்கு பதிலாக கீழ்கண்டவாறு திரையில் தோன்றியது

Interface: 192.168.1.51 --- 0x3
Internet Address Physical Address Type
192.168.1.3 00-19-d1-80-d4-a5 dynamic
192.168.1.1 00-1b-57-4f-92-de dynamic

ஆனந்த், "இதில 192.168.1.1 அப்படிங்கறது மாமாவோட wi-fi router. மாமாவின் லாப்டாப்பின் ஐ.பி அட்ரெஸ் 192.168.1.3 அதுக்கு பக்கத்தில் இருக்கறது அவரோட ஃபிஸிகல் அட்ரெஸ். அது மாறவே மாறாது." என்று விளக்கினான்.

ராம்பத்ர ராவ், "சரி, இந்த அவுட்புட்டை எப்படி ஆதாரமா காட்டப் போறே?"

ஆனந்த், "இந்த ஸ்க்ரீனை அப்படியே ஸேவ் பண்ணிடலாம். அல்லது ஒரு பிரிண்ட் பண்ணிடலாம்"

ராம்பத்ர ராவ், "இருந்தாலும் ஆனந்த், இந்த மாதிரி ஒரு அவுட்புட் அல்லது ப்ரிண்ட் அவுட் இந்த கமாண்ட் கொடுக்காமலே தயாரிக்க முடியாதா? எனக்கு என்னமோ இந்த கமாண்ட்டின் அவுட்புட் ஒரு ஈமெயில் மாதிரி டெக்ஸ்ட் ஃபைல் (Text File) வடிவத்தில் இருக்கற மாதிரி தோணுது"

ஆனந்த், "சார், நீங்க என்ன சொல்ல வரீங்கன்னு தெரியுது. அந்த மாதிரி ஒரு அவுட்புட்டை நோட் பாட் யூஸ் பண்ணியும் தயாரிக்க முடியும். அதை ஒரு ஆதாரமா உபயோகிக்க முடியாது. அப்படித்தானே?"

ராம்பத்ர ராவ், "ஆனந்த், நீயோ ப்ரீதியோ தனியா அந்த அவுட்புட் எடுத்துக் கொடுத்தா அதை ஆதாரமா உபயோகிக்க முடியாது"

ஆனந்த், "என்ன சொல்ல வர்றீங்க?"

ராம்பத்ர ராவ், "அந்த அவுட்புட் எடுத்ததை நேர்ல பார்த்தவங்க சாட்சி சொன்னா அதை ஆதாரமா ஒத்துக்க முடியும்."

ஆனந்த், "அதாவது எனக்கோ ப்ரீதிக்கோ எந்த விதத்தில் சம்மந்தப் படாத ஒரு நபர் அந்த அவுட்புட் எடுப்பதை நேரில் பார்க்கணும். இல்லையா?"

"ஆமா" என்ற ராம்பத்ர ராவ் சில நிமிடங்கள் யோசித்த பிறகு தொடர்ந்து, "உங்க ஆஃபீஸ்ல வெளி ஆளுங்க யாராவுது வந்தா அவங்களை உள்ளே விடுவாங்களா?"

ஆனந்த், "ம்ம்ம் ... என்னைப் பார்க்க இதுக்கு முன்னாடி சிலர் வெளியில் இருந்து வந்து இருக்காங்க. அவங்களை என் கேபினுக்கு அனுப்பினாங்க"

ராம்பத்ர ராவ், "க்ரேட். அப்படின்னா நீங்க ரெண்டு பேரும் இது வரைக்கும் சம்மந்தப் படாத ஒரு நபர் முன்னாடி நீ இந்த ப்ரிண்ட் அவுட் எடுக்கணும்"

ஆனந்த், "அப்படின்னா நீங்க நாளைக்கு என் ஆஃபீஸுக்கு வாங்களேன். உங்க முன்னாடி இந்த அவுட்புட் எடுக்கறேன்"

ராம்பத்ர ராவ், "ம்ம்ஹூம் ... நான் உங்க லாயர் நான் சாட்சிக் கூண்டில் ஏறி நிக்க முடியாது." என்ற பிறகு சுதர்சனத்தைக் காட்டி, "Neither can your uncle do that. எங்க ரெண்டு பேரைத் தவிற வேற யாராவுது ஒருத்தர்"

சுதர்சனம், "சார், இந்த அளவுக்கு பிரபரேஷன் தேவையா? கொஞ்சம் பிரஷர் கொடுத்து நாளை சாயங்காலமே ரெய்டுக்கு ஏற்பாடு செஞ்சா என்ன?"

ராம்பத்ர ராவ், "நிச்சயம் விக்ரம் ராவுக்கு ஐ.டி டிபார்ட்மெண்டிலும் போலீஸிலும் ஆள் இருக்கும். ரெய்ட் வரப்போகுதுன்னு தெரிஞ்சதும் அதுக்கான ஆயத்தங்களை செய்ய ஆரம்பிச்சுடுவார். இந்த அளவுக்கு நாம் இந்த கேஸை பிரிபேர் பண்ணினப்பறம் ரிஸ்க் எடுக்கக் கூடாது. நாளைக்கே இந்த அவுட்புட் ஒரு மூணாம் நபர் முன்னாடி எடுத்தாகணும்"

ஆனந்த், "ஆனா விக்ரம் ஷா நாளைக்கு ஆஃபீஸுக்கு வரணுமே. சிவா அவர் தலை மறைவா இருக்கார்ன்னு சொன்னார்"

ராம்பத்ர ராவ், "நாளைக்கு விக்ரம் ஷா ஆஃபீஸுக்கு வருவார்ன்னு நினைக்கறேன். நிச்சயம் அவர் கம்பெனியை விக்கறார்ன்னா இப்போ டியூ டெலிஜென்ஸ் (due deligence - ஒரு நிருவனம் கைமாறுவதற்கு முன்னால் அதன் லாப நஷ்டங்களை பாரபட்சம் இன்றி நிர்ணயிக்கும் பணி) நடந்துட்டு இருக்கும். ரெட்டி அவரை சந்தேகப் படுவார்ன்னும் அவருக்கு தெரிஞ்சு இருக்கும். இருந்தாலும் யாரும் பார்க்காத மாதிரி ஆஃபீஸுக்கு வருவார்ன்னு நான் நினைக்கறேன். ஆனா ஐ.பி அட்ரெஸ்ஸை இதுவரைக்கும் மாத்தாம இருந்து இருக்கணும்."

ஆனந்த், "இல்லை சார். இதுவரைக்கும் விக்ரம் ஷாவுக்கு ப்ரீதி மேல சந்தேகம் வர வாய்ப்பு இல்லை. அனேகமா ஐ.பி அட்ரெஸ்ஸை மாத்தி இருக்க மாட்டார்ன்னு நிச்சயமா நம்பலாம்"

ராம்பத்ர ராவ், "சோ, சுதர்சனம் யாரை நாளைக்கு அனுப்பலாம்?"

முகம் மலர்ந்த சுதர்சனம், "ரிடையர்ட் ஜட்ஜ் மூர்த்தி சாரை உங்களுக்கு நல்லா தெரியும் இல்லையா? அவரை கேட்க முடியுமா?"

ராம்பத்ர ராவ், "ஓ எஸ்! இருங்க அவரை கூப்பிட்டுக் கேட்டுப் பார்க்கறேன்" என்ற பிறகு ஸெல்ஃபோனில் இயக்கியவாறு எழுந்து வெளியில் சென்றார்.

சில நிமிடங்களுக்குப் பிறகு வந்த ராம்பத்ர ராவ், "விக்ரம் ஷா ஆஃபீஸுக்கு வந்து உங்க நெட்வொர்கில் கனெக்ட் பண்ணின பிறகு என்னை ஸெல்லில் கூப்பிடு. நான் அவரை கூட்டிட்டு உன் ஆஃபீஸுக்கு வந்து அவரை மட்டும் உள்ளே அனுப்பறேன். உயரமா சிவப்பா ஒல்லியா, பார்க்க ரொம்ப டிக்னிஃபைடா இருப்பார். அவரை உன் கேபினுக்கு அழைச்சுட்டுப் போய் அவர் முன்னாடி அவுட்புட் ப்ரிண்ட் அவுட் எடு. அதில் அவர் தான் அந்த அவுட்புட் எடுத்ததை நேரில் பார்த்ததாகவும் தேவையா இருந்தால் கோர்டில் சாட்சி சொல்லவும் தயார்ன்னு எழுதி கையெழுத்துப் போடுவார். நாளைக்கு நீ இந்த வேலையை முடிச்சா. நாளன்னைக்கே ரெய்டுக்கு ஏற்பாடு செய்யறேன்"

ஆனந்த், "ஓ! தாங்க்ஸ் அ லாட் சார்"

ராம்பத்ர ராவ், "பட் ஆனந்த், உன் ஃப்ரெண்டுக்கு விக்ரம் ஷாவைப் பத்தி எதுவும் சொல்லாதே. அப்படி சொன்னா அவங்க ஆளை அனுப்பி விக்ரம் ஷாவின் கதையை முடிச்சுடுவாங்க. நம் கேஸ் இழுத்துட்டு இருக்கும்."

ஆனந்த், "சரி"

சுதர்சனத்தின் இல்லத்தில் இரவு உணவை முடித்தபின் ஆனந்த் ப்ரீதியை அழைத்துக் கொண்டு புறப்பட்டான்.



காரில் ...

ப்ரீதி, "நேக்கு பயம்மா இருக்கு ஆனந்த்"

ஆனந்த், "ஏய், என்னத்துக்கு பயம்?"

ப்ரீதி, "நமக்கு தேவையான சாட்சியம் அவா கேஸ் போடறதுக்கு முன்னாடியே கிடைக்கலைன்னா?"

ஆனந்த், "கிடைக்கலைன்னா என்ன? இன்னும் கொஞ்ச நாள் இந்தியாவில் இருக்கப் போறோம்"

ப்ரீதி, "பட், உங்க அம்மா உடனே கல்யாணம் பண்ணிக்கச் சொல்லிண்டு இருக்கா இல்லையா?"

ஆனந்த், "ஆமா. கல்யாணம்தானே பண்ணிக்கச் சொல்றா? உடனே யூ.எஸ்ஸுக்கு வான்னு சொல்லலையே?"

ப்ரீதி, "கல்யாணம் பண்ணினதும் நான் உங்க ஆத்துக்கு வரணும்"

ஆனந்த், "ஓ காட்! ப்ரீதி நீயும் சேந்து கண்டிஷன் போடாதே"

சில கணங்கள் வாயடைத்துப் போன ப்ரீதி, "சரி, இப்போ என்னை என் பி.ஜில கொண்டு விடு"

ஆனந்த், "ஏன்?"

ப்ரீதி, "சொன்னா கேளு. ப்ளீஸ்"

இருவரும் மௌனமாக ப்ரீதியின் பி.ஜி விடுதிக்குச் சென்றனர்.

காரில் இருந்து இறங்கு முன் அவள் கையைப் பற்றிய ஆனந்திடம் ப்ரீதி, "ஆனந்த், போரும். என்னால இனியும் உன் கைப் பொம்மையா இருக்க முடியாது. உனக்கு நான் வேணும்ன்னா அது உங்க ஆத்துக்கு நான் மாட்டுப் பொண்ணா வந்தப்பறம்தான்" என்ற பிறகு தன் விசும்பலை அடக்க முடியாமல் இறங்கி உள்ளே ஓடினாள்.