அந்த வாரத்தில் ஒருநாள்.. அதிகாலைப்பனி சூழ்ந்த பெங்களூரில்.. குளிருக்கு நடுங்கிக்கொண்டே பஸ்ஸில் இருந்து குதித்தாள்.. செண்பக லக்ஷ்மி.. செல்வியின் தங்கை..!!!! அவள் பெங்களூர் வருவது அசோக்கிற்கு முன்பே தெரியாது. காலையில் படுக்கையிலிருந்து எழுந்தவன், காபிக்காக கிச்சனுக்கு தூக்க கலக்கத்துடனே நடந்து சென்றபோதுதான், டைனிங் டேபிளில் அமர்ந்து இட்லி விழுங்கிக்கொண்டிருந்த செண்பகம் கண்ணில் பட்டாள். திடீரென அவளை பார்த்ததும் ஓரிரு வினாடிகள் ஆச்சரியத்தில் திகைத்த அசோக், அப்புறம்..
"ஹாய் செம்பு..!!" என்றான் ஆச்சரியமும் தூக்க கலக்கமும் கலந்த மாதிரியான குரலிலேயே. சிறு வயதிலிருந்தே அவன் அவளை செம்பு என்று அழைப்பதுதான் வழக்கம்.
"ஹாய் மாமா..!!" என்றாள் அவளும் இட்லியை விழுங்கி விட்டு. சிறு வயதிலிருந்தே அவள் அவனை மாமா என்று அழைப்பதுதான் வழக்கம்.
"எப்போ வந்த..??"
"இப்ப்ப்.. ஜஸ்ஸ்.. ஒப்ப்.. அக்க்க்க்..." அதற்குள் அவள் அடுத்த இட்லியை வாயில் தள்ளியிருக்க, அவளிடமிருந்து வார்த்தைகள் இப்போது தெளிவில்லாமல் வெளியே வந்து விழுந்தன.
"என்ன.. சொல்லாமக் கொள்ளாம திடீர்னு வந்திருக்குற..??"
அசோக்கின் இந்தக் கேள்விக்காவது தெளிவாக பதில் சொல்லிவிடவேண்டும் என்று, செண்பகம் வாயில் இருந்த இட்லியை அவசர அவசரமாய் அரைத்து விழுங்கினாள். அவள் படுகிற அவஸ்தையை காண சகியாத அசோக்,
"சரி சரி.. நீ சாப்பிடு.. அப்புறம் பேசிக்கலாம்..!!"
என்று சலிப்பாக சொல்லிவிட்டு, மெல்ல நடந்து சென்று கிச்சனுக்குள் நுழைந்தான். உள்ளே.. சட்டியின் மூடியை திறந்து இட்லியின் பதம் பார்த்துக் கொண்டிருந்தாள் செல்வி. இவன் வழக்கமாக விழிக்கும் நேரமும், விழித்ததும் நேராக கிச்சனுக்குத்தான் காபிக்கு வருவான் என்பதும் அவளுக்கு முன்பே தெரியும். அதனால் காபி கலந்து தயாராக எடுத்து வைத்திருந்தாள். அசோக் உள்ளே நுழைந்ததுமே எந்த உணர்ச்சியும் காட்டாமல், காபி டம்ளர் எடுத்து அவனிடம் நீட்டினாள். டம்ளரை கையில் வாங்கிய அசோக், காபியை உறிஞ்சாமல், கண்களை மட்டும் ஒரு ஓரத்திற்கு தள்ளி அண்ணியை குறுகுறுவென பார்த்தபடியே, கம்மலான குரலில் கேட்டான்.
"எப்போ வந்தா..??"
"இப்போத்தான்.. ஒரு மணி நேரம் ஆச்சு..!!" செல்வி வேலை கவனத்துடனே பதிலளித்தாள்.
"ஓஹோ..!!"
சொன்ன அசோக் இப்போது தலையை மெல்ல நீட்டி வெளியே எட்டிப்பார்த்தான். இட்லியை சட்னியில் தொட்டு லபக்கென்று தொண்டைக்குள் போடுகிற செண்பகத்தின் மீது எரிச்சலாய் ஒரு பார்வையை வீசினான். இவர்கள் இங்கிருந்து பேசுவது அவளுக்கு கேட்காது என்ற நம்பிக்கையுடன், இந்தப்பக்கம் திரும்பி சற்றே கிண்டலான குரலில் செல்வியிடம் சொன்னான்.
"வந்ததும் வராததுமா.. தட்டு நெறைய இட்லியை போட்டு.. கவக்கு கவக்குன்னு கவ்விக்கிட்டு இருக்குறா..!! உடம்பை கொறைக்கிற மாதிரி ஐடியாவே இல்லையா உங்க தங்கச்சிக்கு..??" அசோக் கேட்க, செல்வி அவனை ஏறிட்டு முறைத்தாள்.
"உன் கொள்ளிக்கண்ணை கொண்டு போய் வேறெங்கயாச்சும் வை.. என் தங்கச்சி மேல வைக்காத..!!"
"ஹாஹா.. இல்லன்னாலும்..!! ம்ம்ம்ம்.. என்ன விஷயமா வந்திருக்குறா..??"
"இன்டர்வ்யூக்கு..!!"
"ஓ..!! எந்த கம்பெனில..??"
"உங்க கம்பெனிலதான்..!!" செல்வி இயல்பாக சொல்ல, அசோக் மெலிதாக அதிர்ந்தான்.
"எங்க கம்பெனிலயா..?? நான்தான் அவ பயோ டேட்டா ஃபார்வர்ட் பண்ணவே இல்லையே..??"
"ஏன்..?? நீ இல்லைன்னா என்ன.. அவளுக்கு வேற ஆளே கெடைக்காதா..??"
செல்வி சொன்னதில் ஒரு உள்க்குத்து இருந்தது. ஆனால் அசோக் அதையெல்லாம் கவனிக்கவில்லை. நெற்றியை சுருக்கியவாறு சற்றே ஆர்வமாக கேட்டான்.
"நான் இல்லன்னா.. வேற யாரு ஃபார்வர்ட் பண்ணினது..??"
"யாரோ.. அவ கூட படிச்ச பையனாம்..!! அவன் மூலமா அப்ளிகேஷன் அனுப்பிருக்கா.. அவங்களும் இன்டர்வ்யூக்கு வர சொல்லிருக்காங்க.. கெளம்பி வந்திருக்குறா..!! இன்டர்வ்யூ போயிட்டு.. இன்னைக்கு நைட்டே கெளம்பி திரும்ப சென்னை போயிடுவா..!! போதுமா..??"
"ஹ்ம்ம்ம்.. ஒருவேளை அவளுக்கு.." அசோக் இழுத்துக்கொண்டிருக்கும்போதே, அவன் கேட்க வந்ததை செல்வி புரிந்து கொண்டாள்.
"வேலை கெடைச்சுட்டா எங்க தங்குவா..?? அதான..??"
"ம்ம்ம்ம்..!!"
"அதெல்லாம் நீ ஒன்னும் கவலைப்பட வேணாம் சாமி.. அவ வெளிலயே தங்கிக்கிறேன்னு சொல்லிட்டா..!!"
அசோக் இப்போது அமைதியானான். நெற்றியை கீறிக்கொண்டு சிலவினாடிகள் யோசித்தான். 'எப்படியும் இந்த சோத்து சட்டிக்கு நம்ம கம்பனில வேலை கெடைக்கிறதே கஷ்டம்.. அப்படியே ஒருவேளை கெடைச்சாலும்.. வெளில தங்கிக்க போறா.. எப்பயாச்சும் வீட்டுக்கு வருவா.. வந்துட்டு போறா.. வேறெந்த ப்ராப்ளமும் இவளால வர்றதுக்கு சான்ஸ் இல்ல..!!' - இந்த மாதிரி அவன் மனதில் தோன்றியதும் சற்றே நிம்மதி அடைந்தான். இருந்தாலும் மனதின் ஓரமாய் அரித்துக்கொண்டிருந்த அந்த கேள்வியை, இப்போது சற்றே நக்கலான குரலில் அண்ணியிடம் கேட்டான்.
"ஹ்ம்ம்.. அக்காவும் தங்கச்சியும் சேர்ந்து வேற எதுவும் ப்ளான் பண்ணலைல..??" அசோக்கின் நக்கலில் செல்விக்கு சுருக்கென்று கோபம் வந்தது.
"ஏண்டா.. கொழுப்பா உனக்கு..?? நான் ஏதோ அறிவில்லாம ஒருநா.. 'என் தங்கச்சியை கட்டிக்கிறியா'ன்னு கேட்டுட்டேன்.. அதுக்காக என்ன வேணா பேசுவியா நீ..??"
"ப்ச்.. இப்ப என்ன பேசிட்டேன்னு இப்டி டென்ஷனாகுறீங்க.??"
"பின்ன என்ன.. இப்போ எதுக்கு தேவை இல்லாம.. அவளையும் சேர்த்து இதுல இழுக்குற..?? எனக்குத்தான் அந்த ஐடியா இருந்தது.. அவளுக்கு உன்மேல அந்த மாதிரி ஒரு நெனைப்பே இல்ல.. போதுமா..??"
படபடவென்று பேசிய செல்வி, சட்டியை திறந்து ஒவ்வொரு இட்லியாக எடுத்து ஹாட்பாக்சுக்குள் போட்டாள். அசோக் மீது இருந்த எரிச்சலில் வாய்க்குள்ளேயே முனுமுனுத்தாள்.
"மனசுக்குள்ள பெரிய மன்மதா ராசான்னு நெனைப்பு..!!"
"என்னது..?? என்ன சொன்னீங்க..??" அசோக் தன் வலது காதை அவள் பக்கமாய் திருப்பியவாறே கேட்க,
"ஆங்..??? காபி ஆறுறதுக்குள்ள அதை குடிச்சு தொலைடா கடன்காரான்னு சொன்னேன்..!!" செல்வி இப்போது அவன் காதே வலிக்கிற அளவுக்கு சத்தமாக சொன்னாள்.
அசோக் படக்கென காதை பொத்திக்கொண்டு, அண்ணியை ஓரிரு வினாடிகள் முறைத்துப் பார்த்தான். அப்புறம் காபியை வாய் வைத்து உறிஞ்சியவாறே திரும்பி, தனது அறைக்கு நடந்தான். ந்யூஸ் பேப்பர் படித்துக்கொண்டே காபி அருந்தினான். பிறகு குளித்து முடித்து வெளியே வந்து.. ஆபீசுக்கு அவன் கிளம்பிக் கொண்டிருக்கையில்.. செல்வி அவனை அழைத்தவாறே அந்த அறைக்குள் நுழைந்தாள்.
"அசோக்கு..!!"
"ம்ம்.. என்ன அண்ணி..!!"
"நீ ஆபீஸ் போறப்போ.. அப்படியே அவளையும் பைக்ல கூட்டிட்டு போயிடுறியா..??" செல்வி இயல்பாக கேட்டாள்.
"ப்ச்.. என்ன வெளையாடுறீங்களா..?? அதுலாம் என்னால முடியாது.. ஆட்டோல போக சொல்லுங்க அவளை..!!" அசோக் வெறுப்பாக சொன்னான்.
"ஹேய்.. அவளுக்கு பெங்களூர் புதுசுடா.. தனியா போக பயப்படுறா..!! இன்னைக்கு ஒருநாள்தான.. கூட்டிட்டு போயேன்.. ப்ளீஸ்..!!"
செல்வியின் குரல் கெஞ்சலாக ஒலித்தது. அசோக் சற்று தயங்கினான். அண்ணியின் முகத்தையே அவஸ்தையாக பார்த்தான். பிறகு 'ஒருநாள்தானே..?' என்று மனதில் தோன்றவும், வேண்டா வெறுப்பாக ஒத்துக்கொண்டான்.
"சரி சரி.. கூட்டிட்டு போறேன்..!!"
"ஹ்ம்ம்.. அப்புறம் இன்னொரு விஷயம்..!!"
"என்ன..??"
"இன்டர்வ்யூக்கு வர்றால.. உன் கம்பனி பத்தி கொஞ்சம் டீட்டெயில் கேக்கனும்னு சொன்னா..!!"
"ம்ம்.. ம்ம்.. எல்லாம் பைக்ல போறப்போ கேட்டுக்கலாம்னு சொல்லுங்க..!! ரெடியாயிட்டாளா அவ..??"
"அவ அப்போவே ரெடியாயிட்டா..!! நீ என்ன.. சாப்பிடலையா..??"
"இல்ல.. டைமாச்சு.. கெளம்புறேன்.. ஆபீஸ்ல போய் சாப்பிட்டுக்குறேன்..!!"
அடுத்த ஐந்தாவது நிமிடம் அசோக்கும் செண்பகமும் வீட்டில் இருந்து கிளம்பினார்கள். கிளம்புவதற்கு முன் ராஜேஷ் அசோக்கை தனியாக அழைத்துச்சென்று கிசுகிசுப்பாக சொன்னான்.
"ஒன்னா பைக்ல போறது இருக்கட்டும் அசோக்.. ஆனா.. உங்க ரெண்டு பேருக்குள்ள.. ஒரு கேப் எப்போவும் இருக்கணும்..!! என்ன சொல்றேன்னு புரியுதா..??"
"ம்ம்.. புரியுது புரியுது.. அதுலாம் நீ சொல்லவே வேணாம்..!!" அசோக் இறுக்கமாகவே சொன்னான்.
வீட்டில் இருந்து கிளம்பிய இரண்டாவது நிமிடம், தெருமுனையில் இருக்கும் அந்த பெட்டிக்கடையில் இருவரும் நின்றிருந்தார்கள். அசோக் குபுகுபுவென புகை விட்டுக் கொண்டிருக்க, செண்பகம் அந்த புகை நாசியில் ஏறிவிடாமல் இருக்க துப்பட்டாவால் மூக்கை பொத்தியவாறு பரிதாபமாக நின்றிருந்தாள். அப்படியே அசோக்கை பார்த்து கேட்டாள்.
"நீங்க்க்.. தம்க்கக்ர்த்.. வீக்க்க்.. தெர்ப்ப்க்.."
அசோக் இப்போது உடனடியாய் டென்ஷன் ஆகிப் போனான்.
"அப்டியே அறைய போறேன் உன்னை..!! வந்ததுல இருந்து இப்படியே பேசிட்டு இருக்குற.. சைனாக்காரனுக்கு ஜல்ப்பு புடிச்ச மாதிரி..!! கையை எடுத்துட்டு பேசுடி.. செம்பு..!!" என்று எரிச்சலாக சொன்னான்.
"கையை எடுத்தா.. மூக்குல ஸ்மோக் ஏறுது மாமா..!!"
"அப்படியா..?? மூக்குல ஒரு சைலன்சர் மாட்டிட்டா சரியா போயிடும்..!!"
"என்னது.. சைலன்சரா..??"
"அடச்சை.. கொஞ்சம் தள்ளி நின்னு பேசு..!!"
"ம்ம்ம்.." சொல்லிக்கொண்டே செண்பகம் சற்று தள்ளி நின்று கொண்டாள்.
"ஹ்ம்ம்.. இப்போ சொல்லு..!! என்ன கேட்க வந்த..??"
"இல்ல.. நீங்க தம்மடிகிறது வீட்ல எல்லாருக்கும் தெரியுமான்னு கேட்டேன்..??"
"ம்ம்.. ம்ம்.. எல்லாருக்கும் தெரியும்..!! அப்பா, அம்மா, அண்ணன், அண்ணி.. இவங்க நாலு பேருக்கு மட்டும் தெரியாது.. அவங்ககிட்ட மட்டும் சொல்லிடாத..!!" திருட்டு தம் அடிக்கிறேன் என்பதையே கெத்தாக சொன்னான் அசோக்.
"ம்க்கும்.. அப்புறம் வேற யார்கிட்ட போய் நான் இதை சொல்றது..?? தம்புகிட்டயா..??" செண்பகம் சலிப்பாக சொன்னாள்.
"அதுசரி.. அண்ணிகிட்ட ஏதோ.. என் கம்பனி பத்தி கேக்கனும்னு சொன்னியாமே..??"
"ம்ம்.. ஆமாம்..!!"
"என்ன அது..??"
"அ..அது.. அது.." செண்பகம் சற்றே தயங்க,
"ம்ம்.. கேளு..!!" அசோக் அவளை தூண்டினான்.
"உ..உங்க கம்பனில.."
"ம்ம்.. எங்க கம்பனில..??"
"சாப்பாடுலாம் எப்படி..??" செண்பகம் கேட்டுவிட்டு பற்களை காட்ட, அசோக் அவளை கடுப்புடன் முறைத்தான்.
"எப்படின்னா...?? எனக்கு புரியலை..!!"
"இல்ல.. அங்க கேண்டீன் இருக்கா.. இல்ல நாமளே சாப்பாடு கொண்டு போகனுமா..??"
"ம்ம்..?? கேண்டீன் இருக்கு.. கேஃப்டீரியான்னு சொல்வாங்க..!!"
"ஓ..!! ம்ம்ம்.. நம்ம சாப்பாடு கெடைக்குமா.. இல்ல இந்த ஊர் சாப்பாடுதானா..??"
"எல்லா ஊர் சாப்பாடும் கெடைக்கும்..!! பதினஞ்சு இருபது ஸ்டால் இருக்கு..!!"
"ஹ்ம்ம்.. அப்புறம்...."
"வேறென்ன..??"
"இடியாப்பம் கெடைக்குமா அங்க..??" செண்பகம் விழிகளை விரித்து ஆர்வமாக கேட்க, அசோக் இப்போது பொறுமை இழந்தான்.
"ஏண்டி.. நீ சாஃப்ட்வேர் டெவலப் பண்ற வேலைக்கு வந்திருக்கிறியா..?? இல்ல.. சாப்ட்டு உடம்பை டெவலப் பண்ணலாம்னு வந்திருக்கியா..??"
"சாஃப்ட்வேர் வேலைக்குத்தான்.. ஏன்..??" செண்பகம் முகம் சுருங்கிப் போனவளாய் சொன்னாள்.
"கேக்குற கேள்விலாம் ஒன்னும் சரி இல்லையே..!! இன்டர்வ்யூல இந்த கேள்விலாம் கேட்பாங்கன்னு உனக்கு யார் சொன்னது..??"
"இன்டர்வ்யூக்குலாம் நல்லா ப்ரிப்பேர் ஆகிட்டேன் மாமா.. அதுலலாம் எந்த டவுட்டும் இல்ல..!!"
"இடியாப்பம் கெடைக்கலைன்னா என்ன பண்றதுன்னுதான் இன்னும் ப்ரிப்பேர் ஆகலையாக்கும்..??"
"ஹ்ம்ம்..!!" செண்பகம் அப்பாவியாக சொல்லிவிட்டு கட்டை விரல் நகத்தை பற்களால் கடித்தாள்.
"ம்ம்ம்.. இடியாப்பம்லாம் கெடைக்கும்.. போதுமா..??"
"ம்ம்ம்..!!" செண்பகத்தின் முகத்தில் இப்போது ஒரு திருப்தியும், பிரகாசமும்.
"அவ்வளவுதானா.. வேற ஏதாவது தெரிஞ்சுக்கனுமா..??" அசோக் சலிப்பாகவே கேட்டான்.
"ம்ம்ம்.. ம்ம்ம்.. ம்ம்ம்.." என்று நெற்றியை தேய்த்தவாறு கொஞ்ச நேரம் யோசித்த செண்பகம், அப்புறம்
"ஆங்.. டைமிங்லாம் எப்படி..??" என்று கேட்டாள் பட்டென.
"டைமிங்லாம் ஒன்னும் கெடயாது.. எல்லா நேரமும் கேஃப்டீரியா தெறந்திருக்கும்.. நீ நெனச்ச நேரத்துக்கு போய் கொட்டிக்கலாம்..!!"
"ஐயோ.. நான் ஆபீஸ் டைமிங் கேட்டேன் மாமா..!!"
என்று அவசரமாய் சொன்னவள், 'ஹஹா.. ஹஹா.. ஹஹா..' என டூத்பேஸ்ட் விளம்பரத்தில் வரும் மாடல் போல லூசுத்தனமாய் சிரித்தாள். அசோக் அவளையே சில வினாடிகள் முறைப்பாக பார்த்தான். அப்புறம் தீர்ந்து போன சிகரெட்டை கீழே போட்டு ஷூ காலால் நசுக்கியவாறே..
"கெளம்பலாமா..??" என்றான் இறுக்கமான குரலில்.
இருவரும் மீண்டும் பைக்கில் கிளம்பினார்கள். மிதமான வேகத்தில் அசோக் பைக்கை செலுத்த, செண்பகம் ஒரு கையால் அவனுடைய தோளை பிடித்துக்கொண்டு சாலையோர கடைகளை வேடிக்கை பார்த்துக்கொண்டே வந்தாள். வண்டி சில்க்போர்டை தாண்டி வலது பக்கம் திரும்பிய போது, அசோக்கின் புஜத்தை சொறிந்தாள்.
"என்ன..??" அசோக் பைக்கை செலுத்திக்கொண்டே கேட்டான்.
"ரெஸ்யூம் பிரிண்ட் அவுட் எடுக்கணும் மாமா.. ஏதாவது கடைல நிறுத்துங்க..!!"
அடுத்த ஐந்தாவது நிமிடம்.. இருவரும் அந்த புக் ஷாப்பில் இருந்தார்கள்..!! அசோக் புத்தகங்களை எல்லாம் வேடிக்கை பார்த்தவாறு நின்றிருக்க.. செண்பகம் எடுத்த பிரிண்ட் அவுட்டையும், ஜெராக்சையும் ஃபைலுக்குள் திணித்துக் கொண்டிருந்தாள்..!!
"முடிஞ்சதா..??" என்று கேட்ட அசோக்கிடம்,
"இவங்களுக்கு ஒரு ட்வென்டி ஃபைவ் ரூபீஸ் குடுங்க மாமா..!!"
"ஏன்.. உன்கிட்ட இல்லையா..??"
"எங்கிட்ட சேன்ச் இல்ல மாமா.. தவுசண்ட் ரூபீசா இருக்கு..!!"
அசோக் வேண்டா வெறுப்பாக பர்ஸ் திறந்து பணம் எடுத்துக் கொடுத்தான். 'ஃபைவ் ரூபீஸ் சேன்ச் இல்லா..' என்ற கடைக்காரனிடம், 'பரவால.. சாக்லேட் எடுத்துக்குறேன்..!!' என்றுவிட்டு பாட்டில் திறந்து சாக்லேட் அள்ளிக்கொண்டாள். அதை அப்படியே தனது பேக்கில் போட்டு.. ஜிப்பை இழுத்து மூடியவள்.. தன்னையே முறைத்துக்கொண்டிருந்த அசோக்கிடம் திரும்பி.. 'கெளம்பலாமா மாமா..??' என்றாள் புன்னகையுடன்.
மீண்டும் பைக் பயணம்..!! வண்டி எலக்ட்ரானிக் சிட்டி நோக்கி பறந்துகொண்டிருந்தது. செண்பகம் ஏதேதோ கேள்விகள் கேட்டுக்கொண்டே வர, அசோக் அசுவாரசியமாய் பதில் சொல்லிக்கொண்டே வந்தான். ஆபீஸ் வளாகத்தை நெருங்கும்போது செண்பகம் மீண்டும் அசோக்கின் புஜத்தை சொறிந்தாள்.
"என்னடி...??" இப்போது அசோக்கின் குரல் சற்றே எரிச்சலாக ஒலித்தது.
"ஒரு சின்ன ரெக்வஸ்ட் மாமா..!!"
"என்ன..??"
"அங்க வந்து.. மத்தவங்க முன்னாடி.. என்னை செம்புன்னு கூப்பிடாதீங்க.. ப்ளீஸ்..!! செண்பகம்னு கூப்பிடுங்க..!!"
அவள் கெஞ்சலாக சொல்ல, அசோக் இப்போது அவசரமாய் ப்ரேக் அடித்து வண்டியை நிறுத்தினான். ஹெல்மட் கண்ணாடியை மேலே ஏற்றிவிட்டு, அவளை திரும்பி பார்த்தான். செண்பகம் எதுவும் புரியாமல் திருதிருவென விழித்தாள்.
"என்ன மாமா..??" என்றாள் குழப்பமாய்.
"எறங்குடி..!!" அசோக்கின் குரலில் ஒருவித எரிச்சல்.
"எதுக்கு..??"
"எறங்குன்னு சொல்றேன்ல.. எறங்கு..!!"
அசோக் கத்தவும் செண்பகம் பதறிப்போய் பைக்கில் இருந்து கீழே இறங்கிக் கொண்டாள். சிறிது தூரத்தில் தெரிந்த அவர்களது ஆபீஸ் வளாகத்தை நோக்கி சுட்டு விரலை நீட்டி அசோக் சொன்னான்.
"அந்தா தெரியுது பாரு.. அதுதான் எங்க ஆபீஸ்..!! இங்க இருந்து நடந்தே போ.. கேட்ல செக்யூரிட்டி இருப்பாங்க.. உன் இன்டர்வ்யூ கால் லெட்டர் காட்டினா.. அவங்களே உன்னை கைட் பண்ணுவாங்க.. சரியா..?? 'உனக்கு தெரிஞ்சவங்க யாராவது இங்க வொர்க் பண்றாங்களா'ன்னு யாராவது உன்னை கேட்டாங்கன்னு வச்சுக்கோ.. தப்பி தவறி கூட என் பேரை சொல்லிடாத.. புரியுதா..??"
"ஏன்..??" செண்பகம் நெற்றியை சுருக்கியவாறு கேட்டாள்.
"ப்ச்.. கேள்விலாம் கேட்க கூடாது..!! சொல்லாத.. அவ்வளவுதான்..!!" அசோக் முறைப்பாக சொன்னான்.
"சரி.. சொல்லலை..!!"
"ஹ்ம்ம்.. குட்..!! நான் கெளம்பட்டுமா..??" கேட்டுவிட்டு அசோக் கிக்கரை உதைக்க போக,
"அப்போ நெக்ஸ்ட் எப்போ மீட் பண்றது..??" செண்பகம் அவசரமாய் கேட்டாள்.
"இன்டர்வ்யூ முடிஞ்சதும்.. இதே எடத்துல வந்து நின்னுட்டு கால் பண்ணு..!!"
"ஹையோ.. இன்டர்வ்யூ மூணு நாலு ரவுண்ட் இருக்கே.. ஈவினிங் ஆயிடுமே..!!"
"ஆகட்டும்.. என்ன இப்போ..??"
"இல்ல.. மதிய சாப்பாட்டுக்கு.. பணம்..!!"
"உன்கிட்ட இல்லையா..??"
"தவுசண்ட் ரூபீசா இருக்கு மாமா..!!"
செண்பகம் அப்பாவியாய் சொல்லிவிட்டு வழக்கம்போல கட்டை விரலை கடித்தாள். அசோக் அவளையே ஓரிரு வினாடிகள் எரிச்சலாய் பார்த்துவிட்டு, பாக்கெட் தடவி ஒரு ஐம்பது ரூபாயை எடுத்து அவளிடம் நீட்டினான். வெறுப்புடனே கிக்கரை உதைத்து, ஆக்சிலரேட்டரை முறுக்கினான்.
"ஹாய் செம்பு..!!" என்றான் ஆச்சரியமும் தூக்க கலக்கமும் கலந்த மாதிரியான குரலிலேயே. சிறு வயதிலிருந்தே அவன் அவளை செம்பு என்று அழைப்பதுதான் வழக்கம்.
"ஹாய் மாமா..!!" என்றாள் அவளும் இட்லியை விழுங்கி விட்டு. சிறு வயதிலிருந்தே அவள் அவனை மாமா என்று அழைப்பதுதான் வழக்கம்.
"எப்போ வந்த..??"
"இப்ப்ப்.. ஜஸ்ஸ்.. ஒப்ப்.. அக்க்க்க்..." அதற்குள் அவள் அடுத்த இட்லியை வாயில் தள்ளியிருக்க, அவளிடமிருந்து வார்த்தைகள் இப்போது தெளிவில்லாமல் வெளியே வந்து விழுந்தன.
"என்ன.. சொல்லாமக் கொள்ளாம திடீர்னு வந்திருக்குற..??"
அசோக்கின் இந்தக் கேள்விக்காவது தெளிவாக பதில் சொல்லிவிடவேண்டும் என்று, செண்பகம் வாயில் இருந்த இட்லியை அவசர அவசரமாய் அரைத்து விழுங்கினாள். அவள் படுகிற அவஸ்தையை காண சகியாத அசோக்,
"சரி சரி.. நீ சாப்பிடு.. அப்புறம் பேசிக்கலாம்..!!"
என்று சலிப்பாக சொல்லிவிட்டு, மெல்ல நடந்து சென்று கிச்சனுக்குள் நுழைந்தான். உள்ளே.. சட்டியின் மூடியை திறந்து இட்லியின் பதம் பார்த்துக் கொண்டிருந்தாள் செல்வி. இவன் வழக்கமாக விழிக்கும் நேரமும், விழித்ததும் நேராக கிச்சனுக்குத்தான் காபிக்கு வருவான் என்பதும் அவளுக்கு முன்பே தெரியும். அதனால் காபி கலந்து தயாராக எடுத்து வைத்திருந்தாள். அசோக் உள்ளே நுழைந்ததுமே எந்த உணர்ச்சியும் காட்டாமல், காபி டம்ளர் எடுத்து அவனிடம் நீட்டினாள். டம்ளரை கையில் வாங்கிய அசோக், காபியை உறிஞ்சாமல், கண்களை மட்டும் ஒரு ஓரத்திற்கு தள்ளி அண்ணியை குறுகுறுவென பார்த்தபடியே, கம்மலான குரலில் கேட்டான்.
"எப்போ வந்தா..??"
"இப்போத்தான்.. ஒரு மணி நேரம் ஆச்சு..!!" செல்வி வேலை கவனத்துடனே பதிலளித்தாள்.
"ஓஹோ..!!"
சொன்ன அசோக் இப்போது தலையை மெல்ல நீட்டி வெளியே எட்டிப்பார்த்தான். இட்லியை சட்னியில் தொட்டு லபக்கென்று தொண்டைக்குள் போடுகிற செண்பகத்தின் மீது எரிச்சலாய் ஒரு பார்வையை வீசினான். இவர்கள் இங்கிருந்து பேசுவது அவளுக்கு கேட்காது என்ற நம்பிக்கையுடன், இந்தப்பக்கம் திரும்பி சற்றே கிண்டலான குரலில் செல்வியிடம் சொன்னான்.
"வந்ததும் வராததுமா.. தட்டு நெறைய இட்லியை போட்டு.. கவக்கு கவக்குன்னு கவ்விக்கிட்டு இருக்குறா..!! உடம்பை கொறைக்கிற மாதிரி ஐடியாவே இல்லையா உங்க தங்கச்சிக்கு..??" அசோக் கேட்க, செல்வி அவனை ஏறிட்டு முறைத்தாள்.
"உன் கொள்ளிக்கண்ணை கொண்டு போய் வேறெங்கயாச்சும் வை.. என் தங்கச்சி மேல வைக்காத..!!"
"ஹாஹா.. இல்லன்னாலும்..!! ம்ம்ம்ம்.. என்ன விஷயமா வந்திருக்குறா..??"
"இன்டர்வ்யூக்கு..!!"
"ஓ..!! எந்த கம்பெனில..??"
"உங்க கம்பெனிலதான்..!!" செல்வி இயல்பாக சொல்ல, அசோக் மெலிதாக அதிர்ந்தான்.
"எங்க கம்பெனிலயா..?? நான்தான் அவ பயோ டேட்டா ஃபார்வர்ட் பண்ணவே இல்லையே..??"
"ஏன்..?? நீ இல்லைன்னா என்ன.. அவளுக்கு வேற ஆளே கெடைக்காதா..??"
செல்வி சொன்னதில் ஒரு உள்க்குத்து இருந்தது. ஆனால் அசோக் அதையெல்லாம் கவனிக்கவில்லை. நெற்றியை சுருக்கியவாறு சற்றே ஆர்வமாக கேட்டான்.
"நான் இல்லன்னா.. வேற யாரு ஃபார்வர்ட் பண்ணினது..??"
"யாரோ.. அவ கூட படிச்ச பையனாம்..!! அவன் மூலமா அப்ளிகேஷன் அனுப்பிருக்கா.. அவங்களும் இன்டர்வ்யூக்கு வர சொல்லிருக்காங்க.. கெளம்பி வந்திருக்குறா..!! இன்டர்வ்யூ போயிட்டு.. இன்னைக்கு நைட்டே கெளம்பி திரும்ப சென்னை போயிடுவா..!! போதுமா..??"
"ஹ்ம்ம்ம்.. ஒருவேளை அவளுக்கு.." அசோக் இழுத்துக்கொண்டிருக்கும்போதே, அவன் கேட்க வந்ததை செல்வி புரிந்து கொண்டாள்.
"வேலை கெடைச்சுட்டா எங்க தங்குவா..?? அதான..??"
"ம்ம்ம்ம்..!!"
"அதெல்லாம் நீ ஒன்னும் கவலைப்பட வேணாம் சாமி.. அவ வெளிலயே தங்கிக்கிறேன்னு சொல்லிட்டா..!!"
அசோக் இப்போது அமைதியானான். நெற்றியை கீறிக்கொண்டு சிலவினாடிகள் யோசித்தான். 'எப்படியும் இந்த சோத்து சட்டிக்கு நம்ம கம்பனில வேலை கெடைக்கிறதே கஷ்டம்.. அப்படியே ஒருவேளை கெடைச்சாலும்.. வெளில தங்கிக்க போறா.. எப்பயாச்சும் வீட்டுக்கு வருவா.. வந்துட்டு போறா.. வேறெந்த ப்ராப்ளமும் இவளால வர்றதுக்கு சான்ஸ் இல்ல..!!' - இந்த மாதிரி அவன் மனதில் தோன்றியதும் சற்றே நிம்மதி அடைந்தான். இருந்தாலும் மனதின் ஓரமாய் அரித்துக்கொண்டிருந்த அந்த கேள்வியை, இப்போது சற்றே நக்கலான குரலில் அண்ணியிடம் கேட்டான்.
"ஹ்ம்ம்.. அக்காவும் தங்கச்சியும் சேர்ந்து வேற எதுவும் ப்ளான் பண்ணலைல..??" அசோக்கின் நக்கலில் செல்விக்கு சுருக்கென்று கோபம் வந்தது.
"ஏண்டா.. கொழுப்பா உனக்கு..?? நான் ஏதோ அறிவில்லாம ஒருநா.. 'என் தங்கச்சியை கட்டிக்கிறியா'ன்னு கேட்டுட்டேன்.. அதுக்காக என்ன வேணா பேசுவியா நீ..??"
"ப்ச்.. இப்ப என்ன பேசிட்டேன்னு இப்டி டென்ஷனாகுறீங்க.??"
"பின்ன என்ன.. இப்போ எதுக்கு தேவை இல்லாம.. அவளையும் சேர்த்து இதுல இழுக்குற..?? எனக்குத்தான் அந்த ஐடியா இருந்தது.. அவளுக்கு உன்மேல அந்த மாதிரி ஒரு நெனைப்பே இல்ல.. போதுமா..??"
படபடவென்று பேசிய செல்வி, சட்டியை திறந்து ஒவ்வொரு இட்லியாக எடுத்து ஹாட்பாக்சுக்குள் போட்டாள். அசோக் மீது இருந்த எரிச்சலில் வாய்க்குள்ளேயே முனுமுனுத்தாள்.
"மனசுக்குள்ள பெரிய மன்மதா ராசான்னு நெனைப்பு..!!"
"என்னது..?? என்ன சொன்னீங்க..??" அசோக் தன் வலது காதை அவள் பக்கமாய் திருப்பியவாறே கேட்க,
"ஆங்..??? காபி ஆறுறதுக்குள்ள அதை குடிச்சு தொலைடா கடன்காரான்னு சொன்னேன்..!!" செல்வி இப்போது அவன் காதே வலிக்கிற அளவுக்கு சத்தமாக சொன்னாள்.
அசோக் படக்கென காதை பொத்திக்கொண்டு, அண்ணியை ஓரிரு வினாடிகள் முறைத்துப் பார்த்தான். அப்புறம் காபியை வாய் வைத்து உறிஞ்சியவாறே திரும்பி, தனது அறைக்கு நடந்தான். ந்யூஸ் பேப்பர் படித்துக்கொண்டே காபி அருந்தினான். பிறகு குளித்து முடித்து வெளியே வந்து.. ஆபீசுக்கு அவன் கிளம்பிக் கொண்டிருக்கையில்.. செல்வி அவனை அழைத்தவாறே அந்த அறைக்குள் நுழைந்தாள்.
"அசோக்கு..!!"
"ம்ம்.. என்ன அண்ணி..!!"
"நீ ஆபீஸ் போறப்போ.. அப்படியே அவளையும் பைக்ல கூட்டிட்டு போயிடுறியா..??" செல்வி இயல்பாக கேட்டாள்.
"ப்ச்.. என்ன வெளையாடுறீங்களா..?? அதுலாம் என்னால முடியாது.. ஆட்டோல போக சொல்லுங்க அவளை..!!" அசோக் வெறுப்பாக சொன்னான்.
"ஹேய்.. அவளுக்கு பெங்களூர் புதுசுடா.. தனியா போக பயப்படுறா..!! இன்னைக்கு ஒருநாள்தான.. கூட்டிட்டு போயேன்.. ப்ளீஸ்..!!"
செல்வியின் குரல் கெஞ்சலாக ஒலித்தது. அசோக் சற்று தயங்கினான். அண்ணியின் முகத்தையே அவஸ்தையாக பார்த்தான். பிறகு 'ஒருநாள்தானே..?' என்று மனதில் தோன்றவும், வேண்டா வெறுப்பாக ஒத்துக்கொண்டான்.
"சரி சரி.. கூட்டிட்டு போறேன்..!!"
"ஹ்ம்ம்.. அப்புறம் இன்னொரு விஷயம்..!!"
"என்ன..??"
"இன்டர்வ்யூக்கு வர்றால.. உன் கம்பனி பத்தி கொஞ்சம் டீட்டெயில் கேக்கனும்னு சொன்னா..!!"
"ம்ம்.. ம்ம்.. எல்லாம் பைக்ல போறப்போ கேட்டுக்கலாம்னு சொல்லுங்க..!! ரெடியாயிட்டாளா அவ..??"
"அவ அப்போவே ரெடியாயிட்டா..!! நீ என்ன.. சாப்பிடலையா..??"
"இல்ல.. டைமாச்சு.. கெளம்புறேன்.. ஆபீஸ்ல போய் சாப்பிட்டுக்குறேன்..!!"
அடுத்த ஐந்தாவது நிமிடம் அசோக்கும் செண்பகமும் வீட்டில் இருந்து கிளம்பினார்கள். கிளம்புவதற்கு முன் ராஜேஷ் அசோக்கை தனியாக அழைத்துச்சென்று கிசுகிசுப்பாக சொன்னான்.
"ஒன்னா பைக்ல போறது இருக்கட்டும் அசோக்.. ஆனா.. உங்க ரெண்டு பேருக்குள்ள.. ஒரு கேப் எப்போவும் இருக்கணும்..!! என்ன சொல்றேன்னு புரியுதா..??"
"ம்ம்.. புரியுது புரியுது.. அதுலாம் நீ சொல்லவே வேணாம்..!!" அசோக் இறுக்கமாகவே சொன்னான்.
வீட்டில் இருந்து கிளம்பிய இரண்டாவது நிமிடம், தெருமுனையில் இருக்கும் அந்த பெட்டிக்கடையில் இருவரும் நின்றிருந்தார்கள். அசோக் குபுகுபுவென புகை விட்டுக் கொண்டிருக்க, செண்பகம் அந்த புகை நாசியில் ஏறிவிடாமல் இருக்க துப்பட்டாவால் மூக்கை பொத்தியவாறு பரிதாபமாக நின்றிருந்தாள். அப்படியே அசோக்கை பார்த்து கேட்டாள்.
"நீங்க்க்.. தம்க்கக்ர்த்.. வீக்க்க்.. தெர்ப்ப்க்.."
அசோக் இப்போது உடனடியாய் டென்ஷன் ஆகிப் போனான்.
"அப்டியே அறைய போறேன் உன்னை..!! வந்ததுல இருந்து இப்படியே பேசிட்டு இருக்குற.. சைனாக்காரனுக்கு ஜல்ப்பு புடிச்ச மாதிரி..!! கையை எடுத்துட்டு பேசுடி.. செம்பு..!!" என்று எரிச்சலாக சொன்னான்.
"கையை எடுத்தா.. மூக்குல ஸ்மோக் ஏறுது மாமா..!!"
"அப்படியா..?? மூக்குல ஒரு சைலன்சர் மாட்டிட்டா சரியா போயிடும்..!!"
"என்னது.. சைலன்சரா..??"
"அடச்சை.. கொஞ்சம் தள்ளி நின்னு பேசு..!!"
"ம்ம்ம்.." சொல்லிக்கொண்டே செண்பகம் சற்று தள்ளி நின்று கொண்டாள்.
"ஹ்ம்ம்.. இப்போ சொல்லு..!! என்ன கேட்க வந்த..??"
"இல்ல.. நீங்க தம்மடிகிறது வீட்ல எல்லாருக்கும் தெரியுமான்னு கேட்டேன்..??"
"ம்ம்.. ம்ம்.. எல்லாருக்கும் தெரியும்..!! அப்பா, அம்மா, அண்ணன், அண்ணி.. இவங்க நாலு பேருக்கு மட்டும் தெரியாது.. அவங்ககிட்ட மட்டும் சொல்லிடாத..!!" திருட்டு தம் அடிக்கிறேன் என்பதையே கெத்தாக சொன்னான் அசோக்.
"ம்க்கும்.. அப்புறம் வேற யார்கிட்ட போய் நான் இதை சொல்றது..?? தம்புகிட்டயா..??" செண்பகம் சலிப்பாக சொன்னாள்.
"அதுசரி.. அண்ணிகிட்ட ஏதோ.. என் கம்பனி பத்தி கேக்கனும்னு சொன்னியாமே..??"
"ம்ம்.. ஆமாம்..!!"
"என்ன அது..??"
"அ..அது.. அது.." செண்பகம் சற்றே தயங்க,
"ம்ம்.. கேளு..!!" அசோக் அவளை தூண்டினான்.
"உ..உங்க கம்பனில.."
"ம்ம்.. எங்க கம்பனில..??"
"சாப்பாடுலாம் எப்படி..??" செண்பகம் கேட்டுவிட்டு பற்களை காட்ட, அசோக் அவளை கடுப்புடன் முறைத்தான்.
"எப்படின்னா...?? எனக்கு புரியலை..!!"
"இல்ல.. அங்க கேண்டீன் இருக்கா.. இல்ல நாமளே சாப்பாடு கொண்டு போகனுமா..??"
"ம்ம்..?? கேண்டீன் இருக்கு.. கேஃப்டீரியான்னு சொல்வாங்க..!!"
"ஓ..!! ம்ம்ம்.. நம்ம சாப்பாடு கெடைக்குமா.. இல்ல இந்த ஊர் சாப்பாடுதானா..??"
"எல்லா ஊர் சாப்பாடும் கெடைக்கும்..!! பதினஞ்சு இருபது ஸ்டால் இருக்கு..!!"
"ஹ்ம்ம்.. அப்புறம்...."
"வேறென்ன..??"
"இடியாப்பம் கெடைக்குமா அங்க..??" செண்பகம் விழிகளை விரித்து ஆர்வமாக கேட்க, அசோக் இப்போது பொறுமை இழந்தான்.
"ஏண்டி.. நீ சாஃப்ட்வேர் டெவலப் பண்ற வேலைக்கு வந்திருக்கிறியா..?? இல்ல.. சாப்ட்டு உடம்பை டெவலப் பண்ணலாம்னு வந்திருக்கியா..??"
"சாஃப்ட்வேர் வேலைக்குத்தான்.. ஏன்..??" செண்பகம் முகம் சுருங்கிப் போனவளாய் சொன்னாள்.
"கேக்குற கேள்விலாம் ஒன்னும் சரி இல்லையே..!! இன்டர்வ்யூல இந்த கேள்விலாம் கேட்பாங்கன்னு உனக்கு யார் சொன்னது..??"
"இன்டர்வ்யூக்குலாம் நல்லா ப்ரிப்பேர் ஆகிட்டேன் மாமா.. அதுலலாம் எந்த டவுட்டும் இல்ல..!!"
"இடியாப்பம் கெடைக்கலைன்னா என்ன பண்றதுன்னுதான் இன்னும் ப்ரிப்பேர் ஆகலையாக்கும்..??"
"ஹ்ம்ம்..!!" செண்பகம் அப்பாவியாக சொல்லிவிட்டு கட்டை விரல் நகத்தை பற்களால் கடித்தாள்.
"ம்ம்ம்.. இடியாப்பம்லாம் கெடைக்கும்.. போதுமா..??"
"ம்ம்ம்..!!" செண்பகத்தின் முகத்தில் இப்போது ஒரு திருப்தியும், பிரகாசமும்.
"அவ்வளவுதானா.. வேற ஏதாவது தெரிஞ்சுக்கனுமா..??" அசோக் சலிப்பாகவே கேட்டான்.
"ம்ம்ம்.. ம்ம்ம்.. ம்ம்ம்.." என்று நெற்றியை தேய்த்தவாறு கொஞ்ச நேரம் யோசித்த செண்பகம், அப்புறம்
"ஆங்.. டைமிங்லாம் எப்படி..??" என்று கேட்டாள் பட்டென.
"டைமிங்லாம் ஒன்னும் கெடயாது.. எல்லா நேரமும் கேஃப்டீரியா தெறந்திருக்கும்.. நீ நெனச்ச நேரத்துக்கு போய் கொட்டிக்கலாம்..!!"
"ஐயோ.. நான் ஆபீஸ் டைமிங் கேட்டேன் மாமா..!!"
என்று அவசரமாய் சொன்னவள், 'ஹஹா.. ஹஹா.. ஹஹா..' என டூத்பேஸ்ட் விளம்பரத்தில் வரும் மாடல் போல லூசுத்தனமாய் சிரித்தாள். அசோக் அவளையே சில வினாடிகள் முறைப்பாக பார்த்தான். அப்புறம் தீர்ந்து போன சிகரெட்டை கீழே போட்டு ஷூ காலால் நசுக்கியவாறே..
"கெளம்பலாமா..??" என்றான் இறுக்கமான குரலில்.
இருவரும் மீண்டும் பைக்கில் கிளம்பினார்கள். மிதமான வேகத்தில் அசோக் பைக்கை செலுத்த, செண்பகம் ஒரு கையால் அவனுடைய தோளை பிடித்துக்கொண்டு சாலையோர கடைகளை வேடிக்கை பார்த்துக்கொண்டே வந்தாள். வண்டி சில்க்போர்டை தாண்டி வலது பக்கம் திரும்பிய போது, அசோக்கின் புஜத்தை சொறிந்தாள்.
"என்ன..??" அசோக் பைக்கை செலுத்திக்கொண்டே கேட்டான்.
"ரெஸ்யூம் பிரிண்ட் அவுட் எடுக்கணும் மாமா.. ஏதாவது கடைல நிறுத்துங்க..!!"
அடுத்த ஐந்தாவது நிமிடம்.. இருவரும் அந்த புக் ஷாப்பில் இருந்தார்கள்..!! அசோக் புத்தகங்களை எல்லாம் வேடிக்கை பார்த்தவாறு நின்றிருக்க.. செண்பகம் எடுத்த பிரிண்ட் அவுட்டையும், ஜெராக்சையும் ஃபைலுக்குள் திணித்துக் கொண்டிருந்தாள்..!!
"முடிஞ்சதா..??" என்று கேட்ட அசோக்கிடம்,
"இவங்களுக்கு ஒரு ட்வென்டி ஃபைவ் ரூபீஸ் குடுங்க மாமா..!!"
"ஏன்.. உன்கிட்ட இல்லையா..??"
"எங்கிட்ட சேன்ச் இல்ல மாமா.. தவுசண்ட் ரூபீசா இருக்கு..!!"
அசோக் வேண்டா வெறுப்பாக பர்ஸ் திறந்து பணம் எடுத்துக் கொடுத்தான். 'ஃபைவ் ரூபீஸ் சேன்ச் இல்லா..' என்ற கடைக்காரனிடம், 'பரவால.. சாக்லேட் எடுத்துக்குறேன்..!!' என்றுவிட்டு பாட்டில் திறந்து சாக்லேட் அள்ளிக்கொண்டாள். அதை அப்படியே தனது பேக்கில் போட்டு.. ஜிப்பை இழுத்து மூடியவள்.. தன்னையே முறைத்துக்கொண்டிருந்த அசோக்கிடம் திரும்பி.. 'கெளம்பலாமா மாமா..??' என்றாள் புன்னகையுடன்.
மீண்டும் பைக் பயணம்..!! வண்டி எலக்ட்ரானிக் சிட்டி நோக்கி பறந்துகொண்டிருந்தது. செண்பகம் ஏதேதோ கேள்விகள் கேட்டுக்கொண்டே வர, அசோக் அசுவாரசியமாய் பதில் சொல்லிக்கொண்டே வந்தான். ஆபீஸ் வளாகத்தை நெருங்கும்போது செண்பகம் மீண்டும் அசோக்கின் புஜத்தை சொறிந்தாள்.
"என்னடி...??" இப்போது அசோக்கின் குரல் சற்றே எரிச்சலாக ஒலித்தது.
"ஒரு சின்ன ரெக்வஸ்ட் மாமா..!!"
"என்ன..??"
"அங்க வந்து.. மத்தவங்க முன்னாடி.. என்னை செம்புன்னு கூப்பிடாதீங்க.. ப்ளீஸ்..!! செண்பகம்னு கூப்பிடுங்க..!!"
அவள் கெஞ்சலாக சொல்ல, அசோக் இப்போது அவசரமாய் ப்ரேக் அடித்து வண்டியை நிறுத்தினான். ஹெல்மட் கண்ணாடியை மேலே ஏற்றிவிட்டு, அவளை திரும்பி பார்த்தான். செண்பகம் எதுவும் புரியாமல் திருதிருவென விழித்தாள்.
"என்ன மாமா..??" என்றாள் குழப்பமாய்.
"எறங்குடி..!!" அசோக்கின் குரலில் ஒருவித எரிச்சல்.
"எதுக்கு..??"
"எறங்குன்னு சொல்றேன்ல.. எறங்கு..!!"
அசோக் கத்தவும் செண்பகம் பதறிப்போய் பைக்கில் இருந்து கீழே இறங்கிக் கொண்டாள். சிறிது தூரத்தில் தெரிந்த அவர்களது ஆபீஸ் வளாகத்தை நோக்கி சுட்டு விரலை நீட்டி அசோக் சொன்னான்.
"அந்தா தெரியுது பாரு.. அதுதான் எங்க ஆபீஸ்..!! இங்க இருந்து நடந்தே போ.. கேட்ல செக்யூரிட்டி இருப்பாங்க.. உன் இன்டர்வ்யூ கால் லெட்டர் காட்டினா.. அவங்களே உன்னை கைட் பண்ணுவாங்க.. சரியா..?? 'உனக்கு தெரிஞ்சவங்க யாராவது இங்க வொர்க் பண்றாங்களா'ன்னு யாராவது உன்னை கேட்டாங்கன்னு வச்சுக்கோ.. தப்பி தவறி கூட என் பேரை சொல்லிடாத.. புரியுதா..??"
"ஏன்..??" செண்பகம் நெற்றியை சுருக்கியவாறு கேட்டாள்.
"ப்ச்.. கேள்விலாம் கேட்க கூடாது..!! சொல்லாத.. அவ்வளவுதான்..!!" அசோக் முறைப்பாக சொன்னான்.
"சரி.. சொல்லலை..!!"
"ஹ்ம்ம்.. குட்..!! நான் கெளம்பட்டுமா..??" கேட்டுவிட்டு அசோக் கிக்கரை உதைக்க போக,
"அப்போ நெக்ஸ்ட் எப்போ மீட் பண்றது..??" செண்பகம் அவசரமாய் கேட்டாள்.
"இன்டர்வ்யூ முடிஞ்சதும்.. இதே எடத்துல வந்து நின்னுட்டு கால் பண்ணு..!!"
"ஹையோ.. இன்டர்வ்யூ மூணு நாலு ரவுண்ட் இருக்கே.. ஈவினிங் ஆயிடுமே..!!"
"ஆகட்டும்.. என்ன இப்போ..??"
"இல்ல.. மதிய சாப்பாட்டுக்கு.. பணம்..!!"
"உன்கிட்ட இல்லையா..??"
"தவுசண்ட் ரூபீசா இருக்கு மாமா..!!"
செண்பகம் அப்பாவியாய் சொல்லிவிட்டு வழக்கம்போல கட்டை விரலை கடித்தாள். அசோக் அவளையே ஓரிரு வினாடிகள் எரிச்சலாய் பார்த்துவிட்டு, பாக்கெட் தடவி ஒரு ஐம்பது ரூபாயை எடுத்து அவளிடம் நீட்டினான். வெறுப்புடனே கிக்கரை உதைத்து, ஆக்சிலரேட்டரை முறுக்கினான்.
No comments:
Post a Comment