Thursday, May 29, 2014

உன்னருகே நானிருந்தால் - அத்தியாயம் 2



அதுகபுரம் தினமும் நானும் அவளும் அந்த தெருவுல இருந்த மத்த பசங்களோட சேந்து iceboy, busciness,chess, carrom board, video gamesnu எல்லாம் விளையாடுவோம் .. தீபாவளி பொங்கல்னு எல்லா பண்டிகையும் சேர்ந்தே கொண்டாடுவோம் .. அது வரைக்கும் அவ மேல எனக்கு எந்த ஈர்ப்பும் இல்ல .. நாட்கள் நகர்ந்தன நா 9 தகு வந்தேன் இப்ப நறைய தமிழ் படங்கள் பார்த்து என்னோட general knowledge ரொம்பவே வளந்துடுச்சு .. என்கூட ஸ்சூல படிக்கிற பசங்கல்லாம் லவ் பண்ண ஆரம்பிச்சாங்க .. சினிமா tv schoolnu எங்க பாத்தாலும் காதல் .. Classla எவன்லாம் லவ் பண்றானோ அவன எல்லாரும் கெத்தா பாத்தாங்க . என்னோட friendunga நீ யார லவ் பண்றனு என்ன கேட்பானுங்க .. லவ் பண்ணலேன்னு சொன்னா மதிக்க மாட்டாங்கனு நானும் லவ் பண்றேன்னு சொன்னேன் .. யார பண்றனு கேட்டானுங்க ? வீடு பக்கதுல ஒரு பொண்ணுன்னு சொன்னேன் ... எனக்கும் mathskum ரொம்ப தூரம் . எந்த maths examlayum 10 மார்க்குக்கு மேல வாங்க மாட்டேன் .அப்படி தப்பி தவறி 10 மார்க்கு மேல வாங்குனான அதுக்கு காரணம் நிச்சயமா எனக்கு முன்னாடி உட்காந்து exam எழுதுற என்னோட friendaaladhan.ஒரு முறை maths சொல்லி குடுக்க என்னோட friendu ஏன் வீட்டுக்கு வந்திருந்தான் .அப்ப ப்ரியா என்னோட வீட்டுக்கு எங்க அம்மாகிட டம்ளர்ல தயிர் வாங்க வந்தா .நானும் என்னோட friendum படிச்சிட்டு இருந்தத பாத்துட்டு . கலகுற சந்துரு இந்த வாட்டி mathsla சென்டம்தான் போலன்னு நக்கலா சிரிசிகிடே சொன்னா .நீ மூடிட்டு போடின்னு சொல்லிடு ரூம் கதவ சாதிடேன் .. என்னோட friendu உன்னோட ஆளு செம அழகா இருக்காடா பேரேன்னணு கேட்டான் ?.. அவன் சொன்னதுக்கு இல்லன்னு சொன்னா யார லவ் பண்ற காட்டுன்னு சொல்லுவான் அதுக்கு இவளையே லவ் பண்றேன்னு நம்ப வச்சிடலாம்னு நெனச்சு ப்ரியான்னு சொன்னேன் .. அடுத்தநாள் ஸ்கூலுக்கு போனா எல்லாரும் என்ன ப்ரியான்னு கூப்டு கிண்டல் பண்ண ஆரம்பிச்சுடானுங்க .. முதல கடுப்பா இருந்தாலும் அப்பறம் அது ரொம்ப சந்தோஷமா இருந்துச்சு .. பொதுவா இந்த லவ் பண்றவங்கள கலாய்ச்சா கோபம் வர மாதிரி நடிபானுங்க ஆனா உண்மையா உள்ள அவனுங்களுக்கு செம சந்தோஷமா இருக்கும் .. அதுகபுரம் எனக்கு பிரியா மேல ஒரு ஈர்ப்பு வந்துச்சு ..



 
எங்க வீட்டு bed room ஜன்னல்ல இருந்து பாத்தா ப்ரியா வீடோட ஹால் தெரியும் .. அடிகடி அவங்க வீடு ஹால்ல அவ இருகாலானு பாப்பேன் .. நாளுக்கு நாள் அவ எனக்கு ரொம்ப அழகா தெரிஞ்சா .. முன்னாடி மாதிரி அவ கூட என்னால சகஜமா பேச முடியல .. அவல தூரத்துல இருந்து அவளுக்கு தெரியாமையே அவல பாத்து கிட்டே இருப்பேன் .. சாயந்திரம் எப்பவும் எங்க ரோட்ல shuttle cork விளையாடுவோம் .. அவதான் எப்பவும் எங்க வீட்டுக்கு வந்து விளையாட கூபிடுவா .. நானும் வேண்டா வெறுப்பா போவேன் .. ஆனா இப்பலாம் மதியத்துல இருந்தே விளையாடுறதுக்கு ரெடி ஆகி அவ எப்ப வந்து கூப்டுவானு wait பண்ணிகிட்டே இருப்பேன் .. மழை காலம் வந்தாலே எனக்கு செம கடுப்பா இருக்கும் காரணம் ரோடு fulla தண்ணி தேங்கிகும் அவ கூட என்னால shuttle cork விளையாட முடியாது .. அவ என்ன சந்த்ருனு கூப்டும்போது எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கும் .. அவ கூட நறையநேரம் பேசுனம்னு தோணும் ஆனா பேச பயமா இருந்துச்சு .. அந்த timela வந்த படங்கள பாத்துட்டு நானும் அவளோட photova மறைச்சு வச்சு அப்ப அப்ப எடுத்து பாப்பேன் .. எப்பவும் ஒரு மாதிரி கனவுலேயே சுத்திக்கிட்டு இருந்தேன் அவ கூட பேசும்போது மட்டும்தான் இந்த உலகத்துக்கே வருவேன் .. அந்த ஒரு வருஷத்துல அவ மேல எனக்கிருந்த attraction எப்படி காதலா மாறுச்சுன்னு எனக்கே தெரியல ..



 
இந்த உலகத்துல யாராலையும் தனக்கு எந்த நொடில காதல் வந்துச்சுன்னு மட்டும் கரெக்டா சொல்லவே முடியாது .. இப்ப நா 10th ஏற்கனவே நா படிப்புல புலி இதுல காதல் வேற முதல் டெஸ்ட்ல எந்த சப்ஜெக்ட்ளையும் 10 மார்க்கு மேல வாங்க முடியல .. என்னோட அப்பாவையும் அம்மாவையும் ஸ்கூல கூப்டு இப்படியே விட்டா உங்க பையன் நிச்சயமா 10th பப்ளிக் exaamla பாஸ் பண்ண மாட்டான் .. பேசாம tc வாங்கிட்டு போயடுங்கனு மிரட்ட ஆரம்பிச்சாங்க .. பிரின்சிபால் ரூம்ல என்ன நிக்க வச்சு எல்லா டீசெரும், பிரின்சிபாலும் என் அப்பா அம்மா முன்னாலேயே திட்ட ஆரம்பிச்சாங்க, என்னோட அப்பாவும் அம்மாவும் அவமானத்துல தலைய குனுன்ஜாங்க .. அவங்கள அப்படி பாத்ததும் அங்கேயே அழ தொடங்கினேன் .. கடைசியாக அடுத்த டெஸ்டில் பாப்போம் எதுவும் improvement தெரியலேனா அபாரம் என்னால ஒன்னும் ஹெல்ப் பண்ண முடியாதுனு பிரின்சிபால் என்னோட parentskitta சொன்னார் ..


 அதுகபுரம் எங்க வீட்ல என்ன வீட்ட விட்டு வெளியபோகவே விடல .. சாயந்திரம் shuttle corkum விளையாட விடல .. புக் கூடவே படுத்து புக் கூடவே எந்திரிப்பேன் .. ஆனா என்னால படிப்புல கவனம் செலுத்தவே முடியல .. எங்க வீடு Bed room ஜன்னல் வழியா அவ அவங்க வீட்டு ஹாலுக்கு வருவாளான்னு அங்கேயே பாத்துகிட்டு இருப்பேன் ..எப்பயாச்சு அவ என்னோட வீட்டுக்கு வருவா .. அந்த சில நிமிடங்கள் மட்டும் சந்தோஷமா இருக்கும் அப்பறம் மறுபடியும் புக் குள்ள தலைய விடனும் .. ஒரு வழியா அடுத்த டெஸ்ட்ல எல்லா subjectlayum 50 மார்க் கிட்ட வாங்குனேன்


ஆனா அந்த mathsla மட்டும் fail aagiten .. இப்ப எங்க வீட்ல என்ன maths tutionla சேர்த்து விட்டாங்க .. ஸ்கூல் விட்டு வந்த உடனே tutionku போய்டுவேன் .. அவ கிட்ட பேச கூட எனக்கு சந்தர்பம் கிடைகள .. அடிகடி ஜன்னல் வழியா மட்டும் அவல பாப்பேன் .. அவ மேல இருந்த காதல் மட்டும் எனக்கு குறையவே இல்ல .. 10th result வரதுக்கு முன்னாடி நாள் எனக்கு செம பயம் .. நா fail ஆகிட்டா என் life wastaagidumdradha விட என்னோட parents என்ன சொல்லுவாங்க ?, அதோட ப்ரியாகுலாம் தெரிஞ்சா ரொம்ப கேவலமைடுமேனு பயம் மனசுக்குள்ள வந்து வந்து போயிடு இருந்துச்சு ..அடுத்த நாள் காலைல இருந்து bedlaye படுத்துகிட்டு எப்படியும் mathsla fail ஆகிடுவோம் நமக்கு இந்த படிபுலாம் ஒத்து வராது , பேசாம வேற ஊருக்கு போய் வேளைக்கு போலாம்னு முடிவு பண்ணி bedlaye படுத்திருந்தேன் ..





No comments:

Post a Comment