Tuesday, November 11, 2014

ரேவதி பாகம் 1


ஆண்மை தவறேல் கதை நான் படிக்கும் எனக்கு காதல் என்றால் என்ன என்று புரிந்தது. ஒரு ஆண் தன்னை , தன சுயத்தை எப்படி நிருபிக்க வேண்டும் என்று அத்தனை ஆண்களுக்கும் கன்னத்தில் அறைந்ததை போல சொன்னது ஆண்மை தவறேல் கதை. 

 இந்த கதை ஒரு பாவப்பட்ட இளம்பெண்ணின் கதை. சந்தர்ப்ப வசத்தால் விபச்சாரத்துக்கு தள்ளப்பட்டு, அதிலிருந்து மீள பல போராட்டாங்களை சந்தித்து, பின் ஒரு நல்லவனின் துணையோடு அவன் மனைவியாக, ஒரு நல்ல குடும்ப பெண்ணாக இந்த சமூகத்தில் வாழ போராடும் ஒரு பெண்ணின் கதை. கதையின் நீளம் கொஞ்சம் பெரிதுதான். இருந்தாலும் பொறுமையோடு படிக்கவும். கொஞ்சம் காமமும், நிறைய காதலும் சேர்ந்த கதை தான் ரேவதி.

 New York, JFK Airport, ...அருண் arraival lounge இல் காத்திருக்கிறான்... அவள் வரும் ஃப்ளைட் இரண்டு மணி நேரம் கால தாமதம் என்ற அறிவிப்பை படித்துவிட்டு அருகிலிருந்த cofee ஷாப்பிர்க்கு சென்று ஒரு கப்புச்சீனொ வாங்கிகொண்டு ஒரு காலி இடத்தில் அமர்ந்தபின் அவன் மனம் மூன்று நாள்களுக்கு முன் அவளுடன் நடந்த டெலிஃபோன் உறையாடலை அசை போடத்தொடங்கியது ...

 "ஹாய் ரேவதி ..." "லாஸ்ட் வீகென்ட் ஏன் கூப்பிடல?" "எக்கச்சக்க வேலை ... வாரம் முழுக்க தினம் வீடு போய் சேர ரெண்டு மூணுன்னு ஆச்சு .. சனிக்கிழமை காலைல பெட்டுல இருந்து எந்திரக்கவே எந்திரிக்கவே ஒரு மணிக்கு மேல ஆயிருச்சு .. அதுக்கப்பறம் உன்ன கூப்புட்டு எதுக்கு உங்க PG ஓனர்கிட்ட திட்டு வாங்க வெக்கறதுன்னு கால் பண்ணலை"
"ரொம்ப நேரம் உங்க காலுக்கு வெய்ட் பண்ணிட்டு இருந்தேன்..". எப்பொழுதும் உற்சாகம் கொப்பளிக்கும் அவள் குரலில் தளர்ச்சி இருந்தது ...

 "ஹெ, என்ன why are you sounding so dull? இங்க வர பிடிக்கலயா?" என்று கிண்டலாக கேட்டான்.

 "ஆமாம், டல்லாத்தான் இருக்கேன் .. இதுல நீங்க வேற இப்படி என்னை சீண்டினா நான் இப்ப ஓன்னு அழுதுடுவேன் .."

 "Oh God, சாரி டா, சாரி, நான் அப்படி உன் மனசு கஷ்டப் படற மாதிரி கேட்டிருக்க கூடாது ... I am really sorry"

 "உடனே, இந்த மாதிரி சாரி கேட்டு என்னை guiltyயா ஃபீல் பண்ண வெச்சுருங்க ..."

 "ஒகே, ஓகே சாரி அகெய்ன் ... என்னாச்சு ஏன் மேடம் டல்லா இருக்கீங்க?"

 "வசந்த் , அதான் எனக்கு ரெண்டு வருஷம் சீனியர், உங்களுக்கு கூட தெரியுமே, பெரிய பணக்காரன்னு சொல்லிய்ருக்கீங்க ... அவன் போன வாரம் எங்கிட்ட ப்ரொபோஸ் பண்ணுனான்" சில கணங்கள் அவன் மனதுக்குள் "கடவுளே, அவள் அவன் ப்ரொபோஸலை மறுத்திருக்கணும்" என்று எண்ணி பிறகு அவள் குரலில் தெரிந்த மன குழப்பத்தை புரிந்து, "என்ன ப்ரொபொஸல்?" என்று அவளை சீண்டுவதர்க்காக கேட்டான்.

 "ம்ம்ம் .. ஒரு பெரிய சாஃப்ட்வேர் ப்ரொஜெக்ட் ப்ரொபொஸல்!! ..அவன் என்னை காலேஜ்ல இருந்தப்ப இருந்து லவ் பன்றானாம் .. என்னை பத்தின எல்லா விஷயமும் தெரியுமாம் .. அவங்க அப்பா ரொம்ப forward thinkingஆம், அவன் இஷ்டத்துக்கு எப்பவும் தடை சொல்ல மாட்டாங்களாம் ..

அப்புறம் என்னென்னவோ சொல்லி எங்கிட்ட நான் சரின்னா உடனே அவுங்க ஊருக்கு கூட்டிட்டு போய் அவங்க அப்பா அம்மா ஆசிர்வாதம் வாங்கிட்டு வந்துட்டு அப்பறம் எனக்கு எப்ப இஷ்டமோ அப்ப கல்யாணத்த வெச்சுக்கலாமாம்..." படபடத்த மனதை அமைதிப் படுத்தி ,

"ஓஹோ, அதனால தானா மேடம் ஃபோன் பண்ணுவேன்னு எதிர்பார்துகிட்டு இருந்தாங்க ... Good ..நீ என்ன சொன்ன? சரின்னுட்டயா? இதுக்கெல்லாம் எங்கிட்ட நீ கேட்க வேண்டிய அவசியமே இல்லம்மா" என்றான் கேலியாக

 "ச்சீ .. என்ன நீங்க .. வெளையாடறீங்களா? இஷ்டமில்லேன்னு சொல்லிட்டேன்" என்றாள் கோபம் கொப்பளிக்கும் குரலில்

 "ஏன் இஷ்டமில்லெ?"

 "அதையேதான் அவன் ஒரு வாரமா என்னை கேட்டு தொளைச்சுட்டு இருக்கான் .. நானும் அவனுக்கு சரியா பதில் சொல்லாம திரும்ப திரும்ப இதுல இஷ்டமில்லன்னு சொல்லிட்டு இருக்கேன் .."

 "ஏண்டா அப்படி சொல்றே? உனக்கு அவன நல்லா தெரியாதுன்னா இன்னும் கொஞ்ச நாள் டைம் குடுன்னு சொல்லியிருக்கலாமே? நான் சொல்றேன். அவன் ரொம்ப நல்ல பையன். நல்லா படிச்சிருக்கான், நல்ல வசதியான் குடும்பம். அத்தனையும் அவன் தாத்தா சொத்து இவனோட பங்கு மட்டும் இருவது முப்பது கோடி தேரும். இந்த ஐ.டி கம்பெனி வேலை எல்லாம் சும்மா ஓசில உலகத்த சுத்தி பாக்கறதுக்குத்தான் .. அவுங்க அப்பா அம்மா அவன் உன்னை கல்யாணம் பண்ணிக்க சம்மதிக்கலைன்னாலும் அவன் பங்கு அவனுக்குதான் வரும். எதிர்காலத்துல நீங்க ரெண்டு பேரும் சேர்ந்து ஒரு software company ஆரம்பிக்கலாம்"

 "எத்தன நாள் பழகினாலும் எனக்கு அவன் மேலயோ அவன மாதிரி யார்மேலயும் இஷ்டம் வராது"

 "ஏண்டா? நீ வேற யாரையாவுது லவ் பண்றயா? நீண்ட மௌனமே அவளிடமிருந்து பதிலாக வந்தது

ஏய், ரேவதி, இருக்கயா அங்கே?" என்றதுக்கு
"ம்ம்ம்" என்று சன்னமான குரலில் பதில் வந்தது

 "நீ வேற யாரையாவுது லவ் பண்றயான்னு கேட்டேன் .. உனக்கு என்கிட்ட சொல்ல விருப்பம் இல்லைன்னா பரவால்ல விடு ..."

 "அப்படியெல்லாம் இல்ல .. " என்றாள் கிசு கிசுத்த குரலில்.

குதூகலித்த மனத்துடன் "சரி, பரவாயில்லை விடு .. ஏதோ தர்மசங்கடம் அதான் உன்னால சொல்ல முடிய மாட்டேங்குதுன்னு தெரியுது .. it's ok I understand you ...ஆனா ஒண்ணுடா எனக்கும் அதே மாதிரி தர்மசங்கடமான நிலைதான்.. looks like we are in the same boat ... " என்றான்

 "என்ன? சேம் boatன்னா"

 " நானும் ஒருத்திய லவ் பண்ணறேன்" என்றதற்க்கு

உடனே அவள் "லவ் பண்றீங்களா?" என்றாள் அதிர்ந்த குரலில்
 "ம்ம்ம்"
 "யாரு?" அவள் குரலில் இருந்த பதற்றத்தில் அவன் மனம் துள்ளி குதித்தது ..

 "" அவன் மௌனத்தை பொறுக்க முடியாமல், "ஏன் தர்மசங்கடம்?" என்று அவள் வார்த்தைகளில் ஆதங்கம் இருந்தாலும் அவள் குரல் அவள் கண்களில் கோர்த்த கண்ணீரை பறை சாற்றியது..

 "நானும் அவளை விரும்புறத யார்கிட்டயும் சொல்ல முடியாத நிலமை"

 "ஏன்?"

 "அவளும் என்னை லவ் பண்றாளான்னு தெரிஞ்சாதானெ வெளியில சொல்ல முடியும்? நானே இன்னும் அவ கிட்ட என் லவ்வ சொல்லலையே"

 "ஏன் அவகிட்ட சொல்லலே? நல்லா பழக்கமில்லாதவங்களா? ஒருதலை காதலா?" மறுபடியும் அவள் குரலில் இருந்த ஆதங்கத்தை ரஸித்தபடி,

" நல்லா ரொம்ப நாளா தெரிஞ்சவதான். நான்தான் இவ்வளவு நாளும் ஒருதலை காதலாவே இருக்கட்டும்ன்னு இருந்தேன். ஆனா இப்ப அவளா எங்கிட்ட சொல்லட்டும்ன்னு காத்துகிட்டு இருக்கேன்"

 "எப்படி ஒரு பொண்ணு அவளா வந்து சொல்லுவா? USகாரியா? நீங்க சொல்ல வேண்டியதுதானே? ஏன் இவ்வளவு நாளா சொல்லாம இருந்தீங்க? இப்ப மட்டும் ஏன் அவளா சொல்லுட்டும்ன்னு இருக்கீங்க?" சோகத்தையும் தாண்டி அவளுக்கு என் மேல் இருக்கும் அக்கறை அவளது அடுக்கடுக்கான கேள்விகலிருந்து தெரிந்த்து .. இனிமேலும் சீண்டவேண்டாம் என்று நினைத்து

 "படிச்சுகிட்டு இருந்தா .. படிச்சுகிட்டு இருக்கும்போது காதல் வந்தால் படிப்பு கெடும் .. அது மட்டும் இல்ல ... அப்பா இல்லாத அவளை கஷ்டப் பட்டு நல்லா படிக்க வெச்சு கிட்டு இருந்த அவளோட அம்மாவும் அவ BE மூணாம் வருஷ்த்துலயே இறந்துட்டாங்க .. அவ படிப்புக்கு நான்தான் எல்லா செலவும் செஞ்சேன் .. அவளுக்கு ஏற்கனவே ரொம்ப inferiority complex.. தன்னையெல்லாம் யாரும் ஏத்துக்க மாட்டாங்கன்னு .. படிச்சு முடிச்சு அவ ஒரு நல்ல பொஸிஷனுக்கு வந்து நல்ல தன்னம்பிக்கை வரட்டும்ன்னு காத்து கிட்டு இருந்தேன்" சட்டென்று சோகம் போய் ஒரு க்யூரியசான குரலில்

 "நல்ல பொஸிஷ்னுக்கு வந்துட்டாளா" என்றாள்

 "ம்ம்ம் .. இப்போ M.Tech முடிச்சுட்டு ஒரு பெரிய ஐ.டி கம்பெனில சேர்ந்திருக்கா .. ஆன் சைட் அசைன்மென்டுல இப்ப US கெளம்பிகிட்டு இருக்கா ..."

 பிறகு அவளிடமிருந்து மௌனம் .. கொஞ்சம் விசும்பல் .. மூக்கை உரிஞ்சும் சத்தம் ..

 "inferiority complex எல்லம் அவ்வளவு சீக்கரம் போயிடாது .. நீங்களாதான் அவகிட்ட சொன்னா என்ன? நீங்க என்ன சொன்னாலும் அவ கேப்பான்னு உங்களுக்கு தெரியாதா?"

 "தெரியும் .. நானா சொன்னா நான் அவள ஃபொர்ஸ் பண்ணுன மாதிரி இருக்கும். நன்றி கடனா எதிர் பார்க்கர மாதிரியும் இருக்கும். அதனாலதான் சொல்லலே"

 "ஆனா, அவளோட கடந்த காலத்தை பத்தியெல்லாம் நீங்க நல்லா யோசிச்சீங்களா"

 "எல்லாத்தையும் யோசிச்சாச்சு ... இன்னும் சொல்லப்போனா அவளே வேற யாரையாவுது லவ் பண்ணி ஒரு நல்ல வாழ்க்கை அவளுக்கு அமைஞ்சுதுன்ன ரொம்ப சந்தோஷ படுவேன். ஆனா, கடைசிவறைக்கும் என்னால வேற யாரையும் நினச்சுகூட பாக்க முடியாது.

 மேலும் விசும்பல் .... மூக்கு உறிஞ்சல் ...

 "அப்படியா? அவ காதல அவளே சொல்லுவா ... உங்கள நேர்ல பாக்கும்போது"

 "அதுவும் சரிதான். இல்லன்னா ஃபோன்ல கட்டிபுடிச்சு கிஸ் அடிக்க முடியுமா?"
"அவ்வளவு ஆசையா உங்களுக்கு அவ மேல?"


 "அவள பாத்த மொதல் நாளில் இருந்து நான் அவள் ஆழமா காதலிச்சுகிட்டு இருக்கேன்"

 "எனக்கு உங்கள இப்பவே பார்க்கணும் ... "

 "வெயிட், வெய்ட் .. முதல்ல நாளைக்கு ஃபோன்லயாவுது அந்த வஸந்த்கிட்ட பேசி நீ வேற ஒருத்த்ர லவ் பண்ற விஷயத்த சொல்லு. அவன் பாட்டுக்கு உனக்காக தாடி வளர்த்திகிட்டு வெய்ட் பண்ணிட்டு இருக்க போறான். ஆரம்பத்துலயே ஒரு வில்லன் வேண்டாம்" என்று callஐ கட் செய்தான்.

 மூன்று வருடங்களுக்கு முன்னால் ... கோபம், ஆதங்கம், வெறுப்பு இவை எல்லாம் கலந்த ஒரு மனத்துடன் அருண் ஒரு ஐந்து நட்சத்திர ஹொட்டலில் இருக்கும் பார் லௌஞ்சில் அமர்ந்திருந்தான்.

 "இருக்கற கடுப்புல இந்தக் கொசவன்வேற சொன்னா சொன்ன நேரத்துக்கு வராம மண்டைய காச்சறான்" என்று அவன் திட்டியது அவன் நண்பன் பாஸ்கரை ... சிறிது நேரத்தில்

 "இன்னாம்மா தனியா குந்திகுனு பொம்மிகினு கீரே" அருணை வெறுப்பேத்துவதற்க்காகவே அப்படி பேசும் பாஸ்கர் வந்து எதிரில் இருக்கும் சேரில் அமர்ந்தான். முதலில் கண்ணூம் கருத்துமாக அவனுக்கு வேண்டிய ட்ரிங்க்ஸ் ஆர்டர் செய்த பின்

"என்னடா போன ரெண்டே நாள்ல திரும்பீட்ட? ஊர்ல ரொம்பவே க்டுப்பேத்தீட்டாங்களா" என்றான் அருணின் மனநிலையை உணராமல்.

 "டேய், ஊரப்பத்தி பேசாத" "என்னடா ஆச்சு" இரண்டு நாட்களுக்குமுன் ஒரு மாத லீவில் அருண் அமெரிக்கவிலிருந்து கிளம்பி சென்னை வந்து இறங்கினான். சென்னையில் இருக்கும் நண்பர்களை மற்றும் அவன் படித்த IIT ப்ரொஃபஸர்களை எல்லாம் இரண்டு வருடங்களுக்கு முன்னால் பார்த்தது.

பார்க்க வேண்டும், இருந்தாலும் முதலில் கோவைக்கு சென்று பெரியப்பா, சித்தப்பா குடும்பங்களுடன் சில நாள் இருந்துவிட்டு பின் சென்னை திரும்பலாம் என்று அடுத்த ஃப்ளைட்டில் கோவை கிளம்பினான்.

 "இந்தியா வந்த கடமைக்கு போய் பாத்தா, ஒவ்வொரு தடவையும் எதாவுது ஒரு விதத்துல கடுப்பேத்தறாங்க ... இந்த தடவை ஓவரா போயிடிச்சு"

 "இந்த தடவை என்னாச்சு?" "என்னாச்சு? .. எல்லாத்தைய்ம் அறுத்து விட்டுட்டு வந்துட்டேன்"

 "என்னடா சொல்ற"

 "அவுங்க மூஞ்சில இனிமே முழிக்க மாட்டேன்னுட்டு வந்துட்டேன்"

 "டேய் என்னடா சொல்லற, சொந்த பந்தம்னா அவங்க தானடா உனக்கு எல்லாமே?"

 "சும்மா கடுப்பேத்தாத, எனக்கு மட்டும் என்ன சொந்த பந்தம் எதுவும் இல்லாம அனாதையா இருக்க ஆசையா?"

 "சரி, என்ன ஆச்சுன்னு சொல்லு?"
 
"எல்லாம் பணம் தாண்டா ... எங்க அப்பா போறதுக்கு முன்னாடி யாரும் தொட முடியாத மாதிரி அவரோட சொத்தையெல்லாம் பேங்க் டெபாசிட், ஷேர்ஸுன்னு போட்டு வெச்சிட்டு போயட்டாரில்ல? எப்படியாவுது அந்த பணத்தை அவுங்க அனுபவிக்கனும்னு பாக்கறாங்க .. போதா குறைக்கு ஆடிடர் அங்கிள் வருஷா வருஷம் பிசினெஸ்ல எங்க அப்பாவோட பங்கு லாபத்தையும் தவறாம வாங்கி என்பேர்ல பாங்க்ல போட்டுடராறு.

அவுங்களுக்கு பொறுக்கல .. நான் எப்ப ஊருக்கு போனாலும் சுத்தி வளைச்சி பேச்சு பணத்துல தான் முடியும் .. கடுப்புல பிசினெஸ்ல இருந்த எங்க அப்பாவோட பங்கு எல்லாத்தையும் நீங்களே வெச்சுக்குங்கன்னு எழுதி குடுத்துட்டு குட் பை சொல்லிட்டு வந்துட்டேன் ... "

 "என்னடா ரெண்டு மூணு கோடி தேர்ற உன்னோட ஷேர சும்மா குடுத்துட்டு வந்துருக்க?" என்று ஆதங்க பட்டவனிடம் "விடுடா எப்படியோ நல்லா இருந்தா சரி" என்று பெரு மூச்சு விட்டான் அருண். அதற்கு கிண்டலாக சிரித்தபடி பாஸ்கர்,

 "நீ அவுங்களுக்கு நல்லது பண்ணினயா கெட்டது பண்ணினயான்னு தெரியல ... " என்றான். "ஏன்?" "ஆடிடர் அங்கிள் மேற்பார்வை இருக்கறதுனாலதான் அந்த பிசினெஸ் ப்ராஃபிட்ல ஓடிட்டு இருக்கு .. உங்கப்பா பங்கே இல்லாத ஒரு பிசினஸை அவரு இனிமே கண்டுக்கவே போறது இல்ல.

சரி விடு ... அடுத்து என்ன ப்ளான்? எப்பவும் ஒரு பத்து நாளாவுது கேமராவை தூக்கிட்டு ஊர் ஊரா சுத்துவே, இந்த தடவை இருவத்து அஞ்சு நாளா?" "தெரியல ... பாக்கலாம்" என்றான் அசிரத்தையுடன்.

 "டேய், ஃப்ரெண்ட்ஸுன்னு நான் எல்லாம் இருக்கேன் இல்ல?" "என்னதான் சரியான கேப்புமாரியா இருந்தாலும் என் பணத்துக்காக எங்கூட பழகாத் ஒருத்தன் நீ. சரி, நெக்ஸ்ட் வேற ஏதாவுது லைவ்லியான பாருக்கு போலாமா?"

 "டேய், இன்னிக்கு, அப்பறம் இன்னும் ரெண்டு நாளைக்கு என்னால முடியதுடா. நாளைக்கு காலைல நான் கெளம்பி கொஞ்சம் பர்சேஸ் விஷயமா சேலம் போகணும். போகாட்டி எங்கப்பா என்னை தொலச்சுடுவாரு. இப்ப நீ வந்திருக்கேன்னு சொல்லி கிளம்பின உடனே சீக்கிரம் வீடு வந்து சேருன்னு வார்ணிங்க் குடுத்து அனுப்புனாரு. இந்த ட்ரிங்க் முடிஞ்ச உடனே ஐயா அபிட்டோ!"

 "இந்த மசுர நீ மொதல்லயே சொல்லியிருக்கலாம் இல்ல? நான் வேற யாரயாவுது கூப்புட்டு இருப்பேன். இல்ல கடைசி கடைசிக்கு எங்க IIT ப்ரொஃபஸர ஒரு Black Label பாட்டிலோட போய் பாத்திருந்தன்னா ராத்திரி முழுக்க algorithm pattern அப்படின்னு எதாவுது கதையடிச்சுட்டு கம்பெனி குடுத்து இருந்திருப்பார் .." சில நிமிடங்கள் மௌனம் சாதித்த பாஸ்கர்,

"நைட் ஏதாவுது டிக்கெட் அரேஞ்ச் பண்ணுட்டுமா" என்றான்

 "என்ன எஸ்கார்ட் சர்வீஸ் எதாவுதா?" "அந்த மாதிரி ஸ்டைலான பேர் எல்லாம் அதுக்கு இங்க இன்னும் வருல .. நாங்க இங்க இன்னும் கிராக்கின்னுதான் கூப்படறோம்.." என்று சொல்லியவாறு அவன் ஸெல்லில் ஏதொ நம்பரை அமுக்கினான்

 "இந்த மாதிரி நம்பரெல்லாம் ஸ்டோர் பண்ணி வெச்சு இருக்கயா?" என்ற அருணிடம், "எல்லாம் எங்க பிசினசுக்காகதான் ... பையர்ஸ் சிலர் கேப்பானுங்க .. அவங்கள என்டெர்டைன் பண்ணறது என்னொட டிபார்ட்மெண்ட் ... சோ வேற வழி இல்லை" என்று அலுத்துக் கொண்டான் பாஸ்கர்.

 சிறிது நேரத்தில் கருப்பா குட்டையா வொய்ட் ஷ்ர்ட் பேன்ட் அணிந்து கையில் ஒரு லெதர் பையுடன் ஒருவர் வந்து பாஸ்கருக்கு "வணக்கம் சார், என்ன இந்த நேரத்துல அவசரமா அதுவும் ஆல்பத்தோட கூப்டீங்க? முக்காவாசி டிக்கெட் வெளில இருக்கு சார் .. என்று இழுத்தார் ..

" பாஸ்கர், "இருக்கறத சாருக்கு காமிங்க ஷண்முகம்" என்றதும் பையிலிருந்த ஆல்பத்தை வெளியிலெடுத்து பக்கங்களை புரட்டி சில ஃபோட்டோக்களை எடுத்து அருணிடம் நீட்டினார். அவைகளை ஒன்றொன்றாக பாத்த அருண் ஒரு ஃபோட்டோ வந்ததும் உறைந்து போனவன் போல் பார்த்துக் கொண்டிருந்தான். வாய் முழுக்க வெத்திலை கறை நிறைந்த பல்லாக சிரித்த ஷண்முகம்,

"மொதல்ல அந்த ஒரு ஃபோட்டோவ மட்டும் காமிக்கலாம்னுதான் நெனெச்சேன், எதுக்கும் கொஞ்சம் சாய்ஸ் குடுக்கலாமேன்னு தான் மத்ததையும் கூட கொடுத்தேன்" என்றார்.

 "யாரு?" என்ற பாஸ்கரிடம் "நம்ம ரீடா சார், போன மாசம் உங்களோட ஒரு பையர்கிட்ட அனுப்புனனே. நீங்க கூட உங்க பையருக்கு ரொம்ப புடிச்சு போச்சுன்னு சொன்னீங்களே. வெளியூல இருந்து வர்ற ஒரு ரெகுலர் கஸ்டமர் அவளை இன்னைக்கு வேணும்னு ரெண்டு நாளைக்கு முன்னாலயே புக் பண்ணியிருந்தார். சாயங்காலம் ஏழு மணிக்கு அடுத்த வாரம் வர்றதா ஃபோன் பண்ணினார்.

அதான் இவ்வளவு நேரமாயும் அந்த பொண்ணு ஃப்ரீயா இருக்கு. சாருக்கு பாத்த ஒடனே புடிச்சிட்ட மாதிரி தெரியுது.அனுப்பட்டுமா சார்?" "யாரு இந்த பொண்ணு" என்ற அருணுக்கு ஷ்ண்முகம் "அவளோட அம்மா ரொம்ப நாளா தொழில்ல இருக்கா சார். அவ இவளவிட சும்மா தள தளன்னு இருப்பா. மத்தவங்க மாதிரி பொண்ணு வயசுக்கு வந்தவுடனே தொழில்ல விடாம படிக்க வெச்சு டீன் ஏஜ் முடிஞ்சப்புறம் விட்டுருக்கறா.

தொழிலுக்கு இப்ப ஒரு ஆறு மாசத்துக்கு முன்னாலதான் வந்துது. தொழில்ல இருக்கற மத்த பொண்ணுங்க மாதிரி கெடையாது. சுத்தமா இங்க்லீஷ் பேசும். வர்ற கஸ்டமருங்க டீஸண்டா நடந்துக்கணும், காண்டம் போடணும், வாயில கிஸ் அடிக்க கூடாது அப்படீன்னு கண்டிஷன் போடும்.

அதுவும் பார்ட்டி கொஞ்சம் இண்டீஸன்டுன்னாகூட வேண்டாம்ன்னு வாங்குன பணத்த திருப்பி குடுத்துடும். அப்படியும் என்னா டிமாண்டு சார் அதுக்கு? வர்றதெல்லாம் உங்கள மாதிரி டீஸன்டான பெரிய பார்ட்டீங்கதான்" நீளமாக விளக்கம் கூறினார். "என்னடா க்ராக்கி புடிச்சு இருக்கா? She is supposed to be damn good .. Consider it as my treat ..." என்ற பாஸ்கர் அருணின் பதிலை எதிர்பார்காமல், ஷண்முகத்திடம் அனுப்பி வைங்க சார் என்றான்.

அருணின் கண்கள் இன்னமும் அந்த புகைப்படத்தில் உறைந்து இருந்தன. புகைப்படத்தை வாங்கி கொண்ட ஷண்முகத்திடம் அருணின் அறை ஏண்ணை கூறி அவரை அனுப்பிய பின் பாஸ்கர் அருணிடம், "நீ ரூமுக்கு போய் வேய்ட் பண்ணு .. அந்த போண்ணு நேரா அங்க வரும்" என்றவாறு அவனும் கிளம்பினான். "

ஃபோட்டோவை பாத்தா டச் அப் எதுவும் இருக்கற மாதிரி தெரியிலயே .. இவ்வளவு அழகான ஒரு பொண்ணு ஏன் இந்த தொழிலில்? பேசாம சினிமா டீவீன்னு நடிக்க போயிருக்கலாமே?" என்று எண்ணியவாறு அவன் அறைக்கு வந்து டின்னர் ஆர்டர் செய்து சாப்பிட்டு முடித்தான்.

 சற்று நேரத்தில் அவன் அறையில் இருந்த டெலிஃபோன் சிணுங்கியது. எடுத்து "ரூம் ஃபோர் நாட் எய்ட்" என்றவனின் காதுகளில் "ஈஸ் இட் மிஸ்டர் அருண்?" என்று ஒரு தேன் வந்து பாய்ந்தது.

 "எஸ்?" "ஐ ஆம் ரீடா. ஜஸ்ட் வாண்டட் டு செக் இஃப் யு ஆர் இன் யுவர் ரூம்" என்ற பிறகு அவன் பதிலுக்கு காத்திராமல்

"ஐ வில் பி தேர் இன் ஃபிஃப்டீன் மினிட்ஸ்" என்றுபடி அந்த தேனோட்டம் நின்றது. "ஃபோட்டோவில் பார்த்த முகத்திற்கும் இப்போது கேட்ட குரலுக்கு என்ன அழகான பொருத்தம்" என்று திகைப்பிலிருந்து மீளாமல் காத்திருந்தான்.

 சரியாக பதினைந்து நிமிடங்களுக்கு பிறகு அவன் அறையின் கதவில் யாரோ ஒரு விரலால் லேசாக தட்டும் சத்தம் .. கதவை திறந்தவன் வந்திருந்தவளை பார்த்தான், பார்த்துக் கொண்டே இருந்தான்.

 அவள் "கேன் ஐ கம் இன்?" என்ற பிறகு சுதாரித்த அருண் "எஸ், ப்ளீஸ் ... " என்றபடி வழி விட்டான். அவனை பார்த்து புன்னகைத்தபடி அவள் அறைக்குள் வந்து அவளது ஷோல்டர் பேகை சுவர் ஒரத்திலிருந்த மேசையில் வைத்துவிட்டு நேராக படுக்கைக்கு போய் அமர்ந்தாள்.

 அருண் அவளை வைத்த கண் வாங்காமல் பார்த்து கொண்டிருந்தான். சில நிமிடங்கள் அவ்ளும் அவனை பார்த்திருந்த பின் "என்ன சார், பாத்து கிட்டே இருக்கீங்க? உங்களுக்கு இதுதான் மொதல் தடவையா?" என்றபடி தமிழுக்கு தாவியது அவள் தேன் குரல்.

 என்ன சொல்வது என்று ஒரு கணம் தடுமாறி பின் "ஆமா ... இல்ல .. உன்னை மாதிரி பொண்ணு கூட இதுதான் மொதல் தடவை ...:" என்று பின் "சே, இதெல்லாம் நான் எதுக்கு இவகிட்ட சொல்லிட்டு இருக்கேன்" என்று மனதுக்குள் தன்னை திட்டிய அருணுக்கு அவள் அடுத்த கேள்வி அவனை இன்னும் தடுமாற வைத்தது ..

 "அப்பறம் ஏன் சும்மா நின்னுகிட்டே இருக்கீங்க? பர்மிஷன் கொடுத்தாதான் உங்க வீட்டுல கிட்ட போவீங்களா?"

 "வீட்டுலயா? என்ன சொல்ற?"

 "உங்க வொய்ஃப சொன்னேன்"
 "மொதல் தடவை இல்லேன்னதும் எனக்கு கல்யாணம் ஆயிருச்சுன்னு முடிவு பண்ணிட்டயா?"

 "இல்ல, என்ன மாதிரி பொண்ணு கூட மொதல் தடவைன்னு சொன்னீங்க அதனாலதான்"

 "ஏன், பொண்டாட்டிய தவிற வேற யார் கூடயும் பண்ணியிருக்க மாட்டேன்னு நெனச்சயா. consensual sex அப்படின்னா என்ன தெரியுமா?" என்றவனை "convenientஆ ஏதாவுது ஒரு காரணத்தை சொல்லிட்டு படுக்கற அந்த மாதிரி பொண்ணுக்கும் எனக்கும் எந்த வித்தியாசமும் இல்ல.. " என்ற அவள் பதில் அவனை மேலும் தாக்கியது.

 மறுபடியும் அவன் பதிலுக்கு காத்திராமல் "சரி, உங்களுக்கு எந்த மாதிரி புடிக்கும் .. எல்லாத்திலயும் நான் எக்ஸ்பர்ட் .. ஆனா சில விஷயம் இப்பவே சொல்லிடறேன் .. நீங்க காண்டம் போட்டுக்கணும் .. அப்பறம் ஃப்ரென்ச் கிஸ் நான் பண்ண மாட்டேன் .. நீங்க முயற்சி செஞ்சாலும் நான் வாய தொறக்க மாட்டேன் .. மத்தபடி உங்கள எப்படி வேணும்னாலும் சந்தோஷப்படுத்த தயார் ... அதுவும் உங்கள் நல்லா கவனிச்சுக்க பாஸ்கர் சார் சொன்னதா ஷண்முகம் சொன்னாரு..."

 "உனக்கு பாஸ்கரை ரொம்ப நாளா தெரியுமா?"

 "ஒரு நாலஞ்சு மாசமா ... பாஸ்கர் சார பாத்து இருக்கேன் அவர் கூட ஃபோன்ல பேசி இருக்கேன் அவரொட கம்பெனிக்கு வர்ற பையர்ஸ்கூட படுத்து இருக்கேன்" என்று அவள் சாதாரணமா சொன்னதும் அருணுக்கு மனதுக்குள் எங்கோ சுருக்கென்று குத்தியது

 "பாக்க தமிழ் அதுவும் இந்து பொண்ணு மாதிரி இருக்கே .. பேர் எப்படி ரீடான்னு?" என்றவனை பார்த்து புன்னகை மாறாத முகத்துடன்

"சுத்தி வளைச்சு ரீடாதான் என்னோட பேரான்னு நீங்க கேக்கற விதம் நல்லாருக்கு" என்றவள் "சரி, சொல்லுங்க உங்களுக்கு எப்படி பிடிக்கும்" என்றாள்

 "சரி, எப்படியெல்லாம் சந்தோஷ படுத்த தெரியும்?"

 "நான் எல்லாம் பண்ணுவேன் .. உங்களுக்கு என்ன வேணும்னு சொல்லுங்க. டிரஸ்ஸை நானே கழட்டிடவா இல்ல நீங்களே கழட்டுனாதான் உங்களுக்கு பிடிக்குமா?"

 "ம்ம்ம் ... very professional" என்று மனதுக்குள் எண்ணியபடி "நீ எதுவும் செய்ய வேண்டாம் ... எனக்கு எப்படி வேணுமோ அதை நானெ செஞ்சுக்கறேன் .. நீ சும்மா கோ-ஆபரேட் பண்ணினா போதும் ..." என்றான்.

 "ஒகே" என்றவாறு எழுந்து நின்றவளை தலை முதல் கால் வரை கண்களால் தழுவினான். ரெண்டரை இன்ச் நெற்றியின் நடுவே ஷேப் செய்த புருவங்களின் மத்திய பகுதிக்கு கொஞ்சம் மேல் ஒரு ஸ்டிக்கர் பொட்டு. ஐ லைனர் தீற்றிய அழகான கண்கள் ஆனால் அவைகளை சுற்றி ஃபேஸ் பவுடரால் ம்றைக்க பட்ட கருவளையங்கள் அவளது தூக்கமின்மையை பறை சாற்றின. சிரித்தால் குழி விழும் முத்தமிட்டால் கள்வெறி கொள்ளச் செய்யும் அழகான கன்னங்களுக்கு இடையே ரொம்ப கூர்மையாவும் இல்லாமல் அதே சமயம் மொண்ணையாகவும் இல்லாத செதுக்கி வைத்த மூக்கு அதன கீழ் அளவான இடைவெளிக்கு பிறகு இழுத்து வைத்து சப்பலாம் என்று நினைக்க வெய்க்கும் உதடுகள் ...

"க்ராதகி, நோ ஃப்ரெச் கிஸ்ன்னுட்டாளே" என்ற பொருமலை கொஞ்சம் ஒதுக்கி வைத்து கண்களை இன்னும் கீழே கொண்டு சென்றான். அவளது சங்கு கழுத்துக்கு கீழ் இருபுறமும் லேசாக துருத்திக் கொண்டிருந்த காலர் போன்கள் "ஒழுங்கா சாப்பட மாட்டாளோ" என்று அவனை கொஞ்சம் யோசிக்க வைத்தன

 ஆனால் அதன் கீழ் ப்லௌஸுக்கும் அதன் மேல் போத்தியிருந்த முந்தானைக்கும் மீறி என்னை பார், என் வனப்பை பார் என்று அழைக்கும் கவிழ்த்து வைத்த மன்மத கோபுரங்கள் அவள் சதை பிடிப்பில்லாத தேகத்திற்கு மெருகேற்றி நின்றிருந்தன, பம்பரம் விடலாம் போன்ற தட்டையான வயிற்று பிரதேசத்தின் நடுவே குழி விழாத தொப்புள்.....

 பார்த்தது போதும் என்று அவளருகே சென்று இடது கையை அவள் இடையில் விட்டு அவளை தன் பக்கம் இழுத்தவனின் இழுப்புக்கு அவன் மேல் சாய்ந்தாள்.. வலது கையை அவளின் பின்புறம் அடர்ந்து முதுகில் இடைக்கு சிறிது மேல்வரை தொங்கிய, ஷாம்பூ கண்டிஷனர் போட்டு பட்டு போன்று மின்னும் கூந்தலுக்கு அடியில் அவள் பிடரிக்கு செலுத்தினான்.

நெற்றியிருந்து தொடங்கி உதடுகளால் இன்ஸ்பெக்ட் செய்ய ஆரம்பித்தான் .. சற்று நிதானித்தவளை கூர்ந்து நோக்கி "yes .. no french kiss!" என்று அவளுக்கு நம்பிக்கையூட்டிய பின் அவன் உதட்டின் பயணத்தை தொடர்ந்தான் .. கண்கள், மூக்கு, கன்னங்கள், பிறகு மிக கவனமாக அவள் உதடுகளை தவிர்த்து தாடையை தாண்டி கழுத்துக்கு வந்தான்.

அப்போது பின்புறம் செலுத்தியிருந்த அவன் வலது கை தொடர்ந்து அவளது இரு காது மடல்களையும் விரல்களால் வருடியபின் அவள் இடது தோளை தடவிய பின் முந்தானைக்கு மேலாக சிறிது நேரம் தயங்கியபின் அதற்க்கு அடியில் சென்று அவளது இடது முலையை வருடியது.

 
"ஹாக் ... " என்று அவள் தொண்டிடைலிருந்து வந்த (ஆங்கிலத்தில் gasp எனப்படும்) ஒலியை கேட்ட அருண் "பரவால்லையே, கோ-ஆபரேட் பண்ணுன்னா சும்மா கன்னி பொண்ணு மாதிரி fake எக்ஸ்ப்ரெஷ்ன் எல்லாம் குடுத்து நல்லாவே நடிக்கறாளே?" என்று நினைத்தான்.

 அருண் பார் லௌஞ்சுக்குள் நுழைந்த நேரம் ... "நீ கவல படேதெப்பா படிப்பை தவிற ஒரு கவலையுமில்லாத நானே ஒரு பேப்பர்ல அரியர்ஸ், ஒரு வருஷமா உங்க அம்மாவுக்கு ஒடம்பு சரியில்லாம வீட்டுக்கும் ஹாஸ்பிடலுக்கும் அலஞ்சிட்டு இருக்கற ... மூணு பேப்பர்ல அரியர்ஸ் வந்தா என்ன? இந்த ஸெமஸ்டர்ல க்ளியர் பண்ணிடலாம்" என்றவளிடம் ஒன்றும் கூறாமல், "சே, இவளெல்லாம் என்னை அவகூட ஒப்பிட்டு பேசற அளவுக்கு வந்துருச்சே?" என்று ரேவதி மனதுக்குள் ஆதங்கப்பட்டாலும், கடந்த ஸெமெஸ்டர் முடியும் தருவாயில் அவள் எதிர்பார்த்த மாதிரியே மதிப்பெண்கள் பெற்றிருந்ததை எண்ணி பெருமூச்செறிந்தாள்.

 கடந்த ஆறு மாதங்களில் அவள் வாழ்க்கை தடம் மாறியிருந்ததை எண்ணி மௌனம் சாதித்திருந்தாள். இருக்கையிலிருந்து எழுந்தவளிடம், "நேரா ஹாஸ்பிடலுக்கா?" என்ற தோழிக்கு ஆமென்று தலையாட்டி விடை கூறியவாறு அடுத்த ஸ்டாப்பில் இறங்கி அருகிலிருந்த ஹாஸ்பிடலுக்கு நடந்து முன்பு இருந்த ஆட்டோக்களில் அவளுக்கு தெரிந்த முத்துவிடம் "அம்மாவ பாத்துட்டு வந்துடறேன்.

வெயிட் பண்ணுங்க" என்று கூறியவாறு உள்ளே சென்றாள். அவளது அம்மாவை சேர்த்திருக்கும் வார்டுக்குள் நுழைந்த சமயம் எதிரே வந்த நர்ஸிடம் "அம்மாக்கு இப்ப எப்படியிருக்கு?"என்று விசாரித்தாள்.

கண்களில் ஒரு கணம் தோன்றிய பரிதாபத்தை மறைத்தபடி அந்த நர்ஸ் "இப்ப பரவால்லே ரேவதி, ட்ரிப்ஸ் குடுத்துருக்கரதுனால மறுபடியும் வாந்தி எல்லாம் எடுக்கல. கொஞ்சம் ஸ்டேபிள் ஆனதும் டாக்டர் ஆபெறேஷனுக்கு ரெடி பண்ண சொல்லிருவாறு. நீ கவலைபடாதே" என்று அவளுக்கு தெரிந்த மருத்துவத்தை சொல்லி ஆறுதலளிதாள். சரியென்று தலையாட்டியபடி அவளது தாயின் படுக்கைக்கு விரைந்தாள்.

 "எப்படிம்மா இருக்கு? மறுபடியும் வாந்தி வரல இல்ல?" என்று பாசத்துடன் கேட்ட மகளிடம் "இப்ப பரவாலேம்மா" என்றவள் "உன்னோட ரிசல்ட் என்னம்மா ஆச்சு?" என்று ஆதங்கத்துடன் எதிர்க் கேள்வி விடுத்தாள்.

 தாயின் தலையை தடவியவாறு "அதப்பதிஎல்லாம் கவலை படாதேன்னு சொன்னேன்ல? நான் எதிர்பாத்த மாதிரித்தான் .. மூணு பேப்பர்ல ஃபெயில் ... அடுத்த ஸெமெஸ்டர்ல மறுபடி எழுதணும்" என்றாள்.

 முப்பத்தி ஏழு வயதில் ஒரு வருடத்திற்கு முன்னால் முன் முப்பதுகளை கடக்காத தோற்றமளித்த அகிலா என்றழைக்கப்படும் அகிலாண்டேஸ்வரி கடந்த ஒரு வருடத்தில் சருகாய் இளைத்திருந்தாள். மகள் சொன்னதைக் கேட்டு துக்கத்தை அடக்கமுடியாமல் அவள் தாடையில் வழிந்த க்ண்ணீர் தலையணையை நனைக்க,

 "நான் அப்பவே சொன்னேனேடி, என் கட்ட எப்படியோ போகுதுன்னு இருக்கற காசுல உன்னோட படிப்ப மட்டும் பாருன்னு ..." என்று கேவிய தாயை, "அம்மா, இப்ப என்ன ஆயிடுச்சுன்னு இப்படி ஒப்பாரி வெக்கற? அவனவன் நாலு பேப்பர் அஞ்சு பேப்பர்ன்னு ஃபெயிலாயிட்டு ஜாலியா இருக்கான்.

அவங்கள விட நான் ஒண்ணும் மோசமில்ல .. ஆபரேஷன் முடிஞ்சு நீ வீட்டுக்கு வா ... இந்த ரேவதி யாருன்னு எல்லாருக்கும் காமிக்கறனா இல்லயான்னு பாரு" என்று தாய்க்கு ஆறுதலளித்தாள். பிறகு, "ஆயா, நீ மத்தியானம் சாப்பிட்டயா?" என்று இது போன்ற சமயங்களில் அவள் தாயுடன் இருக்கும் அவர்கள் வீட்டில் வேலை செய்யும் முனியம்மாவை கேட்டாள்.

" நான் சாப்டெம்மா" என்ற முனியம்மா தொடர்ந்து "மத்தியானம் ஒரு மணிக்கு முருகேசன் ஃபோன்ல கூப்டாம்மா. நீ வந்த ஒடனே ஃபோன் பண்ணச் சொன்னான்" என்றாள். ஒரு கணம் ஏதோ யோசித்தவளாக தன் தாயிடம், "நான் போய் ஒரு ஃபோன் பண்ணிட்டு வர்றேன் .." என்ற பிறகு முனியம்மாவிடம் "ஏதாவுது வாங்கிட்டு வரணுமா?" என்று கேட்டாள்.

 "எல்லாம் இருக்கும்மா? நீ காலைல வாங்கியாந்த பொறையக்கூட அம்மா வேணாட்டுது" வெளியில் சென்று வந்து தன் தாயின் அருகே சிறிது நேரம் அமர்ந்திருந்தபின் "நான் கெளம்பறேம்மா" என்ற மகளைப் பார்த்து கண்களில் அவள் செல்ல வேண்டிய அவசியத்தையும் அவசரத்தையும் புரிந்தும் தன்னால் ஒன்றும் செய்யமுடியவில்லையே என்ற ஆதங்கம் நிறைந்த சோகத்துடன் தலையசைத்தாள்.

 தன் தாயின் கன்னத்தை தடவி கண்களை குறுக்கி பெரிய ஒரு புன்னகையுடன் "கவல படாதேம்மா ... இன்னும் கொஞ்ச நாளைக்கு ..." என்றவாறு விடைபெற்று வெளியில் வந்து ஆட்டோவில் ஏறி அமர்ந்தாள். "கொஞ்ச நாளைக்கா?" என்று தன்னிடமே கேட்டுக்கொண்டவள் அதற்கு விடை தெரியாமல் கண்களில் வழியும் கண்ணீரை அடக்க முடியாமல் கைகளில் முகம் புதைத்து வீடு வரும்வரை அமர்ந்திருந்தாள்.

முத்துவிடம் "கொஞ்சம் வெய்ட் பண்ணுங்க" என்றபடி பூட்டியிருந்த கதவை திறந்து வீட்டிற்குள் சென்றாள். வேகமாக குளித்து புடவைக்கு மாறி தலை சீவி, கூந்தலை முடியாமல் முதலில் ஃப்ரீ ஹேராக விட்டு பின் காதுகளுக்கருகே இருந்து சிறு கற்றை முடிகளை பின் கொண்டு சென்று அவைகளை ஒன்று சேர்த்து ஒரு க்ளிப் அணிந்து, மெல்லிய மேக்கப் அணிந்து ஷெல்ஃபிலிருந்த ஷோல்டர் பாக்கை திறந்து ஒரு நோட்டம் விட்டபின் வீட்டைப் பூட்டி திரும்பவும் ஆட்டோவில் ஏறி "கதீட்ரல் ரோடு" என்றபடி அமர்ந்தாள்.

 "கதீட்ரல் ரோடுல எங்கம்மா?" என்ற முத்துவிடம் "போங்க சொல்றேன்" என்றாள்.
அந்த சாலையில் சிறிது தூரத்தில் ஒரு STD பூத் சகிதம் இருந்த மருந்துக் கடை முன் ஆட்டோவை நிறுத்தச் சொல்லி இறங்கினாள். "வெயிட் பண்ணட்டுமாம்மா" என்ற முத்துவிடம் "இல்ல இங்க பக்கத்துலதான்" என்றபடி சவாரிக்கான பணத்தை கொடுத்து அவனை அனுப்பி STD பூத்தில் நுழைந்து அங்கு வைக்கப் பட்டிருந்த டெலிஃபோன் டைரக்டரியில் ஒரு எண்ணை குறித்துபின் டயல் செய்தாள்,

எக்ஸ்டென்ஷனை அமுக்கவும் என்ற ஆங்கிலக்குரலை கேட்டு மறுபடி சில எண்களை அமுக்கினாள். எதிர்முனையில் சில ரிங்குகளுக்கு பிறகு அழகான உச்சரிப்புடன் ஆங்கிலத்தில்

"ரூம் ஃபோர் நாட் எய்ட்" என்ற குரலை கேட்டு "இந்த குரலை எங்கியோ கேட்டிருக்கேனே?" என்று எண்ணியபடி "ஈஸ் இட் மிஸ்டர் அருண்?" என்று கேட்டு "எஸ்" என்ற பதிலை கேட்டதும்,

 "ஐ ஆம் ரீடா. ஜஸ்ட் வாண்டட் டு செக் இஃப் யு ஆர் இன் யுவர் ரூம்" என்ற பிறகு அவன் பதிலுக்கு காத்திராமல் "ஐ வில் பி தேர் இன் ஃபிஃப்டீன் மினிட்ஸ்" என்றபடி டிஸ்கனெக்ட் செய்தாள்.

 இரண்டு நாளைக்கு முன்னர் புக் செய்த கஸ்டமர் வரவில்லை ஷண்முகம் வேறு ஒரு கஸ்டமரை புக் செய்திருப்பதாக அவளது contact pointஆன முருகேசன் சொன்ன போது,

 "சே, முனிம்மாவுக்கு பதிலா நைட்டு அம்மாகூட இருந்திருக்கலாம். எல்லாம் என் அதிர்ஷ்டம் ..." என்று மனம் சோர்ந்திருந்தாள். அந்த கம்பீரமான குரலை கேட்டதும் அந்த குரலுக்குரியவனை பார்க்க வந்த ஆவலில் அவள் சோர்வு கொஞ்சம் குறைய,

மருந்து கடையில் ஒரு உயர்தர லூப்ரிகேட்டெட் காண்டம் ஒரு பாக்கெட் வாங்கி ஷோல்டெர் பாக்கில் போட்டபின் அருகிலிருக்கு அந்த ஐந்து நட்சத்திர ஹோட்டலை நோக்கி நடந்தாள்.



No comments:

Post a Comment