Tuesday, November 4, 2014

ஆண்மை தவறேல் - பாகம் 34


அடுத்து சில வருடங்கள் அசோக்கின் வாழ்க்கையில் நடந்த சில சம்பவங்களை, அவசரமாக புரட்டிப் பார்க்கலாமா..?? அடுத்த நாள் காலை.. அசோக்கும், நந்தினியும் காலை வெயிலை முகத்தில் வாங்கியவாறே.. பால்கனியில் நின்று காபி அருந்திக் கொண்டிருந்தார்கள்...!!

 "நைட்டு நல்லா என்ஜாய் பண்ணின போல..??" அசோக் குறும்பாக கேட்டான்.

 "அ..அதெல்லாம் ஒன்னுல்லையே..??" நந்தினி வெட்கமாக சொன்னாள்.
 "இல்ல இல்ல.. எனக்கு தெரிஞ்சது..!! ஹா.. ஹா..ன்னு செமையா சவுண்டு விட்ட.. உதட்டை இப்படி இப்படி கடிச்ச.. சரக்கடிச்ச மாதிரி கண்ணுலாம் செருகிக்கிச்சு.. எங்க நான் விலகிடுவேனோன்னு இறுக்கி புடிச்சு வச்சுக்கிட்ட..?? நான் கூட உன்னை என்னவோ நெனச்சேன் நந்தினி.. பயங்கரமான ஆளு நீ..!!" இரவு முழுதும் எல்லா சேட்டைகளும் செய்துவிட்டு, காலையில் தன்னையே கிண்டலடிக்கும் கணவனை நந்தினி கொஞ்ச நேரம் முறைப்பாக பார்த்தாள்.

அப்புறம், "ஆமாம்.. ஃபர்ஸ்ட் டைம் பண்றவங்களுக்குலாம் அப்படித்தான் இருக்குமாம்..!!" என்று குத்தலாக சொல்ல, அசோக் இப்போது முகம் சுருங்கிப்போய் 'டொய்ங்..' என்று நந்தினியை பார்த்தான். வாயை கப்சிப்பென இறுக்கி பொத்திக் கொண்டான்.




---------------------------

 "இவ மெக்சிகன்காரி.. இவ தாய்லாந்து.. இவ செக்கோஸ்லோவாகியா.. இவ நைஜீரியா.." அசோக் சொல்லிக்கொண்டே ஒவ்வொரு போட்டோவாக ஆல்பத்தில் இருந்து உருவி, தீயில் போட்டு எரித்துக் கொண்டிருந்தான்.

நந்தினி கணவனையே ஓரக்கண்ணால் முறைத்துக் கொண்டிருந்தாள். சற்றே கடுப்புடன் கேட்டாள்.

 "எந்த நாட்டைத்தான் விட்டு வச்சீங்க..??"

 "பிரேஸில்..!! பிரேஸில் பொண்ணுக எனக்கு ரொம்ப புடிக்கும் நந்தினி..
யூ.எஸ்ல இருந்தப்போ ரொம்ப ட்ரை பண்ணுனேன்.. கடைசிவரை ஒன்னும் சிக்கலை..!!"

 அசோக் சீரியஸாக சொல்லிக்கொண்டிருக்க, நந்தினி அவனுடைய உச்சந்தலையிலே நங் என்று குட்டு வைத்தாள். அவன் "ஆஆஆ..!!" என்று வலியில் கத்தினான்.

 ---------------------------

 அசோக்கும், நந்தினியும் அந்த டேபிளில் அருகருகே அமர்ந்திருந்தார்கள். டேபிளில் பன், கேக், டீ..!! அவர்களுக்கு எதிரே நாயர் அமர்ந்திருந்தார்..!! அசோக் நாயரை கெஞ்சிக் கொண்டிருந்தான்..!!

 "ப்ளீஸ் நாயர்.. இன்னொரு தடவை சொல்லு நாயர்..!!"

 "ஐயோ.. எத்தனை தடவை அதையே திரும்ப திரும்ப சொல்றது..??"

 "பரவால நாயர் சொல்லு.. கேக்குறதுக்கு செம காமடியா இருக்கு..!!"

 "போப்பா.. எனக்கு வெட்கமா இருக்கு..!!" நாயர் நிஜமாகவே வெட்கப்பட்டார்.

 "ப்ளீஸ் நாயர்..!!" "ம்ஹூம்.. நான் மாட்டேன்..!!" அவர் பிடிவாதமாக இருக்க, இப்போது நந்தினி அவரை கெஞ்சினாள்.

 "ப்ளீஸ் அண்ணா.. ஒரே ஒரு தடவை சொல்லுங்க.. ப்ளீஸ்..!!" அசோக் கெஞ்சிய போது மறுத்த நாயரால், நந்தினி கெஞ்சியதும் மறுக்க முடியவில்லை.

 'சரி.. ஒரே ஒரு தடவைதான்..!!' என்றவர், சேரில் இருந்து எழுந்து நின்று கொண்டார். தொண்டையை கனைத்துக் கொண்டு, தான் முதன்முதலில் அசோக்கை சந்தித்தபோது பேசிய வார்த்தைகளை இப்போது சற்றே உல்ட்டா செய்து பேசினார்.
 "ஐ ஆம் சசிதரன் நாயர்.. நம்மகிட்ட எல்லா விதமான பன்னும் இருக்குது மிஸ்டர் அசோக்.. ஸ்வீட் பன்னு, க்ரீம் பன்னு, பட்டர் பன்னு.. எனிடைப் யு வான்ட்..!!

நம்ம பேக்கரி எல்லா எடத்துலயும் கிடையாது.. ரொம்ப லிமிட்டட்.. திஸ் இஸ் த ஒன் அண்ட் ஒன்லி பிரான்ச்..!!

பன்னு சாம்பிள் தர்றேன்.. டேஸ்ட் பாக்குறீங்களா..?" நாயர் ஒரு பெரிய பிசினஸ்மேன் தோரணையுடன் சீரியசான குரலில் சொல்ல சொல்ல..

நந்தினியும், அசோக்கும் விழுந்து விழுந்து சிரித்துக் கொண்டிருந்தார்கள்.

 
---------------------------

 "இன்னொருவாட்டி..!!" இரண்டு மணியை போல விழித்துக்கொண்ட அசோக், நந்தினியை இம்சை செய்ய ஆரம்பித்தான்.

 "அல்ரெடி டூ டைம்ஸ் ஆச்சு..!! போதும்பா.. உடம்புலாம் வலிக்குது..!!" நந்தினி பாவமாக சொன்னாள்.

 "ப்ளீஸ் நந்தினி.. ப்ளீஸ்..!! இன்னும் ஒரே ஒரு தடவை..!!" அசோக் வெட்கமின்றி கெஞ்சினான்.

 "ஐயோ.. என்னங்க இது.. உங்களோட பெரிய தொல்லையாப் போச்சு..?? பேசாம உங்களை மறுபடியும் எங்கயாவது அனுப்பிடலாமான்னு பாக்குறேன்..!!"

 "எங்கயாவதுன்னா..??"

 "அதான்.. அந்த மாதிரி பொண்ணுங்ககிட்ட..!! என் உடம்பாவது பஞ்சராகாம இருக்கும்..!!"

 "அப்டியே அறைஞ்சு பல்லை உடைச்சிடுவேன்..!! பொண்டாட்டி புருஷன்ட்ட பேசுற பேசுறதை பாரு..!!"

 "ஹாஹாஹாஹா..!! சும்மா வெளையாட்டுக்கு சொன்னேன்டா.. கோவிச்சுக்கிட்டியா..?? வா..!! புருஷனுக்கு இதை கூட பண்ணலைன்னா.. அப்புறம் அவள்லாம் என்ன பொண்டாட்டி..?? வா..!!" 

--------------------------- "

.................... எனக்கு ஆரம்பத்துல இருந்தே இந்தப்பய மேலே டவுட்டுதான்.. 'என்னடா இவன் பார்வையே சரியில்லையே..'ன்னு தோணும்..!!

சரி என்னதான் பண்றான்னு ஓரக்கண்ணால பாத்துட்டு இருந்தேன்.. அப்படியே ஏக்கமா பாத்துட்டு இருந்தவன்.. பட்டுன்னு மேல கை வச்சுட்டான்..!!

அவ்வளவுதான்.. எனக்கு வந்துச்சு பாரு கோவம்.. விட்டேன் ஒன்னு கன்னத்துல பளார்னு..!!"

 "ம்ம்.. அப்புறம்..??"

 "அப்புறம் என்ன..?? ஏதோ ஆத்திரத்துல பட்டுன்னு அறைஞ்சுபுட்டேன்.. ஆனா.. அறைஞ்சப்புறந்தான் கொஞ்சம் அவசரப்பட்டுடோமோன்னு தோணுச்சு..!!

இப்படி ஒரு ஆம்பளையை கை நீட்டி அடிச்சுப்புட்டமே.. ஆபீஸ்ல வேற யாருமே இல்லையே.. இவன் பாட்டுக்கு கோவத்துல ஏடாகூடமா ஏதாவது பண்ணிப்புட்டான்னா..?? 'ஐயோ.. என்ன பண்ணப் போறானோன்னு.. பயந்துக்கிட்டே இவன் முகத்தை நிமிர்ந்து பாத்தா.."

 "ம்ம்ம்.."

 "இந்த வெக்கங்கெட்ட பய.. கொஞ்சம் கூட சொரணையே இல்லாம.. 'ஈஈஈஈஈ..'ன்னு இளிச்சுட்டு நிக்கிறான்..!!"

 "ஹாஹாஹாஹா..!!" கற்பகம் சொன்னதைக்கேட்டு நந்தினி சிரிக்க.. ஒருகையால் சாதத்தை பிசைந்துகொண்டே, ஓரக்கண்ணால் மனைவியையும் கற்பகத்தையும் மாறி மாறி முறைத்துக் கொண்டிருந்த அசோக்..

இப்போது இன்னொரு கையால் நந்தினியின் காதை பிடித்து திருகினான். அவ்வளவு நேரம் எளிறுகள் தெரிய சிரித்துக் கொண்டிருந்த நந்தினி.. இப்போது வலியில் கத்தினாள்..!!

 "ஆஆஆஆ...!!" "ஏண்டி.. சாப்பாடு கொண்டு வந்தவளுக்கு.. இப்போ இந்தக்கதையை கேக்கனும்னு ரொம்ப அவசியமோ..??" என்று நந்தினியை திட்டிய அசோக்,

 இப்போது கற்பகத்திடம் திரும்பி.. "ஏய்.. அவதான் ஏதோ அறிவில்லாம கேக்குறான்னா.. நீ வேற..?? வேலை நேரத்துல இங்க என்ன வெட்டிப்பேச்சு.. போ.. வேலைய பாரு போ..!!" என்று எரிந்து விழுந்தான்.

 கற்பகம் சேரில் இருந்து எழுந்தாள். அசோக்கையே கொஞ்ச நேரம் முறைத்துப் பார்த்துவிட்டு சொன்னாள்.

 "போடா..!! நாய்.. பேய்.. எருமை.. பன்னி..!!!" அவள் திட்டியதில் அசோக் மிரண்டு போனான். 

"ஏய்.. கற்பு.. என்ன இது.. இப்படி கேப்பில்லாம திட்டுற..??"

 "உன்னை எப்படி வேணா சொல்லி திட்டிக்கலாம்னு.. உன் பொண்டாட்டி எனக்கு ஃபுல் லைசன்ஸ் கொடுத்துட்டா..!!

மவனே செத்த இனிமே நீ..!!"

 ---------------------------

 பாஸ்டனில் ஒரு பிஸியான சாலை.. வெளியே நிழற்குடைகளுடன் கூடிய ஒரு ரெஸ்டாரன்ட்.. அசோக் ரோட்டில் செல்லும் வாகனங்களை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க.. நந்தினி கைக்கொன்றாக இரண்டு கப்புகளுடன் வந்தாள்..!!

 "ஹப்பா.. எப்படியோ தேடிப்புடிச்சு குக்கு மில்க்ஷேக் அரேஞ்ச் பண்ணியாச்சு.. இந்தாங்க..!!" ஒரு கப்பை அசோக்கிடம் நீட்டிக்கொண்டே, நந்தினி உற்சாகமாக சொல்ல,

 "ஏண்டி இப்படிலாம் பண்ற..?? ஹனிமூன் வந்த எடத்துல இப்படி ஒரு ஆசையாடி உனக்கு..??" அசோக் சலிப்பாக கேட்டான்.

 "ப்ச்.. என்னங்க நீங்க..?? இது எனக்கு எத்தனை நாள் ஆசை தெரியுமா..??

கல்யாணம் ஆறதுக்கு முன்னாடி இருந்தே..!!"


 "அதுக்காக இப்படியா..?? அங்க பாரு..!!"



ரெஸ்டாரன்ட் கண்ணாடியில் தெரிந்த தனது உருவத்தை, அசோக் அவளிடம் காட்டினான். அவன் கல்லூரி படிக்கையில் எப்படி இருந்தானோ அதே கெட்டப்பில் இப்போது இருந்தான்.

மீசை, தாடி மழிக்கப்பட்ட மொழு மொழு முகம்.. நடு வகிடு எடுத்து படிய வாறப்பட்ட எண்ணெய் வழியும் தலை..

சோடாபுட்டி கண்ணாடி மாட்டப்பட்ட கண்கள்.. நெற்றியில் விபூதி பட்டை.. கழுத்தில் ருத்ராட்ச கொட்டை.. சட்டையின் காலர் பட்டன் போடப்பட்டு கழுத்தை இறுக்கிக் கொண்டிருந்தது..!!

 "பாருடி அங்க.. பட்டையும் கொட்டையும்..?? நான் எம்.பி.ஏ படிச்ச ஊர்டி இது.. இதே தெருல பலப்பல பொண்ணுகளோட… பந்தாவான கெட்டப்புல.. ஹீரோ மாதிரி சுத்திருக்கேன்.. எவனாவது என்னை இப்போ இந்த கோலத்துல பாத்தா என்ன நெனைப்பான்..??"

 "ஒன்னும் நெனைக்க மாட்டாங்க.. யாரு இந்த அமுல் பேபின்னு ஆச்சரியமா பாப்பாங்க..!!"

 "ம்க்கும்..!! ஆமா.. இந்த பட்டை கொட்டைலாம் எப்படி உனக்கு யூ.எஸ்ல கெடைச்சது..??"

 "இந்தியால இருந்து வர்றப்போவே பேக் பண்ணி கொண்டாந்துட்டேன்..!!"

 "ம்ம்ம்.. ப்ளான் பண்ணியே வந்திருக்குற நீ..??"

 "ஹிஹி.. ஆமாம்..!!" சரி.. அப்டியே மில்க்ஷேக் சிப் பண்ணிக்கிட்டே ஸ்டார்ட் பண்ணுங்க..!!"

 "ஸ்டார்ட் பண்ணவா..?? என்னத்த..??"

 "ப்ச்.. எனக்கு ப்ரொபோஸ் பண்ணுங்கப்பா..!!"

 "ஏண்டி.. லூசாடி நீ..?? கல்யாணம் முடிஞ்சு ஒரு வருஷம் ஆச்சு.. கர்ப்பத்தோட ஹனிமூன் வந்திருகோம்..!! இப்போ போய் காதலிக்கிறியான்னு ப்ரொபோஸ் பண்ணனுமா உனக்கு..??"

 "ப்ளீஸ் அசோக்.. பண்ணுங்க..!! நான் இதை நெனைச்சு எத்தனை நாள் ஃபீல் பண்ணிருக்கேன் தெரியுமா..?? ப்ளீஸ்.. ப்ளீஸ்.. ப்ளீஸ்..!!" நந்தினி கெஞ்ச, அசோக் கொஞ்ச நேரம் அவளையே சலிப்பாக பார்த்தான்.

அப்புறம் வேண்டா வெறுப்பாக அவளிடம் கேட்டான்.

 "நான் உன்னை லவ் பண்றேன் நந்தினி..!! உனக்கு என்னை புடிச்சிருக்கா..?? என்னை கல்யாணம் பண்ணிக்கிறியா..??" அசோக் அவ்வாறு எங்கேயோ பார்த்துக்கொண்டு, ஏனோதானோவென்று சொல்ல.. நந்தினியோ மிகவும் உணர்ச்சிவசப்பட்டு..

அவளுடைய கண்கள் எல்லாம் கலங்கிப்போய்.. உள்ளமெல்லாம் காதல் ஊற்று பொங்கிப் பெருக..

 "யெஸ் அசோக்..!! ஐ லவ் யூ.. ஐ லவ் யூ ஸோ மச்..!! இந்த ஜென்மம் மட்டும் இல்ல.. எத்தனை ஜென்மம் எடுத்தாலும்.. உங்க கூடத்தான் நான் வாழனும்..!!"

 என்று சொல்லியவள், அவனை இறுக்கி அணைத்துக்கொண்டு அவனுடைய மார்பில் முகம் புதைத்து அழுதாள்.

 
---------------------------

 புருஷோத்தமன் வீட்டுக்கு விசிட் விட்டிருந்தார்கள். அசோக், நந்தினி, புனிதா மூவரும் டைனிங் டேபிளில் அமர்ந்திருக்க.. புருஷோத்தமன் தான் சமைத்த உணவை.. தானே அனைவருக்கும் பரிமாறிக் கொண்டிருந்தான்.

 "நல்லா வச்சுக்கோங்க நந்தினி..!!" 

"ஹையோ.. போதுங்க புருஷோத்தமன்..!!"

 "என்ன இப்படி சாப்பிடுறீங்க நீங்க..?? நீங்க நல்லா சாப்பிட்டு தெம்பா இருந்தாத்தான.. இவனை நல்லா கவனிச்சுக்க முடியும்..??"

 "ம்ம்..!! உங்களை நெனச்சா எனக்கு ரொம்ப பெருமையா இருக்குதுங்க புருஷோத்தமன்..!! வீட்ல எல்லா வேலையும் நீங்களே செய்றீங்க.. பிரம்மாதமா சமைக்கிறீங்க.. பொண்டாட்டிக்காக ஒவ்வொன்னும் பாத்து பாத்து செய்றீங்க.. இதுக்குலாம் ஒரு பெரிய மனசு வேணும்.. யு ஆர் ரியல்லி கிரேட்..!!"

 "ஹாஹா.. அதெல்லாம் ஒன்னும் மேட்டரே இல்லைங்க..!! எனக்கு உங்களை நெனச்சாத்தான் ரொம்ப பெருமையா இருக்கு..!! எப்படி இருந்த அசோக்கை.. தனி ஆளா போராடி.. இப்படி பொண்டாட்டிதாசனா மாத்திட்டீங்களே..?? நீங்கதான் உண்மைலேயே கிரேட்..!!" நந்தினியும், புருஷோத்தமனும் ஒருவரை மாற்றி ஒருவர் புகழ்ந்து கொண்டிருக்க..

புகழும்போதே சைக்கிள் கேப்பில் அசோக்கிற்கு ஊசி ஏற்றிக்கொண்டிருக்க.. அவன் இருவரையும் சில வினாடிகள் மாறி மாறி முறைத்தான்..!!

அப்புறம் மனைவியிடம் கேஷுவலான குரலில் சொன்னான்.

 "ஹேய் நந்தினி.. புருஷு உனக்கு ஒரு நிக் நேம் வச்சிருக்கான் தெரியுமா..?? உன்னை பத்தி பேசுறப்போலாம்.. அந்த பேரை வச்சுத்தான் உன்னை மென்ஷன் பண்ணுவான்..!!"

 "அப்படியா.. என்ன அது..??" நந்தினி ஆர்வமாக கேட்க,

 "டேய்.. அசோக் வேணாண்டா..!!" புருஷோத்தமன் பதறினான்.

 "ஏய்.. இருடா.. அவளும் தெரிஞ்சுக்கட்டும்..!!"

 "ஐயோ.. சீக்கிரம் சொல்லுங்கப்பா..!!" நந்தினியால் பொறுக்க முடியவில்லை.

 "சுள்ளான் குஞ்சு..!!!!" அசோக் கூலாக போட்டுக்கொடுக்க,

 "என்னது..???? சுள்ளான் குஞ்சா..??? ஐயையே..!!" நந்தினி முகத்தை சுளித்தாள். புருஷோத்தமன் இப்போது அவளிடம் கெஞ்சினான்.

 "ஐயோ.. நந்தினி.. ஸாரிங்க நந்தினி.. அது.. அப்போ.. காலேஜுல ஏதோ தெரியாம.."

 "ஹேய் புருஷு.. நீ என்னடா இதுக்குலாம் போய் ஃபீல் பண்ணிக்கிட்டு..?? அவளுந்தான் உனக்கு ஒரு நிக்நேம் வச்சிருக்கா.. அதுக்காகலாம் அவ ஃபீல் பண்ணிட்டா இருக்கா..?? ஃப்ரீயா விடு மச்சி..!!"

 "எனக்கு நிக்நேமா..?? என்ன அது..??" புருஷோத்தமன் சற்று உதறலாகவே கேட்டான்.

 "என்னங்க.. ப்ளீஸ்ங்க.. வேணாங்க.. ப்ளீஸ்..!!" நந்தினி கெஞ்ச கெஞ்சவே, "கஞ்சா குடிக்கி..!!!" அசோக் கேஷுவலாக சொல்லிவிட்டு, கவலையே இல்லாமல் தட்டில் இருந்த சாப்பாட்டை சாப்பிட ஆரம்பித்தான்.

 புனிதா புரையேறும் என்ற கவலை கூட இல்லாமல், கலகலவென சிரித்தாள். புருஷோத்தமனும், நந்தினியும் விளக்கெண்ணை குடித்தவர்கள் மாதிரி, ஒருவரை ஒருவர் பார்த்து திருதிருவென விழித்தார்கள்.

 ---------------------------

 "டெய்லி ஒண்ணுன்னு இருந்தது.. அப்புறம் வீக்லி ஒண்ணாச்சு.. இப்போ மன்த்லி ஒரே ஒரு லார்ஜ்..!! அதையும் விட சொன்னா எப்படி நந்தினி..??"

 "உங்களை யாரு விட சொன்னா..?? குடிச்சா என் பக்கத்துல வராதீங்கன்னுதான சொன்னேன்..??"

 "ம்ஹூம்.. அது மட்டும் முடியாது.. நீ வேணும் எனக்கு.. நீ பக்கத்துல இருந்தாத்தான் எனக்கு தூக்கமே வரும்..!!"

 "அப்போ குடிக்காதீங்க.. பார்ட்டிக்கு வேணுன்னா சும்மா போயிட்டு வாங்க..!!"

 "விடு.. நான் பார்ட்டிக்கே போகலை..!!" அசோக் சலிப்பாக சொல்ல,

 "நெஜமாவா..???" கொள்ளை சந்தோஷமாய் கேட்டாள் நந்தினி.

 "ஆனா ஒரு கண்டிஷன்..!!" "என்ன..??" "இன்னைக்கு எனக்கு குலோப் ஜாமூன் பண்ணி தரணும்..!!"

 "ஹாஹா.. அதுக்கென்ன.. பண்ணித்தரேன்.. போதுமா..??"

 "பண்ணித்தந்தா பத்தாது.. ஊட்டி விடனும்..!!"

 "சரி.. ஊட்டி விடுறேன்.. போதுமா..??"

 "கையால இல்ல.. லிப்ஸால..!!"

 "ஐயோ.. ஊட்டி விடுறேண்டா.. போதுமா..??" வெட்கத்துடன் சொல்லிவிட்டு நந்தினி கணவனையே ஆசையாக பார்த்தாள்.

அசோக்கும் அவளுடைய முகத்தையே விழுங்கி விடுவது மாதிரி பார்த்தான். அப்புறம் அவளுடைய ஈர உதடுகளை ஒற்றை விரலால் தடவிக்கொண்டே, குறும்பான குரலில் சொன்னான்.

 "இந்த லிப்ஸால இல்ல..!!"

 "அப்புறம்..???" நந்தினி குழப்பமாய் கேட்க, அசோக் அதற்கு பதில் சொல்லவில்லை.

குறும்பாக கண் சிமிட்டினான். அவனுடய மட்டமான ஆசையை லேட்டாகவே புரிந்து கொண்ட நந்தினி, "ச்ச்சீய்...!!!!" என்று வெட்கத்தில் குப்பென சிவந்து போன முகத்தை, இரு கைகளாலும் பொத்திக் கொண்டாள்.




---------------------------

 "ப்ளீஸ் சிஸ்டர்.. என் வொய்ஃபையும் குழந்தையையும் எப்படியாவது காப்பாத்திடுங்க..!!" ஆபரேஷன் தியேட்டர் வாசலில் நின்றிருந்த அந்த நர்ஸிடம், அசோக் கெஞ்சலாக சொன்னான்.

இவளிடம் கெஞ்சுவதில் எந்த பலனும் இல்லை என்று அவனுடைய புத்திக்கு தெரிந்திருந்தாலும், நிறைமாத கர்ப்பிணியான மனைவி மீது கொள்ளை கொள்ளையாய் காதல் கொண்டிருந்த, இப்போது பதைபதைத்துப் போய் இருந்த அவனது மனம், மூளை இட்ட கட்டளைகளை எல்லாம் மதிக்கவில்லை.

 கண்களும் அவனுடைய கட்டுப்பாடின்றி கண்ணீரை உகுத்தன. "அழாதப்பா.. உன் பொண்டாட்டிக்கும், புள்ளைக்கும் ஒன்னும் ஆவாது.. ரெண்டும் நல்ல படியா பொழைச்சு வருவாங்க..!!" ஆறுதல் சொன்ன, அந்த கரடு முரடான தோற்றம் கொண்ட ஆசாமியை அசோக் ஸ்னேஹமாக பார்த்து புன்னகைத்தான்.

பயத்திலும், படபடப்பிலும் இருந்தவனுக்கு அவருடைய வார்த்தைகள் மிக இதமாக இருந்தன. எல்லாம் நல்லபடியாக நடக்கும் என்று ஒருவித புது நம்பிக்கை அவனுக்குள் பிறக்க காரணமாய் இருந்தன அந்த வார்த்தைகள்.

மேலும் ஒரு இரண்டு நிமிடங்கள் கழித்து..

 "என் பேர் அசோக்.. என் வொய்ஃப் பேரு நந்தினி..!!" என்றான் அவரிடம்.

 "அப்படியா..?? என் பொண்ணு பெரும் நந்தினிதான்..!!" அந்த ஆள் ஆச்சரியமாக சொன்னார்.

 "ஓ..!! உங்க பேரு..??"

 "சூசை..!!"
 ---------------------------

 வெள்ளைத்துணி சுற்றப்பட்ட ஆண்குழந்தை கையையும் காலையும் ஆட்டிக்கொண்டு கிடக்க.. குழந்தையை சுற்றி அனைவரும் வட்டமாக அமர்ந்திருந்தார்கள். அசோக், நந்தினி, மஹாதேவன், கௌரம்மா, ராமண்ணா..!! யாரும் சப்தமே எழுப்பவில்லை.

அனைவரும் அமைதியாக தாடையை சொறிந்தவாறு, ஏதோ தீவிர யோசனையில் இருந்தார்கள். அசோக்தான் திடீரென முதலில் கத்தினான்..!!

 "ஆங்... நான் ஒரு பேர் சொல்றேன்.. எப்படி இருக்குன்னு எல்லாரும் சொல்லுங்க..!!"

 "ம்ம்.. சொல்லு தம்பி..!!" - இது ராமண்ணா.

 "என் பேரையும், நந்தினி பேரையும் மிக்ஸ் பண்ணி ஒரு பேர்..!!"

 "ஆஹா.. நல்ல ஐடியாவாதான் இருக்கு.. என்னன்னு சொல்லு..!! - இது கௌரம்மா.
 "ரொம்ப பொருத்தமான பேர் வேற..!!"

 "ஐயோ.. இப்போ சொல்லப் போறீங்களா இல்லையா..??" - இது பொறுமையற்ற நந்தினி.

 "ஆனந்த்..!!!!!" அசோக் சொல்லிவிட்டு, "எப்படி இருக்கு..??" என்று எல்லோருடைய முகத்தையும் பார்த்தான்.

 
"வாவ்...!!! நைஸ் நேம்..!!!" நந்தினி உட்பட அனைவருமே சந்தோஷத்தையும், திருப்தியையும் வெளிப்படுத்தினார்கள். மஹாதேவன் இப்போது பேரனை ஆசையாக அள்ளி எடுத்தார்.

கண்களில் நீர் பனிக்க, உணர்ச்சிவசப்பட்டுப் போய் குட்டிப்பையனை கொஞ்சினார்.

 "ஆனந்த்..!!!! ஆனந்தத்தை அள்ளி கொண்டுவந்தவனாடா கண்ணா நீ..?? இனி இந்த வீட்டுல ஆனந்தத்தை தவிர வேற எதுவும் இல்லைன்னு சொல்ல வந்தவனாடா ராஜா..???"

 ---------------------------

 "ஐயோ.. வேணாம்த்தான்.. எனக்கு ரொம்ப பயமா இருக்கு..!!!" வந்தனா கெஞ்சினாள்.

 "ஹையோ.. என்ன வந்தனா நீ..?? எல்லாம் உன் நல்லதுக்காகத்தான் பண்றோம்னு கூட.. ஏன் நீ புரிஞ்சுக்க மாட்டேன்ற..??" அசோக் அவளை கன்வின்ஸ் செய்ய முயன்றான்.

 "இப்போ எனக்கு கல்யாணத்துக்கு என்னத்தான் அவசரம்..?? இன்னும் ரெண்டு வருஷம் போகட்டுமே..??"

 "புரியாம பேசாத..!! இந்த மாதிரி ஒரு நல்ல சம்பந்தம் கெடைக்கிறது ரொம்ப கஷ்டம்.. ரொம்ப டீசன்டான ஃபேமிலி.. பையன் ரொம்ப நல்ல மாதிரியா தெரியிறான்.. நல்லா படிச்சிருக்கான்.. கை நெறைய சம்பாதிக்கிறான்..!!"

 "ம்க்கும்.. எல்லாம் நல்லாத்தான் இருக்கு.. ஆனா அவர் மூஞ்சியை பாத்தாத்தான் ரொம்ப பயமா இருக்கு.. ராஜ்கிரண் மாதிரி இருக்காரு அத்தான்..!!"
 "ப்ச்..!! மூஞ்சியை பாத்துலாம் லைப் பார்ட்னர் டிஸைட் பண்றது ரொம்ப தப்பு வந்தனா..!! அப்டிலாம் பாத்திருந்தா.. உன் அக்காவுக்குலாம் கல்யாணம் நடந்திருக்குமான்னு கொஞ்சம் யோசிச்சுப் பாரு..!!" மச்சினியை சமாதானம் செய்யும் சாக்கில், மனைவியை நக்கலடித்த அசோக்கை, நந்தினி திரும்பி பார்த்து உஷ்ணமாக முறைத்தாள்.

 வந்தனாவின் கல்யாணம் முடிந்து ஆறு மாதங்கள் கழித்து ஒருநாள்..

 "ரொ..ரொம்ப பயமா இருக்கு சகலை.. இ..இன்னைக்கு ஒருநாள் உங்க வீட்டுல படுத்து தூங்கிட்டு.. காலைல போறேனே..??" வந்தனாவின் கணவன் வாய் குழற கெஞ்சினான்.

 "நோ நோ..!! வந்தனா வீட்டுல தனியா இருப்பா.. நீ வீட்டுக்கு கெளம்பிடு சகலை.. என்னை சிக்கல்ல மாட்டி விட்டுடாத..!!" காலியான விஸ்கி பாட்டிலை தூக்கி எறிந்தவாறே அசோக் சொன்னான்.

 "இரக்கமே இல்லாம இப்படி சொல்றீங்களே.. குடிச்சுட்டு போனேன்னு தெரிஞ்சா.. என்னை வெரட்டி வெரட்டி அடிப்பா சகலை..!!"

 "யோவ்.. பொலம்பாதையா.. பொண்டாட்டிதான..?? அடிச்சா வாங்கிக்கோ.. போ..!!"
 "ம்ம்ஹ்ஹ்ம்ம்..!! வாங்கிக்கிறேன்.. வாங்கிக்கிறேன்.. வேற என்ன பண்றது..?? ஆமாம்.. உங்களை ஒன்னு கேக்கனும்னு நெனச்சேன்..!!"

 "என்ன..??" "தங்கச்சி மட்டுந்தான் இப்படியா.. இல்ல அக்காவுமா..??" அவன் கேட்டு முடித்து வெகுநேரம் ஆகியும், அவனுடைய கேள்வி காதிலேயே விழாத மாதிரி, அசோக் வேறெங்கோ பார்வையை திருப்பிக்கொண்டு அமைதியாக இருக்க..

சிலவினாடிகள் அவனையே கேவலமாக பார்த்துவிட்டு.. 'த்தூ..!!' என்று மனதுக்குள் ரகசியமாய் துப்பிக் கொண்டான் அந்த ராஜ்கிரண்..!!

 
---------------------------
 "கேடி சொல்டா கண்ணா..!! கே..டி..!! கே.... டி... கேடி..!! சொல்லு.. கேடி..!!" பையனிடம் மிக சீரியஸாக நந்தினி சொல்லிக்கொண்டிருக்க, அவளையே ஓரக்கண்ணால் முறைத்துக் கொண்டிருந்த அசோக், இப்போது கையிலிருந்த புத்தகத்தை தூக்கி எடுந்துவிட்டு, மனைவி மீது பாய்ந்தான்.

 "ஆஆஆஆஆஆவ்வ்வ்..!!!" என்று அவள் அலற அலற.. அவளுக்கு மூச்சு திணற திணற.. அவள் மீது படர்ந்து அவளை நசுக்கினான்..!!

 "ஏண்டி.. கொழந்தைக்கு டாடி சொல்லிக் குடுடின்னா.. கேடின்னா சொல்லி குடுக்குற..??"

 "ஹஹாஹஹாஹஹா...!! நான் சரியாத்தான் சொல்லிக் குடுக்குறேன்.. டாடியா நீங்க..? சரியான கேடி..!!" அசோக் இப்போது கடுப்பானான்.

அவளுடைய நைட்டிக்குள் கை விட்டு, அவளுடைய தொடையில் நறுக்கென கிள்ளி வைத்தான். நந்தினி வலியில் துடித்தாள்.

 "ஆஆஆ..!! தொடைல கிள்ளாதீங்கன்னு எத்தனை தடவை சொல்றது.. வலிக்குது..!! ஷ்ஷ்ஷ்ஷ்.. ஆஆஆ...!!"

 "ஆமாம் தொடைல கிள்ளுனா வலிக்கத்தான் செய்யும்.. கொஞ்சம் மேல ஏத்தி கிள்ளவா.. சொகமா இருக்கும்..!!" சொல்லிக்கொண்டே அசோக் தனது கையை சற்று மேலே நகர்த்த, நந்தினி.. "ச்ச்சீய்..!!!" என்றவாறு பட்டென அவனுடைய கையை தட்டிவிட்டாள்.

தன் மீது படர்ந்திருந்த கணவனையே கொஞ்ச நேரம் காதலாக பார்த்தாள். அசோக்கும் அவளுடைய முகத்தை ஆசையாக பார்த்துக் கொண்டிருந்தான்.

பிறகு அவளை பார்த்து குறும்பாக கண்சிமிட்ட,

 "கேடி..!!!" என்றாள் நந்தினி வெட்கமும், சிரிப்புமாய். "கேயீ..!!!" அந்தப்பக்கம் ஆனந்தும் அம்மா சொன்னதை ரிப்பீட் செய்துவிட்டு, எலிப்பற்களை காட்டி கெக்கலித்தான்.




[ சுபம் ]



No comments:

Post a Comment