Tuesday, September 30, 2014

ஆண்மை தவறேல் - பாகம் 20



நந்தினியின் கைகள் இரண்டும் காய்கறிகள் நறுக்குவதில் பிஸியாக இருந்தன. ஒரு கையால் கேரட்டை பிடித்துக்கொண்டு, இன்னொரு கையிலிருந்த கத்தியால் அதை ஸ்லைஸ் போட்டுக் கொண்டிருந்தாள். அவளுடைய தலை ஒருபக்கமாக சாய்ந்து, காதுக்கு கொடுத்திருந்த செல்போன் கீழே விழுந்து விடாமல் இருக்க, தோள்ப்பட்டையோடு சேர்த்து அழுத்திக் கொண்டிருந்தது.

மறுமுனையில் ரிங் போய்க்கொண்டிருந்தது. கால் பிக்கப் செய்யப்பட்டதும்.. "ஹலோ.." என்றாள்.

 "ஹலோ.." என்றான் அடுத்த முனையில் அசோக்.

 

"என்னங்க பண்ணிட்டு இருக்குறீங்க..?"

 "IPL மேட்ச் பாத்துட்டு இருக்குறேன் நந்தினி.."

 "மேட்ச்சா..?? ஆபீஸ்ல ஏது டிவி..??" 

"ஆபீஸ்ல இல்லம்மா.. ஸ்டேடியத்துல..!!"

 "ஸ்டேடியத்துலயா..??" நந்தினி ஆச்சரியமாக கேட்டாள்.

 "ம்ம்.. சேப்பாக்கத்துல இருக்கேன்.. சென்னை பேட்டிங்..!!"

 "ஓ.. அப்போ இன்னைக்கு வீட்டுக்கு வர லேட் ஆகுமா..?"

 "ஆமாம்.. லெவன், லெவன் தேர்ட்டி ஆயிடும்..!! அதுசரி.. நீ எதுக்கு கால் பண்ணின..??"

 "சும்மாதான்.. கேரட் சாம்பார் வைக்க போறேன்.. பீன்ஸ் பொரியல்.. உங்களுக்கு ஓகேவா..?"

 "ம்ம்.. ஓகே ஓகே.."

 "இல்ல.. காலிஃப்ளவர் ஃப்ரை ..??"

 "ப்ச்.. நீ எது பண்ணினாலும் எனக்கு ஓகேதான்மா..!!"

 "சரி.. காலிஃப்ளவர் ஃப்ரை பண்றேன்..!! சாப்பிட வீட்டுக்கு வந்துடுவீங்கள்ல..?"

 "வந்துடுவேன்.. ஆனா.. கொஞ்சம் லேட் ஆகும்..!!"

 "பரவால.. நீங்க வாங்க.. நான் வெயிட் பண்ணுறேன்..!! இப்போ.. மேட்ச் நல்லா என்ஜாய் பண்ணுங்க..!! சரியா..?? பை..!!"

 "பை..!!" சொன்ன அசோக் காலை கட் செய்து, செல்போனை பாக்கெட்டில் போட்டுக் கொண்டான். அவனுடய வலது கையை நகர்த்தி, கார் பின் சீட்டில் அவனுக்கு அருகே அமர்ந்திருந்த அந்த பெண்ணின் தோளை சுற்றி போட்டுக் கொண்டான். இறுக்கமான ப்ளவுசின் பிடியில் சிக்கி, விம்மிப்போய் காட்சியளித்த அவளது புஜத்தை அழுத்தமாக பற்றினான்.

அந்தப்பெண் அழகாக இருந்தாள். அரக்கு நிறத்தில் புடவை அணிந்திருந்தாள். வயது முப்பதிலிருந்து முப்பத்தைந்துக்குள் இருக்கலாம். சந்தனத்தை பாலில் கலந்த மாதிரியொரு மேனி வண்ணம். சற்றே புஷ்டியான தேகக்கட்டு. அவளுடைய நெற்றி குங்குமத்தை வாங்கியிருந்தது. அவளது கழுத்தில் தாலிச்சரடு தொங்கியிருந்தது. காருக்குள் எரிந்த விளக்கின் வெளிச்சத்தில், அவளுடைய களையான முகம் மேலும் பிரகாசித்தது.




அசோக் ஒரு சில வினாடிகள் அவளுடய அழகை ரசித்தான். இதுவரை அவன் பார்த்த பெண்களில் இவள் சற்று வித்தியாசமானவளாக அவனுக்கு தோன்றியது. விலைமாது என்பதற்கான அறிகுறி, துளி கூட அவள் முகத்தில் தென்படவில்லை. ஒரு மாதிரி குழந்தைத்தனமான முகம். மருட்சியான, அப்பாவித்தனமான பார்வை. அவளிடம் ஒரு படபடப்பு தென்பட்டதை அசோக்கால் உணர முடிந்தது.

அந்த படபடப்பின் காரணமாக அவளுடைய நெற்றியிலும், மேலுதட்டின் மேலும் பூத்திருந்த வியர்வை துளிகள், அசோக்கிற்கு ஒரு கிறக்கத்தை உண்டு பண்ணின.

 "உன் பேர் என்ன..??" அசோக் அவளிடம் ஹஸ்கியான வாய்ஸில் கேட்டான்.

 "ம..மஞ்சு.." "ம்ம்.. நைஸ் நேம்..!!" அசோக் அவளுடைய வலது புஜத்தை பிசைந்து கொண்டே சொன்னேன். அப்புறம் தலையை கொஞ்சமாய் குனிந்து, அவளுடைய இடது புஜத்தில் முகத்தை வைத்து மெல்லமாய் தேய்த்தான். தன் உதடுகளை குவித்து, அந்த புஜத்தில் பதித்து, ஒற்றி எடுத்தான்.

மஞ்சுவிடம் இப்போது லேசான குறுகுறுப்பு..!! அவள் மூச்சை இழுத்து பிடித்ததில், அவளது பருத்த மார்புகள் ரெண்டும் குபுக்கென்று மேலெழுந்தன..!! முத்தமிட்டுவிட்டு எதேச்சையாக பார்வையை திருப்பிய அசோக், சற்றே அதிர்ந்து போனான். அவனுடைய அதிர்ச்சிக்கு காரணம்.. முன் சீட்டில் அமர்ந்திருந்த நாயர், இப்போது பின்பக்கமாக திரும்பி, இவர்கள் இருவரையும் பார்த்து 'ஈ..!!!' என இளித்துக் கொண்டிருந்தார்.

உடனே எரிச்சலான அசோக், "யோவ்.. வண்டியை எடுன்னு சாவியை கொடுத்தா.. வாயை பொளந்துக்கிட்டு பின்னாடி பாத்துட்டு இருக்குற..?" என்று கத்தியதும் நாயரின் முகம் பட்டென சுருங்கிப் போனது.

 "இ..இல்ல.. உனக்கு கால் வந்ததில்ல..?" என்றார் தடுமாற்றமாய்.

 "எனக்கு கால் வந்ததுக்கும், நீ காரை ஸ்டார்ட் பண்றதுக்கும் என்ன கனெக்ஷன்..? வண்டியை கெளப்புயா..!!" அசோக்கின் முகத்தையே பரிதாபமாக பார்த்த நாயர், அப்புறம் அந்தப்பக்கமாய் திரும்பிக் கொண்டார்.

சாவியை துவாரத்தில் நுழைத்து இன்ஜினை ஸ்டார்ட் செய்துகொண்டே, சலிப்பாக வாய்க்குள் முணுமுணுத்தார்.

 "ம்க்கும்.. இவனுக்கு புரோக்கர் வேலை பாக்குறது பத்தாதுன்னு.. ட்ரைவர் வேலை வேற பாக்கணும்.. இதுல அதிகாரம் வேற..!!"

 "என்னய்யா.. மொனங்குற..?" அசோக் கேட்க,

 "எங்க போறதுன்னு கேட்டேன்.." நாயர் இப்போது சத்தமாக சொன்னார்.

 "என்ன.. புதுசா கேக்குற..? கெஸ்ட் ஹவுசுக்குத்தான்..!!" 

"அப்ப.. சாப்பாடு..??" "மொதல்ல எங்களை கொண்டு போய் அங்க விட்டுட்டு.. அப்புறம் நீ போய் பார்சல் வாங்கிட்டு வா..!!" அசோக் அலட்சியமாக சொல்ல நாயர் மேலும் கடுப்பானார். மீண்டும் வாய்க்குள் முணுமுணுத்தார்.

 "எடுபுடி வேலை வேற..!!" சலித்துக்கொண்டே நாயர் கியர் மாற்றி வண்டியை கிளப்பினார். அந்த குறுகிய சந்தில் இருந்து வெளிப்பட்டு பிரதான சாலையை அடைந்ததும், பெசன்ட் நகர் நோக்கி காரை திருப்பினார். இப்போது அசோக் அருகில் இருந்த மஞ்சுவின் பக்கம் கவனத்தை திருப்பினான்.

அவளை இன்னும் இறுக்கமாக தன்னுடன் அணைத்துக் கொண்டான். அவளுடய கழுத்தில் முகம் புதைத்து முத்தமிட்டான். அவள் கூந்தலில் தொங்கிய மல்லிகையை வாசம் பிடித்தான்.

அவளுடய கைவிரல்களுடன் தனது கைவிரல்களை கோர்த்துக்கொண்டு, மென்மையாக அழுத்தி நெறித்தவாறே கேட்டான்.

 "எத்தனை நாளா இதுல இருக்குற..?" 

"இ..இப்போத்தான்.. கொஞ்ச நாளா.." அவள் உதடுகள் படபடக்க சொன்னாள். அசோக் இப்போது தனது புறங்கையால் மஞ்சுவின் கன்னத்தை மென்மையாக வருடினான். கட்டை விரலால் அவளுடைய மேலுதட்டை தடவி, அங்கு பூத்திருந்த வியர்வையை துடைத்தவாறே கேட்டான்.

 "ஏஸில கூட இப்படி வியர்க்குது உனக்கு..?? நெர்வஸா இருக்கா..??"

 "இ..இல்ல.. அப்டிலாம் ஒண்ணுல்ல..!!"

 "டோன்ட் வொர்ரி.. நான் உன்னை ரொம்ப கஷ்டப்படுத்த மாட்டேன்.. யு ஆர் கோன்னா என்ஜாய் திஸ்..!!" சொன்ன அசோக் மீண்டும் அவளது புஜத்தில் ஒரு 'இச்ச்..' வைத்தான்.

 பெசன்ட் நகர் கெஸ்ட் ஹவுசை அவர்கள் சென்றடைய மேலும் இருபது நிமிஷங்கள் ஆயின. காருக்கு கேட் திறந்து விட்ட வாட்ச்மேன், அவர்களுக்கு பின்னாலேயே வீட்டுக்குள் நுழைந்தான்.

சற்றுமுன் அசோக் கால் செய்து வாங்கி வைக்க சொன்ன ஐட்டங்களை எடுத்து.. டீப்பாயில் பரப்பி வைத்தான். புல் பாட்டில் விஸ்கி.. சோடா.. ஐஸ் க்யூப்ஸ்.. சிப்ஸ்..!! எடுத்து வைத்துவிட்டு நகர முயன்ற வாட்ச்மேனை நாயர் அழைத்தார்.

 "சீனிவாசா.. அப்படியே மெயின் ரோட்டுக்கு போய்.. ரெண்டு ஆம்பூர் பிரியாணி பார்சல் வாங்கிட்டு வந்துடு.." சொன்ன நாயரை வாட்ச்மேன் எரிச்சலாக பார்த்தான்.

நாயர் பாக்கெட்டில் இருந்து எடுத்து கொடுத்த பணத்தை, வேண்டாவெறுப்பாக வாங்கிக்கொண்டு, வீட்டை விட்டு வெளியேறினான்.

அவன் செல்வதையே பார்த்துக்கொண்டிருந்த நாயர், அப்புறம்தான் அசோக் தன்னையே ஒரு குறும்பு புன்னகையுடன் பார்த்துக் கொண்டிருந்ததை கவனித்தார். அவனுடைய பார்வையின் அர்த்தம் புரியாத நாயர் நெற்றியை சுருக்கியவாறு கேட்டார்.

 "எ..என்னாச்சு..? ஏ..ஏன் அப்படி பாக்குற..?"


"இல்ல.. தமிழ்நாட்டுல ஒரு பழமொழி சொல்வாங்க.. அது ஞாபகம் வந்துடுச்சு..!!"

 "எ..என்ன..?" "நாம நாயை ஏவுனா.. நாய் வாலை ஏவுமாம்..!!" அசோக்கின் நக்கலை புரிந்து கொள்ள நாயருக்கு ஓரிரு வினாடிகள் பிடித்தன. ஆனால் அதற்குள் அருகில் இருந்த மஞ்சு புரிந்துகொண்டு 'களுக்..' என்று சிரித்துவிட்டாள். அது நாயரை கடுப்படைய செய்தது. டென்ஷனாகி அசோக்கிடம் எகிறினார்.

 "பட்டியோ.. ஞான் பட்டியோ..?"

"யோவ்.. பட்டி இல்லைய்யா..!! பழமொழி..!!" அசோக்கும் அசராமல் சொல்லிவிட்டு சிரிக்க, அந்த மஞ்சு இப்போது இன்னும் தாராளமாக சிரித்தாள். நாயர் நொந்துபோனார். மஞ்சுவையும், அசோக்கையும் மாறி மாறி பார்த்தார். அப்புறம் அசோக்கிடம் பேச்சு கொடுத்தால், இன்னும் தன்னை நக்கலடிப்பான் என்று தோன்றவே, முகத்தை கடுகடுப்பாக வைத்துக்கொண்டு, அமைதியாக சென்று சோபாவில் அமர்ந்தார்.

 அசோக் இப்போது மஞ்சுவிடம் திரும்பி சொன்னான்.

 "சரி மஞ்சு.. நீ உள்ள போ.. நேரா போனா.. ரைட் சைடுல ஃபர்ஸ்ட் ரூம்.. குளிச்சுட்டு ரெடியா இரு.. நான் கொஞ்ச நேரத்துல வர்றேன்..!!"

 "ச..சரி.." மஞ்சு அங்கிருந்து அகல, அசோக் இப்போது சென்று நாயருக்கு எதிரே அமர்ந்து கொண்டான்.

அவர் தன் மீது கோபத்தில் இருக்கிறார் என்பது அசோக்கிற்கு புரிந்தது. ஆனால் அவருடைய கோபம் அவனுக்கு மெல்லிய சிரிப்பையே வரவழைத்தது.

விஸ்கி பாட்டிலை கையில் எடுத்து திறந்து கொண்டே, அவரை சீண்டும் குரலில் கேட்டான்.

 "என்ன நாயர்.. கோவமா..?" 

"அதெல்லாம் ஒண்ணுல்ல.."

 "தண்ணியடிக்கிறியா..?"

 எனக்கு வேணாம்.."

 "ஹேய்.. சும்மா விளையாட்டுக்கு சொன்னேன் நாயர்.. சீரியஸா எடுத்துக்காத.. வா..!!" அசோக் இரண்டு க்ளாஸ்களில் விஸ்கி ஊற்றினான்.

சோடா கலந்து, நிறைய ஐஸ் துண்டங்களை எடுத்து போட்டான். நாயரிடம் ஒரு க்ளாஸை நீட்ட, அவர் இப்போது மறுப்பேதும் சொல்லாமல் வாங்கிக்கொண்டார். இருவரும் மது அருந்த ஆரம்பித்தனர். ஓரிரு நிமிடங்கள் கழித்து அசோக்தான் மெல்ல ஆரம்பித்தான்.

 "அம்சமான ஆளா புடிச்சிருக்குற நாயர்.." 

"யாரை சொல்ற..?"

 "இவளைத்தான்..!! மஞ்சு..!!"

 "புடிச்சிருக்கா உனக்கு..??" நாயர் இப்போது இளித்தார்.

 "ரொம்ப ரொம்ப..!!" அசோக் கண் சிமிட்டினான்.

 "ஹாஹா.. அசோக்குக்கு ஹேப்பினா.. நாயருக்கும் ஹேப்பிதான்..!!" "ம்ம்.. அவளை பாத்தா அந்த மாதிரி பொண்ணாவே தெரியலை நாயர்.. ரொம்ப இன்னோசண்டா இருக்குறா.. ஃபர்ஸ்ட் லுக்லயே நான் அப்படியே மெல்ட் ஆகி போயிட்டேன்..!!"

 "அப்போ.. அசோக்குக்கு இன்னைக்கு ஒரே குஷிதான்.." நாயர் வெட்கத்தில் நெளிந்தவாறே சொன்னார்.

 "ஆமாம்யா.. ரொம்ப நாள் ஆகி போச்சா.. உடம்புலாம் அப்படியே பரபரன்னு இருக்கு.. இவ வேற இப்படி சூடேத்துறா..!! அதுசரி.. முப்பது வயசுக்கு மேல இருக்கும் போல இருக்கு.. இப்போ போய் இதெல்லாம் ஆரம்பிச்சிருக்குறா..??"

 "அவளுக்கு என்ன கஷ்டமோ.. அவளைத்தான் கேக்கணும்.."

 "ம்ம்.. கழுத்துல தாலி தொங்குது.. புருஷன் என்ன பண்றான்..?" 

"பிசினஸ்.." "என்ன பிசினஸ் பண்றான்..?"

 "இவளை வச்சுத்தான் பிசினஸ் பண்றான்.."

 "ஹாஹா..!!! ம்ம்ம்ம்ம்ம்.. அப்புறம்.. நான் ஒரு லெவன் போல கெளம்பிடுவேன் நாயர்.. போறப்போ உன்னையும், மஞ்சுவையும் ட்ராப் பண்ணிர்றேன்.. அதுக்குள்ள தூங்கிடாத நீ..!!"

 "இல்ல அசோக்.. எனக்கு தூக்கம் வருது..!! நீ அந்தப்பொண்ணை மட்டும் டிராப் பண்ணிடு.. நான் நைட்டு தங்கி இருந்து.. காலைல போயிக்கிறேன்..!!"

 "வொய்ஃப் ஊர்ல இல்லையா நாயர்..??" "ஆமாம்.. அம்மா வீட்டுக்கு போயிருக்கா..!!"

 "அப்போ சரி.."

 "இப்போலாம் நைட்டு எவ்வளவு நேரம் ஆனாலும்.. நீயும் வீட்டுக்கு போயிடுற போல இருக்கு..?"

 "ஆமாம்.. என் வொய்ஃபோட ரெக்வஸ்ட்..!!"

 "ஓ.. அப்போ.. உனக்கு கால் வந்ததே.. உன் வொய்ஃப்ட்ட இருந்தா..??" 

"ம்ம்.." அசோக் சொல்ல, நாயர் இப்போது ஏனோ பட்டென அமைதியானார். எதையோ தீவிரமாக யோசிப்பவர் போல காணப்பட்டார். விஸ்கி எடுத்து கொஞ்சமாய் உறிஞ்சிக்கொண்டார்.

சில வினாடிகள் அசோக்கின் கண்களையே உற்றுப் பார்த்தவர், அப்புறம் சற்றே தயக்கமான குரலில் அவனிடம் கேட்டார்.

 "நா..நான் உன்கிட்ட ஒன்னு சொன்னா.. தப்பா எடுத்துக்க மாட்டியே..?"

 "என்ன நாயர்.. சொல்லு.."

 "உன்னை வெறும் கஸ்டமரா மட்டும் நெனச்சிருந்தா.. இதெல்லாம் நான் சொல்ல மாட்டேன்.. உன்னை ஒரு பிரண்டா நெனைகிறதால சொல்றேன்.."

 "மேட்டருக்கு வா நாயர்.."

 "கல்யாணத்துக்கு முன்னாடி இதுலாம் பண்ணிட்டு இருந்த சரி.. இப்போ கல்யாணத்துக்கு அப்புறமும் அப்படியே இருக்கியே.. இது தப்பு இல்லையா..??"

 "ஐயோ.. நாயர்.. எங்களுக்குள்ள நடந்தது கல்யாணம் இல்ல.. அது ஜஸ்ட் ஒரு அக்ரீமன்ட்..!! நான்தான் உன்கிட்ட சொல்லிருக்கேன்ல..?"

 "சொல்லிருக்க.. எனக்கு புரியுது.. ஆரம்பத்துல இது வெறும் அக்ரீமன்ட் கல்யாணம்னு தெரிஞ்சப்போ.. எனக்கு வருமானம் ஸ்டாப் ஆகலைன்னு சந்தோஷமாத்தான் இருந்தது..!! ஆனா.. இப்போ அப்படி இல்ல.. மனசுல ஏதோ ஒரு சின்ன உறுத்தல்..!!"

 "ப்ச்.. ஒரு உறுத்தலும் தேவையில்ல நாயர்..!! இன்னைக்கு ஃபோன்ல அவகிட்ட பொய் சொன்னதால.. உனக்கு அப்படி தோணுது போல..?? ஃபோன்ல பொய் சொன்னது.. சும்மா.. அதுக்கு ஒன்னும் காரணம்லாம் இல்ல..

உண்மையை சொல்லிருந்தா கூட.. அவ என்னை எதுவும் சொல்ல போறது இல்ல..!! நான் அவகிட்ட எதையும் மறைச்சு பண்ணல நாயர்.. எல்லாம் அவளுக்கு தெரியும்..!!"

 "ம்ம்ஹ்ஹ்ம்ம்.. பாத்துக்கோ அசோக்.. எனக்கு சொல்லணும் போல இருந்தது.."

 "புரியுது நாயர்.. அதுலாம் ஒன்னும் மேட்டரே இல்ல.. தேவையில்லாம நீ கொழப்பிக்காத..!!" அப்புறம் ஒரு பதினைந்து நிமிடங்கள் கழித்து வாட்ச்மேன் சாப்பாட்டு பார்சலுடன் உள்ளே நுழைந்தான்.

அசோக்கும் நாயரும் அதற்குள் ஒரு ரவுண்டு முடித்திருந்தார்கள். வாட்ச்மேன் வந்ததும் அசோக் சோபாவில் இருந்து எழுந்து கொண்டான்.

 "ஓகே நாயர்.. உனக்கு சாப்பாடு வந்திருச்சு.. சாப்பிடு.. நான் உள்ள போய் என் சாப்பாட்டை சாப்பிடுறேன்..!!"
சொல்லிவிட்டு கண்சிமிட்டிய அசோக், திரும்பி உள்ளே நடந்தான். சற்றுமுன் மஞ்சுவுக்கு சுட்டிக்காட்டிய அதே அறையை நோக்கி நடந்தான்.

கதவை மெல்ல தள்ளி உள்ளே நுழைந்தான். உள்ளே.. மேலே வெறும் ப்ளவுஸ் மட்டும் அணிந்த நிலையில் மஞ்சு நின்றிருந்தாள். குளித்து முடித்திருந்தாள்.

கொண்டு வந்திருந்த மாற்றுப் புடவையை உடலில் சுற்றியிருந்தவள், இப்போது விரல்களால் கொசுவம் மடித்துக் கொண்டிருந்தாள். அசோக் நுழைந்ததை அவள் கவனிக்கவில்லை. அவளுடைய வலது கை விரல்களை இப்படியும் அப்படியுமாய் அசைத்து, புடவையின் நடுப்பகுதியில் அழகான மடிப்புகளை உருவாக்கிக் கொண்டிருந்தாள்

. "போதும்.. விடு.." உள்ளே நுழைந்ததுமே அசோக் அவ்வாறு சொல்ல, மஞ்சு ஒருவித திகைப்புடன் பட்டென்று நிமிர்ந்து பார்த்தாள்.

கைகளை மார்புக்கு குறுக்காக கட்டிக்கொண்டு, தன்னையே குறுகுறுவென பார்த்துக்கொண்டிருந்த அசோக்கை கண்டதும் மெலிதாக புன்னகைத்தாள்.

ஆனால் அவன் 'போதும்' என்று எதை சொன்னான் என அவளுக்கு புரியவில்லை.

சற்றே குழப்பமான குரலில் கேட்டாள். "எ..எது போதும்..??"

 "ம்ம்..?? புடவை கட்டின வரைக்கும் போதும்னு சொன்னேன்..!!" அசோக் சொன்னதும், இப்போது மஞ்சுவின் விரல்கள் அசைவதை நிறுத்தின. அசோக்கின் முகத்தையே சில வினாடிகள் சலனமில்லாமல் பார்த்த மஞ்சு, அப்புறம் இரண்டு கைகளாலும் பற்றியிருந்த புடவையை அப்படியே கீழே நழுவ விட்டாள்.

கால்களை சுற்றி குவிந்த புடவையை, கால்களாலேயே ஓரமாக தள்ளிவிட்டாள். தலையை லேசாக குனிந்தவாறு, வெறும் புடவை பெட்டிக்கோட்டுடன் நின்றிருந்தாள். அசோக் திரும்பி கதவை மூடி தாழிட்டான். மெல்ல நடந்து சென்று மஞ்சுவை நெருங்கினான். அவன் நெருங்க நெருங்கவே மஞ்சுவின் நெற்றியில் மீண்டும் வியர்வை முத்துக்கள் பூக்க ஆரம்பித்தன.

அவளுடைய சுவாசத்தில் இப்போது படபடப்பு கூடியிருக்க, அவளது பருத்த மார்புகள் ரெண்டும் மெல்ல, விரிந்து விரிந்து சுருங்கிக் கொண்டிருந்தன. மஞ்சுவை நெருங்கி ஓரிரு வினாடிகள் அவளுடைய அழகை பார்வையால் பருகிய அசோக், அப்புறம் அவனது கைகள் இரண்டாலும் அவளது இடுப்பை வளைத்தான். பின்புறமாக இருந்து அவளை அணைத்துக் கொண்டான்.

அவளது பின்புற மேடுகளை தனது உடலால் அழுத்தினான். அவளுடைய கூந்தலை வாசம் பிடித்தவன், பின்னர் தனது மூக்கால் அவளது காதுமடலை உரசினான். குனிந்து அவளது பின்னங்கழுத்தில் முத்தம் பதித்தான். மஞ்சு அவனது செய்கைகளுக்கெல்லாம் அனுமதி தந்தவளாய் அமைதியாக நின்றிருந்தாள். அவளது உடல் லேசாக வெடவெடக்க, அவளுடைய கைவிரல்கள் மெலிதாக நடுங்கின.

 "நீ ரொம்ப அழகா இருக்குற மஞ்சு.. உன்னை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு.."
அசோக் விட்ட அனல்மூச்சு மஞ்சுவின் கழுத்தை சுட்டது.

 "ம்ம்ம்.."

 "நல்ல செக்ஸியான உடம்பு உனக்கு.. ஸ்கின்லாம் வெல்வட் மாதிரி சாஃப்டா.. நைஸ்..!!" அசோக்கின் கைவிரல்கள் மஞ்சுவின் இடுப்பில் ஊர்ந்தன. லேசாக மேடிட்டிருந்த அவளது வயிறை தடவின.
 "ம்ம்ம்.."

 "உன் மேல இருந்து வர்ற இந்த வாசனை கூட எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு.." அசோக் அவனது முகத்தை அவளது செழுமையான தோளில் வைத்து தேய்த்தவாறே சொன்னான்.

 "ம்ம்ம்.."

 "சாப்பாடு வந்துடுச்சு.. பசிக்குதா உனக்கு..??" அவள் மீது அக்கறையாக கேட்டதை கூட போதையான குரலிலேயே கேட்டான்.

 "இ..இல்ல.. ப..பசிக்கல.."

 "எனக்கு ரொம்ப பசிக்குது மஞ்சு.. உன்னை சாப்பிட்டுக்கவா..??" அவள் காதோரமாய் அசோக் கிசுகிசுக்க, "ம்ம்.. சரி.." மஞ்சு அனுமதியளித்தாள்.

 அசோக் இப்போது மஞ்சுவின் தோளைப் பற்றி அவளை தன் பக்கமாக திருப்பினான். அவளுடைய தலை இன்னும் தரை பார்த்தே குனிந்திருந்தது. அசோக் அவனது ஒற்றை விரலால் அவளது முகத்தை நிமிர்த்தினான். மருட்சியாக பார்த்த மஞ்சுவையே, மோகமாக பார்த்தான்.

சிவந்தும், தடித்தும் போய் இருந்த அவளுடைய ஈர உதடுகள் இப்போது லேசாக துடித்துக் கொண்டிருந்தன. அசோக்கிற்கு அந்த உதடுகளை சுவைத்துப் பார்க்க ஆசை வந்தது. குனிந்தான். மெலிதாக முத்தமிட்டான். அவளுடைய கீழுதட்டை கவ்வி மென்மையாக சுவைத்தான். ஒரு அரை நிமிடத்திற்கு அந்த மாதிரி ரசித்து முத்தமிட்டவன், அப்புறம் அவளை அலாக்காக தூக்கிக் கொண்டான். கையில் அவளை ஏந்தி சென்று, அலுங்காமல் மெத்தையில் கிடத்தினான்.

மஞ்சு அவனுடைய முகத்தை பாராமல், தனது தலையை பக்கவாட்டில் திருப்பிக் கொள்ள, அசோக் அவளுடைய கழுத்துக்கு கீழே முகம் புதைத்தான். அவனுடைய கையொன்று அவளது இடுப்பை பற்றி மென்மையாக பிசைந்து கொண்டிருந்தது. அவனுடைய முகமோ, ப்ளவுசுக்குள் விம்மிக்கொண்டு காட்சியளித்த அவளது மார்புக்கோளங்களில் படர்ந்து.. உரசி.. அவற்றின் மென்மையை உணர முயற்சித்துக் கொண்டிருந்தது.

 "திஸ் இஸ் இன்க்ரடிபில்..!!" கிறக்கமாக சொன்ன அசோக், அவனது வலது கையை அகலமாக விரித்து மஞ்சுவின் ஒருபக்க மார்பை பற்றினான். சற்றே அழுத்தம் கொடுத்து பிசைந்தான். அதே நேரம் அடுத்த பக்க மார்பின் உச்சியில் மென்மையாக முத்தமிட்டான். அவளுடைய மார்புகளின் ஸ்மூத்னசை ஒரே நேரத்தில் தனது கையாலும், உதடுகளாலும் அறிந்துகொண்டன.

 ப்ளவுசை இறுகிப் பிடித்து வைத்திருந்த பட்டன்களை ஒவ்வொன்றாக பொறுமையாக கழட்டி, அதன் இறுக்கத்தை குறைத்தான். ப்ராவுக்குள் திமிறிக்கொண்டு காட்சியளித்த அவளது கனிகளை, காமமாக வெறித்தான். அந்த மார்புப்பிளவுக்குள் முகம் புதைத்து முத்தமிட்டவன்.. அவனது ஒற்றை விரலால்.. ப்ராவின் ஒரு பக்கத்தை பற்றி மெல்ல கீழே இழுத்தான்.

மஞ்சுவின் இடது பக்க மார்பு கொஞ்சம் கொஞ்சமாய் நிர்வாணமாகிக் கொண்டு வர, ப்ரவுன் நிறத்தில் அவளது மார்புக்காம்பு பட்டென்று ப்ராவை விட்டு தெறித்து, வெளியே தலையை நீட்டியது.
அசோக் அந்த அரைகுறை மார்பழகை, அதன் உச்சியில் முளைத்திருந்த உருண்டை காம்பழகை, ஆசையாக ரசித்தான். தனது கட்டை விரலை அந்த பட்டுக்காம்பில் வைத்து அழுத்திப் பார்த்தான்.

தலையை நகர்த்தி, உதடுகளை குவித்து இச் என்று அந்த காம்பில் முத்தம் பதித்தான். பின் தனது நாக்கை மெல்ல வெளியே நீட்டி, அந்த தடித்த காம்பை சுற்றி ஈரமாக தடவினான். அப்படி நாவால் தடவிக் கொண்டிருக்கும்போதுதான் அசோக்கிற்கு அது உறைத்தது. காமப்பித்து தலைக்கேறி போயிருந்தவனுக்கு தாமதமாகவே அந்த உணர்வு வந்தது. அவன்தான் மோகத்தின் பிடியில் முனகிக்கொண்டிருந்தானே ஒழிய, மஞ்சுவிடம் இருந்து எந்த ஓசையும் இல்லை. அவனது உடல்தான் ஜிவ்வென்று அதிர்ந்து கொண்டு இருந்ததே ஒழிய, மஞ்சுவின் உடலில் எந்த ஒரு அசைவும் இல்லை.

 அந்த மாதிரி உணர்வு அவனுக்கு தோன்றியதுமே, அவன் பட்டென்று தன் தலையை நிமிர்த்தி மஞ்சுவின் முகத்தை ஏறிட்டான். அவளுடைய பார்வை எங்கோ சூனியத்தை வெறித்திருந்தது.

வேறேதோ சிந்தனையில் மூழ்கியிருந்தவள் போல காணப்பட்டாள். அசோக்கின் காம இச்சைக்கு தன் உடலை கொடுத்துவிட்டு, உணர்ச்சியற்ற ஜடமாய் கிடந்தாற்போல காட்சியளித்தாள்.

 "ஹேய்.." அசோக் அழைத்தது அவள் காதில் விழவே இல்லை.

அவளிடமிருந்து எந்த சலனமுமில்லை. அவளுடைய பார்வை சீலிங்கிலேயே நிலைத்திருந்தது.

 "ஹேய்.. மஞ்சு.." அசோக் சற்றே குரலை உயர்த்தியதும், இப்போது மஞ்சு பட்டென்று திரும்பி அசோக்கை பார்த்தாள். அவன் தன்னையே முறைத்துக் கொண்டிருப்பதை கண்டதும், லேசாக திகைத்தாள்.

 "ம்ம்ம்.." என்றாள் பதற்றமாய்.

 "என்னாச்சு உனக்கு..?"

 "எ..என்னாச்சு.. ஒ..ஒண்ணுல்ல..!!"

 "ஆமாம்.. ஒண்ணுல்லதான்.. உன்கிட்ட இருந்து எந்த ஒரு உணர்ச்சியும் இல்ல..!! அதான் கேக்குறேன்..!! ஏன்.. உனக்கு இதுல இஷ்டம் இல்லையா..?"

 "இ..இல்ல.. அப்படி இல்ல.."

 "அப்புறம்..? என்னை புடிக்கலையா..?"

 "இல்ல.. பு..புடிச்சிருக்கு.." மஞ்சு அவசரமாக மறுத்தாள்.

 "அப்புறம் ஏன் இப்படி கிடக்குற.. மரக்கட்டை மாதிரி..?"

 "ஸா..ஸாரி..!! நா..நான்.. எ..எனக்கு.. வேற ஏதோ யோசனை..!! ஸாரி.. இனிமே அப்படி பண்ணல.. வாங்க.. ப்ளீஸ்..!!" கெஞ்சலாக சொன்ன மஞ்சு, அசோக்கின் வலது கையை எடுத்து தன் மார்பு மீது வைத்துக் கொண்டாள். அந்தக்கை அந்த மார்பில் ஓரிரு வினாடிகள்தான் நிலைத்திருந்தது.

தன்னையே பரிதாபமாக பார்த்த மஞ்சுவை பார்க்க, அவனுக்குள் ஒரு இரக்கம் உண்டானது. அசோக் அந்தக்கையை நகர்த்தி மஞ்சுவின் கன்னத்தை பற்றினான். மென்மையாக அந்தக்கன்னத்தை வருடியவாறு கேட்டான்.

 "அப்படி என்ன யோசனை..?" 

"அ..அது எதுக்கு உங்களுக்கு.. வேணாம்.."

 "பரவால.. சொல்லு.."

 "வேணாம்.. ப்ளீஸ்.."

 "சொல்லுன்றேன்ல..!!" அசோக் சற்றே கடுமையாக சொல்லவும், மஞ்சு மெல்ல வாய் திறந்தாள்.

 "எ..என் பொண்ணு.."

 "என்னாச்சு உன் பொண்ணுக்கு..?"

 "உ..உடம்பு சரியில்ல.. வைரல் ஃபீவர்.. பக்கத்து வீட்டுல கொடுத்திட்டு வந்திருக்கேன்.. அவ நெனைப்பாவே இருக்கு..!!" மஞ்சு அந்தமாதிரி தவிப்புடன் சொல்ல, அசோக்கிற்கு என்ன சொல்வதென்றே புரியவில்லை.

திகைத்துப் போனான். அவளுடய முகத்தையே அப்படியே சலனமில்லாமல் ஒரு பார்வை பார்த்தான். அவனுடைய உடல் முழுமையாக காமத்தீயில் தகித்துக் கொண்டிருந்தது.. அவனுக்கு முன்பாக கட்டழகி ஒருத்தி அரை நிர்வாண நிலையில் கட்டிலில் கிடக்கிறாள்.. ஆனால் அவளுடைய மனமோ தாய்மையின் பிடியில் சிக்கி போராடிக் கொண்டிருக்கிறது..!! எத்தனையோ பெண்களை அவன் அழைத்து வந்திருக்கிறான்.

ஆனால் இப்படி ஒரு சூழ்நிலையை அவன் சந்தித்ததே இல்லை. அசோக் ஒரு ஐந்தாறு விநாடிகள்தான் யோசித்திருப்பான். அப்புறம் பட்டென்று மஞ்சுவின் மீதிருந்து எழுந்து கொண்டான்.

அவசரமாக ஆனால் தெளிவான குரலில் சொன்னான்.

 "எழுந்திரு மஞ்சு.. ட்ரஸ் மாட்டிக்கோ.. வீட்டுக்கு கெளம்பு..!!" அவன் அப்படி சொன்னதும் மஞ்சு இப்போது பதறிப் போனாள்.

 "ஐயோ.. ப..பரவாலைங்க.. வாங்க.. எனக்கு ஓகே..!!" சொல்லிக்கொண்டே எழுந்த மஞ்சு அசோக்கை அணைத்துக் கொண்டாள்.

 "ஸா..ஸாரி.. இனிமே ஒழுங்கா கோவாப்ரெட் பண்றேன்.." என்றவாறு அந்த அணைப்பின் இறுக்கத்தை அதிகமாக்கினாள்.

அசோக் அவளுடைய அணைப்பில் இருந்து மெதுவாக விலகிக்கொண்டான். கலைந்திருந்த அவளது கூந்தலை சரி செய்தவாறே சொன்னான்.

 "இட்ஸ் ஓகே மஞ்சு.. ஃபுல் அமவுண்டும் தந்துர்றேன்.. நீ கெளம்பு..!!" சொன்னவன் பர்ஸில் இருந்து பணத்தை எடுத்து அவளுடைய கையில் திணித்தான்.

 "ப..பணம் வேணாம்.." குனிந்த தலையுடன் நின்றிருந்த மஞ்சு, குற்ற உணர்ச்சியுடன் சொன்னாள்.

 
"பரவால வாங்கிக்கோ..!! வீட்டுக்கு போ.. உன் பொண்ணை பக்கத்துல இருந்து பாத்துக்கோ..!! சரியா..?? என்னை விட உன் பொண்ணுக்குத்தான்.. இப்போ நீ கூட இருக்குறது ரொம்ப அவசியம்..!!" அசோக் வலுக்கட்டாயமாக பணத்தை பணத்தை அவளிடம் அளித்தான்.

 "தே..தேங்க்ஸ்.." சத்தமே வெளிவராத மாதிரி சொன்ன மஞ்சு பணத்தை வாங்கிக் கொண்டாள். பாதி வெளிவந்த நிலையில் இருந்த ஒருபக்க மார்பை, மீண்டும் ப்ராவுக்குள்ளேயே தள்ளினாள்.

ப்ளவுசை இழுத்து பிடித்து பட்டன்களை ஒவ்வொன்றாக மாட்டினாள். அவள் உடை மாற்றிக் கொள்வதையே சலனமில்லாமல் பார்த்துக் கொண்டிருந்த அசோக், இப்போது சிகரெட் பாக்கெட் திறந்தான்.

சிகரெட் ஒன்றை உருவி பற்ற வைத்துக் கொண்டான். புகைவிட்டான். மஞ்சு சற்று முன் காலால் தள்ளிவிட்ட புடவையை.. இப்போது குனிந்து எடுத்து.. உடலில் சுற்றிக்கொண்டு.. தலையை குனிந்தவாறு.. மீண்டும் கொசுவம் மடிக்க ஆரம்பித்தாள்..!!



No comments:

Post a Comment