Wednesday, May 6, 2015

அக்னி சாட்சி - அத்தியாயம் - 31



இடம்: அதே கட்டிடத்தின் கீழ் தளத்தில் இருந்த சிவா பணியாற்றும் உணவகம்
நேரம்: பகல் 1:15 மணி

ப்ரீதி வந்து ஆனந்துக்கு அருகே அமர,

ஆனந்த், "அஞ்சு நிமிஷம்ன்னு சொன்னே?"

ப்ரீதி, "ஒரு மாட்யூலை அவனுக்கு எக்ஸ்ப்ளெயின் பண்ணிண்டு இருந்தேன். கொஞ்சம் நாழியாயிடுத்து. அப்பறம் அவன் தன் சொந்தக் கதையை சொல்ல ஆரம்பிச்சுட்டான். ஒரு இன்டரெஸ்டிங்க் நியூஸ்"



ஆனந்த், "என்ன?"

ப்ரீதி, "விக்ரம் ஷா எங்கே தங்கிட்டு இருக்கார் தெரியுமா?"

ஆனந்த், "அதான் இந்த பில்டிங்க்கின் பின்னாடி விங்கில் இருக்கும் அப்பார்ட்மெண்ட் ஒண்ணில் இருப்பார்ன்னு நேத்து கெஸ் பண்ணினோமே? Are we right about it"

ப்ரீதி, "Quite right. அது சுகுமாரோட த்ரீ பெட் ரூம் ஃப்ளாட். அவன் வொய்ஃப் பிரசவத்துக்கு ஊருக்குப் போயிருக்கா. ஆறு மாசத்துக்கு முன்னாடிதான் சுகுமார் அங்கே குடி போயிருக்கான். விக்ரம் ஷாதான் அவனுக்கு அந்த ஃப்ளாட்டை அரேஞ்ச் பண்ணிக் கொடுத்து இருக்கார். கம்பெனி வாடகை கொடுக்குது. விக்ரம் ஷாவும் நந்தகுமாரும் அடிக்கடி தனியா பேசிக்கறாங்களாம். இவன் வந்த உடனே பேசறதை நிறுத்திடறாங்களாம். அவனும் விக்ரம் ஷா மேல ரொம்ப சந்தேகப் படறான்"

ஆனந்த், "அவனும் உன்னை மாதிரியே இன்னொரு கம்பெனிக்கு எம்.டி. இல்லையா?"

ப்ரீதி, "ஆமா. எதாவுது தெரிஞ்சுக்கலாம்ன்னு அந்தப் பேச்சை எடுத்தேன். அவன் எதுவும் சொல்லலை. அவனுக்கும் ஏதோ தெரிஞ்சு இருக்கும் போல இருக்கு"

ஆனந்த், "அவனையும் இங்கே கூட்டிட்டு வந்து இருக்கலாமே. நானும் கொஞ்சம் அவன் வாயைக் கிளறி இருப்பேன்"

ப்ரீதி, "இன்-ஃபாக்ட் இன்வைட் பண்ணினேன். விக்ரம் ஷா அவனை ஃப்ளாட்டுக்குப் போய் எதோ டாக்யுமென்ட்ஸ் எடுத்துட்டு வரச் சொன்னாராம். அவன் ஃப்ளாட்டுக்குப் போய் இருக்கான்"

ஆனந்த், "ஸம் திங்க் ஃபிஷ்ஷி. கூட நந்தகுமார் இருக்கும் போது சுகுமாரை எதுக்கு டாக்யுமென்ட்ஸ் எடுத்துட்டு வரச் சொல்லணும்?"

ப்ரீதி, "ஒன் மோர் திங்க்! அந்த ஆடிட்டர்ஸ் ரெண்டு பேரும் நான் வெளியில் வரச்சே என் பின்னாடி வந்து அவாளும் லிஃப்டில் ஏறினா. கீழே வந்துண்டு இருக்கச்சே அதில் ஒருத்தர் டைம் வேஸ்ட், இன்னும் டிலே ஆகப் போறது அப்படின்னு அலுத்துண்டர். அடுத்தவர் கண் ஜாடை காண்பிச்சதும் பேசறதை நிறுத்திட்டார்"

ஆனந்த், "ஸோ, விக்ரம் ஷாவுக்கு ரெய்ட் வரப் போற விஷயம் தெரிஞ்சாச்சு"

ப்ரீதி, "என்ன செய்யலாம்?"

ஆனந்த் ஆர்டர் செய்து இருந்தவை வந்தது ...

ஆனந்த், "நாம் செய்யறதுக்கு இப்போ ஒண்ணும் இல்லை. Let's eat and enjoy our lunch"

ப்ரீதி, "எப்படித்தான் நீ இப்படி கூலா இருக்கியோ. எனக்கு பக் பக்குன்னு அடிச்சுண்டு இருக்கு"

ஆனந்த், "என்ன அடிச்சுண்டு இருக்கு"

ப்ரீதி, "நெஞ்சு"

ஆனந்த், "நெஞ்சுன்னா .. அது ரெண்டுமா"

அவனை முறைத்த ப்ரீதி, "You pervert! நோக்கு எப்பவும் அந்த நினைப்புதான் ... "

ஆனந்த் சிரித்த படி சாப்பிடத் தொடங்கினான்.


இடம்: விக்ரம் ஷாவின் கேபின், ஷா ஸிஸ்டம்ஸ் அலுவலகம்
நேரம்: பகல் 1:30 மணி

நந்தகுமார், "என்ன பாஸ்? நாம் என்னென்னவோ ப்ளான் பண்ணிட்டு இருந்தோம். இப்போ ரெய்ட் வந்தா பிரச்சனை இல்லையா? தப்பிச்சுப் போயிடலாம் பாஸ்"

விக்ரம் ஷா, "மடையா! இப்போ அப்படியே விட்டுட்டுப் போனா. இந்தக் கம்பெனியை விக்கற வேலை என்ன ஆகறது? இதை இந்த அளவுக்குக் கொண்டு வர எவ்வளவு உழைச்சு இருப்பேன் தெரியுமா?"

நந்தகுமார், "அதான் அதே அளவுக்கு வேற மேட்டர்ல சம்பாதிச்சுட்டீங்களே பாஸ்"

விக்ரம் ஷா, "டேய், வெளியில் போகும் போது நம்ம மேல எந்த சந்தேகமும் வரக் கூடாது"

நந்தகுமார், "அப்படின்னா இப்போ இன்னா செய்யறது?"

விக்ரம் ஷா, "மொதல்ல இன்கம்டாக்ஸ் டிபார்ட்மெண்ட் கண்ணில் படக்கூடாத பேப்பர்ஸ் எல்லாத்தையும் டிஸ்போஸ் பண்ணனும். அதுக்கு அப்பறம் நாம் காலையில் போட்ட ப்ளானில் கொஞ்ச மாற்றம். இப்போ எல்லா ஸ்டாஃபையும் எதாவுது காரணத்தைச் சொல்லி வீட்டுக்குப் போகச் சொல்லப் போறோம். ப்ரீதியும் ஆனந்தும் லஞ்ச் முடிச்சுட்டு வரும் போது அவங்க ரெண்டு பேரையும் கொண்டு போய் அந்த ஃப்ளாட்டில் கட்டிப் போட்டுட்டு திரும்ப இங்கே ஆஃபீஸுக்கு வரப் போறோம். ரெய்ட் வரும்போது அவங்களுக்கு தேவையான தகவல் எல்லாத்தையும் கொடுக்கப் போறோம். ஷா ஸிஸ்டம்ஸ் அக்கௌன்ட்ஸில் ப்ளாக்கில் நாம் எதுவும் செய்யலை. எல்லாம் PSV Systems அப்பறம் SVS Systems கணக்கில் தான். அந்தக் கம்பெனிங்க கணக்கைக் கேட்டா அது நம்ம கிட்டே இல்லை. ப்ரீதியையும் சுகுமாரையும் கேட்கணும்ன்னு சொல்லப் போறோம். அந்த ரெண்டு கம்பெனிகளும் ஷா ஸிஸ்டம்ஸுக்கு ஆர்டர் வாங்கறதுக்காக தொடங்கினது. அதுக்குப் பிறகு அவங்க ரெண்டு பேர் சாலரியையும் அந்த கம்பெனிக் கணக்கில் கொடுத்தோம்ன்னு சொல்லப் போறோம். அதைத் தவிற அந்த ரெண்டு கம்பெனிகளுக்கும் எனக்கும் எந்த வித மான சம்மந்தமும் இல்லைன்னு சொல்லப் போறோம். அவங்க எங்கேன்னு கேட்டா எல்லோரோட அவங்களும் வீட்டுக்குப் போயிட்டாங்கன்னு சொல்லப் போறோம்"

நந்தகுமார், "சுகுமார் ஃப்ளாட்டுக்கு அவங்க போனா?"



விக்ரம் ஷா, "உடனே போக மாட்டாங்க. ஏன்னா இந்த ஆஃபீஸ் அட்ரெஸ்ஸைத்தான் அந்த ரெண்டு கம்பெனிகளுக்கும் ரிஜிஸ்டர்ட் ஆஃபீஸ்ஸா உபயோகிச்சு இருக்கேன். அந்த ஃப்ளாட் சுகுமார் பேரில் இல்லை. ரெக்கார்ட் படி அது ஷா ஸிஸ்டம்ஸ்ஸின் கெஸ்ட் ஹவுஸ். நம்ம ஹெச்.ஆர்ல அவங்களோட பர்மனெண்ட் அட்ரெஸ்தான் இருக்கு. லோகல் அட்ரெஸ் அப்டேட் செய்யலை. தெரியாதுன்னு சொல்லப் போறோம். . சுகுமாரின் பர்மனெண்ட் அட்ரெஸ் சேலத்தில் இருக்கு. ப்ரீதியின் பர்மனெண்ட் அட்ரெஸ் குன்னூரில். அவங்க விசாரிச்சுக் கண்டு பிடிக்கறதுக்குள்ளே நாம் ஹாங்க் காங்க்கில் இருப்போம்"

நந்தகுமார், "ஒண்ணும் ப்ராப்ளம் வராது இல்லை பாஸ்?"

நந்தகுமார் விக்ரம் ஷாவின் லாப்டாப் பழுதுபட்ட பிறகு காலையில் விக்ரம் ஷா செய்யச் சொன்ன இரு பணப் பரிமாற்றங்களை வேறு கணிணியை உபயோகித்து செய்ய மறந்து இருந்தான்!

விக்ரம் ஷா, "ஒரு ப்ராப்ளமும் வராது. முதல்ல இந்த ஃபைலிங்க் கேபினெட்டில் PSV Systems அப்பறம் SVS Systems சம்மந்தப் பட்ட பேப்பர்ஸ் எல்லாத்தையும் எடுத்து ஒரு டஸ்ட் பின்னில் போடு"

நந்தகுமார், "கிழிச்சுட்டு போட வேண்டாமா பாஸ்?"

விக்ரம் ஷா, "எந்த விதமான தடயமும் இந்த ஆஃபீஸில் இருக்கக் கூடாது. எல்லா பேப்பர்ஸையும் கீழே பேஸ்மெண்டுக்குக் கொண்டு போய் அங்கே இருக்கும் இன்ஸினரேட்டருக்குப் பக்கத்தில் இருக்கும் ட்ரம்மில் வெச்சு பெட்ரோல் ஊத்திக் கொளுத்தணும். சுத்தமா சாம்பல் ஆகற வரைக்கும் பாத்துட்டு வரணும்"

நந்தகுமார், "ஓ.கே பாஸ். அதுக்கு அப்பறம்?"

விக்ரம் ஷா, "ப்ரீதியும் ஆனந்தும் லஞ்சுக்குப் போயிருக்காங்க. அவங்க திரும்பி வரும் போது எல்லோரும் வெளியே போயிட்டு இருப்பாங்க. அவங்க ரெண்டு பேரையும் ஃப்ளாட்டுக்குப் கூட்டிட்டு போய் காரியத்தை முடிச்சுட்டு இங்கே வந்துடப் போறோம்"

நந்தகுமார், "இந்நேரம் சுகுமாரை கட்டிப் போட்டு இருப்பாங்க. அவங்களையும் துணைக்குக் கூப்பிடலாமா சார்?"

விக்ரம் ஷா, "வேண்டாம் ஆள் நடமாட்டம் அதிகம் இருக்கக் கூடாது"

அடுத்த சில நிமிடங்களில் நந்தகுமார் ஒரு பெரிய குப்பைக் கூடையுடன் பேஸ்மெண்டுக்குச் சென்றான்.




No comments:

Post a Comment