Monday, December 1, 2014

கண்ணாமூச்சி ரே ரே - தமிழில் ஒரு திரில் தொடர் - பாகம் - 2


ஆண்டு: கி.பி 2013 (ரொம்ப யோசிக்காதிங்க.. இந்த வருஷம்தான்..!!) இடம்: கங்கோத்ரி லேயவுட், மைசூர் மாநகரம் "கௌசல்யா சுப்ரஜா ராம பூர்வா ஸந்த்யா ப்ரவர்த்ததே.. உத்திஷ்ட நரஸார் தூல கர்த்தவ்யம் தைவமாஹ்நிகம்..!!" காலைத்தென்றலுடன் கலந்து வந்த சுப்ரபாதம் காதுகளை வருட.. கண்ணிமைகள் மெல்ல அசைவுற்றன ஆதிராவுக்கு..!! அதிகாலை தூக்கம் கொஞ்சம் கொஞ்சமாய் கலைய ஆரம்பிக்க.. விழிகளை மெதுவாக திறந்து பார்த்தாள்..!!

சுற்றி ஒரு பார்வை பார்த்து சூழ்நிலை உணர முயன்றாள்..!! அவளது படுக்கையறை.. அருகில் படுத்திருக்கிற அவளது கணவன் சிபி, இப்போது பார்வைக்கு வந்தான்..!! வாயை 'ஓ'வென்று திறந்து வைத்துக்கொண்டு.. களைத்துப்போன குழந்தை மாதிரி தூங்கிக் கொண்டிருந்தான்..!! அகத்திலிருப்பவனை அந்தக்கோலத்தில் கண்டதும்.. ஆதிராவின் அதரங்களில் ஒரு மெலிதான புன்னகை..!! கருவிழிகளை சற்று தாழ்த்தி பார்த்தபோதுதான்.. நிர்வாணமாக படுத்திருக்கிறோம் என்ற நினைப்பே அவளுக்கு வந்தது..!!

அதிகாலை நான்கு மணி வாக்கில் மூன்றாவது முறையாக ஆடைகளைய நேர்ந்ததும்.. ஆட்டக்களைப்பில் திரும்ப அணிந்துகொள்ளாமல் அப்படியே உறங்கிவிட்டதும் ஞாபகம் வந்தது.. உடனடியாய் அவளுடைய முகத்தில் ஒரு வெட்கச்சிவப்பு..!! கீழுதட்டை மடித்து பற்களால் கடித்தவாறே.. அவளுடைய மார்புகள் இரண்டையும் அழுத்தியவாறு படர்ந்திருந்த சிபியின் கையை.. அவனுடைய உறக்கம் கலைந்துவிடாமல் மென்மையாக தன்னிடமிருந்து விலக்கினாள்.. மெல்ல எழுந்து அமர்ந்து கொண்டாள்..!!

 
உடல் மிகவும் களைத்துப் போயிருந்ததை உடனடியாய் அவளால் உணர முடிந்தது..!! அவளுடைய அந்தரங்க பாகங்களில் எல்லாம் ஒரு புதுவித உணர்வு.. வலிக்கவும் செய்தது.. சுகமாகவும் இருந்தது..!! ஆண்மகன் தருகிற இன்பமது எப்படி இருக்கும் என்பதை, நேற்றிரவுதான் முதன்முறையாக அறிந்திருந்தாள்.. அந்த இன்பம் விழைவிக்கிற அதிகாலை விளைவு எப்படி இருக்கும் என்பதை, இப்போது உணருகிறாள்..!! நேற்றிரவு தலையில் சூடிய மல்லிகைச் சரத்தில்.. இப்போது கணிசமான அளவு மெத்தையில் உதிர்ந்து கசங்கி போயிருக்க.. நார் மட்டுமே கூந்தலோடு பிரதானமாக பிண்ணியிருந்தது..!!

ஆதிரா அதை தனியாக பிரித்தெடுத்தாள்.. கையில் வைத்து பந்தாக சுருட்டி, சற்று தூரத்தில் இருந்த குப்பைக் கூடையில், இங்கிருந்தே குறி பார்த்து எறிந்தாள்..!! காலுக்கடியில் கிடந்த பெட்டிக்கோட்டை இழுத்து இடுப்பை சுற்றி முடிச்சிட்டாள்.. கட்டிலின் ஓரமாக கிடந்த ப்ராவை எட்டி கையில் எடுத்தாள்..!! கணவன் தூங்குகிற அழகை ஓரக்கண்ணால் பார்த்து ரசித்தவாறே.. தனது கலசங்களை மூடி அந்த ப்ராவை அணிந்துகொண்டாள்..!! சிபி இப்போது புரண்டு படுத்தான்.. கழுத்துவரை அவன் போர்த்தியிருந்த போர்வை மெல்ல விலகிக்கொண்டது..!!

கணவனின் முழு உருவத்தையும் இப்போது காண நேர்ந்த ஆதிராவுக்கு.. உடனே மனதில் ஒரு திடீர் குறுகுறுப்பு..!! 'இவன் எப்போது உடை அணிந்து கொண்டான்..?? எனக்கு நினைவிருக்கிறவரை எதுவும் அணியாமல்தானே இருந்தான்..?? இடையில் எழுந்திருப்பானோ..?? ஐயையோ..!! அப்படியானால்.. அவன் எழுந்தபோது நான் இதே கோலத்திலா கிடந்தேன்..?? வெளிச்சத்தில் பார்க்க நேற்றிரவு அவன் ஆசையுற்றபோது முடியாது என்று மறுத்தேனே..?? நான் உறங்குகையில் எழுந்து தன் ஆசையை தீர்த்துக்கொண்டிருப்பானோ..??

ஒட்டுத் துணியில்லாமல் நான்.. ஆஆஹ்ஹ்ஹ்க்.. என்ன நினைத்திருப்பான்..?? ச்ச.. ஷேம் ஷேம்..!!" சிலநொடிகள் அவ்வாறு ஒருவித அவஸ்தை உணர்வுக்கு ஆளான ஆதிரா, பிறகு.. 'என்னாயிற்று இப்போது..?? ஏன் இப்படி பதறுகிறாய்..?? பார்த்தால் பார்த்துவிட்டு போகிறான்..?? உன் காதல் கணவன்தானே..?? உன் அழகு மொத்தத்தையும் ஆளுகிற உரிமையுள்ளவன்தானே..?? பார்த்தால் பார்த்துவிட்டு போகிறான்..!!' என்றொரு சிந்தனை தோன்றவும், சற்று சமாதானமானாள். அதற்குள்ளாகவே, 'வெட்கமில்லாதவள் என்று ஒருவேளை நினைத்திருப்பானோ..??' என்று ஒருமனது கிடந்து பரபரத்தது.

உடனே, 'நேற்றிரவு உன்னுடன் கூடும்போதே அது அவனுக்கு புரிந்திருக்கும்..!!' என்று இன்னொரு மனது கேலியாக பதில் சொல்லவும், 'களுக்' என்று உடனடியாய் எழுந்த ஒரு சிரிப்பை ஆதிராவால் அடக்க முடியவில்லை.. வாயை பொத்திக்கொண்டு சப்தமில்லாமல் சிரித்தாள்..!! பிறகு.. ப்ளவுசை மட்டும் தேடிப்பிடித்து அணிந்துகொண்டவள்.. அப்படியே எழுந்து சென்று குளியலறைக்குள் நுழைந்தாள்..!! குளித்து முடித்து வெளியே வந்து வேறு உடை அணிந்து கொண்டாள்.. டவல் சுற்றிய கூந்தலுடன் கதவை திறந்து ஹாலுக்குள் பிரவேசித்தாள்..!!

 "ஓம் சுக்லாம் பரதரம் விஷ்ணும் சசிவர்ணம் சதுர்ப்புஜம்.. ப்ரசன்ன வதனம் த்யாயேத் சர்வ விக்நோப சாந்தயே..!!" சுப்ரபாதம் முடிந்து விஷ்ணு சஹஸ்ரநாமம் இப்போது வீட்டுக்குள் ஒலித்துக் கொண்டிருந்தது.. குமிழ் ஒன்றை திருகி எம்.எஸ்.சுப்புலக்ஷ்மியின் குரல்பருமனை சற்று குறைத்தாள்..!! பூஜையறைக்குள் நுழைந்து.. கைகள் கூப்பி.. கண்கள் மூடி.. கால்கள் மடக்கி அமர்ந்துகொண்டாள்..!! 'பெருமாளே..!! இப்போ.. இந்த நிமிஷத்துல.. என் மனசுல இருக்குற நிம்மதியும் சந்தோஷமும்.. எப்போவும் எனக்கு வேணும்னு ஏக்கமா இருக்கு.. அதுக்கு நீதாம்ப்பா அருள் புரியணும்..!! மனசுல இருக்குற குழப்பங்களை தீர்த்து வை.. மஞ்சளும் குங்குமமும் எனக்கு நிலைக்க வை..!!' - என்கிற ரீதியில் மனமுருக வேண்டிக் கொண்டாள்.

 ஐந்து நிமிடங்கள் கழித்து பூஜையறையை விட்டு உற்சாகமாக வெளியே வந்தாள்..!! சுவற்றில் மாட்டியிருந்த அந்த பெரிய சைஸ் புகைப்படம் கண்ணில் படவும்.. கால்கள் தயங்கியவளாய் சற்று நின்றாள்.. முகத்தில் சலனமில்லாமல் அந்த புகைப்படத்தையே சில வினாடிகள் பார்த்தாள்..!! ஆதிராவும் அவளுடைய தங்கை தாமிராவும் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படம்..!! இருவரும் ஒருவரை ஒருவர் அணைத்துக்கொண்டு.. கள்ளம் கபடம் இல்லாத ஒரு வெள்ளைப் புன்னகையை.. காமிராவை பார்த்து சிந்திக் கொண்டிருந்தனர்..!!

அழகு கொஞ்சும் தங்கையின் முகத்தையே அன்பொழுக பார்த்த ஆதிரா.. கண்களை படக்கென மூடி கடவுளை மீண்டும் நினைத்துக் கொண்டாள்.. உதடுகள் முனுமுனுக்க கடவுளிடம் ஏதோ பிரார்த்தனை செய்து கொண்டாள்..!! கண்திறந்தவள் நீளமாய் ஒரு பெருமூச்சை உதிர்த்தாள்.. ஹாலின் இன்னொரு மூலையில் இருக்கிற சமையலறைக்கு நடந்தாள்..!! சமையலறைக்குள் நுழைய.. ஆதிராவின் அம்மா பூவள்ளி பார்வைக்கு கிடைத்தாள்.. பாத்திரம் கழுவிக் கொண்டிருந்தாள்..!! அம்மா ஏறிட்டு பார்க்கவும், ஆதிரா அழகாக ஒரு புன்னகையை சிந்தினாள்..!!

 "என்னம்மா பண்ணிட்டு இருக்குற..??" "பாத்தா தெரியல.. பாத்திரம் கழுவிட்டு இருக்குறேன்..!! காபி போடலாம்னு நெனச்சேன்..!!" "சரி.. எங்கிட்ட விடு.. நான் பாத்துக்குறேன்..!!" "இல்ல ஆதிரா.. பரவா.." "ப்ச்.. சொல்றேன்ல.. நான் பாத்துக்குறேன்.. நீ கெளம்பு.. போய் ரெஸ்ட் எடு.. நான் காபி போட்டு எடுத்துட்டு வரேன்..!!" சொன்ன ஆதிரா அம்மாவின் கையில் இருந்த பால் பாத்திரத்தை பிடுங்கிக் கொண்டாள்.. குழாய் நீரை கொஞ்சமாய் திறந்து விட்டுக் கொண்டாள்.. ப்ரஷ் கொண்டு பாத்திரத்தை தேய்த்து சோப்பு நுரையை பொங்க வைத்தாள்..!! பூவள்ளி அதன்பிறகும் நகர மனமில்லாமல் அங்கேயே நின்றிருந்தாள்.. அப்புறம் காய்கறி தட்டில் கிடந்த தேங்காயை அவள் கையில் எடுக்க.. ஆதிரா அதட்டினாள்..!!

 "அதை எதுக்கு எடுக்குற..??" "இல்லடி.. நீ காபி போடுற நேரத்துல.. சட்னி ரெடி பண்ணலாம்னு..!!" "ப்ச்.. சொன்னா உனக்கு புரியாதா.. எல்லாம் நான் பாத்துக்குறேன்.. நீ போய் ஹால்ல உக்காரு போ..!!" ஆதிராவின் குரலில் ஒருவித எரிச்சல் தொனித்தாலும்.. அதையும் தாண்டி அவள் முகத்தில் வெளிப்பட்ட ஒரு உற்சாகம்தான் பூவள்ளியின் கவனத்தை கவர்ந்தது..!! தேங்காயை தட்டில் வைத்துவிட்டு.. மகளின் முகத்தையே சிறிது நேரம் ஆசையாக பார்த்துக் கொண்டிருந்தாள்..!! 'எத்தனை நாளாயிற்று.. இவளிடம் இந்த உற்சாகத்தை பார்த்து..?? தாமிரா போனதில் இருந்தே.. இந்த குடும்பத்தில் நிம்மதி என்பது இல்லாமல் இருந்தது.. இவளுடைய முகத்திலும் சந்தோஷம் என்பது செத்துப் போயிருந்தது..!!

மோசமான அந்த சூழ்நிலையில் இருந்து.. கொஞ்சம் கொஞ்சமாய் இந்த குடும்பம் சகஜ நிலைக்கு திரும்பிக்கொண்டிருக்கிற வேளையில்.. இவளுடைய இந்த புது உற்சாகத்தை பார்ப்பதற்குத்தான் மனதுக்கு எவ்வளவு இதமாக இருக்கிறது..??' பூவள்ளி அவ்வாறு அகத்துக்குள் ஆனந்தப்பட்டுக் கொண்டிருக்கையிலேயே, "என்னம்மா.. என்னமோ என்னை புதுசா பாக்குற மாதிரி.. அப்படி பாக்குற..??" ஆதிரா புன்னகையுடன் கேட்டாள்.

 "ம்ம்.. புதுசாத்தான்மா பாக்குறேன்..!!" "எ..என்ன சொல்ற.. எனக்கு புரியல..!!" குழப்பமாக கேட்ட ஆதிராவுக்கு அவளுடைய அம்மா பதில் ஏதும் சொல்லவில்லை..!! மகளை நெருங்கி.. அவளுடைய மதிமுகத்தை இரு கைகளாலும் தாங்கி தடவி.. பிறகு அந்த கைகளை தனது உதட்டில் ஒற்றி முத்தமிட்டாள்..!! "இன்னைக்கு மாதிரியே என்னைக்கும் சந்தோஷமா இருக்கணும்டி என் தங்கம்..!!" அம்மா அன்பை பொழிந்ததில் ஆதிரா சற்று நெகிழ்ந்துதான் போனாள்.. நாணத்துடன் கூடிய ஒரு புன்னகையை உதடுகளில் கசியவிட்டாள்..!! "இ..இருப்பேன்மா.. இப்படியே சந்தோஷமா இருப்பேன்.. போதுமா..??"

 "அது போதும்டி..!!" "ம்ம்ம்ம்ம்.. நீ ஹாலுக்கு போ.. நான் காபி போட்டு எடுத்துட்டு வரேன்..!!" பூவள்ளி சமையலறையை விட்டு அகலவும்.. ஆதிராவை ஒரு சுறுசுறுப்பு தொற்றிக்கொண்டது..!! படபடவென பாத்திரம் கழுவி முடித்தவள்.. பத்தே நிமிடங்களில் காபியும் தயார் செய்துவிட்டாள்..!! ஹாலுக்கு சென்று.. தட்டில் இருந்த மூன்று தம்ளர்களில் ஒன்றை அம்மாவிடம் நீட்டியவாறே.. "அப்பா எங்கம்மா போயிட்டாரு..??" என்று கேட்டாள். "ம்க்கும்.. எங்க போயிருப்பாரு..?? வீட்டுக்கு பின்னால இருக்குற தோட்டத்துல நிப்பாரு..!!

காலங்காத்தாலேயே தோட்டத்துல இருக்குற செடியையெல்லாம் கட்டிப்புடிச்சு முத்தம் குடுக்கலைன்னா.. உங்க அப்பாவுக்கு காலைச்சாப்பாடே எறங்காது..!!" பூவள்ளி அவ்வாறு கேலியாக சொல்லவும், ஆதிரா சிரித்துவிட்டாள். "ஹஹா.. சரி சரி.. அவருக்கு காபி வச்சுட்டு போறேன்.. வந்ததும் குடிக்க சொல்லு..!!" இரண்டாவது தம்ளரை டீப்பாயில் வைத்துவிட்டு.. ஆதிரா உள்ளறைக்கு திரும்பினாள்..!! நடந்து சென்று தங்கள் அறைக்குள் நுழைந்தாள்.. கதவை சாத்திவிட்டு.. காபியை டேபிளில் வைத்துவிட்டு.. கட்டிலில் மெல்ல அமர்ந்து.. கணவனை துயில் எழுப்பலானாள்..!!




"அத்தான்.. எழுந்திரிங்க.. டைமாச்சு..!!" அவ்வளவுதான்..!! எல்லா படங்களில், எல்லா கதைகளிலும் வருகிற எல்லா ஹீரோக்களையும் போலவே.. விருட்டென்று எழுந்த சிபி, ஆதிராவை இழுத்து தன் மார்போடு போட்டு, இறுக்கி அணைத்துக்கொண்டான்..!! "ஐயோ.. என்னத்தான் இது.. விடுங்க..!!" எல்லா ஹீரோயின்களையும் போலவே, ஆதிராவும் சிபியின் சில்மிஷம் பிடிக்காத மாதிரி சிணுங்கினாள் .

 "அதுக்குள்ள குளிச்சாச்சா..?? நல்லா வாசமா இருக்குற..??" அவளுடைய சிணுங்கலை மதியாமல், ஆதிராவின் கூந்தல் நுகர்ந்தான் சிபி. "ஆமாம்..!! ம்ம்ம்ம்ம்ம்... விடுங்கத்தான்.. நான் போகணும்..!!" "எங்க போற..??" "டிபன் ரெடி பண்ணனும்..!!" "அதுலாம் அத்தை பாத்துப்பாங்க.. விடு..!! நீ கொஞ்ச நேரம் இருந்துட்டு போ..!!" "ஹையோ.. வேலை பாக்குறேன்னு சொன்னவங்களையும் நான்தான் வேணாம்னு வெரட்டிட்டு வந்திருக்கேன்.. வேறவழியில்ல.. நான்தான் போய் இப்போ ரெடி பண்ணனும்..!!" ஆதிரா அவ்வாறு சொன்னதும், இப்போது சிபி அவளை பிடித்திருந்த பிடியை சற்றே நெகிழ்த்தினான்..

மனைவியின் முகத்தை ஏறிட்டு பார்த்தான்.. சற்றே கிண்டலான குரலில் கேட்டான்..!! "ம்ம்.. அறிவுகெட்ட ஆதிரா அப்படி ஏன் பண்ணினாளாம்..??" "ஹ்ம்ம்..?? வெக்கங்கெட்ட நீங்க இப்படி பண்ணுவிங்கன்னு எனக்கு எப்படி தெரியுமாம்..??" "ஹாஹாஹா..!! ம்ம்.. அப்போ.. நான் இப்படி பண்ணுவேன்னு தெரிஞ்சிருந்தா.. எல்லா வேலையும் அத்தை தலைல கட்டிட்டு வந்திருப்பியா..??" மனைவியின் குறும்புக்கு சிரித்த சிபி, விடாமல் கேலியாக கேட்டான். "ஹ்ஹ.. அப்படிலாம் நான் சொல்லவே இல்லையே..??" ஆதிராவோ நாக்கு துருத்தி அவனுக்கு பழிப்பு காட்டினாள்.

 "ஹாஹாஹாஹா..!!" முன்பை விட பலமாக சிரித்த சிபி, இப்போது ஆதிராவின் இடுப்பை விடுவித்தான்.. ஒரு கையால் காபி எடுத்து உறிஞ்சியவாறே, இன்னொரு கையை ஆதிராவின் தோள் மீது போட்டு.. அவளை தன்னோடு இதமாக அணைத்துக் கொண்டான்..!! ஆதிராவோ அந்த அணைப்புக்கு நெளிந்தவளாய்,
"சீக்கிரம் குளிச்சுட்டு வாங்கத்தான்.. நான் போய் டிபன் ரெடி பண்றேன்..!!" என்றவாறு எழ எத்தனித்தாள் "ஹேய்ய்ய்.. இருடா.. என்ன அவசரம்..??" சிபி அவளுடைய கையை பற்றி கட்டிலில் அமரவைத்தான்.

 "எனக்கு ஒன்னும் அவசரம் இல்ல.. உங்களுக்குத்தான் டைம் ஆச்சு..??" "எனக்கு என்ன டைம் ஆச்சு..??" "ப்ச்.. பத்து மணிக்கு ஃப்ளைட்.. கெளம்ப வேணாமா..??" ஆதிரா அவ்வாறு கேட்கவும் சிபி இப்போது பட்டென அமைதியானான்.. நீளமாக ஒரு பெருமூச்சை வெளிப்படுத்தியவன், தலையை மெல்ல தொங்கப் போட்டுக் கொண்டான்..!! சிபி ஒரு ப்ரஃபஷனல் ஃபோட்டோக்ராஃபர்.. பெங்களூரில் தலைமையகத்துடன் இயங்கும் உதயவாணி என்கிற கன்னட நாளிதழின் மைசூர் கிளையில் பணி புரிகிறான்..!! அலுவல் நிமித்தமாக இன்று அவன் டெல்லி பயணிக்க திட்டமிடப்பட்டிருந்தது..

அந்த பயணத்திற்கான ஃப்ளைட் பற்றிதான் ஆதிரா இப்போது சொன்னது..!! சிபி இப்போது தலையை கொஞ்சமாய் நிமிர்த்தி.. மனைவியின் முகத்தை ஏறிட்டு.. ஏக்கமான குரலில் கேட்டான்..!! "கெளம்பனுமா ஆதிரா..??" "என்ன கேள்வி இது..?? ஃப்ளைட் டிக்கெட் புக் பண்ணியாச்சு.. டெல்லில நீங்க தங்குறதுக்கு ஹோட்டல் ரிசர்வ் பண்ணியாச்சு.. ஒரு வாரத்துக்கு தேவையான ட்ரெஸ்லாம் அயர்ன் பண்ணி வச்சாச்சு..!! இப்போ வந்து இப்படி கேட்டா என்ன அர்த்தம்..??" "ம்ம்..?? எனக்கு போகப் பிடிக்கலன்னு அர்த்தம்..!!" "ஏன் போக பிடிக்கல..??" "ஏன்னு உனக்கு தெரியாதா..??" சிபி குறும்பாக கேட்டுவிட்டு, மனைவியின் கண்களையே குறுகுறுவென பார்த்தான்..

அந்த பார்வையின் அர்த்தத்தை புரிந்துகொண்டதும், பட்டென ஒரு வெட்கச் சிவப்புக்கு உள்ளானது ஆதிராவின் முகம்..!! நாணத்தால் அவளையும் அறியாமல் தலைதாழ்த்திக் கொண்டவள்.. அந்த அர்த்தம் புரியாத பாசாங்குடனே சொன்னாள்..!! "இ..இல்ல.. எனக்கு தெரியல.. நீங்க சொல்லுங்க..!!" "ஹ்ம்ம்ம்ம்..!! இதே நேத்து கெளம்புற மாதிரி இருந்திருந்தா.. எந்த தயக்கமும் இல்லாம கெளம்பிருப்பேன் ஆதிரா..!!"

 "ஏன்.. இன்னைக்கு என்னாச்சு..??" "ருசி தெரிஞ்சு போச்சே.. என் பொண்டாட்டி எப்படி இருப்பான்ற ருசி..!! ஒருநாள் பாலை குடிச்சு பழகின பூனை.. அடுப்பங்கரையையே சுத்தி சுத்தி வருமே.. அந்த மாதிரி ஒரு மைண்ட்செட்லதான் நான் இப்போ இருக்கேன்..!!" சிபி சொல்ல சொல்ல, ஆதிரா மேலும் மேலும் வெட்கமுற்றாள். "ஓஹோ..??" "யெஸ்..!! கல்யாணம் ஆகி ஒருமாசம் ஆகியும்.. இத்தனை நாளா இதை விட்டு வச்சுட்டோமேன்னு இப்போ ஃபீல் பண்றேன்..!!"

 "ஹாஹா.. உங்களை யாரு விட்டு வைக்க சொன்னதாம்..??" "என்ன பண்றது.. எனக்கு அப்போ அப்படி தோணுச்சு..!!" "எப்படி..??" "கல்யாணம் முடிஞ்சதுமே இதெல்லாம் பண்ணனுமா.. கொஞ்சநாள் போகட்டுமேன்னு..!! எல்லாம் ஒரு கூச்சந்தான்..!!" "ம்ம்.. நேத்து எங்க போச்சாம்.. அந்த கூ..ச்சம்..??" "ஹாஹா.. அது உன்னாலதான்..!!" "என்னாலயா..?? நான் என்ன பண்ணுனேன்..??" "நீதான நேத்து.. தலைல மல்லிகைப்பூ.. ஃபுல் மேக்கப்பு.. ட்ரான்ஸ்பரன்ட் ஸாரிலாம் கட்டிக்கிட்டு.. அப்டியே செக்ஸியா.. செக்ஸுக்கு இன்வைட் பண்ற மாதிரி உள்ள வந்த..?? எல்லாம் உன்னாலதான்..!!"

 "ஆஹா.. நல்லாருக்கே கதை..!!! பண்றதெல்லாம் நீங்க பண்ணிட்டு.. பழியை என் மேல போடுறீங்களா..??" "பழியெல்லாம் போடல.. அதுதான் உண்மை..!!" "ஓஹோ.. அப்படியா சேதி..?? சரி.. இருக்கட்டும் இருக்கட்டும்..!! போறப்போ உங்களுக்கு ஏதாவது தரலாம்னு நெனச்சேன்.. இப்போ ஒன்னும் கெடையாது..!! கெளம்புங்க கெளம்புங்க.. ஃப்ளைட்டுக்கு டைமாச்சு.. அண்ணா ஹசாரே உங்களுக்காக டெல்லில வெயிட்டிங்..!!" "ஐயோ.. அதை சொல்லாதேயேன்.. ப்ளீஸ்...!!" "சொல்லுவேன் சொல்லுவேன்..!! இன்னும் ரெண்டு மணி நேரத்துல உண்ணாவிரதம் ஆரம்பிக்கப் போறாரு..!!

நீங்க போயி.. ஃபோட்டோலாம் புடிச்சி.. அங்கேயே தங்கி இருந்து.. உங்க கவர் ஸ்டோரி ரெடி பண்ணிட்டு வாங்க.. போங்க போங்க..!!" "ம்க்கும்.. கவர் ஸ்டோரியா அது..?? என் கண்ணீர் ஸ்டோரி..!! எனக்கு போறதுக்கே பிடிக்கல ஆதிரா..!! ஆபீஸ்ல ஏதாவது சாக்குபோக்கு சொல்லிட்டு இங்கயே இருந்திடுறேனே..?? நேத்து மாதிரியே கட்டிப் புடிச்சு படுத்துக்கலாம்.. என்ன சொல்ற.. ம்ம்.. ம்ம்.. ம்ம்..??" "ஐயோ.. என்ன இது சின்னப்புள்ள மாதிரி..?? அதுலாம் முடியாது.. கெளம்புங்க சீக்கிரம்.. அண்ணா ஹசாரே உண்ணாவிரதத்தை முடிக்கிற வரை.. நீங்களும் கொஞ்சம் பட்டினி கெடங்க..!!"

"ப்ச்.. அவர் ரொம்ப புடிவாதம் புடிச்ச ஆளாச்சே..?? சீக்கிரம் விரதத்தை முடிக்க மாட்டாரே..??" "ஹாஹா.. அதுக்கு நான் என்ன பண்றது..??" "ஒருவாரமாவது ஆகிடும் ஆதிரா.. ரொம்ப ஏங்கிப் போயிடுவேன்..!!" சிபி பாவமாக கெஞ்ச, அவனுக்கு பதில் சொல்கிற ஜோரில் "என்னை ஒருமாசமா ஏங்க வச்சிங்கள்ல.. நீங்க ஒருவாரம் ஏங்கினா ஒன்னும் தப்பு இல்ல..!!" என்று மனதில் இருந்த ஏக்கத்தை ஆதிரா உளறிக் கொட்டிவிட்டாள்.. உளறியது புரிந்ததும் உடனே நாக்கை கடித்துக் கொண்டாள்..!!

ஆனால்.. சிபி அந்த வார்த்தைகளை கற்பூரம் மாதிரி கப்பென்று பற்றிக்கொண்டான்.. முகத்தில் ஒரு புதுவித பிரகாசம் பிறந்தவனாய்.. "ஹேய்ய்ய்... என்ன சொன்ன இப்போ.. என்ன சொன்ன.. கொஞ்சம் திரும்ப சொல்லு..!!" "எ..என்ன சொன்னேன்.. ஒ..ஒன்னும் சொல்லலையே..??" முழுக்க நனைந்தபிறகு முக்காடு தேடினாள் ஆதிரா. "இல்ல.. ஒருமாசமா ஏங்கிட்டு இருந்தேன்னு சொன்ன..!!" "சேச்சே.. அப்டிலாம் ஒன்னும் சொல்லல.. உங்களுக்கு காது ஸ்லிப் ஆகி இருக்கும்..!!"

 "ஹாஹா.. எனக்கு காது ஸ்லிப் ஆயிடுச்சா.. இல்ல.. உன் மனசு வெளில ஜம்ப் ஆயிடுச்சா..??" சிபி அவ்வாறு கேட்க, ஆதிராவுக்கு இப்போது குப்பென்று முகம் சிவந்து போனது. "ஹையோ.. போங்கத்தான்.. நான் அப்டிலாம் ஒன்னும் சொல்லவே இல்ல.. நான் கெளம்புறேன் போங்க..!!" என்று எழுந்து ஓடினாள். "ஹேய்ய்ய்.. இரு இரு..!!" "விடுங்க..!!" சிபி ஆதிராவின் கையை எட்டி பிடிக்க.. அவள் வெடுக்கென்று உதறிவிட்டு வெட்கத்துடன் கதவை நோக்கி ஓடினாள்..!! "ஹேய் ஆதிரா.. ஒரு நிமிஷம்..!!" சிபி அந்த மாதிரி கத்தவும்.. வாசல் வரை சென்றிருந்த ஆதிரா பட்டென்று நின்றாள்.. வெட்கம் சற்றும் குறையாதவளாய், கணவனிடம் திரும்பி கேட்டாள்..!!

 "எ..என்ன..??" "உன்கிட்ட ஒன்னு சொல்ல மறந்துட்டேன்..!!" "என்னது..??" "அந்த மச்சம் சூப்பரா இருந்தது..!!" சிபியிடம் ஒரு குறும்பு. "எந்த மச்சம்..??" ஆதிராவிடம் ஒரு குழப்பம். "அதான்.. உன் இடுப்புக்கு கீழ.. அதுக்கு பக்கத்துல.. இவ்வளவு பெருசா..!!" சொல்லிவிட்டு சிபி கண்சிமிட்ட, "ஹையோஓஓஓஓ..!!!!" உச்சபட்ச நாணத்துக்கு உள்ளான ஆதிரா.. படக்கென முகத்தை இருகைகளாலும் மூடிக்கொண்டாள்..!! தான் சந்தேகித்த மாதிரியே, கணவன் தன் உடலை வெளிச்சத்தில் ரசித்திருக்கிறான் என்று தெரிந்து போனதில்.. வெட்கம் அப்படியே அவளை பிடுங்கித் தின்றது..!!

சிபியின் முகத்தைப் பார்க்கவே கூசிப் போனவளாய் சில வினாடிகள் நின்றிருந்தவள்.. அப்புறம் இரண்டு விரல்களை விரித்து, ஒற்றைக் கண்ணால் கணவனை பார்த்து.. சிணுங்கல் சிந்துகிற குரலில் கேட்டாள்..!! "பாத்துட்டிங்களா..??" "முத்தம் கூட குடுத்தேன்.. ஈரமா..!!" சிபி அவளை மேலும் சீண்டினான். "ச்ச்ச்ச்சீய்ய்ய்ய்..!!!!!!!" கத்திய ஆதிரா அதன்பிறகு ஒற்றை வினாடி கூட அந்த அறையில் இருக்கவில்லை.. கதவு திறந்தவள், புள்ளிமானாய் துள்ளிக் குதித்து ஓடிப்போனாள்..!!

 அப்புறம்.. சிபி குளித்து முடித்து வெளியே வர அரைமணி நேரம் ஆனது.. ஆதிரா உணவு தயார் செய்து முடிக்க அதன்மேலும் அரைமணி நேரம் ஆனது..!! ஆவி பறக்கிற நீர் தோசையும்.. மணம் கமழுகிற தேங்காய் சட்னியும்..!! ஆதிராவின் அப்பா தணிகை நம்பியும் தோட்டத்தில் இருந்து திரும்பியிருக்க.. நால்வரும் டைனிங் டேபிளில் அமர்ந்து காலை உணவு அருந்தினர்..!! சிபி தணிகை நம்பியின் தங்கை மகன்தான்.. சிறு வயதிலேயே பெற்றோரை இழந்தவன்.. ஏழு வயதில் இருந்தே அவனை எடுத்து வளர்த்தது தணிகை நம்பிதான்..!! விஷுவல் கம்யுனிகேஷனில் பட்டம் பெற்ற சிபி, இந்த மைசூர் பத்திரிகை அலுவலகத்தில் வேலையும் வாங்கிவிட்டான்..!!

கடந்த ஒருவருடமாக.. மாமாவின் குடும்பத்தை தன்னுடன் வைத்திருக்கிறான்..!! வாழ்வு தந்த மாமாவின் மீது அவனுக்கு எப்போதும் தனி மரியாதை உண்டு..!! பிறந்தது இரண்டும் பெண்களாகி போய்விட.. தணிகை நம்பியும் தங்கையின் மகனை தன்மகனாகவே நினைப்பார்.. மருமகன் ஆனபிறகும் அந்த நினைப்பு அவருக்கு மாறிப்போகவில்லை..!! அந்த உரிமையில்தான் இப்போதும், "எப்போ கெளம்புற சிபி..??" என்று ஒருமையிலும், பெயர் சொல்லியும் அவனை விளித்தார்.

 "சாப்பிட்டு கெளம்ப வேண்டியதுதான் மாமா..!!" "எத்தனை மணிக்கு ஃப்ளைட்..??" "பத்து மணிக்கு..!!" "ம்ம்.. டாக்ஸி வர சொல்லிருக்கிறியா..??" "இ..இல்ல..!!" "அப்புறம்..??" "ஆ..ஆதிரா என்னை.. ஏ..ஏர்போர்ட்ல ட்ராப் பண்றேன்னு சொல்லிருக்கா..!!" சிபி சற்று தடுமாற்றத்துடனே சொல்ல, தணிகை நம்பியின் முகத்தில் ஒருவித மலர்ச்சி.. அவருடைய உதடுகளில் கசிந்த அந்த புன்னகையில், ஒருவித நிம்மதியும் பெருமிதமும் ஒருசேர கலந்திருந்தது..!!

 அதன்பிறகு ஒருமணி நேரம் கழித்து.. சிபி வீட்டில் இருந்து கிளம்பினான்..!! காரின் பின்புறம் ட்ராவல் பேகை திணித்தவன்.. கதவை அறைந்து சாத்தினான்..!! அவன் கையிலிருந்த கார்ச்சாவியை ஆதிரா பிடுங்கிக் கொண்டாள்..!! "நான் ட்ரைவ் பண்றேன் அத்தான்.. ப்ளீஸ்..!!" ஆசையாய் கேட்ட மனைவியை புன்னகையுடன் அனுமதித்தான் சிபி..!! இருவரும் காரில் ஏறி அமர்ந்தார்கள்..!! அவ்வாறு அமர்ந்ததுமே.. "கண்ணை மூடுங்கத்தான்..!!" சற்றே உத்தரவிடுவது மாதிரி சொன்னாள் ஆதிரா. "எதுக்கு..??" சிபி புரியாமல் கேட்டான். "மூடுங்கன்னு சொல்றேன்ல.. மூடுங்க..!!" ஆதிரா அதட்டவும், எதுவும் புரியாமலே சிபி கண்களை மூடிக்கொண்டான்.

 "ம்ம்.. கையை நீட்டுங்க..!!" மீண்டும் அதிகார தோரணையுடன் ஆதிரா. "எதுக்குன்னு சொல்லு..!!" "ப்ச்.. நீங்க நீட்டுங்க.. சொல்றேன்..!!" சிபி இப்போது கையை நீட்ட.. ஆதிரா அத்தனை நேரம் ஒளித்து வைத்திருந்த அந்த பெட்டியை இப்போது கையில் எடுத்தாள்..!! அந்த பெட்டிக்குள் இருந்து.. அழகான வேலைப்பாடுகளுடன் கூடிய ஒரு கைக்காடிகாரத்தை வெளியே எடுத்தாள்..!! அதை சிபியின் கையில் கட்டிவிட ஆரம்பித்தாள்..!! அவள் என்ன செய்கிறாள் என்று ஓரளவுக்கு புரிந்தும்.. எதுவும் புரியாதவனாக நடித்தவாறே.. "ஹேய்.. என்ன பண்ற.. கேக்குறேன்ல.. சொல்லு..!!" என்று மூடிய விழிகளுடன் கேட்டுக்கொண்டே இருந்தான் சிபி.

 "ஹ்ம்ம்.. இப்போ கண்ணை திறந்து பாருங்க..!!" ஆதிரா கட்டிமுடித்துவிட்டு சொன்னாள். உடனே கண் திறந்து பார்த்த சிபி, "வாவ்வ்வ்வ்..!!!" என்று கடிகாரத்தை பார்த்து ஆச்சரியமடைந்தான். "பிடிச்சிருக்கா..??" ஆதிரா பெருமிதமாக கேட்டாள். "ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கு..!!" "ம்ம்..!! வாட்ச் கட்ட மாட்டேன்.. வாட்ச் கட்டுறதே எனக்கு பிடிக்காதுன்னு சொல்லிட்டு திரிவிங்கள்ல..?? இனிமே பாக்கலாம்.. கட்டுறிங்களா.. இல்ல கழட்டி போடுறிங்களான்னு..??" ஆதிரா குறும்பாக சொல்லவும், "ஹாஹா..!! கழட்டவே மாட்டேன்.. கைலையே போட்டுக்குறேன் போதுமா..??" சிபி சிரிப்புடன் சொன்னான்.

உடனே, "அதுசரி.. என்ன இது.. திடீர்னு வாட்ச்லாம்..??" என்று நெற்றியை சுருக்கியவாறு கேட்டான். "இது என்னோட கிஃப்ட்..!!" "கிஃப்ட்டா..?? எதுக்கு..??" "ம்ம்.. இன்னைக்கு என்ன நாள்னு ஞாபகம் இருக்கா..??" "என்ன நாள்..??" சிபி குழப்பமாக தலையை சொறிந்தான். "ரொம்ப யோசிக்காதிங்க.. இன்னைக்கு பிப்ரவரி 14th.. வேலன்டைன்ஸ் டே..!! லவ் பண்றவங்களுக்கு இந்த மாதிரி ஏதாவது கிஃப்ட் வாங்கி குடுத்து.. நம்மளோட லவ்வை அவங்களுக்கு எக்ஸ்ப்ரஸ் பண்ற நாள்.." என்று படபடவென சொல்லிக்கொண்டே வந்த ஆதிரா பட்டென நிறுத்தி, "ஐ லவ் யூ அத்தான்..!!" என்று கண்களிலும் குரலிலும் காதல் பொங்க சொல்லி முடித்தாள். சிபி அப்படியே உருகிப் போனான்..

அவனும் கண்களில் வழிகிற காதலுடன் மனைவியையே பார்த்துக்கொண்டிருந்தான்..!! சில வினாடிகள்..!! அப்புறம் என்ன நினைத்தானோ.. படக்கென தனது விரலில் போட்டிருந்த அந்த மோதிரத்தை கழற்றி எடுத்தான்..!! "நீ கண்ணலாம் மூட வேணாம்.. கையை மட்டும் நீட்டு..!!" என்றவாறு, "ஹையோ.. அ..அத்தான்.. என்ன இது..??" என்று ஆதிரா அதிர்ந்து கொண்டிருக்கையிலேயே, அவளுடைய விரல் பிடித்து அந்த மோதிரத்தை மாட்டி விட்டான்..!!

 "இன்னைக்கு வேலன்டைன்ஸ் டே-னு எனக்கு சத்தியமா ஞாபகம் இல்ல ஆதிரா.. அப்படியே ஞாபகம் இருந்திருந்தாலும் உனக்கு ஏதாவது கிஃப்ட் வாங்கி வச்சிருப்பேனான்றதும் சந்தேகந்தான்.. அதுலாம் எனக்கு தோணாம கூட போயிருக்கலாம்.. பட்.." ஆதிரா மாதிரியே படபடவென பேசிய சிபி பட்டென நிறுத்தி, "ஐ லவ் யூ ஆதிரா..!!" என்று அதே காதல் பொங்குகிற குரலில் சொல்லி முடித்தான். கணவனின் செய்கையில் இப்போது ஆதிரா அப்படியே உருகிப் போனாள்.. அந்த மோதிரத்தையே பெருமிதமாக பார்த்தவள், அப்புறம் சிபியை ஏறிட்டு காதலும் கண்ணீரும் தளும்புகிற விழிகளுடன் பார்த்தாள்..!!

 "எ..என்னத்தான் இது..?? நான் கிஃப்ட் தந்தேன்றதுக்காக.. நீங்களும் ஏதாவது தரணும்னுலாம் அவசியம் இல்ல..!!" "அப்படி இல்லடா.. உனக்கு எதாவது தரணும்னு எனக்கே தோணுச்சு.. அதான்..!!" "அதுக்காக..?? கைல போட்ருந்ததை கழட்டி தரணுமா..??" "ஹாஹா.. என்ன பண்றது.. கிஃப்ட் ஷாப் போறதுக்கு இப்போ எனக்கு டைம் இல்லையே..?? பட் ஒன்திங்.." "என்ன..??" "இந்த ரிங் எனக்கு ரொம்ப பிடிக்கும்..!! இப்போ இது உன்கிட்ட இருக்குறதுல.. எனக்கு ரொம்ப ரொம்ப சந்தோஷம்..!!"




புன்னகையுடன் சொல்லிவிட்டு, சிபி ஆதிராவையே ஆசையாக பார்த்தான்.. அவளும் கணவனையே வைத்த கண் வாங்காமல் காதலாக பார்த்துக் கொண்டிருந்தாள்..!! அப்போதுதான் சிபிக்கு திடீரென அந்த ஆசை வந்தது.. படக்கென ஆதிராவை அருகே இழுத்து அவளுடைய உதடுகளுடன் தனது உதடுகளை பொருத்திக் கொண்டான்.. அழுத்தமாக ஒரு ஈரமுத்தம் பதித்தான்..!! அவளை அணைக்க நகர்ந்தபோது.. காரின் கூரையினின்று தொங்கிக்கொண்டிருந்த அந்த காதல் கிளிகளின் பொம்மையை.. அவனது கை தட்டிவிட.. அந்தக்கிளிகளும் இப்போது அருகே நகர்ந்து மூக்குரசி முத்தமிட்டுக் கொண்டன..!!

 "ம்ம்.. கெளம்பலாம் ஆதிரா.. டைமாச்சு..!!" முத்த ஈரத்தை சுவைத்துக்கொண்டே சிபி சொன்னான். "ம்ம்.. சரித்தான்..!!" ஆதிராவும் நாணம் விலகாமலே சொல்லிவிட்டு.. காரை ஸ்டார்ட் செய்தாள்.. கியர் மாற்றி ஆக்சிலரேட்டரை மிதிக்க, கார் வேகமெடுத்து சாலையில் ஓட ஆரம்பித்தது..!! மிதமான வேகத்திலேயே வண்டியை செலுத்தினாள் ஆதிரா..!! ஹன்சூர் ரோட்டை தாண்டி மைசூர் பேலஸை அடைந்ததும்.. வலது புறம் செல்கிற அந்த அகலமான சாலையில் வண்டியை திருப்பினாள்..!! உடனே ஆக்சிலரேட்டரை அழுத்தி வேகத்தை கூட்டினாள்..!!

 அதே நேரத்தில்.. அங்கிருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில்.. அதே சாலையின் குறுக்காக அமைந்திருந்த அந்த மேம்பாலத்தில்.. சர்ரென்று விரைந்து சென்ற அந்த பேருந்தில் இருந்து.. ஒரு உணவுப் பொட்டலம் வெளியே தூக்கி எறியப் பட்டது..!! எங்கிருந்து வந்தன என்று தெரியாமலே ஒரு பெரிய காகக்கூட்டம் பறந்து வந்து.. உடனடியாய் அந்த உணவுப் பொட்டலத்தை சூழ்ந்து கொண்டன..!! 'கா.. கா.. கா..' என்று கரைந்து சப்தமிட்டுக்கொண்டே.. அந்த பொட்டலத்தை கொத்தி கொத்தி குதற ஆரம்பித்தன..!!

ஒரே ஒரு காகம் மட்டும்.. அந்த கூட்டத்துடன் சேராமல்.. தனித்து.. அந்த உணவைப் பற்றிய எந்த அக்கறையும் இல்லாத மாதிரி.. மேம்பாலத்தின் கைப்பிடி சுவரில் அமர்ந்தவாறு.. சாலையை நோட்டமிட்டுக் கொண்டிருந்தது.. சட்டென இப்போது பறக்க ஆரம்பித்தது..!! "பிடிச்சிருந்ததா..??" சிபி குறும்பாக கேட்டான். "எது..??" "முத்தம்..!!" "ம்ம்.. பிடிச்சிருந்தது..!!" ஆதிரா நாணத்துடன் சொன்னாள். "அப்போ.. இன்னொன்னு..??" கேட்டுக்கொண்டே சிபி ஆதிராவின் தோளில் கைபோட, "ஐயோ விடுங்கத்தான்..!!" சிணுங்கிய ஆதிரா ஒருகணம் சாலையில் இருந்து பார்வையை விலக்கி, மீண்டும் சாலையை பார்த்தாள்..!!

அதே கணத்தில்.. காரை நோக்கி பறந்து வந்த காகம்.. தனது இறக்கைகள் இரண்டையும் அகலமாக விரித்தவாறு 'படீர்ர்ர்ர்' என கார்க்கண்ணாடியில் வந்து மோதி.. தனது கூரிய அலகால் அந்த கண்ணாடியை 'ச்சிலீர்ர்ர்ர்' என்று ஒரு கொத்து கொத்தியது..!! அவ்வளவுதான்..!! ஆதிரா பக்கென அதிர்ந்து போனாள்.. 'ஆஆஆவ்வ்' என்று கத்தினாள்.. குபீர் என்று ஒரு பய சிலிர்ப்பு அவளுக்குள்.. குழம்பிப்போனவள் ஸ்டியரிங்கை சரக்கென வளைத்தாள்..


ப்ரேக்குக்கு பதிலாக ஆக்சிலரேட்டரை அழுத்தமாக மிதித்தாள்..!! கார் சர்ரென உச்சபட்ச வேகத்துடன் சீறியது.. அதேவேகத்தில் சாலையில் இருந்த வேகத்தடையில் ஏறவும், ஜிவ்வென மேலே பறந்தது.. பத்து மீட்டர் தூரம் பாய்ந்து சென்று, ஒருபக்கமாக சாய்ந்தவாக்கில் தரையில் போய் விழுந்தது.. அப்படியே தரதரவென தார்ச்சாலையில் சறுக்கிக்கொண்டு போய்.. சாலையோரமாக நின்ற மரத்தின் மீது 'டமார்ர்ர்ர்' என்று மோதி நின்றது..!!

 சாலையில் சென்று கொண்டிருந்தவர்கள் ஒருகணம் ஸ்தம்பித்து போனார்கள்.. என்ன நடந்தது என்று விளங்கவே அவர்களுக்கு சிறிது நேரம் பிடித்தது..!! 'அச்சச்சோ' என்று பதறியடித்துக் கொண்டு காரை நோக்கி ஓடினார்கள்..!! கசக்கிப் போட்ட காகிதமாய் கார் உருக்குலைந்து போயிருந்தது..

காரை சுற்றி குபுகுபுவென ஒரே கரும்புகை.. கண்ணாடிகள் கற்கண்டு துகள்களாய் சிதறிப் போய் கிடந்தன..!! கார் ஒருபக்கமாக சாய்ந்து ஓய்ந்து போயிருக்க.. நான்கு சக்கரங்கள் மட்டும் இன்னும் ஓயாமல் சுழன்று கொண்டே இருந்தன..!! டாஷ்போர்டுக்கு மேல் தொங்கிய அந்த காதல் கிளிகள்.. இப்போது ரத்தத்தில் தோய்ந்து போய் ஊசலாடிக் கொண்டிருந்தன..!!



No comments:

Post a Comment