Thursday, July 3, 2014

சங்கீதா - இடை அழகி 37


சரி எதுக்கு இப்போ சுத்தி சுத்தி பார்த்த?.. ஒதை வாங்குவா.. ஏன் அந்த envelope நான் இங்கே பார்க்கக்கூடாதா? என்று சங்கீதா கேட்க.. No, please its my request. – என்று புன்னகைத்தான் ராகவ். okay..என்று சொல்லி புறப்படும்போது ஏதோ நினைவுக்கு வந்து சங்கீதா திரும்பி பார்த்து ரகாவிடம் “உன்னோட அந்த cheatig girl friend எங்கே இருக்கா சொல்லு நானும் ஒரு பார்வை பார்க்கணும்…” என்று சொல்ல எதுக்கு – என்று ராகவ் கேட்க…
சும்மாதான்.. அங்கே – என்று தனது ஆள்க்காட்டி விரலால் சங்கீதாவை இறக்கி விடும் வண்டியின் அருகே காமித்தான்… அதிர்ந்தாள் சங்கீதா… ராகவ் கை காமித்த இடத்தில் நின்றுகொண்டிருந்தது சஞ்சனா…என்ன ராகவ் சொல்லுற அவளா? அவள் எப்படி உன் secretorya வேலை பார்க்குறா?. அதெல்லாம் ஒரு பெரிய கதை…. சரி நாம அப்புறம் பேசலாம்.. ஏதோ envelope எல்லாம் குடுத்து இருக்கே, வீட்டுக்கு போய் பார்க்குறேன். தூரத்தில் காரின் அருகில் இருந்த சஞ்சனா சங்கீதாவை பார்த்து பரவசப்பட்டு அவள் இருக்குமிடம் விரைந்தாள், கூடவே டிரைவரும் மெதுவாக Benz காரை தேர் போல ஒட்டி வந்தார். “wow விஜயசாந்தி மேடம், எப்படி இருக்கீங்க? excited to see you” என்று சரளமாக பேசினாள் சஞ்சனா. ஹேய் சஞ்சனா, எப்படி இருக்கே? – சிரித்துக்கொண்டே பேசினாள் சங்கீதா.. காரை ஒட்டி வந்த தாத்தா வழக்கமாக புருவத்தை உயர்த்தி பல் இலித்தார் “என்ன மேடம் எப்படி இருக்கீங்க? நம்மள நியாபகம் இருக்குதுங்களா?” ஒஹ் இருக்கே.. “இப்போதான் என் கிட்ட ஜொள்ளு விட்டுட்டு இருந்தீங்க அதுக்குள்ள மேடம் கிட்ட ஊத்துரீங்களே, நியாயமா?” என்று சஞ்சனா டிரைவர் தாத்தாவை ஒரு பிடி பிடிக்க.. ஹையோ ..போமா.. எப்போவுமே இதே விளையாட்டுதான். – சஞ்சனா கிண்டல் செய்தவுடன் டிரைவர் தாத்தாவுக்குரிய லேசான வெட்கம் சங்கீதாவின் முன் வழிந்தது. சஞ்சனா ராகவை ப் பார்த்து “I want to accompany sangeetha till her bank and come back, is there any work for next two hours raghav?” என்று கேட்க.. “No issues carry on” என்று ராகவ் கூலாக பதில் அளித்தான். wow nice… come on sangeetha… என்று சொல்லி காரின் கதவை திறந்து வெடுக்கென உள்ளே அமர்ந்துகொண்டாள் சஞ்சனா, சங்கீதாவும் அவள் அருகில் பின் இருக்கையில் அமர்ந்துகொண்டாள். தாத்தா வண்டியை start செய்ய கார் கதவின் கண்ணாடிகள் ஏற்றப்பட்டன.. ரகாவ் மென்மையாக “Bye” என்று சொல்லாமல் தலையசைக்க அதற்கு தனது அழகிய இதழ்களால் புன்னகைத்தவாறு அவளும் மெதுவாக தலையசைத்து விடைபெற்றாள். காரை கொஞ்சம் மெதுவா ஓட்டுங்க please, அப்போதான் நான் கொஞ்ச நேரமாவது என்னோட favourite heroine கூட பேச முடியும். என்று சஞ்சனா சொல்ல தாத்தா “சரிம்மா என்று பாவமாக rear view mirror” பார்த்து தலை ஆட்டினார். என்ன ஆச்சு சஞ்சனா, விட்டா என்னை தூக்கி உன் தலை மேலே வேசிக்குவ போல இருக்கு. அப்படி என்ன நான் செஞ்சிட்டேன்? – சிரித்தாள் சங்கீதா..
சிலரை நமக்கு ஏன் பிடிக்கும் எதற்கு பிடிக்கும் னு காரணம் சொல்ல தெரியாது… ஆன அவங்களை பிடிக்கும். அது மாதிரிதான் நீங்களும். உங்க கிட்ட இருக்குற personality எனக்கு ரொம்ப பிடிக்கும் மேடம். சாதரணமா புடவைதான் கட்டுறீங்க ஆனாலும் நாலு பேர் கூட நடந்தா வித்யாசமா தெரியுறீங்க. சரி வெளித் தோற்றத்துலதான் ஆள் செம பார்ட்டினு நினைச்சா உங்க தைரியம் எம்மடி… வியக்க வெக்குது மேடம். அன்னிக்கி நீங்க சம்பத் supervisor அ அறைஞ்சதுல இருந்து உங்க கிட்ட பல பேர் தனிப்பட்டு நன்றி சொல்ல ஆசை படுறாங்க தெரியுமா? but I only got that golden chance, that too sitting next to you – என்று சொல்லி சங்கீதாவின் கையை பிடித்து அவளது இருகரங்களாலும் குலுக்கி “Thank You” என்றாள் முகமலர்ச்சியுடன். (கிட்டத்தட்ட Micheal madhana kaamarajan படத்தில் வரும் ஊர்வசியை போல பட படவென வெடித்து தள்ளினாள் சஞ்சனா….) சங்கீதா ஒரு நிமிடம் பதில் ஏதும் கூறாமல் சஞ்சனாவையே ஒரு நிமிடம் கூர்ந்து கவனித்தால். இவளா ராகவை அப்படி ஏமாத்தி இருக்க முடியும்?.. என்று எண்ணி. hello…madam… என்று சங்கீதாவின் முகத்திற்கு முன் கையசைத்து அவளின் கவனத்தை திசை திருப்பினாள் சஞ்சனா. ஆங்.. ஒன்னும் இல்ல.. (சில நொடிகளுக்கு பிறகு..) சஞ்சனா.. 32 வயசுல இன்னும் இப்படி சின்ன பொண்ணுங்க மாதிரி இவளோ வெகுளியா இருக்கியே.. எப்படி society ல தனியா சமாளிக்குற? கல்யாணம் எதுவும் பண்ணிகலையா?





அதுல எனக்கு அவளோ Interest இல்ல மேடம்.. கூடவே நம்பிக்கையும் இல்ல. தனியா வாழுற வாழ்க்கைல சந்தோஷம் அதிகமா இருக்கு. மனசுக்கு நினைச்சதை செஞ்சிக்க முடியுது. கூடவே யாரை வேணும்னாலும் சைட் அடிசிகுட்டே இருக்கலாம் இல்ல …( கண்களில் லேசான சோகம் தெரிந்தாலும் சாமர்த்தியமாக அவ்வப்போது ஜோக் அடித்து சிரிப்பில் மறைத்தால் சஞ்சனா..) come on… நான் உன் வயசை தாண்டினவ…… – சங்கீதா பேச “ஒரு நிமிஷம்” என்று சொல்லி இடையில் மறித்து வண்டியினுள் முன் பக்கத்துக்கும் பின் பக்கத்துக்கும் இடையே இருக்கும் தடுப்பு ஸ்க்ரீனை இழுத்தாள் சஞ்சனா… பொம்பளைங்க சமாசாரம் தாத்தா…. நீங்க வண்டியை மட்டும் ஓட்டுங்க சரியா?…. – லேசாக காதை நுழைக்கும் தாத்தாவிடம் கிண்டலாக நக்கலடித்து ஸ்க்ரீனை இழுத்தாள் சஞ்சனா. சொல்லுங்க சங்கீதா.. என்று சஞ்சனா சொல்ல “ஏண்டி பாவம் அந்த மனுஷனை இப்படி நக்கலடிக்குற..” என்று சொன்னதுக்கு “அதெல்லாம் அப்படிதான் நீங்க பேசுங்க…” என்றாள் சஞ்சனா.. Actually நான் உன் வயசை தண்டிணவ…. ஒரு ஆம்பளை துணை இல்லாம வாழுறது ரொம்ப கஷ்டம் டி.. நாம என்னதான் freedom னு நினைச்சாலும் தனியா வாழுரதுக்கும் இந்த சமுதாயம் நம்மள நிம்மதியா விடாது.. அதுவும் நீ வேற இங்கே தனியா parents இல்லாம வாழுற… உன் கூட யாரும் இல்ல.. அக்கம் பக்கம் யாரும் உன்னை தப்பா நினைக்க மாட்டாங்க?..( தன் மீது மிகுந்த மரியாதையும் அன்பும் வைத்திருக்கும் சஞ்சனா மீது உண்மையாகவே கரிசனத்தோடு கேட்டாள் சங்கீதா.) ராகவ் இருக்கானே மேடம்.. புரியல… நான் IOFI வளாகத்துள இருக்குற guest house ல தான் இருந்துகுட்டு வரேன். மாச மாசம் சம்பளம் வந்ததும் ஊர்ல இருக்குற parents க்கு அனுப்பிடுவேன். கூடவே ராகவுக்கு secretory வேலைதானே. அதனால அதிகமா வேலை பளு இருக்காது. அப்போ ஊர்ல இருக்குற உன் parents உன் கல்யாணத்தை பத்தி பேச ஆரம்பிக்கல? ஹ்ம்ம் கைல காசு வருதுன்னா அதை என் கெடுத்துக்குவாங்க?… சம்ப்ரதாயதுக்கு அப்போ அப்போ கேட்பாங்க “ரெண்டு மூணு வரன் வந்திருக்குடி அப்படின்னு” நான் வேணாம் னு ஒரு வார்த்தை சொன்னதும் சரிம்மா உன் இஷ்டம் னு சொல்லிட்டு நோகாம போன் வெச்சிடுவாங்க.. எனக்கும் இதை ஒவ்வொரு 6 மாசத்துக்கும் பேசி பேசி பழகிடுச்சி.. ஹ்ம்ம்.. – இரு கரங்களையும் இணைத்து தன் மடியில் வைத்து கரங்களை குனிந்து பார்த்து மெலிதாக சிரித்து பேசினாள். நீ யாரையும் காதலிக்கல? – சங்கீதா அவளின் கண்களை கூர்ந்து பார்த்து பதிலை எதிர்பார்த்தாள்.. நிமிர்ந்தவள் மீண்டும் லேசாக கீழே குனிந்து, ஜன்னல் பக்கம் முகத்தை திருப்பி தலை முடியை சரி செய்துகொண்டு, மீண்டும் சங்கீதாவின் முகத்தை பார்த்து மெதுவாக சிரித்து “இல்லையே.. யாரையும் காதலிக்கல..” என்று சொல்ல.. நிஜம்மா காதலிக்கல? – கிட்ட வந்து கண்களை உத்து பார்த்து சிரித்து மீண்டும் கேட்டாள் சங்கீதா.. இப்போது லேசாக மனதை திறக்க ஆரம்பித்தாள் சஞ்சனா…. காதலிச்சேன் மேடம்… யாரு? ராகவ்.. ( காத்து கலந்த குரலில் பாதி சத்தம்தான் வந்தது சஞ்சனா வாயிலிருந்து..) சரியா கேட்கல.. ராகவ்.. ( இப்போவும் தெளிவாக சொல்ல வில்லை இருப்பினும் முன்னமே சங்கீதாவுக்கு விஷயம் தெரியுமென்பதால் அதிகம் கேட்டுக் கொள்ளவில்லை.) ஏன் அவன் கிட்ட உன் காதலை சொல்லல? நான் என் காதலை சொல்லி, ஒரு காலத்துல ரெண்டுபேருமே காதலிச்சோம்… ஆனா விதி விளயாடிடுச்சி.. என்ன ஆச்சு? basically எனக்கு பொண்ணுங்கள விட பையனுங்க தான் அதிகம் friends, என் கிட்ட இருக்குற அந்த இயல்பு ராகவுக்கு அதிகம் பிடிக்காது. நானும் எல்லா பையனுங்க கிட்டயும் எல்லாத்தையும் பத்தி பேசுவேன். சிலர் கொஞ்சம் எல்லைய மீருவாங்க, அப்போ stop பண்ணிக்குவேன், இல்லேன்னா continue பண்ணுவேன். நம்முடைய இயல்பான குணத்தை ஒருத்தருகாக மாத்திகிட்டோம்னா அப்புறம் வாழ்கைய சகஜமா வாழ முடியாதே மேடம். அதனால நான் நானா இருந்தேன். ஒரு நாள் ராகவுக்கு போட்டியா fashion ல mithun னு ஒருத்தன் இருந்தான்.. அவன் ராகவை விட பெரியவந்தான், திரமயானவனும் கூட, but still raghav is smart in all aspects. அவன் கொஞ்சம் வாட்ட சாட்டமான ஆளு. நானும் ஒரு பொம்பலதானே மேடம், யாரவது நல்ல இருக்குற பொண்ணுங்கள பையனுங்க பார்த்தா பேசுறா மாதிரி நானும் சும்மா அவனோட பேசினேன். பழகினேன், அதுக்கு கூட ராகவ் என் கிட்ட கோவிச்சிக்கல அப்புறம் என்ன problem?.. ஒரு நாள் என் birthday க்கு ராகவ் என் கூட phone பண்ணி பேசல னு கொஞ்சம் அவன் மேல கோவம் இருந்துச்சி.. அப்போ என் கூட mithun இருந்தான். சாதரணமா என் கிட்ட பேசிக்குட்டு இருந்தான் என் கவனம் அவன் பேச்சுல இல்ல.. ராகவ் மேல இருந்துச்சி. call எதுவும் வராததால ராகவ் மேல இருந்த கோவத்துல ஒரு வார்த்தைய விட்டுட்டேன்..
என்ன சொன்ன? அவன் அப்பன் தயவுல IOFI உள்ள வந்துட்டு இன்னிக்கி ஊரு ஊரா சுத்திட்டு என்னை மறந்துட்டான். என்ன திமிர்ல இருக்கான் பாரு ஒரு phone பண்ணி பேச முடியல அவனுக்கு.. அப்படின்னு சொன்னேன் மேடம்.. நான் பேசினது தப்புதான், அந்த நேரம் actually ராகவ் ஊருல இல்ல & என் போறாத காலம் அந்த ராஸ்கல் நான் சொன்னதை காட்டுத் தீ மாதிரி எல்லார் கிட்டயும் பரவி விட்டான். என்னனு பரவனினான்? ராகவ் அவனோட Girl friendஅ மதிக்கல ஏமாத்திட்டான். அவன் ஒரு fraud, அவன் அப்பன் தயவுல IOFI உள்ள வந்துட்டு ரொம்ப திமிர்ல ஆடுறான்னு நான் சொன்னத இன்னும் கொஞ்சம் அதிகமாவே மசாலாவா சொல்லிட்டான். ஆனால் இதெல்லாம் நடக்கும்போது எனக்கு ஒண்ணுமே தெரியாது. அது மட்டும் இல்லாம எப்போவுமே saturday night parties க்கு போகிறது எனக்கு பிடிக்கும். கொஞ்சம் harmless red & white wine மட்டும் சாப்பிடுவேன்.. ஒரு நாள் நைட் யாரும் இல்லாதப்போ mithun வந்தான், “free யா இருந்தா சொல்லு சஞ்சனா, சும்மா night party போகலாம்னு தோணுச்சி அதான் கூப்பிட வந்தேன்” னு சொன்னான், நானும் actually தனியா இருந்தேன், கூடவே எனக்கும் night parties பிடிக்கும், so யோசிச்சேன்.. ஏற்கனவே யாரும் எனக்கு company குடுக்க யாரும் இல்லைன்னு நினைச்சிக்குட்டு “சரி போலாம் mithun” னு சொல்ல என்னை famous Dark Don club னு ஒரு இடத்துக்கு கூட்டிட்டு போனான். அன்னிக்கி நைட் என்னன்னமோ order பண்ணோம், இது வரைக்கும் taste பண்ணாத drinks, அப்போ mithun என் காதுல ஒரு விஷயம் சொன்னான்..


 என்ன  விஷயம் சொன்னான்?



No comments:

Post a Comment