Monday, July 7, 2014

சங்கீதா - இடை அழகி 43


நீ வரும்போதே கொஞ்சம் கலைச்சி போய் வருவேன்னு எனக்கு நல்லாவே தெரியும். அதனாலதான் kitchen உள்ள உனக்கு ஏற்கனவே நான் coffee போட்டு வெச்சிட்டேன். ஒரு தடவ சூடு பண்ணிக்கோமா – என்று மிகவும் அக்கறையாக கூறினாள் நிர்மலா.
சரிக்கா, உங்களுக்குத்தான் சிரமம். இனிமே என்ன ஆனாலும் என் phone மறக்க மாட்டேன். இது எனக்கு ஒரு நல்ல பாடம். – என்றாள் சங்கீதா இருக்கட்டும் டி, அதான் உன் colleague அக்கறையா உன் பசங்களை இங்க கொண்டு வந்து விட்டுட்டாரே. அதுவரைக்கும் கடவுளுக்கு நன்றி சொல்லணும். நல்லவேளை நீ வேற எங்கேயும் உன் phone மறக்கல. சரிமா நான் கிளம்புறேன் நீ பார்த்துக்கோ. – என்று கூறிவிட்டு நிர்மலா அங்கிருந்து கிளம்பினாள். வரேண்டா கண்ணுங்களா… என்று நிர்மலா சங்கீதாவின் குழந்தைகளை பார்த்து கூற, அவர்களும், “டா டா ஆண்டி….” என்று சொல்லி விளையாட்டில் மூழ்கினர். kitchen க்கு சென்று நிர்மலா போட்ட coffee யை சூடு செய்து கொண்டே ராகவுக்கு தனது mobile ல் call செய்தாள் சங்கீதா. ringtone எதிரொலித்தது. phone எடுத்தான் ராகவ். ஹலோ.. ஹ்ம்ம், ஹலோ… சங்கீதா பேசுறேன்.. ஆங்…. சங்கீதா…( பேசும்போது அருகில் உள்ள யாரோ ஒருவரிடம் மும்மரமாக கணக்கு வழக்குகளை பேசிக்கொண்டிருந்தான் ராகவ்.) சங்கீதா, நான் அப்புறம் பேசுறேன் இப்போ கொஞ்சம் பிஸி, நீங்க குடுத்த profitability increment program பத்திதான் இங்கே இருக்குற financial team கிட்ட பேசிக்கிட்டு இருக்கேன். I will call you back & also இன்னிக்கி நான் கண்டிப்பா ஒரு முக்கியமான ஒரு விஷயம் பத்தி பேசியே ஆகணும். – என்று ராகவ் சொல்ல me too…. நானும் கண்டிப்பா நிறைய பேசணும், call me without fail – என்று சங்கீதா பேசி முடிப்பதற்குள், phone cut செய்துவிட்டான் ராகவ். coffee குடித்துகொண்டிருக்கும்போது குழந்தைகளிடம் வந்தாள் சங்கீதா, தன் இரு குழந்தைகளும் புது பொம்மைகளை வைத்து விளையாடுவதை சில நிமிடங்கள் காபி அருந்திக்கொண்டே நின்றபடி அதிகமாக ரசித்து ப் பார்த்தாள், அப்படியே fan னின் கீழ் உள்ள chair ல் வந்து அமர்ந்தபோது அருகில் உள்ள மேஜையின் மீது naihaa கவர் இருந்ததை கவனித்தாள், அதனுள் ரம்யா வாங்கிக்குடுத்த fem பாட்டிலை எடுத்து அதற்குள் இருக்கும் powder & பாதி cream mix செய்து, ஏற்கனவே காலியான ஒரு சிறிய வெள்ளை நிற fem டப்பாவில் போட்டு வைத்தாள். பிறகு அந்த கலவையை அன்று இரவு apply செய்துகொள்ள தனது fair & Lovely டப்பா அருகினில் வைத்தாள் சங்கீதா. “ஸ்நேஹா…., இங்கே வா….” (சங்கீதாவின் மடியில் அமர்ந்தாள் ஸ்நேஹா) “என்னென்ன பேசிக்கிட்டு வந்தீங்க ராகவ் மாமா கூட?” என்று கேட்டாள் சங்கீதா. school பத்தி பேசினோம், என் friends பத்தி பேசினோம், ரஞ்சித் எங்களை பேசவே விடல, சேட்டை பண்ணிக்குட்டே இருந்தான் மா. அப்புறம் நான் எனக்கு தெரிஞ்ச poems எல்லாம் சொன்னேன். very good, very good னு பாரட்டினார்மா. அப்போதான் எனக்கு இந்த Talking Barbie doll குடுத்தார் மா – என்று ரகாவிடம் பாராட்டு பெற்றதை முகமலர்ச்சியுடன் ஸ்நேஹா கூறும் விதத்தை ப் பார்த்து பூரித்துபோனாள் சங்கீதா.
வேற என்னென்ன பேசுனீங்க மேடம்? – சிரித்துக் கொண்டே கேட்டாள் சங்கீதா. அவருக்கு எத்தினி friends னு கேட்டேன் மா…. எனக்கும் நிறைய friends இருக்காங்க னு சொன்னாருமா.. அப்புறம் அதுல உங்களுக்கு யாரு best friend னு கேட்டேன், அப்போ அவரு உங்க அம்மா எனக்கு one of the best friends I have னு சொன்னரும்மா.. ஒஹ்ஹ்..( மனதுக்குள் ஒருவிதமான மகிழ்ச்சியை உணர்ந்தாள் சங்கீதா.) அப்புறம் வர வழியில arun ice creams கடையில எனக்கு chocobar icecream வாங்கிக்குடுத்தாரும்மா. அதை ப் பார்த்துட்டு தம்பி பாப்பா அழுதான் அப்போ கொஞ்சம் அவனுக்கும் ஏதாவது வாங்கித்தரனும் னு யோசிச்சி நானே ஒரு சின்ன vannila cup எடுத்து குடுத்து வெச்சிக்கோடா னு சொன்னேன். அதைப் பார்த்துட்டு “you are so sweet caring sister for ranjith” னு சொல்லி முத்தம் குடுத்தாரும்மா. – இதை சொல்லும்போது ஸ்நேஹா வின் முகத்தினில் அப்படி ஒரு சந்தோஷம். அதைக்கண்ட சங்கீதாவின் கண்களின் ஓரத்தில் குழந்தைகள் சந்தோஷமாக இருப்பதைக் காணும் போது அவளையும் அறியாது எட்டிப்பார்த்தது சில சந்தோஷ நீர்த்துளிகள். சரி கொஞ்சம் இறங்கிக்கோ, அம்மா dinner ரெடி பண்ணிடுறேன். – என்று சொல்லி அன்றைய இரவுக்கு உணவு தயார் செய்ய kitchen உள்ளே சென்றாள். சமைத்து முடித்து விட்டு ஹாலுக்கு வந்து அமரும்போது மணி கிட்டத்தட்ட இரவு ஒன்பதுக்கும் மேல் ஆகி விட்டது. குமார் உள்ளே நுழைந்தான். வழக்கம் போல தொங்கிய முகத்துடன் சற்று களைப்பும் கலந்திருந்தது. உள்ளே நடந்து வருகையில் காலில் பொம்மைகளின் டப்பா தடுக்க.. என்னது இது? நடக்குரதுக்கு கூட வழி இல்லாம குப்பையா இருக்கு? ஒஹ்ஹ் சம்பள பணத்தை இப்படி costly பொம்மையா வாங்கிக்குடுத்து இறைசிட்டியா?… ஏன் இந்த கையால தள்ளி விடுற கார் பொம்மைய வாங்கிக்குடுத்தா விளையாட மாட்டேன் னு சொன்னானா ரஞ்சித்? remote control ல தான் கார் ஓட்டனுமா? இந்த ரெண்டு பொம்மைக்கும் கட்டின காசை மாசா மாசம் நீ உன் bank லயே self அ vehicle loan apply பண்ணி கட்டிக்குட்டு வந்தால் ஒரு four wheeler வாங்கிடலாமே? – புருவத்தை உயர்த்தி வழக்கமான ஆதிக்க குரலில் பேசினான் குமார். (குமாரின் இந்த வழக்கமான attitude பார்த்து இன்று மதியம் femina இதழில் படித்த கேள்வி பதில்கள்தான் நியாபகம் வந்தது சங்கீதாவுக்கு. உடனடியாக பதில் சொல்ல வில்லை… சில வினாடிகளுக்கு பிறகு தொடர்ந்தாள் சங்கீதா) பசங்க fees செலவு, என்னுடைய துணி மணி செலவு, வீட்டுக்கு மாச மாசம் மளிகை சாமான் செலவு, கரண்ட் பில், பால் பில், அப்புறம் என் வண்டிக்கு போடுற பெட்ரோல் முதற்கொண்டு எல்லாத்துக்கும் நான் என்னோட சம்பலத்துலதான் எடுத்து குடுத்துகிட்டு வரேன். … ( சில வினாடிகளுக்கு மெளனமாக இருந்துவிட்டு மீண்டும் தொடர்ந்தாள்..) நீங்க வாங்குற சம்பளத்துல எந்த காசையும் நானும் இன்னிக்கி வரைக்கும் கேட்டதில்ல, நீங்களாவும் குடுத்ததும் இல்லை. உங்க ரூமுக்கு AC வேணும்னு சொல்லி நீங்களா EMI scheme ல எங்க கிட்ட ஒரு வார்த்தை சொல்லிக்காம போயி வாங்கிட்டு வந்து மாட்டினீங்க, அதுக்கும் நான் எதுவும் கேட்டுக்கல. ஒவ்வொரு தடவையும் மத்தவங்க தேவைகள் ஏதாவது இருக்குதான்னு கொஞ்சம் கூட யோசிக்காம தனக்கு எது தேவைன்னு மட்டுமே பார்த்து வாழுறீங்க. இப்போ கூட மாசா மாசம் காசு கட்டி four wheeler வாங்குறதுக்கு பசங்க பொம்மை மேல உங்க கண்ணு போகுதே? ச்ச…. எப்போ பார்த்தாலும் வேறும் உங்களுடைய சௌகரியத்தை பத்தி மட்டுமே யோசிக்காதீங்க. விளையாடுற பசங்க முகத்துல இருக்குற சந்தோஷம் உங்க கண்ணுக்கு தெரியல, அதுங்க பொம்மை எவ்வளவு விலை இருக்கும்னு தான் தோணுது இல்லை? (மனதில் gift ஆக வந்த பொருள் என்று சொல்ல தோன்றவில்லை சங்கீதாவுக்கு. மாறாக “நாந்தான் வாங்கிக்குடுத்தேன், அதுக்கு என்ன இப்போ? என்று எண்ணிக்கொண்டு பேசினாள்” காரணம் குமாரின் சுயநலமான cheap எண்ணங்கள்.) போதும் போதும்…. உன் சம்பாதிக்குற திமிர ஓவரா காமிக்காத….( வாயில் சத்தம் அதிகம் இன்றி லேசாக முனு முனுத்துக்கொண்டான் குமார். ) குமார் முணுமுணுத்தது காதில் விழுந்தும் பதில் சொல்ல முன்வரவில்லை சங்கீதா. அப்படியே பேசினாலும் இது வீண் வாக்குவாதமாகும் என்று அவளுக்கு தெரியும். மற்றும் குழந்தைகளுக்கு முன்பாக அதிகம் சண்டை போடா மாட்டாள். அது அவர்களுடைய மனதை பாதிக்கும் என்கிற எண்ணத்தில் மெளனமாக இருந்து வந்தாள்.
சாப்பிடுறதுக்கு ஏதாவது செஞ்சி இருக்கியா? – தரையைப் பார்த்து கேட்டான் குமார். இப்போதான் செஞ்சேன், வேணுமா? – பசங்களைப் பார்த்துக் கொண்டே கூறினாள் சங்கீதா. தானாகவே சென்று தட்டில் செய்ததை போட்டு சாப்பிட்டு விட்டு அவனது பெட்ரூமுக்கு சென்று கதவை டமால் என்று நன்றாக பலத்த சத்தம் கேட்கும் விதம் சாத்தினான். ஹ்ம்ம்… இதுக்கெல்லாம் அய்யா கிட்ட குறைச்சல் இல்லை, புருவத்தை உயர்த்திக்கொண்டு தனக்குத்தானே முனுமுனுத்துக்கொண்டாள் சங்கீதா. குழந்தைகள் உணவை அருந்திய பிறகு தூக்கத்தில் ஆழ்திருந்ததை கவனித்து அவர்கள் இருவரையும் அவர்களது பெட்ரூமுக்கு தூக்கி சென்று கட்டிலில் படுக்க வைத்து விட்டு, வீட்டின் வெளியில் விளக்குகள் அனைத்திருக்கிறதா என்று ஒரு முறை ப் பார்த்துவிட்டு குழந்தைகளின் அறைக்கே படுக்க வந்தாள் சங்கீதா. உள்ளே நுழைந்து கதவை தாழ்ப்பாள் போட்டு விட்டு medium brightness ல் இருக்கும் night lamp on செய்து விட்டு chair ல் அமர்ந்தாள். ஹாலில் இருப்பதைக் காட்டிலும் குழந்தைகளின் பெட்ரூமினுள் இருக்கும் கண்ணாடியின் அளவு பெரியது. குழந்தைகளின் சந்தோஷம், அதே சமயம் வழக்கமாக குமாருடன் நடந்த சிறிய வாக்குவாதம், அதை விட முக்கியமாக ரகாவின் phone call வரும் என்கிற எதிர் பார்ப்பு, இவைகள் அனைத்தையும் மனதில் ஓட விட்டு தூக்கம் வராமல் இருந்தாள் சங்கீதா. உஷ்ணத்தின் காரணமாக சேலையை எடுத்துவிடலாம் என்று எண்ணி மெதுவாக எழுந்து தோள் மீதிருக்கும் safety pin நீக்கிவிட்டு முந்தானையை எடுத்துவிட்டு தன் சேலையை இடுப்பினில் இருந்து சுத்தி சுத்தி மெதுவாக உருவி, கடைசியாக கொசுரை வெளியில் எடுத்து, புடவையை பக்கத்தில் துவைக்க போடும் துணிகளில் போட்டாள். முன் பக்கம் நெஞ்சின்மீது இருக்கும் கூந்தலையும் மல்லிகையும் எடுத்து பின்னாடி போட்டுவிட்டு ரவிக்கையின் கொக்கிகளை கழட்ட ஆரம்பித்தாள். மொத்த கொக்கிகளையும் அவிழ்த்து முடித்தபோது ஒரு பெருமூச்சு விட்டாள். அந்த அளவுக்கு அழுத்தம். அப்போது ரம்யா தன்னை ப் பற்றி கிண்டலாக பேசுவது நியாபகம் வந்து லேசாக கண்ணாடியில் பார்த்துக்கொண்டே சிரித்தாள்.

No comments:

Post a Comment