Friday, July 25, 2014

சங்கீதா - இடை அழகி 59


இதைக் கேட்டு ரம்யாவும், நிர்மலாவும் ஒரு நொடி ஆச்சர்யமானார்கள், சஞ்சனா excitement உச்சத்துக்கு போய் “Is our Sangee going to do dance on stage… woooowwwww” – என்று அதிக சத்தத்தில் அடித்தொண்டையில் இருந்து சத்தம் வரும் விதம் கத்தினாள். ரம்யா சங்கீதாவின் அருகில் வந்து “இன்னைக்கி வரைக்கும் நல்ல படியா பொழப்பை ஒட்டிக்குட்டு இருக்கும் பல heroines இந்த நடனத்தைப் பார்த்தால் மடியில நெருப்பை கட்டிக்குவாங்க.” என்று பெருமிதம் கொண்டு புகழ்ந்தாள். அப்போது கலா குறுக்கிட்டு ஒரு ஆச்சர்யமான விஷயத்தை சொன்னாள் “இன்னைக்கி உண்மையிலேயே சினிமா உலக ஜாம்பவான்கள் வருவார்கள்…. only selected few heros & 4 legends are coming” என்றாள் கால.. இதைக் கேட்டு shock ஆனால் சங்கீதா… ரம்யவும்தான்… ஏதோ விளையாட்டுக்கு சொன்னது நிஜமாக நடக்கப் போகிறதே என்று எண்ணி அவளும் shock ஆனாள்.
சஞ்சனாவுக்கு யார் யார் வரப்போகிறார்கள் என்று தெரிந்திருந்தும் சங்கீதாவிடம் கூறவில்லை, ஏன் என்றால் நீண்ட நாட்களுக்கு பிறகு முதல் முதலாய் ஒரு மிகப்பெரிய stage மீது ஏறும்போது இது போன்ற விஷயங்களை சொல்லாமல் மேடை மீது தள்ளிவிட்டு பின்பு மெதுவாக கூறுவதுதான் சரி என்று அவள் மனதில் பட்டதால் எதுவும் பேசாமல் இருந்தாள். இப்போது சஞ்சனா சங்கீதாவிடம் வந்து “Yes dear, few important celebreties are going to come for this function, I hided it from you…. sorry” என்று கொஞ்சும் விதத்தில் சொன்னாள். சங்கீதாவுக்கு படபடப்பு எகுரியது. இருந்தும் நிர்மலா, ரம்யா, சஞ்சனா ஆகியோர் தொடர்ந்து குடுக்கும் தைரியத்தில் சற்று மணதிடம் அடைந்தாள் சஞ்சனா. if you are ready, we shall practice the moves now, time அதிகம் இல்லை நமக்கு. – என்று கலா விளக்க மற்றவர்கள் dressing ரூமுக்குள் அனைத்தையும் முடித்துவிட்டு குளிக்க சென்றார்கள். வேறு ஒரு set of dress போட்டுக்கொண்டு அலங்காரம் செய்துகொண்டு சங்கீதாவுக்கு mental support குடுக்க உடன் இருந்தார்கள். “உங்க கிட்ட appealing feature உங்க இடுப்புதான், very curvy – என்று கலா சொல்ல, ரம்யா “உய்ய்….” என்று விரலை மடக்கி வாயில் வைத்து விசில் அடித்தாள். அறையில் உள்ள அனைவரும் (beauticians உட்பட சங்கீதாவின் நடன rehersal பார்த்து கை தட்டினார்கள்.) பாடலின் நடுவே இடுப்பை மெதுவாக ஆட்டி ஆட்டி ஒரு கட்டத்தில் வேகமாக குலுக்கி belly dancers போல ஒரு step போட வேண்டும். அதற்க்கு கொஞ்சம் சிரமப்பட்டு மீண்டும் மீண்டும் செய்து பார்க்க கிட்டத்தட்ட ஒரு 40 நிமிடத்திற்கும் மேல் practice செய்து ஒரு வழியாக கலாவே ஒரு கட்டத்தில் “superrrr” என்று மணம் திருப்தி அடைந்து கத்தினாள். நேரம் ஓடிக்கொண்டே இருக்க, மணி ஐந்தை த் தொட்டது. இப்போது. beauticians சுனாமியை மிஞ்சும் வேகத்தில் சங்கீதாவுக்கு hair style செய்தார்கள். ஒருவள் முகத்துக்கு என்னென்ன cream apply செய்ய வேண்டுமோ அதை செய்தாள், மற்றொருவள் தலைமுடிக்கு curly hair style செய்து கொண்டிருந்தாள். கைகளுக்கு wrist முதல் பாதி முழம் கை வரை pearls and stone designed வளையல்கள் மாட்டி விட்டு. கிட்டத்தட்ட மாலை 6:00 மணி அளவில் சங்கீதா என்கிற அழகு ப் பெண்ணை உண்மையாகவே ஒரு தேவதையாக உருவாக்கி இருந்தார்கள். உண்மையில் அழகு சாதனங்களுக்கு இவளின் முகத்தால் அழகு சேர்ந்தது என்று சொன்னாள் அது மிகையாகாது. ராகவ் சில நேரத்திற்கு பிறகு வந்து கதவை த் தட்ட கதவைத் திறந்தாள் சஞ்சனா.. சஞ்சனாவும் நிர்மலாவும், ரம்யாவும் என்னதான் attractive ஆக dressing செய்திருந்தாலும் சங்கீதா உண்மையில் ராகவின் கண்களுக்கு இன்று வரை நான் பார்த்த சந்கீதவா இது என்று பிரமிப்பு அடையும் விதம் பார்த்தவுடன் ஒன்றும் பேச தோணாமல் அப்படியே நின்றான். “ராகவ்….” – என்று மெதுவாய் அடக்கமாக மற்றவர்களுக்கு தெரியாத வண்ணம் அழைத்து “எப்படி?” என்று வார்த்தையால் கேள்வி எழுப்பாமல் கண்களால் தன் உடையை மெதுவாய் அசைத்து கேட்டாள். ராகவும் அடக்கத்துடன், சத்தமின்றி புருவங்களை உயர்த்தி “beautiful” என்று காற்று கலந்த குரலில் மெதுவாய் சொன்னான். okay shall we proceeeeed…..? – என்று program organiser சஞ்சனா சத்தமாக சொல்ல, சங்கீதாவுக்கு மணம் படபடத்தது. மேடைக்கு செல்லும் முன்பு ராகவ் சங்கீதாவிடம் “You are the best, believe in that, you are the best. No need to get nervous, we all will be there with you to cheer you up” – என்று ராகவ் பேசிய நம்பிக்கை தரும் வார்த்தைகள் சங்கீதாவுக்கு அந்த நேரம் முக்கியமாக த் தேவைப் படும் மருந்தாக இருந்தது. இப்போது ஆடிட்டோரியம் dressing room வழியாக behind the stage மேடைக்கு வருவதற்கு ஒரு வழி இருந்தது. அந்த வழியின் கூரையில்(roof) மின்னும் சிறிய மஞ்சள் விளக்குகள் மிதமான வெளிச்சத்தில் மின்னியது. கையில் “Addressing the crowd” என்று சஞ்சனா எழுதி கொடுத்திருக்கும் காகிதம் தான் programன் முதல் பேச்சு, அதை அவள் கையில் பத்திரமாக வைத்திருந்தாள். ஒரு முப்பது அடி நீளத்துக்கு அந்த பாதை இருந்தது. இன்னும் சில நொடிகளில் சங்கீதாவின் image ஐ ஆயிரக்கணக்கானவர்களின் மனதில் புரட்டிப் போடும் நேரத்தை தொடுவதற்கு பாதை குறைந்து கொண்டே வந்தன. சஞ்சனா, ரம்யா, நிர்மலா, ஆகிய அனைவரும் சங்கீதாவின் கண்ணத்தில் முத்தம் குடுத்து, “All the best dear, you are going to rock, just perform well dont think about anything…. we will be standing just behind you only…. go go go…. its time..” என்று தோழிகள் சொல்லி முடிக்க அடுத்த பாதத்தை எடுத்து வைத்தாள் சங்கீதா. இப்போது அங்குள்ள ஒரு பணிப்பெண் curtains எடுத்து விட மேடையின் மீது காலடி எடுத்து வைத்தாள் அந்த தேவதை. ஆடிட்டோரியம் அரங்கம் முழுவதும் மக்கள் நிறைந்திருந்தனர். காரணம் இந்த awards வழங்கும் விழா வெறும் IOFI பணியாளர்களுக்கு மட்டும் அல்ல. கடந்த 20 ஆண்டுகளாக ராகவின் தந்தை Mr.Mahesh Yadhav பலதரப்பட்ட VIP களுடன் வைத்திருந்த நட்பை பாராட்டி அந்த விழாவுக்கு வந்திருந்தார்கள். அதில் சில முக்கிய திரையுலக நட்சத்திரங்களும் வந்திருந்தார்கள். அவர்களை கௌரவிக்கும் விதம் சில விருதுகளும் வழங்கும் திட்டம் இருந்தது அந்த விழாவில். சங்கீதா mike பிடித்து மெதுவாக பேச ஆரம்பித்தாள். அப்போது stage மேலே ஒரு focus light ஒன்று வெறும் சங்கீதா நிற்கும் இடத்தை மட்டும் குறி வைத்து வட்டமாக வெளிச்சம் அடிக்க அவள் மாட்டி இருக்கும் அந்த தக தகவென மின்னும் gagra choli பார்பவர்களின் கண்களுக்கு மின்னியது. இப்போது அவள் பேச ஆரம்பிக்கும் தருவாயில் பல நூறு கணக்கில் flash lights camera மூலம் அவளின் முகம் மீது விழுந்தது. ஒரு நொடி முகத்தை நிமிர்த்தி கூட்டத்தை ப் பார்த்தாள் சங்கீதா. பெரும்பாலும் இருட்டாக இருந்தது ஆடிட்டோரியம், மிதமான சிறு வெளிச்சத்தில் அலை கடல் போல அமர்ந்திருக்கும் கூட்டாம் கண்ணுக்கு தெரிந்தது அவளுக்கு. ஒரு நொடி இதயத் துடிப்பு அதிகரித்தது. நிமிர்ந்து பார்தவளின் முகத்துக்கு மேலே இன்னும் இரு மடங்காக paparazzi ( சரமாரியான camera clicking தொல்லை என்று பொருள்) போல camera flash lights விழ என்ன நடக்கிறதென்றே தெரியாமல் சில நொடிகள் மெளனமாக நிற்க, பின்னாடி இருந்து சஞ்சனா குரல் குடுத்தாள் “start sangeetha start… dont wait… start start..” என்று கத்த அடித் தொண்டையில் எச்சிலை முழுங்கிக் கொண்டு பேச ஆரம்பித்தாள். Dear Ladies & Gentlemen, (சத்தம் கொஞ்சம் கொஞ்சமாக அடங்கி அமைதியானது. அதில் வெறும் camera கிளிக் ஆகிக்கொண்டிருக்கும் சத்தம் மட்டும் கேட்டது.) இந்த ஆண்டு IOFI Annual awards function க்கு வருகை தந்திருக்கும் அனைவருக்கும் இனிமையான மாலை வணக்கங்கள். என் பெயர் சங்கீதா. (புதியவள் என்பதால் கரகோஷம் சற்று மெதுவான சத்தத்தில் கேட்டன. கடந்த ஆண்டு compere செய்த நடிகை ஷோபனா, கீழே அமர்ந்திருந்தாள்) சென்ற ஆண்டு விழாக்களைக் காட்டிலும் இந்த ஆண்டு மிகவும் சிறப்பானவை. காரணம் IOFI fashion நிறுவனம் 25 ஆண்டுகள் நிறைவடைந்து உள்ளது. (கரகோஷம் பலமாக ஒலித்தன..) இன்னும் வெற்றிகரமாக இதன் வேர்களை உலகின் பல இடங்களுக்கு மின்னல் வேகத்தில் பரவியும் வருகின்றன. இந்த நேரத்தில் IOFI நிறுவனம் உருவான கதையை சற்று பின் நோக்கி ப் பார்ப்போம். (சஞ்சனா பின்னாடி இருந்து மெதுவாக அழைத்து, “smile the crowd and continue, dont continuously bend down your head…”) என்று tips சொல்ல.. சுதாரித்துக் கொண்டு அவள் சொன்னது போலவே செய்தாள் சங்கீதா.. (கூட்டத்தைப் பார்த்து மென்மையாக சிரித்துவிட்டு மீண்டும் தொடர்ந்தாள்…)
எந்த ஒரு உறுதியான மரத்துக்கும் அதன் வேர் தான் காரணம் என்று சொல்வார்கள். அந்த வகையில் IOFI என்கிற மரத்துக்கு விதை போட்ட மாமனிதர் Mr.Mahesh Yadhav வை நாம் யாரும் மறக்க முடியாது. முற்றிலும் உழைப்பால் உயர்ந்தவர். தற்போதிய CEO Mr.Raghav Yadhav னுடைய தந்தைதான் இவர். (இப்போது, கூட்டாம் முழுவதும் சங்கீதா பேசுவதைக் கேட்பதற்காக நல்ல அமைதி நிலவியது..) Mr.Mahesh Yadhav ஒரு திறமையான வியாபாரி. ஆரம்ப கட்டத்தில் வெறும் தையல் வேலை பார்த்தவர், நாடகங்களில் நடிப்பவர்களுக்கு துணிகளை தைக்க ஆரம்பித்து, பின் low budget படங்களுக்கு costume designer ஆக பணியாற்றி, கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து 2000 மாவது வருடத்தில் இருந்து ஹிந்தியிலும் கால் பதித்து, இன்று அகில இந்தியா முழுவதும் பிரபலமாகி ஒரு நிறுவனத்தை மாபெரும் வெற்றிக்கு கொண்டு சென்றார். இவர் ஆரம்பித்த இந்த IOFI நிறுவனம் இன்று உலகில் எங்கெல்லாம் அதி நவீன கலை நிகழ்ச்சிகள், costume designing, நடக்கிறதோ அங்கு மட்டும் இல்லாமல், Industries, corporates, மற்றும் அதிக பொருட்செலவில் எடுக்கப் படும் இந்திய த் திரைப்படங்களும் உட்பட பல இடங்களில் எங்கெல்லாம் fashion எண்ணும் வார்த்தைக்கு இடம் இருக்கிறதோ அங்கெல்லாம் தனது கால்களைப் பதித்து இருக்கிறார். இந்த நிறுவனத்தின் செயலாளராக இருந்த இவர் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு அந்த பதவியில் இருந்து ஓய்வு பெற்றார்.
அதன் பிறகு இந்த நிறுவனத்தை தலைமை தாங்குவது Mr.Raghav, அவருடைய தவப் புதல்வன். புலிக்கு பிறந்தது பூனை ஆகாது என்பது போல தன் தந்தை மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இந்த நிறுவனத்தின் வருமானத்தை சேகரித்ததைக் காட்டிலும் அதைவிட 80% நிறுவனத்தின் லாபத்தை இவர் அதிகரித்துள்ளார். (கரகோஷம் பலமாக ஒலித்தன. அப்போது சங்கீதா மென்மையாக கூட்டத்தைப் பார்த்து சிரித்து கை தட்டல்கள் அடங்க சில நொடிகள் குடுத்து மீண்டும் ஆரம்பித்தாள்.) “பல முறை என்னையே முந்திவிட்டான் எனது தவப்புதல்வன்” என்று பெருமைப் பட்டு மார்தட்டிக் கொள்ளும் தந்தையை நாம் இங்கே நம் கண் முன் காணலாம். – என்று சங்கீதா பேசி முடிக்க camera Mr.Mahesh Yadhav மீது பாய, stage ல் உள்ள ஒரு பெரிய screen மீது projector உதவியால் அவருடைய முகம் திரையில் தெரிய அனைவரும் அதிக சத்தம் கேட்கும் வண்ணம் பலமாக கை தட்டினார்கள். இப்போது அவர் மேடையில் சில வார்த்தைகளைப் பகிர்ந்துகொள்வர் என்று அழைப்பு விடுத்ததும்… (கை தட்டல்கள்.) Mr.Mahesh Yadhav பேசத் தொடங்கினார்…. விழாவுக்கு வந்திருக்கும் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள். ஒரே ஒரு வரியை சொல்லிக்கொள்கிறேன். 25 ஆண்டுகளுக்கு முன் IOFI, Mahesh என்கிற ஒரு ஏழையை மட்டும் கொண்டு வாழ்ந்தது, இப்போது உலகம் முழுக்க கிட்டத்தட்ட 30 ஆயிரம் பேருக்கும் மேல் France, Germany, London, USA, Italy, India, Australia ஆகிய இடங்களில் இயங்கி வருகிறது. நான் அதிகம் பேசி நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை, மற்றவர்களின் programs நடக்கட்டும். மீண்டும் ஒரு முறை இந்த IOFI சிகரத்தை எட்டுவதற்கு உலகம் முழுதும் இருந்து எனக்கு உதவி வரும் பல முக்கிய பிரமுகர்களுக்கும் பல ஜாம்பவான் நண்பர்களுக்கும் எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அதில் குறிப்பிட்டு நான் நன்றி சொல்ல கடமைப் பட்டவர்கள் ஹிந்தி கலை உலகை சேர்ந்த BibB அவர்களுக்கும் அசாத்திய சிந்தனை வாய்ந்த படைப்பாளி Aamir Khan அவர்களுக்கும், மற்றும் தமிழ் நாட்டை சேர்ந்த கலை உலக ஜாம்பவான்கள் ரஜினி, கமல் ஆகியோருக்கும் எனது ஆழ் மனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்…. – என்று அவர் சொல்லும்போது கூட்டத்தில் கரகோஷம் காதைக் கிழித்தது. இப்போதுதான் சங்கீதாவுக்கு அவர்களும் கூட விழாவுக்கு வந்திருக்கிறார்கள் என்று தெரிந்து ஒரு நொடி மனதுக்குள் திடுக்கிட்டாள். (பின்னாடி திரும்பி சஞ்சனாவைப் பார்த்து “அப்படியா?” என்று சங்கீதா கண்களால் கேள்வி எழுப்ப, சஞ்சனா குறும்பாக சிரித்துக் கொண்டே “ஆமாம்” என்பது போல முகபாவனை செய்தாள்).. இப்போது அவர் கீழே இறங்கியதும். சங்கீதா பேசத் தொடங்கினாள் “நன்றிகள் திரு Mahesh Yadhav அவர்களே. விழா என்றாள் அதற்க்கு பல விஷயங்கள் உயிர் சேர்க்கும், அவைகள், பாடல்கள், இசைகள், நடனங்கள். அந்த வகையில் நமக்கெல்லாம் காதுகளில் மிகவும் இதமாக ஒலிக்க ஒரு பாடலை தரவிருக்கிறார் பாடகர் திரு உண்ணி கிருஷ்ணன் அவர்கள். (மேடையில் விளக்குகள் அனைய பாடகர் உன்னி கிருஷ்ணன் தோன்றும்போது மீண்டும் விளக்குகள் எரிந்தன…. கரகோஷம் மிதமாக எழுந்தன. – அவர் பாடிய பாடல் (click here to listen) ….. – இந்த உன்னதமான பாடலில் “சாமி தவித்தான், தாயையை ப் படைத்தான்” என்ற வரி வரும்போது கேட்கும் அனைவரது கண்களிலும் சற்று நீர்த்துளிகள் லேசாக பணித்தன. – (வாசகர்களும் இதைக் கேட்டுமாறு தாழ்மையுடன் கேட்டுகொள்கிறேன்.)
இந்த பாடல் பாடும் தருவாயில் கிடைத்த சிறிய gap ல் சங்கீதா சஞ்சனாவை அருகே அழைத்து காதைத் திருகி “ஏண்டி இவ்வளோ பேர் வரப் போறாங்கன்னு “எனக்கு முன்னாடியே சொல்லல?” என்று செல்லமாக கோவித்துக் கொண்டாள். ஆஹ்ஹ்ஹ் வலிக்குது வலிக்குது…. சொல்லி இருந்தா நீங்க மேடை ஏறி இருப்பீங்களா? இப்போ பாருங்க ரெண்டு வார்த்தை பேசினதுக்கு அப்புறம் மணசு கொஞ்சம் relaxed ஆக இருக்குமே?….- என்று சொல்லிவிட்டு dressing room ல் மறந்து வைத்த mobile phone ஐ சங்கீதாவிடம் குடுத்தாள் சஞ்சனா.

No comments:

Post a Comment