Friday, July 25, 2014

சங்கீதா - இடை அழகி 57


எந்த ஒரு உறுதியான மரத்துக்கும் அதன் வேர் தான் காரணம் என்று சொல்வார்கள். அந்த வகையில் IOFI என்கிற மரத்துக்கு விதை போட்ட மாமனிதர் Mr.Mahesh Yadhav வை நாம் யாரும் மறக்க முடியாது. முற்றிலும் உழைப்பால் உயர்ந்தவர். தற்போதிய CEO Mr.Raghav Yadhav னுடைய தந்தைதான் இவர். (இப்போது, கூட்டாம் முழுவதும் சங்கீதா பேசுவதைக் கேட்பதற்காக நல்ல அமைதி நிலவியது..)
Mr.Mahesh Yadhav ஒரு திறமையான வியாபாரி. ஆரம்ப கட்டத்தில் வெறும் தையல் வேலை பார்த்தவர், நாடகங்களில் நடிப்பவர்களுக்கு துணிகளை தைக்க ஆரம்பித்து, பின் low budget படங்களுக்கு costume designer ஆக பணியாற்றி, கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து 2000 மாவது வருடத்தில் இருந்து ஹிந்தியிலும் கால் பதித்து, இன்று அகில இந்தியா முழுவதும் பிரபலமாகி ஒரு நிறுவனத்தை மாபெரும் வெற்றிக்கு கொண்டு சென்றார். இவர் ஆரம்பித்த இந்த IOFI நிறுவனம் இன்று உலகில் எங்கெல்லாம் அதி நவீன கலை நிகழ்ச்சிகள், costume designing, நடக்கிறதோ அங்கு மட்டும் இல்லாமல், Industries, corporates, மற்றும் அதிக பொருட்செலவில் எடுக்கப் படும் இந்திய த் திரைப்படங்களும் உட்பட பல இடங்களில் எங்கெல்லாம் fashion எண்ணும் வார்த்தைக்கு இடம் இருக்கிறதோ அங்கெல்லாம் தனது கால்களைப் பதித்து இருக்கிறார். இந்த நிறுவனத்தின் செயலாளராக இருந்த இவர் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு அந்த பதவியில் இருந்து ஓய்வு பெற்றார். அதன் பிறகு இந்த நிறுவனத்தை தலைமை தாங்குவது Mr.Raghav, அவருடைய தவப் புதல்வன். புலிக்கு பிறந்தது பூனை ஆகாது என்பது போல தன் தந்தை மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இந்த நிறுவனத்தின் வருமானத்தை சேகரித்ததைக் காட்டிலும் அதைவிட 80% நிறுவனத்தின் லாபத்தை இவர் அதிகரித்துள்ளார். (கரகோஷம் பலமாக ஒலித்தன. அப்போது சங்கீதா மென்மையாக கூட்டத்தைப் பார்த்து சிரித்து கை தட்டல்கள் அடங்க சில நொடிகள் குடுத்து மீண்டும் ஆரம்பித்தாள்.) “பல முறை என்னையே முந்திவிட்டான் எனது தவப்புதல்வன்” என்று பெருமைப் பட்டு மார்தட்டிக் கொள்ளும் தந்தையை நாம் இங்கே நம் கண் முன் காணலாம். – என்று சங்கீதா பேசி முடிக்க camera Mr.Mahesh Yadhav மீது பாய, stage ல் உள்ள ஒரு பெரிய screen மீது projector உதவியால் அவருடைய முகம் திரையில் தெரிய அனைவரும் அதிக சத்தம் கேட்கும் வண்ணம் பலமாக கை தட்டினார்கள். இப்போது அவர் மேடையில் சில வார்த்தைகளைப் பகிர்ந்துகொள்வர் என்று அழைப்பு விடுத்ததும்… (கை தட்டல்கள்.) Mr.Mahesh Yadhav பேசத் தொடங்கினார்…. விழாவுக்கு வந்திருக்கும் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள். ஒரே ஒரு வரியை சொல்லிக்கொள்கிறேன். 25 ஆண்டுகளுக்கு முன் IOFI, Mahesh என்கிற ஒரு ஏழையை மட்டும் கொண்டு வாழ்ந்தது, இப்போது உலகம் முழுக்க கிட்டத்தட்ட 30 ஆயிரம் பேருக்கும் மேல் France, Germany, London, USA, Italy, India, Australia ஆகிய இடங்களில் இயங்கி வருகிறது. நான் அதிகம் பேசி நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை, மற்றவர்களின் programs நடக்கட்டும். மீண்டும் ஒரு முறை இந்த IOFI சிகரத்தை எட்டுவதற்கு உலகம் முழுதும் இருந்து எனக்கு உதவி வரும் பல முக்கிய பிரமுகர்களுக்கும் பல ஜாம்பவான் நண்பர்களுக்கும் எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அதில் குறிப்பிட்டு நான் நன்றி சொல்ல கடமைப் பட்டவர்கள் ஹிந்தி கலை உலகை சேர்ந்த BibB அவர்களுக்கும் அசாத்திய சிந்தனை வாய்ந்த படைப்பாளி Aamir Khan அவர்களுக்கும், மற்றும் தமிழ் நாட்டை சேர்ந்த கலை உலக ஜாம்பவான்கள் ரஜினி, கமல் ஆகியோருக்கும் எனது ஆழ் மனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்…. – என்று அவர் சொல்லும்போது கூட்டத்தில் கரகோஷம் காதைக் கிழித்தது. இப்போதுதான் சங்கீதாவுக்கு அவர்களும் கூட விழாவுக்கு வந்திருக்கிறார்கள் என்று தெரிந்து ஒரு நொடி மனதுக்குள் திடுக்கிட்டாள். (பின்னாடி திரும்பி சஞ்சனாவைப் பார்த்து “அப்படியா?” என்று சங்கீதா கண்களால் கேள்வி எழுப்ப, சஞ்சனா குறும்பாக சிரித்துக் கொண்டே “ஆமாம்” என்பது போல முகபாவனை செய்தாள்)..
இப்போது அவர் கீழே இறங்கியதும். சங்கீதா பேசத் தொடங்கினாள் “நன்றிகள் திரு Mahesh Yadhav அவர்களே. விழா என்றாள் அதற்க்கு பல விஷயங்கள் உயிர் சேர்க்கும், அவைகள், பாடல்கள், இசைகள், நடனங்கள். அந்த வகையில் நமக்கெல்லாம் காதுகளில் மிகவும் இதமாக ஒலிக்க ஒரு பாடலை தரவிருக்கிறார் பாடகர் திரு உண்ணி கிருஷ்ணன் அவர்கள். (மேடையில் விளக்குகள் அனைய பாடகர் உன்னி கிருஷ்ணன் தோன்றும்போது மீண்டும் விளக்குகள் எரிந்தன…. கரகோஷம் மிதமாக எழுந்தன. – அவர் பாடிய பாடல் (click here to listen) ….. – இந்த உன்னதமான பாடலில் “சாமி தவித்தான், தாயையை ப் படைத்தான்” என்ற வரி வரும்போது கேட்கும் அனைவரது கண்களிலும் சற்று நீர்த்துளிகள் லேசாக பணித்தன. – (வாசகர்களும் இதைக் கேட்டுமாறு தாழ்மையுடன் கேட்டுகொள்கிறேன்.) இந்த பாடல் பாடும் தருவாயில் கிடைத்த சிறிய gap ல் சங்கீதா சஞ்சனாவை அருகே அழைத்து காதைத் திருகி “ஏண்டி இவ்வளோ பேர் வரப் போறாங்கன்னு “எனக்கு முன்னாடியே சொல்லல?” என்று செல்லமாக கோவித்துக் கொண்டாள். ஆஹ்ஹ்ஹ் வலிக்குது வலிக்குது…. சொல்லி இருந்தா நீங்க மேடை ஏறி இருப்பீங்களா? இப்போ பாருங்க ரெண்டு வார்த்தை பேசினதுக்கு அப்புறம் மணசு கொஞ்சம் relaxed ஆக இருக்குமே?….- என்று சொல்லிவிட்டு dressing room ல் மறந்து வைத்த mobile phone ஐ சங்கீதாவிடம் குடுத்தாள் சஞ்சனா. உண்ணி கிருஷ்ணன் பாடல் முடிந்ததும், மீண்டும் மேடைக்கு சென்று பேசத் தொடங்கினாள் சங்கீதா.. “IOFI இன்று வரை வளர்ந்து வருவதற்கு முக்கிய காரணம் ஆடை அலங்காரம்தான் என்பது நமக்கெல்லாம் தெரியும். இருப்பினும் சமீபமாக design செய்த ஓரிரு ஆடைகளுக்கு நல்ல வரவேற்ப்பு இருப்பதை மனதில் வைத்து இந்த நபருக்கு நாம் பரிசளிக்க போகிறோம்.” என்று ஒரு envelope பிரித்து படித்தாள். “இந்த விருதை வழங்க Mr.Mahesh Yadhav மற்றும் CEO Mr.Raghav அவர்களையும் மேடைக்கு அழைக்கிறேன். (கரகோஷம் ஒலித்தன..) இருவரும் மேடைக்கு வந்தார்கள். ராகவ் கண்களில் ஒரு பெரிய excitement கலந்த சிரிப்பு தெரிந்தது. அதற்க்கு காரணம் இப்போது தெரியும்.. And the winner is (சந்கீதவால் நம்ப முடியவில்லை. அவளுக்கு மூச்சு பேச்சில்லை ஒரு நொடி.) “come on sangeetha… read.. dont delay…. start saying the name…” – என்று பின்னாடி இருந்து சஞ்சனா மெதுவாக கத்த பெயரைப் படித்தாள் ” And the winner is சங்கீதா குமார்”.. (பேப்பரை அப்படியே mike அருகே போட்டுவிட்டு கண்களில் லேசான நீர்துளிகளோடு கரகோஷம் எழும்பும் சத்தத்துடன் கேட்டு அதிர்ச்சியும் சந்தோஷமும் கலந்து என்ன பேசுவதென்றே தெரியாமல் நின்றாள்.) ராகவ் “Come on sangeetha” என்று கூலாக சங்கீதாவை கை பிடித்து மேடையின் நடுவில் கூட்டி நிற்க வைத்தான். இப்போது உரிமையுடன் தானே மைக் எடுத்து பேச ஆரம்பித்தான் ராகவ்.
“Everybody must be thinking why this compere women is getting the award, ஹா ஹா, let me explain. She is a young energetic manager in a reputed Bank & (அமைதியில் echo ஒலித்தது) recently when sangeetha came to my office for an official purpose, she was making some designs in her dairy & when she left for the day she left her dairy too. At that time when I come to see that, I was viewing those designs with focused interest & thought to bring my visualization to reality by making these designs in cloths & it shooked the sales in certain northern parts of india. I have basically chosen her name for this award because she is the initiator of such designs & she deserves it. even though she is not an employee of our organization. Also I would like to take this moment to encourage the working come family womens to indulge in such activities like what sangeetha did and who knows…….. even your design might get selected in IOFI” – என்று ஆங்கிலத்தில் stylish ஆக பேசி முடித்து தன் தந்தையிடம் மேடையிலேயே சங்கீதாவுக்கு கௌரவ அறிமுகம் செய்து வைத்தான் ராகவ். அவனது தந்தை Mahesh Yadhav awardஐ க் குடுக்கும்போது சங்கீதாவின் கண்களில் நீர்த்துளிகள் தேங்கி இருந்தவை லேசாக கண்ணத்தில் வழிந்தது. காரணம் இத்தனை கணக்கான மக்களுக்கு மத்தியில், அவளுக்குள் ஏதோ ஒரு திறமை இருப்பதை உணர்ந்து அதை அங்கீகரித்து அவளுக்கு மேடையில் பரிசு குடுக்கும்போது இன்று வரை இப்படி ஒரு உணர்வை அவள் உணர்ந்ததில்லை, அவளுடைய மனதில் ராகவை ஒரு நொடி மகானாக கருதினாள். எ.. என…. இஸ்ஸ்ஹ்ஹ்..( கண்களில் நீர் வர லேசாக விசும்பி வார்த்தைகள் வர கஷ்ட்டப்பட்டது அவள் வாயிலிருந்து.) என்ன சொல்லுரதுன்னு தெரியல… Thanks.. Thank you so much.. Thanks a lot – என்று பேசுகையில் Taare Zameen Par படத்தில் தனக்கு கடைசியாக ஓவியம் வரைந்ததற்கு முதல் பரிசு தரும்போது அந்த குழந்தை எப்படி உணர்ச்சி வசப்பட்டு ஓடி வந்து aamir khan ஐக் கட்டிக்கொள்ளுமோ அதைப்போலவே மேடையிலேயே சங்கீதா அதீத சந்தோஷத்தில் ஒரு நொடி ராகவை க் கட்டி அனைத்து நன்றிகள் தெரிவித்தாள். இதையும் camera க்கள் க்ளிக்கிக்கொண்டன. கொஞ்சம் கரகோஷத்துக்கு இடம் குடுத்து, தன்னையும் சுதாரித்துக் கொண்டு மீண்டும் mike ல் பேச தொடங்கினாள் சங்கீதா.. இப்போது IOFI நிர்வாகத்துக்கான ஓரிரு சொற்ப விருதுகளையும் சந்கீதவைத் தொடர்ந்து சிலருக்கு வழங்கிய பிறகு மேடைக்கு சென்று மீண்டும் அடுத்த நிகழ்ச்சிகளைப் பற்றி பேசத்தொடங்கினாள் சங்கீதா.. கலையை ரசிக்காத மானிடர் உண்டோ இவ்வுலகில்? அப்படி இருக்க அந்த கலையுலகில் நமது உதவியுடன் கலக்கிய சில சினிமா நட்சத்திரங்களுக்கு நாம் விருதுகள் வழங்க மாபெரும் ஆட்களாக இல்லாதவர்களாக இருக்கலாம், இருப்பினும் நட்பின் அடிப்படையில் அவர்களுக்கு சில விருதுகள் குடுத்து கௌரவிக்க IOFI award jury members தேர்வு செய்திருக்கிறார்கள். அதற்கான விருதுகளைப் பார்ப்போம். முதலாவது: IOFI – Best manly appearance award. இந்த விருதை வாங்கப்போகும் நபர் யார்? இந்த வீடியோ கிளிப்பிங் பார்க்கவும். Best Manly appearance award.. (Click to view) இந்த விருதுக்கு உரியவர் நடிகர் திரு ஆர்யா.. (கரகோஷம் ஒலித்தது.) மேடை எரிய ஆர்யா இதற்கான விருதை நண்பர் ராகவிடம் வாங்கிக்கொண்டார். மேடையில் விருதை வாங்கிய பின் ஓரிரு வார்த்தைகளை பேசினார் ஆர்யா. “IOFI க்கு எனது நன்றிகள். தவிர ராகவை எனக்கு நன்றாக தெரியும், அவருடன் எனக்கு நெருக்கமான நட்பு உண்டு, மதராசபட்டினம் shooting போது emy jackson க்கு அவர்தான் உடைகள் suggest பண்ணார், அதுக்கு அப்புறம் என்னோட பாஸ் என்கிற பாஸ்கரன் படத்துக்கும், வேட்டை படத்துக்கும் பாடல்களில் வரும் உடைகளை அவர்தான் எனக்கு வடிவமைச்சார், நண்பர் ராகவ் இன்னும் மேலும் மேலும் உயர எனது வாழுத்துக்கள். நன்றி” – என்று பேசி முடித்து விடை பெரும்போது அரங்கத்தில் “yo macho man” என்கிற சத்தத்துடன் கரகோஷம் ஒலித்தன. நன்றி திரு ஆர்யா.. இப்போது நாம் காண இருப்பது சிறந்த நடிப்பை வெளிப்படுத்திய நடிகைக்கான விருது. IOFI – Best performance by female lead artist. இந்த விருதை வாங்கப்போகும் பெண் யார்? இந்த வீடியோ கிளிப்பிங் பார்க்கவும். Best performance by female lead artist (Click to view) மேடை எரிய நடிகை ரிச்சா, விருதை நடிகர் ஆர்யாவிடம் பெற்றுக் கொண்டார். (கரகோஷம் எழும்பி அடங்கியது.) இந்த விருதை எனக்கு பரிந்துரைச்சதுக்கு IOFI க்கு முதல்ல எனது நன்றிகளை த் தெரிவிச்சிக்குறேன். மற்றபடி இந்த விருதுக்கு காரணமானவர் director செல்வ ரகாவந்தான். creativity is by him, I just simply executed that, thats all. other than that I love all my fans in chennai, this is all because of youuuuu… ummaahhh…. (என்று சத்தமாக mike ல் richa கத்தி பேசி ரசிகர்களை நோக்கி காற்றில் flying kiss குடுக்க, அனைத்து இளசுகளும் சத்தமாக விசில் அடித்தார்கள்) & I love chennai chennai chennai…. ( என்று தமிழ் நடிகைகளுக்கே உரிய தீர்க்க தரிசனமான வார்த்தைகளை formality க்கு சொல்லிவிட்டு மேடையை விட்டு இறங்கினாள் நடிகை richa) Thank you Richa.. – என்றாள் சங்கீதா.. இப்போது நாம் அனைவரும் ஒரு சிறிய நடனத்தைப் பார்க்கப் போகிறோம் அதற்க்கு அடுத்து வரும் நிகழ்ச்சிகள் அனைத்தும் surprise என்று சொல்லியவுடன் பெரிய விளக்குகள் மட்டும் அணைக்கப் பட்டது. stage ல் மட்டும் இப்போது விளக்கு பளிச்சென எரிய stage ன் கூரையில் இருந்து ஒரு opening தரப்பட்டு அதில் இருந்து ஒரு இயந்திரம் stylish சங்கீதாவை இறக்கி விட, அதைப் பார்த்து அனைத்து ரசிகர்களுக்கும் அதிர்ச்சி கலந்த ஆச்சர்யம், இவ்வளோ நேரம் gagra choli ல இருந்தவளா இவ? – என்று அனைவரும் மூக்கின் மீது விரல் வைத்தனர்.
இப்போது கலா மாஸ்டர் கற்றுக் குடுத்த இடுப்பு நடனத்தை அவர் சொல்லித்தந்த விதம் ஆடுகையில், முகத்தினில் அப்படி ஒரு சந்தோஷம் சங்கீதாவுக்கு, இப்படியெல்லாம் நடக்கும் என்று அவளது வாழ்கையில் அவள் கணவு கூட கண்டதில்லை, இந்த நடனத்தை க் கீழே ராகவ் (கீழே குறிப்பிட்டுள்ள videoவில் salman னை கற்பனை செய்துகொள்ளவும்….) ரசித்து பார்த்து கைதட்டி குதூகலப்படுத்தினான். அதை சங்கீதாவும் ரசித்தாள், அப்போது பின்னாடி சஞ்சனவுடன் அவளது மகள் ஸ்நேஹாவும் பார்த்து கைத் தட்டுவதைப் பார்த்து சந்தோஷப்பட்டாள். பாராட்டுக்கும், கரகோஷத்துக்கும், ஏங்கும் மானிடர்களுக்கு மத்தியில் சங்கீதா விதிவிலக்கல்ல…. (இந்த நடனத்தில் sheila என்கிற பெயருக்கு பதில் சங்கீதா என்று நீங்களே மனதில் எண்ணிக்கொள்ளுங்கள் – இது அனைத்து வாசகர்களும் முழுமையாக பார்க்க வேண்டிய நடனம்.) இப்போது நடனம் முடிந்து சில நிமிடங்களுக்கு பிறகு நடனம் ஆடிய அதே costume ல் mike பிடித்து பேச வந்தாள் சங்கீதா..

No comments:

Post a Comment