Wednesday, July 30, 2014

சங்கீதா - இடை அழகி 65


வாழ்கையில் குழந்தையாய் பிறந்தது முதல் பள்ளி, கல்லூரி, நண்பர்கள், தோழிகள், மெத்த படித்தவர்களுடன் மேற்படிப்பு படித்த நாட்கள், வேலை செய்யும் அலுவலகத்தில் அவளது சக ஊழியர்கள், மற்றும் மேலதிகாரிகள் முதற்கொண்டு “சங்கீதா” என்றாலே தலை நிமிர்ந்து பார்க்க வைக்கும் மரியாதை உள்ளவள். அவளது கல்யாண வாழ்க்கையில் கடந்த ஏழு வருடம் என்னதான் பல மனக் குத்தல்களுக்கு ஆளானாலும், இந்த நாள் இந்த ஒரு கனம் அவள் குமாரின் எதிரில் வாங்கிக் கொண்டிருக்கும் வார்த்தைகள் அளவுக்கு அதிகமாகவே அவளது சுய கௌரவத்தை நசுக்கியது, அவனுடைய வார்த்தைகள் இவளுடைய மென்மையான குணாதிசயங்களை கூச வைத்தது.
புருஷனாகவே இருந்தாலும் பேசக் கூடாத வார்த்தைகள் பேசினாள் கேட்க வேண்டிய அவசியம் கிடையாது என்று அழுத்தமாக அவள் மனது சொன்னது. இருப்பினும் அவனது வார்த்தைகளால் வந்த வலிகளை தாங்க இயலவில்லை அவளாள். அதற்கு ஆதாரமாக அவளது விழியன் ஓரம் தேங்கி நின்ற கண்ணீர் தான் சாட்சி. “ஆடுடி, எவ்வளோ நேரம் சொல்லுறேன் ஆடு,” என்று குமார் கூறிய வார்த்தைகளை கேட்க்கும்போது மெதுவாக திரும்பி ஈர விழிகளுடன் ஸ்நேஹாவை மென்மையாக சிரித்து ப் பார்த்தாள் சங்கீதா.. சற்றும் குமாரின் கோவத்துக்கு அசராமல் சரிந்த முந்தானையை எடுத்து மீண்டும் மேலே போட்டாள். “ஒன்னும் இல்லைடா” என்பது போல் தன் பயந்த குழந்தையை நோக்கி தலை அசைத்தாள். அவளின் கண்ணீரைக் கண்டு கதவின் ஓரமாக இருந்த ஸ்நேஹா வெடுக்கென ஓடி வந்து அவளது அம்மாவின் கால்களை கட்டிப் பிடித்துக் கொண்டாள். எந்த குழந்தையாய் இருந்தாலும் தாய் அவமானப் படுவதையோ அதிகம் திட்டு வாங்குவதையோ பார்க்கையில் பயம் கொள்ளாமல் பாதுகாக்க ஓடி வரும். “தள்ளி போடி நானும் உன் அம்மாவும் பேசிக்கிட்டு இருக்கோம் இல்ல போ… உள்ள போ” – என்று அதட்டி கத்தினான் குமார். “பிரச்சினை நமக்குள்ளதான் குழந்தையை ஏதாவது ….” – என்று அவள் முடிப்பதற்குள் “என்னடி செய்வ….. என்னடி செய்வ….” என்று ஸ்நேஹா மீது கை ஒங்க வந்த குமாரின் கைகளை தடுக்க முயன்ற சங்கீதாவின் கைகளில் குமாரின் கரங்கள் பட அவளது கண்ணாடி வளையல்கள் உடைந்து பொல பொலவென தரையில் விழுந்தது. அப்போது நிமிர்ந்து குமாரைப் பார்த்தபோது குமாருக்கு சங்கீதாவின் முகம் ஒரு காளியின் முகத்துக்கு இணையாக தெரிந்தது.
கண்களை இறுக்கி மூடி பயத்தின் உச்சத்தில் தன் முகத்தை சங்கீதாவின் கால்களில் அழுத்தி கட்டிப் பிடித்துக் கொண்டிருந்தாள் ஸ்நேஹா. சில நிமிடங்கள் ஹாலில் நிசப்தம், யாரும் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ளவில்லை. சங்கீதா ஸ்நேஹாவை தூக்கி அவளது கண்களைத் துடைத்தாள், பதிலுக்கு குழந்தையின் கரங்கள் தாயின் கண்ணீரைத் துடைத்தது. தயவுசெய்து உங்க வேலைய நீங்க பாருங்க…. உங்க கிட்ட பேச எனக்கு வேற எதுவும் இல்ல. எனக்கும் ஒன்னும் இல்லடி, மனுஷன் பேசுவானா உன் கிட்ட? – என்று குமார் அவனுடைய கையாலாகதனத்தை அலுத்துக்கொண்டு வெளிப் படுத்த “இந்த வார்த்தையை நான் சொல்லணும்” என்று மனதில் எண்ணிக்கொண்டாள் சங்கீதா. வீடாகவே இருந்தாலும் வெறுமையாக தோன்றியது சங்கீதாவுக்கு. எப்போதுடா வீட்டை விட்டு தொலைவான் என்றிருந்தது சிறுமி ஸ்நேஹாவுக்கு. குழந்தைகளுக்கும் கணவனுக்கும் சமைத்துவிட்டு, வங்கிக்கு புறப்பட்டுக் கொண்டிருந்தாள் சங்கீதா. அவளிடம் சொல்லாமல் கொள்ளாமல் ரோஷம் என்றால் என்னவென்று கொஞ்சம் கூட அறியாது அவள் செய்து கட்டி வைத்த உணவை எடுத்துக் கொண்டு வழக்கம் போல வீட்டை விட்டு கிளம்பினான் குமார். அவன் கிளம்பும்போது பெட்ரூமில் இருந்து ஜன்னல் வழியாக பார்த்தாள் சங்கீதா “disgusting object” என்று முனுமுனுத்துகொண்டாள். (disgusting தமிழில்: அருவருப்பான ஒன்று). அங்கும் இங்கும் கையில் சிக்காமல் திறிந்த ரஞ்சித்தையும், சமத்தாக அம்மாவுக்கு உதவியாய் அனைத்தையும் செய்து குடுக்கும் ஸ்நேஹாவையும் அவர்களது ஸ்கூல் வேனில் ஏற்றி அனுப்பிவிட்டு வீட்டில் யாரும் இல்லாமல் கொஞ்சம் அமைதியாய் ஹாலில் மீண்டும் அமர்ந்தாள். சற்று முன்பு நடந்த விஷயங்களை நினைக்க விரும்பவில்லை, எனவே தனது mobile phone எடுத்தாள், அதில் “message from Raghav” என்று இருந்தது. பரவசமாய்ப் பார்த்தாள் “did you reached home safely?” என்று நேற்று இரவு இரண்டு மணி அளவில் அனுப்பி இருந்தான். பதிலுக்கு மெசேஜ் அனுப்புவதற்கு மாறாக ராகவ்க்கு கால் செய்தால் சங்கீதா.. “ஹலோ….” – திருவிழா கூட்டத்தில் தொலைந்த குழந்தை தாயைத் தேடுவது போல எப்போது அவன் குரலைக் கேட்க முடியும் என்று தவித்தது சங்கீதாவின் மனது. “ஹலோ சங்கீதா” – களைப்பான குரலில் பேசினான். இதுநாள் வரை இல்லாது இப்போது அவன் குரல் கேட்க்கையில் கன்னத்திலும், கைகளிலும் ஊசி முடிகள் எழுந்து நின்றது. மகிழ்ச்சியில் கண்கள் சிறிதளவில் அகலமானது, இதழ்கள் அதன் பங்குக்கு இரு புறமும் அழகாய் விரிந்தது இந்த தேவதைக்கு அவள் தேவனின் குரல் கேட்டது.
“sorry என்னால நேத்து ராத்திரி phone பண்ண முடியல அதான் மெசேஜ் அனுப்பினேன். ராத்திரி ஒன்னும் problem இல்லைல? – என்றான் ராகவ். “அதெல்லாம் ஒன்னும் இல்லைடா, முதல்ல உனக்கு காயம் எப்படி இருக்குன்னு சொல்லு?” “இதெல்லாம் சின்ன விஷயம்தான் ஒன்னும் இல்லைன்னு சொல்லிட்டாங்க, சாவியால கீரினதால எதுவும் septic ஆகப் போறதில்ல, இருந்தாலும் ஆயிடக் கூடாதுன்னு கொஞ்சம் மருந்து குடுத்து இருக்காங்க. “பைத்தியமாடா நீ? அவனைத் தப்பிக்க வைக்க வேற வழி தெரியாதா என்ன? சும்மாவே ஓட விட்டிருக்கலாம் இல்ல, மனசுல பெரிய கமல்னு நெனைப்பா? ரொம்பவே ஓவர் ஆக்டிங் பண்ணுற!.. அங்கேயே உன்னை காலர் புடிச்சி ஒரு அறை அறைஞ்சிட்டு வந்திருக்கணும். தப்பு பண்ணிட்டேன். மௌனமாய் எதுவும் பேசாமல் சங்கீதாவின் அண்பு கலந்த அக்கறையான வார்த்தைகளை ரசித்தான் ராகவ். அவள் பேச பேச அது அவனுக்கு கீறல் விழுந்த நெஞ்சுக்கு மருந்தாய் இருந்தது “ராகவ்…” “உம்..” இஸ்ஹ்ம்ம் (ஒன்றும் பேசாமல் கொஞ்சம் பேரு மூச்சு விட்டாள் சங்கீதா..) “என்ன சொல்லுங்க…” “ஒன்னும் இல்ல, (சில நிமிடங்கள் மௌனம்..) நான் உன் கிட்ட கொஞ்சம் பேசணும் டா. வண்டி அனுப்பி வைக்க முடியுமா? I want to see you டா.. please” – எப்படியாவது பார்க்க வேண்டுமென்று அவள் மனது கேட்பதை ராகவ் உணர்ந்தான். “என்ன கேள்வி இது சங்கீதா, one minute please” – என்று சொல்லிவிட்டு பக்கத்தில் உள்ள intercom phone ல் சஞ்சனாவை அழைத்து “சங்கீதா வீட்டுக்கு உடனே நம்ம company வண்டிய அனுப்புங்க please” என்றான். அவன் பேசுவதை phone ல் கவனித்து “thanks டா..” – என்றாள் சங்கீதா. “என்ன விஷயமா சங்கீதா பார்க்கணும்?” – என்றான் ராகவ் ஒன்றும் தெரியாதவனாய் . “உம்…. பஜ்ஜி மாவு பத்தியும் வடை மாவு பத்தியும் பேசுறதுக்கு டா” – என்று பொய்யான கோவத்தில் சிரித்து பேசினாள் சங்கீதா. “ஹா ஹா ஹா, சரி சரி சொல்லுங்க..” “கொஞ்சம் மணசு சரி இல்லைடா…..(சில நொடி மௌனங்களுக்கு பிறகு தொடர்ந்தாள்) நீ ஏண்டா இப்படி எனக்கு ஒரு லெட்டர் குடுத்த?” – வார்த்தைகளை முடிக்கும்போது லேசாக அழ ஆரம்பிக்கும் குரல் கேட்டது ராகவ்க்கு. சங்கீதா ப்ளீஸ்… என்னாச்சு? நான் சொன்னது தப்புன்னு தொனுச்சின்னா விட்டுடுங்க. நீங்க உங்க வேலை குடும்பம்னு கவனிங்க – என்று ராகவ் அக்கறையாக பேசிக்கொண்டிருக்கும்போது நடுவில் குறுக்கிட்டு நிறுத்தினாள் சங்கீதா. “என்னுடைய தனிப்பட்ட இறுதி முடிவை நாந்தான் எடுக்கணும், அதைப் பத்தி சொல்லுறதுக்கு நீ யாருடா?” – அமர்ந்திருக்கும் chair நுனிக்கு நிமிர்ந்து வந்து எதிரில் உள்ள கண்ணாடியின் முன் முறைத்துக் கொண்டு சத்தமாக உரிமையுடன் கொஞ்சம் கோவமாக கத்தினாள். ஏதோ தன்னிடம் இருந்து பறிக்கப் படுவது போல. “இல்ல அது வந்து…” – ராகவ் க்கு ஒரு நொடி ஏன் இப்படி பேசினோம் என்றிருந்தது. இன்று வரை சங்கீதா இப்படி கோவத்தில் கத்தி அவன் கேட்டதில்லை. “Will you just shut up?” – மீண்டும் குரல் உச்சத்துக்கு போனது சங்கீதாவுக்கு… கண்ணாடியில் கண்கள் முறைத்தன. “நீ கொட்ட வேண்டியத எல்லாம் கொட்டிட்ட நான் என்ன சொல்லணும் னு நினைக்கிறேனோ அதை நான் தான் சொல்லணும், அதுக்கும் நீயே பதில் சொல்லிகிட்டா அப்புறம் நான் நடுவுல உப்புச்சப்பானா?” correct… correct னா?, அப்போ நான் உப்புச்சப்பானா? அய்யோ…. இல்ல இல்ல உங்க முடிவு உங்கள் கையில் னு நீங்க சொன்னது correct னு சொன்னேன். (சில நொடிகளுக்குப் பிறகு தொடர்ந்தான்) ஹ்ம்ம்.. என் கடிதத்துல ஒரு விஷயம் எழுத மறந்துட்டேன். என்னது? – சங்கீதாவின் முகத்தில் ஒரு மெல்லிய சிரிப்பு இருப்பதை அவள் முன்பு இருக்கும் கண்ணாடி மட்டும் அறிந்தது. ஆனால் அவனுடன் பேசும்போது வாயின் மீது கை வைத்து மூடி அந்த சிரிப்பின் சத்தத்தை மறைத்தாள் இந்த தேவதை. “வெடிக்கும் எரிமலையிடம் என் தேவதையின் கோவத்தைப் பார்த்தால் நீ கூட அமைதியாய் அடங்கி விடுவாய்” னு எப்படி? correct தானே?” – என்று ராகவ் சொல்ல…. அதற்கு பாதி கோவமும், பாதி சிரிப்பும் கலந்து என்ன பேசுவதென்றே தெரியாமல் அமைதியாய் இருந்தாள் சங்கீதா. “ஹலோ என்ன ஆச்சு?” – என்றான் ராகவ். “ஒன்னும் இல்ல.” – மெதுவாக முந்தானையின் நுனியை பிடித்து திருகிக் கொண்டே சத்தமில்லாமல் முணுமுணுத்தாள் . – இது அப்படியே ஒரு காலத்தில் ரமேஷ் அவளது வாழ்க்கையில் இருக்கும்போது சங்கீதாவுக்கே உரிய அக்மார்க் குணம்….. ஏன் பல பெண்களுக்கே உரிய குணமும் கூட. “ஒன்னும் கேட்கல, திருப்பி சொல்லுங்க please” – என்றான் ராகவ். “ஒன்னும் இல்ல னு சொன்னேன்..” – சத்தமாக கத்தி கூறினாள்.. “நான் ஒன்னு கேட்டா தப்பா நினைசிகாதீங்க ப்ளீஸ்..” “நீ கேட்க்குறதை ப் பொறுத்துதான் அது இருக்கு.. கேளு’” – என்றாள் “சரி, ஆரம்பத்துல நல்லாதானே பேச ஆரம்பிச்சீங்க? ஏன் போக போக என் கிட்ட கோவத்துல கத்துறீங்க?” “கோவமா..? கோவம் இல்லையே…. எதுக்கு நான் உன் கிட்ட கோவப்ப்படனும்?” “ஒஹ்ஹ்… அப்போ அதுக்கு பேரு கோவம் இல்லையா?” “இல்ல….” – கண்களை மூடி மென்மையாக சிரித்து பேசினாள். “நிஜம்மா?” சங்கீதாவிடம் மௌனம்…. “ஹலோ ஹலோ ஹலோ….” மீண்டும் சங்கீதாவிடம் மௌனம்…. “சரி line கட் ஆயிடுச்சி போல இருக்கு….” – என்று சொல்லி ராகவ் mobile cut செய்யும் போது… “ஹலோ….” – என்றாள் மெதுவாக. “ஹ்ம்ம்… line cut பண்ணுறேன்னு சொன்னாதான் சத்தமே வருது..” “அப்படியெல்லாம் ஒன்னும் இல்ல நான் பேசிட்டுதான் இருந்தேன் உனக்கு கேட்கல.. காது செவிடாகிடுச்சி போல இருக்கு” – மீண்டும் அவளின் முந்தானையின் நுனி அவளிடம் மாட்டிக்கொண்டு “யாராவது காப்பாத்துங்க” என்று தவித்தது.
நீங்க மனசுக்குல்லையே பேசிக்கிட்டா எனக்கு எப்படி கேட்க்கும்? ஹா ஹா…” “சப்.. போடா…” – இப்போது காற்று அதிகம் + குரல் கம்மி சங்கீதாவிடம். “ஹா ஹா ஹா….” – சங்கீதாவின் மனதை திருடிய அதே வசீகர சிரிப்பு ராகவிடம். “உன் மனசுல ஏன் என்னைப் பத்தி அப்படி ஒரு எண்ணம் ராகவ்?” “என்ன எண்ணம்?” “உனக்கு தெரியும்? பதில் சொல்லு..” “ஹ்ம்ம்…. நிறைய காரணம் உண்டு..” “என்னென்ன சொல்லு, எனக்கு தெரிஞ்சிக்கணும். மணசு குழப்பத்துல இருக்கு.. உன்னைப் பத்தின விஷயத்தை உன் கிட்டேயே பேச வேண்டியதா இருக்கு.” “ஏன்?” என்ன ஒரு confusion இருந்தாலும் உன் கிட்டதான் மணசு விட்டு பேசுவேன், நீ சொல்லுற பதில்ல அர்த்தம் இருக்கும், convincing ஆ இருக்கும். அதாண்டா… இதைப் பத்தி நான் ரம்யா கிட்ட கூட பேசல. கூடவே மத்தவங்க கிட்ட நான் இதைப் பத்தி பேசவும் கூடாது…. (சில வினாடிகள் மௌனம்) ப்ளீஸ் பேசு ராகவ்.” “எனக்கு மனசுல…” – ராகவ் பேச ஆரம்பித்தான்.. “டிங்…. டிங்….” – calling bell அடித்தது. சரி வண்டி வந்திருக்கும்னு நினைக்குறேன். வந்து பேசுறேன் – என்றாள். “ஒஹ் சரி சரி வாங்க, I will be waiting for you..” – ராகவ், சங்கீதா இருவருமே ஒருவருக்கொருவர் எப்போது தங்களது முகங்களைப் பார்த்துக் கொள்வோம் என்று அடி வயற்றில் கிச்சி கிச்சி ஏற்படும் வண்ணம் பரவசம் அடைந்தனர். கதவைத் திறந்தாள் சங்கீதா. டிரைவர் தாத்தா “வணக்கம் மா, எப்படி இருக்கீங்க?” – என்று வழக்கமாக வழிய “இருங்க ஒரு நிமிஷம் வந்துடுறேன்” என்றாள். உள்ளே சென்று அவளுடைய டைரியும் பேனாவையும் எடுத்துக் கொண்டு சேலையை கண்ணாடியின் முன்பு எப்படி இருக்கிறது என்று பார்த்தாள். வலது புறம், இடது புறம் என்று திரும்பி பார்த்துவிட்டு ஏதோ ஒரு நொடி யோசித்தாள். பிறகு லேசாக கொசுரை தொப்புளுக்கு கீழ் கொஞ்சமாக இறக்கி இடுப்பின் இரு புறமும் V வடிவில் கொண்டு சென்று பின்புறம் இடுப்புக்கும் முதுகுக்கும் இடையே இருக்கும் சதைப் பகுதியை மறைத்து பக்கவாட்டிலும் மறைத்தவாறு கட்டி இருந்தாள். – இந்த வகையில் கட்ட வேண்டும் என்பது அவளுடைய பிரத்யேக விருப்பம். அதை அட்ஜ்ஸ்ட் செய்து கட்டிக்கொண்டு கண்ணாடியை ப் பார்த்து “hereafter I will live my life like how I want to lead it & will never allow it in other’s hand & I dont bother about what others think” என்று தனக்குத் தானே சொல்லிக்கொண்டு பக்கத்தில் உள்ள புது குண்டுமள்ளியை தலையில் வைத்துக் கொண்டு கிளம்பினாள்.

No comments:

Post a Comment