Tuesday, July 15, 2014

சங்கீதா - இடை அழகி 49


முந்தானையை பட்டையாக மடித்து, அவளது தோளில் போட்டு safety pin ஐ தனது sleeveless blouse தோள் பட்டையுடன் முந்தாயையை சரியாக வைத்து குத்திக்கொண்டே மீண்டும் கண்ணாடியில் குமாரின் முகத்தைப் பார்த்து பேச ஆரம்பித்தாள்…. – “இன்னொரு விஷயத்தை நான் உங்களுக்கு முன் கூட்டியே சொல்லிடுறேன். இன்னைக்கு நடக்க போற functionக்கு நான் தொகுப்பாளரா இருப்பேன். அப்புறம் உங்களுக்கு சொல்லலைன்னு அதுக்கும் ஏதாவது மனச போட்டு குழப்பிக்காதீங்க. என்னது? தொகுப்பாளரா? – குமாரால் சுத்தமாக நம்ப முடியவில்லை.
“ஆமாம், Mr.Raghav request பண்ணி கேட்டார்.” “ஒஹ்ஹ் அவரே கேட்டாரா?” – “குரலில் வார்த்தைகள் அழுத்தி சத்தமாக வந்தன குமாரிடம் இருந்து” ஆமாம், ஆனால் அவர் கேட்டதுக்காக நான் இதை ஒத்துக்கல. Personally என் மனசுக்கு interested ஆக இருந்துச்சி, அதான் சம்மதிச்சேன்.” – வழக்கம் போல தாலியை இரு முலைகளுக்கும் இடுக்கினில் சொருகி ரவிக்கையின் மேல் கொக்கிகளை பிரா பட்டை தெரியாத வண்ணம் அழுத்தி மாட்டிக்கொண்டு பேசினாள். “இதுக்கு நான் சம்மதிக்க மாட்டேன்.” – மனைவியை நேசிக்கும் சில கணவர்களுக்கே தன் மனைவி சில நேரங்களில் புகழ்ச்சி அடைவதில் ஒரு ரகசிய பொறாமை இருக்கும். குமார் என்றாள் கேட்கவே வேண்டாம். உடனடியாக மனதில் எதையும் வைத்துக்கொள்ளாமல் மிகவும் obviousஆக (வெளிப்படையாக) முறைத்து ப் பார்த்து கத்தினான். “ஹ்ம்ம்… as expected..” – என்று மெதுவாக காதில் கம்மல் திருகாணியை திருகிக்கொண்டே கண்ணாடியை ப் பார்த்து முணுமுணுத்தாள் சங்கீதா. என்ன as expected? நான் பேசுறது உனக்கு அவ்வளவு எலக்காரமா இருக்கா? – நன்றாகவே குரலை உயர்த்தி பேசினான் குமார். அருகில் உள்ள ரஞ்சித்தின் பிளாஸ்டிக் sippar குமாரின் கோவத்துக்கு இறை ஆனது, அதை தன் கையில் அழுத்தி நசுக்கிக் கொண்டே கோவத்துடன் குமார் பேசிக்கொண்டிருக்க…. (தனது ஒரு விரலை குமார் நசுக்கும் sippar நோக்கி நீட்டியபடி பேச ஆரம்பித்தாள் சங்கீதா..) “இந்த மாசம் அந்த மாதிரி இன்னொரு sippar நம்ம குழந்தைக்கு உங்களால வாங்கிக்குடுக்க முடியும்னா அதை நசுக்குங்க. இல்லைனா அதை அந்த இடத்துல வெச்சிட்டு வாய் பேசுற என் கிட்ட வாக்குவாதம் பண்ணுங்க. என் குழந்தையோட பொருள் மேல உங்க ஆவேசத்தை காமிக்காதீங்க. – ( குமார் அளவுக்கு குரல் எழுப்பவில்லை, அமைதியாகவே அவனை நோக்கி பேசினாலும் வார்த்தைகள் powerfull ஆக வந்தது சங்கீதாவின் வாயிலிருந்து.) ஒஹ்ஹ்…. தொட்டு தாலி கட்டின புருஷண்டி, என் கிட்டே அவ்வளோ திமிரா பேசுறியா நீ..?…. – முகம் சற்று வேர்த்தது குமாருக்கு. (கோவத்தில் blood pressure அதிகம் ஆனால் சற்று வியர்ப்பது இயற்கை) சங்கீதா அந்த வார்த்தைகளை கொஞ்சமும் மனதுக்கு எடுத்துக்கொள்ளவில்லை. தன்னை disturb செய்துகொள்ளாமல் அவளுக்கென முன்பு வாங்கி வைத்த make-up kit, மற்றும் dressing accessories எல்லாத்தையும் pack செய்துகொண்டிருந்தாள். ஆண்கள் கோவமாய் இருக்கும்போது பெண்கள் உடனுக்குடன் பதில் பேசினால் கூட பரவையில்லை, ஆனால் ஒரு ஆண் ஆவேசமாய் பேச பேச அதைக் கேட்டுக்கொண்டு அமைதியாய் மற்ற வேலைகளை அவன் கண் முன் அவள் செய்யும்போது ஏற்கனவே இருக்கும் கோவம் இன்னும் அதிகரிக்கும். அந்த வகையில், சங்கீதா பதில் ஏதும் கூறாமல் அவள் வேலையை அமைதியாய் தொடர்வதைக் கண்டு மீண்டும் கொதித்தான் குமார் “என்னடி நினைச்சிக்குட்டு இருக்கே பதில் பேசுடி” – மீண்டும் குரலை உயர்த்தினான் குமார். இஸ்ஸ்… செப்பா…. ஒன்னு சொல்லுறேன் கேட்டுக்கோங்க.. (ஒரு நொடி குமாரின் கண்களை நேருக்கு நேர் பார்த்தாள், ராகவ் சொன்னது ஒரு கணம் நினைவுக்கு வந்ததை அப்படியே கூறினாள்.) “Tie கட்டினவன் எல்லாம் professional ஆகிட முடியாது, தாலி கட்டினவன் எல்லாம் புருசன் ஆகிட முடியாது.” என் மனசுல உங்க மேல இருக்குற மரியாதை வளரனும்…. அதுக்கு ஒரு கணவனா நீங்க கவணம் செலுத்தணும், அது உங்க கடமை. சும்மா என்னை கட்டிக்குட்டு ரெண்டு பெத்துகுட்டா மட்டும் போதாது, கட்டிகிட்டவ மனச கொஞ்சம் புரிஞ்சிக்கனும்.சங்கீதா பேசுகையில் ஆதித்யா சேனலில் “எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்” என்ற விவேக் காமெடி ஓடிக்கொண்டிருந்தது அதைக் கேட்டவுடன் குமாருக்கு சாதாரணமாக இருந்த கோவம் இன்னும் அதிகம் ஆகி TV plug ஐ புடுங்கி எறிந்தான். – தாழ்வு மனப்பான்மை உடயவர்களுக்கே உரிய ஆபத்தான குணம் இது. தன்னை சுத்தி சம்மந்தம் இல்லாமல் நடக்கும் விஷயங்களையும் தன் பிரச்சினைகளுடன் கோர்த்துக்கொண்டு தனது கோவத்தை அவசியம் இன்றி அதிகப்படுத்திக் கொள்வார்கள். இதைக் காணும் இரு குழந்தைகளையும் “எழுந்து குளிச்சி ரெடி ஆகணும், சீக்கிரமா கிளம்புங்க வாங்க வாங்க வாங்க…” என்று சிரித்துக்கொண்டே ஹாலில் அவர்கள் கண் முன் ஒன்றும் நடக்கவில்லை என்பது போல அவர்கள் இருவரையும் பார்த்து கை பிடித்து bathroom க்கு அழைத்து சென்று குளிப்பாட்ட ஆரம்பித்தாள் சங்கீதா. “முடிவா என்னதான் சொல்லுற?” – குழந்தைகளை குளிப்பாட்டிக் கொண்டிருக்கும் சந்கீதாவைப் பார்த்துக் கேட்டான் குமார். சில விஷயங்கள் நம்ம கிட்ட நமக்கே பிடிச்சி இருக்கும், அதை ஒரு சந்தர்ப்பம் கிடைக்கும்போது வெளிப்படுத்தனும் னு நம்ம மணசு நினைக்குரதுல தப்பில்ல. அந்த வகைல நான் compering பண்ணி ரொம்ப நாள் ஆச்சு, stage fear கிடையாது, கூடவே எனக்கு அது செய்ய பிடிக்கும். (சில நொடி மௌனத்துக்கு பிறகு மீண்டும் தொடர்ந்தாள்..) உங்க கூட பழகுற சிலர் உங்க கிட்ட special அ ஏதாவது ஒன்னு இருக்குன்னு சொன்னா அதை நீங்க வெளிப்படுத்த நினைக்குரதுல தப்பில்ல குமார்.. – மிகவும் பொறுமையாக ஒரு குழந்தைக்கு புரிய வைப்பது போல பேசினாள் சங்கீதா.
“திரும்ப திரும்ப சுத்தி சுத்தி நீ அந்த இடத்துக்கேதான் டி வர… phone போட்டு அவன் கிட்ட பண்ண முடியாதுன்னு சொல்ல்ல்லுடி” – (கோவத்தில் கடைசி வார்த்தையை சற்று அழுத்தி கூறினான்.. கல்கி படத்தில் வரும் பிரகாஷ் ராஜ் போலவே..!!..) குழந்தைகளை குளிப்பாட்டிக் கொண்டிருக்கையில் கைகளில் soap நுரை இருப்பதால் முழங்கையால் நெத்தியில் இருக்கும் வியர்வையை துடைத்து பெருமூச்சு விட்டு ஒரு நிமிடம் என்னதான் சொல்வதென்று தெரியாமல் மெளனமாக தரையைப் பார்த்து நின்றாள் சங்கீதா.. bathroom கதவின் ஓரம் நிற்கும் குமாரைப் பார்த்து சில நொடி மௌனத்துக்கு பிறகு பேசினாள்.. – “ஒன்னு தெளிவா புரியுதுங்க…., உங்களுக்கு நான் பொறுமையா எடுத்து சொல்லி புரிய வைக்க முடியும் னு நினைச்சது தப்பு. நீங்களே phone போட்டு ராகவ் கிட்ட தைரியமா என் பொண்டாட்டி உன் function க்கு compere பண்ண மாட்டா னு சொல்லிடுங்க. நான் போகல. – என்று சொல்லி தனது கைகளை துடைத்துக் கொண்டு phone எடுத்து ராகவ் number call செய்து speaker ல் போட்டாள். ரிங் சத்தம் கேட்டதும் பதறி அடித்து “ஏய்ய்ய்… ஏய்.. ஏய்.. ஏய்.. என்ன என்ன…..ஆ… என்ன இது… கட் கட் கட் பண்ணு முதல்ல…. கட் பண்ணு முதல்ல….” – நடுக்கத்தில் குமாருக்கு புருவங்கள் உயர்ந்தன, கண்கள் லேசான பயத்தில் விரிந்தன, வியர்வை நெத்தியில் வழிந்தது. phone ல் “ஹலோ” என்று ஒரு வார்த்தை கேட்டதும் லபக்கென குமாரே கட் செய்து விட்டான்… – ஒரு நிமிடம் பயத்தில் அளவுக்கு அதிகமாக மூச்சு வாங்கியது அவனுக்கு. அருகில் உள்ள தண்ணீர் bottle எடுத்து முழுவதும் குடித்தான், காரணம் எங்கே தனது வேலைக்கு உலை வந்துவிடுமோ என்று எண்ணி. (இந்த பயத்துக்கு அவசியம் இல்லை, சங்கீதா சொல்வது போல பேசினால் கூட ஏதேனும் மாற்றம் நடந்திருக்கலாம் ஆனால் குமாரின் எண்ணங்கள் அப்படி.) என்னைப் பத்தி அந்த Raghav கிட்ட ஏதாவது….? – தன்னைப் பற்றி ஏதாவது ராகவ் கிட்ட சொல்லி இருக்கியா என்று வார்த்தைகளை முழுவதுமாக முடிக்காமல் கண்களால் கேள்வியை எழுப்பினான் குமார் “பயப்படாதீங்க, நீங்க இன்னைக்கி வரைக்கும் IOFI ல வேலை செயுரீங்கன்னு நான் ராகவ் கிட்ட சொல்லிகவே இல்லை.” – சலித்துக்கொண்டே எரிச்சலில் மீண்டும் குழந்தைகளுக்கு உடம்பில் தண்ணி ஊத்த ஆரம்பித்தாள் சங்கீதா. அப்போது மெதுவாக “அப்படியே சொன்னாலும் தலைல தூக்கி வெச்சிக்குற மாதிரியா ஏதாவது செஞ்சி இருக்க போறீங்க?” என்று முணுமுணுக்க… குமாரின் காதில் பாதியாகத் தான் கேட்டது, உடனே. “என்ன சொன்ன? சொல்லு எனக்கு கேட்கல என்ன சொன்ன சொல்லு….” – கோவமும் முழுதாக காமிக்க முடியாமல், எரிச்சலும் காட்ட முடியாமல் குழப்பத்தில் டென்ஷன் ஆகி வியர்த்து நின்றான் குமார். “இப்போ எதுக்கு இவ்வளோ டென்ஷன்? உங்க வயசுல பாதிதான் அவருக்கு, பயப்படாம பேச வேண்டியதுதானே? – மீண்டும் phone ஐ அவனது கையில் குடுத்தாள் சங்கீதா. என்னடி? நக்கலா?, – ( ஒரு நிமிடம் “வயசு கம்மின்னாலும் அவன் CEO, நான் வெறும் designer தான் அவன் கிட்ட உன் அளவுக்கு என்னால பேச முடியாது” என்று வெளிப்படையாக குமாரால் சங்கீதாவை ப் பார்த்து பேச முடியவில்லை. அந்த இயலாமையின் பிரதிபலிப்பு அவனது சுட்டெரிக்கும் பார்வையில் தெரிந்தது.) “என்னதான் உங்க பிரச்சினை குமார்? எதுக்கு நான் compere பண்ணக் கூடாதுன்னு சொல்லுறீங்க? come on lets be frank & have our heart transparent, எனக்கு பிடிச்சி இருக்கு அதனால நான் செய்யுறேன். what’s the problem?” – குழந்தைகளை குளிப்பாட்டி முடித்து விட்டு டவலால் ஸ்நேஹாவையும் ரஞ்சித்தையும் துவட்டி விட்டு ஸ்நேஹாவுக்கு ஷிமியும் ஜட்டியும் மாட்டிவிட்டு, கை அருகே buff வைத்த red frock ஒன்றை அணிவித்தாள். ரஞ்சித்துக்கு சமீபத்தில் அவனது பிறந்த நாளுக்கு வாங்கிய சிறிய அளவிலான suit & bow tie மாட்டிவிட்டு, தன் உதட்டுக்கு lip gloss தடவிக்கொண்டே கேட்டாள். அவள் கேட்ட கேள்விக்கு பதிலை நேரடியாக ஆத்திரம் தாங்க முடியாமல் இப்போது சொல்ல ஆரம்பித்தான். “நீ மேடை ஏறினதும் அவனவன் உன் முகத்தையும் உன் உடம்பையும் பார்க்குறப்போ அவனுங்க கண்ணாலேயே உன்னை கற்பழிப்பானுங்க டி, இவ்வளவு open அ பேசினது போதுமா, இல்லை இன்னும் சொல்லனுமா?” – நன்றாகவே அடித்தொண்டையில் இருந்து கத்தினான் குமார். ஒரு நிமிடம் அவன் பேசிய பிறகு குழந்தைகளை ப் பார்த்தாள் சங்கீதா, இருவரது கண்களும் சற்று மிரண்டு இருந்தது. குமார் பக்கம் சட்டென திரும்பி ஒரு முறைக்கும் பார்வை ப் பார்த்து பேசினாள். “How such cheap words came in your mouth kumar?” – குமாரை நெருங்கி வந்து அவனது கண்களை ப் பார்த்து க் கேட்டாள். “frank அ, transparent அ பேசலாம்னு சொன்ன்ன்ன இல்ல அதான் நல்லா opppppen அ பேசிட்..” – குமார் அழுத்தி அழுத்தி பேசுவதை கேட்டுக் கொண்டிருன்தவள் குறுக்கிட்டு ஒரு நொடி கண்களை அழுத்தி மூடி, பேசினது போதும் என்பது போல தன் இடது கையை சடாரென உயர்த்தி பாவனை செய்து காமித்தாள்.)
இதுக்கும் மேல ஏதாவது என் குழந்தைங்க முன்னாடி நீங்க அசிங்கமா பேசினா…. ( பெருமூச்சு விட்டு சில வினாடிகளுக்கு பிறகு சொன்னாள்..) “நடக்குறதே வேற..” கண்களை இன்னும் அவள் திறக்கவில்லை, அவளது முகம் சிவந்து இருந்தது. குமாருக்கே ஒரு நொடி அவளின் மௌனமான கோவத்தை ப் பார்த்து இதற்கும் மேல் ஏதாவது பேசினால் பிரச்சினை ஆகும் என்று எண்ணி மெல்ல இரண்டடி பின் நகர்ந்து நின்றான்.

No comments:

Post a Comment