Friday, July 4, 2014

சங்கீதா - இடை அழகி 40


என்னடி? கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி பூனை மாதிரி அடங்கி இருந்தவ இப்போ வெடுக்குனு ஓடிப்போய் இடம் பிடிக்குற? எல்லாம் நான் குடுத்ததோட effect அ? – என்று தான் குடுத்த napkin னை குறி வைத்து சங்கீதா கிண்டலாய் சொல்ல.. ச்சி…. போங்க மேடம்… – சிணுங்கினாள் ரம்யா.. சரி எங்கே போய் இருந்தீங்க காலைல? – என்றாள் ரம்யா.
IOFI க்குதாண்டி, ஒரு முக்கியமான விஷயம் பேச போய் இருந்தேன் ராகவ் கிட்ட.. அதான் ராத்திரி டெய்லி phone ல பேசுறீங்களே? அது பத்தாதுன்னு இப்போ காலைல நேர்ல போய் phone ல விட்டதை பேசிட்டு வரீங்களா? என்று கேட்க.. போதும் அடங்கு… நல்லா வாய் நீளுது பாரு.. – மென்மையாக பொய் க் கோவம் காட்டினாள் சங்கீதா.. அப்போது ஜன்னல் அருகே வந்த காற்றுக்கு நெத்தியில் ஆடிய முடியை தனது விரல் நுனியால் அழகாக தள்ளி விட அதை கவனித்த ரம்யா.. மேடம், உங்க nail polish நல்லா இருக்கு.. – என்று சொல்ல ஒரு தடவ உன் கூட chennai silks ல புடவை வாங்கிட்டு இருக்கும்போது நேரம் ஆகுது கிளம்பனும் னு குழந்தை மாதிரி அழுதியே!! அப்போ வெளியே வந்து auto பிடிக்கும்போது ஒரு fancy store ல அவசரத்துக்கு வாங்கினதுடி, மறந்துட்டியா? – என்றாள் சங்கீதா சிரித்தபடி. brown colour shiffan saree கட்டி, அதற்கு matching ஆக dark brown color sleeveless ரவிக்கையை அணிந்திருந்தாள் சங்கீதா. வழக்கம் போல fresh ஆன 4 முழம் குண்டு மல்லியும், உதடுகள் மீது மிதமாக apply செய்யப்பட்ட lakme maroon நிற lipstick ம், கூடவே இவைகளுக்கு matching ஆக silver mixed dark brown colour nail polish அவளின் அழகிய விரல் நகங்களில் ஜன்னலில் இருந்து வரும் வெளிச்சத்தில் மின்னியது. ஒஹ்ஹ்.. ஆமாம் இப்போ நியாபகம் வருது. சரி என்ன முக்கியமான விஷயம் மேடம்? எதுக்கு IOFI போய் இருந்தீங்க? அது ஒரு பெரிய கதைடி சும்மா சொல்லுங்க மேடம்.. நேத்து ராத்திரி உன் கணவர் phone பண்ணி அந்த wooden பீஸ் பத்தி சொன்னாரு. ஒஹ்..yes தெரியும். என் கிட்டயும் சொன்னாரு. அதுதான் paper manufacturing பண்ண உதவும்னு அவரு சொன்னப்போ நீங்க அது already paper manufacturing department ல இருந்து எடுத்ததுதான் னு சொன்னிங்கலாமே. ஆமாம், but சாதாரண பேப்பர் கிடயாதுடி.. வேற? கள்ள நோட்டு அடிக்குறதுக்கு உதவுற பொருள்.
எம்மாடி?.. அப்போ அந்த பேப்பர் manufacturing department உள்ளேயே போயி கையும் களவுமா பிடிச்சிடீங்களா? இல்லைடி, இன்னைக்கு Mr.Vasanthan என் கிட்ட IOFI award function பத்தி பேசினார், போன வருஷம் நான் என் கணவர் கூட அந்த functionக்கு போய் இருந்தேன். சரி அதுக்கும் நான் கேட்டதுக்கும் என்ன சம்மந்தம்? இருக்கு சொல்லுறேன். சரி சொல்லுங்க function ல இருந்தப்போ ரஞ்சித் அழ ஆரம்பிச்சிட்டான். ஸ்நேஹா ஒரு அளவுக்கு குமார் கூட சமத்தா உட்கார்ந்திருந்தா. அப்போ நான் ரஞ்சித் அழுகைய நிறுத்த கொஞ்ச நேரம் வெளியே போய் நின்னேன். உள்ள ரொம்ப நேரம் உட்கார்ந்திருந்ததால எதுவும் சாப்பிட முடியல. இவனை தோளுல போட்டுக்கிட்டு இருந்தப்போ லேசா பசிக்கவும் செஞ்சுது. அப்போ உள்ளுக்குள்ளேயே IOFI caterers சில snacks & tiffin items வெச்சி இருந்தாங்க. போய் ஒரு தோசையும், சாம்பார் வடையும் சொன்னேன். சொன்னதெல்லாம் சூடா வந்துச்சி. கடைசியா bill குடுக்கும்போது என் கணவர் கிட்ட இருந்து அன்னிக்கி காலைல change வேணுமே னு சொல்லி மூணு 1000 ரூபா நோட்டை ஆறு 500 ரூபா நோட்டா மாத்திக்கிட்டேன். அப்போ அந்த ரூபா நோட்டுல ஒரு 500 எடுத்து bill counter ல pay பண்ண கொடுத்தேன். அங்கே இருந்தவன் ஒரு நிமிஷம் அந்த நோட்டை பார்த்துட்டு இது சரி இல்லை மேடம் வேற ஏதாவது குடுங்க னு சொன்னான். எனக்கு shocking அ இருந்துச்சி. நானும் ஒரு நிமிஷம் உத்து ப் பார்த்தேன், white space ல காந்தியோட hologram தெரியணும், ஆனால் தெரியல. சரின்னு சொல்லி மத்த எல்லா நோட்டும் ஒன்னு ஒண்ணா குடுக்க எல்லாமே fake னு சொன்னான். நல்ல வேலையா அன்னிக்கி அவங்க card accept பண்ணாங்க, இல்லேன்னா கொஞ்சம் அசிங்கமா இருந்திருக்கும். திரும்பி function hall உள்ள போய் உட்காரும்போது என் கணவர் கிட்ட கேட்டேன் “ஏங்க, எங்கே ஏமாந்தீங்க இப்படி செல்லாத ரூபா நோட்டை வாங்கி” னு. நான் கேட்டதுக்கு அவரும் ஒரு நிமிஷம் ஷாக் ஆகி எங்க கம்பெனி ATM ல எடுத்த cash தான் அது னு அவர் சொல்லும்போது எனக்கு ஆச்சர்யமா இருந்துச்சி. eventhough its possible but very rare. சரி மேடம், ஒரு கேள்வி, நிறைய fake notes public place ல புழக்கத்துல இருக்கும். அப்படி ஏதாவது சில notes சிலபேர் bank ல cash deposit பண்ணும்போது மிஸ் ஆகி atm machine ல போக வாய்ப்பு இருக்கலாமே? எப்படி confirmed அ IOFI உள்ள இருக்குற paper manufacturing unit ல இருந்துதான் அந்த fake notes atm ல போகுதுன்னு சொல்லுறீங்க? you are correct, but சந்தேகம் வர்றதுல தப்பில்லையே? மேடம் நான் ஒன்னு சொல்லுறேன்னு தப்பா நினைக்காதீங்க…. நினைக்க மாட்டேன் சொல்லுடி… ரகாவ்காக நீங்க கொஞ்சம் அதிகமாவே உதவுரா மாதிரி தெரியுது.
சங்கீதாவுக்கு இல்லை என்றும் சொல்ல முடியாமல், ஆமாம் என்றும் சொல்ல முடியாமல் வார்த்தைகள் கிடைக்காததால், ஒன்றும் பேசாமல் மெளனமாக குனிந்து coffee tumbler மட்டும் பார்த்துக்கொண்டிருந்தாள். ரம்யா தனது கைகளை சங்கீதாவின் கைகள் மீது வைத்து “என்ன ஆச்சு மேடம், ஏதாவது பேசுங்க..” என்றாள். “ஆங்…. ஒன்னும் இல்ல ரம்யா..” – ரம்யா இந்த கேள்வியை எழுப்பிய பிறகுதான் சங்கீதாவின் மணதில் ரகாவின் சிந்தனைகள் ஓடிக்கொண்டிருந்தது. உண்மையில் நாம் ஏன் இவ்வளவு தூரம் இறங்குறோம்… எதுக்காக risk எடுக்குறோம்?…. அவளுக்கே பதில் கிட்டவில்லை. நாம் என்னதான் பலருடன் பழகினாலும் யாரேனும் ஒருவர் நம்மையும் அறியாது நம் மனதை ஆட்கொள்வார், அப்படி நிகழ்கையில், அதனை நாம் ரசிப்போமே தவிர ஏன் எதற்கு என்று நமக்கு நாமே கேள்விகள் எழுப்பிக்கொள்ள மாட்டோம், காரணம் நம் மனது அப்படிப்பட்ட ஒரு குழந்தை. சங்கீதாவின் மனதில் ரகாவின் நினைவுகள் முந்தைய நாட்களை விடவும் இப்போது சற்று அதிகம் கவர்ந்திழுக்க ஆரம்பித்தது உண்மை. அந்த உணர்வுக்கு காரணம் காதல் என்று சங்கீதா எண்ணவில்லை. ஆனால் அவளைப்பொருத்த வரையில் ராகவ் அவளின் வாழ்க்கையில் இன்று ஒரு most special person. அதில் அவளுக்கு எந்த சந்தேகமும் இல்லை. இருப்பினும் அதனை ரகசியமாக மனதிலேயே வைத்துக்கொள்ள விரும்பினாலே தவிர யாரிடமும் வெளிப்படுத்திக்கொள்ள விரும்பவில்லை, ராகவ் உட்பட. என்ன மேடம், யோசிச்சிகுட்டே இருக்கீங்க? ஏதாவது தப்பா சொல்லி இருந்தால் மன்னிச்சிடுங்க மேடம். sorry – என்று பாவமாய் பேசினாள் ரம்யா. ச்ச ச்ச.. அப்படி எல்லாம் ஒன்னும் சொல்லாதடி, நீ எனக்கு best friend என் கிட்ட எந்த formality words ம் உபயோகப்படுத்தாத. please – என்று request செய்தாள் சங்கீதா. ராகவக்காக இல்லாட்டியும் எனக்கே இதுல அப்படி என்னதான் இருக்குன்னு தெரிஞ்சிக்க ஒரு curiosity இருக்குடி அதான் கொஞ்சம் சுவாரஸ்யம் காமிக்குறேன். சரி சரி, but ஏதாவது problem னு வந்தா என்னை யாரோன்னு நினைச்சி ஒதுக்கிடாதீங்க. உங்க முயற்சியில நானும் ஏதாவது பங்கு எடுத்துகனும்னா மறைக்காம சொல்லுங்க சங்கீதா. – உரிமையுடன் கண்டிப்பான குரலில் கூறினாள் ரம்யா. கண்டிப்பாடி, உன்னை விட்டா எனக்கும் வேற யாரிருக்கா? சரி சரி, topic change…. என்னோட missed calls கூட பார்க்க முடியாத அளவுக்கு அப்படி என்ன பேசினீங்க சஞ்சனா கிட்ட? ஒன்னும் இல்லைடி, அவ அவளோட கதைய சொன்னா, எனக்கு கொஞ்சம் கேட்க கஷ்டமா இருந்துச்சி, ஆனாலும் அந்தப்பொண்ணு மேலயும் தப்பிருக்கு. என்ன சொல்லுறீங்க? சஞ்சனா ரகாவின் காதல் பற்றி, அவளின் பிறந்தநாளுக்கு ராகவ் அழைகாததுக்கு சஞ்சனா அவன் மீதுள்ள கோவத்தில் அனாவசியமாக விட்ட வார்த்தைகள் என்னென்ன!!, அதன் விளைவு எதில் சென்று முடிந்தது என்றும், mithun ராகவ் competition, மற்றும் mithun சந்தர்ப்பத்தை பயன் படுத்தி எப்படி ராகவ் சஞ்சனா காதலில் விளையாடினான் என்றும். கடைசியில் இதெல்லம் தெரிந்திருந்தும் ராகவ் எப்படி சஞ்சனாவிடம் பெரிய மனதுடன் பழகி, அவளின் தந்தைக்கு உதவி செய்து மறு வாழ்க்கை அளித்தான் என்றும், பிறகு எப்படி சஞ்சனாவுக்கு பாதுகாப்பு குடுத்து வருகிறான் என்று அனைத்தையும் வெகு விரைவாக அதே சமயம் தெளிவாக ரம்யாவுக்கு எடுத்துரைத்தாள் சங்கீதா. அனைத்தையும் கேட்ட பிறகு, ரம்யாவுக்கு வார்த்தைகள் எதுவும் வரவில்லை. பிறகு மெல்ல பேச ஆரம்பித்தாள் “only one word madam” என்றாள். என்ன? – மென்மையாக சிரித்து, புருவங்களை உயர்த்தி தலையில் கை வைத்து சாய்ந்தவாறு ரம்யாவைப் பார்த்து கேட்டாள் சங்கீதா. Raghav… – என்று one word answer சொல்வதுபோல பேசினாள் ரம்யா..
ஹாஹாஹ், என்னடி ரகாவ்க்கு? – மீண்டும் மெலிதாக சிரித்தாள் சங்கீதா. he is chanceless madam.. very rare personality. உங்க கிட்ட இருக்குற ஒரு விஷயம் அவன் கிட்டயும் இருக்குறா மாதிரி தோணுது. ஹ்ம்ம் சொல்லு என்னன்னு கேட்ப்போம்? – சுவாரஸ்யமாக கேட்டாள் சங்கீதா.. வெளித்தோற்றதுல மட்டும் personality யான ஆள் னு சொல்ல முடியாது, மனசலவிலும் ஒரு கம்பீரம் இருக்கு. இதை ரம்யா சொல்லும்போது சங்கீதாவின் முகத்தினில் என்றும் தோன்றாத ஒரு வினோத சந்தோஷம் மலர்ந்தது.. அவள் சிரிக்கவில்லை ஆனால் புன்னகைத்தாள், கண்களும் ரம்யாவை பார்க்கவில்லை, வேறு என்கோதான் பார்த்தது. பொதுவாக தன்னை யாரேனும் ஒரு சின்ன வரியில் புகழ்தால் கூட மனது சத்தம் போடாமல் உள்ளுக்குள் சிறிதாக துள்ளிக்குதித்து ஆடும். அதே சமயம் நம் மனது மிகவும் மதிக்கும் ஒருவரை நம்முடனே ஒப்பிட்டு பாராட்டும்போது மணம் அனுபவிக்கும் அந்த ரகசிய ஆனந்தத்தை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது. ஆனால் அது நம் முகத்தினில் ஒரு பொலிவை உண்டாக்கும். அந்தப்பொளிவை ரம்யா சங்கீதாவின் முகத்தினில் கண்டாள். ஆனால் சங்கீதாவிடம் அதைப்பற்றி எதுவும் கூரிக்கொள்ளவில்லை, மேலே தொடர்ந்து பேசிக்கொண்டிருந்தாள். படையப்பா படத்துல வர்ற பாட்டுல ஒரு லைன் வரும் அதுதான் நியாபகம் வருது மேடம்.. ஹ்ம்ம்.. சொல்லு என்ன லைன்? “ஒரு ஆணுக்கு எழுதிய இலக்கணம் உன்னிடத்தில் கண்டேன்..” ஹாஹாஹ்.. வாலு செம timing sense டி உனக்கு.. – இயற்கையாகவே முகத்தில் இருக்கும் பொலிவுடன் அவள் மென்மையாக சிரிக்கையில் அந்த சிரிப்பு அவளுடைய முகத்துக்கு இன்னும் அழகைக் கூட்டியது. அதை கவனிக்க தவறவில்லை ரம்யா.

No comments:

Post a Comment