Wednesday, August 27, 2014

ஆண்மை தவறேல் - பாகம் 2


எல்லாக் கேள்விகளுக்கும் விடையளித்துவிட்டு, அசோக் மணிக்கட்டு திருப்பி நேரம் பார்த்தான். இன்னும் பத்து நிமிடங்கள் பாக்கி இருந்தது. மிச்சம் இருக்கிற நேரத்தில், எழுதிய விடைகளை ஒருமுறை சரி பார்க்கலாம் என்று எண்ணினான். அவ்வப்போது திரும்பி நந்தினியின் முதுகை வெறித்தவாறே, எழுதியவற்றை முதல் பக்கத்தில் இருந்து சரி பார்த்தான். நந்தினி திடீரென எழுந்து கொண்டாள். கட்டி வைத்திருந்த விடைத்தாளை ஹால் சூப்பர்வைசரிடம் நீட்டினாள். ஹாலுடைய எக்ஸிட் நோக்கி நடக்க ஆரம்பித்தாள். அதை கவனித்த அசோக் இப்போது பரபரப்பானான். அவசரமாய் விடைத்தாள்களை அள்ளி.. நூலால் கட்டி.. சூப்பர்வைசரிடம் ஒப்படைத்துவிட்டு, நந்தினியின் பின்னால் ஓடினான். ஹாலில் இருந்து வெளிப்பட்டதுமே, "நந்தினி.." என்று அழைத்தான். திரும்பி பார்த்த நந்தினி, "ஹாய் அசோக்.." என்று எளிறுகள் தெரியுமாறு அழகாக சிரித்தாள். "எக்ஸாம் நல்லா பண்ணுனியா..?" "ம்ம்.. ஏதோ பரவால..!! நீ எப்படி பண்ணுன..?" "ம்ம்.. நல்லா பண்ணிருக்கேன்..!!" "ஹாஹா.. உன்கிட்ட போய் கேட்குறேன் பாரு.. நீ நல்லா பண்ணலைன்னாத்தான் ஆச்சரியம்..!! அப்புறம்.. ஊருக்கு என்னைக்கு கெளம்புற..?"


"இன்னைக்கேதான்.. அதான் எக்ஸாம்லாம் முடிஞ்சதுல்ல..?" "இல்லப்பா.. பாய்ஸ்லாம் நாலஞ்சு நாள் இங்கயே டேரா போட்டு.. நல்லா என்ஜாய் பண்ணிட்டு.. அப்புறமா ஊருக்கு போற மாதிரி ப்ளான் பண்ணிருக்காங்க.. அதான் கேட்டேன்..!!" "ஓ..!!" "ஓ'வா..? உனக்கு தெரியாதா..?" "ம்ஹூம்.. தெரியாது..!! நா..நான் இன்னைக்கே கெளம்புறேன்..!!" அசோக் ஒருமாதிரி பரிதாப குரலில் சொன்னான். "ம்ம்ம்.. ஓகே அசோக்..!! ஆல் தி பெஸ்ட் ஃபார் யுவர் கெரியர்.. ஸீ யூ லேட்டர்..!!" புன்னகையுடன் சொன்னவாறு நகர முயன்ற நந்தினியை, அசோக் அவசரமாக தடுத்தான். "நந்தினி நந்தினி.. ஒரு நிமிஷம்..!!" "ம்ம்..?" "உ..உன்கிட்ட கொஞ்சம் பேசணும்.." அசோக் தயக்கமாக சொல்ல, "எ..என்ன பேசணும்..?" நந்தினியின் முகத்தில் இப்போது குழப்ப ரேகைகள். "கேண்டீன் போயிடலாமா..?" "இ..இல்ல அசோக்.. இப்போ எனக்கு டைம் இல்ல..!! என்ன சொல்லனும்னு இங்கயே கொஞ்சம் குயிக்கா சொல்லிடேன்..!!" "இங்க வேணாம் நந்தினி.. கேண்டீன் போயிடலாம்.. ஜஸ்ட் ஃபைவ் மினிட்ஸ்..!!" "ப்ச்.. டைம் இல்ல அசோக்.. நான் போய் திங்க்ஸ்லாம் பேக் பண்ணனும்.. ஊருக்கு கெளம்பனும்..!!" "ப்ளீஸ் நந்தினி..!! ஜஸ்ட் ஃபைவ் மினிட்ஸ்..!! ப்ளீஸ்.. ப்ளீஸ்..!!" அசோக் வெட்கம் இல்லாமல் கெஞ்ச, நந்தினி அவஸ்தையாய் நெளிந்தாள். 'ப்ச்..' என்று சலிப்படைந்தாள். அப்புறம் சற்றே கண்டிப்பான குரலில் சொன்னாள். "ஓகே.. ஜஸ்ட் ஃபைவ் மினிட்ஸ்தான்.. சரியா..?" "ம்ம்ம்.. சரி நந்தினி.. தேங்க்ஸ்..!!" எக்ஸாம் ஹாலில் இருந்து நடந்தால், இரண்டே நிமிடங்களில் காலேஜ் கேண்டீன் வந்துவிடும். கேண்டீன் சாப்பாடு மஹாமட்டமாக இருக்கும். அதனால் கல்லூரி நாட்களிலேயே காத்தாடும். இப்போது எக்ஸாம் நேரம் வேறு அல்லவா..? டேபிள்களில் ஈ, கொசுவை தவிர வேறெந்த பிராணியையும் காணோம். உள்ளே நுழைந்ததும், "என்ன சாப்பிடுற நந்தினி..?" கேட்டான் அசோக்.


 
அதெல்லாம் ஒன்னும் வேணாம் அசோக்.. நீ மேட்டரை சொல்லு..!!" "இல்ல இல்ல.. நீ ஏதாவது சாப்பிடனும்.. ப்ளீஸ்.. எனக்காக..!!" "ப்ச்..!! சரி.. நீ என்ன சாப்பிடுறியோ அதுவே எனக்கும் ஆர்டர் பண்ணு..!!" "ஜூஸ் சாப்பிடலாமா..? குக்கூ மில்க்ஷேக்..?? ம்ம்..?? ஓகேவா..?" "ம்ம்.. ஓகே..!!" நந்தினி சொல்ல அசோக் உற்சாகமானான். கவுன்ட்டருக்கு சென்று இரண்டு மில்க் ஷேக்குகள் ஆர்டர் செய்து வந்தான். அதுவரை நந்தினி பொறுமை இல்லாமல் காத்திருந்தாள். அவன் திரும்ப வந்து அமர்ந்ததுமே ஆரம்பித்தாள். "ம்ம்.. என்ன மேட்டர்னு சீக்கிரம் சொல்லு அசோக்..." "அ..அது.. அது.." "ம்ம்ம்..??" "வே..வேற ஒண்ணுல்ல நந்தினி.. அந்த மேட்டர்தான்.." "எந்த மேட்டர்..??" "அதான்.. போ..போன வாரம் உன்கிட்ட சொன்னனே..? எ..என் மனசுல இருக்குறது.." அசோக் தயங்கி தயங்கி சொல்லி முடிக்க, நந்தினி ஓரிரு வினாடிகள் அவனையே ஒருமாதிரி நம்ப முடியாமல் பார்த்தாள். அப்புறம் 'ப்ச்..' என்றவாறு, இமைகளை மெல்ல மூடி, இடதும் வலதுமாய் சலிப்பாக தலையசைத்தாள். நிமிர்ந்து அசோக்கின் கண்களை கூர்மையாக பார்த்தவள், சற்றே எரிச்சலான குரலில் சொன்னாள். "ஹே.. கமான் அசோக்.. நான்தான் அன்னைக்கே என் முடிவை சொல்லிட்டனே.. இன்னுமா நீ உன் மனசை மாத்திக்கலை..?" "இல்ல நந்தினி.. ஒரு வாரம் கழிச்சு சொல்றேன்னு சொன்ன..?" "ஒரு வாரம் கழிச்சு சொல்லு'ன்னு சொன்னது நீ..!! நான் அன்னைக்கே எல்லாம் தெளிவாத்தான் சொன்னேன்..!!" "சரி.. இந்த ஒரு வாரம் அதைப் பத்தி நீ எதுவும் யோசிக்கலையா..?" "ப்ச்.. இதுல யோசிக்கிறதுக்குலாம் எதுவும் இல்ல அசோக்.. என் முடிவு எப்போவும் மாறாது.. அன்னைக்கு சொன்னதுதான் இன்னைக்கும்..!! எனக்கு உன் மேல லவ் இல்லை.. இல்லை.. இல்லை..!!" நந்தினி முகத்தை கடுகடுப்பாக வைத்துக்கொண்டு சொன்னாள். அசோக்கிற்கு இப்போது அவனுடைய இதயத்தின் ஒவ்வொரு அணுவிலும், ஒரு வித வேதனை உணர்வு பரவுவதை தெளிவாக உணர முடிந்தது. அவனுடைய முகமும் இப்போது களையிழந்து வாடிப்போனது. ரொம்பவே பரிதாபமான குரலில் கேட்டான். "ஏன் நந்தினி.. உனக்கு என்னை புடிக்கலையா..?" "ஆமாம்.. புடிக்கலை..!! போதுமா.. ஹேப்பி நவ்..?? கெளம்பட்டுமா நான்..?? ம்ம்..??" நந்தினி முகத்தில் அறைந்த மாதிரி சொன்னாள். சேரில் இருந்து எழுந்து கொள்ள முயன்றாள். அசோக் எழவில்லை. அப்படியே தலையை குனிந்தவாறு அமர்ந்திருந்தவன், ஒருவித ஏக்கமான குரலில் கேட்டான். "ஏ..ஏன்..??" "என்ன ஏன்..?" நந்தினி எரிச்சலாக அசோக்கை முறைத்தாள். "ஏன் என்னை புடிக்கலை..?" அசோக் பாவமாக கேட்க, "உஷ்ஷ்ஷ்.. ப்பா..!!!" என்று நந்தினி இப்போது அவஸ்தையாக உஷ்ண மூச்சு விட்டாள். "சொல்லு நந்தினி.. ஏன் என்னை புடிக்கலை..?" "புடிக்கலைன்னு சொன்னா விட மாட்டியா..? ஏன் எதுக்குன்னு காரணம்லாம் சொல்லனுமா..?" "ஆமாம்.." "என்னால காரணம்லாம் சொல்ல முடியாது.. புடிக்கலை.. அவ்ளோதான்..!!" "ப்ளீஸ் நந்தினி.. நான் உன்னை உண்மையா நேசிக்கிறேன்.. மனசுல இருக்குற காதல் உண்மையா இருந்தா, அதுவே உன்னை என்கூட சேர்த்து வைக்கும்னு நம்புனேன்..!! என் காதலை நீ வேணான்னு சொல்றதே எனக்கு ரொம்ப வேதனையா இருக்கு.. ஆனா.. எதுக்காக என்னை ரிஜக்ட் பண்றன்னு கூட தெரிஞ்சுக்கலைன்னா.. எனக்கு தலையே வெடிச்சுடும்..!!" "ஓஹோ..?? கண்டிப்பா தெரிஞ்சுக்கனுமா..?" "ஆ..ஆமாம்.." "சரி.. என்னவா இருக்கும்னு நீயே கொஞ்சம் யோசிச்சு பாரேன்.." "எனக்கும் அதுதான் புரியலை.. என்னை ஏன் உனக்கு புடிக்கலை..?? எனக்கு எந்த கெட்ட பழக்கமும் இல்ல.. நான் உண்டு என் வேலை உண்டுன்னு இருப்பேன்.. தேவையில்லாத எந்த பிரச்னைக்கும் போகமாட்டேன்..!! நல்லா படிக்கிற பையன்.. உனக்கே தெரியும்ல.. நாந்தான யுனிவர்சிட்டி டாப்பர்..?" "ம்ம்ம்.. தெரியும்.." "அப்புறம் என்ன..?? நா..நான்.. நான் அழகா இல்லையா..?? நான் என் அம்மா மாதிரின்னு அப்பா அடிக்கடி சொல்வாரு.. என் அம்மா எவ்வளவு அழகுன்னு உனக்கு தெரியுமா நந்தினி..??" "ஹ்ஹ.. உன் அழகுக்கு என்ன கொறைச்சல்..? ஐஸ்வர்யாராய்க்கு இருக்குற ஒரே காம்படிஷன் நீதான்.." நந்தினியின் நக்கலை கூட புரிந்து கொள்ளாமல் அசோக் தொடர்ந்து பேசினான். "வேற என்ன நந்தினி..? பணமா..?? என் அப்பாவுக்கு நான் ஒரே புள்ளை நந்தினி.. எங்களுக்கு கோடிக்கணக்குல சொத்து இருக்கு.. நான்தான் ஒரே வாரிசு தெரியுமா..? என்னை மேரேஜ் பண்ணிக்கிட்டா.. நீ எந்த குறையும் இல்லாம நல்லா வசதியா வாழலாம்..!!" "ப்ச்.. அசோக்.. நானும் ஒன்னும்.. இல்லாத வீட்டு பொண்ணு இல்ல..!! கார், பங்களான்னு எங்க வசதிக்கும் எந்த குறைச்சல் இல்ல.. அதுலாம் நான் பெரிய மேட்டரா நெனைக்கலை..!!" "அப்புறம் என்ன நந்தினி..? வேற என்னதான் காரணம்..??" "சொன்னா உனக்கு புரியாது அசோக்.. விடு.." "பரவால.. சொல்லு.." "இங்க பாரு அசோக்.. நான் சொல்லிருவேன்.. அப்புறம் ஏண்டா கேட்டோம்னு உனக்குத்தான் கஷ்டமா இருக்கும்.." "ஹ்ஹ.. என் மேல லவ்வே இல்லைன்னு சொல்லிட்ட..? அதைவிட என்ன கஷ்டம் இருந்திட போகுது..? சும்மா சொல்லு..!!" "ஓ.. காட்..!!" நந்தினி அவஸ்தையாக நெளிய, "ப்ளீஸ் நந்தினி.. சொல்லு.." அசோக் அவளை கட்டாயப் படுத்தினான்.


 
"ஆஆஹ்.. அதை எப்படி சொல்றது..? எ..எனக்கு.. எனக்கு உன்னை பாத்தா அந்த லவ் ஃபீலிங்கே வரலை.." "அதான் ஏன்னு கேக்குறேன்..?" "யூ டோன்ட் லுக் மேன்லி..!! ஓகே..?" நந்தினி பட்டென சொல்லி விட, அசோக் அதிர்ந்து போனான். நம்பமுடியாமல் நந்தினியின் முகத்தையே திகைப்பாய் பார்த்தான். அவனுடைய வாய் குழறியது. "ந..நந்தினி.." "உன் ஃபேஸ்.. உன் ஃபிஸிக்.. உன் நடை.. உன் பேச்சு.. உன்னோட சாஃப்ட் நேச்சர்.. எல்லாத்துலயுமே ஒரு பொம்பளைத்தனம்தான் தெரியுது.. ஒரு மேன்லினஸே இல்ல..!! உ..உன்னைப் பாத்தா எந்தப் பொண்ணுக்குமே லவ் வராது அசோக்..!!" நந்தினி படபடவென சொல்ல, அசோக் அப்படியே இடிந்து போனான். இப்போது அவனுடைய கண்களில் கொஞ்சம், கொஞ்சமாய் நீர் தேங்க ஆரம்பித்தது. நந்தினியின் முகத்தையே ஏக்கமாக பார்த்தவன், பரிதாபமாக கேட்டான். "அ..அப்போ நான் ஆம்பளையே இல்லைன்னு சொல்றியா நந்தினி..?" "ப்ச்.. நான் அப்படி சொல்லலை.. அந்த மாதிரி நீ நடந்துக்கலைன்னுதான் சொல்றேன்..!!" நந்தினி வெறுப்பாக சொல்ல, அசோக்கின் கண்களில் இருந்து பொலபொலவென நீர் கொட்ட ஆரம்பித்தது. துடிதுடித்த உதடுகளை பற்களால் அழுத்தி கடித்துக் கொண்டான். அவனுடைய கண்களில் கண்ணீரை பார்த்ததும், நந்தினி இப்போது சற்று பதறிப் போனாள். தன்னுடைய குரலில் மென்மையை குழைத்துக் கொண்டு சொன்னாள். "ஹேய்.. அசோக்.. நான் உன்னை ஹர்ட் பண்றதுக்காக சொல்லலை..!! ப்ளீஸ்.. அண்டர்ஸ்டாண்ட் மீ..!! ப்ச்.. இதுக்குத்தான் நான் சொல்ல மாட்டேன் சொல்ல மாட்டேன்னு சொன்னேன்.. நீதான் கேட்கலை..!! ப்ளீஸ் அசோக்.. அழாத.. நான் சொன்னது உன்னை ஹர்ட் பண்ணிருந்தா.. ஐம் ரியல்லி வெரி ஸாரி..!!" "ம்ம்ம்... அதுலாம் ஒண்ணுல்ல.." மூக்கை உறிஞ்சிக்கொண்ட அசோக், புறங்கையால் கண்களை துடைத்துக் கொண்டான். "ஸா..ஸாரி அசோக்.." "ப..பரவால நந்தினி.. நீ எதுக்கு ஸாரி கேக்குற..? நீ சொன்னதுல எந்த தப்பும் இல்ல..!! நீ ஒன்னும் அதுக்காக ஃபீல் பண்ணாத..!! சரி.. உனக்கு டைமாச்சு.. நீ கெளம்பு..!!"


"அ..அசோக்.." "கெளம்பு நந்தினி..!! ஐ விஷ் யூ ஆல் சக்சஸ் இன் யுவர் லைஃப்..!! பை..!!" அசோக் இறுக்கமான குரலில் சொல்ல, நந்தினி மெல்ல சேரில் இருந்து எழுந்துகொண்டாள். ஒரு மாதிரி வெறித்த பார்வை பார்த்துக் கொண்டிருந்த அசோக்கையே, சில வினாடிகள் பாவமாய் பார்த்தாள். அப்புறம் 'பை அசோக்..' என்று மெல்லிய குரலில் சொல்லிவிட்டு, திரும்பி நடந்தாள். அசோக்கோ உணர்ச்சியற்ற ஜடம் மாதிரி அங்கேயே அமர்ந்திருந்தான். சர்வர் பையன் வந்து வைத்து விட்டு சென்ற, மில்க் ஷேக்குகள் இரண்டிலும் ஈ மொய்ப்பதையே வெகுநேரம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான். அப்புறம் அதை தொட்டுக் கூட பார்க்காமல், பில்லுக்கு பணம் கொடுத்துவிட்டு வெளியே வந்தான். அசோக் ஹாஸ்டலை அடைந்தபோது, ஹாஸ்டலின் கீழ்த்தளம் ஒரே கூச்சலும், கும்மாளமுமாய் இருந்தது. எக்சாம்கள் எல்லாம் முடிந்து போன சந்தோஷத்தை, அதற்குள்ளாகவே சிலர் பீர் குடித்து கொண்டாட ஆரம்பித்திருந்தார்கள். ஸ்பீக்கர்களில் ஒலித்த விஜய் பாட்டுக்கு, லுங்கியுடன் குத்தாட்டம் போட்டுக் கொண்டிருந்தார்கள். யாரோ ஒரு பையனை நான்கைந்து பேர் விரட்டி விரட்டி அடியை போட்டார்கள். அவனும் சிரித்துக்கொண்டே அவர்களிடம் அடி வாங்கினான். ஒரு சிலர் ஊருக்கு கிளம்பிக் கொண்டிருந்தார்கள். 'பாக்கலாம்டா மச்சான்..' என்று பார்ப்பவர்களை எல்லாம் கட்டிப் பிடித்துக் கொண்டிருந்தார்கள். சிலர் பிரிவை தாங்க முடியாமல் அழுதார்கள்.
ஒவ்வொருவரையும் தலையை திருப்பி திருப்பி பார்த்தவாறு, மொத்தக் கும்பலுக்கும் நடுவே அசோக் பரிதாபமாக நின்றிருந்தான். யாருமே அவனை கண்டுகொள்ளவில்லை. அவனுடைய கண்களில் அவ்வப்போது நீர் வடிவதும், அதை அவன் புறங்கையால் துடைத்துக் கொள்வதும்.. அதைக்கூட யாருமே கவனித்தார்கள் இல்லை..!! சுற்றி இருப்பவர்கள் அனைவருமே சந்தோஷமாக இருக்க, தான் மட்டும் அந்தக் கூட்டத்தில் இருந்து தனித்து விடப்பட்டதை வேதனையுடன் உணர்ந்தான்..!! அவனுடைய நெஞ்சு குமுறியது.. உதடுகள் விம்ம, கண்களில் கண்ணீர் பொங்கியது..!! 'ஏன்டா உங்க யாருக்குமே என்னை புடிக்க மாட்டேன்னுது..??' என்று அசோக்கிற்கு சத்தம் போட்டு கத்த வேண்டும் போலிருந்தது..!!

No comments:

Post a Comment