Saturday, August 2, 2014

சங்கீதா - இடை அழகி 76


வீட்டினுள்ளே நிர்மலாவும் பசங்களும் இருந்தார்கள். சங்கீதா வந்தவுடன் அவளது நலனை விசாரித்து விட்டு அங்கிருந்து கிளம்பினாள் நிர்மலா. குளித்துவிட்டு சூடாக காபி போட்டு குடித்துக் கொண்டு அவளது ரூமின் ஜன்னலோரம் அமர்ந்து மாலை நேர மஞ்சள் வெயிலையும், மேகங்களையும் ரசித்துக் கொண்டே ராகவ்கு ஃபோன் செய்தாள் சங்கீதா.
“ஹலோ…” “ஹ்ம்ம், சொல்லுடா…. I am sorry, காலைல உன் கிட்ட சரியா பேச முடியலடா.” “its okay, பேசுற நிலைமையில நீ இல்ல… அது எனக்கு நல்லா புரிஞ்சிது. இப்போ கொஞ்சம் ரிலாக்ஸ்டா இருக்கியா?” – அவனது குரலில் ஒரு வித ஹீலிங் டச் இருந்ததை உணர்ந்தாள் சங்கீதா. “ஹ்ம்ம்..” “என்ன ஆச்சு? மனசுல ஏதாவது இருந்தா கொட்டிடு… உள்ள வெச்சிகாத.” “ஸ்ஷ்…. ஸ்ஹா….” – மீண்டும் மெலிதாக அழத் தொடங்கினாள். “எனக்கு… எனக்கு என் வாழ்க்கைல உண்மையான நிம்மதியும், சந்தோஷமும், யார் கிட்ட கிடைக்கும்னு கடவுள் தெளிவா காமிச்சிட்டார் ஆனா கடந்த காலத்துல சூழ்நிலையால எனக்கு வேற வாழ்க்கை அமைஞ்சிடுச்சி. அப்படி இருந்தும் என் மனசுல உண்மையான அன்பையும் காதலையும் காமிக்குற உன்னை இழக்க முடியல, அதே சமயம் குடும்பத்துல பொருப்புள்ளவளா குமார் இருக்குற நிலையில எந்த முடிவுக்கும் வர முடியல. முதல்ல குமார் ஒரு நல்ல நிலைமைக்கு வரணும் அதுக்கப்புறம் அவனுக்கு எல்லாத்தையும் எடுத்து சொல்லி புரிய வெக்கலாம்னு இருக்கேன்.” “ஒகே ஒகே…. first ரிலாக்ஸ் ப்ளீஸ்…. நீ முதல்ல உன் மனசையும் உடம்பையும் பலமா வெச்சிக்க. அப்போதான் எல்லாத்தையும் சரியா யோசிக்க முடியும்.” “ஹ்ம்ம்…” “வாழ்க்கைல சில நேரத்துல சின்ன சின்ன சந்தோஷங்கள் நம்ம மனசுக்கு தேவை. அதுதான் பெரிய நிம்மதியைக் குடுக்கும். அதை நீ ஏற்கனவே அனுபவிச்சி இருப்ப. இருந்தாலும் உனக்கு இன்னொரு தடவ சொல்லுறேன். அந்த வகையில் உனக்கு இன்னைக்கி ஒரு சின்ன சந்தோஷம் குடுக்கலாம் னு இருக்கேன். ” “ஹா ஹா.. என்ன சந்தோஷம் டா?” – கடந்த 48 மணி நேரத்தில் இப்போதுதான் முதலில் ராகவின் சரா மெதுவாக சிரிக்க ஆரம்பித்தாள். “இன்னைக்கி என்ன special னு தெரியுமா?” “தெரியலடா… சொல்லு….” – அவள் குரலில் ஒரு சின்ன சந்தோஷம் தென்பட்டது. “ஸ்நேஹா கிட்ட நான் ஒன்னு குடுத்து இருக்கேன். அதைப் பாரு. பார்த்துட்டு எனக்கு ஃபோன் பண்ணு.” – என்று சொல்லிவிட்டு கட் செய்தான். “ஸ்நேஹா….” – ராகவ் ஃபோன் வைத்தவுடன் அழைத்தாள். “என்னமா?…”
“ராகவ் மாமா ஏதாவது கொடுத்தாரா உன் கிட்ட?” – சங்கீதா கேட்டவுடன் அந்த பிஞ்சு முகத்தில் அப்படி ஒரு சிரிப்பு. உடனே ஓடிப் போய் அவளது பொம்மைகள் கூடையில் இருந்து ராகவ் குடுத்த பரிசைக் கொண்டு வந்து குடுத்தாள். gift wrap செய்யப் பட்டு இருந்தது. பிரித்துப் பார்த்தாள் சங்கீதா. “box திறந்தவுடன் “Happy birthday to you…… Happy birthday to you…… Happy birthday to dear sara…. Happy birthday to you……” என்று மென்மையான சத்தத்தில் பாட்டு பாடியது அந்த வாழ்த்து அட்டை. – இதைப் பார்க்க பார்க்க ஆழ் மனதில் ராகவை அநியாயத்துக்கு மிஸ் பண்ணுவதை உணர்ந்தாள் சங்கீதா. கண்களில் சந்தோஷத்தில் கட்டு படுத்த முடியாத கண்ணீர் துளிகள் எட்டிப் பார்த்தது. அந்த அட்டையை மீண்டும் மீண்டும் மூடியும் திறந்தும் அந்த ” Happy birthday to you…… ” பாடலைப் பாட வைத்து ரசித்திருந்தாள். நெஞ்சோடு அந்த வாழ்த்து அட்டையை அழுத்தி வைத்து கண்களை மூடி மெளனமாக மனதுக்குள் ” I love you so so much da my sweet rascal, I miss you very badly…. ஸ்ஷ்.. ஸ்ஷ்” சந்தோஷமும் கண்ணீரும் கலந்து பொங்கியது சங்கீதாவுக்கு. உடனடியாக தனது phone எடுத்து ராகவிடம் பேசலாம் என்று எண்ணியவளுக்கு ஒரு “Incoming call” வந்தது. எடுத்து அட்டென்ட் செய்தாள்.. “ஹலோ..” “Mrs.Sangeetha தானே பேசுறது?” “ஆமா சொல்லுங்க…” “உங்க ஏரியா இன்ஸ்பெக்டர் பேசுறேன்மா..” “சொல்லுங்க சார்.. என்ன விஷயம்?” “சாரி மேடம், hospitalல உங்க வீட்டுகாறரை யாரோ கொலை செஞ்சிட்டாங்க….” நல்ல இருட்டில் அடிக்கும் காற்றுக்கு மரங்களின் இலைகள் சலசலவென அசையும் சத்தம் ஹாஸ்பிட்டலின் சுத்துபுற நிசப்தத்தை அமைதியாய் ஜெய்த்துக் கொண்டிருந்தது. வேகமாகவே வந்தாலும் வயதான பெரியவர் இருமுவதுபோல இருந்தது ஹாஸ்பிட்டலில் போலீஸ் ஜீப் நின்றபோது.. ஒரே ஒரு கான்ஸ்டபிள் மட்டும் வார்டன் டிரஸ்ஸில் ஒருவன் காம்பெளண்ட் சுவரை ஏறுவதை கவனித்தார்.. “உய்ங்…. உய்ங்….” என்று விசில் சத்தம் குடுத்துக்கொண்டே அவனின் காலில் தனது லத்தியை விசிறி எரிய அவனது முழங்காலில் அது நல்ல அடியைக் குடுத்திருக்க வேண்டும்… சற்று சறுக்கியது அவனுக்கு.. இருப்பினும் இன்னும் முயற்சி செய்து ஏறினான்.. கான்ஸ்டபிள் அவனை நெருங்கினார்…. இன்னும் வேகமாக முயற்சி செய்தான்…. அவர் கிட்டத்தட்ட நெருங்கி விட்டார்… வேறு வழி ஏதும் இன்றி தன் இடுப்பில் இருந்து ஒரு சிறிய பிஸ்டலை எடுத்து கான்ஸ்டபிள் காலில் சுட்டுவிட்டு முழு பலத்தையும் போட்டு அந்த சுவரின் மீது எரி தப்பித்து விட்டான்…. உடன் இருந்த இரண்டு கான்ஸ்டபிள்களில் ஒருவர் காயம் அடைந்தவரை நோக்கி எழுப்பினார்… இன்னொருவர் ஹாஸ்ப்பிட்டல் வளாகத்துக்கு வெளியே சென்று அவனை துரத்த ஓடினார் IOFI வளாகத்துக்குள் பர்சனல் வி.ஐ.பி லாஞ்சின் உள்ளே “ஐ வில் ஆல்வேஸ் லவ் யூ” என்ற ஆங்கில வெஸ்டர்ன் மியூசிக் மிருதுவான சத்தத்தில் மனதை வருடும் விதம் ஓடிக்கொண்டிருக்க அதை ஹம் செய்தபடி சோஃபாவில் ஃபோனும் கையுமாக சாய்ந்திருந்தான் ராகவ்…. அவன் சற்று அயர்ந்திருந்தான் என்பது அவனது கண்களில் தெரிந்தது, இருப்பினும் சங்கீதாவின் பிறந்தநாள் பரிசாக தான் வழங்கிய க்ரீட்டிங் கார்டை சங்கீதா பார்த்திருப்பாளா என்று எண்ணி மனதுக்குள் பரவசப்பட்டான். “என்னுடைய சரா இந்நேரம் பார்த்திருப்பாளா, சந்தோஷப் பட்டிருப்பாளா, பார்த்தப்போ என்ன நினைச்சி இருப்பா?” என்று மனதுக்குள் எண்ணி அங்கும் இங்கும் வளாத்தினான். அவளுடைய அழைப்புக்காக ஏங்கினான், முகத்தில் நான்கு நாட்கள் ஷேவ் செய்யாத தாடி எட்டிப்பார்த்தது. அவனுக்காகவே செய்தது போல ஒரு கிரீம் நிற லெனின் ஷர்ட் அணிந்து அதில் முதல் மூன்று பட்டன்களை அகற்றிவிட்டு ரோமம் படர்ந்த மார்பு தெரியும்விதம் அந்த அறையின் கண்ணாடி முன்பு அவனது நெஞ்சில் “சரா” என்று பச்சை குத்திய இடத்தைப் பார்த்தபடி அவனது தலை முடியை கலைத்துவிட்டு, ஜில்லென்ற நீரை முகத்தில் அடித்தான். எப்போதும் இல்லாதது போல் இன்று அவனுக்கே அவனது முகம் இன்னும் வசீகரமாக தெரிந்தது. அவனது மணம் முழுக்க சரா தான் குடி இருந்தாள். “அவ பார்திருப்பாளா? ஏன் இவளோ நேரம் எடுக்குறா கூப்பிடுறதுக்கு” என்று எண்ணுகையில் “வேக்….வேக்….” அவனது செல் ஃபோன் சினுங்கியது. “Mr.வாத்து calling” என்று ஃபோன் ஸ்கிரீனில் வந்தது. அதைப் பார்த்து ஆச்சர்யப்பட்டான் ஆனால் இந்நேரம் அவன் இந்த ஃபோன் கால் எதிர் பார்க்கவில்லை.
“டேய் வாத்து.. எப்படிடா இருக்கே? உனக்கு நேத்துதான் மெயில் போட்டேன் அதுக்குள்ள பார்த்துட்டு ஃபோன் பண்ணுற? அவ்வளோ சுருசுருப்பாய்டியாடா நீ? சூப்பர் டா..” – ராகவ் தன் வாழ்கையில் அதிகம் நம்பும் பள்ளி ஸ்நேகிதன் கார்த்திக்கிடம் மிகவும் உற்சாகமாய் பேசினான். “டேய் எனிமி, ஃபிரண்ட்ஸ் விஷயத்துல நான் உன்னை மாதிரி சோம்பேறி கிடையாது டா.. அப்புறம் தயவுசெய்து என்னை கார்த்திக்னு கூப்பிடுடா, அந்த வாத்தை விட்டு தொலைய மாட்டியா?….” – அப்பாவியாக பேசினான் கார்த்திக். “நீ என்னிக்குமே வாத்துதான்.. சரி எப்போ வர, அதை சொல்லு முதல்ல…” “உனக்கு ஏதோ பிரச்சினை இருக்கு, மணசு சரி இல்ல.. அப்படின்னு சொன்னியே, என்னடா ஆச்சு?” “எல்லாம் நேர்ல சொல்லுறேன் டா, உன்னை பார்க்கணும் மச்சி.. சீக்கிரம் கிளம்பி வா.” “அடுத்த வாரம் வந்துடுறேன் டா… எனக்கும் என்னோட வர்ஸ்ட் எனிமிய பார்த்து ரொம்ப நாள் ஆச்சு..” “ஹா ஹா… இன்னும் நீ என்னை எனிமியா தான் பார்க்குற…. இல்ல..” “கண்டிப்பாடா.. மவனே நீ செஞ்ச காரியங்களுக்கு என்னதான் நீ என் பெஸ்ட் ஃபிரண்டா இருந்தாலும் எனக்கு என்னிக்குமே நீ என் எனிமிதான்.” “ஹா ஹா…. சரி சரி சீக்கிரம் வந்து சேறு…. இந்த ஒரு நாள் ரெண்டு நாள் வேலையெல்லாம் வேணாம் ஒரு ரெண்டு மூணு வாரம் என்னோட இருந்துட்டு போ..சரியா?” “ஆமா…. அப்படியே ஒபாமா கூட ஒக்காந்து ஒப்பந்தம் பண்ணுற அளவுக்கு பிஸி பாரு… ஏண்டா நீ வேற…… நான் வெட்டி ஆபிசர் தான்… சீக்கிரம் வரேன்..” “ஹா ஹா… சரி டா நான் வெக்குறேன்…” “ஏன் ஏதாவது ஃபிகர் கூப்பிடுதா?” “பரவாயில்லையே.. டேய் வெண்ண, உனக்கு இந்த விஷயத்துல மட்டும் மூளை இருக்குடா..” “என்னதான் CEO ஆனாலும் ஃப்ரண்ட் கிட்ட பேசும்போது ஒருத்தன் ஃபோன் கட் பண்ணுறான்னா அது வேற எதுக்கு இருக்கபோகுது? நீ நடத்து, நான் வெக்குறேன். பாய்..” பலரால் ராகவைப் புரிந்துகொள்ள முடியாது. முன்கோவம், கர்வம் உடையவன், திமிர் பிடித்தவன், கெட்டவன், முரடன், என்று ஒவ்வொருவரும் ஒரு ஒரு விதத்தில் அவனை முதுகுக்கு பின்னால் சாடுவார்கள். ஆனால் மற்றவர்கள் என்ன சொன்னாலும் அதை கேட்டு உள்ளுக்குள் கஷ்டப்படுவதைக் காட்டிலும் ஒரு வித சந்தோஷத்தில் மிதப்பான்.. காரணம் மற்றவர்கள் தொடர்ந்து நம்மை ரகசியமாக திட்டுகிறார்கள் என்றால் நாம் ஏதோ தொடர்ந்து சாதித்துக் கொண்டே இருக்கிறோம் என்று அர்த்தம். இப்படி பலரும் அவனை சுத்தி இருக்கையில், அவனை எந்த ஒரு ஈகோவும், பொறாமையும் இன்றி அவனது ஆழ் மனதை நன்கு புரிந்து அவன் குடும்பத்தில் உள்ளவர்களைக் காட்டிலும் அவன் மனதில் ஆதிக்கம் செலுத்தியவள் சந்கீதாதான். ஆனால் அதற்கு முன்பு அவன் மனதில் ஆழமான நம்பிக்கையை சம்பாதித்திருக்கும் ஒரே நல்ல நண்பன் கார்த்திக் மட்டும்தான். கார்த்திக் ஃபோன் வைத்தவுடன் ராகவின் விரல்கள் உடனடியாக அவனது சாராவின் ஃபோன் நம்பர்களை அழுத்தி டிஸ்கோ டான்ஸ் ஆடியது…. “ஹலோ..” – சராவின் வார்த்தைகளை நோக்கி ஆர்வமாக பேச ஆரம்பித்தான்.. “ஹலோ, யார் பேசுறது?” – ஸ்நேஹா பாவமாக சற்று பயந்த குரலில் கேட்டாள்.. “ஏய் ஸ்நேஹா, என்னடா ஆச்சு? ஏன் என்னமோ ஒரு மாதிரி பேசுற? நான் ராகவ் பேசுறேன்..” “மாமா அது வந்து….” – லேசாக விசும்பினாள் ஸ்நேஹா. அப்போது அருகில் சங்கீதா பலமாக அழும் சத்தம் ஃபோனில் கேட்டது ரகாவ்கு. “ஏய் என்னடா ஆச்சு, ஏன் அம்மா அழுவுறாங்க?” – ராகவ் பதட்டத்துடன் கேட்டான்.. “ஒரு ஃபோன் வந்துச்சி மாமா, அதுக்கப்புறம் அம்மா அப்படியே தரையில உட்கார்ந்துடாங்க, எந்திரிக்கவே இல்ல, இன்னும் அழுவுறாங்க..” “ஃபோன் குடு அம்மா கிட்ட..” “ச…சங்கீதா….அழாதடா… என்ன ஆச்சு….” – ராகவ்கு என்ன ஆச்சு என்ற பதட்டம்… ராகவ் குறள் கேட்டவுடன், மறுமுனையில் சங்கீதா பலமாக அழ தொடங்கிவிட்டாள். “ஏய்.. என்ன ஆச்சுடா? ஏன் அழுவுற? நான் இருக்கேன் ஏதுவா இருந்தாலும் சொல்லு என்ன ஆச்சு?” – பேசிக் கொண்டே காலணிகளை மாட்டி ஷர்ட் பட்டன்களை போட்டுக் கொண்டு சங்கீதாவின் வீட்டுக்கு கிளம்ப தயாரானான். “ராகவ்….” (அவளுக்கு குறள் உடைந்தது) “என… என்.. ஸ்ஷ்.. ஸ்ஷ்.. (பேச முடியாமல் விடாப்படியாக மூச்சு வாங்கி வாங்கி கட்டுப் படுத்த முடியாமல் அழுதாள் )எனக்கு பயமா இருக்குடா..” “ஃபர்ஸ்ட் அழுவுறதை நிறுத்து, என்ன ஆச்சு.. அதை சொல்லு..” – ராகவ் படபடப்புடன் கேட்டான். (அழுகையும், இழுத்த வார்தைகளுமாய் பேசினாள் சங்கீதா) ஸ்ஷ்…. ஹாஸ்பிடல்… ஸ்ஷ்.. கு….மார கொல பண்ணிட்டாங்களாம் ராகவ்வ் ஸ்ஷ்…ஆஹ்..மா.. ஸ்ஷ்ஆஆ…( ராகவ் பேசுவது அவளுக்கு தெம்பாக இருப்பதால் இன்னும் அழுகையின் சத்தம் உயர்ந்தது அவளுக்கு.)
“என்ன சொல்லுற? உனக்கு யார் சொன்னாங்க?” “ஸ்ஷ்ஷ்… போ… போலீஸ் ஃபோன் பண்ணி சொன்னார் டா…. எனக்கு என்னை சுத்தி என்ன நடக்குதுன்னு தெரியல டா..( மீண்டும் அழ தொடங்கினாள்.) குமாரை ஏன் கொலை செய்யணும்?.. அடுத்து என்னையும்….” – சங்கீதா பேசி முடிப்பதற்குள் ராகவ் தடுத்து நிறுத்தினான்.

No comments:

Post a Comment