Monday, August 4, 2014

சங்கீதா - இடை அழகி 82


“டேய் மச்சி நீ சொல்லுறதெல்லாம் நிஜமாடா?…. தனியா ராத்திரி இருட்டுல ஒருத்தன் கூட ரோட்டுல சண்டை போட்டியா?.. நீ அவளோ பெரிய அப்பாடக்கரா டா..” கார்த்திக் நம்ப முடியாமல் புலம்பினான்.. “யாருடா அவன்?… யார சந்தேகப்பட்ட?… இப்போ ஸ்டேஷன்ல இருக்கிறது யாரு….” – பதட்டத்துடன் கேட்டாள் சங்கீதா.. “இதைப்பாறு..” என்று தன் செல் ஃபோனில் அந்த ஆசாமியின் ஃபோட்டோவை காமித்தான்.. சங்கீதா அதிர்ச்சியாக பார்த்தாள்.. அது வேறு யாருமில்லை, ஒரு காலத்தில் அவளிடம் பப்ளிக்காக அறை வாங்கிய சூப்பர்வைசர் சம்பத் தான்..
“ஹேய்… இந்த ராஸ்கல் எதுக்குடா சம்மந்தபட்டிருக்கன்..” என்று சங்கீதா கேட்க.. “தெரியலையே.. எது எது எதுக்கு நடக்குது, யாரெல்லாம் சம்மந்த பட்டிருக்காங்கன்னு ஒரு ஒரு முதலையா பிடிக்க பிடிக்கத்தான் தெரியவரும்….” என்றான் ராகவ்.. அனைவரும் ஒரு விதமான சீரியஸ்னஸுடன் காரின் உள்ளே அமர்ந்திருக்க.. கார்திக் மெதுவாக “ஹாஹ்… ஹா” என்று சிரித்தான்.. “எதுக்கு சிரிக்கிற?..” – சஞ்சனா உரிமையாக முறைத்து கேட்டாள்.. “இல்ல… நம்ம பய ஏதோ யோசனையில வேகமே இல்லாம வண்டி ஓட்டிட்டு இருக்கான்.. அப்போ ஒன்னு நியாபகம் வந்துச்சி.. சிரிச்சேன்..” என்று சொல்லி சிரித்தான் ராகவ்.. “என்ன யோசிச்ச?..” – ஸ்டீரிங் பிடித்துக்கொண்டு திரும்பி பார்க்காமல் கேட்டான் ராகவ்…. ப்ச்…. அது ஒன்னும் இல்லடா.. எக்ஸ்பில யாரோ மாதவன்னு ஒருத்தன் கதை எழுதுறன்…. அவன் கூட அப்டேட் போட்டுட்டான்.. ஆனா நீ ஆக்ஸலரேட்டர் அழுத்தி வேகம் குடுக்குறதுக்குள்ள நீ புடிக்க வேண்டியவன் லேட் ட்ரெயின் பிடிச்சி கூட போய்டுவான் போல இருக்கு… நீயாடா மச்சி வண்டிய ஓட்டுற… சும்மா மிதிடா நல்லா.. ரைட் ரைட்… என்று விசில் குடுத்து நண்பனை உற்சாகப்படுதினான் கார்த்திக்…. “என்னது அது எக்ஸ்பி?…. எந்த மாதவன்?… என்ன ஒலர்ரான் இவன்..?” – என்று சஞ்சனாவும் சங்கீதாவும் ஒன்னும் புரியாமல் குழம்பினார்கள்..! “அதெல்லாம் உங்களுக்கு புரியாது…. அது எங்களுக்கு ஒரு தனி உலகம்.. ஹா ஹா..” என்று கார்த்திக் சிரிக்க…. பலவிதமான சிந்தனைகளுக்கும் டெண்ஷனுக்கும் மத்தியில் கார்த்திக் அடித்த கமெண்ட்டையும், அதை கேட்டு சஞ்சனாவும் சங்கீதாவும் குழம்புவதைப் பார்த்து கூலாக சிரித்துக் கொண்டே டாப் கியரில் ஆக்ஸலரேட்டரை மொத்தமாய் அழுத்தினான் ராகவ்.. அசுரத்தனமான வேகத்தில் ரயில்வே ஸ்டேஷனை நோக்கி ‘உர்ர்ர்ர்ர்ர்ர்ர்’ என்று எதிர் திசை காற்றை கிழித்துக் கொண்டு சிறுத்தையை போல் பாய்ந்தது ராகவின் BMW கார்….டிக் டிக்… என்று நேரம் பத்து மணியை தொட அந்த பழைய கடிகாரத்தின் முட்கள் சற்று சோம்பேறியாக சுத்திக்கொண்டிருந்தது…. அப்போது “உன்னை அறிந்தால்… நீ உன்னை அறிந்தால்… உலகத்தில் போராடலாம்..” என்று அந்த இடத்தில் ரேடியோ மட்டும் உற்சாகமாக பாடிக்கொண்டிருக்க “யாராவது அத கொஞ்சம் கம்மி பண்ணுங்கயா….” என்று தலையில் கை வைத்து ஏதோ வருத்தி எடுக்கும் சிந்தனையில் ஆழ்ந்திருக்க.. “உயர்ந்தாலும் தாழ்ந்தாலும், தலை வணங்காமல் நீ வாழலாம்..” என்று மீண்டும் சத்தம் குறையாமல் பாடிக்கொண்டிருந்தது.. “யோவ்.. யாராவது நிறுத்துறீங்களா? இல்ல அந்த எழவ தூக்கி போட்டு உடைக்கட்டுமா?”…. என்று இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் அடித்தொண்டையில் இருந்து கத்தினார்…. “நல்ல பாட்டுதானே அதுக்கு ஏன் இந்த மனுஷன் இப்படி கத்துறாரு….” என்று முணுமுணுத்துக்கொண்டே ஹெட் கான்ஸ்டபிள் அந்த ரேடியோவில் சத்தத்தை திருகி குறைத்தார்.. அப்போது “ட்ரிங்…. ட்ரிங்….” என்று மேஜையின் ஓரத்தில் உள்ள ஃபோன் ஒலித்தது…. “ஹலோ” – கணீர் குரலில் பேசினார் ராஜேந்திரன்.. “ஹலோ.. போலீஸ் ஸ்டேஷன்?” – ஹாஸ்பிட்டலில் இதற்கு முன்பு கேட்ட அதே குரல் இப்போது ராஜேந்திரனுக்கு கேட்டது.. “ஆமா… போலீஸ் ஸ்டேஷன் தான்…. நீ… அன்னிக்கி…” – என்று ராஜேந்திரன் பேசும்போது குறுக்கிட்டான்.. “சார் நான் யாருங்குறதை அப்புறம் பார்த்துக்கலாம்…. அன்னிக்கி நீங்க ஹாஸ்பிட்டல்ல தப்ப விட்ட ஆளு இன்னைக்கி ரயில்வே டேஷன்ல இருக்கான்..” – படபடப்புடன் பேசினான் அவன்… “நீ யாருங்குறதை முதல்ல சொல்லு….” – இன்ஸ்பெக்டர் எரிச்சலுடன் கத்தினார்… “இப்போ உங்களுக்கு மேல விவரம் சொல்லவா இல்லை ஃபோன் வெச்சிடவா?” – பயந்த குரலில் சத்தம் குறைவாகவும் அதே சமயம் கோவமாகவும் பேசினான்.. “ஏய்.. இரு இரு… சொல்லு விஷயம் என்ன?” – ஒரு புறம் எப்படியாவது அவனை இன்னும் கொஞ்சம் பேச விட்டு அவனது குரலை டாப் செய்ய அருகே உள்ள கான்ஸ்டபிளை அவசரமாக கையசைத்து சத்தம் இல்லாமல் அமைதியாய் அழைத்து செய்கை காட்டினார்…. “அந்த ஆளு ப்லாட்ஃபார்ம் எட்டுல ஒரு எஸ்.டி.டீ பூத் கிட்ட இருக்கான். அவன் கைல ஒரு பொட்டி இருக்கு..கூடவே ஒரு கேமரா வெச்சிருக்கான்….” – பேச்சுக்கு இடையே அதிகம் மூச்சு வாங்கியது அவனுக்கு.. “முதல்ல நீ யாருங்குறது…” – இன்ஸ்பெக்டர் பேசி முடிப்பதற்குள் குறுக்கிட்டான்.. “சார்.. அதான் வேணாம்னு சொல்லுறேன்ல.. நான் வெக்குறேன்…” – இந்த முறை நன்றாகவே கத்தினான்.. “இரு இரு.. நான் கேக்கல.. கேக்கல… ஹலோ.. இருக்கியா?.. ஹலோ… ஹலோ….” – இன்ஸ்பெக்டரின் கடைசி ஹலோவுக்கு குரல் உயர்ந்தது.. “சீக்கிரம் சொல்லுங்க…” – பதட்டம் இன்னும் அதிகம் ஆனது அவன் குரலில் “நீ யாருன்னு சொல்லலைன்னா பரவாயில்ல… ஆனா நாங்க தேடுற ஆள் அவந்தான்னு எப்படி தெளிவா சொல்லுற?” – கோவத்தை அடக்கி அமைதியாக பேச முயற்சித்தார் ராஜேந்திரன்… “அவன் ஸ்டேஷன் உள்ள போறதுக்கு முன்னாடி ஒரு பப்ளிக் டாய்லட் கிட்ட ஒரு கருப்பு கவர்ல நீங்க போன தடவ ஹாஸ்பிடல்ல அவனை தப்பிக்க விட்டப்போ போட்டிருந்த வார்டன் டிரஸ்லாம் தூக்கி எறிஞ்சிட்டு போனான்… என்னால அதிகம் பேச முடியாது.. முடிஞ்சா புடிச்சிக்கோங்க…. நா கெளம்புறேன்…” “ஹலோ.. ஹலோ…” கீ.. கீ.. கீ.. கீ….- ஃபோன் துண்டிக்கப்பட்டது… “ச்ச.. என்ன எழவுயா இது…. வாங்கையா..”
ராஜேந்திரன் உடனே ஹெட் கான்ஸ்டபளிடம் என்னென்ன செய்ய வேண்டுமென்று ஜீப் ஏறிக்கொண்டே கைகளை அசைத்து அசைத்து “புரிஞ்சிதாடா வெலக்கென்ன..” என்று கடித்துக்கொண்டே விளக்க “ஆங் ஆங்.. ரைட்..” என்று சுய கெளரவம் எதுவும் பார்க்காமல் அதே சமயம் ஒழுக்கம் தவறாமல் இன்ஸ்பெக்டருக்கு பதில் அளித்துக்கொண்டே பவ்யமாக உடன் சென்றார்…. ஃபோனில் ஹெட் கான்ஸ்டபிள் யார் யார் எங்கெங்கே மஃப்டியில் நிற்க வேண்டுமென்று அவசரமாக சொல்லிக்கொண்டே இருக்க ஸ்டேஷன் வந்தது.. ஒரு கான்ஸ்டபிள் சிகப்பு நிற டீ ஷர்ட் மற்றும் வேஷ்டியில் நின்றுகொண்டு சாதாரணமாக பீடி பிடித்துக்கொண்டிருந்தார்…. அவரிடம் முன்கூட்டியே தகவல் சொல்லியாகிவிட்டது.. ஸ்டேஷன் உள்ளே டூ வீலர் மற்றும் சைக்கிள் நிறுத்தும் இடத்தில் ஒரு ஐந்து அடி சுவர் தடுப்பு இருந்தது.. அங்கே குனிந்து மெதுவாக ராகவ்கு ஃபோன் செய்தார் ராஜேந்திரன்.. “ஹலோ ராஜேந்திரன்.. சொல்லுங்க..என்ன விஷயம்..” – சீரியஸாக கவனித்தான்.. ராகவ்…. “சார் நீங்க அடையாளம் சொன்ன ஆளை கண்காணிச்சோம், அவன் இப்போ ரயில்வே ஸ்டேஷனில் இருக்கான். கைல ஒரு பெட்டியும் கூடவே ஒரு சின்ன வீடியோ கேமராவும் இருக்கு. கூடவே இன்னொரு முக்கிய விஷயம் சொல்லணும்…” “சொல்லுங்க….” “அன்னிக்கி ஹாஸ்பிட்டல்ல எங்க கான்ஸ்டபிள் ஒருத்தனை சுட்டுட்டு ஓடின ஆசாமியோட உருவங்க எல்லாமே இவனோட நல்லா பொருந்துது சார்..” “ரியல்லி ஃபன்டாஸ்டிக்.. நீங்க எல்லா என்ட்ரன்ஸ்லையும் உங்க ஆளுங்கள போட்டுடுங்க.. நான் உடனே கிளம்பி அங்க வரேன்…. அவன் எனக்கு என் கஸ்டடியில வேணும். அப்புறம்…அவன் பார்க்க கொஞ்சம் வாட்டசாட்டமா இருந்தானா?..” “ஆமா சார்…” கண்களை மூடி தீவிரமாக யோசித்தான்..”ஹ்ம்ம்… எனக்கும் அந்த உருவம் பொருந்துது..” “நீங்க எதை சொல்லுறீங்க..” “ஒன்னும் இல்ல நேர்ல வந்து சொல்லுறேன்…” அதன் பிறகு ராகவின் கார் சிறுத்தையை போல சீறிப் பாய்ந்ததெல்லாம் நமக்கு ஏற்கனவே தெரியும்.. சற்று நேரத்துக்கெல்லாம் மீண்டும் ராஜேந்திரன் ஃபோன் செய்தார்.. சொல்லுங்க ராஜேந்திரன்… நீங்க மெதுவா உள்ளே டூ வீலர் சைக்கிள் பார்கிங் இருக்குற இடத்துக்கு வந்துடுங்க…. முடிஞ்ச வரைக்கும் கூட்ட நடமாட்டத்தோட சேர்ந்து முகம் காமிச்சிகாம வந்து சேருங்க… ஒரு நாற்பது அம்பது அடி கடந்து வந்தா எங்க ஆளுங்க சத்தம் குடுக்காம நின்னுட்டு இருப்பாங்க… அங்க வந்து அடையாளம் பார்த்துக்கோங்க… சரி சரி.. நீங்க சொன்ன மாதிரியே வரேன்…
தனது வண்டியை ஸ்டேஷன் உள்ளே கூட நிறுத்தாமல் வெளியே நிறுத்திவிட்டு நால்வருமே தங்களது முகங்களுக்கு தொப்பியோ துணியையோ கட்டிக்கொண்டு ஓரளவுக்கு முகம் தெரியாத விதம் நாலா பக்கமும் பிரிந்து தனித்தனியே இன்ஸ்பெக்டர் சொன்ன இடத்துக்கு சாதாரணமாக சத்தமோ ஆர்பாட்டமோ இன்றி வந்து சேர்ந்தனர்… பார்கிங் என்ட்ரன்ஸ் அருகே பாவமாக ஏதோ கொஞ்சம் பச்சை நிறத்தில் வெளிச்சம் கொடுத்துக்கொண்டிருக்கும் டியூப் லைட் இவர்கள் சேர்ந்தடையும் இடத்தை முக்கியமாக கருதி இருட்டாகவே வைத்திருந்தது.. அனைவரும் ராஜேந்திரனுடன் ஒன்று சேர்ந்தனர்.. “சார்..” – என்று ராகவ் மெதுவாக நெருங்க.. “ஷ்ஷ்.. மெதுவா பேசுங்க” என்று அமைதி படுத்தினார் ராஜேந்திரன்.. “நேரா போய் துப்பாக்கிய காமிச்சி சுத்தி வளைச்சி பிடிக்க வேண்டியதுதானே?….” – சத்தமின்றி ராகவ் ராஜேந்திரனுடன் கேள்வி எழுப்ப…. “எனக்கும் போலீஸ் மூளை கொஞ்சம் இருக்கு சார்….” என்று ராகவை நோக்கி தனது கோவத்தை அடக்கி அதே சமயம் பவ்யமாக பேசினார்…. இடுப்பில் சற்று லூசான பேன்டை மேலே தூக்கிவிட்டு கண்கள் சுருங்க சற்று கோவமாக…. “அதானே… நீங்க உங்க வேலைய பாருங்க சார்…” என்று சொல்லி ராகவை நோக்கி “அவர் போலீஸ் டா… சும்மா குவிஸ் ல உன் பேச்சை கேட்டு நான் அசிங்க பட்ட மாதிரி இங்கே உன் பேச்சை கேட்டு வேல செஞ்சி இங்கே இருக்குற கான்ஸ்டபிள்ஸ் முன்னாடி அவரு அவமானப்படனும்னு பார்க்குரியா?” பேசிக்கொண்டிருக்கும்போது காலில் யாரோ எத்தி உதைப்பதை உணர்ந்து “அம்மே…” என்று கத்தினான்… “சாரி சாரி…” என்றாள் சங்கீதா… வழக்கம் போல பொறுமையே இல்லாமல் போலீஸ் கிட்ட கூட வாதாடுறானேன்னு எண்ணி ராகவின் மீதுள்ள கோவத்தில் ராகவை அடிக்க போக அது கார்த்திக்கின் காலில் பட்டுவிட்டது…. மீண்டும் இடுப்பில் நறுக்கென்று ஏதோ கிள்ளியது போல உணர்ந்தான் “இஸ்… எப்பா…” என்று லேசாக அலறினான்… “அறிவு கெட்ட லூசு பின்னாடி கால் எடுத்து வெக்கும்போது ஏண்டா என் கால நசுக்குற….” என்று சஞ்சனா கொஞ்சம் கடித்தாள்…. “ஊருல இருந்து கிளம்பும்போதே வாசப்படியாண்ட பூனை குறுக்கால ஓடுச்சி… அப்போவே என் அம்மா கூட அடுத்த நாள் கெளம்பி போடான்னு சொல்லுச்சி…. கேக்கல… நான் கேக்கல… யோசிச்சி இருக்கணும்… இந்த எனிமிய நான் பார்க்க வந்திருக்ககூடாதுன்னு அப்போவே யோசிச்சி இருக்கணும்.. தப்பு பண்ணிட்டேன்..” “சார் கொஞ்சம் பேசாம இருக்கீங்களா?” – இன்ஸ்பெக்டர் கொஞ்சம் கடுப்பாகி கார்த்திக்கை நோக்கி பேச…. “உக்கும்.. வீட்டுல நாய் காணாம போச்சுன்னு கம்ப்ளைன்ட் குடுக்க வர்றவங்க கிட்ட நாய் படத்தை பேப்பர்ல விளம்பரம் குடுங்கன்னு சொல்லுற போலீசயெல்லாம் கூட்டிட்டு வந்தா இப்படிதான் டென்ஷன்ல கத்துவாங்க…. இந்நேரம் அவங்க கிட்ட இருக்குற மோப்பம் புடிக்குற நாய கூட்டியாந்திருந்தா கூட அது போய் அவன் ரெண்டு காலுக்கும் நடுவுல இருக்குற பொடலங்காவ கடிச்சி மேட்டர் முடிச்சி இருக்கும்….. இங்கே சும்மா செவுத்துக்கு பின்னாடி கூடி நின்னுக்கிட்டு சவுண்ட் உட்ராறு….” என்று மெளனமாக வானை நோக்கி முணுமுணுக்க.. “என்ன சொன்னீங்க?….” – என்று இன்ஸ்பெக்டர் ஆத்திரமாக கேட்க.. “இன்னைக்கி நீங்கதான் சார் அவனுக்கு எமன்….” என்று சத்தமாக சொடக்கு போட்டு மரியாதையாக அவரைப் பார்த்து சொல்ல.. கொஞ்சம் கார்த்திக்கை முறைத்துக்கொண்டே ராகவ் பக்கம் திரும்பி பேச ஆரம்பித்தார் ராஜேந்திரன்.. “சார்…. அவனை பிடிச்ச பிறகு நீங்க சொல்லுறா மாதிரி உங்க கஸ்டடியில எல்லாம் எங்களால ஃபார்மாலிட்டி படி அவனை ஒப்படைக்க முடியாது சார்…. முதல்ல ஸ்டேஷனுக்கு தான் கூட்டிட்டு போகணும்….” “அய்யோ…. முதல்ல நீங்க அவனை புடிங்க சார்….” – இன்ஸ்பெக்டரை நோக்கி கூலாக கார்த்திக் இதை சொல்ல “ஹி இஸ் ரியலி இரிடேட்டிங் மீ….” என்று தன் லத்தியை கார்த்திக் நோக்கி கான்பித்து ராகவிடம் கடித்துக்கொண்டார் ராஜேந்திரன்…. தயவு செஞ்சி கொஞ்சம் பேசாம இருடா…. என் லைஃப் டா இது – என்று ராகவ் சொல்ல கார்த்திக் கொஞ்சம் அமைதி ஆனான்.. “எட்டாவது பிளாட்ஃபார்மில் ட்ரெயின் வரும்போது எஸ்.டீ.டி பூத்துக்கு முன்னாடி “S5″ கம்பார்ட்மென்ட் நிக்கும் சார்… அப்போ அதுல எங்க ஆள் ஒருத்தன் மஃப்டியில் நிப்பான்.. சாதாரணமா இறங்குற மாதிரி நெருங்கி வந்து அவனை பிடிக்கிற ப்ளான் இருக்கு, அப்போ கீழையும் பூத் கிட்ட ஒரு ஆள் சிகப்பு டீ ஷர்ட்டில் நின்னுட்டு இருப்பான்.. பிடிக்க கஷ்டம் இருக்காது.. அப்படியே தப்பினாலும் அவனை ஸ்டேஷன் என்ட்ரன்ஸ் முன்னாடி பிடிக்க ரெண்டு பேரையும்…., பயணிங்க வெளியே போற எக்சிட் பக்கமும் ரெண்டு பேரையும் போட்டிருக்கேன்.. நீங்க சொல்லுறா மாதிரி எடுத்தோம் கவுத்தோம் னு சொல்லி துப்பாக்கிய தூக்கிட்டு அவன் முன்னாடி போய் நின்னு சினிமாவுல வர மாதிரியெல்லாம் பண்ண முடியாது… எப்படியும் அவன் தப்பிக்க மாட்டான் சார்… நம்புங்க….” – என்று ராஜேந்திரன் பேசும்போது அவரது பேச்சை விடவும் அவரது உடல் மொழி மிகவும் நம்பிக்கை தரும்விதம் இருந்தது ராகவ்கு…. இன்னும் பத்து நிமிடத்தில் ரயில் வருமென்று ஸ்டேஷன் ஸ்பீக்கர்கள் ஒலித்தன… நிமிடங்கள் குறைந்தது…. இன்னும் இரண்டு நிமிடங்கள்தான் பாக்கி… நேரம் வந்து விட்டது… தூரத்தில் இருந்து இன்ஜின் மீதிருக்கும் ஹெட்லைட் வெளிச்சம் தண்டவாளத்தின் மீது படர்ந்து பளபளத்தது… நெஞ்சம் படபடக்க, நெற்றி வியர்க்க… போலீசும், ராகவும், அவன் உடன் இருந்தவர்களும் அவர்களுக்கு பின்னாடி ஒரு கொலையே விழுந்தாலும் திரும்பி பார்க்கபோவதில்லை என்பது போல வைத்த கண் வாங்காமல் அந்த டெலிஃபோன் பூத்தையே பார்த்துக்கொண்டிருந்தனர்…. சம்பத்தும் நீண்ட நேரம் அந்த இடத்தை விட்டு விலகவில்லை… என்ஜின் மெதுவாக நிற்க நேரும்போது ஆமை வேகத்தில் அந்த பூத்தை S1….. S2….. S3…… என்று கம்ப்பார்ட்மென்ட்ஸ் மெதுவாக கடந்து செல்ல S5…. வந்து நின்றது… ராஜேந்திரன் ராகவின் கைகளை லேசாக அழுத்திப் பிடித்தார்… “ஐ குட் சீ மை மேன் இன் தட் கம்பார்ட்மென்ட்….. ஹி வில் கெட் ஹிம்…..” என்று மெதுவாக தன்னம்பிக்கை குரலில் ராகவிடம் பேசினார்….
ராஜேந்திரன் எதிர்பார்த்தது போலவெ மஃடியில் இருக்கும் போலீஸ் சாதாரணமாக ரயிலை விட்டு இறங்கும்போது பார்ப்பவர்கள் யாவருக்கும் அவன் போலீஸ் என்று தெரியாத வண்ணம் இறங்கினான்…. சம்பத் அந்த ரயிலில் பயணம் செய்ய இருந்தான்… இருப்பினும் தன்னை சுத்தி என்ன நடக்கிறதென்று அந்த ரயிலில் இருந்த கூட்டம் இறங்கும்போது கண்காணிக்காமல் இல்லை…. கம்பார்ட்மெண்டில் இருந்து ம்ஃடியில் இறங்கியவன் கீழே இருக்கும்போது பீடி பிடித்துக்கொண்டிருக்கும் போலீசை பார்த்து ஒரு கண நொடி ஏதோ சின்ன செய்கை கொடுக்க… என்ன கெட்டநேரமோ.. அதை சம்பத் பார்த்துவிட்டான்… அவனுக்கும் இதைப் பார்த்ததில் தன்னை சுற்றி ஏதோ நடக்கிறதென்று ஒரு அபாய மணி ஒலிக்க ஆரம்பித்துவிட்டது…

No comments:

Post a Comment