Thursday, January 29, 2015

செக்மேட் - சைபர் கிரைம் திரில் தொடர் - பாகம் - 16


சக்தி, "ஏன் புடவை கட்டி காண்பிக்கணும்ன்னு இருந்தே?" வந்தனா, "நான் எப்பவும் மாடர்ன் ட்ரெஸ் அப்பறம் சுடிதார்தான் போடுவேன்னு நீ நினைச்சுக்க வேண்டாம்ன்னு" சக்தி, "மாடர்ன் ட்ரெஸ், சுடிதார் எல்லாம் பிடிக்கலைன்னு சொன்னேனா?" வந்தனா, "எப்படியும் நீ உங்க அம்மாகிட்ட பேசும் போது நான் என்ன மாதிரி ட்ரெஸ் பண்ணுவேன்னு பேச்சு வரும் ..." சக்தி, "ஸோ மேடம் இப்பவே மாமியார்கிட்ட நல்ல பேர் வாங்கலாம்ன்னு பார்க்கறாங்களா?" வந்தனா, "ஆமா ... " என்றவள் சற்று யோசித்து "ஷக்தி, உங்க அம்மா ஒத்துப்பாங்கதானே?" சக்தி, "அப்படித்தான் நினைக்கறேன். நான் சொல்றதை விட உன்னை ஒரு தடவை நேரில் பாத்தாங்கன்னா நிச்சயம் ஒத்துப்பாங்க" வந்தனா, "ஷக்தி, எனக்கும் உங்க அம்மாவை பார்க்கணும் போல இருக்கு. முதல்ல அவங்க என்னை பாத்து ஓ.கே சொல்லணும்" சக்தி, "ஏன் அதுக்கு அப்பறம்தான் நீ உங்க அப்பா அம்மாகிட்ட சொல்லணும்ன்னு இருக்கியா?"
முகம் சுருங்கிய வந்தனா, "அப்படி இல்லை ஷக்தி, அவங்களுக்கு பிடிக்கலைன்னாலும் எங்க அப்பா அம்மா ஒத்துப்பாங்கன்னு நான் நம்பறேன் ஷக்தி. உன் கூட பழகினதுக்கு அப்பறம் அவங்களுக்கும் நிச்சயம் உன்னை பிடிக்கும். ஆனா உங்க அம்மாவுக்கு என்னை முதலில் இருந்து பிடிச்சு இருக்கணும். " சக்தி, "ஏன்?" வந்தனா, "ரிடையர் ஆனதுக்கு அப்பறம் நம்மகூட இருக்கணும்ன்னு நினைச்சுட்டு இருப்பாங்க இல்லையா? என்னை பிடிக்கலைன்னா இப்ப இருந்தே அவங்க ரொம்ப லோன்லியா ஃபீல் பண்ணுவாங்க ஷக்தி. யாரோ ஒரு போலீஸ்காரி என் மகனை என் கிட்ட இருந்து பிரிச்சுட்டான்னு அவங்க நினைச்சா சத்தியமா என்னால சந்தோஷமா இருக்க முடியாது" வாய்விட்டு சிரித்த சக்தி, "உனக்கு இருக்கற அளவுக்கு எனக்கும் உன் வீட்டைப் பத்தி பயம் இருக்கு. என்ன பண்ணலாம் சொல்லு"சென்ற வாரம் லஞ்சுக்கு சென்ற ஸோஃபியா'ஸ் ஆஃப் லிட்டில் இட்டலியை அடைந்தனர். ரிஸர்வ் செய்யப் பட்டு இருந்த டேபிளில் அமர்ந்து உரையாடலை தொடர்ந்தனர். வந்தனா, "எப்படியாவுது அவங்க என்னை பார்க்க ஏற்பாடு பண்ணேன்" சக்தி, "நீ ஈரோடுக்கு போறியா?" வந்தனா, "வேணும்ன்னா போவேன். ஆனா ஒரு காரணமும் இல்லாம எப்படி போறது? .. எங்க வீட்டிலும் என்ன சொல்லிட்டு போறது?" சக்தி, "ஆக்சுவலா இந்த அசைன்மெண்ட் முடிஞ்சதும் அம்மாவையும் சாந்தியையும் டெல்லி ஆக்ரா ஜெய்பூரெல்லாம் கூட்டிட்டு போறதா சொல்லி இருக்கேன்." வந்தனா, "உங்க அம்மா இதுவரைக்கும் அங்கே எல்லாம் வந்தது இல்லையா?" சக்தி, "அம்மா பாத்து இருக்காங்க. சாந்திதான் பாவம் சென்னையை தாண்டி ஒரு ஊருக்கும் போனது இல்லை" வந்தனா, "எதுக்கு நீ திரும்பி வர்ற வரைக்கும் வெய்ட் பண்ணனும்? இந்த டிஸம்பர் சமயத்தில் அவங்களுக்கும் லீவ் இருக்கும். க்ளைமேட்டும் ரொம்ப நல்லா இருக்கும். அவங்க ரெண்டு பேரையும் அப்ப வரச் சொல்லேன். நான் லீவ் போட்டுட்டு டெல்லி, ஆக்ரா, ஜெய்ப்பூர் எல்லாம் சுத்தி காண்பிச்சுட்டு அப்படியே எங்க உதைப்பூருக்கும், எங்க வீட்டுக்கும் கூட்டிட்டு போறேன்" முகம் மலர்ந்த சக்தி, "அப்ப நான் அந்த இடமெல்லாம் பார்க்கலைன்னா பரவால்லைன்னு சொல்றியா?" வந்தனா, "ஹெல்லோ! கல்யாணத்துக்கு அப்பறம் அது எல்லாம் உன் மாமனார் ஊர்!!" சக்தி, "எது ஆக்ராவா?" வந்தனா, "ஜோக் அடிக்காதே. மத்த மூணு இடத்தையும் சொன்னேன். என்ன சொல்றே உங்க அம்மாவை எப்படியாவுது கன்வின்ஸ் பண்ணி இந்த டிஸம்பர்ல ஒரு ஹாலிடே ப்ரோக்ராமுக்கு ஒத்துக்க வைக்கறயா. I will make sure that it will be a memorable holiday for both of them" சக்தி, "உன் வேலைக்கு நடுவே உன்னால் அவங்க கூட டைம் ஸ்பெண்ட் பண்ண முடியுமா?" வந்தனா, "ஆக்சுவலா, எங்க ப்ளான் படி நாங்க இப்ப எடுத்துக்கப் போற அசைன்மெண்ட்டை டிஸம்பரில் பாதி முடிச்சு இருப்போம். கடைசிலதான் கொஞ்சம் டைட்டா இருக்கும். நடுவில் ரெண்டு வாரம் லீவ் போடறதில் ஒரு பிரச்சனையும் இருக்காது" சக்தி, "ஓ, நீங்க இப்ப எடுத்துக்கற அசைன்மெண்டை அடுத்த ஏப்ரலுக்கு முன்னாடி முடிச்சுடுவீங்களா?" வந்தனா, "எங்க ரெண்டு பேரோட கணிப்பு அது. நாளைக்கு எங்க பாஸ் வர்றார். நாளைக்கு சாயங்காலம் ஒரு முடிவுக்கு வருவோம்." சக்தி, "என்ன முடிவுக்கு" என்று கேட்டபின் "சாரி ..நீ ஒண்ணும் சொல்ல வேண்டாம். நான் தப்பா எடுத்துக்க மாட்டேன்" எதிரில் அமர்ந்தவனின் கையைப் பற்றியபடி, "ஷக்தி, எனக்கு ஒவ்வொண்ணும் உன் கிட்ட சொல்லணும்ன்னு இருக்கு. ஆனா சொல்ல முடியாம தவிக்கறேன்." சக்தி, "ஹேய், எனக்கு புரியுது ஹனி. இட்ஸ் ஓ.கே" வந்தன, "பட் யூ நோ சம்திங்க்? நீ மட்டும் இதில் முழுசா இன்வால்வ் ஆனா இந்த அசைன்மெண்ட் எல்லாம் ரெண்டே மாசத்தில் முடிக்கலாம்" சக்தி, "கை நிறைய கிடைக்கற சம்பளத்தை விட்டுட்டு கவர்மெண்ட் சம்பளத்துக்கு சேர சொல்றியா?." வந்தனா, "முடிக்கலாம்ன்னுதான் சொன்னேன். ஷாந்திக்கு கல்யாணம் பண்ணி வைக்கறவரைக்கும் உனக்கு இருக்கும் பொறுப்புக்கள் எல்லாம் எனக்கு தெரியும். அதனாலதான் வந்து எங்க R&AWவில் சேருன்னு சொல்லலை" சக்தி, "Don't worry. By God's grace .. நான் ஒரு அளவுக்கு சேத்து வச்சு இருக்கேன். நம் கல்யாணத்துக்கு முன்னாடியே அம்மாகிட்ட சாந்தியோட கல்யாணத்துக்குன்னு ஒரு FD போட்டு அம்மாகிட்ட கொடுத்துடலாம்" வந்தனா, "இன்னும் வேணும்ன்னா எங்க அப்பாகிட்ட வரதட்சணை டிமாண்ட் பண்ணலாம். நிச்சயம் கொடுப்பார்" சக்தி, "அம்மா தாயே! இந்த பக்கம் கொடுத்துட்டு அந்த பக்கம் உங்க சித்தப்பாவை விட்டு என்னை அரெஸ்ட் பண்ணறதுக்கா?" வாய் விட்டு சிரித்த வந்தனா, "யூ...! இந்த மாதிரி சீரியஸ்ஸா மூஞ்சியை வெச்சுட்டு ஜோக் அடிக்கறது மட்டும் போதும். எங்க அப்பாவும் அம்மாவும் உன்னை தலை மேல தூக்கி வெச்சுட்டு ஆடுவாங்க. சரி. அப்ப உங்க அம்மாவையும் ஷாந்தியையும் இந்த டிஸம்பர்ல டெல்லிக்கு வர வைக்கறே. ஓ.கே?" சக்தி, "ஓ.கே. உன்னை பத்தி என்னன்னு எங்க அம்மாகிட்ட சொல்றது?" வந்தனா, "காலேஜ் படிக்கும் போது அறிமுகம் ஆனான்னு சொல்லு. மறுபடி நான் யூ.எஸ் வந்து இருந்தப்ப நல்லா பழக்கமானான்னு சொல்லு" சக்தி, "முதல்ல ஃப்ரெண்ட்டுன்னு சொல்லிட்டு உன்னை பாத்ததுக்கு அப்பறம் அவளை உங்களுக்கு பிடிச்சு இருக்கான்னு கேக்கணுமா? எதுக்கு? எனக்கு எங்க அம்மாகிட்ட பொய் சொல்ல பிடிக்காது" வந்தனா, "ப்ளீஸ் ஷக்தி, அவங்களுக்கு என் மேல் ஒரு அன்பயாஸ்ட் ஒபீனியன் வரணும். நீ என்னை காதலிக்கறதா சொன்னதுக்கு அப்பறம் அவங்க என்னை பார்க்கும் விதமே வேற மாதிரி இருக்கும்" சக்தி, "சரி. ஆனா ஒண்ணு சொல்றேன். எங்க அம்மா ரொம்ப ஷார்ப். நான் எதுவும் சொல்லாமலே அவங்க அனேகமா கண்டுபிடிச்சுடுவாங்க" வந்தனா, "கவலைப் படாதே. அப்படி கண்டுபிடிச்சுட்டா உடனே காலில் விழுந்து நான் தான் என்னை பத்தி சொல்ல வேண்டாம்ன்னு சொன்னேன்னு சொல்லி மன்னிப்பு கேக்கறேன்" சக்தி, "Let us hope she believes that .. " வந்தனா, "ரொம்ப பயமுறுத்தாதே. எனக்கு இப்பவே ரொம்ப எக்ஸைட்டடா இருக்கு" சக்தி, "ஹூம் .. உங்க அப்பா அம்மாவை என்னை பாத்து ஓ.கே சொல்ல நான் தான் அடுத்த மே மாசம் வரைக்கும் வெய்ட் பண்ணனும்" வந்தனா, "முதல்ல உன் அம்மா என்னை பாத்து ஓ.கே சொல்லட்டும்" மேலும் கனவுகளை பகிர்ந்தவாறு டின்னரை முடித்தனர். வாங்கிய இரண்டு டெஸர்ட்டுகளையும் அவனை சுவைக்க விட்டு வந்தனா அவன் ஒரு குழந்தையின் ஆர்வத்துடன் இனிப்பில் திளைப்பதை பார்த்து ரசித்தாள். திரும்ப ஹோட்டலுக்கு வந்து காரில் அமர்ந்த படி சிறிது நேரம் பேச்சு தொடர்ந்தது .. வந்தனா, "நாளைக்கு எங்க பாஸ் வரார் நாங்களும் பிஸியாதான் இருப்போம். ஆனா உன்னை மறுபடி பாக்காம நான் ஃப்ளைட் ஏற மாட்டேன். சனிக்கிழமை முழுவதும் பிஸின்னு சொல்லாதே...." சக்தி, "ம்ம்ம் .. ஏர்போர்ட்டுக்கு வரேன். ஓ.கே?" வந்தனா, "ஏர்போர்ட்டில் ப்ரைவஸியே இருக்காது. அதுக்கு முன்னாடி முடியாதா?" சக்தி, "எதுக்கு ப்ரைவஸி?" வந்தனா, "ம்ம்ம் .. இன்னைக்கு சாயங்காலம் மாதிரி ஹோட்டல் லாபின்னா கூட பரவால்லை. அங்கே ஏர்போர்ட்டில் என் பாஸ் கூட இருப்பார்" என்றபிறகு வெட்கத்தை மறைக்க வெளியில் பார்த்தாள். அடுத்த கணம் காரின் இரண்டு இருக்கைகளுக்கு நடுவே இழுக்கப் பட்டு அவனது அணைப்பில் இருந்தாள். பல முத்தங்களுக்கு பிறகு பிரியாவிடை பெற்றனர்.Friday, 29 August 2008 வெள்ளி, ஆகஸ்ட் 29 2008 நியூ யார்க்கை சுற்றி இருந்த பல ஊர்களில் இருந்த கிளைகளில் ஒரு வியாபார நிறுவனத்தின் கணக்கில் கேஷாக டெபாசிட் ஆகப் போகும் இருநூற்று நாற்பது மில்லியன் டாலர்கள் கொலம்பியன் ட்ரக் கார்ட்டலை சேர்ந்த வெனிஸுவேலாவில் இருக்கும் ஒரு பினாமிக் கம்பெனியின் கணக்குக்கு ட்ரான்ஸ்ஃபர் செய்வதற்கான வேலைகளில் நண்பர்கள் மூவரும் அன்று லீவ் எடுத்துக் கொண்டு காலையில் இருந்து மூழ்கினர். ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ Friday, 29 August 2008 9:00 AM FBI New York Field Office, 23rd Floor, Federal Plaza, NY வெள்ளி, ஆகஸ்ட் 29 2008 எஃப்.பி.ஐ நியூ யார்க் அலுவலகம், 23ம் தளம், ஃபெடரல் ப்ளாஸா, நியூ யார்க் காலை எட்டு மணிக்கு முன்பே வந்த வந்தனாவும் தீபாவும் தங்களது செயற்திட்டத்தை மறுபடி ஒரு முறை பரிசீலனை செய்து முடித்தனர். அவர்களது அன்றைய உபயோகத்துக்கு ஒதுக்கப் பட்ட கான்ஃபரன்ஸ் ரூமில் வந்தனா தனது லாப்டாப்பை ப்ரொஜெக்டரில் இணைத்து திரையில் விழும் பிம்பத்தை சரி செய்து முடிக்க, முரளீதரன், எஃப்.பி.ஐ தலைமை அலுவலகத்தில் இருந்து வந்து இருந்த க்ரிஸ்டஃபர் மோரிஸ் (Christopher Morris), ஷான் ஹென்ரி, மற்றும் சான்ட்ரா ஆஸ்டின், இந்த நால்வரும் அந்த அறைக்குள் நுழைந்தனர். அறிமுகங்களுக்கு பிறகு வந்தனாவும் தீபாவும் தங்களது செயற்திட்டத்தை விளக்கினர். வந்தனாவின் மேலோட்டமான அறிமுகத்துடன் அவர்களது ப்ரஸெண்டேஷன் ஆரம்பித்தது தீபா பிறகு தொடர்ந்தாள் "முதலில் நாங்க இதுவரைக்கும் மாங்க்ஸ் பாட் நெட்டை பத்தி தெரிஞ்சுகிட்ட விவரங்கள்: 1. மாங்க்ஸ் பாட் நெட் வைரஸ் புகுந்த கணிணிகளை என்ன வேண்டுமானாலும் செய்ய வைக்க முடியும். அதுவும் அதன் உரிமையாளர் செஞ்ச மாதிரியே செய்ய வைக்க முடியும். இது ஷானும் சான்ட்ராவும் ஏற்கனவே கண்டு பிடிச்சது 2. இந்த பாட் நெட்டில் இருக்கும் கணிணிகளுக்கு பெரும்பாலான சமயங்கள் நேரடியா சர்வர்கிட்ட இருந்து எந்த தகவலும் (மெஸ்ஸேஜும்) வருவது இல்லை. மத்த கணிணிகளிடம் இருந்துதான் மெஸ்ஸேஜஸ் வருது. சர்வர் ஒரு குறிப்பிட்ட கணிணிக்கு அனுப்பும் நேரடி மெஸ்ஸேஜாக இருந்தால் கூட அது பல கணிணிகள் கை மாறி குறிப்பிட்ட கணிணிக்கு வந்து சேருது. சோ, ஒரு மெஸ்ஸேஜ் எந்த இணைய விலாசத்தில் இருந்து வந்து இருக்குன்னு பாத்து சர்வரை கண்டு பிடிக்க முடியாது. 3. ஒரு கணிணியில் இருந்து வெளியில் போகும் மெஸ்ஸேஜை டாம்பர் (tamper) பண்ணினா அந்த கணிணியில் இருக்கும் வைரஸ்ஸுக்கு தன்னை தானே அழித்துக் கொள்ளும்படியான ஒரு மெஸ்ஸேஜ் சர்வரில் இருந்து வருது. இதனால் அந்த கணிணி பாட் நெட்டில் இருந்து நீக்கப் படுகிறது. அந்த கணிணிக்குள் மறுபடி வைரஸ்ஸை புகுத்தினாலும் அந்த கணிணி பாட் நெட்டுக்குள் ஏற்றுக் கொள்ளப் படுவது இல்லை. அதன் இணைய விலாசத்தை முற்றிலும், அதாவது அந்த டொமெயினையே (domain), மாற்றினால் மறுபடி ஏற்றுக் கொள்ளப் படுகிறது. அதாவது சர்வர் வேறு ஒரு கணிணி என்று நினைத்து அதை ஏற்றுக் கொள்ளுது. 4. மாங்க்ஸ் பாட் நெட்டில் நடக்கும் தகவல் பரிமாற்றம் (மெஸ்ஸேஜ்) எல்லாம் சங்கேத மொழியில் இருக்கு என்பது ஏற்கனவே தெரிஞ்ச விஷயம். மேலும் எந்த விதமான சங்கேத முறை (Encryption algorithm) உபயோகிக்கறாங்க என்பதும் இதுவரைக்கும் கண்டுபிடிக்க முடியாம இருக்கு. மாங்க்ஸ் பாட் நெட்டின் சர்வரை நாம் கண்டுபிடிக்கணும்ன்னா அவங்க உபயோகிக்கும் சங்கேத முறையை கண்டு பிடிச்சே ஆகணும். ஏன்னா சர்வரின் இணைய விலாசம் அவங்க அனுப்பும் மெஸ்ஸேஜுக்குள் பொதிந்து இருக்குன்னு நாங்க நம்பறோம். அடுத்தபடியாக அவங்க சங்கேத முறையை கண்டு பிடிக்க பல மெஸ்ஸேஜுகளையும் நாங்க அனலைஸ் பண்ணினோம்.
மாங்க்ஸ் பாட் நெட்டில் அனுப்பப் படும் தகவல் பரிமாற்றங்களை நாலு விதமா பிரிக்கலாம்: 1. விளம்பர ஈமெயில் அனுப்புவதற்கான சர்வரிடம் இருந்து வரும் ஆணை ... 2. தன்னை தானே அழித்துக் கொள்வதற்கான ஆணை அதாவது செல்ஃப் டிஸ்ட்ரக்ட் கமாண்ட் (Self Destruct Command).. 3. மாங்க்ஸ் பாட் நெட்டில் இருக்கும் வைரஸ்கள் ஒழுங்கா வேலை செஞ்சுட்டு இருக்கான்னு சர்வர் கண்டுபிடிக்கறதற்கான தகவல் பரிமாற்றங்கள். (Health Check Messages) 4. கணிணிக்கு அந்த உரிமையாளர் கொடுத்ததுபோல் பிறப்பிக்க படும் ஆணைகள் ... இந்த நான்கு வகை தகவல் பரிமாற்றங்களில் ஈமெயில் அனுப்புவதற்கான மெஸ்ஸேஜ்களை இப்ப எங்களால் அடையாளம் கண்டுபிடிக்க முடியுது. ஆனால் இன்னும் அவங்க உபயோகிக்கும் சங்கேத மொழியை புரிஞ்சுக்க முடியலை." என்று தீபா தன் பகுதியின் ஒவ்வொரு பாயிண்ட்டுக்கும் விளக்கம் கொடுத்து முடித்தாள். கிரிஸ்டஃபர் மோரிஸ், "ஷான், அந்த கடைசி பாயிண்டைதான் நீ ஒரு மேஜர் ஃபைண்டிங்க் அப்படின்னு சொன்னியா?" ஷான், "ஆமா. நாம் இதுவரைக்கும் கண்டு பிடிக்காத இன்னொரு விஷயம். தீபா, எப்படி அதை கண்டு பிடிச்சீங்கன்னு கொஞ்சம் விளக்கறயா?" தீபா, "ஷ்யூர் ஷான், . ... ஒரு கணிணியில் இருந்து அனுப்பப் பட்ட விளம்பர ஈமெயிலையும் அந்த கணிணிக்கு வந்த மெஸ்ஸேஜஸ்ஸையும் சேர்த்து வைத்து அனலைஸ் பண்ணினோம். விளம்பரத்தில் இருக்கும் எழுத்துக்கள், வார்த்தைகள் மற்றும் வாக்கியங்களின் நீளம் இதை எல்லாம் வெச்சு பாக்கும் போது ஒவ்வொரு விளம்பர ஈமெயிலுக்கும் ஒரு தனி பாட்டர்ன் (எழுத்துக் கோர்வையின் அமைப்பு) இருப்பதை கவனிச்சோம். இந்த இரண்டு வாரத்தில் இதுவரைக்கும் ஐந்து வெவ்வேறு விளம்பர ஈமெயில்கள் அனுப்பப் பட்டு இருக்கு. இதில் ஒவ்வொண்ணுக்கும் இருக்கும் தனி பாட்டர்னை ஒரு அளவுக்கு எங்களால் ஐடெண்டிஃபை பண்ண முடிஞ்சுது. அந்த பாட்டர்னை வெச்சு எல்லா மெஸ்ஸேஜஸ்ஸையும் ஃபில்டெர் (சல்லடையால் சலிப்பதுபோல்) பண்ணினோம். ஈமெயில் அனுப்புவதற்கான ஆணைகளை எங்களால் தனியா பிரிக்க முடிஞ்சுது. அப்படி ஒரு கணிணிக்கு வந்த ஒரு ஆணையை எடுத்து நாங்களே மறுபடி அந்த கணிணிக்கு அனுப்பினோம். அந்த கணிணி இன்னொரு முறை அதே ஈமெயில் விளம்பரத்தை அனுப்புச்சு. " கிரிஸ்டஃபர், "ஃபெண்டாஸ்டிக் ... முரளீ, your girls are terrific!. ப்ளீஸ் கண்டின்யூ" தீபா, "சோ, ஒரு விளம்பர ஈமெயிலை ஒரு கணிணி அனுப்பினதுக்கு அப்பறம் எந்த ஆணை மூலம் அந்த விளம்பர ஈமெயிலை அந்த கணிணி அனுப்புச்சுன்னு இப்ப கண்டு பிடிக்க முடியும். இதுவரைக்கும் எங்ககிட்ட அந்த மாதிரி அஞ்சு மெஸ்ஸேஜஸ் இருக்கு. ஆனா, அவங்க சங்கேத முறையை கண்டு பிடிக்க எங்களுக்கு அந்த மாதிரி சில நூறு மெஸ்ஸேஜ்கள் தேவை படுது. முடிந்த வரை வெவ்வேறு விளம்பரங்களுக்கு வெவ்வேறு கணிணிகளுக்கு வந்ததா இருக்கணும் அப்படி இருக்கும் போதுதான் சர்வரின் இணைய விலாசத்தை கண்டு பிடிக்க முடியும். அதே மாதிரி சில நூறுகள் இல்லைன்னாலும் நூறு தன்னை தானே அழித்துக் கொள்ளும் ஆணைகள் எங்களுக்கு தேவை" கிரிஸ்டஃபர், "சில நூறுன்னா, குறைஞ்சது எத்தனை?" தீபா, "குறைந்தது இருநூறு. முந்நூறு இருந்தா வேலை இன்னும் சுலபமா முடியும். அதிகமாக அதிகமாக கண்டுபிடிப்பது சுலபமாகும்" ஷான், "இந்த ரெண்டு வாரத்தில் ஐந்து வெவ்வேறு ஈமெயில் விளம்பரங்கள் போயிருக்கு. உங்க கணக்குப் படி ஒரு ரெண்டு வருஷத்துக்குள்ள உங்களுக்கு இருநூறு விளம்பரங்களுக்கான மெஸ்ஸேஜஸ் கிடைக்கும் ... இல்லையா?" வந்தனா, "அவங்களுக்கு அத்தனை ஆர்டர் வந்தாதான் அத்தனை விளம்பர ஈமெயில் அனுப்புவாங்க. அப்படி ஆர்டர் வரலைன்னா?" கிரிஸ்டஃபர், "ஷான், நீ அப்ஸர்வ் பண்ணின இந்த ரெண்டு வருஷத்தில் சுமார் எத்தனை விளம்பரங்கள் போயிருக்கும்? வாரத்துக்கு எத்தனை போகுது?" ஷான், "வந்தனா சொன்ன மாதிரி ரெகுலரா வாரத்துக்கு இத்தனைன்னு சொல்ல முடியாது" கிரிஸ்டஃபர், "ஸோ என்ன பண்ணலாம்? ரெண்டு வருஷம் எல்லாம் பொறுத்துட்டு இருக்க முடியாது" வந்தனா, "அதையே தான் நானும் சொல்றேன். அவங்களுக்கு ஆர்டர் வந்து அவங்க அனுப்பும் வரை நாம் வெயிட் பண்ணாம நாமே ஏன் அவங்களுக்கு ஆர்டர் கொடுக்கக் கூடாது?" அந்த அறையில் சில நிமிடங்கள் அமைதி குடி கொண்டது. கிரிஸ்டஃபர், "எப்படி?" வந்தனா, "எதாவுது ஒரு பொருளுக்கோ அல்லது வலை தளத்துக்கோ நமக்கு தெரிஞ்ச யார் மூலமாவுது அவங்களுக்கு விளம்பர ஈமெயில் அனுப்ப ஆர்டர் கொடுப்போம். நமக்கு வெவ்வேறு மெஸ்ஸேஜஸ் கிடைக்கும். கூடவே அவங்களை அணுக அவங்க உபயோகிக்கும் முறையையும் நாம் இன்வெஸ்டிகேட் பண்ணி அவங்களை பிடிக்க முடியுமான்னு பார்க்கலாம். After all, அந்த சர்வரை எதுக்கு கண்டு பிடிக்கணும்? அதை கன்ட்ரோல் செய்யறவங்களை பிடிக்கத்தானே?" முரளீதரன், "Greate Vanthana! இது தான் போலீஸ் புத்தி!"கிரிஸ்டஃபர், "சுலபமா பண்ணலாம். துப்பறியறதுக்காக எஃப்.பி.ஐ மற்றும் ஸீ.ஐ.ஏவை சேர்ந்த நிறைய பினாமி கம்பெனிகள் இருக்கு. அந்த கம்பெனிகள் கொடுத்தது போல் விளம்பர ஈமெயிலுக்கான ஆர்டர்களை கொடுக்கலாம்" ஷான், "சரி, இந்த மாதிரி முறையில உங்களுக்கு தேவையான அளவுக்கு விளம்பர ஈமெயிலுக்கான மெஸ்ஸேஜ்கள் கிடைக்கும். தன்னை தானே அழித்துக் கொள்ளும் ஆணைகள் அத்தனைக்கு எங்கே போவீங்க?" தீபா, "எங்களுக்கு நூறு கணிணிகள் வேணும். எங்களுக்கு உதவறதுக்கு நான்கு அல்லது ஐந்து பேர் வேணும்" முரளீதரன், "ஒவ்வொரு கணிணியிலும் வைரஸ்ஸை புகுத்தி அதன் மெஸ்ஸேஜை டாம்பர் பண்ணப் போறீங்களா?" தீபா, "ஆமா, எங்க கணிப்பில் ஒரே நாளில் நூறு கணிணிகளிலும் மெஸ்ஸேஜ் டேம்பர் செய்யணும். அப்ப அடுத்த நாள் நூறு கணிணிக்கும் செல்ஃப் டிஸ்ட்ரக்ட் மெஸ்ஸேஜ் வரும்" சான்ட்ரா, "ஏன் ஒரே நாளில் அவ்வளவு கணிணிகளில் டேம்பர் பண்ணனும்?" வந்தனா, "சில கணிணிகளை வெச்சு பல நாட்களில் தினம் தினம் அவைகளின் இணைய விலாசங்களை மாற்றி செய்யலாம்ன்னுதான் நாங்க முதலில் நினைச்சோம். ஆனா, இவ்வளவு நூதனமான ஒரு பாட் நெட்டை உருவாக்கினவங்க நிச்சயம் இந்த மாதிரி மெஸ்ஸேஜ் போறதை கண்காணிச்சுட்டு இருப்பாங்கன்னு தோணுது. யாரோ வேணும்ன்னே டாம்பர் பண்ணறாங்கன்னு அவங்களுக்கு தெரியும். ஒண்ணு ரெண்டு நாளில் நாம் என்ன செய்ய முயற்சிக்கறோம்ன்னு அவங்களுக்கு தெரிஞ்சுதுன்னா உடனே சுதாரிச்சுட்டு அந்த மாதிரி ஒரு மெஸ்ஸேஜ் போறதை நிறுத்தக் கூடும் இல்லையா? ஒரே நாளில் செய்யும் பொது நூறு மெஸ்ஸேஜும் போனதுக்கு அப்பறம்தான் அவங்களுக்கு தெரியும்" கேட்டுக் கொண்டு இருந்த அனைவரும் சற்று மலைத்து அமர்ந்து இருந்தனர். முரளீதரனின் முகத்தில் அளவிலா பெருமிதம். ஷான், "God, you girls really think big!" கிரிஸ்டஃபர், "சரி, நூறு கணிணிகளையும் நீங்க ஏழு பேர் எப்படி ஆபரேட் பண்ணப் போறீங்க. ?" வந்தனா, "நாங்களே உக்காந்து டாம்பர் பண்ணப் போறது இல்லை. டாம்பர் பண்ணறதுக்கு ஒரு மென் பொருள் எழுதப் போறோம். அந்த மென்பொருளை நூறு கணிணிகளில் புகுத்தப் போறோம். வைரஸ் அனுப்பும் மெஸ்ஸேஜ்களை நாங்க குறிப்பிடும் நாளில் எங்க மென் பொருள் டாம்பர் செய்யும். எங்களுக்கு இந்த வேலையில் உதவறதுக்குத்தான் அந்த டீம்" சான்ட்ரா, "வாவ்!" கிரிஸ்டஃபர், "சர், உங்களுக்கு விளம்பர ஈமெயிலுக்கான சில நூறு மெஸ்ஸேஜ்களும் செல்ஃப் டிஸ்ட்ரக்ட்டுக்கான நூறு மெஸ்ஸேஜ்களும் கிடைக்குது. அதுக்கு அப்பறம்?" வந்தனா, "அதுக்கு அப்பறம்தான் ரொம்ப முக்கியமான வேலை இருக்கு. அதுக்கு எங்களுக்கு ஒரு சக்தி வாய்ந்த கணிணியும் பாட்டர்ன் மாட்சிங்க் அல்காரிதம் எல்லாம் தெரிஞ்ச சிலரின் உதவியும் வேணும்" ஷான், "எதுக்கு?" வந்தனா, "இந்த மெஸ்ஸேஜ்களை எல்லாம் சேர்த்து வைத்து அவைகளை வெவ்வேறு முறைகளில் ஒரு மென் பொருள் மூலம் அனலைஸ் பண்ணி அவங்களோட சங்கேத முறையை கண்டு பிடிக்க. அப்படிப் பட்ட ஒரு மென்பொருளை எங்களால் எழுத முடியாது" கிரிஸ்டஃபர், "சரி, நான் விசாரிக்கறேன். முரளி, உங்களுக்கு அப்படிப் பட்டவங்க யாராவுது தெரியுமா?" தீபாவும் வந்தனாவும் ஒன்று சேர்ந்து மனதுக்குள், 'அந்த மாதிரி ஆளுங்க ரெண்டு பேரை எனக்கு தெரியும். ஆனா ரெண்டும் இப்ப இன்ஸ்யூரன்ஸ் கம்பெனிக்கு கோட் எழுதிட்டு இருக்குங்க' என்று நித்தினையும் சக்தியையும் திட்டினர். முரளீதரன், "நிச்சயம் ஐ.ஐ.டிகளில் யாராவது இருப்பாங்க. பிரச்சணை இல்லை அரேஞ்ச் பண்ணலாம்" கிரிஸ்டஃபர், "Great Team India! முரளி, ஊருக்கு போனதும் எனக்கு ஒரு டீடெயிலான செயல் திட்டம், முடிஞ்ச வரை நாள், தேதியோட தயாரிச்சு எனக்கு அனுப்புங்க. இவங்க கேட்டது எல்லாம் அரேஞ்ச் பண்ண நான் எஃப்.பி.ஐயில் இருந்து பணம் ஒதுக்கறேன். அதுக்கப்பறம் உடனே நீங்க உங்க வேட்டையை தொடங்கலாம். இப்ப என்னோட லஞ்ச் சாப்பிட வாங்க" என்றவாறு முடித்து அனைவரையும் அழைத்துக் கொண்டு மதிய உணவுக்கு ஒரு ரெஸ்டாரண்டுக்கு அழைத்துச் சென்றார்.சாப்பிட்டுக் கொண்டு இருக்கையில் வந்தனா, "கிரிஸ், எனக்கு ஒரு சந்தேகம்" கிரிஸ்டஃபர், "ப்ளீஸ் கோ அஹெட் ..." வந்தனா, "நம் நோக்கம் என்ன? மாங்க்ஸ் பாட் நெட்டை கைபற்றி அதை உருவாக்கினவங்களை கைது செய்வதா?" ஷான், "அவங்களை கைது செய்வது நடக்காத காரியம். ஒரு சட்ட விரோதமான செயலிலும் ஈடு படாதவங்களை என்னன்னு பிடிக்கறது?" கிரிஸ்டஃபர், "இல்லை ஷான், தவறான வழியில் உபயோகிக்க கூடிய விஞ்ஞான ஆராய்ச்சிகள் தேச துரோகிகள் கையில் சிக்காமல் அரசாங்கத்தில் மேற்பார்வைக்கு கொண்டு வருவதற்கு சட்டம் இருக்கு. மாங்க்ஸ் பாட் நெட் கெட்டவங்க கைக்கு போனா இருக்கும் அபாயத்தை கருதி அந்த சட்டத்தை பயன் படுத்தலாம்" முரளீதரன், "மாங்க்ஸ் பாட் நெட்டின் சர்வர் அமெரிக்காவுக்கு வெளியில் இருந்தா? அல்லது அதை க்ண்ட்ரோல் பண்ணறவங்க அமெரிக்கர்களா இல்லாமல் இருந்தா?" கிரிஸ்டஃபர், "முரளீ, ஐ.நா சபையின் சைபர் க்ரைம் பிரிவு அமெரிக்காவோட கைப் பொம்மை அப்படிங்கறது உனக்கு தெரிஞ்ச விஷயம்தானே? இன்டர்போல் மூலம் மாங்க்ஸ் பாட் நெட்டை நம் மேற்பார்வைக்கு கொண்டு வரலாம்" தீபா, "அவங்க அதுக்கு ஒத்துக்கலைன்னா? அவங்க லீகலா மூவ் பண்ணினா?" முரளீதரன், "அவளோட அப்பா இந்தியாவில் ஒரு பெரிய லாயர்" என்று கிண்டலடித்தார் ஷான், "காட்! அது வேறயா?" என்க எல்லோரும் சேர்ந்து சிரித்தனர் ... கிரிஸ்டஃபர், "தீபா, நீ என்ன சொல்ல வரேன்னு தெரியுது. ஒரு நல்ல லாயரை பிடிச்சு அரசாங்கத்தின் மீது கேஸ் போட்டா அரசாங்கத்தினால் ஒண்ணும் பண்ண முடியாது. பேச்சு வார்த்தையில் தான் அவங்களை நம் வழிக்கு கொண்டு வரணும். அல்லது அவங்களுக்கு பணம் கொடுத்து இதை விலைக்கு வாங்கணும். ஷான், "சோ, உண்மையில் அவங்க பணம் சம்பாதிக்க நாம் இப்ப உதவிட்டு இருக்கோம்." வந்தனா, "அப்படி மட்டும் ஏன் பார்க்கறீங்க ஷான்? இந்த மாங்க்ஸ் பாட் நெட் அரசாங்கத்தின் கையில் அல்லது மேற்பார்வையில் இருந்தா இதை நிறைய நல்ல விதத்திலும் உபயோகிக்கலாம்" கிரிஸ்டஃபர், "எப்படி?" வந்தனா, "இந்த மாங்க்ஸ் பாட் நெட்டில் இருக்கும் எந்த கணிணியையும் ஒரே இடத்தில் இருந்த படி எந்த வேலை வேணும்னாலும் செய்ய வைக்கலாம். இந்த ஒரு திறமையை மட்டும் வெச்சு யாராலையும் ஊடுருவ முடியாத ஒரு தகவல் பரிமாற்றத்தை உருவாக்கலாம் இல்லையா? ரொம்ப செக்யூரா இருக்கும். தீவிரவாதிகளும் ஒற்றர்களும் கண்டு பிடிக்க முடியாத படி தகவல்களை பரிமாறிக் கொள்ள முடியும்" கிரிஸ்டஃபர், "யூ ஆர் ரைட்! கொடுக்கற காசுக்கு நிறையவே சாதிக்கலாம்" தீபா, "அதாவது அவங்க உங்ககிட்ட மாங்க்ஸ் பாட் நெட்டை கொடுக்க ஒத்துகிட்டா!" முரளீதரன், "விட்டா நீயே உன் அப்பாவை அவங்களுக்கு லாயரா இருக்க வைப்பே மாதிரி இருககே" தீபா, "இல்லை சார், எப்ப ஹார்ஷ்7 இதில் இன்வால்வ் ஆகி இருக்கார்ன்னு தெரிஞ்சுதோ அப்ப இருந்தே எனக்கு அவங்க நாம் சொல்றது எதுக்கும் ஒத்துக்க மாட்டாங்கன்னு தோணுது" முரளீதரன், "ஏன் அப்படி சொல்றே?" தீபா, "யாரையும் நம்பாத ஆள் ஹார்ஷ்7. ஒண்ணு சொல்லுங்க சார், அரசாங்கம் அப்படின்னா என்ன? உங்களை போன்ற அதிகாரிகள் சேர்ந்த அமைப்புதானே அது? அதில் எல்லோரும் நல்லவங்களா இருப்பாங்கன்னு என்ன நிச்சயம்? ஒப்படைத்த பிறகு அரசாங்கத்தை சேர்ந்த ஒருவரே இதை கெட்ட வழியில் பயன் படுத்த மாட்டான்னு என்ன நிச்சயம்?" கிரிஸ்டஃபர், "நீ சொல்வது நூத்துக்கு நூறு உண்மை. அப்ப என்னதான் செய்யணும்?"
வந்தனா, "அவங்க எப்படிப் பட்டவங்கன்னு பாத்துட்டு அவங்க கிட்டயே விட்டுடணும். முடிஞ்சா அவங்ககூட இருந்து அந்த மாங்க்ஸ் பாட் நெட்டின் செயல்களை கண்காணிக்க சிலரை நியமிக்கணும்" முரளீதரன், "நீ சொல்றதும் சரிதான்"அடுத்த நாள் காலை அவர்களது அறையின் கதவு தட்டப் பட்டது தூக்கக் கலக்கத்துடன் கதவை திறந்த தீபா, "ஹாய் சஞ்சனா" அறைக்குள் நுழைந்த சஞ்சனா, "தூங்கு மூஞ்சி .. இன்னும் படுக்கையில் இருந்து எந்திரிக்கலையா? வந்தனா எங்கே?" தீபா, "வந்தனா குளிச்சுட்டு இருக்கா" சஞ்சனா, "நீங்க ரெண்டு பேரும் போரடிச்சுட்டு இருப்பீங்கன்னு உங்க கூட இருக்க நான் வந்து இருக்கேன்" தீபா, "ஜாஷ்வா வரலை?" சஞ்சனா, "மூணுக்கும் மந்த் எண்ட் வேலை! எங்க ஆளுக்கு அவன் பேங்கில் உங்க ஆளுங்களுக்கு அவங்க இன்ஸ்யூரன்ஸ் கம்பெனியில். நாம் மூணு பேரும் நியூ யார்க்கை ஒரு கலக்கு கலக்கலாம் வாங்க" மாலை வரை தந்தையர் கொடுத்து இருந்த க்ரெடிட் கார்டின் வரம்பு வரை செலவு செய்து குடும்பத்தில் இருந்த அத்தனை பேருக்கும் பொருட்கள் வாங்கி குவித்தனர். ஏழு மணிக்கு அவர்களை ஹோட்டலில் விட்டு சஞ்சனா விடைபெற்றாள். மாலை எட்டு மணியளவில் தோழிகள் இருவரும் பல முறை தங்களது காதலர்களை அவர்கள் கைபேசியில் அழைத்தும் பதில் இல்லாமல் போக பெரும் கோபத்தில் இருந்தனர். அந்த ஹோட்டலிலேயே முந்தைய தினம் இரவு அறை எடுத்து இருந்த முரளீதரன் அவர்களை லாபியில் இருந்து அழைக்க வேண்டா வெறுப்புடன் அறையை காலி செய்து முரளீதரனுடன் விமான நிலையத்தை நோக்கி பயணித்தனர்.

No comments:

Post a Comment