Saturday, January 31, 2015

செக்மேட் - சைபர் கிரைம் திரில் தொடர் - பாகம் - 23


சக்தி, "ஹாய் ஹனி! சாப்டாச்சா இல்லை சாப்பிடப் போறயா?" வந்தனா, "இனிமேல் தான் போகணும்" சக்தி, "டாண்ணு ஒன்றரை மணிக்கு சாப்பிட உக்காந்துடுவே. இன்னைக்கு என்ன ஆச்சு? ரொம்ப பிஸியா?" வந்தனா, "ஹெல்லோ! லாஸ்ட் மந்த் 8ம் தேதியில் இருந்து உங்க ஊரில் டே லைட் ஸேவிங்க் டைம் (Daylight Saving Time) ஆரம்பிச்சு இருக்குன்னு நீதானே சொன்னே? நீ உன் கடிகாரத்தை ஒரு மணி நேரம் முன்னாடி திருப்பி வெச்சுட்டா நான் சீக்கரம் சாப்பிடணுமா?" சக்தி, "ஓ யா, மறந்துடுச்சு"
வந்தனா, "சரி நீ என்ன பண்ணிட்டு இருக்கே இந்த நேரத்தில்?" சக்தி ஏதோ நினைவில், "ஒரு ரெஸ்டாரண்டில் தனியா உக்காந்துட்டு இருக்கேன்" வந்தனா, "எதுக்கு?" தன் தவறை உணர்ந்து சட்டென்று என்ன சொல்வது என யோசித்தபின், "இந்த ஏரியாவுக்கு டின்னருக்கு ஃப்ரெண்டோட வந்து இருந்தேன். ஆஃபீஸ்ல சில டாக்யூமெண்ட்ஸ் விட்டுட்டு போயிருந்தேன். ஆஃபீஸுக்கு போய் எடுத்துட்டு வீட்டுக்கு போறதுக்கு முன்னாடி இங்கே காஃபி சாப்பிட வந்தேன்" என்று தன் அலுவலக செக்யூரிட்டியிடம் சொன்னதை சொன்னான். வந்தனா, "ஏன் தான் இவ்வளவு காஃபி குடிப்பியோ? வீட்டுக்கு போய் தூங்கத்தானே போறே? கல்யாணத்துக்கு அப்பறம் உனக்கு காஃபி ரேஷன் பண்ணப் போறேன்" சக்தி, "நீ பகல் நேரத்தில் காஃபியை கட் பண்ணினா ஆஃபீஸில் தூங்கி வழிவேன். நைட் சாப்பிட்டதுக்கு அப்பறம் கட் பண்ணினா உனக்குத்தான் நஷ்டம்" வந்தனா, "ஏன்?" சக்தி, "தூங்கி வழிவேன். அப்பறம் சம்திங்க் சம்திங்க் கிடைக்காது" வந்தனா, "சீ .. கிடைக்கலைன்னா பரவால்லை" சக்தி, "ஆர் யூ ஷ்யூர்?" வந்தனா, "போதும் சும்மா பேசி இப்ப என் மூடை கெடுக்காதே" சக்தி, "மூடை கெடுக்கறேனா? என்ன சொல்றே?" வந்தனா, "பின்னே? வேற மாதிரி மூட் வந்தா வொர்க் பண்ணற மூட் கெட்டுப் போகாதா?" சக்தி, "வேற மாதிரி மூடுன்னா?" வந்தனா, "தெரியாத மாதிரி கேக்காதே" சக்தி, "என்னன்னு சொல்லேன் ப்ளீஸ்?" வந்தனா, "ம்ம்ம் ஒண்ணும் இல்லை போ" சக்தி, "ஐ நீட் யூ ரைட் நவ்" வந்தனா, "மீ டூ! ... " என்றவள் சிறிது நேர மௌனத்திற்கு பிறகு, "யூ ராஸ்கல், என்னை எப்படி கர்ரப்ட் பண்ணிட்டே. ஆஃபீஸ்ல உக்காந்துட்டு நான் இந்த மாதிரி எல்லாம் பேசுவேன்னு கனவில் கூட நினைச்சது இல்லை" சக்தி, "ஹா ஹா! சரி போய் சாப்பிடு. நான் நாளைக்கு கூப்பிடறேன்" வந்தனா, "நீயும் போய் தூங்கு" நித்தின் இந்நேரம் முடித்து இருப்பான் என்று அவனும் வீட்டுக்கு புறப்பட்டான். 2 மணியளவில் மூவரும் சக்தியின் ஃப்ளாட்டுக்கு திரும்பினர். ஜாஷ்வா, "எல்லா ஆணைகளும் கொடுத்தாச்சு இல்லையா?" சக்தி, "எஸ்! இப்ப அந்த வைரஸ்ஸை கரெக்ட் செஞ்சு மறுபடி மென்பொருள் மூலம் இந்த 34 உடன் இன்னும் ஒரு நூறு கணிணிகளுக்கு புகுத்தறேன்" ஜாஷ்வா, "ஹே, நாளைக்கு .... சாரி .... இன்னைக்கு உங்களுக்கு ஆஃபீஸ் இல்லையா?" சக்தி, "கொஞ்சம் லேட்டா போயிட்டு சீக்கரம் வந்துடறோம். ஒண்ணும் சொல்ல மாட்டாங்க" ஜாஷ்வா, "சரி நான் அப்ப புறப்படறேன்" நித்தின், "ரொம்ப தேங்க்ஸ் ஜாஷ்" ஜாஷ்வா, "ஹேய், இது என்னோட பிரச்சனையும்தான். மறந்துடாதே" என்றவாறு ஜாஷ்வா விடைபெற்றான். சக்தியும் நித்தினும் வைரஸ்ஸில் மாற்றம் செய்த பிறகு அதிகாலை 4 மணியளவில் மென்பொருளை இயக்கிவிட்டு தூங்கச் சென்றனர். அடுத்த நாளில் இருந்து மாங்க்ஸ் பாட் நெட்டில் புதிய வைரஸ்ஸான மாங்க்ஸ்-2 பரவத் தொடங்கியது.Thursday, 9 April 2009 5:00 PM Make-shift Test Lab, R&AW, New Delhi வியாழன், ஏப்ரல் 2 2009 மாலை 5:00 R&AW தற்காலிக ஆராய்ச்சிக் கூடம், புது தில்லி வந்தனா மதியம் சக்தியுடன் பேசிய திளைப்பில் இருந்து இன்னமும் மீளாமல் இருந்தாள். ப்ரூட் ஃபோர்ஸ் பாட்டர்ன் மாட்சிங்க் சுற்றுகள் நடந்த வண்ணம் இருந்தது. அவர்கள் அதுவரை 87 சுற்றுக்களை முடித்து இருந்தனர். இரவுகளில் எஃப்.பி.ஐ மூலம் தரவைத்த கணிணியில் ப்ரூட் ஃபோர்ஸ் பாட்டர்ன் மாட்சிங்க் மென்பொருள் இயக்கப் படும். ஒவ்வொரு நாளும் காலையில் முந்தைய இரவின் இயக்கத்தின் வெளிப்பாடுகளை ஆராய்ந்து பிறகு அடுத்த சுற்றுக்கான ஆயத்தங்களில் ஈடுபடுவதை வழமையாக கொண்டு இருந்தனர். பல வேலைகளையும் வந்தனாவின் மேற்பார்வையில் ப்ரொஃபெஸ்ஸர் சாரியின் குழுவே செய்தது. காலை வேளை ஆய்வுகளில் தீபா பங்கு கொள்வாள். வந்தனாவின் மேற்பார்வை சம்மந்தப் பட்ட வேலைகளில் காலையில் சில மணி நேரங்களும் பிறகு மாலை வீடு திரும்புமுன் அரை மணி நேரமும் செலவழிந்தது. இவைகளை தவிர தோழிகள் இருவரும் மாங்க்ஸ் பாட் நெட்டின் மெஸ்ஸேஜ்களையும் அதில் இணைக்கப பட்ட தங்களது நூறு கணிணிகளின் நடவடிக்கைகளையும் ஆராய்வதில் ஈடுபட்டு இருந்தனர். முதன் முதலில் மாங்க்ஸ் பாட் நெட்டில் எந்த கணிணியையும் சர்வர் நேரடியாக தொடர்பு கொள்வது இல்லை என்று கண்டு அறிந்தனர். செல்ஃப் டிஸ்ட்ரக்ட் மெஸ்ஸேஜ்களைப் போல ஒரு குறிப்பிட்ட கணிணிக்கென வரும் மெஸ்ஸேஜ்களும் பல கணிணிகளின் வாயிலாக வருவதால், இணையத்தின் மாங்க்ஸ் பாட் நெட்டின் தகவல் போக்கு வரத்து மூலம் அவர்களது சர்வரை கண்டு அறிய முடியாது என்றும் அறிந்தனர். இருப்பினும், AKBOT வேட்டையின் போது அதிகமாக பயன்பட்டதால், இணைய தகவல் போக்குவரத்தை கண்காணித்து பட்டியலிடும் மென்பொருளை அந்த நூறு கணிணிகளிலும் புகுத்தி இருந்தனர். அந்த நூறு கணிணிகளிலும் மாங்க்ஸ் பாட் நெட்டின் மெஸ்ஸேஜ்களுடன் அந்த கணிணியில் நடைபெறும் எல்லா இணையத் தகவல் போக்குவரத்துகளும் பட்டியலிட்டபடி இருந்தன. ஏதாவது எதிர்பாராத போக்கு வரத்தோ அல்லது அவர்கள் இதுவரை பார்த்திராத வகையான மாங்க்ஸ் மெஸ்ஸேஜ்ஜோ அப்பட்டியலகளில் புதிதாக வந்து இருக்கிறதா என்று பரிசீலனை செய்வதற்காக தோழிகள் ஒரு மென்பொருளை எழுதி இருந்தனர். அந்த மென்பொருளை அந்த நூறு கணிணிகளை தவிர வேறு ஒரு கணிணியில் புகுத்தி இருந்தனர். ஒவ்வொரு நாளும் மாலை 4:45க்கு அந்த மென்பொருள் தானாக இயங்கத் தொடங்கும்படி அமைத்து இருந்தனர். அந்த மென்பொருள் மற்ற நூறு கணிணிகளில் இருக்கும் பட்டியல்களை தான் இருக்கும் கணிணிக்குள் ஒன்று சேர்த்து புதிதாக ஏதாவது தென்பட்டால் அறிவிக்கும். அப்படி அறிவிக்க அந்த மென்பொருள் தன் குரலிலேயே "யூரேகா" என்ற வார்த்தையை ஒலி எழுப்புமாறு தீபா அமைத்து இருந்தாள். மேலும் மாங்க்ஸ் பாட் நெட்டின் மெஸ்ஸேஜ்களை தவிர வேறு ஏதாவது இணையத் தகவல் பரிமாற்றம் ஏற்பட்டால் "யாஹூ" என்ற வார்த்தையை ஒலிக்குமாறும் அமைத்து இருந்தாள். அன்று மாலை அடுத்த சுற்றுக்கான ஆயத்தங்களை மேற்பார்வை செய்தபிறகு ப்ரொஃபெஸ்ஸர் சாரியின் குழு அமர்ந்து இருந்த அறையில் இருந்து தங்களது நூறு கணிணிகள் கொண்ட லாப்பிற்குள் வந்தனா வந்தாள். தீபாவின் இருக்கைக்குச் சென்று பார்க்க அவள் சுவாரஸ்ஸியமாக இணையத்தில் கேம் விளையாடிக் கொண்டு இருந்தாள். வந்தனா, "எப்படி போச்சு ப்ரொஃபெஸ்ஸரோட உன் மீட்டிங்க்? எதுக்கு கூப்பிட்டு இருந்தார்? எப்ப திரும்பி வந்தே" என்று கேட்ட வாறு அவள் எதிரே அமர்ந்தாள். தீபா, "போன வாரம் அவர் வெளியூருக்கு போயிருந்தார் இல்லையா? போன வாரம் ரிவ்யூ பண்ணிதை இன்னொரு தடவை ரிவ்யூ செய்யறதுக்கு என்னை கூப்பிட்டு இருந்தார். இட் வாஸ் ரீயலி ரீயலி போரிங்க்!! முடிச்சுட்டு அங்கேயே லஞ்ச் சாப்பிட்டுட்டு வரும் போது மணி ரெண்டரை" வந்தனா, "யூ நோ சம்திங்க்? காலையில் இருந்து எனக்கும் போர் அடிச்சுட்டு இருந்துது. சக்தி ஃபோனில் கூப்பிட்டான்" தீபா, "ஏன் காலையில் கூப்பிடலையா?"
வந்தனா, "காலையிலும் கூப்பிட்டு இருந்தான். அவனுக்கு எதோ வேலை இருந்து இருக்கு. நைட் ஒரு மணிக்கு ஆஃபீஸுக்கு வந்துட்டு வீட்டுக்கு போறதுக்கு முன்னாடி கூப்பிட்டான்" தீபா, "எனிதிங்க் ஸ்பெஷல்" வந்தனா, "நத்திங்க் .. சும்மா" தீபா, "சோ அதுக்கு அப்பறம் தெம்பா வொர்க் பண்ணினேயாக்கும்?" வந்தனா, "ஆமா. இப்ப என் வேலை எல்லாம் முடிஞ்சுது. இன்னைக்கு மனீஷ் அண்ணா வர்றான். சீக்கிரம் வீட்டுக்கு போலாம் புறப்படு" தீபா, "ஹேய், எப்பவும் வெள்ளிக் கிழமை நைட்டுதானே வருவார்?" வந்தனா, "நாளைக்கு எதோ மீட்டிங்க் இருக்காம். அதனால் இன்னைக்கே வர்றான்" தீபா, "ஹப்பா, வா போலாம் அட்லீஸ்ட் வீட்டிலாவது கொஞ்சம் கலகலப்பா இருக்கும். இரு ரெஸ்ட்ரூம் போயிட்டு வர்றேன். கிளம்பலாம்" என்றவாறு தன் தோள்பையை வந்தனாவிடம் கொடுத்துச் சென்றாள்.நூறு கணிணிகள் கொண்ட லாப்பின் நடுவே இருக்கும் நடைபாதையில் நின்று கொண்டு தீபாவின் வரவுக்காக காத்து இருக்கும் போது, தீபா சென்ற திசைக்கு எதிர் திசையில் தீபாவின் குரலில், "யூரேகா" என்று மூன்று முறையும் தொடர்ந்து "யாஹூ" என்று மூன்று முறையும் ஒலித்ததைக் கேட்டாள். சில கணங்களில் அந்த குரலின் பின் விளைவுகளை உணர்ந்தவள் பட்டியல்களை ஒன்று சேர்த்து ஆராயும் கணிணிக்கு அருகே செல்ல, அதன் திரையில் கீழ்கண்டவாறு ஒரு அறிவிப்பு விண்டோ தெரிந்தது சில கணங்கள் அதைப் பார்த்தவாறு அமர்ந்து இருந்த வந்தனா உடனே தன் கைபேசியில் ஷான் ஹென்றியை அழைத்தாள். ஷான், "Vanthana, you better have some good reason to wake me up" வந்தனா, "ஷான், மாங்க்ஸ் பாட் நெட்டில் ஒரு கணிணிக்கு IRC சேனல் மூலம் தகவல் பரிமாற்றம் நடந்து இருக்கு" ஷான், "வாட்? எப்போ?" வந்தனா, "எங்க நேரப்படி இன்னைக்கு ஒரு மணி ரெண்டு நிமிஷத்தில்" அப்போது தீபா அருகே வந்து என்னவென்று ஜாடையில் கேட்க, பேசியவண்ணம் அந்த கணிணியின் திரையை காடினாள். திரையை சில கணங்கள் பார்தத தீபா கணிணி எண் 68க்கு சென்று அமர்ந்தாள். ஷான், "உங்க நேரப் படியா?" வந்தனா, "ஆமா ஷான். தகவல் பரிமாற்றம் நடந்த பாட் எங்க லாப்பில் இருக்கு" ஷான், "மை காட்! எங்கே இருந்து? ஐ.பி.அட்ரெஸ் இருக்கா?" வந்தனா, "இருக்கு உடனே டெக்ஸ்ட் செய்யறேன்" ஷான், "எவ்வளவு நேரம் தகவல் பரிமாற்றம் நடந்து இருக்கு. எத்தனை தகவல்கள்?" வந்தனா, "ரெண்டே ரெண்டு. முதலில் ஒரு மணி ரெண்டு நிமிஷத்தில் 192.168.1.53 என்கிற ஐ.பி அட்ரெஸ்ஸில் இருந்து 66.206.84.151 என்கிற கேட்வே வழியா ஒரு சாட் மெஸ்ஸேஜ் வந்து இருக்கு. அப்பறம் இந்த கணிணி ஒரு மணி மூணூ நிமிஷத்தில் அதே ஐ.பி அட்ரெஸ்ஸுக்கு ஒரு சாட் மெஸ்ஸேஜ் அனுப்பி இருக்கு. அவ்வளவுதான்" ஷான், "என்னவா இருக்கும்?" வந்தனா, "அதை நாங்க அனலைஸ் பண்ணறோம். நீங்க அந்த ஐ.பி.அட்ரெஸ் யாருதுன்னு உடனே கண்டு பிடியுங்க" ஷான், "ஓ.கே. நான் உடனே க்ரிஸ்ஸுக்கு .. " வந்தனா, "ஷான், ஷான், ... திட்ட வட்டமா தெரிஞ்சதுக்கு அப்பறம் பெரிய தலைகளுக்கு சொல்லலாம். உங்களுக்கு என்ன விவரம் தெரிஞ்சாலும் உடனே எனக்கு சொல்லுங்க. ப்ளீஸ்" ஷான் சிரித்தபடி, "Oh! I forgot you know bureaucracy as well as I do!" என்றவாறு விடைபெற்றார்.தீபா அமர்ந்து இருந்த கணிணி எண் 68க்கு அருகே சேன்ற வந்தனா, "என்ன தீபா? என்ன நடந்து இருக்கு?" தீபா, "அமேஸிங்க்" வந்தனா, "என்னன்னு சொல்லு" தீபா, "அவங்க முதலில் அனுப்பி இருந்த மாங்க்ஸ் மெஸ்ஸேஜ்கள் எல்லாம் வைரஸ்ஸை அப்க்ரேட் செய்யும் மெஸ்ஸேஜ்கள் என்பது என் அனுமானம்." வந்தனா, "எப்படி சொல்றே?" தீபா, "வைரஸ் உருமாறி இருக்கு" வந்தனா, "வாட்? எப்படி?" தீபா, "அதன் அளவு அதிகமாகி இருக்கு" வந்தனா, "முதல் முறையா மாங்க்ஸ் பாட் நெட்டில் இந்த மாதிரி ஒரு நடவடிக்கையை பார்க்கறோம். இல்லையா?" தீபா, "ஆமா. இங்கே பாரு 9:38இல் இருந்து 9:47வரைக்கும் அந்த மாதிரி மெஸ்ஸேஜ்கள் வந்து இருக்கு. மொத்தம் சுமார் 1.2MB. அதுக்கு அப்பறம் வைரஸ்ஸின் அளவு 238KBஇல் இருந்து 312KBஆ மாறி இருக்கு" வந்தனா, "பாக்கி அந்த விண்டோஸ் வால் பேப்பரில் இருக்கா?" தீபா, "அதில் இல்லை. அதே மாதிரி வேறு எதாவது ஒரு ஜேபெக் ஃபைலுக்குள் இருக்கும். ஒவ்வொண்ணா தேடிப் பாத்தா கண்டு பிடிச்சுடலாம்" வந்தனா, "ஹேய், அதுக்கு அப்பறம் இந்த கணிணி அதே மாதிரி மெஸ்ஸேஜ்களை அனுப்பி இருக்கு பாரு" தீபா, "பார்த்தேன். க்ரூப் க்ரூப்பா இது வரைக்கும் சரியா 28 மெஸ்ஸேஜ் செட் அனுப்பி இருக்கு. சர்வரில் இருந்து வரும் ஈமெயில் மெஸ்ஸேஜ்களை மத்த கணிணிகளோட பகிர்ந்துக்கற மாதிரி இந்த மெஸ்ஸேஜ்களையும் மத்த கணிணிகளுக்கு அனுப்பி இருக்கு" வந்தனா, "இல்லை தீபா! ஈமெயில் அனுப்பும் ஆணைகள் இந்த மெஸ்ஸேஜ்களுக்கு நடுவில் வேறு கணிணிகளுக்கு போயிட்டே இருந்து இருக்கு. இந்த வகையான மெஸ்ஸேஜ்கள் மட்டும் அஞ்சு ஆறு நிமிஷத்துக்கு ஒரு முறை சில கணிணிகளுக்கு மட்டும் அனுப்பி இருக்கு" என்று சுட்டிக் காட்டினாள். தீபா மலைத்துப் போய் அமர்ந்து இருந்தாள், "எஸ்! என்னவா இருக்கும்?" என்றபடி மற்றொரு லாக் ஃபைலை திறந்து பார்த்தாள். பிறகு திடீரென தீபா, "வந்தனா, ஓ மை காட்! இங்கே பாரு. IRC சேனல் மூலம் தொடர்பு எத்தனை மணிக்கு தொடர்பு வந்து இருக்குன்னு" வந்தனா, "தெரியும் மதியம் 1:02க்கு"
தீபா, "இப்ப இந்த மெஸ்ஸேஜ் லாக் ஃபைலைப் பார். 1:03க்கு அப்பறம் ஒரு மெஸ்ஸேஜ்ஜும் இந்த கணிணியில் இருந்து போகலை. அந்த நிமிடத்தில் இருந்து இந்த வைரஸ் ஸ்தம்பிச்சுப் போய் நின்னு இருக்கு. As though it has been suspended" வந்தனா, "என்னவா இருக்கும். முதலில் வைரஸ்ஸை அப்க்ரேட் செஞ்சு இருக்காங்க. அப்பறம் நேரடியா தொடர்பு கொண்டு அதன் இயக்கத்தை நிறுத்தி இருக்காங்க"Friday, 3 April 2009 9:00 AM Conference room in R&AW Headquarters, CGO Complex, New Delhi வெள்ளி, ஏப்ரல் 3, 2009 காலை 9:00 R&AW தலைமை அலுவலகத்தில் இருக்கும் கலந்தாய்வுக் கூடம், CGO காம்ப்ளெக்ஸ், புது தில்லி அனைவரும் அமர்ந்து இருந்தனர். வந்தனாவும் தீபாவும் நேற்றைய தினத்தின் பரபரப்பான கண்டு பிடுப்புகளை விளக்கினர். ப்ரொஃபெஸ்ஸர் சாரி, "வாவ், இந்த ப்ரூட் ஃபோர்ஸ் பாட்டர்ன் மாட்சிங்க் இழுத்துட்டே இருக்கேன்னு எதாவுது ஒரு ப்ரேக் கிடைக்காதான்னு கொஞ்ச நாளைக்கு முன்னாடிதான் நான் ப்ரே பண்ண ஆரம்பிச்சேன்" முரளீதரன், "சக்தியும் நித்தினும் திரும்பி வரதுக்குள்ள இந்த அசைன்மெண்டை முடிக்கணும்ன்னு தீபாவும் வந்தனாவும் ப்ரே பண்ணறதை விட நீங்க அதிகமா பண்ணி இருக்க முடியாது. என்ன வந்தனா? நான் சொல்றது சரிதானே?" அந்த சூழலில் இருந்த பரபரப்பையும் மீறி வந்தனா வெட்கத்தில் முகம் சிவந்து தலை குனிந்தாள். தீபா, 'டேய் பிசாசே, என்னை ஏன் இப்படி ஆக்கிட்டே? வேலையில் ஒரு முக்கியமான திருப்புமுனை. அந்த சமயத்தில்கூட உன் பேரைக் கேட்டதும் எனக்கு உன்னை உடனே பாக்கணும்போல இருக்கு' என்று மனதுக்குள் நித்தினை சபித்தாள். ப்ரொஃபெஸ்ஸர் சாரி, "எப்படியோ இந்த அசைன்மெண்ட் முடியறதுக்கு ஒரு வாய்ப்பு அமைஞ்சு இருக்கு. ஷான் கிட்ட இருந்து அப்டேட் வந்துதா?" முரளீதரன், "இப்ப அவர்கூட டெலிகான்ஃபெரன்ஸில் பேசப் போறோம்" ஷான்னும் சான்ட்ராவும் அவர்களுடன் டெலிகான்ஃப்ரென்ஸ் மூலம் கலந்து கொண்டனர். நகத்தை கடித்தவாறு இருந்த தீபா மறுமுனையில் ஷான் வந்தவுடன் பொறுமை இழந்து, "ஷான், கண்டு பிடிச்சுட்டீங்களா?" ஷான், "நோ தீபா. கண்டு பிடிக்க முடியுமான்னும் தெரியலை" வந்தனா, "என்ன சொல்றீங்க ஷான்?" ஷான், "வந்தனா, நீ கொடுத்த ஐ.பி அட்ரெஸ்ஸ் ப்ளூ ஃபின் அப்படின்னு ப்ராட்வேயில் (Broadway - ஒரு பிரபலமான வீதி) இருக்கும் ஒரு ரெஸ்டாரண்ட்டோடது" தீபா, "அந்த ரெஸ்டாரண்ட் ஓனரை விசாரிச்சீங்களா?" ஷான், "அவசியமே இல்லை. அந்த ஐ.பி அட்ரெஸ் அந்த ரெஸ்டாரண்ட்டோட வை-ஃபை ஃஜோனின் கேட்வே (Wi-fi zone gateway). ரெஸ்டாரண்டுக்கு சாப்பிட வாருபவர்கள் இலவசமா உபயோகிப்பதற்காக அந்த ரெஸ்டாரண்ட் அதை அமைச்சு இருக்கு. இதனாலேயே அந்த ரெஸ்டாரண்டில் சாலை ஓரம் இருக்கும் பகுதியில் எப்பவும் கூட்டம் இருக்கும். எல்லாரும் லாப்டாப் அல்லது வை-ஃபை எனேபிள்ட் ஸ்மார்ட் ஃபோன் (Wi-fi enabled smartphone) மூலம் ப்ரௌஸ் பண்ணிட்டு இருப்பாங்க. இன் ஃபாக்ட் அந்த வை-ஃபை ஃஜோனை உபயோகிக்க ரெஸ்டாரண்ட்டுக்குள் போக வேண்டிய அவசியமே இல்லை. அந்த ரோட்டில் ரெஸ்டாரண்ட் இருக்கும் சைட் முழுக்க பார்க்கிங்க் அனுமதிக்கப் பட்டு இருக்கு. ரெஸ்டாரண்ட் வாசலில் காரை நிறுத்தி காருக்கு உள்ளே இருந்துகூட வை-ஃபை ஃஜோனை உபயோகிச்சு இருக்க முடியும்" தீபா, "ஷான் நைன்-இலவனுக்கு பிறகு நியூ யார்க்கில் எல்லா இடத்திலும் சர்வேய்லன்ஸ் கேமரா இருக்குன்னு நீங்களே சொன்னீங்க இல்லையா? ஒவ்வொரு கேமராவில் ரெக்கார்ட் ஆனதை வெச்சு யாருன்னு கண்டு பிடிக்க முடியாதா?" முரளீதரன், "ஹெய், நீ எப்படி போலீஸ் மாதிரி யோசிக்க ஆரம்பிச்சே?" ஷான், "முரளீ, கடைசியில் தீபா சொன்னத்தான் செய்யப் போறோம். ஆனா அது அவ்வளவு சுலபமான வேலை இல்லை. அந்த நேரத்தில் ரெஸ்டாரண்டில் மற்றும் ரோட் ஓரத்தில் இருந்தவங்களோட முகத்தை வெச்சு அவங்களோட விலாசத்தை கண்டு பிடிச்சு அங்கே போய் விசாரிக்கணும். அதுவும் ரொம்ப நாசூக்கா செய்யணும்" வந்தனா, "ஏன்? இதில் நாசூக்கு எதுக்கு? கூப்பிட்டு விசாரிக்கத்தானே போறோம்? அரெஸ்ட் பண்ணப் போறது இல்லையே?" ஷான், "வந்தனா, இது இண்டியா இல்லை புரிஞ்சுக்கோ. சர்வேய்லன்ஸ் கேமரா எல்லா இடத்திலும் வெச்சதுக்கே பல மனித உரிமைவாதிகள் எதிர்ப்பு தெரிவிச்சாங்க. நாம் விசாரிக்கப் போறவங்களில் அந்த மாதிரி ஆளுங்க யாராவது இருந்தா Invasion of Privacyன்னு கேஸ் போட்டுடுவாங்க" முரளீதரன், "சோ, ஒவ்வொருத்தரையா யாருன்னு அடையாளம் கண்டு பிடிச்சு போய் விசாரிக்கப் போறீங்களா?" ஷான், "எஸ் முரளீ, முதலில் என்.எஸ்.ஏவின் உதவியோட அங்கே இருந்தவங்களை அடையாளம் கண்டு பிடிக்கணும். அப்பறம் ஒவ்வொருத்தரையா அணுகி விசாரிக்கணும். இந்த ஸர்ச்சுக்கு தீவிரவாதம் முக்கியத்துவம் இல்லை. அதனால் என்.எஸ்.ஏ உடனுக்கு உடன் செய்ய மாட்டாங்க. உடனுக்கு உடன் செய்யவும் முடியாது ஏன்னா நூறு பேருக்கு மேல் அந்த சமயத்தில் ரெஸ்டாரண்டுக்குள்ளும் சுற்று வட்டாரத்திலும் இருந்து இருக்காங்க. ரொம்ப நாள் ஆகும்"
ப்ரொஃபெஸ்ஸர் சாரி, "அப்ப நாங்க இப்ப செஞ்சுட்டு இருக்கும் வேலை .. " என்று இழுக்க முரளீதரன், "ப்ரொஃபெஸ்ஸர், அதன் மூலம் நமக்கு சர்வர் ஐ.பி.அட்ரெஸ் கிடைச்சா அதுதான் அசைக்க முடியாத ஆதாரம். ப்ளீஸ் அதை நிறுத்தணும்ன்னு கனவிலும் நினைக்க வேண்டாம். உங்க வேலை தொடரட்டும். ஷான் அவங்க வேலையை செய்யட்டும். அவங்களுக்கு எந்த விதத்திலாவுது ப்ரேக் த்ரூ கிடைச்சா உடனே தெரிவிப்பாங்க. நீ என்ன சொல்றே ஷான்?" ஷான், "முரளி சொல்றதை நான் முழுவதும் ஆமோதிக்கறேன். பட், தீபா, வந்தனா, நீங்க மேலும் உங்க மாங்க்ச் பாட் நெட் கண்காணிப்பை தொடருங்க. அதிலும் எதாவுது க்ளூ கிடைக்கலாம்" முரளீதரன், "அஃப்கோர்ஸ் ஷான்" எல்லோரும் விடைபெற்றனர்.

No comments:

Post a Comment