Thursday, January 29, 2015

செக்மேட் - சைபர் கிரைம் திரில் தொடர் - பாகம் - 17


விமான நிலையத்தில் போர்டிங்க் பாஸ் எடுக்கும் க்யூவில் நின்று கொண்டு இருந்த போது நித்தினும் சக்தியும் அங்கு வந்து சேர்ந்தனர். அவர்களுக்கு அருகே வந்த இருவரும், "ஹாய், சாரி லேட்டாயிடுச்சு" என்று வழிந்தனர். முரளீதரன் தான் இருப்பதால் வந்த சங்கடத்தில் நெளிந்த தோழிகளிடம், "நான் க்யூவில் நின்னுட்டு இருக்கேன். நீங்க உங்க ஃப்ரெண்ட்ஸ்கூட பேசிட்டு வாங்க. க்யூ நகர இன்னும் பதினைந்து நிமிஷமாவுது ஆகும்" என்று அவர்களை அனுப்பினார். இரு ஜொடிகளும் இருபுறம் சென்றதை சுவாரசியமாக பார்த்துக் கொண்டு இருந்தார். ~~~~~~~~ தீபா, "பேசாதே போ!" நித்தின், "அதான் சாரின்னு சொன்னேன் இல்லை"
தீபா, "உனக்கு இப்பத் தான் நேரம் கிடைச்சுதா?" நித்தின், "ஏய், ஐ செட் சாரி..." தீபா, "போய் உன் இன்ஸ்யூரன்ஸையே கட்டிட்டு அழு. உனக்காக காலையில் இருந்து வெயிட் பண்ணிட்டு இருக்கேன். எத்தனை தடவை உன் செல்லில் கூப்பிட்டேன். ஒரு தடவையாவுது ஆன்ஸர் பண்ணினயா. உனக்கு என் மேல ...." அதற்கு மேல் அவளால் பேச முடியவில்லை. அவளை இழுத்து அணைத்த நித்தினின் உதடுகள் அவளது இதழ்களை சிறை பிடித்து இருந்தன. பிறகு அணைத்தபடி அவர்களின் பேச்சு சகஜ நிலையில் தொடர்ந்தது. ~~~~~~~~~~~~~~ வந்தனா, "ஏன் இவ்வளவு லேட்? சீக்கிரம் வந்து இருக்கலாம் இல்லை?" சக்தி, "சாரி டியர். வேலை இருக்கும்ன்னு சொன்னேன் இல்லையா?" வந்தனா, "சொன்னேதான். ஏழு மணிக்காவுது நீ வந்து இருக்கலாம்" சக்தி, "சாரி ... இருக்கும் சில நிமிடங்களை வேஸ்ட் பண்ண வேண்டாம்" அருகில் வந்தவனின் கைகள் அவள் இடையை வளைத்து தூக்க அவள் கைகள் அவன் கழுத்தை வளைத்து இதழோடு இதழ் சேர்த்தனர். சில நிமிடப் பேச்சுக்கு பிறகு மறுபடி க்யூவை நோக்கி இருவரும் நடந்தனர். ~~~~~~~~~~~ க்யூவை அடைந்த தன் டீம் மெம்பர்கள் இருவரும் அவர்களுடன் இருந்த ஆடவர்களிடம் கண்களால் பகிர்ந்து கொண்ட அன்னியோன்னியத்தை முரளீதரன் கவனித்தார்.Monday, 1 Sep 2008 9:00 AM A conference room in R&AW Headquarters, CGO Complex, New Delhi திங்கள் செப்டம்பர் 1 2008 காலை 9:00 R&AW தலைமை அலுவலகத்தில் இருக்கும் கலந்தாய்வுக் கூடம், CGO காம்ப்ளெக்ஸ், புது தில்லி சுற்றி இருந்த நாற்காலிகளில் ஜாயிண்ட் டைரக்டர், வந்தனா, தீபா மற்றும் ஒரு தலை சிறந்த கல்லூரியில் கணிதப் பேராசிரியரான ப்ரொஃபெஸ்ஸர் கே.எஸ்.சாரி அவர்களும் அமர்ந்து இருந்தனர். முரளீதரன் மாங்க்ஸ் பாட் நெட்டைப் பற்றி ஒரு ப்ரஸெண்டேஷன் மூலம் விளக்கினார். ப்ரொஃபெஸ்ஸர் சாரி, "முரளி, Let me summarise what you said so far. Correct me where I am wrong, இந்த மாங்க்ஸ் பாட் நெட் மூலம் என்ன வேணும்னாலும் செய்யலாம். ஆனா அதை உருவாக்கினவங்க அப்படி இதுவரை செய்யலைன்னாலும் செய்யக் கூடும் என்ற அபாயம் கருதி அமெரிக்க அரசாங்கம் அதை கைப் பற்றணும்ன்னு முடிவெடுத்து இருக்கு. அதற்கு நாம் உதவப் போறோம். இல்லையா?" முரளீதரன், "எஸ், நீங்க சொல்றது ஓரளவு சரி. இதுவரை எந்த சட்ட விரோத செயலையும் பணத்துக்காக செய்யலைன்னு சொல்லலாம். அதே சமயம் அவங்க இதுவரை நடந்துகிட்ட விதத்தை வெச்சு அவங்க எப்படி பட்டவங்களா இருக்கக்கூடும்ன்னு மனோதத்துவ முறைப் படி ஆராய்ந்ததில் எந்த வெறித்தனமா சட்ட விரோத செயலிலும் ஈடுபட மாட்டாங்கன்னு தோணுது" ஜாயிண்ட் டைரக்டர், "அப்பறம் எதுக்கு அவங்க இந்த அளவுக்கு சக்தி வாய்ந்த ஒரு பாட் நெட்டை உருவாக்கணும்?" முரளீதரன், "எஃப்.பி.ஐயின் யூகம், which I concur, என்னன்னா, அவங்க அதை உருவாக்கும் போது எதுக்கு பயன் படுத்தணுன்னு நினைச்சு உருவாக்கலை. அவங்களோட கண்டுபிடிப்பு ஒரு அளவுக்கு accidentalன்னு (எதேட்சையா நடந்ததுன்னு) சொல்லலாம். கண்டு பிடிச்ச பிறகுதான் அவங்களுக்கே அதன் ஆற்றலைப் பற்றி புரிஞ்சு இருக்கு. ஆனால் அதை சட்ட விரோதச் செயலுக்கு பயன் படுத்த விரும்பலை. இருந்தாலும் தங்களோட கண்டு பிடிப்பை ஹாக்கர்கள் மத்தியில் சொல்லி பெருமை பட்டு இருக்காங்க" ஜாயிண்ட் டைரக்டர், "எப்படி விளம்பர ஈமெயில் அனுப்பறதைத் தவிர பணத்துக்காக எந்த சட்டவிரோதச் செயலில் ஈடுபடலைன்னு சொல்றீங்க?" முரளீதரன், "எஃப்.பி.ஐ அவங்களை மறைமுகமா பல முறை அணுகி பாத்து இருக்கு. விளம்பர ஈமெயில் அனுப்புவதை தவிர வேற எதற்க்கும் அவங்க ஒத்துக்கறது இல்லை" ப்ரொஃபெஸ்ஸர் சாரி, “எப்படி அவங்களை அணுகறது?” முரளீதரன், “monks2006@gmail.com அப்படிங்கற அவர்களின் ஜீமெயில் ஐடி மூலம்” ப்ரொஃபெஸ்ஸர் சாரி, "வாவ், அவங்களுக்கு மெயில் ஐ.டி இருக்குன்னா, அந்த மெயில் பாக்ஸை எந்த இணைய விலாசத்தில் இருந்து உபயோகிக்கறாங்கன்னும் கூகிள் நிறுவனத்தின் மூலமே தெரிஞ்சுக்கலாமே?" முரளீதரன், "இல்லை ப்ரோஃபெஸ்ஸர், இந்த மெயில் அக்கௌண்டை அவங்க வீட்டில் இருந்தோ அலுவலகத்தில் இருந்தோ ஓபன் பண்ணற அளவுக்கு அவங்க முட்டாள்களா இருக்க மாட்டாங்க. எதாவுது இன்டர்நெட் பார்லரில் இருந்து ஓபன் பண்ணி பாத்து பதில் போடுவாங்க. எந்த ஊர், எந்த நாடு எதுவும் சொல்ல முடியாத நிலையில் அந்த கோணத்தில் ஆராய்ந்தால் ஒரு பயனும் இல்லைன்னு விட்டுட்டாங்க. அது மட்டும் இல்லை மனித உரிமை சட்டம் அமெரிக்காவில் ரொம்ப ஸ்ட்ராங்க். அரசாங்கம் ஒரு மெயில் ஐடியின் போக்குவரத்தை அந்த மெயில் ஐடியின் உரிமையாளருக்கு தெரியாமல் கண்காணிக்கணும்ன்னா அதுக்கு தகுந்த கோர்ட் ஆர்டர் வேணும். அவங்க அரசாங்கத்துக்கு எதிரா செயல் படக்கூடும் அப்படிங்கறதுக்கு தகுந்த ஆதாரங்களோட அணுகினால்தான் கோர்ட்அதற்கான ஆர்டர் கொடுக்கும். இது எல்லாத்துக்கும் மேல், இவ்வளவு திறமையோட செயல்படறவங்க அந்த ஐ.டியை ஒரு நிஜமான நபரின் பெயரில் தொடங்கி இருக்க மாட்டாங்க. இல்லையா“ ப்ரொஃபெஸ்ஸர் சாரி, “இருந்தாலும் கோர்ட் ஆர்டர் வாங்கறது முடியாத ஒரு செயலா என்ன?” முரளீதரன், “முடியும். இல்லைன்னு சொல்லலை. ஆனா அது ஒரு பெரிய ப்ராஸஸ். அதனால எஃப்.பி.ஐ இதுவரை அதை செய்யலை. ஆனா, இப்ப மாங்க்ஸ் பாட் நெட்டுக்கு கிடைத்து இருக்கும் மோசமான விளம்பரத்தினால் எளிதா கோர்ட் ஆர்டர் வாங்கி கூகிள் நிறுவனத்தை அணுக முடியும்." ப்ரொஃபெஸ்ஸர் சாரி, "சரி, மேல சொல்லுங்க நீங்க எப்படி கண்டு பிடிக்கப் போறீங்க? எங்கே என் உதவி தேவை?" முரளீதரன், "வந்தனா, You please continue .. ." வந்தனா அவர்கள் இதுவரை கண்டு பிடித்ததையும் அவர்களது செயற்திட்டத்தையும் விளக்கினாள். முடிவில், "Let me summarize. மாங்க்ஸ் பாட் நெட் சர்வரில் இருந்து வரும் ஆணைகளில் அதன் இணைய விலாசம் புதைந்து இருக்கு. சர்வரில் இருந்து வரும் மெஸ்ஸேஜ்களை பிரிச்சு எடுத்து ஆராய்ந்து அந்த இணைய விலாசத்தை கண்டு பிடிக்கணும். கூடவே அவங்களுக்கு ஈமெயில் விளம்பரத்துக்கான ஆர்டர் கொடுக்கும் போதும் அதற்கான பணத்தை அவங்களுக்கு கொடுக்கும் போதும் அவங்களை நேரடியா அணுக முடியுதான்னு பார்க்கணும். எங்க ஆக்க்ஷன் ப்ளானை நான் மூணு மேஜர் ஸ்டெப்ஸா பிரிச்சு இருக்கேன். ஒவ்வொரு ஸ்டெப்புக்கும் எவ்வளவு நாள் தேவைன்னுநாங்க கணித்ததையும் கொடுத்து இருக்கேன்" என்ற படி அடுத்த ஸ்லைடைக் காட்டினாள் 1. ஈமெயில் விளம்பரங்களுக்கான ஆர்டர்களை கொடுத்து மாங்க்ஸ் சர்வரில் இருந்து வரும் ஆணைகள் கொண்ட மெஸ்ஸேஜ்களை பிரித்து எடுத்து சேமிப்பது. இதே கட்டத்தில் ஈமெயில் விளம்பரத்துக்கான ஆர்டர் கொடுக்கும் போதும் அதற்கான பணத்தை அவங்களுக்கு கொடுக்கும் போதும் அவங்களை நேரடியா அணுக முடியுதான்னு பார்க்கற வேலையை எஃப்.பி.ஐ செய்ய ஒத்துகிட்டு இருக்காங்க. .... மூன்று மாதங்கள் .... செப்டெம்பர் 1 2008 முதல் நவம்பர் 28 வரை 2. நூறு கணிணிகளில் மாங்க்ஸ் வைரஸை புகுத்தி அவைகளின் மெஸ்ஸேஜ்களை டாம்பர் செய்து சர்வரில் இருந்து தன்னை தானே அழித்துக் கொள்வதற்கான ஆணைகள் கொண்ட செல்ஃப் டிஸ்ட்ரக்ட் மெஸ்ஸேஜ்களை சர்வரில் இருந்து வரவழைத்து அவைகளை பிரித்து எடுப்பது. ..... ஒரு மாதம் ... டிஸம்பர் 2008 முழுவதும் 3. ஈமெயில் விளம்பரம் அனுப்ப வந்த ஆணைகளையும், தன்னை தானே அழித்துக் கொள்ள வந்த ஆணைகளையும் ஒன்றாக சேர்த்து அவைகளில் புதைந்து இருக்கும் சர்வரின் இணைய விலாசத்தை ஆராய்ந்து கண்டு பிடிப்பது .... மூன்று அல்லது நான்கு மாதங்கள் ஆகலாம் ... இதை இப்போதைக்கு சரியாக கணிக்க முடியாது" 4. ப்ரொஃபெஸ்ஸர் சாரி, "வந்தனா நானும் என் டீமும் எந்த ஸ்டெப்பில் முழுசா இன்வால்வ் ஆகணும்?" வந்தனா, "கடைசி ஸ்டெப் முழுக்க முழுக்க உங்களுதுதான் சார். அந்த ஸ்டெப்புக்கு தேவையான அளவுக்கு எங்களுக்கு தெரியாது. பட், மத்த ஸ்டெப்ஸ்லயும் வாரத்துக்கு ஒரு தடவை நீங்களும் முரளி சார்கூட சேர்ந்து ரிவ்யூ பண்ணினா நல்லா இருக்கும்" ப்ரொஃபெஸ்ஸர் சாரி, "ஓ.கே. டன்! ஆனா முரளி, அவங்களை அணுக இருக்கும் ஒரே வழி அவங்க ஜீமெயில் ஐ.டி. கூகிள் நிறுவனத்தின் உதவியோட அவங்களை கண்டு பிடிக்க முடியுமான்னு இன்னும் தீவிரமா முயற்சி செய்யணும்ன்னு எனக்கு தோணுது. அப்படி முடியும்ன்னா வந்தனா, நீ சொன்ன மத்த எதுவும் தேவை இல்லை. சரியா?" வந்தனா, "எஸ் ப்ரொஃபெஸ்ஸர்" ப்ரொஃபெஸ்ஸர் சாரி, "முதலில் ஏன் ஈமெயில் விளம்பரத்துக்கான் ஆர்டர் கொடுத்து சர்வரில் இருந்து வரும் ஆணைகளை பிரித்து எடுக்க மூணு மாசம் தேவைன்னு போட்டு இருக்கே?" வந்தனா, "நமக்கு குறைஞ்சசு முந்நூறு மெஸ்ஸேஜ்களாவுது தேவை. ஒரே நாளில் நிறைய ஆர்டர் கொடுக்க முடியாது. கொடுத்தா சந்தேகப் படுவாங்க. அதனால வாரத்துக்கு ரெண்டு அல்லது மூணு ஆர்டர்ன்னு கணக்கு பண்ணி இருக்கேன். நாம் கொடுப்பதை தவிர அவங்களுக்கு வாரத்துக்கு ஒரு ஆர்டராவுது வருது. அதையும் சேர்த்து முந்நூறுன்னு கணக்கிட்டு இருக்கேன்" ப்ரொஃபெஸ்ஸர் சாரி, "சோ, நீ போட்ட ப்ளானில் இருந்து ரொம்ப விலகாம ஒரு காரியம் செய்யலாம். உன் ப்ளான் படி முதலில் அவங்களுக்கு ஈமெயில் விளம்பரத்துக்கான ஆர்டர்களை கொடுக்கப் போறோம். அப்படி ஆர்டர் கொடுக்கறதுக்கு முன்னால் கூகிள் நிறுவனத்தை அணுகி அந்த ஐ.டியின் மெயில் போக்குவரத்து அனைத்தையும் நம்மிடம் அவங்க பகிர்ந்து கொள்ளணும்ன்னு அவங்களுக்கு ஒரு கோர்ட் ஆர்டர் கொடுக்க வைக்கணும். அப்படி ஒரு ஆணை தயாராக கொஞ்ச நாள் ஆனாலும் பரவால்லை. முதலில் கூகிள் நிறுவனம் ஒத்துகிட்டத்துக்கு அப்பறம் மாங்க்ஸ் ஜீமெயில் ஐடிக்கு ஈமெயில் விளம்பரத்துக்கான ஆர்டர்களை கொடுக்க சொல்லலாம். எஃப்.பி.ஐ கொடுக்கும் ஒவ்வொரு ஆர்டர் தொடர்பான மெயில் போக்குவரத்தையும் நாம் கண்காணிக்கலாம். கூடவே அந்த ஆர்டர்களினால் சர்வரிடம் இருந்து வரும் மெஸ்ஸேஜ்களையும் பிரிச்சு எடுத்து சேர்க்கலாம். அவங்க எந்த இணைய விலாசத்தில் இருந்து ஈமெயில்களை படிக்கறாங்கன்னு ஓரளவுக்கு க்ளூ கிடைச்சதும் அவங்க யார்ன்னு எளிதா கண்டு பிடிச்சுடலாம்" முரளீதரன், "வந்தனா, தீபா, ப்ரொஃபெஸ்ஸர் சொல்றது சரி. நான் முதலில் கூகிள் நிறுவனத்திடம் இருந்து ஒப்புதல் வாங்கறதுக்கு ஏற்பாடு பண்ணறேன். அதுவரைக்கும் நீங்க ஆபரேஷனை ஆரம்பிக்க வேண்டாம்" தீபா, "அதுக்கு எவ்வளவு நாள் ஆகும் சார்?" முரளீதரன், "தெரியலை தீபா. என் கணிப்புப் படி ரெண்டு மூணு வாரம் ஆகலாம்" வந்தனா, "சரி சார்" என்றாலும் டிஸம்பர் இறுதியில் இருந்து ஜனவரி முதல் இரண்டு வாரங்கள் வரை லீவ் எடுக்க வேண்டியதை மனதில் கணக்கிட்டாள். முரளீதரன், "பட், நீங்க கேட்ட மத்ததுக்கு ஏற்பாடு பண்ணறேன். நீங்க இரண்டாவதா செய்யறதா இருந்த அந்த மெஸ்ஸேஜ் டாம்பர் செஞ்சு செல்ஃப் டிஸ்ட்ரக்ட் ஆணை வரவழைக்கறதை முதலில் ஏன் செய்யக் கூடாது?" வந்தனா, "முடியாது சார். ஒரே நாளில் நூறு ஆணைகள் சர்வரில் இருந்து போறதை அவங்க பாத்த உடனே சுதாரிச்சுக்குவாங்க. அதுக்கு அப்பறம் என்ன செய்வாங்கன்னு நம்மால யூகிக்க முடியாது. நிச்சயம் கொஞ்ச நாள் அவங்க மாங்க்ஸ் பாட் நெட்டை நிறுத்தி வைப்பாங்க. ஈமெயில் விளம்பரத்துக்கான ஆர்டர்களை அவங்க எடுத்துப்பாங்களாங்கறது சந்தேகம். ஆனா, நமக்கு அந்த செல்ஃப் டிஸ்ட்ரக்ட் ஆணை மெஸ்ஸேஜ்களுடன் ஈமெயில் விளம்பரத்துக்கான முந்நூறு ஆணைகளுக்கான மெஸ்ஸேஜ்களும் தேவை. அதனால் அந்த செல்ஃப் டிஸ்ட்ரக்ட் மெஸ்ஸேஜ் வரவழைக்கறதை ரெண்டாவதாதான் செய்ய முடியும்" தீபா, "இல்லை வந்தனா. ரெண்டாவுது ஸ்டெப்பில் இருக்கும் எல்லா வேலைகளையும் இப்போ செய்ய முடியாது. ஆனா சில வேலைகளை செய்ய முடியும். இப்போ இருந்து ஒரு நாளைக்கு ஒரு டாம்பர் செஞ்சு அந்த செல்ஃப் டிஸ்ட்ரக்ட் மெஸ்ஸேஜ்களை எப்படி பிரித்து எடுப்பதுன்னு ஆராயலாம். கூடவே இந்த ஸ்டெப்புக்கு தேவையான மென்பொருள்களை எழுதலாம். இந்த ரெண்டு வேலைகளை முடிக்க நமக்கு எப்படியும் ரெண்டு மூணு வாரம் ஆகும். அந்த வேலைகள் எல்லாம் முடிச்சுட்டா நூறு கணிணிகளையும் ஒரே சமயத்தில் டாம்பர் செய்யறது, மாங்க்ஸ் சர்வரில் இருந்து வரும் செல்ஃப் டிஸ்ட்ரக்ட் மெஸ்ஸேஜ்களை பிரிக்கறது இதெல்லாம் ரெண்டு மூணு நாளில் முடிச்சுடலாம். ஏன்னா அதெல்லாம் ஆடோமாட்டிக்கா மென்பொருள் மூலம் செய்யற வேலைகள்வந்தனா, "அப்படின்னா அந்த ரெண்டாவதா ஸ்டெப்பை செல்ஃப் டிஸ்ட்ரக்ட் மெஸ்ஸேஜ் வரவழைக்க தேவையான் ஏற்பாடுகள் செய்வது, செல்ஃப் டிஸ்ட்ரக்ட் மெஸ்ஸேஜ் வரவழைக்கறது அப்படின்னு ரெண்டா பிரிச்சுக்கலாம்" என்ற படி தன் பவர் பாயிண்டில் கீழ்கண்ட் மாற்றங்களை செய்தாள். மனதுக்குள் தனக்கு டிசம்பர் இறுதியில் தேவையான மூன்று வாரங்களை கழித்து கணக்கிட்டு எழுதினாள். 1. தன்னை தானே அழித்துக் கொள்வதற்கான ஆணைகள் கொண்ட செல்ஃப் டிஸ்ட்ரக்ட் மெஸ்ஸேஜ் சர்வரில் இருந்து வரவழைக்க தேவையான் ஏற்பாடுகள் செய்வது ... மூன்று வாரங்கள் .... செப்டெம்பர் 1 2008 முதல் செப்டெம்பர் 19 2008 வரை 2. ஈமெயில் விளம்பரங்களுக்கான ஆர்டர்களை கொடுத்து சர்வரிடம் இருந்து வரும் ஆணைகள் கொண்ட மெஸ்ஸேஜ்களை பிரித்து எடுத்து சேமிப்பது. எஃப்.பி.ஐ மூலம் ஈமெயில் விளம்பரத்துக்கான ஆர்டர் கொடுக்கும் போதும் அதற்கான பணத்தை அவர்களுக்கு கொடுக்கும் போதும் அவர்களை நேரடியா அணுக முடிகிறதா என்று பார்க்கின்ற வேலை.... மூன்று மாதங்கள் ... செப்டெம்பர் 22 2008 முதல் டிசம்பர் 19 2008 வரை 3. நூறு கணிணிகளில் வைரஸ்ஸை புகுத்தி அவைகளின் மெஸ்ஸேஜ்களை டாம்பர் செய்து சர்வரில் இருந்து தன்னை தானே அழித்துக் கொள்வதற்கான ஆணைகள் கொண்ட செல்ஃப் டிஸ்ட்ரக்ட் மெஸ்ஸேஜ்களை சர்வரில் இருந்து வரவழைத்து அவைகளை பிரித்து எடுப்பது. .... அதிக பட்சம் ஐந்து நாட்கள் ... டிசம்பர் 22 2008 முதல் டிசம்பர் 26 2008 வரை 4. ஈமெயில் விளம்பரம் அனுப்ப வந்த ஆணைகளையும், தன்னை தானே அழித்துக் கொள்ள வந்த ஆணைகளையும் ஒன்றாக சேர்த்து அவைகளில் புதைந்து இருக்கும் சர்வரின் இணைய விலாசத்தை ஆராய்ந்து கண்டு பிடிப்பது .... அடுத்த மூன்று அல்லது நான்கு மாதங்கள் ... முரளீதரன், "எக்ஸலெண்ட். நீங்க அந்த நூறு கணிணிகளையும் டாம்பர் செய்யறதை டிசம்பர் 24 தேதி அன்னைக்கு பண்ணுங்க. அடுத்த ஒரு வாரம் அமெரிக்காவில் எல்லாரும் லீவில் போவாங்க. ஒரு வேளை நம் மாங்க்ஸ் சூத்திரதாரிகள் அமெரிக்கர்களா இருந்தா ஒரு வாரத்துக்கு சர்வரை கண்காணிக்காமல் இருக்க வாய்ப்பு இருக்கு"
தீபா, "வாவ்! முரளி சார்!! பரவால்லை சார் உங்களுக்கும் கொஞ்சம் தெரிஞ்சு இருக்கு" ஜாயிண்ட் டைரக்டர் முறைக்க மற்றவர் அனைவரும் சிரித்தனர். முரளீதரன் ஜாயிண்ட் டைரக்டரிடம், "கண்டுக்காதீங்க சார். என் டீமில் எல்லாரையும் நான் என்னையே கிண்டல அடிக்க விடுவேன். அந்த சலுகையை முழுக்க பயன் படுத்திக்கற ஒரே ஆள் தீபா" அன்றில் இருந்து வந்தனா ஒவ்வொரு நாளும் வெவ்வேறு இணைய விலாசம் கொண்ட ஒன்று இரண்டு கணிணிகளில் மாங்க்ஸ் வைரஸ்ஸை புகுத்தி அவற்றின் மெஸ்ஸேஜ்களை டாம்பர் செய்து சர்வரில் இருந்து அடுத்த நாள் வரும் ஆணைகளை எப்படி பிரித்து எடுப்பது என்று ஆராயத் தொடங்கினாள். தீபா மென்பொருள் எழுதுவதில் மூழ்கினாள்.Sunday, 7 September 2008 11:30 AM Joshua's Flat, New York, USA செப்டெம்பர் 7 2008, காலை 11:30 மணி ஜாஷ்வாவின் இல்லம், நியூ யார்க் ஜாஷ்வா, "என்ன சக்தி, ஒரு வாரமா வந்தனா நினைப்பாவே இருக்கா?" சக்தி, "ம்ம்ம் ... ஆமா. ஆனா கூட கடுப்பாவும் இருக்கு" ஜாஷ்வா, "ஏன்?" நித்தின், "அவங்க ஊருக்கு போன ரெண்டு நாளில் இருந்து தினம் ஒண்ணு ரெண்டு செல்ஃப் டிஸ்ட்ரக்ட் மெஸ்ஸேஜ் சர்வரில் இருந்து போயிட்டு இருக்கு" ஜாஷ்வா, "பொண்ணுங்க அவங்க வேலையை தொடங்கிட்டாங்க! சரி, அவங்க என்ன செய்யறாங்கன்னு கண்டு பிடிச்சீங்களா?" சக்தி, "ம்ம்ம் ... அவங்க கணிணியில் இருந்து போற மெஸ்ஸேஜ்ஜை டாம்பர் செய்யறாங்க" ஜாஷ்வா, "சோ, அவங்களால் இப்ப மாங்க்ஸ் வைரஸ்ஸின் மெஸ்ஸேஜ் போக்கு வரத்தை அந்த கணிணியின் மத்த மெஸ்ஸேஜ்களில் இருந்து தனியா பிரிச்சு எடுக்க முடியுது. இல்லையா?" நித்தின், "ஆமா .. " ஜாஷ்வா, "அடுத்ததா என்ன செய்வாங்கன்னு நீங்க நினைக்கறீங்க?" சக்தி, "நம்மை, மாங்க்ஸ் சர்வரை அடையாளம் கண்டு பிடிப்பதுதான் அவங்களோட குறிக்கோள் இல்லையா?" ஜாஷ்வா, "ஆமா" சக்தி, "சோ, மெஸ்ஸேஜஸ்ல இருக்கும் சர்வரோட ஐ.பி அட்ரெஸ்ஸை கண்டு பிடிக்க என்ன வழின்னு பார்ப்பாங்க" நித்தின், "அதாவது நம் மெஸ்ஸேஜஸுக்குள்ள ஐ.பி அட்ரெஸ் இருக்குன்னு அவங்க நினைச்சா" ஜாஷ்வா எழுந்து கிச்சனுக்கு சென்று அங்கிருந்து, "Beer ... anybody?" என்று கூப்பிட்டான் சக்தியும் நித்தினும் எழுந்து கிச்சனுக்கு சென்றனர். சக்தி ஃப்ரிட்ஜில் இருந்த பியர் கேனை எடுத்து உடைத்தவாறு, "நம் ஆளுங்களை அவ்வளவு கம்மியா எடை போடாதே. நிச்சயம் அப்படி யூகிச்சு இருப்பாங்க. ஆனா நம் மெஸ்ஸேஜகளை அவங்களால டீ-கோட் செய்ய முடியும்ன்னு எனக்கு தோணலை." என்றான். பிறகு நித்தினிடம் தமிழில் "எப்படியும் ஒண்ணு ரெண்டு மெஸ்ஸேஜ்களை வெச்சுகிட்டு ஒரு மயிரையும் புடுங்க முடியாது" என்றான். சஞ்சனா சுவாரஸ்யமாக அந்த உரையாடலை கேட்டவாறு சமைத்துக் கொண்டு இருந்தாள். ஜாஷ்வா சஞ்சனாவின் இடுப்பை வளைத்து அவள் அருகில் நின்றபடி, "ஹனி, சக்தி கடைசியா என்ன சொன்னான்?" விழித்து தலையை சொறிந்த சக்தியையும் ஜாஷ்வாவையும் பார்த்து சஞ்சனா, "ஜாஷ் கண்ணா, முதல்ல நீ சாதாரண பேச்சு எல்லாம் கத்துக்கோ. அண்ணன் சொன்னதை அப்படியே மொழி பெயர்த்தான்னா நீ எக்கச் சக்கமா கேள்வி கேப்பே. உனக்கு பதில் சொல்ல எங்களுக்கு தெரியாது. அதான் தலையை சொறிஞ்சுட்டு நிக்கறான்" சக்தி, "நோ சஞ்சனா, ஐ வில் ட்ரை" என்றபடி ஜாஷ்வாவை அழைத்துக் கொண்டு சென்றான். சஞ்சனா, "சரி, நீயாச்சு உன் மாமனாச்சு .. என்னை மட்டும் உதவிக்கு கூப்பிடாதே" மதிய உணவு தொடங்குகையில் சக்தி இந்திய பண்பாட்டில் ஏன் தலை முடிக்கு மதிப்பு இல்லை என்பதை ஜாஷ்வாவுக்கு விளக்க திணறிக் கொண்டு இருந்தான். Monday, 20 October 2008 9:00 AM Conference room in R&AW Headquarters, CGO Complex, New Delhi திங்கள், அக்டோபர் 20 2008 காலை 9:00 மணி R&AW தலைமை அலுவலகத்தில் இருக்கும் கலந்தாய்வுக் கூடம், CGO காம்ப்ளெக்ஸ், புது தில்லி ஒவ்வொரு திங்களன்றும் அவர்கள் கூடி கடந்த வாரத்தின் செயல்களையும் அந்த வாரத்தில் செய்யப் போவதையும் அலசுவது என்று முடிவெடுத்து இருந்தனர். கடந்த மூன்று வாரமாக ரிவ்யூ மீட்டிங்க்கிற்கு ப்ரொஃபெஸ்ஸர் சாரி வந்து இருக்கவில்லை. ப்ரொஃபெஸ்ஸர் சாரி, "சோ, ஈமெயில் விளம்பரத்துக்கான ஆர்டர்கள் கொடுக்கற வேலை ஆரம்பிச்சாச்சா?" வந்தனா, "எஸ் ப்ரொஃபெஸ்ஸர். கூகிள் நிறுவனத்திடம் இருந்து செப்டெம்பர் 25ம் தேதிதான் ஒப்புதல் வந்துது. அதுக்கு அடுத்த ரெண்டு நாளில் ஆரம்பிச்சோம். இப்ப மூணு வாரமா ஏழு ஈமெயில் விளம்பரத்துக்கு ஆர்டர் கொடுத்து இருக்கோம்" ப்ரொஃபெஸ்ஸர் சாரி, "அவங்க நாம் அனுப்பும் மெயிலை எந்த இணைய விலாசத்தில் இருந்து படிக்கறாங்கன்னு தெரிஞ்சுதா? எதாவுது க்ளூ கிடைச்சுதா?" தீபா (ஏளனம் மிகுந்த குரலில்), "ஓ நிறைய தெரிஞ்சுது. இது வரைக்கும் அனுப்பிய. ஒவ்வொரு மெயிலையும் ரஷ்யா, ஐஸ்லாந்து, ஐயர்லாண்ட், லித்துவேனியா இப்படி வெவ்வேற நாட்டில் இருக்கும் கணிணியில் இருந்து படிச்சு இருக்காங்க. நாங்க சுத்தமா குழம்பிப் போயிருக்கோம்" ப்ரொஃபெஸ்ஸர் சாரி, "என்ன சொல்றே நீ." வந்தனா, "நாங்க எப்படி வெவ்வேறு இணைய விலாசத்தை வெச்சுட்டு டாம்பர் பண்ண முயற்சி செய்யறமோ அதுக்கும் ஒரு படி மேல அவங்க இருப்பாங்கன்னு தோணுது. விலாசம் மட்டும் இல்லை அவங்க ஆக்ஸஸ் செய்யும் கணிணியே வேற நாட்டில் இருப்பது போல் இருக்கு" ப்ரொஃபெஸ்ஸர் சாரி, "அப்ப மாங்க்ஸ் பாட் நெட்டை ஒரு கூட்டமே ஒண்ணா சேந்து ஆபரேட் பண்ணுதா?" முரளீதரன், "அப்படி இருக்க முடியாதுன்னு ஷான் ஹென்றி அடிச்சு சொல்றார். ஆனா அவருக்கும் எப்படி அவங்க ஆக்ஸஸ் பண்ணறாங்கன்னு புரியலை" ப்ரொஃபெஸ்ஸர் சாரி, "சரி அதை விடுங்க. விளம்பர ஆர்டருக்கான பணத்தை எப்படி வசூல் செய்யறாங்க?" முரளீதரன், "ஒரு அமெரிக்கன் பாங்கில் அட்லாண்டா நகரத்தில் இருக்கும் கிளையில் ஒரு அக்கௌண்டில் போட சொல்லி மெயில் அனுப்பறாங்க. அந்த அக்கௌண்ட் யாருதுன்னு எஃப்.பி.ஐ விசாரிச்சு பார்த்தது. அஞ்சு மாசத்துக்கு முன்னாடி யாரோ ஒரு ஆஃப்ரிக்கன்-அமெரிக்கன் வந்து அந்த அக்கௌண்டை ஓபன் பண்ணி இருக்கான். அவன் கொடுத்த ஐடி ப்ரூஃப் அட்ரெஸ் ப்ரூஃப் எல்லாம் போலி. அதுக்கு அப்பறம் அவன் பாங்க் பக்கம் வரவே இல்லை. டெபாசிட் ஆகிற பணத்தில் இதுவரைக்கும் மூணு தடவை அவங்க எடுத்து இருக்காங்க. எடுத்து இருக்காங்கன்னா அவங்க எடுத்துக்கலை. ஒரு சர்ச், ஒரு அனாதை இல்லம் அப்பறம் சால்வேஷன் ஆர்மி இந்த மூணுக்கும் அவங்க நெட் பாங்கிங்க் மூலம் பணம் ட்ரான்ஸ்ஃபர் பண்ணி இருக்காங்க" ப்ரொஃபெஸ்ஸர் சாரி, "என்னது இது?, வாங்கற காசை எல்லாம் தர்மம் பண்ணறாங்களா?" வந்தனா, "அப்படித்தான் தோணுது. ரொம்ப நல்லவங்களா இருப்பாங்க போல இருக்கு. அதே சமயம் பணக்காரங்களா இருப்பாங்க மாதிரி இருக்கு" முரளீதரன், "Any how, உங்க திட்டத்தின் படி உங்களுக்கு தேவையான மெஸ்ஸேஜஸ் கிடைக்குது இல்லையா?" தீபா, "கிடைக்குது சார்." வந்தனா, "ப்ரொஃபெஸ்ஸர், இன்னொரு சுவாரஸ்யமான விஷயம். அவங்க ஜீமெயில் ஐடிக்கு மெயில் வந்தால் மட்டும் அவங்க மெயில் பாக்ஸை ஓபன் பண்ணறாங்க. மெயில் எதுவும் வராத தினத்தில் மெயில் பாக்ஸ் ஓபன் செய்யப் படுவதே இல்லை. ஆனா, வெவ்வேற கணிணிகளில் இருந்து ஜீடாக் மூலம் மெயில் வந்துதான்னு செக் பண்ணறாங்க. ஜீடாக் மூலம் செக் பண்ணற கணிணியும் மெயில் ஓபன் பண்ணி பாக்கற கணிணியும் வெவ்வேற" ப்ரோஃபெஸ்ஸார் சாரி, "எப்படி இதை செய்யறாங்க. புரிஞ்சுக்கவே முடியலையே" முரளீதரன், "இதுவரைக்கும் அமெரிக்காவிலோ இந்தியாவிலோ இருக்கும் எந்த கணிணியில் இருந்தும் அவங்க மெயில் ஆக்ஸஸ் பண்ணலை. ஒவ்வொரு முறையும் ஆர்டர் கொடுத்ததுக்கு பிறகு எந்த இணைய விலாசத்தில் இருந்து அவங்க ஆக்ஸஸ் செய்யறாங்கன்னு தொடர்ந்து கண்காணிச்சுட்டு வருவோம். நிச்சயம் ஒரு நாள் நாம் எளிதில் கண்டு பிடிக்கக் கூடிய எதாவுது ஒரு நாட்டில் இருக்கும் கணிணியில் இருந்து அவங்க ஆக்ஸஸ் பண்ணுவாங்கன்னு தோணுது. பார்க்கலாம்" தீபா, "ஆனா, எங்களுக்குதான் டிசம்பர்வரை ஒரு வேலையும் இல்லை" முரளீதரன், "இந்திய அரசாங்கத்தில் இருக்கற ஒவ்வொரு ஊழியனும் உன்னை மாதிரி வேலை செய்யணும்ன்னு பார்த்தா பாதி பேருக்கு ஒரு வேலையும் இருக்காது. ஜாலியா இரு." தீபா, "அப்ப நாங்க தீபாவளிக்கு ஒரு வாரம் லீவ் எடுத்துட்டு ஊருக்கு போயிட்டு வரலாமா?" முரளீதரன், "என்னைக்கு போறீங்க?" வந்தனா, "வரும் வெள்ளிக் கிழமை, தட் ஈஸ் 24ம் தேதி சாயங்காலம் புறப்படலாம்னு இருக்கோம். அடுத்த வாரம் ஞாயிற்று கிழமை நவம்பர் ஒண்ணாம் தேதி திரும்பி வந்துடுவோம்" முரளீதரன், "நீங்க ஏற்கனவே ப்ளான் பண்ணிட்டு கேட்கற மாதிரி இருக்கு. நீங்க இங்கே இல்லாத சமயத்தில் சர்வரில் இருந்து வரும் ஈமெயில் விளம்பரம் அனுப்பறதுக்கான ஆணைகளை உங்க புது அஸிஸ்டண்ட்ஸ் ஒழுங்கா செய்வாங்களா?" தீபா, "நான் என் லாப் டாப்பை எடுத்துட்டுத்தான் போறேன். அவங்க பிரிச்சு எடுத்த மெஸ்ஸேஜ்களை எனக்கு அனுப்பச் சொல்லப் போறேன். தினமும் நான் செக் பண்ணறேன்" ப்ரோஃபெஸ்ஸர் சாரி, "அந்த மெஸ்ஸேஜ்ஜை எப்படி உனக்கு அனுப்புவாங்க?"
தீபா, "பிரிச்சு எடுத்த ஒவ்வொரு மெஸ்ஸேஜையும் ஒரு தனி ஃபைலில் ஸ்டோர் பண்ணி வைக்கறோம். அந்த ஃபைலை எனக்கு ஈமெயிலில் அட்டாச்மெண்ட்டா அனுப்புவாங்க" முரளீதரன், "அதனால் உன் லாப்டாப்புக்கு ஒரு தொந்தரவும் வராதா?" தீபா, "ம்ம்ம்ஹும், மைக்ரோஸாஃப்ட் விண்டோஸுக்கு அந்த மெஸ்ஸேஜ் என்னன்னே தெரியாது" ப்ரோஃபெஸ்ஸர் சாரி, "சோ, அடுத்த வாரம் ரிவ்யூ மீட்டிங்க இருக்கப் போறது இல்லையா?" முரளீதரன், "அதுக்கு அடுத்த வாரம் மீட் பண்ணலாம் ப்ரொஃபெஸ்ஸர்" அடுத்த வாரம் தோழிகள் இருவரும் தீபாவளியை குடும்பத்தினருடன் கொண்டாட புறப்பட்டு சென்றனர்.

No comments:

Post a Comment