Friday, January 30, 2015

செக்மேட் - சைபர் கிரைம் திரில் தொடர் - பாகம் - 20


Wedneday, 31 December 2008, 7:00 PM I.G.P Yogeshwar Rathod's Residence புதன் டிசம்பர் 31 2008, மாலை 7 மணி ஐ.ஜி.பி யோகேஷ்வர் ராத்தோடின் இல்லம் கடந்த இரண்டு நாட்களும் புது தில்லியில் தொடங்கி, மதுரா, ஆக்ரா மற்றும் ஃபதேபூர் சிக்ரி எல்லாம் சுற்றிப் பார்த்த பிறகு ஜெய்ப்பூருக்கு வந்து சேர்ந்தனர். யோகேஷ்வர் ராத்தோடின் வீட்டு காம்பௌண்டுக்குள் நுழையும் போதே லானில் இருந்த மின் விளக்கு தோரணங்களும் அங்கு செய்யப் பட்ட விருந்துக்கான ஏற்பாடுகளையும் கண்டனர். வந்தனா, "ஆண்டி. போய் ஃப்ரெஷன் அப் பண்ணிட்டு சேஞ்ச் பண்ணிட்டு வரலாம். எங்க சித்தப்பா வீட்டில் நியூ இயர்ஸ் ஈவ் பார்ட்டி எப்பவும் ரொம்ப நல்லா இருக்கும்" என்ற போதே மனோகரிக்கு அங்கு இருந்த ஏற்பாடுகளுக்கான காரணம் புரிந்தது. வாசலில் தன் மனைவி சகிதம் நின்று அவர்களை வரவேற்ற யோகேஷ்வர், "வெல்கம் டு ஜெய்ப்பூர் ப்ரோஃபெஸ்ஸர். வெல்கம் ஷாந்தி. ஹாய் தீபா. ஐ யம் யோகேஷ்வர் திஸ் இஸ் மை வைஃப் பரதீபா" என்று மனோகரிக்கு அறிமுகப் படுத்திக்கொண்டார்.
மனோகரி, "தாங்க் யூ மிஸஸ் அண்ட் மிஸ்டர் ராத்தோட்" யோகேஷ்வர், "ப்ரொஃபெஸ்ஸர் நான் வயசில் நிச்சயம் உங்களை விட சின்னவன்தான். என்னோட அண்ணிகள் மாதிரி நீங்களும் என்னை யோகின்னு கூப்பிட்டா நான் சந்தோஷப் படுவேன். என் மனைவியும் அதைத்தான் விரும்புவா" அவர் சக்தியின் குடும்பத்தைப் பற்றி சகல விவரமும் இப்போது அறிந்து இருந்தார். வந்தனாவுக்கு அவன் எல்லா விதத்திலும் ஏற்றவனே என்று அவரும் மனீஷும் மஞ்சுநாத், வீரேந்தர் இருவருடனும் பேசி அவர்களையும் அதை ஏற்க வைத்து இருந்தார்கள். அது மட்டும் அல்லாது வந்தனா சக்தியை விரும்புவது வேறு ஒரு வழியில் தெரிய வந்து இருந்தது. அவர் காட்டிய பாசத்தில் முகம் மலர்ந்த மனோகரி, "ஓ.கே யோகி அண்ட் ப்ரதீபா" தீபா, "என்ன அங்கிள்? அவங்களுக்கு வெல்கம் எனக்கு வெறும் ஹாய்யா?" யோகேஷ்வர், "உன்னை அடிக்கடி பார்ப்பதால நீயும் முதல் முதலா இங்க வந்து இருப்பது மறந்துடுச்சு. வார்ம் வெல்கம் டு யூ. ஆனா, உனக்குன்னு நான் ஒரு ஏற்பாடு பண்ணி இருக்கேன்" என்றபடி அருகில் இருந்த ஆர்டர்லியின் காதில் கிசுகிசுத்தார். தீபா, "என்ன ஏற்பாடு?" யோகேஷ்வர், "எங்க அண்ணன் வீட்டிலேயே நீ அவ்வளவு கொட்டம் அடிப்பே. உன்னை கொஞ்சம் கன்ட்ரோல் பண்ணறதுக்காக டெல்லி இருந்து ஒரு ஆளை வர வெச்சு இருக்கேன்" என்று அவர் சொல்லி முடிக்கவும் முரளீதரன் தன் மனைவியுடன் லானில் இருந்து அங்கு வந்தார். தோழிகள் இருவரின் வியப்புக்கும் அளவில்லை. தீபா, "சார்! இட்ஸ் சோ நைஸ் டு ஸீ யூ ஹியர்" வந்தனா, "ஹல்லோ சார். நீங்க எப்படி இங்கே?" யோகேஷ்வர் மனோகரியிடம், "ப்ரொஃபெஸ்ஸர் மீட் ஜே.சி.பி முரளீதரன் என்னோட ஐ.பி.எஸ் பாட்ச்மேட். இவங்க ரெண்டு பேரோட பாஸ். இது அவரோட அன்பு மனைவி பத்மினி முரளீதரன்" முரளீதரன், "ஹல்லோ ப்ரொஃபெஸ்ஸர்" என்றவர் தொடர்ந்து தமிழில் "நான் உங்க பையன் சக்தியை பார்த்து இருக்கேன்" என்றார். சக்தி என்ற பெயரைக் கேட்டதும் கூர்ந்து கவனித்துக் கொண்டு இருந்த வந்தனாவை மேலும் வெறுப்பேற்ற ஆங்கிலத்தில் மேலும் விவரமாக யோகேஷ்வரிடம், "யூ.எஸ்ஸில் இருந்து திரும்பி வரும்போது ஏர்ப்போர்ட்டில் நாங்க மூணு பேரும் க்யூவில் நின்னுட்டு இருந்தோம். அப்ப செண்ட ஆஃப் கொடுக்க சக்தியும் நித்தினும் வந்து இருந்தாங்க. சரி, ஃப்ரெண்ட்ஸ் எல்லாம் என் முன்னால பேச கூச்சப் படுவாங்களேன்னு நீங்க எல்லாம் கொஞ்ச நேரம் போய் பேசிட்டு வாங்க நான நிக்கறேன்னேன். அடுத்த நொடி சக்தியும் வந்தனாவும் ஒரு பக்கம். நித்தினும் தீபாவும் இன்னொரு பக்கமா போனாங்க. ஒரு பத்து பதினைஞ்சு நிமிஷம் கழிச்சு வந்தாங்க" தீபா, "உங்களுக்கு எப்படி தெரியும் அவங்க சக்தி, நித்தின்னு?" முரளீதரன் யோகேஷவரை பார்த்து அர்த்தமுடன் சிரித்தபடி, "தீபா, இதை வந்தனா கேட்கலை பாத்தியா? நாங்க எல்லாம் போலீஸ்ம்மா" மனோகரியும் சற்று குழம்பியதைப் பார்த்த யோகேஷ்வர், "நீங்க போய் சேஞ்ச் பண்ணிட்டு வாங்க ப்ரொஃபெஸ்ஸர் நிதானமா பேசலாம். முரளீதரனும் அவர் வைஃப்ஃபும் அடுத்த மூணு நாள் உங்ககூட ஜெய்ப்பூர் சுத்திப் பாக்க வர்றாங்க. வந்தனா, தீபா, ஷாந்தி நீங்களும் போய் சேஞ்ச் பண்ணிட்டு சீக்கரம் வந்து ஹெல்ப் பண்ணுங்க" என்று உரிமையுடன் மூவரையும் துரத்தினார். பிரயாணக் களைப்பு நீங்க குளித்து உடைமாற்றி தோழிகள் மூவரும் தயரானதும். தீபாவையும் சாந்தியையும் கீழே சென்று உதவச் சொல்லி மனோகரியை அழைத்துச் செல்ல வந்தனா காத்து இருந்தாள். வந்தனாவின் மனதில் தன் சித்தப்பாவுக்கு ஏதோ தெரிந்து இருக்கிறது. 'சே, மனீஷ் அண்ணன் மூலம் நியூஸை ப்ரேக் பண்ணினா நல்லா இருக்கும்ன்னு அவன் கிட்ட முதல்ல சொல்லலாம்ன்னு இருந்தேன்' என்று எண்ணினாள், 'எப்படியோ. முதலில் மனோகரி ஆண்டியிடம் தான் சொல்லப் போகிறேன் அவரது எண்ணத்தை அறிந்து கொண்ட பிறகே என் வீட்டில் சொல்லப் போகிறேன். அதுவரை எப்படியாவுது மழுப்பணும்' என்று முடிவெடுத்தாள். குளித்துத் தயாராகிக் கொண்டு இருந்த மனோகரிக்கு வந்தனா சக்தியை விரும்புகிறாள் என்பதில் எந்த விதமான அய்யமும் இல்லை. கடைசியாக ஃபதேபூர் சிக்ரிக்கு அருகே ஒரு ரெஸ்டாரண்டுக்கு சென்ற போது மனோகரியை தடுத்து அவள் சாப்பிட்டதற்கு பணம் கொடுக்க அவளது வாலட்டை திறந்த போது அதில் அவள் கண்ட புகைப் படம் அதை ஊர்ஜிதப் படுத்தி இருந்தது. இருந்தும் தன் மகனும் அவளும் ஏன் இப்படி கண்ணாமூச்சி ஆடுகிறார்கள் என்று அறிந்து கொள்ள விரும்பினாள். அவளது வீட்டில் இருப்பவர்களும் தன்னைப் போலவே யூகித்துக் கொண்டு இருக்கிறார்கள் என்பதையும் உணர்ந்தாள். 'முரளீதரன் அடுத்த மூணு நாள் நம்ம கூடத்தான் இருக்கப் போறார். ஒரு தமிழ்காரர் என்கிற முறையில் அவரிடம் வந்தனாவைப் பத்தியும் அவங்க குடும்பத்தைப் பத்தியும் இன்னும் விவரம் கேட்டு தெரிஞ்சுக்கலாம்' என்று எண்ணியபடி வந்தனாவுடன் பார்ட்டி அமைத்து இருந்த லானுக்கு சென்றாள் கீழே லானில் வந்தனாவுக்கும் மனோகரிக்கும் இன்னும் ஒரு ஆச்சர்யம் காத்து இருந்தது.உதைப்பூரில் இருந்து வந்த விமானம் சற்று தாமதமானதால் அப்போதுதான் வீரேந்தர் ராத்தோடும் கௌரியும் வந்து சேர்ந்தனர். ஓடி வந்து அவர்களை அணைத்த வந்தனா, "டாட், மாம். நீங்க எங்கே இங்கே. நானே இன்னும் நாலு நாளில் அங்கே வர்றதா இருந்தேனே?" வீரேந்தர், "நான் என் தம்பிகூட நியூ இயரைக் கொண்டாட வந்தேன்" என்று கிண்டலடித்தார். பிறகு தொடர்ந்து "யோகிட்ட நேத்து பேசிட்டு இருந்தப்ப அவன் ஒரு நாள் வந்துட்டு போகச் சொன்னான். நாங்க ரெண்டு பேர் மட்டும் அங்கே தனியா இருப்பதற்கு பதிலா இங்கே கொண்டாடிட்டு நாளைக்கு மதியம் திரும்பிப் போறோம். நீ அங்கே வரதுக்குள்ள் எல்லா ஏற்பாடும் சரியா இருக்கும் கவலைப் படாதே" அருகில் வந்த மனோகரியைப் பார்த்தவர், "ஹல்லோ ப்ரோஃபெஸ்ஸர். ஐ யம் வீரேந்தர் ராத்தோட். திஸ் இஸ் மை வைஃப் கௌரி. உங்களை சந்திச்சதில் ரொம்ப சந்தோஷம்" மனோகரி, "வணக்கம் மிஸஸ் அண்ட் மிஸ்டர் ராத்தோட். என்னால் உங்க பொண்ணுக்கும் உங்க எல்லோருக்கும் ரொம்ப சிரமம். உங்களுக்கு நன்றி சொல்லக் கடமைப் பட்டு இருக்கேன்" வீரேந்தர், "நோ நோ. ஒரு சிரமமும் இல்லை. எப்படியும் தீபாவை கூட்டிட்டு தனியா போறதா இருந்தா. நீங்க பெரியவங்க அவங்க கூட போறதில் நான் தான் உங்களுக்கு நன்றி சொல்லணும்" என்று ஒரு தந்தையின் ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். மனோகரி, "என்ன மிஸ்டர் ராத்தோட். அவ ஒரு ஐ.பி.எஸ் ஆஃபீஸர் எதோ சின்னப் பொண்ணை தனியா அனுப்பற மாதிரி பேசறீங்க?" கௌரி, "அவ என்னவா இருந்தாலும் எங்களுக்கு சின்னப் பொண்ணுதானே. எவ்வளவு வருஷம் ஆனாலும் உங்களுக்கு சக்தி சின்னப் பையன் தானே. வாங்க டின்னர் சாப்பிட்டுட்டே பேசலாம்" டின்னர் முடித்து எல்லோரும் பாட்டும் கும்மாளமுகாக புது வருடத்தின் வரவை எதிர் நோக்கிக் காத்து இருந்தனர். மணி பனிரெண்டை நெருங்கியதும் "ஹாப்பி நியூ இயர்" என்ற கோஷமும் வாண வேடிக்கைகளும் இரவைப் பகலாக்கின. எழுந்து நின்ற யோகேஷ்வர், "ஃப்ரெண்ட்ஸ் இந்த வருஷம் நாம் எல்லோருக்கும் விசேஷமானதா இருக்கணும்ன்னு எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கறேன்" என்று பொதுவான ஒரு டோஸ்ட் கொடுத்தார் பிறகு வீரேந்தரை அழைத்தார். வீரேந்தர், "நான் என் தம்பி சொன்னதை வழி மொழிகிறேன்" என்று தொடங்கினார். பிறகு தொடர்ந்து "நான் மேற் கொண்டு சொல்வதை சில நாட்கள் கழித்து பேசலாம்ன்னு இருந்தேன். பிறகு இது இந்த புது வருஷத் தொடக்கத்தில் இருக்கட்டும் என்று நாங்க எல்லாம் சேர்ந்து முடிவெடுத்தோம்" என்று பீடிகை போட்டார். "வரும் 2009 ப்ரொஃபெஸ்ஸர் மனோகரியின் குடும்பத்துக்கு விசேஷமானதா இருக்கணும்ன்னு நான் இறைவனை வேண்டிக்கறேன்" என்ற பிறகு அவர் மனோகரியைப் பார்த்து "ப்ரொஃபெஸ்ஸர் என் மகள் உங்க மகனை மனசார விருமபுறா. இதை எங்ககிட்ட கூட இன்னும் சொல்லாமல் முதலில் நீங்க அவளை ஏத்துக்கணும்ன்னு காத்துட்டு இருக்கா. உங்க மகன் என் மகளுக்கு எல்லா விதத்திலும் ஒரு நல்ல கணவனா இருப்பான்னு எங்க எல்லோருக்கும் நம்பிக்கை இருக்கு. என் மகளுடன் சேர்ந்து நாங்களும் உங்க விருப்பத்தை தெரிஞ்சுக்க ஆவலா இருக்கோம்" என்று முடித்தார். கண் கலங்கிய வந்தனா எழுந்து ஓடி தன் தந்தையை அணைத்துக் கொண்டாள். மனோகரி எழுந்து அவள் அருகே சென்றாள். தந்தையிடம் இருந்து திரும்பிய வந்தனா, "ஆண்டி .. சக்தி உங்க கிட்ட முதல்லயே சொல்றேன்னு சொன்னான். நான்தான் உங்களுக்கு என்னை பிடிக்குதான்னு பாத்த பிறகு சொல்லலாம்ன்னு சொன்னேன்." மனோகரி, "Oh! Not an issue Vanthana" குனிந்து தன் பாதத்தை தொட்ட வந்தனாவின் முகத்தை ஏந்தி (சற்று குனிய செய்து!) நெற்றியில் முத்தமிட்டு அணைத்தாள். பிறகு, "உங்களை மாதிரி என் மகனின் பேச்சில் இருந்தும் வந்தனாவின் ந்டவடிக்கையில் இருந்தும் எனக்கும் ஏற்கனவே தெரிஞ்ச விஷயம் தான். நான் உங்க சம்மதத்தை எப்படி கேட்கலாம்ன்னு நினைச்சுட்டு இருந்தேன். வந்தனா எனக்கு மருமகளா வருவதில் எனக்கு ரொம்ப சந்தோஷம். பெருமையும் கூட" என்றாள். நட்பு என்ற எல்லையை ஒரு கணத்தில் கடந்து ராத்தோட் குடும்பத்தினர் காட்டிய அன்னியோன்னியத்தில் மனோகரி திக்கு முக்காடினாள். அவர்கள் அத்தனை பேரும் வந்தனா மேல் வைத்து இருக்கும் பாசத்துக்கு தானும் தன் மகனும் ஈடு கொடுக்க வேண்டும் என்று கடவுளை வேண்டினாள். யோகேஷ்வா, "சோ, தீபா இப்ப உன்னை மாதிரியே உன் ஃப்ரெண்டுக்கும் லைன் க்ளியர். சந்தோஷம்தானே" தீபா, "என்ன சொல்றீங்க?" முரளீதரன், "ஒண்ணும் இல்லை. ரெண்டு நாளைக்கு முன்னாடி டெல்லி கால்ஃப் க்ளப்பில் இருக்கும் பாரில் லாயர் சுந்தர் தேஷ்பாண்டேவை உன் அப்பாகூட பாத்தேன். அவங்க ரெண்டு பேரும் சீரியஸா கல்யாணத்தை பத்தி பேசிட்டு இருந்தாங்க" என்றதும் தீபா முகம் சிவந்தாள். மனோகரி தீபாவின் அருகே வந்து, "அவளைப் பத்தியாவுது எனக்கு கொஞ்சம் சந்தேகம் இருந்துது. உன்னை பாத்த அன்னைக்கே எனக்கு தெரியும்" என்றவாறு அவளையும் அணைத்து உச்சி முகர்ந்தாள். பிறகு, "என் மகனுக்கு எப்படி வந்தனா சரியான ஜோடியோ அதே மாதிரி நித்தினுக்கு இவ" என்று அறிவித்தாள். சக்தி தொலைபேசியில் அழைப்பான் என்று நினைத்து இருந்த மனோகரியும் வந்தனாவும் ஏமாற்றம் அடைந்தனர். வந்தனா அவனை கைபேசியில் அழைக்க அது ஸ்விட்ச் ஆஃப் ஆகி இருந்தது. துணுக்குற்ற தீபா நித்தினை அழைக்க அதுவும் ஸ்விட்ச் ஆஃப் ஆகி இருந்தது. மனோகரி ஜாஷ்வாவின் இல்லத்தை அழைக்க பதிலளித்த சஞ்சனா, "மூணு பேரும் ரெண்டு நாளா ரொம்ப பிஸியா இருக்காங்க சித்தி. ஏதோ வருட இறுதிக் கணக்கு சம்மந்தப் பட்ட சிக்கல்ன்னு நினைக்கறேன்". ஆனால் முற்றிலும் வேறு பட்ட ஒரு சிக்கலில் அவர்கள் மூழ்கி இருந்தனர்.Wednesday, 31 December 2008 8:00 AM Shakthivel's Flat, New York புதன், டிசம்பர் 31 2008 காலை 8:00 சக்திவேலின் ஃப்ளாட், நியூ யார்க் அன்றும் அதற்கு அடுத்த நாளும் சக்திக்கு விடுமுறை. பழக்க தோஷம், அவனால் வெகு நேரம் தூங்க முடியவில்லை. அதிகாலையில் எழுந்து ஒரு மணி நேரம் ஜாக்கிங்க் செய்து வந்து இருந்தான். குளியலறையில் ஷவரை திறந்தவன் அதில் இருந்து இதமான சூட்டில் ஆனால் அதிவேகமாக குற்றால அருவியில் இருந்து வருவது போல் விழுந்த நீருக்கடியில் நின்றான். 'இந்த மாதிரி ஒரு ஷவர் ஈரோட் வீட்டில் போடணும். இந்த கட்டிடத்தில் பத்து ஃப்ளோருக்கு மேல் இருக்கும் டாங்கில் இருந்து தண்ணி வருது. அதனால நல்ல ஃபோர்ஸா வருது. நம்ம ஊரில் இந்த மாதிரி ஃபோர்ஸ் வராது. ஒரு ப்ரெஷர் பம்ப் ஓவர் ஹெட் டாங்க்குக்கு பக்கத்தில் ஃபிக்ஸ் பண்ணனும். லோகலா கிடைக்கலைன்னா வெளிநாட்டில் இருந்து இம்போர்ட் பண்ணனும். ஈரோடு வீட்டில் இருக்கும் வாட்டர் பைப்பிங்க் எல்லாம் அந்த ப்ரெஷரை தாங்குமான்னு தெரியலை. தாங்கலைன்னா எல்லாத்தையும் மாத்தணும். மாத்தி முடிக்கற வரைக்கும் எதுக்குடா எதுக்குடான்னு அம்மா திட்டுவாங்க. எல்லாம் ஃபிக்ஸ் பண்ணினதுக்கப்பறம் ஷவருக்கு அடியில் ஒரு தடவை நின்னு குளிச்சாங்கன்னா அப்பறம் ஊரெல்லாம் போய் ஆஹா ஓஹோன்னு சொல்லி சந்தோஷப் படுவாங்க' என்று எண்ணிய வாறு குளித்து முடித்தான். நிதானமாக டோஸ்டரில் இரண்டு சீஸ் சாண்ட்விச்கள் செய்து, ஹாட் ப்ளேட்டில் முட்டைகளை உடைத்து இரண்டு புல்ஸ் ஐ போட்டு எடுத்துக் கொண்டு சாப்பிடத் தொடங்கினான். நித்தினை அழைத்து சிறிது நேரம் மொக்கை போடலாமா என்று நினைத்தவன், நித்தினின் தூக்கப் பழக்கத்தை நினைத்து சிரித்த படி அந்த எண்ணத்தை கை விட்டான். அவர்கள் ஒன்றாக தங்கி இருந்த போது நித்தினை அதிகாலையில் எழுப்ப வேண்டிய அவசியம் நேர்ந்தால் அவன் கை கால் எட்டும் தூரத்துக்கு தள்ளி நின்று (அவனது உதைகளில் இருந்து நன்றாக பாதுகாத்துக் கொண்டு) அவனது திட்டல்களுக்கு மனதை தயார் செய்து கொண்ட பிறகே எழுப்புவான். முன்பு ஒரு முறை ஜாஷ்வா 'காலையில், அதுவும் விடுமுறை தினங்களில் நான் கொஞ்சம் பிஸியா இருப்பேன்' என்று சொன்னபடி சஞ்சனாவைப் பார்த்ததையும், அப்போது வெட்கத்தால் முகம் சிவந்த சஞ்சனா வேகமாக அவ்விடத்தை விட்டு நகர்ந்ததையும் மனதில் கொண்டு ஜாஷ்வாவையோ சஞ்சனாவையோ தொலைபேசியில் அழைத்துப் பேசும் எண்ணத்தையும் விடுத்தான். அதன் பிறகே முந்தைய தினம் மாலை அம்மாவுடனும் வந்தனாவுடம் சார்ஜ் தீரும்வரை கை பேசியில் பேசிக் கொண்டு இருந்ததை உணர்ந்தான். மறுபடி பகல் பனிரெண்டு மணி அளவில் அவர்களுக்கு புத்தாண்டு வாழ்த்து சொல்வதாக கூறி இருந்ததும் நினைவுக்கு வந்தது. பத்து மணி வரை டீ.வியில் கழித்தான். பிறகு தனது சர்வரின் 25ம் தேதியின் நடவடிக்கைகளை அவன் இன்னும் பரிசீலனை செய்யவில்லை என்று நினைவுக்கு வந்ததும் காலையுணவை முடித்ததும் சர்வர் இணைத்து இருக்கும் அறைக்கு கையில் ஒரு காஃபிக் கோப்பையுடன் சென்று அமர்ந்தான். மாங்க்ஸ் பாட் நெட் ஒரே ஒரு சர்வரால் இயக்கப் படுகிறது என்ற எஃப்.பி.ஐ - R&AW குழுக்களின் யூகத்துக்கு மாறாக மூன்று சர்வர்கள் அமைத்து இருந்தனர். நண்பர்கள் ஒவ்வொருவரின் வீட்டிலும் ஒரு சர்வர். ட்ரான்ஸ்ஃபர் ஆபரேஷன் நடக்கும் போது மட்டும் ஜாஷ்வாவின் வீட்டில் இருக்கும் சர்வர் இயக்கப் படும். மற்ற நாட்களில் முதல் நாள் இரவு பனிரெண்டிலிருந்து அடுத்த இரவு பனிரெண்டுவரை சக்தியின் ஃப்ளாட்டில் இருக்கும் சர்வர், அதற்கு அடுத்த நாள் அதே போல் நித்தின் ஃப்ளாட்டில் இருக்கும் சர்வர், என அடுத்தடுத்த நாட்களில் மாறி மாறி இயங்கும்படி அமைத்து இருந்தனர். ஈமெயில் விளம்பரங்கள் சம்மந்தப் பட்ட வேலைகளை ஜாஷ்வா கவனித்துக் கொள்வான். சர்வரில் இருந்து போகும் ஆணைகளை பரிசீலனை செய்வதை சரி சமமாக சக்தியும் நித்தினும் பகிர்ந்து கொண்டனர். சக்தியும் நித்தினும் முந்தைய தினம் இறுதி இரண்டு மணி நேரங்களில் போகும் செல்ஃப் டிஸ்ட்ரக்ட் ஆணைகள் உட்பட தங்களது சர்வரில் நடைபெற்ற நடவடிக்கைகள் அனைத்தையும் அடுத்த நாள் மாலை பரிசீலனை செய்வதை வழமையாக கொண்டு இருந்தனர். 26ம் தேதியன்று தொடங்கி தொடர்ந்து நான்கு நாட்களில் ஒரு மிகப் பெரிய ட்ரான்ஸ்ஃபர் ஆபரேஷனை வெற்றிகரமாக முடித்து இருந்தனர். அறுபது கிளைகளில் கேஷாக டெப்பாசிட் செய்யப் பட்ட நானூற்று அறுபது மில்லியன் டாலர்களை ஒரு பந்நாட்டு வியாபார நிறுவனத்தின் கணிணிகள் மூலம் சாவ் பாலோ நகரதில் இருந்த ஒரு ப்ரேஸில் நாட்டு வங்கியின் கண்க்குக்கு ட்ரான்ஸ்ஃபர் செய்து இருந்தனர். பொதுவாக இரண்டு மூன்று நாட்களில் முடிக்கக் கூடிய வேலை சில சிக்கல்களால் நான்கு நாட்களை விழுங்கிவிட்டது.
25ம் தேதி நள்ளிரவு வரை சக்தியின் வீட்டில் இருந்த சர்வர் இயக்கப் பட்டு இருந்தது. 25ம் தேதி நள்ளிரவுக்குப் பிறகு 29ம் தேதி நள்ளிரவு வரை ட்ரான்ஸ்ஃபர் ஆபரேஷன் நடத்துவதற்காக ஜாஷ்வாவின் இல்லத்தில் இருந்த சர்வர் இயக்கப் பட்டது. ட்ரான்ஸ்ஃபரை முடித்த பிறகு 29ம் தேதி நள்ளிரவு தொடங்கி பழைய படி நாளுக்கு நாள் மாறி மாறி இயங்கும் படி செய்து இருந்தனர். 26ம் தேதி ட்ரான்ஸ்ஃபர் ஆபரேஷன் தொடங்கியதால், முந்தைய நள்ளிரவுவரை தன் சர்வரில் நடந்த நடவடிக்கைகளை பரிசீலனை செய்ய சக்திக்கு நேரம் கிடைத்து இருக்கவில்லை.மெலிதாக ஹம்மிக் கொண்டு இருந்த சர்வரின் அருகே அமர்ந்து 25ம் தேதியின் ஒவ்வொரு வகை நடவடிக்கைகளையும் பரிசீலனை செய்தான். ஒவ்வொரு வகை நடவடிக்கையிலும் ஸ்க்ரீனை முழுவதும் நிரப்பாத அளவுக்கே வரிகள் தோன்றின. "செல்ஃப் டிஸ்ட்ரக்ட் ஆணைகள்" என்ற வகைக்கு வந்ததும் அதிர்ந்தான். சர்வரில் இருந்து சென்று இருந்த ஆணைகள் ஸ்க்ரீனை நிரப்பி இருந்தது. அடுத்தடுத்த நான்கு ஸ்க்ரீனையும் நிரப்பி அதற்கு அடுத்த ஸ்க்ரீனுக்கும் வரிகள் வழிந்தன ... சில கணங்கள் திகைத்த பின், நிதானமாக அவைகளை பரிசீலனை செய்தான். அனைத்தும் நிஜமாகச் சென்ற செல்ஃப் டிஸ்ட்ரக்ட் ஆணைகளே என்று உறுதி செய்த பிறகு எத்தனை ஆணைகள் என்று கணக்கிட்டான். சரியாக நூறு கணிணிகளுக்கு அத்தகைய ஆணைகள் சென்று இருந்தன! சில நிமிடங்கள் மௌனமாக அமர்ந்த பின் நேரத்தை பொருட் படுத்தாமல் நித்தினையும் ஜாஷ்வாவையும் அழைக்க கைபேசியை எடுத்தான். இன்னமும் அதனை சார்ஜ் செய்ய மறந்து இருப்பதை கவனித்து வீட்டுத் தொலைபேசியில் அழைத்து கான்ஃப்ரன்ஸ் கால் அமைத்து நடந்ததை சொன்னான். நித்தின், "My God! " ... பிறகு "Damn, damn .. " என்றவாறு அவன் படுக்கையை குத்துவது கேட்டது. சக்தி, "டேய், சும்மா கோபப்பட்டு பிரயோஜனம் இல்லை. நாம் ரிஸ்க் எடுத்துட்டோம். ஆனா கவனக்குறைவாவும் இருந்துட்டோம்" நித்தின், "நம் மேல தாண்டா எனக்கு எரிச்சலா இருக்கு" பின்னணியில் சஞ்சனாவின் கிசுசிசுப்புக்கு பிறகு ஜாஷ்வா, "சரி, இப்போ நூறு செல்ஃப் டிஸ்ட்ரக்ட் மெஸ்ஸேஜ் போயிருக்கு. இதை வெச்சுட்டு அவங்க என்ன செய்யக் கூடும்?" சக்தி, "டீகோட் பண்ணி, சர்வரோட ஐ.பி அட்ரெஸ்ஸை கண்டு பிடிக்கப் பார்ப்பாங்க" ஜாஷ்வா, "டீகோட் பண்ண முடியுமா?" நித்தின், "அவ்வளவு சுலபமா முடியாது" சக்தி, "டேய், நாம் ஒண்ணு ரெண்டு பேர் முயற்சி செய்வதைப் பத்தி பேசலை. இரண்டு அரசாங்கங்கள் முயற்சி செய்யறதைப் பத்தி பேசிட்டு இருக்கோம். நிச்சயம் முடியும் ஆனா ரொம்ப விரிவான வேலை அது. நிறைய ஆள்பலமும் கணிணிகளும் இருந்தா நிச்சயம் முடியும்." நித்தின், "அப்படியும் நாள் ஆகும்" சக்தி, "ஜாஷ்வா, நீ அவங்க நிலைமையில் இருந்தா என்ன செய்வே? அதை சொல்லு" ஜஷ்வா, "ப்ரூட் ஃபோர்ஸ் பாட்டர்ன் மாட்சிங்க் மெத்தட் (Brute Force Method using Pattern Matching Method) உபயோகிப்பேன். நித்தின் சொன்ன மாதிரி நாள் ஆகலாம். ஆனா ஆள்பலமும் சக்தி வாய்ந்த கணிணியும் இருந்தா நிச்சயம் கண்டு பிடிச்சுட முடியும். " நித்தின், "Brute force method will be most effective only if you have a large sample of both plain and encrypted alpha-numeric text" (அந்த முறையை பயன் படுத்த அவங்களுக்கு நிறைய எழுத்துக்கள், வார்த்தைகள் கொண்ட சங்கேத முறைப் படி மாற்றி அமைக்கப் பட்ட வரிகளும். மாற்றுவதற்கு முன்னால் இருந்த வரிகளும் தேவை) ஜாஷ்வா, "ஆமா" நித்தின், "ஆனா செல்ஃப் டிஸ்ட்ரக்ட் மெஸ்ஸேஜ்களில் எல்லாம் வெறும் எண்கள் மட்டும் தானே இருக்கும். எழுத்துக்கள் இருக்காதே" ஜாஷ்வா, "விளம்பர் ஈமெயிலுக்கான மெஸ்ஸேஜ்கள் ... " என அவன் தொடங்கி பாதியில் நிறுத்தினான். பின்னணியில் சஞ்சனா நடந்து வரும் சத்தம். பிறகு "என்ன ஆச்சு?" என்று அவள் ஜாஷ்வாவைக் கேட்பது கேட்டது. சக்தி தலையில் கையை வைத்தான். நித்தின், "மை காட் ஜாஷ் நீ அன்னைக்கு சொன்ன அதிகப் படியான ஆர்டர்கள் ... " சக்தி, "எஸ் ... அவங்ககிட்ட இருந்துதான் வந்து இருக்கு" ஜாஷ்வா, "எஸ்! எஃப்.பி.ஐ நிஜக் கம்பெனிகளை உபயோகிச்சு ஆர்டர் கொடுத்து சர்வரிடம் இருந்து ஆணை வரவழைச்சு இருக்காங்க" நித்தின், "எப்ப இருந்து ஆர்டர்கள் அதிகரிச்சுது?" ஜாஷ்வா, "மூணு மாசத்துக்கு முன்னால் இருந்து. வாரத்துக்கு சராசரி ரெண்டு ஆர்டர்கள் அதிகமா வந்துது. அந்த ரெண்டும் அவங்க கொடுத்ததுன்னு எடுத்துட்டா. அவங்ககிட்ட இப்போ இருநூறு அல்லது முந்நூறு ஈமெயில் விளம்பரத்துக்கான ஆணை மெஸ்ஸேஜ்கள் இருக்கும்." மௌனமாக மூவரும் சில நிமிடங்கள் ஆழ்ந்த யோசனையில் இருந்தனர். ஜாஷ்வா, "ஐ யம் ரியலி சாரி கய்ஸ். நான் இன்னும் கொஞ்சம் கவனமா இருந்து இருக்கணும்" நித்தின், "கம் ஆன் ஜாஷ். இதில் நாம் மூணு பேரும் இருக்கோம். எங்க கிட்ட சாரி கேட்டு எங்களை பிரிச்சுப் பேசாதே" இன்னும் ஓரிரு நிமிடங்கள் அரவமின்றிக் கடந்தன .. பெரு மூச்சுடன் மௌனத்தைக் கலைத்த சக்தி, "கய்ஸ், நாம் லேக் ஜார்ஜ் ரிஸார்ட்டில் என்ன பேசிகிட்டோம்? ஞாபகம் இருக்கு இல்லை? அவங்க கண்ணில் நாம் எந்த விதமான சட்ட விரோதச் செயலிலும் ஈடு படவில்லை. சோ, பயப் படறதுக்கு ஒண்ணும் இல்லை. எந்த முடிவும் நாம் உடனே எடுக்க வேண்டாம். மெஸ்ஸேஜ்களில் இருந்து சர்வரின் ஐ.பி அட்ரெஸ்ஸை கண்டு பிடிக்க நிச்சயம் பல நாட்கள் ஆகலாம். ஆனா உடனடியா என்ன செய்யப் போறோம் அப்படிங்கறதை நாம் முடிவு செஞ்சாகணும். இப்ப மணி பனிரெண்டாகப் போகுது. நான் லஞ்ச் ஆர்டர் பண்ணறேன். நீங்க ரெண்டு பேரும் இங்க வந்துடுங்க. உட்கார்ந்து டிஸ்கஸ் பண்ணி முடிவெடுத்தாகணும்." நித்தின், "சரி. இன்னும் ஒரு மணி நேரத்தில் நான் அங்கே இருப்பேன்" என்றபடி அவன் இணைப்பைத் துண்டித்தான். ஜாஷ்வா, "சரி, நான் புறப்பட்டு வரேன் .. லைன்ல இரு உன் தங்கை பேசணுமாம்" சஞ்சனா, "என்னண்ணா? எதாவுது ப்ராப்ளமா? இந்த ஆள் மூஞ்சி வெளுத்தா அசிங்கமா தெரியுது!" வாய்விட்டு சிரித்த சக்தி, "ஒண்ணுமில்லை உங்க ரெண்டு பேரோட் மச்சினிகள் தொந்தரவுதான்" சஞ்சனா, "என்ன மோப்பம் பிடிச்சுட்டாளுகளா?" சக்தி, "இன்னும் இல்லை. ஆனா அதுக்கு வழிவகுக்க நாங்க மூணு பேரும் அசந்து போற மாதிரி ஒரு பெரிய வேலை செஞ்சு இருக்காளுக" சஞ்சனா, "ப்ரச்சினை ஒண்ணும் இல்லையே?" சக்தி, "கவலைப் படாதே. அப்பறம், நீயும் இங்கே லஞ்சுக்கு வரியா? நான் வெளியில் இருந்து ஆர்டர் பண்ணறேன்" சஞ்சனா, "எனக்கு வேண்டாம். ஜாஷ் ஆஃபீஸ் நியூ இயர் பார்ட்டி இருக்கு. வாங்கி ஒரே தடவை போட்ட ஒரு ட்ரெஸ்ஸை ஜாஷ் போட்டுட்டு வரச் சொல்லி இருக்கார். அந்த ட்ரெஸ் எந்த நிலையில் இருக்குன்னு பாக்கணும். ப்ளஸ், நாளைக்கு புது வருஷம். வீட்டை எல்லாம் இன்னைக்கு சுத்தம் பண்ணனும்ன்னு இருந்தேன். அந்த சோம்பேறிக்கு வசதியா நீ வரச் சொல்லிட்டே" சக்தி, "நான் வேணும்ன்னா அப்பறம் வந்து உனக்கு ஹெல்ப் பண்ணறேன்" சஞ்சனா, "நீங்க முதல்ல உங்க வேலைக்கு உலை வராம பாத்துக்குங்க. அப்பறம் நாளைக்கு லஞ்சுக்கு வீட்டுக்கு வா" சக்தி, "ஹேய், பார்ட்டில இருந்து வந்து தூங்க ரொம்ப நேரமாகும். எதுக்கு சிரமம்?" ஜாஷ்வா, "உனக்கு எங்க புத்தாண்டு தின ஸ்கெட்யூல் தெரியாது இல்லை?" சக்தி, "இல்லை. சொல்லு" சஞ்சனா, "நைட்டு எத்தனை மணிக்கு படுத்தாலும் அன்னைக்கு காலைல எட்டு மணிக்கு மேல் அவரை தூங்க விட மாட்டேன். காலையிலே சர்ச்சுக்கும் கோவிலுக்கும் போயிட்டு வருவோம். இதனாலயே நாங்க நியூ இயர் பார்ட்டியில் இருந்து நைட்டு சீக்கரம் கிளம்பிடுவோம். நாளைக்கு நீங்க ரெண்டு பேரும் கோவிலுக்கு வாங்க. அதுக்கு அப்பறம் வீட்டுக்கு" சக்தி, "ஏன் சர்ச்சுக்கு வரக் கூடாதா" சற்று மௌனத்துக்கு பிறகு, சஞ்சனா, "சாரிண்ணா! சர்ச்சுக்கும் கூட வா" சக்தி, "ஓ.கே. நாளைக்கு பாக்கலாம்" மதிய உணவுக்கு ஆர்டர் செய்தபின் கைபேசியை சார்ஜரில் மாட்டினான்.ஒன்று கூடிய மூவரும் தங்கள் இக்கட்டுநிலையை அலசிப் பார்க்கத் தொடங்கினர். ஜாஷ்வா, "சரி, மேற்கொண்டு என்ன செய்வாங்கன்னு யோசிக்கலாம்" முன்னெச்சரிக்கை: கீழே நிறம் மாற்றி எழுதப் பட்டு இருக்கும் பகுதிகளில் எதிரிகளுக்கு சர்வரின் ஐ.பி. அட்ரெஸ்ஸை கண்டு அறிய எத்தனை நாட்கள் தேவைப் படும் என்பதை விவாதித்து கண்டறிவது விளக்கப் பட்டு இருக்கிறது. கணிணிவியல் நுணுக்கங்கள் நிறைந்து இருக்கும் ... சக்தி, "நீ சொன்ன மாதிரி ப்ரூட் ஃபோர்ஸ் பாட்டர்ன் மாட்சிங்க் முறைதான் அவங்களோட ஒரே சாய்ஸ். ரெண்டு வகையான மெஸ்ஸேஜ்கள் இருந்தாலும் மொத்தம் முந்நூறு மெஸ்ஸேஜ்கள் தான் அவங்க கிட்ட இருக்கும். அதை மட்டும் வெச்சுகிட்டு அந்த முறையை உபயோகிக்கணும்ன்னா நம் மெஸ்ஸேஜ்களின் நீளத்தை வெச்சு பாக்கும் போது 128இல் இருந்து 256 (சுற்றுக்கள்) தேவைப் படும்" எப்படி சந்தேக முறைப் படி தகவலை மாற்றி எழுதுவது க்ரிப்டோக்ரஃபி (Cryptography) என அழைக்கப் படும் ஒரு விஞ்ஞானம் ஆகி விட்டதோ அதே போல் குறியீட்டு வடிவங்களில் இருக்கும் தகவல்களை ஆராய்ந்து கண்டறிவதற்கும் டீசைஃபர்மென்ட் (Decipherement) என அழைக்கப் படும் விஞ்ஞானம் இருக்கிறது. இவை இரண்டும் கணிதவியலின் கிளைகளே. குறியீட்டு வடிவத்தில் இருக்கும் ஒரு தகவலை கண்டு பிடிக்க பல வழிமுறைகள் உள்ளன. அவைகளில் கணிணிகளை கொண்டு செயல் படுத்தும் வழிமுறைகளில் ஒன்றே ப்ரூட் ஃபோர்ஸ் பாட்டர்ன் மாட்சிங்க் (Brute Force Pattern Matching) என்று அழைக்கப் படுவது. ஜாஷ்வா, "ஹேய், இதுவரைக்கும் நீங்க எப்படி என்க்ரிப்ட் (encrypt - குறியிட்டு எழுதுவது) செய்யறீங்கன்னு கேட்டதில்லை. அதை கொஞ்சம் விளக்கி சொல்லு" சக்தி, "ஈமெயிப் அனுப்ப கொடுக்கும் ஆணை மெஸ்ஸேஜ்களுக்குள் இருக்கும் மெயில் சப்ஜெக்ட் (Mail Subject) மற்றும் மெயில் பாடி (Mail body) ஏற்கனவே alpha-numeric string (எண்களும் எழுத்துக்களும் கொண்ட வரி) ஆகத்தான் இருக்கும். மத்த வெறும் எண்கள் கொண்ட பகுதிகளையும் நாங்க முதலில் alpha-numeric string (எண்ணெழுத்து வடிவம்) ஆக மாத்தறோம். சாதாரண ASCII alpha-numeric string இல்லை. யூனிகோட் டெக்ஸ்ட் ஸ்ட்ரிங்க் (Unicode Text String). சோ, மொத்த மெஸ்ஸேஜும் யூனிகோட் எழுத்து வடிவமா இருக்கும். பிறகு அதை எங்க சொந்த சந்தேக முறைப் படி encrypt செய்யறோம்." ஜாஷ்வா, "ஓ! முதல் முதலில் நான் மாங்க்ஸ் பாட் நெட்டை கொஞ்சம் நோண்டிப் பாத்த போது. உங்க மெஸ்ஸேஜ்கள் எல்லாம் இணையத்துக்குள் ஸ்லோவா போறதை கவனிச்சு இருக்கேன். நிறைய சமயம் பாதி மெஸ்ஸேஜ் தொலைந்து போய் தகவல் பறிமாற்றம் தடை பட்டு ரீ-செண்ட் ஆனதையும் பாத்து இருக்கேன். உங்க மாங்க்ஸ் பாட் நெட் ரொம்ப ஸ்லோவோன்னு நான் சந்தேகப் பட்டேன். ஆனா இப்பத்தான் விளங்குது. alpha-numeric string ஆக மாத்தினாலே ஒவ்வொரு மெஸ்ஸேஜில் இருக்கும் எண்கள் கொண்ட பகுதியும் குறைஞ்சது பத்து மடங்கு நீளம் அதிகம் ஆகும். யூனிகோட் ஸ்ட்ரிங்க்குன்னா இன்னும் நாலஞ்சு மடங்கு நீளம் அதிகரிக்கும். பாட்டர்ன் மாட்சிங்க் செஞ்சு கண்டு பிடிக்க நீ சொல்லற அவ்வளவு சுற்றுக்கள் தேவைப் படும். ஒவ்வொரு சுற்றுக்கும் அதிக நேரமும் தேவைப் படும். " நித்தின், "இன்னும் ஒரு விஷயம் ஜாஷ்வா, பாட்டர்ன் மாட்சிங்க் கணிணிமூலம்தான் செய்வாங்க. ஆங்கிலத்தில் மட்டும் தான் நாம் ஈமெயில் விளம்பரங்கள் அனுப்பறோம். அதனால் அதன் யூனிகோட் ஸ்ட்ரிங்க் (எழுத்து தொடர்) கூட ஒப்பிட்டுப் பார்க்கணும்ன்னு யோசிக்க மாட்டாங்க. ASCII string அப்படின்னு நினைச்சுகிட்டு முயற்சி செய்வாங்க" மற்ற மொழிகளில் கணிணியில் எழுதுவதற்காகவே யூனிகோட் (Unicode) கண்டு பிடிக்கப் பட்டது. ஆங்கிலம் மட்டும் என்றால் ASCIIஏ போதுமானது. ஜாஷ்வா, "சோ, முதலாவுது எண்களை நீங்க அப்படியே சங்கேத முறைப் படி மாத்தி இருப்பீங்கன்னு நினைப்பாங்க. இரண்டாவது யூனிகோட் உபயோகிச்ச்சு இருக்கீங்கன்னு அவங்க நினைக்க மாட்டாங்க. இந்த ரெண்டு தடுமாற்றங்களினாலும் நிறைய நாட்கள் வீணாகலாம். இருந்தாலும் இருநூற்று ஐம்பத்து ஆறு சுற்றுக்குள்ள கண்டு பிடிச்சுடுவாங்க இல்லையா?" நித்தின், "அப்பவும், சரியான ஃபாண்ட் அவங்க கணிணியில் இருந்து அந்த எழுத்துக்கள் என்னன்னு தெரிஞ்சாதான் உடனே கண்டு பிடிப்பாங்க" ஜாஷ்வா, "என்ன சொல்றே? புரியலை" சக்தி, "எண்களை எல்லாம் எழுத்து வடிவமா மாற்றி எழுதும் போது நாங்க அரபிக் நியூமரல்ஸ் உபயோகிக்கலை. தமிழ் நியூமரலும் மராட்டி மொழியில் எழுத உபயோகிக்கும் தேவணாகிரி நியூமரல்ஸ் உபயோகிச்சு இருக்கோம். உதாரணமா நம்பர் "124" அப்படிங்கறது "௧௨௩" அப்படின்னு வரும்"
நித்தின், "சில இடங்களில், அதாவது ஐம்பது சதவிகிதம் தமிழ் நியூமரலில் வரும் மற்ற இடங்களில் மராட்டி நியூமரலில் வரும்" வாய்விட்டு சிரித்த ஜாஷ்வா, "நீங்கதான் பாட் நெட் எழுதினீங்கன்னு தெரிஞ்சுக்க உங்க ஆளுங்க ரெண்டு பேருக்கும் இது ஒண்ணே போதும்"சக்தி, "அதாவது அவங்க அந்த அளவுக்கு வரும்போது .. " ஜாஷ்வா, "சக்தி, நிச்சயம் வருவாங்க. நாம் இப்ப நமக்கு எவ்வளவு நாட்கள் இருக்குன்னு யோசிக்கணும். சரி, ஒரு சுற்று ப்ரூட் ஃபோர்ஸ் பாட்டர்ன் மாட்சிங்க் ரன் பண்ண எவ்வளவு நேரம் ஆகும்?" நித்தின், "நேரம் இல்லை நாள் ஆகும்ன்னு கேளு" ஜாஷ்வா, "ரொம்ப பெருமை அடிச்சுக்காதே. நானும் ப்ரூட் ஃபோர்ஸ் பாட்டர்ன் மாட்சிங்க் செஞ்சு பாத்து இருக்கேன். என் கிட்ட சக்தி வாய்ந்த கணிணி இல்லை. இருந்து இருந்தா சில மணி நேரத்தில் ஒரு சுற்று முடிக்கலாம்" சக்தி, "அது சிம்பிள் சைஃபர் உபயோகிச்சு இருந்தா ஜாஷ். பாலிமோஹோனின் சைஃபர் (Polyphonic Cipher - இந்த வகை குறியீட்டு முறைகள் கண்டு பிடிப்பதற்கு மிக கடினமானவை) உபயோகிச்சு இருந்தா?" ஜாஷ்வா வியப்புடன், "டேய் மச்சா! You are really something!! ஆனா எனக்கு ஒரு சந்தேகம். பாலிஹோனிக் சைஃபருக்கான கோட் ரொம்ப பெருசா இருக்குமே? ஆனா உங்க வைரஸ் அத்துனூண்டா இருக்கு? எப்படி?" குறியீட்டு முறைப் படி தகவல்களை மாற்றும்/மொழி பெயற்கும் மென்பொருளின் அளவு (file size - விண்டோஸ் ஃபோல்டரில் ஃபைலகளின் அளவு) அந்த குறியீட்டு முறையின் கடினத்தைப் பொறுத்து பெரிதாகும். நித்தின், "வைரஸ்ஸோட அந்த பகுதிக்கான கோட் வைரஸ்ஸுக்கு உள்ளே இருக்காது. கணிணிக்குள்ள புகுந்த உடனே விண்டோஸ் டீஃபால்ட் டெஸ்க்டாப் வால் பேப்பருக்கான JPEG Image ஃபைலிலுக்குள் ஸ்டோர் பண்ணிடறோம். வைரஸ் ரன் ஆகும் போது அந்த கோடை எடுத்து உபயோகிச்சுக்கும்" ஜாஷ்வா, "Wow, you guys used stegenography also? ரியலி அமேஸிங்க்! சரி, இப்ப நான் நம்பறேன். ப்ரூட் ஃபோர்ஸ் பாட்டர் மாட்சிங்க் மெத்தடில் ஒவ்வொரு சுற்றுக்கும் நிறைய நேரம் எடுக்கும். ஆனால், சூப்பர் கம்ப்யூட்டர் இருந்தா ஒரு மணி நேரத்தில் முடிக்கலாம்." நித்தின் "இரு ஜாஷ், அந்த செல்ஃப் டிஸ்ட்ரக்ட் மெஸ்ஸேஜ்கள் எல்லாம் சக்தி வீட்டில் இருந்த சர்வரில் இருந்து போயிருக்கு. ஆனா ஈமெயில் விளம்பரத்துக்கான மெஸ்ஸேஜ்கள் எங்க ரெண்டு பேர் வீட்டில் இருந்த ரெண்டு சர்வர்களில் இருந்து போயிருக்கும். அவங்க ஒரே ஒரு சர்வர்ன்னு நினைச்சுட்டு கொஞ்சம் குழம்புவாங்க" ஜாஷ்வா, "நம் எதிரிகளை கம்மியா எடை போடாதே. உங்க ரெண்டு பேர் வீட்டிலும் சர்வர்கள் மாறி மாறி இயங்கி இருக்கு. பாதி ஈமெயில் மெஸ்ஸேஜ்களில் இருக்கும் சர்வர் ஐ.பி.அட்ரெஸ் வேறன்னு புரிஞ்சுக்க ரொம்ப நாள் ஆகாது. செல்ஃப் டிஸ்ட்ரக்ட் மெஸ்ஸேஜ்களோடு ஒப்பிடக் கூடிய ஈமெயில் விளம்பர மெஸ்ஸேஜ்களை மட்டும் எடுத்துட்டு கண்டின்யூ பண்ணுவாங்க" சக்தி, "அப்ப அவங்க ஒப்பிட்டுப் பாக்கக் கூடிய மெஸ்ஸேஜ்களின் எண்ணிக்கை குறையும் சுற்றுக்கள் அதிகரிக்கும்" ஜாஷ்வா, "குறைந்த பட்ச சுற்றுக்களான 128 அதிகம் ஆகலாம். ஆனா 256க்கு மேல போகாது" சக்தி, "ஓ.கே. சூப்பர் கம்ப்யூட்டர் எல்லாம் இதுக்கு உபயோகிப்பாங்களான்னு தெரியலை. மேலும் ஒவ்வொரு சுற்றுக்கும் கோட் மாத்தி டெஸ்ட் பண்ணிப் பார்க்க ஏழு எட்டு மணி நேரம் ஆகலாம். நான் அவங்க இடத்தில் இருந்தா ஒரு நாளைக்கு ஒரு சுற்றுன்னு டார்கெட் செய்வேன்" நித்தின், "ஏன் ஒரு சூப்பர் கம்ப்யூட்டருக்கு பதில பல சர்வர் மாதிரியான கணிணிகளை உபயோகிக்க கூடாது. ஒரே நாளில் ரெண்டு மூணு சுற்று முடிக்கலாமே. தீபாவும் அப்படித்தான் யோசிப்பான்னு தோணுது." சக்தி, "செய்யலாம். ஆனா கோ-ஆர்டினேட் (நிர்வாகிக்கறது?) பண்ணறது கஷ்டம். நான் பார்த்த வரைக்கு வந்தனா ரொம்ப மெத்தாடிகல் (methodical). எதுவும் அவ கன்ட்ரோலில் இருக்கணும்ன்னு பார்ப்பா. அதனால் அவ ஒத்துக்க மாட்டா. ஒவ்வொரு சுற்றும் கவனமா செய்யணும். தப்பு ஆச்சுன்னா அவங்க தேடல் திசை திரும்பிப் போக வாய்ப்பு இருக்கு" ஜாஷ்வா, "சோ, குறைஞ்ச பட்சம் 128 சுற்றுக்கள் தேவைப் படும் அதிக பட்சம் 256 சுற்றுக்கள். முதலிலும் கடைசியிலும் ஆகக்கூடிய சில தடுமாற்றங்களினால் முப்பது நாட்கள் வீணானாலும். 158 நாட்களில் இருந்து 286 நாட்களுக்குள் அவங்க சர்வர் ஐ.பி அட்ரெஸ்ஸை கண்டு பிடிச்சுடுவாங்க"
நித்தின், "அதாவது ஜூன் முதல் வார முடிவில் இருந்து செப்டம்பர் கடைசிக்குள் சக்தி வீட்டில் இருக்கும் சர்வரின் ஐ.பி அட்ரெஸ்ஸை கண்டு பிடிச்சுடுவாங்க"சக்தி, "அனேகமா அதிக பட்சம் டீகோட் செய்ய 128 நாளுன்னு வெச்சு இருக்காங்க. அதனால தான் வந்தனா நான் திரும்பிப் போகும்போது அவ அசைன்மெண்டும் முடிஞ்சுடும்ன்னு சொன்னா" நித்தின், "தீபாவும் அதே மாதிரித்தான் சொன்னா" இவ்வாறாக தாங்கள் வேடர்களாக இருந்தால் எத்தனை நாளில் அவர்கள் சர்வரின் இணைய விலாசத்தை கண்டு பிடிக்கப் முடியும் என்று கணக்கிட்டனர்.

No comments:

Post a Comment