Friday, January 30, 2015

செக்மேட் - சைபர் கிரைம் திரில் தொடர் - பாகம் - 19


சஞ்சனா, "ஓ நான் தப்பா புரிஞ்சுகிட்டேன்" நித்தின், "அப்பறம் பேசறேன் ஆண்டி" என்று விடைபெற்றுச் சென்றான். சஞ்சனாவிடம் சிறிது நேரம் பேசிக் கொண்டு இருந்தபிறகு சக்தி மறுபடி லைனுக்கு வந்தான் சக்தி, "என்னம்மா யோசிச்சீங்களா? நான் மத்த ஏற்பாடெல்லாம் பண்ணட்டுமா" இப்போது மனோகரிக்கு அந்த வந்தனாவை பார்த்தே ஆக வேண்டும் என்று இருந்தது. மனோகரி, "சரிடா கண்ணா. சாந்திகிட்டயும் கேட்டேன். அவளுக்கு ஒரே குஷி. நீ அரேஞ்ச் பண்ணு போயிட்டு வர்றோம்"சென்னையில் இருந்து வந்த பயணிகள் வெளியில் வரத் தொடங்கினர். சக்தி தன் தாய் மற்றும் தங்கையின் பல புகைப் படங்களை அவளுக்கு காட்டி இருந்தான். அடையாளம் கண்டு கொள்ள அவர்களது முதல் சந்திப்பின் போது எடுத்த வந்தனாவின் புகைப்படம் ஒன்றை தாய்க்கு அனுப்பி இருந்தான்.
சக்கரம் அமைந்த பெட்டிகளை ஆளுக்கு ஒன்றாக இழுத்தவாறு வந்து கொண்டு இருந்த தாயையும் மகளையும் வந்தனா வாஞ்சையுடன் பார்த்தாள். வெளிர் நிறப் புடவையும் வெள்ளை ரவிக்கையுமாக கண்ணாடி அணிந்த மனோகரி; அவளுக்கு அருகே சுடிதாரில் தாயின் நிறம் கொண்ட சாந்தி. 'ஓ! நீ மட்டும்தான் உன் அப்பா கலரா' என்று மனதுக்குள் சக்தியிடம் பேசிக்கொண்டே சுற்றும் முற்றும் பாத்துக் கொண்டு இருந்தவர்களை நெருங்கினாள். சாந்தி வந்தனாவை முதலில் பார்த்தாள். சாந்தி, "அம்மா, அதோ அங்கே .. " அவர்க்ள் அருகே வந்த வந்தனா, "ஹெல்லோ ஆண்டி. ஹெல்லோ ஷாந்தி. ஐ யாம் வந்தனா" என்றவாறு மனோகரியிடம் கை நீட்டினாள் இருவரிடமும் கை குலுக்கியபின் மனோகரி ஏதும் சொல்வதற்கு முன்னால் அவள் இழுத்துக் கொண்டு வந்த பெரிய பெட்டியை வாங்கிக் கொண்டாள். அவளை தலை முதல் கால்வரை ஒரு முறை பார்த்த உடன் மனோகரிக்கு அவளை மிகவும் பிடித்துப் போனது. சிரித்த முகத்துடனும் அதே சமயம் மிடுக்குடனும், "ஹெல்லோ வந்தனா. சக்தி உன்னைப் பத்தி நிறைய சொல்லி இருக்கான். உண்மையை சொல்லு. எங்களை கூட்டிட்டு போய் காண்பிக்க உனக்கு சிரமம் இல்லையா?" வந்தனா, "நாட் அட் ஆல் ஆண்டி. நான் எப்படியும் ஜெய்ப்பூருக்கும் உதைப்பூருக்கும் போறதா இருந்தேன். என் கூட வேலை செய்யற தீபாவும் இந்த இடமெல்லாம் பாத்தது இல்லைன்னு சொன்னா. அவளை எப்படியும் கூட்டிட்டு போறதா இருந்தேன். அதான் சக்தி கிட்ட சொன்னேன்" அந்த விளக்கம் சக்தி முதலில் கொடுத்ததற்கு சற்று மாறுபட்டு இருந்தாலும் முழுமையாக நம்பும்படி இருக்க, மனோகரியின் மனத்தில் ஓரளவு தெளிவு பிறந்தது. சாந்தி, "நான் உங்களை எப்படி கூப்பிடணும்?" வந்தனா, "வந்தனான்னே கூப்பிடு. ஏன்?" சாந்தி, "No, you are my brother's friend. Must be same age. I don't call him by name. Always anna. That's why I asked (இல்லை, நீங்க அண்ணனோட் ஃப்ரெண்ட். அதே வயசா இருக்கும். அண்ணனை நான் பெயர் சொல்லி கூப்பிட மாட்டேன். அதான் கேட்டேன்)" வந்தனா, "உன் அண்ணனை விட நான் ஆறு மாசம் சின்னவதான்" என்று மனோகரிக்கும் சேர்த்து அறிவித்தாள். சாந்தி, "ஓ ரியலீ?" வந்தனா, "ஆண்டி, ஃப்ளைட் சௌகரியமா இருந்துதா" மனோகரி, "ரொம்ப சௌகரியமா இருந்தது டியர்" தன்னைப் பற்றிய முதல் அபிப்பிராயம் நல்லதாக இருப்பதை எண்ணி வந்தனாவின் மனம் குதூகலித்தது. வந்தனா, "ஈரோட்டில் இருந்து சென்னைக்கு ஓவர் நைட் வந்துட்டு காலையில் மறுபடி புறப்பட்டு வந்தது டையரிங்கா இருக்கும். இல்லை?" மனோகரி, "இல்லைம்மா. நேத்து மதியம் ஈரோட்டில் இருந்து புறப்பட்டோம். ரயிலில் சென்னைக்கு போனோம். என் ஃப்ரெண்ட் ஒருத்தி வீட்டில் நைட்டு தங்கிட்டு காலையில் ஃப்ளைட் பிடிச்சோம்" வந்தனா, "ஓ அப்படியா? சக்தி சரியா சொல்லலை. அதனால் உங்களுக்கு டையர்டா இருக்கும்ன்னு இன்னைக்கு மத்தியானம் வரைக்கு ஒரு ப்ரோக்ராமும் போடலையே" மனோகரி, "பரவால்லை வந்தனா. காலையில் சீக்கரமா எழுந்து வந்தது கொஞ்சம் டையர்டாத்தான் இருக்கு. நீ ப்ரோக்ராமை மாத்த வேண்டாம்" ஏர்ப்போர்ட்டில் இருந்து வீடு வரை வந்தனா தன்னைப் பற்றியும் தன் குடும்பத்தைப் பற்றியும் கூறினாள். "டெல்லியில் நீ எங்கே வேலை செய்யறே வந்தனா?" சிறிது நேர மௌனத்திற்கு பிறகு வந்தனா, "ஆண்டி, நான் ஒரு ஐ.பி.எஸ் ஆஃபீசர். R&AWவில் சைபர் க்ரைம் பிரிவில் வேலையில் இருக்கேன்" "ஓ, அப்படியா?" முதல் முதலாக தான் ஒரு ஐ.பி.எஸ் என்றபோது சக்தியிடம் கண்ட பாராட்டு மிக்க புன்சிரிப்பு மனோகரியின் முகத்தில் இருந்தது. பிறகு புருவங்கள் முடிச்சிட்ட மனோகரி, "அப்பறம் எப்படி சக்தியை மும்பை டெக் ஃபெஸ்டில் .. " வந்தனா, "ஆண்டி, நான் ஜெய்ப்பூர் என்.ஐ.டியில் பி.டெக் முடிச்சுட்டு ஐ.பி.எஸ் சேர்ந்தேன். ப்ரொபேஷன் முடிச்சு ஆறு மாசம்தான் ஆச்சு" மனோகரி, "உன் அஃபீஷியல் டெசிக்னேஷன் என்ன?" வந்தனா, "ஏ.எஸ்.பி" மனோகரி, "சென்ட்ரல் கவர்மெண்ட் ஏ.எஸ்.பி ஸ்டேட் கவர்மெண்ட் ஏ.எஸ்.பி ராங்கை விட அதிகம் இல்லையா?" வந்தனா, "ஆமா. ஸ்டேட் கவர்மெண்டில் இது எஸ்.பி அல்லது ஏ.சி.பி ராங்க்குக்கு சமம்" சாந்தி, "வாவ். யூ நோ வந்தனா? அண்ணா ஐ.ஐ.டி கிடைக்கலேன்னா ஐ.பி.எஸ் பண்ணனும்ன்னு இருந்தான். ஏம்மா, அண்ணாவும் வந்தனா மாதிரி பி.டெக் முடிச்சதும் ஐ.பி.எஸ் பண்ணி இருக்கலாம் இல்லை" வந்தனா, "பண்ணி இருக்கலாம் ஷாந்தி. ஆனா உன் அண்ணன் பி.டெக் முடிச்ச உடனே வேலைக்கு போகணும்ன்னு மேல எதுவும் படிக்கலை" என்று விளக்கவும் மனோகரி தன் மகனைப் பற்றி சிலர் மட்டும் அறிந்ததை சொன்னதைக் கண்டு அவர்களது இருவரது நட்பின் ஆழத்தை ஆராய்ந்தாள். மனோகரி, "உங்க வீடு முழுக்க ஐ.பி.எஸ், ஆர்மி ஆஃபீஸர்கள், நீயும் ஐ.பி.எஸ். Now I know how you could befriend my son so fast ..." வந்தனா மனதுக்குள் 'ஃப்ரெண்டா? ம்ம்ம்ஹூம் ... இப்ப தெரியுது. இப்படி தள்ளி இருந்து சித்தரவதை பண்ணறதை அவன் யார்கிட்ட கத்துகிட்டான்னு'. இன்னொன்றையும் கவனித்தாள். அவள் ப்ரொபேஷனில் தவுசாவில் இருந்த போது பொதுவாக அவளை முதல் முதலில் சந்திக்கும் குடும்பப் பெண்கள் காட்டும் பயம் கலந்த மரியாதையை மனோகரியின் பேச்சில் துளியும் காண முடியவில்லை. அவள் பேச்சில் இருந்து மனோகரியின் தன்னடக்கம் மிகுந்த தன்னம்பிக்கையையும் அதை அவள் தன் குழந்தைகளுக்கு ஊட்டி வளர்த்து இருந்ததையும் பார்த்த வந்தனாவின் மனதில் மனோகரியின் மேல் இருந்த மதிப்பும் மரியாதையும் பன்மடங்கானது. மனோகரி, "சக்திக்கு சைபர் க்ரைமைப் பத்தி எல்லாம் நிறைய தெரியும். எனக்கு மணிக்கணக்கா அதைப் பத்தி விவரிச்சு இருக்கான்" இப்போது வந்தனா துணுக்குற்றாள். 'இரு இரு உன்னை கவனிச்சுக்கறேன்' என்று சக்தியை கடிந்தவாறு மனதில் இருந்ததை அப்படியே மனோகரியிடம், "அப்படியா? என் கிட்ட எதுவும் சொன்னது இல்லை" மனோகரி, "எப்படி பேசுவான் வந்தனா. என் கிட்ட நீ உன் வேலையை பத்தி எதாவுது சொன்னா எனக்கு அதைப் பத்தி ஒண்ணும் தெரியாது. அதே அவன் கிட்ட நீ பகிர்ந்து கிட்டா உன் வேலையின் விதிமுறைகளை மீறுவது மாதிரி ஆயிடும் இல்லையா? அதான் நாகரீகமா அந்த பேச்சையே எடுத்து இருக்க மாட்டான்" ஒரு கணம் மனோகரியின் அறிவாற்றலில் வியந்த வந்தனா மனதுக்குள் 'ஆமா, நீங்கதான் உங்க மகனின் நாகரீகத்தை மெச்சிக்கணும். என்னால ஒண்ணும் சொல்ல முடியாதுன்னு தெரிஞ்சும் வேணும்ன்னே பேச்சை எடுத்து என்னை சீண்டி விட்டு வேடிக்கை பார்ப்பான்' என்றாலும் கூடவே, 'சக்தி, நீ என் கிட்ட எதையும் மறைக்கக் கூடாது. என் வேலை அதுக்கு தடையா இருக்கும்ன்னா எனக்கு இந்த வேலையே வேண்டாம்' என்று அவனிடம் மன்றாடினாள்.மஞ்சுநாத் ராத்தோட்டின் மனைவி சுலக்ஷணா ராத்தோட் அவர்களை அன்புடன் வரவேற்றார். முன்னமே ஆடவர் நால்வரும் இவ்வருகையைப் பற்றி பெண்டிருக்கு சொல்லி வந்தனா எதை மறைக்கிறாள் என்று கண்டறியக் கோரியிருந்தனர். வந்தனா, "பெரியம்மா, இது ப்ரொஃபெஸ்ஸர் மனோகரி முத்துஸ்வாமி. இது ஷாந்தி. ஆண்டி, என் பெரியம்மா சுலக்ஷணா ராத்தோட்" சுலக்ஷணா, "வெல்கம் டு டெல்லி. ராத்தோட் குடும்பத்தின் சார்பா உங்களை நான் வரவேற்கிறேன்" மனோகரி, "ரொம்ப நன்றி. வரும் வழியில் வந்தனா உங்க குடும்பத்தைப் பத்தி சொல்லிட்டு வந்தா. ஒவ்வொருவரையும் பார்க்க ஆவலா இருக்கு"
சுலக்ஷணா, "வந்தனா உங்க ப்ரோக்ராம் சொன்னா. எப்படியும் நீங்க திரும்பிப் போறதுக்குள்ள எல்லாரையும் பாத்துடுவீங்க" மனோகரி, "உண்மையில் அது என் ப்ரோக்ராம் இல்லை. என் மகன் சக்தியும் வந்தனாவும் போட்ட ப்ரோக்ராம். உங்களுக்கெல்லாம் சிரமம்" சுலக்ஷணா, "நோ நோ, எங்களுக்கு எந்த சிரமமும் இல்லை. வந்தனா எங்க மூணு வீட்டுக்கும் ஒரே பொண்ணு. நீங்க அவ ஃப்ரெண்டோட அம்மா தங்கைன்னா எங்களுக்கும் ஃப்ரெண்ட்ஸ்தான்" சாந்தி, "ரொம்ப தாங்க்ஸ் ஆண்டி" பேசிக்கொண்டு இருக்கையில் தீபா டீ-ஷர்ட் பெர்முடா சகிதம் குளித்து முடித்த ஈரத் தலையை உதறியவாறு வந்தாள். தீபா, "ஹல்லோ ஆண்டி. ஹல்லோ ஷாந்தி. ஐ ஆம் தீபா." மனோகரி, "ஹல்லோ தீபா. நீயும் வந்தனாவோட வொர்க் பண்ணறே இல்லையா? ஆனா உன்னைப் பாத்தா ஒரு ஐ.பி.எஸ் ஆஃபீஸர் மாதிரி தெரியலையே?" தீபா, "ஐ.பி.எஸ்ஸா? நானா?" என்றபடி வாய்விட்டு சிரித்தாள். சுலக்ஷணா, "இவளா ஐ.பி.எஸ்ஸா. இவளுக்கும் டிசிப்ளினுக்கும் ரொம்ப தூரம்" தீபா, "ஆமா, இவங்க எல்லாம் எனக்கு வெச்சு இருக்கும் பெயர் Anti-establishment Activist!" உடன் சேர்ந்து சிரித்த மனோகரி, "அப்பறம் எப்படி R&AWவில் சேர்ந்தே?" தீபா, "என் தலைவிதி ஆண்டி" என்றவள் வந்தனாவின் முறைப்பைப் பார்த்துக் குறும்பாக சிரித்தாள். பிறகு, "அப்பறம் விவரமா சொல்றேன் ஆண்டி. பை த வே, உங்களைப் பத்தி நித்தின் நிறைய சொல்லி இருக்கான்" சாந்தி, "Oh, you know Nithin Annaa?" தீபா, "Yes. I know your Nithin Anna very much" (I don't know how to express the phrase "smug reply" here!) மனோகரி, 'ம்ம்ம் .. அப்ப சக்தி உனக்கு சொல்லலை. நித்தின் சொல்லி இருக்கான்னா நிச்சயம் எதோ சுவாரஸ்யமான விஷயத்தை என் பையன் என் கிட்ட இருந்து மறைக்கறான்' எண்ணியவாறு வந்தனாவை மறுபடி ஒரு முறை தலைமுதல் கால்வரை எடை போட்டாள். சுலக்ஷணாவும் அதே போல் எண்ணிக் கொண்டு இருந்தாள். மனோகரி, "இன் ஃபாக்ட் நித்தின்தான் உன்னைப் பத்தி முதல்ல என் கிட்ட சொன்னான்" சுலக்ஷணா, "தீபா, யார் இந்த நித்தின்?" தீபா திரு திருவென விழித்து வந்தனாவைப் பார்த்தபடி, "என் ஃப்ரெண்ட் ஆண்டி. அவனும் ஷக்தியும் க்ளோஸ் ஃப்ரெண்ட்ஸ். அவனை மும்பை ஐ.ஐ.டி டெக் ஃபெஸ்டில் முதலில் மீட் பண்ணினேன். அப்பறம் நாங்க யூ.எஸ்ல மறுபடி பார்த்தோம். ரெண்டு வாரம் அவங்கதான் எங்களை வெவ்வேற இடத்துக்கெல்லாம் கூட்டிட்டு போய் காண்பிச்சாங்க" என்று வந்தனா சொல்லி வைத்து இருந்த அளவுக்கு அதிகமாகவே உண்மை விளம்பினாள். மனோகரிக்கு சில புதிய ஓட்டைகள் புலப்பட்டன! சுலக்ஷணா, "ஓ, அப்ப நித்தின் உன் ஃப்ரெண்ட். ஷக்தி வந்தனாவின் ஃப்ரெண்டா" என்று உள் அர்த்தம் பொதிந்த கேள்வியை கேட்க மறுபடி தீபாவின் வாயை திறக்க விடாத வந்தனா, "அப்படி இல்ல பெரியம்மா. நாங்க நாலு பேரும் ஃப்ரெண்ட்ஸ்" தீபா, "இன் ஃபாக்ட் அவங்க ரெண்டு பேர் மூலம் ஜாஷ்வா சஞ்சனா அப்படின்னு இன்னும் ரெண்டு பேர்கூட ஃப்ரெட்ண்டானாங்க" மனோகரி, "ஓ, உங்க ரெண்டு பேருக்கும் ஜாஷ்வாவையும், சஞ்சனாவையும் தெரியுமா?" வந்தனா, "ஆமா ஆண்டி. சஞ்சனா உங்களை சித்தின்னு கூப்பிடுவான்னு ஷக்தி சொல்லி இருக்கான்" சுலக்ஷணா, "சரி. ப்ரொஃபெஸ்ஸர், நீங்களும் ஷாந்தியும் பிரயாணக் களைப்பில் இருப்பீங்க. கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுத்துக்குங்க. லஞ்ச் டைமில் மறுபடி பேசலாம். வந்தனா, ஷாந்திக்கு தனி ரூம் வேணும்ன்னா மனீஷ் ரூமை அரேஞ்ச் பண்ணு ஓ.கே?" சாந்தி, "வேண்டாம் ஆண்டி. நாங்க ரெண்டு பேரும் ஒரே ரூமில் தங்கிக்கறோம்" வந்தனா அவர்களை மாடிக்கு அழைத்துச் செல்ல. தீபாவின் வாயை மேலும் கிளற சுலக்ஷணா கிச்சனுக்கு அழைத்துச் சென்றார். தோழிகள் இருவரும் கண்களால் பேசிக் கொண்டதை இரு தாய்களும் கவனித்தனர்.மதிய நேர சாப்பாட்டு வேளையின் போது மஞ்சுநாத் ராத்தோடும் வந்து இருந்தார். மஞ்சுநாத், "வெல்கம் ப்ரொஃபெஸ்ஸர். வெல்கம் ஷாந்தி" மனோகரி, "தாங்க் யூ ஜெனரல்" மஞ்சுநாத், "இது ரொம்ப சுவாரஸ்யமான விஷயம். பொதுவா நம் ஃப்ரெண்ட்ஸ் மூலம் நம் குழந்தைகளுக்கு ஃப்ரெண்ட்ஸ் கிடைப்பாங்க. இப்ப இவங்க ஃப்ரெண்ட்ஸ் மூலம் எங்களுக்கு நீங்க ஃப்ரெண்ட் ஆகி இருக்கீங்க. பை த வே ப்ரொஃபெஸ்ஸர் ஷக்தியைப் பத்தி எங்களுக்கு வந்தனா அவ்வளவா சொல்லலை. நீங்க சொல்லுங்க" வியப்புற்ற மனோகரி வந்தனாவைப் பார்க்க வந்தனா தலை குனிந்தாள். அந்த அழகில் லயித்த மனோகரி, "என் மகன் சக்திவேல் முத்துசாமி ... " என்று தொடங்கி அவனைப் பற்றி ஒரு தாயின் கர்வத்துடன் சொல்லி முடித்தாள். மஞ்சுநாத், "அவனுக்கு அமெரிக்காவிலேயே வேலை கிடைச்சு இருக்குமே. ஏன் போகலை?" மனோகரி, "அதில் அவனுக்கு சுத்தமா இஷ்டம் இல்லை ஜெனரல். இன் ஃபாக்ட் அவன் ஐ.ஐ.டிக்கு முயற்சி செய்யும்போதே என்.டி.ஏ (N.D.A - National Defense Academy) பரிட்சையும் எழுதினான். அதுவும் கிடைக்காமல் போனா ஐ.பி.எஸ் முயற்சி செய்யறேன்னு சொல்லிட்டு இருந்தான்" என்று தன் மகனின் தேசப் பற்றை பறைசாற்றினாள். மஞ்சுநாத், "என்.டி.ஏவில் கிடைச்சுதா" மனோகரி, "ஐ.ஐ.டி நுழைவுத் தேர்வில் நல்ல ராங்க் எடுத்து இருந்தான். நாங்க என்.டி.ஏ என்ட்ரன்ஸ் ரிஸல்டை செக் பண்ணவே இல்லை" மஞ்சுநாத், "நிச்சயம் கிடைச்சு இருக்கும். ஷக்தி மாதிரி பையன்கள் என்.டி.ஏவை முதல் ஆப்ஷனா வெச்சுக்கறது இல்லை" மனோகரி, "சக்தி விஷயத்தில் அதுக்கு முக்கிய காரணம் அவனுக்கு கணிதத்திலும் கணிப் பொறியியலிலும் இருந்த ஆர்வம்" மஞ்சுநாத், "இல்லை ப்ரொஃபெஸ்ஸர். இப்ப வந்தனா இல்லையா? அவளுக்கும் தான் ஆர்வம் இருந்தது" அந்த உரையாடலின் போக்கை மாற்ற வந்தனா, "பெரியப்பா, நீங்க என்னை ஷக்திகூட கம்பேர் பண்ணாதீங்க. அவன் தீபா மாதிரி" தீபா, "அங்கிள். என்னை மாதிரி இல்லை என்னை விட நூறு மடங்கு" வந்தனா, "மாதமாடிக்ஸ் ஒலிம்பியாடில் முதல் வந்தவன்" மஞ்சுநாத், "வாவ், கடைசியா ப்ரொஃபெஸ்ஸர் அவன் விளையாட்டில் எல்லாம் சாம்பியன் அப்படின்னு சொன்னதும் அவனை மாதிரி ஃபிஸிகல் ஃபிட்னஸ் இருப்பவர்கள் என்.டி.ஏ மாதிரி கல்லூரிகளில் சேருவதில்லை என்கிற ஆதங்கத்தில் சொன்னேன். சாரி ப்ரொஃபெஸ்ஸர். சோ, சக்தி ஒரு ஜீனியஸ்ன்னு சொல்லுங்க" தீபாவும் வ்ந்தனாவும் ஒன்றாக மனதுக்குள், 'ஆமா ஆனா இன்ஸ்யூரன்ஸ் கம்பெனிக்கு கோட் எழுதும் ஜீனியஸ்' என்று காதலர்களை கரித்துக் கொட்டினர். மனோகரி, "ஜீனியஸ்ஸான்னு தெரியலை. ஆனா எனக்கு தெரிஞ்சவரை கணக்கு அல்காரிதம் இதிலெல்லாம் அவனை மாதிரி ஒருத்தன்னா அது நித்தின் மட்டும்தான்" மஞ்சுநாத், "இதை நீங்க ஒரு ப்ரொஃபெஸ்ஸரா சொல்றீங்கன்னு தோணுது. இல்லைன்னா மகனுக்கு இணையா இன்னொருத்தனை சொல்லி இருக்க மாட்டீங்க" வாய்விட்டு சிரித்த மனோகரி, "நித்தினும் எனக்கு ஒரு மகன் மாதிரி தான்" தீபா மனதுக்குள், 'ஆண்டி, உங்களுக்கு அடுத்த டூர் ஹைதராபாத்துக்கு' என்று நினைத்தாள். மஞ்சுநாத், "Hey, girls! how do these guys look? You have photographs of them?" மனோகரி தன் வாலட்டில் இருந்த சக்தியின் புகைப் படத்தை எடுத்துக் காட்ட. வந்தனா எதுவும் சொல்வதற்கு முன்னர் தீபா தனக்கு நித்தின் புதிதாக வாங்கி கொடுத்து இருந்த ஐ-ஃபோனில் அவனது படத்தைக் காட்டினாள். வாங்கிப் பார்த்த மஞ்சுநாத் வந்தனாவிடம், "உன் ஃபோனில் ஷக்தியின் படம் இருக்கா வந்தனா?" என்று கேட்க கேட்க அவசரமாக கிச்சனுக்குச் சென்றாள். மஞ்சுநாத் மேலும் அவர்கள் குடும்பத்தைப் பற்றி மனோகரியிடம் கேட்டவாறு உரையாடலை தொடர்ந்தார். அன்று மாலை வந்தனா அவர்களை புது தில்லியின் சில இடங்களை சுற்றி காண்பித்தாள். வயதில் மூத்தவளானாலும் தீபாவிடம் சாந்திக்கு ஒரு அதீத ஒட்டுதல் இருவரும் எதை எதையோ பேசிக் கொண்டு இருந்ததைப் பார்த்து வந்தனாவே வியந்தாள். அதே சமயம் சாந்தி ஒரு தங்கையைப் போல தன்னிடம் பழகுவதை உணர்ந்தாள். இரவு உணவுக்கு சுலக்ஷணா வீட்டுக்கு அழைத்து இருந்தாலும், மேலும் எந்த விசாரணையிலும் மாட்டாமல் இருக்க வந்தனா அவர்கள் திரும்புவதற்கு வெகு நேரம் ஆகலாம் என்று சாக்கு சொல்லி அதை தவிர்த்து இருந்தாள். இரவு உணவை ஒரு KFC ரெஸ்டாரண்டில் முடித்து சாந்தியின் விருப்பத்துக்கு ஏற்ப அருகில் இருந்த பாஸ்கின் ராபின்ஸுக்கு சென்றனர். முகம் தோய்ந்து இருந்த மனோகரியைப் பார்த்து வந்தனா, "என்ன ஆண்டி டல்லா இருக்கீங்க?" மனோகரி, "எங்க ரெண்டு பேர் மொபைலையும் சார்ஜ் போட மறந்துட்டோம். இப்ப டெட்டா இருக்கு. சக்தி எப்படியும் கூப்பிடுவான். அதான் யோசிச்சுட்டு இருக்கேன்" அப்பொழுதுதான் வந்தனாவும் தன் மொபைலை சார்ஜ் செய்யாமல் விட்டு இருந்ததை எண்ணி அதை எடுத்துப் பார்க்க அதுவும் உயிரிழந்து இருந்தது. மூவர் மொபைலிலும் பதிலில்லாமல் மஞ்சுநாத் ராத்தோடின் வீட்டில் இருக்கும் லான்ட்-லைனில் சக்தி அழைத்தான். எடுத்துப் பேசிய மஞ்சுநாத் ராத்தோட் சக்தி தன்னை அறிமுகப் படுத்திக் கொண்டு சகஜமாக பேசியதில் அவர் மனதுக்குள் அவனைப் பற்றி ஒரு நல்ல அபிப்பராயம் உருவானது. அதனுடன், சக்தி வந்தனாவைப் பற்றி பேசுகையில் அவன் பேச்சில் இருந்து அவனுக்கு அவள் மேல் இருப்பது நட்புக்கும் பல படிகள் மேல் என்பதை உணர்ந்தார். இதை ப்ரொஃபெஸ்ஸர் மனோகரி நிச்சயம் உணர்ந்து இருக்க வேண்டும். இருப்பினும் தன் முன்னே மனோகரி வந்தனாவை எதுவும் கேட்காமல் இருந்ததை எண்ணி துணுக்குற்றார்.
ஒரு வேளை நம் குடும்பத்தை எடை போட இந்த சுற்றுலாப் பயணத்தை ப்ரொஃபெஸ்ஸர் மனோகரி பயன் படுத்துகிறாரோ என்ற ஒரு ராணுவ உயர் அதிகாரிக்கான சந்தேகமும் அவர் மனதில் வந்தது. எப்படி இருப்பினும் வந்தனாவுக்கு சக்தி ஏற்றவனா என்பதை முதலில் நன்கு கணிக்க வேண்டும் என்று கருதினார். மூன்று குடும்பத்துக்கும் ஒரே மகளை தம்பி வீருவின் ஒரே வாரிசை ஒரு தமிழனுக்கு கொடுப்பதில் பிற்காலத்தில் என்ன பிரச்சனைகள் வரக் கூடும் என்றும் கணக்கிட்டார். ஆனால் அந்த கடைசி விஷயத்தில் தன்னையும் வீருவையும் விட யோகியும் மனீஷும் முற்போக்காக சிந்திப்பவர்கள் என்று அறிந்து யோகேஷ்வரை தொலைபேசியில் அழைத்து தன் மனதுக்குப் பட்டவைகளை பகிர்ந்து கொண்டார். சக்தியைப் பற்றிய முழு விவரமும் அறிந்து கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். யோகேஷ்வர் அடுத்த இரண்டு நாட்களுக்குள் சக்தியைப் பற்றியும் அவன் குடும்பத்தைப் பற்றியும் எல்லா விவரங்களுடன் அழைப்பதாக கூறினார்.

No comments:

Post a Comment