Monday, January 5, 2015

அன்பே மான்சி...!!! அத்தியாயம் - 6

தனது உள்ளத்தில் பூக்கும் நேச பூக்களை கொண்டு தன் மனைவியை அர்ச்சிப்பது என்ற முடிவு

தனது நேச சரங்களை எய்து தன் மனைவியை வீழ்த்துவது என்ற முடிவு

தனது அன்பு ஆசை நேசம் பாசம் காதல் கனிவு அத்தனைக்கும் இனிமேல் மான்சிதான் சொந்தக்காரி என்ற முடிவு

அன்றிலிருந்து சத்யன் தலைகீழாக மாறிப்போனான்

மான்சியின் ஒற்றை விழிப் பார்வைக்காக ஏங்கினான் தவித்தான்

கைநீட்டி அவளிடம் காதலை யாசித்தான்

தன் குறும்புப் பார்வைகளாலும் காதல் பேச்சுகளாலும் அவளுக்கு தன் மனதை புரியவைக்க முயற்ச்சித்தான்

அவனுக்கே இது ஆச்சரியமாக இருந்தது தான் ஏன் இப்படி மாறிப்போனோம் என்று

ஆனால் இது பிடித்தது மனைவிடம் கைநீட்டி காதலை யாசிப்பது அவனுக்கு பிடித்தது

விரும்புகிறேன் என்று உன் இதழ்கள் உதிர்க்கின்ற
முத்துசொற்கள் சந்தமாக வேன்டும் எனக்கு
கூடவே உன் இதழ்களும் வேன்டும் சொந்தமாக

சத்யனின் கனவுகள் மெய்ப்பாடுமா

மான்சி தூங்கி கொண்டே இருந்தாள் அவள் விழிக்கவில்லை என்றதும் ரேவதியிடம் காலை வருவதாக கூறிவிட்டு வெளியே வந்து ஹோட்டலுக்கு கிளம்பினான்

போகும்போது வேலுவிடம் உனக்கு எத்தனை பசங்க என்று விசாரித்தான்


ரெண்டு பசங்க சார் எனறான் வேலு

'
பசங்க யார்மாதிரி இருப்பாங்க,
'
பெரியவ பொண்ணு என் தங்கச்சி மாதிரி சின்னவன் பையன் என் ஒய்ப் மாதிரி சார், என்ற வேலு 'உங்க குழந்தை யாரு மாதிரி இருக்கு சார், என்று பதிலுக்கு கேட்க

'
என் அம்மா மாதிரி, எனறு கர்வமாக கூறிய சத்யன்'ஏன் வேலு நீ என்கூடவே கோவை வந்திடேன் அங்கே ஆறு கார்கள் இருக்கு பேமிலியையும் கூட்டிட்டு வந்துடேன் எங்க வீட்டு பின்னாடி வேலை செய்றவங்களுக்காக வீடுகட்டியிருக்கோம் அங்கேயே தங்கிக்கலாம், என்று சத்யன் கேட்டான்

வேலுவுக்கும் சத்யனை ரொம்ப பிடித்து போனது 'எங்க வீட்டுல கலந்துகிட்டு சொல்றேன் சார்,என்றான்

காலையில் மணி 10-20 க்குத்தான் மான்சியை பார்க்க வந்தான் அறைக்குள் ஒரு கூட்டமே இருக்க யாரையும் கவனிக்காமல் நேராக மான்சியிடம் வந்தான்

அவள் முகத்தை கைகளில் ஏந்தி எப்படியிருக்க மான்சி என்று அவள் கண்ணத்தில் அழுத்தி முத்தமிட்ட

இதை எதிர்ப்பார்க்காத மான்சி தடுமாற

அங்கே இருந்த நிவேதாவும் விஷ்ணுவும் வாய்பொத்தி சிரிக்க திரும்பி அவர்களை பார்த்த சத்யன்

ஏய் என்ன சிரிக்கிறீங்க என் பொண்டாட்டிக்கு நான் குடுத்தேன் என்று குறும்புடன் சொல்ல

மான்சிதான் அடப்பாவி எல்லார் முன்னாடியும் என்னம்மா நடிக்கிறான் என்று ஆத்திரப்பட்டாள்

அப்போது கைகளில் நிறைய பைகளுடன் வேலு வர

அத்தை எனக்கு தெரிஞ்சவரைக்கும் குழந்தைக்கு தேவையானது வாங்கியிருக்கேன் என்றான் சத்யன்

ம் சரிங்க தம்பி உங்க வீட்டுக்கு தகவல் சொல்லிட்டீங்களா என்று ரேவதி கேட்க

இன்னும் இல்லை இப்பதான் சொல்லனும் என்றவன் தனது செல்லை எடுத்து உயிர்பிக்க உடனே எதிர் முனையில் எடுக்கப்பட்டது

'அம்மா நான் சத்யன் பேசறேன்.

'
என்ன சத்யா எப்படி இருக்க எப்ப கோவை வரப்போற,

'
இன்னிக்கி ஈவினிங் கிளம்பி வர்றேன்ம்மா நான் இப்போ திருச்சியில் இருக்கேன்,

'
அங்க உனக்கு என்ன வேலை,

'
நான் மான்சிய பார்க்க வந்தேன்,

'
என்னது ? குரலில் அளவுகடந்த அதிர்ச்சி

'
அம்மா இங்கே மான்சிக்கு குழந்தை பிறந்திருக்கு ,என்று இவன் முடிப்பதற்குள்

'
அப்படியா அவ அப்பா அவளை வேற இடத்தில கலயாணம் பண்ணி கொடுத்திட்டாரா, என்று வார்த்தை நக்கலாக வந்தது


'
அம்மா அதெல்லாம் ஒன்னுமில்லை,என்று அதட்டியவன் 'குழந்தை எனக்கும் மான்சிக்கும் பிறந்திருக்கு, எனறான் அழுத்தமாக

எதிர் முனையில் சிறிது நேரம் பதிலே இல்லை

'
அம்மா அம்மா லைன்ல இருக்கீங்களா,என சத்யன் குரல் கொடுக்க

'
ம்ம் இருக்கேன் டேய் சத்யா இதெல்லாம் எப்படிடா,

'
அது நான் அங்க வந்து சொல்றேன்ம்மா உனக்கு பேரன்ம்மா அதுவும் உன்னை போலவே'

'
டேய் சத்யா நிஜமாவடா,


'
நிஜம்மா ப்ராமிஸ்ம்மா , என்று சிறுவன் போல துள்ளியவன் மத்ததெல்லாம் அங்கே வந்து சொல்றேன்ம்மா என்று இனைப்பை

துண்டித்து விட்டு மான்சியை பார்த்து என் அம்மாவால நம்பவே முடியல என்றான் உற்சாக குரலில்

பின்னே என்னாலயே நம்பமுடியலயே என்றாள் மான்சி நக்கலாக

'
நீ எதை நம்ப முடியலேன்னு சொல்றே மான்சி,

'
ம் நீங்க, என்று எதையோ சொல்ல வாயெடுத்து பிறகு அங்கிருந்தவர்களை பார்த்துவிட்டு 'நீங்க என் பக்கத்தில இருக்கிறதத்தான் என்றாள்

அன்று மாலை கோவை செல்ல சொல்லிக்கொள்ள சத்யன் வர

மான்சி படுத்தவாறு குழந்தைக்கு பால் கொடுத்து கொண்டிருந்தாள்

உடனே அவளை நெருங்கி குழந்தைக்கு முத்தமிடும் சாக்கில் குனிந்து தனது நாக்கின் நுனியால் அவள் மார்பை தீண்ட

அவன் தலையை பிடித்து தள்ளிவிட்டாள் மான்சி

அப்போது பாத்ரூமில்யிருந்து வந்த ரேவதி இவன் செயலை கவனித்துவிட்டு கூச்சத்துடன் தலையை குனிந்து கொள்ள

சத்யன் அசடு வழிய நிற்க்க

மான்சிக்குதான் சத்யன் மீது எரிச்சலாய் வந்தது

குழந்தையின் தொட்டிலருகே போன சத்யன் குழந்தையை தன் மடியில் தாங்கவேன்டும் என்று ஆசைவர 'அத்தை குழந்தையை தூக்கி என் மடியில தர்றீங்களா,என்று கேட்க

'
ம் நீங்க சோபால உட்காருங்க குழந்தைக்கு நாப்கின் மாத்திட்டு தர்றேன், என்ற ரேவதியிடம்

'
இல்ல அதெல்லாம் வேன்டாம் அப்படியே தாங்க,என்று சோபாவில் அமர்ந்துகொண்டான்

ரேவதி குழந்தையை அவன் மடியில் கிடத்திவிட்டு அறையை விட்டு வெளியே போக

சத்யன் தன் மகனின் சின்ன உதடுகளை வருடி அவனின்
கைவிரல்களை வருட சத்யனின் ஆள்காட்டிவிரலை குழந்தை பற்றிகொண்டது சத்யன் சந்தோஷமாக மான்சியை பார்க்க

அதுவரை இதயெல்லாம் பார்த்துகொண்டிருந்தவள் இவன் கவனித்ததும் பார்க்காததுபோல் முகத்தை திருப்பி கொள்ள

'
ஏய் மான்சி ஏன் மூஞ்சிய திருப்பறே இங்க பாரேன் என் மகன் என்னோட கையை எப்படி பிடிச்சிருக்கான்னு, என்று மனைவியை அழைக்க

மான்சி அவனை பார்த்து உதட்டை பிதுக்கி அழகு கான்பிக்க

சத்யன் தன் மகனின் சின்ன குஞ்சில் விரல்களை வைத்து
அதை எடுத்து தன் உதட்டில் வைத்து முத்தமிட்டு குறும்புடன் மான்சியை பார்க்க

அவள் ச்ச்சீ என்று வெட்கத்துடன் முகத்தை திருப்பி கொள்ள

உடனே சத்யனுக்கு தான் படித்த கவிதைவரிகள் ஞாபகம் வந்தது

"
நான் எதை கேட்டாலும் வெட்கத்தை பரிசாக தருகிறாயே"
"
நான் உன் வெட்கத்தைக் கேட்டால் எதை தருவாய்"

அப்போது பார்த்து குழந்தை சத்யனின் ஜீன்ஸ்ஸை நனைக்க

'
அடடா டேய் குட்டி பையா அப்பா பேன்ட்டைநனைச்சிட்டியா , என சத்யன் மகனை கொஞ்ச

மான்சி 'அம்மா, என்று அழைத்தாள்

ரேவதி உடனே வந்து 'அதுக்குதான் நாப்கின் மாத்தி தர்றேன்னு சொன்னேன், என்று குழந்தையை தூக்கி
மான்சியிடம் கொடுத்துவிட்டு 'டவலை கட்டிகிட்டு உங்க பேன்ட்ட குடுங்க சுத்தம் பண்ணித் தர்றேன், என சத்யனை கேட்க

'
ஐயோ அதெல்லாம் வேனாம் நானே கிளீன் பண்ணிக்கிறேன், என்றவன் தனது வாட்ச்சையும் பாக்கெட்டில் இருந்த செல்போனையும் எடுத்து மான்சியின் படுக்கையில் வைத்துவிட்டு பாத்ருமைநோக்கி போனான் சத்யன்

மான்சி பசியால் அழுத குழந்தைக்கு பால்கொடுக்க

அப்போது சத்யனின் செல்லில் சத்தமில்லாமல் வெளிச்சம் மட்டும் வந்தது யார் என்று மான்சி செல்லை எடுத்து பார்க்க

அந்த பெரிய டிஸ்ப்ளே உள்ள போனில் சத்யனும் சான்ட்ராவும் வெறும் பாதி ஆடையில் இறுக்கி அனைத்து முத்தமிட்டுகொண்டிருக்க கீழே சான்ட்ரா காலிங் என்று வந்தது

அதிர்ச்சியான மான்சி போனை ஆன் செய்ய எடுத்த உடனே

ஆங்கிலத்தில் 'ஹாய் டார்லிங் ஏன் எனக்கு கால் பண்ணல போன வேலை என்னாச்சு, என்றது சான்ட்ராவின் செக்ஸியான குரல்

மின்சாரம் தாக்கியது போல் போனை தவறவிட்டால் மானசி

'பாத்ரூமில் இருந்து வந்த சத்யன் தனது வாடச்சையும் செல்லையும் எடுத்துக்கொண்டு 'மான்சி நான் கோவை கிளம்பறேன் குழந்தையும் உன்னையும் ஜாக்கிரதையா பார்த்துக்க நான் அப்பா அம்மாவோட கூடிய சீக்கிரம் வர்றேன் தினமும் அங்கிளோட செல்லுக்கு போன் செய்றேன் நீ தவறாம பேசனும் சரியா மான்சி, என்று சிறுபிள்ளைக்கு சொல்வது போல் சொல்ல

மான்சியோ ஜன்னல் வழியாக வெளியே தெரிந்த மரக்கிளையில் ஒத்தையாக உட்கார்ந்திருந்த குயிலை பார்த்து கொணடிருந்தாள்

"
மழை தருமோ என் மேகம்; என்று அவள் பதிலுக்காக காத்திருந்து பின்னர் என்ன 'மான்சி நான் கிளம்பட்டுமா, என்று மறுபடியும் கேட்க

'
ம் கிளம்புங்க, என்றாள் ஒற்றை வாரத்தையில்

சிறிது தயங்கி பின்னர் ரேவதியிடம் திரும்பி 'அத்தை நான் கிளம்பறேன் பார்த்துகங்க,என்று கூற

'
சரிங்க தம்பி ,என்றவள் நாகரீகம் கருதி வெளியே நகர

வேகமாக மான்சியிடம் திரும்பியவன் அவள் முகத்தை திருப்பி அவள் இதழ்களை அவசரமாக கவ்வி முத்தமிட ஏனோ அவள் இதழ்கள் உப்புகரித்தன

உடனே அவள் இதழ்களை விடுவித்து முகத்தை பார்க்க அவள் கண்களில் இருந்து கண்ணீர் வழிய பதறிவிட்டான் சத்யன்
'
என்னம்மா என்னாச்சு,என்று கேட்க

அவளோ 'ஒன்னுமில்லை நீங்க கிளம்புங்க,என்றாள்

'
எதையும் மனசுல போட்டு குழப்பிக்காதம்மா எல்லாம் சரியாயிடும் என்னை நம்பு மான்சி, என்று சத்யன் உருகினான்


சரி என்பது போல மான்சி தலையசைக்க


அரைமனதாக கிளம்பினான் சத்யன்

:
இப்போதெல்லாம் அவன் இதயக் கருவரையில் அவளின்'
நினைவுகளைச் சுமப்பதே பெரும் இன்பமாக:

சத்யன் ஒருவாரத்தில் 32 முறை மூர்த்தியின் செல்லுக்கு கால் செய்தான் அவன் தொல்லை தாங்காமல் போனை நீயே வச்சுக்கம்மா என்று மகளிடம் கொடுத்துவிட்டார் மூர்த்தி

காத்திருப்பதின் கொடுமை இப்போது புரிந்தது சத்யனுக்கு

எப்பொழுதுமே அவளின் நினைவுகளை தேடி ஓடும் தன் மனதின் வேகத்தை கண்டு அவனுக்கே பிரமிப்பாக இருந்தது

ஒவ்வொரு முறையும் ஏதாவது பேசி அவளை வெட்க்கப்படவைத்தான் சிலசமயம் கோபபடவைத்தான் சிலநேரம் எரிச்சல் படவைத்தான் அவளின் மனநிலை புரியாமலேயே

குழந்தையின் பதினோறாவது தன் அப்பா அம்மாவுடன் வருவதாக செய்தி சொன்னான்

அன்று குடும்பத்துடன் வந்தான் அவன் அப்பா ரத்னம் கைத்தடியின் உதவியுடன் நடக்க ஆரம்பி்திருந்தார்

அவன் அம்மா ஜோதியோ இன்னும் முகம்கூட பார்க்காத தன்பேரனுக்கு கோவையின் பாதியை கொண்டுவந்திருந்தாள்

இருவரும் தங்களின் பேரக்குழந்தையை தொட்டு தொட்டு பார்த்து மகிழ்ந்தனர்

சத்யனே மான்சின் பின்னாலேயே சுத்தினான் எல்லார் முன்பும் அவளை உரசிக்கொண்டு உட்கார்ந்தான் எப்பவும் அவள் கைகளை பிடித்துக் கொண்டேயிருந்தான்

குழந்தையை பார்க்க வந்திருந்த பரமேஷ் 'அடப்பாவி என்னடா இப்படி ஆகிட்ட, என்று கேட்டேவிட்டான்

'
இதிலே என்னடா இருக்கு என்னுடைய நேசத்தைக்காட்ட வேறவழியே தெரியலடா அதுவும் எனக்கு எல்லார்கிட்டயும் ஒரு பட்டம் வாங்கனும்னு ஆசையா இருக்குடா, என்று சத்யன் சிரித்துக்கொண்டே கூற

'
பட்டமா என்ன பட்டம்டா சத்யா, என பரமேஷ் கேட்க

'
அதான்டா பொண்டாட்டிதாசன்ங்கிற பட்டம் ,என்றான் சத்யன் வாய்கொள்ளா சிரிப்புடன்

'
என்னால எதையும் நம்பவே முடியலடா என்றான் பரமேஷ்

'
நம்பு பரமு நம்பு என்னோட முதல் காதல் கொஞ்சம் தாமதமா வந்திருக்கு அதுவும் என் மனைவியிடம் வந்திருக்கு அவ்வளவுதான் விஷயம் ,என்ற தன் நன்பனை பார்க்க பெருமையாக இருந்தது பரமேஷ்க்கு

"
...அந்த மரக்கிளையின கீழ் ஒரு கவிதைப் புத்தகம்:
மது இருக்கும் ஜாடி...ஒரு ரொட்டித் துண்டு..
இதோடு என் அருகில் நீ ........பாலைநிலமே இதுதான் சொர்க்கமா ....

கவிஞர் உமர்கய்யாமின் வரிகள் தன் நன்பனுக்குத்தான் பொருந்தும் என்று நினைத்தான் பரமேஷ்.          

ஆனால் மான்சிக்குத்தான இவன் செயல்கள் சங்கடத்தை உண்டாக்கியது

சத்யனை தவிர்க்க முடியாமல் தவித்தாள்

வீட்டில் இருப்பவர்களிடம் அவனை பற்றிய உன்மைகளை சொல்ல முடியால் தவித்தாள்

சத்யனே குழந்தைக்கு பால் கொடுக்கும் போது கூட விலகாமல் அடைகாத்தான்

குழந்தையின் விசேஷம் முடிந்த பிறகு கிடைத்த தனிமையில் சத்யனை கடிந்தாள் மான்சி

'
இதோ பாருங்க நீங்க செய்றது எனக்கு கொஞ்சகூட பிடிக்கல ,என மான்சி எரிந்துவிழ

'
ஏய் நீதானடி சொன்ன நீங்க செய்றது பிடிச்சிருக்கன்னு, என சத்யன் குறும்புடன் கூற

'
என்னது நான் சொன்னேனா எப்ப சொன்னேன் சும்மா பொய்சொல்லாதீங்க,என மான்சி இரைய

'
அதான் குற்றாலத்தில அன்னிக்கு நைட் நான் பண்ணது பிடிச்சிருக்கான்னு கேட்டதுக்கு ம் பிடிச்சிருக்குன்னு சொன்னியே மறந்துட்டியா, ஆனா நான் மறக்கல,என்றவன் அன்றைய சுகமான நினைவுகளை கண்மூடி ரசித்தான்


மான்சியே நெற்றில் அடித்தக் கொண்டாள் 'ச்சே எதைப்போய் எப்ப சொல்றீங்க என்ன மனுசன் நீங்க ,என கடிய

'
ஏன் ஆம்பிளை மனுசன்தான் அது உனக்குத் தெரியுமே,என சத்யன் குறும்பாய் கூற

மறுபடியும் அவன் அதை பற்றியே பேச மான்சியின் முகத்தில் கோபத்தையும் மீறி வெட்க்கம் வந்து முகாமிட்டது


No comments:

Post a Comment