Friday, February 13, 2015

மான்சியும் நானும் - அத்தியாயம் - 11


''அந்த ஒற்றை தலையனை மட்டுமே..... ''சொல்லும் அவள் துக்கங்களை..... ''உறக்கத்தில் கூட அவள் ..... ''தன் காதலையும்...... ''தன் காதலனையும்.... ''அவள் பிரிந்ததேயில்லையென்ற..... ''தேவ ரகசியங்களை......! மான்சியின் முகத்தையே பார்த்த சத்யன் அப்படியே தூங்கிப் போனான்




மாலை மணி ஐந்து தூக்கம் கலைந்து கண்விழித்த மான்சி எதிரில் இவள் முந்தானையால் முகத்தை மூடியிருந்த சத்யனை பார்த்து முதலில் திடுக்கிட்டு பின்னர் சுதாரித்துக்கொண்டு எழ முயற்ச்சிக்க முடியவில்லை புடவை முந்தானை சத்யனின் முகத்தை மூடி சுற்றி கழுத்தின் அடியில் வைத்துகொண்டு உறங்கினான் இவள் பதட்டத்துடன் புடவையை பிடித்து இழுக்க அந்த அசைவில் கண்விழித்தான் சத்யன் கண் பகுதியில் மட்டும் புடவையை நீக்கிய சத்யன் பதட்டத்துடன் புடவையை இழுத்து கொண்டிருந்த மான்சியைப் பார்த்து

''என்னாச்சு மான்சி ஏன் இவ்வளவு பதட்டம் இருஇரு நான் எடுத்துவிடுறேன் ''என்றவன் தன் கழுத்தை உயர்த்த இப்போது புடவை சுலபமாக மான்சியின் கைக்கு வர எடுத்து தன் இடுப்பில் சொருகிக்கொண்டு அவனை பார்த்து முறைத்தாள் லேசாக அசடு வழிந்த சத்யன் ''அது ஒன்னுமில்ல மான்சி இந்த புடவை முழுக்க உன்னோட வாசம் சூப்பரா இருந்திச்சா அதான் கொஞ்சநேரம் முகத்திலே போட்டு அந்த வாசத்தை முகர்ந்தேன் அப்படியே தூங்கிட்டேன் போல ப்ளீஸ் கோச்சுகாதே மான்சி ''என்று சத்யன் தன் பார்வையால் கெஞ்சினான் மான்சிக்கு அந்த பார்வை இதயத்தின் ஆழம் வரை செல்ல அவனை முறைப்பதை நிறுத்தி ''ஆமா நீங்க இங்கே ஏன் வந்து படுத்தீங்க கட்டில்ல படுக்க வேண்டியது தானே ''என்று கேட்க ''ம் நீ மட்டும் கீழே தரையில் படுத்துகிட்டு நான் மட்டும் கட்டில்ல படுக்கிறதா ம்ஹூம் இது சரிகிடையாது மான்சி நீ எங்க படுத்துகிறயோ அங்கேதான் நானும் படுப்பேன் இதுவும் கூட இனி மாறாது மான்சி ''என்று சத்யன் உறுதியாக கூறினான்

 மான்சி இதென்னடா புது குழப்பம் என்று நினைத்து அவனை பார்க்க ''என்ன மான்சி அப்படி பார்க்கிற நாம ஒரே கட்டில்ல சேர்ந்து படுக்கிறதால என்ன பிரச்சனை நீ ஒரு பக்கம் நான் ஒரு பக்கம்ன்னு படுக்கப்போறோம் அவ்வளவு பெரிய கட்டில்ல பத்து பேர் கூட படுக்கலாம் ''என்ற சதயன் முகத்தில் இரஞ்சுதலோடு 'ஐயோ இவ அதுக்கு ஒத்துக்கனும் கடவுளே' என்று மனதுக்குள் வேண்டியபடியே அவளிடம் சொல்ல மான்சி அவன் முகத்தை பார்த்துக்கொண்டே''இன்னும் மிச்சம் இருக்கிற ஒன்பது பொண்ணுங்க எப்ப வருவாங்க சார் ''என்று குறும்புடன் கேட்க சத்யனுக்கு அவள் பேச்சு புரியவில்லை இருந்தாலும் ஏதோ கிண்டல் செய்கிறாள் என்பதை அவள் பார்வையால் உணர்ந்தவன் அப்பிடியே உருண்டு அவளை நெருங்கி உட்கார்ந்திருந்த அவள் காலருகே தன் முகத்தை இருகைகளில் தாங்கி அவளை குறுகுறுவென பார்த்துகொண்டே ''நீ என்ன சொல்ற மான்சி எனக்கு புரியவே இல்லை ''என்று அவளிடமே திருப்பி கேட்டான்

 அவளும் அவ்வளவு நெருக்கமாக இருந்த அவன் முகத்தை பார்க்க கூச்சப்பட்டு பக்கத்தில் இருந்த தலையனையை சரி செய்வது போல லேசாக திரும்பி ''ம் கட்டில்ல பத்து பேர் படுத்துக்கலாம்ன்னு சொன்னீங்களே மிச்ச ஒன்பது பொண்ணுங்க எப்ப வருவாங்கன்னு கேட்டேன்''என்று சிரிக்காமல் சொல்ல சத்யன் அவள் சொன்னதன் அர்த்தத்தை உள்வாங்கி அடிப்பாவி நீ இவ்வளவு குறும்புத்தனமானவளா எனக்குமுதல்லயே இது தெரியாம போச்சே என்று எண்ணியவன் இவனும் அவளை கலாட்டா செய்ய நினைத்து ''இன்னும் ஒன்பது பேரா நல்லா ஜாலியாத்தான் இருக்கும் ஆனா என் பொண்டாட்டி ரொம்ப கோபக்காரியாச்சே அப்புறம் என் முதுகில் டின் கட்டிட்டா என்ன பன்றது ஏற்கனேவே அடிபட்டு இப்பதான் ஆஸ்பத்திரியில் இருந்து வந்திருக்கேன் மறுபடியும் அங்கே போக நான் தயாராக இல்லம்மா தாயே ''என்று ரொம்ப பயந்தவன் போல சத்யன் கூற

 ''ம்ம் அந்த பயம் எப்பவுமே இருக்கட்டும் ''என மான்சி விரல் காட்டி எச்சரிக்கை செய்துவிட்டு எழுந்திருக்க ''ஏய் ஏய் அதுக்குள்ள எங்கே போற ப்ளீஸ் ப்ளீஸ் இன்னும் கொஞ்ச நேரம் இப்படியே இரு மான்சி ''என்று தன் முகத்தருகே இருந்த அவள் மடியில் எக்கி தலையை வைத்து அவளை அசையவிடாமல் தன் கைகளால் இடுப்பை சுற்றி வளைத்துக்கொண்டான் சத்யன்

 ''கண்னே என் இதயத்தை .......... '
'மட்டும் எடுத்துக் கொள்....! '
'உன் மனச்சிறையே ...... '
'சொர்க்கம் எனக்கு....
 ''ஆனால் விடுதலை மட்டும் ....
 'செய்துவிட்டதே ....!

மான்சி சங்கடத்துடன் அவன் தலையை கீழே தள்ள முயற்ச்சிக்க சத்யன் நிமிர்ந்து ப்ளீஸ் என்பது போல் அவள் முகத்தை பரிதாபமாக பார்த்தான் மான்சி உடனே அவன் தலையிலிருந்து கைகளை எடுத்துவிட்டு ''ச்சு இதென்ன பிடிவாதம் மணி ஆறாகப்போகுது எந்திரிங்க கீழே பிரவீன் வேற என்ன பண்றான்னு தெரியலை நீங்க என்னடான்னா இப்படி நேரங்காலம் தெரியாம என்னை சங்கடப்படுத்துறீங்க கீழே எல்லாரும் என்னைதான் தப்பா நினைப்பாங்க ''என்று அவனிடம் கெஞ்சினாள்

 சத்யனுக்கு அவள் பேச்சு லேசான கோபத்தை வரவழைத்தது ''யார் என்ன சொன்னா எனக்கென்ன நான் என் பொண்டாட்டி கூடத்தானே இருக்கேன் நான் ஒன்னும் வேற யாரும் தெருவில் போறவளை கூட்டிவந்து ரொமான்ஸ் பண்ணலையே அதுவுமில்லாம எங்க வீட்டை நீ சாக்கு சொல்லாதே உனக்கு பிடிக்கலைன்னா அதை நேரடியாக சொல்லு அதைவிட்டுட்டு ஏன் மத்தவங்களை சொல்ற ''என்று கோபமாய் சத்யன் எழுந்து உட்கார்ந்து கொண்டான் மான்சிக்கு என்னடா இது இவனுக்கு இப்படி தொட்டதுக்கெல்லாம் கோபம்வருதே இன்னும் மிச்சகாலத்தை இவனோடு எப்படி கழிப்பது என்று புதிதாய் கவலை வந்தது

 ''ச்சு நான் அப்படி சொல்லலை குழந்தை தனியே இருப்பானேன்னுதான் அதுமாதிரி சொன்னேன் நீங்க வேறமாதிரி அர்த்தம் பண்ணிகிட்டு கோபப்படுறீங்க ''என்று முகத்தை வருத்தமாக வைத்துக்கொண்டு மான்சி கூற அவளின் வருத்தத்தை பார்த்து வேதனைப்பட்ட சத்யன் ''இதோ பார் மான்சி குழந்தையை பார்த்துக்க கீழே ஏகப்பட்ட ஆளுங்க இருக்காங்க ஆனா என்னை கவனிச்சுக்க நீ மட்டும்தான் உனக்கு என்கூட செக்ஸ் வச்சுக்க பிடிக்கலைன்னா அது நியாயமானதுதான் ஏன்னா நான் உனக்கு செய்த அநியாயம் அந்த மாதிரி அதுக்காக நான் உன்கிட்டே பலமுறை மன்னிப்பு கேட்டுட்டேன் இனிமேலும் கேட்பேன் ஆனால் இப்படி தொடுவது அணைப்பது போன்ற இதெல்லாம் வாழ்க்கையில் இபோதுதான் கிடைக்கும் இந்த சின்ன சின்ன சந்தோஷங்கள் இன்னும் கொஞ்சநாள் கழிச்சு நாம இப்படியெல்லாம் இருக்கனும்னு நெனைச்சாலும் அப்போது கிடைக்காது

அதனால இதை மட்டும் தடுக்காதே மான்சி ப்ளீஸ் ''என்று சத்யன் கண்நிறைந்த தாபத்துடன் அவளிடம் கைநீட்டி யாசிக்க மான்சி சட்டென அவன் கைகளை பற்றிக்கொண்டு ''என்ன நீங்க ஏதேதோ பேசிகிட்டு நானும் ஒன்னும் மரக்கட்டை இல்லை உயிரும் உணர்வும் உள்ள ஒரு மனுசிதான் எனக்கும் எல்லா கனவுகளும் ஆசைகளும் இருக்கு ஆனால் பழசையெல்லாம் நான் மறந்தாலும் என் உடம்பில் இருக்கும் காயங்கள் என்னை மறக்க விடலை ஒவ்வொரு நாளும் குளிக்கும் போதும் உடைமாற்றும் போதும் அந்த காயங்களை பார்த்து நான் எவ்வளவு மனவேதனைப் படுறேன்னு உங்களுக்கு தெரியுமா நான் என்ன உங்களை தொடவே கூடாதுன்னா சொன்னேன்

என் மனம் சிறுகச்சிறுகத்தான் மாறும் அவசரப்படாமல் இருங்கன்னுதான் சொல்றேன் தயவுசெய்து புரிஞ்சிக்கங்க ''என்று மான்சி கண்களில் கண்ணீருடன் அவனிடம் தன் நிலைமையை எடுத்துச்சொல்ல சத்யனுக்கு அவள் காயங்கள் என்று எதைச்சொல்கிறாள் என்பது புரிந்தது அந்த காயங்களை இவன் எந்த நிலைமையில் எப்படி ஏற்ப்படுத்தினான் என்பதை எண்ணிப்பார்த்த சத்யன் அந்த நிமிடமே தன் உயிர் போய்விடக்கூடாதா என்று மனமுடைந்து கைகளால் தன் முகத்தை மூடிக்கொண்டு குமுறினான்


 அவன் குமுறுவதை கணட மான்சி தன் கண்ணீரை அவசரமாக துடைத்துக்கொண்டு அவன் முகத்தை மூடியிருந்த கைகளை விலக்கி அவனை இழுத்து தன் மார்பில் சாய்த்து அணைத்து அவன் உச்சியில் தன் முகத்தை வைத்துக் கொண்டு''ச்சு என்னங்க இது சின்னகுழந்தையாட்டம் கண்ணீர் விட்டுகிட்டு காலப்போக்கில் எல்லாம் சரியாயிடும் நாமலும் கொஞ்சம் கொஞ்சமாக சரி பண்ண முயற்ச்சிப்போம்''எனறவள் அவன் முகத்தை நிமிர்த்தி நெற்றியில் தன் இதழ்களை பதித்துவிட்டு

''இனிமேல் இதுமாதிரி கண்ணீரெல்லாம் விடக்கூடாது இப்போ எழுந்திருச்சு போய் முகம் கழுவி கீழே போய் சாப்பிட ஏதாவது இருக்கான்னு பார்க்கலாம் எனக்கு ரொம்ப பசிக்குது பொண்டாட்டியோட பசியக்கூட தெரிஞ்சிக்க முடியலை உங்ககூடயெல்லாம் எப்படித்தான் குடும்பம் நடத்துறதோ ''என்று மான்சி போலியாக சலித்து அவனை இயல்புக்கு கொண்டுவர முயற்ச்சித்தாள் சத்யனுக்கு கடவுள் தனக்கு எப்பேர்ப்பட்ட மனைவியையும் வாழ்க்கையையும் பரிசாக கொடுத்திருகிறார் என்று உள்ளம் பூரித்தான் .

 ''நான் உன்னை ..... '
'உனக்காகவே நேசிக்கிறேன்... '
'உன் நிஜத்தை நேசித்து.... '
'உனக்காகவே காத்திருக்கிறேன்.... '
'இனி நீயின்றி நான் ''உயிர்க் கூடின்றி ... '
'ஒலிச் சிறகை மட்டுமே... ''விரிக்கும் பாடற்பறவை ...!

 ஆசிரமத்திற்கு போன சிவா நிர்மலாவை தேட அவள் தாத்தா நிர்மலா வீட்டில் இருப்பதாக கூற சிவா அங்கே போனான் ஆசிரமத்துக்கு பின்னாடியே அங்கே வேலைசெய்பவர்களுக்காக சில குடியிருப்புகள் கட்டப்பட்டு இருக்க அதில் முதல் வீட்டில் கதவு சும்மா மூடிவைக்கப்பட்டிருக்க சிவா திறந்துகொண்டு நுழைந்தான் அங்கே நிர்மலா இல்லை சிவா உடனே பின்புறம் போய்ப் பார்க்க அங்கு இருந்த துணிதுவைக்கும் கல்லில் துணியை சோப்போட்டுத் தேய்த்துகொண்டிருந்தாள் சிவா மெதுவாக பூனை நடைநடந்து அவள் நெருங்கிப் பார்த்தான்

 குனிந்து துவைத்து கொண்டிருந்ததால் நிர்மலா இடுப்பில் இருந்த ஒரு பக்கத்து சேலை நன்றாக விலகி மார்பின் அடியிலிருந்து அடிவயிற்றின் ஆரம்பம் வரை அப்பட்டமாக தெரிந்தது ஏற்கனவே நிர்மலா கொஞ்சம் புஷ்டியானவள் என்பதால் அவளின் தொப்பை வயிறும் அதில் தெரித்திருந்த நீரின் மினுமினுப்பும் பார்க்க வெண்பூசணி பிளந்தால் அதில் துளிர்க்கும் பிசினைப் போல அற்புதமாய் இருக்க உடனே சிவாவுக்கு அந்த சதைப்பற்று நிறைந்த வயிற்றில் துளிர்த்திருக்கும் நீரை தனது நாக்கால் நக்கியெடுத்து உறிஞ்சவேண்டும் போல் இருந்தது

 அவன் வந்தது துணிதுவைக்கும் சத்தத்தில் நிர்மலாவுக்கு கேட்காமல் போக அது சிவாவுக்கு வசதியாக போனது எப்பவும் பெண்களை அவர்களுக்கு தெரியாமல் மறைந்திருந்து ரசித்தால்தான் அவர்களின் உன்மையான அழகை நாம் கண்டுகொள்ள முடியும் என்பது சிவாவுக்கும் அது தெரிந்தேயிருக்க அவளை பின்னால் இருந்தே ரசிக்க ஆரம்பித்தான் சிறிதுநேரம் அவளை அணுஅணுவாக ரசித்தவன் இதற்க்குமேல் தன்னால் தாங்க முடியாது என்று எண்ணியவனாய் மெல்ல அவளின் பின்புறமாக அவள் மீது அப்படியே சாய்ந்து அவளை அசையவிடாமல் தன் கைகளால் அவள் வயிற்றுச் சதையை கொத்தாக பற்றிக்கொண்டான்

 இப்போது அவன் முகம் சரியாக அவளின் பின்னந்தலையில் முட்டியிருக்க அவன் மார்பு அவள் முதுகை அழுத்த அவன் கைகள் அவளின் சதைப்பிடிப்பான வயிற்றை அழுத்தி கசக்கிகொண்டு இருக்க அவனின் விரைத்து மேடிட்ட ஆண்மை சரியாக அவளின் பின்புறப் பிளவில் பொருந்திக் கொண்டது இந்த திடீர் தாக்குதலால் நிலைகுலைந்து போன நிர்மலா கீழே விழாமல் கல்லில் கையை ஊன்றிக்கொண்டு யாரோ என்று பயந்து ''ஏய் யாரது '' என்று அலற அவள் மேல் கவிழ்ந்திருந்த சிவா அவள் காதருகே தன் உதுடுவைத்து ''ஸ் கத்தாதே நிலா நான்தான் இப்பதான் வந்தேன்''என்றான்

 ''அடச்சே நீங்களா இந்த மாதிரிதான் பயமுறுத்தறதா ச்சே நான் எவ்வளவு பயந்துட்டேன் தெரியுமா மொதல்ல எந்திரிங்க யாராவது பார்த்துட போறாங்க''என்று எச்சரிக்கை குரலில் கூறி அவன் தூக்கி தள்ளுவதற்காக இவள் கல்லில் கையை அழுத்தமாக ஊன்றி நிமிர முயற்ச்சிக்க அவனோ தன் உடலை அவள் மீது இன்னும் அதிகமாக அழுத்த அவள் கைகள் சோப்பு நீரில் வழுக்கி அப்படியே கல்லின்மேலே படுத்துவிட்டாள் சிவா தன் கால் பெருவிரலை தரையில் அழுத்தி எக்கி அவள் மீது இன்னும் ஏறி படுக்க நிர்மலாவுக்கு தன் நிலைமை நினைத்து சங்கடமாக இருந்தது

 ''ப்ளீஸ்ங்க எழுந்திரிங்க யாராவது வந்து தொலைக்கப் போறாங்க வந்ததும் இப்படியா செய்வீங்க ச்சே ''என்று சலித்துக்கொள்ள ''ஏய் இன்னும் கொஞ்சநேரம்டி இந்த மாதிரி படுத்திருப்பது ரொம்ப சூப்பரா இருக்குடி இப்ப போய் இங்க யாரு வரப்போறாங்க'' என்றவன் தன்வலதுகையின் ஆள்காட்டி விரலால் அவள் தொப்புளின் ஆழத்தை அளந்து கொண்டே ''ஏய் நிலா இப்படியே இருந்திடலாம் போல சூப்பரா இருக்குடி நானே வந்த களைப்பில் நீ வாட்டர்பெட் மாதிரி நல்ல மெத்துன்னு குனிஞ்சி இருந்தியா அதான் அப்படியே படுத்து ரெஸ்ட் எடுக்கிறேன் ''என்ற சிவா அவள் பிடரியை தன் முரட்டு உதடுகளால் உரசிக்கொண்டே சொன்னான்




நிர்மலாவுக்கு அவன் சொன்னது சிரிப்பை வரவழைத்தாலும் அடக்கிக்கொண்டு ''ஆமாம் சொல்லமாட்டீங்க என் உடம்பு வலிக்கிறது எனக்குத்தான் தெரியும் உங்களுக்கு சுகமாத்தான் இருக்கும் இப்ப நீங்க எந்திரிக்க போறீங்களா இல்லை நான் சத்தம் போட்டு யாரையாவது கூப்பிடவா ''என்று நிர்மலா மிரட்ட சிவா மெதுவாக எழுந்து''ஏன்டி இதுக்கே உடம்பு வலிக்குதுன்னா கல்யாணத்துக்கு அப்புறம் எப்படி என்னை தினமும் தூக்குவ ''என்று முகம் முழுவதும் விரகத்துடனும் கண்களில் தாபத்துடன் அவளின் மடிப்பு விழுந்த வயிற்றைப் பார்த்துகொண்டே கேட்டான்

 அவன் பார்வை அவளை கூச்சத்தில் நெளிய வைக்க ச்சே இன்னிக்குன்னு பார்த்து சுடிதார் போடாம சேலையை கட்டினேனே என்று போலியாக வருந்தி அவசரமாக தன் மாராப்பை இழுத்து வயிற்றை மூடினாள் ''அய்யோ நீங்க மூடினா எங்களால பாக்க முடியாதாக்கும் இனிமேல்எல்லாமே ஐயா சொல்படிதான் நடக்கும் நடக்கனும் இந்த உடம்பு முழுவதும் இனி என்னோட கட்டுப்பாட்டில் தான் இருக்கும் என்ன புரியுதா''என்று சிவா போலித்தனமாய் எச்சரிக்க நிர்மலா வாயைப்பொத்தி கொண்டு சிரிப்பை அடக்கினாள்சிவா நிர்மலாவிடம் பேசிக்கொண்டே வீட்டுக்குள் போக துணிதுவைப்பதை பாதியில் விட்டுவிட்டு நிர்மலாவும் அவன் பின்னாலேயே வந்தாள்

 உள்ளே வந்த சிவா வெளிக்கதவை மூடி ஃபேன் சுவிட்சை ஆன்செய்துவிட்டு அங்கிருந்த கட்டிலில் அமர்ந்து அவளைப்பார்த்து கைவிரித்து வா என்பது போல அழைக்க நிர்மலா உதைவிழும் என்று முஷ்டியை மடக்கி எச்சரித்தாள் ''ஆமாம் இங்கே கல்யாணத்துக்கே வழியில்லை இதுல ரொமான்ஸ்க்கு ஒன்னும் குறையில்லை மொதல்ல இருக்கிற பிரச்சனையை தீர்க்கிற வழியபாருங்க இதையெல்லாம் அப்புறமா வச்சுக்கலாம் ''லேசாக குரலில் கோபம் எட்டிப்பார்க்க நிர்மலா கூற சரி இதுக்கு மேல இவக்கூட விளையாடினால் டென்ஷன் ஆகிவிடுவாள் என்பதை உணர்ந்த சிவா கட்டிலில் இருந்து எழுந்து நிர்மலாவின் அருகேவந்து அவள் இடுப்பில் தன் கையை போட்டு இழுத்து அணைத்து

தன் உதட்டை அவள் காதருகே வைத்து ''இப்போ நான் ஒரு சந்தோஷமான விஷயம் சொல்ல்போறேன் அதைச் சொன்னால் நீ எனக்கு என்னத் தருவேன்னு சொல்லு நிலா''என்று கிசுகிசுப்பாய் சிவா கேட்க சிவாவின் அந்த மயக்கும் குரல் நிர்மலாவின் வயிற்றில் ஒரு குறுகுறுப்பை ஏற்ப்படுத்தி உடலை சிலிர்க்கவைக்க '''ம்ம் நீங்க மொதல்ல விஷத்தை சொல்லுங்க அதுக்கப்புறமா நான் என்ன தறேன்னு சொல்றேன் ''என்று நிர்மலா குழைந்து பேச ''ம்ம் நான் இப்போ யாரோட கோவை வந்தேன்னு தெரியுமா''என்று சிவா நிறுத்த.... ''யாரோட வந்தீங்க''என்று நிர்மலா அவசரமாக கேட்டாள் ... நிர்மலாவை தன் பக்கமாக நேராக திருப்பி நிருத்தி''என் தங்கச்சி மான்சிக்கூட வந்தேன் அதுவும் காலையில ஆறுமணிக்கே கிளம்பி வந்தோம்''என்று சிவா கூற நிர்மலா திகைப்புடன் அவன் சட்டை காலரை பற்றிக்கொண்டு ''என்னது மான்சி கூடவா ...அவங்க ஏன் இங்கே வந்தாங்க ....இப்போ அவங்க எங்கே இருக்காங்க..''என்று அடுக்கடுக்காக கேள்வி கேட்க ''இரு இரு அவசரப்படாம ஒன்னு ஒன்னா கேளு சொல்றேன்'' என்றவன்

அவள் கேட்காமலேயே அன்று காலையில் இருந்து நடந்தவற்றை ஒன்றுவிடாமல் கூறினான் நிர்மலா முதலில் வாயைத்திறந்து கொண்டு கேட்டவள் பின்னர் சிவாவை இறுக்கி கட்டிக்கொண்டு ஓவென்று கத்தி கூச்சலிட்டாள் ''ஏய் ஏய் கத்தாதே இனிமேல் நம்ம லைன் கிளியர் உனக்கு இதுக்கு மேல் கல்யாணத்துக்கு எந்த பிரச்சனையும் இல்லையே ''என்று நிர்மலாவின் கண்களை பார்த்துக்கொன்டே சிவா கேட்க ''ம்ஹூம்''என்று வேகமாக தலையசைத்தவள்

''நீங்க உடனே சத்யா அண்ணனை கல்யாணத்துக்கு நாள் பார்க்கச் சொல்லுங்க இப்பவே போங்க ''என்று அவன் மார்பில் கைவைத்து தள்ளி அவசரப்படுத்த ''சரி சரி போறேன் முதலில் தாத்தா கிட்டே விஷயத்தை சொல்லுவோம் வா '' என்றவன் மறுபடியும் நின்று ''ஏய் நான் மறந்தே போய்ட்டேன் பார்த்தியா எங்க நீ எனக்கு தர்றேன்னு சொன்னது அதை மொதல்ல குடு மதத்தை அப்புறம் பார்க்கலாம் ''என்று சிவா பிடிவாதமாக நிற்க்க நிர்மலா அவன் வார்த்தையை மதித்து அவன் சட்டையை பிடித்து இழுத்து தன் மார்போடு அவன் நெஞ்சை மோதி அவன் தாடையை தன் கைகளில் தாங்கி முரட்டுத்தனமாக அவனின் கீழுதட்டை கடித்து இழுக்க சிவா வலியால் துடித்து ''ஏய் அடிப்பாவி பேய் மாதிரி கடிக்கிற விடுடி வலிக்குது ''என்று கெஞ்ச அவள் விடவில்லை

மாறாக அவன் உதடு முழுவதையும் தனக்குள் உள்வாங்கி கடித்து சுவைக்க ''ஐயோ ப்ளீஸ்டி இனிமேல் நான் உன்னிடம் முத்தமே கேட்க மாட்டேன் விடும்மா தாயே ''என்று உதடு அவளிடம் மாட்டியிருக்க ஈனஸ்வரத்தில் அரைகுறையாக குரல் கொடுத்தான் தன் உதட்டை அவளுக்கு இரவலாக கொடுத்துவிட்டு அவன் படும் அவஸ்தையை பார்த்து ரசித்தாள் நிர்மலா..

 ''எனையே எனக்கு... ''அறிமுகப் படுத்திய ...
 ''என் இனியவனே .... ''எனக்கு சம்மதம்.... '
'நீ இரவாய் இருப்பின்.... ''நான் நிலவாய் இருக்க.... ''
மட்டுமல்ல..... ''நீ முள்ளாய் இருப்பின்.... '
'நான் மலராய் இருக்கவும்....!

சிவா நிர்மலாவின் தாத்தாவிடம் விஷயத்தை சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பி சத்யன் வீட்டுக்கு வந்தான் அதற்க்குள் மாலை ஆறுமணியாகிவிட்டது சத்யன் வீட்டில் அனைவரும் ஹாலில் அமர்ந்து பிரவீனை பேசவிட்டு அந்த மழலை பேச்சை ரசித்து கொண்டிருக்க சிவாவும் அவர்களுடன் கலந்துகொண்டான் சிறிதுநேரம் தனது தங்கை மகனுடன் விளையாடியவன் சத்யனிடம் தான் கிளம்புவதாக கூற மான்சி சிவாவை மிரட்சியுடன் பார்த்தாள் அதை கவனித்த சத்யன் சிவாவிடம் திரும்பி ''ம் நீங்க கிளம்புங்க சிவா ''என்று தீர்மானமாக கூற சிவா தயக்கத்துடன் மான்சியை பார்த்தான்

 மான்சி சிவா அருகே வந்து குனிந்து அவனுக்கு மட்டும் கேட்கும் குரலில் ''அண்ணா இன்னும் கொஞ்சநாள் என்கூடவே இரேன் எனக்கு கொஞ்சம் பயமாக இருக்கு ''என்று கூறிவிட்டு மெதுவாக திரும்பினாள் அவள் பின்னாலேயே சத்யன் நின்றுகொண்டு இருக்க மான்சி திகைத்து தடுமாற சட்டென அவளை பற்றிய '' என்ன சொன்ன பயமாயிருக்கா ஏன் பயம் இது உன் வீடு மான்சி நாங்க எல்லாரும் உன் நலனை விரும்புறவங்க இங்கே உனக்கு எந்த குறையும் இருக்காது அப்படியிருக்க ஏன் சிவாவை இருக்கச் சொல்ற

அவருக்கு அங்கே எவ்வளவு வேலை இருக்கும் இன்னும் கல்யாணத்தை பத்தி வேற எல்லார்கிட்டயும் கலந்து பேசனும் இவ்வளவு வேலை அவருக்கு இருக்கு நீ என்னடான்னா அவரை இங்கயே இருன்னு சொல்ற ''என்றவன் சிவாவிடம் திரும்பி ''நீங்க கிளம்புங்க சிவா''என்று உத்தரவிட்டான்

 சிவா மறுபடியும் தயங்கி மான்சியை பார்க்க அவள் சத்யனை பார்த்துக்கொண்டிருந்தாள் இவர்கள் இருவரையும் பார்த்த சத்யன் ''இதோ பாருங்க சிவா என் மனைவியை என்கிட்ட ஒப்படைக்கனும்னு வந்தீங்க ஒப்படைச்சிட்டீங்க இனிமேல் அவளை பாதுகாக்க வேண்டியது என்னோட கடமை நீங்க போய் மொதல்ல உங்க கல்யாண வேலேயை கவனிங்க ''என்று தீர்மானமாக சத்யன் கூற சிவா வேறுவழியின்றி அனைவரிடமும் விடைபெற்று தங்கையிடம் வந்து அவள் கைகளை பற்றி

''மான்சி நான் கிளம்பறேன் நீ எல்லாரிடமும் பொருமையாக நிதானமாக நடந்துக்க சத்யன் ரொம்ப நல்லவர் அவரை புரிஞ்சுக்க முயற்ச்சி பண்ணு குழந்தையை ஜாக்கிரதையா பார்த்துக்க உனக்கு இங்கே எந்த பிரச்சனை என்றாலும் அத்தையிடம் சொல்லு என்னம்மா சரியா''என்று கண்கலங்க கூற அவன் பின்னால் இருந்து சத்யன் அவன் தோளைத் தட்டி

''இதையெல்லாம் நாங்க பாசமலர் படத்துலேயே பார்த்துட்டோம் மச்சான் நீங்க வேற ஏன் அதை மறுபடியும் ரீமிக்ஸ் பண்றீங்க நீங்களும் அழுது அவளையும் வேற அழவச்சுகிட்டு மொதல்ல கிளம்பு மச்சான் ''என்று சத்யன் கிண்டல் செய்ய அங்கே மறுபடியும் சூழ்நிலை இயல்பானது சத்யனின் பேச்சால் நிம்மதியுடன் சிவா ஊட்டிக்கு பயணமாக சத்யன் வீட்டில் அனைவரும் இரவு சாப்பாடு முடித்து அவரவர் அறைகளில் போய் முடங்க சத்யனும் தூங்கிக்கொண்டிருந்த மகனை தோளில் போட்டுக்கொண்டு மான்சியை பார்க்க அவள் நயாபைசாவுக்கு பிரயோஜனம் இல்லாத ஒரு டிவி சீரியலை சின்சியராகா பார்த்துகொண்டிருந்தாள்

இல்லை இல்லை பார்ப்பது போல் நடித்து கொண்டிருந்தாள் சத்யனுக்கு சிரிப்பு வந்தது அடக்கிக்கொண்டு உதட்டை பிதுக்கி இன்னும் எவ்வளவு நேரம் இப்படியே உட்கார்திருப்பாள்ன்னு பார்க்கலாம் என்று நினைத்தவாறு மகனுடன் மாடியேறினான் அவன் போன பிறகு அவசரமாக திரும்பிய மான்சி 'கர்மம் இவனால் இந்த கண்ராவி சீரியலை இவ்வளவு நேரம் பார்க்க வேண்டியதா போச்சு'என்று மனதுக்குள் எண்ணியவள் ஆமாம் இன்னும் எவ்வளவு நேரம் இப்படியே இருக்க முடியும் என்று யோசித்துக்கொண்டிருந்த போதே வேலைக்காரன் எறிந்து கொண்டிருந்த விளக்குகளை ஒவ்வென்றாக அனைத்து கொண்டே வர மான்சி இதுக்கு மேல் இங்கே உட்கார்ந்திருப்பது சரியில்லை என்று உணர்ந்து மெதுவாக மாடிப்படிகளில் ஏறினாள்

 ஆனால் எப்படித்தான் மெதுவாக ஏறினாலும் வரவேண்டிய இடத்துக்கு வந்துதானே ஆகவேண்டும் அறைக்கதவு திறந்தே இருக்க மான்சி நடுக்கத்துடன் வயிற்றில்ஏதோ சங்கடம் செய்ய அடிமேல் அடிவைத்து மெதுவாக உள்ளே நுழைந்தாள் சத்யன் அறைக்குள் வந்த மான்சி அறைச் சுற்றி தன் பார்வையை ஒடவிட்டாள் கட்டிலில் குழ்ந்தை மட்டும் உறங்கிக்கொண்டு இருக்க சத்யனை அங்கே காணவில்லை எங்கே போனான் என்று மான்சி தன் பார்வையால் தேட ''யாரை தேடுற மான்சி''அவள் பின்னாலேயே சத்யனின் குரல் கேட்க மான்சி விதிர்த்து போய் அவசரமாக திரும்பி அவன் மேலேயே சரிய சத்யன் அவளின் இரண்டு அக்குளிலும் கைகொடுத்து தூக்கி தன்மீது சாய்த்து கொண்டான்

 அவன் மார்பில் விழுந்த மான்சி 'ச்சே கதவுக்கு அருகிலேயே நின்னுகிட்டு இருந்திருக்கான் திருடன்'என்று மனதுக்குள் அவனை ஏசியவள் அவன் மார்பில் கைவைத்து தள்ளினாள் சத்யன் அவர்கள் இருவருக்கும் இடையே கையைவிட்டு தள்ளிய அவளின் கையை பற்றி அங்கேயே வைத்து அழுத்தி அவள் உச்சியில் தனது தாடையை வைத்து ''ஏன் மான்சி என்னை உனக்கு சுத்தமா பிடிக்கலையா நான் உனக்கு தகுதியில்லாதவன்னு நினைக்கிறாயா''என்று குரலில் விரகத்துடன் கேட்க மான்சியால் அதற்க்கு பதில் சொல்லத்தெரியவில்லை அவள் மவுனத்தை பார்த்து சத்யன் அவளை தன் பிடியிலிருந்து விடுவித்து எதிரில் நிறுத்தி அவள் முகத்தை நேரடியாக பார்த்து ''சொல்லு மான்சி நான் உனக்கு தகுதியில்லாதவன்னு நினைகிறயா ''என்று மறுபடியும் கேட்க மான்சி அவனை நேரடியாக நிமிர்ந்து அவன் கண்களை பார்க்க அது லேசாக கலங்கியிருக்க உதடுகள் துடித்துகொண்டிருக்க அவன் கைகள் லேசாக நடுங்குவது போல இருந்தது உடனே மான்சி சற்று உரக்க ''ஏன் இப்படி மனசப் போட்டு குழப்பிகிறீங்க எனக்கு இங்கே இருப்பதால ஒரு பிரச்சனையும் இல்லை போதுமா ''என்று அவன் மார்பை தனது கையால் வருடிக்கொண்டே கூற ''அப்போ ஏன் மாடிக்கு வரவே பயந்து கீழேயே உட்கார்ந்திருந்த''என்று சத்யன் பிடிவாதமாக கேட்டான்

அவனுக்கு மான்சியின் மனஉறுதியை தெரிந்துகொள்ள வேண்டும் தன்னை கண்டு அவள் பயப்படுவது அவனுக்கு யாரோ தன் இதயத்தில் ஊசியால் குத்தி காயப்படுத்துவது போல் வலித்தது மான்சி சிறிதுநேரம் தயங்கி பிறகு மவுனமாக கட்டிலை நோக்கி கைநீட்ட சத்யனுக்கு புரியவில்லை ''என்ன சொல்ற மான்சி தெளிவாச் சொல்லு ''என்று சிறுகுரலில் கேட்க ''ம் அதை நினைச்சா எனக்கு உடம்பெல்லாம் நடுங்குது ரொம்ப பயமா இருக்கு அதான் கீழேயே உட்கார்திருந்தேன் ''என்று கட்டிலை கைகாட்டி மான்சி கிசுகிசுப்பாக சொன்னாள் அதை கேட்டதும் சத்யனுக்கு ஏன் அவள் கட்டிலை நினைத்து பயப்படுகிறாள் என்று புரிய அவளை இழுத்து மார்போடு இறுக்கி அணைத்துகொண்டு ''மான்சி அன்னிக்கு நடந்ததையே நினைக்கதே அந்த சத்யன் ஒரு பொறுக்கி

அவன் இப்போ உயிரோடு இல்லை எனக்கு விபத்து நடந்தபோதே செத்துட்டான் இப்போ இருக்கிறவன் மான்சியோட புருஷன் இவனுக்கு தன் மனைவியை குழந்தையை நேசிக்க மட்டுமே தெரியும் வேறெந்த குறுக்கு புத்தியும் கிடையாது இதை எப்பவுமே நம்பனும் நான் இனிமேல் உன் மனசும் உடலும் நோகும்படி நடக்கமாட்டேன்''என்றவன் தன் ஒற்றை விரலால் அவள் முகம் நிமிர்த்தி '' உனக்கு இந்த உத்ரவாதம் போதுமில்லையா மான்சி''என்று அவள் கண்களை பார்த்து கேட்க மான்சி இவன் குரலில் ஏதோ மந்திரசக்தி இருக்கிறதா இவன் பேச்சு தன்னை இப்படி மயக்கிவிடுகிறதே என்று நினைத்தவாறு போதும் வேகமாக தலையாட்டினாள்



'அப்போ சரி வா தூங்கலாம்'' என்று அவளை கைபிடியாகவே அழைத்துக்கொண்டு கட்டிலை நோக்கி போய் நடுவில் குழந்தையை போட்டு அவளை அந்த பக்கம் படுக்கச் சொன்னான் இவன் குழந்தைக்கு இந்த பக்கம் படுத்து பிரவீனை கைகாட்டி ''ம்ம் இவருதான் இனிமேல் நம்ம ரெண்டு பேருக்கும் மீடியேட்டர் ''என்று சொல்லி கண்சிமிட்டி சிரிக்க அவளும் பதிலுக்கு சிரித்துவிட்டு சுவர் பக்கமாக திரும்பி சத்யனுக்கு முதுகுகாட்டி படுத்துக்கொன்டாள் சத்யன் அவளின் முதுகை பார்த்துகொண்டே அன்று இரவு முழுவதும் தூங்காமல் கொஞ்சம் கொஞ்சமாக விரகத்தில் வெந்து தனிந்தது
அவன் தேகம்

 ''கண்னே அன்று....
 ''பூக்களின் மலர்வு .... '
'நிகழக்கூடாது என்கிறாய்.... '
'அன்று ''அலைகள் அமைதி .....
 ''காக்க வேண்டுமென்கிறாய் ..... '
'அன்று..... ''சூரியன் உதிப்பது ..... 
''மேறகே நடக்கவேண்டுமென்கிறாய்.... 
''அப்போதுதான் என்னை...... '
'விரும்புகிறேன் என்கிறாய்.... '
'காத்திருப்பேன் அன்பே .....?



No comments:

Post a Comment