Saturday, March 21, 2015

எல்லாமே என் மான்சி - அத்தியாயம் - 11

மான்சி பரணியின் காலில் தடாலென விழவும் சத்யன் பதறிப்போய் அவள் தோள்பற்றி தூக்கி தன் தோளில் சாய்த்து “ என்ன மான்சி இது நான்தான் பேசிகிட்டு இருக்கேன்ல அப்புறம் நீ ஏன் இந்த மாதிரி பண்றே” என்று பரிவுடன் சொல்ல

காஞ்சனா மான்சியின் அருகில் வந்து “ என்னடி இதெல்லாம் கூத்து... என்கிட்ட ஒருவார்த்தை சொல்லியிருக்கலாமே மான்சி” என வருத்தத்துடன் கேட்க ... மான்சி எதுவுமே சொல்லாமல் சத்யன் தோளில் சாய்ந்தவாறு கண்ணீர் விட்டாள்
அப்போது பரணி சோபாவில் இருந்து எழுந்து அமைதியாக வாசலை நோக்கி போனார்...

அவர் வெளியே போவதை பார்த்த சத்யன் தன் தோளில் சாய்ந்திருந்த மான்சியை விலக்கி நிறுத்திவிட்டு வேகமாக அவரை வழிமறித்து நின்றான்


“ என்ன அங்கிள் ஒன்னுமே பேசாம போறீங்க... எங்க ரெண்டு பேரயும் அடிக்ககூட செய்யுங்க ஆனா இப்படி மவுனமா மட்டும் இருக்காதீங்க... நாங்க செய்தது ரொம்ப தப்புன்னு எங்களுக்கு தெரியு் அங்கிள் அதுக்காக நீங்க என்ன பனிஷ்மெண்ட் குடுத்தாலும் நாங்க ஏத்துக்கிறோம் அங்கிள்” என்று கூறிய சத்யன் அவர் பதிலுக்காக காத்திருக்க

பரணி அவனை நிமிர்ந்து பார்க்காமல் சுவற்றை பார்த்தபடி திரும்பி “ என்னால இதையெல்லாம் ஏத்துக்க முடியலை சத்யன்... நான் லால்குடி பக்கம் கிராமத்தில் வாழ்ந்த ஒரு பழைமைவாதி.... என்னால் ஒரு விதவையின் மறுமணத்தை ஏத்துக்க முடியும்... ஆனா இந்த மாதிரின்னா மனசு கஷ்டமா இருக்கு சத்யன்... இயல்பா இனிமே உங்கக்கூட பேசமுடியுமான்னு தெரியலை... ஆனா நான் மாறுவதற்கு எனக்கு கொஞ்சம் டைம் வேனும்... மத்தபடி நீங்க விரும்பியபடி சீக்கிரமா கல்யாணத்தை வச்சுக்கங்க அதில் எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை..... நீங்க எல்லா ஏற்பாடும் பண்ணுங்க சத்யன்” என்று கூறிவிட்டு பரணி கதவை திறந்து கொண்டு வெளியே போனார்

சத்யன் என்ன செய்வது என்று புரியாமல் திக்பிரமை பிடித்து நிற்க.... மான்சி தரையில் மடிந்து உட்கார்ந்து அழுதுகொண்டு இருந்தாள்

இதையெல்லாம் பார்த்த காஞ்சனா வேகமாக மான்சியின் அருகில் வந்து அவளை தூக்கி நிறுத்தி “ இப்போ அழுது என்ன பண்றது,.. விடு அழாதே எல்லாம் சரியாயிடும்” என்றவள் மான்சியை கைத்தாங்கலாக அழைத்துக்கொண்டு சத்யனிடம் வந்தாள்

“ தம்பி நீங்க ஏன் இப்படி நிக்கிறீங்க... போய் ஆகவேண்டிய வேலை பாருங்க... அவர் அப்படித்தான் சொல்வார் அப்புறமா சரியாயிடுவார்... நீங்க உங்க மாமாவுக்கும் தங்கச்சிக்கும் போன் பண்ணுங்க” என காஞ்சனா சத்யனுக்கு ஆதராவாக கூற

சத்யன் சட்டென தெளிந்த “ சரிங்க ஆன்ட்டி இதோ இப்பவே போன் பண்றேன்” என்ற சத்யன் தனது செல்லை எடுத்து உயிர்பித்தான்

“ இப்படி உட்கார்ந்து பேசுங்க தம்பி ” என்று சோபாவைக் காட்டிய காஞ்சனா மான்சியை விட்டுவிட்டு கிச்சனுக்குள் போய்விட

சத்யன் சோபாவில் அமர்ந்துகொண்டு... தன் பக்கத்தில் கைகாட்டி நின்றுகொண்டிருந்த மான்சியை உட்காருமாறு ஜாடையில் சொல்ல... மான்சிக்கு முன் சைந்தவி வந்து அவன் மடியில் உட்கார்ந்து கொண்டாள்

குழந்தையை அணைத்து அதன் குண்டு கன்னத்தில் முத்தமிட்ட சத்யன் “ சவி அம்மா நிக்கிறாங்க பாரும்மா செல்லம் .. உட்காரச்சொல்லுடா” என்று கொஞ்சிய படி கூற...

சைந்தவி அவன் மடியிலிருந்து தாவி இறங்கி மான்சி கையை பிடித்து இழுக்க வந்து சோபாவில் சத்யன் பக்கத்தில் உட்காரவைத்து விட்டு மறுபடியும் சத்யன் மடியில் தாவி ஏறிகொண்டாள்

சத்யன் ஒருகையால் மான்சியின் தோள்களை சுற்றி தன் தோளில் சாய்த்துக்கொண்டு... மறுகையால் மடியில் இருந்த சைந்தவியை அணைத்துக்கொண்டான்

கிச்சனில் இருந்து கையில் காபி ட்ரேயுடன் வந்த காஞ்சனாவுக்கு இவர்களை பார்த்ததும் கண்கலங்கி விட்டது ... சத்யனிடம் வந்து காபி டம்ளரை எடுத்துக்கொடுத்து விட்டு மான்சியிடம் ஒரு டம்ளரை எடுத்துக்கொடுக்க.. அவள் வேண்டாமென்று மறுத்தாள்

“ ரெண்டு நாளா எதுவுமே சரியா சாப்பிடலை ... காபியாவது குடி மான்சி... எல்லாம்தான் சரியா போச்சே... ம் எடுத்துக்க மான்சி” என்று காஞ்சனா அதட்ட

“ என்கிட்ட குடுங்க ஆன்ட்டி நான் குடுக்கிறேன்” என்ற சத்யன் தன் கையில் இருந்த டம்ளரை டீப்பாயில் வைத்துவிட்டு .. ட்ரேயில் இருந்து இன்னொரு டம்ளரை எடுத்துக்கொள்ள...

“ சைந்தவி குட்டி நீ வந்து பாட்டிம்மாவுக்கு சமையலுக்கு என்ன செயலாம்ன்னு சொல்றியா வாம்மா” என்று காஞ்சனா கூப்பிட்டதும் சத்யனிடம் இருந்து இறங்கிய சைந்தவி அவள் பின்னே ஓடிவிட்டாள்

சத்யன் தன் கையில் இருந்த காபி டம்ளரை மான்சியிடம் நீட்டி “ ஏன் மான்சி ரெண்டுநாளா எதுவும் சாப்பிடலை... ப்ளீஸ் இந்த காபியாவது குடி மான்சி” என்று கெஞ்ச ... மான்சி காபியை வாங்கிகொண்டு சோபாவில் இருந்து எழுந்து கொண்டாள்

“ நான் என் ரூமுக்கு போய் குடிக்கிறேன் ” என்றவள் சத்யனை பார்க்காமல் தனது அறைக்கு போய்விட்டாள்

சத்யன் சிறிதுநேரம் மான்சியின் அறைக்கதவையே பார்த்துவிட்டு .. பிறகு தன் கையில் இருந்த காபியை ஒரே மடக்கில் குடித்துவிட்டு... கிச்சன் வாசலில் போய் நின்று ஆன்ட்டி என்று அழைக்க

காஞ்சனா உடனே வர சத்யன் டம்ளரை அவளிடம் கொடுத்துவிட்டு “ ஆன்ட்டி நான் போய் மாமாவுக்கு போன் பண்ணி உடனே வரச்சொல்றேன்” என்றவன்

சிறிது தயங்கி “ மான்சியை கொஞ்சம் கவணமா பார்த்துக்கங்க ஆன்ட்டி... எப்பவுமே யாராவது கூட இருங்க... நான் கிளம்பறேன் ” என்று கூறிவிட்டு சத்யன் அங்கிருந்து வெளியேறினான்

தன் வீட்டுக்கு வந்த சத்யன் பரமனுக்கு போன் செய்து மான்சி கர்ப்பம் என்பதை தவிர மீதி விவரங்கள் அனைத்தும் சொல்லி உடனடியாக அவரை கிளம்பி வரச்சொன்னான்

அடுத்ததாக தனது தங்கைக்கு போன் செய்தான் ... சங்கீதாவிடம் எல்லா விபரங்களையும் சொன்னவன் மான்சி இல்லாமல் தனக்கு வாழ்க்கையே இல்லை என்பதை சங்கீதாவுக்கு புரியவைத்தான்

அவன் சொன்னதை எல்லாம் கவணமாக கேட்ட சங்கீதா .. உடணடியாக கல்யாணத்துக்கு ஏற்பாடு செய்யச் சொல்லிவிட்டு தன் கணவனுக்கு விடுமுறை கிடைத்ததும்.. இந்தியா கிளம்பிவந்து தனது அண்ணியை பார்ப்பதாக உற்சாகத்துடன் சொல்ல .. தன்னை தன் தங்கச்சி புரிந்துகொண்டதில் சத்யனுக்கு ரொம்ப சந்தோஷமாக இருந்தது

பிறகு தனது நெருங்கிய நன்பர்கள் சிலருக்கு போன்செய்து தனது வீட்டுக்கு வரச்சொன்னான்... அவர்களில் அருகில் இருந்த சிலர் மட்டும் உடனே வந்துவிட...

சத்யன் அவர்களிடம் தனக்கும் மான்சிக்கும் நடக்கவிருக்கும் திருமணத்தை பற்றி சொல்லி அதை எங்கே, என்று., எப்போது, வைத்துக்கொள்ளலாம் என்று யோசனை கேட்டான்

சத்யன் ஒரு இளம் விதவையை திருமணம் செய்வதால் அவன் நன்பர்களின் மனதில் அவன் ரொம்ப உயர்வான இடத்துக்கு போய்விட்டான் ... அனைவரும் அந்த மகிழ்ச்சியை அவனை சந்தோஷத்துடன் அணைத்து வாழ்த்து சொல்லி வெளிப்படுத்தினார்கள்

ஒருவழியாக அவர்களிடம் பேசி திருமணத்தை திருப்பதியில் வைத்துகொள்ளவது என்றும்... திருமணத்திற்கு வருபவர்களுக்கு உணவு அங்கேயே ஏற்பாடு செய்துவிடலாம்... என்று பேசி முடிவு செய்தனர்

சத்யன் தனது நன்பன் இருவரை திருப்திக்கு முதல் நாளே போய் அனைத்து ஏற்பாடுகளையும் செய்யச்சொல்லி பணத்தைக் கொடுத்தனுப்பினான்

அன்று முழுவதும் சத்யன் அடிக்கடி எதிர் வீட்டுக்கு ஓடி மான்சியை ஒரு பார்வை பார்த்துக்கொண்டே... தனது வேலையை கவணித்தான்

அன்று மாலை சத்யன் வீட்டுக்கு காஞ்சனாவும் பவானியம்மாவும் வந்தனார்... சத்யன் வந்தவர்களை சோபாவில் உட்காரச் சொன்னான்

“ சத்யா நாங்க ரெண்டு பேரும் இப்பத்தான் ஜோசியரை போய் பார்த்துட்டு வர்றோம்... நாளை மறுநாள் வெள்ளிக்கிழமை நாள் நல்லா இருக்குன்னு ஜோசியர் சொன்னார்... அன்னிக்கே கல்யாணத்தை வச்சுக்கலாமா சத்யன்” என்று பவானி கேட்டதும்

சத்யன் உடனே “ ம் சரிங்க ஆன்ட்டி அன்னிக்கே வச்சுக்கலாம்.... நானும் என் பிரண்ட்ஸ் எல்லாம் கலந்து பேசி கல்யாணத்தை திருப்பதியில் வைப்பதாக முடிவு பண்ணிருக்கோம்... இங்கேருந்து எல்லாரும் ரெண்டு வேன்ல போயிடலாம் ஆன்ட்டி... நாளைக்கு மாமா வந்ததும் பரணி அங்கிள்கிட்ட சொல்லச்சொல்றேன்” என்று சத்யன் சொல்ல ...

“ அப்படின்னா நாளைக்கு உங்க மாமா வந்ததும்... உங்கவீட்டு பழக்கம் முறையெல்லாம் கேட்டு சொல்லுங்க நாங்க அதுமாதிரி எல்லா ஏற்பாடுகளும் செய்யறோம்” என காஞ்சனா கூறியதும்

“ மாமா வரட்டும் எதுவாயிருந்தாலும் பரணி அங்கிள் கிட்ட பேசி முடிவு பண்ணச்சொல்லாம் ஆன்ட்டி” என்று சத்யன் சொல்ல

அவர்கள் இருவரும் ஒத்துக்கொண்டனர் ... பின்னர் சிறிதுநேரம் சம்பிரதாயமாக பேசிவிட்டு இருவரும் கிளம்பிவிட்டனர்


அவர்கள் போனதும் நன்பர்கள் வாங்கி வந்த மதிய உணவை சாப்பிட்ட சத்யன்.... அப்படியே வந்து படுக்கையில் விழுந்தான்... அவன் மனதில் எதையோ பெரிதாக சாதித்த மாதிரி ஒரு எண்ணம்.... வாழ்க்கையில் எத்தனை பேருக்கு காதலித்தவளே மனைவியாக வருகிறாள் இல்லையே .... ஆனால் எனக்கு அந்த அதிர்ஷ்டம் அடித்திருக்கிறது

சத்யனுக்கு மான்சியின் வயிற்றில் வளரும் தன் குழ்ந்தையின் ஞாபகம்… சத்யனுக்கு எல்லையில்லாத உற்சாகம் கரைபுரண்டோட படுக்கையில் எகிறிக் குதித்தான்.

‘ச்சே பாப்பா வர இன்னும் எவ்வளவு நாள் ஆகும்னு கேட்கவே இல்லையே என்று நினைத்து படுக்கையில் கவிழ்ந்து படுத்து தலையனையை கைகளால் குத்திக்கொண்டான்
‘சரி இன்னும் ரெண்டு நாள்தானே அவ இங்கே வந்ததும் கேட்டா போச்சு என்று தன் மனதை சமாதானம் செய்துகொண்டான்

அன்று இரவு நடுச்சாமத்தில் வந்து கதவை தட்டினார் பரமன்... சத்யன் கதவை திறந்துவிட... அவர் மட்டும்தான் வந்தார்

“ என்ன மாமா வீட்ல இருந்து வேற யாரும் வரலையா” என்று சத்யன் கேட்க

“ நீ கல்யாணம் என்னிக்குன்னு எதுவுமே சொல்லலை... அதான் நான் முடிவானதும் போன் பண்றேன் எல்லாரும் கிளம்பி வாங்கன்னு சொன்னேன்” என்றார் பரமன்

சத்யன் அவரிடம் எல்லா விபரங்களையும் சொல்லி ... விடிந்ததும் பரணியை பார்த்து பேசிவிட்டு நாளை ஒரே நாளில் திருமணத்திற்கு தேவையான அனைத்தையும் வாங்க வேண்டும் என்றும் சத்யன் சொன்னான்

மறுநாள் காலையில் சத்யனும் பரமனும் பரணி வீட்டுக்கு போனார்கள் ... எந்தவித முகமாற்றமும் இல்லாமல் அவர்களை வரவேற்ற பரணி... பரமனிடம் எல்லா விவரங்களையும் கேட்டுக்கொண்டார்

பிறகு எல்லாமே சத்யன் நினைத்ததைவிட ஜெட் வேகத்தில் நடந்தது... அந்த ஒரே நாளில் திருமணத்திற்கு தேவையான அனைத்து பொருட்களும் வாங்கினர்... சத்யனின் நன்பர்கள் சிலர் திருப்பதியில் தங்கி எல்லா ஏற்பாடுகளையும் சிறப்பாக செய்து வைத்திருந்தனர்

வியாழன்று மாலை அனைவரும் இரண்டு வேன்களில் திருப்பதிக்கு போய் இரவு தங்கினர்... மான்சி வந்த வேனை வழியெல்லாம் நிறுத்தி மான்சி வாந்தியெடுத்தபடியே வர...

பின்னால் வந்த வேனில் வந்த சத்யன் தன்னால்அவளுக்கு எதுவும் செய்யமுடியவில்லையே என்று ரொம்பவே தவித்து போனான்

சத்யன் சத்யனால் அந்த நாள் முழுவதும் மான்சியை பார்க்க முடியவில்லை ... அவள் ஒரு அறையிலும் அவன் ஒரு அறையிலும் தங்க...



சைந்தவி இங்கும் அங்கும் ஓடி ஓடி களைத்து போய் சத்யன் மார்பில் படுத்து உறங்கிவிட ... இதையெல்லாம் பார்த்த பரமனுக்கு தன் தங்கையின் மகனை பார்க்கவே ரொம்ப பெருமையாக இருந்தது

மறுநாள் அதிகாலையில் சத்யன் மான்சி இருவருக்கும் திருப்பதி ஏழுமலையான் சன்னிதானத்தில் அமைதியாக அழகாக திருமணம் நடக்க .. சத்யன் தனது பரம்பரையின் அம்மையப்பன் சின்னம் பொறித்த தாலியை மஞ்சள் கயிற்றில் கோர்த்து மான்சியின் கழுத்தில் கட்டினான்

மான்சியின் சங்கு கழுத்தில் சத்யன் கட்டிய புது மஞ்சள் கயிறு மினுமினுக்க.... இருவரும் மாலைமாற்றிக் கொண்டு பெரியவர்கள் கால்களில் விழுந்து ஆசிர்வாதம் பெற்றனர்

பரணியும் காஞ்சனாவும் கண்கலங்கி அவர்களை ஆசிர்வதிக்க ... பரமனின் குடும்பத்தினர் மான்சியின் அழகை கண்டு வியப்பில் வாயை பிளந்துகொண்டு அவர்களை ஆசிர்வதித்தனர்

திருப்பதியில் இருந்து அனைவரும் கிளம்பி சத்யன் வீடுவந்து சேர மாலை ஆறுமணி ஆகிவிட்டது... பரமனின் குடும்பத்தினர் ஊரில் போட்டதை போட்டபடி வந்துவிட்டதாக கூறி வந்த உடனே இரவு ரயிலுக்கு கிளம்பிவிட...

மிச்சமிருந்த சத்யனின் நன்பர்கள் அவனை எவ்வளவு கிண்டல் செய்யமுடியுமோ அவ்வளவு அமர்க்களம் செய்துவிட்டு கிளம்ப... ஒருவன் வாசல் வரை போய்விட்டு மறுபடியும் சத்யனை பார்த்து

“ டேய் மச்சான் வயித்துல இருக்கிற பாப்பா பத்திரம்டா.... ஆவேசத்தை அவசரப்படாம காட்டுடா” என்று நக்கல் செய்ய

சத்யன் முகத்தில் புதிதாய் வந்த வெட்கத்துடன் “ போடா போடா எல்லாம் எங்களுக்கு தெரியும் ” என்று அவன் கழுத்தை பிடித்து தள்ளாத குறையாக அவனை வெளியே அனுப்பினான்

அன்று இரவு உணவை காஞ்சனா தன் வீட்டில் இருந்து எடுத்துவந்து டேபிளில் வைத்துவிட்டு அறைக்குள் இருந்த மான்சியை அழைத்து “ அவருக்கு வேளையோடு சாப்பாடு வை .. நான் சவியை அங்கே கூட்டிப்போய் தூங்க வைக்கிறேன்” என்று சொல்லிவிட்டு சோபாவில் படுத்திருந்த சைந்தவியை தூக்கிக்கொண்டு கதவை சாத்திவிட்டு வெளியே போய்விட

சத்யனும் மான்சியும் மட்டும் தனித்திருந்தனர்....மான்சி தட்டுகளை கழுவி எடுத்துவந்து டேபிளில் வைக்க... சத்யன் வந்து அமர்ந்ததும் இருவரும் ஒன்றாக சாப்பிட்டாலும்.. மான்சி பட்டும்படாமலும் சாப்பிட்டாள்.. மான்சி முகம் வாட்டமாகவே இருக்க சத்யன் அமைதியாக சாப்பிட்டு முடித்தான்

அவள் இன்னும் சாப்பாட்டை பிசைந்து கொண்டே இருக்க “ பிடிக்கலைன்னா வச்சுடு மான்சி ... வேற ஏதாவது சாப்பிடுறயா” என சத்யன் பரிவுடன் கேட்க

“ ம்ஹூம் எனக்கு எதுவுமே பிடிக்கலை... எதை பார்த்தாலும் குமட்டுது” என்று மான்சி சொல்ல

“ சரி அப்படின்னா எடுத்துவச்சுட்டு போய் படு நான் கொஞ்சம் மெயில்கள் பார்க்கனும்” என்ற சத்யன் தனது லேப்டாப்பை எடுத்துக்கொண்டு சோபாவில் போய் உட்கார்ந்து கொள்ள..

மான்சி டேபிளை சுத்தம் செய்துவிட்டு... அவள் முன்பு தங்கியிருந்த அறைக்கு போய்விட்டாள்

சத்யன் மனது அலைபாய்ந்தாலும் அவள் முகவாட்டம் அவனை சங்கடப்படுத்த... தனது வேலைகளை நிதானமாக முடித்துவிட்டு ... மான்சியின் அறைக்கதவை திறந்து உள்ளே போனான்

மான்சி கட்டிலில் ஒருக்களித்து படுத்து நன்றாக தூங்கிக்கொன்டிருக்க ... அவள் முகத்தில் மசக்கையின் பூரிப்பும் களைப்பும் ஒருங்கே தெரிந்தது ...

சத்யன் அவளை நெருங்கி அவள் தூக்கத்தை கலைக்காமல் .. குனிந்து மென்மையாக அவள் நெற்றியில் முத்தமிட்டுவிட்டு... ஒரு போர்வையை எடுத்து அவள்மீது போர்த்திவிட்டு ஏஸியை அளவாக வைத்து பிறகு அந்த அறையில் இருந்து வெளியேறி பக்கத்தில் தனது அறைக்கு போய் படுத்துக்கொண்டான் ... முன்புபோல் சத்யனை காமம் வாட்டிவதைக்கவில்லை... எல்லாம் கிடைத்த ஒரு சந்தோஷம் அவன் மனதை ஆக்ரமித்தது ... அவன் மனம் நிம்மதியாக இருக்க தூக்கமும் நிம்மதியாக வந்தது 


மறுநாள் காலை சைந்தவி வந்துதான் சத்யனை எழுப்பினாள்... சத்யன் படுக்கையைவிட்டு எழாமல் சைந்தவியை தூக்கி தன் மார்மீது போட்டுக்கொண்டு “ செல்லப்பொண்ணு என்ன இவ்வளவு காலையிலயே எழுந்துட்டீங்க... அம்மாவை விட்டுட்டு தூக்கம் வரலையா சவிம்மா” என்று கொஞ்ச

“ அய்யோ அங்கிள் எல்லாரும் காபி குடிச்சுட்டு டிபன் சாப்பிட போறாங்க... பாட்டி உங்களை அங்கவந்து சாப்பிட சொன்னாங்க” என்று சைந்தவி சொன்னதும்

சத்யன் அவசரமாக தன் செல்லை எடுத்து நேரம் பார்க்க .. மணி எட்டு ஆகியிருந்தது

“ அடக்கடவுளே எவ்வளவு நேரம் தூங்கிட்டேன்.... அம்மா எங்க சவி” என்று சத்யன் கேட்க

“ அம்மா அங்க இருக்காங்க பாட்டி கூட இட்லி செய்றாங்க... உங்களை சாப்பிட கூப்டாங்க” என மழலையில் சைந்தவி கூற

“ சரி நீ போய் நான் குளிச்சுட்டு வர்றேன்னு சொல்லு செல்லம்” என்று குழந்தையை அனுப்பிவிட்டு அவசரமாக எழுந்து பாத்ரூமுக்கு ஓடினான் சத்யன்
சிறிதுநேரத்தில் குளித்துவிட்டு வெளியேவந்த சத்யன் கருநீல நிறத்தில் ஜீன்ஸும்... ஆஸ் க்ரே கலரில் டீசர்ட்டும் போட்டுக்கொண்டு தன்னை கண்ணாடியில் பார்த்தான்

நேற்று திருமணத்தின் முன்பு பரணி அவன் கழுத்தில் போட்ட புது தங்கச் செயின் அவனை புதுமாப்பிள்ளை என்று உணர்த்தியது ... தன் விரலில் இருந்த பரணி அணிவித்த மோதிரம் இருந்தது அதுவும் இவனை புதுமாப்பிள்ளையாக இவனை காட்டியது ...

ஆனால் எல்லாம் இருந்தும் இதோ தலையில் வழியும் நீரை தன் முந்தானையால் தொடைத்துவிட மனைவியாக மான்சி தன் அருகில் இல்லையே என்று அவன் மனம் ஏங்கியது

‘ ஏன் அவள் திடீரென ஒதுங்குகிறாள்.. ஒருவேளை இந்தமாதிரியான நேரத்தில் எதுவுமே பண்ணக்கூடாதோ... அப்படித்தான் இருக்கனும்... இப்போ என்ன ஓடியாப் போகப்போகுது... எனக்கு சொந்தமான அழகை எப்போ ரசிச்சா என்ன... பொறுமையா இருக்கவேண்டியது தான்’ என்று யோசித்தபடியே தனது மீசையை சீப்பால் தடவிவிட்டு .. நேரமாவதை உணர்ந்து கதவை சாத்திவிட்டு பரணியின் வீட்டுக்கு போனான்

உள்ளே நுழைந்ததுமே நெய்யின் வாசனை மூக்கைத் துளைத்தது... வாசனையை நுகர்ந்துகொண்டே கிச்சனுக்கு போனான் சத்யன்...

அங்கே மான்சி மெல்லிய ஆரஞ்சுவண்ணத்தில் கிரேப்சில்க் சேலை கட்டி தலைக்கு குளித்து கூந்தலை நுனியில் முடிந்து தலையில் சரமாக மல்லிகையும் கனகாம்பரமும் வைத்து சத்யனுக்கு முதுகு காட்டி நின்று சமையல் மேடையில் எதையோ கட் பண்ணிக்கொண்டு இருந்தாள்

அவள் ஜாக்கெட்டின் முதுகுப்புறம் வியர்வையால் நனைந்து ஒட்டியிருந்தது... புடவையின் கொசுவத்தை இடுப்பில் சொறுகியிருக்க... இடுப்பில் துளிர்த்த வியர்வை வழிந்து புடவை மடிப்பில் இறங்கியது... இடையை தாண்டி இருந்த அவள் கூந்தல் நுனியில் வழிந்த நீர் அவள் பின்புறத்தை நனைத்தது

மான்சியை இப்படி பார்த்த சத்யனுக்கு உடலில் சிறு பிரளயமே நடந்தது... அடிவயிற்றுக்கு கீழே ஜீன்ஸ் பிய்த்துக்கொள்வது போல் இறுக்கமாக அவசரமாக போய் சோபாவில் உட்கார்ந்து கொண்டான்... ஸ்... யப்பா என்ன அழகு மனுஷன் மூச்சு முட்டியே போயிருவான் போலருக்கே

பின்பக்கமாக ரசித்ததற்கே இந்த கதியென்றால் .. இன்னும் முன்பக்கமாக பார்த்தால் அவ்வளவுதான்... சத்யனால் வெகுநேரம் நிதானத்துக்கு வரமுடியவில்லை... என்னை சித்திரவதை செய்யவே கடவுள் இவளுக்கு இவ்வளவு அழகை கொடுத்தாரா

சத்யன் குனிந்து தனது ஜீன்ஸின் புடைப்பை பார்த்தான்... இப்போது கொஞ்சம் அடங்கியிருந்தது போல் இருக்க... ஊப்ஸ் என்று பெரிதாக மூச்சுவிட்டான் சத்யன்... என்னா வேதனைடா சாமி கட்ன பொண்டாட்டியை கட்டியணைக்கக் கூடமுடியாம ம்ஹூம் இது சரியில்லை’ என்று தானகவே சத்யன் தலையசைத்து கொண்டான்

அப்போது பரணியும் சைந்தவியும் வீட்டுக்குள்ளே வந்தனர்... பரணியின் கையில் வாழையிலை இருந்தது... சைந்தவி சத்யனை கண்டதும் ஓடிவந்து மடியில் ஏறிக்கொள்ள... பரணி சத்யனை பார்த்து “ வாங்க மாப்பிள்ளை” என்று அழைத்துவிட்டு கிச்சன் உள்ளே போனார்

“ அங்கிள்” என்று கூப்பிட்டு சத்யன் அவரை தடுத்து நிறுத்தி “ எப்பவும் போல சத்யன் கூப்பிடுங்க அங்கிள்.. மாப்பிள்ளை எல்லாம் வேனாம்” என்று சொல்ல

நின்று அவனை திரும்பிப்பார்த்து “ சத்யன்னு கூப்பிட்டா அவ்வளவுதான் உங்க மாமியார் என்னை உண்டு இல்லைன்னு ஆக்கிருவா... இப்பவே காலையிலேர்ந்து ஐஞ்சாவது முறையா கடைக்கு போய்ட்டு வர்றேன்... மருமகனுக்கு காலையில டிபனுக்க இந்த ஆர்பாட்டம்” என்று முகத்தில் லேசான சிரிப்புடன் கிச்சனுக்குள் போய்விட்டார்

சிறிதுநேரத்தில் வெளியே வந்த மான்சி “ நீங்க எப்போ வந்தீங்க.. வந்து.ரொம்ப நேரமாச்சா... என்னை கூப்பிடவேண்டியது தானே... அப்பா வந்து சொன்னபிறகுதான் தெரியும்” என்று மான்சி கூறியது .. என்னவோ சத்யனை வாசலில் நின்று வரவேற்க தவறியது போல் இருந்தது

சத்யன் மான்சியை ஏறஇறங்க பார்த்தான்... கழத்தில் இவன் கட்டிய தாலியுடன் இரண்டு செயின்களும்... அதில் ஒன்று சிவப்புக்கல் டாலர் வைத்து வெளியே மார்பில் தவழ்ந்து... கழுத்தை ஒட்டினார்ப் போல ஒரு சிவப்புக்கல் அட்டிகையும்... அதற்கு மேட்சாக காதில் சிவப்புக்கல் வைத்த தோடு ஜிமிக்கியும்.... மூக்கில் ஒருசிறு கல் மூக்குத்தியும்...

அவள் போட்டுருந்த ஆரஞ்சு வண்ண ரவிக்கை கழுத்துப்பகுதியில் வியர்வையில் நனைந்து இருக்க... அந்த ரவிக்கையின் இறுக்கத்தில் உள்ளே இருந்த வெள்ளைநிற ப்ரா அப்பட்டமாக தெரிந்தது

சத்யனுக்கு மறுபடியும் ஜீன்ஸ் இறுக்கமாக... பேசமால் இவளை தூக்கிக்கொண்டு யாருமற்ற தேசத்துக்கு ஓடிவிடலாமா என்று நினைத்தான்.... அவளை பார்த்தவன் பிறகு குனிந்து தனது ஜீன்ஸை பார்க்க ...

மான்சி அதை கவணிக்கும் முன் உள்ளேயிருந்து வந்த காஞ்சனா இருவரையும் சாப்பிட அழைக்க.... மான்சி முன்னால் போக சத்யன் அவள் பின்னாலேயே போனான்

இருவரும் அருகருகே உட்கார்ந்து சாப்பிட.... சத்யன் சைந்தவியை டேபிளில் தூக்கி உட்காரவைத்து அவளுக்கும் ஊட்டிக்கொண்டே சாப்பிட்டான்

சாப்பிட்டு முடித்துவிட்டு ஹாலில் வந்து உட்கார்ந்த சத்யன்... சைந்தவியை தூக்கி மடியில் வைத்துக்கொண்டு “ சவி குட்டி நான் ஒன்னு சொன்னா கேட்ப்பியா” என்று கேட்டதும்

ம் என்று வேகமாக சைந்தவி தலையாட்டினாள்



“ நீ இனிமே என்னை அப்பான்னுதான் கூப்பிடனும் சரியா” என்று சத்யன் சொல்ல

“ ஏன் அங்கிள்ன்னு தான நான் கூப்பிடுவேன்” என சைந்தவி சத்யனின் மீசையை பிடித்து இழுத்தபடி கூற

“ இப்போ உன் அம்மா தாத்தா தானே அப்பா அதுமாதிரி நான் உனக்கு அப்பா... இனிமே அப்படியே கூப்பிடனும் ” என சத்யன் அவளுக்கு புரிவது போல கூற

அப்போது வந்த பரணி “ அவளை ஏன் வற்புறுத்தனும் குழந்தை காலப்போக்கில் தெரிஞ்சுக்கட்டும்” என்றார்

“ இல்ல அங்கிள் சைந்தவிக்கு நான் அப்பாவா இருக்கனும்னு ஆசைபடுறேன்... அப்பா மாதிரியில்லை” என்று சத்யன் தீர்மானமாக சொல்ல

பரணியின் முகத்தில் மெல்லிய புன்னகை படர “ சவி இனிமே அங்கிள்னு கூப்பிடாதே... அப்பான்னு கூப்பிடு” என்று தன் பேத்திக்கு சொல்ல ...

அவள் வேகமாக தலையசைத்துவிட்டு சத்யனின் தாடையை பற்றி “ அப்பா ம்ம் அப்பா” என்று ராகம் போட்டு சொன்னாள்

சத்யன் சிரிப்புடன் குழந்தையை அணைத்து “ ம்ம் இதுதான் சரி .. அப்போ நான் ஆபிஸ்க்கு கிளம்பறேன் அங்கிள் “ என்று எழுந்து கொள்ள

“ ஏன் இன்னிக்கு ஆபிஸ்க்கு போகனும் இன்னும் ரெண்டு நாள் கழிச்சு போகலாமே” என்று காஞ்சனா கேட்க

“ இல்ல ஆன்ட்டி நாளைக்கு சன்டே லீவுதானே இன்னிக்கு சும்மா கொஞ்சம் ஒர்க் பார்த்துட்டு வரலாம்னு தான்” என கூறிவிட்டு சத்யன் கிளம்பினான்

வாசல் வரை போனவன் மான்சியை காணவேண்டும் என்று மனம் துடிக்க நின்று திரும்பி பார்த்தான் ... அவளும் அப்போது அவனையே பார்த்துக்கொண்டிருக்க... சத்யன் தலையசைத்து போய்வருகிறேன் என்று சொல்ல... மான்சியும் தலையசைத்து அவனுக்கு விடைகொடுத்தாள்


No comments:

Post a Comment