Tuesday, March 10, 2015

மாங்கல்யம் தந்துனானே.. - எபிஸோட் - 3

அடுத்த நாள் காலை..

'பட்.. பட்.. பட்..' என கதவு தட்டப்பட, நான் படக்கென விழித்துக் கொண்டேன். 'பவித்ரா.. எந்திரிம்மா..' வெளியே என் மாமியாரின் குரல் கேட்டது. நான் பரபரப்பானேன். பாதி உதிர்ந்து போயிருந்த மல்லிகையை தலையில் இருந்து தனியாய் பிரித்து எறிந்தேன். அங்கங்கே சிதறிக் கிடந்த எனது ஆடைகளை அள்ளி, அவசர அவசரமாய் அணிந்து கொள்ள ஆரம்பித்தேன். அருகில் அசோக் ஆழ்ந்த உறக்கத்தில் அசையாமல் கிடந்தார். அவர் தூங்கும் அழகை பார்த்ததும், என் உதட்டில் ஒரு மெலிதான புன்னகை அரும்பியது. குப்புறக் கவிழ்ந்து கொண்டு.. குழந்தை மாதிரி வாயை 'ஓ..' வென திறந்து வைத்துக் கொண்டு..!!

'நைட்டு மட்டும் நாலு தடவை அந்த பாய்ச்சல் பாய்ஞ்சது.. இப்போ தூங்குறதை பாரு.. ஒன்னும் தெரியாத பச்சைப் புள்ளை மாதிரி..!!'

நான் மனதுக்குள்ளேயே முனுமுனுத்தவாறு, ஆடைகளை அணிந்து முடித்தேன். எழுந்து சென்று கதவு திறந்தேன். என் மாமியார் நின்றிருந்தார். கதவு திறக்கப்பட்டதும் ஒரு முறை என்னை ஸ்கேன் செய்வது மாதிரி மேலும் கீழும் பார்த்தார். பின்பு தலையை லேசாய் சாய்த்து, உறங்கிக்கொண்டிருந்த தன் மகனை பார்த்தார். அடுத்த நொடியே அவருடைய முகத்தில் அவ்வளவு பூரிப்பு..!! புன்னகையுடன் என்னிடம் கேட்டார்.




"நீ காபி சாப்பிடுவியா.. டீ சாப்பிடுவியா.. பவித்ரா..?"

"இ..இல்லத்தை.. நா..நானே வந்து போட்டுக்குறேன்.."

"பரவால்லம்மா.. இன்னைக்கு ஒருநாள் நான் என் மருமகளுக்கு போட்டு எடுத்துட்டு வர்றேனே.. என்ன வேணும்னு மட்டும் சொல்லு.. காபியா..? டீயா..?"

"அ..அவர் என்ன சாப்பிடுவாரு..?"

"அவனுக்கு எப்பவும் காபிதான்..!!"

"அப்போ.. நானும் அதையே சாப்பிடுறேன்த்தை.."

நான் சொன்னதும் என் மாமியாரின் முகத்தில் அப்படி ஒரு பிரகாசம். வாஞ்சையுடன் ஒரு கையால் என் கன்னத்தை தாங்கிப் பிடித்தார். மெல்ல தடவினார். புன்னகையுடன் சொன்னார்.

"அஞ்சு நிமிஷத்துல போட்டு எடுத்துட்டு வர்றேன்.."

சொல்லிவிட்டு திரும்பி நடந்தவர், நான்கைந்து எட்டுகள் எடுத்துவைத்ததும், மீண்டும் எதோ ஞாபகம் வந்தவராய் என்னிடம் திரும்பி சொன்னார்.

"பாத்ரூம்ல கவர் பிரிக்காம ஒரு ப்ரஷ் இருக்கும் பவித்ரா.. உனக்குத்தான் அது..!!"

"ம்ம்.. சரித்தை.."

நான் பாத்ரூம் சென்று ப்ரஷ் செய்தேன். மனதுக்குள் என் மாமியாரின் மீதான மதிப்பு ஏறிக்கொண்டே சென்றது. மருமகளுக்கு என்னென்ன தேவை என்று யோசித்து, டூத்ப்ரஷ் முதற்கொண்டு வாங்கி வைத்திருக்கிறாள். இந்த மாதிரி மாமியார் கிடைக்க கொடுத்து வைத்திருக்க வேண்டும் என்றே தோன்றியது.

ப்ரஷ் செய்துவிட்டு, மீண்டும் கட்டிலில் வந்து அமர்ந்தேன். என் கணவர் தூங்கும் அழகை.. விட்ட இடத்தில் இருந்து ரசிக்க ஆரம்பித்தேன். முதுகு காட்டி உறங்கிக் கொண்டிருந்தவர், இப்போது மார்பு காட்டி படுத்திருந்தார். நான் அவரை நெருங்கி அவருக்கு பக்கவாட்டில் படுத்துக் கொண்டேன். அவருடைய முகத்தை நெருக்கமாக கவனித்தேன். நெற்றியில் புரண்ட கொத்து முடிக்கற்றை.. விழி மூடியிருந்த இமைகள்.. புருவங்கள்.. இரவு முழுதும் என்னை உறிஞ்சிக்குடித்த அந்த பிங்க் நிற உதடுகள்.. உதட்டுக்கு மேல் எனது பேவரிட் மீசை..!!

பற்களால் கடித்து இழுக்க வேண்டும் என்ற ஆசை மனதில் மீண்டும் துளிர்விட்டது. ஆனால் கடித்து இழுத்தால் கத்துவாரோ.. எழுந்து திட்டுவாரோ என்று பயமாக இருந்தது. முத்தம் மட்டும் தரலாம் என எண்ணினேன். குனிந்து என் உதடுகளை குவித்து அந்த மீசையில் மென்மையாக முத்தமிட்டேன். உடனே அவருக்கு உடல் லேசாய் சிலிர்த்தது. ஆனால் தூக்கம் கலையவில்லை. அப்படியே புரண்டார். புரண்ட வேகத்தில் அவருடைய கை என் இடுப்பு மீது வந்து படியவும், வாசலில் என் மாமியார் வந்து நிற்கவும் சரியாக இருந்தது.

நான் பதறிப் போய் எழுந்தேன். 'வா..வாங்கத்தை..' என்று வாய் குழறினேன். அவர் எதுவும் சொல்லவில்லை. ஒரு நமுட்டு சிரிப்பை உதிர்த்தார். கையில் வைத்திருந்த காபி ட்ரேயை என்னிடம் நீட்டினார்.

"இது அவனுக்கு பவித்ரா.. அவனுக்கு காபி கொஞ்சம் ஸ்ட்ராங்கா இருக்கணும்.." 

அவர் சொல்ல நான் மனதுக்குள் 'என் கணவருக்கு காபி ஸ்ட்ராங்காக இருக்க வேண்டும்' என்று ஏற்றிக் கொண்டேன்.

"சரித்தை.. நான் கொடுத்துர்றேன்.."

"ம்ம்ம்.. அப்புறம்.." என்றவர் சற்று நிறுத்தினார்.

"எ..என்னத்தை..?"

"ஸாருக்கு தூக்கத்துல இருக்குறப்போ எழுப்பினா.. பயங்கர கோவம் வரும்.. கொஞ்சம் பாத்துக்கோ.."

"ம்ம்.. சரித்தை.."

நான் புன்னகையுடன் சொல்ல, அவர் கிளம்பினார். நான் காபி ட்ரேயை டேபிளில் வைத்தேன். நிறம் குறைவாக இருந்த காபியை எடுத்து கொண்டேன். மீண்டும் என் கணவர் தூங்கும் அழகை ரசித்துக் கொண்டே, பொறுமையாக உறிஞ்சினேன். இரவு அவர் செய்த அட்டகாசங்கள் எல்லாம் நினைவுக்கு வந்தன. அவ்வளவு ஆசையையும் எத்தனை நாள் அடக்கி வைத்திருந்தாரோ..? நேற்றிரவு மொத்தமாய் கொட்டித் தீர்த்து விட்டார். இரவு முழுதும் அவருடைய ஆண்மைப்பிடியில் சிக்கி, உடல் லேசாக வலிப்பதை உணர முடிந்தது. ஆனால் அவ்வலியும் சுகமெனவே தோன்றியது.

காபியை முடித்து காலி கோப்பையை ட்ரேயில் வைத்தேன். என் கணவரை எழுப்பலாம் என்று தோன்றியது. 'என்னங்க..' என்று அவருடைய தோளில் கை வைத்தேன். அவரிடம் எந்த சலனமும் இல்லை. மீண்டும் ஒரு 'என்னங்க..'வோடு இந்த முறை அந்த தோளை பிடித்து அசைத்தேன். மென்மையாகத்தான்..!! அதற்கே அவர் படக்கென சிலிர்த்துக் கொண்டு விழித்தார். எழுந்த வேகத்தில் 'உச்ச்ச்ச்..!!!' என்றவாறு, கண்களை இடுக்கி உக்கிரமாக என்னை முறைக்க, நான் வெலவெலத்துப் போனேன். அழகு கொஞ்சும் அந்த முகம் இப்படி அகோரமாகவும் மாறுமா..???

"என்ன..?" என்றார் எரிச்சலாக.

"கா..காபி.." நான் உடலெல்லாம் வெடவெடக்க சொன்னேன்.

"அங்க வச்சிடு.."

"ஆ..ஆறிடும்.."

"ஆறட்டும்..!!"

பட்டென சொன்னவர் மீண்டும் குப்புறப்படுத்துக் கொண்டார். இமைகளை மூடி.. விட்ட இடத்தில் இருந்து தூக்கத்தை தொடர ஆரம்பித்தார். நான் உடலின் நடுக்கம் குறையாமல் உறைந்து போய் அமர்ந்திருந்தேன். அப்பா... எப்படி கோபம் வருகிறது இவருக்கு..? தூக்கத்தில் இருக்கும்போது எழுப்பினால், இவ்வளவு எரிச்சல் வருமா..? அத்தை அவ்வளவு சொல்லியும் கவனம் இல்லாமல் நடந்து கொண்டேனோ என்று தோன்றியது. நெஞ்சு படபடப்பு அடங்கும் வரை கொஞ்ச நேரம் அப்படியே அமர்ந்திருந்தேன். அப்புறம் எழுந்து குளிக்க சென்றேன்.

உடைகளை களைந்து நிர்வாணம் ஆகி.. நேற்றிரவு பார்த்த மாதிரி என் உடலை மீண்டும் பாத்ரூம் கண்ணாடியில் பார்த்தேன். நேற்றிரவு பார்த்ததற்கும் இன்று காலை பார்ப்பதற்கும், உடலில் நிறைய மாற்றங்கள் இருப்பதாக தோன்றிற்று. இரவு முழுவதும் அசோக்கின் ஆக்கிரமிப்பில் சிக்கியிருந்த மேனி, லேசாய் வாடிப் போயிருந்தது..!! உதடுகள் ஒரு ஆண்மகனின் ஆவேசத்தால் சற்றே வீங்கிப் போயிருந்தன..!! நாக்கு அந்த ஆண்மகனின் எச்சில் சுவையை நன்றாகவே உணர்ந்திருந்தது. பட்டுப்போன்ற என் மார்பு சதைகளில் ஆங்காங்கே அவருடைய பல் தடங்கள்..!! நாக்கினால் அவர் அவ்வளவு நேரம் தடவி தடவி ஆசுவாசப் படுத்தியிருந்தாலும், காம்புகள் ரெண்டும் தடித்துப் போயிருப்பதாகவே தோன்றியது. பின்புற மேடுகள் கன்னிச் சிவந்து போயிருந்தன.  ஆணுறுப்பின் வீரியத்தை.. அது உள்ளே சென்று வருவதில் உண்டாகிற சுகத்தினை.. என் பெண்ணுறுப்பு இப்போது நன்றாக அறிந்திருந்தது. அதற்கு ஈடாக.. தனது கன்னித்தன்மையை காணிக்கையாய் கொடுத்திருந்தது..!!

இரவு முழுதும் நடந்த காம விளையாட்டுக்களை நினைந்து சிரித்துக்கொண்டே, ஷவரில் நனைந்தேன். நான்கு முறை..!! இன்பத்தின் எல்லை வரை சென்று, மீண்டு வந்த நான்கு முறை..!! ஆண்மையின் முழு வேகத்தை நான் அறிந்து கொண்ட நான்கு முறை..!! அந்த ஆண்மையின் உச்ச நீரை, என் பெண்மையின் ஆழத்தில் வாங்கிக்கொண்ட நான்குமுறை..!! தூங்குவதும், பின் விழிப்பதும், விழித்ததும் பின் ஆரம்பிப்பதுமாய்.. ஓரிரவில் எங்களால் முடிந்த நான்கு முறை..!!

குளித்து முடித்து, வேறு உடை அணிந்து கொண்டு, பாத்ரூம் கதவை திறந்தவள், பக்கென அதிர்ந்து போனேன். கதவுக்கு வெகு அருகே அசோக் நின்று கொண்டிருந்தார். எந்திரம் மாதிரி.. எந்த உணர்ச்சியையும் காட்டாமல்.. முகத்தை ஒருமாதிரி உர்ர்ரென வைத்துக் கொண்டு என்னையே முறைத்தார். அமைதியாயிருந்த என் மனது இப்போது மீண்டும் படபடக்க ஆரம்பித்தது.

"எ..என்னங்க..?" என்றேன் நடுக்கமாய்.

"என்ன காபி கொடுத்த நீ..? ஷுகரே இல்லை..??"

"தெ..தெரியலைங்க.. அ..அத்தைதான் போட்டு எடுத்துட்டு வந்தாங்க.." 

"எனக்கு அதுலாம் தெரியாது.. நீதான் எனக்கு காபி கொடுத்த.. இப்போ நீதான் ஷுகரும் கொடுக்கணும்.."

சொன்னவர் பட்டென ஒரு கையால் என் இடுப்பை வளைத்து இழுத்தார். இழுத்த வேகத்தில் என் இதழ்களை தன் இதழ்களால் கவ்விக்கொண்டார். ஆவேசமாக உறிஞ்ச ஆரம்பித்தார். அவருடைய கடுகடு முகம் எப்போது காதல் கொஞ்சும் முகமானது என்று எனக்கு நினைவில்லை. உர்ரென இருந்தவர் உதடு கவ்வி உறிஞ்சுவார் என்றும் நான் எதிர்பார்க்கவில்லை. அவரிடம் இதழ்களை இழந்திருந்தது இதமாய் இருந்த போதும், பிடிக்காத மாதிரி அவரை தள்ளிவிட்டேன்.

"ஐயோ.. என்னங்க இது.. யாராவது வந்துடப் போறாங்க..?"

"யாரும் வர மாட்டாங்க.. கதவை லாக் பண்ணியாச்சு.. வா பவி.."

 

சொன்னவர் மீண்டும் என் உதடுகளில் தன் உதடுகளை பதித்தார். முத்த வன்முறை செய்தார். இந்தமுறை நான் ரொம்ப பிகு பண்ணாமல் அவருடன் ஒத்துழைத்தேன். அவருடைய இடுப்பை சுற்றி என் கையை போட்டுக் கொண்டு, அவர் உறிஞ்சி முடிக்கும் வரை என் உதடுகளை அவருக்கு விட்டுக் கொடுத்து நின்றிருந்தேன். நீண்ட நேரம் ஆசையாய் சுவைத்து விட்டு, அவர் என்னை விடுவிக்க,

"என்னங்க இது.. காலங்காத்தாலேயே..?" நான் வெட்கத்தில் முகம் சிவந்து போனவளாய் கேட்டேன்.

"ஏய்.. என்ன.. இதுக்கே இப்படி வெட்கப் படுற..? சென்னைக்கு போனப்புறம் பாரு.. காலங்காத்தால இன்னும் என்னென்ன வேலைலாம் பண்றேன்னு.." அவர் சொல்லிவிட்டு கண்ணடிக்க, நான் 

"ச்ச்சீய்ய்ய்..!!!" என வெட்கமுற்றேன். கொஞ்ச நேரம் என் வெட்க முகத்தை ஆசையாக ரசித்தவர், பின்பு கனிவான குரலில் கேட்டார்.



"எழுப்புறப்போ.. எரிஞ்சு விழுந்துட்டேன்னு கோவமா பவிம்மா..?"

"ச்சேச்சே.. அ..அதுலாம் ஒண்ணுல்ல.."

"ஸாரிடா.. எங்கிட்ட ரொம்ப நாளா இருக்குற கெட்ட பழக்கம் அது.. கண்டிப்பா மாத்திக்கிறேன்.. சரியா..?" 

சொல்லிக்கொண்டே அவர் என் கைகள் ரெண்டையும், தன் கைகளுக்குள் வைத்து காதலாக முத்தமிட, சற்றுமுன் இருந்த ஒரு சின்ன கவலை இப்போது காலைப்பனியாய் மறைந்து போனது.

"ம்ம்.. சரி.." என்றேன் புன்னகையுடன்.

"இனிமே அந்த மாதிரி நான் மூஞ்சியை காட்டுனா.. என் கன்னத்துலையே ரெண்டு அறை கொடு.. ஓகேவா..?"

"ஹ்ஹ்ஹாஹ்ஹா.. ம்ஹூம்.. அப்டிலாம் நான் பண்ண மாட்டேன்.."

"இல்ல இல்ல.. நீ கொடுக்கணும்.."

"சரி.. கொடுக்குறேன்.. ஆனா.."

"ம்ம்.. ஆனா..?"

"அறை இல்லை.. முத்தம்..!!" நான் வெட்கத்துடன் சொல்ல, அவர் முகம் மலர்ந்தது.

"வாவ்... பரவால்லயே..?"

"என்ன பரவால்ல..?"

"என் பொண்டாட்டிக்கும் ரொமான்ஸ் நல்லா வருதே..?"

"ச்சீய்..."

"ஹ்ஹ்ஹ்ஹா... ம்ம்ம்.. அதுசரி.. பாத்ரூமுக்குள்ள போய் என்ன பண்ணிட்டு வர்ற..?"

"பாத்ரூமுக்குள்ள என்ன பண்ணுவாங்க..? குளிச்சுட்டு வர்றேன்.."

"குளிச்சுட்டியா..? நெஜமாவா..?" அவர் ஆச்சரியமாய் கேட்டார்.

"ஆமாம்.. ஏன்..?"

"குளிச்ச மாதிரியே தெரியலையே..?"

"அப்டியா..?" இப்போது நான் நம்ப முடியாமல் கேட்டேன்.

"ஆமாம்.. இப்போதான் தூங்கி எந்திரிச்ச மாதிரி இருக்கு.. வா.. இன்னொரு தடவை நல்லா குளிக்கலாம்.." அவர் குறும்பான குரலில் சொல்லியபடி என் கையைப் பற்றி உள்ளே இழுக்க, அவருடைய திட்டம் எனக்கு விளங்கிற்று.

"ச்சீய்.. விடுங்கப்பா.. நான் வரலை.."

"இட்ஸ் ஓகே.. கமான்.. எனக்கு ஒன்னும் ப்ராப்ளம் இல்ல.."

"உங்களுக்கு என்ன ப்ராப்ளம்..? எனக்குத்தான் ப்ராப்ளம்.. விடுங்க.." சொல்லிக்கொண்டே நான் கையை உதறி பறித்துக் கொண்டேன்.

"ப்ளீஸ் பவி.."

"ம்ஹூம்.. இன்னொரு நாள்.."

அவர் சிணுங்குவது மாதிரி நடித்துக் கொண்டே பாத்ரூமுக்குள் புகுந்து கொண்டார். நான் அறைக்கதவை திறந்து வைத்துவிட்டு, மெத்தையில் அமர்ந்தேன். மனசுக்குள் மத்தாப்பு கொளுத்திப் போட்டது மாதிரி இருந்தது. என் கணவர் செய்த சில்மிஷங்கள்தான் காரணம். யப்பா....!!! செம சேட்டைதான் இது..!! எப்படி இதை சமாளிக்கப் போகிறேனோ..?

ஒரு பத்து நிமிடம் ஆயிருக்கும். வாசலில் நிழலாட நிமிர்ந்து பார்த்தேன். அந்தக் குட்டிப்பெண் நின்றிருந்தாள். அசோக்குடைய அக்காவின் மகள். நான்கு அல்லது ஐந்து வயதிருக்கும். நேற்றே அந்தக்குட்டியின் பெயர் சொன்னார்கள். கல்யாண பரபரப்பில் மறந்து போயிருந்தது. அவள் இப்போது வாசலில் நின்று கைகளை பின்னால் கட்டி, ஒருமாதிரி என்னை முறைத்துக் கொண்டிருந்தாள். நான் அவளை பார்த்து புன்னகைத்தபடி அருகில் அழைத்தேன். 

"ஹாய் குட்டி.. உள்ள வா.."

அவள் தயங்கி தயங்கி உள்ளே வந்தாள். ஆனால் எதுவும் பேசாமல் உர்ரென்று இருந்தாள். நான்தான் அவளுடைய கன்னத்தை பிடித்து தடவியவாறு மீண்டும் கேட்டேன்.

"குட்டிப்பொண்ணுக்கு என்ன வேணும்..?"

"எனக்கு ஒன்னும் வேணாம்.. ஆச்சி உங்களை சாப்பிட கூப்பிட்டாங்க.." அது மழலை மொழியை உதிர்த்தது.

"ஓ..!! அங்கிள் குளிச்சுட்டு வந்ததும் ரெண்டு பேரும் வர்றோம்.. சரியா..? ஆமாம்.. உன் பேர் என்னடா செல்லம்..?"

"சோனு..!!"

"வாவ்..!! ஸ்வீட் கேர்ளுக்கு.. பேரும் ஸ்வீட்டா இருக்கே..?" சொல்லிக்கொண்டே நான் அவளுடைய கன்னத்தில் முத்தமிட செல்ல, அவள் முகத்தை திருப்பிக் கொண்டாள்.

"டோன்ட் கிஸ் மீ..!!" என்றாள் முறைப்பாக.

"ஆன்ட்டி உன்னை கிஸ் பண்ண கூடாதா..? ஏன்..?" நான் புன்னகையுடன் கேட்க,

"நீங்க என் எனிமி..!!" என்றாள் அவள். எனக்கு பட்டென முகம் சுருங்கிப் போனது.

"எனிமியா..?"

"எஸ்..!! நீங்க மட்டும் வரலைன்னா.. அசோக் அங்கிள் என்னத்தான் மேரேஜ் பண்ணிருப்பாரு.. உங்களால என் லைஃபே ஸ்பாயில் ஆயிடுச்சு..!!"

அவள் முகத்தை சீரியஸாக வைத்துக் கொண்டு சொல்ல, என்னால் சிரிப்பை அடக்க முடியவில்லை. சத்தம் வெளியே வந்து விடக்கூடாது என, கையால் வாயைப் பொத்திக் கொண்டு சிரித்தேன். குலுங்கி குலுங்கி..!! எனது சிரிப்பு அந்த சோனுக்குட்டிக்கு மேலும் கடுப்பை வரவழைத்திருக்க வேண்டும். மேலும் முறைத்தாள். நான் கஷ்டப்பட்டு சிரிப்பை அடக்கிக் கொண்டு கேட்டேன்.

"அசோக் அங்கிளை மேரேஜ் பண்ணிக்கனுமா உனக்கு..?"

"எஸ்..!! ஐ லவ் ஹிம்..!!"

"ஹ்ஹ்ஹா.. யாரு இதுலாம் உனக்கு சொல்லிக் கொடுத்தா..?"

"அசோக் அங்கிள்தான்.. அவரும் என்னை லவ் பண்றாரு..!!" 

அவள் சொல்லிக்கொண்டு இருக்கும்போதே, என் பின்னால் இருந்து அசோக் கத்துவது கேட்டது.

"ஹாய் பொண்டாட்டி..!!!!!!!!!!!!" 

நான் திரும்பி அவரை நம்ப முடியாமல் பார்த்து புன்னகைத்தேன். 'என்ன இது..? வெளியே வந்ததும் வராததுமாக.. என்னை குஷி மூடில் அழைக்கிறார்..?' நான் ஆச்சரியப்பட்டுக் கொண்டிருக்கும்போதே, 

"ஹாய் புருஷா..!!!!!!!!!!!"

என்று இந்த குட்டிப்பெண் அவரை நோக்கி ஓடிச்சென்றாள். அவர் அவளை அப்படியே அள்ளிக் கொள்ள, அவள் அவருடைய கழுத்தை கட்டிக்கொண்டு அவருடைய கன்னத்தில் மாறி மாறி 'இச்.. இச்.. இச்.. இச்..' என முத்தம் கொடுக்க ஆரம்பித்தாள். நான் காதில் புகை வர அவர்கள் இருவரையும் முறைத்தேன். அவர்கள் என்னை கண்டுகொள்ளவே இல்லை.

"அச்சோ.. கிஸ் பண்ணிட்டனே..? நான் உன் கூட டூ..!!" என்றாள் சோனு.

"ஏண்டா செல்லம்..?"

"நீ என்னை விட்டுட்டு.. இந்த ஆண்ட்டியை மேரேஜ் பண்ணிக்கிட்டேல..? போ.. உன் கூட டூ..!!"

"நீ குட்டிப்பொண்ணுல..? அங்கிள் எப்படி உன்னை மேரேஜ் பண்ணிக்கிறது..? நீ பெரியவ ஆனதும்.. அங்கிள் இந்த ஆண்ட்டியை டைவர்ஸ் பண்ணிட்டு.. உன்னை மேரேஜ் பண்ணிக்கிறேன்..!! ஓகேவா..?" அவர் அறிவில்லாமல் கேட்க, அந்த சோனுவின் முகத்திலோ அப்படி ஒரு ஆனந்தம்...!!

"ஓகேடா புருஷா.. ஐ லவ் யூ..!!"

என்றவள், மீண்டும் மாறி மாறி அவருடைய கன்னங்களை ஈரமாக்க ஆரம்பித்தாள். எனக்கு உள்ளுக்குள் ஏதோ பொசுங்குவது மாதிரி இருந்தது. ஆனால் சில விநாடிகள்தான் அந்த மாதிரி ஒரு உணர்வு நீடித்தது. 'அவள் குட்டிப்பெண்.. அவர் அந்தக் குழந்தையின் முகத்தில் சிரிப்பை வரவழைக்க அப்படி விளையாட்டுத்தனமாய் பேசுகிறார்.. அவர் சொல்வது மாதிரி எல்லாம் நடக்க வாய்ப்பே இல்லை..' என்று என் மூளை எனக்கு உணர்த்தியதும், உடனடியாய் சகஜமானேன். ஆனால்.. ‘நேற்றுதான் எனக்கு அவர் கணவர் ஆனார். அதற்குள்ளாகவே என் மனதுக்குள் அவர் மீது எனக்கு இவ்வளவு உரிமை உணர்வு வர வாய்ப்பு இருக்கிறதா..?’ என்ற ஒரு எண்ணமும் என் மனதுக்குள் ஓடி அடங்கியது.

"ஏய்.. என்னாச்சு..? பசிக்கலையா உனக்கு..? வா.. சாப்பிட போலாம்.."

என்று சகஜமாக கேட்டவாறு அசோக் என் தோளில் கை போட்டு அழைக்க, நானும் இயல்பு நிலைக்கு திரும்பி அவருடன் நடக்க ஆரம்பித்தேன். ஹாலில் அனைவரும் சாப்பிடுவதற்கு தயாராக இருந்தார்கள். அசோக்குடைய குடும்பத்தினர், சில உறவினர்கள், என் அம்மா, அப்பா, மாமா.. அனைவரும்..!! என் தம்பி நேற்று திருமணம் முடிந்ததுமே கிளம்பி விட்டான். எஞ்சினியரிங் படிக்கிறான் அவன். கல்லூரியில் ஒரு நாள்தான் அவனுக்கு விடுப்பு கிடைத்தது.

செங்கல்பட்டுதான் எங்களுக்கு சொந்த ஊர். என் கணவர் அசோக்கிற்கு மதுரை. அவர் வேலை பார்ப்பது சென்னையில்..!! மேட்ரிமோனி வெப்சைட் மூலமாகத்தான் இந்த திருமணம் அமைந்தது. எங்கள் குடும்ப வழக்கத்தின்படி பெண்ணின் வீட்டில்தான் திருமணம் நடக்கும். ஆனால் எங்களுக்கு நிறைய சொந்த பந்தங்கள் இல்லாத காரணத்தினாலும், அசோக்கிற்கு இருக்கும் எக்கச்சக்க சொந்த பந்தங்கள் எல்லாம் மதுரையை சுற்றியே இருப்பதாலும், திருமணம் மதுரையில்தான் நடந்தது. இன்று இரவு செங்கல்பட்டு செல்வதாக திட்டம்.

சாப்பிட்டு முடித்த பிறகு, எல்லோரும் வேனில் கோயிலுக்கு கிளம்பினோம். எனது புகுந்த வீட்டின் குல தெய்வ கோயில். மதுரையிலிருந்து 15 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் ஒரு கிராமத்தில் இருந்தது. பின்பு மாலை மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சென்று, புதுமணத் தம்பதி இருவரும் ஆசி பெற்றோம். இரவு அதே வேனில் செங்கல் பட்டு பயணம்..!! அடுத்தநாள் மாலை.. அங்கு ரிஷப்ஷன்..!!

செங்கல்பட்டில் இரண்டு நாட்கள் இருந்தோம். பின்பு மீண்டும் மதுரை வந்து ஒருவாரம் தங்கியிருந்தோம். அந்த பத்து நாட்களில் நிறைய உறவினர்கள் வீட்டிற்கு சென்றோம். பெரும்பாலும் என் கணவருடைய உறவினர்கள். விருந்து என்ற பெயரில் எல்லோரும் எங்கள் வயிறின் கொள்ளளவு, தாங்கும் திறன், ஜீரண சக்தி எல்லாம் டெஸ்ட் செய்தார்கள். இந்த விருந்து என்ற விஷயத்தை எந்த புண்ணியவான் கண்டு பிடித்தானோ என நாங்கள் இருவரும் விழிகள் பிதுங்கும் அளவிற்கு..!!



பயணம், அலைச்சல், களைப்பு.. எல்லாம் ஒருபக்கம் இருந்தாலும், ஒரு நொடி கூட எனக்கு சலிக்கவில்லை. என் கணவரின் அருகிலேயே இருந்ததுதான் காரணம்..!! ஒவ்வொரு கணமும் புதிது புதிதாய் அவரைப் பற்றி எதையாவது தெரிந்து கொள்ள முடிந்தது. எது பிடிக்கும்.. எது பிடிக்காது.. எதற்கு கோபம் வரும்.. எதற்கு சிரிப்பார்.. எல்லாம் என் மனதுக்குள் ஏற்றிக் கொள்ள முடிந்தது. அதே மாதிரி அவரும் என் ரசனைகளை தெரிந்து கொள்வதில் ஆர்வமாயிருந்தார். நிறைய விஷயங்களில் இருவருக்கும் ஒத்த ரசனைகள் என்று சொல்ல முடியாது. ஆனால்.. ஒருவர் அடுத்தவரை பற்றி அறிந்து கொள்ள.. அந்த பத்து நாட்கள் மிக உதவியாக இருந்தன. அடுத்து நாங்கள் வாழப் போகும் வாழ்க்கைக்கு அஸ்திவாரம் போட உதவிய நாட்கள்..!!



No comments:

Post a Comment