Thursday, March 19, 2015

எல்லாமே என் மான்சி - அத்தியாயம் - 8

சத்யன் குளித்துவிட்டு வந்தபோது மான்சி அதே டவலோடு கட்டிலில் தலைகவிழ்ந்து உட்கார்ந்திருந்தாள்... சத்யன் வேகமாக அவளருகே வந்து

“ ஓ ஸாரி மான்சி உனக்கு மொதல்லயே டிரஸ் எடுத்துவைக்க மறந்துட்டேன்... ஒரே ஒரு நிமிஷம் வெயிட் பண்ணு” என்று அவள் கன்னத்தை தடவிவிட்டு தனது அறைக்கு ஓடினான் சத்யன்

தன்னுடைய மற்றொரு லுங்கியும் ஒது வெள்ளைநிற குர்தா டாப்ஸ்ஸும் எடுத்து வந்து மான்சியிடம் நீட்டினான்

அதை கையில் வாங்கிய மான்சி ... லுங்கியை பிரித்து தலைவழியாக மாட்டி வயிற்றில் முடிந்துக்கொண்டு... குர்தாவை பிரித்து பார்த்துவிட்டு அதை அவனிடமே நிட்டினாள்

“ என்ன மான்சி இது நல்லாத்தானே இருக்கு” என்று சத்யன் கேட்க
மான்சி அவனை ஏறெடுத்துப் பார்த்து “இதைப் போய் எப்படி போட்டுக்க முடியும்... வேற ஏதாவது இருந்தா குடுங்க” என்று மான்சி கூற



“ ஏன் மான்சி இதை போட்டுகிட்ட என்ன... இது புதுசுதான்” என சத்யன் கேட்க
மான்சி பதில் சொல்லாமல் அவனை முறைக்க... சத்யனுக்கு அவள் ஏன் முறைக்கிறாள் என்று புரிந்துவிட்டது... அவள் உள்ளாடை எதுவும் போடாததால் இந்த மெல்லிய வெள்ளைநிற குர்தாவை அவள் அணிந்தால் அவ்வளவுதான்....

முகத்தில் சிரிப்புடன் கண்மூடி கற்பனை செய்வதுபோல நடித்து “ ம்ம் இதை போட்டா எப்படி இருக்கும்” என்று தன் உதட்டை விரலால் தட்டிக்கொண்டே சத்யன் குறும்புத்தனமாக சிந்திக்க

“ இப்போ போய் வேற எடுத்துட்டு வர்றீங்களா இல்லையா” என மான்சி கோபமாக கேட்க

“ சரிசரி ஏன் கோபப்படுற... போய் வேற எடுத்துட்டு வர்றேன்” என்று திரும்பிய சத்யன் மறுபடியும் அவளருகே வந்தான்

அவள் முகத்தை தன் இருகரங்களில் தாங்கி “ மான்சி இப்போதான் நீ கோபப்பட்டு பார்கிறேன் .. இதுகூட அழகாத்தான் இருக்கு... ஆனா நீ சிரிச்சு நான் பார்த்ததேயில்லை மான்சி” என்று சத்யன் ஏக்கமாக கூற

மான்சி எதுவும் சொல்லாமல் மவுனமாக இருக்க.... சத்யன் தன் கையில் இருந்த அவள் முகத்தை விட்டுவிட்டு “ இப்படியே மவுனமா இருந்தே என்னை கொல்ற மான்சி” என்று வருத்தமாக கூறிவிட்டு அங்கிருந்து நகர்ந்தான்

அவன் அறைக்கு போய் இவன் வேறு உடை உடுத்திக்கொண்டு அவளுக்கு மறுபடியும் ஒரு டீசர்ட்யே எடுத்துவந்து அவளிடம் கொடுத்துவிட்டு ...

மறுபடியும் கிச்சனுக்கு ஓடி அவளுக்கும் இவனுக்கும் காபி கலந்து எடுத்துவந்து டேபிளில் வைத்துவிட்டு அவளை கூப்பிட்டான்

மான்சி இவன் கொடுத்த டீசர்டை மாட்டிக்கொண்டு வர .... நேற்று போல் அல்லாமல் இன்று சத்யனின் பார்வையில் வித்தியாசம் இருந்தது
அவளின் குலுங்கம் மார்கனிகளை பட்டும்படாமல் பார்த்து ரசித்த சத்யன் ...

அவளுக்கு ஒரு டம்ளரில் காபி ஊற்றி அவளிடம் நீட்டி “நான் போட்டது குடிச்சுட்டு எப்படி இருக்குன்னு சொல்லு மான்சி” என்று புன்னகையுடன் சொல்ல
மான்சி சிறு மலர்ச்சியுடன் வாங்கிக்கொண்டு ஒரு வாய் குடித்துவிட்டு “ம் நல்லாதான் இருக்கு” என்றாள்

உடனே சத்யன் தனது சட்டை காலரை தூக்கிவிட்டு “ ம்ம் மேடத்துகிட்ட மொதல்ல கிடச்ச பாராட்டு ... இனிமே அடிக்கடி இதுபோல பாராட்டு வாங்க முயற்சி பண்றேன் மேடம்” என்று கிண்டல் கூறிவிட்டு

“ நீ இங்கயே ரூம்ல படுத்துக்கோ நான் வெளிப்பக்கமா பூட்டிக்கிட்டு ஹோட்டல் போய் நமக்கு ஏதாவது டிபன் வாங்கிகிட்டு வர்றேன் ... இப்பவே மணி பத்தாச்சு என்ன இருக்கும்னு தெரியலை நான் சீக்கிரமா போய்ட்டு வந்திர்றேன் ... உனக்கு ரொம்ப பசிச்சா கிச்சன்ல பிரட் ஜாம் இருக்கு எடுத்து சாப்பிடு” என்று கூறிவிட்டு சத்யன் அவசரமாக வெளியே போக

“ ஒரு நிமிஷம் இருங்க “ என்ற மான்சியின் குரல் அவனை தடுத்தது ... சத்யன் நின்று என்ன என்பது போல் பார்க்க 

“ நீங்க இன்னிக்கு ஆபிஸ் போகலையா” என மான்சி கேட்க

“ இல்ல மான்சி காலையில தூங்கி எழுந்ததும் முதல் வேலையா என் பிரண்ட் கிட்ட இன்னிக்கு ஆபிஸ் வரமுடியாதுன்னு சொல்லிட்டேன்” என்றவன் மறுபடியும் உள்ளே வந்து அவளை இழுத்து அணைத்து

“ நான் ஆபிஸ் போய்ட்டா இந்த பயந்தாங்கொள்ளி தேவதையை யார் பார்த்துக்குவாங்க ம்” என்றவன் குனிந்து அவள் நெற்றியில் முத்தமிட்டு “ ம்ஹும் இப்படியே இன்னிக்கு பூராவும் உன்னை கொஞ்சிகிட்டே இருக்கலாமான்னு தான் இருக்கு ஆனா வயிறுன்னு ஒன்னு இருக்கே” என்று கூறி அவளைவிட்டு விலகி வேகமாக வெளியே ஓடி கதவை வெளிப்புறமாக பூட்டிக்கொண்டு போனான்

சிறிதுநேரத்திலேயே சத்யன் வாங்கி வந்த காலை உணவை இருவரும் சாப்பிட்டனர் ... மான்சி அவன் உணவு வாங்க போகும்போது வாங்கி வந்திருந்த நைட்டியை போட்டுக்கொண்டாள்

சத்யன் அவளுக்கு மாத்திரைகளையும் தண்ணீரையும் கொடுக்க மான்சி அதை விழுங்கிவிட்டு தனக்கு தூக்கம் வருவதாக போய் படுத்துக்கொண்டாள்

சத்யன் சரி அவள் இரவெல்லாம் சரியாக தூங்கவில்லை இப்போதாவது நன்றாக தூங்கட்டும் என்று நினைத்து ஏஸியை ஆன் செய்து அவள்மீது பெட்சீட்டை போர்த்திவிட்டு ... குனிந்து நெற்றியில் முத்தமிட்டு “நைட்டே சரியா தூங்கலை இப்போ நல்லா தூங்கு” என்று அன்போடு கூற

“ அப்போ நீங்களும்தான் நைட் தூங்கலை” என மான்சி கூற

“ ம்ம் நீ இப்படி கேட்கும் போது இதே பெட்சீட்க்குள்ள புகுந்து உன்னை அணைச்சுகிட்டு தூங்கனும்னு ஆசையாத்தான் இருக்கு ... ஆனா இன்னும் கொஞ்சநேரத்தில் வேலைக்காரம்மாவை வரச்சொல்லி இருக்கேன்...

'"மதியத்துக்கு ஏதாவது வீட்லயே சாப்பாடு செய்யச்சொல்லனும்... அதனால நீ மட்டும் தூங்கு மான்சி” என்ற சத்யன் மறுபடியும் குனிந்து இந்தமுறை அவள் உதட்டில் சத்தமாக முத்தம் வைக்க மான்சியின் உடல் சிலிர்த்து அடங்கியதை சத்யனால் நன்றாக உணரமுடிந்தது

அதன்பிறகு எல்லாமே சரியாகத்தான் நடந்தது....பரணீதரனின் போன் வரும்வரை...

சரியாக மணி இரண்டுக்கு மான்சியை எழுப்பிய சத்யன் ... மாலை உணவை எடுத்துவந்து டேபிளில் வைத்தான் .... இருவரும் சாப்பிட்டு முடித்துவிட்டு ... சிறிதுநேரம் டிவியை பார்த்து கொண்டிருந்தனர்

ஆனால் சத்யன் டிவியை பார்க்கவில்லை மான்சியையே வைத்த கண் எடுக்காமல் பார்த்துக்கொண்டே எழுந்து அவள் அமர்ந்திருந்த சோபாவில் அவள் காலடியில் மண்டியிட்டு அமர்ந்தான்

மான்சி டிவி பார்பதைவிட்டு கலக்கத்துடன் குனிந்து அவனை பார்க்க ... சத்யன் அவள் பாதங்களை எடுத்து தன் மடிமீது வைத்து குனிந்து முத்தமிட... மான்சி வெடுக்கென காலை உதற முயற்சிக்க

“சும்மா முத்தம் மட்டும்தான் மான்சி ப்ளீஸ்” என்ற சத்யன் தனது கெஞ்சும் பார்வையால் அவளை செயலிக்கச் செய்துவிட்டு ... மறுபடியும் குனிந்து முத்தமிட்டான்

இப்போது பாதத்துக்கு மேலே சற்று நைட்டியை உயர்த்தி அங்கே முத்தமிட்டவன் ... நைட்டியை இன்னும் சுருட்டி அவள் முழங்காலுக்கு மேலே ஏற்றிவிட்டு.. அவளின் வெற்று முழங்கால் மீது தனது முகத்தை வைத்துகொண்டு அமைதியாக இருக்க

மான்சி விரல்கள் முதன்முறையாக சத்யனின் தலைமுடியை கோதிவிட்டன... சத்யன் முகம் முழுக்க எல்லையில்லாத சந்தோஷத்துடன் அவளை நிமிர்ந்து பார்த்துவிட்டு மறுபடியும் அவள் முழங்கால் மீது படுத்துக்கொண்டான்

மான்சி அவன் தலைமுடி தன் விரல்களால் பற்றி அவன் முகத்தை உயர்த்தி அவன் கண்களை பார்த்துக்கொண்டே அவனின் தடித்த உதடுகளை நெருங்கினாள்
சத்யனின் சந்தோஷத்தை சொல்ல வார்த்தைகள் இல்லை .. அவள் முத்தமிட வசதியாக தனது உதடுகளை பிளந்துகொண்டான்

அப்போது அபாயச்சங்கு போல சத்யனின் மொபைல் அடிக்க மான்சி திடுக்கிட்டு போய் அவனை உதறிவிட்டு எழுந்தாள்

சத்யனும் வேறுவழியின்றி எரிச்சலுடன் எழுந்து போனில் யாரென்று பார்க்க பரணிதான் அழைத்தார் ... சத்யன் சட்டென ஆன் செய்து காதில் வைக்க

“ ஹலோ சத்யனா நான் பரணி பேசறேன்” என்றது எதிர்முனை

“ சொல்லுங்க அங்கிள் நான் சத்யன் தான்... நீங்க எப்படியிருக்கீங்க சவி எப்படியிருக்கா” என சத்யன் கேட்க

“ ம் நாங்க எல்லாரும் நல்லாருக்கோம் சத்யன் நீங்க எப்படியிருக்கீங்க” என்று பரணி பதிலுக்கு கேட்க

“ ம் ஐ ஆம் ஓகே அங்கிள்.... சொல்லுங்க அங்கிள் ” என சத்யன் கூற

“ சத்யன் நைட்ல இருந்து மான்சியோட செல்லுக்கு போன் பண்ணா அவ எடுக்கலை... என்னாச்சுன்னு தெரியலை அதான் உங்ககிட்ட கேட்கலாம்னு போன் பண்ணேன்”

என்று பரணி கூறியதும் என்ன சொல்வது என்று புரியாமல் தவித்த சத்யன் மான்சியை பார்க்க அவள் கண்கள் கலங்கிப் போய் அவனை பார்த்துக்கொண்டிரந்தாள்

அவளை அமைதியாக இருக்கும்படி ஜாடையாக கூறிவிட்டு “அங்கிள் நேத்து நைட் மான்சி ஆபிஸ்ல இருந்து வரும்போது அவங்க ஹேன்ட் பேக்கை யாரோ பிக்பாக்கெட்காரன் அடிச்சுட்டான் அங்கிள் அதிலே அவங்க செல் மிஸ்சாயிடுச்சு.. அதனாலதான் உங்க போன் காலை பிக்கப் பண்ணமுடியாம போயிருக்கும்" என்று சத்யன் சொல்ல

" அதுபோனப் போகட்டும் சத்யன்... ஆனா மான்சிக்கு ஒன்னும் பிரச்சனை இல்லையே" என்று பரணி கேட்டதும் சிறிது தடுமாறிய சத்யன் பிறகு சுதாரித்து

" அதெல்லாம் ஒரு பிரச்சனையும் இல்லை அங்கிள் அவங்க நல்லாத்தான் இருக்காங்க ... இன்னும் பேங்க்ல இருந்து வரலை ... வந்ததும் உங்களுக்கு கால் பண்ணச்சொல்லி சொல்றேன்" என சத்யன் நிதனமாக கூற

" வேனாம் சத்யன் அதான் நாங்க நாளைக்கு வரப்போறோமே அப்புறமா எதுக்கு போன் பண்ணனும் ... அதான் நீங்க இருக்கீங்களே பத்திரமா பார்த்துக்கங்க... நீங்க இருக்கிற தைரியத்தில் தான் நான் அவளை தனியா விட்டுட்டு வந்தேன் .. சரி சத்யன் நான் கட்பண்றேன்" என கூறிவிட்டு பரணி இனைப்பை துண்டிக்க

சத்யனுக்கு அவர் கடைசியாக சொன்னவார்த்தை அவன் இதயத்தை உலுக்குவது போல் இருந்தது ... மெதுவாக திரும்பி மான்சியை பார்க்க அவள் கைகளால் முகத்தை முடிக்கொண்டு குலுங்கி அழுதுகொண்டிருந்தாள

சத்யன் அவளை நெருங்கி " ப்ளீஸ் மான்சி அழாதே உன் மனசு எனக்கு புரியுது... இது நாமே பார்த்து வச்சுகிட்டது இல்லை நமக்கு மேல ஒருத்தன் இருக்கான் அவன் இப்படித்தான் நடக்கனும்னு நம்ம தலையில எழுதிட்டான் மான்சி ... அதன்படிதான் எல்லாமே நடக்கும் ... ப்ளீஸ் அழாதே மான்சி" என்று சத்யன் சொல்லிக்கொண்டே அவளை நெருங்கி அணைக்க

மான்சி அவனை உதறிவிட்டு அறைக்குள் ஓடி கதவை தாழ்போட்டு கொண்டாள் .. சத்யன் சிறிதுநேரம் மூடியிருந்த கதவையே வெறித்தபடி நின்றுவிட்டு பிறகு சோபாவில் வந்து விழுந்தான்

அவனுக்கும் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தது ... தன்னை நம்பிய மனிதருக்கு தான் நமபிக்கைத் துரோகம் செய்துவிட்டதை முழுமையாக உணர்ந்தான்

இந்த பிரச்சனையை எப்படி தீர்ப்பது என்று சத்யனுக்கு புரியவில்லை... மான்சி இரவு உணவுக்கு கூட வெளியே வரவில்லை ..

சத்யன் வெகுநேரம் கதவை தட்டிய பிறகு .. வந்து கதவை திறந்த மான்சி தனக்கு பசிக்கவில்லை என்று சொல்லிவிட்டு கதவை மூடிக்கொண்டாள்... சத்யனும் சாப்பிடாமலே போய் படுத்துக்கொண்டான்
..



இரவு வெகுநேரம் வரை விழித்திருந்த சத்யன் காலையில் விடிந்த பின்னும் உறங்கினான் ... முதல் நாள் போலவே இன்றும் பால்காரன் வந்து பெல் அடிக்கவும் தான் எழுந்தான்

கதவை திறந்து பால் பாக்கெட்டை வாங்கி கிச்சனில் வைத்துவிட்டு மான்சி படுத்திருந்த அறைக்கு வந்து பார்த்தான்

அறைக்கதவு திறந்தே இருக்க சத்யன் உள்ளே போனான் ... மான்சி அறையின் ஜன்னல் கம்பியை பற்றியபடி வெளியே பார்த்துக்கொண்டிருந்தாள் நேற்று கழட்டி போட்ட அவளுடைய புடவையை கட்டியிருந்தாள்

சத்யன் அவள் பின்னால் நெருங்கி மான்சி என்று அழைக்க..... மான்சி உடனே திரும்பிபார்த்தாள்.... அவள் கண்கள் கலங்கியிருந்தன இவனை பார்த்ததும் தலையை குனிந்து கொண்டாள்

சத்யனுக்கு உள்ளுக்குள்ளே குற்ற உணர்வு கொன்றது..... “ மான்சி நீ என்னை வெறுத்துட்டயா... நான் யோசிக்காம செய்த தப்பு உனக்கு இவ்வளவு பெரிய கஷ்டத்தை கொடுக்கும்னு நெனைக்கலை மான்சி.... ஸாரி மான்சி” என்று சத்யன் உன்மையான வருத்தத்துடன் சொல்ல

“நீங்க ஒன்னும் என்னை வற்புறுத்தி எதுவும் பண்ணலையே.... நானும் தானே” எனறு சொல்ல வந்ததை முடிக்காமல் மான்சி கண்கலங்க

சத்யன் சட்டென அவளை நெருங்கி அவள் முகத்தை தன் கைகளில் ஏந்தி “ மான்சி நேத்து நமக்குள்ள நடந்ததை அசிங்கம்ன்னு மட்டும் நினைக்காதே மான்சி.... நான் அதை ஒரு புனிதமா நெனைக்கிறேன்... நான் என்னோட முழுமையான காதலோடதான் உன்னை எடுத்துக்கிட்டேன் மான்சி.... இதுல அசிங்கப்பட்டு தலைகுனிய எதுவுமே இல்லை."..

"என்ன உன் அப்பா என்னை ரொம்ப நம்பினார்... நான் அந்த நம்பிக்கையை உடைச்சிட்டேன் மான்சி ... அதுமட்டும்தான் எனக்கு வருத்தமா இருக்கு.... ஆனா இதைப்பத்தி அங்கிள்கிட்ட பேசி நான் முடிவெடுக்கறேன் மான்சி என்னை நம்பு ” என்று சத்யன் அவள் கண்களையே பார்த்துக்கொண்டு உருக்கமாக பேசினான்

அவன் கைகளில் இருந்து விலகிய மான்சி அவனை பார்த்து கையெடுத்துக் கும்பிட்டு “தயவுசெஞ்சு அதை மட்டும் பண்ணிராதீங்க சத்யன் .... எங்கப்பாவை பத்தி உங்களுக்கு தெரியது.... அவர் ரொம்ப கண்டிப்பானவர்... இப்படி ஒரு நம்பிக்கைத் துரோகத்தை அவர் தாங்கமாட்டார்... அவரை பார்த்து நேரடியா பேசறவங்களை மன்னிச்சுடுவார் ஆனா முதுகில் குத்துரவங்களை மன்னிக்கவே மாட்டார்” என மான்சி சொல்லிகொண்டு இருக்கும்போதே அவளை கைநீட்டி தடுத்த சத்யன்

“ மான்சி இதுல முதுகுல குத்துறதை பத்தி பேச எதுவுமே இல்லை... உங்களோட பொண்ணை நான் உயிரா நேசிக்கிறேன் ... அதனால எனக்கு உங்க பொண்ணை கல்யாணம் பண்ணி குடுங்கன்னு நேருக்குநேரா கேட்க போறேன் அவ்வளவுதான் இதுல நீ பயப்படுறதுக்கு ஒன்னுமே இல்லை மான்சி” என்று சத்யன் உறுதியுடன் கூற

“அதைதான் நீங்க எப்படி கேட்ப்பீங்க... நமக்குள்ள நேத்து நடந்ததை சொல்லி கேட்பீங்களா... அப்படி கேட்க உங்களுக்கு தைரியம் இருக்கா”...என்று மான்சி அவனை கேட்க

சத்யன் சிறிதுநேரம் அவளுக்கு என்ன பதில் சொல்வது என்று தவித்து பிறகு “ அதைப்பத்தி ஏன் சொல்லனும் மான்சி .... அதை மறைச்சுட்டு அவர்கிட்ட உன்னை கேட்கிறேன்” என்று சத்யன் பதில் சொல்ல

அவனை ஏளனமாக பார்த்த மான்சி “ ம் இப்பத்தான் புனிதம் அது இதுன்னு சொன்னீங்க... அதையே வெளிய சொல்லமுடியாத அளவுக்கு தவிக்கிறீங்க” என நக்கலாக கேட்டதும்

“அப்போ என்னை என்னதான் செய்ய சொல்ற மான்சி” என்று சத்யன் ஆத்திரமாய் கேட்க

“ எதுவுமே செய்யவேண்டாம்,.. எதுவுமே சொல்லவேண்டாம்... நீங்க நீங்கபாட்டுக்கு இருங்க... நான் என் வேலையை பார்த்துக்கிட்டு இருக்கேன்” என்று மான்சி உறுதியாக கூறிவிட்டு ஜன்னல் பக்கமாக திரும்பிக்கொள்ள

சத்யனுக்கு கோபம் புசுபுசுவென்று வந்தது...அவள் தோளை பற்றி பின்புறமாகவே பட்டென இழுத்து தன் புறம் திருப்பியவன் “ ஏய் என்னை என்ன பைத்தியக்காரன்னு நினைச்சியா... உன்னைவிட்டுட்டு ஒருநாள்கூட இனிமேல் இருக்க முடியாதுன்னு சொல்றேன்... நீ என்னடான்னா உன் வேலையை பார்த்துக்கிட்டு போன்னு சொல்றே... நான் விட்டுவிட தயாரில்லை மான்சி நீ எனக்கு வேனும்” என்று சத்யன் அவளை இழுத்தணைக்க 

அவனிடமிருந்து திமிறி விலகிய மான்சி “ எதுக்கு நான் வேனும் இது மாதிரி அணைச்சுக்க தானே நைட் மாதிரி இடைவிடாத உறவுக்குத் தானே நான் வேனும்” என்று மான்சி உக்கிரமாக பேச

அவள் பேச்சில் சத்யன் அதிர்ந்து போனான் “ என்ன மான்சி இப்படி பேசுற நான் அந்த அர்த்தத்தில் சொல்லலை... நான் உன்கூட கடைசிவரைக்கும் வாழனும்னு ஆசை படுறேன்”என சத்யன் தன் தரப்பு நியாயத்தை சொல்ல ....

“ எனக்கு அதில் விருப்பமில்லை... உங்களுக்கு என்ன குறை என்னைவிட நல்லப் பொண்ணா அழகானவளா கிடைப்பா அவளை கல்யாணம் பண்ணிகிட்டு சந்தோஷமா இருங்க.... இந்த விதவை உங்களுக்கு வேண்டாம்"...

" உங்களுடைய தேவையும் என்னோட தவிப்பும் நேத்தே தீர்ந்துபோச்சு... உங்களுக்கு என் அழகு மேல இருந்த மோகம் தீர்ந்துபோச்சு.... எனக்கு தனிமையோட தவிப்பு தீர்ந்துபோச்சு.... அப்புறமா ஏன் இந்த கல்யாண வேசம்"....

" மூன்று வருஷமா பொத்தி பாதுகாத்து வச்சதையே நேத்து இழந்துட்டேன்... இதுக்குமேல எது இருந்தா என்ன இல்லாட்டின்னா என்ன... இதிலெல்லாம் எனக்கு சுத்தமா இஷ்டமில்லை ” என்று மான்சி ஒவ்வொரு வார்த்தையையும் சவுக்கடி போல் வந்து விழ... சத்யன் துடித்துப் போனான்


" அப்படின்னா உன் உடம்புக்கு ஆசைபட்டுதான் நான் உன்னை கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொல்றியா.... நேத்து நமக்குள்ள நடந்ததும் வெறும் உடல் இச்சைதான்னு சொல்றியா.... உன்மேல் எனக்கு இருக்கிற காதல் வெறும் சந்தர்ப்பவாத காதல்னு சொல்றியா.... உன்னோட அழக்காகத்தான் நான் உன்கூட செக்ஸ் பண்ணேன்னு சொல்றியா ” என்று சத்யன் அடுக்கிக்கொண்டே போக

“ ஆமாம் அதிலென்ன சந்தேகம் நான் அழகா இல்லைன்னா,.. ஒரு விதவையான என்னை நீங்க கல்யாணம் பண்ணிப்பீங்களா,... இல்ல என்மேல காதல்தான் வந்திருக்குமா"...

" இதோபாருங்க சத்யன் நான் ஏற்கனவே என்னோட கல்யாண வாழ்க்கையில் ரொம்பவே கஷ்டப்பட்டுருக்கேன்... மறுபடியும் இந்த மாதிரி பலமான அடித்தளம் இல்லாத செக்ஸை மட்டுமே அடிப்படையாக கொண்ட இந்த வாழ்க்கையை வாழ நான் தயாரில்லை"…..

" சத்யன் நாம ரெண்டு பேருக்குமே உடல் தேவைகள் இருந்தது அது தீர்ந்து போச்சு ... இனிமேல் அதைப்பத்தி பேசவேண்டாம்... நான் உங்களை எந்தவிதத்திலும் தவறா நினைக்கமாட்டேன் சத்யன் நேத்து நடந்த எல்லாமே எனக்கு பிடிச்சு என்னோட சுயவிருப்பத்துடன் தான் நடந்தது இதை நான் மறுக்கமாட்டேன் ... ஆனா என்னை விட்டுருங்க சத்யன் ப்ளீஸ்” என்று மான்சி அவனை கையெடுத்து கும்பிட

சத்யன் பேசும் அவள் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்து விட்டு “ மான்சி நீ என்கூட ஒருவார்த்தை பேசமாட்டியான்னு ஒவ்வொரு நாளும் நான் ஏங்குவேன் மான்சி... ஆனா நீ இப்படி பேசுவேன்னு ஒருநாள்கூட நான் நெனைச்சு பார்க்கலை... ஆனா மான்சி நீ என்னை பத்தி நெனைக்கிறதெல்லாம் பொயின்னு நான் நிருபிப்பேன்” என்ற சத்யன் அறையின் வாசலை நோக்கி போய் மறுபடியும் நின்று திரும்பினான்

“ நான் வாட்ச்மேன் கிட்ட டிபன் வாங்கி குடுத்தனுப்புறேன் நீ சாப்பிட்டு இங்கேயே இரு... நான் ஏர்போர்ட் போய் அவங்களையெல்லாம் கூட்டிட்டு வந்திர்றேன்” என்று கூறிவிட்டு அவள் பதிலை எதிர் பார்க்காமல் அறையைவிட்டு வேகமாக வெளியேறினான் 

சத்யன் காதில் மான்சி உள்ளே குமுறி அழும் சத்தம் கேட்டது... ஆனால் அவன் திரும்பி பார்க்காமல் தன் உடைகளை மாற்றிக்கொண்டு வீட்டை விட்டு வெளியேறினான்

சத்யன் மனம் குமுறி கண்ணீர்விட்டது... சுயபச்சாதாபம் அவனை வதைத்தது... நாம் நேற்று இரவு அவசரப்பட்டு அவளுடன் கூடியதால்தான் அவளுக்கு என் காதல் மீது நம்பிக்கையில்லாமல் போய்விட்டது என்று எண்ணி எண்ணி தவித்தான்

பைக்கை சிக்னலில் நிறுத்திவிட்டு கலங்கியிருந்த தன் கண்களை துடைத்துக்கொண்டான்... பக்கத்தில் இருந்தவர்கள் வேடிக்கை பார்க்கிறார்களே என்று அவன் சங்கடப்படவில்லை

அவன் காதுகளில் மான்சியின் வார்த்தைகள் மறுபடியும் மறுபடியும் ஒலித்தது... அப்படின்னா நானும் அவள் உடம்புக்கு ஆசைப்பட்டுதான் அவளை காதலிச்சேனா... அவள் சொல்வதுதான் உன்மையா... என்று சத்யனுக்கு தன் காதல் மீதே சந்தேகம் வரும் அளவுக்கு மான்சியின் வார்த்தைகள் அவன் மனதை குழப்பியது

அவள் இனிமேல் எனக்கு கிடைக்கமாட்டாளா.. நான் என் காதலை அவளுக்கு எப்படி நிருபிப்பது... இந்த இரண்டு நாளும் அவளுடன் வாழ்ந்ததெல்லாம் பொய்யாய்ப் போய்விடுமா

அவள் சொல்வது முற்றிலும் உன்மை ... என் காதலை வெளிப்படையாக சொல்லாமல் ஒரே இரவில் அவள் மனதை மாற்றி உறவுகொண்டது ரொம்ப தப்பு...

என்மீதும் என் காதல் மீதும் உறுதியில்லாத போது அவள் எப்படி என்னை திருமணம் செய்துகொள்ள சம்மதிப்பாள்... ஒரேநாளில் மான்சி தன்னை பயங்கர கோழையாக்கி விட்டதை நன்றாகவே உணர்ந்தான்

சத்யன் எதைஎதையோ யோசித்தபடி போக ஏர்போர்டே வந்துவிட்டது ... உள்ளே போய் காத்திருந்து பரணியும் அவர் மனைவியும் சைந்தவியையும் அழைத்துவந்து ஒரு டாக்ஸியில் ஏற்றிவிட்டு இவன் பைக்கில் அவர்கள் பின்னால் வந்தான்

ஏர்போர்ட்டில் பரணி இவன் முகவாட்டத்தை பார்த்து கேட்ட பல கேள்விகளுக்கும் ... சத்யன் ,.. நேத்து ஆபிஸ்ல நிறைய ஒர்க் அங்கிள் ... நைட்டெல்லாம் கொஞ்சம் தலைவலி வேற அதான் இப்படி இருக்கேன் என்று சொல்லி சமாளித்தான்

இவனை பார்த்ததும் இவனிடம் தாவி ஏறிக்கொண்ட சைந்தவியை பார்த்து சத்யனுக்கு இன்னும் கொஞ்சம் துக்கம் தொண்டையை அடைக்க கண்ணீர் முட்டிக்கொண்டு வந்தது ... எப்படியோ சமாளித்து அவர்களை வீட்டுக்கு கொண்டுவந்து சேர்த்தான் சத்யன் 

சத்யன் அவர்களின் அப்பார்ட்மெண்ட் வந்து பரணியிடம் இருக்கும் சாவியை வாங்கி பரணி வீட்டை திறந்து லக்கேஜ்களை உள்ளே கொண்டுபோய் வைத்தான்

“மான்சி எங்க சத்யன்” என்று பரணி கேட்க

ஒருநிமிடம் தயங்கிய சத்யன் “ அவங்க என் வீட்லதான் இருக்காங்க அங்கிள்... அன்னிக்கு அவங்க ஹேன்ட் பேக் திருடுபோனதில் வீட்டு சாவியும் மாட்டிக்கிச்சு... அதனால ரெண்டு நாளா என் வீட்லதான் இருக்காங்க... நீங்க வந்தது அவங்களுக்கு இன்னும் தெரியலை போல .. நான் போய் சொல்லி கூட்டிட்டு வர்றேன்” என்ற சத்யன்

வாசலை நோக்கி திரும்பிய சத்யன் தயங்கியபடி மறுபடியும் நின்று “ அங்கிள் அன்னிக்கு நடந்த பிரச்சனையில் அந்த பிக்பாக்கெட் உங்க பொண்ணோட கையில கத்தியால கிழிச்சுட்டான்” என்று இவன் சொன்னதும்

பரணியும் காஞ்சனாவும் பதறியபடி ஒரே சமயத்தில் “ அய்யோ என்ன சத்யன் சொல்றீங்க கத்தியால குத்திட்டாங்களா” என்று அதிர்ந்து போய் கேட்க

சத்யன் அவசரமாக “ரொம்ப பலத்த காயமெல்லாம் இல்ல அங்கிள்... வலது உள்ளங்கையில் சின்னதா ஒரு வெட்டு காயம் .. ஆறு தையல் போட்டுருக்கு வேற ஒரு பிரச்சனையும் இல்ல... ஆனா அவங்க ரொம்ப பயந்து போயிருக்காங்க... அதனால நீங்க எதுவும் கேட்காதீங்க அவங்களை நல்லா ரெஷ்ட் எடுக்க விடுங்க... நான் போய் அவங்களை கூட்டிட்டு வர்றேன் அங்கிள் ” என்று கூறிவிட்டு சத்யன் வெளியேறினான்

தன் வீட்டுக்கு போய் மான்சி இருந்த அறையின் கதவை தட்டினான் சத்யன் ... உடனே மான்சி வெளியே வர “ அவங்களையெல்லாம் கூட்டிட்டு வந்திட்டேன்... உன் வீட்ல இருக்காங்க... இந்த ஆக்ஸிடெண்ட் பத்தி எதுவும் சொல்ல வேண்டாம் நான் எல்லாத்தையும் சொல்லிட்டேன்... வா போகலாம்” என்ற சத்யன் முன்னே நடக்க மான்சி அவன் பின்னால் வந்தாள்

கதவருகே போன சத்யன் கதவின் மேல் நின்று சாய்ந்தபடி கண்களில் ஏக்கத்துடன் “அப்போ உன் முடிவில் எந்த மாற்றமும் இல்லையா மான்சி” என்று கேட்க



அவள் எதுவும் பேசாமல் தலைகுனிந்து அமைதியாக நிற்க “ ஆனா மான்சி இதுக்கெல்லாம் ஒருநாளைக்கு நீ ரொம்ப வருத்தப்படுவ...உன் புறக்கணிப்பால என் மனசெல்லாம் ரொம்ப வலிக்குதுடி” என்று சத்யன் கலங்கிய கண்களுடன் துடிக்கும் குரலில் கூற

மான்சி சட்டென நிமிர்ந்து அவனை பார்த்தாள் அவன் கலங்கிய கண்களை பார்த்ததும் அவளுக்கு கண்கலங்கியது... அவள் வேண்டாம் என்பது போல் தலையசைக்க

அவளும் கலங்குவதை பார்த்த சத்யன் அவளை கைநீட்டி இழுத்து தன் நெஞ்சில் சாய்த்துக்கொண்டே “ உன்னால இனிமேல் என்னை விட்டு இருக்கமுடியாது மான்சி இது எனக்கு தெரியும்... ஆனா எதுவோ உன்னை தடுக்குது மான்சி... அதை மறந்து நீ என்னைவந்து சேரும் நாள்வரை நான் காத்திருப்பேன் கண்ணம்மா” என்று கூறியபடி சத்யன் அவளை வன்மையாக இறுக்கி அணைக்க

மான்சி அவனிடமிருந்து திமிற முடியாமல் அடங்கினாள் ... சத்யன் தன் அணைப்பை இலகுவாக்கி அவள் இடுப்பை பிடித்து தன் உயரத்துக்கு தூக்கியவாறே திரும்பி அவளை கதவில் சாத்தி நிறுத்தினான்

மான்சியின் கால்கள் அந்தரத்தில் ஊசலாட...
இமைகள் விழிகளுக்கு குடைபிடிக்க...
கூந்தல் காற்றில் அலைந்து நெற்றியில் வழிய...
நாணத்தில் கன்னங்கள் சிவக்க...
அவளின் பருத்த தனங்கள் விம்மி புடைக்க...
இதழ்கள் ஈரமாகி சத்யனுக்கு அழைப்பு விடுக்க....
அவள் கைகள் இரண்டும் சத்யனின் தோள்களை பற்றியிருக்க

அவளின் இந்த தோற்றம் சத்யனின் மண்டைக்குள் உடணடியாக ஒரு இனக்கலவரத்தை ஏற்படுத்தி உடலுக்கு நெருப்பு வைக்க அவன் உணர்ச்சிகள் சட்டென தீ பிடித்துக்கொண்டது.... கண்களும் உதடுகளும் அவன் கட்டுப்பாட்டை மீறி துடிக்க...

அதற்க்கு மேல் பொறுக்க முடியாத சத்யன் அவளை கதவோடு சேர்த்து நசுக்கியபடி அவள் உதட்டை மூர்க்கமாக கடித்து இழுக்க... அவள் கால்கள் அந்தரத்தில் தாளமிட்டு... அந்த துடிக்கும் உதடுகளின் போராட்டத்துக்கு தனது ஆதரவை தெரிவிக்க


No comments:

Post a Comment