Tuesday, March 10, 2015

மாங்கல்யம் தந்துனானே.. - எபிஸோட் - 4

ஒருபுறம் அவரைப் பற்றி அறிந்து கொள்வது சுகமான விஷயமாக இருக்க, இன்னொரு புறம் அவரது சில்மிஷங்களை சமாளிப்பது சவாலான காரியமாக இருந்தது. பகலில்.. எந்த நேரமும் நான் இருக்கும் இடத்தையே குட்டி போட்ட பூனை மாதிரி சுற்றி சுற்றி வருவார். அடுத்தவர் அறியாமல் கண்களாலேயே காதல் அம்பு விடுவார். காற்றில் முத்தம் அனுப்புவார்..!! வேறு யாரும் பார்த்து விடுவார்களோ என எனக்கோ இதயம் படபடக்கும்.

டைனிங் டேபிளில் அமர்ந்திருக்கும்போது, அவருடைய கட்டை விரல் எனது கணுக்கால் உரசும். கொஞ்சம் அசந்தால் போதும்.. எனது புடவையை மேலே உயர்த்த முயற்சி செய்யும்..!! அத்தை அந்தப்பக்கம் திரும்புகையில், இவருடைய கை விரல்கள் இந்தப்பக்கம் என் இடுப்பு கிள்ளும்..!! இரவிலோ.. இன்னும் தொல்லை..!! என் இளமையை அள்ளி அள்ளி பருகினார், சற்றும் சலிக்காமல்..!! நானும் ஆண்மையின் ஆக்கிரமிப்பில் கிடைக்கும் ஆனந்தத்தை அலுக்காமல் அனுபவித்தேன்.

இந்த பத்து நாட்களில் இன்னொரு விஷயத்தையும் என்னால் தெளிவாக புரிந்து கொள்ள முடிந்தது. அது.. பெண்கள் எல்லோருக்கும் என் கணவரை பிடிக்கிறது என்பதுதான்..!! அவருடைய அக்கா பெண் அந்த சோனு குட்டி முதல்.. அவருடைய எழுபத்தைந்து வயது பாட்டி வரை..!! பக்கத்து வீட்டு மாமி முதல்.. எதிர் வீட்டு கல்லூரிப்பெண் வரை..!! வேலைக்காரி வேணியக்கா முதல், பூ கொண்டு வரும் புனிதா அக்கா வரை..!! அவரிடம் எதோ வசீகரம் இருக்கிறது என்று தோன்றியது.

அது எனக்கு வயிற்றெறிச்சலை கிளப்பி விடவும் தவறவில்லை..!!


புருஷன் அருகில் இல்லாமல், புகுந்த வீட்டில் தனியாக காலம் கழிப்பது எந்தப் பெண்ணுமே விரும்பாதது. எனக்கு அது திருமணம் ஆன பத்தே நாட்களில் அனுபவிக்க கிடைத்தது. சென்னையில் நானும், அசோக்கும் வாழப் போகும் வீடு பல்லாவரத்தில் இருக்கிறது. வாடகை வீடுதான். ஆனால் வீடு இப்போது காலியாக இல்லை. ஏற்கனவே இருக்கும் குடும்பம் அடுத்த வாரம்தான் காலி செய்கிறார்கள். ஆனால் என் கணவருக்கு ஆபீசில் அதுவரை லீவ் கிடைக்கவில்லை. 

எனவே அசோக் சென்னை கிளம்பி சென்று, அந்த ஒரு வாரம் வழக்கம் போல தன் நண்பர்களுடன் தங்கிக் கொள்வது.. நான் மதுரையில் தங்கியிருப்பது என்று முடிவானது.. அவர் கிளம்புவதற்கு முந்தய நாள் இரவு, எனக்கு மனசே சரியில்லை..!! இதயத்தை யாரோ பிசைவது மாதிரி வலித்துக் கொண்டே இருந்தது. என் அம்மா அப்பாவை பிரிந்து, புகுந்த வீடு வந்தபோது இருந்ததற்கு ஒப்பான வலி..!! என் கணவர்தான் என்னை தேற்றினார்.

அன்றிரவு.. ஆட்டமெல்லாம் ஆடிக் களைத்த பிறகு.. நான் அவருடைய அணைப்பில் கோழிக்குஞ்சு மாதிரி அடங்கியிருந்தேன். எங்கள் உடலில் ஒட்டுத்துணி இல்லை. அவரது ஆணுறுப்பு சற்றே சோர்ந்து போய் எனது தொடையில் தவழ்ந்து கொண்டிருந்தது. அவருடைய மார்புக்காம்புகள் எனது மார்புக்காம்பை உரசிக் கொண்டிருந்தன. அவருடைய விரல்கள் எனது கூந்தலுக்குள் நுழைந்து கோலமிட்டன. நான் மெல்லிய குரலில் ஆரம்பித்தேன்.

"எ..என்னங்க.."

"ம்ம்ம்.."

"ஒருவாரத்துல வந்துடுவீங்கல்ல..?"

"கூட ரெண்டு நாள் ஆனா கூட ஆகலாம் பவி.."

"ஏன்ப்பா..?"

"வீடு காலியானதும்.. கிளீன் பண்ணி.. திங்ஸ்லாம் கொண்டு போய் போட்டு.. கொஞ்சம் அரேன்ச் பண்ணனும் பவி.. நீ அந்த வீட்டுக்குள்ள போறப்போ.. அது ஒரு வீடு மாதிரி இருக்கணும்..!!"

"ம்ம்.. எவ்வளவு சீக்கிரம் முடியுமோ.. அவ்வளவு சீக்கிரம் வந்துடுங்க.." 

"ஏண்டா.. நான் இல்லாம.. இங்க தனியா இருக்குறது உனக்கு பிடிக்கலையா..?"

"அ..அப்டி இல்ல.." நான் இழுத்தேன்.

"அப்புறம்..?"

"கொ..கொஞ்சம் பயமா இருக்கு.."

 

"ஹ்ஹ்ஹா.. பயமா.. அப்டி என்ன பயம் உனக்கு..?"

"இருக்காதா..? எல்லாம் புது ஆளுங்க.. அவங்களுக்கு எது புடிக்கும், புடிக்காது.. அவங்கள்ட்ட எப்படி நடந்துக்கணும்.. எதுவுமே எனக்கு தெரியாது.. நீங்க பக்கத்துல இருந்தா கூட பரவால்ல.."

"இங்க பாரு பவி.. எங்க வீட்டுல எல்லாம் நல்லவங்க.. அப்பா, அம்மா, என் தங்கச்சி வீணா..!! என்ன.. பாட்டிதான் கொஞ்சம் எல்லாரையும் கரிச்சு கொட்டிட்டு இருப்பாங்க.. அவங்களை நீ கண்டுக்காத.. மத்தபடி.. உனக்கு இங்க எந்தப் பிரச்னையும் இருக்காது.."

"ம்ம்.."

"புது மருமக அப்படின்னு.. எங்கம்மா உன்னை ஏதும் வேலை ஏவ மாட்டாங்க.. ஆனா.. அதுக்காக நீ சும்மா இருந்திடாத.. அப்பப்போ அவங்களுக்கு கொஞ்சம் ஒத்தாசையா இரு.. காய்கறி கட் பண்ணிக்கொடு.. காஞ்ச துணிலாம் மடிச்சு வை.. ரொம்ப சந்தோஷப்படுவாங்க.."

"ம்ம்.."

"உனக்கு டைம் பாஸ் ஆகணும்னா.. என் தங்கச்சியை புடிச்சுக்கோ.. புக்ஸ், வீடியோஸ், ம்யூசிக்னு நெறைய கலக்ஷன் வச்சிருப்பா.. கேரம், கார்ட்ஸ், செஸ்னு அவகூட ஏதாவது வெளையாடு.. அவ காலேஜ்ல நடக்குற கூத்துலாம் கேளு.. டைம் போறதே தெரியாது..!!"

"ம்ம்.."

"பத்து நாள்.. பத்து செகண்ட் மாதிரி போயிடும் பவி.. சரியா..?"

"ம்ம்.."

அவர் சொன்ன மாதிரி அந்த பத்து நாட்கள், பத்து நொடிகளில் எல்லாம் செல்லவில்லை. பத்து யுகங்களாகவே கழிந்தன. எல்லா யுகமும் முடிந்து, என்னவரின் முகத்தை எப்போது காண்போம் என்றே செலவாயின. தினமும் இரவு ஒரு மணி நேரம் எனது கைபேசியில் காதல் பேசுவார். காமம் வாட்டுகிறது என்பார். அது மட்டுமே எனக்கு ஆறுதலாக இருந்தது. ஆனால் அந்த பத்து நாட்களில் அவருடைய வீட்டினரைப் பற்றி நன்கு தெரிந்து கொள்ள முடிந்தது.

என் மாமனார் காவல்த்துறையில் இருந்து ஓய்வு பெற்றவர். விறைப்பான, முறைப்பான காவலர்களுக்கு மத்தியில் என் மாமனார் ஒரு பரம சாது. அதிர்ந்து பேசக் கூட தெரியாதவர். அத்தையிடம் அடங்கிப் போகும் குணமுடையவர். அவ்வப்போது தன் காவல்த்துறை பணியின் போது ஏற்பட்ட அனுபவங்களை பேச ஆரம்பித்து, அத்தையிடம் வாங்கிக் கட்டிக் கொள்வார்.

என் மாமியார் மிகவும் அன்பான பெண்மணிதான். பிள்ளைகள் மேல் எக்கச்சக்க பாசம். அந்த பாசத்தில் பாதியையாவது தன் பதியின் மீது வைத்திருக்கலாம் என்று எனக்கு தோன்றும். அந்த அளவிற்கு ஒரு பார்வையிலேயோ.. சின்ன முறைப்பிலேயோ.. சில நேரங்களில் வெறும் மவுனத்திலேயோ.. என் மாமனாரை அடக்கி விடுவார். தனது மகனுக்கு நான் நல்ல மனைவியாய் இருப்பேன் என்ற நம்பிக்கை அவருக்கு எப்போதோ ஏற்பட்டிருக்க வேண்டும். அதனால் என் மீது பிரியமாகவே இருப்பார்.

அசோக்கின் அக்கா இரண்டு நாட்களிலேயே தன் புகுந்த வீடு திரும்பியதால், அவரை பற்றி அதிகம் கணிக்க முடியவில்லை. ஆனால்.. பேசிய வரையில் நல்லவிதமாகவே பேசினார். எப்போதுமே சிரித்தமாதிரியான எல்லோருக்கும் பிடிக்கும் முகம் அவருக்கு..!!

அசோக்கின் தங்கை வீணா.. கலகலப்பாக பேசுவாள்.. கல்யாண கனவில் மிதக்கும் கல்லூரிப் பெண்.. 'வசீகரா.. நிபுணா நிபுணா.. ஒன்றா ரெண்டா.. கலாதரா கண்கள் சுகமா..' என ஏதாவது ஒரு பாடலை எந்த நேரமும் அவளுடைய உதடுகள் முணுமுணுத்துக் கொண்டிருக்கும். என் கணவர் சிறு வயதில் செய்த திருட்டுத்தனங்களை எல்லாம் அறிந்த ஒரே ஆள்.

அசோக்கின் பாட்டி.. அவருடைய அப்பாவின் அம்மா.. எந்த நேரமும் யாரையாவது திட்டிக் கொண்டே இருக்க வேண்டும் அவருக்கு. வீட்டில் உள்ளவர்களை திட்டி போரடித்தால், டிவி சீரியலில் வரும் வில்லன்கள் சிக்கிக் கொள்வார்கள். வீட்டில் அவரை திட்டும் ஒரே ஆள் வீணாதான். அத்தை கூட 'அதுக்கு வேற வேலை இல்ல..' என எரிச்சலை உதிர்த்துவிட்டு விலகி விடுவார்.



தினமும் அதிகாலையிலேயே எழுந்து விடுவேன். அத்தைக்கு கிச்சனில் உதவியாய் இருப்பேன். 'ஒரு காபி கூட போட தெரியலை.. உன்னைலாம் எப்படி பெத்து வளத்தாங்களோ..?' என பொறுமும் பாட்டியிடம் புன்னகைப்பேன். 'இதுலாம் நீ ஏன்மா பண்ற..?' என தன் சட்டையை அயர்ன் பண்ணும் என்னிடம் என் மாமனார் கேட்டால், 'இதுல என்ன இருக்கு மாமா..?' என்பேன். 'இன்னைக்கு எங்க காலேஜ்ல என்ன நடந்துச்சு தெரியுமா அண்ணி..?' என பேச ஆரம்பிக்கும் வீணாவிடம், கிழியும் வரை என் காதை விட்டுக் கொடுத்திருப்பேன். இரவில் என்னவர் கைபேசியில் அழைக்கும் வரை, ஏக்கமாய் காத்திருப்பேன்.

வீணாதான் என் பொழுது ஓரளவு வேகமாய் கழிய காரணமாயிருந்தாள். அடிக்கடி அவளுடைய அறைக்கு சென்று ஏதாவது பேசிக் கொண்டிருப்பேன். விளையாடுவேன். அன்றும் அது மாதிரிதான். என்னுடைய கல்யாண ஆல்பம் வந்திருந்தது. அதைப் பார்த்து பேசிக் கொண்டிருந்தோம்.

"நீங்கதான் எல்லா போட்டோலயும் சிரிச்சுட்டு அழகா இருக்கீங்க அண்ணி.. அவனை பாருங்க.. எல்லாத்துலயும் மூஞ்சியை உர்ருன்னு வச்சுக்கிட்டு இருக்கான்.."

"இல்லையே.. நல்லாத்தான இருக்காரு..?"

நான் அவர் முகத்தில் இருந்து விழிகளை எடுக்காமலேயே சொல்ல, அவள் பதிலேதும் பேசவில்லை. ஒரு நமுட்டு சிரிப்பை மட்டும் உதிர்த்தாள். எல்லா போட்டோவும் பார்த்து முடித்த பிறகு திடீரென கேட்டாள்.

"அண்ணனோட பழைய ஆல்பம்லாம் பாக்குறீங்களா அண்ணி..?"

"பழைய ஆல்பம்னா..?"

"அவன் ஸ்கூல்.. காலேஜ் படிக்கிறப்போ எடுத்த போட்டோஸ்.."

"வச்சிருக்கியா நீ..? எங்க இருக்கு..?" எனக்கு பட்டென ஒரு ஆர்வம் வந்து தொற்றிக் கொண்டது.

"இருங்க எடுத்துட்டு வர்றேன்.. அண்ணன் அதுலலாம் இன்னும் ஸ்மார்ட்டா இருப்பான்.."

ஒரு நான்கைந்து ஆல்பங்கள்..!! அவருடைய பள்ளிக்காலம் முதல் எடுத்த படங்கள். வொயிட் ஷர்ட், ப்ளூ ட்ராயர் என கைகள் ரெண்டும் தொடைகளுடன் ஒட்டி வைத்துக் கொண்டு, போட்டோவிற்கு போஸ் கொடுத்த, என் பத்து வயது கணவரை  பார்த்தபோது உதட்டில் புன்னகை அரும்புவதை தவிர்க்க முடியவில்லை. கரிச்சான் குருவி கிராப்புடன்.. கட்டுரைப் போட்டி சர்ட்டிபிகேட்டுடன்.. ஹை ஜம்ப்பில் வென்றதுக்கான கோப்பையுடன்.. கவிதை பாடும் பாரதியாக..!! எந்த மனைவியுமே பார்க்க விரும்பும் படங்கள்..!!

பள்ளிப்பருவ படங்கள் என்னை பரவசம் கொள்ளச் செய்தது எனில், அவருடைய கல்லூரி கால படங்கள், காதில் புகை வர செய்தன. இப்போது இருப்பதை விட இளமையாக, சற்றே மெல்லிய மீசையுடன், அந்த வயதிற்கே உரிய துடிப்புடன், அழகாய்த்தான் இருந்தார். ஆனால்.. அவர் போட்டோவில் எங்கு நின்றிருந்தாலும், அவரை சுற்றி இரண்டு, மூன்று பெண்டுகள் நின்றிருந்தன. அவருடைய கையை பிடித்துக் கொண்டு.. அவர் தோள் மீது கை போட்டுக் கொண்டு.. அவருக்கு பின்னால் நின்று கொம்பு காட்டிக் கொண்டு.. வெக்கங்கெட்ட தனமாய் இளித்துக் கொண்டு..!!

நான்கு ஆல்பங்கள் முடித்துவிட்டு, ஐந்தாவது ஆல்பத்தை புரட்டியபோதுதான் அந்த ஆட்டம் பாம் வந்து விழுந்தது. அது இரண்டு மூன்று வருடங்கள் முன்பாக எடுக்கப்பட்ட படங்களாக இருக்க வேண்டும். அவர் கல்லூரி முடித்த பிறகு. பெரும்பாலும் அந்த மதுரை வீட்டில் எடுக்கப்பட்ட படங்கள்தான். புன்னகையுடன் புரட்டிக் கொண்டு வந்தவள், அந்த படத்தை பார்த்ததும் சற்றே ஷாக் ஆனேன். க்ளோசப்பில் முகம் மட்டும் தெரியுமாறு எடுக்கப் பட்ட படம். அவரும், அழகாய் இருந்து ஒரு இளம்பெண்ணும், கன்னங்களை ஒட்டி வைத்துக் கொண்டு, எளிறுகள் தெரிய இளித்துக் கொண்டிருந்தார்கள்.

நான் அந்தப் படத்தை முறைப்பதை பார்த்ததும், வீணா பட்டென்று அடுத்த பக்கத்தை புரட்டினாள். நான் மீண்டும் முந்தய பக்கத்துக்கு தாவி, மீண்டும் அந்த போட்டோவை முறைத்தேன். ஒரு மாதிரி உடைந்து போன குரலில் அவளிடம் கேட்டேன்.

"இ..இது யாரு வீணா..?"

"இ..இது.. எங்க சுஜி அண்ணி..!!"

"யார் அது..? நான் பாத்ததே இல்ல..?"

"அத்தை பொண்ணு.. அப்பாவோட தங்கச்சி பொண்ணு.. கான்பூர்ல M.Tech படிக்கிறாங்க..!!"

"மேரேஜுக்கு இவங்க வரலையா..?"

"வரலை.. அவங்களுக்கு எக்ஸாம் டைம்.. அதான்.."

"ம்ம்ம்.. நல்லா அழகா இருக்குறாங்க.." நான் உள்ளப் புகைச்சலை அடக்கிக் கொண்டு சொன்னேன்.

"ஆக்சுவலா.. சுஜி அண்ணியைத்தான் அண்ணனுக்கு முடிக்கிறதா பேச்சு இருந்தது.."

"ம்ம்.. அப்புறம் என்னாச்சு..?"

"ஜாதகம் பொருந்தலை.. அம்மா கூட.. 'அதெல்லாம் கண்டுக்க வேணாம்.. முடிச்சுடலாம்னு..' சொன்னாங்க..!! மாமாதான் பிடிவாதமா ஒத்துக்கலை..!! கல்யாணத்துக்கு கூட மாமா வந்திருந்தாரு.. இருங்க காட்டுறேன்.."

"பரவால்ல வீணா.. விடு.."

அவள் சகஜமானாள். அடுத்த பக்கங்களை புரட்டி, அதில் இருப்பவர்களைப் பற்றி சொல்ல ஆரம்பித்தாள். நான்தான் எதிலும் மனம் ஒன்ற முடியாமல் அல்லாடினேன். மனம் அந்த பல்லிளிப்பு போட்டோவிலேயே இருந்தது. ஆல்பம் எல்லாம் பார்த்து முடிந்த பிறகு, வேறு எதற்கோ வீணா அந்தப் பக்கம் திரும்பியபோது, நான் அந்த போட்டோவை ஆல்பத்தில் இருந்து உருவினேன். என்னுடைய புடவைக்குள் மறைத்து வைத்துக் கொண்டேன்.

அப்புறம் என் அறைக்கு சென்றதும், மீண்டும் அந்த போட்டோவை எடுத்து இன்னொரு முறை பார்த்தேன். மனதில் குபுகுபுவென எரிச்சல் பரவுவதை கட்டுப் படுத்த முடியவில்லை. போட்டோவின் மையத்தில் கை வைத்து, சரக்கென கிழிக்க, இப்போது அவர் என் வலது கையில்.. அவள் என் இடது கையில்..!! இடது கையில் இருந்ததை கசக்கி எறிந்து விட்டு.. வலது கையில் இருந்ததை மார்போடு வைத்து அனைத்துக் கொண்டேன்..!! இப்போது சற்று நிம்மதியாக இருந்தது..!!

ஆனால், அந்த நிம்மதியை குலைக்க அடுத்த நாளே அந்த சுஜி வந்து குதிப்பாள் என்று நான் கனவிலும் நினைக்கவில்லை. வீட்டுக்குள் நுழையும்போதே, 'ஹாய்ய்ய்ய்...!!!!!!!!!!!' என்று கத்திக்கொண்டு புயல் மாதிரிதான் நுழைந்தாள். அத்தையின் கூந்தலைப் பிடித்து இழுத்தாள். மாமாவின் தொப்பையை கிண்டலடித்தாள். வீணாவை கட்டிப்பிடித்து கன்னத்தில் முத்தமிட்டாள். திட்டிய பாட்டியிடம் உதடு நீட்டி பழிப்பு காட்டி, அவளை மேலும் எரிச்சல் மூட்டினாள். என்னிடம்..




"ஹாய்.. எப்டி இருக்கீங்க..?" என்று அக்கறையாக விசாரித்தாள்.

"எக்ஸாம் இருந்தது.. அதான் மேரேஜுக்கு வர முடியலை.." என்று காரணம் சொன்னாள்.

"ஏன் அதோட நிறுத்திட்டீங்க..? மேல படிக்கலையா..?" என்று எரிச்சலை கிளப்பினாள்.

"நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க.." என்று அசடு வழிந்தாள்.

அப்புறம் வீணாவின் ரூமுக்குள் சென்று அடைந்து கொண்டாள். நான் என் ரூமுக்கு சென்று மெத்தையில் புரண்டேன். அவள் அங்கு கனைக்கும் சத்தம் இங்கே கேட்டது. வீணாவும், அந்த சுஜியும் உரையாடுவதும் கேட்டது. வீணாவின் சத்தத்தை விட சுஜியின் சத்தம் பெரிதாக இருந்தது. அப்படி என்ன பேசுகிறாள் என்று எனக்கு கேட்க வேண்டும் போல் இருந்து. எழுந்து என் ரூமை விட்டு வெளிப்பட்டு, வீணாவின் ரூமை நோக்கி  மெல்ல நடந்தேன். முதலில் வீணாவின் குரல்தான் காதில் விழுந்தது.

"ஏண்டி இப்படி அடங்காப்பிடாரியா இருக்குற..?"

"ஏன்.. அதுல உனக்கு ஏதும் கஷ்டமா..?" இது கிண்டலான சுஜியின் குரல்.

"எனக்கு என்ன கஷ்டம்..? உன்னை கட்டிக்கப் போறவன்தான் கஷ்டப்படப் போறான்..? ம்ம்ம்ஹ்ஹ்ஹ்ம்ம்.. பாவம் அவன்..!! உன்னைக் கட்டிக்கிட்டு என்ன பாடு படப் போறானோ..?"

"ஹ்ஹ்ஹா.. அவனை பத்தி உனக்கு என்ன அவ்ளோ அக்கறை..?"

"ஏன்.. இருக்க கூடாதா..? எனக்கு... உன்னை கட்டிக்கப்போற.. அந்த அஞ்சா நெஞ்சனை..  தியாகச் செம்மலை.. அந்த மனிதருள் மாணிக்கத்தை.. உடனே பாக்கணும் போல ஆசையா இருக்குடி.."

"ஹ்ஹஹ்ஹ்ஹா.. காட்டுறேன் காட்டுறேன்.. எவனாவது ஒரு இளிச்சவாயன் என் கைல சிக்காமலா போயிடுவான்..? சிக்குனதும் கண்டிப்பா காட்டுறேன்..!!"

"ம்ம்ம்ஹ்ஹ்ஹ்ம்ம்.. எப்டியோ.. எந்த சாமி புண்ணியமோ..? என் அண்ணன் எஸ்கேப் ஆயிட்டான்..!!"

"ஒய்.. என்ன.. நக்கலா..? உன் அண்ணன் எஸ்கேப் ஆயிட்டானா..? நான்தான் உன் அண்ணன்கிட்ட இருந்து எஸ்கேப் ஆயிட்டேன்..!!"

"ஹ.. இது என்ன புதுக்கதையா இருக்கு..? என் அண்ணனுக்கு என்னடி கொறைச்சலு..?"

"யப்பா.. உன் அண்ணன் பெரிய இவன்..? சரியான...!! அவனலாம் கட்டிக்கிட்டு என்னால முடியாதுப்பா..!! அவன் ஒவ்வொரு நாளும்.. எவ.."

எதையோ சொல்ல வந்தவள், வாசலில் நிழலாடுவதை உணர்ந்து திரும்பியவள், என்னைப் பார்த்ததும், பட்டென நிறுத்தினாள். நாக்கை கடித்துக் கொண்டாள். அமைதியானாள்.

வீணாவும் சற்று அதிர்ந்து போன நிலையில், எப்படி ரியாக்ட் செய்வது என்று புரியாத மாதிரி அமர்ந்திருந்தாள். அப்புறம் சமாளித்துக் கொண்டு புன்னகையுடன் என்னைப் பார்த்து கேட்டாள்.


"எ..என்ன அண்ணி..?"

"த..தலை லேசா வலிக்கிற மாதிரி இருக்கு வீணா.. விக்ஸ் இருக்கா..?"

"இ..இருக்கு அண்ணி.. இதோ... எடுத்து தர்றேன்.. இருங்க.."

கைகள் படபடக்க வீணா விக்ஸ் தேடி என்னிடம் நீட்ட, நான் அந்த சுஜியை ஒருமுறை முறைத்து விட்டு எனது அறைக்கு திரும்பினேன். அங்கு போகும்போது இல்லாத தலைவலி, இப்போது நிஜமாகவே வந்திருந்தது. 'அப்படி என்ன சொல்ல வந்தாள்..?' என்ற எண்ணத்தால் வந்த தலைவலி..!! விக்ஸ் எடுத்து நெற்றியின் எல்லா பக்கமும் பரபரவென தேய்த்துக் கொண்டேன். கொஞ்ச நேரம் முன்பு வரை சுஜியின் குரலால் அல்லோகலப்பட்ட வீடு, இப்போது அமைதியாக இருந்தது.

மாலையில் சற்று உலாத்தலாமே என்று மொட்டை மாடி சென்றிருந்தேன். கைகளை மார்புக்கு குறுக்காக கட்டிக்கொண்டு வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தபோது, இந்த சுஜி மேலே வந்தாள். நான் அங்கு இருப்பேன் என்று எதிர்பார்க்கவில்லை போலும்..!! முகத்தில் ஒரு ஆச்சரியம் தெரிந்தது. ஆனால் நான் அங்கு இருப்பதை பார்த்து விட்ட பிறகு, திரும்பி செல்ல மனமில்லாமல் தயங்கி தயங்கி என்னை நோக்கி வந்தாள். 'ஹாய்..!!' என்று சம்பிரதாயமாக இளித்தாள்.

கொஞ்ச நேரம் பொதுவாக பேசிக் கொண்டிருந்தோம். அவள்தான் அதிகம் பேசினாள். ரோட்டில் போகும் காரைப்பற்றி.. தூரத்து மரத்தின் பசுமையைப் பற்றி.. பக்கத்து வீட்டு மொட்டை மாடியைப் பற்றி..!! நான் மனதுக்குள் அரித்த அந்த கேள்வியைப் பற்றியே யோசித்துக் கொண்டிருந்தேன். 'என்ன சொல்ல வந்திருப்பாள்..????' ஒரு சமயத்தில் பொறுமை இல்லாமல் ஆரம்பித்து விட்டேன்.

"உங்ககிட்ட ஒன்னு கேட்டா.. தப்பா நெனச்சுக்க மாட்டீங்களே..?"

"என்ன..?"

"அப்போ.. நான் வீணா ரூமுக்கு வந்தப்போ.. எதையோ சொல்ல ஆரம்பிச்சுட்டு.. பட்டுன்னு ஸ்டாப் பண்ணிட்டீங்களே..? அது...???" நான் கேட்டதும் அவளுடைய முகத்தில் ஸ்பஷ்டமாய் ஒரு அதிர்ச்சி தென்பட்டது.

"அ..அது ஒண்ணுல்ல.. அது சும்மா.." என்று திணறினாள்.

"சொல்ல புடிக்கலைன்னா.. பரவால்ல.. வேணாம்..!!"

"அ..அப்டிலாம் ஒண்ணும் இல்ல..?"

"அப்புறம்..???"

"அ..அது..."

"சும்மா சொல்லுங்க..!!"

"நா..நான் சும்மா வெ..வெளையாட்டுக்குத்தான் சொன்னேன்.. அதை நீங்க சீரியஸா.."

"வெளையாட்டா.. சீரியசான்னு நான் டிஸைட் பண்ணிக்கிறேன்.. என்ன சொல்ல வந்தீங்கன்னு மட்டும் சொல்லுங்க.. ப்ளீஸ்..!!" 

நான் ஒருமாதிரி கெஞ்சும் குரலில் கேட்கவும், அவள் சற்று தயங்கினாள். எச்சில் கூட்டி மிடறு விழுங்கினாள். தலையை அப்படியும் இப்படியுமாய் அசைத்தாள். பின்னர் மெல்லிய குரலில் சொன்னாள்.

"நா..நான் அதை ஜாலியாத்தான் சொல்ல வந்தேன்.. நீங்க அதை தப்பா எடுத்துக்க மாட்டீங்கன்னு சொன்னா.. நான் சொல்றேன்.."

"தப்பா எடுத்துக்க மாட்டேன்.. சொல்லுங்க..!!"

அவள் அப்புறமும் சில வினாடிகள் தயங்கினாள். பின்பு திக்கித் திணறும் குரலில் சொன்னாள்.

"அ..அத்தானுக்கு பொண்ணுக ப்ரண்ட்ஸ் ஜாஸ்தி.. அதான்.. அவரை கட்டிக்கிட்டா.. ஒவ்வொரு நாளும் எ..எவகூட சுத்துறாரோன்னு சொல்ல வந்தேன்..!! ஆ..ஆனா... ச..சத்தியமா.. அத்தான் அப்படிப்பட்டவர் இல்ல.. நான் எதோ தெரியாத்தனமா.. வீணாகிட்ட..  ஜாலிக்கு.."

அவள் சொல்லி முடித்தும் அவளிடம் படபடப்பு குறையவில்லை. அந்த படபடப்பு.. கைவிரல்களின் நடுக்கம்.. கண்களில் தெரிந்த மருட்சி.. அவள் இன்னும் எதையோ மறைக்கிறாள் என்று எனக்கு தோன்றியது. விடாமல் கேட்டுவிட்டேன்.

"இல்ல.. நீங்க எதையோ மறைக்கிறீங்க.."

"ம..மறைக்கிறனா..? ச்சேச்சே.. அ..அதெல்லாம் ஒண்ணும் இல்லையே.. நா..நான் எதை மறைக்கப்.." அவள் தடுமாறினாள்.

"இல்ல.. நீங்க மறைக்கிறீங்க.."

"ச..சத்தியமா இல்ல.."

"நான் எதுவும் தப்பா எடுத்துக்க மாட்டேன்.. சொல்லுங்க ப்ளீஸ்..."

"அ..அதான் எதுவும் இல்லன்னு சொல்றேன்ல..?"

"இல்ல.. அவரலாம் எவ கட்டிக்குவா.. அப்டி இப்டின்னு.."

"அ..அதுலாம் ஒண்ணுல்ல.."

"அப்புறம் ஏன் அப்படி சொன்னீங்க..?"

நான் திரும்ப திரும்ப கேட்கவும், துருவித் துருவி துளைக்கவும், மேலும் மேலும் வற்புறுத்தவும், ஒரு கட்டத்தில் அவள் நிலை குலைந்தாள். சற்றே தடித்த குரலில், சற்றே தைரியமான குரலில், சற்றே அழுகை பொங்கும் குரலில் சொன்னாள்.

"ஆமாம்.. சொன்னேன்..!!! நான் அப்டித்தான் சொல்வேன்..!!" என்று படபடவென சொல்லி நிறுத்தியவள்,

"நா..நான் அப்டி சொல்லித்தான் என் மனசை தேத்திப்பேன்..!!" என்று பரிதாபமாக சொல்லி முடித்தாள்.

அவள் சொல்லும்போதே அவளுடைய கண்களில் இருந்து பொலபொலவென கண்ணீர் கொட்ட ஆரம்பித்தது. விசும்ப ஆரம்பித்தாள். துக்கத்தில் தொண்டை அடைத்தவள் போல காணப்பட்டாள். அவளுடைய உதடுகள் கிடந்து படபடவென துடிதுடித்தன. நான் சுத்தமாய் அதிர்ந்து போய் நின்றிருந்தேன். ஒருசில வினாடிகள்..!! பின்பு சுதாரித்துக்கொண்டு, படபடப்பான குரலில் சொன்னேன்.

"ஐயையோ.. எ..என்ன சுஜி நீங்க.. இ..இதுக்குப் போய்.."

அவளும் உடனே சுதாரித்துக் கொண்டாள். உடனே கண்களில் வடிந்த நீரை புறங்கையால் துடைத்துக் கொண்டாள். மூக்கை ஒருமுறை உறிஞ்சிக் கொண்டாள். கொஞ்ச நேரம் அமைதியாக இருந்தவள், அப்புறம் எங்கேயோ ஒரு வெறித்த பார்வை பார்த்துக் கொண்டு பேச ஆரம்பித்தாள்.

"எனக்கு எக்ஸாம்லாம் எதுவும் கெடையாது.. சும்மா பொய் சொன்னேன்.. அத்தானை அந்த கோலத்துல என்னால பாக்க முடியாது.. அதனாலதான் உங்க மேரேஜுக்கு நான் வரலை..!! இ..இப்ப கூட.. அத்தான் ஊர்ல இல்லைன்னு தெரிஞ்சுதான் வந்தேன்..!!"

"ம்ம்ம்.."

"சி..சின்ன வயசுல இருந்தே அத்தானை எனக்கு ரொம்ப பிடிக்கும்.. அவர்தான் என் புருஷன்னு எவ்வளவோ கற்பனை..!! எ..எல்லாம் போச்சு..!!"

"ம்ம்ம்.."

"இ..இதுலாம் அத்தானுக்கே தெரியாது.. அத்தானுக்கென்ன.. யாருக்குமே தெரியாது..!! தயவு செஞ்சு.. யார்கிட்டயும் இதை சொல்லிடாதீங்க.. ப்ளீஸ்..!!"

"ம்ம்ம்.."

"அ..அத்தான் ரொம்ப நல்லவரு.. அவரை நல்லா பாத்துக்குங்க..!!"

சொல்லிவிட்டு அவள் விடுவிடுவென ஓடினாள். படிக்கட்டில் படபடவென இறங்கினாள். இறங்கும்போது கண்களில் வழிந்த நீரை துடைத்துக் கொண்டே..!! நான் அசைவற்று ஸ்தம்பித்துப் போய் நின்றிருந்தேன். மனசுக்குள் பலவித உணர்ச்சி அலைகள்..!! 

'சம்பந்த சம்பந்தமில்லாமல் இளித்த சுஜிக்குள் இப்படி ஒரு அழு மூஞ்சியா..?' என்ற ஆச்சரியம்..!! 'இவதான் உன் பொண்டாட்டி.. இவன்தான் உன் புருஷன்.. என்று பெரியவர்கள் விளையாட்டாய் சொல்வதினால் இப்படி ஒரு பின்விளைவா..?' என்ற ஆதங்கம்..!! 'உள்ளத்தில் இருக்கும் காதலை இப்படி ஒருவரிடமும் சொல்லக் கூட முடியாத நிலை.. ஒரு பெண்ணுக்கு ஏற்படுமா..?' என்ற பச்சாதாபம்..!! எல்லாவற்றிகும் மேலாக.. 'சற்றுமுன் வீணாவிடம் இவள் பேசிக்கொண்டு இருந்த போது.. அட்லீஸ்ட் இவள் ஒருத்திக்காவது என் கணவரை பிடிக்காமல் இருக்கிறதே என்ற அந்த சின்ன சந்தோஷம் குலைந்து.. இவளுக்குமா..?????' என்ற அந்த பொசஸிவ்னஸ்..!!

நான் அசைவற்று ஸ்தம்பித்துப் போய் நின்றிருந்தேன்..!!!





No comments:

Post a Comment