Friday, March 20, 2015

எல்லாமே என் மான்சி - அத்தியாயம் - 9

சத்யன் கடித்த அவளின் இதழ்களை தனக்குள் வாங்கி சப்பி சுவைக்க... அவள் இதழ்கள் தானாகவே தேனை சுரந்தன.. அந்த தேன் சத்யனின் தணியாத தாகத்தை தணிக்கமுயன்றது... எவ்வளவு உறிஞ்சி குடித்தும் சத்யனின் தாகம் அடங்கவில்லை...

அதனால் உதட்டை உறிஞ்சுவதை விட்டுவிட்டு தனது நாக்கை உள்ளே செலுத்தி அவளின் உமிழ்நீரை உறிஞ்சினான்... அவனின் அத்தனை உறிஞ்சுதலுக்கும் மான்சி வாயை வாகாக பிளந்து கொடுத்தாள்

ஒருகட்டத்தில் சத்யனின் உதடுகளும் நாக்கும் சோர்ந்து போக எந்த வேலையும் செய்யாமல் அவள் வாய்க்குளேயே தனது நாக்கை ஊறப்போட்டுவிட்டு அவள் மார்புகள் மீது தனது பரந்த நெஞ்சை அழுத்திக்கொண்டு இளைப்பாறினான்

மான்சி மயங்கிப்போய் கதவோடு கதவாக ஒன்றிப்போயிருந்தாள்... சத்யன் மறுபடியும் தனது வேலையை விட்ட இடத்தில் இருந்து ஆரம்பிக்க... மான்சியால் அவன் வேகத்தை தாங்க முடியாமல் மூச்சு திணறி கால்களை பலமாக உதறிக்கொண்டாள்


அவளின் உதறலால் நிதானத்துக்கு வந்த சத்யன் அவளை மெதுவாக தரையில் இறக்கி சிறிதுநேரம் அணைத்து அவளை ஆறுதல்படுத்தி... பிறகு விலக்கி நிறுத்தி அவள் முகத்தை பார்க்க... இப்பவும் அவள் கண்களை மூடிக்கொண்டுதான் இருந்தாள்

இவனிடம் கடிபட்ட அவளின் இதழ்கள் லேசாக தடித்து சிவந்திருக்க.. சத்யன் தனது நுனிநாக்கால் ஈரத்தோடு அவள் இதழ்களை மென்மையாக தடவிவிட... அவன் அப்படி தடவியது அவளுக்கு இதமாக இருந்திருக்க வேண்டும்... தானாகவே கழுத்து பக்கவாட்டில் சரிந்தது

சத்யன் மறுபடியும் தனது நாக்கு நுனியால் அவள் இதழ்களை பிளந்து உள்ளே விட்டு அவள் வாயின் உள்பகுதியை இதமாக தடவி சுகபடுத்தினான்...
அப்போது வெளியே அங்கிள் என்று குரல் கொடுத்த படி சைந்தவி கதவை தட்ட... இருவரும் திடுக்கிட்டு சட்டென விலகினர்

மான்சி கலவரத்துடன் சத்யனை பார்க்க... அவன் நான் பார்த்துக்கொள்கிறேன் என்பதுபோல்... தனது நெஞ்சில் கைவைத்து அவளை ஆறுதல் படுத்திவிட்டு அவளை கதவைவிட்டு சற்று ஒதுக்கி நிறுத்தினான்

பிறகு கதவை திறக்கப் போனவன் மறுபடியும் மான்சியை பார்த்தான் ... அவள் தலைமுடி களைந்து போயிருக்க.... சத்யன் சைகையால் அதை சரி செய்யும்படி மான்சியிடம் சொல்லிவிட்டு .. கதவை திறந்து வெளியே போனான்

சத்யன் வெளியே வந்த உடனேயே சைந்தவி அவன் காலை கட்டிக்கொண்டு தூக்க சொல்ல ... சத்யன் மகிழ்ச்சியுடன் குனிந்து குழந்தையை தூக்கிகொண்டான்

“ அங்கிள் நீங்க என்ன பார்த்ததில் இருந்து இன்னும் கிஸ் பண்ணவே இல்லை... கிஸ் பண்ணுங்க அங்கிள்” என்று தனது குண்டு கன்னத்தை தட்டி சைந்தவி கேட்க

“ ம்ம் கிஸ் தானே குடுத்துட்டா போச்சு கொஞ்சம் இருடா செல்லம்” என்ற சத்யன் தனது பேன்ட் பாக்கெட்டில் இருந்து கர்சீப்பை எடுத்து தனது உதடுகளையும் வாயையும் நன்றாக அழுத்தி துடைத்துவிட்டு கொண்டான்... பிறகு சைந்தவியின் கன்னங்களில் மாறி முத்தமிட்டான் ...

வீட்டுக்குள் நடந்த முத்த போராட்டத்தில் ... வேட்கையும்... தாபமும்.. விரகமும்... ஒங்கியிருந்தது என்றால் இந்த முத்தத்தில் அளவுகடந்த பாசம் தலைத்தோங்கி இருந்தது 

சத்யன் சவியை தூக்கிக்கொண்டு பரணியின் வீட்டுக்கள் போக அவன் போன சிறிதுநேரத்தில் மான்சி வந்தாள்

மான்சியின் கையை பார்த்ததும் பரணியும் காஞ்சனாவும் பதறிப்போய் அவள் அருகில் வந்து அவள் கையை பற்றி பார்த்தனர்

மான்சி மெதுவாக தன் கையை அவர்களிடமிருந்து விடுவித்து கொண்டு தலைகுனிந்தபடி “ எல்லாம் இப்போ சரியாயிடுச்சு ... லேசா வலி மட்டும்தான் இருக்கு.... இன்னும் நாலுநாள் கழிச்சு வந்து தையல் பிரிச்சுக்க சொன்னாங்க... எனக்கு தூக்கம் வருது நான் தூங்கப்போறேன்ப்பா” என்று கூறிவிட்டு தனது அறைக்குள் போய் கதவை மூடிக்கொண்டாள்

பரணிக்கு ரொம்பவே குழப்பமாக இருந்தது ‘ ஊரில் அண்ணன் குடும்பம் எப்படி இருக்குன்னு விசாரிக்கலை... நாங்க நல்லபடியாக வந்தோமான்னு கேட்கலை ... ஏன் சவியை கூட பார்க்கலை... தூக்கம் வருதுன்னு போய் படுத்துட்டாளே என்பதுபோல் மான்சியின் அறைக்கதவையே பார்க்க

சத்யன் அவரின் எண்ண ஓட்டத்தை புரிந்தார்போல் “ அவங்க ரொம்ப பயந்து போயிருக்காங்க அங்கிள்... நைட்ல சரியா தூங்கலை அதான் அப்படி இருக்காங்க... போகப்போக சரியாயிடும்” என்று கூறி சமாளித்தான்

“ பரவாயில்லை சத்யன் ஏற்கனவே அவ ரொம்ப பயந்த சுபாவம் இதில இப்படி நடந்ததால இன்னும் ரொம்ப பயந்திருப்பா”... என்ற பரணி “ நீங்க ஆபிஸ் போகலையா சத்யன்” எனறு கேட்க

“இதோ கிளம்பனும் அங்கிள்”.. என்ற சத்யன் மான்சியின் மூடியிருந்த அறைக்கதவை ஒருமுறை பார்த்துவிட்டு ... சைந்தவியை கீழே இறக்கிவிட்டு... தனது வீட்டுக்கு போனான்

தன் வீட்டில் நுழைந்து கதவை மூடியவன் வேகமாக மான்சி படுத்திருந்த அறைக்கு போனான் ... அந்த அறையை சுற்றிலும் தேடி அங்கே இருந்த கட்டிலின் ஓரத்தில் மான்சி உடுத்தியிருந்த லுங்கியும் டீசர்ட்டும் இருக்க ..

சத்யன் அதை தாவியெடுத்து தன் முகத்தில் வைத்துக்கொண்டு கட்டிலில் மல்லாந்து விழுந்தான்

அந்த உடை முழுவதும் மான்சியின் வாசம்...
பைத்தியம் பிடித்தவன் போல சத்யன் அந்த உடைகளை மூக்கில் வைத்து முகர்ந்தான்...
கையில் மடித்து சுருட்டி வைத்துக்கொண்டு மறுபடியும் மறுபடியும் முத்தமிட்டான்...
மார்போடு வைத்து அணைத்துக்கொண்டு கண்மூடி கனவு கண்டான்..
இறுதியாக அந்த உடையை பெட்டில் விரித்து அதன் மேல் படுத்துக்கொண்டு உறங்கிப்போனான்

வெகுநேரம் கழித்து அவன் மொபைலின் ஒலி அவனை எழுப்ப ... வாறிச்சுருட்டிக் கொண்டு எழுந்த சத்யன் தனக்கு கீழே இருந்த மான்சி போட்டிருந்த உடைகளை பார்க்கவும்...

சற்றுமுன் அவன் செய்தது ஞாபகம் வர அவன் முகத்தில் ஒரு வெட்கம் கலந்த சிரிப்பு வந்தது

மறுபடியும் குனிந்து அந்த உடைகளில் முத்தமிட்டு கட்டிலைவிட்டு இறங்கி தனது வாட்ச்சில் நேரம் பார்க்க ... மாலை இரண்டு ஆகியிருந்தது... ச்சே இவ்வளவு நேரமாவா தூங்கினோம் என்று நெற்றியில் அடித்துக்கொண்டு அவசரமாக பாத்ரூம் போய் முகம் கழுவினான்

சத்யனுக்கு பசி வயிற்றை கிள்ளியது கிச்சனுக்குள் போய் ஏதாவது இருக்கிறதா என்று பார்த்தான் ... சாப்பிடுவதற்கு ஒன்றுமே இல்லை ...

மொபைலை எடுத்து யார் போன் செய்தது என்று பார்த்தான் ஆபிஸிலிருந்துதான் பண்ணியிருந்தார்கள்

இரண்டு நாட்களாக ஆபிஸ்க்கு வேறு போகவேயில்லை என நினைத்தவன் ... ஒருவழியாக ஹோட்டலில் சாப்பிட்டுவிட்டு ஆபிஸ்க்கு போகலாம் என்று நினைத்து உடையை மாற்றிக்கொண்டு கிளம்பினான்

கதவை பூட்டிக்கொண்டு வெளியே வந்தவன் மான்சியின் வீட்டை பார்க்க ...

உள்ளே மான்சி சைந்தவிக்கு சாப்பாடு ஊட்டிக் கொண்டு இருக்கிறாள் போல... சைந்தவி சாப்பாடு வேண்டாம் என்று அழும் சத்தமும் மான்சி குழந்தையை சமாதானம் செய்வதும் நன்றாக கேட்டது

இந்த சத்தம் என்று தன் வீட்டில் கேட்கும் என சத்யன் நினைக்க... கூடிய விரைவில் என்று அவன் மனம் சொல்ல... சத்யன் முகம் மலர வெளிப்படையாக புன்னகைத்து விட்டு லிப்ட்டை நோக்கி போனான்

அதன்பிறகு சத்யன் மான்சியை பார்பதே அறிதாகிவிட்டது... அவனுக்கு ஆபிஸில் புதிய விளம்பர ஆர்டர்களால் வேலை அதிகமாக இரவு ரொம்ப நேரங்கழித்து வர ஆரம்பித்தான் ...

இரவு நேரங்கழித்து தூங்குவதால் அவனால் காலையில் சீக்கிரமாக விழிக்க முடியவில்லை

இரவு அவன் வரும் நேரங்களில் பரணியின் வீட்டில் சந்தடி அடங்கியிருந்தது... மூடியிருக்கும் கதவை சிறிதுநேரம் பார்த்துவிட்டுதான் தன் வீட்டுக்கு போவான்

மான்சியின் முகம் பார்க்காததும் வேலையின் அலுப்பும் சத்யனின் உடலை மெலியச் செய்தது... எப்போதாவது நேரம் கிடைக்கும் போது பூங்காவில் போய் உட்காருவான்

அந்த நேரத்தில் அங்கே சைந்தவி இருந்தால் இவனுடைய சந்தோஷத்திற்கு அளவே இருக்காது...ஆசையோடு குழந்தையை தூக்கி அணைத்து முத்தமிடுவான்

பரணி வாரந்தோறும் சனிக்கிழமைகளில் சத்யன் வீட்டுக்கு வருவது மட்டும் மாறவில்லை.... இருவரும் ஒன்றாக உட்கார்ந்து மது அருந்தினாலும் சத்யனுக்கு உள்ளமெல்லாம் ஒரே குறுகுறுப்பாக இருக்கும்

சத்யன் முன்புபோல் இல்லாமல் அளவோடு குடித்துவிட்டு கொஞ்சம் சிஸ்டத்தில் வேலையிருக்கு அங்கிள் அதான் என்று எதையாவது சொல்லி சமாளித்தான்

சில நாட்களில் வேண்டுமென்றே வெளியே எங்காவது சுற்றிவிட்டு.... கொஞ்சம் அவசர வேலையாக வெளியே போய்விட்டதாக பொய் கூறி பரணிக்கு போன் செய்வான்

ஒருநாள் அவன் மாமா பரமன் தனது எட்டுவயது பேத்தியை அழைத்துக்கொண்டு சத்யன் வீட்டுக்கு வந்தார் ... தன் பேத்திக்கு காது சரியாக கேட்கவில்லை என்று அதை சென்னையில் பெரிய டாக்டரிடம் பார்க்கவேண்டும் என்று பரமன் சொல்ல

சத்யனுக்கு அந்த வேலையாக சுற்றுவதற்கு கொஞ்சநாள் ஆனது... பரமன் ஒருவாரம் சத்யன் வீட்டில் தங்கி தனது பேத்தியை குணப்படுத்திக் கொண்டு போக ... பரமனுக்கு பரணீதரன் ரொம்ப உதவியாக இருந்தார்.... மான்சியும் பரமனின் பேத்தியிடம் அன்பாக இருக்க பரமனுக்கு பரணீதரன் குடும்பத்தை ரொம்பவும் பிடித்துப்போனது

பரமன் ஊருக்கு போனதும் சத்யன் ஒருநாள் தனது ஆபிஸிலிருந்து சீக்கிரமாகவே வந்து பால்கனியில் சேரைப் போட்டு உட்கார்ந்திருந்தான்... இப்போதெல்லாம் அவன் மான்சியை பார்பது எப்போதாவது ஒருமுறை தான் என்றாகிவிட்டது...

மான்சியை பார்த்து கிட்டத்தட்ட ஒரு மாதம் ஆனாது... ஆனால் சத்யனுக்கு அவளை பிரிந்து பல யுகங்களாக தனிமையில் வாழ்ந்தது போல ஒரு விரக்தியில் இருந்தான்

அவளை பற்றிய ஏக்கங்களையும் தாபங்களையும் தன் மனதில் போட்டு புதைத்துவிட்டு தனது வேலையில் அவன் செலுத்திய கவணம் ... அவனுக்கு நிறைய லாபத்தை ஈட்டித்தந்தது

ஆனால் சத்யன் அந்த லாபத்துக்கு காரணம் மான்சியும் தானும் இனைந்துவிட்டது தான் என்று நம்பினான்... அவளை தொட்டுத் தழுவிய நேரம்தான் தன்னுடைய வாழ்க்கையை மிகவும் மகிழ்ச்சிகரமாக மாற்றிவிட்டது என்று நினைத்தான்



சத்யன் தன் மடியில் லேப்டாப்பில் தனது மெயில்களை பார்ப்பதும் கீழே மான்சி பேங்கில் இருந்து வருகிறாளா என்று பார்ப்பதுமாக ஒரே நேரத்தில் இரண்டு வேலையை செய்துகொண்டு இருந்தான்

ஒருமுறை கீழே எட்டி பார்த்தப்போது மான்சி அப்பார்ட்மெண்ட் உள்ளேயிருந்து வர ... சத்யன் திகைப்புடன் ‘மான்சி இன்றைக்கு வேலைக்கு போகவில்லையா என்று நினைத்தவன் ...

ஒருவேளை சைந்தவிக்கு ஏதாவது உடம்பு சரியில்லையா... அதனால்தான் லீவு போட்டிருப்பாளோ... அப்படின்னா கூட இந்த நேரத்தில் எங்க போறா’ என்று குழம்பியவன்

ஒரே முடிவாக எழுந்து வெளியே போய் மான்சியின் வீட்டு கதவை தட்டினான்... காஞ்சனாதான் வந்து கதவை திறந்தாள்.... சத்யன் உடனே உள்ளே நுழைந்து

“ ஆன்ட்டி சவிக்கு ஏதாவது உடம்பு சரியில்லையா “ என்று பதட்டத்துடன் கேட்க

“ அதெல்லாம் ஒன்னுமில்லையே... அவ நல்லாத்தானே இருக்கா... உள்ளே அவ தாத்தாகூட கேம் விளையாடிக்கிட்டு இருக்கா... ஏன் தம்பி என்னாச்சு ” என்று காஞ்சனா கேட்க

“ இல்ல ஆன்ட்டி சவியோட அம்மா இன்னிக்கு வேலைக்கு போகலை போல... இப்பதான் வெளிய போனாங்க பார்த்தேன் .... அதான் சவிக்குதான் ஏதாவது உடம் சரியில்லாம லீவு போட்டுருக்காங்களோன்னு நெனைச்சேன்’” என்று சத்யன் கூற

“ மான்சிக்குத்தான் தம்பி உடம்பு சரியில்லை... நேத்துல இருந்து பேங்குக்கு போகலை... தலைவலிக்குதுன்னு சொல்லி ரூமுக்குள்ளேயே முடங்கிகிடந்த... இப்பதான ஏதோ மாத்திரை வாங்க போறேன்னு சொல்லிட்டு வெளிய போனா” என காஞ்சனா கூறியதும்

சத்யன் கொஞ்சம் பதட்டமாக “ அவங்களை ஏன் ஆன்ட்டி தனியா அனுப்பினீங்க... என்னை கூப்பிட்டு இருக்கலாமே நான் வீட்லதான சும்மா இருந்தேன் நான் போய் மாத்திரை வாங்கிட்டு வந்திருப்பேனே” என்று சத்யன் பதட்டப்பட

இவர்களின் பேச்சு குரல் கேட்டு உள் அறையில் இருந்து சைந்தவியுடன் வந்த பரணி “ அட என்ன சத்யன் நானே சும்மாதானே இருக்கேன்... நான் போய் வாங்கிட்டு வர்றேன் சீட்டை குடும்மான்னாக் கேட்டக்கூட... இல்ல நானே போய் வாங்க்கிறேன்னு போறா சத்யன்... திடீர்னு சின்ன புள்ள மாதிரி பிடிவாதம் பண்றா... சரி ரெண்டு நாளா வீட்டுக்குள்ளேயே அடைஞ்சு கிடந்தாளே வெளியே காத்தோட்டமா போய்ட்டு வரட்டும்னு தான் சும்மா இருந்தேன்... நாம என்ன சத்யன் பண்றது” என்று பரணி கூற

ஏன் இரண்டு நாளா வேலைக்கு போகமா வீட்டுக்குள்ளேயே இருந்தா... இப்போ ஏன் இவ்வளவு அவசர போறா ... என்று சத்யன் மனம் குழம்பினாலும் வெளியே காட்டிக்கொள்ளாமல் சைந்தவியை சிறிதுநேரம் கொஞ்சிவிட்டு அங்கிருந்து தன் வீட்டுக்கு போய் மறுபடியும் பால்கனியில் உட்கார்ந்து கொண்டான்

அவன் அமர்ந்த சிறிதுநேரத்திலேயே கீழே மான்சி வருவது தெரிய சத்யன் நன்றாக எட்டிப்பார்த்தான் ... மான்சி தனது கைப்பையை மார்போடு அணைத்து கொண்டு வேகமாக அப்பார்ட்மெண்ட்க்குள் நுழைய

சத்யன் வேகமாக எழுந்து வெளியே போய் லிப்டின் அருகே இருந்த மாடிப்படியின் ஓரமாக நிற்க... மான்சி லிப்டில் இருந்து வெளியே வந்து தனது கைப்பையை திறந்து உள்ளே இருந்த மாத்திரை அட்டை கவரை எடுத்து தன் ஜாக்கெட்க்குள் வைத்துக் கொண்டு தன் வீட்டுக்கு போய்விட்டாள்

அவள் போன சிறிதுநேரம் கழித்து சத்யன் தன் வீட்டுக்கு போய் மறுபடியும் பால்கனியில் உட்கார்ந்து குனிந்து கைகளால் தன் தலையை தாங்கிக்கொண்டான்

அவனுக்கு மான்சியின் உடல் மெலிவு மனதை வாட்டியது ... ஏன் இப்படி இருக்கிறாள்... ஏதோ பசிப் பட்டினியால் வாடியவள் மாதிரி இருக்கிறாளே... போட்டிருக்கும் ஜாக்கெட் கூட ரொம்ப லூசாக இருந்ததே...எல்லாம் என்னால்தான்... நான் அவளை பார்க்கவில்லை என்றால் அவள் நன்றாகத்தான் இருந்திருப்பாள்.. என்று நினைத்து கண்கலங்கியனான்

தன் முகத்தை கைகளால் மூடிக்கொண்டு குமுறிய சத்யனுக்கு திடுக்கென்று ஒருவிஷயம் ஞாபகம் வர... சட்டென எழுந்தான் ...

‘ ஏன் மான்சி அந்த மாத்திரைக் கவரை ஜாக்கெட்டுக்குள் மறைத்தாள்... அதுவும் வீட்டுக்கு அருகில் வந்தவுடன் மறைத்தாளே ... என்று நினைத்தவன் மனதில் ஏதோ விபரீதம் நடக்கபோவது போல தோன்ற

பதட்டத்துடன் மான்சியின் வீட்டுக்கதவை தட்டினான்... முன்புபோல் காஞ்சனாதான் கதவை திறந்தாள்

சத்யன் அவளை தாண்டி வேகமாக உள்ளே போக... பரணி ஹாலிலேயே அமர்ந்து டிவி பார்த்துக்கொண்டிருந்தார்

இவன் பதட்டத்தை பார்த்து பரணி வேகமாக எழுந்து “ என்ன சத்யன் என்னாச்சு “ என்று கேட்க

“ அங்கிள் மான்சி எங்க” என சத்யன் பதட்டத்துடன் கேட்க

“ ஏன் சத்யன் அவளோட ரூம்ல தான் இருக்கா” என்று பரணி சொல்லி வாய் மூடுவதற்குள்... சத்யன் பாய்ந்த ஓடி மான்சியின் அறைக்கதவை தட்டினான்

உள்ளேயிருந்து எந்த பதிலும் இல்லாது போக கதவை பலமாக தட்டிய சத்யன் “ மான்சி நான் சத்யன் வந்திருக்கேன் கதவை திற மான்சி” என்று கெஞ்சியவாறே குரல் கொடுக்க

பரணிக்கும் காஞ்சனாவுக்கும் ஒன்றுமே புரியவில்லை “ எனனாச்சு சத்யன்" பதட்டமாக கேட்டனர்

"அய்யோ அதை நான் அப்புறமா சொல்றேன்... மொதல்ல மான்சியை வெளியே வரச்சொல்லுங்களேன்... எனக்கு பயமாருக்கே மான்சி" என சத்யன் முகத்தை மூடிக்கொண்டு கதறியபடி சொல்ல

பரணிக்கு ஏதோ விபரீதம் என்று புரிய " மான்சி கதவை திற எத்தனை முறை தட்றது திற மான்சி" என்று அதட்டியவாறு கதவை தட்ட ... அவருக்கும் எந்த பதிலும் இல்லை

"மான்சி நீ கதவை திறக்கலேன்னா பரவாயில்லை... ஆனா உனக்கு ஏதாவது ஆச்சுன்னா அடுத்த நிமிஷம் நான் உயிரோட இருக்க மாட்டேன் இது சத்தியம் மான்சி" என்று சத்யன் உரக்கச் சொல்ல

பரணிக்கும் காஞ்சனாவுக்கும் ஏதோ விஷயம் புரிவது போல் இருக்க... கலவரத்துடன் சத்யனை பார்த்தனர்

" மான்சி நான் சொல்றதை நீ நம்பலை தான... சரி மான்சி நீ கதவை திறக்க வேண்டாம்... சப்போஸ் நீ உயிர் பிழைச்சாலும் அதை பார்க்க நான் உயிரோட இருக்கமாட்டேன் மான்சி" என சத்யன் கறிய மறுநிமிடமே கதவு பட்டென திறக்க

உடனே உள்ளே பாய்ந்து ஓடிய சத்யன் ...மான்சி கட்டிலின் ஒருமூலையில் உட்கார்ந்தருந்தாள்... முதலில் அறையை சுற்றிலும் தேடினான் ... கட்டிலில் அருகே இருந்த சிறிய டேபிளில் அந்த மாத்திரை கவர் வைக்க பட்டிருக்க வேகமாக அதை தாவியெடுத்த சத்யன் அதை பிரித்து பார்த்தான்...

உள்ளே இருந்த அட்டையில் மாத்திரைகள் பிரிக்கப்பட்டு ... மாத்திரைகள் அதற்க்குள்ளேயே இருந்தன ... சத்யனுக்கு நிம்மதியாக மூச்சுவர மான்சியின் அருகில் போனான்

பரணியும் காஞ்சனாவும் ஊமைகளாக அங்கே நடப்பதை வேடிக்கைப் பார்க்க....

சத்யன் அவர்களிடம் வந்து கையெடுத்துக்கும்பிட்டு " அங்கிள் தயவுசெய்து கொஞ்சம் வெளியே இருங்க .. நான் மான்சிகிட்ட தனியாக பேசனும்... இது எங்க ரெண்டுபேர் உயிர் பிரச்சனை ப்ளீஸ் அங்கிள் புரிஞ்சுக்கங்க.... நான் உங்ககிட்ட அப்புறமா எல்லாத்தையும் தெளிவா சொல்றேன்" என சத்யன் பரணியை பார்த்து கைகூப்பி கெஞ்ச

அடுத்த நிமிடம் பரணி எதுவுமே பேசாமல் தன் மனைவியை கூட்டிக்கொண்டு வெளியேறினார்

அவர் போனதுமே மான்சியை நெருங்கிய சத்யன் அவள் தோள்களை பற்றி எழுப்பி நிறுத்தி " மான்சி இது என்ன மாத்திரை சொல்லு ... இது தூக்கமாத்திரை இல்லைன்னு எனக்கு தெரியும் பின்னே வேற என்ன இத சொல்லு மான்சி'" என அவள் தோள்களை உலுக்கி கேட்க

மான்சி கரகரவென கண்ணீர் வடித்தாளே ஒழிய சத்யனுக்கு தகுந்த பதிலைச் சொல்லவில்லை



" மான்சி சொல்லு... நான் இதையெல்லாம் எடுத்துட்டு போய் மெடிக்கல் ஷாப்ல என்ன மாத்திரைகள்னு கேட்க ரொம்ப நேரம் ஆகாது... ஆனா இந்த விஷயம் வெளிய தெரியவேண்டாமேன்னு பார்க்கிறேன்... இப்போ சொல்றியா இல்லையா" என்று சத்யன் கோபமாக கேட்க

மான்சி சட்டென அவனை இறுக அணைத்துக்கொண்டு குலுங்கி கண்ணீர்விட

அவளை மேலும் இறுக்கி அணைத்த சத்யன் " என்னாச்சு கண்ணம்மா என்கிட்ட ஏன் மறைக்கிற" என பரிவுடன் கேட்க

அவன் பிடியில் இருந்து சற்று விலகிய மான்சி,,,, தன் முதுகை சுற்றியிருந்த அவன் வலது கையை எடுத்து தன் அடிவயிற்றில் வைத்து..... " இதுக்குத்தான் அந்த மாத்திரை வாங்கினேன் ... இதுக்குத்தான் சத்யன்" என்று கதறியபடி அவனை மறுபடியும் இறுக்கி அணைத்து

" என்னை கொன்னுடுங்க சத்யன் நான் உயிரோடவே இருக்ககூடாது... உங்கப்பிள்ளையை கருவிலேயே அழிக்க நெனைச்ச நான் உயிரோடவே இருக்ககூடாது சத்யன் ... நான் இருக்கவே கூடாது" என்று அவனை அணைத்துக்கொண்டு கதறியழுதாள் மான்சி


No comments:

Post a Comment