Thursday, March 19, 2015

எல்லாமே என் மான்சி - அத்தியாயம் - 6

சத்யன் அணைப்பில் தன் வலியை மறந்த மான்சி அதன்பின்னர் அமைதியாக தையலை போட்டுக்கொண்டு பெஞ்சில் இருந்து இறங்கினாள்

சத்யன் அவளை விலக்கி நிறுத்திவிட்டு தன் முகத்தை கர்சீப்பால் துடைத்துக்கொண்டு ... மான்சியின் கையை பிடித்துக்கொண்டு அந்த அறையை விட்டு வெளியே வரவும் பவானியம்மாள் அவள் கணவனுடன் வரவும் சரியாக இருந்தது

" என்னடி மான்சி என்னாச்சு" என்று பரபரப்புடன் விசாரித்த பவானியிடம் மான்சியை ஒப்படைத்துவிட்டு சத்யன் அந்த போலீஸ்காரருடன் போனான்

அவருக்கு வேண்டிய தகவல்களை சொல்லிவிட்டு கொஞ்சம் பணத்தை அவர் கைகளில் தினித்த சத்யன் தனது செல் நம்பரை அவரிடம் கொடுத்து எதுவானாலும் இனிமேல் இந்த நம்பரில் தொடர்பு கொள்ள சொல்லிவிட்டு மான்சியிடம் வந்தான்

மான்சி கட்டியிருந்த நீலநிற புடவையெல்லாம் ரத்தம் கறையாக காய்ந்து போயிருந்தது...

மான்சியை பவானியுடன் ஆட்டோவில் ஏற்றிவிட்டு சத்யன் தனது பைக்கில் அந்த ஆட்டோவை தொடர்ந்தான்



அப்பார்ட்மெண்ட்க்கு வந்ததும் மான்சியை மெதுவாக லிப்டில் அழைத்து சென்ற சத்யன் தனது வீட்டின் கதவை திறந்துவிட்டு எதுவுமே பேசாமல் அவளுக்கு வழிவிட்டு ஒதுங்கி நிற்க்க

மான்சியும் எதுவுமே பேசாமல் சத்யன் வீட்டுக்குள் போனாள் ....

அவள் பின்னாலேயே வந்த பவானி " என்ன சத்யா மான்சியோட கைப்பையில் தான் வீட்டு சாவி, அவ செல்போன், இந்த மாசத்து சம்பளப்பணம் எல்லாமே இருந்ததாமே ... வரும்போது ஆட்டோவில் சொன்னா ... இப்போ என்ன செய்றது .. என்கிட்டயும் மாத்து சாவி இல்லை ... இவளை என்வீட்டில் தங்கிக்கடின்னா வேனாம்ங்கற ... அதோட என் பொண்ணுக்கு வேற பிரசவம் ஆகியிருக்கு ... இப்போ என்ன செய்றது சத்யா" என்று பவானி வருத்தமாக கேட்க

சத்யன் மான்சியை சோபாவில் உட்காரவைத்து விட்டு " பரவாயில்லை ஆன்ட்டி இங்கேதான் இரண்டு ரூம் இருக்கில்ல... மான்சி அதுல ஒன்னுல தங்கட்டும் .. நான் பார்த்துக்கிறேன்" என்று சத்யன் கூறியதும்

" அப்பாடா எனக்கு இப்போதான் நிம்மதியாச்சு சத்யா.. நீ இவளை பார்த்துக்க நான் காலையில வர்றேன்" என்று வாசலை நோக்கி பவானி போக ... சத்யன் அவளை அனுப்பிவிட்டு கதவை மூட பின்னாடியே போனான்

கதவருகில் நின்று உள்ளே எட்டி பார்த்த பவானி " சத்யா நீ மான்சியை விரும்பறே அப்படின்னு எனக்கு தெரியும் ... நானும் கொஞ்ச நாளா உன்னையும் அவளையும் கவனிச்சுகிட்டு தான் இருக்கேன் ... இதுதான் சத்யா உனக்கு சந்தர்ப்பம் உன் மனசை அவளுக்கு புரியவை ... நான் காலையில வந்து பார்க்கிறேன்" என்று ரகசியமாக பவானி சொல்லிவிட்டு போக

சத்யன் முகத்தில் மகிழ்ச்சியும் உதட்டில் சிரிப்புமாக கதவை அடைத்துவிட்டு உள்ளே வந்தான் ... நான் என்ன மான்சியை காதலிக்கிறேன் என்று நெற்றியில் எழுதியா ஒட்டி வைத்துள்ளேன் ... இந்தம்மா இவ்வளவு எளிதாக கண்டுபிடித்து விட்டாளே என்று நினைத்தான் 

கதவை அடைத்து விட்டு உள்ளே வந்த சத்யன் மான்சியின் எதிர் சோபாவில் அமர்ந்து அவளையே சிறிதுநேரம் பார்த்தான்

மான்சி தலைகவிழ்ந்து அமர்ந்திருந்தாள்.... அவள் புடவையில் இருந்த ரத்த கறைகள காய்ந்து போயிருக்க ... ரொம்பவும் களைத்து சோர்ந்து போயிருந்தாள்

“மான்சி ” என்று சத்யன் அழைக்க அவளிடமிருந்து சிறிதுநேரம் கழித்தே “ம்” என்ற ஒரு வார்த்தை பதிலாக வந்தது

“ அந்த பையை தூக்கி பிடுங்க வந்தவன் முகத்தில் வீசியடிச்சிருக்கலாம்ல... அதை விட்டுட்டு என்ன மான்சி இதெல்லாம்” என சத்யன் மென்மையான குரலில் கேட்க

“ அதுலதான் நேத்து என் சம்பளம்... வீட்டு சாவி ... என் மொபைல் போன் எல்லாம் இருந்தது... அதான் அதை அவனுக்கு குடுக்க கூடாதுன்னு எவ்வளவோ போராடினேன் கடைசியில இப்படி ஆயிருச்சு” என்று தன் கையை அவன் முன் நீட்டி காண்பித்து மெதுவாக பேசினாள் மான்சி

சத்யன் நீட்டிய அவளின் கட்டு போட்டிருந்த கையின் விரல்நுனியை பற்றியவாறு “நீ சுலபமா சொல்லிட்ட மான்சி ஆனா வேற ஏதாவது ஆகியிருந்தா என்ன பண்றது... போலீஸ்காரர் போன் பண்ணப்போ என் உயிரே என்கிட்டே இல்லை மான்சி” என்று சத்யன் கூற

“நானும் அவன் கேட்டவுடனே பேக்கை குடுத்துடலாம்ன்னு தான் நெனைச்சேன்.... ஆனா ஏற்கனேவே எல்லாரும் என்னை பயந்தவன்னு சொல்லுவாங்க அப்புறமா இதுவேற வெளிய தெரிஞ்சா இன்னும் அதிகமா கிண்டல் பண்ணுவாங்க... அதனாலதான் பேக்கை கொடுக்காம போராடினேன்” என்றாள் மான்சி

சத்யனுக்கு அதை கேட்டதும் சிரிப்பு வந்தது... தன் கையில் இருந்த அவள் விரல்களை வருடியபடியே “பரவாயில்லை ரொம்ப வீரமான போராட்டம் தான் .... ஏன்னா உள்ளங்கையில் காயம் பட்டுருக்கே அதான் சொன்னேன்” சத்யன் மெல்லிய புன்னகையுடன் சொல்ல

“ அவன் கத்தியால குத்த வந்தப்போ நான் முன்னாடி கையை நீட்டி தடுத்தேன் அதான் கையில கிழிச்சிட்டான் “ என மான்சி சொன்னதும்

இதை கேட்டதும் சத்யனிடம் அதுவரை இருந்த சிரிப்பு போன இடம் தெரியவில்லை.... அந்த போராட்டத்தில் கத்தி வேறெங்காவது பட்டிருந்தால் என்ன ஆகியிருக்கும் என்று நினைக்கும் போதே சத்யனுக்கு இதயம் அதன் இடத்தில் இருந்து நழுவி இடமாறுவது போல் இருக்க மான்சியின் விரல்களை அழுத்தமாக பற்றிக்கொண்டான்

அங்கே இருவரின் மவுனத்தால் சூழ்நிலை இறுக்கமாவது போல் இருக்க சத்யன் அதை கலைக்கும் முயற்ச்சியாக “ எல்லாம் சரி என்னோட போன் நம்பர் எப்படி போலீஸ்க்கு தெரிஞ்சது” என கேட்க

“ஏன் நான்தான் சொன்னேன்” என்றாள் மான்சி

“ உனக்கு எப்படி தெரியும்... உன் செல் வேற பேக்லயே மிஸ் ஆயிருச்சு அப்புறமா எப்படி என் நம்பரை போலீஸ் கிட்ட சொன்ன” என்று சத்யன் அவள் கண்களை பார்த்துக்கொண்டே கேட்டான்

இதற்கு அவளிடமிருந்து எந்த பதிலும் இல்லை ...மான்சி சட்டெனத் தலையை கவிழ்ந்து கொண்டாள்

“ சொல்லு மான்சி,.. என் நம்பரை மனப்பாடம் பண்ணி வச்சிருந்தயா... ஏன் ” என்றான் சத்யன் விடாமல்

மான்சி அவனை நிமிர்ந்து பார்த்து “ எனக்கு கை வலிக்குது வேற டிரஸ் மாத்திகிட்டு தூங்கனும்” என்று மான்சி சம்மந்தமில்லாமல் பதில் சொன்னாள்

அந்த பேச்சை தவிர்கிறாள் என்றுணர்ந்த சத்யன் சோபாவில் இருந்து எழுந்து கொண்டு “ சரி வா “ என்று அவளை நோக்கி கையை நீட்ட ... அவள் அவன் கையை பற்றாமல் எழுந்து கொள்ள ....

‘ம்ம் இன்னும் எவ்வளவு நேரம்னு இந்த வீராப்புன்னு பார்க்கலாம்...என்னோட உதவி இல்லாம ஒன்னுமே பண்ண முடியாதே’ என நினைத்துக்கொண்டு தனது அறைக்கு பக்கத்தில் இருந்த அறைக்கு சத்யன் போக .... மான்சி அவனை தெடர்ந்து போனாள்

அந்த அறையின் பாத்ரூமை திறந்து ஹீட்டரை போட்ட சத்யன் அங்கே சோப் டவல் எல்லாம் இருக்கிறதா என்று பார்த்துவிட்டு வெளியே வந்தான்

“ மான்சி ஹீட்டர் போட்டுருக்கேன் ... முடிஞ்ச வரைக்கும் கை நனையாம பார்த்துக்க”... என்று சொல்ல

“ ம் ஆனா கை நனையாம எப்படி முகம் கழுவுறது” என்று மான்சி அவனை திருப்பி கேட்க

“ அப்போ நான் வந்து கெல்ப் பண்ணட்டுமா” என்று சத்யன் குறும்புத்தனமாக கேட்டான்

மான்சி அவன் ஒரே முறையாக முறைக்க.... “சரி சரி முறைக்காதே இதோ வர்றேன் இரு” என்று சொல்லிவிட்டு சிரித்தபடி வெளியே போனான்

போன கொஞ்சநேரத்தில் வந்த சத்யனின் கைகளில் சில உடைகளும் ஒரு பாலித்தீன் கவரும் இருந்தது.... உடைகளை பாத்ரூமுக்குள் போட்டுவிட்டு வெளியே வந்து “ கையை இப்படி நீட்டு மான்சி “ என்றான்

மான்சி அவன் முன்னால் கையை நீட்ட.... சத்யன் அந்த பாலித்தீன் கவரால் அவள் வலதுகையின் மணிக்கட்டு வரை சுற்றி கவர் செய்தான்

“ ம் இப்போ போய் முகம் கழுவு... ஆனா குளிக்காதே காயத்தால பீவர் வந்தாலும் வரும்” என்றவன் அவள் பாத்ரூம் போக திரும்பியதும்

“ கொஞ்சம் இரு மான்சி... உள்ளே என்னோட லுங்கி டீசர்டும் தான் வச்சிருக்கேன்... நீ போட்டுக்கற மாதிரி என்கிட்ட வேறெந்த உடையும் இல்லை இப்போ அதை போட்டுகிட்டு இந்த புடவையை அவுத்து போடு ஒரே ரத்தமா இருக்கு ... நான் காலையில வெளியே போய் உனக்கு ஏதாவது டிரஸ் வாங்கிட்டு வர்றேன்..... மறுபடியும் சொல்றேன் கையை நனைச்சிடாதே” என்று அக்கரையுடன் சத்யன் சொல்ல ..... மான்சி சரியென தலையசைத்து விட்டு உள்ளே போனாள்

சத்யனுக்கு வியப்பாக இருந்தது .... இந்த மூன்று மணி நேரத்தில் அவளிடம் இருந்த காதலையும் மீறி ஒரு பிரிக்கமுடியாத பந்தம் உண்டாகிவிட்டதை உணர்ந்தான்...

வேகமாக தன் அறைக்கு போய் ஒரு அவசர குளியலை போட்டுவிட்டு ஒரு பனியனையும் ஒரு சாட்சை மாட்டிக்கொண்டு வந்த சத்யன்... மணி என்ன ஆச்சு என்று பார்த்தான் ... இரவு மணி பத்தரை ஆகியிருந்தது ...

சத்யன் கிச்சனுக்கு போய் தனக்கு வாங்கி வந்த இரவு உணவை கெட்டுபோய் விட்டதா என்று பார்த்தான் ... இட்லி என்பதால் கெடவில்லை... சத்யன் அதையெல்லாம் எடுத்து வந்து டேபிளில் வைத்துவிட்டு ... கொஞ்சம் பிரட்டையும் டோஸ்ட்டரில் போட்டு வாட்டி எடுத்து வந்து வைத்தான்
அந்த அறையில் இருந்து மான்சி வரும் ஓசை கேட்டு சட்டென திரும்பி பார்த்தான் சத்யன்.... மான்சி இவனுடைய பொருந்தாத டீசர்டை லுங்கியினுல் விட்டு இன் பண்ணி இருந்தாள்.... லுங்கியை கட்ட தெரியாமல் வயிற்றில் முடிச்சு போட்டிருந்தாள்...

அவளை பார்த்தவுடனேயே தெரிந்தது அவள் குளித்திருக்கிறாள் என்று
“குளிச்சயா மான்சி”... என சத்யன் லேசான கோபத்தோடு கேட்க

“ம் உடம்பெல்லாம் ஒரே பிளட் வாசனை எனக்கு ஒப்பவே இல்லை அதான் குளிச்சேன்... பீவரெல்லாம் வராது” என்று அவனை சமாதானப் படுத்துவது போல் கூறினாள்

சத்யனுக்கும் அவள் சொல்வதுதான் சரியென்று தோன்றியது ... குளிக்கவில்லை என்றாள் இரவு நிச்சயமாக தூக்கம் வராது என நினைத்தான்

“சரி வா சாப்பிடலாம்” என்றவன் அவளுக்கு ஒரு தட்டு வைத்து அதில் இரண்டு இட்லியை வைத்துவிட்டு சாம்பாரை ஊற்றிவிட்டு ... தனக்கும் அதே போல் வைத்துக்கொண்டு அமர்ந்தான்

“ எனக்கு சாப்பிட ஒரு ஸ்பூன் குடுங்க” என்று மான்சி கேட்டதும்

ச்சே அவள் நிலைமையை மறந்து விட்டோமே என நினைத்தவன்... எழுந்து கிச்சனுக்கு போய் ஒரு ஸ்பூனை எடுத்து வந்து அவளிடம் நீட்டினான்

அதை வாங்க அவள் கையை நீட்டியபோதுதான் சத்யன் கவனித்தான் .. அவன் அவள் கையில் கட்டியிருந்த கவருக்கள்ளே கையில் போடப்பட்ட கட்டில் இருந்து ரத்தம் கசிந்திருந்தது..

அதை பார்த்ததும் சத்யன் பதறிப்போய் “ என்ன மான்சி இது ரத்தம் கசிஞ்சிருக்கு... கையை ரொம்ப அசைச்சியா ... பின்னே அசைக்கமா எப்படி குளிச்சிருப்ப” என்று எரிச்சலாக சொன்னான்

மான்சி எதுவும் பேசாமல் தலைகுனிந்த படி அமைதியாக இருக்க .... அவள் மவுனத்தை பார்த்த சத்யன்

“ ச்சே இதுக்குத்தான் சொன்னேன் குளிக்க வேண்டாம்ன்னு.. இப்போ பாரு எப்படி ரத்தம் வந்திருக்கு ” என்ற கோபமாக சொன்னவன் ...

கையில் இருந்த ஸ்பூனை கீழே போட்டுவிட்டு... அவள் கையில் கட்டியிருந்த கவரை பிரித்து எடுத்து போய் குப்பை கூடையில் போட்டுவிட்டு தன் கையை சுத்தமாக கழுவிவிட்டு வந்தான்

தனது தட்டை ஒதுக்கிவிட்டு அவள் தட்டை எடுத்து இட்லியை சாம்பாரில் தொட்டு ஊட்டுவதற்காக அவள் வாயருகே நீட்டினான்
மான்சி வாயை திறக்காமல் அவன் முகத்தையே பார்க்க

“ வாயை திற மான்சி ... நீ ஸ்பூன் போட்டு சாப்பிட்டா கையசைவில் இன்னும் அதிகமா ரத்தம் கசியும்... அப்புறம் உள்ளே போட்ருக்க ஸ்டிச்சிங்க் பிச்சிக்கும்... ம் வாயை திற மான்சி” என்று சத்யன் அதட்ட

மான்சி பட்டென வாயை திறந்தாள் அவள் வாயை திறந்தது சத்யனின் அன்புக்கு கட்டுப்பட்டா ... இல்லை அவன் அதட்டலுக்கு கட்டுப்பட்டா என்று அவளுக்கு மட்டுமே தெரியும் ...



ஆனால் எதுவுமே சொல்லாமல் அவன் கண்களை பார்த்துக்கொண்டே அவன் கொடுத்ததை என்ன என்று பார்க்காமலேயே சாப்பிட்டாள்

சத்யன் அவளுக்கு ஊட்டிவிட்டு... தானும் சாப்பிட்டான் பிறகு தண்ணீரால் அவள் வாயை தொடைத்து விட்டான்... பிறகு கிச்சன் போய் பாலை சூடு பண்ணி எடுத்து வந்து அவள் இடது கையில் கொடுக்க

மான்சி மவுனமாக பாலை வாங்கி குடித்துவிட்டு தான் குளித்த அறைக்கு போனாள் ... சத்யன் அவள் பின்னாலேயே போய் அந்த அறையின் ஏஸியை ஆன் செய்தான்

மான்சி அங்கிருந்த கட்டிலில் படுப்பதற்காக அமர ...

" இரு மான்சி" என்ற சத்யன் அவள் தலையில் இருந்த ரப்பர் பேன்ட் எடுத்து கலைந்து கிடந்த அவள் கூந்தலை சேர்த்து பிடித்து அழுத்தமாக போட்டான்

பிறகு அவள் தோள் பற்றி படுக்கையில் அவளை சாய்த்து விட்டு பெட்சீட்டால் மூடிவிட்டு குட்நைட் மான்சி என்று கூறிவிட்டு கதவை மூடிக்கொண்டு வெளியே வந்தான் 

மான்சி படுத்திருந்த அறையை விட்டு வெளியே வந்த சத்யன் தனது அறைக்கு போய் படுக்கலாம் என்று நினைத்து போனான் ... பிறகு ஏதோ யோசனையில் சோபாவில் வந்து படுத்துக்கொண்டான்

இந்த நிலையில் மான்சி தன் அறையில் படுத்திருக்கும் போது தாம் போய் தனது அறையில் படுத்துக்கொண்டால் பாதி ராத்திரியில் அவளுக்கு ஏதாவது என்றால் தனக்கு தெரியாமலே போய்விடும் என்று நினைத்தான்

மனசு லேசாக இருக்க சோபாவில் கால் நீட்டி படுத்த சத்யன் அன்றைய அலைச்சல் காரணமாக படுத்த சிறிதுநேரத்திலேயே நன்றாக உறங்கிப்போனான்....

சோபாவில் ஒரே மாதிரியாக படுத்திருந்ததால் கழுத்து வலிப்பதுபோல் இருக்க... மறுபக்கமாக புரண்டு படுத்தவன் ஏதோ முனங்கல் ஒலிபோல கேட்க சட்டென கண்விழித்தான்

என்ன சத்தம் என்று உன்னிப்பாக கேட்ட சத்யன் சத்தம் மான்சி படுத்திருந்த அறையில் இருந்து வரவே ... வாரிச்சுருட்டி எழுந்து அந்த அறையை நோக்கி ஓடி கதவை தள்ளி திறந்தான் ... அங்கே

மான்சி படுக்கையில் துடித்தபடி தன் எதிரில் யாரோ இருப்பது போல தனது கைகளால் எதிரில் இருப்பவனுடன் போராடுவது போல் காற்றுடன் கைகளை வீசி போராடிக்கொண்டிருந்தாள்

அதை பார்த்த சத்யனுக்கு ஒரு நிமிடத்தில் புரிந்து போனது…. இது இரவு நடந்த போராட்த்தின் தாக்கம் என்று புரிந்த சத்யன்...

ஒரு நிமிடம் கூட தாமதிக்காமல் நாலே எட்டில் கட்டிலை அடைந்து அவளை தூக்கி தன் மார்போடு அணைத்தான்

இவன் அணைத்ததும் மான்சியின் போராட்டம் இன்னும் அதிகமானது... இவனிடமிருந்து விடுபட பலமாக போராடினாள்.... அவள் கைகள் போராட ... அவள் உதடுகள் துடித்தபடி கண்களை இறுக்கமாக மூடிக்கொண்டு இருந்தாள்

“ ச்சு மான்சி நான்தான்ம்மா சத்யன் கண்ணை திறந்து பாரு மான்சி” என சத்யன் அவளை ஒரு நிலைக்கு கொண்டு வர தன்னால் இயன்றவரை அவளை ஆறுதல் படுத்தினான்

ஆனால் மான்சியோ அவன் மார்பில் கைவைத்து அவன் தள்ளிவிட முயற்சித்தாள் ... அவன் கன்னத்திலும் கழுத்திலும் தன் விரல் நகங்களால் கோடு கிழித்தாள்....

சத்யன் அத்தனையும் பொறுத்துக்கொண்டு அவள் முகத்தை நிமிர்த்தி கன்னங்களில் தட்டினான்

“ இதோபார் மான்சி நீ இப்போ நம்ம வீட்டில் இருக்க பயப்படாதே மான்சி கண்ணை திற மான்சி” என்று மறுபடியும் மறுபடியும் சத்யன் அவள் கன்னத்தில் தட்டியவாறு சொல்ல

மான்சியின் எதிர்ப்பு கொஞ்சம் கொஞ்சமாக குறைந்தது.... “ மான்சி கண்ணை திறந்து பாரு ப்ளீஸ் நீ எங்கே இருக்கேன்னு கண்ணை திறந்து பார் மான்சி” என சத்யன் அவளை தன் மார்போடு அணைத்தவாறே கூற

மான்சி மெதுவாக தனது கண்களை திறந்து அவன் மார்பில் இருந்தவாறே அவனை அன்னாந்து பார்க்க ....

அவன் மார்பில் தான் நாம் இருக்கிறோம் என்று அவள் புரிந்துகொண்டதற்கு அடையாளமாக அவள் முகத்தில் ஒரு சிறு நிம்மதி தோன்றியது

அவள் கண்களில் தவிப்போடு கண்ணீர் வழிய உதடுகள் எதையோ பேசத் துடிக்க மான்சி அவன் முகத்தை பார்க்க ... அவள் முகத்தையே பார்த்த சத்யன் அடுத்த நிமிடம் தனது கட்டுபாட்டை இழந்தான்

அவள் முகத்தை நோக்கி குனிந்த சத்யன் அவள் கண்ணீர் வழிந்த கண்களில் மாறிமாறி முத்தமிட்டான் ....

அவள் கண்ணீரின் உப்புச்சுவையை தனது உதடுகளால் துடைத்து ருசித்தான் ... பிறகு அவள் கன்னங்களில் படிந்திருந்த கண்ணீர் கறையை தனது நாக்கால் நக்கியொடுத்து சுவைத்தான் ....

பிறகு அவளின் துடித்துக்கொண்டிருந்த இதழ்களை தனது உதடுகளால் சிறைபடுத்தி அதன் துடிப்பை அடக்கினான்

அவன் உதடும் நாக்கும் தன் கண்களிலும் கன்னத்திலும் புரண்ட போது அமைதியாக இருந்த மான்சி .... அவன் அவள் உதட்டை கவ்வியதும் கண்களை இறுக மூடி திமிறிக்கொண்டு தனது எதிர்ப்பை காட்டினாள்

அவள் திமிறியதும் அவள் உதட்டை விடுவித்த சத்யன் தனது வலது கையை அவள் பின்னந்தலையில் விட்டு தூக்கி தன் முகத்துக்கு நேராக கொண்டு வந்து “ ஸ் மான்சி என்னம்மா நான் ப்ளீஸ் மான்சி என்னை பாரு” என ஒருமாதிரி விரகமும் தாபமும் நிறைந்த குரலில் கிசுகிசுப்பாக கெஞ்சியபடி சொல்ல

மான்சி தன் விழிகளை திறந்து தன் முகத்துக்கு அருகாமையில் இருந்த சத்யனின் கண்களை நேராக பார்க்க ...

சத்யன் குனிந்து மறுபடியும் அவள் இதழ்களில் தனது உதட்டை பதிக்க...

இப்போது மான்சியின் எதிர்ப்பு சிறிது குறைந்தாலும் அவனுக்கு ஒத்துழைக்காமல் தனது இதழ்களை சேர்த்து வைத்துக்கொண்டிருந்தாள்

சத்யன் மறுபடியும் மறுபடியும் அவள் மென்மையான இதழ்களில் தனது முரட்டு உதடுகளை அழுத்தி சத்தமிட்டு முத்தமிட்டான்

அவன் கொடுத்த முத்தத்தின் சத்தம் அந்த அறையில் எதிரொலித்தது ... சத்யன் மூன்றாவது முறையாக அவளை முத்தமிடும் போது அவள் இதழ்கள் பிளந்துகொண்டன...

சந்தோஷமான சத்யன் எங்கே அவள் மறுபடியும் இதழ்களை மூடிக்கொள்ள போகிறாளோ என பயந்து அவசரஅவசரமாக தன் நாக்கை அவள் இதழ் பிளவுக்குள் செலுத்தினான்

தன் நாக்கை அவள் வாயினுள் விட்டு நன்றாக சுழற்றி அவள் வாயில் உமிழ்நீரை சுரக்க வைத்தான்.... சுரந்த நீரை தன் நாக்கை குழியாக்கி அதில் தேக்கி பிறகு தன் உதட்டால் உறிஞ்சினான்

சத்யன் இதுவரை தேன் குடித்ததில்லை ஆனால் தேன் இப்படித்தான் இருக்கும் என்று அவன் நாக்கும் உதடுகளும் சொன்னது....

சத்யன் எதை முதலில் செய்யவேண்டும் எதை பிறகு செய்யவேண்டும் என்று புரியாமல் ரொம்ப தடுமாறினான்...
முதலில் அவள் கண்களில் முத்தமிடுவான் அப்புறம் திடீரென கீழே இறங்கி வந்து அவள் பச்சை நரம்புகள் தெரியும் கழுத்தை வளைத்து அங்கே தன் உதடுகளை பதிப்பான்...
மீண்டும் மேலேறி அவள் நெற்றியில் முத்தமிடுவான் ..
சட்டென அவள் இதழ்களை கவ்வி முன்புபோல் தேன் குடிக்கும் வேலையை சிந்தாமல் சிதறாமல் செய்வான்

ஆனால் இவன்தான் தேன் குடித்த மயக்கத்தில் தடுமாறுகிறான்... அவள் ஏன் இவன் கைகளில் மயங்கி கிடக்கிறாள்



சத்யனுக்கு முத்தக்கட்டத்தில் இருந்து அடுத்தாக மூழ்கும் கட்டத்துக்கு போக ஆசை...

இல்லையென்றால் அவன் சாட்ஸுக்குள் இருக்கும் அவன் ஆண்மை தனது வருத்தத்தை தனது அடர்த்தியான கண்ணீரை சிந்தி தெரிவிக்கும் நிலையில் இருந்தது

சத்யன் முத்தமிடுவதை நிறுத்திவிட்டு அவள் முகத்தை நிமிர்த்தி ஏக்கத்துடன் பார்க்க... அவள் இவன் பார்வையை ஒருநிமிடம்தான் தாங்கினாள் ... பிறகு கண்களை மூடி அவன் மார்பில் அடைக்கலமானாள்

அதுவரை அவள் சம்மதத்தை எதிர்பார்த்து மூச்சுவிடாமல் இருந்த சத்யன் ஊப்ஸ் என்று பெரிதாக மூச்சுவிட்டு அவளை இறுக்கி அணைத்துக்கொண்டே படுக்கையில் சரிந்தான்

சத்யன் அவளை அணைத்துகொண்டு போர்வையால் தங்கள் இருவரையும் மூடிக்கொள்ள... மான்சி அவன் மார்புக்குளேயே புகுந்துவிடுபவள் போல இன்னும் ஆழப்புதைந்தாள்


No comments:

Post a Comment