Saturday, March 21, 2015

எல்லாமே என் மான்சி - அத்தியாயம் - 13


" சரி நீங்க ஏன் கொஞ்சநேரம் முன்னாடி சிரிச்சீங்க ... அப்புறமா சொல்றேன்னு சொன்னீங்களே" என்று மான்சி கொஞ்சலுடன் கேட்க

சத்யன் மறுபடியும் அன்று நடந்ததை நினைத்து சிரித்துவிட்டு " இல்ல மான்சி நான் உன்னை முதன்முதலாக பார்த்தப்ப .. என்னோட கண்ணியமான பார்வைதான் உனக்கு பிடிச்சதுன்னு சொன்னேல்ல... அதை நினைச்சுதான் சிரிச்சேன்" என்றவன் மறுபடியும் வாய்விட்டு சிரிக்க

" மொதல்ல என்ன காரணம்னு சொல்லிட்டு சிரிங்க" என்று மான்சி அவன் மார்பில் பொய் கோபத்துடன் குத்தினாள்

" அது வேறொன்னும் இல்ல மான்சி எனக்கு அம்மை போட்டு இருந்தப்போ நீ பணிவிடை செய்யவந்தேல்ல அப்ப நான் உன்னை எங்கெங்கோ பார்த்து ரசிச்சேன்... அது தெரியாம நீ என்னை கண்ணியவான் அப்படின்னு சொன்னதும் .. எனக்கு சிரிப்பு வந்துருச்சு மான்சி வேற ஒன்னுமில்ல" என்ற சத்யன் குலுங்கி சிரிக்க

" ச்சே சரியான பிராடு.." என மான்சி அவனை பார்த்து சிரித்தாள்



“ மான்சி நீ குளிச்சுட்டு போய் சைந்தவியை கூட்டிட்டு வா.. இனிமே இதுமாதிரி அவளை ரொம்ப நாரம் அங்க தனியா விட்டுட்டு நாம இங்கே இருக்கக்கூடாது... நான் சொல்றது உனக்கு புரியும்ன்னு நினைக்கிறேன் மான்சி” என்று சத்யன் கூற

மான்சி முகத்தில் சந்தோஷச் சிரிப்புடன் “ சரிங்க... நான் என் ரூம்ல போய் குளிக்கிறேன் ” என்று மான்சி எழுந்திருக்க

“ அடிப்பாவி நாம புருஷன் பொண்டாட்டிங்கறத மறந்துட்டயா... என்ன இது உன் ரூம் என் ரூமுன்னு சொல்ற இனிமே இங்கதான் ரெண்டுபேரும் இருக்கனும்... மொதல்ல காலையில உன்னோட திங்ஸ்ஸெல்லாம் எடுத்துட்டு வந்து இங்கே வச்சுடு... இப்போ அதுக்கு அட்வான்ஸா என்னோட சேர்ந்து குளி ” என்று கூறிவிட்டு சத்யன் அவளை இழுத்துக்கொண்டு பாத்ரூமுக்குள் நுழைய

மான்சி அவனை தடுக்க இயலாது தனது உடைகளை அள்ளி தன் உடலைச் சுற்றியவாறு அவனுடன் தடுமாறியபடி போனாள்

குளிக்க வைககிறேன் பேர்வழி என்று சத்யன் செய்த அட்டகாசங்களை மான்சியால் தாங்க முடியவில்லை... அவன் கைகளில் கொடியாய் துவண்டாள் ... அவன் அவளை தாங்கும் கிளையானான்

தாம்பத்யத்தின் பூரணத்துவம் அறிந்த இருவரின் முகத்தில் எல்லையில்லா பூரிப்பும் சந்தோஷமும் ஒரு மனிதனுக்கு திருமணம் எவ்வளவு முக்கியம் என்பதை உணர்த்துவதாக இருந்தது

ஒருவழியாக அவனிடமிருந்து தப்பித்து வெளியே வந்த மான்சி உடைகளை போட்டுக்கொண்டு தன் அம்மா வீட்டுக்கு சைந்தவியை அழைத்து வந்தாள்

மகள் அப்போதுதான் குளித்திருப்பதை பார்த்த காஞ்சனா முகத்தில் சந்தோஷத்துடன் “ இன்னிக்கு நைட் சவி இங்கேயே சாப்பிட்டு படுத்துக்கட்டும் மான்சி” என்று கூற

“ இல்லம்மா அவரு கூட்டிட்டு வரச்சொன்னார்” என்று தன் தாயின் முகத்தை பார்க்க கூச்சப்பட்டு தரையை பார்த்துக்கொண்டே மான்சி சொல்ல
அதெல்லாம் ஒன்னும் சொல்லமாட்டார் ... நீ போய் நான் இங்கயே சவியை நிறுத்திக்கிட்டேன் சொல்லு” என்றாள் மான்சியின் அம்மா

மான்சி தன் வீட்டுக்கு போகத் திரும்பியதும் மறுபடியும் மான்சி என்று அழைத்தாள் காஞ்சனா... மான்சி திரும்பி பார்க்க

“ ம் இப்போ கொஞ்சம் ஜாக்கிரதையா இருக்கனும் மான்சி ... ஆம்பளைக்கு ஒன்னும் தெரியாது நாம எடுத்து சொல்லனும்.... நாளைக்கு நீங்க ரெண்டுபேரும் கோவிலுக்கு போகனும் அதனால கொஞ்சம் சீக்கிரமா எழுந்து குளிச்சுட்டு கிளம்புங்க” என்றாள் காஞ்சனா

மானசி சரியென்பது போல் தலையசைத்து விட்டு தன் வீட்டுக்கு போனாள்


அன்று இரவு சத்யனும் மான்சி காமத்தை தவிர மற்ற எல்லா வகையிலும் ஒருவரையொருவர் நன்றாக புரிந்துகொண்டனார்.... இரவு சாப்பாட்டை தன் கையிலெடுத்து சத்யனுக்கு ஊட்டிவிட்டாள் மான்சி... சத்யன் அவளை தன் மடியில் அமர்த்தி சாய்த்துக்கொண்டே டிவி பார்த்தான்...

அவளுக்கு இரவு உணவு ஒப்பாமல் வாந்தியெடுக்க அதை அருவருப்பில்லாமல் தன் கைகளில் ஏந்தி சிங்கில் கொட்டினான்... அவள் முகத்தை துடைத்து சோபாவில் படுக்கவைத்து விட்டு.. கீழே தரையில் சிந்தியிருக்கும் வாந்தியை கழுவி சத்தம் செய்தான்

அவளை அழைத்துச் சென்று படுக்கையில் படுத்தவன்... அவளை அணைத்துக்கொண்டு உறங்க... நடுஇரவில் விழித்து இருவரும் நிர்வாணத்தை உடையாக அணிந்தனர்... சத்யன் அவளை இழுத்து தன்மீது போட்டுக்கொண்டு.... அவளுக்கு புதிதாக ஒரு காமப்பாடத்தை நடத்தினான்...

அவளும் அதில் தேற்ச்சி பெற்ற மாணவியாக தன் வேலையை சிறப்பாக செய்து தன் சீரான இயக்கத்தால் அவனை உச்சத்துக்கு கொண்டு போனாள்... அவளின் சிறப்பான நேர்த்தியான இயக்கத்தை சத்யன் சொக்கிப்போய் கண்மூடி ரசித்தான் ...

அதன்பின் இருவரும் விடியவிடிய விழித்திருந்து தங்களின் நிர்வாண உடலை இறுக்கிக்கொண்டு ஆயிரம் கதைகள் பேசினர்... ஆனால் அந்த ஆயிரத்தில் ஒன்றுகூட உருப்படியான விஷயமில்லை... விடிந்ததும் இரவு பேசிய எதுவுமே இருவருக்கும் ஞாபகம் இல்லை

மான்சிக்க அன்று காலையில் கோயிலுக்கு போகவேண்டும் என்று தன் அம்மா சொன்னது ஞாபகம் வர அவனைவிட்டு விலகி எழுந்து குளித்துவிட்டு வந்து சத்யனை பார்த்தாள்

அவ்வளவு நேரம் விழித்திருந்தவன் அவள் குளித்துவிட்டு வருவதற்குள் தூங்கிவிட்டதை பார்த்ததும் மான்சிக்கு சிரிப்பு வந்தது

அவன் தலைமுடியை கலைத்து விட்டு அவனை உலுக்கி எழுப்பி பாத்ரூமுக்கு தள்ளிக்கொண்டு போனாள்

சத்யன் குளித்துவிட்டு வந்ததும் இருவரும் கோயிலுக்கு கிளம்பினர்... சத்யன் அவளுக்காக புதிதாக தான் வாங்கி வைத்திருந்த கொலுசைஅவளிடம் கொடுத்தான்

பிறகு அதை வாங்கி தானே அணிவித்து விடுவதாக கூறி அவள் காலருகே மண்டியிட்டு அமர்ந்து... அவள் பொற்பாதங்களை எடுத்து தன் முழங்கால் மீதுவைத்து அந்த கொலுசை அணிவித்துவிட்டு.... அவளின் இரண்டு தாமரையின் இதழ்கள் போன்ற மென்மையான பாதத்தில் குனிந்து முத்தமிட்டான்

இருவரும் கதவை பூட்டிகொண்டு வெளியே வர.. சத்யன் ஏதோ நினைவு வந்தவனாய்.. மான்சியை இழுத்துக்கொண்டு வீட்டுக்குள் போய் அவளை புடவை அவிழ்த்துவிட்டு சுடிதாரில் கோயிலுக்கு வரச்சொல்லி பிடிவாதம் செய்ய ... மான்சியும் வேறு வழியில்லாமல் சுடிதாரை அணிந்து அவனுடன் கோயிலுக்கு புறப்பட்டாள்

வீட்டு சாவியை தன் அம்மாவிடம் கொடுத்துவிட்டு சைந்தவியை தேட... அவள் பரணியுடன் வெளியே போயிருந்தாள் ... பிறகு இருவரும் லிப்டில் கீழ் தளம் வந்து சத்யன் தனது பைக்கை எடுத்து வர மான்சி அவன் பின்னால் ஏறி அமர்ந்துகொள்ள சத்யன் கிளம்பினான்



சிறிதுதூரம் போனதும் வண்டியை நிறுத்திய சத்யன் பின்னால் திரும்பி “ மான்சி” என்று கூப்பிட

“ ம் என்னங்க” என்று அவன் தோளில் தன் நாடியை வைத்துகொண்டு மான்சி கேட்க

“ நீ இறங்கி ரெண்டு பக்கமும் கால்போட்டு உட்காரு” என்றான் சத்யன்

“ ஏன் இப்போ உட்கார்திருக்கிறதே நல்லாத்தானே இருக்கு” என மான்சி கூற

“ ப்ளீஸ் நான் சொல்றதை கேளேன் மான்சி” என்று சத்யன் வற்புறுத்த
சரி என்ற மான்சி இறங்கி இரண்டு பக்கமும் கால்போட்டு உட்கார்ந்தாள்

“ அப்பிடியே என்மேல சாஞ்சு இடுப்பில் கைப்போட்டு பிடிச்சுக்க மான்சி” என்று சத்யன் சொல்ல

மான்சி மறுப்பேச்சின்றி தனது கைகளால் அவன் இடுப்பை சுற்றி வளைத்து அவன் முதுகில் தனது மார்புகளை அழுத்தி அணைத்தவாறு உட்கார

சத்யன் உற்ச்சாகமாக பைக்கை ஸ்டார்ட் செய்து போனான் ...

இது அவனுடைய பத்துவருட கனவு.... மற்றவர்களை போல் தானும் ஒருநாள் தமிழ்ச்செல்வியுடன் போகவேண்டும் என்ற அவனது ஆசை இன்று அவன் காதல் மனைவி மான்சியால் நிறைவேறியது 



முற்றும்








No comments:

Post a Comment