Tuesday, April 7, 2015

என் உயிரே மான்சி - அத்தியாயம் - 18

மடியில் இருந்த சத்யனின் தலைமுடியை தன் விரல்களால் கோதிய மான்சி,. அவன் குமுறலால் தன்னுடைய கண்கள் கலங்கி சிறிதுநேரம் தன்நிலையை மறக்க,...

அவளின் மடியில் படுத்து குலுங்கி கண்ணீர்விட்ட சத்யன் அவளுடைய வருடலில் மேலும் மனமுடைந்தான்,.. சத்யன் அவள் முழங்காலை கட்டியிருந்த தன் கைகளை எடுத்து அவள் இடுப்பை சுற்றி வளைத்து அவள் அடிவயிற்றில் முகம் பதித்தான்

அவனுடைய இந்த அவசர புத்தியால்.. மான்சி சட்டென சுதாரித்துக்கொண்டு,. தன் வயிற்றில் இருந்த அவன் தலையை பிடிவாதமாக பிடித்து நிமிர்த்தினாள் ,.

கண்களில் வழிந்த கண்ணீரும் முகம் முழுதும் ஏக்கமுமாக சத்யன் அவளை பார்க்க,.. அந்த ஏக்கப் பார்வை மான்சிக்க எதையோ அழுத்தமாய் எடுத்து சொல்ல.. நான் அதற்க்கு தயாரில்லை என்பதுபோல் மான்சி சட்டென்று அவனை விலக்கிவிட்டு எழுந்தாள்



சத்யன் அவளின் இந்த மாற்றத்தால் ஏமாறவில்லை,.. அவனுக்கு தெரியும் அவள் மனம் அவ்வளவு சீக்கிரமா மாறாது என்று,.. இருந்தாலும் ஏழுவருட பிரிவும்,.. மான்சியின் கட்டுகுலையாத அழகும்,. இரவின் தனிமையும், சேர்ந்து சத்யனை ஏங்கவைத்தது

மான்சி அவனை ஏறெடுத்தும் பார்க்காமல் தன் அறையை நோக்கி போக,.. சத்யனுக்கு அவள் எந்த பதிலும் சொல்லாமல் போனது திக்கென்று மனதை அதிரவைக்க,. ச்சே அதுக்குள்ள அவசரப்பட்டுட்டமோ என்று தன்னையே கடிந்து கொண்டான்

சத்யன் அவசரமாக “ மான்சி” என்று அழைக்க , மான்சி நின்று தலையை மட்டும் திருப்பி அவனை பார்த்தாள்

“ எனக்கு எந்த பதிலும் சொல்லாமலே போறியே மான்சி,.. எதுவா இருந்தாலும் சொல்லிரு மான்சி... இல்லேன்னா இந்த நிலையில் என் நெஞ்சே வெடிச்சுரும்” என்று சத்யன் உருக்கமாக கேட்க

ஒருநிமிடம் அவனையே பார்த்த மான்சி மறுபடியும் வந்து அவன் அமர்ந்திருந்த எதிர் சோபாவில் அமர்ந்தாள் ,.. சத்யனுக்கு புரிய அவன் எழுந்து மான்சி அமர்ந்திருந்த இடத்தில் அமர்ந்து ‘ மழைக்காக வரண்டு வானத்தை பார்க்கும் கரிசல்காட்டு பூமியை போல, அவள் முகத்தை பார்த்தான்

மான்சி கண்மூடி சிறிதுநேரம் அமர்ந்து பிறகு அவனை நேராக பார்த்து “ இதை பத்தி நாம பேசறது இதுவே கடைசியாக இருக்கட்டும் சத்யன்,.. இனியொருமுறை நான் இதையெல்லாம் விவாதிக்க தயாராக இல்லை” என்றவள் நிமிர்ந்து உட்கார்ந்து அவனை நேராக பார்த்து தனது பேச்சை ஆரம்பித்தாள்

“ உங்களோட பிள்ளைகளின் பிறப்பை நான் உங்ககிட்ட மறைச்சதா நீங்க சொல்றீங்க,.. நான் ஒருநாளும் அந்த மாதிரி நெனைக்கலை,.. அப்படி மறைக்க நெனைச்சிருந்தா உங்களோட போட்டோவை காட்டி அவங்களை வளர்த்திருக்க மாட்டேன்,. அப்பா மிலிட்டரியில் இருக்கார்ன்னு சொல்றதுக்கு பதிலா,. அப்பா சாமிகிட்ட போய்ட்டாருன்னு நான் சொல்ல எவ்வளவு நேரம் ஆகியிருக்கும் சத்யன்... அவனுங்க ரெண்டுபேரும் புத்திசாலிகள் இன்னும் ஒரு வருஷத்திலே ரெண்டு வருஷத்திலே அவங்களுக்கு உண்மையை விளக்கிச் சொல்லி நீங்க எங்க இருக்கீங்கனு நானே சொல்லலாம்னு தான் இருந்தேன்,”

“ என் பிள்ளைகள் எந்த சூழ்நிலையிலும் சமூகத்தின் முன் தலைகுனிஞ்சு நிக்ககூடாதுன்னு நான் நெனைச்சேன்,.. நான் உங்க கண்களில் படாமல் மறைஞ்சு வாழனும்னு நெனைச்சது ரொம்ப கொஞ்சநாள் தான்,. அதுக்கப்புறம் நான் மறையனும்னு நினைக்கவே இல்லை,.. இன்னும் சொல்லப்போனா எத்தனையோ முறை என் வேலை விஷயமா நான் சென்னைக்கு வந்திருக்கேன், அப்பல்லாம் நான் ஒன்னும் தலையில் முக்காடு போட்டுகிட்டு வரலை சத்யன் ”

“ இப்பவும் பிள்ளைகளை உங்ககிட்ட இருந்து பிரிக்கும் எண்ணம் எனக்கு இல்லை,.. நீங்க எப்ப வேனும்னாலும் பெங்களூர் வந்து பாருங்க,.. அவங்ககூட தங்கிட்டு போங்க அதுக்கெல்லாம் உங்குளுக்கு முழுஉரிமை உண்டு,. நீங்க துரோகம் செய்தது எனக்கு மட்டும்தான்னு நான் நெனைக்கிறேன்,. நீங்க பிள்ளைகளுக்கு நல்ல அப்பாவா இருப்பீங்கன்னு எனக்கு நம்பிக்கை இருக்கு சத்யன்,. அவங்களுக்கு நீங்க என்ன செய்யனும்னு நினைக்கிறீங்களோ அதை செய்யலாம், உங்களோ சொத்துக்களை தவிர,. அது மட்டும் வேண்டாம்,.. அதிகமான பணம் என் பிள்ளைகளின் வாழ்க்கையில் புகுந்து சீரழிச்சுட கூடாதுன்னு நெனைக்கிறேன்,. உங்களுக்கு புரியுதா சத்யன்” என்று மான்சி அவனை நேருக்குநேர் பார்த்து கேட்க


சத்யன் அசந்து போய் உட்கார்ந்திருந்தான்,.. குழந்தைத்தனமாக மாறத என் மான்சியா இது,. இவள் பேச்சில்தான் எவ்வளவு நேர்மை, எவ்வளவு தீர்க்கம், இதையெல்லாம் எங்கே கற்றுக்கொண்டாள்,. என் தவறுகள் அவளுக்கு கற்றுத்தந்த பாடமா,.. இவள் இந்த ஏழு வருஷ தனிமையில் அவள் நெஞ்சு உரமேறிய வைரமாக மாறிவிட்டதா,. சத்யனுக்கு மான்சியை பார்க்க பெருமையாக இருந்தது,.. ஆனால் அவனை அவள் மன்னித்தாளா என்று இன்னும் விடை தெரியா கேள்வி அவனை பயமுறுத்தியது

“ எனக்கு புரியுது மான்சி என் பிள்ளைகளை ஒருநாளும் சீரழிஞ்சு போகமாட்டாங்க,. அவனுங்க ஜாடை வேனும்னா என்னைபோல் இருக்கலாம், ஆனா குணமும் நடத்தையும் உன்னை போல் இருக்கு மான்சி,. அவங்களுக்கு நல்ல அப்பாவா இருப்பேன்னு நீ என்னை நம்பினதுக்கு நன்றி மான்சி, ஆனா இனிமேல் என்னால ஒரு நல்ல புருஷனா இருக்க முடியாதுனு முடிவு பண்ணிட்டியா மளன்சி” என சத்யன் மறைமுகமாக அவள் தன்னை ஏற்க்கமாட்டாளா என்று கேட்க

அவனை பார்த்த மான்சி சில மணித்துளிகள் மவுனத்தில் கரைய,.. “ நீங்க இதை என்கிட்ட கேட்கிற தகுதியை இழந்து செவன் இயர்ஸ் ஆச்சு சத்யன்,.. எனக்கு எல்லாமே இன்னும் மறக்கவே இல்லை,.. மறக்கவும் முடியாது, அன்னிக்கு நடந்ததையும் அதுக்கு நீங்க குடுத்த விளக்கத்தையும் என் மனசு இன்னும் ஏத்துவும் இல்லை ஒத்துக்கவும் இல்லை,. என் மனம் மாறும் என்ற நம்பிக்கை எனக்கேயில்லை சத்யன்,.. அதனால தயவுசெய்து அதை பத்தி நீங்க இனிமே பேசவேண்டாம்” என கூறிவிட்டு தன் பேச்சு முடிந்துவிட்டது என்பதுபோல் மான்சி எழுந்து நிற்க்க

சத்யனுக்கு அவளுடைய வாதத்தை ஏற்க்கவும் மனமில்லை,. இது சரியில்லை மான்சி என்று அவளிடம் எதிர்வாதம் செய்யவும் மனமில்லை,.. ஆனால் அவனுக்கு ஒன்று மட்டும் உறுதியாக தெரிந்தது, அது மான்சியின் மனதில் தனக்கு இடம் இருக்கிறது என்பதுதான்.,. அதுக்கு காரணம் சற்றுமுன் அவளின் கலங்கிய கண்கள்தான்,.. நிச்சயமாக மான்சியின் மனம் மாறும் என்ற நம்பிக்கை சத்யனுக்கு உண்டானது,.. இந்த மட்டும் சத்யன் மனதுக்கு கொஞ்சம் நிம்மதியாக இருந்தது

மான்சி அமைதியாக தன் படுக்கையறையை நோக்கி போனாள்,.. சத்யன் மறுபடியும் “ மான்சி” என்று அழைத்தான் ,...

அவள் திரும்பி பார்த்ததும்,.. முகம் முழுக்க புன்னகையுடன் “ குட்நைட் மான்சி” என்று கூறினான்

மான்சியும் பதிலுக்கு உதட்டளவில் ஒரு புன்னகையை சிந்தி “ குட்நைட் சத்யன்” என்று கூறிவிட்டு தன் அறைக்குள் போய்விட்டாள்

சத்யனும் எழுந்து பாத்ரூம் போய் முகத்துக்கு தண்ணீர் விட்டு தன் கண்ணீர் கரையை கழுவிவிட்டு வந்து தன் படுக்கையில் படுத்துக்கொண்டான்
தனது அறைக்கு போன மான்சியின் மனதில் ஏகப்பட்ட குழப்பம்,.. சத்யனின் ஒவ்வொரு வார்த்தைகளும் அவள் மனதில் முட்டி மோதின,.

இவன் சொல்வதெல்லாம் உண்மையா,.. அப்படியே உண்மையாக இருந்தாலும் அதை எப்படி ஒத்துக்கொள்வது,. இவன் கல்யாணத்திற்கு பிறகு தவறு செய்யவில்லை என்றாலும் அந்த சிடிக்களில் இருந்தது உண்மையில்லை என்று ஆகிவிடுமா,. அதையெல்லாம் என்னால் மறந்து இனிமேல் அவனுடன் இணைந்து வாழத்தான் முடியுமா,.. என்றெல்லாம் மனதை குழப்பிக்கொண்டு தெளிவில்லாமல் தத்தளித்தாள்

ஆனால் எப்படித்தான் அவனை பற்றிய சிந்தனைகளை மான்சி மறந்துவிட்டு தூங்க நினைத்தாலும், இறுதியாக அவள் மனதில் நிலைத்தது, சத்யனின் அவள் மடியில் கவிழ்ந்து கண்ணீர் விட்டதும்,.. கடைசியாக பளிச்சென்று புன்னகைத்து சொன்ன குட்நைட்டும் தான்,.. அந்த புன்னகையை மனதில் நினைத்துக்கொண்டே தூங்க முயற்ச்சித்தாள் மான்சி

ஆனால் அவளுக்கு அருகில் படுத்திருந்த ப்ரணேஷ் தூக்க கலக்கத்தில் உளறியபடி சத்யனை தேட,.. மான்சி தன் மகனையே பார்த்தாள், பிறகு படுக்கையைவிட்டு எழுந்து ப்ரனேஷை தூக்கி தோள்மேல் போட்டுக்கொண்டு கதவை திறந்து வெளியே வந்தாள்

சத்யனின் படுக்கையை நெருங்கி குனிந்து அவனருகில் ப்ரணேஷை கிடத்தினாள்


வெறுமென கண்மூடி படுத்திருந்த சத்யன் பட்டென கண்விழித்து பார்த்து “ என்னம்மா ப்ரணேஷ் அழுதானா “ எனறு கேட்க
மான்சி ப்ரணேஷ் மீது சத்யனின் போர்வையை இழுத்து போர்த்திவிட்டு நிமிர்ந்து
“ அழலை ஆனா அப்பா அப்பான்னு தூக்கத்துல உளறினான்” என்று கூறிவிட்டு தன் அறைக்கு திரும்பினாள்

“ ம் என்னோட சின்ன குழந்தைகள் தூக்கத்துல கூட அப்பாவை தேடுது,. ஆனா என்னோட பெரிய குழந்தை ஒன்னு என்னை மன்னிக்கவே மாட்டேன்னு அடம் புடிக்குது மான்சி,.. நீ கொஞ்சம் அந்த பெரிய குழந்தை கிட்ட எடுத்து சொல்லேன்” என்று சத்யன் குறும்பு குரலில் கூற

மான்சி திரும்பி பார்த்து அவனை முரைக்க,. அந்த முரைப்பில் கோபம் இல்லை, லேசான மலர்ச்சி மட்டும்தான் இருந்தது

தன்னை முரைத்த அவளை பார்த்து கண்சிமிட்டி சிரித்த சத்யன் “ ஆனா மான்சி அந்த பெரிய குழந்தை என்னை கூடிய சீக்கிரமே என்னை மன்னிச்சு, இதோ இந்த பக்கம் வந்து என் பக்கத்தில் படுத்துகிட்டு சின்ன குழந்தைங்க கூட சண்டை போடப்போறா பாறேன்” என்று குறிப்பாக அவளுக்கு தனது ஏக்கத்தை சொல்ல

“ அது மட்டும் நடக்காது சும்மா கனவு காணாதீங்க” என்று வெடுக்கென சொல்லிவிட்டு மான்சி தன் அறைக்குள் சென்று கதவை சாத்திக்கொண்டாள்
சத்யன் மனதுக்குள் சிரித்தபடி தன் மகனை அணைத்தபடி தூங்கிப்போனான்

மறுநாள் பொழுது சத்யனுக்கு மட்டும் ரொம்ப உற்சாகமாய் விடிந்தது போல இருந்தது.. எழுந்ததும் தன் மகன்களுடன் தோட்டத்தில் உடற்பயிற்சி செய்தவன்,. மான்சி தோட்டத்து பக்கம் வந்ததும் “ குட்மார்னிங் மான்சி” என்று புன்னைகையுடன் கூறினான்

மான்சி பதிலுக்கு குட்மார்னிங் சொல்லிவிட்டு, அங்கிருந்த கல் பெஞ்சில் அமர்ந்து நியூஸ் பேப்பரை வாசிக்க, அவள் கண்கள் மட்டும் அடிக்கடி சத்யனின் பக்கம் திரும்பி திரும்பி பார்த்தது

சத்யன் முதுகில் ப்ரணேஷ் ப்ரணவ் இருவரும் ஒருவர் மீது ஒருவராக படுத்திருக்க, சத்யன் அவர்கள் இருவரையும் தூக்கியபடி தண்டால் எடுத்துக்கொண்டு இருந்தான்,.. இடுப்பில் வெறும் ஷாட்ஸ் மட்டும் இருக்க சத்யன் தன் இருகைகளையும் ஊன்றி அவர்களை தூக்கிய படியே உயர்ந்து தாழ்ந்தது கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது

அவனுடைய தோள்பட்டை சதை கோளங்கள் புடைத்துக்கொண்டு இருக்க,.. ரோமம் படர்ந்து அவன் மார்பு தோட்டத்தின் புல்வெளியில் பட்டது,. அவன் கால் பெருவிரல் மட்டும் தரையில் ஊன்றியிருக்க, கெண்டைக்கால் சதை உருண்டு திரண்டு எழும்பியிருந்தது

மான்சியால் நியூஸ் பேப்பரில் கவணம் செலுத்தவே முடியவில்லை,.. அவள் மனதில் அந்த எட்டு நாள் அவனுடன் வாழ்ந்த பழயை நிகழ்வுகள் எல்லாம் படமாய் ஓடியது,.... வேகமாக ஓடிப்போய் பிள்ளைகள் இருவரையும் கீழே இறக்கிவிட்டு சத்யன் முதுகில் இவள் ஏறி படுத்துக்கொள்ள வேண்டும் என்ற எண்ணம் சரசரவென மனம் முழுவதும் எழுந்தது

அந்த எண்ணத்தை அடக்க முடியாமல் மான்சி தன் கைகளில் இருந்த பேப்பரை மடித்துவிட்டு சத்யனை நெருங்கிவிட்டாள்,.. அவள் மனதில் தன் பிள்ளைகள் மீதே பொறாமை வந்தது,.. பழைய நேசம் மெதுவாக எழுந்து தன் சுயரூபத்தை காட்ட ஆரம்பித்தது




மான்சி தன்னருகில் வந்து நிற்பதை கவணித்த சத்யன் தலையை மட்டும் பக்கவாட்டில் திருப்பி “ என்ன மான்சி” என்று கேட்க

மான்சி,. அவனுக்கு என்ன பதில் யோசித்து தடுமாறியவள் சட்டென நிதானித்து “ இல்ல பிள்ளைங்க கீழே விழுந்துடுவாங்களோன்னு பயமாயிருக்கு அதான் வந்தேன்” என்று லேசாக தடுமாறிய குரலில் கூற

சத்யனுக்கு அவளின் தடுமாற்றம் மனதில் பதிய உள்ளுக்குள் சிரித்தபடி “அதெல்லாம் கீழே விழமாட்டாங்க மான்சி நான் கவணமா தான் இருக்கேன்” என்று சொல்ல

மான்சி அமைதியாக வீட்டுக்குள் போவதற்காக திரும்பினாள்
சத்யன் தலையை மட்டும் திருப்பி அவளை பார்த்து “ மான்சி உனக்கு ஒரு விஷயம் ஞாபகம் இருக்கா,. அங்கே நம்ம வீட்ல நான் இதுமாதிரி தண்டால் எடுக்கும் போது சிலசமயம் நீ வந்து என்மேல படுத்து என்னையும் சேர்த்து தூங்குங்கனு சொல்லுவியே,.. உன்னை போலவே இப்ப நம்ம பசங்களும் பண்றாங்க மான்சி” என சிரித்தபடியே கூற

மான்சிக்கு அவன் வேண்டுமென்றே அதை குறிப்பிடுகிறானா இல்லை தற்ச்செயலாக சொல்கிறானா என்று புரியவில்லை,. நின்று அவனை பார்க்க,..
அவன் மறுபடியும் தனது உடற்பயிற்சியை ஆரம்பித்து செய்துகொண்டிருந்தான்

ஆனால் பிள்ளைகளோ “ அப்பா அம்மாவை வச்சு இப்போ தூக்குங்கப்பா நாங்க பார்க்கனும் ப்ளீஸ்ப்பா” என்று மாறிமாறி கெஞ்ச ஆரம்பித்து, சத்யன் மேல் இருந்து இருவரும் கீழே இறங்கிவிட

சத்யன் ஒருக்களித்து படுத்து தன் வலது கையை தலைக்கு ஊன்றியபடி “ எனக்கு ஓகேப்பா, உங்கம்மாவுக்கு சம்மதம்னா வந்து என்மேல படுத்துக்க சொல்லு” என்று சத்யன் குறும்பு குரலில் கூறிவிட்டு மான்சியை பார்த்தான்

மான்சி இப்போது தயங்காமல் அவனை நிதானமாக பார்த்தாள்,.. அவனுடைய அழகு அவள் மனதை கொஞ்சம் கொஞ்சமாக கோழையாக்கியது,.. அவனைவிட்டு பார்வையை நகர்த்த முடியாமல் ரொம்பவே சிரமப்பட்டாள்

‘ ச்சே என்ன படித்து பெரிய உத்யோகத்தில் இருந்து என்ன பிரயோஜனம்,.. அலைபாயும் என் மனதை கட்டுப்படுத்த எனக்கு தெரியவில்லையே,.. என்று எண்ணி மனம் ஒரு பக்கம் ஏளனமாக நினைத்தாலும் அவளால் தன் பார்வையை சத்யனைவிட்டு திருப்ப முடியவில்லை

அப்போது ப்ரணேஷ் வந்து அவள் கையை பிடித்து இழுத்து கொண்டு சத்யன் அருகில் போய்விட்டு “ ப்ளீஸ் அம்மா நீங்க அப்பா முதுகுல படுங்கம்மா அவரு உங்களை தூக்குறாரான்னு பார்க்கலாம்" எனறு கெஞ்ச ஆரம்பிக்க

அவனுடன் ப்ரணவும் சேர்ந்துகொண்டான்,. சத்யன் எதுவுமே பேசாமல் மான்சியையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டு இருக்க

மான்சியால் அவன் பார்வையை தாங்கமுடியாமல் தலைகுனிய

" மான்சி பிள்ளைகள் தான் இவ்வளவு ஆசையா சொல்றாங்களே அவங்களுக்காக இதை செய்யக்கூடாதா" என்று சத்யன் கேட்க

" அம்மா ப்ளீஸ்ம்மா அப்பா உங்களை எப்படி தூக்குறார்னு பார்க்கனும் இந்த ஒரே ஒரு முறைதான் ப்ளீஸ்ம்மா" என்று ப்ரணேஷ் மான்சி கையைபிடித்து கொண்டு வற்புறுத்தி கெஞ்ச

மான்சி மெதுவாக சத்யனை நெருங்க,... ஒருக்களித்து படுத்திருந்த சத்யன் சட்டென கவிழ்ந்து படுத்து கொண்டு " ம் படுத்துக்கோ மான்சி" என்று தேன் குழைத்த குரலில் கூறினான்

மான்சி அவனுடைய பரந்து விரிந்த வெற்று முதுகை பார்த்தபடி அவன்மீது படுத்து தன் கைகளால் அவன் கழுத்தை கட்டிக்கொண்டு அவன் பிடரியில் தன் முகத்தை வைத்துபடி படுத்துக்கொண்டாள்

அவளின் பருத்த மார்புகள் அவனுடைய முதுகில் அழுந்தி பிதுங்கியது.. அவளின் பெண்மை அவனின் எடுப்பான பின்புறத்தில் அழுந்தியது,... அவளுடைய வாழைத் தொடைகள் அவனுடைய பின்பக்க தொடைகளின் மீது படர்ந்தது.. அவளின் கால் விரல்களை அவனுடைய குதிங்காலில் வைத்துக்கொண்டாள்

சத்யனால் அவளை தூக்க முடியவில்லை,. அவன் உடலில் பலம் இல்லாமல் இல்லை, இது அவனாகவே தூக்க முயற்ச்சிக்கவில்லை,.. அவளை சுமந்தவாறு அப்படியே புல் தரையில் படுத்துவிட்டான்

யாருக்கு கிடைக்கும் இந்த சொர்க்கபோகம், அவர்கள் தங்களை மறந்தார்கள்,.. தங்களின் அருகில் நின்ற பிள்ளைகளை மறந்தார்கள்,.. தங்களை சுற்றி என்ன நடக்கிறது என்பதை மறந்தார்கள்,.. இருவரும் கண்மூடி கிடந்தார்கள்

அப்போது சமையலை முடித்துவிட்டு தோட்டத்துக்கு வந்த பானு அங்கே நடந்தவைகளை பார்த்து,..உதட்டில் விரலை வைத்து சத்தம் போடாதீங்க என்று எச்சரிக்கை செய்துவிட்டு ,..நைசாக பிள்ளைகளை வீட்டுக்குள் தள்ளிக்கொண்டு போனாள்

சத்யன் மீது மான்சி படர்ந்திருக்க,.. சத்யன் கவிழ்ந்த நிலையில் தன்மீது கிடந்த பூக்குவியலை தாங்கிக்கொண்டு சுகமாக படுத்திருக்க இருக்க,... சத்யனின் உணர்வுகள் அதிரடியாக விழித்துக்கொண்டு அவனை இம்சிக்க,... உடல் முழுவதும் நெருப்பிலிட்டது போல் அனலாக கொதிக்க ஆரம்பித்தது

மான்சிக்கு மனதில் வேறு எந்த உணர்வுகளும் இல்லாமல் சத்யன் மீதான பழைய நேசம மட்டுமே மனம் முழுவதும் வியாப்பித்திருந்தது,.. தன் உதடுகளால் அவனுடைய பிடரி மயிர்களை பற்றியிலுக்க,.. சத்யனின் உடல் சிலிர்த்ததை மான்சியால் உணரமுடிந்தது

சத்யன் சற்றுமுன் செய்த உடற்பயிற்சியின் காரணமாக அவன் உடலில் சுரந்திருந்த வியர்வையின் வாசனை மான்சியின் நாசியில் ஏறி அவளை பித்தம் கொள்ள செய்ய,..

இருவருக்கும் ஏழு வருஷமாக அடக்கி வைத்திருந்த காமம் தன் வேலையை காட்டத்தொடங்கியது

மான்சி என்ன செய்கிறோம் என்று புரியாமலேயே தன் நாக்கின் நுனியால் அவன் கழுத்தில் துளிர்த்திருந்த வியர்வையை நக்கியெடுத்து சுவைத்து பார்த்தாள்,.. பிறகு தன் உதடுகளை வைத்து அவன் பிடரியில் இப்படியும் அப்படியுமாக தேய்த்து தடவி அவனை நிலையிழக்க செய்தாள்

கீழேயிருந்த சத்யனால் தாங்கமுடியவில்லை,.. கீழே இருந்த புற்களை பற்களால் கடித்து இழுத்தான்,.. இரண்டு கைகளாலும் புற்களை கொத்தாக புடிங்கினான்,... அவனின் ஷாட்ஸ்க்குள் இருந்த அவன் ஆண்மை வெகுநாள் கழித்து தன் முழு எழுச்சியையும் அடைந்து அந்த புல் தரையை பள்ளமாக்கும் முயற்சியை செய்தது

இன்னும் ஒரு நிமிடம் கூட தன்னால் தாக்குபிடிக்க முடியாது என்பதை உணர்ந்த சத்யன்,.. அடுத்த யோசனையே இல்லாமல் தன் முதுகில் கிடந்த மான்சியை புரட்டி கீழே தள்ளி,.. அவள் சுதாரிக்குமுன் அவளை இறுக்கி அணைத்து அந்த புல்தரையில் உருள ஆரம்பித்தான்

சத்யனுடைய உணர்வுகள் மொத்தமாக கட்டவிழ்த்து கொள்ள,.. மான்சியின் மீது இருந்த ஆசை போய் அது வெறியாக மாறியிருக்க,... அவன் என்ன செய்கிறோம் ஏது செய்கிறோம் என்ற வரையறை இல்லாமல் வெட்டவெளியில் அவளை கட்டியணைத்து அவள் முகத்தில் தன் உதடுகளால் தாருமாறாகத் தேய்த்து,.. அவள் முகம் முழுவதும் எச்சிலாகினான்

அவன் ஆண்மை தனது இருப்பிடத்தை தேடி துடித்து முருக்கிக்கொண்டு நிமிர முடியாமல் அவன் ஷாட்ஸ்க்கள் போராடியது,.. ஆனால் தனது முழு எழுச்சியையும் மான்சி அடிவயிற்றில் அழுத்தி உணர்த்திக் காட்டியது,

மான்சிக்கு என்ன நடக்கிறது ,. சத்யன் தன்னை என்னை செய்துகொண்டு இருக்கிறான் என்று புரியவே சிறிது நேரம் பிடித்தது,.. அவனுடைய தாக்குதலில் மான்சி ரொம்பவே திணறிப்போய் தன் முகத்தை விலக்க முயற்சித்தாள் ,..

சத்யன் அவளுக்கு சிறிதும் விட்டுக்கொடுக்காமல் அவள் முகத்தை தன் இருகைகளாலும் பிடித்துக்கொண்டு வேட்கையுடன் அவள் மலர் இதழ்களை கவ்விக்கொண்டான்,.. தன் முரட்டு உதடுகளால் அவளின் மெல்லிய இதழ்களை பிளந்து அவளின் வாசனை மிகுந்த வாயினுள் தன் சாட்டையை போன்ற நாக்கை செலுத்தினான்



அதன்பிறகு மான்சியின் தேன் இதழ்களும், செப்பு வாயும், ஈர நாக்கும், பிச்சைக்காரன் வாயில் அகப்பட்ட பீட்ஸா போலானது,.. சத்யன் தனது ஏழுவருட முத்தத்தையும் ஒரே நாளில் அவளுக்கு கொடுக்கும் முயற்ச்சியில் இறங்கினான்

தனது நாக்கால் அவள் வாயை அளந்தவன்,.. தன் முரட்டு உதட்டால் அவளின் வாயில் சுரந்த எச்சிலை உறிஞ்சினான்,.. தன் நீண்ட நாள் வரட்சியை போக்கும் விதமாக அவள் வாயில் சுரக்கும் எச்சிலை சொட்டுவிடாமல் உறிஞ்சி உறிஞ்சி இழுக்க,..

அவனுடைய உறிஞ்சுதலின் வேகம் அதிகரிக்க அதிகரிக்க மான்சிக்கு அவன் தன் உயிரையும் சேர்த்து உறிஞ்சுவது போல் இருந்தது,.. அவளுக்கு மூச்சு திணற ஆரம்பிக்க தன் கைகளால் அவன் மார்பில் வைத்து தள்ளியவள்,. தன் இதழ்களை அவனிடமிருந்து வெடுக்கென பிடுங்கிக்கொண்டு,. இவ்வளவு நேரமாக அடக்கி வைத்திருந்த மூச்சை பெரிது பெரிதாக வாய் வழியாக விட்டு தன்னை ஆசுவாசப்படுத்தி கொண்டாள்




" அத்தான் ஆயிரம் முத்தங்களுடன் ...

" உங்கள் அன்பு மனைவி என்றாயே....

" அவற்றையெல்லாம் எப்போது ....

" தருவதாக உத்தேசம்! 


No comments:

Post a Comment