Saturday, April 18, 2015

அன்பே உன் பேர் என்ன ரதியோ? - அத்தியாயம் - 2

ஜம்புலிங்கதுக்கு ஆபீஸ் உள்ளே வரவர செல்வா காபின் வாசல்ல ஒரு பெண் அழுது கொண்டு இருந்ததை பார்த்தார்.


ஜம்புலிங்கதுக்கு ஏற்கனவே, அந்த பெண்ணை பார்த்த ஞாபகம் வந்தது. இந்த பொண்ணு எனக்கு secretary ஆக ஜாயின் பண்ண வேண்டிய பொண்ணு ஆச்சே.

ஏன் அழுதுகிட்டு இருக்கா, ஏதோ பெரிய அளவுல பிரச்சனை இருக்கு, விசாரிக்கணும்னு முடிவு செஞ்சிட்டு, "உன் பேரு என்னம்மா" என்று கேட்டார். சார் என் பேரு காயத்ரி என்று அழுது கொண்டே சொல்ல, அவளை அழைத்து கொண்டு, அவர் காபினுக்கு விரைந்தார்.


உள்ளே நுழைந்து, அவளை சீட்ல உக்கார சொல்லிட்டு, calling bell லை அழுத்தி, ஆபீஸ்பாய் வந்தவுடன், சூடா காபி கொண்டு வர சொல்லி விட்டு, "காயத்ரி சொல்லும்மா என்ன நடந்துச்சு?" என்று விசாரித்தார். அவர் கேட்டவுடன் இன்னும் அதிகமாக அழ ஆரம்பித்தாள்.


அவள் அழுது முடியட்டும் என்று வெயிட் செய்ய அதற்குள் காபி வந்தது, "முதல்ல காபி குடிம்மா" என்று காயத்ரியை குடிக்க சொன்னார்

"இப்போ சொல்லுமா என்ன நடந்துச்சு? " என்று கேக்க. "சார் நான் சொன்னா நம்புவிங்களா? உங்க பையன் என்கிட்டே தப்பா நடந்துகிட்டார்".


ஜம்புலிங்கதுக்கு தன் காதில் விழுந்ததை நம்ப முடியவில்லை. செல்வாவை பற்றி இது வரை ஒருவரும் தப்பா சொன்னதில்ல.அதோட அவன் ஸ்கூல் படிச்சது திருப்பராய்துறை ராமகிருஷ்ணமிசன் ஸ்கூல்ல. அதுனால அவன் தப்பு பண்ணி இருப்பான் அப்பிடின்னு அவரால நம்ப முடியலை.

ஒரு முறை யோசித்து விட்டு, இது பொண்ணு சம்பந்தபட்ட விஷயம், பாத்து கையாளனும் என்று நினைத்து கொண்டே "அம்மா காயத்ரி உன் அப்பா நம்பர கொடு". cell நம்பர வாங்கி காயத்ரி அப்பா மூர்த்திடம் பேசி, அவரை அவர் மனைவியுடன் ஆபீசுக்கு உடனே வர சொன்னார். என்ன விஷயம் அப்டின்னு கேட்க. "ப்ளீஸ் வாங்க நேரடியா பேசலாம்னு" சொன்னார் ஜம்புலிங்கம்.

இந்த பக்கம் அவர் மனைவி பார்வதியை உடனே கிளம்பி வர சொன்னார்.


நடப்பதை எல்லாம் கவனித்த காயத்ரிக்கு கட்டாயம் ஒரு பிரளயம் ஏற்பட போகுதுன்னு புரிந்தது. மனதுக்குள் சந்தோஷம் இருந்தாலும், வெளியே காண்பிக்காமல் முகத்தை சோகமாக வைத்து கொண்டு இருந்தாள்.



செய்தி கேள்விப்பட்ட அரை மணி நேரத்தில், காயத்ரி அப்பா முர்த்தி தன் மனைவி காஞ்சனா உடன் காரில் SISIL ஆபீசுக்கு வந்து இறங்கினார்.

சரியாக அதே நேரத்தில் பார்வதியும் காரில் வந்தார்.

அனைவரும் ஜம்புலிங்கம் காபினுக்கு வர அங்கே உக்கார்ந்திருந்த காயத்ரியை பார்த்த வுடன் மூர்த்தி தம்பதிக்கு நிம்மதி வந்தது.

அவர்களை கண்ட ஜம்புலிங்கம் ஒரு சிறிய அறிமுகம் செய்துவிட்டு " நீங்க உங்க பொண்ணு கிட்ட பேசுங்க. நான் 5 நிமிஷத்ல வரேன்" என்று சொல்லி விட்டு, தன் மனைவி பார்வதியை அழைத்து கொண்டு செல்வா ரூமுக்குள் நுழைந்தார்.

செல்வா இன்னும் நடந்ததை நம்ப முடியாமல் தன் சேரில் தலை குனிந்து உட்கார்ந்து இருக்க, அவன் அப்பாவும் அம்மாவும் அவனருகே வந்தனர். "என்னடா நடந்துச்சு" என்று ஜம்புலிங்கம் விசாரிக்க, அவன் நடந்தது எல்லாத்தையும் விபரமாக கூறினான்.


"அய்யோ ஜோசியக்காரன் சொன்ன மாதிரி ஆயுடுச்சே, உனக்கு 28 வயசுல பொன்னால கண்டம் வரும்னு சொன்னாரே, உண்மை ஆயிடுச்சே" என்று புலம்ப ஆரம்பித்தாள் பார்வதி. "ஏய் கொஞ்சம் வாய மூடுறியா, சரியான ஜோஷிய பைத்தியம்",என்று கோபப்பட்ட ஜம்புலிங்கம், மகனிடம் "நீ சொல்றது உண்மையா இருந்தா சரி, நான் அந்த பொண்ணுகிட்டயும் பேசுவேன். நீ தப்பு பண்ணி இருந்தா அதுக்கப்புறம் விளைவுகள் கடுமையா இருக்கும்", என்று எச்சரித்து விட்டு தனது காபினுக்கு திரும்பினார்

அதே நேரத்தில் அங்கே காயத்ரிஇடம் அம்மா கேள்விகளை எழுப்பினாள். ஏண்டி நீ சொல்றத நம்ப முடியலை. என்னடி நடந்தது.


காயத்ரி சில விஷயங்களை மறைத்து செல்வா பற்றி மட்டமாக சொன்னாள். காஞ்சனா மூர்த்தியை கொஞ்சம் வெளிய வெயிட் பண்ணுங்க சொல்லிட்டு, "என்னடி உன்னைய என்ன பண்ணுனான்".


"என்னைய அவன் rape பண்ணிட்டான்அம்மா"ன்னு சொல்லி விட்டு அழ ஆரம்பித்தாள்.


"இன்னைக்கு காலைல நான் தனியா இருக்கிறதா பாத்து, முக்கியமான விஷயம் பேசணும்னு அவன் ரூமுக்கு கூட்டி போயி என்ன நாசம் பண்ணிட்டான் அம்மா. நான் எப்படி உங்க மொகத்தில முழிப்பேன்" திரும்பவும் அழ ஆரம்பித்தாள்.

"ஏண்டி நீ சொல்றது உண்மையா".

"அம்மா நான் சொல்றதுல்ல நம்பிக்கை இல்லையா".


"இல்லடி நான் ஒரு சைடை மட்டும் முடிவு பண்ண முடியாது. கொஞ்சம் வெயிட் பண்ணு" என்று சொல்லி விட்டு வெளிய வந்த போது, அங்கே மூர்த்தி, ஜம்புலிங்கம், பார்வதி நிற்க, அவர்களுடன் நடந்த விஷயம் பற்றி விளக்கினாள்.


பார்வதியும் செல்வா சொன்னதை பகிர்ந்து கொள்ள அங்கே குழப்பம் நிலவியது.


ஜம்புலிங்கம் ஒரு யோசனை சொன்னார், "அவங்க ரெண்டு பேரையும் தனியா confererence ரூமில பேச விடுவோம். உள்ளே ஸ்பீக்கர் போன on பண்ணிட்டா, உள்ள பேசுறது என் ரூம்ல கேக்கும். அவங்க ரெண்டு பேரும் யாரும் இல்லாதனால உண்மையா பேசுவாங்க.
நம்ம எல்லாருக்கும் எல்லா உண்மையும் தெரிஞ்சுடும்".

"நல்ல யோசனை" என்று ஆமோதித்தார் மூர்த்தி. இதை காயத்ரி மறைந்து நின்று கேட்டது அவர்கள் நால்வருக்கும் தெரியாது


மூர்த்தி காயத்ரியை சந்தித்து, "இந்தா பாரும்மா நீங்க ரெண்டு பேரும் சொல்றது வேற வேற மாதிரி இருக்கு, அதுனால நீங்க ரெண்டு பேரும் தனியா பேசி ஒரு முடிவுக்கு வாங்க" என்று சொல்லி, "அந்த conference ரூம் போங்க" என்று அனுப்பி வைத்தார்.அதற்குள் செல்வாவிடம் ஜம்புலிங்கம் பேசி conference ரூமுக்குள் அனுப்ப, மற்ற நால்வரும் ஜம்புலிங்கம் ரூமுக்கு போய் ஸ்பீக்கர்போன் on செய்து கேட்க ஆரம்பித்தனர்.

செல்வாவுக்கு என்ன பேசுவதென்று தெரியவில்லை. மூளை செயல்படும் தன்மையை மறந்து விட்டது. conference ரூமுக்குள்நுழைந்த காயத்ரியை பார்த்த உடன் மீண்டும் கோபம் வந்தது. கத்த ஆரம்பித்தான்

"உனக்கென்ன பைத்தியமா? ஏன் இப்படி நடந்துக்கிற? நான் அறைஞ்சது ஒரு சில்லிமேட்டர். அதுக்கு உன் கற்பை பணயம் வைப்பியா? "


காயத்ரிக்கு அவன் சொன்னது புரிந்தாலும், எக்காரணத்தை முன்னிட்டும் பின்வாங்கக் கூடாது என்று முடிவெடுத்து, "இப்ப தப்பு பண்ணினது யாரு, நானா இல்லை நீயா?எப்படியும் ஒன்னபத்தி போலீஸ்ல புகார் கொடுக்க போறேன். அப்ப யார் சொல்றது உண்மைன்னு புரியும் "

"இங்க பாரு. நான் ஆம்பளை, எனக்கு என்ன ப்ரச்னைனாலும் மத்தவங்க மறந்துடுவாங்க. ஆனா உன் நெலமை வேற. புரிஞ்சிக்க.முட்டாள்தனமா முடிவு எடுக்காத. இப்போவும் ஒன்னும் கெட்டு போகல. உன்னை அடிச்சதை நெனைச்சு நான் வருத்தபடறேன்.மன்னிப்பு கேட்டுக்கிறேன். ப்ளீஸ் இந்த விஷயத்தை இதோட விட்டுடலாம்"


கைகூப்பி கேட்ட செல்வாவை பார்த்து காயத்ரி யோசித்தாள், நான்தான் ரொம்ப டூ மச்சா போறேனோ? அவளது மூளையோ"அதல்லாம் இருக்கட்டும், இவன் உன் கிட்ட தப்பா நடந்துக்கிட்டான். இவனை விட்டா நம்ம பத்தி எல்லார் கிட்டயும் தப்பா சொல்லுவான். சேத்துல கால வச்சாச்சு , இனிமே பொரண்டு தான் ஆகணும்.

"செல்வா நீ சொல்றது புரியலை, என்னை நாசம் பண்ணிட்டு மன்னிப்பு கேட்டா எல்லாம் தீந்துடுமா? என் அம்மா அப்பாகிட்ட நடந்ததை சொல்லிட்டேன், இனிமே அவங்க சொல்றது தான் என் முடிவு. என்னை டிஸ்டர்ப் பண்ணாத. நான் கெளம்புறேன்"


ரூம விட்டு வெளிய வந்த காயத்ரிக்கு பதட்டமா இருந்தது, ஒரு வேள இவனுக்கு கல்யாணம் பண்ணி வச்சுட்டா என்ன பண்றது.பெரிய பருப்பு மாதிரி எல்லாரும் (speaker ல) கேக்குறப்ப எங்க அம்மா அப்பா சொல்றதுக்கு கட்டுபடுறேன்கிற மாதிரி கமிட் பண்ணிட்டேன். இப்போ வசமா மாட்டிக்கிட்டேன்

அவள் conference room ல இருந்து வெளியே வருவதை அறிந்த ஜம்புலிங்கம் ஸ்பீக்கர் போன அணைத்தார்.
வேகமாக அவர் ரூமிற்குள் நுழைந்து, "அம்மா அப்பா எனக்கு செல்வாகிட்ட பேசுறதுக்கு ஒன்னும் இல்ல, திரும்ப கட்டாயபடுத்தாதிங்க", கண்களை துடைத்து விட்டு, ஒரு மூலையில் இருந்த சோபாவில் உக்கார்ந்தாள்.


அவளை தொடர்ந்து வந்த செல்வாவும் என்ன பேசுவது, என்று தெரியாமல் கண்கள் கலங்கி நின்றான்.

"செல்வா காயத்ரி சொல்றது உண்மையா? ஏன் பொய் சொன்ன? உன்ன நாங்க எவ்வளவு நம்பினோம்? என் நம்பிக்கைய பொய்யாக்கிட்டியே படுபாவி உன்னை என் பையன்னு சொல்றதுக்கு எனக்கு வெக்கமா இருக்கு "

"இல்லப்பா நான் தப்பு பண்ணலப்பா ஆனா சந்தர்பங்களும், சாட்சிகளும் எனக்கு எதிரா இருக்கு" தொண்டை தழுதழுக்க சொன்ன செல்வாவை பார்த்து "ஏன்டா திரும்ப பொய் சொல்ற" என்று கோபத்துடன் அடிக்க வர, மூர்த்தி "என்ன சார் வளந்த பையன அடிக்கிரிங்க"ன்னு ஜம்புலிங்கதை தடுத்தார்.

அதுவரை பேசாமல் இருந்த Dr காஞ்சனா பேச ஆரம்பித்தாள். "நாம என்னோவோ ஒரு தலைபட்சமா யோசிக்கிறோம்னு நெனைக்கிறேன். எனக்கு செல்வாவை பாத்தா பொய் சொல்ற மாதிரி தெரியலை. கொஞ்சம் நம்ம வேற கோணத்துல விசாரணை பண்ணனும"


காயத்ரிக்கு அவள் அம்மா மீது கோவம் வந்தது. அம்மா காரியத்த கெடுத்துடுவா போலன்னு, "அம்மா அப்ப நான் சொல்றது பொய்னு சொல்றிய, நான் செத்தா தான் நம்புவியா" என்று சொல்ல,


"இரும்மா நான் உன்னை நம்புறேன், ஒரு பொண்ணு எக்காரணத்த முன்னிட்டும் கற்பு விஷயத்துல விளையாட மாட்டா.அதனால செல்வா சொல்றது எதையும் நம்ப வேண்டாம். செல்வா நீ உன் ரூமுக்கு போ. காயத்ரி நீ இங்கயே இரு. வாங்க நாம நாலு பேரும் conference ஹால் போய் பேசி முடிவுக்கு வரலாம்" என்று சொன்னார் ஜம்புலிங்கம்.


கிட்டத் தட்ட அரை மணி நேரம் அவர்கள் ஆலோசனை நடந்தது. இதற்குள் ஆபீஸ் முழுக்க விஷயம் பரவி விட்டது. பாதிக்கு மேல் பெண்கள் வேலை செய்யும் ஆபீஸ் அது. எல்லாருக்கும் செல்வா மேல் மதிப்பும் மரியாதையும் உண்டு. சேர்மன் மகனாக இருந்தாலும் எல்லாருடனும் சிரித்து பேசி பழக கூடியவன் செல்வா. அதனால் அவர்களால் இதை நம்ப முடியவில்லை.


பார்வதி செல்வாவையும், Dr காஞ்சனா காயத்ரியையும் அழைத்து conference ஹால் வர, ஜம்புலிங்கம் ஆரம்பித்
தார். "இந்த பாருமா, நாங்க எல்லாரும் நடந்த விஷயபத்தி discuss பண்ணினோம். நடந்தது மன்னிக்க முடியாத குற்றம், எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியலை. இப்பிடிப்பட்ட பிள்ளைய பெத்ததுக்கு நாங்க ரெண்டு பேரும் மன்னிப்பு கேட்டுக்குறோம்".

2 செகண்ட் இடைவெளி விட்டு "மன்னிப்பு கேட்டா மட்டும் தீர்ற விஷயம் இல்ல இது ,அதனால நாங்க ரொம்ப நேரம் யோசிச்சதுல்ல எங்களுக்கு ரெண்டு options கெடைச்சது.


ஒன்னு போலீஸ்ல செல்வா மேல கம்ப்ளைன்ட் குடுக்குறது, அதுக்கு முன்னால உங்க அம்மா மெடிக்கல் டெஸ்ட் பண்ணிருவாங்க. அத base பண்ணி போலீஸ் கம்ப்ளைன்ட் பத்தி முடிவெடுக்கலாம்.




ரெண்டாவது நீ அவனை கல்யாணம் பண்ணிக்கிறது, உனக்கு தங்கை இருக்கிறதால அவளோட வாழ்க்கையும் நாம நினைச்சு பார்க்க வேண்டியதா இருக்கு செல்வாவும் திரும்ப தப்பு பண்ணாம நாங்க பாத்துகிறோம். இதை தவிர வேற idea எதாவது உன் மனசில இருந்தா சொல்லு"

செல்வா உடனே "அப்பா முதல் option சரியானது. அப்ப தான் என்ன பத்தி தெரிய வரும்"னுசொல்ல. "டேய் நீ வாயமூடு உனக்கு பேசுற தகுதி இல்ல. அம்மா காயத்ரி நீ யோசிச்சு சொல்லு." என்றார் ஜம்புலிங்கம்

காயத்ரி யோசித்தாள் ரெண்டு option மே அவளை பொறுத்த வரை தூக்கு கயிறு தான்.

முதல் option செல்வாவை நல்லவனாக காட்டி வாழ்நாள் முழுக்க தனக்கு அவமானத்தை தேடி தரும். அதில் செல்வாவிடம் நான் தலைகுனிய நேரிடும். மேலும் நாளைக்கு எல்லா இடங்களிலும் தன்னை பற்றி மோசமான அபிப்ராயம் பரவி விடும். அதுனால முதல் option வேணாம்.

ரெண்டாவது option செல்வாவுக்கு டெய்லி torture. அவனை டெய்லி படாத பாடுபடுத்தி, அவன ஓடவச்சுரலாம் எப்படியும் என் அம்மா அப்பா மற்றும் செல்வா அம்மா அப்பா அவன இனிமே நம்பமாட்டாங்க. கொஞ்சநாள்ல diverce வாங்கிட்டு திரும்ப வாழ்கையை ஆரம்பிக்கலாம். இந்த காலத்துல diverce ரொம்ப easy ஆயிடுச்சு, அதோட இது ரொம்ப safe ஆன option.

இப்படி காயத்ரி யோசிக்க செல்வாவுக்கு என்ன நடக்குதுன்னு புரியல. ஒன்னு மட்டும் தெளிவா புரிஞ்சுடுச்சு. இனிமே வாழ்நாள் முழுக்க torture தான்.

காயத்ரி தொண்டையை சரி செய்து கொண்டு, "அங்கிள், ஆன்டி எனக்கென்னவோ கல்யாண option தான் சரின்னு தோணுது. என் தங்கை வாழ்க்கை, மற்றும் உங்க ரெண்டு
பேரும் கேட்ட மன்னிப்பு உங்க நல்ல மனசு எனக்கு புடிச்சுருக்கு. செல்வாவை என் அன்பால திருத்த முடியும்னு எனக்கு நம்பிக்கை இருக்கு. அதுக்கு நீங்க ரெண்டு பேரும் ஆதரவு குடுக்கணும்."

"இத பாருடா எவ்வளவு தெளிவா பேசுற இவதான் என் மருமக. மூர்த்தி சார், டாக்டர் மேடம் நாம சம்பந்தி ஆயிட்டோம்.எனக்கெனவோ வர்ற முஹுர்ததில கல்யாணத்த முடிச்சிரலாம் அப்படின்னு தோணுது. நீங்க என்ன சொல்றிங்க"
.
டென்ஷன் சூழ்நிலை விலகி சந்தோஷமான சூழ்நிலை உருவானது. Dr காஞ்சனா, "இங்கே நடந்தது யாருக்கும் தெரிய வேணாம்.திருவேற்காடு கோவில்ல கல்யாணத்த முடிச்சிரலாம். யாராவது கேட்டா, லவ் marrige அப்பிடின்னு சொல்லிரலாம்".

இதுவே நல்ல யோசனையாக பட, அனைவரும் கிளம்பினர்.

ஜம்புலிங்கம் செல்வாவிடம் "ஏன்டா எங்கள வாழ்நாள் முழுக்க மறக்க முடியாத அவமானத்த உண்டாக்கிட்ட. உன்ன என் மகன்னே சொல்ல எனக்கு வெக்கமா இருக்கு. இனிமே உன்ன பாக்கவோ பேசவோ எனக்கு விருப்பம் இல்ல. பார்வதி, இனி அவன் என் கூட பேசனும்னா நீதான் அவன் சார்பில பேசணும். நான் அவன் கூட பேச மாட்டேன். புரிஞ்சுதா". தலை ஆட்டினாள் பார்வதி.

கல்யாணம் இன்னும் ஒரு வாரத்தில் என்று குறிக்கபட, திருமணத்துக்கு மூன்று நாள் முன்பு பூஜா காயத்ரியை அவள் வீட்டில் சந்தித்தாள்.

"என்னடி உனக்கு கல்யாணம்னு கேள்விபட்டேன். யாரு மாப்பிள்ளை? "

"எல்லாம்உன்பாய் friend செல்வா தான்" என்று கிண்டலாக பதில் சொன்னாள் காயத்ரி.

பூஜாவால் நம்ப முடியவில்லை "என்னடி சொல்ற. நீங்க ரெண்டு நாய் மாதிரி அடுச்சுகிட்டிங்க"

"இப்போ அதல்லாம் தாண்டி போச்சு"

"ஏண்டி நீ அவன லவ் பண்ணுறியா?"
.
"இல்லை"

"அவன் உன்ன லவ் பண்ணுரானா?."

"இல்லை"

"என்னடி இதுகூத்து. அப்பறம் எப்படி கல்யாணம்"

கண் சிமிட்டி கிட்டே "அது என் பிளான் தாண்டி. அவனை எனக்கு அடிமை ஆக்க போறேன்.நான் பண்ற கொடுமைல அவன் சொல்லாம கொள்ளாம சன்யாசம் வாங்கிட்டு போய்டுவான்"

"ஏண்டி இது பாவம் இல்லையா. நான் இப்பவே செல்வா வீட்டுல பேச போறேன்னு" சொல்ல. மூர்க்கமானாள் காயத்ரி. "இங்க பாரு நீ அங்க போயி சொன்ன நம்ம பிரெண்ட் ஷிப் கட் ஆயிடும். ஜாக்கிரதை

"இல்லைடி நீ பண்றது தப்பு. உன் கூட பேசவே எனக்கு அவமானமா இருக்கு. செல்வாவ அவமானபடுதுறேன்னு சொல்லிட்டு நீ உன்னை அசிங்கபடித்திக்கிற.

நீ என்ன frindship-ப கட் பண்றது நானே கட் பண்றேன். அம்மா தாயே உனக்கும், உன் பிரெண்ட்ஷிப்க்கும் ஒரு good bye" . சொல்லி விட்டு கோபமாக வெளியேறினாள் பூஜா
.

செல்வா சம்பவம் நடந்த தினத்திலிருந்து யார் கூடவும் பேசவில்லை. ஆபீஸ் போகவும் இல்லை. அப்பா ஜம்புலிங்கம் அவனை பார்ப்பதை தவிர்த்தார். அம்மா மட்டும் அவனுக்கு ஆறுதல். அவள் மட்டும் "என்னடா ஜோசியக்காரன் சொன்னமாதிரி உனக்கு கெட்ட பெயர் வந்துருச்சே" என்று புலம்பி கொண்டு இருந்தார்.



திருமணத்திற்கு 2 நாள் முன்பு அவனுக்கு Dr காஞ்சனாவிடம் இருந்து கால் வந்தது.

"மாப்ளை உங்கள நான் மீட் பண்ணனும். வெளியில மீட் பண்ணினா நல்லது."

"முதல்ல என்ன மாப்ள அப்பிடுன்னு கூப்பிடாதிங்க, செல்வானு பெயர் சொல்லி கூப்பிட்டா போதும். இப்போ எங்க வரணும்."

"சரி செல்வா, நீங்க பார்க்ஷெரட்டன் வாங்க."

"எப்போ வரணும்".

"ஒரு அரைமணி நேரத்ல வர முடியுமா?"

ஒரு செகண்ட் யோசித்த செல்வா "சரி வரேன்" என்று சொன்னான்.


No comments:

Post a Comment