Wednesday, April 22, 2015

அன்பே உன் பேர் என்ன ரதியோ? - அத்தியாயம் - 7

செல்வா ஆபீசில் ஆறுமணி ஆனவுடன், உடனே கிளம்பி வடபழனியில் உள்ள ஆடியோ கடையில் ஐ போடில் பாடல்களை அப்டேட் செய்து, தி நகர் வந்து 22 புத்தகங்களை பல பதிப்பகங்களில் விசாரித்து வாங்கி விட்டு வந்தான். அனைத்து புத்தகங்களும் காயத்ரிக்கு பிடித்த எழுத்தாளர்கள் எழுதியது.

வீட்டில் நுழைந்த போது இரவு எட்டுமணி. அவன் செல்போனை எடுத்து பார்க்க காயத்ரியிடம் இருந்து இரண்டு missed கால் வந்து இருந்தது. சாரி கவனிக்காம விட்டோமே என்று நினைத்தான்.

சரி இப்போ வீட்டுக்கு வந்தாச்சு, காயத்ரியை நேரடியாக பார்த்து பேசி கொள்ளலாம் என்று முடிவு செய்தான். அவன் வீட்டுக்கு திரும்பும் போதெல்லாம் அவனுக்காக புதிய உடை, மல்லிகை பூ மற்றும் அலங்காரத்துடன் காத்திருக்கும் அவள், அன்று ஏனோ கவலையாக தெரிந்தாள். வண்டியை நிறுத்தி விட்டு காயத்ரியை நெருங்கி அழைக்க, அவளிடம் இருந்து பதில் இல்லை. தீவிர சிந்தனை வசப்பட்ட நிலையில் இருந்தாள். அவள் தோளை தட்டி "ஹாய்" என்றான். சிந்தனையில் இருந்து விடுபட்ட காயத்ரி"உங்கள தான் தேடிகிட்டு இருக்கேன், உங்க போன்ல நான் ட்ரை செய்து பதில் எதுவும் வராததால என்ன ஆச்சோன்னு கவலைபட்டு இருந்தேன்" என்றாள்.

"சொல்லுடா என்ன பிரச்சனை?" என்றான். அவளுக்கு உச்சித்குமார் விஷயத்தை அவனிடம் எப்படி ஆரம்பிப்பது என்று தெரியவில்லை. ஒரு வேளை சரியாக புரிந்து கொள்ளாமல் என்னை பத்தி சந்தேகபட்டால் என்ன செய்வது. சரி முதல்ல இத வேற மாதிரி ஆரம்பிக்கலாம் என்று, "ஒண்ணுமில்லை செல்வா என்னோட friend பாரதி அவளுக்கு கல்யாணம் ஆகி கொஞ்சம் நாள் தான் ஆகுது", என்று ஆரம்பித்து உச்சித் குமார் பற்றிய விபரங்களை அப்படியே பெயர் மாத்தி செல்வாவிடம் சொல்லி, "இப்போ அவள ப்ளாக்மெயில் பண்ணுறான். என்ன பண்ணுறதுன்னு கேக்குறா". செல்வாவுக்கு எல்லாம் புரிந்தது.



ஏற்கனவே செந்தமிழ் இந்த விபரங்களை பூஜாவிடம் இருந்து அவனுக்கு தெரிவித்து இருந்தான். கொஞ்சம் விளையாடலாம் என்று எண்ணி, "இது அவள் பண்ணுன தப்பு, நம்பிக்கை துரோகம். அதுக்கு ஏத்த தண்டனைய அவ அனுபவிக்கணும். அவ புருஷன் அவள முதல்ல டைவர்ஸ் பண்ணிட்டு வேற பொண்ண கல்யாணம் பண்ணிக்கணும். அவ செஞ்ச தவற உணர்ந்து அவதிபடனும்" என்று சொல்ல, காயத்ரிக்கு முகம் மாறியது. "அய்யோ இப்போ சொன்னால் நம்மளை பத்தியும் இப்படித் தானே சொல்லுவார்", என்று மனம் நொந்து போனாள்.

செல்வாவுக்கு ஞாபகம் வந்தது. என்ன இது ஒரு மாதம் ஆகியும் அந்த உச்சித்குமார் பற்றி தகவல் இல்லையே என்று நினைத்து விட்டு, சரி காலைல கூப்பிட்டு கேக்கலாம் என்று முடிவு செய்து காயத்ரியை பின் தொடர்ந்தான். இரவு உணவை முடித்து விட்டு இருவரும் படுக்கை அறை திரும்பினர், காயத்ரிக்கு கடந்த இரண்டு நாளாக உடல்வலி. இன்று இந்த பிரச்னையும் சேர ஆழ்ந்த யோசனையில் இருந்தாள். "என்ன மேடம் என்ன தீவிர யோசனை" என்று கிண்டல் செய்தான்.

அவள் பிறந்த நாள் காலை 8 மணி அதனால் அவளுக்கு கிப்ட் கொடுக்க வேண்டியதை காரில் ஒளித்து வைத்து விட்டு வந்து இருந்தான். இருவரும் படுக்கையில் படுத்தபின் கொஞ்சநேரம் பேசிவிட்டு அவன் உறங்கிவிட, காயத்ரிக்கு தூக்கம் வரவில்லை.புரண்டு புரண்டு படுத்து கடைசியில் உறங்கிய போது காலை 2 மணி.


6 மணிக்கு எழுந்த செல்வா செய்த முதல் காரியம் புத்தகங்களையும் ஐ போடையும் கட்டிலுக்கு அடியில் வைத்தது தான்.

பிறகு ஹாலை பலூன் மற்றும் கலர் காகிதங்களால் அலங்கரித்தான்.

7 மணிக்கு அவன் முதல் நாள் பேக்கரியில் ஆர்டர் செய்து இருந்த பிறந்த நாள் கேக் வந்தது. அதை அப்படியே fridge ல்வைத்தான்.

எல்லாம் முடித்து விட்டு அவள் அருகில் உக்கார்ந்து 8 மணி எப்போது ஆகும் என்று வெயிட் செய்தான்.
சரியாக எட்டு மணி ஆக, அவள் காதுக்கு அருகில் சென்று my sweety , my beloved wife என்று கொஞ்சி எழுப்ப கண் திறந்தகாயத்ரியை ஹாப்பி பர்த்டே சொல்லி வாழ்த்து சொன்னான். காயத்ரிக்கு அவள் பிறந்த நாளே மறந்து போனது. வாழ்த்துசொன்ன செல்வாவை கட்டி அணைத்து நன்றி சொன்னாள், குளித்து விட்டு வந்தவுடன், முதல் வேலையாக கேக் வெட்டி,பலூன் உடைத்து, காயத்ரி செல்வாவுடன் கொண்டாடினாள்.

"உனக்கு ரெண்டு கிப்ட் இருக்கு" என்று சொன்ன உடன்"எங்கே" என்று அவள் ஆவலுடன் கேட்க "வெயிட் பண்ணு கட்டிலுக்குஅடியில இருக்கு. நான் எடுத்து வந்து தரேன்" என்று சொன்னான்.

அதற்குள் அவள் செல்போன் அலற யாராக இருக்கும், ஒரு வேளை அவனாக இருக்குமோ என்று நடுங்கியபடி எடுத்தாள்.நல்ல வேளை அது அவளோட வீட்டு தொலைபேசி எண். போனை எடுத்தவுடன் அவள் அம்மா "ஹாப்பி பர்த்டே" சொல்லிவிட்டு "நான் அங்க வரேன்" என்று சொல்லி, "உன் தங்கை வாழ்த்து சொல்லணுமாம்" என்று சொல்லி விட்டு காஞ்சனாமூர்த்தியை அழைக்க விரைந்தாள். அக்காவிடம் வாழ்த்து சொல்லிய திவ்யாவிடம்," எப்போ நீ வீட்டுக்கு வர" என்று கேட்க, "இல்லக்கா, நான் உன்ன பார்க்க அங்க வர முடியாது. மாமா எங்கிட்ட ஒரு மாதிரி பேசுறாரு" என்று சொல்லி அழஆரம்பித்தாள். காயத்ரிக்கு ஒன்றும் புரியவில்லை "என்னடி விபரமாக சொல்லு" என்று கேட்க, "இல்லக்கா அவர் என்னைமகாபலிபுரம் போகலாம், ஜாலியா திரில்லா இருக்கும், உன் அக்காவுக்கு தெரிய வேணாம். ஏன் மாமா இப்படி தப்பா பேசுறிங்கநான் அக்கா கிட்ட சொல்லுருவேன்னு சொன்னப்போ, நீ சொன்னியினா அவ உன்னை நம்ப மாட்டா. அப்படி நம்பினாலும்எனக்கு கவலை இல்லை, மிஞ்சி போனா அவ என்ன பண்ணுவா, டைவர்ஸ் தான, எனக்கு கவலை இல்லை அப்பிடின்னுசொல்லிட்டாரு".

"ஏண்டி அம்மா கிட்ட சொல்லலையா?" என்று கோபமாக கேட்க, "உனக்கு தான் அம்மாவை பத்தி தெரியுமே, மாப்பிளைசொன்னதுதான் வேதம், அதுனால சொல்லலை"

"சரி அழாத. நான் பாத்துக்கிறேன்" என்று சொன்னாள்.


அதற்குள் படுக்கை அறையில் இருந்து சந்தோசமாக வந்த செல்வா, "நீ அங்க வந்தா நான் ரெண்டு கிப்டையும் காண்பிப்பேன்.உனக்கு ரொம்ப பிடிக்கும்" என்று சொல்ல, "அது மொதல்ல இருக்கட்டும். என் கேள்விக்கு பதில் சொல்லுங்க. இந்த வாரம் நீங்க திவ்யாவுக்கு ஏன் கணக்கு பாடம் சொல்லி தர போகலை?"

" இல்ல அவளே படிச்சுக்கிறேன் அப்படின்னு சொன்னா"

"சரி போன வாரம் சண்டே அன்னிக்கு போனிங்களே என்ன நடந்துச்சு?"

எரிச்சல் ஆனான் செல்வா, "ஒண்ணும் நடக்கலை. அல்ஜிப்ரா சொல்லி தந்திட்டு வந்தேன்."

"அப்புறம் அங்கே என்ன நடந்தது?"

" ஒன்னும் நடக்கல".

"பொய் சொல்லாதிங்க. கணக்கு சொல்றேன் சொல்லிட்டு என் தங்கையை கணக்கு பண்ண பாத்திங்களா?"

" ஏய் என்ன பேசுறோம்னு தெரியாம பேசாத. அப்புறம் பின்னால வருத்தபடுவ".

"எனக்கு அதை பத்தி கவலை இல்லை. செல்வா, அவளோ 10 வது படிக்கிற சின்ன பொண்ணு, இவ்வளவு கேவலமா நடந்துகிரிங்களே வெக்கமா இல்லையா? அவ உங்கள மாமா அன்போட கூப்பிட நீங்க மாமா வேலைய காமிச்சிங்களா?"ஆவேசத்துடன் கத்தினாள்.

ஒரு புறம் உச்சித் குமாரின் torture இன்னொரு புறம் நல்லவன் போல் நடிக்கும் கணவன். யாரை நம்புவது?

செல்வாக்கு ஒரு நிமிஷம் என்ன செய்வதென்று தெரியவில்லை.

அவளின் தோளை உலுக்கினான். "காயத்ரி நான் அப்படிபட்ட ஆள் இல்ல. அதுவும் திவ்யா மாதிரி சின்ன பொண்ணுங்க கிட்ட இப்படி நடக்கும் அளவுக்கு கேவலமானவன் இல்லை".

"அப்படின்னா அவள் பொய் சொல் சொல்றான்னு சொல்லுறிங்களா? அவள் என் தங்கை பொய் சொல்ல மாட்டா? அதுனால அவளுக்கு என்ன லாபம்?" என்று சீறல் உடன் எதிர் கேள்வி எழுப்பினாள்.

"உங்களுக்கு என்ன செக்ஸ் மட்டும் வேணும்னா எத்தனையோ பொண்ணுங்க கிடைப்பாங்க? ஏன் நான் அழகா இல்லையா?இன்னும் உயிரோட தான இருக்கேன்? ஏன் இப்படி அலையிறிங்க" என்று கதற, பொறுமை இழந்த செல்வா தன் வாழ்கையில் இரண்டாவது முறையாக அவளை கைநீட்டி அறைந்தான்.


"ச்சே, என்ன பத்தி கேவலமா பேசிட்ட. இப்போ உனக்கு புரியாது. ஆனா நீ உண்மையை உணர்ந்து தேடும்போது நான் அங்க இருக்க மாட்டேன்" திரும்பி வேக வேகமாக வெளிய வந்து தன் பைக்கை எடுத்து கொண்டு கிளம்பியவனுக்கு தன்னை அறியாமல் கண்களில் இருந்து நீர் கொட்டியது.


"எனக்கு மட்டும் ஏன் இந்த சோதனை? நான் எதுவும் தப்பா நடந்துக்கலையே? என்னை ஒரு பொறுக்கியா, காமந்தககாரனா நினைசுட்டாள். . ஆனா அவளுக்கு என் மேல நம்பிக்கை இல்லாம போய்டுச்சு. அவளை என்னால மறக்க முடியுமான்னு தெரியலை. இனிமே மனசு ஒட்டுமான்னு தெரியலை"


முதல்ல அத்தை கிட்ட பேசலாம் என்று எண்ணி செல்போனை தேட, அப்போது தான் காயத்ரியுடன் கோபப்பட்டு cell phone ஐ வீட்டிலே விட்டு விட்டு வந்தது ஞாபகம் வந்தது. சரி இப்போ என்ன செய்யலாம் என்று யோசித்து அருகில் உள்ள PCO சென்று காஞ்சனாவின் செல்போனுக்கு டயல் செய்தான். போனை எடுத்த காஞ்சனா "யாரது" என்று கேட்க, கொஞ்சம் இடைவெளி விட்டு"அத்தை நாந்தான்"

" என்ன மாப்பிளை உங்க செல்போன் என்ன ஆச்சு".

"கொஞ்சம் வெளியில அவசர வேலையா வந்ததனால வீட்டில மறந்து வச்சிட்டேன்".

"என்ன? சொல்லுங்க மாப்பிளை .நான் அங்கதான் வந்திகிட்டு இருக்கேன்" என்று சொல்ல

"ஒண்ணுமில்ல, நீங்க வரும் போது நான் கல்யாணத்துக்கு முன்னால காயத்ரிக்குன்னு கிப்ட் ஒன்னு கொடுதுரிந்தேன். அத காயத்ரி கிட்ட இப்போ கொடுத்துருங்க" என்று சொல்ல,

"ஏன் மாப்பிள்ளை உங்க குரல் ஒரு மாதிரியா இருக்கு, இப்போ நீங்க எங்க இருக்கீங்க" என்று கேட்க,

"ஒன்னும் இல்லை, அத்தை மழைல நனைஞ்சுட்டேன். வேற ஒண்ணும் இல்லை. urgent வேலையா வெளியில இருக்கேன். நான் அப்புறம் கூப்பிடுறேன்" என்று சொல்லி போனை வைத்தான்.


"என்ன ஆச்சு மாப்பிளைக்கு. ஒரு மாதிரியா பேசுறாரு" என்று நினைத்து கொண்டே, திவ்யாவை கூட வர சொல்லி அழைத்தாள். "இல்ல அம்மா நான் வரலை என்று சொன்னவளை, ஏண்டி அக்காவை பார்த்து பிறந்தநாள் வாழ்த்து சொல்லையா. ரொம்ப பிகு பண்ணிக்கிற," என்று கேக்க, இனியும் மறுத்தால் சந்தேகம் வரும் என்று திவ்யா காஞ்சனாவுடன் கிளம்பினாள்.


வீட்டில் இருந்த காயத்ரிக்கு உலகமே ஸ்தம்பித்த மாதிரி இருந்தது. தான் செல்வாவை சொன்னது சரியா தவறா என்று தெரியவில்லை. செல்வா அறைந்தது கன்னத்தில் எரிந்தது. எங்கே போக போகிறான். இங்கே திரும்ப வர தானே வேண்டும் என்று இறுமாப்புடன் நினைத்தாள்.

அதற்குள் செல்வாவின் செல்போன் அலற தொடங்கியது. அதை கையில் எடுத்து, ஓ சார் மறந்து வச்சு போய்ட்டார் போல இருக்கு என்று கிண்டலுடன் நினைத்தபடி அழைப்பது யார் என்று கவனித்தாள்.

அதில் செந்தமிழ் போட்டோ வர "ஹாய் செந்தமிழ் அண்ணா கூப்பிடுறார். என்ன விஷயம்னு கேட்கலாம்?" என்று முடிவு செய்து போனை எடுத்தாள்.

"டேய் செல்வா உச்சித்குமாரை போலிஸ்ல அரெஸ்ட் பண்ணிட்டாங்க, அவன் சீக்கிரத்தில வெளிய வர முடியாது. நான் இங்க போலீஸ் கமிசனர் ஆபீஸ் வெளியில இருந்து பேசுறேன், பூஜாவும் என் கூட இருக்கா" என்று சொல்ல, அந்த செய்தியை கேட்டு சிலை போல் நின்றாள் காயத்ரி.




"அண்ணன் நாந்தான் காயத்ரி. நீங்க சொன்ன விஷயம்... "என்று ஆரம்பிக்க
"யாரு காயத்ரியா, நாங்க இப்பவே வீட்டுக்கு வந்திகிட்டு இருக்கோம். உன் பிறந்த நாள் வர்றதுக்குள்ள இத முடிக்கணும்னுநானும் செல்வாவும் முயற்சி பண்ணி இப்போ தான் ஒரு வழியா முடிஞ்சது. மத்தத நேர்ல சொல்றோம்" என்று போனைவைத்தான்.

காயத்ரிக்கு தலை சுற்றியது. "எப்படி இந்த விஷயம் செல்வாவுக்கு தெரிந்தது. நான் ஒன்னும் சொல்லாம எப்படி?என்னென்னமோ நடந்து இருக்கு. எங்கிட்ட ஒரு வார்த்தை கூட சொல்லலையே. அதுவும் பூஜாவும் ஒன்னும்சொல்லவில்லையே. ஆமா நாம்தான் அவகிட்ட பேசி ரெண்டு மாசம் இருக்குமே" என்று பதட்டத்துடன் காத்திருந்தாள்.

அதற்குள் காஞ்சனா திவ்யா இருவரும் வீட்டுக்குள் நுழைய. காஞ்சனா "மாப்பிளை எங்கடி" என்று கேட்க. "ஒன்னும்இல்லம்மா ஒரு சண்டை அதுதான். என்ன சண்டை. உன் பிறந்தநாள் அதுவுமா? அவர் சண்ட போடுற ஆள் இல்லையே?"என்று விசாரிக்க,
"அதும்மா வந்து" என்று திவ்யாவை பார்த்தபடி தயங்க திவ்யா அவளிடம் சைகையில் ஏதோ சொல்ல ,
"என்ன சொல்லுடி, என்ன, திவ்யா மாப்பிள்ளையை பத்தி எதாவது சொன்னாளா?" என்று கேட்க

"ஆமாம்மா, ஏதோ அவர் தப்பா" என்று ஆரம்பிக்க.

"ஏண்டி அவ சொன்னா உனக்கு புத்தி எங்க போச்சு. உன் புருசன நீ புரிஞ்சுகிட்டு தான குடும்பம் நடத்துற? இல்ல நீங்க ரெண்டுபேரும் ராத்திரி படுக்க மட்டும் பெட் ரூம் வரிங்களா" என்று கத்த ஆரம்பிக்க,

காயத்ரி "என்னம்மா இது அருவெறுப்பான கேள்வி கேக்குற?"

"அவ என்ன சொன்னா அத சொல்லு",

"செல்வா மகாபலிபுரம் கூப்பிட்டார்னு"

" ஓஹோ, மாப்பிள்ளை ஒன்னும் சொல்லலையா"

"இல்லம்மா நாந்தான் திவ்யா பொய் சொல்ல மாட்டான்னு சண்டை போட்டேன், அவரு கோவிச்சுகிட்டு போயிட்டாரு".

"போடி கூ முட்டை. அறிவு இல்ல உனக்கு. என்ன நடந்தது, எனக்கு தெரியும்.

இவதான் அப்பிடி கேட்டுருக்கா, மாப்பிள்ளை முடியாதுன்னு சொல்லி அட்வைஸ் பண்ணுனார். நல்ல வேளை நான் அங்கவந்ததால எனக்கு எல்லாம் தெரிஞ்சுது".


"என்னடி இப்போ நடந்தத சொல்லுறிய இல்ல என் கிட்ட அடி வாங்கிறியா" என்று திவ்யாவை பார்த்து உறும,

திவ்யா பயத்துடன் "அம்மா சொல்றது உண்மை. நாந்தான் மாத்தி சொல்லிட்டேன். சாரி அக்கா", என்று தயங்கி சொல்ல, ஒருகணம் என்ன செய்வது என்று கலங்கி நின்றாள் காயத்ரி.

இதற்குள் செந்தமிழ், பூஜாவுடன் வீட்டுக்குள் வர, பூஜா காயத்ரியை பார்த்து "எப்படி இருக்க?" என்று நலம் விசாரித்து விட்டு,நடந்ததை சுருக்கமாக சொன்னாள். "உச்சித் பிரச்னையை முடிச்சுட்டு உன்கிட்ட சொல்லனும்னு செல்வாவுக்கு ஆசை.அதுனால உன்கிட்ட எதையும் சொல்லலை. உச்சித் அவன் தோட்டத்தில கஞ்சா பயிர் பண்ணுறான். அதை விற்று வரும்பணத்தில் தீவிரவாதிகளுக்கு ஹவாலா மூலம் கொடுத்து வருகிறான் என்ற தகவல் இன்பார்மர் மூலம் கிடைத்தது. அதைரகு நண்பரான DSP மூலம் அவனை பிடிக்க இவ்வளவுநாள் ஆனது. இப்போ உனக்கு ஹாப்பி தான. எங்க செல்வா?" என்றுபூஜா, செந்தமிழ் தேட "இல்லை அவர் வெளிய போயிருக்கார்" என்று சமாளித்தாள்.

"சரி நாங்க கெளம்புறோம், இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்" என்று சொல்லி வாழ்த்தி விட்டு இருவரும் விடை பெற்றனர்.

"இந்தாடி உனக்கு ஒரு பரிசு கொடுக்கணும்னு மாப்பிள்ளை கல்யாணத்துக்கு முன்னாலே என் கிட்ட கொடுத்து இருந்தார்" என்றுஅந்த கவரை கொடுக்க, அதில் இருந்து ஒரு கடிதமும் அதை தொடர்ந்த ஒரு application இரண்டும் விழுந்தன. கடிதத்தை படித்தகாயத்ரியின் முகத்தில் மாற்றம், அவளுக்கு அடக்க முடியாமல், கண்களில் கண்ணீர் வழிய தொடங்கியது.

காஞ்சனாவுக்கு ஒன்றும் புரியவில்லை. அதை பிடுங்கி படிக்க தொடங்கினாள்.

"காயத்ரி நமது திருமண வாழ்க்கை நல்லபடியாக நடக்கும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கு. ஒரு வேளை தவிர்க்க முடியாதகாரணங்களால் நாம பிரிய வேண்டி வந்தா உனக்கு உதவியா இருக்கும்னு இந்த விவாக ரத்து பத்திரத்தில கையெழுத்து போட்டுஇருக்கேன்.

உனக்கு என்ன காரணம் போட்டுக்கணும்னு தோணுதோ அதை போட்டுக்கோ.

நீ அதுக்கப்பறம் யாரை வேணாம்னாலும் கல்யாணம் பண்ணிக்க. உன்னோட சந்தோஷம் எனக்கு முக்கியம்.

ஆனா என்னோட வாழ்க்கைல இனி எந்த பொண்ணுக்கும் இடம் கிடையாது.

அன்புடன் செல்வா"

இதை படித்த காயத்ரியின் நிலையோ கவலைக்கிடம் ஆனது. அழுது அழுது கண்கள் வீங்கி விட்டன. ஒரு நிலையில் அவள்மயக்கம் போட்டு விழ காஞ்சனா அவளை கட்டிலில் படுக்க வைத்து நாடி துடிப்பை பார்க்க அது அவருக்கு சந்தோசமானசெய்தியை சொன்னது. அவளுக்கு மயக்கம் தெளிய "ஏண்டி நீயே ஒரு குழந்தை மாதிரி தான். உனக்கு ஒரு குழந்தை வரப் போகுதா?" என்று ஆச்சர்யத்துடன் கேட்க காயத்ரிக்கு முகம் குங்கும பூவாய் சிவந்தது. இந்த வேளையில் "என் செல்வாஅருகில் இல்லையே? அவரை தொடர்பு கொள்ளவும் முடியவில்லையே" என்று மனம் நொந்தாள்.


வீட்டில் இருந்து கிளம்பி, காஞ்சனாவுடன் பேசி விட்டு பைக்கை அதன் போக்கில் விட்டு விட்டான் செல்வா. பெசன்ட் நகர் கடற்கரையில் இருந்த கடையில் உட்கார்ந்து யோசித்து கொண்டிருந்தான்.

"நிச்சயம் அத்தை விவாகரத்து application னை கடிதத்துடன் கொடுத்துரிப்பார். காயத்ரி என்ன முடிவு செய்தாலும் எனக்கு சம்மதமே. ஆனால் அவள் இல்லாமல் நான் எப்படி இருப்பேன். வீம்புக்கு சொல்லிவிட்டு வந்தாலும், இரண்டு மாதங்கள் ஒன்றாக வாழ்ந்த பிறகு அவள் இல்லாத வாழ்கையை நினைத்து பார்க்கவே முடியவில்லை"

நேரம் ஓடியதே தெரியவில்லை. மதியம் சாப்பிட தோணவில்லை. கடல் அலைகள் அவனுக்கு ஆறுதல் தந்தன.
சரி இப்போ வீட்டுக்கு கிளம்பலாம் என்று மாலை ஆறு மணி அளவில் வீட்டை அடைந்தான்.

கதவு பூட்டி இருக்க காலிங் பெல் அழுத்த, சில நிமிடங்களில் கதவு திறந்தது.

கதவை திறந்த காயத்ரிக்கு செல்வாவை பார்த்த உடன் நம்ப முடியவில்லை. சிலையாக சமைந்து போனாள். உள்ளே நுழைந்து அவள் தோளை பிடித்து உலுக்க காயத்ரி மயக்கம் அடைந்து கீழே சாய, அவளை கை தாங்கலாக அணைத்து சென்று படுக்கையில் கிடத்தினான். தண்ணீர் கொண்டு அவள் முகத்தில் தெளிக்க, எழுந்த காயத்ரி அவன் மார்பில் சாய்ந்து தன் கண்ணீரால் அவன் சட்டையை நனைத்தாள்.

"ஏன் செல்வா என்ன விட்டுட்டு போனிங்க. நான் முட்டாள்தனமா பேசுனா, அதுக்காக நீங்க இப்பிடியா என்னை தவிக்க விட்டு போறது. இனிமே நீங்க எங்கயும் போக கூடாது. ஏன்னா இப்போ நான் ஒரு உயிரில்ல ரெண்டு உயிர்" என்று சொன்னாள்.

செல்வாக்கு நம்ப முடியவில்லை. "உண்மையா சொல்லுற".

"ஆமாங்க, நீங்க என்ன விட்டு போறேன்னு சொன்னாலும் நான் உங்கள விட மாட்டேன்". அவனை கட்டி அணைத்து "என்ன நீங்க மன்னிச்சு ஏற்று கொள்வீர்களா?" என்று பாவமாக அவன் முகத்தை பார்க்க, அந்த பார்வை அவன் மனதை அறுத்தது.

"இல்ல கண்ணா நீ இல்லாத வாழ்கையை நான் நினச்சு கூட பார்த்தது இல்லை. நான் முட்டாள்தனமா எழுதின கடிதத்தை மன்னிச்சுடு."

"இல்லைங்க அந்த கடிதம் நீங்க என் மேல வச்ச அன்ப காட்டுது. அம்மா வந்தாங்க நடந்ததை சொன்னாங்க. பிறகு செந்தமிழ் அண்ணா, பூஜாவோட வந்து உச்சித் விஷயத்தை சொன்னாங்க" என்று சொல்லி அவனை பார்த்தாள். "ஏன் அந்த விஷயத்தை நீங்க என்கிட்ட சொல்லலை".

"எனக்கு குன்னூர்ல அவன பாத்த உடனே சந்தேகம். அதுதான் உடனே செந்தமிழ், ரகு ரெண்டு பேர் கிட்டயும் பேசி முடிக்க சொன்னேன்"

"உங்களுக்கு என்கிட்ட அவன பத்தி கேக்கனும்னு தோணலையா."
"சொல்லனும்னு நினைச்சா நீயே சொல்லிருப்ப. அதோட அவன் ஒரு மட்டமான ஆளு அவனுக்கு நீ பயந்து ஓடுறது,மூட்டபூச்சிக்கு பயந்து வீட்ட கொளுத்துற மாதிரி. உன்னோட பழைய வாழ்க்கைய பத்தி எனக்கு கவலை இல்ல. நாம ரெண்டு பேரும் இப்ப வாழுற வாழ்க்கைல ஒருத்தருக்கு ஒருத்தர் உண்மையா இருப்போம். அது போதும்" என்றான்


"ஆமா நீங்க ஏதோ எனக்கு பிறந்த நாள் பரிசு குடுக்கிறேன்னு சொன்னிங்க. அது என்ன?"

ஒருநிமிஷம்என்றுகுனிந்துகட்டிலுக்குஅடியில்இருந்துஅவளுக்குபிடித்த 22 கதைகள்அடங்கியபார்சலைகொடுத்தான்.பிரித்துபார்த்துவிட்டு "அதுஎன்ன 22" என்றுகேட்க

"அது உன்னோட வயசு",

"ஆமால்ல எனக்கு 21 முடிஞ்சு 22 தொடங்குது" அவனை அருகில் இழுத்து ஒரு முத்தம் கொடுத்தாள்.

"இது சரியில்ல" என்று சொன்ன செல்வாவை,

"என்ன" என்று கண்ணாலே அவள் கேட்க "உனக்கு எத்தனை புத்தகம் பரிசா கிடைச்சிருக்கு".

"ம்ம் 22 . ஒன்னு குடுத்த மீதி 21 எங்க?"

"அதுதான் இது" என்று சொல்லி விட்டு சிரித்தாள்.
செல்வாவும் சிரித்தான்.

"சரி இந்த ஐ போடில 1000 பாட்டுக்கு மேல இருக்கு, சில சிறப்பான ஆனா இது வரைக்கும் கேட்காத பாடல்களும் இருக்கு.எனக்கு பிடிச்சிருக்கு. உனக்கும் பிடிக்கும்னு நினைக்கிறேன்".



பாடலை அவன் சுழல விட, ஹான்ட்ஸ் ப்ரீ காதில் மாட்டி கொண்டு அவர்கள் கேட்ட முதல் பாடல், ஜெயச்சந்திரன்வாணிஜெயராம் பாடி, கமல் சுஜாதா நடித்த அந்த மெலடி (Movie-Idhaya malar).

"அன்பே உன் பேர் என்ன ரதியோ
ஆனந்த நீராடும் நதியோ"


பின்குறிப்பு

1. ஊரில் இருந்து திரும்பி வந்த ஜம்புலிங்கம் பார்வதி தம்பதியினரிடம் காயத்ரி நடந்ததை சொல்லி மன்னிப்பு கேட்க, வாயும் வயுறுமாக இருக்கும் மருமகளை மன்னித்து ஏற்றனர்.

2. டிசம்பர் மாத கடைசியில் நடந்த சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் செல்வா முடிசூடா மன்னன் ஆக காயத்ரிக்கு தாங்க முடியாத பெருமை.

3. பூஜா செந்தமிழ் இருவரும் காதலித்து திருமணம் செய்தது, அது ஒரு பெரியகதை.

4. உச்சித் குமார் திகார் ஜெயிலில் அடைக்கப்பட்டு பல்வேறு குற்றச்சாட்டு சுமத்தபட்டு 14 ஆண்டுகள் தண்டனை அனுபவித்து வருகிறான்

5. ஆகஸ்ட் மாதத்தில் நமது செல்வா - காயத்ரிக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. 



No comments:

Post a Comment