Thursday, September 10, 2015

மான்சியின் கனவுகள் - அத்தியாயம் - 18

சத்யன் தினமும் தவறாமல் போன் செய்து ராஜதுரையிடம் பேசினான், மும்பை சென்ற வேலை முடியாமல் இழுத்தடித்தது, அது விஷயமாக பேசிவிட்டு, மான்சியையும் மகனையும்ப் பற்றி விசாரிப்பான், மான்சியிடம் பேசவேண்டும் என்ற ஆவல் அவன் குரலில் வெளிப்படும்

ராஜதுரை இருவரின் நலம் பற்றி சொல்லிவிட்டு “ சத்யா நீ மும்பையில் இருந்து வந்த பிறகு மான்சிகிட்ட பேசு இப்போ வேண்டாம், அவகிட்ட நிறைய சேஞ்ச்சஸ் தெரியுது, அவ மனசை அவளே புரிஞ்சுகிட்டதுக்கு பிறகு நீ அவகிட்ட பேசுறதுதான் நல்லதுன்னு நான் நெனைக்கிறேன்” என்று அவன் ஆசைக்கு தடைவிதித்தார்,,

அவர் வார்த்தைக்கு மரியாதை கொடுத்து சத்யன் மான்சியிடம் போனில் கூட பேசாமல் இருந்தான், ஆனாலும் அவன் மனதில் ஒரு தவிப்பு மான்சி தன்னை புரிந்துகொண்டு என்னையும் புரிந்துகொள்வாளா? என்ற தவிப்பு அவனிடம் நிரந்தரமானது,



மான்சி இல்லாத ஒரு வாழ்க்கையை அவனால் நினைத்துக்கூட பார்க்கமுடியவில்லை, அவனுடைய தவிப்பை எல்லாம் சிகரெட் புகையாக்கி வெளியேற்றினான்

அவள் பச்சை மூங்கில் மரம் போல, அதை வளைத்து கல்யாணப் பந்தலும் போடலாம், அதே பச்சை மூங்கிலால் இறுதியாத்திரைக்கான படுக்கையையும் தயார்செய்லாம், மான்சி அவனுக்கு கல்யாண பந்தலா? மூங்கில் பாடையா? என்ற கலவரமான எண்ணங்கள் அவன் மனதில் தோன்றி அவனை அலைக்கழித்தது

எதுவாயினும் மீண்டும் கோவை வரும் நாளுக்காக அவன் மனம் விநாடிகளையும் கணக்கிட்டபடி காத்திருந்தது

சத்யன் சென்ற நான்கு நாள் கழித்து நிலவு மங்கிவரும் ஒரு மாலையில் மகனை மடியில் வைத்துக்கொண்டு அவன் முகத்தையே பார்த்துக்கொண்டு அமர்ந்திருந்தாள், குழந்தைக்கும் சத்யனுக்கும் உள்ள ஒற்றுமையை எல்லாம் கணக்கிட்டபடி இருந்தாள்

அப்போது கையில் பால் டம்ளருடன் வந்த பூங்கோதை பாலை மேசையில் வைத்துவிட்டு மான்சியின் மடியில் இருந்த பேரனை தூக்கிக்கொண்டு “ என்னம்மா குழந்தையவே பார்த்துக்கிட்டு இருக்க,, கீழகூட வரமாட்டாங்குற, இந்த பத்மாவையும் ஆளைக்காணோம், சனி ஞாயிறுக்கு கூட வரலை, அப்படி என்னதான் பண்றான்னு தெரியலை” என்றபடி பேரனை தொட்டிலில் போட்டுவிட்டு பால் டம்ளரை எடுத்து மான்சியிடம் கொடுத்தாள்

மறுக்காமல் வாங்கிக்கொண்ட மான்சி “ என்னம்மா வேற யார்கிட்டயாவது குடுத்துனுப்ப வேண்டியதுதானே, நீங்களே ஏன்மா எடுத்துட்டு வந்தீங்க” என்று சங்கடப்பட்டபடி பாலை அருந்தினாள்

“ நீ காலையிலேர்ந்து கீழேயே வரலை அதான் உன்னை பார்க்கனும்னு நானே வந்தேன்,, ஆமா அதென்ன ஊட்டிலேருந்து நானும் பார்க்கிறேன் என்னை அம்மான்னு கூப்பிடுற, இனிமேல் அத்தைன்னு கூப்பிடு சத்யனோட அப்பாவை மாமான்னு கூப்பிடு” என்று மானசிக்கு உறவுமுறையை சொல்லிவிட்டு பால் டம்ளரை வாங்கிக்கொண்டு போனாள்

மான்சி அத்தை மாமாவை மனனம் செய்தாள், அன்று இரவு உறங்கும் போது சத்யனின் அழுக்கு சட்டையை எடுத்து தன்மீது போட்டுக்கொண்டு உறங்கினாள்

மறுநாள் காலை வந்த பத்மா வந்ததும் மாடிக்குத்தான் ஓடி வந்தாள், வந்ததும் குழந்தையை தூக்கி கொஞ்சியவள் மான்சியின் முகத்தில் தெரிந்த மாற்றங்களையும் கவணிக்க தவறவில்லை, பத்மா குழந்தையை மடியில் வைத்துக்கொண்டு தரையில் சம்மணமிட்டு அமர்ந்து “ என்ன மான்சி ரொம்ப டல்லா இருக்க?” என்று கேட்க

அவளருகில் அமர்ந்த மான்சி “ அதெல்லாம் ஒன்னுமில்ல அக்கா,, நல்லாத்தான் இருக்கேன்,, நீங்க ஏன் சனி ஞாயிறு பசங்களை கூட கூட்டிட்டு வரலை அத்தை ரொம்ப வருத்தமா சொல்லிகிட்டு இருந்தாங்க” என்று மான்சி புடவைத் தலைப்பை விரலில் சுற்றியபடியே பேசினாள்

மான்சி அத்தை என்று கூப்பிட்டதை மனதில் குறித்துக்கொண்ட பத்மா “ பசங்க எங்க இங்கே இருக்காங்க, அவங்களுக்கு பத்து நாள் ஸ்கூல் லீவு, என் மாமியார் மாமனார் கூட திருச்சிக்கு போய்ட்டாங்க” என்றாள் பத்மா

பத்மாவை ஆச்சர்யமாக பார்த்த மான்சி “ அப்போ நீங்க தனியாத்தானே அக்கா இருந்திருப்பீங்க,, பேசாம இங்கே கிளம்பி வரவேண்டியது தானே அக்கா?” என்று மான்சி கேட்டதும்

பத்மாவின் முகம் வெட்கத்தை பூசிக்கொண்டது, தனியாக எப்படி இருந்தேன் என்று இவளிடம் எப்படி சொல்வது என்று சங்கடமாக நெளிந்தபடி “ அதுவந்து நான் எங்க தனியா இருந்தேன், அவரும் ரெண்டு நாளா மில்லுக்கு போகலை வீட்டுலதான் இருந்தார்” என்று பத்மா நிறுத்தி நிறுத்தி பேச

“ அப்போ அவரையும் கூட்டிக்கிட்டு இங்க வந்திருக்கலாமே அக்கா?” என்று இன்னும் புரியாமல் மான்சி பேசியதும், பத்மாவுக்கு என்ன சொல்வது என்று புரியாமல் தவிப்பாக அமர்ந்திருந்தாள்,

அப்போது தான் மான்சியின் முகத்தில் தெரிந்த மாற்றங்கள் அவள் மனதில் ஏதோவொரு மின்னலை ஏற்படுத்த, சத்யனின் இன்னொரு பிரச்சனையை நாம ஏன் தீர்த்து வைக்க கூடாது? என்று சட்டென்று மனதில் ஒரு எண்ணம் தோன்ற ம்ஹும் இதுவும் ஒருவகை வைத்தியம் தானே?,, என்று வெட்கத்தையும் கூச்சத்தையும் உதறிவிட்டு மான்சியின் பக்கம் திரும்பி நேராக அமர்ந்தாள், மான்சி ஒரு குழந்தைக்கு தாயானாலும் கன்னி என்பதை மனதைவிட்டு ஒதுக்கினாள் பத்மா

தோழியிடம் பேசுவதுபோல் இலகுவாக ஆரம்பித்தாள் பத்மா “ அதையேன் கேட்கிற மான்சி, சும்மாவே பசங்க வீட்டுல இருந்தாலும் தூங்கினதும் அவங்களை கொண்டு எங்க மாமியார் ரூம்ல படுக்க வச்சிட்டு வந்து கொட்டமடிப்பாரு, இப்போ வீட்டுல வேற யாருமே இல்லையா மனுஷன் ராவும் பகலும் ஒருநிமிஷம் என்னை ஓய்வா விடலை” என்று கூறிவிட்டு மான்சியின் கேள்விக்காக பார்த்தாள் பத்மா

“ ஏன்க்கா நீங்களும் அவரும் வீட்டையெல்லாம் க்ளீன் பண்ணீங்களா? உங்க வீட்டுல வேலைக்காரங்க இல்லையா அக்கா?” என்று அப்பாவியாக மான்சி கேட்க

இப்படியொரு கேள்வியைத்தான் அவள் கேட்பாள் என்று முன்பே பத்மா கணித்திருந்ததால் நல்லவேளை இந்தப் பற்றி பேச ஆரம்பித்தது என்று தனக்குத்தானே சபாஷ் போட்டுக்கொண்டு மேலே பேசினாள் “ என்ன மான்சி புரியாம பேசுற, வீட்டுல யாரும் இல்லேன்னா வீட்டைத்தான் க்ளீன் பண்ணுவாங்களா?, போடி இவளே,, அவருக்கு அது மேல ரொம்ப ஆசை மான்சி, தினமும் அவருக்கு நான் வேனும், இந்த ரெண்டு நாளும் நைட்ல என்னை டிரஸே போட்டுக்க விடலை, பகல்லயும் வெறும் நைட்டி மட்டும் தான், சமையல் கூட பண்ணலைன்னா பார்த்துக்கோயேன், ரெண்டுநாளும் ஹோட்டல் சாப்பாடுதான், இன்னிக்கு காலையில கூட படுக்கையை விட்டு எழுந்திரிக்க விடலை, இன்னும் ஒரேயொரு முறைடி பத்துன்னு கசக்கி புழிஞ்சுட்டாரு, உடம்பெல்லாம் பயங்கர வலி ஆனா சுகமான வலி மான்சி, காலையில வெந்நீர் வச்சு குளிச்சிட்டு குழந்தையைப் பார்த்து நாளாச்சேன்னு ஓடி வந்தேன், சாயங்காலம் மில்லுலேருந்து இங்கே வந்து கூட்டிட்டுப் போறேன்னு விட்டுட்டு போயிருக்கார்” என்று பத்மா சொல்ல 


முன்பிருந்தவளாய் இருந்தால் இன்னும் ஏதாவது லூசுத்தனமாக கேள்வி கேட்டிருப்பாள், ஆனால் இந்த மான்சிக்கு பத்மா சொல்வது ஓரளவுக்கு புரிவதுபோல் இருந்தது, அக்கா என்ன சொல்றாங்க என்ற ஆர்வம் கிளர்ந்தெழ, அடிவயிற்றில் ஏற்பட்ட குறுகுறுப்போடு விழிகளை அகல விரித்து “ அக்கா, எ... என்னதுக்கு இதுமாதிரி,, வலிக்குற மாதிரி ஏன்க்கா?” என்று தொடர்ச்சி இல்லாத கேள்வியை திக்கித்திணறி கேட்க

பத்மாவுக்கு மான்சியை மாற்ற ஒரு வாய்ப்பாக இதை கருதி நடந்தவைகளோடு தனது கற்பனையும் கலந்து எடுத்து விட்டாள் “ ஒருமுறை பண்ணா வலிக்காது ஓயாம பண்ணா வலிக்கத்தான் செய்யும்,, ஆனா மான்சி நான் வலிக்குதுன்னு சொன்னதும் அவரு உடனே இறங்கிடுவாரு, அதுக்கப்புறம் நானே வேனும் வேனும்னு கெஞ்சுற மாதிரி ஒன்னு பண்ணுவாரு பாரு,,... ஸ்ஸ்ஸ்ஸ்......... யப்பா பொண்ணாப் பொறந்ததே அதுக்குத்தானோன்னு இருக்கும்”என்று பத்மா பூடகமாக எதையோ குறிப்பிட,..

மான்சியின் ஆர்வம் அதிகமானது, “ என்னக்கா பண்ணுவாரு?” என்று கேட்க

இந்த கேள்விக்கு உண்மையாகவே வெட்கப்பட்ட பத்மா “ அட என்ன மான்சி இதையெல்லாம் கேட்கிற?” என்றவள் கதவை நோக்கிவிட்டு “ சரி அத்தை வந்தாலும் வந்துருவாங்க நீ காதை கொண்டா சொல்றேன்” என்று பத்மா கூற

மான்சியின் ஆர்வம் அதிகமாக கழுத்தை மட்டும் நீட்டி பத்மாவின் வாயருகே காதை கொண்டு போனாள், அதன்பிறகு பத்மா கூறிய தாம்பத்ய ரகசியங்களை மான்சி விழிவிரித்து, வாய் பிளந்து, முகம் வெவ்வானமாய் சிவக்க கேட்டாள்

ஒருகட்டத்தில் பட்டென்று விலகிய மான்சி “ அய்ய ச்சீ அங்கெல்லாம் போயா,, ம்ஹூம் ச்சீச்சீ” என்று கூச்சத்துடன் கூற

“ பின்ன என்னன்னு நீ நெனைச்ச,, ஏய் அதுதான் புள்ள சொர்க்கம்,, நானும் சும்மா இருக்கமாட்டேன், பதிலுக்கு அவருக்கு நல்லா பண்ணிடுவேன்,, அதுல அவருக்கு ரொம்ப சந்தோஷமாயிடுவாரு, அப்புறம் வலியாவது மண்ணாவது, செம ஜாலிதான், இப்ப இப்படித்தான் சொல்லுவ, ஒருநாளைக்கு இடுப்பை பிடிச்சிக்கிட்டு அய்யோ அக்கா பெண்டை நிமித்திட்டாருன்னு நீ வந்து என்கிட்ட புலம்புவ பாரு அப்ப பேசிக்கிறேன் இரு” என்று பத்மா செல்லமாய் மிரட்ட

“ ம்ஹூம் நான் சொல்லமாட்டேன்பா” என்று மான்சி வெட்கத்தில் முகத்தை மூடிக்கொள்ள, அவள் விரல்களை பிரித்து முகத்தை பார்த்த பத்மா

“ சொல்லாம என்னப் பண்ணுவ? ஓய் மான்சி ராவுல ஜொல்லு விடுறது இவனுங்களுக்கு பரம்பரை வியாதி மாதிரி, என்கிட்டதான் உன் பஞ்சாயத்தெல்லாம் வரனும், ஏன்னா நான் மட்டும்தான் உனக்கு தாய்வழி உறவு,, அதாவது உன் அக்கா,, அதனால அக்கா இந்த மனுஷனை பாருக்கா இங்கேல்லாமா கடிக்கிறதுன்னு என்கிட்டதான் வந்து சொல்லனும்,, இந்த வீட்டுல யார்கிட்டயும் சொல்ல முடியாது உனக்கு வேற வழியில்லைடி மான்சி ” என்று பத்மா கிண்டல் செய்ய

அந்த அலாதியான அதீதமான கற்பனையில் திளைத்த மான்சி “ அய்யோ போங்கக்கா,, எனக்கு என்னமோ மாதிரியா இருக்கு ” என்று வெட்கமாய் பத்மாவின் மடியில் முகத்தை அழுத்திக்கொண்டாள்




“ அம்மாடி தாயே மடியில இருக்குற குழந்தையை நசுக்கிடாதே” என்று கூறி மான்சியின் கூந்தலை வருடி விட்டாள் பத்மா,, அவளுக்கு கண்கலங்கியது,, மான்சியிடம் மனம்விட்டு பேசியதில் அவள் மனசுக்கு நிறைவாக இருந்தது,,

மான்சியும் சத்யனும் நன்றாக வாழவேண்டும் என்ற பிரார்த்தனையைத் தவிர அவள் மனதில் வேறொன்றும் இல்லை,, பதினெட்டு வயதில் பத்மா திருமணமாகி இந்த குடும்பத்துக்குள் காலடி வைத்தபோது சத்யனுக்கு பதிமூன்று வயது இருக்கும், தனது மூன்று தம்பிகளை பிரிந்து கண்ணீருடன் தாய்வீட்டில் இருந்த வந்த பத்மாவுக்கு சத்யனைப் பார்த்ததும் தனது தம்பிகள் மூவரையும் பார்த்த சந்தோஷம், அன்றிலிருந்து சத்யனை தன் உடன்பிறந்தவனாகவே பார்ப்பவள்,,

அருணா அந்த குடும்பத்துக்குள் நுழைந்து ஒன்றாக நடந்த தொழில்கள் பிரிந்து தனித்தனியாக போனாலும் பத்மா கௌதம் மட்டும் உறவுகளை விட்டுக்கொடுக்காமல் முடிந்தவரை நெருக்கமாகவே இருந்தனர்

சத்யனின் வாழ்க்கை சீரழிந்து போனதை கண்டு பூங்கோதையை விட அதிகமாக கண்ணீர் விட்டவள் பத்மாதான்,, சத்யன் வாழ்வில் மான்சி வந்ததும் அதிகமா சந்தோஷப்பட்டவளும் பத்மாதான்,, மொத்தத்தில் சத்யனுக்கு அண்ணியாக ஒரு சகோதரி,, மான்சிக்கு சகோதரியாக ஒரு தாய், என்று சொல்லலாம்

அதன் பிறகு இருவரும் நேரம் போவது தெரியாமல் பேசிக்கொண்டு இருக்க, மதிய உணவுக்கு அழைக்க வந்த பூங்கோதை “ அய்யோ அய்யோ இவ்வளவு நேரமாவா குழந்தையை மடியில வச்சுகிட்டு பேசுவீங்க, நல்ல பொம்பளைங்கடி நீங்க” என்று கடிந்தபடி குழந்தையை தூக்கிக்கொண்டு “ சரி ரெண்டுபேரும் சாப்பிட வாங்க,, நான் குழந்தையை அவனோட தாத்தாகிட்ட குடுத்துட்டு வர்றேன்” என்று கூறிவிட்டு பூங்கோதை கீழே செல்ல

பத்மா எழுந்து “ சின்ன குழந்தையை மடியில வச்சுகிட்டு எவ்வளவு பேசிருக்கோம்,, ம்ம் உன் பிள்ளைக்கு இப்பத்துலேருந்தே நல்ல ட்ரைனிங் தான்” என்ற கிண்டல் செய்ய , அதற்கும் வெட்கமாக சிரித்தாள் மான்சி

சாப்பிட்டு விட்டு வந்து மறுபடியும் நிறைய பேசினார்கள், பத்மா நாசுக்காக பல விஷயங்களை மான்சிக்கு சொல்லி புரியவைத்தாள், மான்சி வெட்கத்துடன் கேட்டுக்கொண்டாள்

மாலை ஐந்து மணிக்கு பத்மாவை அழைத்துச்செல்ல மில்லில் இருந்து வந்த கௌதம் குழந்தையை பார்க்க மாடிக்கு வந்தான்,, அவனைப்பார்த்ததும் மான்சிக்கு எக்கச்சக்கமாக சிரிப்பு வர வாயைப்பொத்திக் கொண்ட சிரித்தபடி பால்கனிக்கு போய் அமர்ந்துகொண்டாள்

அவள் சிரிப்பை குழப்பத்தோடு பார்த்தபடி குழந்தையை தூக்கிய கௌதம் “ ஏய் பத்தூ என்னடி அவ என்னையப் பார்த்து இப்படி சிரிச்சுட்டு போறா,, என்று மனைவியிடம் கேட்டான்

பத்மா குறும்பாய் தலை சாய்த்து “ ம்ஹூம் எனக்கு தெரியாதுப்பா, நீங்களாச்சு உங்க மச்சினியாச்சு எனக்கு ஒன்னுமே தெரியாது” என்று அப்பாவியாக கண்களை விரித்து விரலால் அபிநயித்து காட்டிய பத்மா “ ஒருவேளை உங்க முகத்துல ஏதாவது வழியுதோ? அதைப்பார்த்து தான் சிரிக்கிறாளா? ” என்று பத்மா நக்கல் செய்ய

எதை வழிகிறது என பத்மா சொல்கிறாள் என்று கௌதமுக்கு உடனே புரிந்துவிட “ அடிப்பாவி என்னத்தடி அவகிட்ட சொல்லித் தொலைச்ச இப்படி சிரிச்சுட்டு போறா ,, அவ குழந்தை மாதிரிடி அவளையும் கெடுத்துடாத,, அப்புறம் ரெண்டு நாளா நான் அவஸ்தை படுறமாதிரி என் தம்பியும் படப்போறான்” என்று கௌதம் சொல்ல


 அய்யோடா இந்த கொடுமையை நான் எங்கப்போய் சொல்றது,, ஏய் பத்து இந்த பொசிஷனில் ஒரே ஒருவாட்டி, இதோ இப்படி திரும்புடி கொஞ்சநேரம் தான்டி பத்து. இன்னும் கொஞ்சம் வச்சுக்கோடி பத்து, ன்னு கெஞ்சி கொஞ்சி என்னை எல்லா வேலையும் வாங்கிட்டு இப்போ என்னமோ ரொம்ப அப்பாவி மாதிரி வேஷமா போடுறீங்க,, இருங்க இன்னிக்கு நான் இங்கயே இருக்கப்போறேன், நீங்க மட்டும் வீட்டுக்கு போய்ச் சேருங்க ” என்று பத்மா மிரட்டியதும் கௌதம் தவிப்புடன்

“ அய்யோ ச்சும்மா சொன்னேன்டி பத்துக் குட்டி, ரொம்ப ஆசையா வந்துருக்கேன் சீக்கிரமா வாடித் தங்கம் வீட்டுக்கு போகலாம்” என்று தடாலடியாக சரணடைய
பால்கனியில் நின்றுகொண்டு அவர்களின் உரையாடலை கேட்ட மான்சிக்கு கிளுகிளுவென உடலெல்லாம் சிலிர்த்தது,, சற்றுநேரத்தில் பத்மா அவளை அழைத்து கிளம்புவதாக சொல்லிவிட்டு கிளம்ப, கௌதம் மான்சி முகத்தை பார்க்க சங்கடப்பட்டு சுவற்றைப் பார்த்தபடி “ சத்யனுக்கு போன் பண்ணி பேசினேன் மான்சி நாளைக்கு கிளம்பி வர்றதா சொன்னான் ” என்று இன்பத்தை மான்சியின் காதில் அள்ளி கொட்டிவிட்டு கிளம்பினான்

அவர்கள் கிளம்பியதும் மான்சி ஓடிச்சென்று கட்டிலில் விழுந்தாள்,, தலையணையை கட்டியணைத்து ஆயிரம் முத்தங்களை அனாயாசமாக கொடுத்தாள் தலையணைக்கு,,

ஏதோ தோன்ற கட்டிலில் புரண்டு தாவி இறங்கியவள் பால்கனிக்கு ஓடி அங்கே கிளை தாழ்த்தியிருந்த சீத்தாப்பழம் மரத்தில் கூடுகட்டியிருந்த குருவிகளை பார்த்து “ ஏய் குருவிங்களா நாளையிலேருந்து நான் உங்களைப் பார்க்க வரமாட்டேன், நான் ரொம்ப பிஸி” என்று தகவல் சொல்லிவிட்டு மறுபடியும் ஓடிவந்து கட்டிலில் விழுந்தாள்,

அன்று இரவுமுழுவதும் சத்யனின் அழுக்கு சட்டை மான்சியின் முத்ததால் துவண்டுபோனது, அவள் தலையணைக்கே சலிப்பு வந்தது அவளின் காதல் வார்த்தைகளை கேட்டு

மறுநாள் காலை தன்னை கவனமாக அலங்கரித்துக்கொண்டு வந்து சத்யனுக்காக காத்திருந்தாள், அவள் காத்திருப்பைப் பார்த்து அந்த வீட்டில் இருந்த அனைவருமே சத்யனை எதிர்பார்த்து காத்திருந்தனர் , பகல் முடிந்து இரவு வந்தது, வேலைக்காரர்கள் வீட்டின் விளக்குகளை எல்லாம் அனைத்துக்கொண்டு வர,

சத்யனுக்காக ஹாலில் அமர்ந்திருந்த மான்சி உதட்டைக் கடித்து கண்ணீரை அடக்கிக்கொண்டு எழுந்து மாடிப்படிகளில் ஏறினாள்,, குழந்தையை தூக்கிக்கொண்டு அவள் பின்னோடு வந்த பூங்கோதை, “ சத்யனோட அப்பா காலையிலேருந்து அவன் செல் போனுக்கு ட்ரைப் பண்ணிகிட்டு தான் இருக்காரு சுவிட்ச்ஆப்னு வருது மான்சி,, ப்ளைட்ல டிக்கெட் கிடைக்கலைன்னு நேத்து சொன்னானாம், அதனால ட்ரைன்ல இல்ல பஸ்ல ஏதாவது வருவான்னு அவங்கப்பா சொன்னாரு,, நீ கவலைப்படாம படுத்து தூங்கும்மா, காலையில வந்துடுவான்” என்று மான்சிக்கு ஆறுதல் கூறி குழந்தையை தொட்டிலில் கிடத்திவிட்டு போனாள்

ஆனால் மான்சியின் கண்ணீரை எந்த ஆறுதல் வார்த்தைகளாலும் கட்டுப்படுத்த முடியவில்லை, அன்று இரவு அவள் விட்ட கண்ணீரின் அளவை அவளின் தலையணை மட்டுமே அறியும்

மறுநாள் காலையும் சத்யன் வரவில்லை என்றதும் மான்சியின், முகம் இருண்டு சோகத்தை தத்தெடுத்தது, குழந்தை தூங்கும் நேரம் போக மீதி நேரம் முழுவதும் தோட்டத்தை சுற்றி வந்தாள், அவளின் சோகத்தைப் பார்த்து ஆறுதலாய் தலையசைத்து சிரித்தது தோட்டத்து ரோஜாக்கள்,,

மறுநாள் குழந்தைக்கு பெயர் சூட்டும் விழா என்பதால் பத்மா தனது பிள்ளைகளுடன் மாலையே வந்துவிட்டாள்,,

மான்சியின் முகத்தைப் பார்த்ததும் அவளுக்கு என்ன ஆறுதல் சொல்வது என்று புரியாமல் கலங்கி நின்றாள் பத்மா, அவள் மடியில் தலைசாய்த்து அழுத மான்சியின் கூந்தலை வருடிய பத்மா “ அவனுக்கு ஒன்னும் ஆகியிருக்காது மான்சி,, ப்ளைட் கிடைக்கலைன்னு வேற எதுல வர்றானோ,, மும்பை என்ன பக்கத்துலயா இருக்கு,, அவன் மொபைலில் சார்ஜ் காலியிருக்கும் அதனாலதான் போன் பண்ணிருக்க மாட்டான்,, நீ வேனாப் பாறேன் காலையில அவன் வந்துதான் நம்மளை எல்லாம் எழுப்பப் போறான் ” என்று ஏதேதோ ஆறுதல் சொல்லி மான்சியை தேற்றினாள்


அன்று இரவு அனைவரும் தூங்கப் போய்விட, பத்மா சிறிதுநேரம் மான்சியுடன் பேசிக்கொண்டு இருந்துவிட்டு கீழே வந்துவிட்டாள், நாளைக்கு காலையில் தேவையானவற்றை தயாராக எடுத்து வைத்துக்கொண்டிருந்தனர் பத்மாவும் பூங்கோதையும்

ஹால் கடிகாரம் இரவு பத்து மணி ஆகிவிட்டது என்று ஓசைபட அறிவித்தது, அப்போது வெளியே வந்து நின்ற டாக்ஸியில் இருந்து இறங்கிய களைத்து சோர்ந்து போய் இறங்கினான் சத்யன்

சமையலறையின் ஜன்னலருகே இருந்து சத்யனை பார்த்துவிட்ட பத்மா வாசலுக்கு ஓடிவந்து “ என்ன சத்யா இது ஒரு போன் பண்ணி தகவல் சொல்லக்கூடாதா? நாங்க எல்லாரும் தவிச்சு போயிட்டோம்பா” என்று கண்ணீரை உள்ளடக்கிய குரலில் சொல்லிவிட்டு அவன் கையில் இருந்த பொட்டியை வாங்கிக்கொண்டு உள்ளே போனாள்

“ இல்ல அண்ணி நேத்து ஹோட்டல்ல சாப்பிட்டு கைகழுவும் போது மொபைல் தண்ணில விழுந்துருச்சு, அதுலேர்ந்து போன் ஒர்க் ஆகலை, சரி வீட்டுக்குத்தானே போறோம்னு வந்துட்டேன், ரயில் பஸ்னு மாறி மாறி ரொம்ப சிரமப்பட்டு வந்தேன் அண்ணி” என்று சொன்ன சத்யன் மாடிப்படிகளில் ஏற

“ சாப்பிட்டு போயேன் சத்யா” என்று பூங்கோதை அழைக்க,, “ ம்ஹூம் மதியம் சாப்பிடலைம்மா அதனால பயங்கர பசி வரும்போது வழியில சாப்பிட்டுதான் வந்தேன், ரொம்ப டயர்டா இருக்கு காலையில பேசலாம்மா” என்று கூறிவிட்டு வேகமாக படிகளில் ஏறினான், அவனுக்கு மான்சியயை பார்க்கும் அவசரம்

அறைக்கதவு திறந்தே இருக்க தள்ளிக்கொண்டு உள்ளே போனவன் காலியாயிருந்த கட்டிலைப் பார்த்து திகைப்புடன் நிமிர்ந்த போது பால்கனியில் நின்று இருட்டை வெறித்துக் கொண்டு நின்றிருந்தாள் மான்சி
அவளைப்பார்த்ததும் ஒரு நிம்மதி பெருமூச்சை விட்ட சத்யன், “ மான்சி” என்று அழைக்க

அவன் குரல் கேட்ட அடுத்த விநாடி வெடுக்கென்று திரும்பிய மான்சி அங்கிருந்த சத்யனைப் பார்த்ததும் அதுவரை அடக்கி வைத்திருந்த காதல் கட்டவிழ்த்து கொள்ள சிறு கதறலுடன் ஓடிவந்து சத்யனை கட்டிக்கொண்டாள்

இது சத்யன் மான்சியிடமிருந்து எதிர்பார்க்காத வரவேற்பு, உள்ளம் ஏகத்துக்கு குதிக்க “ மான்சி என்னடா” என்று கேட்டவன் அடுத்த வார்த்தை பேசுமுன் அவன் வாய் மான்சியின் இதழ்களால் மூடப்பட்டது,, மான்சி ஆவேசமாக சத்யனின் முரட்டு உதடுகளை தனது செவ்விதழ்களால் கவ்வியிருந்தாள்

அவளது ஆவேசம் சத்யனை திணறச் செய்தது,, அவன் உதட்டை கவ்வியவள் அன்று சத்யன் அவளுக்கு முத்தமிட்டது போல் அவன் வாயை பிளந்து தன் நாவை நுழைத்தாள், அங்கிருந்த உமிழ்நீரை எல்லாம் ஆவேசத்துடன் உறிஞ்சினாள்,, அவளின் இரண்டு கைவிரல்களும் சத்யனின் பின்னந்தலையை பற்றியிருந்தது, அவன் தலைமுடிக்குள் அவள் விரல்கள் நுழைந்து மூடிகளை இழுத்து சுருட்டியது

சத்யனுக்கு சொர்க்கமே மூடிய கண்களுக்குள் தெரிந்தது,, அவன் உதட்டை விடுத்தவள் அவன் முகம் முழுவதும் கண்மண் தெரியாமல் முத்தமிட்டாள், கன்னத்து சதைகளை நான்குநாள் ரோமத்துடன் சப்பி இழுத்தாள், காது மடல்களை மென்மையாக கடித்து சுவைத்தாள், அவன் கழுத்தை நாவால் தடவி சுவையறிந்தாள்

சத்யனால் அவளை சமாளிக்க முடியவில்லை “ மான்சி என்னடா ஆச்சு,, இரும்மா குளிச்சுட்டு வந்துர்றேன், உடம்பெல்லாம் கசகசன்னு ஒரு அழுக்கு மான்சி, ஒரு அஞ்சே நிமிஷம் தான் குளிச்சிட்டு வர்றேன்டா கண்ணம்மா” என்று எப்படியெப்படியோ அவளை விலக்க முயன்றான், ஆனால் அவள் ஆவேசம் சற்றும் குறையாமல் முத்தமிட்டுக் கொண்டே இருந்தாள்

ஒருகட்டத்தில் நிறுத்திவிட்டு அவன் முகத்தை உற்றுப்பார்த்தாள் பிறகு அவன் சட்டையை கொத்தாகப் பற்றி இழுத்துச் கட்டிலில் தள்ளிவிட்டு அவன்மேல் அப்படியே விழுந்து விட்ட இடத்தில் இருந்து மறுபடியும் முத்தமிட ஆரம்பித்தாள்


அதுவரை அவளை தடுக்க நினைத்த சத்யன் இப்போது அவள் வேலையை தன் வசம் எடுத்துக்கொண்டு முத்தமிட்டான், சத்யனின் உணர்வுகளெல்லாம் விழித்துக்கொண்டு போராட தன்மீது கிடந்தவளை புரட்டி தள்ளி அவள்மீது இவன் படர்ந்தான், அவனது சுகமான சுமையை சுமந்த மான்சி கிரக்கமாக கண்களை மூடிக்கொள்ள,

மூடிய கண்களில் முத்தமிட்ட சத்யன் எழுந்து அமர்ந்து அவளை ஒற்றை கையால் தூக்கி உட்காரவைத்து தன் நெஞ்சோடு அணைத்துக்கொள்ள, மான்சியின் விரல்கள் அவன் சட்டை பட்டன்களை வருடி ஒவ்வொன்றாக அவிழ்த்தது, சத்யனுக்கு அவளின் மனநிலை முற்றிலும் புரிந்துவிட அவளை இறுக்கி அணைத்து மறுபடியும் விடுவித்து அமர்ந்த நிலையில் அவளை கைகளில் சாய்த்து “ மான்சி இப்ப வேனாம்டா, பாப்பா ரொம்ப சின்னதா இருக்கான்ல்ல, குழந்தை பிறந்து ஒருமாசம் தான் ஆகுது கண்ணம்மா” என்று அவன் சொல்லி முடிப்பதற்குள் அவன் சட்டையை கழட்டியிருந்த மான்சி அவன் நெஞ்சில் விழுந்து அந்த வியர்வையோட முத்தமிட்டுக்கொண்டிருந்தாள்

முத்தமிட்டவளின் உதடுகளில் சத்யன் மார் காம்புகள் தட்டுப்பட அழுத்தமாய் கவ்விக்கொண்டாள், பொய்யாய் கடித்து காம்பை இழுத்து மாற்றி மாற்றி சப்ப, சத்யன் துடித்துப்போனான் “ ஹாவ் ஏய் மான்சி மான்சி விடுடி அய்யோ விடுடி என்று சத்தமின்றி சுகத்தில் அலறியவன் அப்படியே கட்டிலில் மல்லாந்து விழுந்தான்

அவன் மேல் படர்ந்த மான்சி மறுபடியும் அவன் காம்புகளை கவ்வி சுவைக்க, சத்யன் அவளை விலக்கிவிட்டு எழுந்தான், இனிமேல் அவனே நினைத்தாலும் தடுக்கமுடியாத அளவுக்கு அவனுக்கு காமன் கட்டளையிட்டுருந்தான்,, போட்டிருந்த சட்டையை கழட்டி வீசினான், பெல்ட்டை அவிழ்த்து பேன்ட்டை நழுவவிட்டபடி ஒரு துண்டை எடுத்து அவசரமாக இடுப்பில் முடிந்துக்கொண்டு, உள்ளே கைவிட்டு ஜட்டியையும் உருவி எறிந்துவிட்டு கட்டிலில் காளையாக தாவியேறினான்

அவன் உடைகளை கலைவதை கண்கொட்டாமல் பார்த்த மான்சி கட்டிலில் வந்து அவளருகே மண்டியிட்டதும் கண்களை மூடிக்கொண்டாள், சத்யன் அவள் இடுப்பில் கைவிட்டு தூக்கி முட்டிவரை சுருண்டு கிடந்த நைட்டியை மேலும் சுருட்டி மான்சியின் தலை வழியே கழட்டி எறிந்தான்,

எடுத்தெடுப்பில் அவன் கண்கள் பால் நிறைந்த அவளின் பொங்கும் கலசங்களை தான் பார்த்தது,, அய்யோ இவையெல்லாம் எனக்கு சொந்தமானவைகள் என்ற நினைப்பே அவனை பைத்தியமாகியது,, மொத்தமாய் கொட்டிக்கிடந்த நவரத்தின பொக்கிஷத்தில் எதை முதலில் அள்ளி பதுக்குவது என்று தவிக்கும் திருடனின் நிலையில் சத்யன் இருந்தான்

இப்படியொரு நிகழ்வை எதிர்பார்த்து சத்யன் வரவில்லை என்பதால் அவனுக்கு என்ன செய்வது என்றே புரியவில்லை,, ஸ்பிரிங்கில் இருந்து விடுபட்ட விசையைப் போல அவன் உறுப்பு செங்குத்தாக நின்று தனது தேவை அவனுக்கு உணர்த்த, ச்யன் அவளை படுக்கவைத்து உள்பாவாடையின் முடிச்சை தேடி விடுவித்தான்

நிர்வாணமாய் கிடந்த அந்த நிலவை கண்கொட்டாமல் ரசித்தான் சத்யன், ஆனால் அவனின் உடல் தேவை அவனை மேலும் ரசிக்கவிடவில்லை, அவள்மீது கவிழ்ந்து அவளின் மார்புகளை சுற்றி தன் நாவால் கோலம்போட்டான், காம்பை கவ்வி பிடிக்காமல் நுனிநாக்கால் தீண்டி தீண்டி அவளை சிலிர்க்க வைக்க, ஒருநிலையில் தாங்க முடியாத மான்சி அவன் தலையை பிடித்து தன் மார்போடு அழுத்திக்கொண்டாள்

சத்யன் உணர்ச்சிகள் எல்லாம் ஒன்றாய் திரள அவளின் உடலை சிறு பிள்ளைக்கு பண்டிகைக்கு கிடைத்த பரிசைப் போல அவிழ்த்து திறந்து கொட்டி கவிழ்த்தது,,

சத்யன் தன் மகனின் நினைவு இல்லாமல் அவள் பால் கலசங்களை காலியாக்க,, மான்சி “ம்ம்ம்ம்” என்று உற்சாகமாய் குரல் கொடுத்து அவனுக்கு அமுதசுரபியாக வாரிவழங்கினாள்

கீழே சத்யனின் உறுப்பு தடுமாறி தத்தளிக்க சத்யன் கவ்விய காம்பை விடாமல் இடுப்பை மட்டும் உயர்த்தி, அவள் பெண்மையைத் தடவி இடமறிந்து தனது விரைத்த உறுப்பை உள்ளே விட மிகவும் இறுக்கமாக போனது அவனது ஆண்மை,,



இருவருமே உணர்ச்சிகளின் உச்சத்தில் இருந்ததால் வெகுநேரம் புற விளையாட்டுகளில் ஈடுபடாமல் உடனடியாக புணர்ச்சியில் ஈடுபட்டனர்,, மான்சியின் உணர்ச்சிகள் கொந்தளித்தது, உடல் சத்யனின் கரங்களில் தத்தளித்தது,, அவளின் அற்புதமான ஒத்துழைப்பை கண்டு உற்ச்சாகமான சத்யன் அதிவேகமாக தனது இயக்கத்தை ஆரம்பிக்க,, மான்சி அவனைக்கு இணையாக தனது பெண்மையால் எதிர்த்து மோதினாள்

இந்த காமப் போராட்டம் வெகுநேரம் நீட்டிக்காமல் உணர்ச்சிகளின் உந்துதலால் சீக்கிரமே முடிவுக்கு வந்தது,, சத்யன் தனது காதலையெல்லாம் தனது வேகத்தில் காட்டி அவளுக்குள் கொட்டித் தீர்த்தான் தனது உயிர்நீரை,,

அவனுக்காக விரித்த கால்களை சேர்க்காமல் அவனை தன் நெஞ்சில் தாங்கி, துடித்த அவனது உடலை தனது பூங்கரத்தால் தடவிக்கொடுத்து, உச்சியில் முத்தமிட்டாள் மான்சி 



No comments:

Post a Comment