Saturday, October 17, 2015

வாழ்ந்தால் உன்னோடுதான் மான்சி - அத்தியாயம் - 14

மான்சி ஏதோ அவனுக்கு நர்ஸ் வேலை செய்ய வந்தவள் போல அவன் முகத்தைப் பார்க்காமல் கவனத்துடன் அவன் உடைகளை கலைந்து அழுக்கு கூடையில் போட்டுவிட்டு தன்னுடைய நைட்டியை உயர்த்தி வயிற்றில் முடிச்சாகப் போட்டுக்கொண்டாள் பிறகு “ கையை தண்ணீர் படாம தள்ளி வச்சுக்கங்க ” என்று கூறிவிட்டு மிதமான சூட்டில் இருந்த வெந்நீரை எடுத்து அவன் உடலில் ஊற்றினாள் ..

சத்யனுக்கு உடலெல்லாம் சிலிர்த்தது, இது புது அனுபவம், சுகமான அனுபவம், மான்சியின் தளிர் விரல்கள் அவன் உடலை மென்மையாக தேய்த்து விட்டது, ச்சே பாவி தப்பா ஒரு பார்வை பார்த்தாக் கூட உடனே வேதாளம் முருங்கை மரம் ஏறுவது போல ஏறிக்குவாளே, ம்ஹூம் கண்ணை மூடிகிட்டு ரசிக்கிறது தான் நல்லது, சத்யன் கண்களை மூடி பின் புறமாக தலையை சாய்த்துக்கொண்டான் உடலுக்குள் மின்சாரம் பாய்ந்தது , மயிலிறகால் வருடுவது போல் சுகமாக இருந்தது



ஆனால் கையை நீட்டியபடியே வைத்திருந்ததால் வலித்தது, கீழே குனிந்து பார்த்தான், மான்சி அவன் பாதத்திற்கு சோப்பு போட்டுத் தேய்த்துக்கொண்டிருந்தாள் “ மான்சி கை வலிக்குது ” என்று சத்யன் ரகசியமாக சொல்வது போல் சொல்ல..

குனிந்து சோப்பு போட்டவள், வேகமாக அன்னாந்து அவனைப் பார்த்தவள் காணக்கூடாதை கண்டது போல் பட்டென்று முகத்தை திருப்பிக்கொண்டு “ அதுக்கு என்னப் பண்றது? ” என்று கிசுகிசுப்பாக கேட்டாள்

அவள் ஏன் முகத்தை திருப்பிக்கொண்டாள் என்று சத்யனுக்குப் புரிந்தது, ‘இதுக்கெல்லாம் நான் ஒன்னும் பண்ணமுடியாது, அது தானாவே அப்படி ஆகுது’ என்று மனசுக்குள் நினைத்தவன் “ கை வலிக்குது மான்சி, உன் தோள்ல கை வச்சுக்கவா?” என்று சத்யன் கேட்க..

“ ம்ம்” என்று மட்டும் சொல்ல, சத்யன் குனிந்து அவள் தோளில் கைவைத்துக்கொண்டான், மான்சி கால்களுக்கு சோப்புப் போட்டுவிட்டு, கல்தூண் போன்ற தொடைகளை சோப்புப் போட்டுவிட்டு கொஞ்சம் தடுமாறி தயங்கியவள் பட்டென்று மேலேறி இடுப்புக்கு வந்தாள்,

சத்யனுக்கு சிரிப்பு வந்தது, ‘அவஸ்தை படுடி, என்னை வெறுப்பேத்தனும்னு தானே இப்படியெல்லாம் ட்ரைப் பண்ற, இப்போ நீயே அவஸ்தை படு’ என்று மனதில் கறுவிக்கொண்டான்

ஒருவழியாக சத்யன் குளிக்க வைத்து, மான்சி நிமிரும்போது தண்ணீரால் பாதியும், வியர்வையால் பாதியும் மான்சி முழுவதுமாக நனைந்துபோனாள், டவலை எடுத்து சத்யன் உடலை துடைத்து, அதே டவலை அவன் இடுப்பில் கட்டிவிட்டு “ உள்ள போட்டுருக்கதை கழட்டுங்க” என்றாள்

சத்யன் விரல்களை மட்டும் ஜட்டியின் விழிம்பில் விட்டு கீழே இறக்க, கை அசைவில் உள்ளங்கை திகுதிகுவென எரிந்தது, வலியை பொறுத்துக்கொண்டு சிரமப்பட்டு முட்டிவரை கழட்டினான், அவன் முகத்தைப் பார்த்துவிட்டு பட்டென்று குனிந்து ஜட்டியை கழட்டி கால் வழியாக எடுத்தாள் மான்சி,

சத்யனுக்கு சங்கடமாக இருந்தது, அவளுக்கும் தானே கையில் காயம் என்று நினைத்து அவள் கையைப்பிடித்து திருப்பிப்பார்த்தான், அதிகமான காயம் இல்லையென்றாலும் உள்ளங்கை கறுத்துப் போயிருந்தது, கிளம்பியிருந்த கொப்புளம் வெடிக்கும் தருவாயில் இருந்தது “ மான்சி இப்படி காயத்தை வச்சுகிட்டு நீ ஏன் இதெல்லாம் செய்யனும்? நான் எப்படியாவது சமாளிச்சுக்கறேன் ” என்று கூறிய அடுத்த நிமிடம் மான்சி பக்கவாட்டில் தலைசாய்த்து அவனை ஒரு மாதிரியாக வெறித்துப் பார்க்க...

“ இல்லம்மா உனக்கு வலிக்குமேன்னு தான் சொன்னேன், உனக்கு ஓகேன்னா எனக்கும் ஓகே” என்று சட்டென்று பின் வாங்கினான்


மான்சி எதுவும் பேசவில்லை அவனுடைய ஷாட்ஸை எடுத்து கால் வழியாக மாட்டி மேலே தூக்கிவிட்டு இடுப்பில் கொண்டு விட்டாள், பிறகு டீசர்டை எடுத்து தலைவழியாக மாட்டி சரி செய்துவிட்டு இருவரும் வெளியே வரும்போது கிட்டத்தட்ட 45 நிமிடம் ஆனது,

சத்யன் அமைதியாக போய் கட்டிலில் மகனுக்கு மறுபக்கம் படுத்துக்கொண்டான், மான்சி வேறு நைட்டி எடுத்துச்சென்று நனைந்த நைட்டியை மாற்றிக்கொண்டு வந்து மகனுக்கு இப்புறம் படுத்தாள், ஏசியின் குளிர் தாங்காது போர்வையை இழுத்துப் போர்த்தியவள் தன்னையே உற்றுப்பார்த்துக் கொண்டிருந்த சத்யனைப் பார்த்து “ உங்ககிட்ட ஒன்னு கேட்கனும்? ” என்றாள்

“ ம் கேளு?” என்றான் அவள் கண்களைப் பார்த்துக்கொண்டே..

“ இல்ல கார்ல நான் ரிஷிக்கு பால் அந்த மாதிரி மறந்து போய் மூடாம விட்டுட்டு டிரைவரை தண்ணி எடுத்துட்டு வரச்சொன்னேனே, அப்போ நீங்க தான அவசரமா சரி பண்ணி விட்டீங்க?” என்று மெல்லிய குரலில் கேட்க

“ ஆமாம்,, அதுக்கென்ன? ” என்றுவிட்டு குழப்பமாக சத்யன் பார்க்க

“ அதுவந்து..... அப்போ என் மேல கோபமே உங்களுக்கு வரலையா?”

மெதுவாக எழுந்து அமர்ந்த சத்யன் “ மான்சி நீ முதிர்ச்சியான பொண்ணு இல்லை, பதினேழு வயசே ஆன உன்னை நான் உறவாடி கெடுத்து குழந்தையை குடுத்ததே தவறு, இதுல நீ குழந்தைத்தனமா இப்படி இருந்ததைப் பார்த்து என்னால எப்படி கோபப்பட முடியும்?, யாரும் கவனிக்காம பாதுகாக்கும் எண்ணம் தான் வரும்,, எனக்கு அப்போ மனசுல தோனுனது என்னன்னா? ச்சே இப்படி சரியான விபரம் தெரியாதவளை இப்படி பண்ணிட்டோமேன்னு என் மேல தான் கோபம் வந்தது மான்சி ” என்று சத்யன் சொல்ல..

சற்றுநேரம் மான்சியிடம் எந்த பதிலும் இல்லை, கண்மூடி கிடந்தாள் பிறகு “ என்மேல கோபம் வரலைன்னு சொன்னதுக்கு தாங்க்ஸ்,, ஆனா நான் விவரம் புரியாதவள் இல்லை, என்னை இனிமேல் ஏமாத்தமுடியாது” என்று கூறிவிட்டு மான்சி திரும்பி படுத்துக்கொண்டாள்

சிறிதுநேரம் அவள் முதுகையே வெறித்தான் சத்யன், சுலபமான மனக்கணக்கு என்று எண்ணிய மான்சி இப்போது புரியாத பெரும் புதிராக தெரிந்தாள்,, ஆனால் எது எப்படியானாலும் இனிமேல் மான்சி இல்லாத வாழ்வு தனக்கில்லை என்று முடிவு செய்து பல நாளாகிவிட்டது, அவள் தன்மீது வைத்திருக்கும் காதலால் தான் இப்படி நடந்துகொள்கிறாள் என்று சத்யனுக்கு தெளிவாக புரிந்தது, அவளுக்கு அனுசரித்துப் போவதே தன் கடமை என்று தீர்மானித்துக் கொண்டு படுத்தான்

அதன்பிறகு மான்சி எது செய்தாலும் என்ன பேசினாலும் அமைதியாக இருந்தான், அவள் இஷ்டப்படி வளைந்தான், அவனுக்கு அவன் காதலை மான்சிக்கு புரியவைக்க வேண்டும், அதுதான் குறிக்கோள், ஆனால் மான்சியின் செயல்கள் அனைத்தும் அவனை ரொம்பவே தடுமாற வைத்தது, அவனுக்கு குளிக்க வைத்து தலைவாரி சாப்பாடு ஊட்டிவிட்டு, என எல்லா வேலைகளையும் கரெக்டாக நேரத்தோட செய்தாள், அதனால் சத்யன் படும் இம்சையை கண்டும் காணாதது போல் இருந்தாள்,

வேண்டுமென்றோ அல்லது தற்செயலாகவோ குழந்தைக்கு பால் கொடுக்கிறேன் என்ற போர்வையில் அவனை ரொம்பவே சித்ரவதை செய்தாள், அத்துமீறி சத்யனின் பார்வைகள் அவள் உடலை வருடினால், நிமிர்ந்து பார்த்து பத்ரகாளியாக முறைப்பாள், சிலநேரங்களில் அவளின் குத்தல் பேச்சில் சத்யனின் கோபம் எல்லைமீறும், ஆனால் அடக்கிக்கொள்வான்

பொள்ளாச்சிக்கு வந்து நான்கு நாட்கள் ஆன நிலையில் ஒருநாள் பகலில் ஹாலில் அமர்ந்து அப்பாவுடன் பேசிக்கொண்டிருந்த சத்யனை “ ஏங்க இங்க கொஞ்சம் வாங்க?” என்ற மான்சியின் குரல் அழைக்க “ அப்பா இருங்க என்னான்னு கேட்டுட்டு இதோ வர்றேன்” என்று கூறிவிட்டு மாடிக்குப் போனான்
அவன் உள்ளே நுழைந்ததும் கதவைடைத்தவளைப் பார்த்து “ என்ன மான்சி? என்னாச்சு?” என்று சத்யன் கேட்க..

அவனை முறைத்துப் பார்த்தவள் அவன் கையை பிடித்து இழுத்துக்கொண்டு போய் டிரஸிங் டேபிள் முன்பு நிறுத்தி அங்கிருந்த ஒரு ரோல் சீப்பை எடுத்து சத்யன் முன்பு காட்டி “ என்ன இது?” என்றாள்

“ என்னம்மா இதுகூட தெரியலையா? சீப்பு” என்றான் சத்யன் புன்னகையுடன்



“ அது தெரியுது, ஆனா அதுல என்ன இருக்குப் பாருங்க?” என்று கடுமையான குரலில் மான்சி அதட்டியதும் சத்யன் சீப்பை உற்றுப்பார்த்தான் , சீப்பில் இரண்டு நீளமான தலைமுடி, பெண்களின் தலைமுடி இருந்தது,

போச்சுடா’ என்று மனதில் நினைத்தவன் “ அம்மாவோடதா இருக்கும் மான்சி” என்றான் இயல்பாக

“ உங்கம்மா எப்போ இவ்வளவு குட்டையா முடிவெட்டிக் கிட்டாங்க” என்றவள் சீப்பில் இருந்த முடியை எடுத்து அவன் கண்முன்னே பிடித்தாள்,

அந்த முடியைப் பார்த்ததும் தான் சத்யனுக்கு ஞாபகம் வந்தது, சென்ற மாதம் சந்துருவும் இன்னும் சில கல்லூரி நணபர்களும் சத்யனைப் பார்க்க வந்திருந்தனர், அதில் மாதேஷ் என்றவன் டிரம்ஸ் இசைகலைஞனாக பயற்சியில் இருப்பவன், அவன் ஸ்டைலுக்காக தலைமுடியை நீளமாக வளர்த்து அதில் கறுப்பு துணி ஒன்றை கட்டி வைத்திருந்தான், எல்லோரும் பைக்கில் வந்ததால் களைத்துப் போய் சத்யன் அறையில் தான் முகம் கழுவி தலைமுடியை சரி செய்துகொண்டு போனார்கள், அப்போது அந்த மாதேஷ்ம் தலைவாரியது சத்யனுக்கு ஞாபகம் வந்தது, 


அடப்பாவி இப்படி மாட்டி விட்டுட்டானே, இப்போ இவகிட்ட உண்மையை சொன்னா நம்புவாளா? அறையை சுத்தம் செய்ய வரும் வேலைக்காரர்களை நினைத்து ஆத்திரமாக வந்தது, இப்போ சமாளிக்கனுமே, மான்சியைப் பார்த்து அசட்டுத்தனமாக சிரித்து, தன் நண்பர்கள் வந்து போன கதையை சத்யன் சொல்ல...

மான்சி அவனை நம்பவில்லை என்பது அவள் பார்வையிலேயே தெரிந்தது, “ ப்ளீஸ் மான்சி இதுதான் உண்மை நம்பு மான்சி” என்று சத்யன் கெஞ்சலில் இறங்கினான்,

அசையவில்லை மான்சி, அவனை தீயாய்ப் பார்த்து விழித்தபடி அப்படியே நின்றாள்

“ இதோபார் மான்சி நீயே சொல்லு, அப்பா அம்மா எல்லாரும் இருக்கும்போது நான் எவளை கூட்டிட்டு வரமுடியும்? , யாருமே வரலை மான்சி” என்று சத்யன் கொடுத்த விளக்கம் அவனுக்கே ஆபத்தாக வந்து முடிந்தது

“ ஏன் என்னை கொண்டு வரலையா?, உங்க அப்பா அம்மாவுக்கு தெரியாம? அதுவும் ரெண்டு மாசமா? ம்ஹும் என்னைப் போல எவ வந்து இந்த பெட்டுல படுத்து எழுந்து போனாளோ, நீங்க திருந்தாத கேஸ்னு நான்தான் சொன்னேனே ” என்று அலட்சியமாக கூறிவிட்டு மான்சி பால்கனிக்கு போய்விட, சத்யன் தலையிலடித்துக்கொண்டு அப்படியே நின்றான்

அன்று முழுவதும் மான்சி அவனுடன் பேசவேயில்லை, சத்யன் எவ்வளவோ எடுத்து சொல்லியும் அவள் காதுகொடுத்துக் கேட்கவில்லை, அன்று இரவு சாப்பாடு வேண்டாம் என்று கூறிவிட்டு சத்யன் தன் அறைக்கு வந்து படுத்துக்கொண்டான்,

சற்றுநேரத்தில் மான்சி தட்டில் இரண்டு சப்பாத்தியை வைத்து எடுத்துவந்து “ பட்னி கிடந்தா செய்தது இல்லேன்னு ஆயிடுமா,, ம்ம் சாப்பிடுங்க, நல்லா சாப்பிட்டு உடம்பை தேத்தினா தான் அடுத்ததா வர்றவ கிட்ட நல்லா கஷ்டப்பட முடியும்” என்று நக்கலாக கூற ..

ச்சே எப்படியெல்லாம் பேசுறா? சத்யனுக்கு ஆத்திரமாக வந்தது, “ கொஞ்சம் விஷம் இருந்தா குடு ஒரேடியாக போயிர்றேன், உனக்கும் நிம்மதியா இருக்கும்” என்று ஆத்திரமாக கூறிய சத்யன் சுவர் பக்கமாக திரும்பி படுத்துக்கொள்ள, சற்றுநேரம் அங்கே அமைதி, பிறகு மான்சியின் விசும்பல் ஒலி கேட்க சத்யன் மனசு கேட்காமல் திரும்பி படுத்து “ இப்போ எதுக்கு அழுவுற, எனக்கு சாப்பாடு வேண்டாம் எடுத்துட்டுப் போ” என்று மெதுவாக கூறினான்

கொஞ்சநேரம் வரை விசும்பியவள் பின்னர் சத்யனைப் பார்த்து “ நெசமாவே அது ஆம்பிளை முடி தான? , நீங்க என்னை ஏமாத்தலையே? ” என்று மான்சி அழுகையினூடே கேட்க

சத்யனுக்கு அவளை இழுத்து அணைத்துக்கொள்ள வேண்டும் போல் இருந்தது,, ஆனால் அவளின் கன்டிஷன் குறுக்கே விழுந்து அவனை தடுத்தது, அவன் கண்களுக்கு இப்போது ஒரு குழந்தையாவே தெரிந்தாள் " சத்தியமா உன்னை ஏமாத்தலைடா,, நாளைக்கு வேனா அந்த மாதேஷை வீட்டுக்கு வர்ச் சொல்றேன், நீயேப் பாரு" என்று சத்யன் மெல்லிய குரலில் சொல்ல

வழிந்த கண்ணீரை புறங்கையால் துடைத்துவிட்டு " சரி நான் நம்புறேன், நீங்க சாப்பிடுங்க" என்று மான்சி சாப்பாத்தியை பித்து அவனுக்கு ஊட்டிவிட,

வாயைத்திறந்து வாங்கிய சத்யனுக்கு கண்கள் கலங்கியது ,, தன்மீது இருந்த காதல் இப்போது மூர்க்கத்தனமாக மாறிவிட்டது என்று எண்ணினான்

அவன் சாப்பிட்டதும் கைகழுவிவிட்டு வந்த மான்சி கட்டிலில் சாய்ந்து படுத்திருந்த சத்யனின் அருகே வந்து, " உங்களுக்கு இப்போ ஏதாவது வேனுமா?" என்று கேட்க

டிவியின் ரிமோட்டை நோண்டிக்கொண்டிருந்த சத்யன் " ம்ஹூம் எதுவும் வேனாம் நீ படுத்துக்க" என்று கூறியவனுக்கு மான்சியின் குரலில் இருந்த வித்தியாசம் சற்று தாமதமாக உரைக்க சட்டென்று நிமிர்ந்து அவளைப்பார்த்தான்

மான்சி கழுத்தில் இருந்த செயினை பல்லால் கடித்தபடி தலைகுனிந்து நிற்க்க,, " மான்சி..." என்றான் சத்யன் ஆர்வம் மிகுதியால்..

" ம்ம் ஒன்னே ஒன்னுதான்,, ஆனா நான்தான் குடுப்பேன், நீங்க எதுவும் பண்ணக்கூடாது சரியா? " என்று மான்சி சுண்டுவிரலை காட்டியபடி கூற ..

சத்யன் இறக்கை இல்லாமல் வின்வெளிக்கு பயணமானான் , சட்டென்று தன் உதட்டை ஈரப்படுத்திக் கொண்டு தயாரானான்,, அவனை நெருங்கிய மான்சி அவன் டீசர்ட்டை கொத்தாகப் பற்றி இழுத்து உதட்டில் அழுத்தமா தனது உதடுகளை பதித்து சிறிது தாமதித்து பட்டென்று எடுத்துக்கொண்டாள்



சத்யன் இன்னும் கண்மூடி உதட்டை குவித்தபடி அமர்ந்திருந்தான்,, பட்டென்று அவன் கன்னத்தில் தட்டிய மான்சி " இனிமேல் இந்த மாதிரி நீளமா முடி வச்சிருக்க ப்ரண்ட்ஸ் கூட சேராதீங்க" என்று கூற

" ஓ ........ நாளைக்கே என் ப்ரண்ட்ஸ் எல்லாரையும் மொட்டை அடிக்கச் சொல்லிர்றேன்" என்றான் சத்யன்





" காதல் என்பது ஒரு முடிவில்லாத தொடக்கம்!

" காமம் என்பது முடிவை தேடும் தொடக்கம்!

" இருவர் தனித்தனியாய் ஒன்றை நோக்கி...

" செய்யும் தவமே காதல்!

" இருவரும் ஒருவராகி ஒன்றை நோக்கி....

" செய்யும் தவமே காமம்! 


No comments:

Post a Comment