Wednesday, January 27, 2016

தீர்க்க சுமங்கலி மான்சி - அத்தியாயம் - 12

ஒருநாள் காலையில் வீட்டு வேலைகளை முடித்துவிட்டு குளிக்க செல்லும் மான்சி குளித்துக்கொண்டிருக்கும்போது யாரோ தன்னை உற்று நோக்குவது போலிருக்க .. பதட்டத்துடன் திரும்பி கதவைப் பார்த்தாள்... இத்துப் போன தகர கதவின் ஓட்டைகள் வழியாக ஒரு ஜோடி கண்கள் சட்டென்று மறைய .. மான்சி விதிர்த்துப் போனாள்... யாராயிருக்கும்? என்று அச்சத்துடன் அவசரமாக உடையை மாற்றிக்கொண்டு வீட்டுக்குள் வந்து பார்த்தபோது காலையில் கழனிக்குப் போவதாக சொல்லிவிட்டு சென்ற மாமனார்தான் கூடத்தில் அமர்ந்து டிவி பார்த்துக் கொண்டிருந்தான்...

இவரா இப்படி? என்ற குழப்பத்துடனேயே மான்சி தனது அறைக்குள் போய்விட்டாள் .... அடுத்த இரண்டு நாட்கள் கழித்து அதே ஜோடி கண்கள் மான்சி குளிப்பதை வெறிக்க... மான்சி வெடுக்கென்று கதவை திறந்தாள்... வெளியே நின்றிருந்த கோபாலின் அப்பா " நீதான் குளிக்கிறயாம்மா? ஆளை காணோமேனு தேடி வந்தேன்" என்று இளித்தபடி வீட்டுக்குள் சென்றான்...

மான்சிக்கு ஒன்றும் புரியவில்லை....

வேலியே பயிரை மேயும் இந்த கேவலத்தை யாரிடம் சொல்வது.... ஊருக்கு பெரிய மனிதனாக இருப்பவனை சொன்னால் நம்புவார்களா? பலவாறாக குழம்பி தவித்து கண்ணீர் விட்டாள்... தன்னை நிற்கதியாக விட்டுச் சென்ற கோபாலை எண்ணி அழுதாள்...
மறுநாள் மதியம் மூன்று மணியளவில் அதிகாலை எழுந்ததால் உறக்கம் கண்களை சுழற்ற இவளுக்கு ஒதுக்கப்பட்ட அறையில் குழந்தையை தொட்டிலில் போட்டு தூங்க வைத்துவிட்டு தரையில் இவள் படுத்துக்கொண்டாள்.....

அதிகாலை எழுந்த களைப்பு உறக்கத்தை தர,, கண்மூடி உறங்கினாள்,, நல்ல உறக்கத்தில் யாரோ முழங்காலை வருடுவது போலிருக்க,,, உதறிக்கொண்டு எழுந்து அமர்ந்தவள் எதிரே இளித்தபடி அமர்ந்திருந்த மாமனாரை கண்டதும் கொதித்துப்போய் எழுந்தாள்....

விழிகள் அனலை கக்க,, “ ச்சீ நீயெல்லாம் ஒரு மனுஷனா? உன் பேத்தி வயசு இருக்குற என்னைப்போய் பெண்டாள நினைக்கிறயே சண்டாளா” என்றபடி தொட்டிலில் உறங்கிய குழந்தையை தூக்க முயன்றவளை இழுத்து கீழே தள்ளிய அந்த வெறி நாய் “ இதோபார் புள்ள,, உன் மாமியாக்காரியால என் கூட படுக்க முடியல,, வயசாகிப் போச்சு.. ஆனா எனக்கு வயசானாலும் ஆசை அடங்களை,, நீ சத்தமில்லாம ஒத்துழைச்சா.. இருக்குற சொத்து எல்லாத்தையும் உன் பேர்ல எழுதி உன்னை ராணி மாதிரி வச்சுக்கிறேன்” என்றவன் மான்சியை இழுத்து அணைக்க முயன்றான்..

“ டேய் விடுடா” என்று அலறியபடியே மான்சி அவனை உதறி விலக்கவும் கோபாலின் அம்மா வீட்டுக்குள் வரவும் சரியாக இருந்தது,, “ அத்தே” என்றபடி மான்சி ஓடிச்சென்று அவள் காலில் விழ,, கணவனின் கேவலமான நடத்தை பழகிப்போன அந்த பெண்மணி கணவனை புழுவைப் போல் பார்த்து “ அடப்பாவி மருமக மேலயே வைகைக்கிறயே நீ மனுஷனா” என்றபடி கீழே கிடந்த மருமகளை தூக்கினாள்....

இரண்டு பெண்களும் வந்து குழந்தையை தூக்கிக்கொண்டு வெளியே போக முயல,, கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாத ஆத்திரத்தில் வேகமாக வந்து இருவரையும் இழுத்து வீட்டுக்குள் தள்ளி,, அசிங்கமான வார்த்தைகள் பேசி “ ரெண்டு பேரும் வெளிய போனீங்கன்னா அவ்வளவுதான்” என்று கூறி அறைக்குள் தள்ளி கதவை பூட்டினான்...

அன்று இரவு முழுவதும் மான்சியும் கோபாலின் அம்மாவும் அந்த அறையிலேயே இருந்தனர்... அதிகாலை நான்கு மணிக்கு வந்து கதவை திறந்த கிழ நாய் " ரெண்டு சிறுக்கிகளும் ஒழுங்கா வேலையைப் பாருங்க.. வெளிய போய் மூச்சு விட்டீங்க... சங்கை அறுத்துருவேன்" என்று மிரட்டிவிட்டு சென்றான்....


மான்சி வெளியே வந்தாள் புழக்கடை போய் முகம் கழுவிவிட்டு வந்தவள் கிழவன் மாடுகளை ஓட்டிக்கொண்டு போகும் வரை வேலைகள் செய்வது போல் காட்டிக்கொண்டு... அவன் போனதும் குழந்தையை தூக்கிக்கொண்டு தனது துணிகள் அடங்கிய பையையும் எடுத்துக்கொண்டு வெளியே வந்தாள்......

மாமியார்க்காரி வந்து தடுக்க முயன்றாள்... " வேணாம்மா கெழவன் பொல்லாதவன்... விசயம் வெளிய தெரிஞ்சா உன்னைய சும்மா விடமாட்டான்,, குடும்ப மானம் வெளிய வரக்கூடாதுமா,, அனுசரிச்சு போ கண்ணு " என்று மலுப்பலாக பேசினாள்...

மான்சி அடிபட்ட வேங்கையாக சீறினாள்... "என்ன உன் புருஷனுக்கு நீ பொண்டாட்டி நான் வைப்பாட்டியா வாழலாம்னு சொல்றியா? நீயும் என்னைப் போல ரெண்டு பொண்ணை பெத்தவள் தான... எப்புடி இந்த மாதிரி பேச மனசு வருது? நான் இந்த கிழவனை சும்மா விடமாட்டேன்... போலீஸ்ல சொல்லி இவனை உள்ளார தள்ளுனா தான் தெரியும்" என்று கத்திவிட்டு வெளியேறியவள் பஸ் நிறுத்தம் சென்று டவுனுக்கு செல்லும் பேருந்தில் ஏறினாள்....

டவுனுக்கு வரும்போது மணி ஆறாகியிருந்தது ... அனைத்து மகளிர் காவல் நிலையத்தின் கிளை பேருந்து நிலையத்தின் பக்கத்தில் இருக்க.... வேகமாக அங்கு சென்றாள்... இரவு பணியில் இருந்த பெண் போலீஸ் அதிகாரியும்,, காவளர்களும் அந்த காலையில் கையில் குழந்தையுடன் வந்த பெண்ணைப் பார்த்து அக்கரையுடன் விசாரித்தார்கள்...

மான்சி குமுறும் நெஞ்சுடன் கடகடவென நடந்தது அத்தனையும் கொட்டித் தீர்த்துவிட்டு கண்ணீருடன் அந்த அதிகாரியின் முன் கையேந்தி " நீங்கதான் மேடம் எனக்கு நல்லது செய்யனும்" என்று அழுதாள்....

அந்த பெண் எஸ்ஐ எழுந்து வந்து மான்சியின் தோளில் தட்டி " அந்த கிழட்டு நாய நாங்கப் பாத்துக்குறோம்... நீ பயப்படாதம்மா" என்று மான்சிக்கு டீயும் பிஸ்கட்டும் வரவழைத்துக் கொடுத்தாள்

பிறகு இரண்டு கான்ஸ்டபிள்களை அழைத்து " போய் அந்த கெழ பாடுவ கூட்டிட்டு வாங்க... ஊர் காரன் எவன் குறுக்க வந்தாலும் ஸ்டேஷ்சனுக்கு வந்து என்கிட்ட பேச சொல்லி சொல்லிட்டு வாங்க" என்று கூறி அனுப்பி வைத்தாள்...

மான்சிய்ன் மனதுக்கு ஆறுதலாக இருந்தது அந்த பெண் அதிகாரியின் பேச்சு.... டீயை குடித்து விட்டு ஒரு மூலையில் அமர்ந்து குழந்தைக்கு பால் கொடுக்க ஆரம்பித்தாள்...

ஆனால் வெகு நேரமாகியும் போன கான்ஸ்டபிள்கள் வரவில்லை.... சரியாக எட்டு மணிக்கு எஸ் ஐ யின் செல்லுக்கு போன் வந்தது... போன கான்ஸ்டபிள் பெண்ணில் ஒருத்தி தான் பேசினாள்.... பிறகு போன் வேறு ஒருவரிடம் கொடுக்கப்பட்டது போல... எஸ்ஐ யின் பேச்சு குழைந்தது.... மீண்டும் காரார் குரலில் " இல்ல சார் எதுவும் பண்ண முடியாது,, கிழவன் இங்க வந்தாதான்" என்ற எஸ்ஐ போனை வைத்துவிட்டாள்.....

சற்று நேரத்தில் பகல் டியூட்டி எஸ்ஐ வந்துவிட .. இரண்டு எஸ்ஐ யும் ஏதோ ரகசியமாக பேசிவிட்டு அங்கேயே இருந்தனர் .... மான்சிக்கு இட்லி வாங்கி வந்து கொடுக்க ... அதிகாரியானாலும் பெண் தானே? அவங்களுக்கும் நல்ல மனசிருக்கும் என்று எண்ணியபடி மான்சி சாப்பிட்டாள்




அடுத்து இரண்டு வழக்குகளை விசாரித்து சமரசம் பேசி அனுப்பிவிட்டு சமரசமாகத ஒரு கணவன் மனைவி சண்டை என வந்த கேஸை நாளை வரும்படி கூறி அனுப்பிவிட்டு மான்சியின் புகாரை விசாரிக்க காத்திருந்தனர்...

சரியாக பகல் பதினோரு மணிக்கு கிழவனை அழைத்து வந்தார்கள் ... ஆனால் கூடவே ஒரு வெள்ளை வேட்டி கூட்டமே வந்தது.... கிழவனின் மருமகன்கள் இருவரும் வந்திருந்தனர் ... வந்தவர்கள் எல்லோரும் உள்ளே வந்து பெஞ்சுகளில் அமர்ந்தனர்.... சலசலவென்று பேசும் குரல் மட்டும் மான்சியின் காதில் விழுந்தது... ஆனால் என்ன பேசினார்கள் என்று தெரியவில்லை.....

கொஞ்ச நேரத்தில் மான்சி இருந்த அறைக்குள் வந்த மஞ்சுளா " அடிப்பாவி உன்னை நல்லவனு நம்பி எங்கண்ணனுக்கு கட்டி வச்சேனே... கடைசில இப்புடி என் பெரியப்பா வீட்டு மானத்தை போலீஸ் ஸ்டேஷ்சன் வரைக்கும் கொண்டு வந்துட்டுடியே பாவி?" என்று மான்சியின் முதுகில் அறைய... ஓடி வந்த கான்டபிள் ஒருத்தி " ஏய் இதென்ன சந்தைக்கடையா? பஜாரி மாதிரி கத்தாத" என்று மஞ்சுளாவை அதட்டி வெளியே அழைத்து சென்றாள்

மஞ்சுளாவின் வார்த்தைகள் ஈட்டிபோல் நெஞ்சை கிழித்தது.... தப்பு நான் செய்தது போல் கத்திட்டு போகுதே இந்த அண்ணி?" என்று வேதனையுடன் அமர்ந்திருந்தவளை கான்ஸ்டபிள் வந்து வெளியே அழைத்தாள்

மான்சி நடுங்கும் கைகளால் குழந்தையை தூக்கிக் கொண்டு வெளியே வர... அங்கே கிழவனோ... அவனுடன் வந்த ஆட்களோ... மஞ்சுளாவோ ... யாருமேயில்லை... இரண்டு எஸ்ஐக்கள் மட்டும் அமர்ந்திருந்தனர்... மான்சியை எதிர் சீட்டில் உட்கார சொன்னார்கள்... மான்சி குழந்தையுடன் அமர்ந்தாள்...

சற்று அமைதிக்குப் பின் " உன் பேரு மான்சினு தான சொன்ன?" என்று இரவு இருந்த பெண் அதிகாரி கேட்டாள்

" ஆமாங்க மேடம்" என்றாள் மான்சி.....

" ம்ம்,, ...... ஏம்மா நீ சொன்னது எதுவுமே உண்மையில்லை போலருக்கே? வந்தவங்கல்லாம் வேற மாதிரி சொல்றாங்களே?" என்று கேட்க.....

மான்சியின் குலை கொந்தளித்தது.. கையிலிருந்த குழந்தையை நழுவாமல் பற்றிக்கொண்டு.... " என்னங்கம்மா சொல்றாங்க" என்றாள் நடுங்கும் குரலில்...

" சொத்துக்கு ஆசைப்பட்டு நீதான் உன் மாமனாரை கூப்பிட்டேன்னு எல்லாரும் சொல்றாங்க... கொஞ்ச நாளாவே உன் நடத்தை சரியில்லைனு உன் மாமியாரும் சொல்றாங்க.... சரி மாமியார் பொய் சொல்லலாம்னு உன் அண்ணிகிட்ட விசாரிச்சா அந்த பொண்ணும் உன்னைதான் குத்தம் சொல்லுது... உன் அண்ணனை கேட்டா வாயைத் தொறக்காம அமைதியா நிக்கிறான்.... வந்த ஆளுங்க மொத்த பேரும் நீதான் அந்த கிழவன் கிட்ட தப்பா நடந்துகிட்டதா சொல்றாங்க ... ஊர் பெரியவங்கள்லாம் உன்னை கூப்பிட்டு கண்டிச்சதால இந்த மாதிரி பொய் புகார் குடுத்ததா சொல்றாங்க... இப்ப நீ என்ன சொல்லப் போற ?" என்று கேட்க

மான்சிக்கு மயக்கம் வரும் போலிருந்தது... யாருக்குமே இந்த அபலை மேல இரக்கம் வரலையா?.... சற்றுமுன் தின்ற இட்லி நஞ்சாய் கசக்க... அந்த பெண் அதிகாரிகளை நோக்கி கையெடுத்துக் கும்பிட்டு " நான் அப்புடிப்பட்ட பொண்ணில்லம்மா... நான் சொன்னதெல்லாம் உண்மை.... நம்புங்கம்மா" என்று அழுதாள்....


" ஏம்மா இத்தனை பேர் சொல்றதை நம்புறதா... நீ ஒருத்தி சொல்றதை நம்புறதா? சொத்துக்காக கிழவன்னு பாக்காம அவனைப் போய் கூப்பிட்டுருக்கியே... ச்சே ச்சே வரவர உலகம் குட்டிச்சுவராப் போச்சு... உன்னை மாதிரி பொண்ணுங்களால தான் நல்ல பொண்ணுங்களுக்கும் கேவலம் " என அந்த எஸ்ஐ பெண் சரமாறியாக மான்சியை மட்டமாகப் பேச ... மான்சி அதிர்ந்து போய் அமர்ந்திருந்தாள்....

மகளிர் காவல் நிலையம் என்பது எதற்காக.... பெண்ணுக்கு பெண்ணாய் பெண்ணின் நிலை புரிந்து நியாயயம் பெற்று தருவார்கள் என்பதற்காகத்தான்... ஆனால் அவர்கள் பணத்திற்கு விலை போனால் நியாயத்தைத் தேடி பெண்கள் போகவேண்டிய இடம் எது????

பணம் கட்டுகளாக வழங்கப்பட்டிருக்க.... பணத்துக்கு தரவேண்டிய மரியாதையை தந்தார்கள் மகளிர் காவல் நிலையத்தார்கள்.... மான்சி அதிர்ச்சியில் உறைந்து போய் நிற்க .... எதையோ எழுதி மான்சியிடம் கையெழுத்து வாங்கினார்கள்..

கிழவனும் அவனுடன் வந்தவர்களும் சிரிப்புடன் அங்கிருந்து கிளம்ப ... மஞ்சுளா மான்சி இருக்கும் இடத்தைப் பார்த்து காறித்துப்பிவிட்டு ,, தயங்கி நின்ற கணவனை இழுத்துக்கொண்டு கிளம்பினாள்.....

மான்சி கைப்பிள்ளையும் கண்ணீருமாக காவல் நிலையத்தை விட்டு வெளியே வந்தாள்... யாருமற்று நின்றவளின் கண்களில் தூரத்தில் ஒரு மரத்தடியில் அழுது கொண்டிருந்த அவளைப் பெற்ற துரதிர்ஷ்டசாலிகள் தெரிய அவர்களை நோக்கி இயந்திரமாய் நடந்தாள்.....

எல்லாவற்றையும் தொலைத்துவிட்டு வந்து நின்ற மகளைப் பார்த்ததும் பெற்ற வயிறு பற்றி எரிய வாயிலும் வியிற்றிலும் அடித்துக்கொண்டு அழுதபடி மகளை அணைத்துக்கொண்டனர்

தாயின் தோளில் சாய்ந்த மான்சி " நான் ஒரு தப்பும் செய்யலைமா?" என்று கூற

" பாவி மகளே ,, உன்னையபத்தி எங்களுக்குத் தெரியாதா? அவனுங்க பணத்தை வச்சு விளையாடிட்டானுக... நாங்க பிச்சைகாரங்க மாதிரி வேடிக்கைப் பார்த்து கிட்டு நிக்கிறோம்" என்றாள் மான்சியின் தாய்....

தன் தாயாவது தன்னை புரிந்து கொண்டாளே என்ற சிறு நிம்மதியுடன் மஞ்சப்புத்தூர் செல்லும் பஸ்ஸில் ஏறி பெற்றோருடன் அமர்ந்தாள் .....

எவன் இருக்கும் ஊரில் தான் வசிக்க வேண்டியுள்ளதே என்று சலித்துக்கொண்டாளோ அவனிருக்கும் அதே ஊருக்கு நிரந்தரமாக வசிக்க வேண்டிய நிர்பந்தத்தில் கையில் குழந்தையுடன் கழுத்தில் தாலி இல்லாமல் விதவையாக வந்து இறங்கினாள் மான்சி ....



ஆண்டவன் யாரையும் விட்டதில்லை ..

வாழ்க்கையின் வட்டத்தில..


ஆசையை நெஞ்சுல வச்சுப்புட்டா..

சோதனை கொஞ்சமில்லை....

வேலியத்தான் போட்டுவைப்பான்..

வேடிக்கைதான் பார்த்து நிப்பான்..

வேலியையும் தாண்டிப்புட்டா..

வேதனையில் சிக்க வைப்பான்..




பொட்டுவச்ச காரணம் கேள்விக் குறியாச்சு...

கட்டி வச்ச மாலையோ வாடும் படி ஆச்சு..

சொந்தமும் பந்தமும் வந்ததே நேத்து..

வந்தத கொண்டுதான் போனதே காத்து..

எண்ணி எண்ணி பார்த்து பார்த்து..

ஏங்கிப் போகும் போது..

இந்தப் பொண்ணு பாடிடாத சோகம் ஏது?



புள்ளிவச்சு கோலம் தான் போட்டதுதந்த சாமி ..

கோலங்களை மீறித்தான் ஆடுதிந்த பூமி...

எல்லைதான் எதுக்கும் உள்ளது பாரு...

பூவெல்லாம் சாமிதான்.. நாமெல்லாம் நாரு...

பொண்ணு மனம் பூமி போல பொருமையாக வாழும்..

காலம்வந்து சேரும் போது கடலைப் போல சீறும்...



ஆண்டவன் யாரையும் விட்டதில்லை ..

வாழ்க்கையின் வட்டத்தில..

ஆசையை நெஞ்சுல வச்சுப்புட்டா..

சோதனை கொஞ்சமில்லை....




No comments:

Post a Comment