Thursday, January 28, 2016

தீர்க்க சுமங்கலி மான்சி - அத்தியாயம் - 14

அந்த இடத்திலிருந்து சத்யனை தமிழரசியின் வீட்டுக்கு அழைத்து போவதற்குள் சண்முகத்திற்கு போதும் போதுமென்று ஆகிவிட்டது ....

வீட்டுக்குப் போனதும் கலங்கிப் போய் அமர்ந்திருந்த சத்யனின் அருகில் போய் அமர்ந்த சண்முகம் " மச்சான்,, நடந்ததை கேட்டு எனக்கே வயிறு எரியுது,, உன் மனசு எப்புடி கொதிக்கும்னு எனக்கு தெரியும் மச்சான் .... ஆனா அந்த கிழ நாயோட சுயரூபம் தெரிஞ்சு மான்சி இப்பவே வெளியே வந்தது நல்லது.... இல்லேன்னா அவன் மறுபடியும் எதுவும் செய்றதுக்கு முன்னாடி மான்சி விபரீதமா எதாவது முடிவு செய்துட்டுருப்பா..." என்று சண்முகம் சொல்லிக் கொண்டிருக்க....



சத்யன் முகம் அனலாக வார்த்தை கனலாக கொதிக்க. " இல்ல மாப்ள அவனை அடையாளமே தெரியாத மாதிரி வகுந்துடனும்..... புதைக்க எலும்பு கூட கிடைக்காம செய்யனும் " என ஆக்ரோஷமாக கத்தினான்...

சண்முகம் பதட்டமாக சத்யனின் கைப்பற்றி " மச்சான் அதைதான் இப்ப செய்யக்கூடாது .... அந்த நாய் மேல நம்ம விரல் பட்டாலும் அதுக்கு காரணம் மான்சிதான்னு அவ மேல தான் பழி விழும்.... பொறுமையா இரு மச்சான்... அதுக்கு நேரம் வரும்போது நாம யாருனு காட்டுவோம்" என்று சண்முகம் சத்யனை அமைதிப்படுத்த முயன்றான்....

சண்முகம் சொல்வது சரிதான் என்றாலும் சத்யனின் மனம் அமைதியடைய மறுத்தது ,, மான்சி அந்த சமயத்தில் எப்படி கதறியிருப்பாள்?... காவல் நிலையத்திலும் நீதி கிடைக்காமல் அவள் மனம் எப்படி தவித்திருக்கும்? இதையே நினைத்து நினைத்து சத்யனின் மனம் தன் காதலிக்காக கதறியது ... மனதால் கூட வரம்பு மீறக் கூடாது என நான் இருக்க ..... எவனோ ஒரு கிழவன் என் காதலி தொடமுயன்றானா? சத்யனின் கொதிப்பு அதிகமாகிக்கொண்டே போனது....

சண்முகமும் சத்யனும் ரயிலில் கிளம்பி சென்னை வந்து அங்கிருந்து பஸ்ஸில் ஊருக்கு வரும் போது சண்முகம் நிறைய சொல்லித்தான் அழைத்து வந்தான் .. ஏதாவது முயற்சி செய்து மான்சியை சந்திக்க முயன்றால் ....... இப்போதைய சூழ்நிலைக்கு அது அவளுக்கு அவப் பெயரையே ஏற்படுத்தும் என்று விளக்கமாக கூறித்தான் அழைத்து வந்தான்.....

சண்முகம் சொல்வது உண்மை எனப் புரிந்தது ,, மான்சி இருக்கும் ஊருக்குள் கால் வைக்கிறோம் என்ற சந்தோஷத்தை கூட அனுபவிக்காமல் மான்சிக்கு நடந்த கொடுமை சத்யனின் நெஞ்சை வதைத்தது .....

அடுத்த தெருவில் மான்சி அன்றாடம் வேதனைப்பட்டுக்கொண்டிருக்க... அவளைப் பார்க்கக்கூட முடியாமல் சத்யன் நெஞ்சை கல்லாக்கிக் கொண்டு கிடந்தான்.... தன்னால் மான்சிக்கு எந்த கெட்டப் பெயரும் வரக்கூடாது என்பதில் கவனமாக இருந்தான் ..

நிர்கதியாய் தாய் வீட்டுக்கு வந்த மான்சியை ஆறுதலுக்காக கூட அணைத்து துக்கம் போக்கவில்லை யாரும் , பன்னீருக்கு வழக்கம் போல மனைவி சொல்லே வேத மந்திரமாக இருக்க.... தாலியறுத்த தங்கையை பார்ப்பதே தோஷம் என்பது போல் ஒதுங்கினான்.... மஞ்சுளாவின் நாக்கு முன் எப்போதும் இல்லாதளவுக்கு முள் பதித்த சாட்டையாய் சுழன்றது..... மான்சியை பெற்றோர்களுக்கு கண்ணீர் சிந்துவதை தவிர வேறு எதுவும் தோன்றவில்லை ....


மான்சியின் மூத்த சகோதரிகள் இருவரும் வந்து தங்கையை கட்டிக்கொண்டு அழுதனர் ... பெரியவளின் கணவன் குடிகாரன் என்பதால் அவள் தனது தங்கையை தன்னுடன் அழைக்கவில்லை... ஆனால் இளைய சகோதரி பிடிவாதமாக மான்சியை தன்னுடன் வந்து விடும்படி அழைத்தாள் ...

மான்சியோ " வேண்டாம்க்கா ... நான் யாருக்கும் பாரமா இருக்க விரும்பலை,, அப்பா அம்மா இருக்குற வரைக்கும் அவங்களை விட்டு நான் எங்கேயும் வரலைக்கா" என்று மறுத்து விட்டாள் ...

ஆனால் அந்த வீட்டில் இருப்பது எவ்வளவு சவாலான விஷயம் என்பதை போகப் போகத்தான் புரிந்துகொள்ள முடிந்தது..... ஏற்கனவே மான்சியை அவளுக்குப் பிடிக்காது இப்போதோ மான்சி போலீஸ் ஸ்டேசன் வரை வந்து தனது பெரியப்பா குடும்பத்தை அவமானப்படுத்தி விட்டாள் என்ற ஆத்திரமே மான்சியை கொடுமை செய்ய போதுமான ஆயுதமாக இருந்தது .....

பச்சைப் பிள்ளைக்காரி என்று கூட யோசிக்காமல் மான்சியை கடுமையாக வேலை வாங்கினாள் மஞ்சுளா...... பன்னீருக்கு மான்சி என்ற ஒரு தங்கை இருப்பதே மறந்து போய் தன் மனைவியின் பணியாளாக மான்சியை எண்ணினான்....

அவனைச் சொல்லி குற்றமில்லை ... அவனக்கு போதிக்கப்பட்ட மந்திரம் அப்படி... தங்கை என்றால் அது எப்பேர்ப்பட்ட உறவு என்று அவனுக்கு அறிவுருத்த ஆளில்லை...... சோத்துக்கே இல்லேன்னா கூட பரவாயில்லை நீ என்னுடன் படுத்தே கிடந்தால் போதும் என்ற மனைவி அவனுக்கு தெய்வமாக தெரிந்தாள்..... வெறும் அங்கங்களாலேயே அவனை கட்டி வைத்திருந்தாள் மஞ்சுளா...

நாளுக்கு நாள் மஞ்சுளாவின் சித்ரவதைகள் அதிகமானது.... மான்சியால் முடியாத நேரத்தில் மஞ்சுளாவின் நாக்கு சாட்டையாக மாறி மான்சியை வேலை வாங்கும்... " உன்னைய வேலை செய்ய விடாம என் அண்ணன்காரன் வச்சிருந்ததாலதான் உடம்பு தினவெடுத்து வயசானவனாலும் பரவாயில்லைனு என் பெரியப்பனையே வளைச்சுப் போட பார்த்திருக்க...." என்று சத்தமில்லாமல் சம்மட்டியால் அடித்து மான்சியின் இதயத்தை காயப்படுத்தினாள்

அன்றும் அப்படித்தான்,, மஞ்சுளா பன்னீருடன் டவுன் சினிமா தியேட்டருக்கு ஈவினிங் ஷோ போய்விட்டாள்.... மான்சி தனது அம்மா அப்பாவுடன் குழந்தையையும் தூக்கிக்கொண்டு கரும்பு நடவு செய்யும் வேலைக்குப் போய்விட்டாள்...

அன்று மாலை வேலை முடிந்து வீட்டுக்கு வர தாமதமாகிவிட... வந்தது குழந்தைக்கு பால் கொடுத்து தூங்க வைத்துவிட்டு அவசரமாக இரவுக்கான சமையலை ஆரம்பித்தாள் மான்சி .... அவள் பெற்றோர் மாட்டுகளுக்கு தீனி வைத்து பால் கறக்க போய்விட்டனர்.....

மான்சி வேக வேகமாக சமையல் செய்யும் போதே மஞ்சுளா வந்துவிட்டாள்... சினிமா முடிந்து பஸ் நெரிசலில் சிக்கி களைத்துப் போய் பசியோடு வந்தவளுக்கு மான்சி அப்போதுதான் சமையல் செய்வதைப் பார்த்ததும் ஆத்திரமாய் வர " ஏன்டி முண்டச்சி,, இவ்வளவு நேரமா எவன்கூட ஊர் மேஞ்சிட்டு வந்து இப்பதான் சோத்தை பொங்குற?" என்று கேட்க...


அன்று முழுவதும் ஓய்வின்றி உழைத்த களைப்பும் ... எடுத்து சென்ற உணவு போதாமல் வயிற்றை பசி வாட்ட... மான்சிக்கு முதன் முதலாய் ரோஷம் தலைத்தூக்கியது " அண்ணி வார்த்தையை அளந்து பேசுங்க? ... நான் ஒன்னும் சினிமாவுக்குப் போய்ட்டு ஊரை சுத்திட்டு வரலை.... காலையிலருந்து கல்லும் மண்ணும் சுமந்து நாயாட்டம் கஸ்டப்பட்டுட்டு வர்றேன் " என சுருக்கென்று சொல்ல...

மான்சியின் எதிர் வாதம் பிடிக்காமல் போனது மஞ்சுளாவுக்கு ... " என்னடி ஓடுகாலி வாய் நீளுது?... பெரிய உத்தம பத்தினியாட்டம் ரோஷம் வருது? சொத்துக்காக வயசான என் பெரியப்பனை மடக்கிப் போடப் பாத்த உன் கதைதான் ஊருக்கே தெரியுமே? அடங்கி பதில் சொல்றதான இரு இல்லேன்னா வீட்டை விட்டு போடி வெளிய" என்று மஞ்சுளா நாக்கில் ஈரமின்றி வார்த்தைகளை வாறியிரைக்க ...

மான்சியின் கோபம் அதிகமானது " வீட்டுக்கு வந்த மருமகளை கையைப் பிடிச்சு இழுக்குற நாரப் பரம்பரம்பரையில இருந்து வந்தவங்க தான நீங்க ? உங்ககிட்ட போய் நல்ல வார்த்தையை எதிர்பார்த்தது என் தப்புதான்... அதோட நான் ஏன் வீட்டை விட்டு போகனும்... இது என் அப்பன் சம்பாதிச்ச வீடு... இங்க இருக்க எனக்கும் உரிமையிருக்கு... அதனால என்னை வெளிய பேக சொல்லாதீங்க" மான்சி சூடாக பதில் தந்தாள்...

பெண்கள் சண்டையில் நான் தலையிடலை என்பது போல் தோட்டத்தில் ஆய் போய்விட்டு வந்த மகனுக்கு கழுவிக்கொண்டிருந்தான் பன்னீர்... அப்போதுதான் வீட்டுக்குள் நுழைந்த பெற்றவர்கள் மருமகளின் குணம் அறிந்து .. மான்சியின் அருகில் சென்று மகளை அடக்கினர்...
ஆனால் மஞ்சுளாவின் கோபம் வெறியாக மாறியது... " அடிப்பாவி சண்டாளி.... நீ ஊர்மேஞ்ச கதையை மறைச்சு என் குடும்பத்து மேலயே பழி போடுறியா?" என்றவள் மான்சி இந்த வீட்டில் இருக்க உரிமையிருக்கு என்று கூறியதை அப்படியே மாற்றி " அப்போ இந்த வீட்டுலயும் இருக்குற காணி நிலத்துலயும் உனக்கும் பங்கிருக்குனு சொல்றியாடி?.... அடிப்பாவி ,, சொத்துல பங்கு வேணும்னு நினைக்கிறவளுக அதுக்கு ஏன்டி இன்னொருத்தன் வீட்டுப் பொண்ணை உன் அண்ணனுக்கு கட்டி வைக்கனும்,, நீங்க மூனுபேருமே கட்டிகிட்டு இந்த வீட்டுலயே குடும்பம் நடத்த வேண்டியது தானே?" என்று தகாத வார்த்தைகளை அள்ளி வீசினாள்

அந்த அமில வார்த்தைகள் கொடுத்த அதிர்ச்சியில் இருந்து மீளமுடியாமல் மான்சி அப்படியே நிற்க .... மஞ்சுளாவின் ஆத்திரம் வேறு மாதிரியாக திரும்பியது....

அப்போது தான் வந்த பன்னீரின் அருகில் சென்றவள் அவன் சட்டை காலரைப் பிடித்து " அடப்பாவி மனுஷா அவ பேசுறதை எல்லாம் கேட்டுகிட்டு குத்துக் கல்லு மாதிரி நிக்கிறயே? நீயெல்லாம் ஆம்பளையா? ஆனா எனக்கு ரோஷம் இருக்கு... இனிமே நானும் என் புள்ளைகளும் ஒரு நிமிஷம் கூட இந்த வீட்டுல இருக்க மாட்டேன் ... இந்த வீட்டுல ஒன்னு நான் வாழனும் இல்ல அந்த வேசி முண்ட வாழனும் " என்று சவாலாக உரைத்தவள் வேகமாக உள் அறைக்கு சென்று தனது துணிகளை அள்ளி மூட்டையாக கட்டினாள்...




ஏற்கனவே மான்சி வீட்டில் உரிமை கொண்டாடி பேசியதால் எரிச்சலைடைந்திருந்த பன்னீர் ... மஞ்சுளாவின் இந்த நாடகத்தில் மதி மயங்கி மான்சியின் கூந்தலைப் பற்றியிழுத்துக்கொண்டு வாசற்படி வரை தள்ளிக்கொண்டு வந்தவன் " என்னடி சொன்ன ? இந்த வீட்டுல உனக்கும் உரிமையிருக்கா? அதையும் பார்க்கலாம்.... போலீஸ் ஸ்டேஷன்ல குடும்ப மானத்தை நாரடிச்சப்பவே உன்னை வெஷம் வச்சு கொன்னுருக்கனும்... அய்யோப் பாவம் கூடப்பிறந்த பாவத்துக்கு வீட்டுக்கு கூட்டிட்டு வந்தேன்... ஆனா இனி உனக்கு இந்த வீட்டுல இடமில்லை ... வெளியே போடி" என்று மான்சியைப் பிடித்து இழுத்து தெருவில் தள்ளினான்....

மான்சி நடுத் தெருவில் வந்து விழ... அக்கம் பக்கம் இருந்தவர்கள் பறிதாபத்துடன் மான்சியை நெருங்கி தூக்க முயன்றனர்..... ஆவேசமாக தெருவில் இறங்கிய பன்னீர் " யாராவது அவளுக்கு சப்போர்ட் பண்ணீங்க அவ்வளவுதான்... இது எங்க குடும்ப பிரச்சனை... எவனும் இதுல தலையிடக் கூடாது" என்று கத்தியதும் வந்தவர்கள் அனைவரும் ஒதுங்கிப் போயினர்

தன் கையை ஊன்றி மான்சி எழுந்து நின்றாள் .... சகோதரனை ஒருப் புழுவைப் போல பார்த்தவள் .... " நான் ஒரு ஆண்பளைப் பொண்ணாப் பொறந்து இன்னொரு ஆம்பளைக்கு முந்தி விரிச்சவ ..... உன்னை விட பல மடங்கு மானஸ்தி நான் .... இனி செத்தாலும் உன் வாசப்படி ஏற மாட்டேன்" என்று அடித் தொண்டையில் கத்தியவள் அவளது குழந்தையை தோளில் போட்டுக்கொண்டு மகனின் வார்த்தையை மீறி மகளை நெருங்க முடியாமல் அழுது கொண்டிருந்த தனது தாயை நெருங்கியவள் " ஆத்தா ,, இனி உனக்கு ரெண்டு மக ஒரு மகன்தான்... ஒருத்தி செத்துட்டதா நெனைச்சுக்க.... இனி நீங்க செத்தாலும் நான் வரலை ... நான் செத்தாலும் நீங்க வராதீங்க" என்றவள் குழந்தையை வாங்கி தனது தோளில் போட்டுக்கொண்டு நிமிர்வுடன் தெருவில் இறங்கினாள் ...

தனது பெரியப்பனை அவமானப்படுத்திய மான்சியை வெளியேற்றிய சந்தோஷத்தில் உள்ளுக்குள் குதித்துக் கொண்டிருந்த மஞ்சுளா.... இதுதான் சரியான சந்தர்ப்பம் என்று அவசர அவசரமாக மான்சியின் உடமைகள் மற்றும் உடைகளை அள்ளி வந்து தெருவில் வீசினாள்.... பொருட்கள் தெருவில் வீசப்பட்டதும் பன்னீர் தனது பெற்றோரை பிடித்து வீட்டுக்குள் தள்ளிவிட்டு கதவை அறைந்து மூடினான் ...

இரவு சரியாக மணி எட்டரை ஆகியிருந்தது ... தெருவில் வீசப்பட்ட பொருட்கள் சிதறிக் கிடந்தது .... அத்தனையும் சென்னையில் மான்சிக்காக கோபால் வாங்கியவைதான்... போன வாரம் தான் சுகுனா அந்த வீட்டை காலி செய்து அந்தப் பொருட்களை கொண்டு வந்து மான்சியிடம் கொடுத்துவிட்டுப் போயிருந்தாள்....

மான்சி தன் மகனை ஒரு துணியில் சுருட்டி தெருவில் படுக்க வைத்துவிட்டு தனது பொருட்களை சேகரிக்க ... சில ஈரமுள்ள நெஞ்சங்கள் ஓடி வந்து உதவினார்கள்... பாத்திரங்கள் அனைத்தும் சேகரிக்கப்பட்டு ஒரு மூட்டையாக கட்டினார்கள்

பன்னீரின் வீட்டுக்கு நாலு வீடு தள்ளியிருந்த காமாட்சியம்மாள் என்ற வயதான முதியவள் மான்சியை நெருங்கி " கண்ணு நான் தனிக்கட்டை தான்.... நீயும் உன் மவனும் என் கூட வந்து என் வீட்டுல தங்கிக்கங்க கண்ணு" என்று கண்கலங்க அழைத்தாள்....


மான்சி தலையசைத்து மறுத்தாள் " வேணாம் ஆயா... என் அண்ணிகாரி உன்னையும் சேர்த்து பேசுவா,, என் கஸ்டம் என்னோட போகட்டும்... இந்த சாமானுங்களை வைக்க மட்டும் கொஞ்சம் இடம் குடுங்க ,, ஒரு வாரத்துல மலைப் பக்கமா ஒரு குடிசையைப் போட்டுகிட்டு சாமானுங்களை எல்லாம் எடுத்துகிட்டுப் போயிடுறேன்" என்று கண்ணீருடன் கெஞ்சுதலாய் கேட்க ...

" சரிம்மா கொண்டு வந்து வைச்சுக்க,, ஆனா இந்த ராவுல கைக் குழந்தைய வச்சுகிட்டு நீ எங்கம்மா போவ?" என்று காமாட்சிப் பாட்டி கேட்க...

" பள்ளிக் கூடத்து தின்னையில மலையில கல்லு உடைக்க வெளியூர்லருந்து வந்தவங்கல்லாம் குடும்பத்தோடப் படுத்திருக்காங்க... அவங்கக் கூடப் போய் நானும் இருந்துக்கிறேன் ஆயா" என்றவள் அக்கம் பக்கத்தவரின் உதவியுடன் தனது பொருட்களை காமாட்சிப் பாட்டியின் வீட்டில் வைத்து விட்டு இரண்டு பழைய புடவைகளை மட்டும் எடுத்துக்கொண்டு பள்ளிக்கூடத்திற்கு சென்றாள்...

பள்ளிக்கூட வராண்டாவில் கல் உடைக்க வந்த வெளியூர் குடும்பத்தினர் எல்லோரும் படுத்திருக்க.. ஓரமாய் இருந்த இடத்தில் புடவையை விரித்து குழந்தை அதில் கிடத்தி விட்டு பக்கத்தில் இவளும் படுத்துக் கொண்டாள் ...

அன்று முழுவதும் அரை வயிறு கூட உண்ணாமல் உழைத்ததால் குழந்தையின் பசியாற்றுவதற்கு பால் கூட சுரக்கவில்லை மான்சியின் மார்புகளில் .. .. இரவு முழுவதும் பசியால் அழும் குழந்தைக்கு பள்ளிக் கூடத்து குழாயில் தண்ணீர் பிடித்து குடிக்கக் கொடுத்துவிட்டு இவளு பச்சைத் தண்ணீரால் தனது வயிற்றை நிரப்பிக் கொண்டு படுத்துக் கொண்டாள்

ஆனால் மான்சியின் கண்கள் சொட்டுக் கூட நீரை வடிக்கவில்லை .... நெஞ்சு முழுவதும் வைராக்கியம் விஷம் போல் பரவி உறுதிக்கு வலு சேர்த்தது ... இதே ஊர்ல வாழ்வேன்..... என் பிள்ளைக்காக வாழ்வேன் .... என்னை ஏசியவர்கள் முன்பு தலை நிமிர்ந்து வாழ்வேன்.... எனக்கு வேசிப் பட்டம் கொடுத்தவர்களின் நினைப்பு மண்ணாக்கி விட்டு அதன் மேல் கோபுரம் கட்டிக்கொண்டு வாழத்தான் போகிறேன் ......




ஆதி என்பது தொட்டிலிலே..
வரும் அந்தம் என்பது கட்டிலிலே...

நீதி என்பது மனிதனிடம்
அவன் நிற்கும் இடமோ இறைவனிடம்..

அத்தை மாமன் கனவுகளும்
உடன் அண்ணன் தம்பி உறவுகளும்..
சொத்துக் கிடைத்தால் வருவதுண்டு..
அது வற்றும் பொழுது மறைவதுண்டு..

அது வற்றும் பொழுது மறைவதுண்டு..

ஆதி என்பது தொட்டிலிலே..
வரும் அந்தம் என்பது கட்டிலிலே...

பந்து ஜனங்கள் பரிவாரம்..
பெரும் பதவி மோக அதிகாரம்..
இந்த உலகின் அலங்கோலம்..
இதில் எந்த உறவும் சிலகாலம்..

எந்த உறவும் சிலகாலம்

ஆதி என்பது தொட்டிலிலே..
வரும் அந்தம் என்பது கட்டிலிலே...

வெள்ளிக்கிழமை வருமென்று
ஒன்று திங்கட்கிழமை விளக்கேற்றி..
கண்ணை விழித்து காத்ததம்மா
தினமும் எண்ணெய் விடத்தான் மறந்ததம்மா
எண்ணெய் விடத்தான் மறந்ததம்மா.....

எண்ணெய் விடத்தான் மறந்ததம்மா.....

ஆதி என்பது தொட்டிலிலே..
வரும் அந்தம் என்பது கட்டிலிலே...




No comments:

Post a Comment