Wednesday, January 20, 2016

ஜெயம் கொண்டான் - அத்தியாயம் - 1

நான் எனது அறையில், என்னுடைய லேப்டாப்பில் ஒரு ஆங்கிலப்படம் பார்த்துக்கொண்டிருந்தேன். அப்போதுதான் ஜெயாவும், விஷ்ணுவும் தயங்கி தயங்கி, என் அறைக்குள் நுழைந்தார்கள். ஜெயா என் மாமா பெண். காலேஜில் படிக்கிறாள். விஷ்ணு அவளுடைய தம்பி. ஸ்கூல் படிக்கிறான்.

நான் என் மாமா வீட்டில்தான் கடந்த நான்கு மாதங்களாக தங்கியிருக்கிறேன். ஜெயாவுக்கு என்னை பிடிக்காது. விஷ்ணுவுக்கு என்னை சுத்தமாக பிடிக்காது. இருவரும் சேர்ந்து வந்திருக்கிறார்கள் என்றால் எதோ பிரச்னையை சுமந்து கொண்டுதான் வந்திருப்பார்கள். என்னவென்று கேட்போம்.

"என்ன ஜெயா..?" நான் கேட்க, அவள் அமைதியாக தன் தம்பியை பார்த்தாள். 'நீ சொல்லுடா..' என்பது போல அந்த பார்வை இருந்தது. அவன் என்னை திரும்பி முறைத்தான்.

"என்னடா..?" இப்போது நான் விஷ்ணுவிடம் அதட்டலாக கேட்டேன்.

"இங்க பாருங்க அத்தான்.. நீங்க அடிக்கடி அக்கா ரூட்டுல க்ராஸ் பண்றீங்க.. இது நல்லதில்ல..!!" 

என்று சினிமா வில்லன் போல முகத்தை வைத்துக் கொண்டு சொன்னான். நான் ஓரக்கண்ணால் ஜெயாவை நோட்டம் விட்டுக்கொண்டே சொன்னேன்.

"நான்.. உன் அக்கா ரூட்டுல க்ராஸ் பண்றனா..? என்னடா சொல்ற...? எனக்கு ஒன்னும் புரியலை.."

"நல்லா யோசிச்சு பாருங்க.. புரியும்..." 

நான் உடனே யோசிப்பது மாதிரி ஓரிரு வினாடிகள் நடித்தேன். பின்பு சொன்னேன்.



"ம்ம்ம்... நல்லா யோசிச்சுட்டேன்...!! ஒன்னும் புரியலை...!! அத்தானுக்கு.. ஞாபக மறதி ஜாஸ்தியாயிடுச்சு..!!" நான் கேலியாக சொல்ல, இப்போது ஜெயா அமைதியை உடைத்துக் கொண்டு, படபடவென பொரிந்தாள். 

"நடிக்காதீங்க அத்தான்...!! என் பிரென்ட்சுக எல்லார்ட்டயும் என் பேரு 'ஜெயமாலினி'னு சொல்லிருக்கீங்க.. எல்லோரும் என்னை எப்படி கேலி பண்றாளுக தெரியுமா..?" அவள் முகத்தை சுருக்கியபடி, மூக்கை ஒருமுறை விசும்பிக் கொண்டாள். எனக்கு சிரிப்பு வந்தது. மீண்டும் கேலியான குரலில் சொன்னேன். 

"ஜெயமாலினிதான உன் பேரு..? அதுக்கெதுக்கு கேலி பண்றாளுக...?"

"என் பேரு ஒன்னும் ஜெயமாலினி இல்லை.. வெறும் ஜெயாதான்...!!" அவள் சூடாக சொன்னாள்.

"அது ஸ்கூல் சேர்றப்போ கொடுத்த பேரு... நீ பொறந்ததும் மாமா உனக்கு ஆசையா வச்ச பேரு ஜெயமாலினிதான..?"

"ம்ஹூம்...!! அதெல்லாம் இல்லை.. என் பேரு ஜெயாதான்..." அவள் குழந்தை போல சிணுங்கினாள்.

"உனக்கு தெரியாது ஜெயா...!! அந்தக்காலத்துல மாமா.. கவர்ச்சிக்கன்னி ஜெயமாலினியோட டை ஹார்ட் ஃபேன்... அதனாலதான் நீ பொறந்ததும்..."

"ஐயோ..!! ப்ளீஸ் அத்தான்... நிறுத்துங்க...!! ம்ம்ம்ம்… சரி.. அப்படியே இருந்துட்டு போகட்டும்.. அதை எதுக்கு இப்போ போய் எல்லார்ட்டயும் சொன்னீங்க...?"

"நானா சொன்னேன்..? அவளுகதான் கேட்டாளுக.. உனக்கு காமடியா ஏதாவது பட்டப்பேர் இருக்கான்னு.. நான் அவ சொந்தப்பேரே செம காமடியா இருக்கும்னு சொன்னேன்..."

"போங்க அத்தான்..!! எல்லாரும் என்னை பயங்கரமா கிண்டல் அடிக்கிறாளுக.. அசிங்க அசிங்கமா பேசுறாளுக.."

"இதுல அசிங்கமா பேசுறதுக்கு என்ன இருக்கு...?" நான் புரியாத மாதிரி கேட்க,

"வெளையாடாதீங்க அத்தான்...!! எனக்கு ரொம்ப அவமானமா இருக்கு... நீங்க நல்லா ப்ளான் பண்ணி என்னை பழிவாங்கிட்டீங்க..."

"ஆமாம்.. இவங்களை பழி வாங்குறதுக்கு ப்ளான்லாம் பண்றாங்க.. சரி... ப்ளான் பண்ணிதான் சொன்னேன்.. அதுக்கு என்ன இப்போ...?"

நான் கூலாக கேட்க, அவள் ஓரிரு வினாடிகள் என்னையே முறைத்தாள். பின் தன் தம்பியை திரும்பி பார்த்தாள். இப்போது அவன் என்னிடம் சொன்னான்.

"நீங்க அக்காகிட்ட சாரி கேக்கணும்...!!"

"என்னது..? சாரியா...? அதுவும் இவகிட்டயா...? போடா டேய்...!! உண்மையை சொன்னதுக்கெல்லாம் சாரி கேக்க முடியாதுன்னு உன் அக்காகிட்ட சொல்லு..."

"சொல்றம்ல..? நீங்க சாரி கேட்டுத்தான் ஆகணும்..." விஷ்ணுவின் முகம் இப்போது ரவுத்ரமானது.

"கேக்க முடியாது...!! என்னடா பண்ணுவீங்க ரெண்டு பேரும்...?" நானும் கோபமாகவே சொன்னேன்.

"வேணாம் அத்தான்.. எங்களை பகைச்சுக்காதீங்க...!! விளைவு விபரீதமா இருக்கும்...!!"

"இங்க பாரு...!! இந்த சினிமா டயலாக்லாம் உன்கூட விளையாடுமே குட்டிப்பொண்ணு ஷாலினி.. அதுகிட்ட போய் விடுங்க அக்காவும், தம்பியும்.. எங்கிட்ட வேணாம்... புரிஞ்சதா...? சாரிலாம் கேக்க முடியாது.. ஓடிப்போங்க ரெண்டு பேரும்...!! கெட் அவுட்..!! கெட் அவுட் ஆப் மை ரூம்...!!"

நான் கோபமாக சொல்ல, அக்காவும் தம்பியும் ஒரு இரண்டு வினாடிகள் என்னையே முறைத்து பார்த்தார்கள். அப்புறம் விஷ்ணு தன் அக்காவின் கையை பிடித்தபடி சொன்னான்.

"வாக்கா போலாம்...!! நமக்கும் டைம் வரும்.. அப்போ பாத்துக்குவோம்...!!"

அவர்கள் என் அறையை விட்டு வெளியேற, எனக்கு எழுந்த சிரிப்பை அடக்க மிகவும் கடினமாக இருந்தது. சிரித்துக்கொண்டே இங்க்லீஷ் படத்தை தொடர்ந்தேன்.

நான் அசோக். சாப்ட்வேர் இஞ்சினியராக இருக்கிறேன். எனக்கு பெங்களூரில் வேலை கிடைத்திருக்கிறது என்று தெரிந்ததுமே என் அம்மா நச்சரிக்க ஆரம்பித்துவிட்டாள்.. தன் அண்ணனின் வீட்டில்தான் தங்க வேண்டும் என்று.. நானும் நான்கு மாதங்களுக்கு முன்னால், ஒரு நல்ல நாளில் பெங்களூர் வந்து இறங்கினேன். 

ஜெயாவை நான் சின்ன வயதில் பார்த்தது. இப்போது வளர்ந்து, தளதளவென தக்காளி மாதிரி இருப்பாள் என்று நான் சற்றும் எதிர்பார்த்திருக்கவில்லை. சினிமா நடிகை போல, விளம்பர மாடல் போல இருப்பாள். எனக்கு இவ்வளவு அழகாக ஒரு முறைப்பெண்ணா என்று, என் மீதே எனக்கு ஒரு கர்வம் கூட வந்தது. ஜெயாவின் அழகில் சொக்கிப் போனேன். பார்த்ததுமே எனக்கு ஜெயாவை பிடித்து போனது. அவள் மீது ஒரு இனம்புரியாத ஈர்ப்பு வந்திருந்தது.

ஆனால் ஜெயாவுக்கு என்னை பார்த்ததுமே பிடிக்காமல் போனது. தாங்க முடியாத வெறுப்பு வந்திருந்தது. காரணம்.. வந்ததுமே அவளுடைய மாடிரூமை, நான் தங்கிக்கொள்ள ஒதுக்கிக் கொடுத்ததுதான். அங்கே ஆரம்பித்தது இந்த பனிப்போர். மனதுக்கு பிடிக்காத அத்தானை அடிக்கடி வெறுப்பேற்றி மகிழ்வாள். துணைக்கு தன் தம்பியையும் சேர்த்துக் கொண்டாள். அவள் மிக சீரியசாக என்னை சீண்ட, நான் ஜாலியாக அவளை சீண்டி விளையாடுவேன்.

ஜெயாவின் சீண்டல் என்றால் பெரிதாக ஒன்றும் இருக்காது. எல்லாமே சில்லறைத் தனமாகத்தான் இருக்கும். ஆபீஸ் கிளம்புகையில் என் ஷூவை எடுத்து மறைத்து வைப்பாள். மேட்ச் பார்க்க டிவி முன் அமரும்போது ரிமோட்டை எடுத்து ஒளித்து வைப்பாள். கேட்டால் 'நான் பாக்கலையே.. எனக்கு தெரியாது..' என்று அப்பாவியாய் முகத்தை வைத்துக் கொண்டு சொல்வாள். வேண்டுமென்றே காபியை மேலே சிந்திவிட்டு, 'சாரி... கவனிக்கலை..' என்பாள். யாராவது பிரெண்டின் செல்போனை வாங்கி, அவர்களுக்கு தெரியாமல், என் நம்பருக்கு 'லூசு.. குரங்கு.. எருமை மாடு..' என்று எஸ்.எம்.எஸ். அனுப்புவாள். அந்த அளவில்தான் அவளுடைய கோபம் இருக்கும்.

அக்காவின் கோபம் ஓகே..!! இந்த விஷ்ணுப்பயலுக்கு என் மீது அப்படி என்ன கோபம் என்று, எனக்கு இன்று வரை புரியவில்லை. சின்னப்பையன்தான்.. ஜெயாவை விட ஏழு வயது இளையவன்தான்.. ஆனால் செய்கிற சேட்டைகள் பெரிய லெவலில் இருக்கும். அக்கா மீது மட்டும் ஸ்பெஷல் பாசம். எனக்கும் பாசமாக பஃபலோ என்று பட்டப் பெயர் வைத்திருக்கிறான். எனக்கெதிராக அக்காவுடன் ரகசிய திட்டம் தீட்டும்போது அந்தப் பெயரில்தான் என்னை அழைப்பான்.

என்னை வீட்டை விட்டு கிளப்பவேண்டும்.. அதுதான் இப்போது அக்காவுக்கும், தம்பிக்கும் உள்ள உலகமகா லட்சியம். இந்தமாதிரி சூழ்நிலையில்தான் நீங்கள் மேலே படித்த சம்பவம்.

அப்புறம் ஒரு இரண்டு நாட்கள் எந்த சுவாரசியமும் இல்லாமலே கழிந்தன. மூன்றாம் நாள்தான் அது நடந்தது. எண்ணெய் கீழே சிந்தியிருப்பதை கவனிக்காமல், காலை வைத்து வழுக்கி.. நான் மாடிப்படிகளில் இருந்து உருண்டேன். தலையில் பலத்த அடி. ஐந்து ஆறு தையல் போட வேண்டியதாயிற்று. ஆபீசுக்கு ஒரு வாரம் லீவு போட்டு விட்டு ரெஸ்ட் எடுத்தேன்.

அடிபட்ட இரண்டாம் நாள். மாலை ஐந்து மணி இருக்கும். நான் தலையில் ப்ளாஸ்டருடன், கட்டிலில் படுத்து கதைப்புத்தகம் படித்துக் கொண்டிருந்தேன். ஜெயா கதவை தள்ளிக்கொண்டு மெல்ல எட்டிப் பார்த்தாள்.

"வா ஜெயா...!!" என்றவாறு நான் எழுந்து சாய்ந்து அமர்ந்து கொண்டேன்.

ஜெயா தயங்கியபடி உள்ளே நுழைந்தாள். அவளுடைய முகம் சற்று வாடிப் போய் இருந்தது. என் முகத்தை நிமிர்ந்து பார்க்காமல், தரையையே பார்த்துக் கொண்டிருந்தாள். அவள் எதுவும் பேசாமல் அமைதியாயிருக்க,

"என்ன ஜெயா...? என்ன விஷயம்...?" என்றேன் நான் சாந்தமான குரலில்.

"நான்... நான்... உங்ககிட்ட... கொஞ்சம் பே..பேசணும்..." அவள் வார்த்தைகளை பிட்டு பிட்டாக துப்பினாள்.

"ம்ம்.. பேசு...!!"

"அ..அது... அது வந்து..." அவள் சொல்ல தயங்கினாள்.

"ம்ம்ம்.. சொல்லு..."

"அது... அதை எப்படி சொல்றதுன்னு தெரியலை...!!"

"அப்படி என்ன பெரிய விஷயம்...? எதுவா இருந்தாலும்.. தயங்காம சொல்லு ஜெயா..."

அவள் அப்புறமும் சில வினாடிகள் தயங்கினாள். பின்பு மெல்ல மெல்ல வார்த்தைகளை உதிர்த்தாள்.

"மாடிப்படில.. மாடிப்படில நான்தான் எண்ணெய்யை கொட்டி வச்சேன்.. உங்க மண்டை உடைஞ்சதுக்கு நான்தான் காரணம்.."

எனக்கு ஏற்கனவே ஒரு சந்தேகம் இருந்திருந்தது. அக்காவும் தம்பியும் இந்த வேலையை செய்திருப்பார்களோ என்று. அதனால் ஜெயா அந்த விஷயத்தை சொன்னபோது நான் பெரிதாக அதிர்ச்சியடையவில்லை. மெல்ல கட்டிலில் இருந்து இறங்கினேன். ஜெயாவை நெருங்கினேன். முகத்தை சாதரணமாகவே வைத்துக் கொண்டு கேட்டேன்.



"ஓஹோ...!! உன் வேலைதானா அது..? இங்கே பாரு...!! பாரு...!!! பாத்தியா..? மண்டை நல்லா உடைஞ்சிருக்கு.. இப்போ உனக்கு திருப்தியா..?"

நான் சொன்னதும் ஜெயாவின் அழகு முகம் பட்டென்று சுருங்கிப் போனது. கண்கள் கலங்கிவிட்டன. அவளது மூக்கு லேசாக விசும்பியது. உதடுகள் நடுநடுங்க, சொன்னாள்.

"சாரி அத்தான்... நீங்க சும்மா வழுக்கி விழுவீங்கன்னுதான் நெனச்சேன்.. இவ்வளவு பெரிய அடி படும்னு நான் நெனைக்கவே இல்லை... நான் ஆரம்பத்துலையே இந்த ஐடியா வேணாம் வேணாம்னு சொன்னேன்.. இந்த விஷ்ணுதான் கேக்கவே இல்லை.. இப்படிலாம் பண்ணினாதான் நீங்க வீட்டை காலி பண்ணிட்டு போவீங்கன்னு சொன்னான்..."

"ம்ம்ம்... அக்காவும் தம்பியும் கூட்டு சதி பண்ணி.. என் மண்டையை காலி பண்ணிட்டீங்க...!!"

"தெரியாம பண்ணிட்டேன் அத்தான்..!! ப்ளீஸ்...!! என்னை மன்னிச்சுடுங்க...!! ப்ளீஸ்...!! வேணும்னா அம்மாகிட்ட என்னை போட்டுக் கொடுத்துடுங்க.."

அவள் சொல்லிவிட்டு தன் கட்டை விரலை வாயில் வைத்துக் கொண்டாள். அந்த விரலின் நகத்தை கடித்தபடியே என்னை பரிதாபமாக பார்த்தாள். எனக்கு அவளுடைய வெகுளித்தனத்தை பார்த்து சிரிப்பு வந்தது. மண்டையையும் உடைத்துவிட்டு, இப்போது மனசு கேக்காமல் மன்னிப்பு கேட்க வந்திருக்கிறாள். சிரிப்பை அடக்கிக் கொண்டேன். நட்பான குரலில் சொன்னேன்.

"அதெல்லாம் வேணாம்.. நீ உன் ரூமுக்கு போ..!! நான் அத்தைட்ட சொல்லலை.. போதுமா...?"

"ம்ஹூம்..!! நான் பண்ணினது தப்பு.. அதுக்கு எனக்கு ஏதாவது தண்டனை கொடுங்க.. இல்லைன்னா எனக்கு கஷ்டமா இருக்கும்.."

"பச்ச்...!! ஜெயா... தண்டனை கொடுக்குற அளவுக்குலாம்.. நீ பெருசா தப்பு ஒன்னும் பண்ணலை.. நீ செஞ்சதை அத்தான் மறந்துட்டேன்.. போதுமா..? கெளம்பு.."

"இல்லை.. நீங்க பொய் சொல்றீங்க.. உங்களுக்கு என் மேல பயங்கர கோவம் இருக்கும்.. ப்ளீஸ் அத்தான்.. என்னை ஒரு அறையாவது அறைஞ்சுடுங்க.."

"அதெல்லாம் ஒரு கோவமும் இல்லை ஜெயா.. எனக்கு உன் மேல எப்பவுமே கோவம் வராது.."

"ம்ஹூம்... பொய்...!! ப்ளீஸ் அத்தான்.. என் கன்னத்துல பளார்னு ஒரு அறை விட்ருங்க.."

எனக்கு இப்போது அவளுடைய பிடிவாதத்தை பார்த்து கொஞ்சம் எரிச்சல் வந்தது. அந்த எரிச்சலை குரலில் சேர்த்துக்கொண்டு சொன்னேன்.

"பச்ச்...!! அதான் சொல்றேன்ல ஜெயா...? எனக்கு உன்மேல கோவம் வராது...!!"

அவள் நான் சொல்வதை கேட்பதாகவே இல்லை. எனது கையால் அறை வாங்கியே தீரவேண்டும் என்று குறியாக இருந்தாள். என்னுடைய வலது கையை பிடித்து, அவளாகவே தன் கன்னத்தில் அறைந்து கொள்ளப் போனாள்.

"ப்ளீஸ் அத்தான்..!! ப்ளீஸ்...!! அறைங்க அத்தான்...!! ப்ளீஸ்...!!!"

நான் மிக கஷ்டப்பட்டு என் கையை அவளிடம் இருந்து பறித்துக் கொண்டேன். "ஜெயா....!!!" என்று இரைந்தவாறு, பட்டென்று அவளது புஜத்தை பிடித்து, அவளை இழுத்து என் முன்னால், எனக்கு மிக நெருக்கமாக நிறுத்தினேன். அவள் அதிர்ந்து போனாள். தன் மூச்சை இழுத்து பிடித்துக் கொண்டாள். மிரட்சியாக என்னை பார்த்தாள்.

அவளுடைய மார்புகள் என் நெஞ்சில் பட்டு, லேசாக உரசிக் கொண்டிருந்தன. எனது முகத்துக்கும் அவளது முகத்துக்கும் ஒரு அரை இன்ச் இடைவெளிதான் இருந்திருக்கும். எனது சூடான மூச்சுக்காற்று அவளது பளிங்கு முகத்தில் பட்டு தெரித்தது. 

ஜெயா விழிகளை விரித்து, என் முகத்தை ஒரு பயப்பார்வை பார்த்தாள். நான் என் முகத்தை இறுக்கமாக வைத்துக் கொண்டு, அவளுடைய கண்களை கூர்மையாக பார்த்துகொண்டு, கடுமையான குரலில் சொன்னேன்.

"சொல்றேன்ல..? எனக்கு உன் மேல எப்பவுமே கோவம் வராது..!! புரிஞ்சதா...??"

அவ்வளவுதான்....!! ஜெயா பட்டென்று அமைதியானாள். என் கண்களையே இமைக்காமல் பார்த்தாள். என் கண்களில் அதை பார்த்தாள்... என் காதலை..!! என்னுடைய சலனமற்ற பார்வை ஒரு நொடியில் என் காதலை அவளுக்கு உணர்த்தியிருக்கும். அவளால் பேச முடியவில்லை. அவளுடைய செர்ரிப்பழ உதடுகள் மட்டும் படபடவென துடித்துக் கொண்டிருந்தன. ஒரு நான்கைந்து வினாடிகள்.. நான் அவளை அந்தமாதிரி என்னோடு பிடித்து வைத்திருந்தேன். பின்பு அவளுடைய புஜத்தை பற்றியிருந்த என் கையை விலக்கினேன்.

ஜெயா உடனே ஓரடி பின்னால் நகர்ந்து கொண்டாள். சற்று முன் இழுத்துப் பிடித்த மூச்சை.. இப்போது தாராளமாக விட்டாள். அவளுடைய மார்புகள் அழகாக ஏறி இறங்கின. கொஞ்ச நேரம் அப்படியே நின்று என் முகத்தையே பார்த்தாள். பின்பு தயங்கி தயங்கி கதவை நோக்கி மெல்ல நகர்ந்தாள். கதவை திறந்து வெளியேறும் முன், மீண்டும் ஒரு முறை என்னை திரும்பி பார்த்தாள்.

இப்போது நான் என் முக இறுக்கத்தை தளர்த்திக் கொண்டு, இதழ் விரித்து, அழகாக புன்னகைத்தேன். ஜெயாவுக்கு வெட்கம் பிடுங்கித் தின்றது. பட்டென்று முகத்தை திருப்பிக் கொண்டாள். புள்ளி மான் மாதிரி துள்ளி ஓடி, படபடவென்று படியிறங்கினாள்.

நான் என் அறையை விட்டு வெளியே வந்தேன். அவள் ஓடுவதையே கொஞ்ச நேரம் காதலாக பார்த்துக் கொண்டிருந்தேன். அவள் என் கண்ணில் இருந்து மறைந்ததும், முகத்தில் ஒரு புன்னகையுடன் பக்கவாட்டில் திரும்பினேன். அங்கே விஷ்ணு கைகளை மார்புக்கு குறுக்காக கட்டிக்கொண்டு, சுவற்றில் சாய்ந்தபடி என்னையே பார்த்துக் கொண்டிருந்தான். நான் பட்டென்று என் முகத்தில் இருந்த புன்னகையை உதறினேன். முகத்தில் ஒரு போலி கோபத்தை பூசிக்கொண்டு அவனிடம் கேட்டேன்.

"ஒய்...!! நீதான் இந்த மாதிரி டெரரான ஐடியாலாம் கொடுத்ததா..? உன்னல்லாம் குண்டர் சட்டத்துல புடிச்சு உள்ள போடனுண்டா..!! செய்றதையும் செஞ்சுட்டு முறைக்கிறதை பாரு..!!"

அவன் கைகளை கட்டியபடியே மெல்ல நடந்து, எனக்கு அருகில் வந்தான். அவனுடைய முகம் இறுக்கமாய் இருந்தது. என் முகத்தை நிமிர்ந்து பார்த்து சொன்னான்.

"நான் ஒன்னும் அக்கா மாதிரி சாரிலாம் கேக்க மாட்டேன்..!! இப்பவாவது உங்களுக்கு என்னை பத்தி தெரிஞ்சிருக்கும்னு நெனைக்கிறேன்.. இனிமேலும் நீங்க வீட்டை காலி பண்ணலைன்னா.. உங்களுக்கு இன்னும் என்னென்ன உடையப் போகுதோ..?"

"அடிங்ங்ங்ங்ங்....!!"

நான் குனிந்து அவனுடைய பட்டெக்ஸில் ஓங்கி ஒரு அறை வைக்க, அவனும் தன் அக்கா மாதிரியே துள்ளி குதித்து, படியிறங்கி ஓடிப் போனான்.

அப்புறம் வந்த இரண்டு வாரங்கள் சுகமாக சென்றன. ஜெயாவுக்கும் என் மீது லவ் மூட் ஸ்டார்ட் ஆகிவிட்டது என்று, அவள் அடிக்கடி வீசிய, ஓரக்கண் பார்வையிலேயே எனக்கு புரிந்து போனது. என்னைப் பார்த்ததுமே எங்கிருந்துதான் வருகிறது என்று தெரியாமலே ஒரு வெக்கம் அவளுக்கு வந்துவிடும். டிவியில் ரொமான்டிக்கான காதல் பாடல் வந்தால், மெல்ல தலையை என் பக்கமாக திருப்பி பார்ப்பாள். எல்லோரும் அமர்ந்து சாப்பிடும்போது, கேசரியை அள்ளி என் தட்டில் வைத்து, 'நானே பண்ணினது' என்று எனக்கு மட்டும் கேக்குமாறு முணுமுணுப்பாள். அடிக்கடி மாடிப்பக்கம் வந்து 'கீழ காத்தே வரலை.. ஒரே புழுக்கமா இருக்கு...' அன்று அசடு வழிவாள்.

ஒரு முறை என்னை பஃபலோ என்று சொன்ன தம்பியை தலையில் குட்டினாள். 'அப்படிலாம் சொல்லக் கூடாது.. அத்தான்னுதான் சொல்லணும்..' என்று விட்டு ரகசியமாக என்னை பார்த்தாள். நானும் அவளுடைய கண்களைப் பார்த்து காதலாக புன்னகைத்தேன். விஷ்ணு தலையை தடவிக்கொண்டு என்னையும், தன் அக்காவையும் மாறி மாறி முறைத்தான். 'வர வர.. நீங்க ரெண்டு பெரும் போற போக்கே சரியில்லை...' என்று கடுப்புடன் முணுமுணுத்தான்.

நானும், ஜெயாவும் அந்த மாதிரி கண்களினாலேயே காதல் மொழி பேசிக்கொண்டாலும், வெளிப்படையாக எங்கள் காதலை சொல்லவில்லை. அல்லது அந்த மாதிரி ஒரு சந்தர்ப்பம் அமையவில்லை. இரண்டாம் வார இறுதியில் அந்த மாதிரி ஒரு சந்தர்ப்பம் வந்தது.

அன்று எனக்கு விடுமுறை. மதியம் பதினோரு மணி இருக்கும். நான் மாடியில் இருந்து இறங்கி ஹாலுக்கு வந்தேன். ஹாலில் அத்தையும், ஜெயாவும் ஆளுக்கொரு சேரில் அமர்ந்திருந்தார்கள். அத்தை டிவி பார்த்துக் கொண்டிருந்தாள். ஜெயா எதிரே இருந்த டேபிள் மீது, ஒரு பிளேட்டில் காய்கறிகளை வைத்து, நறுக்கிக் கொண்டிருந்தாள்.

என்னை பார்த்ததும் ஜெயா அவசரமாக எழுந்து கொண்டாள். 'வாங்கத்தான்...' என்றவாறு சேரை எனக்கு விட்டுக் கொடுத்து, பிளேட்டை எடுத்துக் கொண்டு தரையில் போய் அமர்ந்து கொண்டாள். காய்கறி நறுக்குவதை தொடர்ந்தாள். நான் அவ்வப்போது ஓரக்கண்ணால் என் காதல் ராணியை ரசித்துக்கொண்டு, டிவி பார்த்தேன். கொஞ்ச நேரத்தில் அத்தைதான் திடீரென்று ஆரம்பித்தாள்.


"ஏம்ப்பா அசோக்...!!"

"ம்ம்.. என்னத்தை..?"

"உன்கிட்ட ரொம்ப நாளா ஒன்னு கேக்கனும்னு நெனச்சுக்கிட்டு இருந்தேன்.."

"கேளுங்கத்தை.."

"நல்லபடியா இஞ்சினியரிங் முடிச்ச.. நல்ல வேலைல ஜாயின் பண்ணுன.. இப்போ கை நெறைய சம்பாதிக்கிற.. காலாகாலத்துல அப்படியே ஒரு கல்யாணத்தையும் பண்ணிக்க வேண்டியதுதான..?"

அத்தை அப்படி கேட்டதும் நான் ஓரக்கண்ணால் ஜெயாவைத்தான் பார்த்தேன். அவள் இப்போது காய்கறி நறுக்குவதை பட்டென்று நிறுத்தியிருந்தாள். அவளும் ஓரக்கண்ணால் என்னையே பார்த்தாள். நான் என்ன பதில் சொல்லப் போகிறேன் என்பதை அறிவதற்கு, அவளுடைய மனம் துடியாய் துடிக்கும் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடிந்தது. நான் ஜெயாவை சீண்டிப்பார்க்க நினைத்தேன். அத்தையிடம் திரும்பி சொன்னேன்.

"கல்யாணமா..? கல்யாணத்துக்கு இப்போ என்னத்தை அவசரம்..? என்னமோ ரெடியா பொண்ணு இருக்குற மாதிரி சொல்றீங்க..?"

"ஏன்..? உனக்கென்ன பொண்ணா கெடைக்காம போயிடும்..? நீ மட்டும் சரின்னு சொல்லு.. நான், நீன்னு பொண்ணுக போட்டி போட்டுக்கிட்டு க்யூவில வந்து நிக்கும்..."

"நம்ம ஊர் பொண்ணுகளா...? போங்கத்தை..!! அதுக்கு நான் கல்யாணமே பண்ணிக்காம இருந்துடுவேன்...!!"

"என்னப்பா சொல்ற நீ...?" அத்தை அதிசயமாய் பார்த்தாள்.

"எனக்கு நம்ம ஊர் பொண்ணுகளையே புடிக்கலை அத்தை.. எப்பப்பாரு... மஞ்சளை பூசிக்கிட்டு.. புடவையை கட்டிக்கிட்டு.. நான் கல்யாணம் பண்ணிக்கிட்டா நம்ம ஊர் பொண்ணுகளை கல்யாணம் பண்ணிக்கவே மாட்டேன் அத்தை.."

"அப்புறம்..?"

"எங்க கம்பெனில இருந்து அடுத்த வருஷம் என்னை யூ.எஸ் அனுப்புவாங்க.. அங்கேயே ஒரு நல்ல இங்க்லீஷ்க்காரியா பாத்து மேரேஜ் பண்ணிட்டு.. அப்படியே அங்கேயே செட்டில் ஆகப் போறேன்..."

"ம்ம்ம்... நல்லாருக்குப்பா உன் ஆசை...!! இதை மட்டும் போய் உன் அம்மாக்காரிட்ட சொல்லு... அவ என்ன ஆட்டம் ஆடுறான்னு பாரு..."

அத்தை சொல்லிக்கொண்டு இருக்கும்போதே, ஜெயா கத்தியை பட்டென்று தட்டில் எறிந்து விட்டு எழுந்தாள். திரும்பி விறுவிறுவென நடந்து மாடிப்படியை நோக்கி சென்றாள். அத்தை அவள் முதுகைப் பார்த்து கத்தினாள்.

"ஏய்...!! எங்கடி ஓடுற...? மிச்சத்தையும் கட் பண்ணிக் கொடுத்துட்டு போடி...!!"

"போ...!! நீயே கட் பண்ணிக்கோ...!! உன் காய்கறியை.. !!" என்று ஜெயா படிகளில் ஏறிக்கொண்டே கோபமான குரலில் சொன்னாள்.

"என்னது..? என் காய்கறியா...? மதியம் சாப்பாட்டுக்கு நாக்கை தொங்கப் போட்டுட்டு வருவில்ல..? அப்போ வச்சுக்குறேன்.."

"எனக்கு சாப்பாடும் வேணாம்..!! ஒரு மண்ணும் வேணாம்...!! நீயே எல்லாத்தையும் கொட்டிக்கோ...!!"

அவள் ஆத்திரத்தை தன் அம்மா மீது கொட்டிவிட்டு செல்ல, அத்தை எதுவும் புரியாமல் தன் மகளையே வெறுப்புடன் பார்த்தாள்.

"திடீர்னு என்னாச்சு இவளுக்கு...? லூசு மாதிரி கத்திட்டு போறா..?"

அத்தைக்கு புரியவில்லை. எனக்கு புரிந்திருந்தது. 'நான் ஏற்கனவே ஒரு பொண்ணை பாத்து வச்சிருக்கேன் அத்தை..' என்று தன்னை ஓரக்கண்ணால் பார்த்தபடி சொல்வேன் என்று ஜெயா எதிர்பார்த்திருப்பாள். நான் மாற்றி சொல்லவும், அவளால் அதை தாங்க முடியவில்லை. துக்கத்தை அடக்க முடியாமல் எழுந்து ஓடுகிறாள். மாடிக்கு போய் அழுவாள் என்று எனக்கு தோன்றியது.

மகள் விட்டு சென்ற காய்கறி நறுக்கும் பணியை இப்போது அத்தை தொடர்ந்தாள். நான் மேலும் சிறிது நேரம் அங்கேயே இருந்துவிட்டு, பின்பு மெல்ல எழுந்தேன்.

"சரி அத்தை.. நானும் என் ரூமுக்கு போறேன்..."

சொல்லிவிட்டு நான் படியேறினேன். என் ரூமுக்கு போகாமல் மொட்டை மாடிக்கு சென்றேன். ஜெயாவை தேடினேன். அவள் ஒரு மூலையில் ஓரமாக நின்று வானத்தை வெறித்துக் கொண்டிருந்தாள். அவளை நெருங்கினேன். 'ம்ம்க்கும்..' என்று தொண்டையை செருமினேன்.

ஜெயா பட்டென்று திரும்பினாள். கண்களில் வழிந்த நீரை அவசர அவசரமாக துடைத்துக் கொண்டாள். அங்கிருந்து சென்று விட எத்தனித்தாள். நான் என் கையை அவளுக்கு குறுக்காக நீட்டி, அவளை தடுத்தேன்.

"வழியை விடுங்க அத்தான்.. நான் போகணும்...!!" என்றாள் கோபமாக.

"இரு... நான் உன்கிட்ட கொஞ்சம் பேசணும்.."

"என்கிட்டயா..? எங்கிட்ட என்ன பேசப் போறீங்க..? நாங்க பேசுனாலாம் உங்களுக்கு புடிக்குமா..? ஏதாவது வெள்ளைக்காரி 'தஸ்ஸு புஸ்ஸுன்னு' இங்க்லீஷ்ல பேசுனா உங்களுக்கு புடிக்கும்..."

அவள் படபடவென பொரிந்து தள்ளினாள். அவளுடைய முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்து சிதறியது. கோபத்தில் வேகமாய் மூச்சு விட, அவளது மார்புப்பந்துகள் ஏறி ஏறி இறங்கின. எனக்கு அவளை பார்க்க சிரிப்பு வந்தது.

"ஓஹோ...!! அத்தைட்ட நான் பேசுனதுக்குத்தான் இவ்வளவு கோவமா..? நான் அமெரிக்கா பொண்ணை கல்யாணம் பண்ணிக்கப் போறேன்னு சொன்னது உனக்கு புடிக்கலை...!! கோவம்..!!"

"கோவமா..? யாருக்கு கோவம்..? எனக்குலாம் ஒன்னும் கோவம் இல்லை..!! நீங்க அமெரிக்காக்காரியை கல்யாணம் பண்ணிக்குங்க.. இல்லை ஆப்ரிக்காக்காரியை கல்யாணம் பண்ணிக்குங்க.. எனக்கு என்ன வந்தது..? எனக்குலாம் கோவம் இல்லை.." சொல்லும்போதே அவள் முகத்தில் அப்படி ஒரு கோபம். 

"அப்போ நான் யூ.எஸ்க்கார பொண்ணை கல்யாணம் பண்ணிக்கலாம்.. உனக்கு அப்ஜெக்ஷன் இல்லை...?" நான் புன்னகையுடன் கேட்டேன்.



"இல்லை.. நீங்க யார வேணா கட்டிக்குங்க.. எதுக்கு எங்கிட்ட வந்து கேக்குறீங்க..?" என்று சூடாகவே சொன்னாள். நான் இப்போது கொஞ்சம் அலட்சியமான குரலில் சொன்னேன். 

"கட்டிக்கலாம்.. ஆனா என் மாமா பொண்ணு ஜெயான்னு ஒருத்தி இருக்கா.. அவளை லவ் பண்ணி தொலைஞ்சிட்டேன்.. அவ எந்த அப்ஜெக்ஷனும் இல்லைன்னு சொன்னா யூ.எஸ் பொண்ணை கட்டிக்கலாம்னு இருக்கேன்.."

சொல்லிவிட்டு நான் ஜெயாவின் முகத்தை பார்த்தேன். அவள் முகத்தில் இப்போது ஆச்சர்யம், ஆனந்தம், பரவசம், நன்றி, காதல் என்று பலவகை உணர்வுகள் கலந்துகட்டி அடித்தது. விழிகளை அகலமாக திறந்து வைத்து என் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள். அவளுடைய உதடுகள் படபடவென துடித்தன. நான் என் முகத்தை அவளுடைய முகத்துக்கு அருகில் கொண்டு சென்றேன். மெல்லிய குரலில் கேட்டேன்.



No comments:

Post a Comment