Thursday, January 28, 2016

தீர்க்க சுமங்கலி மான்சி - அத்தியாயம் - 13

பஞ்சாப் அமர்தசரஸ் பொற்கோவிலின் அழகை ஜொலிக்கும் இரவு விளக்கின் அலங்காரத்தில் பார்த்துக்கொண்டிருந்தனர் சண்முகமும் சத்யனும்,,, அவர்களுக்கு சற்று தள்ளி தமிழரசியும் அவள் கணவனும் கோயிலின் அழகைக் கூட ரசிக்காமல் தங்களுக்குள் எதையோ பேசிச் சிரித்தபடி இருந்தனர்....

தமிழரசிக்கு திருமணம் ஆகி பத்து நாட்கள் மறுவீடு விருந்து அது இதுவென்று முடிந்துவிட..... மிலிட்ரியில் வேலை செய்த மாப்பிள்ளைக்கு லீவும் முடிந்தது.... மாப்பிள்ளை வேலை செய்யும் பஞ்சாப்பில் ஏற்கனவே மிலிட்ரி குவாட்ரஸில் வீடு கொடுத்திருந்ததால் தமிழரசியையும் அழைத்துக்கொண்டு கிளம்பினான்...



புதிதாக குடித்தனம் செல்லும் பெண்ணின் தாய்வீடு சார்பாக இருவர் வந்து புதுக்குடித்தனம் வைத்துவிட்டு போகுமாறு சம்மந்தி வீட்டில் அழைத்தார்கள்.... தெரியாத ஊர், புரியாத பாஷை, புது இடத்தில் தமிழரசி மிரண்டு விடாமல் இருக்க உடன் யாராவது போவதுதான் முறை என்று எல்லோரும் சொல்லிவிட அன்பரசியும் சண்முகமும் போவது என்ற முடிவு அன்பரசி கர்ப்பிணி என்பதால் உடனே மாற்றப்பட்டு சத்யனும் சண்முகமும் தம்பதிகளுடன் கிளம்பி பஞ்சாப் வந்தனர்....

முடிந்த வரை ரயிலில் கொண்டு வந்த பொருட்களை எல்லாம் புதிய வீட்டில் வைத்துவிட்டு ... இன்னும் வாங்கவேண்டிய சிலவற்றை அங்கேயே வாங்கி கொடுத்தான் சத்யன்.... ஒருவழியாக குடும்பத்தை செட்டில் செய்துவிட்டு பஞ்சாப்பை சுற்றிப்பார்க்க கிளம்பி இதோ இன்றோடு இருபது நாட்கள் ஆகிவிட்டது..... ஆனால் சுற்றிப் பார்க்க ஏராளமான இடங்கள் இருந்தபடியால் இருபது நாட்களும் இருபது நிமிடம் போல் ஓடிவிட்டிருந்தது...

பார்க்க பார்க்க அலுக்காத பஞ்சாப் மாகாணம்.... நிறைய பழைமையும் கொஞ்சம் புதுமையும் கலந்த கட்டிடங்கள்..... சுட்ட சுண்ணாம்பால் கட்டப்பட்ட கிராமத்து வீடுகள்.... கிராமத்துப் பெண்களின் கை வளையல்களும்... காதணிகளையும் கண்டு இவ்வளவு பொருட்களை எப்படி சுமக்கிறார்கள் என்று வியந்து போனான் சத்யன்....

அனலில் வாட்டிய சாப்பாத்தியும் பருப்பினால் செய்யப்பட்ட உணவுமே மூன்று வேலையும் கூட சாப்பிட்டார்கள் ... சத்யனுக்கும் சண்முகத்துக்கும் எப்படா ஊர் போய் சேருவோம் என்றிருந்தது.... இன்னும் ஆறுநாட்கள் கழித்து ரயிலில் டிக்கெட் முன்பதிவு செய்து கொடுத்திருந்தான் தமிழரசியின் கணவன்


சத்யனால் பொற்கோயிலின் அழகை சிறிது நேரம் தான் ரசிக்க முடிந்தது ,, அதன்பின் வழக்கம் போல மான்சியின் ஞாபகங்கள் வந்து நெஞ்சுக்குள் குடைய சத்யன் பார்வை வேதனையுடன் நிலையின்றி எதையோ வெறித்தது ....

யார் பேச்சையும் கேட்காமல் அவளைப் போய் பார்த்துவிட்டே வந்திருக்கலாமோ? என்று மனம் அதே பழைய கேள்வியை கேட்க ,, பதில் சொல்லமுடியாமல் வேதனையுடன் கண்மூடினான்......

அன்று தமிழரசியின் திருமணம் முடிந்து மற்ற சம்பிரதாயங்கள் முடிந்து மணமக்களோடு வீடு வந்து சேர்ந்த போது மாலை ஆறுமணியாகிவிட்டது,, மணமக்களை வீட்டுக்குள் விட்டுவிட்டு சண்முகமும் சத்யனும் டீ குடிபதற்கென எட்டரை மணி வாக்கில் ரோட்டுக்கு வந்தபோதுதான் டீக்கடையில் பேசிக்கொண்டதை வைத்து மான்சியின் கணவன் இறந்து போன விஷயமே சத்யனுக்கு தெரியவந்தது....

அதிர்ச்சியில் நெஞ்சு குலுங்கிப் போய் நின்றிருந்தவனை சண்முகம் தான் புரிந்துகொண்டு ஓரமாக இருந்த வாராபதிக்கு தள்ளிக்கொண்டு வந்தான்... வராபதியின் மேல் அமர்ந்து முகத்தை மூடிக்கொண்டு குமுறியவனை எப்படி தேற்றுவது என்று புரியாமல் தவிப்புடன் சத்யன் அருகில் அமர்ந்தான் சண்முகம்...

" அவ மட்டும் என்ன பாவம் செஞ்சான்னு தெரியலையே? அவ வாழ்க்கை மட்டும் ஏன் இப்புடி சீரழியுது? எல்லாம் என்னாலதான்" என்று நெற்றியில் அறைந்து கொண்டு அழுத சத்யனின் தோளில் ஆறுதலாக தட்டிய சண்முகம்... " நீ என்ன மச்சான் செய்த? எல்லாம் அவ விதி" என்றான்
" இல்ல மாப்ள விதியில்ல,,, எல்லாத்துக்கும் நான்தான் காரணம்.... அன்னைக்கு நைட்டு அவ என்னைய தேடி வந்தப்பவே கூட்டிப் போய் ஊர் கோயில்ல வச்சு தாலிய கட்டி என் வீட்டுக்கு கூட்டிவந்திருக்கனும்..... அவளும் நானும் சேர்ந்தே அன்புக்கும் தமிழுக்கும் மாப்பிள்ளை தேடி கல்யாணம் பண்ணிருக்கனும்.... அம்மாக்கு செய்த சத்தியம் ஒரு பக்கம்... என்னோட கோழைத்தனம் மறுபக்கம்னு என் கையை கட்டிப் போட்டிருச்சு... இப்ப அவ வாழ்க்கையும் இப்புடி சீரழிஞ்சு போச்சு.... அவ நெனைப்புல நானும் ஒவ்வொரு நாளும் செத்துக்கிட்டு இருக்கேன்... பாவம் மாப்ள அவ... இனிமே என்ன செய்வாளோ தெரியலை? " மனதில் இருந்தவற்றை கொட்டிவிட்டு சத்யன் வேதனையுடன் கண்ணீர் விட்டான்....


இத்தனை நாட்களில் சண்முகத்துக்கு எல்லாமே தெரியும் ,, அன்பரசி ஓரளவுக்கு சொல்லியிருந்தாலும்.... சத்யன் சண்முகத்தின் மீது கொண்ட நட்பால் மிச்சத்தை சொல்லியிருந்தான் ,, சத்யனின் மனதில் மான்சி எவ்வளவும் ஆழமாக வேரோடிப் போயிருக்கிறாள் என்று தெரியும்....

" சத்யா அழுது பிரயோசனமில்ல ... அவ புருஷனுக்கு விதி அவ்வளவுதான்.... மான்சி இப்புடித்தான் வாழனும்னு ஆண்டவன் எழுதிட்டான்... அதை நாமளால மாத்த முடியுமா? தங்கச்சிக்கு கல்யாணத்தைப் பண்ணிட்டு நீ இப்புடி உட்காந்து அழுதா பார்க்குறவங்க என்ன நினைப்பாங்க? தயவுசெஞ்சு உள்ளுக்குள்ளயே எல்லாத்தையும் போட்டு புதைச்சுட்டு எழுந்து வா மச்சான்...ஆகவேண்டியத பார்போம்" என்று ஆறுதல் கூறி சத்யனை அழைத்து சென்றான்...

மறுநாள் காலை மான்சியைப் பார்த்து ஆறுதலுக்காகவேனும் துக்கம் விசாரித்து வரலாம் என்று சத்யன் கிளம்பிய போது ... பூமாத்தாளுக்கு மான்சியின் கணவன் இறந்த விஷயம் தெரியும் என்பதால்... மகனின் முகம் பார்த்து ஓரளவுக்கு விஷயத்தை யூகித்திருந்தாள்.... கிளம்பிய மகனை தடுத்து " நீ இப்ப எங்கப் போறனு தெரியும்டா மவனை... ஆனா கல்யாணத்துக்குப் போட்ட பந்தல் கூட பிரிக்கலை அதுக்குள்ள எவ வீட்டுக்கு எலவு விசாரிக்கப் போறியே? கல்யாணம் ஆன என் மக வாழ்க்கை நல்லாருக்கனுமா? இல்லை நாசமாப் போகனுமா? நீயே முடிவு பண்ணிக்க" என்று கத்தினாள்...

அதற்குள் சத்யனின் சித்தப்பா வந்து " டேய் சத்யா ஒறவு முறைல எலவு விழுந்தா கூட கல்யாண வீட்டுலருந்து போய் விசாரிக்க கூடாதுடா... மூனு மாசம் ஆனதும் தான் போய் கேட்கனும்" என்று தடுத்தனர்...

இரவு போல சத்யனை வெளியே தள்ளிக்கொண்டு வந்து கழனிக்கு கிளம்பினான் சண்முகம் .... வருப்பில் போய் அமர்ந்தவுடன் " மச்சான் உன் மனசு எனக்குப் புரியுது... ஆனா அந்தப்புள்ள இப்ப இருக்குறது அதோட மாமியார் வீட்டுல... அங்கபோய் நீ என்னன்னு கேட்ப? அதுவும் கிராமம் தான் மச்சான்... அந்த பொண்ணுக்கு வீன்பழி வர்ற மாதிரி நாமளே நடந்துக்க கூடாது.... அதுமட்டுமில்ல.. இப்ப அந்தபுள்ள இருக்குற நிலைமையில நீ போய் துக்கம் கேட்டா ..... இவன் முன்னாடி நம்மா இந்த கதில நிக்கிறமோனு அந்த பொண்ணுக்கு வேதனை தான் அதிகமாகும் .... அதைவிட நீ போய் விசாரிக்காம இருக்குறது தான் நல்லது மச்சான்" என்று தெளிவாக சத்யனுக்கு எடுத்துரைத்தான்....


சண்முகம் சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை என்பது சத்யனின் அறிவுக்குப் புரிந்தது... ஆனால் தான் நேசிப்பவள் துக்கத்தில் இருக்கும்போது அவளுக்கு ஆறுதல் கூட சொல்லமுடியாத சத்யனின் மனது கிடந்து துடியாய் துடித்தது.....

சத்யன் மவுனமாக கலங்கிய கண்களை துடைத்துக் கொண்டு அமர்ந்திருந்தான்.... அப்போது பக்கத்து கழனிக்காரர் வந்து நேற்று மான்சியின் கணவனின் இறுதி சடங்கில் கலந்து கொண்டதையும் ... மான்சியின் கதறல் கண்டு ஊரே அழுததைப் பற்றியும் விரிவாக அவர்கள் இருவரிடமும் சொல்ல... தன் கணவனை இவ்வளவு நேசித்தாளா மான்சி? இந்த ஒரு வருடத்தில் என் நினைவு ஒரு துளிகூட அவளை பாதிக்கவில்லையா? என்றுதான் எண்ணத் தோன்றியது சத்யனால்

பக்கத்து கழனிக்காரர் சற்றுநேரம் பேசிக்கொண்டிருந்து விட்டு போய் விட.... " ஏன் மச்சான் ... இவரு சொல்றதைப் பார்த்தா அந்த பொண்ணு தன் புருஷன் கூட நல்லாத்தான் வாழ்ந்திருக்கும் போலருக்கு,, நீதான் அவ நெனப்புல இங்க செத்துகிட்டு இருக்க... ஆனா அவ உன்னை மறந்து வருஷக்கணக்கா ஆகிடுச்சுனு நினைக்கிறேன்" என்று சண்முகம் சற்று சலிப்புடன் சொல்ல ...

சத்யன் அவனுக்கு பதிலேதும் சொல்லாமல் தலை கவிழ்ந்தான்... அவனுக்கும் இப்போது தானே தெரிந்தது மான்சி தன் கணவனை இவ்வளவு நேசித்தாள் என்பது... அப்படினா அன்னைக்கு ராத்திரி என்னை கல்யாணம் பண்ணிக்கனு கேட்டு நான் மறுத்தவுடனேயே தன் மனசை மாத்திக் கிட்டாளா? அதெப்படி முடியும்? என் மனசு இன்று வரை மாறவே இல்லையே? சத்யனுக்கு யோசனையில் மூளை குழம்பியது....


சண்முகம் அவன் மனதை படித்தவன் போல் " பொண்ணுங்களால எப்புடி நிமிஷத்துல மனசை மாத்திக்க முடியுதுனு நெனைக்கிறயா மச்சான்? அதான் கணவனே கண்கண்ட தெய்வம் பாலிஸி,, அவங்கல்லாம் அப்படி இருக்குறதால தான் ஆண்கள் தலை நிமிர்ந்து நடமாட முடியுது... நெஞ்சுல ஒருத்தனையும் நிஜத்துல ஒருத்தனையும் நினைச்சு வாழுறது கிட்டத்தட்ட வேசித்தனம் மாதிரி மச்சான்,, நெனைச்சவன் கிடைக்கலைனா கிடைச்சவனை நெனைக்குறது தான் நம்ம தமிழர் பண்பாடு.... நல்லாருக்கும் போதே தாலி கட்டின புருஷனுக்கு துரோகம் செய்யுற இந்த காலத்துல உசுரா நேசிச்ச நீ வேணாம்னு சொன்னதும் எப்படிப்பட்டவனா இருந்தாலும் என் புருஷன் தான் உசத்தினு அவனுக்காக வாழ்ந்து அறுத்த மான்சி தான்யா நெசத்துல பத்தினி... ரொம்ப ஒசத்தி மச்சான் உன் மான்சி....ஆனா இனிமேலும் அவளை நீ நினைச்சு வாழுறது தப்புனு தான் சொல்வேன்... ஏன்னா இப்படிப்பட்ட பொண்ணு புருஷன் செத்தப் பிறகும் கூட அவன் நெனப்புல வாழனும்னு தான் முடிவு பண்ணுவா.... நீ அந்த முடிவை உடைக்கனும்னு நினைச்சா நீதான் உடைஞ்சு போவ மச்சான்" சண்முகம் மிகத் தெளிவாகப் பேசினான் ,,




அவன் மான்சியைப் பற்றி பெருமையாகவும் உயர்வாகவும் சொன்னது சத்யனுக்கு சந்தோஷமாக இருந்தாலும் .... மான்சியின் சகாப்த்தத்தில் சத்யனின் அத்யாயம் இருக்காது என்பது போல் சண்முகம் சொன்னது வேதனையாகத்தான் இருந்தது ... என்றாவது ஒருநாள் என் காதல் அவள் மனதை மாற்றாமலா போய்விடும்? அந்த நாளுக்காக காத்திருப்பின் மரணம் வந்து எனை மடியேந்தும் வரை... உறுதி உரமாக மாற காதல் கனலாக எரிந்தது சத்யனுக்குள்.....

அப்போதைக்கு மான்சி சம்மந்தப்பட்ட சம்பவங்களை மறக்க வைப்பது போல் மறு வீடு விருந்தெல்லாம் முடிந்து தமிழரசியை பஞ்சாப்பில் தனிக்குடித்தனம் வைக்கும் வேலை வந்தது.... மான்சியின் துக்கத்தை தனது துக்கமாக கருதி வேதனையுடன் புறப்பட்டு வந்தான் சத்யன் ...

பாரம்பரியம் மிக்க பஞ்சாப்பின் இயற்கை காட்சிகள் கூட ஆழப்பதியாமல் போனது சத்யனுக்கு..... இன்றும் அப்படித்தான் அசிரத்தையாக வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்தான் சத்யன்


அப்போது சண்முகத்தின் மொபைல் போன் ஒலிக்க... எடுத்து பேசிய சண்முகம் சத்யன் பக்கம் திரும்பி " உன் தங்கச்சி தான் மச்சான்" என்றான் சிரித்தபடி... சத்யனும் புன்னகைத்து ம் பேசு என்பது போல் தலையசைத்துவிட்டு நாகரீகத்துடன் சற்றுத் தள்ளிப் போய் நின்று மீண்டும் மனதில் பதியாத காட்சிகளை வேடிக்கைப் பார்த்தான்

மனைவியுடன் பேசிக்கொண்டிருந்த சண்முகம் திடீரென்று கோபமாக " அந்தத் ***** மவன சும்மாவா விட்டாங்க உன் ஊர் ஆளுங்க... நானாயிருந்தா ஆறு கூறா அந்த நாதாரிப் பயலை வகுந்திருப்பேன் ... அவ அண்ணன் அந்த பொட்டைப் பயலுக்கு கூடவா ரோஷம் வரலை?" என்று கத்தியதும் சத்யன் பயந்து போய் வேகமாக ஓடி வந்தான்...

சண்முகத்தின் தோள் தொட்டு " என்ன மாப்ள பிரச்சனை? வீட்டுல எதுவும் தகராறா? யாருக்கு என்னாச்சு?"என்று பதட்டமாக கேட்க...

கோபத்தில் கத்திவிட்டதை அப்போதுதான் உணர்ந்த சண்முகம் " அன்பு நான் அப்புறமா பேசுறேன்" என்று இணைப்பை துண்டித்து விட்டு சத்யனிடம் திரும்பி " யாருக்கும் ஒன்னுமில்லை மச்சான்... இது வேறப் பிரச்சனை" என்று சமாளித்தான்.....


இது சமாளிப்பு என்று புரிய " இல்ல எதையோ மறைக்கிறீங்க மாப்ள... உங்களுக்கு அவ்வளவு சீக்கிரமா கோபம் வராதே.... சொல்லுங்க யாருக்கு என்னாச்சு?" சத்யன் வற்புற்த்தி கேட்டதும்..... சங்கடமாய் அவனைப் பார்த்தான் சண்முகம்... சத்யனுக்குள் ஏதோவொரு மின்னலடிக்க " மான்சிக்கு தான மாப்ள? மான்சிக்கு என்னாச்சு?" என கேட்க....

இனி மறைக்க முடியாது என புரிய " மான்சிக்குதான் மாப்ள... அவ மாமனார் அந்த கேப்மாரிப் பய மான்சிகிட்ட சில்மிஷம் பண்ணிருக்கான் ... இந்த பொண்ணு எதுத்து கேட்டதும் நைட்டு பூராவும் ரூமுக்குள்ள போட்டு அடைச்சு வச்சிருக்கான் போல... காலையில தப்பிச்சு டவுன் மகளிர் காவல்ல போய் புகார் குடுத்திருக்கு மான்சி... அவளுகளும் விசாரிக்கிறேன்னு சொல்லிட்டு அந்த கிழட்டு நாய கூட்டி வந்து பணத்தை வாங்கிகிட்டு விட்டுட்டாங்களாம்... பணம் வாங்குனது மட்டுமில்ல பழியை மான்சி மேலயே திருப்பிருக்காளுங்க" என சொல்லிவிட்டு சண்முகம் தயங்க.....

அடைத்த நெஞ்சை பெருவிரலால் அழுத்தியபடி " என்ன பழி போட்டாங்க?" என்று சிறுத்துபோன குரலில் கேட்டான் சத்யன்....

" அது..... சொத்துக்கு ஆசைப்பட்டு மான்சிதான் அதோட மாமனாரை கூப்பிட்டுச்சுனு கேஸையே திருப்பிருக்காங்க... அவ அண்ணன் அண்ணி ரெண்டு பேருமே இதுக்கு உடந்தை போலருக்கு.... கடைசில கண்ணீரோட கைக்குழந்தையை தூக்கிகிட்டு அம்மா அப்பாக் கூட வந்துருச்சாம் மான்சி" என்று அன்பரசி கூறிய தகவல் எல்லாவற்றையும் கூறி முடித்தான் சண்முகம்....

சத்யனின் உலகமே இருண்டு போனது.... தேவதையாக தன் மனதில் வாழும் மான்சிக்கா வேசிப் பட்டம்? சத்யனின் உயிரே ஒடுங்கிப் போனது போல் " அய்யோ மான்சி உனக்கா இந்த கதி?" என்றபடி தலையில் அடித்துக்கொண்டு தரையில் சரிந்தான் சத்யன்


" இன்னும் என்ன செய்ய ?


" என்னோடு உன்னை இருக்கச் செய்ய !


" கண்ணே என் கண்ணுக்குள் உன்னை சிறை வைத்து....


" இமைக் கதவை பூட்டி வைக்கட்டுமா?


" மீண்டும் மீண்டும் உயிர்த்தெழுகிறேன் !


" உன்னை அடைய வேண்டும் என்பதற்காகவே !


" நான் அலை அல்ல அன்பே,, கடல்!!




No comments:

Post a Comment