Tuesday, December 1, 2015

மான்சிக்காக - அத்தியாயம் - 20

சற்றுநேரத்தில் கெட்டிமேளம் முழங்க... பெரியவர்கள் ஆசியுடன் தேவன் செல்வியின் கழுத்தில் மாங்கல்யம் சூட்டினான்...கிட்டத்தட்ட ஒன்றரை வருடங்களாக காதல் பறவையாக சுற்றித்திரிந்த இருவரும் குடும்பம் எனும் பொன் கூட்டில் அடைக்கப் பட்டனர்

மான்சி அருகில் அழைத்துச்சென்று அண்ணனின் திருமணத்தை காட்டிவிட்டு... தர்மன் மீனாவிடம் சொல்லிவிட்டு மனைவியை அழைத்துக்கொண்டு காரில் கிளம்பினான் சத்யன்...

வீட்டைத் திறந்து மான்சியை உள்ளே அழைத்துச்சென்றான்.. தங்கள் அறைக்குப் போனதும் பாத்ரூமுக்கு சென்று ஹீட்டரை போட்டுவிட்டு வந்தான்...



“ எல்லாத்தையும் கழட்டிடு மாமா” என்று கைகளை விரித்து நின்றவளை சிரிப்புடன் பார்த்தபடி ஒவ்வொரு நகையாக கழட்டி அதற்கான பெட்டியில் வைத்துவிட்டு ... பட்டுப்புடவை ரவிக்கையையும் கலைந்து விட்டு பாவாடை முடிச்சை அவிழ்த்து அவள் மார்பில் முடி போட்டவன்... அப்படி தூக்கிச்சென்று பாத்ரூமில் இறக்கி விட்டு.. இதமாக வெண்ணீரை கலந்து ... மான்சியின் இடுப்பில் ஊற்றினான்... முதுகை நீவியபடி அவளை குளிக்க வைத்தான்.. பிறகு பாவாடையை கழட்டி விட்டு டவலால் உடலை துடைத்து அதையே அவள் உடலில் சுற்றி வெளியே அழைத்து வந்தான்...

மான்சியின் வயிறு உருண்டு திரண்டு இறங்கி இருப்பது போல் இருந்தது... இன்னும் ஒன்றிரண்டு நாட்களில் பிரசவமாகி விடும் என்று சத்யனுக்கு புரிந்தது... இவள் வலிகளை தாங்கி குழந்தையை பெறவேண்டுமே என்ற சத்யன் கவலையை காட்டிக்கொள்ளாமல் ஒரு காட்டன் நைட்டியை எடுத்து போட்டுவிட்டு கட்டிலில் படுக்க வைத்தான்

“ நீயும் கூடவே படு மாமா” என்று அவனையும் அழைத்தாள் மான்சி... “ இரு கதவை சாத்திட்டு வர்றேன்?” என்று கூறிவிட்டு போய் கதவை மூடிவிட்டு வந்து தனது உடைகளையும் மாற்றிக்கொண்டு கட்டிலில் அவளருகே படுத்தான்... மான்சி காலைத்தூக்கி அவன் மீது போட்டுக்கொண்டு அணைத்துக்கொண்டாள்...
அவள் வயிற்றை வருடியபடி “ மான்சி ஏதாவது வலிக்கிற மாதிரி இருந்தா உடனே சொல்லுடா?” என்றான்...

“ ம்ம் சொல்றேன் மாமா... வயிறு ரொம்ப டைட்டா இருக்குற மாதிரி இருக்கு மாமா... பாப்பா வேற அடிக்கடி சுத்தி சுத்தி வருது” என்று அவன் கழுத்தை கட்டிக்கொண்டாள்...

சத்யன் தன் உதட்டுக்கு அருகில் இருந்த அவள் இதழ்களை கவ்வி சப்பியபடி மென்மையாக அவளை அணைத்து முதுகை வருடி உறங்க வைக்க முயன்றான் ...
சற்றுநேரத்தில் அவள் உதடுகளை விடுவித்தான்... மான்சி சற்று கீழே இறங்கி அவன் நெஞ்சில் முகத்தை வைத்துக்கொண்டு அமைதியாக தூங்க ஆரம்பித்தாள்... அவள் தலையை தன் மார்போடு அழுத்தியவாறு கல்யாண அலுப்பில் சத்யனும் உறங்கினான்..

சற்றுநேரத்தில் அவன் செல் ஒலிக்க கண்விழித்தான்... மான்சி அருகில் இல்லை.. பாத்ரூமில் தண்ணீர் கொட்டும் சப்தம் கேட்டது... சத்யன் செல்லை எடுத்துப் பார்த்தான்... ஜோயல் தான் அழைத்தாள்... ஆன் செய்து “ என்னம்மா எல்லா வேலையும் முடிஞ்சுதா?” என்று கேட்க...

“ முடிஞ்சுது அண்ணா... மான்சி எப்படியிருக்கா?” என்று கேட்க...

“ பாத்ரூம்ல இருக்காம்மா... கொஞ்சம் இரு” என்றவன் கட்டிலை விட்டு இறங்கி பாத்ரூம் கதவு சும்மாவே மூடியிருக்க திறந்து உள்ளே போனான்... சுவற்றில் சாய்ந்து நின்றிருந்த மான்சியைப் பார்த்ததும் பதறிப்போய் “ என்னம்மா வலிக்குதா?” என்று கேட்டான்...

“ வலிக்கலை மாமா .. “ ஆனா நிறைய யூரினா வருது... என்னால தூங்கவே முடியலை மாமா...” என்றாள் கலவரத்துடன்..

சத்யன் அவள் வயிற்றைப் பார்த்தான்.. நீர் வடிந்து மொத்தமாக சுருண்டு இறங்கியிருந்தது.. உடனே பதட்டமானான் கையிலிருந்த போனில் “ ஜோயல் நீ உடனே கிளம்பி வா” என்று கத்தினான் சத்யன்...

“ அண்ணா பயப்படாதீங்க... நீங்க பயந்தா அவளும் பயப்படுவா... நீங்க தயாரா வாசல்ல நில்லுங்க நான் இதோ வந்துடுறேன்.. உடனே க்ளினிக் போயிடலாம் ” என்ற ஜோயல் இணைப்பை உடனே துண்டிக்க ...

சத்யன் மான்சியை அணைத்தவாறு வெளியே அழைத்து வந்தான்... அவளை கட்டிலில் அமர்த்திவிட்டு தனது சட்டையை எடுத்து மாட்டிக்கொண்டு அவளை எழுப்பினான்... மான்சி கால்கள் வழியாக நீர் தன்னையும் மீறி வழிந்தது...

“ என்ன மாமா இது” என்று கலவரத்துடன் கேட்டவளை மேலும் பயமுறுத்த விரும்பாமல் ... “ ஒன்னுமில்லடா பாப்பா பிறக்கப்போகுது... நீ தைரியமா இருக்கனும்... மாமா உன்கூடவே இருப்பேன்” என்றான்..

அவளை அணைத்தபடியே வெளியே ஹாலில் அமர்ந்திருக்க... சற்றுநேரத்துக்கு எல்லாம் எல்லோரும் வந்துவிட்டனர்... மான்சியை ருத்ராவின் க்ளினிக்குக்கு அழைத்து சென்றனர்.. மொத்த குடும்பத்தின் முதுகெலும்பான பஞ்சவர்ணத்தின் பெயரில் தனது மருமகளுக்கு தர்மன் கட்டிக்கொடுத்த க்ளினிக் அது....

மான்சி லேபர் வார்டில் அனுமதிக்கப் பட்டாள்... சத்யனும் மீனாவும் அவள் அருகிலேயே இருக்க... மான்சிக்கு விட்டுவிட்டு வலிக்க ஆரம்பித்தது... மீனா வலியால் துடிக்கும் மகளைப் பார்த்து அழுதபடி இருக்க “ அத்தை நீங்க வெளிய போய் இருங்க... நாங்க மான்சியைப் பார்த்துக்கிறோம்” என்று ஜோயல் தன் மாமியாரை வெளியே அனுப்பினாள்..

“ ரொம்ப வலிக்குது மாமா” என்று சத்யனின் கையைப் பற்றிக்கொண்டு மான்சி கண்ணீர் வடிக்க... சத்யன் உதட்டை கடித்து தன் அழுகையை அடக்கினான்... அவள் முன்பு தனது வேதனையை காட்டக்கூடாது என்ற உறுதி கொஞ்சம் கொஞ்சமாக தளர ஆரம்பித்தது...

“ அண்ணா நீங்களும் வெளியே போய் வெயிட் பண்றீங்களா?” என்று ஜோயல் கேட்டதும் .. “ அய்யோ மாமா என்கூடவே இருக்கனும்... அண்ணி ப்ளீஸ் எண்ணி மாமா இருக்கட்டும்” என்று மான்சி அவ்வளவு வலியிலும் ஜோயலிடம் கெஞ்சினாள்..

“ சரி சரி இருக்கட்டும்... ஆனா நான் சொல்றபடி நீ கேட்கனும்... வலி வரும்போது கரெக்டா சொல்லனும்... நல்லா புஷ் பண்ணனும்” என்று குழந்தை பெறப்போகும் இன்னோரு குழந்தைக்கு அன்பாக கூறினாள் ஜோயல்..

வெளியே காத்திருந்தவர்களுக்கு ஆயிரமாயிரம் வேண்டுதல்... பஞ்சவர்ணம் பேரனோ பேத்தியோ மான்சியை நோகடிக்காமல் பிறக்கவேண்டுமே என்று பிராத்தித்தார்... சிவாத்மிகா தனக்கு ஒரு தம்பி பிறக்கவேண்டுமே என்று கடவுளிடம் வேண்டினாள்.... மீனாவும் தர்மனும் தன் மகள் நல்லபடியாக பெற்று பிழைக்க வேண்டும் என்று குலதெய்வத்தை வேண்டினார... வீரேன் நிலைமைதான் ரொம்ப மோசமாக இருந்தது... கட்டியிருந்த பட்டுவேட்டியில் அடிக்கடி மூக்கை சிந்திக்கொண்டு இருந்தான்.. எல்லோரும் அவனை சூழ்ந்து கொண்டு ஆறுதல் கூறினார்கள்... புதுமணத்தம்பதிகளும் வந்து கவலையுடன் காத்திருந்தனர்... ராமைய்யா ஸ்வீட் பாக்ஸ் சாக்லேட் பாக்கெட்டுகளுடன் தயாராக அமர்ந்திருந்தார்... 




இரவானது இன்னும் வெளியே வரலை சத்யனின் வாரிசு... எல்லோரும் கவலையுடன் இருக்க.... எல்லோறையும் ஆறுதல் படுத்தும் பொருப்பு ஜோயலுடையதானது “ இப்பதான் சிவியரா வலி வருது.. இன்னும் கொஞ்சநேரத்தில் பாப்பா பொறந்திடும்” என்றாள்...

சத்யன் வெளியே வந்து... தேவனையும் செல்வியையும் பார்த்து “ நீங்க இங்க என்னப் பண்ணுறீங்க... வீட்டுக்குப் போங்க... அதான் இவ்வளவு பேர் இருக்கோமே... நீங்க ரெண்டு பேரும் கிளம்புங்க” என்று கூற ...

தேவன் செல்வியைப் பார்த்தான் ... “ வேனாம் சித்தப்பா.. பாப்பா பொறந்ததுமே நாங்க போறோம்” என்று பிடிவாதமாக மறுத்துவிட்டாள்...

எல்லோரையும் கலங்க வைத்த சத்யனின் மகன் அதிகாலை சரியாக 2-10 பிறந்தான்... ஆண் குழந்தை என்றதும் அந்த க்ளினிக்கே திருவிழாக் கோலம் பூண்டது... குழந்தை முதன்முதலாக பஞ்சவர்ணத்தின் கையில் கொடுத்தபோது உணர்ச்சிவசப்பட்டு அவர் கைகள் நடுங்கியது...

சிவாத்மிகா கண்ணீருடன் தனது தம்பியை கொஞ்சினாள்.. சத்யன் மகனைப் பார்த்ததும் தானே ஒரு முறை புதிதாய் பிறந்தது போல் உண்ர்ந்தான்... ட்டு மொத்த குடும்பமும் குழந்தையை அந்த மாயக்கண்ணனின் வரவை போல கொண்டாட...

தேவன் மட்டும் ‘ ஏன்டா முன்னாடியே பிறந்திருக்க வேண்டியது தானே?’ என்று மனதுக்குள் எண்ணியவாறு குழந்தையை வில்லனைப் பார்ப்பது போல் பார்த்தான்... இந்த குட்டி வில்லனால் தானே அவன் முதலிரவுக்கு ஒரு முடிவு கட்டிவிட்டான்....

மான்சியை சுத்தமாக்கி அறைக்கு கொண்டு வந்து படுக்க வைத்தனர்..... சத்யன் கண்மூடிக்கிடந்த மனைவியை கண்கொட்டாமல் பார்த்தபடி அருகிலேயே அமர்ந்திருந்தான்... களைப்பு நீங்கி கண்விழித்த மான்சி “ மாமா நான்தான் ஜெயிச்சேன்... ஆம்பிளை குழந்தைதானே?” என்று சிரிக்க...

சத்யன் சுற்றிலும் இருக்கும் அனைவரையும் மறந்து மான்சியின் முகத்தை நெருங்கி கண்ணீருடன் அவள் உதட்டை கவ்வி ஆழமாக அழுத்தமாக முத்தமிட்டான்... அவன் மூச்சோடு மூச்சாக கலந்தாள் மான்சி...

அன்று காலை எல்லோரும் வீட்டுக்கு கிளம்பினார்கள்.... மீனா மட்டும் மகளுடன் இருந்தாள்.. சத்யனுக்கு மனைவியையும் மகனையும் விட்டுவிட்டு போகவே மனசில்லாமல் “ குளிச்சிட்டு உடனே வந்துர்றேன் கண்ணம்மா” என்று கூறிவிட்டு கிளம்பினான்...

தேவன் வீட்டுக்கு வந்ததும் செல்வியைத் தான் தேடினான்... அவன் அறையில் பாத்ரூமில் அவள் குளித்துக்கொண்டிருக்க ... பாத்ரூம் கதவருகே காத்திருந்தான்... தலையில் சுற்றப்பட்ட டவலும்... உடலில் சுற்றிய சேலையுமாக வெளியே வந்தவளை அப்படியே அள்ளிக்கொண்டு போய் கட்டிலில் போட்டுவிட்டு.. உடனே அவள்மீது கவிழ்ந்தான்..

அவன் முத்தத்தை முதலில் ஆரம்பிக்க... அவனை முரட்டுத்தனமாக உதறி தள்ளிவிட்டு எழுந்தாள் செல்வி... பாதியில் பறிக்கப்பட்ட சொர்க்கத்தை போல் அவனது சுகம் வடிந்துவிட “ ஏய் என்னாச்சுடி” என்று கோபமாக கேட்டான் ..
புடவையால் தன்னை போர்த்திக்கொண்ட செல்வி.. அவன் முகத்தைப் பார்க்காமல் தனது மூன்று விரல்களை உயர்த்தி காட்டி .... “ அந்த மூன்று நாட்கள்” என்றாள்

“ அடிப்பாவி குடி கெட்டுது” என்று தன் தலையில் அடித்துக்கொண்ட தேவன் “ நான் கொலைகாரனா மாறுவதற்குள்ள வெளியே ஓடிப்போயிடு” என்று கத்த.... பொங்கி வந்த சிரிப்பை அடக்கியபடி வெளியேப் போய்விட்டாள் செல்வி...
ஒன்றரை வருடமாக அவள் பின்னால் சுற்றி திரிந்து... இன்று கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரியாக இருக்கும் தன் நிலையை எண்ணி ஆத்திரமாக வந்தது தேவனுக்கு... அவன் முகத்தைப் பார்க்கவே பயந்துபோய் மறைந்துகொண்டாள் செல்வி..

வீரேன் நமுட்டுச் சிரிப்புடன் தம்பியின் தோளில் தட்டி “ விடுடா தேவா இன்னும் நாலு நாள் தானே... அப்புறம் ஜாமாய்டா தம்பி ” ஆறுதல் சொல்கிறேன் பேர்வழி என்று தேவனுக்கு எரிகின்ற தீயில் எண்ணை ஊற்றிவிட்டு போனான்... தேவன் அவனை முறைத்துவிட்டு எழுந்து போனான்...

மான்சி குழந்தையுடன் சத்யன் வீட்டுக்கு மீனா போய்விட... தர்மனும் பேரனை பிரிய மனமின்றியோ அல்லது மனைவியை பிரிய மனமின்றியோ மாமியார் வீட்டிலேயே தங்கிவிட்டார்... அன்று மாலை வீரேனும் ஜோயலும் குழந்தையை பார்க்க வந்தனர் ...

மீனா தனது மூத்த மருமகளை தனியாக அழைத்து “ ஏன்மா அதான் செல்விக்கு அஞ்சு நாள் முடிஞ்சு போச்சுல்ல... நம்ம பூக்காரன் மாரிகிட்ட சொல்லி நிறைய பூ கொண்டு வரச்சொல்லி அவங்க ரூமை ரெடி பண்ணி விடும்மா... நான் இன்னும் ரெண்டு நாள் கழிச்சு வர்றேன்” என்று சொல்லி அனுப்பினாள்..

ஜோயல் வீரேனிடம் சொல்லி பூ பழங்கள் ஸ்வீட் எல்லாம் வாங்கி வந்து தேவன் அறையை அலங்கரிக்க ஆரம்பித்தனர்... தங்களுக்கு நடந்த முதலிரவை மனதில் அசைபோட்டபடி காதலாய் பேசிக்கொண்டு நிதானமாக அறையை அலங்கரித்துவிட்டு எல்லாவற்றையும் தயாராக எடுத்து வைத்துவிட்டு அறையிலிருந்து வெளியே வரும்போது மணி பத்தாகியிருந்தது ..

வீரேன் தேவனைத்தேட... ஜோயல் செல்வியை தேடினாள்... வீடு முழுக்க தேடியும் இருவரையும் காணாமல்.. வீரேனும் ஜோயலும் குழப்பத்துடன் தோட்டத்துப் பக்கமாக காலெடுத்து வைக்க... அப்போது சமையலறையை ஒட்டியிருந்த மூட்டைகள் அடுக்கும் ஸ்டோர் ரூமிலிருந்து பேச்சுக் குரல் கேட்க... வீரேன் மனைவியின் கையைப்பிடித்து தடுத்து உதட்டில் விரல் வைத்து எச்சரிக்கை செய்தான்.. இருவரும் யார் என்ன பேசுகிறார்கள் என்று காதை தீட்டிக்கொண்டு ஒட்டுக் கேட்க 


“ அய்யோ ஏன் இவ்வளவு அவசரம்... இரு ரூமுக்கு போகலாம்” என்றது செல்வியின் குரல் ரகசியமாக ஒலித்தது

“ ரூமாவது மண்ணாவது...வாயை மூடிக்கிட்டு பேசாம இரு.. எனக்கு இருக்கிற வெறில கடிச்சு கொதறிடுவேன்” இது தேவனின் குரல்...

“ இருங்க நானே அவக்குறேன்.. கிழிச்சுப்புட்டாதீங்க” இது செல்வி

“ எல்லாம் எனக்குத் தெரியும் நீ பேசாம இரு ”

சற்றுநேரம் கழித்து “ ஸ்ஸ்ஸ் ஏன் கடிக்கிற... ம்ம் மெதுவா” என்று சுகவேதனையில் முனங்கியது செல்வியின் குரல்...

அவன் பிறகு வித்தியாசமான ஒலிகளும் ... அதைத் தொடர்ந்து செல்வியின் வலி கலந்த அலறலும் கேட்டது “ செல்வி கத்தாதே... ப்ளீஸ் ப்ளீஸ்... வலிக்காம பண்றேன் செல்வி கத்தாதே” என்ற தேவனின் காதல் மொழிகளும் கேட்க...

எல்லாவற்றையும் கேட்ட ஜோயல் வீரேனை இறுக்கி அணைத்துக்கொண்டாள்.... வீரேன் ருத்ரா என்று ஆசையோடு அள்ளிக்கொண்டு அங்கிருந்து நகர்ந்தான் ...

“ என் தம்பி பய அடக்கமுடியாம பாய்ஞ்சுட்டான் போல” என்றான் வீரேன் அவன் நெஞ்சில் சாய்ந்த ஜோயல் “ கஷ்டப்பட்டு அலங்காரம் பண்ணது வேஸ்டா போச்சு” என்றாள்

“ ஏன்டி வேஸ்ட்டு... நாம மறுபடியும் இன்னொரு முதலிரவு கொண்டாடிட்டாப் போகுது... தொப்பி போடாத முதலிரவு” என்று மனைவியைப் பார்த்து கண்சிமிட்டியபடி தேவனின் அறைக்குள் அவளைத் தூக்கிப் போனான்

மான்சிக்காக இத்தனை நாட்களாக கருவுறுதலை தவிர்க்க ஆணுறை அணிந்து தன் மனைவியை உறவு கொண்ட வீரேன் முதல்முறையாக புதிதாய் மனைவியை புணர்ந்தான்...

மறுநாள் காலை இரண்டு ஜோடிகளும் ஒருவரையொருவர் வெட்கத்துடன் பார்த்து புன்னகைத்துக்கொண்டு... மான்சியின் வீட்டுக்கு விருந்துக்கு கிளம்பினார்கள்...

மான்சியின் அறையில் சத்யன் மான்சியின் அருகில் சரிந்து அமர்ந்திருக்க.. மான்சி பக்கத்தில் கிடந்த குழந்தையை விரலால் வருடிக்கொண்டிருந்தாள் ..

இரண்டு ஜோடிகளும் அறைக்குள் நுழைய... சத்யன் அவர்களை சிரிப்புடன் வரவேற்று “ என்னடா மாப்ளைகளா ரெண்டு பேரும் நைட்டெல்லாம் தூங்கலையா? கண்ணெல்லாம் செவசெவன்னு இருக்கு?” என்று கேலி செய்ய... ஜோயலும் செல்வியும் வெட்கமாக தலை குனிந்தனர்...

“ வீரண்ணா.. தேவாண்ணா ரெண்டு பேரும் என் மகனுக்கு சீக்கிரமா பொண்ணு பெத்து குடுங்க” என்று மான்சி தனது அண்ணன்களை கிண்டல் செய்ய...

இருவருமே ஏககாலத்தில் “ ம்ம் அதெல்லாம் நைட்டே ரெடி பண்ணிட்டோம் தங்கச்சி” என்று அசடுவழிய கூறிவிட்டு தங்கள் மனைவிகளிடம் “ அய்யோ ச்சீ” என்று ஏககாலத்தில் தலையில் குட்டு வாங்கினர்...

சத்யனும் மான்சியும் இவர்களைப் பார்த்துவிட்டு விழுந்து விழுந்து சிரிக்க... கூச்சத்துடன் நெளிந்து அறையைவிட்டு ஓடிவிட்டனர் நால்வரும்...

மான்சி சத்யனின் நெஞ்சில் விரல்களால் கோலம் போட்டபடி “ மாமா குழந்தை பிறந்ததும் பத்து நாள்தான் உனக்கு டைம் குடுத்திருக்கேன் ஞாபகம் இருக்கா?” என்று கிசுகிசுப்பாய் கேட்க...

கொஞ்சம் சரிந்து மான்சியின் மார்பில் வந்த பால் வாசனையை நுகர்ந்தபடி “ ம்ம் ஞாபகம் இல்லாமப் போகுமா? ஆனா கொஞ்சம் கொஞ்சமா தான் ஆரம்பிக்கனும்... ஒரேநாள்ல எல்லாம் முடியாது.. மொதல்ல இது” என்று பால் நிறைந்த அவள் மார்புகளை கைகளால் அழுத்தியபடி கூறினான்... “ மாமா” என்று முனங்கியபடி அவன் முகத்தை தன் மார்போடு அழுத்திக்கொண்டாள் மான்சி

காதல் வயதையும் படிப்பையும் பார்த்து வருவதில்லை என்பதற்கு மான்சி ஒரு உதாரணம்....

எப்போதும் காதலை உணரும் நேசமிக்க மனமிருந்தால் மட்டும் போதும் வாழ்க்கை முழுவது இளமையோடு வாழலாம் என்பதற்கு சத்யன் ஒரு உதாரணம்...

வாழ்க காதல்... வளர்க காதலோடு கூடிய தாம்பத்தியம்!!!!!!!!






" மனிதன் உயர்ந்தவன் ... ஆடுகள் மலிந்தவை..
" உயிரின் மதிப்பு உருவத்தைப் பொருத்தே!

" புல் தாழ்ந்தது .... ஆல் உயர்ந்தது...
" புகழின் தராசு வளர்ச்சியை நிறுத்ததே!

" சிரம் புனிதம்... கால் பாவம்!
" மகுடம் என்பது இருக்குமிடத்தை வைத்தே!

" தென்னங்கீற்று அழகு... விளக்குமாறு அசிங்கம்!
" மரியாதை வருவது தொழிலை வைத்தே!

" செதுக்கினால் கடவுள்.... உடைத்தால் கல்!
" வணங்கப்பட காரணம் வடிவத்தை வைத்தே!

" நம்பினால் வெற்றி... நம்பாவிட்டால் கேள்வி!
" நம்பிக்கை வருவது வாழ்க்கையை வைத்தே!

" காதல் முக்தி நிலை... காமம் முரண்பட்டநிலை!
" நிர்ணயிக்கப் படுவது மனிதனின் மனநிலையை வைத்தே!

முற்றும் 




No comments:

Post a Comment