Tuesday, August 4, 2015

மான்சி எனும் தேவதை - அத்தியாயம் - 17

சத்யன் மான்சியை பார்த்துக்கொண்டே உறங்கிப்போனான்,, காலையில் கண் விழித்தபோது மான்சி தான் எதிர் நின்றாள்,, புது பொழிவுடன் அழகு ஓவியமாக நின்றவளை பார்த்து கண்சிமிட்டிய சத்யன் “ இந்த சீன் அப்படியே சினிமாவுல வர்ற மாதிரியே இருக்குல்ல,, ஏன் சொல்றேன்னா,, பர்ஸ்ட்நைட் முடிஞ்ச மறுநாள் காலையில ஹீரோயின் இப்படித்தான் ஹீரோவ எழுப்புவா மான்சி” என்று சத்யன் கிண்டல் பேச .......

வெட்கமாய் சிரித்து,, பிறகு பொய்யான முறைப்புடன் சத்யன் தலையில் குட்டிய மான்சி “ என்ன நக்கலா,, அய்யோ பாவம் நைட்டெல்லாம் புள்ள தேம்பி தேம்பி அழுதுச்சேன்னு பரிதாபப்பட்டு காலையில் பிரஷா ஒரு தரிசனம் குடுக்கலாம்னு வந்தா சினிமா ஹீரோயின் கூடயா கம்பேர் பண்றீங்க உங்களை...........” என்று செல்லமாக அதட்டிய வாறு சத்யனின் கலைந்த தலைமுடியை மேலும் கலைத்தாள்



தனது தலையை கலைத்த மான்சியின் விரல்களை பற்றிய சத்யன் அந்த காந்தல் விரல்களை தன் உதட்டில் வைத்து அழுத்தி முத்தமிட்டு “ மான்சி நைட் நீ சொன்னது எல்லாம் ரொம்ப சரி,, கணவன் மனைவிக்கு இடையே யாரும் வரக்கூடாதுன்னு நீ நினைக்கிறது கரெக்ட்,, முதல்ல ஒரு காதலியா பேசின,, இப்போ ஒரு மனைவியா பேசுற,, கேட்க ரொம்ப சந்தோஷமாத்தான் இருக்கு,, ஆனா அதை இப்படி என் பக்கத்துல படுத்துக்கிட்டு கூட போராடலாம்,, நீ தரையில படுத்து நான் மேல படுத்துக்க எனக்கு சங்கடமா இருக்கு மான்சி,, நீ என் பக்கத்துல படுக்கறதால உன் பக்கம் பலவீனமா ஆயிரும்னு நீ நெனைச்சா வேண்டாம் நீ கீழயே படுத்துக்க,, என் மான்சி நான் சொல்றது சரிதான?” என்று சத்யன் கேள்வியாக அவளை பார்க்க...........

அவனை முறைத்த மான்சி “ அப்படி என்ன என் பக்கம் பலவீனமாயிடும்னு சொல்றீங்க,, அதெல்லாம் நான் ரொம்ப திடமா இருப்பேன்” என்று மான்சி நெஞ்சை நிமிர்த்தி வீராப்பாக சொன்னாள்

நிமிர்த்தி காட்டி அவளின் தாமரை மொட்டுகளையே வெறித்த சத்யன்,, “ ம்ம் சூப்பர்” என்று உதட்டை ஈரப்படுத்திக் கொண்டு சொல்ல

அவன் தலைமுடியை கோதியவாறு எதிலோ கவணமாக இருந்த மான்சி “ என்ன சூப்பர்,, நான் சொன்னதா” என்று கேட்க

“ நீ சொன்னதுக்கு செய்தயே அது சூப்பர்” என்று சத்யன் கண்களில் குறும்பு மின்ன அவளின் நிமிர்ந்த தனங்களை பார்த்து சொன்னான்

அவன் எதை சொல்கிறான் என்று புரிய “ ஏய் ச்சீ பார்வையை பாரு திருடன் மாதிரி” என்று அவன் தலையில் தட்டியவள் வெட்கத்துடன் சட்டென்று திரும்பி அவனுக்கு முதுகு காட்டி நின்றுகொண்டாள்

“ அய்யோ அதிகாலையிலயே ராஜகோபுரத்தோட தரிசனம் பார்த்தா ரொம்ப நல்லதுன்னு பெரியவங்க சொல்வாங்க,, நீ என்னடான்னா இப்படி திரும்பி நின்னுகிட்டயே மான்சி” என்றவன் அவளின் முதுகில் தன் கன்னத்தை வைத்து அவளை இடுப்போடு வளைத்து தன் மடியில் அமர்த்திக்கொண்டான்

" மான்சி எவ்வளவு அழகுடி நீ ,, அப்படியே பார்த்துக்கிட்டே இருக்கலாம் போல அழகு,, இப்போதான் பூத்த புது பூ பனி துளியை தாங்கி தலையசைத்து சிரிக்குமே அந்த மாதிரி அழகு மான்சி நீ ,, புதுசா பிறந்த குழந்தை முதன்முறையா அதோட அம்மாவை பார்த்து சிரிக்குமே அதுபோல அழகு மான்சி நீ ,, புதுசா ஒரு கவிதை புத்தகம் வாங்கி அதை பிரித்து படிக்கும் போது வருமே ஒரு பரவசம் அதுபோல மான்சி நீ ,,

" கடும் கோடையில ஆற்றங்கரை ஓரம் இருக்கும் ஆலமரத்தில் ஊஞ்சல் கட்டி ஆடும்போது மனசெல்லாம் ஒரு இனிமையான உணர்வு வரும்பாரு அதுபோல நினைத்து பார்ப்பதற்கே ரொம்ப இனிமையானவள் மான்சி நீ,, ஒரு ஆற்றங்கரை,, அதன் ஓரம் ஒரு தனிமையான தோப்பு,, அங்கே நீயும் நானும் கூடவே நிறைய சிட்டு குருவிகள்,, அங்கே நாம காதல் பண்றதை பார்த்து அந்த குருவிங்க எல்லாம் பொறாமை படனும் மான்சி,, என் அழகிய கவிதையே நீ போதும்டி எனக்கு வேற எதுவுமே வேண்டாம்” என்று சத்யன் காதலாய் பிதற்றி அவளை அணைத்து பிடரியில் முத்தமிட்டான்


தனது வயிற்றில் இருந்த சத்யனின் விரல்களோடு தனது விரல்களை பிண்ணிக்கொன்ட மான்சி “ என்னாச்சு மாமா உங்களுக்கு,, காலங்கார்த்தாலேயே இப்படி உளறீங்க” என்று கேலியாய் கேட்டாள்

“ ம்ம் நான் உளர்றேனா,, சொல்லுவடி சொல்லுவ,, லவ்வை எவ்வளவு பீல் பண்ணி சொல்லிகிட்டு இருக்கேன்,, இரு இரு உன்னை” என்ற சத்யன் தன் கைக்குள் இருந்தவளை அப்படியே திருப்பி ஒரு குழந்தையைப் போல் ஏந்திக்கொண்டான்

அவன் கண்களை பார்த்த மான்சி அதில் தெரிந்த காதலையும் தாபத்தையும் பார்த்து நாணத்துடன் "விடு மாமா வேலையிருக்கு" என்று கண்களை மூடிக்கொண்டாள்,, அவள் வாய்தான் விடு மாமா என்று, இதழ்களோ அவன் முத்தமிடுவானா என்று ஏங்கி துடித்தது

சத்யனுக்கு அவளின் அந்த அதிகாலை அழகு பித்தம் கொள்ள செய்தது,, சத்யன் குனிந்து நெற்றியில் முத்தமிட்டான், சத்யன் கையில் இருந்த அவள் உடல் லேசாக துடித்து விரைத்தது,
சத்யன் அவளின் மலர் விழிகளில் மாறிமாறி முத்தமிட்டான், விரைத்த அவள் உடல் சூடானது,,
அவளின் பளிங்கு கன்னங்களில் முத்தமிட்டான், துடித்த அவளின் ஈர உதடுகள் சட்டென்று பிளந்துகொண்டு உள்ளே இருந்த வெண்முத்துப் பற்கள் பளிச்சென்று தெரிந்தது,,
சத்யன் குனிந்து அவளின் கீழுதட்டை கவ்விக்கொண்டே ஒருகையை அவளின் தலைக்கு அடியில் விட்டு தன் முகத்துக்கு நேராக அவளை உயர்த்தி பிடித்துக்கொண்டான்,, இப்போது முத்தமிட சரியாக இருந்தது,, இவன் குனியவேண்டிதில்லை

மான்சி அழகாக இதழ்களை பிளந்துகொடுக்க,, சத்யனின் தனது உதடுகளால் காற்று புகக்கூட இடமின்றி அவள் வாயை அடைத்துக்கொண்டான்,, இன்னும் தான் வாயைக்கூட கொப்புளிக்க வில்லை என்ற நினைப்பு சத்யனுக்கு ரொம்ப லேட்டாகத்தான் வந்தது, ஆனாலும் இந்த முத்த சுவையை பாதியில் விட்டுவிட்டு போகவும் மனமில்லை,,

ஆனால் மான்சி இவனைவிட வேகமாக இருந்தாள்,, தனது இரண்டு கைகளாலும் அவன் கழுத்தை சுற்றி வளைத்துப்பிடித்து,, அவன் வாய்க்குள் தனது இரு இதழ்களையும் செலுத்தி பூட்டிக்கொண்டாள்,, சத்யனே நினைத்தாலும் விலக முடியாதளவுக்கு அவளின் வேகமிருந்தது

அதன்பிறகு சத்யனிடம் பின்வாங்கல் இல்லை,, ரொம்ப வேகமாகவும் ஆர்வமாகவும் அவளின் இதழ்த் தேனை ரசித்து உறிஞ்சினான்,, மான்சியின் உடல் வாசனையும், அவளின் ஈர இதழ்களின் வாசனையும் போட்டி போட்டுக்கொண்டு சத்யனை மயக்கியது,, ஒரே நேரத்தில் இருவரும் மாற்றிமாற்றி உறிஞ்சுவதும் பிறகு மாத்திமாத்தி பச் பச்சென்று ஈரமாக முத்தமிடுவதுமாக ரொம்ப ஆர்வமாக சத்தமிட்டு முத்தமிட்டு கொண்டனர் இருவரும்


மான்சியை பார்க்க பார்க்க சத்யனுக்கோ அந்த காலையிலும் மோகத்தீ மிக மோசமாக பற்றிக்கொண்டது,, காதலியாக இருந்தபோது முத்தமிட இருந்த பயமும் தயக்கமும் இப்போது இல்லை,, இவள் என் மனைவி,, இதோ என் கையில் கிடக்கிறாள்,, இந்த பூவுடல் மொத்தம் எனக்கு சொந்தமானது என்ற நினைப்பே அவனை மேலும் கிளர்ந்தெழ செய்தது

தன் கையில் கிடந்த மான்சியை படுக்கையில் பூவைப்போல் கிடத்திவிட்டு,, கட்டிலைவிட்டு இறங்கி கதவை மூடிவிட்டு வந்து மீண்டும் கட்டிலில் அமர்ந்து குனிந்து அவளின் பாதங்களை கையிலெடுத்து அவற்றில் தன் உதடுகளை பதித்தான், பிறகு அவள் பாதங்களை தனது மடியில் வைத்துக்கொண்டு மெதுவாக அவளின் புடவையை முழங்கால் வரை உயர்த்தினான் சத்யன்

மான்சியின் கால்கள் தந்தங்களை போல வெண்மையாகவும்,, வெறும் பூக்களை கொண்டு செய்தது போல் மென்மையாகவும் இருந்தது,, சிறுசிறு செந்நிற முடிகள் அழகுக்கு அழகு சேர்தது, சத்யனின் ஆர்வமும் தாபமும் அதிகரிக்க சட்டென்று குனிந்து அவள் முழங்காலில் முத்தமிட்டு தனது நாவால் ஈரமாய் வருடிவிட்டான்

மான்சியின் உடல் சிலிர்த்ததை சத்யனின் நாக்கும் உதடுகளும் உணர்ந்த அதேவேளையில் மான்சி தனது கால்களை சட்டென்று இழுத்துக்கொண்டாள்,, முகத்தில் ஏமாற்றத்துடன் சத்யன் அவளை நிமிர்ந்து பார்க்க,, மான்சியின் விழிகள் கலங்கி கண்ணீர் குளமாக தேங்கியிருந்தது

திகைத்துப் போன சத்யன் அவள்மீது படர்ந்த வாறே மேலேறி அவள் முகத்தருகே குனிந்து “ என்னடா கண்ணம்மா என்னாச்சு,, திடீர்னு கண் கலங்கியிருக்கு” என்று கவலையாக கேட்டான்

முகத்தை பக்கவாட்டில் திருப்பிய மான்சி “ எனக்கு எல்லாமே புடிச்சிருக்கு மாமா,, ஆனா இதே லவ்வோட நாம ரெண்டுபேரும் நைட்ல ஒன்னு சேரனும் மாமா,, அதுதான் உண்மையான தாம்பத்தியம்,, அதுக்கு எத்தனை நாள் ஆனாலும் வெயிட் பண்ணலாம் மாமா ப்ளீஸ் எனக்காக” என்று மான்சியின் குரல் கெஞ்சியது

சத்யன் எதுவுமே பேசவில்லை அவளுக்கு பக்கவாட்டில் சரிந்து படுக்கையில் விழுந்தவன் அமைதியாக இருக்க,, அவன் பக்கமாக திரும்பி படுத்த மான்சி தனது விரல்களால் அவன் நெற்றியை வருடியவாறு “ இல்ல எனக்கு இப்பவே வேனும்னு நீங்க சொன்னா,, அதை என்னால தடுக்கமுடியாது மாமா,, ஏன்னா என் உடம்பு என் பேச்சை கேட்காது,, இனி எதுவாயிருந்தாலும் உங்கள் விருப்பம்,, ஆனா நம்ம மனசும் உடலும் ஒரே மாதிரி சங்கமிக்கனும் மாமா” என்று மான்சி சொல்லச்சொல்ல சத்யன் தனது கண்களை மூடிக்கொண்டான்

மான்சி குனிந்து ஆதரவாக அவன் நெத்தியில் முத்தமிட்டு “ மாமா நான் போகவா? உங்களுக்கு என் மேல் கோபம் இல்லையே” என்று அவனிடம் கேட்க
சத்யன் கண்களை மூடியவாறே “ ம் போ” என்றான்

ஆனால் மான்சி போகவில்லை,, ஒரு காலை அவன்மேல் மடித்துப் போட்டு, ஒருகையால் அவன் கழுத்தை சுற்றி அவன் காதருகே சரிந்து “ மாமா நைட்டு நான் வந்தேனா,, ஒரு நிமிஷமாவது என்னை நினைச்சீங்களா மாமா ” என்று ரகசியக் குரலில் கேட்க

அவள் அணைத்த சத்யனின் உடல் சட்டென்று விரைக்க,, எதையோ பார்த்து பயந்தவன் போல கண்களை இறுக்கி மூடிக்கொண்டு “ இல்லை மான்சி நீ வரவேயில்லை” என்று தலையை இப்படியும் அப்படியும் அசைத்து தனது துக்கத்தை வெளிப்படுத்தினான்

மான்சி சிறிதுநேரம் எதுவுமே பேசவில்லை,, அமைதியாக அவன் தலையை தன் கழுத்தடியில் வைத்து அணைத்தவள் “ பரவாயில்லை மாமா விடுங்க ஒருநாள்ல எப்படி மாற்றம் வரும்,, நான் காத்திருக்கேன் மாமா “ என்று அவனை ஆறுதல் படுத்திய மான்சி படுக்கையிலிருந்து எழுந்து அமர்ந்தாள்

சத்யன் இன்னும் கண்களை திறக்கவில்லை,, அவன் கண்களின் ஓரம் லேசாக ஈரம் இருந்தது, அவன் கால்களைப் பற்றி இழுத்த மான்சி “ அய்யோ ராசா பீல் பண்ணது போதும் மொதல்ல போய் பல்ல விளக்குங்க,, இதோட எனக்கு கிஸ் வேற குடுத்துட்டீங்க,, அய்யோ கடவுளே இதனால எனக்கு என்ன ஆகப்போகுதோ தெரியலையே” என்று குறும்பாக மான்சி பேசி அவனை இயல்புக்கு கொண்டு வர முயன்றாள்

நாம் இப்படியிருந்து மேலும் அவளை சங்கடத்திற்கு உள்ளாக்க வேண்டாம் என்று நினைத்த சத்யன் கண்விழித்து அவளைப்பார்த்து லேசாக புன்னகை செய்து “ அதெல்லாம் ஒன்னும் ஆகாது,, நீ போ நான் அப்புறமா வர்றேன்” என்று சொன்னான்

“ அய்யோ டைம் என்னாச்சு பாருங்க ஏழரை ஆகுது,, நான் உள்ள வந்து கிட்டத்தட்ட நாற்பது நிமிஷம் ஆகுது,, வெளிய அத்தையும் அக்காவும் என்ன நெனைப்பாங்களோ தெரியலை,, நீங்க வாங்க மாமா பல் தேய்ச்சுட்டு காபி குடிக்கலாம்” என்று மான்சி அவன் கையை பற்றி இழுத்தாள்

“ சரிசரி வர்றேன் இரு” என்று எழுந்து அமர்ந்த சத்யன் மான்சியை கிட்டே வரச்சொல்லி சைகை செய்து அவளின் ரவிக்கைக்கு வெளியே வந்திருந்த கறுப்பு நிற உள்ளாடையின் பட்டையை உள்ளே தள்ளி விலகியிருந்த புடவையை சரிசெய்து, பிறகு கலைந்து கிடந்த கூந்தலை சுருட்டி காதோரம் ஒதுக்கிவிட்டான்,, பின்னர் அவள் தோளைப்பற்றி தள்ளி நிறுத்தி எல்லாம் சரியாயிருக்கிறதா என்று பார்த்தான்




“ம் இப்போ ஓகே,, வா போகலாம்” என்று வெளியே போக கதவை திறந்தவன் கையை பற்றிய மான்சி ....

“ மாமா உங்ககிட்ட ஒரு விஷயம் சொல்ல நினைச்சேன் மறந்தே போச்சு,, அத்தை வீட்டு வேலை செய்ய எல்லாத்துக்கும் ஒரு அம்மாவை வரச்சொல்லியிருக்காங்க,, இத்தோட எனக்கு சமையல் செய்ற வேலை மட்டும்தான்,, அதனால இனிமேல் உங்களை கவனிச்சுக்கற வேலை எல்லாம் என்னோடது” என்று மான்சி சொல்ல

சத்யன் புருவம் சுருக்கி “ கவனிச்சுகறதுன்னா எப்படி எனக்கு புரியலை மான்சி” என்றான்

" ம் அதாவது உங்களுக்கு முதுகு தேய்ச்சு குளிக்க வைக்கிறதுல இருந்து,, டிரஸ் எடுத்து வைப்பது, டிபன் சாப்பாடு காபி, அப்புறம் நைட் இந்த ரூம் க்ளீன் பண்ணி, தலையனை உறை மாத்துறது வரைக்கும் இனிமேல் எல்லாமே நான்தான் செய்வேன்,, ம் அதோட உங்களுக்கு கால் வலிச்சா பிடிச்சு விடுறது, தலை வலிச்சா தைலம் தேய்ச்சு அழுத்தி விடுறதுன்னு எல்லாமே நான்தான் பண்ணுவேன்” என்று மான்சி காதில் தொங்கும் ஜிமிக்கிகள் ஆட கையை ஆட்டி ஆட்டி பேச,, சத்யன் அவளையே உற்றுப்பார்த்தான்

அவளின் ஒவ்வொரு வார்த்தையின் அர்த்தமும் சத்யனுக்கு தெளிவாக புரிந்தது,, அதாவது நான் உன் பொண்டாட்டி என்பதை என் மனசுல அழுத்தமாக பதிய வைக்கும் அடுத்த முயற்சியின் தொடக்கம் தான் இது என்று சத்யனுக்கு தெளிவாக புரிந்தது

“ சரிங்க மேடம் இனிமேல் நீங்க உட்காரச் சொன்னா உட்கார்ந்து,, எழுந்திருக்க சொன்னா எழுந்திருக்கிறேன் போதுமா,, இப்போ வா போகலாம்” என்று அவள் இடுப்பில் கைப்போட்டு வளைத்துக்கொண்டு வெளியே வந்தான் சத்யன்

அம்மா மற்றும் ஜெயந்தி முன்பு மான்சி கூச்சத்தில் நெளிந்தாள்,, இருந்தாலும் சத்யன் விடவில்லை அவளை இழுத்துக்கொண்டே தோட்டத்துக்கு போய் “ நான் பல் தேய்ச்சுட்டு வர்றதுக்குள்ள வெந்நீர் கலந்து ரெடி பண்ணி வை மான்சி” என்று சொல்லிவிட்டு பாத்ரூமுக்குள் நுழைந்தான்

அதன்பிறகு வந்த நாட்களில் மான்சி சொன்னது போலவே நடந்துகொண்டாள், அவளின் கவனம் முழுவதும் சத்யன்தான் இருந்தான்,, அவனுடைய தேவைகளை பார்த்து பார்த்து கவனித்தாள்,, அவன் முகம் லேசாக வாடியிருந்தாலும் துடித்து போய்விடுவாள்,, இதையெல்லாம் ஏற்கனவே இவள் செய்த வேலைகள்தான் என்றாலும் சிலவற்றில் ஒரு அன்யோன்யம், கணவன் மனைவி என்ற பிணைப்பின் நெருக்கம் இருந்தது

அவன் குளிக்கும் போது இவளும் உள்ளே நுழைந்து அவனுக்கு தன் பார்வையால் தீமூட்டிக் கொண்டே உடம்பு தேய்க்கிறேன் என்று அவனை தடவித்தடவி உசுப்பேத்தி அவன் அணைக்க வரும்போது “ சரி நான் டிபன் ரெடி பண்றேன் நீங்க சீக்கிரமா குளிச்சுட்டு வாங்க மாமா” என்று பாத்ரூமில் இருந்து வெளியே வந்துவிடுவாள்

ஆபிஸ்க்கு சத்யன் கிளம்பி வெளியே வரும்முன் அவன் சட்டை காலரை கொத்தாகப் பற்றி இழுத்து அழுத்தமாய் உதட்டு முத்தம் கொடுத்து அனுப்புவாள்,, வீட்டில் யாருமில்லாத நேரத்தில் அவனை அணைத்தது மாதிரி நெருங்கி உட்கார்ந்து டிவி பார்ப்பாள்

இப்போதெல்லாம் தனக்கு என்ன தேவையென்று சத்யனுக்கு மறந்து கூட போய் விட்டது, அந்தளவுக்கு அவனை பார்த்துக்கொண்ட மான்சி சில நாட்கள் கழித்து ஒருபடி முன்னேறி குளித்துவிட்டு வந்தால் அவன் அறையில் அவனை சட்டைசெய்யாமல் இயல்பாக உடைகளை மாற்ற ஆரம்பித்தாள்

சத்யன் அதையெல்லாம் கவனித்து நெருங்கினான் என்றால் நாசுக்காக அவனை தவிர்த்து விடுவாள்,, இரவு நேரங்களில் சத்யனுக்கு முன்பே புடவையை கலைந்து நைட்டியை தலைவழியாக மாட்டிக்கொண்டு அவனிடம் வந்து “ பின்னாடி சுருட்டிக்கிட்டு இருக்குபோல அதை எடுத்து விடுங்க மாமா” என்று அவன் ஆண்மைக்கு சோதனை வைத்தாள்

சத்யன் அதை சரிசெய்து விட்டு அவளை சேர்த்து அணைத்தான் என்றால்,, மெல்லிய புன்னகையோடு “ அய்யோ எனக்கு தூக்கம் வருது மாமா” என்று அவனை விலக்கி விட்டு தரையில் படுத்துக்கொள்வாள்

சில நாட்கள் கழித்து அம்மாவும் மதுரைக்கு கிளம்பி விட,, அவர்களது நெருக்கம் சற்று அதிகமானது,, ஆனால் மவுனமான நெருக்கம்,, ஒருவர் முகத்தை ஒருவர் நேரடியாக பார்த்துக்கொள்ளாமல் உடல்களை உரசிக்கொள்ள விட்டார்கள், அதனால் மூளும் நெருப்பை அணைக்க இருவருமே தைரியமில்லாமல் மவுனம் காத்தனர்

சத்யனுக்கு நாளுக்கு நாள் அவள்மீதான ஏக்கம் அதிகமானது,, ஆபிஸ் வீடு எங்கே இருந்தாலும் மான்சியின் ஞாபகங்கள்தான் அவனை வதைத்தது, இப்போதெல்லாம் அவள் சட்டு வெளிப்படையாக காட்ட ஆரம்பித்திருந்த உடல் பாகங்கள் சத்யனை பித்தனாக்கியது

இரவில் தூக்கம் வராமல் தவித்தான்,, அவனுக்கு எல்லாம் மறந்தது தேவியை மறக்க வைத்தது மான்சியின் அழகும் அன்பும்,, தேவியுடன் நடக்கும் காமப் போராட்டத்தை மான்சியின் காதல் வென்றது,, பூஜையறையில் மாட்டியிருக்கும் தேவியின் படத்தை தொட்டு கும்பிடும் போது மட்டுமே தேவியின் ஞாபங்கள் மனதை அழுத்தும்,,

இனி மான்சியை விட்டு விலகியிருப்பது கடினம் என்ற நிலையில் கடந்த இரண்டு நாட்களாக அவளிடம் தனது மாற்றத்தை சொல்லிவிட வேண்டும் என்று சத்யன் எண்ணிக்கொண்டு நெருங்கும் போதெல்லாம், மான்சி தன்னை நம்புவாளா,, வெறும் செக்ஸ்க்கு மட்டும் அவளை அனுகுவதாக தவறாக நினைப்பாளோ என்ற அச்சம் சத்யனை வாட்டியது

இப்போதெல்லாம் அவர்களுக்குள் ஒரு மவுன யுத்தம் நடந்தது,, இருவருக்கும் நடுவே இருந்த கனமான திரை தேய்ந்து மெல்லியதாக மாறிவிட்டது,, இருவரும் சேர்ந்து மூச்சை இழுத்து ஊதினாலே கிழிந்து வழிவிடும் அளவிற்கு மிக மெல்லிய திரைதான் இருந்தது,, ஆனால் அந்த திரையை யார் முதலில் கிழிப்பது என்ற தயக்கம் இருவரிடமும் இருந்தது

அன்று இரவும் அப்படித்தான்,, மான்சி பால் எடுத்து வந்து கொடுத்த பிறகு தனது புடவையை கலைந்துவிட்டு நைட்டியை மாட்டிக்கொண்டு தரையில் விரித்திருந்த படுக்கையில் படுத்துக்கொண்டாள்,, சத்யன் தன் கையில் இருந்த புத்தகத்தில் கவனம் போகாமல் தவித்தபடி ஓரக்கண்ணால் அவளையே பார்த்தான்

சிறிதுநேரத்தில் மான்சி உறங்கிவிட சத்யன் கட்டில் சம்மணமிட்டு அமர்ந்து அவளையே வெறித்தான், தனது கைகளை மார்புக்கு குறுக்கே கட்டிக்கொண்டு மான்சி உறங்கியதால் அவளின் செந்தனங்கள் மேல் நோக்கி பிதுங்கி இருந்தது,, வலது காலை நீட்டியும் இடதுகாலை மடக்கியும் மான்சி உறங்க,, முழங்கால் வரை உயர்ந்திருந்த நைட்டி அவளின் கால் அழகை வெளிச்சமிட்டுக் காட்டியது

பொறுக்க முடியவில்லை சத்யனால் பட்டென்று படுக்கையில் இருந்து எழுந்து அவளின் காலருகே மண்டியிட்டு அமர்ந்தான்,, முழங்கால் வரை உயர்ந்த நைட்டியை மேலும் உயர்த்தினான், மான்சியின் செவ்வாழை தொடைகள் இரவு விளக்கின் ஒளியில் மின்னியது

சத்யன் குனிந்து அவளின் வலது தொடையில் தனது உதட்டை பதித்து முத்தமிட,, இயல்பான பெண்மை சட்டென்று விழித்துக்கொள்ள மான்சி தடாலென்று எழுந்து அமர்ந்தாள்,, தன்னருகே மண்டியிட்டு அமர்ந்திருந்த சத்யனை பார்த்ததும் அவளுக்கு விஷயம் புரிந்திருக்க வேண்டும் " என்ன மாமா" என்று மட்டும் கேட்டுவிட்டு தலையை குனிந்துகொண்டாள்

அந்த ஒரு வார்த்தைக்காகவே இத்தனை நாளாக காத்திருந்தவன் போல சத்யன் " மான்சி நீ வேனும் மான்சி,, என்னால உன்னை பார்த்துக்கிட்டே நைட்ல தூங்கமுடியலை,, ரொம்ப தவிப்பா இருக்கு மான்சி,, நான் நைட்ல தூங்கி மூனு நாளாச்சு,, இப்பல்லாம் எனக்கு வேறெந்த ஞாபகமும் வரலை மான்சி நீ நீதான் வேனும், இதுக்குமேல என்னால தாங்கமுடியாது மான்சி" என்று புலம்பி தீர்த்த சத்யன் சட்டென எட்டி மான்சியை இழுத்து அணைக்க முயன்றான்

அவன் அணைத்த மறுநிமிடம் “ மாமா என்ன இது விடுங்க மாமா ப்ளீஸ் விடுங்க” என்று அவனை உதறி விலக்கினாள் மான்சி

அவள் தன்னை உதறியதும் கோபம் வர சத்யன் “ என்ன மான்சி இன்னும் நீ என்னை நம்பலையா?” என்று கேட்டான்

அவன் கோபத்தை கண்டு பயந்து தலைகுனிந்த மான்சி “ நம்புறது நம்பாதது இல்லை இப்போ விஷயம்,, இன்னிக்கு வேண்டாம் மாமா போய் படுங்க ப்ளீஸ்” என்று கெஞ்சினாள்

“ அதான் ஏன் வேண்டாம்” என்று சத்யன் பிடிவாதமாக கேட்க

"ம் அது அப்படித்தான் மாமா இன்னும் ரெண்டு நாளைக்கு எதுவுமே வேண்டாம்,, இந்த மூனு நாளும் நான் வெளிய தான் படுத்திருக்கனும்,, ஆனா எனக்கு தனியா படுக்க பயமா இருந்ததால இங்க வந்து படுத்துக்கிட்டேன்,, ஸாரி மாமா” என்று மான்சி திக்கித்திணறி சொல்லவும்

மான்சியின் நிலைமை சத்யனுக்கு புரிய, தனது துரதிர்ஷ்டத்தை எண்ணி அய்யோ என்று தலையில் அடித்துக்கொள்ள வேண்டும் என்ற உணர்வை கஷ்டப்பட்டு அடக்கிக்கொண்ட சத்யன் “ ஸாரி மான்சி தப்பா நெனைக்காதே,, எனக்கு இப்படின்னு தெரியாது ஸாரி,, நீ படுத்துக்கோ மான்சி” என்று சொல்லிவிட்டு தனது படுக்கையில் தொப்பென்று கவிழ்ந்து விழுந்தான் சத்யன்

அதன்பிறகு அவன் உணர்ச்சிகளை கட்டுக்குள் கொண்டு வந்து, அவன் எப்போது உறங்கினான் என்று அவனுக்கே தெரியாது,, காலையில் எழுந்தபோது பொழுது நன்றாக விடிந்துவிட்டது

மான்சி வந்து எழுப்பவில்லையே என்று நினைத்த வாறு அவசரமாக எழுந்து வெளியே வந்தான் சத்யன் ,, வெளியே ஹாலில் பரிமளாவும் பாண்டியனும்,, பாண்டியனுடைய அம்மாவும் சோபாவில் அமர்ந்து காபி குடித்துக்கொண்டு இருந்தனர்

அவர்களை பார்த்து அதிசயித்த சத்யன் பாண்டியன் அருகில் போய் அமர்ந்து “ என்ன மாமா சொல்லாம கொல்லாம வந்துருக்கீங்க,, போன் பண்ணி ஒரு வார்த்தை சொல்லியிருந்தா ஸ்டேஷனுக்கு கார் எடுத்துகிட்டு வந்திருப்பேனே” என்று சத்யன் கேட்க

“ இல்ல மாப்ளே அம்மா அம்முவை பார்க்கனும்னு ரொம்ப பிடிவாதமா இருந்தாங்க அதான் நேத்து அவசரமா கிளம்பி வந்தோம்,, அதோட மூனாவது மாசத்துக்கு மான்சிக்கு சில சம்பிரதாயங்களை செய்யனும் அதனாலயும் வந்தோம் மாப்ளே” என்று பாண்டியன் சொல்ல

“என்ன சம்பிரதாயம் மாமா” என்று சத்யன் குழப்பமாக கேட்டான்

“ அது வேறொன்னும் இல்ல மாப்ளே,, கல்யாணம் ஆகி மூனா மாசம் எங்க வீட்டுக்கு கூட்டிப்போய் தாலி கயிறு மாத்தி போடுறது ஒரு சம்பிரதாயம்,, பொண்ணுங்க வாழ்க்கையில ரொம்ப முக்கியமானதும் கூட ,, அதான் நாங்களே வந்து அம்மூவை கையோட கூட்டிப்போகலாம்னு வந்தோம்” என்று பாண்டியன் முடிக்க

“ ஓ அப்படியா” என்றவன் “ சரி கொஞ்சம் இருங்க மாமா நான் குளிச்சுட்டு வர்றேன்” என்று சொல்லிவிட்டு எழுந்து போனான் சத்யன்
பின்னாலேயே டவல் எடுத்துக்கொண்டு வந்த மான்சியை பார்த்து “ என்ன மான்சி அவங்க கூட கிளம்ப போறியா” என்று கேட்டான் சத்யன்

“ ஆமா மாமா நான் போகலைன்னா பாட்டி சும்மா விடாது திட்டும்,, பாட்டிக்கு சம்பிரதாயங்கள் ரொம்ப முக்கியம்,, அதனால இன்னிக்கு நைட் ட்ரைனுக்கு கிளம்புறேன் மாமா” என்று மான்சி தயங்கி தயங்கி சொன்னாள்

அவளையே பார்த்த சத்யன் “ சரி கிளம்பு மான்சி,, கொஞ்ச நாள் கழிச்சு எனக்கு டைம் இருந்தா வர்றேன்” என்று சொல்லிவிட்டு பாத்ரூமுக்குள் புகுந்து கொண்டான்



அன்று மாலை சத்யன் வீட்டுக்கு வந்த போது மான்சி தனது பெற்றோருடன் புறப்பட தயாராக இருக்க,, சத்யன் எதுவும் பேசாமல் மனதில் சூழ்ந்த வெறுமையை மறைத்து அவர்களை காரில் ஏற்றிச்சென்று ரயில்நிலையத்தில் வழியனுப்பி விட்டுட்டு வந்தான்

வீட்டுக்கு வந்து படுக்கையில் விழுந்தவனுக்கு தூக்கமே வரவில்லை,, மான்சி இல்லாத வீடு நரகமாக காட்சியளித்தது,, நடு இரவில் மின்சாரம் நின்று போய்விட, தலையனையை எடுத்துக்கொண்டு மொட்டை மாடியில் போய் படுத்தான் சத்யன்

வானில் காய்ந்த பவுர்ணமி நிலவின் அழகை ரசிக்க முயன்றான் சத்யன் அங்கே நிலவுக்கு பதிலாக மான்சியின் எழில் கொஞ்சும் மதிமுகம் தான் தெரிந்தது 


" ஏய் நிலவே ..

" காதலாகி கசிந்துருகி சருகாய் உதிர்ந்து,,

" அவளே யாதுமாகி நிற்கின்றேனே"

" அவளிடம் இதைச்சொல்வாயா?

" என்னை மட்டுமே

" இதயத்தில் கொண்ட என்னவள்...

" தன்னை எனக்காகத்...

" தயங்காது தர வந்தவள்!

" என் இதயச்சிறையில் அவளின்..

" நினைவின்றி வேறில்லை..

" அவளிடம் இதைச்சொல்வாயா?"



No comments:

Post a Comment