Friday, August 21, 2015

மனசுக்குள் மான்சி - அத்தியாயம் - 18



மான்சியின் புடவை முழங்கால் வரை சுருண்டது, அதற்குமேல் காலால் புடவையை உயர்த்த முடியாமல் சத்யனின் கை உதவிக்கு போனது, கையால் புடவையை மேலும் ஏற்றி அவளின் உள்ளாடைக்கு மேலாக அவள் புட்டத்தில் கை வைத்த சத்யனுக்கு தனது ஆண்மையை அடக்கமுடியாமல் அவளோடு சேர்த்து அழுத்தி அவள் பெண்மையில் உரசி தனது எழுச்சியை உணர்த்தினான்
அவர்களின் காதல் தனது கடைசி எல்லையில் தட்டுத்தடுமாறி நின்றுகொண்டு போராடியது, இன்னும் ஒருபடி முன்னேறினால் காமத்தின் எல்லையைத் தொட்டுவிடுவார்கள்,

ஆனால் அவனுடைய ஆண்மையின் வீரியம் மான்சியை நடப்பதையும் இனி நடக்கப் போவதையும் வெளிச்சம் போட்டுக் காட்டியது, அவளின கற்பின் கவசமான பெண்மையின் எச்சரிக்கை மணி இதயத்தில் ஒலிக்க அவள் உடல் விரைத்து நிமிர்ந்தது, அடுத்த நிமிடம் ஒரு நடன மங்கையின் லாவகத்துடன் அவன்மீது இருந்து தாவி இறங்கி தரையில் நின்றாள்,

ஆசையாய் தின்ற உணவு பாதியில் பறிக்கப்பட்ட குழந்தையைப் போல் பரிதாபமாக அவளை பார்த்து விழித்த சத்யன், அவள் கலங்கிய கண்களுடன் அவசரமாய் புடவையை சரிசெய்தாள்



சத்யனுக்கு நடந்தவைகள் உரைக்க கட்டிலில் இருந்து இறங்கினான்,, அமைதியாக மான்சியின் அருகில் போய் நின்று “ ஸாரி மான்சி,, கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்டுட்டேன் மன்னிச்சுடு” என்றான் மெல்லிய குரலில்

மான்சி அமைதியாக கலங்கிய கண்களுடன் கலைந்த கூந்தலை சரிசெய்தாள், நடந்ததை நினைத்து கூசுகிறாள் என்று எண்ணிய சத்யன் அவளிடம் மன்னிப்பை யாசிப்பது போல் அவள் தோளில் கைவைத்தான் “ மான்சி என்னைப்பற்றி தவறா நினைக்காதே, ப்ளீஸ் கொஞ்சம் எல்லை மீறிட்டேன், இனிமேல் அப்படியெல்லாம் நடக்காது மான்சி, ப்ளீஸ் ஏதாவது பேசு மான்சி, உன் அமைதி எனக்கு சங்கடமா இருக்கு” என்று கூறி மன்னிப்பை வேண்டி அவளை கலங்கிய கண்களுடன் பார்த்தான்

அவனை அப்படி பார்க்கவே மான்சிக்கு பொறுக்கவில்லை, சட்டென்று அவன் வாயை பொத்தி “ தயவுசெய்து மன்னிப்பு அதுஇதுன்னு சொல்லி நடந்ததை கொச்சைப்படுத்தாதீங்க,, நீங்க ஒன்னும் என் சம்மதம் இல்லாம என்னை தொடலையே, நானும்தானே” என்றவள் முடிக்காமல் தலையை குனிந்துகொண்டாள்

அது போதும் சத்யனுக்கு, அவளுக்கு கோபமில்லை, பெண்களின் இயல்பான பாதுகாப்பு உணர்வுதான் அவளை கண்கலங்க வைத்தது என்ற நிம்மதியுடன், ஊப்ஸ் என்று பெரிய மூச்சை வெளியிட்டு, அவளை இழுத்து தன்னுடன் அணைத்துக்கொண்டு " ரொம்ப பயந்துட்டேன் மான்சி, எங்கே என்னை வெறுத்துடுவியோன்னு" என்று அவளை மேலும் இறுக்கினான்

" ச்சே என்ன இது இப்படி பேசிட்டீங்க, உங்களைப்போய் நான் வெறுப்பேனா, அது எந்த சந்தர்பத்திலும் நடக்காது,, என்னைப்பொறுத்தவரை நீங்க உயிர், உயிரைப் போய் யாராவது வெறுப்பாங்களா?" என்று அவன் நெஞ்சில் படுத்து கதை பேசியவள் நிமிர்ந்து அவன் முகத்தை பார்த்து " வாங்க சாப்பிட போகலாம், நான் சாப்பிட்டு முழுசா ஒரு நாள் ஆச்சு" என்று அவள் சொன்ன மறுவினாடி ..

" அய்யோ ஸாரிடா கண்மணி வா வா போய் சாப்பிடலாம்" என்று கூறிவிட்டு அவளை இழுத்துக்கொண்டு உற்ச்சாகமாக வெளியே ஓடினான்

டைனிங் ஹாலில் சிரிப்பும் கொஞ்சலுமாக இருவரும் சாப்பிட்டு எழுந்தனர்,

சிறிதுநேரம் ஹாலில் அமர்ந்து அவளின் மாமா குடும்பத்தை பற்றிய மொத்த தகவலையும் அவளிடமிருந்து வாங்கிய சத்யன் " அப்படின்னா மொதல்ல அன்பா தான் இருந்திருக்காங்க, உங்க அம்மாவுக்கு பங்கிட்டுக் கொடுத்த சொத்துதான் இப்போ விரோதத்தை வளர்த்திருக்கு" என்று மான்சியிடம் கேட்டான் ,,

அவள் ஆமாம் என்று தலையசைக்க,, சிறிதுநேரம் அமைதியாக எதையோ சிந்தித்தவன் பிறகு அவளை நிமிர்ந்து பார்த்து " சரி எல்லாத்தையும் நான் பார்த்துக்கிறேன் நீ போய் தூங்கு நேரமாச்சு நாளைக்கு ஊருக்கு போகனும் " என்று கூறிவிட்டு எழுந்து மாடியேறினான்

நான்கைந்து படிகள் ஏறிய சத்யன் மாடிப்படியில் நின்று அவளை திரும்பி பார்த்தான், அவன் பார்வை அவளிடம் எதையோ வேண்டியது,

மான்சி சில வினாடிகள்தான் அவன் முகத்தை பார்த்தாள், உடனே எழுந்து மாடி படியில் ஏறி அவனை நெருங்கி அவன் முகத்தை தன்னருகே இழுத்து அவன் உதட்டில் அழுத்தமாக ஒரு முத்தத்தை பதித்தாள், அந்த அழுத்தம் சிறிதுநேரம் நீட்டிக்க பிறகு அவனை விலக்கி விட்டு " சீக்கிரமாகவே கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்ணுங்க, நீங்க இப்படி தவிக்கிறது என் மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு" என்று மெல்லிய குரலில் கூறிவிட்டு விடுவிடுவென படிகளில் இறங்கி பாட்டியின் அறையை நோக்கி ஓடினாள்

அவள் போய் வெகுநேரம் வரை சத்யன் அவள் போன திக்கையே பார்த்துக்கொண்டு அப்படியே நின்றான், அவன் உதட்டில் மான்சியின் இதழ்களின் ஈரம் இன்னும் காயவில்லை, அவள் போகும்போது ரகசியமாய் கூறிய வார்த்தைகள் அவன் மறுபடியும் காதில் ஒலித்தது, ‘என் தவிப்புகளை புரிந்துகொண்ட காதலி,, ‘என் தவிப்புக்கு மருந்து இருவரின் இணைப்பு என்று புரிந்துகொண்ட காதலி,, அதற்கான வழி திருமணம் தான் என்று சொல்லிவிட்டு அதையும் விரைந்து முடிக்க கட்டளையிடும் காதலி,, சத்யனுக்கு ஓடிப்போய் அவளை தூக்கிக்கொண்டு தனது அறைக்குள் போய் கதவை சாத்திக்கொண்டு எல்லாவற்றையும் இன்றே ரசித்து ருசிக்க வேண்டும் போல் ஒரு வேகம் வந்தது, அடக்கிக்கொண்டு மாடியேறினான்

அறைக்குள் வந்த மான்சிக்கு சிறிதுநேரம் படபடப்பாக இருந்தது, கதவை மூடிவிட்டு அதிலேயே சாய்ந்து நின்று கொண்டாள்,, அவன் உதட்டை அழுத்திய தன் இதழ்களை நாவால் தடவிக்கொண்டாள்,, கிடைத்த ஐந்து நிமிஷத்தில் மாடியறைல் அவன் செய்த லீலைகளை எண்ணி அவளுக்கு வெட்கம் வந்தது, அயன் விரல் மற்றும் உடல் பட்ட இடமெல்லாம் மயிர்க்கூச்செரிந்தது,, அவள் மார்பு விம்மி தனிந்தது

“ என்னம்மா சாப்பிட்டாச்சா” என்ற பாட்டியின் குரல் கேட்டு மான்சி திடுக்கிட்டு பார்த்தாள்

பாட்டி பாரதத்தை கையில் வைத்துக்கொண்டு இன்னும் விழித்திருந்தார்,, தனது உணர்ச்சிப் போராட்டங்களை அவரும் கவனித்திருப்பாரோ என்று உள்ளத்தில் ஒரு சங்கடம் உண்டாக “ என்னாச்சு பாட்டி இன்னும் தூங்கலையா” என்றாள் மான்சி

“ இன்னும் இல்லம்மா உனக்காக தான் காத்திருக்கேன்,, கதவை மூடிட்டு இங்கே வா” என்றார்

மான்சி அவர் சொன்னதை செய்துவிட்டு அவரருகே வந்து அமர்ந்து “ சொல்லுங்க பாட்டி, ஏன் இன்னும் தூங்கலை” என்று கேட்டாள்

“ ம் ஆதி பாரதத்தில் பெண்கள் அந்தப்புரத்தை அலங்கரிக்கும் போகப் பொருளாகவும் இருந்திருக்கிறார்கள்,, அதே சமயம் அரசகுல மரபில் வந்த பெண்களுக்கு ஐந்து கணவர் என்பதையும் மக்கள் ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள்,, மகாபாரதத்தின் வித்தான பஞ்ச பாண்டவர்கள் ஒருவர்கூட பாண்டுவுக்கு பிறக்கவில்லை, பாரதத்தில் நிறைய உறவுகள் முறையற்றே நடந்துள்ளது,, அந்த காலத்தில் தெய்வாம்சம் என்று இதெல்லாம் ஏற்றுக்கொள்ளப்பட்டு இருக்கு,, ஆனா இந்த காலத்துல பெண் ஒரு சிறு தவறு செய்தாலும் அது அவளது தலைமுறையையே பாதிக்கிறதே அதைப்பற்றி யோசித்தேன்னம்மா” என்றார்


பிறகு எதையோ நினைத்துக்கொண்டு “ உன்னோட செல்போன்ல இருந்து அனிதாவுக்கு போன் பண்ணி கொடு அவகிட்ட பேசலாம்” என்றார்

மான்சி உடனே அனிதாவுக்கு போன் செய்து ரிங் போனதும் பாட்டியிடம் கொடுத்தாள்

மொபைலை வாங்கிய பாட்டி “ என்னம்மா அனிதா கோயிலுக்கு போய்ட்டு வீட்டுக்கு வந்துட்டீங்களா?” என்று கேட்டார்

“ ம் வந்துட்டோம் பாட்டி வந்து அஞ்சு நிமிஷம் ஆச்சு,, என்ன பாட்டி இந்த நேரத்துல, அதுவும் இது மான்சியோட நம்பர் ஆச்சே,, மான்சி அங்கதான் இருக்காளா?, நல்லாருக்கா தானே?” என்று அனிதா சரமாறியாக கேள்விகளை கேட்க

பாட்டி பொருமையாக சத்யன் கூறியவற்றை எல்லாம் அனிதாவிடம் சொல்லிவிட்டு “ இதுதான் நடந்தது, இனிமே நான் சொல்றதை கவணமா கேளு அனிதா,, காலங்கார்த்தால கிளம்பி இங்க வா, வந்து உன் அண்ணன் கிட்ட, நீங்களும் மான்சியோட ஊருக்கு வர்றதா அனுமதி கேளு,நீ கேட்டா அவன் எதையும் மறுக்க மாட்டான்,, ஆனால் சாமர்த்தியமா கேட்கனும், மான்சி உனக்கு துணையா இருப்பா,, நான் மான்சிகிட்டயும் இதை பத்தி சொல்லிவைக்கிறேன், ஞாபகமா காலங்கார்த்தால வந்துரு அனிதா” என்று பாட்டி பேசப்பேச மான்சி திகைப்பில் வாய் பிளந்தாள்

இவ்வளவு சாமர்த்தியமாக செயல்படும் பாட்டி ஏன் இவ்வளவு நாளா சத்யனை பொற்றவருடன் சேர்க்கவில்லை, என்ற கேள்வி அவள் மனதில் எழுந்தது

அனிதாவிடம் பேசிமுடித்து இணைப்பை துண்டித்து விட்டு மொபைலை மான்சியிடம் நீட்டிய “ என்ன மான்சி அப்படி பார்க்கிற?” என்று கேட்டார் பாட்டி

மான்சி தன் மனதில் தோன்றி கேள்வியை பாட்டியிடம் கேட்டேவிட்டாள்,

அவளை கூர்ந்து பார்த்த பாட்டி “ ஏன் மான்சி இத்தனை நாளா சத்யனை கெஞ்சமட்டுமே ஆள் இருந்தது,, இப்போ தானே கொஞ்சுறதுக்கும் ஆள் வந்துருக்கு, இனிமேல் எங்களோட கெஞ்சலும் உன்னோட கொஞ்சலும் சேர்ந்து எல்லாம் ஒட்டு மொத்தமா சத்யனை அசைக்கப் போகுது, என்ன மான்சி நான் சொல்றது புரியுதா ” என்று கேட்டார்

“ பாட்டி” என்று கூவிய மான்சி ஓடிச்சென்று பாட்டியை அணைத்துக்கொண்டாள்

அவளை விலக்கி நிறுத்தி மான்சியின் நெற்றியில் கைகளால் தடவி திருஷ்டி கழித்த பாட்டி “ மான்சி உன்னோட அழகுக்கும், ரஞ்சனாவோட அன்புக்கும் சத்யன் தன்னோட பிடிவாதத்தை விலைகொடுத்தே ஆகனும், அவனுக்கு வேற வழியில்லை,, நீ போய் படுத்து தூங்கு, காலையில சீக்கிரமா எழுந்திருக்கனும்” என்று கூறிவிட்டு பாட்டி படுக்கையில் சாய்ந்தார்

வயதானாலும் சமயோசிதமாக செயல்படும் பாட்டியை எண்ணி வியந்தபடி மான்சி அருகில் இருந்த பெரிய சோபாவில் படுத்துக்கொண்டாள்

மறுநாள் காலை அனிதா வந்துதான் அவளை எழுப்பினாள், எழுந்து அமர்ந்த மான்சியை இறுக்கி அணைத்துக்கொண்டாள் அனிதா..




“ ஏய் ஏய் விடுடி” என்று மான்சி அலற,, அவளை விடுவித்த அனிதா மான்சியின் கன்னத்தில் முத்தமிட்டு “ எங்க அண்ணிக்கு குட்மார்னிங்,, ஆனா பதிலுக்கு எனக்கு தரவேண்டிய முத்தத்தை எனது அண்ணணுக்கு வழங்குமாறு சிபாரிசு செய்கிறேன்” என்று அறிவித்தாள்

“ ஏய் அனிதா மெதுவா பேசுடி, பாட்டி இருக்காங்க ” என்று எச்சரிக்கை செய்ய

“ ம்ஹூம் பாட்டி எப்பவோ எழுந்து குளிச்சிட்டு பூஜை ரூம்ல இருக்காங்க,, நம்ம திட்டம் பலிக்கனும்னு வசுவும் அவங்களோட சேர்ந்து சாமி கும்பிடுறா, இப்போ மேடத்துக்காக தான் வெயிட்டிங், எழுந்து வர்றீங்களா, இல்லை என் அண்ணன் வந்து தூக்கிட்டுப் போய் பாத்ரூம்ல கொண்டு போய் விடனுமா?” என்று அனிதா இடுப்பில் கைவைத்தபடி கேட்க

“ அய்யய்யோ அவ்வளவு நேரமாச்சா” என்ற மான்சி வாரிச்சுருட்டிக் கொண்டு பாத்ரூமுக்கு ஓடினாள்

மான்சி குளித்துவிட்டு வெளியே வந்தபோது,, அங்கே அனிதா, வசந்தி, பாட்டி மூவரும் அமர்ந்து பேசிக்கொண்டு இருந்தனர்,, காலை சூரியனின் வெளிச்சத்தை கடன் வாங்கி வந்தவள் போல பளிச்சென்று வந்து நின்ற மான்சியை பார்த்து மூவரும் வியந்து போனார்கள்

“ மான்சி சத்யன் இன்னும் எழுந்திரிக்கலை, நீ காபி எடுத்துட்டு போய் குடுத்து அவனை எழுப்பி எத்தனை மணிக்கு ஊருக்கு கிளம்புறதுன்னு கேளு” என்று பாட்டி உத்தரவிட..

சரியென்று தலையசைத்து விட்டு ராஜம்மா கொடுத்த காபியை வாங்கிக்கொண்டு படியேறியவள் தயங்கி நின்று திரும்பி “ அனிதா வசு நீங்களும் கூட வாங்களேன்” என்றாள்

“ என்னது நாங்களா,, அண்ணன் ரூமுக்கா” என்று இருவரும் ஒரேசமயத்தில் ஆச்சரியமாக குரல்கொடுக்க,

பாட்டி அனிதாவின் தோளில் தட்டி “ ம் போங்க, எதுவும் சொல்லமாட்டான்” என்றார்

உடனே இருவரும் உற்சாகத்துடன் குதித்தபடி மான்சியுடன் சத்யன் அறைக்கு வந்தனர்,, அனிதாவும் வசுவும் அறையின் மூலையில் கிடந்த சோபாவில் அமர்ந்தனர்

சத்யன் கட்டிலில் கவிழ்ந்து படுத்து, ஒருகாலை நீட்டி ஒரு கால மடித்து, மடித்த காலுக்கு அடியில் ஒரு தலையனையை வைத்து அதை மார்போடு அணைத்தபடி உறங்கினான்

அவன் தூங்கும் அழகை ரசித்தபடி சிறிதுநேரம் நின்ற மான்சி காபியை அருகில் இருந்த மேசையில் வைத்துவிட்டு, அவன் முதுகில் மெதுவாக தட்டி “ ரொம்ப நேரமாச்சு எழுந்திரிங்க” என்றாள்

சத்யன் அசையாமல் படுத்திருந்தான்,, மான்சி மறுபடியும் அவன் தோளில் கைவைத்து சற்று பலமாக உலுக்க,, ஏற்கனவே விழித்துவிட்ட சத்யன் தன் தோளில் இருந்த மான்சியின் கையைப்பிடித்து வேகமாக முன்பக்கம் இழுக்க, மான்சி அப்படியே சரிந்து அவன் மேல் விழுந்து பக்கவாட்டில் சரிந்தாள் ,

அடுத்த நிமிடம் அவளை தன் காலால் சுற்றி வளைத்த சத்யன், அவள் சுதாரிப்பதற்குள் நெத்தியில் முத்தமிட்டு “ இந்த நாளை நான் மறக்கவே மாட்டேன், என் அம்மாவுக்கு பிறகு என்னை தூக்கத்தில் எழுப்பும் இரண்டாவது பெண் நீதான்,, இல்லேன்னா தினமும் என்னை இன்டர்காம் தான் அலறி எழுப்பும்” என்று கூறியவன் மறுபடியும் அவள் இரண்டு கன்னத்திலும் மாறி மாறி முத்தமிட்டான்..


“ அய்யய்யோ விடுங்க என்னை அனிதா வசு வந்திருக்காங்க” என்று மான்சி கூற..

“ வரட்டுமே, அதனால இப்ப என்ன, கீழே தானே இருக்காங்க” என்று கூறி தன் மூக்கால் அவள் மூக்கை உரசினான்

“ அய்யோ கடவுளே இங்கதான் இருக்காங்க,, கொஞ்சம் பின்னாடி திரும்பி பாருங்களேன் ” என்று மான்சி அவனிடம் கிசுகிசுக்க.........

“ என்னது இங்கேயா?” என்று அலறி எழுந்து கட்டிலைவிட்டு தாவி இறங்கினான் சத்யன், அங்கே அனிதாவும் வசுவும் சுவர் பக்கமாக திரும்பி கண்களை மூடிக்கொண்டு இருந்தனர்

“ ஏய் நீங்க எங்க இங்கே வந்தீங்க ” என்று சத்யன் அதட்டிவிட்டு, திரும்பி மான்சியை பார்த்தான், மான்சி கட்டிலிலிருந்து இறங்கி சுடிதாரின்மேல் டாப்பை இழுத்து சரிசெய்துகொண்டு இருந்தாள்

அவனை பார்த்து சங்கடமாக நெற்றியில் அடித்துக்கொண்டாள், சத்யன் அசடு வழிய திரும்ப,, “ அண்ணா கண்ணை திறக்கலாமா” என்றாள் வசு குறும்புடன்

“ ஏய் வாலு கண்ணைத் திற, இங்க ஒன்னும் நடக்கலை ” என்ற சத்யன் சோபாவில் வசுவின் அருகில் போய் அமர்ந்து “ என்னம்மா இவ்வளவு காலையிலேயே வந்துருக்கீங்க, என்ன வருங்கால அண்ணியின் தரிசனம் பார்க்கவா?” என்று வேடிக்கையாக கேட்டான்

தனது அண்ணன் எப்போதாவது தீபாவளி பொங்கல் ரம்ஜான் மாதிரிதான் வேடிக்கையாக பேசுவான் என்பதால், இருவரும் கடைவாய்ப் பல் தெரியுமளவுக்கு சிரித்தார்கள்,, சத்யன் தனது அறைக்குள் அவர்கள் வந்ததை பற்றி கண்டுகொள்ளாதது வேறு அவர்களின் சந்தோஷத்தை அதிகமாக்கியது,

வசுதான் ஆரம்பித்தாள் “ இல்லண்ணா,, எங்களுக்கும் அண்ணியோட ஊரைப் பார்க்கனும்னு ஆசையா இருக்கு, அதனால நாங்களும் போறோம்ணா ப்ளீஸ்” என்று அந்த சிறியவள் தலையை ஒரு பக்கமாக சாய்த்து, கண்களை சுருக்கி, விரல்களை குவித்து கெஞ்சும்போது யாரால்தான் மறுக்க முடியும்..

சத்யன் அமைதியாக இருந்தான், “ அண்ணா நாங்க எதுவும் தொந்தரவு செய்யமாட்டோம்ணா ப்ளீஸ்” என்று வசு மறுபடியும் கெஞ்சினாள்

இந்த முறை சத்யனால் அமைதி காக்க முடியவில்லை “ சரி கிளம்புங்க” என்று மட்டும் கூறினான்

மான்சி அவன் பக்கத்தில் நின்றுகொண்டு அனிதாவுக்கு கண் ஜாடை செய்ய, அவள் சரியென்று மெலிதாக தலையசைத்து “ அண்ணா அப்பாவும் அண்ணியோட வரனும்னு ஆசை படுறார்” என்றாள்

சத்யன் வெடுக்கென்று நிமிர்ந்து அவளை பார்த்தான்,, “ அவருக்கு அங்கே என்ன வேலை,, அவருக்கு உடம்பு வேற சரியில்லையே, அதனால அவர் வேனாம்” என்று பட்டென்று கூறிவிட்டு எழுந்து பாத்ரூம் நோக்கி நடந்தான்

பெண்கள் மூவரும் பதட்டமாக அவன் பின்னே ஓடினார்கள், மான்சி அவன் கையை பிடித்துக்கொண்டு “ என்னங்க இப்படி பட்டுன்னு சொல்லிட்டீங்க, காலையில நான்தான் போன் பண்ணி எல்லோரும் கிளம்புங்க எங்க வீட்டுக்கு போகலாம்னு சொல்லிட்டேன், அதனாலதான் இவங்களும் வந்தாங்க,, இப்போ போய் யாரும் வரவேண்டாம்னு சொன்னா அவங்க என்னை பத்தி என்ன நினைப்பாங்க,, உங்களை கேக்காம சொன்னது தப்புத்தான், ப்ளீஸ்ங்க எல்லாரும் போறோம்ங்க” என்று பொய்யை அழகாக இட்டுக்கட்டி அதையும் அவனை உரசிக்கொண்டே சொன்னாள்

சத்யன் நின்று அவள் பற்றியிருந்த கையை விடுவித்து விட்டு, திரும்பி அனிதா வசுவை பார்த்தான்,, வசு அழுதுவிடுவாள் போல கண்ணீர் தேங்கிய கண்களுடன் நின்றிருந்தாள்,, அனிதாவோ அவன் என்ன சொல்வானோ என்ற எதிர்பார்ப்பில் அவன் முகத்தையே பார்த்தாள்,

சத்யன் மான்சியை பார்த்தான், அவள் அவனை காதல் பொங்கும் விழிகளுடனும், ஈரமான உதடுகளுடனும், சொக்கவைக்கும் அழகுடன் அவனை விழியால் விழுங்குபவள் போல பார்த்தாள்


சத்யன் எதுவுமே சொல்லாமல், பாத்ரூமுக்குள் போக,, அனிதா ஏமாற்றத்துடன் மான்சியை பார்த்தாள், மான்சி தன் நெஞ்சில் கைவைத்து தான் பார்த்துக்கொள்வதாக கூறி அவர்களை வெளியே தள்ளிக்கொண்டு வந்தாள்,

அனிதா நீ அங்கிளுக்கு போன் பண்ணி , ஆன்ட்டி அங்கிள் ரெண்டு பேரையும் ரெடியாகச் சொல்லு, அவர் எதுவும் சொல்லமாட்டார் , நான் பார்த்துக்கிறேன், நீ போய் ஊருக்கு கிளம்ப தயாராகு நான் இதோ வர்றேன் ” என்று கூறிவிட்டு மறுபடியும் அறைக்குள் வந்து கட்டிலில் குத்தங்காலிட்டு அமர்ந்துகொண்டாள்

“ ம்ம் கோபம் வருதா உங்களுக்கு,, உங்களோட கோபத்தை எப்படி தணிக்கிறதுன்னு எனக்கு தெரியும், அதான் உங்க வீக்னஸ் தெரிஞ்சு போச்சே, நானும், நான் கொடுக்கும் முத்தமும் தான் உங்க வீக்னஸ்னு புரிஞ்சுபோச்சு, இனிமேல் எப்படி கோபப்படுறீங்கன்னு பார்க்கிறேன்” என்று மனதுக்குள் எண்ணமிட்ட படி அமர்ந்திருந்தாள்

குளித்துவிட்டு பாத்ரூமில் இருந்து வெளியே வந்த சத்யன் இவளை பார்த்தும் பார்க்காதது போல் டிரசிங்டேபிள் முன்பு நின்று தண்ணீர் வழிந்த தனது புஜங்களை டவலால் தொடைத்தான்,

ஓகோ சாருக்கு கோபம் போலருக்கு, என்று எண்ணியபடி மெதுவாக அவன் பின்னால் போய் நின்றவள், முன்புறமாக கையை செலுத்தி அவனை அணைத்துக் கொண்டு அவன் முதுகில் வழிந்த நீரை தன் உதட்டால் வழித்து எடுத்தாள், முன்புறம் சென்ற கைகள் அவன் மார்பு முடியை வருடி சுருட்டி இழுத்தது

“ ஏய் மான்சி என்னப் பண்ற விடு, ஏ......ய் மான்சி ” என்று அரைகுறையாக பேசி சத்யன் தடுமாறினான், அவன் கையில் இருந்த டவல் நழுவி கீழே விழுந்தது, குளிர்ந்த நீரில் குளித்த அவனது உடல் கடகடவென சூடேறியது, கால்கள் வலுவிழந்து துவள்வது போல இருந்தது

முன்புறம் அவனது மார்பின் ஈர மயிர்களை வருடிய மான்சி விரலில் தட்டுப்பட்ட அவனது மார்பின் சிறிய காம்பை தனது நகத்தால் சுரண்டி அவனுக்குள் தீயை மூட்டினாள்

“ ஏய் என்னடி பண்ற” என்று சத்யன் முனங்கலாய் கேட்க...

மான்சி அதை காதில் வாங்காது அவன் முதுகில் தனது நாக்கால் கோலம் வரைந்தாள், உதட்டால் உஷ்ணத்தை ஏற்றினாள்,, பற்களால் கடித்து அவனை பறக்கவிட்டாள், தனக்கு தெரியாத இந்த மன்மத வித்தையில் அவள் தெரிந்த யுக்தியை கையாண்டாள்

அவளின் ஒவ்வொரு தொடுகைக்கும் சத்யன் சொக்கிப்போனான், அவன் வாய் பிளந்து சூடான மூச்சுகாற்றை வெளியேற்றி அந்த அறைக்கே அன்ல் மூட்டினான், ஒரு கட்டத்தில் தாங்கமுடியாமல் தனது கையை பின்னுக்கு செலுத்தி அவளை முன்னே இழுத்து அணைத்தவாறு தரையில் சரிந்தான்

மான்சி தரையில் கிடக்க சத்யன் அவள் மீது படர்ந்தான், அவள் முகத்தை தன் முகத்தால் தேய்த்து " மான்சி மை லவ் " என்று புலம்பியபடியே அவளை அணைத்துக்கொண்டு தரையில் உருண்டான்,

இப்போது அவள் மேலேயும் அவன் கீழேயும் வர, மான்சி அவன் உதட்டை கடித்து இழுத்து ஒரு நீண்ட அற்புதமான முத்தத்தை அவனுக்கு தந்தாள்,, சத்யன் அந்த ஒரு முத்தத்துக்கே கண்கள் சொருக மயங்கிப்போனான், அவள் வாசனை அவனை மேலும் கிரங்கடித்தது

முத்தமிட்டு முடித்த பின் அவனுக்கு இரண்டு பக்கமும் கையூன்றி எழுந்த மான்சி அவன் முகத்தைப் பார்த்து அவன் நில*ையை சரியாக யூகித்து " ஏங்க மாமாவை வரவேனாம்னு சொல்றீங்க,, அவர்பாட்டுக்கு அவர் கார்ல வரப்போறார், அதோட யாருமே இல்லாம போனா என் மாமா வீட்டுல இன்னும் இளக்காரமா தானே நினைப்பாங்க" என்றவள் ஊன்றிய கைகளை சட்டென்று மடக்கி அவன் மீது விழுந்தாள்,

அவன் கன்னத்தில் தன் உதட்டால் தேய்த்து, காதை கவ்வி இழுத்து " என்னங்க மாமாவை வரச்சொல்லவா? நான் காலையில சொல்லிட்டு இப்போ வேனாம்னு சொன்னா, அவங்க என்ன நினைப்பாங்க, புருஷன் பொண்டாட்டின்னா பேச்சில் ஒற்றுமை இருக்கனும்ங்க" என்று தனது கடைசி அஸ்திரத்தை பயன்படுத்தினள்

புருஷன் பொண்டாட்டி என்றதுமே சத்யன் முகம் சட்டென்று மலர, அவள் கன்னத்தோடு கன்னம் வைத்து " பொண்டாட்டி சொன்னா நான் மறுப்பேனாடி என் கண்மணி" என்று கூறிவிட்டு அவளை அணைத்துக்கொண்டு மறுபடியும் உருண்டு அவளை கீழே தள்ள முயன்றான்

மான்சி லாவகமாக அவனிடமிருந்து விலகி எழுந்து " சரி சீக்கிரம் கீழே வாங்க,, நான் போய் ஊருக்கு தயாராகிறேன்" என்று சொல்லிவிட்டு கதவை திறந்துகொண்டு சிட்டாகப்பறந்தாள்

தரையில் மல்லாந்து கிடந்த சத்யனுக்கு நடப்பு புரியவே சிறிது நேரமானது, புரிந்ததும் தலையிலடித்துக்கொண்டு எழுந்து அமர்ந்தான் 





No comments:

Post a Comment