Friday, August 14, 2015

மனசுக்குள் மான்சி - அத்தியாயம் - 4

மறுநாள் கண்விழித்த சத்யனுக்கு இந்த உலகமே தனக்காகத்தான் விடிந்தது போல் இருந்தது,, ஜன்னலை திறந்து தோட்டத்தில் இருக்கும் மகிள மரத்தில் அமர்ந்து கூவும் குயில்களின் நாதத்தை ரசித்தான், தொட்டிகளில் இருந்த பனிமூடிய ரோஜாக்களி அழகை விழியெடுக்காமல் ரசித்து பார்த்தான்,, ஜன்னலுக்கு அருகில் இருந்த மரமல்லி கிளையில் இருந்து கைநீட்டி ஒரு பூவை பறித்து முகர்ந்து பார்த்தான்,, சிறி சிரிப்புடன் மறுபடியும் படுக்கையில் போய் விழுந்தான்

எப்போது ஒன்பது மணி ஆகும்,, தனது காதல் தேவதையை மில்லில் சந்திக்கப்போகிறோமோ என்று ஏங்கினான்,, கடிகாரத்தில் மணி பார்த்தான் ஆறரை ஆகியிருந்தது,, சீக்கிரமாக நகராத சிறிய முள்ளை பார்த்தால் எரிச்சலாக வந்தது,,



எழுந்துபோய் டவலை எடுத்துக்கொண்டு பாத்ரூமுக்குள் நுழைந்தான்,, குளித்து உடை மாற்றி மில்லுக்கு தயாராகி வெளியே வந்து டைனிங் டேபிளில் அமர்ந்தான்,, வாட்ச்மேன் வாங்கி வந்திருந்த ஹோட்டல் டிபனை சாப்பிட்டு மில்லுக்கு புறப்படும் சமயத்தில் அவனது மொபைல் ஒலித்தது
யார் என்று எடுத்து பார்த்தான்,, அனிதாதான் அழைத்திருந்தாள்,, ஆன் செய்து காதில் வைத்து “ சொல்லு அனிதா” என்றான் சத்யன்

“ குட்மார்னிங் அண்ணா”என்றாள் அனிதா

“ ம்ம் குட்மார்னிங்,, என்ன காலையிலயே கால் பண்ணிருக்க,, என்ன விஷயம் சொல்லு ” என்றான் சத்யன்

எதிர் முனையில் சிறிதுநேர மவுனத்திற்கு பிறகு “ அண்ணா நம்ம வசு பெரியவளாயிட்டா அண்ணா,, இன்னிக்கு காலையில தான்” என்றாள் அனிதா குரலில் சந்தோஷத்துடன்

இப்போது சத்யனிடம் மவுனம் ,, வசந்தி சத்யனின் மூன்றாவது தங்கை,, ஒன்பதாம் வகுப்பு படிக்கும் வசுவிடம் உனக்கு யாரை பிடிக்கும் என்று தூக்கத்தில் எழுப்பி கேட்டால் கூட “ எங்க சத்யா அண்ணாவை தவிர யாரையுமே எனக்கு பிடிக்காது என்பாள்

பள்ளியில் அரைநாள் விடுமுறை விட்டால் கூட அடுத்த அரை மணிநேரத்தில் இங்கே வந்துவிடுவாள் ,, சத்யனின் பெண் தோற்றம் போல் அச்சு அசலாக சத்யனின் ஜாடையில் இருக்கும் வசுவின் குறும்புகள் சத்யனுக்கு ரொம்ப பிடிக்கும் என்றாலும் அதை துளிகூட வெளியே காட்டிக் கொள்ளமாட்டான்

பாட்டியுடன் சேர்ந்து கொண்டு எதையாவது செய்து “ அண்ணா இது நல்லாருக்கா பாருண்ணா,, உனக்கு இது பிடிக்குமா” என்று எதையாவது செய்து அவன் அறையைத் தவிர அந்த வீட்டையே தலைகீழாக மாற்றுவாள்,, அவன் அறைக்குள் யாரையும் அனுமதிக்க மாட்டானோ என்ற பயத்தில் போகமாட்டாள்
குழந்தைத்தனமாக சுற்றி வந்தவள் இப்போது பெரியமனுஷி ஆகிவிட்டாள் என்பது,, சத்யனுக்கு நம்பமுடியவில்லை,, அனிதாவுக்கு என்ன சொல்வது என்று புரியாமல் சிறிது நேரம் அமைதிகாத்தவன் , பிறகு யோசித்து “ வசுவுக்கு என் வாழ்த்துக்களை சொல்லிடு அனிதா” என்றான்

“ அதை நீயே வந்து சொல்லேன் அண்ணா,, அவளுக்கு நீன்னா உயிர்,, காலையிலேர்ந்து அண்ணாகிட்ட சொல்லிட்டியா அனிதான்னு நாலஞ்சு வாட்டி கேட்டா,, அவ நம்ம வீட்டு கடைக்குட்டி,, உனக்கும் அவளை பிடிக்கும்னு தெரியும், நீ வந்து அவளை ஆசிர்வாதம் பண்ணா அவ ரொம்ப சந்தோஷப்படுவா அண்ணா,, ப்ளீஸ்” என்று அனிதா அண்ணனிடம் பாசத்தை யாசகம் கேட்டாள்

சத்யன் எதுவுமே பேசாமல் இருந்துவிட்டு ,, இறுதியாக “ மில்லுக்கு நேரமாச்சு கிளம்புறேன்,, பை அனிதா” என்று சொல்லிவிட்டு இனைப்பை துண்டித்தான்

வேகமாக காரை எடுத்துக்கொண்டு கிளம்பியவனின் எண்ணங்கள் முழுவதும் கடைக்குட்டி தங்கை வசந்தி ஆக்கிரமித்திருந்தாள்,, தற்காலிகமாக மான்சியை மறந்தான்

சத்யனின் அம்மா வசந்தியின் பெயரை அவளுக்கு சூட்டியிருந்தார்கள், ஆனால் சத்யன் அம்மாவுக்கு நேர் எதிரான குணத்தை கொண்டவள் வசு பயங்கர குறும்புக்காரி, அவளுக்கு நடக்கும் முதல் விஷேசம் இது,, ஆனால் நான் எப்படி அந்த வீட்டுக்கு போகமுடியும்,, என்று குழம்பினான்

அனிதாவுக்கு பதில் சொல்லாமல் லைனை கட் செய்தது மனதை உறுத்தினாலும் தன்னால் வேறென்ன செய்யமுடியும் என்று தன் செயலுக்கு நியாயம் கற்பித்தான்
கார் மில்லில் வந்து நின்றதும்,, மறுபடியும் மான்சியின் நினைவுகள் மனதுக்குள் சம்மணமிட்டு அமர்ந்தது,, அவள் வந்திருப்பாளா,, என்று காரில் இருந்தபடியே சுற்றிலும் பார்வையை ஓட்டினான்

மணி எட்டு இருபது தான் ஆகியிருந்ததால் ஒன்றிரண்டு தொழிளாலர்கள் மட்டும் மில்லுக்குள் வந்து செக்கியூரிட்டி வைத்திருந்த லெட்ஜரில் கையெழுத்து போட்டுவிட்டு அவரவர்பகுதிகளுக்கு பிரிந்து போனார்கள்,, மான்சியை மட்டும் காணவில்லை,, சத்யன் காரைவிட்டு இறங்கி ரிமோட் மூலம் கதவுகளை லாக் செய்துவிட்டு மில்லுக்குள் நுழைந்தான்

மில்லின் பக்கவாட்டில் இருந்த, மரங்கள் அடர்ந்த குட்டி நந்தவனத்தில் தனது பார்வையை திருப்பினான்,, உடனே அவனது கால்கள் நகர மறுக்க,, கண்கள் சந்தோஷத்தில் அகல விரிந்தது

மான்சி அங்கிருந்த ஒரு சரக்கொன்றை மரத்திற்கு கீழே இருந்த சிமிண்ட் பெஞ்சில் அமர்ந்திருந்தாள்,, சத்யனின் கால்கள் அவனிடம் அனுமதி கேட்காமலேயே அவளிடம் விரைந்தன

அவனை பார்த்ததும்,, முகம் மலர்ந்ததை அவசரமாக தலைகுனிந்து மறைத்தபடி மான்சி எழுந்து நின்றாள்,,

“ என்ன மான்சி இங்கே உட்கார்ந்திருக்க,, மில்லுக்குள் போகவேண்டியது தானே” என்று அன்புடன் கேட்ட சத்யனின் குரல் அவளை நிமிர்ந்து அவன் முகத்தை பார்க்க வைத்தது 

லேசாக சிவந்த முகத்துடன் அவன் முத்தை நோக்கியவள்,, “ நான் சீக்கிரமா வந்துட்டேன் போலருக்கு,,, நான் போகவேண்டிய பிளாக் இன்னும் திறக்கலை,, அதான் இங்கே வந்து உட்கார்ந்தேன் ” என்று மெல்லிய குரலில் கூறினாள் மான்சி
தானும் இன்று சீக்கிரமே வந்துவிட்டது அப்போதுதான் சத்யனுக்கு உரைத்தது,, நான் இவளை பார்க்கும் ஆர்வத்தில் சீக்கிரமே வந்ததுபோல்,, இவளும் என்னை பார்க்கும் ஆவலில் வந்திருப்பாளோ என்று குதூகலமாக எண்ணமிட்ட மனதை அடக்கியவாறு “ அதுக்காக ஏன் இங்கே உட்காரனும்,, என்னோட கேபின் பியூன் திறந்திருப்பானே,, அங்க போய் உட்கரா வேண்டியதுதானே,, சரி வா போகலாம்” என்று கூறிவிட்டு சத்யன் திரும்பினான்

“ அது வந்து இங்க ரொம்ப நல்லா இருந்தது அதான் வந்து உட்கார்தேன்,, காலைலேயே நிறைய பறவைகளின் சத்தம்,, கேட்கவே ரொம்ப இனிமையா இருந்தது” என்று சொல்லிகொண்டே அவன் பின்னால் வந்தாள்

சட்டென்று நின்று அவளை திரும்பி பார்த்தான்,, சத்யனுக்கு ஆச்சரியமாக இருந்தது,, தானும் இன்று காலையில் எழுந்ததும் பறவைகளின் சத்தத்தை ரசித்தது ஞாபகம் வந்தது,, இவளுக்கும் எனக்கும் நிறைய விஷயங்களில் ஒற்றுமை இருக்கும் போல் தெரிகிறதே,, என்று எண்ணமிட்ட படி மறுபடியும் திரும்பி நடக்க ஆரம்பித்தான்

இருவரும் சத்யனின் அறையை நோக்கி நடக்க,, மான்சி அவனுடைய ஆச்சரியமான பார்வைக்கு பதில் சொல்லும் வகையில் “ எனக்கு பறவைகளின் சத்தம் ரொம்ப புடிக்கும்,, ஒவ்வொரு பறவையின் சத்தத்தை வச்சே அது எந்த பறவைன்னு ஓரளவுக்கு கண்டுபிடிப்பேன்,, சின்ன வயசுலேர்ந்தே இது எனக்கு ரொம்ப புடிக்கும்” என்று தன்னைப்பற்றிய சிறு தகவலை அவனுக்கு சொன்னாள்

அதற்குள் சத்யனின் அறை வந்துவிட்டது, அறை கதவை திறந்து உள்ளே நுழைந்தபடி “அப்படின்னா நீ ஆர்னிதாலஜி இல்ல படிச்சிருக்கனும் ஏன் பேஷன் டிசைனிங் படிச்ச மான்சி” என்று சத்யன் கேட்க

“எனக்கு இதுவும் ரொம்ப புடிக்கும்,, அதான் படிச்சேன் என்று பதிலலித்தாள் மான்சி

அறைக்குள் பியூன் டேபிளில் இருந்த வற்றை துடைத்து சீராக அடுக்கிக்கொண்டு இருந்தான்,, சத்யனையும் மான்சியையும் பார்த்து புன்னகையோடு குட்மார்னிங் சொன்னான்

தனது இருக்கையில் வந்து அமர்ந்த சத்யன் “ என்ன குமார் எல்லாம் முடிஞ்சுதா” என்றான்

“ ம் எல்லாம் தொடச்சு அடுக்கிட்டேன் சார்,, நான் போகவா” என்று கேட்டான் பியூன்

“ சரி நீ போய் ரெண்டு கப் காபி கொண்டு வந்து குடுத்துட்டு போ” என்ற சத்யன் மான்சியை பார்த்து “ உட்கார் மான்சி” என்று எதிர் இருக்கையை காட்டினான்

“ தாங்க்யூ சார்” என்று அமர்ந்தாள் மான்சி,, பியூன் வெளியேற,,

“ எனக்கு கூட சாப்ட்வேர் இன்டஸ்ட்ரியில் போகனும்னு தான் சின்ன வயசுல ஆசை,, ஆனால் அம்மாவோட இந்த மில்லை நிர்வாகம் பண்ணனும் என்ற ஒரே காரணத்தால் தான் டெக்ஸ்டைல்ஸ் இஞ்ஜினியரிங் படிச்சுட்டு,, மேல் படிப்பு எம்பிஏ யூஎஸ்ல முடிச்சேன்,, வந்ததுமே இந்த மில்லின் இந்த சீட்ல உட்கார்ந்து இப்போ அஞ்சு வருஷம் ஆயிருச்சு” என்று தன்னைப்பற்றிய விபரங்களை அவளுக்கு சொன்னான்

இது எல்லாமேதான் மான்சிக்கு, அனிதாவின் உபயத்தில் தெரியுமே,, இருந்தாலும் அதை வெளிக்காட்டாமல் லேசாக விழிவிரித்து “ ஓ அப்படியா’ என்றாள்

“ ம்ம்,, அதுக்கப்புறம் இந்த மில்லை சீராக்கவே என் நேரம் போயிருச்சு,, எனது சந்தோஷம் துக்கம் எல்லாத்தையும் மில்லின் வளர்ச்சியில் தான் காட்டுவேன்,, என்னுடைய சொந்த வாழ்க்கையை பற்றி ஒருநாள்கூட யோசிக்கலை மான்சி,, ஆனா நேத்து காலையிலிருந்து என்னுடைய பிற்க்காலம் பற்றிய சிந்தனைகள் இடைவிடாமல் வருது,, வருங்காலத்தில் ஒரு குடும்பத்தின் தலைவனாக நான் இருந்தால் எப்படி இருக்கும் என்ற கற்பனைகள் வருது மான்சி” என்று தனது மனநிலையை அவள் கண்களைப் பார்த்தபடியே சத்யன் சொல்ல

“ அதான் இப்பகூட ஒரு குடும்ப தலைவராகத்தானே இருக்கீங்க” என்று மான்சி சத்யனுக்கு அவனது அப்பாவின் குடும்பத்தில் இருக்கும் மரியாதையை மனதில் வைத்து அதை சொல்லிவிட்டு அய்யோ என்று தனது நாக்கை கடித்துக்கொண்டாள்

சத்யன் நெற்றியை சுழித்து புருவத்தை சுருக்கி “ நீ என்ன சொல்ற” என்று கேட்க
சட்டென்று சுதாரித்த மான்சி “ அதான் இந்த மில்லும் ஒரு குடும்பம் மாதிரிதானே அதை வச்சு சொன்னேன்” என்று சமாளித்தாள்

“ ஓ அதுவா” என்று இலகுவான சத்யன் “ ஆமாம் நீ சொல்றதும் சரிதான்,, இந்த மில் ஒரு குடும்பம்னா நான் குடும்பத்தலைவன் தான்” என்று கூறிவிட்டு சிரித்த சத்யன் “ ஆமா நீ ஏன் மான்சி அனிதா கூடவே தங்கமா , அவ ப்ரண்ட் வீட்டுல தங்கின,, அனிதா வீட்டுல கெஸ்ட்ஹவுஸ் கூட இருக்கே என்று சத்யன் கேட்க


சிறிதுநேரம் என்ன பதில் சொல்வது என்று தயங்கிய மான்சி அவனிடம் பொய் சொல்ல மனம் வராமல் தயக்கத்தை உதறிவிட்டு “ அனிதா முதலில் அவக்கூட தான் தங்க சொன்னா,, ஆனா அனிதா வீட்டுல தங்கினா உங்களுக்கு பிடிக்காதுன்னு எனக்கு தெரியும் அதனால்தான் வேற எங்கயாவது ரூம் பார்க்க சொன்னேன்,, வேற லேடிஸ் ஹாஸ்டல் எதிலேயும் இடம் இல்லாததால், தற்சமயம் இந்த வீட்டுல தங்கச்சொன்னா,, அதான்.....” என்று மான்சி கூறிவிட்டு தலையை குனிந்து கொண்டாள்

சத்யனுக்கு உள்ளுக்குள் யாரோ வீணையை மீட்டி இன்னிசை நாதம் இசைத்தார்கள்,, அதை முகத்தில் காட்டாமல் “ அப்போ நீ சொல்றத பார்த்தா,, எனக்கு எதெல்லாம் பிடிக்காதுன்னு உனக்கு தெரியுமா?” என்று கேட்டுவிட்டுஅவளின் குனிந்த தலையை கூர்ந்து பார்த்தான் ,,

தெரியும் என்பதுபோல் அவள் தலை தயக்கமின்றி உடனே அசைந்தது

“ என்னைப்பற்றி வேறென்ன தெரியும் மான்சி” என்று மறுபடியும் கேள்வியை தொடுத்தான்

இப்போதும் தலை நிமிராமல் “ எல்லாமே தெரியும்” என்றாள் மான்சி
சத்யன் அடுத்து எதுவுமே கேட்கவில்லை,, ஓடிச்சென்று அவளை அள்ளி அணைக்க பரபரத்த கைகளை அடக்க சிரமப்பட்டான்,, அவள் முகத்தை பார்க்க ஆவலாய் இருந்தது

“ உனக்க எப்படி தெரியும்,, என்று கேட்டுவிட்டு “ப்ளீஸ் நிமிர்ந்து பார்த்து பேசு மான்சி” என்றான்

நிமிர்ந்த மான்சி அவன் முகத்தை சிலவினாடிகள் பார்த்தாள்,, அவன் முகத்தில் இருந்த எதிர்பார்ப்பு அவளை வெட்கப்பட வைத்தாலும் மீண்டும் தலைகுனியாமல் பார்வையை வேறுபுறம் திருப்பி “ காலேஜ் ஹாஸ்டலில் இருந்தப்ப அனிதா அடிக்கடி உங்களைப்பத்தி தான் நிறைய பேசுவா,, அது என் மனசுல பதிஞ்சு போச்சு,, உங்களோட விருப்பு வெறுப்புகள் எல்லாமே எனக்கு தெரியும்,, முதன்முதலா உங்களை சந்திக்க வரும்போது உங்களுக்கு பிடிக்காத ஒன்றை செய்ய எனக்கு தைரியம் இல்லை” என்றாள் மெல்லிய குரலில்

அவளின் வார்த்தைகள் மனதை மயிலிறகால் வருடியது “ அப்போ எனக்கு பிடிக்காத எல்லாமே உனக்கும் பிடிக்காதா மான்சி” என்று ஆர்வமாக கேட்டான்

சட்டென்று நிமிர்ந்த மான்சி “ நான் அப்படி சொல்லலை,, உங்களுக்கு பிடிக்காததை செய்து முதல்லயே வெறுப்பை சம்பாதிக்க விருப்பமில்லை அவ்வளவுதான் ,, மத்தபடி உங்களோட நடவடிக்கைகள் சிலது எனக்கு சுத்தமா பிடிக்காது” என பட்டென்று பதில் சொன்னாள் மான்சி

திகைப்பை முகத்தில் காட்டாது மறைத்த சத்யன் “ எந்த நடவடிக்கைகள் பிடிக்கலை” என்றான்

அவன் முகத்தை நேராக பார்த்த மான்சி “ ம் எப்பவோ நடந்த ஒரு விஷயத்துக்காக,, இப்பவும் மனசுல வஞ்சம் வச்சுகிட்டு பெற்ற தகப்பனை போய் பார்க்காம இருக்கீங்களே அது பிடிக்கலை,, உங்களோட இழப்பு பெரிசுன்னாலும் அதுக்காக எதிர் தரப்பில் என்ன நடந்ததுன்னு கூட விசாரிக்காம இத்தனை வருஷமா அவங்களுக்கு தண்டனை குடுக்குறீங்களே அது பிடிக்கலை,, தங்கைகள் மேல் உண்மையான பாசம் வச்சிருந்தும் அதை வெளியே காட்டாமல் அவங்களை அவாய்ட் பண்றது எனக்கு பிடிக்கலை” என்று மான்சி படபடவென்று அவனது குறைகளை சுட்டிக்காட்டி பேசினாள்

இதே வேறு ஒருவராக இருந்தால் சத்யனின் பார்வையால் பொசுங்கி போயிருப்பார்கள்,, ஆனால் மான்சி அஞ்சாமல் அவனை நேருக்குநேர் பார்த்தாள்
முகம் இறுக “ பதினாறு வருஷமா நான் பட்ட அவமானங்கள் தெரியுமா? என்னோட வலிகள் உனக்கு தெரியுமா? தெரிஞ்சா இப்படி பேசமாட்ட மான்சி “ என்று சத்யன் கோபத்தின் உச்சியில் இருந்தாலும் குரலை அடக்கி பேசினான்


மான்சியும் விடாமல் “ ஏன் தெரியாது,, எல்லாம் தெரியும்,, ஆனா அவங்க மட்டும் சந்தோஷமா இருக்காங்கன்னு உங்களுக்கு தெரியுமா,, அவங்களுடைய இழப்பு உங்களுக்கு புரியுமா,, நீங்க பட்டதைவிட அவங்களுடைய அவமானம் பலமடங்கு,, வீட்டுக்கு ஒரே மகனை வீட்டைவிட்டு விரட்டிட்டாங்கன்னு ரஞ்சனா ஆன்ட்டியை எவ்வளவு பேர் இன்னும் கேவலமா பேசுறாங்கன்னு தெரியுமா உங்களுக்கு,, அனிதாவை பார்க்க ஹாஸ்டலுக்கு வரும்போதெல்லாம் அவங்க அழுத அழுகையை நேரில் பார்த்தவ நான்,, எனக்கு தெரியும் அந்த கண்ணீர் பொய்யில்லைன்னு” என்று மான்சி ஆவேசமாக பேசிக்கொண்டு இருக்கும்போதே,, பியூன் கதவை தட்டிவிட்டு காபியுடன் உள்ளே வந்து மேசையில் வைத்துவிட்டு வெளியேறினான்

பியூன் வந்ததும் இருவரும் அமைதியானார்கள்,, சத்யன் காபியை அவளிடம் நகர்த்தி “ எடுத்துக்கோ” என்று சொல்லிவிட்டு தனது காபியை ஸ்பூனால் கலக்கினான்

மான்சி காபியை தொடாமல் “ காலையில அனிதா போன் பண்ணாளா?” என்று சத்யனைப் பார்த்து கேட்க

அவளை ஆச்சர்யமாக பார்த்த சத்யன் “ ம்ம் பண்ணா” என்றான்

“ அதைப்பத்தி என்ன முடிவு பண்ணியிருக்கீங்க” என்று கேட்டாள் மான்சி
அதற்க்கு என்ன பதில் சொல்வது என்று அமைதியாக இருந்த சத்யன் பிறகு “ முடிவுகள் எல்லாம் ஏற்கனவே எடுத்ததுதான்,, நான் அந்த வீட்டுக்குள்ள கால் வைக்கமாட்டேன்” என்றான் உறுதியாக

மான்சி எதுவும் பேசவில்லை பட்டென்று எழுந்துகொண்டாள்,, “ நேரமாகுது நான் கிளம்புறேன்” என்று சொல்லிவிட்டு கதவை நோக்கி நகர்ந்தாள் 


பட்டென்று அவள் கிளம்புவாள் என்று எதிர்பார்க்காத சத்யன் அவசரமாக “ இரு மான்சி இந்த காபியை குடிச்சுட்டு போ மான்சி” என்றான்

திரும்பி அவனை பார்த்த மான்சி “ எனக்கு வேண்டாம்,, இந்த நேரத்தில் காபி குடிச்சு எனக்கு பழக்கமில்லை” என்று கூறிவிட்டு கதவை அனுகினாள்

“ அதை ஆர்டர் பண்ணும்போதே சொல்ல வேண்டியதுதானே,, ச்சே நேஷனல் வேஸ்ட்” என்றான் குரலில் எரிச்சலுடன்

கதவருகே சென்று நின்று திரும்பிய மான்சி “ எனக்கா காபி சொன்னீங்க,, நான் உங்களுக்கும் பியூனுக்கும்ல நெனைச்சேன்,, சரி ரெண்டயும் மிக்ஸ் பண்ணி நீங்களே குடிங்க,, எதுவும் நேஷனல் வேஸ்ட் ஆகாது ” என்று சொல்லிவிட்டு கதவை திறக்க குமிழில் கைவைத்தாள்

அவள் தன்னை நக்கல் செய்கிறாள் என்று சத்யனுக்கு புரிந்தது,, “ கொஞ்சம் இரு மான்சி” என்று கூறி எழுந்தவன் அவளிடம் சென்றான்

அவளை நெருங்கிய சத்யன் கதவின் குமிழை பற்றியிருந்த அவளின் கையை தனது கையால் பற்றி விலக்கினான், பற்றிய கைகளை விடாமல் தனது நெஞ்சில் வைத்து,,அவள் முகத்தை நேரில் பார்த்து “ நீ இவ்வளவு பேசுவியா,, இங்கே எல்லாரும் என்கிட்ட பேசவே பயப்படுவாங்க,, நீ என்னையே எதிர்த்து பேசுற,, ம்ம் ரொம்பத்தான் தைரியம்” என்று குறும்பான குரலில் கேட்க

அவன் கைகளில் இருந்த தனது கையை விடுவிக்க முயன்றபடி “ அது ஒன்னும் பயம் இல்ல ,, உங்களுக்கு எல்லாரும் குடுக்குற மரியாதை” என்று மான்சி அவனுக்கு பதில் கூறினாள்

“அப்போ உனக்கு என்மேல மரியாதை இல்லையா”என்று சத்யன் அவள் விரல்களை தன் கையால் நெரித்துக்கொண்டே கேட்டான்

அடப்பாவி இப்படி மடக்குறானே,, இதுக்கு என்ன பதில் சொல்றது என்று குழம்பி தவித்து அவன் முகத்தை பார்த்த மான்சி “ இப்படி மடக்கி மடக்கி கேள்வி கேட்டா என்ன பதில் சொல்றது” என்று சினுங்கிய மான்சி “ வெளியே இருக்கிறாவங்க மரியாதையினால எதிர்த்து பேசமாட்டாங்க,, எனக்கு ஓரளவுக்கு நீங்க அறிமுகமானவர் என்ற உரிமையில இப்படி பேசிட்டேன்,, தவறா இருந்தா மன்னிச்சிடுங்க” என்று மான்சி அவனிடம் மன்னிப்பு கோரும் குரலில் பேச

“ அப்படின்னா நான் உனக்கு அறிமுகமானவனா மான்சி?, ஆனா நான் உன்னை நேத்து காலையில தானே பார்த்தேன்” என்று மறுபடியும் அவளை மடக்கினான்

அவன் வார்த்தைகளால் அவளை மடக்கினாலும் ஒவ்வொரு வார்த்தையும் அவளை சிவக்க வைத்தது,, இவன் இன்று தன்னை அதிகமாக பேச வைக்கிறான் என்று மனதில் எண்ணியவாறு “ நீங்க என்னை நேத்துதான் பார்த்தீங்க ஆனா நீங்க எனக்கு கிட்டத்தட்ட மூனு வருஷமா அறிமுகமானவர் தான்,, உங்களோட வளர்ச்சி ஒன்னொன்னா எனக்கும் தெரியும்,, இது போதுமா இல்ல இன்னும் ஏதாவது தெரிஞ்சுக்கனுமா” என்று பார்வையிலும் குரலிலும் கோபத்தை தேக்கி மான்சி கேட்க

“ போதாதே இன்னும் நிறைய தெரியனுமே,, ஆனா அதெல்லாம் போகப்போக தெரிஞ்சுக்கிறேன்,, இப்போ ஒரேயொரு விஷயம் மட்டும் நீ தெரிஞ்சுகிட்டு போ மான்சி,, அனிதா,, அபிநயா, வசு இவங்க யார் மேலயும் எனக்கு எந்த கோபமும் இல்லை,, என் கோபமெல்லாம் என் அம்மா உயிரோட இருக்கும்போதே தனக்கு மற்றொரு துணையை தேடிக்கிட்ட என் அப்பா மேலயும்,, திருமணமானவர் ஒரு பிள்ளைக்கு தகப்பன்னு தெரிஞ்சும் எங்கப்பாவை தன்வசப்படுத்தின அனிதாவோட அம்மா மேலயும் தான் என் கோபமெல்லாம்,, அது நீ மட்டும் இல்ல வேற யார் சொன்னாலும் மாறாது மான்சி,, அதனால வீனாக என் மனதை மாற்றும் முயற்சியை விட்டுடு” என்று சத்யன் தீர்மானமாக சொன்னான்

பட்டென்று அவன் கையை உதறி விலகிய மான்சி,, சற்றுத்தள்ளி நின்று தன் மார்புக்கு குறுக்கே கைகட்டி பக்கவாட்டில் தலைசாய்த்து “ அப்போ உங்களுக்கு என்ன வயசு இருக்கும் சார்” என்று கேட்டாள்

அவள் நின்ற ஸ்டைல் மேலும் அவளிடம் அவனை ஈர்த்தது,, அவள் கைகளை மார்புக்கு குறுக்கே கட்டியதால் மேல் நோக்கி பிதுங்கிய மார்புகளை அவளின் சுடிதார் துப்பட்டாவால் மறைக்க முடியவில்லை ,, அந்த இளமை கலசங்கள் பொங்கி வழிய,, சத்யன் அங்கிருந்து தனது பார்வையை திருப்ப முடியாமல் திணறினான்

அவன் பார்வை சென்ற இடத்தை கவனித்து சட்டென்று கட்டியிருந்த கைகளை விலக்கி தனது துப்பட்டாவால் முடிந்தவரை மூடினாள்,, அவன் பார்வை அவளை சிவக்க வைக்க தலையை குனிந்துகொண்டாள்




அவள் கவனித்து விட்டாள் என்று தெரிந்ததும் சத்யனுக்கு சங்கடமாக இருந்தது ,, இருந்தாலும் அவள் கேள்விக்கு பதில் சொல்ல வேண்டும் என நினைத்து “ அப்போ எனக்கு வயசு பனிரெண்டு இருக்கும்” என்று சத்யன் சொன்னான்

இதை கேட்டதும் அவனை நிமிர்ந்து பார்த்தவள் “ அந்த வயசுல மனுஷங்களை புரிஞ்சுக்குற பக்குவம் உங்களுக்கு வந்துருச்சா? ஒரு கணவன் மனைவிக்குள்ள என்னன்ன நடக்கும் , அல்லது நடந்தது,, என்று உங்களுக்கு புரியக்கூடிய வயசா அது,,ஒரு மனிதனின் இளமைத் தேவைகள் என்னன்னு உங்களுக்கு அந்த வயசுல தெரியுமா” என்று மான்சி சரமாரியாக கேள்வி கேட்க

அவள் கேட்ட அத்தனைக்கும் சத்யனின் பதில்,, தெரியாது என்ற தலையசைப்பு தான்

“ அப்படின்னா நீங்க ஒரு சுயநலவாதி சார்,, அந்த பெரிய வீட்டில் உங்களுடைய இடம் பறிபோய் விடக்கூடாது என்ற ஒரே காரணத்துக்காகவே நீங்க மற்றவர்களை ஒதுக்கி வச்சுட்டு வந்துருக்கீங்கன்னு நான் சொல்றேன்” என்று மான்சி அவனுக்கு எதிராக வாதம் செய்தாள்

இதை கேட்டதும் சத்யனின் முகம் இறுகிவிட்டது,, “ அப்படின்னா என் அம்மா உயிருடன் இருக்கும் போதே இன்னொரு பொண்ணு கூட வாழ்ந்த என் அப்பா நியாயவாதி,, நான் சுயநலவாதியா? உன்னால எப்படி இதுபோன்ற தவறுகளை நியாயப்படுத்தி பேசமுடியுது மான்சி? ” என்று சத்யன் கேட்டான்

“ நான் நியாயப்படுத்தலை சார்,, எதுவுமே புரியாத வயசுல அவங்க பண்ணது தப்புன்னு முடிவெடுக்கும் உரிமை உங்களூக்கு கிடையாது,, அவங்க பக்கத்தில் என்ன நடந்ததுன்னு உங்களுக்கு இன்னும் தெரியாது,, அப்படியிருக்க எந்த விசாரனையும் இல்லாமல் அவங்களுக்கு ஆயுள் தண்டனை குடுத்திருக்கீங்க சார் நீங்க” என்று மான்சி தீர்க்கமாக கூறினாள்

அவளை எரிச்சலாக பார்த்த சத்யன் “ ஆமாம் இந்த அசிங்கத்தை விசாரணை வேறு பண்ணனுமா,, அந்த லேடி எங்கப்பா கிட்ட ஸ்டெனோவா வேலை செய்தாங்களாம்,, எங்கம்மா படுத்த படுகையா ஆனதும் ஆபிஸ்ல வச்சே எங்கப்பாவை மயக்கி கைக்குள்ள போட்டுக்கிட்டாங்க,, எங்கம்மா போனதும் பணக்காரி ஆகும் ஆசையில வீட்டுக்கு வந்துட்டாங்க, அவ்வளவுதான் விஷயம்” என்றான் சத்யன் அலுப்பாக

அவனுக்கு எப்படி புரியவைப்பது என்று யோசித்த மான்சி “ ஏன் சார் நானும் நீங்களும் இந்த அறைக்குள்ள வந்து கிட்டத்தட்ட இரண்டு மணிநேரம் ஆகப்போகுது,, வெளியே இருக்கிறவங்களுக்கு நாம என்ன செய்கிறோம் என்ற கற்பனை எக்கச்சக்கமா வரத்தான் செய்யும்,, ஆனா மூடிய அறைக்குள்ள நாம என்னப் பண்றோம்னு நமக்கு மட்டுமே தெரியும்,, அதனால எதுவும் தெரியாமல் எந்த முடிவும் எடுக்காதீங்க சார்,, ஏதோ எனக்கு தெரிஞ்ச விஷயங்களை பேசினேன், உங்கள் பர்ஸனல் பேசினது தப்புன்னா என்னை மன்னிச்சுடுங்க” என்று கூறி திரும்பினாள்

பின்புறமாக அவள் தோளைத் தொட்டு தன்புறமாக திருப்பிய சத்யன்,, அவள் முகத்தையே உற்று பார்த்தான் “ என்னை எதிர்த்து பேசிய இந்த உதடுகளை அப்படியே கடிச்சு துப்பனும் போல ஆத்திரமா வருது,, ஆனா அதுக்கப்புறம் நான்தானே சிரமப்படனும் அதனால சும்மா விடுறேன்,, இல்லேன்னா அவ்வளவுதான்” என்று போலியாக மிரட்டி காதலாக அவளின் தேன் சிந்தும் இதழ்களை பார்த்தான் சத்யன்

மான்சி வெட்கத்துடன் அவனிடமிருந்து விலக திமிறினாள்,, அவன் முரட்டு கரங்களை விலக்கமுடியாமல் திண்டாடியவளை பார்த்து சிரித்த சத்யன் “ என்னை பேச்சில் மட்டுமே நீ ஜெயிக்க முடியும் மான்சி” என்று கூறி அவளின் ஈர இதழ்களை நெருங்கினான்

அவன் என்ன செய்யப்போகிறான் என்று மான்சிக்கு தெளிவாக புரிந்தது, சுதாரித்து விலகும் முன் அவன் அவள் உடலை தனது முரட்டு கரங்களால் சிறைபிடித்து,, அவளின் இதழ்களை தனது முரட்டு உதடுகளால் சிறைபிடித்திருந்தான்

அவனுக்கு அவளின் மென்மையான இதழ்களின் தேனை அருந்த வேண்டும் என்ற வேகத்தில் அவளை முரட்டுத்தனமாக அணைத்திருந்தான்,, அவளின் கீழுதட்டை கவ்வி, இழுத்து தனது கூறிய நாக்கால் இரண்டு உதடுகளுக்கும் இடைவெளியை ஏற்படுத்தியவன், அவன் நாக்கை உள்ளே விடாமல் தடுத்த பற்களில் பாதுகாப்பை தகர்க்க முடியாமல் மறுபடியும் மறுபடியும் நாக்கால் அவள் பற்களுடன் முட்டி மோதினான்

அவளும் அவனுக்கு உள்ளே வர இடம் விடாமல் தனது பற்களை சேர்த்து வைத்துக்கொண்டு போராடினாள்

ஒரு கட்டத்தில் அலுத்துப்போன சத்யன் சட்டென்று அவளை விலக்கி நிறுத்தி முறைத்துப் பார்த்தான்,, அவனுக்குள் ஏற்கனவே தீயாய் பற்றி பரவியிருந்த காதல், அவளின் பிடிவாதத்தால் கடும் வேட்கையாக மாறியிருந்தது

தனது கடைவாயில் வழிந்த சத்யனின் எச்சிலை தனது புறங்கையால் துடைத்த மான்சி,, அவனை நிமிர்ந்து பார்த்து முறைத்து " என்ன இது,, உங்ககிட்ட இந்த மாதிரி நான் எதிர்பார்க்கலை,, என்ன நினைச்சுக்கிட்டு இருக்கீங்க மனசுல" என்று குரல் வெளியே கேட்காமல் கோபமாய் மான்சி கேட்க

சத்யன் படபடத்த அவளின் உதடுகளை பார்த்துக்கொண்டே " இது முத்தம்,, வேற எப்படி எதிர் பார்க்கிற,, உன்னைத்தான் மனசுல நெனைச்சுகிட்டு இருக்கேன்" என்று அவளின் கேள்விகளுக்கு பதிலலித்த சத்யன் விலகியிருந்த அவளை எட்டிப்பிடித்து இழுத்து அணைத்தான்

ஒருகையால் இடுப்பை வளைத்து,, மறுகையால் அவள் கழுத்தை வளைத்தவன் , அவளின் மூக்கை தன் மூக்கால் உரசி " முடியலை மான்சி ஒரேயொரு முத்தம் தான் ப்ளீஸ், அதுக்குமேல வேனாம் என்னால் அடக்கி வைக்க முடியலை,, மூனு வருஷமா என்னையே மனசுல நெனைச்சுக்கிட்டு இப்போ என்னை இப்படி அவாய்ட் பண்றியே மான்சி" என்று சத்யன் ஏக்கமும் தாபமுமாக மான்சியிடம் கெஞ்சினான்

அவனுடைய ஏக்கப் பார்வையும்,, தாபம் நிறைந்த பேச்சுக்கும் மான்சி கறைந்து போக ஆரம்பித்தாள்,, " இது ஆபிஸ் அதனால என்னைய விடுங்க" என்று அவனின் காதோரம் மான்சி கிசுகிசுக்க

அவள் மனம் இளகிவிட்டது என்று சத்யனுக்கு புரிந்தது,, " ம்ஹும் இது ஆபிஸ்னாலதான் வெறும் முத்தம்,, இதே என் வீடாயிருந்தால் இன்னேரம் அவ்வளவுதான்" என்று சத்யன் குறும்புடன் பேசினான்

" அய்யோ வீடாயிருந்த என்ன பண்ணியிருப்பீங்களாம் " என்று அவனை தூண்டினாள் மான்சி

அவள் முகத்தை சற்று தள்ளி நிறுத்தி உற்றுப்பார்த்து " ம் பூஜை ரூம் கூட்டிப்போய் தாலியை கட்டிட்டு உடனே பெட்ரூமுக்கு தள்ளிக்கிட்டு போயிருப்பேன்" என்றான் குறும்பு வழியும் குரலில்

" ஏய் ச்சீ" என்று வெட்கத்தில் சினுங்கிய அவள் உதடுகளை மறுபடியும் கவ்விக்கொண்டான்,, இப்போது அவளிடம் எதிர்ப்பு சுத்தமாக இல்லை,, அவன் தேடாமலேயே,, அவனுடைய முத்த ஆராய்ச்சிக்கு தனது இதழ்களை திறந்து வழிவிட்டாள்

சத்யன் அவளின் இடுப்பை பற்றி தனது உயரத்துக்கு தூக்கினான்,, இப்போது குனியாமல் அவளை சமநிலையில் நிறுத்தி,, அவள் இதழ்த் தேனை உறிஞ்சினான்

சிறிதுநேரம் அவர்களின் உறிஞ்சும் சப்தத்தை தவிர வேறு எதுவும் அந்த அறையில் கேட்கவில்லை ,, அப்போது சத்யன் மேசையில் இருந்த தெலைபேசி தனது வேலையை செய்ய,, இருவரும் திடுக்கிட்டு விலகினார்கள்

இருவரும் ஒரே சமயத்தில் தனது வாயை துடைத்துக்கொண்டு அசட்டுத்தனமாக ஒருவரையொருவர் பார்த்து சிரித்துக் கொள்ள,, ,எப்படி எனது முத்தம், என்று சத்யன் புருவம் உயர்த்தி ஜாடையில் கேட்டான்

" ச்சீ போங்க" என்று வெட்கத்தை வார்த்தையில் மொழிந்துவிட்டு கதவை திறந்து கொண்டு அங்கிருந்து வெளியேறினாள் மான்சி 





No comments:

Post a Comment